வியாழன், 24 ஜனவரி, 2019

பல வியாதிகளை குணப்படுத்தும் சக்தி வாய்ந்த செவ்வாழைப்பழம்

பல வியாதிகளை குணப்படுத்தும் சக்தி வாய்ந்த செவ்வாழைப்பழம்


நாம் விரும்பி சாப்பிடும் வகையில் முதல் வரிசையில் இருப்பது வாழைப்பழம் ஒன்று தான்.
வாழைப்பழம் என்றால் என்னவென்று அறியாத மேல்நாட்டினர் கூட ,இப்போது வாழைப்பழத்தை விஷயத்தை அறிந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். 
எல்லா வகையான வாழைப்பழங்களுக்கு மனிதனுக்கு ஏற்படக்கூடிய பல வியாதிகளை குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.
செவ்வாழை பழத்தில் உள்ள சத்துக்கள்:
வைட்டமின் ஏ
வைட்டமின் பி, பி2, சி சத்துகள் நிறைய இருக்கின்றன.
சுண்ணாம்புச் சத்தும் நிறைய இருக்கிறது.
நரம்பு தளர்ச்சி குணமாக :
உடல் கட்டுக்கோப்பாக இருப்பதற்கு எலும்பும் நரம்பும் தான் காரணம். வளர்ச்சி அடைந்து எலும்பு தளராது. ஆனால் நரம்பு தளர்ச்சி ஏற்படும். பலம் குறையும்.
இதன் காரணமாக உடல் நலியும், கை கால்களில் சக்தியற்ற நிலை தோன்றும்.
சிலருக்கு நடுக்கம் ஏற்படும். சோம்பல் ஏற்படும்.
 இப்படிப்பட்ட கோளாறுகள் இருப்பவர்கள் தினசரி ஒரு செவ்வாழை பழம் வீதம் தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் போதும், உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். நரம்புகளுக்கு நல்ல பலம் ஏறும்.
உடல் புதிய சுறுசுறுப்பும், மனதில் உற்சாகமும் உண்டாகும். ஒரு புதிய மனிதனாகவே மாறிவிட முடியும் 
பல் சம்பந்தமான வியாதிகளுக்கு:
உடலில் தேவையான அளவு வைட்டமின் ஏ உயிர்சத்து உடலுக்கு கிடைக்கவில்லை  என்றான் உடலில் பல வியாதிகள் தோன்றும். 
அவர்கள் முதலாவதாக பல்வலி, பல் அசைவு, பல் சொத்தை போன்ற பல கோளாறுகள் ஏற்படும். 
வலி ஏற்பட்டால், பல் சொத்தை இருந்தால் உடனே அந்தப் பல்லைப் பிடுங்கிவிடுவார்கள். இது தவறு. 
ஒரு பல்லைப் பிடுங்கினால் அடுத்துள்ள இரண்டு பற்களுக்கும் பக்க பலம் குறையும். பிறகு அவைகளும் அசைய தொடங்கும்.
பல் சம்பந்தமான கோளாறு ஏற்பட்டால் உடனே உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ உயிர்சத்து அளிக்கவேண்டும். 
தொடர்ந்து 21 தினங்களுக்கு இரவு ஆகாரத்திற்குப் பின் ஒரு செவ்வாழை பழம் சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் நிவர்த்தியாகும்.
தோற்றும் எந்த வகையான நோய்க்கும்.பயப்பட வேண்டியதில்லை: 
நான்கு தினங்களுக்கு ஒரு முறையாவது ஒரு செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் போதுமானது. எந்தவிதமான தொற்று நோய்க்கு ஆளாகாமல் சுகமாக வாழலாம். விஷக் கிருமிகளைக் கொல்லக்கூடிய ஒரு தனிப்பட்ட சக்தி செவ்வாழைபழத்திற்கு உண்டு.
கண்பார்வை தெளிவடைய:
 வயதானவர்களுக்குத்தான் கண் பார்வை குறையும் என்பதில்லை. வாலிப வயதினருக்கும், சிறுவர்களும்கூட, கண்பார்வை மங்கும். இதற்கு பெரும்பாலான காரணம் வைட்டமின் உயிர்ச்சத்து இல்லாத குறையை தான் என்றும் சொல்லலாம்.
கண் பார்வை மங்க ஆரம்பித்த உடனேயே உடலில் வைட்டமின் ஏ உயிர்சத்து குறைந்துவிட்டது என்பதை அறிந்து, அதற்கேற்ற முறையில் உடலுக்கு வைட்டமின் ஏ சத்தை அளித்தாள், கண் பார்வை படிப்படியாக தெளிவடையும். இயற்கையாக பார்வை பெற முடியும். இதற்கு செவ்வாழைப்பழம் நன்கு பயன்படக் கூடியதாக இருக்கிறது. 
தினசரி செவ்வாழை பழத்தை பாதியளவு முதல் முழு அளவு வரை தொடர்ந்து 21 தினங்களுக்குக் கொடுத்து வந்தாலே போதும் கண் பார்வை படிப்படியாக தெளிவடையும். 
குழந்தை பாக்கியம் பெற:
ஒருசில குடும்பத்தில் திருமணமான தம்பதிகளுக்கு பல ஆண்டுகள் வரை கர்ப்பம் தரிப்பது இல்லை.
ஒரு சிலர் கர்ப்பம் தரிக்க மருந்துகளையும், மாத்திரைகளையும் விழுங்கி கடைசியில் பலன் கிடைக்காமல் ஏங்குவார்கள். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தும் தம்பதிகளுக்கு, செவ்வாழை வாழைப்பழம் ஒரு வரப்பிரசாதம் போல இருந்து வருகிறது. தினசரி இரவு ஆகாரத்திற்கு பின் ஆண் பெண் இருவரும் தலைக்கு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு தேக்கரண்டியளவு சுத்தமான தேனையும் சாப்பிட வேண்டும். இந்த வகையில் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு பிறகு உடலுறவு கொண்டால் அந்த தம்பதிகளுக்கு கண்டிப்பாக கர்ப்பம் தரிக்கும் கருத்தரிப்பதற்கு தேவையான ஒரு தனிப்பட்ட சக்தி இந்த செவ்வாழைபழத்திற்கு உண்டு.
 பல நன்மைகளை தரும் இந்த செவ்வாழைப்பழத்தை நாம் தினசரி ஒரு வாழைப்பழம் வீதம் நாம் எடுத்துக் கொண்டு வந்தால் நம் எந்த நோய்க்கும் ஆளாகாமல் ஆரோக்கியமாக வாழலாம்

