திங்கள், 31 ஜூலை, 2017

மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்!..



மனதை நிமிர்த்தும் மந்திரச் சொற்கள்!..

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம்.  அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி,

கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள்.

மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.

1.        போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.

2.        நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.

3.        உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.

4.        பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல

5.        பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல

6.     சொல்றவங்க நூறு சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?

7.      அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான். அதையெல்லாம்

கண்டுக்கலாமா? ஒதுங்கு. அப்பதான் உனக்கு நிம்மதி.

8.        இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.

9.        கஷ்டம் தான் … ஆனா முடியும்.

10.      நஷ்டம் தான் … ஆனா மீண்டு வந்திடலாம்.

11.      இதில விட்டா அதில எடுத்திட மாட்டனா?

12.      விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?

13.      விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு.

14.      ஒக்காந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதப்  பார்.

15.      இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?

16.      இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?

17.      இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.

18.      இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.

19.      முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.

20.      கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்.

21.      அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு.

22.      விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.

23.      திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.

24.      சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே. குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு

வேலையை ஆரம்பி.

25.      ஆகா, இவனும் அயோக்யன் தானா? சரி, சரி. இனிமே யார் கிட்டயும் நாலு மடங்கு

ஜாக்ரதையாத்தான் இருக்கணும்.

26.      உலகத்துல யாரு அடிபடாதவன்? யாரு ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும்,

அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?

27.      ஊர்ல ஆயிரம் பிரச்சனை. என் பிரச்சனைய நான் தீர்த்தா போதாதா?

28.      கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.

29.      எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?

30.      அவனை ஜெயிச்சாதான் வெற்றியா? நான் தான் தினம் வளர்றேன, அதுவே வெற்றி

இல்லையா?

31.      அடடே, இதுவரை நல்லா தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிருந்தாலே

போதும்.

32.      நாலு காசு பாக்குற நேரம். கண்டதப் பேசிக் காலத்த கழிக்கலாமா?

ஆம், நண்பர்களே,

    * வீழ்வது கேவலமல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம்

முயற்சியுடன் எழுந்திடுங்கள்!  உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள்.

எவ்வளவு உயரம் தொட முடியும் என்பதைக் காட்டுங்கள்.வெற்றி நமதே...

ஆண்களே! அந்த இடத்தில் அரிப்பு ஏற்பட காரணம் என்னவா இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கணுமா?



ஆண்களே! அந்த இடத்தில் அரிப்பு ஏற்பட காரணம் என்னவா இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கணுமா?


பெண்களுக்கு மட்டும் தான் பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்பட்டு அரிப்புகள் ஏற்படும் என்று நினைக்க வேண்டாம்.

 ஆண்களுக்கும் அரிப்புகள் கடுமையாக இருக்கும்.

இப்படி ஆண்களுக்கு அரிப்புகளானது ஏற்பட்டால், அவர்கள் பொது இடம் என்றும் சிறிதும் பார்க்காமல் சொறிய ஆரம்பிப்பார்கள்.

 இதனால் பலருக்கு பொது இடங்களில் மானம் போகும். ஆனால் சிலர் அரிப்பை தாங்கிக் கொண்டு, அரிக்க முடியாமல் அவஸ்தைப்படுவார்கள்.

அதுமட்டுமின்றி, இப்படி அரிப்புகள் ஏற்பட்டால், பல ஆண்கள் எதற்கு ஏற்படுகின்றது என்று யோசிப்பதே இல்லை.

அப்படி யோசிக்காமல் இருப்பதால், அங்கு ஏற்படும் அரிப்புகளானது முற்றி, அவ்விடத்தில் காயங்களையோ, பல தீவிரமான பிரச்சனையையோ ஏற்படுத்திவிடும்.

 மேலும் இந்த மாதிரியான இடத்தில் அரிப்புக்கள் ஏற்படும் போது, அதனை மருத்துவரிடம் சொல்லவும் பல ஆண்கள் தயக்கம் கொள்வார்கள்.

ஆண்களே! தயவு செய்து பிறப்புறுப்பில் அரிப்புக்கள் ஏற்பட்டால், அதற்கான காரணத்தை தெரிந்து கொண்டு, முறையான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.

 இங்கு ஆண்களின் பிறப்புறுப்பில் அரிப்புகள் ஏற்படுவதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

*ஜாக் அரிப்பு என்பது* ஆண்கள் உள்ளாடையை இறுக்கமாகவோ, காற்றுப்புகாதவாறு அணிந்தாலோ, அவ்விடத்தில் உள்ள சுருக்கங்களில் வியர்வையானது தங்கி, ஈரப்பசை அதிகரித்து, அங்கு பூஞ்சைகள் வளர்ந்து அரிப்புக்களை ஏற்படுத்தும்.

 பொதுவாக இந்த காரணத்தினால் பல ஆண்களுக்கு அரிப்புகள் ஏற்படுகிறது.

உடலுறவு கொண்ட பின்னர் பிறப்புறுப்பை சுத்தமாக கழுவ வேண்டும். இல்லாவிட்டால், அவ்விடத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அரிப்புகள் ஏற்பட ஆரம்பிக்கும்.

தினமும் குளிக்கும் போது, பிறப்புறுப்பை நன்கு சுத்தம் செய்யாமல் அப்படியே விட்டாலும், அரிப்புகள் ஏற்படக்கூடும்.

ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்த பின்னரும், பிறப்புறுப்பை சுத்தம் செய்யாவிட்டாலும், அரிப்புகள் அவ்விடத்தில் அதிகம் ஏற்படும்.

 எனவே ஒவ்வொரு முறையும் தவறாமல் தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும்.

பிறப்புறுப்பை சுற்றி வளரும் முடியை முறையாக ஷேவ் செய்து சுத்தமாக பராமரிக்காவிட்டால், அவ்விடத்தில் பேன் பெருகி, கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்தும்.

சரும நோய்களான ஸ்கேபிஸ், ஈஸ்ட் தொற்று போன்றவற்றின் காரணமாகவும் அரிப்புகள் ஏற்படலாம்.

 எனவே இத்தகைய தொற்றுகள் இருந்தால், மருத்துவரை அணுகி போதிய சிகிச்சையை பெறுங்கள்.

குளிக்கும் போதும், தண்ணீர் விட்டுக் கழுவும் போதும், ஆண் குறியின் மேல் தோலை நீக்கி நன்றாக கழுவ வேண்டும். நிறையப் பேர் இதைச் செய்வதில்லை. இதனால் தோலுக்குக் கீழே அழுக்கு சேரும். இதுவும் கூட பாதிப்பை ஏற்படுத்தும்.

குழந்தையை பிடிவாத குணமில்லாமல் வளர்ப்பதற்கு ‘பிராக்டிகல் டிப்ஸ்’..!



குழந்தையை பிடிவாத குணமில்லாமல் வளர்ப்பதற்கு  டாக்டர் ஜெயந்தினி   கொடுத்த ‘பிராக்டிகல் டிப்ஸ்’..!

குழந்தைக்கு சாப்பிட, நடக்க கற்றுத் தருவதைப் போலவே, *தோல்விகளை சந்திக்கவும் கற்றுக் கொடுங்கள்.*
உதாரணமாக, குழந்தை சாக்லெட் கேட்டால், அன்பாக, ‘நாளைக்கு வாங்கித் தர்றேன்..’ என்று சொல்லுங்கள். *குழந்தை ‘இப்பவே வேணும்..’ என்று அழுதாலும், ‘நாளைதான்’ என்று தெளிவாகச் சொல்லுங்கள்.* உங்களிடம் உறுதி இல்லாவிட்டால், அதன் பிடிவாதம் அதிகரிக்கவே செய்யும்.

குழந்தை கேட்பதற்கு, வீட்டில் உள்ள அனைவருமே ஒரே பதிலை சொல்ல வேண்டும்.
*"அப்பா தர மாட்டேங்கறாரா? நான் வாங்கித் தர்றேன்டீ என் செல்லம்"* என்று சொன்னால், குழந்தைக்குக் குளிர் விட்டுவிடும்.

*குழந்தை அழுது, புரண்டு, ஆர்ப்பாட்டம் செய்தால், எரிச்சலோ கோபமோ கொள்ளக் கூடாது.* *~பரிதாபப்படவும் கூடாது. அதை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும்.~* *தன்னை யாரும் கவனிக்க வில்லை என்பது தெரிந்ததும், குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு, இயல்பாகி விடும்.*

குழந்தை உங்களிடம் கேட்கிற பொருள் அதற்குத் தேவையா.. இல்லையா.. என்பதை முடிவு செய்யவேண்டியது குழந்தை அல்ல.. நீங்கள்தான்!

சேட்டை செய்கிற உங்கள் குழந்தையை, இதே விஷமத்தை பக்கத்து வீட்டுக் குழந்தை செய்தால், எப்படி உணர்வீர்களோ, அதே கண்ணோட்டத்தோடு பாருங்கள். அப்போதுதான் உங்களால் சரியான முடிவை எடுக்க முடியும் !

‘இந்தக் காலத்து குழந்தைகள் ‘சென்ஸிடிவ்’ ஆக இருக்கிறார்களா? அல்லது பெற்றவர்களுக்கு பிள்ளைகளை வளர்க்கத் தெரியவில்லையா?’ என்கிற  கேள்விக்கு  *பிரபல குழந் தைகள் மனநல நிபுணர்* ஜெயந்தினியின் பதில் !

*‘‘குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கிற விஷயத்தில், பெற்றவர்கள்தான் முதல் குற்றவாளிகள்!’’* என்றவர், பெற்றோர் செய்கிற தவறுகளை சுட்டிக் காட்டினார்.
‘‘நான் சில அம்மாக்களை சந்தித்திருக்கிறேன். *‘இவன் ஒரு விஷயத்தை நினைச் சுட்டான்னா, அழுது, அடம் பிடிச்சாவது சாதிச்சிடுவான்.. அப்பிடியே எங்கப்பா மாதிரி..’* என்றும்,

‘நான் பசங்களுக்கு எதையுமே இல்லைனு சொல்றதில்லை. *அந்தக் காலத்துல நாமதான் கஷ்டப்பட்டு வளர்ந்தோம். பசங்களுக்குக் கஷ்டம் தெரியக் கூடாது..’ என்றும் பெருமையுடன் சொல்வார்கள். இப்படி.. வெற்றுத் தாள் போல எதையும் ஏற்கத் தயாராக இருக்கிற குழந்தையின் மனதில், தான் நினைத்தது எல்லாம் நடக்கும் என்கிற எண்ணத்தை விதைத்து, அவர்கள் மனம் முழுக்க பிடிவாதத்தை இறைக்கிற தவறைச் செய்கிறவர்கள் பெற்றவர்கள்தான் !*
" பெற்றோர் தங்கள் குழந்தையின் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தத்தான், இப்படி அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள். உண்மையில், குழந்தையின் மீது பாசமும் அக்கறையும் இருக்கிறவர்கள், இப்படி நடந்து கொள்ளக் கூடாது..’’ என்றவர், அது ஏன் என்பதையும் விவரித்தார்.

*‘‘குழந்தைக்கு ‘நோ’ என்கிற வார்த்தையை அழுத்தம் திருத்தமாகச் சொல்லாத வரையில், பெற்றோரின் எந்தக் கஷ்டமுமே குழந்தைக்குத் தெரியாது. அதோடு, ‘நமக்குச் செய்யவேண்டியது பெற்றவர்களான இவர்களின் கடமை.. செய்கிறார்கள்’ என்று ‘டேக் இட் ஃபார் கிரான்டட்’ ஆக.. அதாவது.. *தனக்கு சாதகமாகத்தான் குழந்தை எடுத்துக் கொள்ளுமே தவிர, ‘நம் மேல் எத்தனை பிரியம் இவர்களுக்கு’ என்றெல்லாம் நினைக்கவே நினைக்காது.*

மாறாக, ‘இந்தப் பொருளோட விலை ரொம்ப ஜாஸ்தி. அம்மா கிட்ட அவ்வளவு பணம் இல்ல..’ என்பது போன்ற உண்மையான காரணங்களை எடுத்துச் சொல்லவேண்டும். அப்போதுதான், குழந்தைக்கு பணத்தின் அருமையும், பெற்றோரின் அருமையும் தெரியும்.

*எந்தக் குழந்தைக்கு கேட்டதெல்லாம் மிக எளிதாகக் கிடைத்து விடுகிறதோ.. அந்தக் குழந்தை, மனதைரியம் குறைந்ததாகவும், தோல்வியை தாங்கிக் கொள்கிற சக்தி இல்லாததாகவும்தான் வளருகிறது. இப்படிப்பட்ட குழந்தைகள்தான், தான் நினைத்த ஏதோ சிறு ஒரு விஷயத்தை அடைய முடியாவிட்டால்கூட மனம் உடைந்துபோய் வாழ்வில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் இழக்கத் தொடங்கி விடுகிறது’’*

‘‘பொதுவாக, பிடிவாதம் பிடிப்பது குழந்தையின் இயல்புதான். ஏதோ ஒரு பொருளுக் காகவோ, என்றைக்கோ ஒருநாளோ பிடிவாதம் பிடிக்கிற குழந்தையை நினைத்து, பெற்றோர் பயப்படத் தேவையில்லை. அந்தப் பழக்கம் குழந்தை வளர வளர சரியாகிவிடும். ஆனால், குழந்தை எதற்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிக்கும்போதுதான் அது திருத்தப்பட வேண்டிய பிரச்னையாகிறது.

‘‘பொதுவாகவே, வாழ்வில் தவறான முடிவு எடுக்கும் பெரும்பான்மையானவர்கள், அதிக பிடிவாத குணமுடையவர்கள்தான்.

*அனுசரித்துப் போகாமல், தான் நினைத்ததுதான் நடக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறவர்கள், தொழிலில் மட்டுமல்ல.. திருமண வாழ்க்கையிலும் தோல்வியையே அடைகிறார்கள்.* தானும் வாழாமல், தன்னைச் சார்ந்தவர்களையும் வாழவிடாமல், பிரச்னைக்குரிய நபர்களாகவே மாறிப் போகிறார்கள்’’.
*நன்றி - விகடன்*

நோய்கள் உருவாகும் இடங்கள் !



நோய்கள் உருவாகும் இடங்கள் !
--------------------------------------------------------

நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.

இதோ

1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்

2 - டீ

3 - காபி

4 - வெள்ளை சர்க்கரை

5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.

6 - பாக்கெட் பால்.

7 - பாக்கெட் தயிர்

8 - பாட்டில் நெய்

9 - சீமை மாட்டு பால்

10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.

11 - பொடி உப்பு

12 - ஐயோடின் உப்பு

13 - அனைத்து ரீப்பயின்டு ஆயில்

14 - பிராய்லர் கோழி

15 - பிராய்லர் கோழி முட்டை

16 - பட்டை தீட்டிய அரிசி

17 - குக்கர் சோறு

18 - பில்டர் தண்ணீர்

19 - கொதிக்க வைத்த தண்ணீர்

20 - மினரல் வாட்டர்

21 - RO தண்ணீர்

22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்

23 - Non Stick பாத்திரங்கள்

24 - மைக்ரோ ஓவன் அடுப்பு

25 - மின் அடுப்பு

26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்.

27 - சோப்பு

28 - ஷாம்பு

29 - பற்பசை

30 - Foam படுக்கை மற்றும் இருக்கை

31 - குளிர்பானங்கள்

32 - ஜஸ் கீரீம்கள்

33 - அனைத்து மைதா பொருட்கள்

34 - பேக்கரி பொருட்கள்

35 - சாக்லேட்

36 - Branded மசாலா பொருட்கள்

37 - இரசாயன கொசு விரட்டி

38 - Ac

39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.

40 - பிஸ்கட்டுகள்

41 - பன்னாட்டு சிப்ஸ்

42 - புகைப்பழக்கம்

43 - மதுப்பழக்கம்

44 - சுடு நீரில் குளிப்பது

45 - தலைக்கு டை

46 - துரித உணவுகள்

47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்

48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.

49 - ஆங்கில மருந்துகள்

50 - அலோபதி வைத்திய முறை

51 - உடல் உழைப்பு இல்லாமை

52 - பசிக்காமல் உண்பது

53 - அவசரமாக உண்பது

54 - மெல்லாமல் உண்பது

55 - இடையில் தண்ணீர் குடிப்பது

56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.

57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்

58 - அறியாமை

59 - சுற்றுச்சூழல் மாசுபாடு

60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்

அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது

மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் தான் நோய்கள் உருவாகிறது.

உயிர் பிழைக்க ஒரே வழி

இயற்கைக்கு திரும்புவது மட்டுமே

ஞாயிறு, 30 ஜூலை, 2017

நகங்கள் உடைந்து போகுதா?..



நகங்கள் உடைந்து போகுதா?..

முகத்திற்கு ஏற்ப நகங்களை வளர்க்க பெரும்பாலான பெண்ககள் ஆசைபடுவார்கள் ஆனால் முகத்திற்கு தரும் பராமரிப்பை நகங்களுக்கு தருவதில்லை . நகங்கள் அழகாக, நக பராமரிப்பிற்கான சில டிப்ஸ் தரமான நெயில் பாலிஷ்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அப்போது தான் நகத்திற்கு எவ்வித பாதிப்பும் வராது.

நெயில் பாலீஷ் வாங்கும் போது உங்கள் நிறத்திற்கு ஏற்ற கலராக பார்த்து தேர்ந்தெடுங்கள். சிலருக்கு நகம் கடினத்தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும்.

அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத்தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். அதே போல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம்.

சிலப்பெண்கள் ஆசை ஆசையாக வளர்க்கும் நகங்கள் உடைந்து விடுகின்றது. நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு பேபி ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால், நகங்கள் உறுதியாகும்.

நெயில் பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவது நகத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, அவற்றை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நெயில் பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்துவது நல்லது.

தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி, சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால், விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும் தினமும் நெயில் பாலீஷ் உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கி காணப்படும். எனவே வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நெயில் பாலீஷ் உபயோகிக்காமல், இருப்பது நல்லது.

ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள். கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும்.

அதே போல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். மாத்திற்கு ஒரு முறை இப்படி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும். மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில், காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.

நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கல்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.

நெயில் பாலீஷ் போடும் போது, பிரஷ் ஷினால், நகத்தின் அடிப்பகுதியில் நுனி வரை ஒரே தடவையாக போட வேண்டும். அப்போது தான் அவை பளபளப்பாக எவ்வித திட்டுக்களும் இன்றி அழகாக காட்சியளிக்கும்.

⁠⁠⁠நம் உதட்டின் இயற்கையான நிறத்தை பெறுவது எப்படி?


⁠⁠⁠நம் உதட்டின் இயற்கையான நிறத்தை பெறுவது எப்படி?

உதட்டுச்சாயங்கள் மற்றும் லிப் க்ளாஸ்கள் கொண்டு உதடுகளுக்கு வண்ணம் பூசி அழகு படுத்துவது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால் அதை தவிர சில இயற்கையான வழி முறைகளும் உள்ளன. அவைகள்,

– இயற்கை முறையில் பீட்ரூட் கொண்டு உதட்டை அழகுபடுத்தலாம், ஒரு பீட்ரூட் எடுத்து அதனை 30 நிமிடம் வரை வறுத்து கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து சூடு ஆறிய பின் இரண்டாக வெட்டி உட்புறம் உள்ள சிவப்பு பகுதியை உங்கள் உதட்டின் மேல் தேய்க்கவும். இதே முறையை பயன்படுத்தி உங்கள் கன்னங்களையும் அழகு படுத்தலாம்.

– செயற்கை பொருட்களை பயன்படுத்துவதை விட இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தலாம். அதாவது சீமை களாக்காய்/குருதிநெல்லி (இந்த இரண்டும் ஒன்றே) சாறை பயன்படுத்ததுவதன் மூலமும் இயற்கையான நிறத்தை பெறலாம். இது உங்கள் உதட்டிற்கு அழகான சிவப்பு நிறத்தை தருவதோடு உங்கள் உதட்டையும் பாதுக்காக்கிறது.

– பெட்ரோலியம் ஜெல்லியுடன் செர்ரி சாற்றை (வாஸலின் போல) கலந்து
உதட்டிற்குஉபயோகப்படுத்தலாம். இதை உங்கள் உதட்டின் மேல் உபயோகபடுத்தி உதடுகளை அழகாகக்குவதோடு, இது உங்கள் உதடுகளை மென்மையாகவும் மற்றும் மிருதுவாகவும் வைக்கும்.
-கேக்குகள் செய்ய பயன்படுத்தப்படும் வண்ணத்ங்களையும் கொண்டு உங்கள் உதட்டிற்கு பயன் படுத்தலாம். அதில் சிறிதளவு எடுத்து உதடு முழுவதும் ஒரே மாதிரி தடவலாம்.

⁠⁠⁠புடவைக்கான சிறந்த ஹேர் ஸ்டைல் எது?...



⁠⁠⁠புடவைக்கான சிறந்த ஹேர் ஸ்டைல் எது?...

புடவைக்கு தகுந்த ஹேர் ஸ்டைல் ரொம்ப முக்கியம். ஹேர் ஸ்டைல் மட்டும் பக்காவா இருந்தா நீங்க தாங்க ஹீரோயின். இப்போது புடவைக்கு ஏற்ற ஹேர் ஸ்டைல்களை பார்க்கலாம்.

புடவைக்கான சிறந்த ஹேர் ஸ்டைல் எது?
புடவைக்கு தகுந்த ஹேர் ஸ்டைல் ரொம்ப முக்கியம். நகை எதுவும் போடமா இருந்தா கூட பிரச்சனையில்லை. ஆனால் ஹேர் ஸ்டைல் மட்டும் பக்காவா இருந்தா நீங்க தாங்க ஹீரோயின்.

நீங்க ரொம்ப நேரம் புடவையில் இருக்க வேண்டும் என்றால் ப்ரீ ஹேர் விடுவது சூப்பரா இருக்கும். ஆனா இது குறைவான முடி உள்ளவர்களுக்கு மட்டுமே செட்டாகும்.

நார்மல் ஜடை போட்டு தலை நிறைய மல்லிகை பூ வைத்து, பெண்கள் ஜிமிக்கி மற்றும் நெக்லஸ் போட்டால் சூப்பரா சர்வ லட்சணமும் பொருந்தின மாதிரி இருக்கும்.

புடவைக்கு ஏற்ற பாரம்பரிய ஹேர் ஸ்டைல் தான் இந்த கொண்டை. உங்கள் உயரத்திற்கு ஏற்ற மாதிரி உயரமான கொண்டையா அல்லது நார்மலான கொண்டையா என்பதை தேர்வு செய்யலாம். இதில் பூக்களை வைத்து அலங்கரித்தால் சூப்பராக இருக்கும்.

லேயர் ஹேரில் பேன்சியாக சில சிறிய கொண்டைகளை போட்டுக்கொண்டு சென்றால், நீங்கள் சென்ற இடமெல்லாம் உங்களுக்கு சிறப்பாக அமையும். ஆனால் இதற்கு உங்களுக்கு ஒரு எக்ஸ்பேர்ட்டின் உதவி தேவை.

போனி டெயிலை சற்று வித்தியாசமாக போட்டு சென்றால் நீங்கள் மாடர்ன் பெண் போல காட்சியளிப்பீர்கள். இது டிசைனர் புடவைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.

அழகாக புடவை அணிந்து கொண்டை போட்டு சுற்றி மல்லிகை பூ வைத்தாலும் சூப்பராக இருக்கும்.

மேக்கப் செய்ய கொஞ்சம் கஷ்டமா ஃபீல் பண்றீங்களா? இதோ உங்களுக்காக ஈஸி ட்ரிக்ஸ்...



மேக்கப் செய்ய கொஞ்சம் கஷ்டமா ஃபீல் பண்றீங்களா? இதோ உங்களுக்காக ஈஸி ட்ரிக்ஸ்...

தினமும் அவசர அவசரமாக மேக்கப் செய்யும் போது, சில சொதப்பல்களை செய்திருப்போம்… இது மட்டும் எனக்கு வரவே மாட்டிங்குது என்று வருத்தப்பட்டிருப்போம்… பவுண்டேஷன்,கன்சீலர், ஸ்மோக்கி ஐ, காண்ட்டோரிங் ….. எனத் துவங்கி பல விதமான மேக்கப்களை அறிந்து வைத்திருக்கும் நமக்கு அதனை நடைமுறைப்படுத்துவதில் பலவிதமான சிக்கல்கள் இருக்கும். அதனை இன்னும் எளிதாக செய்வதற்கும், அழகு சாதனப்பொருட்கள், க்ரீம்கள் என பலவற்றையும் பயன்படுத்தும் நாம் அதை இப்படியும் பயன்படுத்தலாம் என்பதற்கும் சில உதாரணங்கள்.

ஐ பென்சில் :
கண்மையிடுவதற்காக இப்போது பெரும்பாலான பெண்கள் பென்சிலைத்தான் பயன்படுத்துகிறார்கள், அது எவ்வளவுதான் சீவினாலும் டார்க்காக வரவில்லையென்றாலோ அல்லது ஜெல் லைனர் மாதிரியான தோற்றம் வேண்டும் என்றால் அந்த பென்சிலை லேசாக தீயில் காட்டுங்கள்.

ஸ்பூன் : கண்ணுக்கு Winged லைனர் போட நினைப்பவர்கள் ஸ்பூனை பயன்படுத்தலாம். முதலில் ஸ்பூனை பிடிக்கும் தண்டுப் பகுதியை நெற்றியிலிருந்து மேல் நோக்கி கண் அருகில் வைத்து ஒரு கோடு வரைந்து கொள்ளுங்கள்,பின்னர் ஸ்பூன் பகுதியை நீங்கள் கோடு வரைந்த இடத்திற்கு அருகில் வைத்து வளைவை வரைந்து கொள்ளுங்கள். இப்போது உங்களுக்கு பார்டர் லைன் கிடைத்துவிடும், அதை பேஸாக வைத்து நடுவில் முழுவதும் நிரப்பிக் கொள்ளலாம்.

ஸ்மோக்கி ஐ : ஸ்மோக்கி ஐ ஷேடோ போட வேண்டும் ஆனால் சரியாக போட முடியவில்லை என்று தவிப்பவர்களுக்கான சூப்பர் டிப்ஸ் இது. கண்ணோரத்தில் சாய்வாக ஒரு X மார்க் போட்டுக்கொள்ளுங்கள் அந்த X மார்க்கில் டார்க்காக ஆரம்பித்து பாதி கண்களில் லைட்டாக முடியும் படி ஷேடோ இட்டால் பெர்ஃபெக்ட் ஸ்மோக்கி ஐ வந்துவிடும்.

மஸ்காரா : மஸ்கரா போடும் போது கண்களின் மேற்பகுதிகளில் மஸ்கரா ஒட்டுவிடும் என்கிற பயம் இனி இருக்காது உங்களுக்கு மஸ்கரா போடும் போது ஸ்பூனின் பின் பகுதியை கண்ணுக்கு மேலே பிடியுங்கள். கண் இமைகள் ஸ்பூனில் படுமாறு இருக்கும். இப்போது நீங்கள் பயமில்லாமல் மஸ்கரா போட்டுக் கொள்ளலாம்.

ஐ லாஸ் : ஐ லாஸ் அணிவதற்கு முன்னால் அதனை ஹீட்டரில் காட்டினால் நீண்ட நேரம் நன்றாக கர்வாக இருக்கும் அதே போல ஐ லாஸ் அணிபவர்கள் அதில் கம் தடவ ஹேர் பின் பயன்படுத்தலாம்.

லிப்ஸ்டிக் : நீண்ட நேரம் லிப்ஸ்டிக் இருக்க வேண்டும் என்றால், முதலில் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ளுங்கள் பின்னர் அதன் மீது ஒரு டிஸ்யூ பேப்பரை வைத்து அதில் ரோஸ் பவுடர் லேசாக போட்டுக் கொண்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்கும்.

டார்க் சர்க்கிள் : கண்ணைச் சுற்றியுள்ள டார்க் சர்க்கில் இருந்தாலோ அல்லது வீங்கிய கண்களை மறைக்க கன்சீலர் பயன்படுத்தும் போது கண்ணுக்கு கீழேயிருந்து தலைகீழான முக்கோணமாக அப்ளை செய்யுங்கள். முக்கோணத்தின் நுனிப் பகுதி கன்னத்தை நோக்கி இருக்க வேண்டும்.

கண்ட்டோரிங் : ஒவ்வொரு மாதிரியான முக அமைப்பு இருக்கும் எந்த இடத்தில், எந்த கோணத்தில் கண்ட்டோரிங் செய்வது என்பதில் குழப்பங்கள் இருக்கும். இதனை எளிதாக தீர்க்க முடியும், மேக்கப் எல்லாம் முடிந்த பிறகு கடைசியாக கண்ட்டோரிங் செய்கையில் பென், அல்லது மேக்கப்பிரசின் தண்டுப் பகுதியைக் கொண்டு உங்கள் கன்னத்தில் லேசாக உருட்டுங்கள் அப்படி செய்தால் கண்ட்டோரிங் செய்ய வேண்டிய இடம் கச்சிதமாக தெரியும்.

⁠⁠⁠சருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி




சருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி

பப்பாளி முகத்தில் படியும் அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையையும் நீக்கும். வீட்டில் உள்ள பொருட்களுடன் பப்பாளியை சேர்த்து சருமத்தை பளபளப்பாக மிளிர வைக்கலாம்.

சருமத்தின் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கும் பப்பாளி
பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பதோடு சரும பொலிவையும் மெருகூட்டும். முகத்தில் படியும் அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையையும் நீக்கும். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி மென்மையையும், பொலிவையும் பெற்று தரும். வீட்டில் உள்ள பொருட்களுடன் பப்பாளியை சேர்த்து சருமத்தை பளபளப்பாக மிளிர வைக்கலாம்.

* பப்பாளி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் பால் கலந்து பசைபோல் குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை முகம், கழுத்து பகுதியில் பூசி, சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமம் மிளிரும்.
* பப்பாளி பழமும், எலுமிச்சை பழமும் சருமத்தை பளிச்சென்று வைக்க உதவும். நறுக்கிய பப்பாளி துண்டுகளுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக பிசைய வேண்டும். அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து நன்றாக கழுவ வேண்டும். பப்பாளி பழத்தில் உள்ள நொதிகள் சரும வளர்ச்சிக்கும், எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் முகத்தில் உள்ள நுண் துளைகளில் படியும் அழுக்குகளை நீக்கி பளிச் தோற்றத்திற்கும் வித்திடும்.

* சில பெண்களுக்கு கழுத்துப் பகுதியில் தோல் சுருக்கமும், வரைவரையாக கோடுகளும் தென்படும். அதனை போக்க முட்டை, பப்பாளி கலந்த கலவை கைகொடுக்கும். முட்டையின் வெள்ளைக்கருவுடன் பப்பாளி பழத்தை பிசைந்து கழுத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

* பப்பாளி பழத்தை மஞ்சள் தூளுடன் கலந்தும் பயன் படுத்தலாம். சில பெண்களுக்கு முகத்தில் முடி முளைத்துக்கொண்டிருக்கும். பப்பாளி பழத்தை கூழாக்கி அதனுடன் மஞ்சள் கலந்து முகத்தில் தடவிவர வேண்டும். அந்த கலவை நன்றாக உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் நாளடைவில் முடிகள் முளைப்பது தடைபடும்.

* பப்பாளி பழத்தை அழகிற்கு மட்டும் பயன்படுத்தாமல் தொடர்ந்து சாப்பிட்டும் வர வேண்டும். அது இளமையை பாதுகாக்க உதவும்.

வெயிலில் கருத்துவிட்டதா முகம்?



வெயிலில் கருத்துவிட்டதா முகம்?

வெயில் அதிகமாகியுள்ள வேளையில் நம் உடலில் ஆடை மறைக்காத இடங்கள் சூரியனின் புறஊதா கதிர்களால் கருமையடையும். அப்படி ஆகாமல் இருக்கவே நாம் சன்ஸ்க்ரீன் உபயோகிக்கிறோம். நம் சருமத்திற்கு ஏற்ற சன்ஸ்க்ரீன் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மார்க்கெட்டில் கிடைக்கும் கண்டதையும் வாங்கி போடக்கூடாது.

அது நம் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். என்னதான் நாம் சன்ஸ்க்ரீன், லோஷன் போன்றவை உபயோகித்தாலும் இயற்கை நமக்கு அளித்த பொருட்களுக்கு நிகராக முடியாது. அப்படியான இயற்கை பொருட்களை பயன்படுத்தி நம் சருமத்தில் படர்ந்திருக்கும் கருமையை அகற்ற முடியும். தேவையான பொருட்களையும் செய்முறையையும் பார்ப்போம்.

1. கடலை மாவு, கற்றாழை, தயிர்ஒரு பௌலில் இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன், ஒன்று அல்லது ஒன்றரை ஸ்பூன் தயிர் கலந்து ஒரு ஸ்பூன் கற்றாழை சதையையும் சேர்க்க வேண்டும். இம்மூன்றையும் நன்கு கலந்து முகம், கை, காலில் பூசி காய்ந்தபிறகு நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இதை வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை செய்து வந்தால் கருமை நிறம் மங்கி விடும்.

2. வெள்ளரி சாறு, எலுமிச்சைச் சாறு, ரோஸ் வாட்டர் ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் வெள்ளரி சாறுடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, மேலும் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து கால், கை, முதுகு, முகத்திற்கு தடவ வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள்வரை வைத்திருந்து பின் கழுவலாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதை செய்து வரலாம். கருமை நிறம் மெல்ல குறையும்.

3. தக்காளி, தயிர், எலுமிச்சைச் சாறு மிக்ஸியில் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிப் போட வேண்டும். அதோடு ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு அரைக்க வேண்டும். அரைத்த விழுதை தனியே ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து, உடலில் கருமை நிறம் உள்ள இடங்களில் போட வேண்டும். வாரம் மூன்று முறை இதை செய்து வந்தால் சருமம் பளிச்சிடும்.

வசீகரிக்கும் அழகைப் பெற வாசலினை இந்த 5 முறைகளில் பயன்படுத்தலாம்!



வசீகரிக்கும் அழகைப் பெற வாசலினை இந்த 5 முறைகளில் பயன்படுத்தலாம்!

பெண்கள் தங்களது முகத்தை தினமும் பராமரிக்க சற்று அதிகமாக செலவு செய்யத்தான் வேண்டியுள்ளது. நீங்கள் மேக்கப் போடுபவராக இருந்தால் கண்டிப்பாக மேக்கப் ரீமூவர் உபயோகப்படுத்த வேண்டியது அவசியம். அந்த மேக்கப் ரீமூவருக்கு தனியாக சில நூறுகள் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

ஆனால் வாசலின் (vaseline) என்ற ஒரே ஒரு பொருளை பலவிதமாக பயன்படுத்தலாம். வாசலினை எதற்காக எல்லாம் பயன்படுத்தலாம், எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இந்த பகுதியில் காணலாம்.

1. மேக்கப் ரீமூவர் நீங்கள் மேக்கப்பை முறையாக ரிமூவ் செய்ய வேண்டியது அவசியம். ஆனால் மேக்கப் ரிமூவர் வாங்குவதற்காக நீங்கள் அதிகமாக செலவு செய்து கொண்டிருக்க முடியாது. மேக்கப் ரிமூவரை வாங்கினாலும், கண்கள் போன்ற சென்சிடிவான இடங்களில் இருக்கும் மேக்கப்பை ரிமூவ் செய்வது கடினம். இதற்கு வாசலின் உதவியாக இருக்கும். நீங்கள் வாசலினை கண்களில் உள்ள மேக்கப்பின் மீது தடவி நன்றாக மசாஜ் செய்து, ஒரு காட்டன் மூலம் சுத்தம் செய்துவிடுங்கள்.

2. வாசனை நீடிக்க நீங்கள் அதிகமாக செலவு செய்து ஒரு வாசனை திரவியத்தை வாங்கியிருப்பீர்கள். அதன் வாசனை நீண்ட நேரம் நீடிக்க வேண்டுமென கருதினால், உங்களது மணிக்கட்டுகளில் சிறிது வாசலினை தடவிய பின்னர் வாசனை திரவியத்தை அதன் மீது தெளியுங்கள். இவ்வாறு செய்தால் வாசனை நீண்ட நேரம் நீடிக்கும்.

3. அழகான புருவத்திற்கு! புருவத்திற்கு மை போடும் போது அதன் பிரஷில் சிறிதளவு வாசலினை தடவிக்கொண்டு பின்னர் மையை தொட்டு போட்டால், புருவத்திற்கு அழகான கருமை நிறம் கிடைக்கும்.

4. கரடுமுரடான பாதத்திற்கு : உங்களது பாதத்தில் வெடிப்புகள் அதிகமாக இருக்கிறதா? அப்படியென்றால் பெட்ரோலியம் ஜெல்லியை இரவு தூங்கும் முன்னர் வெடிப்புகள் உள்ள இடத்தில் தடவிக்கொண்டு, சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்குகள். இது போன்று செய்தால் சில நாட்களில் வெடிப்புகள் மாயமாக மறையும்.

5. அடர்த்தியான புருவம் பெட்ரோலியம் ஜெல்லி புருவத்தையும், கண் இமைகளையும் நன்றாகவும், விரைவாகவும் வளர வைக்கும். எனவே சிறிதளவு பெட்ரோலியம் ஜெல்லியை புருவம் மற்றும் இமைகளில் தடவிக்கொள்ளுங்கள். இது உங்களது புருவத்தையும், கண் இமைகளையும் அடர்த்தியாக்கும்.

இரண்டே வாரத்தில் நரை முடிக்கு குட்-பை சொல்லணுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க..



இரண்டே வாரத்தில் நரை முடிக்கு குட்-பை சொல்லணுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க..

இந்த நரை முடி தற்போது 30 வயதை எட்டுவதற்குள்ளேயே பலருக்கும் வந்துவிடுகிறது. இதனால் இளமையான வயதிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடுகிறது.நரை முடியைப் போக்க மார்கெட்டில் ஏராளமான டைகள் விற்கப்படுகின்றன. ஆனால் அவை ஸ்கால்ப்பில் பட்டால், தலைமுடி உதிர்வால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.எனவே நரைமுடியைப் போக்க இயற்கை வழிகளை நாடுவது தான் சிறந்தது. இங்கு நரைமுடியைப் போக்க நம் முன்னோர்கள் பின்பற்றிய ஓர் எளிய வழி கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் உருளைக்கிழங்கு நீர். இந்த வழியைப் பின்பற்றினால், 2 வாரத்தில் நரை முடியைப் போக்கலாம். இப்போது அந்த உருளைக்கிழங்கு நீரை எப்படி தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது என்று காண்போம்.

செயல்1: முதலில் 5-6 உருளைக்கிழங்குகளை எடுத்து நன்கு கழுவி, தோலை நீக்கி, அந்த தோலைத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

செயல்2: பின் உருளைக்கிழங்கு தோலை 2 கப் நீரில் போட்டு, 15-20 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

செயல்3: பின்பு அந்த கலவையை குளிர வைத்து, நீரை வடிகட்டி, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்க வேண்டும். பின் அதில் சில துளிகள் ரோஸ்மேரி அல்லது லாவெண்டர் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

செயல்4: தலைக்கு ஷாம்பு போட்டு அலசி, கண்டிஷனர் போட்டு 1-2 நிமிடம் கழித்து நீரில் தலைமுடியை அலச வேண்டும்.

செயல்5: பிறகு உருளைக்கிழங்கு நீரைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாகஅந்நீரைக் கொண்டு மசாஜ் செய்த பின் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலசக்கூடாது.

செயல்5: பிறகு தலைமுடியை நன்கு உலர்த்தி, சீப்பு கொண்டு தலைமுடியை சீவ வேண்டும்.

குறிப்பு: உருளைக்கிழங்கு நீரை ப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கக்கூடாது. மேலும் இந்த சிகிச்சையை வாரத்திற்கு 3 முறை செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால், 2 வாரத்தில் நரைமுடியில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம். ஆனால் இயற்கை வழிகளை நாடும் போது, பொறுமை என்பது மிகவும் அவசியம் என்பதை மறவாதீர்கள்.

⁠⁠⁠முகப் பரு – கரும் புள்ளி -தழும்புகள் நீங்க...



முகப் பரு – கரும் புள்ளி -தழும்புகள் நீங்க...

உடம்பில் உஷ்ணம் ஏறி..அதனால், முகத்தில் உஷ்ண கட்டி வந்து
பிறகு அது பழுத்து உடைந்த பிறகு, கட்டியின் தழும்பு மட்டும்
தென்படுமே.. அந்த தழும்பு மறைய என்ன செய்யலாம்?

முகத்தில் பரு வந்தால் அதனைக் கிள்ளக் கூடாது
நகம் படக்கூடாது ஏனென்றால் அதுவே பரு மறைந்த
பிறகு கருப்பு தழும்பாக மாறி விடும் .இதே போல்

அம்மை நோய்,மற்றும் சூட்டுக் கொப்புளங்கள் முகத்
தில் வந்தாலும் சிலருக்கு முகத்தில் தழும்பு நீண்ட
நாட்களுக்கும் அப்படியே இருக்கும்.

இதற்கான சித்த மருத்துவ முறை தீர்வுகள் :

1 – முகப் பருவைக் கிள்ளுவதால் ஏற்படும் கரும்புள்ளி
யைப் போக்க ஜாதிக்காய் ஒன்றை எடுத்து தேங்காய்ப்
பால் சிறிது விட்டு அரைத்து இரவில் கரும் புள்ளியின்
மேல் போட்டு வரவும் .

தினமும் இது போல் செய்து வர சில நாட்களில் கரும்
புள்ளி மறைந்து விடும்.

2 – முகப் பரு – கரும் புள்ளி -தழும்புகள் நீங்க :
1 – கோபி சந்தனம் – ஒரு டீ ஸ்பூன் அளவு
2 – பாதாம் பருப்பு – மூன்று (நீரில் ஊற வைத்தது)
3 – தயிர் – 2 – டீ ஸ்பூன்
4 – எலுமிச்சை சாறு – 2 – டீ ஸ்பூன்
இவைகளை அரைத்து எடுத்து முகம்,கழுத்து பகுதி
களில் பூசி ஒருமணி நேரம் கழித்து கழுவவும்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகப்
பரு ,கரும்புள்ளி ,தழும்புகள் நீங்கி முகம் அழகு
பெரும்.

3 -முகத்தில் தழும்புகள் – தீப்புண் தழும்புகள் மறைய :
அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரி
யாக்கி தூள் செய்து தேங்கா எண்ணையில் விட்டு
குழப்பி வைத்துக் கொள்ளவும்.
இதனை இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி
வர தழும்புகள் படிப்படியாக மறையும்.

⁠⁠⁠பெண்களுக்கு ஏற்படும் நரம்பு முடிச்சு பிரச்சனை



பெண்களுக்கு ஏற்படும் நரம்பு முடிச்சு பிரச்சனை...

வேரிகோஸ் வெயின் (Varicose Venis) என்பதனை உரையாடல் வழக்கத்தில் நரம்பு முடிச்சு என்றும் சுருள் சிரை நரம்பு என்றும் குறிப்பிடுகின்றனர். பெண்களுக்கு எதனால் இந்த பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.

பெண்களுக்கு ஏற்படும் நரம்பு முடிச்சு பிரச்சனை
கர்ப்பம், மாதவிடாய் நிற்றல், ஹார்மோன் மாறுபாடுகள், கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்ளுதல் ஆகியவை கூட வேரிகோஸ் வெயின் பாதிப்பினை ஏற்படுத்தும்.

* கர்ப்பம் – கர்ப்ப காலத்தில் கால்களிலிருந்து இடுப்பிற்கு வரும் ரத்தத்தின் வேகம், அளவு குறையும் வாய்ப்பு அதிகமாவதால் கால்களில் வீங்கிய ரத்த குழாய்கள் இருக்கும். ஹார்மோன் மாறுபாடுகளும் காரணமாக இருக்கலாம். பேறு காலத்திற்குப் பிறகு 12 மாதங்களில் சகஜ நிலை ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம்.

* வெகு நேரம் நிற்கும் பணியாளர்கள் இந்த பாதிப்பிற்கு எளிதில் ஆளாகின்றனர்.

இந்த பாதிப்போடு புண் ஏற்படலாம், ரத்த கட்டிகள் உருவாகலாம். அதிக ரத்த கசிவும் ஏற்படலாம்.

மருத்துவர் இதனை பார்த்தே பாதிப்பினை அறிவார். அல்ட்ரா சவுண்ட் போன்ற பரிசோதனைகள் வால்வு பாதிப்பு போன்ற மேலும் பல தகவல்களை அறிய உதவுகின்றன.

சிகிச்சை:

முதலில் மருத்துவர் அன்றாட வாழ்க்கை முறையில் சில அறிவுறுத்தல்களை அளிப்பார்.

* நீண்ட நேரம் நிற்பதனை தவிர்க்க வேண்டும்.

* எடையினை குறைத்தல் அவசியம்.

* ரத்த ஓட்டம் சீராக இருக்கும் படியான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

* கால்களை படுக்கும் பொழுதும், உட்காரும் பொழுதும் உயர தூக்கி வைத்தல் அவசியம்.

* அழுத்தம் தரும் ஸாக்ஸ், உறைகள் அறிவுறுத்தப்படும். இவை பலன் அளிக்காத போது லேசர், அறுவை சிகிச்சை என அவசியத்திற்கேற்ப சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படும்.

பொதுவில் நீண்ட நேரம் உட்காருவது, நீண்ட நேரம் நிற்பது இவற்றினை தவிர்ப்பதும், வேலை எதுவும் செய்யாது ‘மெத்தென’ இருப்பதனை தவிர்ப்பதும் வருமுன் காப்போனாக இருக்கும்.

சில குறிப்பிட்ட வகை யோகா பயிற்சி முறைகள் ‘வேரிகோஸ் வெயின்’ பாதிப்பினை தவிர்ப்பதாகவும், பாதிப்பு ஏற்பட்டாலும் வலியின்றி இருக்க உதவுவதாகவும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

⁠⁠⁠தலைக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியமா?



தலைக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியமா?

எண்ணெய் தேய்ப்பதால் ஆகப்போவது ஒன்றும் இல்லை என்றும், எண்ணெய் தேய்ப்பது கூந்தல் வளர்ச்சிக்கு நல்லது என்றும் மாறுபட்ட கருத்துகள் உண்டு. இந்தக் குழப்பமெல்லாம் தேவையே இல்லை. எண்ணெய் தேய்ப்பது அவசியமே என்பதற்கான காரணங்களை அடுக்குகிறார் சருமநல மருத்துவரான ருக்மணி.

* முடி உலர்வதைத் தவிர்த்து, பாதுகாப்பு கொடுத்து முடியை பலப்படுத்துகிறது எண்ணெய்.

* தலையில் எண்ணெய் தேய்க்கும் பழக்கம் நம்மிடையே தொன்று தொட்டு இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுக்கு முன்பு இருந்த மொஹஞ்சதாரோ நாகரி கம் தொட்டு தலைக்கும், உடம்புக்கும் எண்ணெய் தேய்க்கும் பழக்கம் இருந்ததற்கான வரலாறு உள்ளது.

* அன்றைய பெண்கள் கடுகு, பீலு எண்ணெய் தேய்த்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பொதுவாக எல்லோரும் பயன்படுத்துவது தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகும். இரண்டு எண்ணெய்களுமே தலைக்கு தேய்ப்பதற்கு சிறந்தவை என்பது நாம் பெருமைகொள்ளத்தக்க ஒன்று.

* நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்களிலும் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. நல்லெண்ணெயில் உள்ள வைட்டமின் E முடி சிதைவைத் தடுக்கிறது.

* முடி செம்பட்டையாக உள்ளவர்கள் நல்லெண்ணெய் தேய்த்தால் செம்பட்டை குறைய வாய்ப்பு உள்ளது. தலை உலர்ந்து பொடுகு
உள்ளவர்களுக்கு எண்ணெய் தேய்த்தால் அரிப்பு குறையும்.

* குளிப்பதற்கு முன் எண்ணெய் தேய்க்கும் பழக்கத்தை வாரம் ஒரு முறையும், குளித்த பிறகு எண்ணெய் தேய்க்கும் பழக்கத்தை அன்றாடமும் கடைபிடிக்கலாம்.

* தலை முழுக்க எண்ணெய் படும்படி மட்டும் தேய்த்தால் போதும்; நனையும் அளவுக்கு அதிகம் தேய்க்க தேவையில்லை.

* எண்ணெய் ஒவ்வாமை உள்ளவர்களும் தலையில் இயற்கையாக அதிக எண்ணெய் உள்ளவர்களும், எண்ணெய் தேய்ப்பதைத் தவிர்க்கலாம்.

* இயற்கையாக கிடைக்கக்கூடிய நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினாலே போதும். ஆலிவ் எண்ணெய் மற்றும் வெளிநாட்டு எண்ணெய்களை பயன்படுத்துவது தேவையில்லை.

* செயற்கை ஹேர் ஆயில்களை மருத்துவர்களின் ஆலோசனைப்படி மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். விளம்பரத்தை பார்த்து வாங்கி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

⁠⁠⁠கரும்புள்ளியை விரைவில் மறையச் செய்யும் 5 தேயிலை மர எண்ணெய் குறிப்புகள் !!



கரும்புள்ளியை விரைவில் மறையச் செய்யும் 5 தேயிலை மர எண்ணெய் குறிப்புகள் !!

கரும்புள்ளி மூக்கின் ஓரங்களிலும் மற்றும் மூக்கிலும் வரும். மற்றும் முகத்தில்அதிகப்படியான இறந்த செல்களும், பேக்டீரியாவும் சேர்ந்து அந்த இடத்தில் தங்கி சரும்த்தை சேதப்படுத்தும்போது அங்கே கரும்புள்ளி தோன்றுகிறது. ஏதாவது விசேஷங்களின்போதுதான் இந்த கரும்புள்ளிகள் தோன்றி முகத்தை பாழ்படுத்தும். உடனடியாக அவற்றை மறையச் செய்ய வேண்டுமா? தேயிலை மர எண்ணெயை கொண்டு எவ்வாறு 4 வழிகளில் கரும்புள்ளியை மறையச் செய்யலாம் என பார்க்கலாம்.

தேயிலை மர எண்ணெய் மாஸ்க்
தேயிலை மர எண்ணெய் – சில துளி
முல்தானி மட்டி – கால் ஸ்பூன்
நீர் – தேவையன அளவு
முல்தானி மட்டி அல்லது வேறு ஏதாவது க்ளே பவுடரில் 3 துளி தேயிலை மர எண்ணெய் மற்றும் கலக்க தேவையான நீர் சேர்த்து பேஸ்ட் போல்ச் செய்து அதனை முகத்தில் போடுங்கள். 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இரண்டாவது முறையிலேயே மாற்றம் தெரியும்.

ப்ளீச்சிங் :
ஜுஜுபா எண்ணெய்
தேயிலை மர எண்ணெய்
தக்காளி விழுது
ஜுஜுபா எண்ணெய் மற்றும் தேயிலை மர எண்ணெய் இர்ண்டையும் சில துளிகல் எடுத்து அவற்றுடன் தக்காளியின் சதைப்பகுதியை பசித்து முகத்தில் குறிப்பாக கரும்புள்ளி இருக்குமிடத்தில் தேய்த்து சில நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். விரைவில் பலன் தெரியும்.

ஃபேஸ் வாஷ் :
நீருடன் சில துளி தேயிலை மர எண்ணெயை கலந்து முகத்தில் கழுவு வந்தால் விரைவில் கரும்புள்ளி மறைந்து சருமம் சுத்தமாகும்.

ஃபேஸியல் ஸ்க்ரப் :
சர்க்கரை ஆலிவ் எண்ணெய் தேயிலை மர எண்ணெய் சர்க்கரை 1 ஸ்பூன் அளவு எடுத்து அதே அளவு ஆலிவ் எண்ணெய் கலந்து அவற்றில் சில துளி தேயிலை மர எண்ணெய் கலந்து முகத்தில் தேய்த்து கழுவுங்கள். இவை சரும சுருக்கங்களை , கரும்புள்ளியை போக்கி, மிருதுவாக்கும்

குளியல் :
குளிக்கும்போது ஒரு டப் நீரில் சில துளி தேயிலை மர எண்ணெய் கலந்து அந்த நீரில் குளித்தால் சரும பிரச்சனைகள் மறைந்து சருமம் புத்துயிர் பெறும்.

சனி, 29 ஜூலை, 2017

கர்ப்பிணிப் பெண்களுக்கான சில குறிப்பிடத்தக்க டிப்ஸ் இதோ....



கர்ப்பிணிப்  பெண்கள் கவனத்திற்கு…

🌍♨தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் அவர்களின் பூரணத்துவத்தை அடைவது என்றால் மிகையில்லை. பொதுவாக திருமணம் முடியும் வரை பெண்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடும், வாழ்க்கை பற்றிய கனவுகளோடும் இருந்தாலும் திருமணத்திற்குப் பின் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதே அவர்களின் மறுபிறவி என்கிறோம்.

🌍♨ஆகவே தான் தாய்மையை, மனித இனத்தின் ஆதாரமான குழந்தைகளை வயிற்றில் சுமந்து பெற்றெடுக்கும் அன்னையரை அனைவரும் போற்றிப் புகழ்கிறோம். குழந்தையை வயிற்றில் கருவாக சுமந்த முதல் மாதத்தில் இருந்து புதிய உயிரை பெற்றெடுப்பது வரை எவ்வித சிக்கலும் இன்றி கர்ப்பிணிப் பெண்கள் சிறப்பான உணவு முறைகளையும், எளியவகையிலான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் மருத்துவர்களின் ஆலோசனைகளையும் தவறாமல் உரிய முறையில் கடைபிடித்தல் அவசியம்.


கர்ப்பிணிப் பெண்களுக்கான சில குறிப்பிடத்தக்க டிப்ஸ் இதோ....


🌍♨1. கர்ப்பம் என்பதை மருத்துவரிடம் உறுதிப்படுத்திய பின்னர், ஒவ்வொரு மாதமும் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

🌍♨2. அன்றாடம் குறைந்த அளவு உணவுகளை சிலமணி நேர இடைவெளி விட்டு அடிக்கடி சாப்பிடவும். 4 மணி நேரத்திற்கு அதிகமான இடைவெளி இருத்தல் கூடாது.

🌍♨3. ஒவ்வொரு முறை படுக்கையிலிருந்து எழும்போதும் கவனமாக பொறுமையுடன் எழுந்திருத்தல் வேண்டும்.

🌍♨4. தூங்கும்போதும் கூட உங்களுடன் பிஸ்கட் பாக்கெட்களை வைத்திருக்கவும். தூங்கி எழுந்தவுடன் சாப்பிடுவதற்கு ஏதுவாகும்.

🌍♨5. ஒரே நேரத்தில் அதிக அளவிலான சாப்பாட்டை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும்.

🌍♨6. நீங்கள் ஓய்வு வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் போதிய அளவு ஓய்வை எடுத்துக் கொள்ளுங்கள்.

🌍♨7. சாப்பிடும் உணவை நுகர்ந்தபின் சாப்பிடுவதை தவிர்க்கவும். அது உங்களுக்கு உணவின் மீது அதிருப்தியை ஏற்படுத்தலாம்.

🌍♨8. தேவைப்பட்டால் எலுமிச்சம் பழம் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு நுகர்ந்து கொள்ளவும். இது வாந்தியைத் தவிர்க்க ஏதுவாகும்.

🌍♨9. இடுப்பை இறுக்காதவகையிலான தொழதொழப்பான (லூஸ்) ஆடைகளை அணிந்து கொள்ளப்பழகுங்கள்.

🌍♨10. தேவைப்பட்டால் முழங்கால்களுக்கு இடையே தலையணை ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். இப்படிச் செய்வதால் உங்களின் இடுப்பு மற்றும் முழங்கால்களில் ஏற்படும் அழற்சி சற்றே மட்டுப்படும்.

🌍♨11. மாலைக்குப் பின்னர் திரவ உணவு வகைகளை அதிகமாக எடுப்பதைத் தவிர்க்கவும். பகலில் அல்ல. அதேபோல் இரவில் காபி அருந்துவதையும் தவிர்த்தல் நலம்.

🌍♨12. பால் அல்லது மூலிகை கலந்த தேநீர் அருந்தவும்.

🌍♨13. முடிந்தால் சாப்பிட்டபின் சூயிங்கம் அல்லது மிட்டாய் போன்றவற்றை சிறிதுநேரம் மெல்லுங்கள்.

🌍♨14. பயணத்தின் போது நீண்டநேரம் உட்கார்ந்திருப்பதைத் தவிருங்கள். குறைந்தது ஒருமணி நேரத்திற்கு ஒருமுறையோ அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஓருமுறையோ நடந்து உலவுங்கள். பெரும்பாலும் பயணத்தின் போது அவ்வப்போது கழிவறைக்குச் சென்று சிறுநீர் கழிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

🌍♨15. சற்றே எண்ணெய் குறைவான ஸ்நாக்ஸ் வகைகளை பயணத்தின் போது எடுத்துச் செல்லுங்கள். ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை கேரட், ஆப்பிள் அல்லது சாண்ட்விச் போன்றவற்றில் ஏதாவதொன்றை சாப்பிடவும்.

🌍♨16. அடிக்கடி தண்ணீர் அருந்துங்கள். உடலில் உள்ள தண்ணீர் வெயில், உடல் உஷ்ணம் காரணமாக அவ்வப்போது நீர்த்துப் போகும் என்பதால் தேவையான அளவு தண்ணீரை குடிப்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள்.

🌍♨17. கர்ப்பமாக இருக்கும் போது முதுகுவலி ஏற்பட்டால், உடனடியாக வெந்நீர் பேக் கொண்டு வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுங்கள். உங்களின் முதுகுத்தண்டானது சுவரில் ஒட்டியிருக்கும்படி நின்றுகொண்டு சிறிதுநேரத்திற்கு அதே நிலையிலேயே இருங்கள். இதனால் முதுகுவலி நீங்கலாம்.படுத்திருக்கும் போது உங்களின் கால்கள் உயர்வாக இருக்குமாறு தலையணைகளை வைத்துக் கொண்டு தூங்கலாம்.

🌍♨18. நிறைமாதத்தில் குழந்தைபிறப்பதற்கான வலி ஏற்படும் போது, முடிந்தால் சற்றே நடக்கலாம். இதன்மூலம் குழந்தை பிறப்பது சற்றே எளிதாகும்.

🌍♨19. கர்ப்ப வலி இருக்கும் போது சாப்பிடுதல் அல்லது திரவங்களைக் குடிப்பதால் குழந்தை பிறப்பது விரைந்து பலனைத் தரும்.

🌍♨இதுபோன்ற தகவல்கள் என்பது பொதுவானவையே. இவற்றையெல்லாம் விட உரிய மருத்துவர்கள் மற்றும் வீட்டில் உள்ள தாதியர் அல்லது அனுபவம் மிக்கவர்களின் அறிவுரைப்படி செயல்படுங்கள்.

🌍♨வளமான குழந்தையைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

முகத்தின் அழகை பிரதிபலிக்கும் அம்சங்களில் முக்கிய பங்கு வகிப்பது உதடுகள்.



 முகத்தின் அழகை பிரதிபலிக்கும் அம்சங்களில் முக்கிய பங்கு வகிப்பது உதடுகள்.


 பெண்கள், ஆண்களென பாகுபாகின்றி அனைவருக்கும் தங்களின் உதடுகள் சிவப்பாக இருக்கவேண்டுமென்பது ஆசை.

இத்தகைய உதடுகளை மென்மையாகவும், சிவப்பாகவும் பராமரிக்க சில மிக எளிதான குறிப்புகளை பின்பற்றினாலே போதும்.

உங்களுக்கு உதவும் அத்தகைய ஈசி டிப்ஸ் இதோ...

வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் அழகாக இருக்கும்.

மழை மற்றும் குளிர் காலங்களில் உதடுகளில் வெடிப்பு ஏற்படாதவாறு உதடுகளில், 'வாசலின்’ தடவிக் கொள்ளலாம்.

வெயில் காலத்தில் வைட்டமின், “இ’ சத்துகள் நிறைந்த, 'சன்ஸ்கிரீன் லோஷன்' தடவுங்கள்.

தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ் ஸ்டிக்கை பயன்படுத்தாதீர்கள்.

 இதனால் உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரிய வாய்ப்புள்ளது.

உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தவும் கூடாது.

அவ்வாறு செய்தால் உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.


 இரவு லிப்ஸ்டிக்கை எடுத்தவுடன் உதட்டின் மேல் கிளிசரின், பன்னீர் இரண்டையும் கலந்து தடவவும். ·

 இரவு படுக்கும் முன் உதடுகளை மிருதுவாக்கக்கூடிய வெண்ணை தடவி படுக்க வேண்டும். ·

 15 நாட்களுக்கு ஒரிரு முறை பால் ஆடையுடன் சிறிது தேன் கலந்து உதட்டில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவி விடவும்.

*உதடுகளில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள்:*

கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான தன்மையை அடைகின்றன.

 இதனால் உதடுகளில், “வாசலின்’ தடவிக் கொள்ளலாம்.

வைட்டமின்கள் குறைபாட்டினால், உதடுகளின் ஓரத்தில் புண்கள் வரலாம்.

 இதற்கு உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

 மேலும், நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும்.

வாய்ப் பகுதியை சுற்றி உதடுகளின் ஓரத்தில் உள்ள புண்கள் மற்றும் கொப்புளங் கள்
மறைய, வைட்டமின், “இ’ சத்துகள் நிறைந்த, “சன்ஸ்கிரீன் லோஷனை’ தடவி வரலாம்.


*உதடு சிவப்பாக செய்ய வேண்டியவை:*

அதிக குளிர் மற்றும் வெப்பத்தை தாங்க முடியாமல், சிலருக்கு உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும்.

 மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளுடனும் காணப்படும்.

*இவற்றிற்கான சிகிச்சை முறைகள்:*

பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.

 *நாக்கால் உதட்டைத் தடவாதீர்கள்!:*

 தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரியும்.

 உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தக் கூடாது.

 அவ்வாறு செய்தால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாக்களால், உதட்டில் புண்கள் ஏற்படலாம்.

மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.

வெள்ளி, 28 ஜூலை, 2017

புற்று நோயை மஞ்சள் குணப்படுத்தும்: புதிய ஆய்வில் தகவல்...



புற்று நோயை மஞ்சள் குணப்படுத்தும்: புதிய ஆய்வில் தகவல்...

நியூரோ பிளாஸ்டோமா எனப்படும் நரம்புக் கட்டி நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

இது படிப்படியாக வளர்ந்து சிறுநீரகங்கள் அருகே அட்ரீனல் சுரப்பிகளில் புற்று நோயாக மாறுகிறது.

இதை குணப்படுத்துவது மிகவும் சிரமம் என கருதப்பட்டது.

இந்த நிலையில் நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உள்ளது என அமெரிக்க வாழ் இந்திய நிபுணர் தம்மாரா கண்டு பிடித்துள்ளார்.

இவர் வெஸ்ட் மோர் லேண்டில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கிறார்.

மஞ்சளில் உள்ள மிக சிறிய ரசாயண பொருட்கள் மருந்தாகி நரம்பு கட்டி புற்று நோயை குணப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

எனவே புற்று நோய் மருந்துகளில் மஞ்சளை சேர்க்கலாம் என பரிந்துரைத்துள்ளார்.

உறங்கும் முன் இதை செய்தால்.. ஒரு அதிசயம் நடக்கும்.



உறங்கும் முன் இதை செய்தால்.. ஒரு அதிசயம் நடக்கும்.


இரவில் ஆழ்ந்த நல்ல உறக்கத்தை பெறுவதற்கு, உறங்கும் முன், ஒரு சுவாசப் பயிற்சியை செய்ய வேண்டும்.

முதலில் கண்களை மூடிக் கொண்டு, நாக்கை வாயின் மேல் கூரையில், மேல்வாய் பற்களின் பின்புறத்தை நாக்கால் தொட வேண்டும்.

நாக்கை சரியான நிலையில் தொட்ட பின், மூச்சை வாயின் வழியாக  வெளியேற்றி விட்டு, வாயை மூடிக் கொண்டு, மூக்கின் வழியாக 4 வரை எண்ணிக் கொண்டே மூச்சை உள்ளிழுத்து, 7 வரை எண்ணிக் கொண்டு மூச்சைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் மூச்சை மெதுவாக வெளிவிட வேண்டும். இந்த மூச்சு பயிற்சியை இரவில் தூங்கும் முன் தொடர்ந்து 4 முறைகள் செய்து வந்தால், இரவில் படுத்ததும் உறக்கம் வந்துவிடும்.

*குறிப்பு :*

இந்த மூச்சு பயிற்சியின் போது, மூச்சை வாயின் வழியாகத் தான் வெளியிட வேண்டும். இதனால் மன அழுத்தம் குறையும்.

திடீரென சர்க்கரையின் அளவு குறைந்தால் உடனடியா செய்ய வேண்டியது..



திடீரென சர்க்கரையின் அளவு குறைந்தால் உடனடியா செய்ய வேண்டியது..


இதனால் மூளைக்குத் தேவையான குளூக்கோஸ் கிடைக்கமல் தடைப்படுவதால் மயக்கமும் ஏற்படும்.

இதை கண்டுகொள்ளாமல் விட்டால் பெரிய பிரச்சனைகளைக் கூட ஏற்படுத்திவிடும்.

 வீட்டிலிருக்கும் போது லோ சுகர் ஆகிவிட்டால் என்ன செய்வது எப்படி தப்பிப்பது என்பதை இப்போது பார்க்கலாம்.

லோ சுகருக்கான அறிகுறிகள் ஏதேனும் தெரிந்தால் உடனடியாக கிட்சனில் இருக்கும் சர்க்கரை, தேன், ஜாம் என இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்து சாப்பிடுங்கள். இது உடனடியாக ரத்தத்தில் சர்க்கரையளவை உயர்த்தும்.

 இதனால் நீங்கள் சுதாரித்து உதவிக்கு ஆட்களை அழைக்க முடியும்.

எல்லாருக்கும் காலை உணவு அவசியம். லோ சுகர் இருப்பர்கள் ப்ரோட்டீன் சத்து நிறைந்த உணவுகளை காலை உணவாக தேர்ந்தெடுக்கலாம்.

ஏனென்றால், ப்ரோட்டின் மெதுவாக ஜீரணமாகும் அத்துடன் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உணவுகளில் இருக்கும் க்ளுக்கோஸை ரத்தத்தில் சேர்க்கும் என்பதால் லோ சுகர் ஆவது குறையும்.

முட்டை, சீஸ், சிக்கன் போன்றவற்றில் அதிக ப்ரோட்டீன் உள்ளது.
மூன்று வேளை நிறைய உண்பதை விட சிறிது சிறிதாக ஐந்து வேலை சாப்பிடுங்கள்.

 உணவு இடைவேளையை அதிகரியுங்கள், இதனால் ரத்தத்தில் எப்போதும் சர்க்கரையளவு இருந்து கொண்டேயிருக்கும்
சிலர் தூங்கும் போது லோ பிரசர் ஆகி மயக்கமடைந்திருப்பர் அதை நாம் கண்டு சிகிச்சை அளிக்கும் முன்னர் பாதிக்கப்பட்ட நபர் மிக மோசமான நிலைக்கு சென்றிருக்க கூட வாய்ப்புகள் உண்டு.

இதனை தவிர்க்க முந்திரியை பொடியாக்கி ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ளுங்கள்.
தினமும் இரவு படுக்கச் செல்லும் முன்பாக ஒரு டம்பளர் நீரில் முந்திரி பவுடர் ஒரு டீஸ்பூன், தேன் இரண்டு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்துவிட்டு படுக்கச் செல்லலாம்.

