வியாழன், 30 நவம்பர், 2017

கெட்ட வார்த்தை பேசறதுன்னா என்னம்மா? சால்ட் சில்ட்ரன்... பெப்பர் பேரன்ட்ஸ்


கெட்ட வார்த்தை பேசறதுன்னா என்னம்மா? சால்ட் சில்ட்ரன்... பெப்பர் பேரன்ட்ஸ்

ம்மா... ஸ்கூல் வேன்ல ஹைஸ்கூல் அக்காஸ் எல்லாம் கெட்ட வார்த்தை பேசறாங்கம்மா... நான் பக்கத்துல போனாப் போனதும், உடனே நிறுத்திடறாங்க, கேட்டா நீ பழம், உனக்கொன்னும் தெரியாதுன்னு விஷமத்தனமா சிரிச்சுக்கறாங்க, ஏன், அப்படி இருக்காங்க?!

5 ஆம் வகுப்பு படிக்கும் நிம்மி, மாலை நேரத்தில் தன்னுடன் சேர்ந்து உட்கார்ந்து டி.வி பார்க்கும் அம்மாவிடம் இப்படிக் கேட்கிறாள்.

அம்மாவும், அவளும் பார்த்துக் கொண்டிருந்தது நேஷனல் ஜியாக்ரஃபிக் சேனல். காட்டில் தனித்தனியாக மேய்ந்து கொண்டிருந்த மலையாடுகளில் ஒன்றை கழுகு ஒன்று விருக்கென தூக்கிக் கொண்டு பறந்து கொண்டிருந்தது. முதலாடு... பலியாடு. முதல் பருந்துக்கு கிடைத்த வெற்றியைக் கண்டு மீண்டுமொரு பருந்தும் மலையாடுகளை இரை கொள்ளத் தாழப் பறந்து வந்தது. இம்முறை ஆடு தனியாகச் சிக்கவில்லை, ஜோடியுடனிருந்தது, ஆனாலும் பருந்து விட்டு விடுமா?! கூரிய நகம் கொண்ட காலிடுக்கால் இறுகப் பற்றி ஆட்டைத் தூக்கிச் செல்ல பிரம்மப் பிரயத்தனம் செய்தது. ஆடு முதலில் திகைத்தாலும், உடனிருந்த ஆட்டின் தைரியத்தால் பருந்துடன் எதிர்த்துப் போராடத் துணிந்தது. ஆடா, பருந்தா? எனும் ஜீவ மரணப் போராட்டத்தில் ஆட்டைக் கவ்விச் செல்ல முடியாமல் கடைசியில் பருந்து தோற்று வேறிடம் நோக்கிப் பறந்தது. முதலாடும் இவ்விதமே தப்ப வாய்ப்பிருந்தது. ஆனால், அதனால் அது ஏனோ, அப்போது மூர்க்கமாகப் போராடத் துணியவில்லை. காரணம் உடன் துணை இல்லாத காரணத்தால்.

ஆட்டுக்கு மட்டுமில்லை, மனிதர்களையும் தான் எடுத்துக் கொள்ளுங்கள். ஆபத்து காலங்களில் தனியே மாட்டிக் கொள்ளும் போது உண்டாகும் உதறல் குழுவாக மாட்டிக் கொண்டால் வருவதில்லை. இப்படி யோசித்துக் கொண்டிருந்த அம்மா, மகளின் பேச்சால் கவனம் களைந்து என்னடா குட்டி கேட்ட? என்று மகளைப் பார்க்கிறார்.

‘ம்ம்.. பழம்னா என்னன்னு கேட்டேன்.... ஹைஸ்கூல் கேர்ள்ஸ் என்னைப் பழம்னு கிண்டல் பண்றாங்கன்னு சொன்னேன்.’

அம்மாவுக்குச் சிரிப்பு வந்தது... சிரித்தால் நிம்மி கோபிப்பாள் என்பதால் அதை அடக்கிக் கொண்டு;

‘பழம்னா கெட்ட வார்த்தை இல்லையேடா... ரொம்ப நல்ல பசங்க, அப்பாவிப் பசங்க, அவங்களுக்கு பேட் வேர்ட்ஸ் எல்லாம் ஒண்ணுமே தெரியாதுன்னா அவங்களைத்தானே ஸ்கூல் டேய்ஸ்ல பழம்னு சொல்வாங்க. டீச்சர்ஸ்க்கு அந்த மாதிரி ஸ்டூடண்ட்ஸைத்தான் ரொம்பப் பிடிக்குமாமே?! அப்போ உன்னை உன்னோட டீச்சர்ஸ்க்கு ரொம்பப் பிடிக்குமோ?!’

‘ம்ம்... நான் தான் ரேங்க் ஹோல்ட்ராச்சே... என்னை எல்லா டீச்சர்ஸுக்கும் பிடிக்கும் தான். ஆனா அதுக்காக என்னை எதுக்கு இந்த கேர்ள்ஸ் பழம்னு சொல்லனும். ஐ ஹேட் பழம்! என்றாள் நிம்மி.’

அம்மா, மகளின் மூக்கைப் பிடித்து ஆட்டி விட்டு;

‘கோபத்தைப் பார்... சரி, சரி அக்காஸ் எல்லாம் என்ன பேசிட்டு இருந்தாங்க, நீ போனதும் ஏன் பேச்சை நிறுத்தினாங்களாம்?’

‘அதான் எனக்குத் தெரியாதே, கேட்டா நீ பழம் உனக்கு ஒன்னும் தெரியாதுன்னு சிரிக்கிறாங்க. ஆனா, என்னையா ஏமாத்தப் பார்த்தாங்க... எனக்கு தான் ஸ்வாதி சொல்லிட்டாளே; அவங்கல்லாம் பேட் வேர்ட்ஸ் பேசிப்பாங்க அதனால தான்னு!’

‘பேட் வேர்ட்ஸா... அப்படின்னா?’

‘நயன்த் படிக்கிற சுனந்தாக்காவுக்கு பிளஸ் ஒன் படிக்கிற விக்ராந்த் அண்ணா லவ் புரப்போஸ் பண்ணிருக்கானாம். இதை அவன் லெட்டரா எழுது ஜோஸ்னா கிட்ட கொடுத்தனுப்பி இருக்கான். அதைப் பத்தி தான் அவங்க எல்லாம் அப்பப்போ பேசிக்கிட்டு அதுக்கு பேட் வேர்ட்ஸ்னு கோட் வேர்ட் வேற வச்சிருக்காங்க.’

‘ஓ... வேற எதுக்கு, எதுக்கெல்லாம் பேட் வேர்ட்ஸ்னு கோட் வேர்ட் கிரியேட் பண்ணீருக்காங்கடா உங்க ஸ்கூல் கேர்ள்ஸ்?’

‘இன்னும் நிறைய இருக்கும்மா... எனக்கு எல்லாமே தெரியாது... ஆனா கொஞ்சம் தெரியும்.’

‘எங்க ஒன்னொன்னா சொல்லு.. பார்க்கலாம்.’

‘லவ், கிஸ், டீச்சருக்குத் தெரியாம பாய்ஸ்கூடப் பேசறது, லவ் லெட்டர், பாப்பா எப்படிப் பிறந்ததுங்கற ஸ்டோரி, ஷிட்இதெல்லாம் பேட் வேர்ட்ஸ்ம்மா.’

இதுவரை புன்னகையுடன் மகளுடனான சம்பாஷனையைத் தொடர்ந்து கொண்டிருந்த அம்மாவுக்கு நிம்மி சொன்ன பதிலைக் கேட்டதும் சற்றே மனதில் ஒரு கவலை எட்டிப் பார்த்தது.

இந்தக் குழந்தைகள் அனிச்சம் மலர்களைப் போன்றவர்கள்.

இவர்களுக்கு இந்த வார்த்தைகளின் உண்மையான பொருள் தெரிந்திருந்தாலும் அவற்றின் மீது இந்த உலகம் கட்டமைத்துள்ள வெவ்வேறு விதமான இரட்டை அர்த்தங்களின் மூலம் அவ்வார்த்தைகளின் உண்மையான அர்த்தமே இளம் உள்ளங்களில் தவறாகப் பதிந்து போகிறதே. உண்மையில் அவையெல்லாம் கெட்ட வார்த்தைகள் இல்லையே! இதைப் புரியும் விதமாகச் சொல்லும் அவகாசம் இன்றைய பெற்றோர்களுக்கு இருக்குமா?! என்று தோன்றியது.

முதலில் அந்த அவகாசம் தனக்கு இருக்கிறதா? என்று சோதித்துப் பார்க்கும் எண்ணத்தில்;

‘நிம்மிம்மா, இதெல்லாம் பேட் வேர்ட்ஸ்ன்னு யாருடா சொன்னாங்க?’ என்றார்.

நிம்மி அம்மாவை முறைத்து விட்டு,

‘ம்மா, கேர்ள்ஸ் கும்பலா இருக்கும் போதே இந்த வேர்ட்ஸ்லாம் சொன்னா, அவ பேட் வேர்ட்ஸ் சொல்றாடீன்னு சொல்லி கிண்டல் பண்ணுவாங்க, சிரிப்பாங்க, டூ விடுவாங்க’ அப்போ இது பேட் வேர்ட்ஸ் தான? குட் வேர்ட்ஸா இருந்தா அதை எல்லோர் முன்னாடியும் கத்திச் சொன்னாக்கூட பிரச்னையே இல்லையே?!’

குழந்தையின் பதிலில் திருப்தி அடையாத நிம்மியின் அம்மா, மகளுக்குப் புரியும் விதமாக குட் வேர்ட்ஸ், பேட் வேர்ட்ஸ் பற்றிச் சின்னதாகப் பாடம் எடுக்கலாமா என யோசித்தார். அப்புறம் அந்த முயற்சியைக் கைவிட்டு சற்றே யோசனையுடன் மகளை ஏறிட்டு;

‘ஓக்கேடா குட்டிம்மா, இதெல்லாம் பேட் வேர்ட்ஸ் தான், அப்படியெல்லாம் பேசற கேர்ள்ஸை நீ பொருட்படுத்தாத, நாம ஸ்கூல்க்கு எதுக்குப் போறோம், படிக்க, நல்ல விஷயங்களைக் கத்துக்க, நல்ல ஃப்ரெண்ட்ஸ் கூடப் பழக, இந்த உலகத்தை தெரிஞ்சுக்க இதுக்கெல்லாம் தானே?! ஸோ, நீ நல்ல பசங்களோட சேர்ந்து நல்லாப் படிச்சு நிறைய மார்க் வாங்கி ஸ்கூல் டாப்பர் ஆகனும்.’

- என்று அந்த உரையாடலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். என்னடா இது இந்த அம்மா, புத்திசாலித்தனமாகத் தன் குழந்தைக்கு விளக்கமளிக்கப் போகிறார், என்று எதிர்பார்த்தால் ‘டப்’ பென இப்படிச் சொல்லி முடித்து விட்டாரே என்று தோன்றுகிறதா?

ஆம் எனில்...பெற்றோர்களான நம்மில் பலரும் கூட நம் குழந்தைகளிடம் இப்படித்தானே பதில் அளிக்கிறோம்.

எங்கே குழந்தைகளுடன் பேசத் தொடங்கினால் இல்லாத, பொல்லாத விவகாரங்களை எல்லாம் அவர்களுக்கு விளக்க வேண்டி வருமோ! அதற்கெல்லாம் நமக்கெங்கே நேரமிருக்கிறது என்றெண்ணி எல்லா விஷயங்களையுமே, குழந்தைகளுடனான எல்லா உரையாடல்களையுமே பெரிதாக வளர்த்து விரித்துக் கொண்டே செல்லாமல் சுருக்கமாக முடித்துக் கொள்ளப் பார்க்கிறோம்.

அதனால் தான் நம் குழந்தைகளுக்கும் அதே விதமான கண்ணோட்டமே மனதில் பதிந்து போகிறது. எதையுமே ஐயம் திரிபர உணர்தல், உணர்த்துதல் என்று திருப்தி அடைய முடிவதில்லை.

வளர்ந்த பின் அவர்களாகப் புரிந்து கொள்ளட்டும் எனச் சில விஷயங்களைப் பற்றிய குழந்தைகளின் கற்பனைகளையும், யூகங்களையும் பெற்றோரான நாமே வளர்த்து விடுகிறோம்.

குழந்தைகளுக்கு இதெல்லாம் இப்போதே தெரிய வேண்டியதில்லை எனச் சிலவற்றைப் பற்றிய விவரங்களை குழந்தைகள் அறிந்து கொள்வதை நாமே தடை செய்து விடுகிறோம்.

இதெல்லாம் எங்கே போய் முடியக்கூடும் தெரியுமா?

குழந்தைகளை அரைகுறை ஞானத்தில் தான் கொண்டு விடும்.

அதனால் குழந்தைகள் எப்போதாவது பேட் வேர்டு என்று எதையாவது சொன்னார்களெனில் அதென்ன வார்த்தை எனக் கண்டறிந்து அதன் உண்மையான அர்த்தத்தை அவர்களுக்கு விளக்கி, உண்மையான லவ் என்றால் என்ன? அது எப்போது வந்தால் தனிமனித வாழ்க்கைக்கும், முன்னேற்றத்துக்கும் நல்லது என்பதையெல்லாம் விளக்கிப் புரிய வைக்க முயற்சி செய்யுங்கள். இல்லாவிட்டால் நமது சினிமாக்கள் ‘லவ்’ என்றால் அது புனிதமானது, ‘அந்த புனிதப்பூ வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டும் தான் பூக்கும்’ என்று எந்த அபத்தக் கதைகளையாவது குழந்தையின் இன்னொசன்ட் மூளைக்குள் போகிற போக்கில் திணித்து விட்டுப் போய் விடக்கூடும்!

நேஷனல் ஜியாக்ரஃபிக் சேனலில் காட்டப்பட்ட பருந்துக்கும் நம்மூர் சினிமாக்களுக்கும் பெரிய வித்யாசங்கள் ஏதுமில்லை. நமது சின்னஞ்சிறு ஆட்டுக்குட்டி போன்ற சுட்டிக் குழந்தைகளின் அனிச்ச மலர் மூளைகளை அப்படியே லட்டு மாதிரி லவட்டிக் கொண்டு போகும் பருந்துகளாகத் தான் இன்றைய சினிமாக்கள் செயல்படுகின்றன. எனவே நமது குழந்தைகளை வலுவுள்ள ஆட்டுக்குட்டிகளாகத் தயார் செய்யும் கடமை நம்மைத் தவிர வேறு யாருக்கு இருக்கக் கூடும்?