திங்கள், 21 ஜனவரி, 2019

கிறிஸ்துமஸ் தாத்தா வந்த வரலாறு !


  கிறிஸ்துமஸ்  தாத்தா  வந்த  வரலாறு !

*கிறிஸ்துமஸ் தாத்தா என அழைக்கப்படும் "சாண்டா கிளாஸ்' (SANTA CLAUS) கற்பனையில் உருவாக்கப்பட்ட ஒரு பாத்திரம்!*

கிறிஸ்துமஸ் தாத்தா என்றவுடன் எல்லோருக்கும் பருத்த உடல், பனிக்குல்லாய், சிவந்த கன்னக் கதும்புகள், குறும்பு கொப்பளிக்கும் கண்கள், சிகப்புக் கம்பளி ஆடை, தோளிலே ஒரு மூட்டை இவைதான் அனைவருக்கும் ஞாபகம் வரும்.

ஆனால் உண்மையில் நிகோலஸ் என்ற புனிதப் பாதிரியார் துருக்கியில் பிஷப்பாக இருந்து பல ஏழைகளின் துயர் துடைத்து வந்தார். இவரின் நினைவாகத்தான் கிறிஸ்துமஸ் தாத்தா பாத்திரம் உருவாயிற்று! "டாக்டர் க்ளெமென்ஸி மூர்' என்பவரே இப்பாத்திரத்தை உருவாக்கினார்.

இன்று கம்யூனிஸ்ட் நாடுகள் கூட சாண்டா கிளாஸ் தாத்தாவை அங்கீகரித்து இருக்கின்றன. முதலில் டச்சு மக்கள் கிறிஸ்துமஸ் தாத்தாவை "சின்டி கிளாஸ்' என்றனர். அதில் இருந்து சாண்டா கிளாஸ் என்ற பெயர் வந்தது.

