செவ்வாய், 31 மார்ச், 2020

பெண்கள்” கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

பெண்கள்” கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்


சுமங்கலி பெண்கள் தினமும் காலை, மாலை, என இரு வேளையிலும் திரு விளக்கு ஏற்றவேண்டும்.
பெண்கள் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடாது. பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது.
பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்கவிட்டு நடக்கக்கூடாது. கண்டிப்பாக, கோவிலில் அப்படிச் செய்யவே கூடாது.
திருமாங்கல்யத்தை மஞ்சள் கயிற்றில் மட்டுமே கோர்த்து அணிய வேண்டும்.
கோலமிடும் போது தெற்கு பார்த்து நின்று கொண்டு கோலம் போடக்கூடாது. கிழக்கு மற்றும் மேற்கு திசையை பார்த்தவாறு கோலம் போடுவது மிகவும் சிறந்ததாகும்.
திருமணமான பெண்கள், ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு, மூன்று, மெட்டி அணிய கூடாது. அணிவதனால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல் வருமானம்) பாதிப்படையும்.
கோவில்களில் பிரசாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது.
கோவிலில் தெய்வத்தை வணங்கும்பொழுது, பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக் கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்க வேண்டும்.
சுமங்கலிப் பெண்கள் தலை குளிக்கும் போது, முதலில் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டு, பிறகு குளிக்க வேண்டும்.
அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.
பெண்கள் கிழக்கு திசையை பார்த்தவாறு குங்குமத்தை நெற்றியில் இரண்டு புருவங்களுக்கு மத்தியிலும், உச்சந்தலையிலும் வைத்துக்கொள்ள வேண்டும். திருமணமாகாதவர்கள், உச்சந்தலையில் வைத்துக்கொள்ளும் பழக்கத்தை கைவிட வேண்டும்.
கர்ப்பமான பெண்கள் உக்கிர தேவதைகள் இருக்கும் கோவிலுக்குப் போகக்கூடாது. தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கக்கூடாது. தேங்காய் உடைக்கக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக