வியாழன், 30 ஏப்ரல், 2020

அடுத்து_என்ன...?

#அடுத்து_என்ன?

‘வெளியில் வராதீர்கள். வீட்டிலேயே இருங்கள். யாரையும் வீட்டுக்குள் விடாதீர்கள்’ - கற்பனையில் கூட இப்படி ஒரு சூழல் வருமென்று நாம் யாரும் நினைத்திருக்க முடியாது. சார்த்தர் எழுதிய ‘மீள முடியுமா?’ என்ற நூலில் ஒரு வரி வருகிறது - ‘நரகம் என்பது மற்றவர்கள்தான்.’
பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது. சொந்த நாட்டின் மக்கள் அகதிகள் போல நடந்தே ஊருக்குத் திரும்புகிறார்கள். வழியில் பசியால் நூற்றுக்கு மேற்பட்டோர் இறந்து போகிறார்கள். பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு மிகப்பெரிய இடப்பெயர்வு. உலகத்தையே தலைகீழாகக் கவிழ்த்தியது போல மாற்றங்கள் நிகழ்கின்றன. இன்னும் நாம் கற்பனையே செய்ய முடியாத அரசியல் மாற்றங்கள் உலகில் நிகழப்போகின்றன.

இந்த க‌ஷ்டகாலத்திலும் நிறைய நல்ல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. நாயக பிம்பங்கள், வேஷங்கள், பொய்கள் எல்லாம் கலைகின்றன. கங்கை நதி குடிநீராக மாறுகிறது. சூழல் மாசு கட்டுக்குள் வந்திருக்கிறது. மதியம் கிளிகளின் சத்தம் கேட்கிறது. இந்த ஏப்ரல் மாத இரவில் சென்னை லேசாகக் குளிர்கிறது.
தீவிரமான நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாகின்றன. கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு நண்பர் ‘கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகம் வருகிறது‘ என்கிறார். *‘நீங்கள் எல்லாருமே திருடர்கள். எனவே யாரும் என்னைப் பார்க்க வராதீர்கள்’ என்று கடவுளே தன் வழிபாட்டுத்தலங்களைப் பூட்டச் சொல்லிவிட்டார் என்கிறார் ஒரு முதியவர்*.

இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், நாடுகளின் பெயரால், சாதிகளின் பெயரால் நாம் கொண்டிருந்த பெருமைகள் எதுவும் நம்மைக் காப்பாற்றாது. விஞ்ஞானத்திலும், மருத்துவத்திலும் நாம் செய்த கண்டுபிடிப்புகளையெல்லாம் பார்த்து இயற்கை புன்னகைக்கிறது. வல்லரசுகளே தடுமாறுகின்றன. தனித்திருப்பதைத் தவிர தப்பிக்கும் வழிகள் இல்லை.
இந்த வருடம் அமோகமாக இருக்கும் என்ற சோதிடக் கணிப்புகள்தான் இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை. முடியாது என்று நினைத்த விஷயங்களில் ஒன்று டாஸ்மாக்கை மூடுவது. இன்னொன்று தொலைக்காட்சித் தொடர்களை நிறுத்துவது. இரண்டுமே நடந்துவிட்டது. கவனித்துப் பார்த்தால் நம் இயல்புக்குப் பொருந்தாத எல்லாம் விடை பெறுகின்றன.

மண்டபங்கள் வரும் வரை நம் திருமணங்கள் வீட்டில் நடந்தன. இப்போது திருமணங்கள் எந்த புரோகிதமும் இல்லாமல் திரும்பவும் வீட்டுக்கே வந்துவிட்டன. கர்ப்பிணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அத்தனை டெஸ்ட்டுகள், ஸ்கேன்கள் எடுக்க வேண்டுமென்பது கட்டாயம் என்று வலியுறுத்தும் மருத்துவர்கள் இப்போது அதெல்லாம் தேவையில்லை. வீட்டிலேயே இருங்கள் என்கிறார்கள். தொற்றுக்காகத் தவிர்க்கப்படுகிறது என்றாலும் தவிர்க்கப்படுவதால் ஒன்றும் ஆகாது என்ற உண்மையும் அதில் இருக்கிறது.
கிராமத்திலிருந்து வந்தவர்கள் கிராமத்துக்கே திரும்பிவிட்டார்கள். ‘மகன் வெளிநாட்டில் இருக்கிறான்’ என்று ஒருமாதம் முன்புவரை பெருமையாக இருந்த இந்த விஷயம் இப்போது பெருமையாக இல்லை. மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தீவிரமாகப் பேசிய வாய்கள் அனைத்தையும் மாஸ்க் மூடிவிட்டது. மதம் பற்றிப் பேசியவர்கள் மலேரியா மாத்திரை குறித்தும் கபசுரக் குடிநீர் குறித்தும் பேசுகிறார்கள்.
விளம்பரம்