ஆதலால், இனியாவது குழந்தைகள் உங்களிடம் எதையாவது கேட்கத் தொடங்கினாலோ, உரையாடத் தொடங்கினாலோ, அதை உரிய விதத்தில் செவி மடுத்து அவர்களுக்கு முழுமையான, திருப்தியான விளக்கம் அளிக்க முயற்சி செய்யுங்கள். குறைந்த பட்சம் குழந்தைகளின் பல விதமான சஞ்சலங்கள் அகன்று அவர்களது பாதுகாப்பு உணர்வும், மனத்திண்மையுமாவது உறுதிப்படும்.

A/C போட்டு இரவில் தூங்குபவரா நீங்கள்? எச்சரிக்கை!


A/C போட்டு இரவில் தூங்குபவரா நீங்கள்? எச்சரிக்கை!

நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS)(கழுத்து,முழங்கை,முன்கை மணிக்கட்டு,கீழ்முதுகு வலி,முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி),சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது.

இதை வாத நோய்கள் என்பார்கள். பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார்.

நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன். அதை விளக்கிக் கூறவும் கேட்டேன்.அவரால் விளக்க முடியவில்லை.

ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.

ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3 அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXIGEN,02) அளவு குறைந்துவிடும்.


இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார். பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும்.

அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது, உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க, சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது.

அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது. தண்ணீரில் (H2O) இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது.

இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது. எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்ற அழைக்கப்படுகிறது.

சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.

நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.

மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது. இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.

இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது.

மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.

இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.

இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது. மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகிறது. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது.

இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது.

இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான இது போன்ற விடயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எல்லோரும் அறிந்திக்க வேண்டிய பயன்தரும் 138 வீட்டுக் குறிப்புகள்:!!!



எல்லோரும் அறிந்திக்க வேண்டிய பயன்தரும் 138 வீட்டுக் குறிப்புகள்:!!!

1. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.

2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

3. ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது.

4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.

5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.

6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.

7. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை அடைபடும்.

9. எப்பொழுதாவது உபயோகிக்கும் “ஷூ”க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு “ஷூ”விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.

10. ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள் காலியானதும் அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணி வாசனையாக் இருக்கும்.

11. பிரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது.

12. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.

13. வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்கள் காய்கறிகளின் மீது ஈரத் துணியைப் போட்டு மூடி வையுங்கள். வாடாமல் இருக்கும்.

14. பொருட்களை கறையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தைப் பொடி செய்து தூவி வையுங்கள்.

15. வெள்ளி சாமான்களை பீரோவில் வைக்கும்போது அதற்குள் கற்பூரத்தைப் போட்டு வைப்பது நல்லது.

16. அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்க்க வேண்டும்.

17. இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே இருக்கும்.

18. காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலுமாரியில் வைத்தால் பூச்சிகள் அணுகாது.

19. கடையில் மூக்குப் பொடி வாங்கித் தண்ணீரில் கரைத்து எறும்புப் புற்றின் மேல் தெளித்து விடுங்கள். எறும்புகள் மாயமாய் மறைந்து போகும்.

20. குழந்தைகளுக்கு வெஜிடபிள் சூப் தரும் போது அதில் துருவிய கசுக்கொட்டையை (முந்திரி) பொடியாக நறுக்கிய பிரெட்டை நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவித் தந்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.

21. புளித்த பாலில் (மோரில்) வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரை மணிநேரம் ஊறப் போட்டுப் பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.

22. வெள்ளை நிற வாஸ்பேஷன், பாத்ரூம், டைல்ஸ் மற்றும் சிங்ககை க்ளீனிங் பவுடர்களைக் கொண்டு சுத்தம் செய்த பின், சொட்டு நீலம் கலந்த நீரால் அலம்பிவிட்டால் பளபளப்பு மேலும் கூடும்.

23. வீட்டில் ஹோமங்கள் செய்யும் போது ஒரு டேபிள் பானை (Fan) ஜன்னல் ஓரமாக வெளிப்பக்கம் பார்த்து வைத்துவிட்டால் புகை உள்ளே பரவாது.

24. வெண்ணெயில் உப்பைத் தூவி விட்டால் அது நாட்பட்டாலும் கெடாமல் இருக்கும்.

25. வெயில் காலத்தில் எங்கு நோக்கினும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். வீட்டைக் கழுவும் போது நீரில் சிறிது உப்பைச் சேர்த்துப் பின்பு கழுவுங்கள்.காய்ந்த பின் அறையில் ஈக்கள் வராது.

26. காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.

27. பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.

28. பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.

29. கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

30. இரவில் படுப்பதற்கு முன் ப்ளீச்சிங் பவுடரைச் சிறிது எடுத்து கழிப்பறையிலும் குளியலறையிலும் தூவி விட்டு அப்படியே விட்டு விட வேண்டும். கரப்பான் பூச்சித் தொல்லை இருக்காது.

31. நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.

32. தேங்காய் முடியை தண்ணீரில் வைத்தால் அல்லது முடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.

33. நகைகளை பஞ்சில் சுத்தி வைத்தால் புது பொலிவுடன் இருக்கும்.

34. வீட்டு ஜன்னல்களுக்கு கரும் பச்சை, கருநீலத்தினால் ஆன திரைச் சீலைகளைப் பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் உள்ளே வராது.

35. சமைக்கும் போது எரிபொருள் சிக்கனம் செய்ய வேண்டும். கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வையுங்கள்.

36. மொசைக் தரையில் அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்க, வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சாக்பீஸ் தூள் மற்றும் சலவை சோடா கலந்து ஸ்பாஞ்சை வைத்து துடைத்து, பிறகு நல்ல தண்ணீரில் மீண்டும் ஒரு முறை துடைக்க வேண்டும்.

37. சமையலறையிலுள்ள பாத்திரம் கழுவும் தொட்டியைச் சுத்தப்படுத்த, பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

38. கத்தியைச் சூடாக்கி ரொட்டியை வெட்டினால் பிசிறு இல்லாமல் நினைத்த படி வெட்டலாம்.

39. மீன் பாத்திரத்தில் மீன் வாடை இருந்தால் சீயக்காய்த் தூளையும், புளியையும் சேர்த்துப் பாத்திரத்தைத் துலக்கினால் மீன் வாடை போய்விடும்.

40. எலுமிச்சம்பழம் உலர்ந்து விட்டால் கொதிநீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.

41. மழை நீரில் பருப்பு வகைகளை வேக வைத்தால் ஒரு கொதியில் வெந்து விடும். ருசியும் அதிகரிக்கும்.

42. ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பை உபயோகிக்க வேண்டும்.

43. தயிர், மோர் பாத்திரங்களைச் சுத்தம் செய்து வெயிலில் காய வைத்தால் அந்த பாத்திரத்தில் உள்ள வாடை நீங்கி விடும்.

44. பிளாஸ்க்கில் உள்ள துர்நாற்றம் அகல வினிகர் போட்டு கழுவலாம்.

45. கறிவேப்பிலை காயாமல் இருக்க வேண்டுமானால் அதன் மீது ஓர் அலுமினியப் பாத்திரத்தை மூடி வைத்தால் அது காயாமல் இருக்கும்.

46. சின்ன வெங்காயத்தை வாங்கி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்திருந்தால் ஒரு மாதம் வரை கெடாமல் முளை வராமல் இருக்கும்.

47. எலுமிச்சம் பழத்தை நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்திருந்தால் ஒரு வாரம் வரை வாடாமலும் கெட்டுப் போகாமலும் இருக்கும்.

48. இஞ்சியை ஈர மணலில் புதைத்து வைக்க வேண்டும்.

49. வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

50. வெண்டைக்காயின் காம்பையும், தலைப்பாகத்தையும் நறுக்கி விட்டு வைத்தால் மறுநாள் சமைப்பதற்குள் முற்றிப் போகாமல் இருக்கும்.

51. கடலை எண்ணெய் கெடாமல் இருக்க சிறிது புளியை போட்டு வைக்க வேண்டும்.

52. எரிந்து கொண்டிருக்கும் பல்பின் மேல் இரண்டு சொட்டு சென்டைத் தெளியுங்கள். அறை முழுக்க கமகமவென்று வாசனை பரவும்.

53. நைலான் துணியை தைக்கும் போது ஊசி லேசில் இறங்காது ஊசியை அடிக்கடி சோப்பில் குத்தி எடுத்து நைலானைத் தைத்தால் சுலபமாக ஊசி இறங்கும்.

54. டூத் பேஸ்டை கடைசி வரை எடுக்க அதனை வெந்நீரில் போட்டுச் சிறிது நேரம் கழித்துப் பின் அழுத்த மிச்சம் மீதி பேஸ்டும் வந்துவிடும்.

55. உப்புக் கரைந்த குளிர்ந்த நீரில் ரத்தக்கறை பட்ட துணிகளைக் கொஞ்ச நேரம் ஊறவைத்து பின் எடுத்துச் சுத்தம் செய்யுங்கள். கறை போய்விடும்.

56. மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டால் பூச்சிகள் வராமல் நீண்ட நாள் இருக்கும். கெட்டுப் போகாது.

57. வெள்ளைத்துணி பளிச்சிட வெள்ளைத் துணிகளைத் துவைக்கும் போது தண்ணீரில் சிறிது டேபிள் சால்ட் சேர்த்துக் கொண்டால் துணிகள் வெள்ளை வெளேர் என்று இருக்கும்.

58. முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது தேயிலையினால் துடைத்தால் அழுக்கு நீங்கிக் கண்ணாடி பளபளவென்று இருக்கும்.

59. பச்சை கொத்தமல்லியையும் கறிவேப்பிலையையும் வதக்கக் கூடாது. பச்சையாக உணவில் சேர்த்தால் தான் சத்து அதிகமாக இருக்கும்.

60. கிழங்கு வகைகளை கறி செய்யும் போது அதிகமாக எண்ணெய் விட்டு வறுக்கக் கூடாது. எளிதில் ஜீரணமாகாது.

61. மின்சாரம் தடைப்பட்டிருக்கும் போது மெழுகுவர்த்தியை ஏற்றுவோம். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை அதிகரிக்க மெழுகுவர்த்திக்கு பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்கவும். இரு மடங்கு வெளிச்சம் கிடைக்கும்.

62. வெல்லம் சேர்த்து செய்யும் பொருட்களுக்கு நெய் ஊற்றுவதால் சுவையும் மணமும் கூடும்.

63. கேரட், பீட்ரூட் வாடி போனால் அதை நறுக்குவது கடினம். உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் புதியது ஆகி விடும். வெட்டவும் எளிதாகிவிடும்.

64. சிறிது வெதுவெதுப்பான நீரில் அழுக்குத் துணிகளை ஊறவைத்து பிறகு சோப்பு போட்டு துவைத்தால் சுலபமாக வெளுக்கும்.

65. ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரையை தூவி அதனுள் பிஸ்கட்டை வையுங்கள். பிஸ்கட் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

66. அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் அதனை செடிகளுக்கு கொட்டினால் செடிகள் செழிப்பாய் வளரும்.

67. மிளகாய் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமானால் அதன் காம்பை எடுத்துவிட்டு பேப்பரில் சுற்றி ப்ரிட்ஜில் வையுங்கள். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

68. உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் ஜொலிக்கும்.

69. வீட்டில் புகை அதிகமாக காணப்படுகிறதா? அறையில் ஈரத் துணியை தொங்க விட்டால் புகை காணாமல் போய் விடும்.

70. அலுமினிய பாத்திரங்களில் அடிப்பிடிப்புக் கறையை நீக்க உப்பு காகிதத்தால் தேய்த்தால் பாத்திரம் புதுப்பொலிவுடன் இருக்கும்.

71. சமையல் மேடையில் கேஸ் ஸ்டவ்வைத் துடைக்க தேங்காய் எண்ணெய், கெரசின் இரண்டையும் சம அளவு கலந்து பயன்படுத்தினால் கிச்சன் பளிச்சென்று இருக்கும்.

72. ப்ரிட்ஜ், ஸ்டோர் ரூம், பாத்ரூம் இவற்றில் கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால் ஆஸ்பிரின் மாத்திரைகளை ஆங்காங்கே வைத்தால் கரப்பான் தொல்லை இருக்காது.

73. பச்சை வெங்காயம் சாப்பிட்ட நாற்றத்தை போக்க உப்பு கலந்த நீரில் வெங்காயத்தை ஊற வைத்து எடுத்து சாப்பிட்டால் காரம், நாற்றம் இருக்காது.

74. மிதியடிக்கு அடியில் அதே சைசில் பழைய நியூஸ் பேப்பரை வெட்டி வைத்துவிட்டால் மிதியடிகள் அழுக்கு எல்லாம் பேப்பரில் சேர்ந்திருக்கும்.

75. வாழைப்பழம் சீக்கிரம் கறுத்துவிடாமல் இருக்க ஈரத் துணியால் சுத்தி வைத்தால் பிரஷ்ஷாக இருக்கும்.

76. ப்ரிட்ஜில் ஆப்பிள், கேரட் இரண்டையும் ஒரே கம்பார்ட்மெண்டில் வைக்காதீர்கள். ஆப்பிளில் இருந்து வெளிவரும் ஒரு வித வாயு கேரட்டைக் கசக்கச் செய்துவிடும்.

77. பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

78. லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது.

79. உணவில் அதிக அளவு உப்பு சேர்ந்துவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே உணவில் போட்டு விடுங்கள். உணவில் அதிகமாக இருந்த உப்பு குறைந்துவிடும்.

80. சாப்பிட்ட பிறகு, சிறிது வினிகரும், பேரபின் எண்ணெயும் கலந்து மேஜையை துடைத்துவிட்டால் மேஜை பளபளப்பாக இருக்கும். நாற்றம் இருக்காது.

81. கொஞ்சம் நீரில் கடுகு எண்ணெய் கலந்து மிருதுவான துணியில் நனைத்து மரச் சாமான்களை துடைத்தால் வார்னீஷ் செய்தது போல் இருக்கும்.

82. பழைய புத்தகங்களை பூச்சி அரிப்பில் இருந்து பாதுகாக்க புத்தக அலமாரியில் சிறிதளவு புகையிலையை தூவினால் பூச்சி அரிப்பு இருக்காது.

83. வேக வைத்த உருளைக்கிழங்கு தோலை வீணாக்காமல் அந்த தோலைக் கொண்டு கண்ணாடிகளை துடைத்தால் பளிச்சென்று மின்னும்.

84. முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க முட்டை கூட்டின் மீது சிறிது அளவு ரீஃபைண்ட் ஆயில் தேய்த்தால் கெடாது.

85. உள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொண்டு மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் நாற்றம் அடிக்காது.

86. சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எப்போதும் எறும்புத் தொல்லை இருந்தால் அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை போட்டால் எறும்பு வராது.

87. குழந்தைகள் போடும் சாக்ஸ் லூஸாகி விட்டால், சாக்ஸ் ஓரத்தில் அதன் சுற்றளவுக்கு ஏற்றபடி ரப்பர் பேண்டை வைத்து உருட்டி தைத்துவிட்டால் ஓரம் தொய்ந்து போகாமல் காலை அழுத்தமாக பிடித்துக் கொள்ளும்.

88. வாசனை கம்மியான ஊதுவத்திகள் மீது சிறிது யூபிகோலனைத் தடவிய பின் ஏற்றி வைத்தால் வீடு முழுவதும் வாசனை தூக்கும்.

89. மிக்ஸியில் அரைக்கப் போடும் பொருள்கள் ரொம்பக் கொஞ்சமாக இருந்தால், தட்டினால் மூடிவிட்டு அரைத்தால் நன்றாக அரைபடும்.

90. வெள்ளைக் கலர் டெலிபோன் அழுக்கு ஏறி இருந்தால் நெயில் பாலீஷ் ரிமூவரால் அழுந்தத் துடைத்தால் பளிச்சென்று ஆகும்.

91. பிளாஸ்டிக் குடம் வீணாகிப் போனால் பாதிக்கு மேல் வெட்டி (மேல் பாகத்தை) விட்டு குப்பைக் கூடையாக அல்லது செடி வளர்க்க உபயோகிக்கலாம்.

92. சோப்புத் தண்ணீர் கொண்டு கேஸ் அடுப்பைத் துடைக்கும் போது டியூபையும் துடையுங்கள். இதனால் டியூப் நெடுநாள் உழைக்கும். சுத்தமாகவும் இருக்கும்.

93. வீட்டில் மரச் சாமான்களுக்கு உபயோகிக்கும் பெயிண்டை முறத்தில் தடவி காய வைத்தால் நீண்ட நாட்கள் முறம் புதுசு போல இருக்கும். பூச்சிகளும் அரிக்காது.

94. டூல் பாக்ஸில் ஒரு சாக்பீஸ் கட்டி அல்லது கரித் துண்டை போட்டால், அது ஈரப் பசையை உறிஞ்சி டூல்ஸ் துருப்பிடிக்காமல் இருக்க உதவும்.

95. செருப்பின் மேல் பாகத்துத் தோலின் அடிப்பாகத்தில் மெழுகுவர்த்தியை நன்றாகத் தேய்த்து, பிறகு அணிந்து கொண்டால் செருப்பு கடிக்கவே கடிக்காது.

96. துணி பீரோவை சுத்தம் செய்யும்போது முதலில் பீரோ தட்டுகளில், பயன்படுத்திய கொசுமேட்டை ஐந்தாறு பரப்பி அதன் மேல் பேப்பர் போட்டுத் துணியை அடுக்கினால் ஒரு வருடம் வரை பூச்சிகள் நெருங்காது.

97. கொசு தொல்லைக்காகப் போடப்பட்டுள்ள நெட்லானில் சிறிய துளைகள் ஏற்பட்டு விட்டால், செலோடேப் கட் பண்ணி ஒட்டலாம்.

98. கருவேப்பிலைச் செடிக்குப் புளித்த தயிர் அல்லது மோர் விட்டால் நன்கு செழிப்பாக வளரும். தயிர் பாத்திரத்தின் உள்ளே தண்ணீர் விட்டுக் குழப்பி அந்நீரையும் விட்டு வரலாம்.

99. குழந்தைகளுக்கு உபயோகித்த சின்ன சைஸ் கொசுவலை துணியில், embroider கைவண்ணம் காட்டி டி.வி. கவராக பயன்படுத்தலாம்.

100. துணிகளில் ஹேர்-டை பட்டால் அந்த கறையை நீக்க, நெயில்பாலிஷ் ரிமூவரால் டை படிந்த பகுதியைத் துடைத்தால் கறை போய்விடும்.

101. ரப்பர் ஸ்டாம்ப் பேட், இங்க் காய்ந்து போய்விட்டால் நீலம் சில சொட்டுகள் விட்டால் அழகாக பதிய வரும்.

102. மாதுளம் பழத் தோல்களின் உள்பாகத்தை எடுத்து பல் தேய்த்தால் பல்லுக்கும் உறுதி, பல்லும் பளிச்சென்று இருக்கும்.

103. தேங்காய் உடைத்த இளநீரை சுண்ணாம்பு பாட்டிலில் சிறிது ஊற்றி வைத்தால் சுண்ணாம்பு சீக்கிரத்தில் காய்ந்து போகாமல் இருக்கும்.

104. மின்விசிறியில் தூசி படிந்து, கறை படிந்து விட்டதா? ஒரு துணியை மண்ணெண்ணையில் நனைத்து மின் விசிறியை அழுத்தித் துடையுங்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு நல்ல துணியால் துடைத்துப் பாருங்கள். பளிச்சென்றாகிவிடும்.

105. அரை வாளி தண்ணீரில், நான்கு மேஜைக்கரண்டி வினீகரை கலந்து ஜீன்ஸ் துணிகளை அலசினால் சாயம் போவதை தடுக்கலாம்.

106. புது வீட்டில் பெயிண்ட் அடித்த வாடை போக மறுக்கிறதா? ஒரு பக்கெட் நிறைய தண்ணீரை நிரப்பி அறைகளில் வையுங்கள். வாடை போய்விடும்.

107. ஆணி அடிக்கும் போது நுனியில் தேங்காய் எண்ணெய் தடவினால் சுவரில் சுலபமாக இறங்கும்.

108. சமையல் அறையில் எண்ணெய் பசையுள்ள இடத்தில் சுண்ணாம்புடன் மண்ணெண்ணெய் கலந்து அடிக்கலாம்.

109. கூர்மையான கத்திகளில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.

110. பால் பாக்கெட் வாங்கி காய்ச்ச நேரமில்லாமல் போனால் அதை தண்ணீருக்குள் போட்டு வைத்துவிட்டால் மூன்று மணி நேரம் கழித்துக் கூட காய்ச்சலாம்.

111. இனிப்பு பலகாரங்கள் உலர்ந்து கெட்டுப் போகாமலிருக்க அதன் மீது சிறிது தேன் பூசி வைக்கலாம்.

112. பால் காய்ச்ச மறந்து போய் விட்டீர்களா? பால் திரிந்து போகுமோ என்ற பயம் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம். பாலைக் காய்ச்சும் முன் ஒரு சிட்டிகை சமையல் சோடா மாவு கலந்து காய்ச்சினால் பால் திரியாது.

113. காபி பொடியை போடுவதற்கு முன் பில்டரின் அடிப்பாகத்தை தீயில் காட்டி விட்டு பின்பு உபயோகித்தால் டிகாஷன் கலகலவென்று இறங்கும்.

114. நெய் எவ்வளவு நாளானாலும் பிரஷ்ஷாக இருக்க அதோடு ஒரு வெல்லத் துண்டைப் போட்டு வைக்கவும்.

115. தக்காளி, எலுமிச்சைப் பழம் சீக்கிரம் கெடாமலிருக்க உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

116. கோதுமை மாவை நன்கு சலித்து சிறிதளவு டேபிள் சால்ட்டை கலந்து வைத்தால் வண்டுகள் வராது.

117. தயிர் புளித்து விடுமோ என்ற பயம் வேண்டாம்.ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் தயிர் புளிக்காது.

118. ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய்ப் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி கலந்து தாளித்துக் கொட்டுங்கள். புதுமையான ஊறுகாய் தயார்.

119. தேங்காயை சரிபாதியாக உடைக்க, தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

120. கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து சுத்தமாக தண்ணீரில் அலசி காய வைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.

121. குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் காய்கறிகள் அப்போது பறித்தது போல் “பிரஷ்”ஷாக இருக்கும்.

122. உப்பு வைத்திருக்கும் பாத்திரத்தினுள்ளே ஒரு பிளாஸ்டிக் பேப்பரை போட்டு அதன் மீது உப்பைக் கொட்டி வையுங்கள். உப்புக்கல் கசியாமல் அப்படியே இருக்கும்.

123. குடிக்கும் தண்ணீர் மணமா இருக்கணுமா? வாட்டர் பில்டரில் சிறிதளவு துளசியை போட்டு வையுங்கள்.

124. முதல் நாள் சாதம் மீதி இருந்தால் கவலை வேண்டாம். அதை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து இரண்டு பிடி கடலை மாவு, பச்சை மிளகாய் துண்டுகள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஒரு கரண்டி தயிர் விட்டு தண்ணீர் சேர்த்து தோசையாக வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

125. சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க, அதை சில்வர் பேப்பரில் சுற்றி வைக்கவும்.

126. மழைக்காலங்களில் தீப்பெட்டியிலுள்ள குச்சிகள் நமத்து போகாமல் இருக்க பெட்டியினுள் நான்கைந்து அரிசியைப் போட்டு ஒரு டப்பாவில் போட்டு மூடிவிட்டால் குச்சிகள் எளிதில் தீப்பற்றும்.

127. உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல, எல்லா காய்கறிகளையும் ஒன்றாக வதக்கி உருட்டி கடலை மாவில் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்க வெஜிடபிள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்களையும் சாப்பிட ஒரு சந்தர்ப்பம்.

128. தானியம் மற்றும் பயறு வகைகளை எட்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து ஹாட் பேக்கில் போட்டு மூடி மறுநாள் திறந்து பார்த்தால் முளை கட்டிய தானியம் தயார். தானியங்களை முளை கட்டுவதற்கு ஒரு எளிய வழி.

129. கோதுமையை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற வைத்து உலர்த்தி பின் மிஷினில் அரைத்து சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.

130. சமையலில் உப்பு சற்று கூடுதலா? கவலை வேண்டாம். பால், க்ரீம், தயிர் இவற்றில் ஏதோ ஒன்றினைச் சேருங்கள். சரியாகிவிடும்.

131. வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கினால் உடனே அவற்றை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இதனால் வாழைப்பூ, வாழைத்தண்டின் நிறம் மாறாது. கறை பிடிக்காது. துவர்ப்பு நீங்கும்.

132. துவைத்த துணிகளுக்கு நீலம் போடும் போது நீலம் கரைத்த நீரில் சிறிது வாஷிங் சோடாவையும் கலந்து கொண்டால் துணியில் நீலம் திட்டுத்திட்டாக இல்லாமல் சமமாக இருக்கும்.

133. பாலேடு, தயிரேடுகளை பாட்டிலில் போட்டு குலுக்க வெண்ணெய், மோர் ஒரே சமயத்தில் கிடைக்கும்.

134. கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை வாங்கிய உடன் வாழைப் பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.

135. இட்லிக்கு மாவு அரைக்க அரிசியை ஊறப் போட மறந்து விட்டீர்களா? இதோ ஒரு வழி உடனே சுடு தண்ணீரிலே அரிசியை ஊறப் போடுங்கள். பத்து நிமிடத்தில் ஊறிவிடும்.

136. உங்கள் இஸ்த்திரி பெட்டி நைலான் துணி மீது தேய்த்தால் அடிப்பாகம் வீணாகிவிட்டதா? அப்பெட்டியினை சூடாக்கி பச்சை வாழை இலையின் மீது தேயுங்கள். பெட்டியின் அடிப்பாகம் சரியாகிவிடும்.

137. காபி, டீ கொடுக்கும் பீங்கானில் கறை படிந்து உள்ளதா? ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி நன்கு தேயுங்கள். கறைகள் விட்டு விலகும்.

138. பிளாஸ்கில் உள்ள துர்நாற்றம் போக வினிகர் போட்டு கழுவலாம்

கர்ப்ப காலத்தில் பெண்கள் கிவி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!



கர்ப்ப காலத்தில் பெண்கள் கிவி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு குறிப்பிட்ட உணவுகளின் மீது நாட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக புளிப்பாக, இனிப்பாக மற்றும் உப்புள்ள உணவுகளை கர்ப்பிணிகள் அதிகம் விரும்புவார்கள். மேலும் காய்கறி மற்றும் பழங்களுள் புளிப்பாக இருக்கும் மாங்காயை கர்ப்பிணிகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
தற்போது மார்கெட்டில் கிவி பழத்தை அதிகம் விற்பதைக் கண்டிருப்பீர்கள். அப்பழத்தை சாப்பிடலாமா கூடாதா என்ற எண்ணமும் மனதில் எழும். நிச்சயம், கர்ப்பிணிகள் இப்பழத்தை சாப்பிடலாம். கிவி பழம் சற்று புளிப்புச் சுவையுடனும், இனிப்புச் சுவையுடனும் இருக்கும். இதில் கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை மற்றும் சர்க்கரை மிகவும் குறைவாகவே உள்ளது.
சரி, இப்போது கிவி பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.
நீங்க சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் ஆரோக்கியமானது தானா? வியக்கத்தக்க உண்மைகள்!
மகளை ‘கௌரவ கொலை’செய்த தந்தை! மீண்டு வந்த மகள் என்ன செய்தார் தெரியுமா?


ஃபோலேட்
கிவி பழத்தில் ஃபோலேட் அதிக அளவில் உள்ளது. இது செல்களின் உருவாக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத சத்தாகும். ஃபோலேட் சத்து வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியில் பெரும் பங்கை வகிக்கிறது. மேலும் ஃபோலேட் குழந்தைகளின் சில முக்கிய உறுப்புக்களின் வளர்ச்சிக்கு அவசியமானது. எனவே கர்ப்பிணிகள் இப்பழத்தை சாப்பிட்டால், குழந்தைக்கு பிறப்பு குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
வைட்டமின் சி
கிவி பழத்தில் வைட்டமின் சி ஏராளமான அளவில் உள்ளது. அதுவும் அன்றாடம் தேவைப்படும் 140% வைட்டமின் சி நிறைந்தது. கிவி பழம் சிறப்பான மூளை செயல்பாட்டிற்கு உதவும். மேலும் இப்பழம் கர்ப்பத்தால் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைக் குறைக்கும்.
நேச்சுரல் சர்க்கரை
கிவி பழத்தில் இயற்கையாகவே சர்க்கரை கொஞ்சம் இருப்பதால், இப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் இனிப்பு உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறையும். இப்பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், கர்ப்ப கால சர்க்கரை நோயைத் தடுக்கலாம்.