காபியில் இருக்கும் கஃபைன் என்ற பொருள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உறிஞ்சக்கூடியது. அதனால் ஒரு நாளைக்கு இரண்டு முறை மூன்று முறை என்று குடிப்பதை தவிர்த்திடுங்கள்.

 அதே போல அல்கஹால் குடிப்பதையும் தவிர்த்திடுங்கள்.

இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது ஆரோக்கியமான உணவு. சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

 சீரான உடற்பயிற்சி, வாக்கிங், ஸ்கிப்பிங் போன்றவை செய்யலாம்.

அமர்ந்து வேலை பார்ப்பது பின் புறத்தைப் பாதிக்கும்..



அமர்ந்து வேலை பார்ப்பது பின் புறத்தைப் பாதிக்கும்..


அலுவலகத்தில் நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்து பணிபுரிவது நமது ஆசனப் பகுதியைப் பாதிக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

டெஸ்க் டெர்ரீர்’ எனப்படும் இந்த பாதிப்பு, சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டார்கள்.

அவர்கள், அதிக நேரம் இருக்கையில் அசையாமல் அமர்ந்து வேலை பார்ப்பவர்களின் பின்புறத்தை ஸ்கேன் செய்தார்கள்.

 அப்போது, அவர்களின் ஆசனப் பகுதி தசைகள் சுருங்கியும், சேதமடைந்தும் இருப்பது தெரியவந்தது.

 அதிக நேரம் அமர்ந்து, அலட்டிக்கொள்ளாமல் வேலை பார்ப்பவர்களின் பின்புறத்தில் கொழுப்பு சேர்கிறது, அது தசை திசுக்களுக்கு உள்ளும் ஊடுருவுகிறது.

இதுதொடர்பாக நுபீல்டு ஆரோக்கிய மையத்தின் பிசியாலஜி துறைத் தலைவர் கிறிஸ் ஜோன்ஸ் கூறுகையில், “ஒருவர் நாள் முழுவதும் இருக்கையில் அமர்ந்திருந்தால், அவருடைய இடுப்பின் முன்புறத் தசைகள் அளவுக்கு அதிகமாகச் செயல்படும். அந்த தசைகள் இறுக்கமாகவும் ஆகின்றன.

அதன் விளைவாக, குறிப்பிட்ட நபர்களின் பின்புறத்தில் அந்த வடிவத்தைக் கொடுக்கும் மூன்று முக்கியத் தசைகளான குளூட்டியஸ் மாக்சிமஸ், குளூட்டியஸ் மீடியஸ், குளூட்டியஸ் மினிமஸ் ஆகியவை பாதிக்கப்படுகின்றன“ என்கிறார்.

ஆண்களுக்குப் பெரும்பாலும் இடுப்பைச் சுற்றி கொழுப்புச் சேர்கிறது என்றால், பெண்களுக்குப் பெரும்பாலும் பின்புறத்தில் கொழுப்பு திரள்கிறது என்றும் கூறுகிறார் ஜோன்ஸ்.

வியாழன், 27 ஜூலை, 2017

3000 மனிதர்கள் நின்றுவரைந்த ஓவியம் ZOOM செய்யவும்

3000 மனிதர்கள் நின்றுவரைந்த ஓவியம் ZOOM  செய்யவும்


This picture contains 105 famous people, even if you can identify 15, you are genius. So start now......

This picture contains 105 famous people, even if you can identify 15, you are genius. So start now......


முடி அடர்த்தியாக வளர டிப்ஸ்..


முடி அடர்த்தியாக வளர டிப்ஸ்..

முடியின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் அதிகரிக்க சிறந்த வழியெனில், அது வாரம் ஒருமுறை தவறாமல் சூடான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடியின் அடர்த்தி மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.


முட்டையின் வெள்ளைக்கருவிற்கு பாதிப்படைந்த மயிர்கால்களை சரிசெய்யும் குணம் உள்ளது. அதுமட்டுமின்றி, முடியை மென்மையாகவும், பொலிவோடும் வெளிக்காட்டும். ஆகவே வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு முடியை நன்கு மசாஜ் செய்து உலர வைத்து குளிக்க வேண்டும். இதனால் முடி நன்கு வேகமாக வளரும்.


சீப்புகளைக் கொண்டு தலையை சீவும் போது, ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும். எனவே தினமும் 3-4 முறை தலைக்கு சீப்பை பயன்படுத்துங்கள். இதனால் மயிர்கால்கள் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.


தலைக்கு குளித்த பின்னர், முடியை உலர வைக்க பலர் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்துவதால், முடியின் ஆரோக்கியமானது பாதிக்கப்படும். அதிலும் இதனை தினமும் பயன்படுத்தினால், விரைவில் வழுக்கைத் தலை ஏற்பட்டுவிடும். ஆகவே எப்போதும் முடியை இயற்கையான வழியில் உலர வையுங்கள்.


முடிக்கு புரோட்டீன் மிகவும் அவசியமானது. அத்தகைய புரோட்டீன் முட்டையில் மட்டுமின்றி, உருளைக்கிழங்கிலும் உள்ளது. அதற்கு உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீரைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை அலசுங்கள். இதனால் அதில் உள்ள இயற்கையான ஸ்டார்ச் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.


முடியின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமானால், நறுமணமிக்க எண்ணெய்களான லாவெண்டர் ஆயில், ரோஸ்மேரி ஆயில் போன்றவற்றைக் கொண்டு, வாரம் ஒருமுறை முடியை மசாஜ் செய்ய வேண்டும்.


வெங்காயத்தை நீரில் போட்டு வேக வைத்து, பின் அந்த நீரினால் முடியை அலசலாம் அல்லது வெங்காயத்தை சாறு எடுத்து அதனைக் கொண்டும் முடியை மசாஜ் செய்து ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசலாம். இதன் மூலம் முடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தி அதிகரிக்கும்.


மாதம் ஒருமுறை ஒரு டம்ளர் பீரைக் கொண்டு, ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து வந்தால், மயிர்கால்கள் வலிமையடைந்து, முடி நன்கு அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.


வினிகர் கூட ஒரு அற்புதமான கூந்தல் பராமரிப்பு பொருள். அதற்கு வினிகரை நீரில் கலந்து, பின் அந்த கலவையைக் கொண்டு ஸ்கால்ப் மற்றும் முடியை அலசினால், முடியானது பொலிவோடும், மென்மையாகவும் இருக்கும்.


கண்டிஷனர் முடிக்கு நல்லது தான். இருப்பினும் அந்த கண்டிஷனரானது ஸ்காப்பில் பட்டால், அது முடியின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே கெமிக்கல் கலந்த கண்டிஷனர் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கையான கண்டிஷனர்களான தயிரைப் பயன்படுத்துங்கள். இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. முடியும் ஆரோக்கியமாக இருக்கும்.


சிலர் தினமும் தலைக்கு குளிப்பார்கள். இப்படி தினமும் தலைக்கு குளித்தால், தலையில் உள்ள இயற்கை எண்ணெய்களானது வெளியேறிவிடுவதோடு, முடியானது பொலிவை இழந்துவிடும். ஆகவே முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு குளித்தால் போதும்.


முடியின் மீது சூரியக்கதிர்களானது நேரடியாக படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், சூரியக்கதிர்களானது மயிர்கால்களைத் தாக்கி, முடி உதிர்வதை அதிகரிக்கும். எனவே வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பி அணிந்தோ அல்லது துப்பட்டா கொண்டு சுற்றிக் கொண்டோ செல்லுங்கள்.


முடி ஈரமாக இருக்கும் போதோ, தலைக்கு சீப்பு பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் முடி ஈரமாக இருக்கும் போது வலிமையிழந்து இருக்கும். அப்போது சீப்பு பயன்படுத்தினால், முடியானது வேரோடு வந்துவிடும். ஆகவே முடி உலரும் வரை சீப்பு பயன்படுத்தாதீர்கள்.


காட்டன் தலையணை உறையைப் பயன்படுத்தினால், முடி அதிகம் உதிரும். ஆகவே சில்க் தலையணை உறையைப் பயன்படுத்த ஆரம்பியுங்கள்.


தற்போது மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர் அதிகம். அப்படி மன அழுத்தமானது அதிகம் இருந்தால், முடியானது ஆரோக்கியத்தை இழந்து கொட்ட ஆரம்பிக்கும். ஆகவே மன அழுத்தத்தைத் தவிர்க்க உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய ஆரம்பியுங்கள்.


காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்வதோடு, தண்ணீரை அதிக அளவில் பருகுங்கள். இதனால் முடியின் வளர்ச்சியும், அடர்த்தியும் அதிகரிக்கும்.


அன்றாடம் 6-7 மணிநேரம் தூக்கமானது அவசியம். அப்படி இல்லாவிட்டால், முடியானது ஆரோக்கியத்தை இழந்துவிடும். எனவே தினமும் போதிய அளவு தூக்கத்தை பின்பற்றி வாருங்கள். முடியின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

புதன், 26 ஜூலை, 2017

அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய தகவல்கள்...


 அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய தகவல்கள்...

1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.

2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.

3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.



4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.

5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.

6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார்.

7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.

8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.

9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.

10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.

11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்.

12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.

13. எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.

14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார்.

15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’

16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.

17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.

18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.

19. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.

20. அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.

21. அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.

22. அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.

23. அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

24. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.

25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.

26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.

27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.

28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.

29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.

30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.

31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.

32. 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது.

33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.

34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.

35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.

36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.

37. போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.

38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.

39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

40. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.

 41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.

42. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.

43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.

44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.

45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.

46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்.

47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும்.

இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.

49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.

இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன.

50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார்.  அவர் கடைசி மூச்சும், இந்த பணியில்தான் நிறைவடைந்தது.


செவ்வாய், 25 ஜூலை, 2017

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் ...



மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-

01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
02. மனது புண்படும்படி பேசக் கூடாது.
03. கோபப்படக்கூடாது.
04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
05. பலர் முன் திட்டக்கூடாது.
06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

ஞாயிறு, 23 ஜூலை, 2017

வளமுடன் வாழ (108) சூத்திரங்கள்..



வளமுடன் வாழ (108) சூத்திரங்கள்..