துறை சார்ந்து அறம் தவறியவர்களாகப் பார்க்கப்பட்ட மருத்துவர்களும் காவலர்களும்தான் உயிரைப்பணயம் வைத்து முன் வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் அதிகம் வராத செய்திகளில் இப்போது அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். தேசத்தைக் காப்பதாக எப்போதும் பேசும் அரசியல்வாதிகள் அந்தச் செய்திகளைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருக்கிறார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் சம்பளத்தில் முப்பது சதவிகிதம் கொடுத்தது செய்தியாகிறது. என்ன சம்பளம் என்று தெரியாத துப்புறவுத் தொழிலாளர்கள் வீடு வீடாகச் சென்று அழைப்பு மணி அடிக்கிறார்கள். வீட்டுக்குள்ளே இருந்து ஒரு குரல் கேட்கிறது. ‘யாரு?’ ‘குப்பை’. சமூக இடைவெளி மட்டும் எப்போதும் போல அப்படியேதான் இருக்கிறது.

ஸ்வீடனில் ஒருவர் தான் சேர்த்துவைத்த பணத்தை எல்லாம் வெளியில் வீசுகிறார். தெரு முழுக்கப் புரளும் பணத்தை எடுப்பதற்கு யாரும் இல்லை. உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? உங்களுக்கு எவ்வளவு பெரிய வீடு இருக்கிறது? நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். பிரிட்டிஷ் பிரதமராக... ஹாலிவுட் நடிகராக... மருத்துவராகக் கூட இருங்கள். எதுவும் முக்கியம் இல்லை. உங்கள் உடலில் எவ்வளவு எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்பதுதான் முக்கியம்.
மதிப்புகள் அனைத்தும் மாறுகின்றன. பிரான்ஸில் 92 வயது மூதாட்டி நான் நன்றாக வாழ்ந்து விட்டேன்.போதும், அவரை வாழவையுங்கள் என்று தனக்குக் கொடுத்த வெண்டிலேட்டரை முப்பது வயது இளைஞருக்கு கொடுக்கச் சொல்லிவிட்டு நோயுடன் வீடு திரும்புகிறார். கண்கள் கலங்குகின்றன. வெண்டிலேட்டர் இல்லாத தேசத்தில் சொந்த மக்களைக் காப்பாற்றுவதற்காக எத்தனை அணு ஆயுதங்கள் யுத்த விமானங்கள்.

கைகளைச் சோப்புப் போட்டுக் கை கழுவுங்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். நைஜீரியாவின் மக்கள் நெருக்கம் மிகுந்த லாகோஸ் நகரில் ஒருமுறை சோப்பு போட்டுக் கைகழுவுவதுகூட ஆடம்பரம் என்கிறது செய்தி.
1,400 கிலோமீட்டர் தனியாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து ஒரு தாய் நகரத்தில் இருக்கும் தன் மகனை சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். 65 வயதுக் கணவர் வலியால் துடிக்கும் தன் மனைவியை சைக்கிளில் வைத்து அழுத்தி கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். ஒரு தாய் நல்லதங்காள் போல தன் ஐந்து குழந்தைகளை கங்கையில் வீசுகிறாள். இவையெல்லாம் வெறும் காட்சிகள் அல்ல. வரும் ஆண்டுகளுக்கான குறியீடுகள்.
பெரும்பாலான நாடுகள் மூத்த குடிமக்களை கைவிட்டு விட்டது. உடல் நலம் சரியில்லை என்றால் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலைக்கு அரசுகள் வந்துவிட்டது என்றால் இனி என்ன நடக்கும். அழுத்தம் தாளாமல் குக்கர் வெடிப்பது போல பல நாடுகளில் புரட்சி வெடிக்கப்போகிறது என்கிறது ஓர் ஆங்கிலக் கட்டுரை. திருக்குறளின் 56ஆவது அத்தியாயத்தை ஒருமுறை படித்துப் பாருங்கள்.
“உணவுப் பொருட்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஒழுங்காக உரிய நேரத்துக்குள் கையாளாமல் விட்டால் நாட்டில் பெரும் உணவுப்பஞ்சம் ஏற்படும். பஞ்சாபில் ஆயிரக்கணக்கான டன் கோதுமை அறுவடை செய்யப்படாமல் இருக்கிறது. அறுவடை செய்ய வேண்டுமெனில் பிகாரில் இருந்து தொழிலாளர்கள் வர வேண்டும். அறுவடை செய்ததை நிரப்ப மேற்கு வங்கத்தில் கோணிப்பை தொழிற்சாலை திறக்கப்பட வேண்டும். கோதுமை மூட்டைகளை நாடு எங்கும் கொண்டு செல்ல டிரக்குகள் வேண்டும். ஒரு டிரக் டிரைவர் நூறு ஊர்களைக் கடந்து செல்ல வேண்டும். எங்கெல்லாம் இறங்குவார்? தொற்று இருந்தால் என்ன நடக்கும்? ‘ஒன்றை ஒன்று வெகுவாகச் சார்ந்திருக்கும் இந்தியப் பொருளாதாரத்தில் உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக அனுப்புவதுதான் எங்கள் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்’ என்கிறார் இந்தியக் குடிமையியல் அதிகாரி ஒருவர்.

‘உங்கள் வாழ்வில் நித்தியமானது மரணம் ஒன்றுதான். அதற்கு தயாராகாமல் நீங்கள் எதெதற்கோ தயாராகிறீர்களே ஏன்?’ என்று புத்தர் கேட்டதையே நோம் சாம்ஸ்கி ’பல வருடங்களாக கிருமி இருந்தும் மருந்து கண்டுபிடிக்காமல் அழகு க்ரீம்களைக் கண்டுபிடிப்பதில் ஏன் கவனம் செலுத்தினீர்கள்?’ என்று கேட்கிறார்.
இந்தக் கிருமியின் வளர்ச்சியைப் பற்றி உலகின் நவீன விஞ்ஞானமும், நவீன மருத்துவமும் யோசிக்காததன் காரணம் பல துறைகள் தனியார்வசம் போனதுதான் என்கிறது புள்ளிவிவரம். வாழ்வாதாரங்கள் இழந்து எல்லைகளில் நுழைகிற அகதிகளைக் கொன்று கொண்டிருந்தோம். இன்று எல்லைகள் அனைத்தும் கேலிக்குரியவனாகி விட்டன. அமெரிக்காவுக்கு வியட்நாம் மருந்து அனுப்புகிறது.
கதவில் இருக்கலாம். கைப்பிடியில் இருக்கலாம். செய்தித் தாளில் இருக்கலாம். பால் பாக்கெட்டில் இருக்கலாம். தும்மினால் மூன்று மணி நேரம் காற்றில் இருக்கலாம். ஒருமுறை இதன் சுற்று முடிந்தாலும் ஆறு மாதங்களில் இதன் மறு சுற்று ஆரம்பிக்கலாம். வதந்திகளும் செய்திகளும் கிருமியைவிட வேகமாகப் பரவுகின்றன. தொலைக்காட்சிக்கு நாள் முழுக்க பிரேக்கிங் நியூஸ். திகில் படத்துக்கான இசையுடன் மனிதர்கள் இறந்த செய்திகள்.

நல்ல வேளையாக இது பறவைகள் மூலம் பரவவில்லை. பறவைகள் மூலம் பரவினால் மனித குலம் பிழைத்திருப்பது கடினம் என்கிறார் ஒரு மருத்துவர். இப்போது வௌவால் மூலமும் பரவும் என்கிறார்கள். அமேசான் காட்டில் வசிக்கும் யனோமாமி பழங்குடியினருக்கும் தொற்று பரவிவிட்டது என்கிறது ஒரு செய்தி.
மருந்தில்லா கிருமிக்குப் பயந்து ஒட்டுமொத்த மனிதகுலமும் பயத்தில் இருக்கிறது. இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? வீட்டில் இருக்க வேண்டும். சீன அரசு எல்லாமே தந்தது. வீட்டுக்குள் இருந்தார்கள். இங்கு கூட்டம் கூட்டமாக வெளியில் வருகிறார்களே ஏன்? கிருமியை விடவும் பசியும் வேலையின்மையும் கொடுமையானது. கட்டுப்பாடுகளைக் கடுமையாகப் பின்பற்றிய சீனாவில் டிசம்பரில் தொடங்கிய ஊரடங்கை ஏப்ரலில்தான் தளர்த்தினார்கள். எனில் கடைவீதிகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் அலைமோதும் நம் தேசத்தில் இந்தத் தொற்று கட்டுக்குள் வர எத்தனை மாதங்கள் ஆகும்?
ஒரு நாள். பிறகு 21. பிறகு 19. பிறகு? இது தொடரும் நிலையில் என்னென்ன நூல்கள் படிக்கலாம், என்னென்ன திரைப்படம் பார்க்கலாம் என்று சமூக ஊடகங்களில் வருகிற பொழுதுபோக்குத் திட்டங்கள் எல்லாம் அர்த்தமற்றுப்போகும். முதல் வாரத்தில் கணவர்கள் படும் அவஸ்தைகள் குறித்து வந்த மீம்ஸ்கள் இப்போது குறைந்து விட்டன. குடும்ப வன்முறையும், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் குறித்த செய்திகள் அதிகம் வரத் தொடங்குகின்றன.
அடுத்த அத்தியாயத்தை இயற்கை எழுதிக் கொண்டிருக்கிறது. ‘ஆட்கள் வேலை செய்கிறார்கள். மாற்றுப் பாதையில் செல்க’ என்ற அறிவிப்பு சாலையில் இருப்பதைப்போல ‘இயற்கை வேலை செய்கிறது. நாம் மாற்று வழிகளை யோசிக்க வேண்டும். பரிணாம விதிகளில் பொருந்திப் பிழைத்திருக்கும் விதமாக வரும் ஆண்டுகளில் எல்லாமே மாறப்போகிறது என்பது மட்டும் சூசகமாகத் தெரிகிறது.
அச்சு ஊடகங்கள் விடை பெறலாம். மக்கள் கூடுகிற வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் இன்னும் பல மாதங்களுக்கு மூடி இருக்கும் நிலை வரலாம்.

இதெல்லாம் முடிவுக்கு வரும்போது முதல் இரண்டு இடங்களுக்கு மக்கள் ஆர்வமாகத் திரும்புவார்கள். ஏனெனில் இந்த இரண்டு இடங்களிலும் மனித இடைவெளி சாத்தியம். மூன்றாவதான திரையரங்கு என்னாகும்? யாருமே காப்பாற்ற முடியாது என்ற நிலையில் பயத்துடன் இருந்தவர்களுக்கு அனைவரையும் காப்பாற்றும் நாயகர்களின் படங்கள் என்ன பொருள் தரும்? இணைய தளங்கள் வழியாக இத்தனை வாரங்கள் படங்கள் பார்த்துப் பழகியவர்கள் திரையரங்குக்குத் திரும்புவார்களா?
இரண்டாம் உலகப்போர் பற்றிய திரைப்படங்களைப் பார்க்கும்போது ‘அத்தியாவசியமான பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து உடனே வெளியேறுங்கள்’ என்று ஒரு அறிவிப்பு வரும். அதற்கு இணையான சூழல்தான் இப்போதும். முரண் என்னவெனில் அத்தியாவசியத்தோடு வீட்டுக்குள் இருங்கள் என்பதுதான். அன்றாட வாழ்க்கைக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை இயற்கை முன் மொழிந்துவிட்டது. தொழில்நுட்பம் அதை வழிமொழியப்போகிறது.
சமீப வருடங்களில் நுகர்வுக் கலாச்சாரத்துக்கு எதிராக மினிமலிஸம் என்ற ஒரு கருத்து உலகம் முழுக்கப் பரவி வருகிறது. ‘கடந்த ஒரு வருடத்தில் எதை நீங்கள் பயன்படுத்தவில்லையோ அது உங்களுக்கு எப்போதும் பயன்படாது. எனவே அதைத் தூக்கி எறியுங்கள். பொருட்களைத் துடைக்க, பொருட்களை ஒழுங்கு செய்ய என்று உங்கள் ஆயுளை பொருட்களிடம் செலவழிக்காதீர்கள்’ என்பதுதான் அந்தக் கோட்பாடு. ‘சிறுகக் கட்டி பெருக வாழ்’ என்று தமிழில் சொல்லப்பட்ட விஷயம்தான்.
இந்த மாதத்தில் எங்கள் வீட்டில் ஒரு பிறந்தநாள் வந்தது. நண்பர்களை அழைத்து, கேக் வெட்டி கொண்டாட்டமாக நடத்துவது சாத்தியமில்லை என்பதால் குழந்தைகள் வாழ்த்து அட்டையைக் கைகளால் வரைந்தார்கள். கேக் இல்லை. கூடி அமர்ந்து கைதட்டி வாழ்த்துச் சொன்னோம். முந்தைய பிறந்தநாட்கள் எல்லாம் நிழற்படங்களாக ஹார்டு டிரைவில் இருக்கின்றன. இந்தப் பிறந்தநாள் முழு வாழ்க்கைக்கும் மனத்தில் இருக்கும்.

பிறரைப் பார்த்து பிரதியெடுத்த போலியான கொண்டாட்டங்கள் அனைத்தும் விடை பெறுகின்றன. குப்பை உணவுகள் போய் வீட்டுச் சமையலில் கீரையும், மிளகு ரசமும் வந்துவிட்டது. நாகரிகம் என்ற பெயரில் நாம் மறந்த மரபுகள் அனைத்தையும் ஒரு கிருமி நமக்குத் திருப்பித் தந்துவிட்டது.
இத்தனை நாளும் பணத்தின் பின்னால், அதிகாரத்தின் பின்னால் பெருமைகளின் பின்னால் நீங்கள் ஓடிக்கொண்டிருந்தால் உங்கள் சக்கரங்களை நிறுத்துங்கள். உங்கள் அருகில் ஒரு குடும்பம் இருக்கிறது. அதில் குழந்தைகள் இருக்கிறார்கள். உங்கள் ஓட்டம் இவர்களுக்காகத்தான் எனில் அவர்களின் உண்மையான தேவை என்ன?
வெளியேறுவது என்பது கதவின் வழியாக மட்டும் அல்ல ஒரு நூலின் வழியாக, சமூக ஊடகம் வழியாக, திரைப்படத்தின் வழியாகவும் வெளியேற முடியும். எனவே தனித்திரு என்பதை வள்ளலாரின் பொருளில், விழிப்புடன் இருங்கள் என்பதை ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பொருளில், விலகி இருங்கள் என்பதை ஓஷோவின் அர்த்தத்தில் யோசிக்கும்போது இந்தத் தனிமையின் அர்த்தம் என்ன?
எதிர்மறை உணர்வுகளும், பயமும், அவ நம்பிக்கையும் சூழ்ந்த இந்தக் கடினமான நாட்கள் சீக்கிரமே முடிந்துவிடும். இதுபோல பல நூறு தொற்றுக்களைப் பார்த்த மனிதகுலம் ஆரோக்கியமாக மீண்டு எழுந்து வரும். எனவே இது மாதிரியான தனிமை உங்கள் வாழ் நாளில் திரும்பவரப் போவதில்லை. எனவே தனித்திருங்கள். பல வருடங்கள் கழித்து இதையெல்லாம் நம் சந்ததியினருக்கு ஒரு கதையாகச் சொல்ல முடியும்.
தொற்று தொடங்கிய முதல் வாரத்தில் எதிர்வீட்டில் ஒன்று நடந்தது. ஆண்டன் செகவ் பார்த்திருந்தால் ‘பால் பாக்கெட்’ என்று ஒரு சிறுகதை எழுதி இருப்பார். பக்கத்து ஃப்ளாட்காரர் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு கதவில் இருக்கும் பால் பாக்கெட்டை கைபடாமல் ஒரு குச்சியின் உதவியால் எடுத்து எப்படி மஞ்சளும் உப்பும் கலந்த வாளியில் போட்டார் என்பதுதான் கதை. இதுபோல என் மனைவி இரண்டாவது மாடியிலிருந்து தக்காளி வாங்கிய கதையும் இருக்கிறது.
‘கடுமையான நெருக்கடிக்குள்தான் காமெடி இருக்கிறது’ என்று சாப்ளின் சொல்லுவார். நெருக்கடி மிகுந்த இந்த நாட்களை மன அழுத்தமில்லாமல் எளிதாகக் கடந்து வருவோம். இந்தச் சூழலில் நமக்குத்தேவை நம்பிக்கை. சக மனிதனுக்கு நம்பிக்கையையும் நம்மால் முடிந்ததையும் கொடுப்போம்.
ஸ்பார்டகஸ் நாடகத்தில் ‘மண்ணிலிருந்து வந்தேன். மண்ணுக்கே திரும்புகிறேன்’ என்று ஒரு வரிவரும். அதன் வெவ்வேறு அர்த்தங்களை யோசித்துப் பார்க்கிறேன். ‘நமக்கான உணவை நாமே உருவாக்கும் அளவுக்கு ஒரு தற்சார்புப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடிந்தால் போதும். எத்தகைய வீழ்ச்சியில் இருந்தும் நம்மால் மீண்டு எழுந்துவிட முடியும் என்கிற நம்மாழ்வாரின் இயற்கை விவசாயம் குறித்துப் படித்துக்கொண்டிருந்தேன்.
இந்தப் பேரிடரை முன்வைத்து தமிழரின் மரபு சார்ந்த வாழ்வை, விவசாயத்தை, மரபு சார்ந்த மருத்துவத்தை நாம் புதுப்பிக்க வேண்டும். நம் கலாச்சாரம் சார்ந்த எளிமையான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்.
தனித்திருப்போம். கைகளைக் கழுவிக்கொண்டே இருப்போம். ஏனெனில் நம் கைகளில் கண்களுக்குத் தெரியாத கிருமிகள் இருக்கிறதோ இல்லையோ பல வருடங்களாக நாம் கொன்ற இயற்கையின் ரத்தம் கறையாக இருக்கிறது.

திரு. செழியன் அவர்கள் எழுத்தில் இருந்து சில பக்கங்கள்.

அந்த ஒரு வரி

அந்த ஒரு வரி

உன்னை
உற்சாகப்படுத்தும்
ஒரு வரி

 *உன்னால் முடியும்*


உன்னை
ஆணவம்
கொள்ளச்செய்யும்
ஒரு வரி

 *என்னால் மட்டும் தான் முடியும்*



உனக்கு
ஆறுதல்தரும்
ஒரு வரி

 *நான் இருக்கிறேன் கவலைப்படாதே*


நாம்
புரிந்துகொள்ள
வேண்டிய
ஒரு வரி

 *இதுவும் கடந்து போகும்*


தன்னம்பிக்கை
தரும்
ஒரு வரி

 *முயன்றால் முடியாதது எதுவும் இல்லை*


உன்னை
முன்னேற்றும்
ஒரு வரி

 *உன்னால் முடியாவிட்டால் யாரால் முடியும்* 


உன்னை
பலவீனப்படுத்தும்
ஒரு வரி

 *உன்னால் முடியாது*


உன்னை
முட்டாளாகவே
வைத்திருக்கும்
ஒரு வரி

 *உனக்கு ஒன்றும் தெரியாது*


உங்களை
மயக்கும்
ஒரு வரி

 *உங்களைப்போல் ஆகுமா*

உங்களுக்கு
நம்பிக்கை தரும்
ஒரு வரி

 *உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்*


உங்கள்
வெற்றிக்கு
வழிகாட்டும் 
ஒரு வரி

 *தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு*


சிந்திக்க
வேண்டிய
ஒரு வரி

 *யோசித்து சொல்கிறேன்*


முடிந்த பிறகு
சிலர் சொல்லும்
ஒரு வரி

 *எனக்கு அப்போதே தெரியும்*

இல்லத்தில்
இருந்து
வெளியேறும்
போது
சொல்லும்
ஒரு வரி

 *போய் வருகிறேன்*


இறைவனுக்கு
முன் சொல்லும்
ஒரு வரி

 *கடவுளே என்னை காப்பாற்று*

பொறாமையுடன்
சொல்லும்
ஒரு வரி

 *அவன் அழிந்து போகவேண்டும்*

இரக்கப்பட
வைக்கும்
ஒரு வரி

 *நான் ஒரு அனாதை*

உங்கள் மீது
பாசம் காட்டும்
ஒரு வரி

 *நீங்கள் சாப்பிட்டீர்களா , சாப்பிடுங்க*

உங்களை
மனமிறங்கச்
செய்யும்
ஒரு வரி

 *சாப்பிட்டு மூன்று நாள் ஆச்சுங்க*

ஏமாற்றியவர்களைப்
 பார்த்து
சொல்லும்
ஒரு வரி

 *நீ நாசமாக போவாய்*


வாழும்
மனிதன்
நினைக்கும்
ஒரு வரி

 *வாழ்க்கை நிலைக்கும் என்று*

கடவுள்
மனிதனை
எண்ணி
நினைக்கும்
ஒரு வரி

 *பாவம் மனிதன் என்று*

மிகவும் ஆழமான ஒரு வரி

 *எதுவும் இங்கே நிலையில்லை*

அந்த ஒரு வார்த்தை

அந்த ஒரு வார்த்தை

இன்று
உலகமே
உச்சரிக்கும்
ஒரு வார்த்தை
 *கொரோனா*

குழந்தைகள்
அடிக்கடி
சொல்லும்
ஒரு வார்த்தை
 *அம்மா*

மாணவர்களைப்
பார்த்து
சொல்லும்
ஒரு வார்த்தை
 *படி*

தன்னம்பிக்கை
தரும்
ஒரு வார்த்தை
*முடியும்*

கேட்பவர்
எதிர்பார்க்கும்
ஒரு வார்த்தை
*தருகிறேன்*

கொடுக்க
விரும்பாதவர்கள்
சொல்லும்
ஒரு வார்த்தை
*இல்லை*

எல்லோரும்
அடைய
விரும்பும்
ஒன்று
*இன்பம்*

யாரும்
அடைய
விரும்பாத
ஒன்று
 *துன்பம்*

துன்பத்தில்
சொல்லும்
ஒரு வார்த்தை
*கடவுளே*

விழும்போது
சொல்லும்
ஒரு வார்த்தை
*அம்மா*

செய்ய
விரும்பாதவர்கள்
சொல்லும்
ஒரு வார்த்தை
*முடியாது*

நம்மால்
முடியாத போது
சொல்லும் ஒரு
வார்த்தை
*காப்பாற்றுங்கள்*

போகும்போது
சொல்லும்
ஒரு வார்த்தை
*வருகிறேன்*

எல்லோரும்
எதிர்பார்க்கும்
ஒன்று
 *வெற்றி*

தனக்கு
என்றால்
அனைவரும்
விரும்பும்
ஒன்று
 *புகழ்*

ஏற்றத்
தாழ்வுகளுக்கு
காரணமான
ஒன்று
*பணம்*

பலரை
வருத்தப்பட
வைக்கும்
ஒன்று
*தோல்வி*

நிலைகுலைய
வைக்கும்
ஒன்று
*இழப்பு*

பலரும்
அடையத்
துடிக்கும்
ஒன்று
 *அதிகாரம்*

சிலருக்கு
பிடிக்காத
ஒன்று
*ஆலோசனை*

உயிர் வாழ
அவசியமானதில்
 ஒன்று
*உணவு*

பூமியை
செழிக்க
வைக்கும்
ஒன்று
*மழை*

அவரவர்கள்
நீடிக்க
விரும்பும்
ஒன்று
*ஆயுள்*

துன்பத்திற்கு
ஆளாக்கும்
ஒன்று
*நோய்*

ஒவ்வொருவரும்
அடைய
விரும்பும்
ஒன்று
*நிம்மதி*

மார்ச் மாதம்
என்றதும்
நினைவுக்கு
வரும் ஒன்று
*வருமானவரி*

மனித
இயக்கத்திற்கு
அடிப்படையான
ஒன்று
*செல்வம்*

நல்ல
மாணவர்கள்
விரும்பும்
ஒன்று
*தேர்வு*

சில
மாணவர்கள்
விரும்பாத
ஒன்று
*தேர்வு* 

பலருக்கும்
பிடித்த
ஒன்று
 *விளையாட்டு*

சோம்பேறிகளுக்கு
பிடித்த
ஒன்று
*உறக்கம்* 

மருத்துவர்கள்
தீர்க்க
முயற்சிக்கும்
ஒன்று
*நோய்*

பலர்
அடைய
விரும்பும்
ஒன்று
 *பதவி*

அரசியல்வாதிகள்
பிடிக்க
விரும்பும்
ஒன்று
*ஆட்சி*

மக்களாட்சியில்
மக்களிடம்
உள்ள
ஒன்று
*வாக்கு*

உழைப்பவர்கள் 
எதிர்
பார்க்கும்
ஒன்று
 *ஊதியம்*

 வெற்றி
-யாளர்களுக்கு
பின்னால்
இருக்கும்
ஒன்று
*திறமை*

முன்னேறத்
துடிப்பவர்கள்
விரும்பும்
ஒன்று
 *முயற்சி*

முதலீடு
செய்தவர்கள்
எதிர்பார்க்கும்
ஒன்று
 *இலாபம்*

முதலீடு
செய்தவர்கள்
விரும்பாத
ஒன்று
*நட்டம்*

கடன்
கொடுத்தவர்
எதிர்பார்க்கும்
ஒன்று
*வட்டி*

துன்பத்தில்
வரும்
ஒன்று
*கவலை*

ஆராய்ச்சி
-யாளர்கள்
அடைய
விரும்பும்
ஒன்று
*கண்டுபிடிப்பு*


சிவனோடு
தொடர்புடைய
ஒன்று
*சக்தி*

இந்தியாவின்
வெற்றிக்கு
காரணமான
ஒன்று
*ஒற்றுமை*

 *இது போல ஒன்று*
 *ஆயிரம்  உண்டு*

நீங்களும்
பதிவிடுங்கள்

 *இதில்*
 *இல்லாத ஒன்று*


அந்த ஒரு எழுத்து

அந்த ஒரு எழுத்து

உங்களை
அழைக்கும்
ஒரு எழுத்து
 *வா*

உங்களை
வெளியேற்றும்
ஒரு எழுத்து
 *போ*

துரத்தும்
ஒரு
எழுத்து
*ஈ*

சம்மதம்
சொல்லும்
ஒரு எழுத்து
*ம்*

உங்கள்
உடம்பில்
உள்ள
ஒரு எழுத்து
 *கை*

உங்களை
பேசவிடாமல்
தடுக்கும்
ஒரு எழுத்து
*சு* 

உங்களை
அவமானப்
படுத்தும்
ஒரு எழுத்து
*சீ*

உங்களை
வெறுப்புக்கு
உள்ளாக்கும்
ஒரு எழுத்து
 *செ*

பலரும்
குடிக்கும்
ஒரு எழுத்து
 *டீ*

சிலர்
காரணம்
புரியாமல்
கழுத்தில் கட்டு
ஒரு எழுத்து
 *டை*

கொடு
எனக்கேட்கும்
ஒரு எழுத்து
 *தா*

நெருப்பைக்
குறிக்கும்
ஒரு எழுத்து
 *தீ*

அவமானப்பட
வைக்கும்
ஒரு எழுத்து
*தூ*

உங்கள்
மனதை
எதிர்பாராமல்
மகிழச்செய்யும்
ஒரு எழுத்து
*ஐ*

தமிழ்
மாதத்தை
குறிக்கும்
ஒரு எழுத்து
 *தை*

உன்னைக்
குறிக்கும்
ஒரு எழுத்து
 *நீ*

மலரைக்
குறிக்கும்
ஒரு எழுத்து
 *பூ*

கையில்
பிடித்துக்
கொள்ளும்
ஒரு எழுத்து
 *பை*

அச்சுக்கு
உதவும்
ஒரு எழுத்து
 *மை*

வைக்கச்
சொல்லும்
ஒரு எழுத்து
*வை*

வியப்புக்கு
உள்ளாக்கும்
ஒரு எழுத்து
*ஓ*

உங்களை
துடிக்க
வைக்கும்
ஒரு எழுத்து
*ஆ*


இதுபோல
இன்னும்
உள்ளது.