செரிமானம் மேம்படும்
கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது பொதுவானது தான். ஆனால் கிவி பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால், இப்பிரச்சனை தடுக்கப்படும். இதற்கு அதில் உள்ள நார்ச்சத்து தான் காரணம்.
நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும்
கிவி பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக உள்ளது. இது குழந்தையின் ஆர்.என். ஏ மற்றும் டி.என்.ஏ பாதிக்கப்படுவதில் இருந்து பாதுகாக்கும். மேலும் இப்பழம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, அடிக்கடி நோய்வாய்ப்படுவதைத் தடுக்கும்.
ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யும்
கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவது சாதாரணம் தான். அதுவும் ஒரு கட்டத்தில் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடும், திடீரென்று கோபப்படக்கூடும், இன்னும் சில நேரங்களில் மிகுந்த சந்தோஷத்துடன் இருக்கக்கூடும். கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் மன வருத்தம், மிகுந்த சோர்வு, மன அழுத்தம் போன்றவற்றில் இருப்பது நல்லதல்ல. ஆனால் கிவி பழத்தை சாப்பிடுவதன் மூலம் இப்பிரச்சனைகள் தடுக்கப்படும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும்?
ஆரோக்கியமாக மற்றும் பாதுகாப்பாக இருப்பதற்கு, கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒரு நாளைக்கு 2-3 கிவி பழத்தை சாப்பிடலாம். ஒருவேளை உங்களுக்கு இதை சாப்பிட்டு அழற்சி, வாய்வுத் தொல்லை அல்லது இதர செரிமான பிரச்சனைகளை சந்தித்தால், கிவி பழத்தை சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

புதன், 29 நவம்பர், 2017

கிவி பழத்தை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்:-



கிவி பழத்தை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்:-

1. இந்த பழத்தில் 5% இரும்பு சத்து அடங்கியுள்ளது. தினமும் இதை சாப்பிட்டால் இரத்த சோகை ஏற்படாமல் நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

 2.கர்ப்பிணிகள் இதை சாப்பிட்டால் இரத்தம் உற்பத்தி அதிகரிக்கும்.
கர்ப்பிணிகளுக்கு தேவையான முக்கிய சத்துகளில் ஒன்று போலிக் அமிலம். கிவி பழத்தில் அதிக அளவிலான போலிக் அமிலம் நிறைந்துள்ளது.

3. இரத்தத்தில் உள்ள செல்களின் எண்ணிக்கையை அதிகரித்து உடலுக்கு வலு சேர்க்கிறது.

4.கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துகளை அதிகம் கொண்டிருப்பதால் எலும்புகள் மற்றும் பற்களின் வலிமை அதிகரிக்கிறது.

5.அளவுக்கு அதிகமான வைட்டமின் – சி மற்றும் நார்சத்துகள் அடங்கியுள்ளதால் உடல் மற்றும் குடலின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

6.அதிக அளவில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடெண்டுகள் உடலில் உள்ள தேவையற்ற கிருமிகளை அழிக்கிறது.

7.கிவி பழத்தின் தோலில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அளவுக்கும் அதிகமாக இருக்கிறது.

 8.அதிலும் இதனை உண்பதால் இரத்தமானது லேசாக இருப்பதோடு, உடலில் எளிதாக நன்கு சுழற்சியானது நடைபெற்று, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

9. இந்த பழத்தை தினமும் உண்டால், உடலுக்கு தேவையான சத்துக்களை எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்.

செவ்வாய், 28 நவம்பர், 2017

நவீனகால ஆண்கள் சுமக்கும் பொருளாதாரச் சுமையின் கணம் மிகக் கொடியதே...



நவீனகால ஆண்கள் சுமக்கும் பொருளாதாரச் சுமையின் கணம் மிகக் கொடியதே...

நாள் ஒன்றுக்கு 100 கிலோமீட்டர் டூ வீலர் ஓட்டி டெலிவரி மேன்களாக வேலை செய்யும் இளைஞர்கள் எல்லாம் யார்?
காலை 10 மணிக்கு அலுவலகத்தில் நுழைந்தால்,
இரவு 8 மணி வரை கணினித் திரை முன் கண்களை அகற்றாமல் அமர்ந்திருக்கும் இளைஞர்கள் யார்?
தங்கள் இளமையை அடகு வைத்து வெளிநாடுகளில் உழைத்துக் கொட்டும் இளைஞர் கூட்டம் யார்?
எதற்காக இவர்கள் உழைக்கும் இயந்திரங்களாக மாறிப் போயுள்ளனர்?

ஏனெனில்,
குடும்பத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் சுமை அவர்களின் முதுகில் இருக்கிறது.
அவர்கள், அழாமல் இருக்கலாம்;
வலிக்காதது போல நடிக்கலாம்.
ஆனால், அது அவர்களின் பெருந்தன்மை.  உண்மையில் 30 வயதையொட்டியுள்ள ஓர் ஆண், தன் சக்திக்கு மீறிய பொருளாதாரச் சுமையைச் சுமக்கிறான்.
பொறுப்புடன் ஓர் ஆண் இருந்தால்,
இந்தச் சுமைகளிலிருந்து தப்பவே முடியாது.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ‘வேலைதான் கன்ஃபர்ம் ஆகிடுச்சே’ என்ற நம்பிக்கையில் வாங்கிய டூ-வீலருக்கு
இன்னும் தவணை முடிந்திருக்காது. தங்கையின் திருமணக்கடன் ஓரிரு லட்சங்கள் மீதம் இருக்கும்.
 `மாதச் சம்பளக்காரன். வாழ்க்கையை ஓட்டிவிடலாம்’ என்ற நம்பிக்கையில்
தன்னைத் திருமணம் செய்து கொண்ட மனைவியின் விருப்பங்களை
ஓரளவுக்கேனும் நிறைவேற்றியாக வேண்டும். ஒவ்வொரு குடும்ப நிகழ்ச்சிக்கும் புதுத்துணி என்று இல்லாவிட்டாலும்,
விழா நாள்களில் புத்தாடை என்பது பேராசை அல்ல.

குளிர்சாதனப்பெட்டி,
தொலைக்காட்சிப் பெட்டி,
அமர்வதற்கு சோபா,
கொடுங் கோடையைச் சமாளிக்க ஏ.சி...
என ஒரு நகர்ப்புற நடுத்தரவர்க்கத்தின் தேவைகள் ஒருபோதும் முடிவடைவதில்லை. குழந்தைகள் தவழும் வீட்டில் இந்தச் செலவுகள் இரட்டிப்பாகும். எதையும் தவிர்ப்பதற்கில்லை. `வளர்ற குழந்தைக்கு எதைப் போட்டாலும் ரெண்டு மாசத்துல பத்தாமப்போயிடும்.

குடும்பம் என்பது, எவ்வளவு தின்றாலும் செரித்துக்கொண்டே இருக்கும் விநோதமான மிருகம்.
அதன் வயிற்றில் எப்போதும் பூர்த்தி யடையாத பெரும்பசியின் தீ, கனன்று எரிகிறது.
இதற்கு உணவிடுவதற்காக ஆண்கள்
ஆயுள் முழுவதும் ஓடி ஓடிக் களைத்துப்போகின்றனர்.
வேலையின் களைப்பில் இன்னதென்று விவரிக்க இயலாத எரிச்சலும் கடுப்பும் அவ்வப்போது சூழும். ‘நாலு நாள் லீவு போட்டுட்டு எங்கேயாவது போகணும்’ என்று நான்கு நாள்களுக்கு ஒருமுறை தோன்றத்தான் செய்யும்.
ஆனால், பணத்துக்கு எங்கே போவது?

அகால விபத்துகளில் நண்பர்கள் உயிரிழக்கும்போது,
ஓரிரு நாள்கள் மனம் அலைபாயும். பார்க்கும் வேலை மீதான அவநம்பிக்கையும் பற்றற்ற மனநிலையும் வந்து வந்து போகும்.
‘எதற்காக இந்த வேலை?
யாருக்காக இப்படி பொழுதெல்லாம் இங்கே கிடந்து சாகுறோம்?
நமக்குச் சொந்தமானது என ஒருநாளும் இல்லையா?
நினைத்ததைச் செய்து வாழவே முடியாதா?’ என்றெல்லாம் சிந்திப்போம்.
ஆனால், அந்த வேலை தரும் வருமானம் இல்லையென்றால்,
அடுத்த மாதத்தை ஓட்ட முடியாது என்பது கண் முன்னால் இருக்கும் நிஜம்.

-ஆனந்தவிகடன்

சித்தர்களின் சாகாக்கலை (மரணமில்லாப் பெருவாழ்வு)



நீண்ட பதிவானாலும் பாதுகாக்கப்படவேணடிய பதிவு...

சித்தர்களின் சாகாக்கலை (மரணமில்லாப் பெருவாழ்வு)

இந்த சித்தர்களின் சாகாக்கலைக்கு முக்கியமான ஒன்றான சர நூல் சாஸ்திரத்தை இங்கே சற்றே விளக்கப் போகிறேன்.

இந்த சித்தர் சரநூல் சாஸ்திரம் என்பது  சிவன் பார்வதிக்குச் சொல்லி ,  பார்வதி நந்திதேவருக்குச் சொல்லி, நந்திதேவர் அகஸ்தியருக்குச் சொல்லி, அகஸ்தியர்  பதிணென் சித்தர்களுக்கு சொல்லி, சித்தர் பரம்பரை வரும் அனைவருக்கும்  இரகசியமாக  உபதேசிக்கப்பட்டு வருவது.

சரம் என்றால் மூச்சுள்ளது.  அசரம்  என்றால்  மூச்சில்லாதது. இவையே சித்தர்கள் உலகை அழைப்பதற்குரிய வார்த்தையாக  சராசரம்  என்று கூறுகிறார்கள். இந்த உலகமே மூச்சை  அடிப்படையாக  வைத்தது என்பதற்காகவும், அது முட்டையின்   வடிவத்தை ஒத்திருப்பது என்பதற்காகவும்,  அண்ட சராசரம்(அண்டம் என்றால் முட்டை என்று பொருள்) என்று அழைத்து வந்தனர்.

1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600மூச்சும்    ஓடுகின்றது. உயிர்மெய்யெழுத்துக்கள்  216 என்பது இந்த 21,600மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120ஆண்டுகளாகும்.

          ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும் போது 18மூச்சும், ஒடும்போது    25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும,; உடலுறவின் போதும்,  கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1நிமிடத்தில் ஓடுகின்றன.  இந்த மூச்சினுடைய  அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ  அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.
          நாம் செய்யும் காரியங்களில்  வெற்றி பெறவும், காரியத்தடை நேராமல் தடுத்துக் கொள்ளவும்,  பலன்களைச் சொல்வதற்கும், கேள்வி கேட்கும் நபருக்கு காரியசித்தியாக்குதலையும், இன்னும் பல காரியங்களுக்கும்   இந்த சரநூல் சாஸ்திரம் பயன்படுகிறது.  சரம் பார்க்கத் தெரிந்தவனே  “பார்ப்பான்” என்று அழைக்கப்படுகிறான். சரம் பார்க்கத் தெரிந்தவனிடம்  எந்த மோதலையும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே “சரம் பார்ப்பவனிடம்  பரம் போகாதே”  என்று வழக்குச் சொல்லில் கூறுவர். சரமே இறைவன்,   எனவே அகத்தியர்  தனது சரநுநூல்   சாஸ்திரத்தில்,  சரத்தை இறைவனுக்கு சமமாகவும் பஞ்சபூதங்களின்   ஒடுக்க ஸ்தானமாகவும்  கூறுகிறார். இந்த சரநூல் சாஸ்திரத்தின் விரிவைப்  பார்ப்போம்.

சூரிய கலை, சந்திர கலை  அவற்றின் வேகம் மற்றும் எண்ணிக்கையைப் பற்றி பார்த்தோம். ஒரு நாளில்  ஓடக்கூடிய  மூச்சுக்களின்  எண்ணிக்கை21,600 என்று பார்த்தோம் சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை மரங்கள் உள்ளன. இந்த 64ம் 64வகையான கலைகளாகும்.   21,600 ஓடுகள் வேயப்பட்டுள்ளன.  அவை ஒரு நாளில்  ஓடக்கூடிய  மூச்சின் எண்ணிக்கையை குறிக்கும். 5 வெள்ளிப் படிகள் உள்ளன. இவை ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தினையும் (பஞ்ச பூதங்களையும்) குறிப்பன.

இதையே விதியை  மதியால் வெல்லலாம் என்பார்கள்.  இங்கு மதி என்று கூறப்படுவது  புத்தி அல்ல மதி என்றால் சந்திரன் 16 அங்குலம் ஓடக்கூடிய  சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள்  விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.

நந்தனார் கீர்த்தனையில் எட்டும்    இரண்டறியாத மூடன் என்கிறார்.  8என்பது    'அ' காரமாக   தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது. இரண்டு என்பது 'உ' காரமாக  தமிழ்  எழுத்துக்களில்  குறிக்கப்படுகிறது.  இதையே அகார   உகாரம் என்று கூறுகின்றார்கள்.   8*2=16  அங்குலம் ஓடும் சந்திரகலையை   குறிக்கிறது.

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்'

அகார(8), உகாரம்(2),யகாரம்(10).

தமிழ் எழுத்துக்களில் எண்ணாகவும் எழுத்தாகவும் திகழ்கின்றனவோ அவையே அகாரம் மதி,உகாரம் ரவி,சுடர் மகாரம்,இந்த மூன்றும் சேர்ந்ததே ஓம் என்னும் பிரணவம்.

ரவி, மதி,சுடர்,மூன்றிலும் இருப்பது சிகாரம் என்றழைக்கப்படும் நெருப்பு.