1.      கடமையை செய்.
2.      காலம் போற்று.
3.      கீர்த்தனை பாடு.
4.      குறைகள் களை.
5.      கெட்டவை அகற்று.
6.      கேள்வி வேண்டும்.
7.      கை கொடு.
8.      கோவிலுக்குச் செல்.
9.      கொலை செய்யாதே.
10.  கூச்சம் வேண்டாம்.
11.  தர்மம் செய்.
12.  தாயை வணங்கு.
13.  திமிர் வேண்டாம்.
14.  தீயவை பழகாதே.
15.  துன்பம் துரத்து.
16.  தூய்மையாய் இரு.
17.  தெளிவாக சிந்தி.
18.  தைரியம் வேண்டும்.
19.  தொண்டு செய்.
20.  தோழனை கண்டுபிடி.
21.  சத்துணவு சாப்பிடு.
22.  சஞ்சலம் போக்கு.
23.  சாதனை செய்.
24.  சிக்கனம் தேவை.
25.  சீருடன் வாழ்.
26.  சுத்தம் பேண்.
27.  சூழ்ச்சி செய்யாதே.
28.  செலவை குறை.
29.  சேர்க்கப் பழகு.
30.  சைவம் சிறந்தது.
31.  சொர்க்கம் தேடு.
32.  சோகம் வேண்டாம்.
33.  சோம்பல் அகற்று.
34.  செளந்தர்யம் சேர்.
35.  நம்பிக்கை கொள்.
36.  நிம்மதி பெரிது.
37.  நெஞ்சத்தில் நில்.
38.  நேர்மை கடைபிடி.
39.  நைந்து பழகு.
40.  நொறுங்கத் தின்னு.
41.  நோயை விரட்டு.
42.  பண்புடன் பழகு.
43.  பாவம் செய்யாதே.
44.  பிதற்றல் குறை.
45.  பீடிகை போடாதே.
46.  புண்ணியம் சேர்.
47.  பூசல் நீக்கு.
48.  பெரியோரை மதி.
49.  பேதம் வேண்டாம்.
50.  பைந்தமிழ் பேசு.
51.  பொய் பேசாதே.
52.  முகத்தை சுழிக்காதே.
53.  மூத்தோற்கு உதவு.
54.  மெல்லப் பேசு.
55.  மேலானவை நினை.
56.  மோசம் செய்யாதே.
57.  மௌனம் நல்லது.
58.  வறுமை ஒழி.
59.  வளம் சேர்.
60.  விளையாட்டல்ல வாழ்க்கை.
61.  வீம்பு விலக்கு.
62.  ஒவ்வொன்றாக செய்.
63.  வருவோரெல்லாம் நண்பர்களல்லர்.
64.  வேற்றுமை ஒழி.
65.  வையகம் போற்று.
66.  கலைஞனாய் இரு.
67.  ஞானம் வேண்டு.
68.  குணம் வளர்.
69.  பண்ணிப் பார்.
70.  எண்ணுக உயர்வு.
71.  பயம் தவிர்.
72.  மெய்யூட்டி வளர்.
73.  மெய்யென பேசு.
74.  தன் கையே உதவி.
75.  தீயோடு விளையாடாதே.
76.  மலையோடு மோதாதே.
77.  தடத்தில் நட.
78.  விபரீதம் வேண்டாம்.
79.  கண்டு களி.
80.  அட்டூழியம் செய்யாதே.
81.  கேட்டேதும் பெறா.
82.  நாட்டை நேசி.
83.  வீட்டோடு வாழ்.
84.  வரம் கேள்.
85.  திருடி பிழைக்காதே.
86.  மேதாவித்தனம் வேண்டாம்.
87.  சொல்லுக பயனுள.
88.  பழங்கள் சாப்பிடு.
89.  சினம் தவிர்.
90.  அனுபவம் பலம்.
91.  கண்ணெனப் போற்று.
92.  திருடனே திருந்து.
93.  இறைவனைப் புகழ்.
94.  அமைதி கொள்.
95.  துக்கம் மற.
96.  பங்கம் பண்ணாதே.
97.  அன்பே அச்சாணி.
98.  கொஞ்சி மகிழ்.
99.  மட்டம் தட்டாதே.
100.  சொந்தம் சூழ்ந்திரு.
101. தவறைத் திருத்து.
102. அம்மாவே தெய்வம்.
103.  வன்மம் வைக்காதே.
104.  சொல் தவறாதே.
105.  தோள் கொடு.
106.  பேராசைப் படாதே.
107.  புன்னகை அணி.
108.  நீடுழி வாழ்.

கட்டுமஸ்தான உடலமைப்பை பெற விரும்பும் ஆண்களே... இதோ உங்களுக்காக சில குறிப்புகள்..


கட்டுமஸ்தான உடலமைப்பை பெற விரும்பும் ஆண்களே... இதோ உங்களுக்காக சில குறிப்புகள்..

பெண்கள் பொதுவாக அழகை மேம்படுத்த பல அழகு சாதனங்களைப் பயன்படுத்தி தோற்றத்தை மெருகேற்றுவர்.

 ஆனால் ஆண்கள் தங்கள் அழகை வெளிக்காட்ட, உடல் கட்டமைப்பை மெருகேற்ற எண்ணுவார்கள்.

 அதையே தான் பெண்களும் ஆண்களிடம் விரும்புகிறார்கள்.

 அதனால் ஆண்கள் சல்மான் கான் போல், உடம்பை ஏற்ற மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிடுகிறார்கள்.

 நல்ல உடல்கட்டு வேண்டும் என்று எண்ணுபவர்கள் எப்போதும் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டால் மட்டும் போதாது.

உடல் கட்டமைப்பில் உண்ணும் உணவும் முக்கிய இடம் பிடிக்கிறது.

ஆகவே போதிய உடற்பயிற்சியுடன், சரியான மற்றும் ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மிகவும் அவசியம்.

 உடற்பயிற்சிக்கு ஈடாக ஆரோக்கியமான உணவும் உடல் கட்டமைப்பை மெருகேற்ற உதவுகிறது.

 இப்போது அழகான உடல் கட்டமைப்பைப் பெறுவதற்கு எந்த உணவுகளையெல்லாம் சாப்பிட வேண்டுமென்று பார்ப்போம்.

 

*ஓட்ஸ் கஞ்சி*

ஓட்ஸ் கஞ்சியில் அதிக நார்ச்சத்து உள்ளதால், உடலில் உள்ள கொழுப்பு மற்றும் டைப்-2 சர்க்கரை நோயை குறைக்கும்.

மேலும் இது உடம்பில் உட்சேர்க்கைக்குரிய (anabolic) செய்முறையை அதிகரித்து, சிதைமாற்றம் (catabolism) மற்றும் கொழுப்பு தேங்குதலை குறைக்கிறது.

*மோர்*

மோர், புரதச்சத்து அதிகமுள்ள பானமாகும். உடற்பயிற்சி செய்த பின் மோரை குடித்தால், உடலானது புரதச்சத்தை உடனே உறிஞ்சிக் கொள்ளும்.

 இதனால் அதிகப்படியான புரதச்சத்தை பெறலாம். மேலும் கெட்டியான மோர் அல்லது தண்ணீர் கலந்த மோரை பருகினால், உடம்பின் ஆற்றல் அதிகரிக்கும்.

*முட்டை*

உடல் கட்டமைப்பை ஏற்ற நினைப்பவர்கள் கண்டிப்பாக முட்டைகளை சாப்பிட வேண்டும்.

இதில் வைட்டமின் ஏ, டி, ஈ, கோலைன், நல்ல கொழுப்பு மற்றும் புரதச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.

*பாலாடைக்கட்டி*

உடல் கட்டமைப்பை ஏற்ற விரும்புபவர்களுக்கு பாலாடைக்கட்டி ஒரு வரப்பிரசாதமே.

 இதில் பால் மற்றும் மோரின் புரதம் அதிக அளவில் உள்ளது.

*வேர்க்கடலை*

வெண்ணெய் புரதச்சத்து, வைட்டமின்கள், மக்னீசியம், நார்ச்சத்து, போலேட் (folate) மற்றும் அர்ஜினைன் (arginine) போன்றவை நிறைந்தது தான் நிலக்கடலை வெண்ணெய்.

இதை அளவாக எடுத்துக் கொண்டால், இதய தசைகளை மேம்படுத்தி, கொழுப்பை குறைக்க உதவும்.

*நண்டு*

நண்டு, எலும்பின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும்.

 இதில் ஜிங்க் மற்றும் தேவையான ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் நிறைந்துள்ளதால், இது தசைக்கு பலத்தையும், உடலில் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

*கடல் சிப்பிகள்*

கடல் சிப்பிகளில், உடலுக்கு தேவையான கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளன.

இது பாலுணர்வூட்டியாகவும் விளங்குகிறது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.

*வாழைப்பழம்*

உடலை ஏற்றுபவர்கள் பலரும் அதிகப்படியாக சாப்பிடுவது வாழைப்பழத்தை தான்.

இதில் ட்ரிப்டோபைன் நிறைந்திருப்பதால், இது செரோடோனின் உற்பத்திக்கு உறுதுணையாக இருந்து, நரம்புகளை சாந்தப்படுத்தும்.

 மேலும் இதில் உணவு கட்டுப்பாட்டுக்கு உறுதுணையாக நிற்கும் மக்னீசியம் மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால், எலும்பின் ஆரோக்கியத்திற்கு பக்க பலமாக இருக்கும்.

*மிளகாய்*

உணவில் மிளகாய் சேர்ப்பதனால், உடலில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதை இது தடுக்கும்.

மிளகாயில் பீட்டா கரோட்டீன்கள் நிறைந்திருப்பதால், அவை உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடையை வேகமாக குறைக்க உதவும்.

*சர்க்கரைவள்ளி*

கிழங்கு சர்க்கரைவள்ளி கிழங்குகளில் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்து உள்ளது.

 இதிலுள்ள சர்க்கரை ஆக்கத்திறன் மற்றும் தாங்கு திறனை அதிகரிக்க செய்யும்.

*அத்திப்பழம்*

இரும்பு போல உடலை வளர்க்க விரும்புபவர்கள் கண்டிப்பாக அத்திப்பழத்தை சாப்பிட வேண்டும்.

 அத்திப்பழத்தில் தேவையான கனிமச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், உடலில் உள்ள அமிலம் மற்றும் காரத்தின் (Alkali) அளவை சமநிலையோடு வைத்துக் கொள்ளலாம்.

*இறைச்சி*

ஆட்டு இறைச்சியில் அதிகமான அளவில் விலங்கின புரதம் இருக்கிறது.

மேலும் இதில் அர்ஜினைன் (arginine) மற்றும் அமினோ அமிலங்கள் அடங்கியிருப்பதால், தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

*பருப்பு வகைகள்*

சரியான உடல் கட்டமைப்பு வேண்டுமானால், பருப்பு வகைகளை கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 இதில் வளமையான புரதச்சத்து, அதிமுக்கிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளதால், தசைகளின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

   

உங்களுக்குத் தெரியுமா? சர்க்கரை நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாக பீர்க்கன்காய் சாப்பிடலாம்…



உங்களுக்குத் தெரியுமா? சர்க்கரை நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாக பீர்க்கன்காய் சாப்பிடலாம்…

பீர்க்கங்காய் வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது.

நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாட்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் பீர்க்கங்காய் உதவுகிறது.

பீர்க்கங்காய் முற்றிவிட்டால் கவலை வேண்டாம். முற்ற முற்ற நல்லது. பீர்க்கை முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டானிக்காகவும், சத்துணவுப் பொருளாகவும் திகழ்கிறது.

நூறு கிராம் பீர்க்கங்காயில் கிடைக்கும் கலோரி 18 தான். ஆனால் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டமன்களும், தாது உப்புக்களும் தக்க அளவில் உள்ளன. இதனால்தான் டானிக்காகவும், சத்துணவு நிரம்பிய காய்கறியாகவும் இந்த எளிய காய்கறி விளங்குகிறது.

நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாகவும் இதைச் சேர்த்துக் கொள்ளலாம். இதன் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையே.

இதன் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.

சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இதன் இலைகளை அரைத்துப் புண்கள் உள்ள இடங்களில் கட்டினால் போதும். சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது.

இரத்த சோகை நோயாளிகளும், தோல் நோயாளிகளும் இதன் வேரைத் தண்ணீர் விட்டுக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடி கட்டி அருந்தி வர வேண்டும். இதன் மூலம் இரத்த விருத்தி ஏற்படும். பீர்க்கை தோல் நோய்க் கிருமிகளை அழித்துவிடும்.

கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை அடிக்கடி தேடிப்பிடித்து உண்ண வேண்டும்.