உண்மையில் கிறிஸ்துமஸ் தாத்தாவின் பெயர் செயின்ட் நிகோலஸ்!

அன்பு, நல்லுறவு, தாராள மனம், குழந்தைகளிடம் விருப்பம் ஆகிய நற்குணங்களுக்கு உரியவர் இந்த செயின்ட் நிக்கோலஸ். அவர் தனக்கு உரிய விருந்து நாளன்று (டிசம்பர் - 6 ஆம் நாள்) குழந்தைகளுக்குப் பரிசு கொடுத்து மகிழ்வார்.

இன்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் இந்த சம்பிரதாயம் கடைப்பிடிக்கப்படுகிறது.

சாண்டா கிளாஸ் என்ற கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் திருநாளில் பனி வண்டியில் பறந்து வந்து வீடுகளின் புகைப்போக்கி வழியாக இறங்கி வந்து குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் நீண்ட வெண்தாடி வைத்த ஒரு குண்டுத் தாத்தா!

சிரியா நாட்டில் சாண்டா கிளாஸ் என்பது பரிசுகள் கொண்டு வரும் ஒரு ஒட்டகம் என்று குழந்தைகள் நம்புகிறார்கள். கிறிஸ்து பிறந்த இரவில் ஒட்டகங்களில் வந்த மூன்று அறிஞர்களும் இயேசு பாலகனை வாழ்த்தியபோது அந்த ஒட்டகங்கள் சோர்ந்து மயங்கி விட்டன. அப்போது குழந்தை இயேசு அவைகளை இரட்சித்து புத்துணர்ச்சி வழங்கினாராம்.

இங்கிலாந்தில் சாண்டா கிளாஸ் தாத்தா நீண்ட வெள்ளைத் தாடி, சிவப்புக் கோட்டு, ரெயின்டீர் என்ற கலைமான் இழுத்து வரும் பனிச்சறுக்கு வண்டியான ஸ்லெட்ஜில் பரிசு மூட்டையுடன் பவனி வருவார்.

குழந்தைகள் தங்கள் கட்டிலின் கால்மாட்டில் ஸ்டாக்கின்களைத் தொங்க விட்டிருப்பார்கள். சாண்டா புகைப்போக்கி வழியாக இறங்கி வந்து இதற்குள் பரிசுப் பொருள்களைப் போட்டுவிட்டுப் போவார். இது இங்கிலாந்துக் குழந்தைகளின் நம்பிக்கை.

ஜப்பானியக் குழந்தைகள் சாண்டா கிளாஸ் தாத்தாவை "ஹோட்டியோஷோ' என்பார்கள். இவருக்குப் பின்னாலும் கண்கள் இருக்கும்! இதனால் எல்லாக் காலத்திலும் எல்லாத் திசைகளிலும் எல்லாக் குழந்தைகளையும் அவரால் காண முடியுமாம்!

ஹாலந்து தேசத்துக் குழந்தைகள் சாண்டாவை இழுத்து வரும் "ரெயின் டீர்' கலைமானுக்கு உணவாகக் காரட்டுகளையும் வைக்கோலையும் வைத்து வரவேற்கிறார்கள்.

டென்மார்க் குழந்தைகள் தங்களுக்குப் பரிசு தரும் தாத்தாவின் பசிக்கு ஒரு கிண்ணத்தில் பாலும் ஒரு தட்டில் அரிசி சாதமும் வைத்திருப்பார்களாம்!

வெள்ளி, 4 ஜனவரி, 2019

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்...


திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்...

*முதல் விதி*

திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)

*இரண்டாவது விதி*

சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

*மூன்றாவது விதி*

இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது

*நான்காவது விதி*

புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.

…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும்.

*ஐந்தாவது விதி*

துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது

*ஆறாவது விதி*

முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

*ஏழாவது விதி*

அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.

*எட்டாவது விதி*

திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.

*ஒன்பதாவது விதி*

திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியம்

*பத்தாம் விதி*

மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.

*பதினொன்றாம் விதி*

மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.

-அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளை நீங்களே
குறியுங்கள்.