'நாயோட்டும் மந்திரம் நமனை வெல்லும்'

    “குழவியும்  ஆணாம் வலத்தது  ஆகில்
     குழவியும்  பெண்ணாம் இடத்தது ஆகில்
    குழவியும் இரண்டாம்  அபானன் எதிர்க்கில்
    குழவி   அலியாகும்  கொண்ட கால்  ஒக்கிலே”

                                                                திருமந்திரம் 482
          உடலுறவில்  இணைகின்ற  ஆணுக்கு  வலது நாசியில் சுவாசம்  நடந்தால்  ஆண்குழந்தை  தோன்றும். சுவாசம் இடது நாசியில்  நடந்தால் பெண் குழந்தை தோன்றும். சுவாசம் சுழுமுனையில் நடந்தால் தோன்றும் குழந்தை  அலியாகும். வலது அல்லது இடது  நாசியில்   சுவாசம் நடந்து அப்போது  அபானன்   என்ற வாயு  எதிர்க்குமானால் இரட்டைக் குழந்தை தோன்றும்.
           பிறவியிலேயே  கூன், குருடு,  ஊமை போன்ற பல  குறைகளுடன் குழந்தைகள் பிறப்பதற்கு, காரணங்களை   சித்தர்கள்   சரநூலில்  பல இடங்களில்  கூறுகின்றனர். இதையே திருமந்திரத்தில

“மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாத உதரம் சலமிகில் மூங்கையாம்

மாதா உதரம்   இரண்டொக்கில் கண்ணில்லை.
மாதாஉதரத்தில்வந்தகுழவிக்கே'
                                                               திருமந்திரம் 481

உடலுறவின்   போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருந்தால் தோன்றும் குழந்தைக்கு   மூளை வேகமாக செயல்படாது  மந்தமாக இருக்கும். பெண்ணின் வயிற்றில் சிறுநீர் மிகுந்து இருந்தால்  பிறக்கும் குழந்தை ஊமையாகும். மலம்,  சிறுநீர் இரண்டும் அதிகமாக  இருந்தால் பிறக்கும்  குழந்தைக்கு  கண் குருடாகும்  என்ற திருமூலர் திருமந்திரத்தில் கூறுகின்றார்.

“பாய்கின்ற   வாயு  குறையிற்  குறளாகும்
பாய்கின்ற   வாயு இளைக்கின் முடமாகும்.
பாய்கின்ற   வாயு நடுப்படின் கூனாகும்
பாய்கின்ற   வாயு மாத்ர்க்கில்லை பார்க்கிலே”
                                                               திருமந்திரம் 480
ஆணின் உடலிலிருந்து உயிரணுக்கள்  வெளியேறும் நேரம் இருவரின் சுவாசமும் சரியான  அளவில் இருந்தால் எந்தக் குறைபாடும் இராது. ஆனால்  ஆணின் சுவாசம் தேவையான  அளவை விட குறைந்து வெளிப்படுமானால் பிறக்கும் குழந்தை குள்ளமாக இருக்கும்.  சுவாசம் திடமின்றி  வெளிப்படுமானால்  பிறக்கும் குழந்தை முடமாகும். சுவாசத்தின் அளவு குறைந்தும், திடமின்றியும்  வெளிப்பட்டால் பிறக்கும் குழந்தைக்கு  கூன் விழும்.

'பாய்ந்த  பின்  அஞ்சோடிய ஆயுளும் நூறாம்
பாய்ந்த பின் நாலோடி  பாரினில்  எண்பதாம்'
                                                                       திருமந்திரம் 479

          உயிரணுக்கள் வெளியேறும் நேரம் ஆணின் சுவாசம் ஐந்து மாத்திரை நேரம்  பாய்ந்தால் பிறக்கும் குழந்தை  நூறு வயது வரை வாழும். நான்கு மாத்திரை நேரம்    ஓடினால் எண்பது  வயதுவரை உயிர்வாழும். சுவாசம் வெளிப்படும் மாத்திரை குறைய குறைய ஆயுளும் குறையும்

'கொண்ட வாயு இருவருக்கும்   ஒத்தொழில்              
கொண்ட குழவியும்  கோமளமாயிரும்
கொண்ட  நல்வாயு இருவருக்கும்   குழறிடில்
கொண்டதும்  இல்லை  கோல்வினையாட்கே.'    
                                                                      திருமந்திரம் 483

உடலுறவின் போது ஆண் பெண் இருவருக்கும் சுவாசம்  சீராக ஒரே அளவாக ஓடினால் தோன்றும் குழந்தை மிக அழகாக பிறக்கும் . சுவாசம் தாறுமாறா

சந்திர கலை  சூரியகலை சூரி

யன் உதிக்கும் போது ஓட வேண்டிய திதிகள்  குறிப்பிட்டிருந்தோம்.சூரியன் உதிக்கும்போது சூரியகலையில்  அதாவது  வலது நாசியில் ஓட வேண்டிய திதிகளில்  காலை 6 மணிக்கு ஓட ஆரம்பித்து  ஒரு மணிநேரம் கழித்து சந்திர கலை ஓட ஆரம்பிக்கும். மீண்டும் ஒரு  மணிநேரம் கழித்து சூரிய கலை ஓட ஆரம்பிக்கும். இதே போல்சூரியன் உதிக்கும்  போது சந்திர கலையில்   ஓட வேண்டிய  திதிகளில் சூரிய உதயத்தில்  சந்திர கலையில் ஒரு மணிநேரம்  மூச்சு  ஓடி, பின் சூரிய கலையில் ஒரு மணி நேரம் மூச்சு ஓடி இப்படியே  மாறி  மாறி   மூச்சு   ஓடிக்கொண்டிருக்கும்.

“நாத விந்து கலாதி நமோ நம
          வேத மந்திர சொரூபா நமோ நம”
                                   -அருணகிரிநாதர் திருப்புகழ்-

நாதத்திற்கும் (பெண்களிடமுள்ள  ஜீவசக்தி)    விந்துவிற்கும் (ஆண்களிடமுள்ள ஜீவசக்தி) முதல் வணக்கத்தைத் தெரிவித்த அருணகிரிநாதர் பின்னரே  வேத மந்திர  சொரூபனான  இறைவனுக்கே  வணக்கம் தெரிவிக்கிறார்.இதையேதிருப்புகழில்

  “அருகுநுனி பனியனைய  சிறிய துளி
பெருகியொரு ஆகமாகிய பாலரூபமாய்”

          என்று கூறுகிறார். ஒரு விந்துவில் உள்ள இலட்சக்கணக்கான உயிரணுக்கள்  ஒவ்வொன்றும் மானிடனாகி 120 வருடங்கள் வாழ வைக்கக்கூடிய உயிர்ச் சக்தியைப்  பெற்றிருக்கின்றன.   எனவே “விந்து விட்டவன் நொந்து  கெட்டான்” என்று சித்தர்கள் கூறுகின்றனர்.  நாம் அணியும்   திருநீறு வெள்ளை நிறமாக  இருந்து இந்த விந்தையே குறிக்கிறது.  குங்குமம்  சிவந்த நிறமான  பெண்களின் நாதத்தைக் குறிக்கிறது.

இதையே உலக இயக்கம் என்பதால் குங்குமமும். திருநீறும்  நெற்றியில்அணிகிறோம். எல்லோருமே நாத விந்து சொரூபர்களே.

ஆண், பெண்களின் சேர்க்கையே   லிங்க சொரூபம். இடப் பாகம் சக்தியென்பதால்  லிங்கத்தின்   இடது பாகம் நீர்த்தாரை வைக்கப்பட்டுள்ளது.  சிவலிங்கத்தின் அந்த இடப்பாகத்தையே  நோக்குவது போல இடதுபுறம் நந்தி சாய்த்துப் பார்க்கும் படி அமைக்கப்பட்டுள்ளது.சக்தியான சந்திரகலையை முதலில் குறைக்க வேண்டும் என்பதற்காகவே,    இது கோயிலில் அமைப்பாக  காட்டப்பட்டுள்ளது.

(சீனத்து அக்கு பஞ்சர் முறை நமது போக முனிச் சித்தரால் கண்டுபிடிக்கப்பட்டு சீனத்தில் கையாளப்பட்டு வருகிறது அதில்'யின்'(yin)என்றால் இடப்பக்கம் என்றும் பெண் தன்மை என்றும் ,யாங்(yang)என்றால் வலப்பக்கம் என்றும் ஆண் தன்மை  என்றும் கூறப்பட்டுள்ளது.)

“மூலமான  மூச்சதில் மூச்சறிந்து  விட்டபின்
நாலு  நாலு முன்னிலொரு  நாட்டமாகி  நாட்டில்
பாலனாகி   நீடலாம் பரப்பிரம்மம்  ஆகலாம்.
ஆலமுண்ட கண்டராணை  அம்மையாணை உண்மையே”
“இருக்கலாம் இருக்கலாம்  அவனியிலே இருக்கலாம்
அரிக்குமால் பிரம்மனும் அகண்ட  மேழ் அகற்றலாம்
கருக்கொளாத   குழியிலே   காலிடாத கண்ணிலே
நெருப்பறை  திறந்த பின்பு நீயும்  நானும் ”
                              “சிவ வாக்கியர்”

மேற்கண்ட  பாடல்களில் மூலமான  மூச்சை  சரியான படி  அறிந்து அளவிட்டு   4 அங்குலமட்டில் ஓட  விட்டால் பாலன் போன்ற   தோற்றமும்,பரப்பிரம்மான   இறைவனுக்குச்    சமமாகவும்  ஆகலாம்  என்று சிவவாக்கியர் இறைவன்,  இறைவி   மீது  ஆணையிட்டுக் கூறுகிறார்.

          இந்த  அவனியான பூமி இருக்கும்  வரை, அரி, மால் பிரம்மன்.,அண்டங்கள்  இவற்றைக் கூட படைக்கலாம், அழிக்கலாம் காலிடாத கண்ணிலே  என்ற மூச்சுவிடாத (கால் என்றால் காற்று)   நிலை அடைந்தால் நெற்றிக்கண்ணில் நெருப்பறை திறக்கும். “நெருப்பறை திறக்குமானால் ,  நீ நான்  அனைவரும் ஈசனே.                    
     உண்ணும் போது உயிரெழுத்தைஉயரேவாங்கு
     உறங்குகின்ற   போதெல்லா மதுவேயாகும்.
     பெண்ணின்   பாலிந்திரியம்  விடும்போ தெல்லாம்
     பேணி வலம் மேல் நோக்கி அவத்தில் நில்லு
     தின்னுங்  காயிலை மருந்தும் அதுவேயாகும்.
     தினந்தோறும் அப்படியே  செலுத்த வல்லார்
     மண்ணு}ழி  காலமட்டும் வாழ்வார் பாரு.
     மரலிகையில்  அகப்படவு மாட்டார்  தாமே.

அகத்தியர்தம்  ஞானப்பாடலில் இவ்வாறு கூறுகிறார்.
எனக்கு சொந்த அனுபவத்தில் சில மருத்துவ   கலைகளின் அறிவு உண்டு.   ஆனால் சித்த மருத்துவக்   கலையில்  எனது முன்னோர்கள் பரம்பரையாகச் செய்து வந்திருக்கின்றனர்.   இவற்றில் முக்கியமான விஷயம்,  என்னை பிரமிக்க வைத்த விஷயம்  ஒன்று உண்டு.  எல்லா வைத்திய  முறைகளும் உடலில் ஏற்படுகின்றன  பிணிகளைப்  போக்கிக் கொள்ளும்   முறைகளைப் பற்றிமட்டுமே கூறுகின்றன. அதிலும்  சில நோய்கள்   மனித குலத்திற்கும்,   விஞ்ஞானத்திற்கும்  சவாலாகவேஅமைந்திருக்கின்றன.

ஆனால்சித்தர்களோஉடலில் ஏற்படுகின்ற வியாதிகளின் எண்ணிக்கை 4448  வியாதிகள்   என்று குறிப்பிட்டுச் சொல்வதுடன்  அவற்றைப் போக்கும் முறைகளையும் தெளிவுபட விளக்கியுள்ளனர்.

          இதற்கு மேலும் ஒருபடி சென்று மரணம் என்பதும் ஒரு பிணி  என்று கூறுவதுடன் மரணம்  மாற்றம் முறைகளையும,  மரணமிலாப் பெருவாழ்வு   என்பதனையும் விளக்கிச் சொன்னதுடன்  கடைபிடித்து வெற்றியும்  கண்டுள்ளனர்.

குரு குல கல்வி   முறையில் இவையெல்லாம் ஒரு காலத்தில் கற்பிக்கப்பட்டு வந்தன.இந்த மேம்பாடான் கல்விமுறை அழிந்து  தற்கால சந்ததியினருக்கு  கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டமே. தற்கால சந்ததியினர் மெக்காலே கல்வி முறை ஆங்கிலேயர் காலத்தில் குமாஸ்தாக்களை உருவாக்கவே ஏற்படுத்தப்பட்டது.

அந்தக் கல்வி முறை மூலம் உருவாகும் இவர்கள்,சுயம் என்பது போய் தன் காலில் நிற்கத்தெரியாதவர்களாகவும்,அரசாங்க வேலையைஎதிர்பார்த்து ,அதற்கு கையூட்டு கொடுப்பவர்களாகவும். கொடுத்த கையூட்டை, மறுபடி மக்களிடம் அதே கையூட்டின் மூலம் வசூலிக்கும் அக்கிரமக்காரர்களகவும் மாறி கடைசியில் நிம்மதி தொலைத்து,முறையற்ற வழியில் பணம் தேடும்பிசாசுகளாய்வாழ்ந்து,முடிவில் இறந்தே போகுபவர்களாவே உள்ளனர்.

இந்த சரநூல் சாஸ்திரத்தைக் கொண்டு  நோய்களை போக்கிக் கொள்ளவும்,  நமக்கு வேண்டிய காரியங்களை முடித்துக் கொள்ளவும் சித்தர்களின் அருளாசியால்  மச்சமுனிவரின் எட்டாவது பேரனாகிய  என் மூலம்  கற்றுக் கொள்ள இங்கு இறைவன் கருணை புரிந்து இருக்கின்றார்

சனி, 25 நவம்பர், 2017

கால்சியம் சத்தை ஈடுகட்ட சத்தான உணவு வகை


கால்சியம் சத்தை ஈடுகட்ட சத்தான உணவு வகை


கால்சியம் நிறைந்த உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மூட்டுவலி, முதுகுவலி போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள் உருவாகுவதற்கு கால்சிய சத்து குறைபாடு முக்கிய காரணமாக அமைகிறது. அதிலும் பெண்கள் கால்சிய சத்து குறைபாடு பிரச்சினையால் அதிகம் அவதிப்படுகிறார்கள். கால்சியம் சத்தை ஈடுகட்ட சத்தான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியமாகிறது.

* தினமும் பால் பருகி வருவதன் மூலம் கால்சியம் சத்தை தக்கவைத்து கொள்ளலாம். சோயா பால் பருகி வருவதும் நல்லது. அதில் பாலை விட அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 100 மி.லி. சோயா பாலில் 120 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது.

* பாதாமிலும் 80 சதவீதம் அளவுக்கு கால்சியம் நிறைந்துள்ளது. தினமும் 5-6 பாதாம்களை சாப்பிட்டு வருவது கால்சியம் சத்து அதிகரிக்க உதவும். பாலாக தயாரித்தும் ருசிக்கலாம்.

*காலை உணவுடன் ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் பருகி வருவதும் நல்லது. அதில் வைட்டமின் சி மட்டுமின்றி கால்சியமும் அதிக அளவில் நிறைந்திருக் கிறது. இது தினமும் உடலுக்கு தேவையான கால்சியத்தின் அளவை ஈடு செய்யும்.

* அத்தி பழத்தில் கால்சியம் மட்டுமின்றி பெண்களுக்கு தேவையான மற்றொரு ஊட்டச்சத்தான இரும்பு சத்தும் நிரம்பியிருக்கிறது. அத்தி பழங்களை சாலட்டுகளாகவும், உலர வைத்தும், சாப்பிடலாம். செரிமானம் சீராக நடைபெறவும் இது உதவும்.

* பசலைக் கீரை, ப்ராக்கோலி போன்றவற்றில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. அதனை அடிக் கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். மீன் வகைகளையும் சாப்பிட்டு வர வேண்டும்.

* கேழ்வரகில் அரிசியை விட 30 மடங்கு கால்சியம் நிறைந்திருக் கிறது. ராகி மால்ட், கேழ்வரகு தோசை, ரொட்டி போன்றவை தயாரித்து சாப்பிட்டு வரலாம். அவை கால்சியத்தின் அளவை அதிகப் படுத்தும்.

* காராமணியில் கால்சியம் அதிகம் இருக்கிறது. சூப்பாகவோ, சாலட்டுகளில் சேர்த்தோ, வேகவைத்தோ சாப்பிட்டு வரலாம்

சீகைக்காய் தலைக்கு போட்டு குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !!!


சீகைக்காய் தலைக்கு போட்டு குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !!!

கிடைக்கும்குளிப்பதால்சீகைக்காய்தலைக்குநன்மைகள்...போட்டு
பழங்காலத்தில் தலைமுடியைப் பராமரிக்க சீகைக்காய் பயன்படுத்தப்பட்டு வந்தது. அத்தகைய சீகைக்காயில் வைட்டமின் ஏ, சி, டி, ஈ மற்றும் கே போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக நிறைந்துள்ளன. சீகைக்காயில் நிறைந்துள்ள ஓர் பொருள் மயிர் கால்களுக்கு வேண்டிய அனைத்து நுண்ணுயிர் சத்துக்களை வழங்கி, முடியின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, அதன் அடர்த்தியையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.
அதனால் தான் அக்காலத்தில் நம் முன்னோர்களுக்கு தலைமுடி உதிர்வு பிரச்சனையும், வழுக்கைத் தலை பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. சீகைக்காயில் இன்னும் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. அதற்கு அந்த சீகைக்காயைக் கொண்டு தலைமுடியை அலச வேண்டும்.
அதிலும் வாரம் ஒருமுறை சீகைக்காயைக் கொண்டு தலைமுடியை அலசினால், தலையில் ஏற்படும் பல பிரச்சனைகள் விலகும். சரி, இப்போது சீகைக்காயைக் கொண்டு வாரம் ஒருமுறை தலைமுடியை தேய்த்து குளித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
நரைமுடி தடுக்கப்படும்
சீகைக்காய் கொண்டு தலைமுடியை பராமரித்து வந்தால், நரைமுடி தடுக்கப்படும். அதற்கு நெல்லிக்காய், சீகைக்காய் மற்றும் பூந்திக் கொட்டையை ஒன்றாக அரைத்து, தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் நீரில் நன்கு தேய்த்து அலச, முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.
பொடுகுத்தொல்லை
பொடுகுத் தொல்லையால் கஷ்டப்படுபவராயின் சீகைக்காய் கொண்டு தலைமுடியை அலசுங்கள். இதனால் சீகைக்காயில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை ஸ்கால்ப்பில் ஏற்பட்ட நோய்த்தொற்றுக்களை நீக்கி, பொடுகுத் தொல்லையில் இருந்து விடுதலை அளிக்கும்.
தலைமுடி உதிர்வது குறையும்
சீகைக்காயைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வருபவர்களுக்கு தலைமுடி உதிர்வது குறைவதோடு, முடியின் வலிமையும் அதிகரிக்கும். மேலும் சீகைக்காய் தலைமுடி உடைவதைத் தடுக்கும். ஆகவே உங்களுக்கு தலைமுடி உதிரும் பிரச்சனை இருந்தால் சீகைக்காயைக் கொண்டு முடியைப் பராமரியுங்கள்.
முடி வலிமையடையும்
சீகைக்காய் மயிர்கால்களின் வலிமையை அதிகரிக்கும் திறன் கொண்டது. மேலும் இது தலைமுடியின் வளர்ச்சியையும் தூண்டும். எனவே உங்களுக்கு தலைமுடி வளர வேண்டுமானால், ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசாமல், சீகைக்காய் பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள்.
காயங்களை குணப்படுத்தும்
ஸ்கால்ப்பில் சிறு வெட்டுக்காயங்கள் இருப்பின் அதனை சீகைக்காய் குணப்படுத்தும். அதற்கு சீகைக்காய் பொடியை நீர் கலந்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதன் மூலம் காயங்கள் குணமாவதோடு, அரிப்புக்கள் ஏற்படாமலும் தடுக்கும்.

பீர்க்கங்காய் உடலுக்கு மிகவும் நல்லது வாரம் ஒரு முறையாவது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.



பீர்க்கங்காய் உடலுக்கு மிகவும் நல்லது வாரம் ஒரு முறையாவது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது என்று சொன்னால் பலருக்கு நம்பக் கடினமாக இருக்கும்.

நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாட்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் பீர்க்கங்காய் கை கொடுத்து உதவுகிறது.

பீர்க்கங்காய்_முற்றிவிட்டால்_கவலை வேண்டாம். முற்ற முற்ற நல்லது. பீர்க்கை முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டானிக்காகவும், சத்துணவுப் பொருளாகவும் திகழ்கிறது.

நூறு கிராம் பீர்க்கங்காயில் கிடைக்கும் கலோரி 18தான். ஆனால் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டம¢ன்களும் தாது உப்புக்களும் தக்க அளவில் உள்ளன. இதனால்தான் டானிக்காகவும், சத்துணவு நிரம்பிய காய்கறியாகவும் இந்த எளிய காய்கறி விளங்குகிறது.

நீரிழிவு_நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாகவும் இதைச் சேர்த்துக்கொள்ளலாம்.

இதன் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையே.

இதன் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.

சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். மேலும் இதன் இலைகளை அரைத்துப் புண்கள் உள்ள இடங்களில் கட்டினால் போதும். சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது.

இரத்த சோகை நோயாளிகளும், தோல் நோயாளிகளும் இதன் வேரைத் தண்ணீர் விட்டுக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடி கட்டி அருந்தி வர வேண்டும். இதன் மூலம் இரத்த விருத்தி ஏற்படும். பீர்க்கை தோல் நோய்க்கிருமிகளை அழித்துவிடும்.

கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை அடிக்கடி தேடிப்பிடித்து உண்ண வேண்டும்.

நீங்கள் வாங்கும் கருப்பட்டி உண்மையானதுதானா..!


நீங்கள் வாங்கும் கருப்பட்டி உண்மையானதுதானா..!

'சர்க்கரை வியாதி உள்ளவர்களின் எண்ணிக்கை இன்னும் 10 வருடங்களில் 70 மில்லியன்களைத் தொடும்’ என்கிறது, பன்னாட்டு சர்க்கரை நோய்க் கழகம். இதற்குக் காரணம் வெள்ளைச் சர்க்கரையை அளவுக்கு அதிகமாகத் தனது வாழ்நாளில் பயன்படுத்தியதுதான் என்பது பல்வேறு மருத்துவர்களின் குற்றச்சாட்டு. இதற்கு மாற்றாக இன்று பரிந்துரைக்கப்படுவது நாம் முன்னோர்கள் அதிகமாக உபயோகப்படுத்தி, நாளடைவில் மறந்து போன கருப்பட்டியைத்தான்.

இது கருப்புக்கட்டி, கருப்பட்டி, பனங்கருப்பட்டி எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இது பொதுவாகப் பனையிலிருந்தோ அல்லது தென்னையிலிருந்தோ எடுக்கப்படுகிறது. இது ரத்தத்தைச் சுத்திகரித்து, உடலைச் சுறுசுறுப்பாக்குவதோடு, மேனியைப் பளபளக்கவும் ஆக்கும். பெண்கள் பூப்பெய்திய நேரத்தில் ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த இதனைக் கொடுத்தால், இடுப்பு எலும்புகள் மற்றும் கர்ப்பப்பை வலுப்பெறும். காபியில் சர்க்கரைக்குப் பதிலாக, இதைப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும் என்பது பழங்கால வைத்தியம். அதனால்தான் கிராமங்களில் கருப்பட்டிக்காபி குடிக்கும் பழக்கும் புழக்கத்தில் உள்ளது. இதனால்தான் சர்க்கரை நோயாளிகளும் கருப்பட்டிக் காபி குடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதுதவிர மக்களும் விரும்பி வாங்க ஆரம்பித்துள்ளனர். அதன் காரணமாக சந்தையில் போலிகள் அதிகமாக வலம் வரத் துவங்கியுள்ளன. உண்மைக்கும், போலிக்கும் உள்ள வித்தியாசம் என்ன? அதை எப்படி அடையாளம் காண்பது? வாருங்கள் பார்ப்போம்.

பொதுவாகக் கருப்பட்டி என்பது முழுமையான கறுப்பு நிறத்தில் இருக்காது. கறுப்பும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் நடுவில் மெல்லிய வெள்ளை நிற படலம் இருக்கும். இதுதான் நிஜ கருப்பட்டியைக் கண்டுபிடிக்க எளிதான வழிமுறை.

போலியானது உடைத்துப் பார்த்தால் மையப்பகுதி கருமையாக பளபளப்பாக இருக்கும். இதுதவிர, கருப்பட்டி நாளாக நாளாக இறுகும் தன்மையைக் கொண்டிருக்கும். மாறாக இளகினால் அது போலி. அதைச் சுவைக்கும்போது அது கரிப்புத் தன்மை கொண்ட இனிப்புச் சுவை இருந்தால் அது ஒரிஜினல். வெறும் இனிப்புச் சுவை மட்டும் இருந்தால் அது போலி. அதேபோல மேற்புறம் பளபளப்புத் தன்மையுடன் இருந்தால் அது போலி. அதேபோல, அதன் மேற்புறம் வெள்ளையாகக் கையில் ஒட்டினாலும் அது போலிதான்.

உண்மையான கருப்பட்டியைச் சுவைக்கும்போது நாவில் இருந்து கரைய நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். கடிக்கவும் சற்று சிரமமாக இருக்கும்; போலி எளிதாகக் கரைந்து விடும். தென்னையிலோ அல்லது பனையிலோ இருந்து எடுக்கப்படும் நீரில் சுண்ணாம்பு கலந்துதான் இறக்குவர். இதனைக் காய்ச்சி உருண்டை செய்து சில நாட்கள் சென்றால் கருப்பட்டியின் மீது புள்ளிகள் உண்டாகும். போலிகளின் மீது எந்தப் புள்ளிகளும் உண்டாவதில்லை. உங்களுக்குச் சந்தேகமிருந்தால் நேரடியாகத் தயாரிக்கும் இடங்களில் பார்வையிட்டுப் பின்னர் வாங்கலாம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பனங் கருப்பட்டியும், தென்னை அதிகமாக விளையும் ஈரோடு, திருப்பூர், கோவை, கும்பகோணம், நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் தென்னங் கருப்பட்டியும் அதிக பிரபலம். இப்போது தோட்டத்தின் உள்ளேயே வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் கருப்பட்டி செய்ய ஆரம்பித்து விட்டனர். அதனால் போலிகளை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

தற்போது தென்னை சாகுபடிப் பரப்பு குறைவாகவும், பனை மரங்களின் அழிவும் போலிகளின் வரவுக்கு ஒரு முக்கியமான காரணம். இதுதவிர, கருப்பட்டிக்கு சந்தையில் இருக்கும் தேவையும் ஒரு முக்கியமான காரணம். இதனால் இதனை வாங்குபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். கருப்பட்டி காய்ச்சப் பயன்படும் தாச்சு இயந்திரத்தில் 15 லிட்டர் பதநீரை ஊற்றி, ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை கிளறி இறக்கி சிரட்டைகளில் ஊற்றினால் 3 கிலோ மட்டுமே கிடைக்கும். இதனால் குறைவான அளவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு வகையில் இதுவும் போலிகளுக்கு காரணமாக இருக்கலாம். கருப்பட்டிக்கு பதிலாகச் சர்க்கரை உருண்டையை விலை கொடுத்து வாங்காமல் விழிப்புடன் இருங்கள், போலிகளைத் தவிருங்கள்.

நரை முடியை கருமையாக்கும் இயற்கை வழிமுறைகள்!!


நரை முடியை கருமையாக்கும் இயற்கை வழிமுறைகள்!!

நரை முடியை கருமையாக்க வேண்டுமானால், இஞ்சியைத் துருவி, பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை நரை முடியின் மீது தடவி, 10 நிமிடம் ஊற வைத்து குளித்தால், நரைமுடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். குறிப்பாக இந்த செயலை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.

தயிர் மற்றும் ஹென்னாவை சரிசமமாக எடுத்து கலந்து கொண்டு, அதனை நரைமுடியின் மீது தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால், நரை முடி மறையும். வெங்காயத்தை சாறு எடுத்து, அதனை தலையில் தடவி ஊற வைத்து குளித்தால், முடியானது அதன் இயற்கை நிறத்தைப் பெறும். அதிலும் இதனை நான்கு வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். இதற்கு, கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்து, பொடி செய்து, பசும்பாலில் குழைத்து, தலையில் தடவி ஊறியபின் குளித்தால், விரைவில் குணம் தெரியும்.

நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும்.

இளநரை நீங்க சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் குணம் தெரியும்.

சிறிது கருவேப்பிலையை எடுத்து காலையில் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும். மருதாணி செம்பருத்தி கருவேப்பிலை முன்றையும் சம அளவில் எடுத்து மையாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் நரைமுடி கருப்பாகி விடும்.

பிரசவ வலி வரப் போவதற்கான 6 அறிகுறிகள்


பிரசவ வலி வரப் போவதற்கான 6 அறிகுறிகள்

♥பெண்களுக்கு வரும் வலிகளிலேயே பிரசவ வலி மிகவும் கடினமானது. ஏனெனில் எந்த வலியை வேண்டுமானாலும் தாங்க முடியும், ஆனால் பிரசவ வலி வந்தால், அதைத் தாங்கிக் கொள்வது என்பது கடினமானது. ஆகவே கர்ப்பமாக இருப்பவர்கள், பிரசவ வலி வரப் போகிறது என்பதைத் எப்படி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பிரசவ வலி வருகிறதென்றால், அதற்கென்று சில அறிகுறிகள் உள்ளன. அந்த அறிகுறிகளை முன்பே தெரிந்து கொண்டால், அந்த வலி ஆரம்பிப்பதற்கு முன்பே மருத்துவமனைக்கு சென்று விடலாம். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்ப்போமா!

♥பிரசவ வலி வருவதற்கான அறிகுறிகளில் முக்கியமானது முதுகு வலி தான். எப்போது முதுகு வலி சாதாரணமாக வரும் வலியைவிட, அளவுக்கு அதிகமாக வருகிறதோ, அதை வைத்து பிரசவ வலி வரப்போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

♥கர்ப்பமாக இருக்கும் போது குழந்தையின் வளர்ச்சியினால் கருப்பை விரிவடையும். அதுவே குழந்தை வெளியே வர ஆரம்பிக்கிறதென்றால், அதாவது பிரசவ வலி வரப்போகிறதென்றால், அந்த கருப்பை சுருங்குவதற்கு ஆரம்பமாகும். அவ்வாறு கருப்பை சுருங்கும் போது எந்த ஒரு வலியும் இருக்காது. ஆனால் நன்கு கூர்ந்து கவனித்தால், கருப்பை சுருங்குவதை அறியலாம். ஆகவே அதை வைத்து நன்கு தெரிந்து கொள்ளலாம்.

♥கருப்பை வாய்க்குழாயிலிருந்து அதிகமான அளவில் சளி போன்ற திரவம் வெளியேற ஆரம்பிக்கும். அவ்வாறு வருவதுப் போல் தெரிந்தால், அதை வைத்தும் அறிந்து கொள்ள முடியும்.

♥சில நேரங்களில் கருப்பையிலிருந்து இரத்தம் வடிய ஆரம்பிக்கும். அவ்வாறு நிகழ்ந்தால், உடனே மருந்துவரை அணுக வேண்டும்.

♥ஏழாவது மாதத்திற்கு மேல் அடிக்கடி சிறுநீர் அவசரமாக வருவது போன்று இருக்கும். ஆனால் அதுவே பிரசவம் நடைபெறப் போகிறதென்றால், அப்போது சற்று வித்தியாசமாக உணர்வீர்கள். சொல்லப்போனால், வயிற்றில் ஒன்றுமே இருக்காது, இருப்பினும் அவசரம் என்பது போல் இருக்கும். ஏனெனில் அது வயிற்றில் இருக்கும் குழந்தை வெளியே வருவதற்கான ஒரு அறிகுறி.

♥ஏழாம் மாதத்திலிருந்து வயிற்றில் உள்ள குழந்தையின் அசைவை நன்கு உணர முடியும். ஆனால், பிரசவ வலி வருவதற்கு முன், குழந்தையின் அசைவு குறைந்துவிடும். ஏனெனில் அப்போது குழந்தை வெளியே வருவதற்கு ஒரு சரியான ஒரு நிலையை அமைந்து இருப்பதே ஆகும்.

♥மேற்கூறியவையே பிரசவ வலி வரப்போவதற்கான அறிகுறி. ஆகவே இந்த மாதிரியான அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், உடனே மருத்துவமனைக்கு செல்வது நல்லது. மேலும் வேறு என்ன அறிகுறிகள் இருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நரை முடி தவிர்க்க இயற்கை ஹேர் டை 5 HealthTips


நரை முடி தவிர்க்க இயற்கை ஹேர் டை 5 HealthTips

       ஒருவரை இளமையாகக் காட்டுவதில் முக்கியப் பங்கு வகிப்பது எது? நிச்சயமாக சருமமும் தலைமுடியும்தான். முடியில், கருமையான முடிகளே அழகு. அது, நரை வந்து வெளுத்துப் போகும்போது கருமை நிறம் வேண்டும் எனப் பலரும் நாடுவது டை’ எனப்படும் தலைமுடிச் சாயத்தை! உலகம் முழுக்க விதவிதமான சாயங்கள் சந்தையில் கிடைத்தாலும், கறுப்பு நிற டைதான் நம்மவர்களுக்கு ஃபேவரைட்.

இயற்கை ஹேர் டை

"இன்றைக்கு மார்க்கெட்டில் கிடைக்கும் தலைமுடிச் சாயங்களில் பெரும்பாலானவை பல்வேறு வேதிப்பொருட்கள் நிறைந்தவை. இவற்றைப் பயன்படுத்துவதால், பக்கவிளைவுகளையும் இலவசமாகப் பெற்றுக்கொள்கிறோம். ஆரோக்கியமான உணவுகளை உண்டும், இயற்கை முறையில் தயாரிக்கப்படும் டைகளைப் பயன்படுத்தியும் எப்போதும் கருமை நிறக் கேசத்தைப் பெறலாம்; இளமைப் பொலிவான தோற்றமும் பெறலாம்’’ என்கிற சித்த மருத்துவர் ரமணி, அதற்கான வழிமுறைகளை இங்கே விளக்குகிறார்...

கேசத்தின் வலிமை, அதன் உள் அடுக்குச் செல்களைப் பொறுத்துதான் அமைகிறது. மெல்லிய உள் அடுக்குச் செல்களைக்கொண்டவர்களுக்கு நீண்ட நேரான கூந்தலும், அடர்ந்த உள் அடுக்கு செல்களைக்கொண்டவர்களுக்கு கூந்தல் சுருண்டும் இருக்கும். இந்த இரு தரப்பினருக்குமே 40 வயதைத் தாண்டியதும் ஏற்படும் முக்கியமானப் பிரச்னை நரை முடி.

நரை முடி ஏன்?
‘மெலனின்’ (Melanin) எனும் நிறமிதான் நம் தோலின் நிறத்தை நிர்ணயம் செய்கிறது. இதைப் போன்றே யூமெலனின் (Eumelanin), பயோ மெலனின் (Bio-melanin) ஆகிய நிறமிகள் நம்முடைய முடியின் கருமை நிறத்துக்குக் காரணமாகின்றன. இந்த நிறமிகளின் உற்பத்திக் குறைவதால், கருமையான முடிகள் நரைமுடிகளாக மாறுகின்றன.

முதுமையின் காரணமாகப் பொதுவாக, 40 முதல் 50 வயதுகளில் நரை முடி தோன்றும். ஆனால், இன்றையச் சூழலில் இளம் வயதிலேயே பலருக்கும் நரை முடிகள் எட்டிப் பார்க்கின்றன.

மரபியல் காரணங்கள், புகைபிடித்தல், மது அருந்துதல், துரித உணவு உண்பது, புரதச்சத்துக் குறைபாடு  மற்றும் பயோட்டின்’ (Biotin) எனும் ஊட்டச்சத்து குறைதல், வேதிப்பொருட்களை அதிகமாகக்கொண்ட ஷாம்பூக்களைப் பயன்படுத்துதல் போன்றவை இளம் வயதிலேயே நரை முடியை ஏற்படுத்திவிடுகின்றன.

நரை முடியைத் தடுப்பதற்கான உணவுகள்...
* பாலில் புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம், கால்சியம், பயோட்டின் (Biotin), வைட்டமின் டி நிறைந்திருக்கின்றன. எனவே, தினமும் இருவேளை பாலை தவறாமல் குடிக்கலாம்.

* ஒரு நாளைக்கு இரு முட்டைகளைச் சாப்பிடுவதன் மூலம் பயோட்டின் (Biotin) மற்றும் இரும்புச்சத்து போன்ற கேச வளர்ச்சியைத் தூண்டும் சத்துக்களை எளிதில் பெறலாம்.

* வஞ்சரம் மீனில் உள்ள ஒமேகா-3 (Omega-3 Fatty Acid) முடியின் கருமை நிறத்தைப் பராமரிக்க உதவும்.

* உயிர்ச் சத்துக்கள் நிரம்பிய பசலைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை போன்ற கீரை வகைகளும் கேச பராமரிப்புக்குச் சிறந்தவை.

சில இயற்கை டைகளின் செய்முறைகள்...

இயற்கை #டை 1:

தேவையானவை:
தேயிலைப் பொடி, கொட்டைப் பாக்குப் பொடி, கறுப்பு வால்நட் பொடி - தலா 3 டீஸ்பூன்.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தேவையான மூன்று பொருட்களையும் கொட்டி, வெந்நீர் சேர்த்துப் பசைபோலத் தயாரிக்கவும். இதைக் கேசத்தில் தடவி, 30 நிமிடங்கள் ஊறவைத்து அலசவும். பிறகு கேசத்தை நன்றாக உலர்த்தி, இரவில் சிறிது ஆமணக்கு எண்ணெயைப் பூசிவரவும். விரைவிலேயே நரை முடியிலிருந்து விடுபட்டு கருமையான முடிகளைப் பெறலாம். இந்தச் செய்முறையில் வெந்நீருக்குப் பதிலாக, பொடிகளை நன்றாகக் காய்ச்சி வடிகட்டி, தேநீர்போலவும் தயாரித்து கேசத்தில் பூசலாம்.

இயற்கை ஹேர் டை

இயற்கை டை 2:

தேவையானவை:
மருதாணி இலை – கைப்பிடி அளவு
நெல்லிக்காய் - 2
காபிக் கொட்டை - சிறிதளவு  
கொட்டைப் பாக்குப் பொடி - 3 டீஸ்பூன்.

செய்முறை:
அனைத்தையும் சேர்த்து, நன்றாக அரைத்து இரவு முழுக்க ஒரு பாத்திரத்தில் ஊறவிடவும். காலையில் இந்த விழுதைக் கேசத்தில் தடவி 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து, இளஞ்சூடான நீரில் கூந்தலை அலசவும். இரவில் சிறிது ஆமணக்கு எண்ணெயைத் தலைமுடியில் பூசி வரவும்.

#இயற்கை டை 3:

தேவையானவை:
வால்நட் பொடி  - 3 டீஸ்பூன்
அவுரி இலை - சிறிதளவு
சாமந்திப் பூ - சிறிதளவு
ரோஸ் மேரி இலைகள் (உலர்ந்தது) - சிறிதளவு. இவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

செய்முறை:
அனைத்தையும் நன்றாக உலர்த்திப் பொடி செய்து, தேநீர் போன்று காய்ச்சி வடிகட்டவும். இந்த நீரை கேசத்தில் தடவி, வெயிலில் நன்றாக உலர்த்தவும். பிறகு கேசத்தை அலசிவிடவும். கருமை நிறம் அப்படியே நீடித்திருக்க, 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த நீரைத் தலைக்குப் பயன்படுத்தலாம்.

இயற்கை டை 4:

தேவையானவை:
ஆற்றுத்தும்மட்டி பழச் சதை - 1 கப்
நெல்லிப் பழச் சதை - 1 கப்
கரிசாலை இலை - 1 கப்
தேங்காய் எண்ணெய் - 500 மி.லி.

செய்முறை:
பழச் சதைகளையும், கரிசாலை இலை விழுதையும் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்றாகக் க

வியாழன், 23 நவம்பர், 2017

குழந்தைகள் முன் செய்யக்கூடாதது எது?



குழந்தைகள் முன் செய்யக்கூடாதது எது?

குழந்தைகளின் முன்னிலையில் பெரியவர்கள் நடந்து கொள்ளும் முறை ஒவ்வொன்றும், அவர்களின் எதிர்கால குணாதிசயங்களில் மாற்றங்களை கொண்டு வரும்.

* கணவன் மனைவி சண்டை, சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக்கூடாது.
அவர்கள் முன்னிலையில் சண்டையிட்டுக் கொள்வதை, கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

* குழந்தைகள் முன்னிலையில் பிறரை பற்றி, தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள்.
உங்கள் கணவரிடம் நீங்கள் கூறுவதை நினைவில் வைத்துக் கொள்ளும் குழந்தை, அவர் வரும் போது, அது குறித்து வாயை திறக்கலாம்.

*தீய சொற்கள் பேசுவதை தவிருங்கள்.
அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

* சிறு குழந்தைகளை மிரட்டும் போது, கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன் போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

*சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர்.
எனவே, குழந்தைகளிடம், அப்பாகிட்டே சொல்லிடாதே என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே அப்பாக்கிட்ட சொல்லிடுவேன் என்று மிரட்டும்.

*குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது.
உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை, உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

குழந்தைக்கு எதற்கெடுத்தாலும், காசு கொடுத்துப் பழக்கக் கூடாது.
அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப் படுத்துவது கூடவே கூடாது. கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன் என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்ப்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

*குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும்.
நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

*உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள்.
அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

*படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது,
பாசிடிவ் அப்ரோச் இருக்க வேண்டும். நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம் என்று கூறி ஊக்கப்படுத்த வேண்டும்.

*நீ படிக்கிற படிப்புக்கு, பியூன் வேலை கூட கிடைக்காது.
இந்த மார்க் வாங்கினா மாடு மேய்க்கதான போக முடியும் என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

*குழந்தை முன்னிலையில் கணவரோ, பிற நபர்களோ
*சிகரெட் பிடிப்பது,
*மது அருந்துவது,
*புகையிலை பயன் படுத்துவது
போன்ற செயல்களை அனுமதிக்காதீர்கள்.

அழகி 2017-ஆக பட்டம் வென்றிருக்கும் மனுஷி சில்லாரி போல் ஆரோக்கியமான உடல் அமைப்பைப் பெற என்ன செய்வது?



அழகி 2017-ஆக பட்டம் வென்றிருக்கும் மனுஷி சில்லாரி  போல் ஆரோக்கியமான உடல் அமைப்பைப் பெற என்ன செய்வது? 

அழகி 2017-ஆக பட்டம் வென்றிருக்கும் இந்தியாவைச் சேர்ந்த  மனுஷி சில்லாரின் உடல் அமைப்பு நம்மில் பலரை வியப்பும் அதே சமயம் பொறாமையும் அடைய செய்திருக்கும். இவர்களைப் போன்ற அழகான மற்றும் ஆரோக்கியமான உடல் அமைப்பைப் பெற என்ன செய்வது? நம்முடைய உடல் எடையை எப்படிக் குறைப்பது? அப்படி என்னதான் இவங்களாம் சாப்பிடுவார்கள்? என்று யோசித்ததுண்டா. இதோ அவருடைய ஃபிட்னஸ் ரகசியத்தை அவரே கூறியிருக்கிறார்.

1. காலை உணவைத் தவிர்க்க கூடாது: காலை உணவைத் தட்டிக்கழிப்பது உடல் அமைப்பிற்கு மட்டும் இல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் ஆபத்தானது. அது நாளின் முடிவில் பசி வேதனையை அதிகரித்து நம்மை அதிகம் சாப்பிட தூண்டும்.


2. சிறிய தட்டை உபயோகியுங்கள்: சிறிய தட்டை உபயோகிப்பது இயற்கையாகவே நம்மைக் குறைவாக சாப்பிடத் தூண்டும். இதனால் அளவுக்கு அதிகமாகச சாப்பிட்டுவிட்டு பின்னர் உடல் எடை அதிகரித்துவிட்டதே எனக் கவலை படுவதில் பயனில்லை.

3. சர்க்கரையைத் தவிருங்கள்: பழங்களை ஜூஸாக்கி குடிக்கும் போதும் அதில் சர்க்கரை சேர்க்கக் கூடாது. அதிலும் முக்கியமாகச் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை முற்றிலும் தவிர்க்கவும்.


உணவு அட்டவணை:

அதிகாலை: தூங்கி எழுந்தவுடன் இரண்டு அல்லது மூன்று கிளாஸ் தண்ணீர் (சில சமயம் எலுமிச்சை சாறு சிறிது பிழிந்து)காலை உணவு:புளிப்பேறாத தயிருடன் ஓட்ஸ் அல்லது கோதுமை ஃப்லேக்ஸ் மற்றும் பழங்கள்; இரண்டு அல்லது மூன்று முட்டை வெள்ளை மட்டும் கரு இல்லாமல் மற்றும் அவகேடோ, காரேட் அல்லது சர்க்கரை வள்ளிக் கிழங்கு.பிரன்ச்: இளநீர் மற்றும் பழங்கள்.மதிய உணவு: அரிசி, சப்பாத்தி, காய்கறி அல்லது கோழிக் கறி மற்றும் பருப்பு.மாலை: வாழைப்பழம் அல்லது அத்தி பழத்தை கொட்டையுடன் அரைத்து ஸ்மூத்தி (பழச்சாறு). உப்பு சேர்க்காத கொட்டைகள் (முந்திரி, பிஸ்தா, பாதாம், வால்நட்)இரவு உணவு: வேக வைத்த காய்கறிகள் (ப்ரோக்கோலி, கேரட், பீன்ஸ், காளான்) மீன் அல்லது கோழிக் கறி.

இவற்றை எல்லாம் சாப்பிடும் போது அதிக கொழுப்பு சத்து நிறைந்த எந்த ஒரு விஷயத்தையும் ருசிக்காகவும் சேர்க்கக் கூடாது. இதை அப்படியே இல்லாவிட்டாலும் ஓரளவிற்குப் பின்பற்றினாலும் உலக அழகியின் உடல் அளவான 34-26-34 அளவைப் பெற்றுவிடலாம். வாழ்த்துக்கள்!

மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை போக்குவது எப்படி!?



மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை போக்குவது எப்படி!?

*நமது மனதில் நேர்மறையான சிந்தனைகள் காணப்பட்டால், நமக்கு நல்லதே நடக்கும்.*

*ஆனால் சில சமயங்களில் தோன்றும் எதிர்மறையான சிந்தனைகளால் நமது மனம் குழப்பத்திற்கு உள்ளாவதோடு அது நமது வாழ்க்கையில் நிம்மதி இல்லாமலும் செய்துவிடுகின்றது.*

*இவ்வாறான எதிர்மறையான சிந்தனைகளில் இருந்து தப்பித்துக்கொள்வது எப்படி என்பது பற்றி பார்க்கலாம்.*

*அமைதியான ஓர் இடத்தில் உங்களது கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் அமருங்கள். இதற்காக எந்தவொரு இடையூறும் இல்லாத இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.*

*மனதை ஒருமுகப்படுத்தி உங்களது நினைவுகளை எல்லாம் உங்கள் மூச்சின் மீது மட்டும் வையுங்கள்.*

*வேறு எந்த விடயங்களைப் பற்றியும் யோசிக்காமல் இருத்தல் வேண்டும். அவ்வாறு யோசிப்பது உங்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும்.*

*உங்களது சிந்தனைகள் உங்களுக்கு எந்த விதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள்.*

*நீங்கள் நேரில் பார்ப்பவற்றை, கேட்பவற்றை, நுகர்பவற்றை மற்றும் சுவைப்பவை அனைத்தையும் இரசியுங்கள். உங்களது மனதில் இருக்கும் எந்த ஒரு செயல் உங்களது எதிர்மறை எண்ணங்களை நீக்கும் என்பது குறித்து சிந்தியுங்கள்.*

*அடுத்ததாக நீங்கள் உங்களது மனதில் இருந்து எந்த எண்ணத்தை நீக்க வேண்டும் என்பது குறித்து சிந்தியுங்கள்.*

*அந்த எதிர்மறை எண்ணத்தை போக்கும் ஒரு நேர்மறையான, மகிழ்ச்சியான விடயத்தைப் பற்றி நினத்து, உங்களது எதிர்மறை எண்ணங்களை வெல்லுங்கள்.*

*அதன் பின் மெதுவாக கண்களை திறந்து, ஆழமாக சுவாசியுங்கள். மகிழ்ச்சியான ஒரு நடையுடன் மனதிற்கு அமைதி தரும் இடங்களுக்கு சென்று வாருங்கள்.*


புதன், 22 நவம்பர், 2017

சிறுநீரில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை விட்டால் என்ன நடக்கும் தெரியுமா..?





சிறுநீரில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை விட்டால் என்ன நடக்கும் தெரியுமா..?

நம்முடைய சித்தர்கள் எந்த ஒரு டாக்டரின் துணை இன்றி அவர்களுடைய சிறுநீரை அவர்களாகவே சோதனை செய்து, என்ன வியாதி இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடுவார்கள்.

சித்தர்கள் சிறுநீரைப் பரிசோதித்துப் பார்க்கும் முறை அவ்வளவு கஷ்டமானது கிடையாது.

அந்த முறையைப் பயன்படுத்தி நாமே நம்முடைய சிறுநீரைப் சோதனை செய்து தெரிந்து கொள்ள முடியும்.

நம்முடைய உடலில் உண்டாகும் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் தான் காரணம் என்று ஆரம்பத்திலே நம் முன்னோர்கள் கூறி சென்றுள்ளனர்

அதில் எந்த ஒன்று நம்முடைய உடலில் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டாலே போதும் அதை நாம் குணப்படுத்த முடியும்.

இதைத்தான் நம்முடைய சித்தர்கள் சிறுநீர் பரிசோதனை மூலம் கண்டுபிடித்தனர். இந்த மூன்றும் சிறுநீரில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை வைத்து நோயை குணபடுத்தி உள்ளனர்

எவ்வாறு செய்யலாம்..?

காலையில் எழுந்ததும் சிறுநீரை ஒரு தெளிவான கண்ணாடி டம்ளரில் எடுத்து அதில் நான்கு சொட்டு நல்லெண்ணெயை அதில் விட்டு சிறுது நேரம் கழித்து பாருங்கள். அறிவியல் ரீதியாக என்ன நடக்கிறது..?

அந்த எண்ணெய்த்துளி சிறுநீரின் மேல் கயிறு போல நெளிந்து காணப்பட்டால் உடலில் வாதம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என்று பொருள்..அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக அதை குணபடுத்த பார்க்க வேண்டும்..

அதுவே மோதிரம் போல வட்ட வடிவில் அல்லது கோள வடிவில் இருந்தால் உங்களுக்கு பித்த நோய் இருப்பதாக பொருள்..

சிறுநீரின் மேல் எண்ணெய் முத்துப்போல் அங்கொன்று இங்கொன்றாக நின்றுகொண்டிருந்தால் கபம் அதிகமாக இருக்கிறதென்று பொருள்.

அதேபோல் எண்ணெய்த்துளி மிக வேகமாக சிறுநீருக்குள் பரவினால் நோய் விரைவில் குணமடையும் என்பதாக பொருள்

எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாத் தாமதமாகும்.உடனடியாக அதை குறைக்க நடவடிக்கை எடுப்பது நல்லது

அதுவே எண்ணெய்த்துளி சிதறினாலோ சிறுநீருக்குள் அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த முடியாது.மிகவும் சிரமமான நிலை என்று அர்த்தம்..

பெண்கள் அவசியம் செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகள்



பெண்கள் அவசியம் செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகள்

குடும்பத்தில் உள்ளவர்களுக்காக வீட்டிலும், வேலையிடத்தில் உள்ளவர்களுக்காக அலுவலகத்திலும் உழைத்துத் தியாகி பட்டம் சுமக்கும் பெண்களை எல்லா வீடுகளிலும் பார்க்கலாம். பிரச்சனை வந்தால் மட்டுமே மருத்துவரைப் பார்க்கும் பெண்களுக்கு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் செய்து கொள்ள வேண்டிய அவசிய பரிசோதனைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

* ஹீமோகிராம் ரத்த சோகை இல்லாத பெண்களே இல்லை எனலாம். அதீத சோர்வு, எப்போதும் தூக்கம், முகம் உப்பி, வெளிறிக் காணப்படுதல், கண்கள், நாக்கு வெளிறி காணப்படுவதெல்லாம் ரத்தசோகைக்கான அறிகுறிகளாகும். தவிர முடி உதிர்தல், மூச்சு வாங்குதல், குளிர்ச்சியான சூழலைத் தாங்க முடியாமை, மாதவிலக்குப் பிரச்சனை போன்றவை எல்லாம் கூடுதல் அறிகுறிகள். பெண்களுக்கு மாதவிலக்கு தவிர்க்க முடியாத நிகழ்வு என்பதால், அதுவும் அவர்களது ரத்த சோகைக்கான முக்கிய காரணமாகிறது.
6 மாதங்களுக்கொரு முறை முழுமையான ரத்தப் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம், ஹீமோகுளோபின் அளவு, ரத்தத்தில் உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை செல்கள், ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையைத் தெரிந்துகொண்டு, மேற்சொன்ன பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சரி செய்ய முடியும்.

 *பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 11 முதல் 12 கிராம் இருக்க வேண்டும். இது குறைகிற போது கவனம் தேவை.ஹீமோகுளோபின் அளவு வெகுவாகக் குறையும்போது அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
* தலை முதல் கால் வரை பாரபட்சமின்றி, உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக்கூடிய நீரிழிவு, யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குடும்பப் பின்னணியில் நீரிழிவு உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் கொஞ்சம் அதிகம். இதற்கான ரத்தப் பரிசோதனையை வெறும் வயிற்றிலும், பிறகு சாப்பிட்ட 2 மணி நேரம் கழித்தும் செய்ய வேண்டும். வெறும் வயிற்றில் 100 மி.கிராமுக்குக் குறைவாகவும், சாப்பிட்ட பிறகு 140 மி.கி-க்கு குறைவாகவும் இருக்க வேண்டும்.
தாகம், புண்கள் ஆறாதது, சருமத்தில் அரிப்பு மற்றும் மாற்றம், பார்வைப் பிரச்சனை என திடீரென உங்கள் உடலில் எந்த மாற்றம் தெரிந்தாலும் சர்க்கரை நோய்க்கான சோதனையை செய்து பார்ப்பது நல்லது.
* கொலஸ்ட்ராலுக்கும் உங்கள் உடல் தோற்றத்துக்கும் சம்பந்தமில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். ஒல்லியான தோற்றம் கொண்டவர்களுக்கும் உள்ளுக்குள் கொழுப்பின் அளவு அதிகமாக இருக்கலாம். கொலஸ்ட்ரால் என்பது எல்லாவிதமான பயங்கர நோய்களையும் வரவேற்கும் ஆபத்தின் வாயில் என்பதால் அலட்சியம் வேண்டாம்.
* தைராய்டு பாதிப்பின் தீவிரமும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தலை முதல் கால் வரை ஒட்டுமொத்த உடலையும் கட்டுப்படுத்துகிற ஒருவித ஹார்மோன். இது சரியில்லாவிட்டால், மூளை வளர்ச்சி பாதிப்பது, ரத்த செல்கள் முதிர்ச்சியடையாமை, மாதவிலக்கு, தலைமுடி உதிர்வது என ஏகப்பட்ட பாதிப்புகள் வரலாம்.
தைராய்டு சுரப்பு கூடினாலும் பிரச்சனை, குறைந்தாலும் பிரச்சனை. எளிமையான ரத்தப் பரிசோதனை மூலம் இதைத் தெரிந்து கொள்ளலாம். 50 வயதுக்கு மேலானவர்கள், குடும்பப் பின்னணியில் தைராய்டு பாதிப்புள்ளவர்கள், டைப் 1 வகை நீரிழிவு உள்ளவர்கள், காரணமின்றி உடல் எடை கூடியவர்கள் அல்லது குறைந்தவர்கள் போன்றோருக்கு இந்த சோதனை மிக மிக முக்கியம்.
* இன்று யாருக்கு வேண்டுமானாலும் எந்தக் காரணங்களும் இல்லாமல் புற்றுநோய் தாக்குவதைப் பார்க்கிறோம். சர்க்கரை நோய் மாதிரிதான் இதுவும். போன வருடம் செய்த சோதனையில் நார்மல் எனக் காட்டியிருக்கும். இந்த வருடம் வேறு மாதிரி காட்டலாம். எனவே,பெண்கள் மார்பகங்கள் மற்றும் கர்ப்பவாய்க்கான புற்றுநோய் பரிசோதனைகளை வருடம் தவறாமல் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

குடும்பப் பின்னணியில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்தால், அந்த வழியில் வருபவர்களுக்கும் அது பாதிக்கும் அபாயங்கள் அதிகம். சமீபகாலமாக, அப்படி குடும்பப் பின்னணி இல்லாதவர்களையும் மார்பகப் புற்றுநோய் அதிகம் தாக்குவதைப் பரிசோதனை செய்து, கட்டிகளோ, வீக்கமோ, கசிவோ இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். தவிர வருடம் ஒரு முறை மோமோகிராம் சோதனையும் அவசியம். எக்ஸ் ரே மாதிரியான எளிய சிகிச்சைதான் அது. ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்தால், மார்பகங்களை நீக்கும் அளவுக்குப் போக வேண்டிஇருக்காது.