ஆங்கிலத்துடன்
தொடர்புடைய
ஒரு
எழுத்துக்கள்
தமிழில்
நிறைய
உள்ளது.

அதை
மற்றொரு
பதிவில்
படிக்கலாம்.


புதன், 29 ஏப்ரல், 2020

மனிதனின் வெற்றிகள்

*"மனிதனின்  வெற்றிகள்:"*

1 −  வயதில்   வெற்றி  என்பது  பிறர்  துணையில்லாமல்    நிற்பது  . . .

4  −  வயதில்  வெற்றி  என்பது   ஜட்டியில்  சிறுநீர்  போகாமல்  இருப்பது . . .

8 − வயதில்  வெற்றி  என்பது  வீட்டிற்கு  வழி தெரிவது  . . . .

12 −  வயதில்  வெற்றி  என்பது  நல்ல   நண்பர்கள்  இருப்பது . . .

18 − வயதில்   வெற்றி   என்பது  ஓட்டுநர்  உரிமம்   வைத்திருப்பது . . .

23 −  வயதில்  வெற்றி  என்பது   பல்கலைகழகத்தில்  பட்டம்   பெற்றிருப்பது . . .

25 − வயதில்  வெற்றி  என்பது  பணம்  சம்பாதிப்பது . . .

30 − வயதில்  வெற்றி  என்பது  குடும்பத் தலைவனாய் இருப்பது . . .

35 − வயதில்  வெற்றி  என்பது  பணத்தை உருவாக்குவது . . .

45 − வயதில்  வெற்றி என்பது  இளமையாய்  தோன்றுவது . . .

50 − வயதில்  வெற்றி  என்பது  பெற்ற  பிள்ளைகளுக்கு  நல்ல  கல்வியை  தருவது . . .

55 − வயதில்  வெற்றி  என்பது  இன்னும்  உன் செயல்கள்  திறமையாக  இருப்பது . . .

60 − வயதில்  வெற்றி  என்பது  இன்னும்  ஓட்டுநர்  உரிமம்  வைத்திருப்பது . . .

65 − வயதில்  வெற்றி  என்பது  நோயில்லாமல்  இருப்பது . . .

70 − வயதில்  வெற்றி என்பது  யாருக்கும்  பாரமில்லாமல்  இருப்பது . . .

75 − வயதில்  வெற்றி  என்பது  பழைய  நட்பு  தொடர்ந்திருப்பது . . .

81 − வயதில்  வெற்றி  என்பது  வீட்டிற்கு  வழி  தெரிவது . . .

86 − வயதில்  வெற்றி  என்பது   மறுபடியும்  படுக்கையில்  சிறுநீர் போகாமல் இருப்பது . . .

90 − வயதில்  வெற்றி  என்பது  யார் துணையும்  இல்லாமல்  நடப்பது  . . .

*வாழ்க்கை என்பது  ஒரு வட்டம். . .

பாட்டி காலத்தில் சாப்பிட்ட சில கீரை வகைகள்

பாட்டி காலத்தில் சாப்பிட்ட சில கீரை வகைகள்.

1 முள்ளிக்கீரை
2 பண்ணைக்கீரை
3 வேளைக்கீரை
4 சிறுக்கீரை
5 அரைக்கீரை
6 பொன்னாங்கண்ணி
7 தண்டங்கீரை
8 செங்கீரை
9 நாயுருவிக்கீரை
10 தொய்யக்கீரை
11 கோவைக்கீரை
12 கனிமூங்கிக்கீரை
13 பாலைக்கீரை
14 வட்டச்சாரணைகீரை
15 நெருஞ்சிக்கீரை
16 பொருமிக்கீரை
17 பாச்சிட்டிக்கீரை
18 பசலைக்கீரை
19 சுக்குட்டிக்கீரை
20 கருஞ்சுக்குட்டிக்கீரை(மணத்தக்காளி)
21 அப்பக்கோவைக்கீரை
22 குப்பைக்கீரை(குப்பைமேனி)
23 தண்ணிக்குடத்தான் கீரை
24 மணல்வாரிக்கீரை
25 வாதமுடக்கிக்கீரை
26 முடக்கத்தான்கீரை
27 வல்லக்கீரை
28 ஆரைக்கீரை
29 தூதுவளைக்கீரை
30 முருங்கைக்கீரை
31 அகத்திக்கீரை
32 வல்லாரைக்கீரை
33 நிலஆவரைக்கீரை
34 தகரக்கீரை
35நண்டு கொழுப்புகீரை
36 குமுட்டிக்கீரை
37 புளிமிச்சங்(புளிச்ச)கீரை
38 முளைக்கீரை
39 வெந்தயக்கீரை.
இக்கீரைகள் பற்றிய மேலும் சில விளக்கத்தையும் கூறினார்கள்>
இதில் தொய்யக் கீரையை(அப்போதைய) முஸ்லீம்கள் சாப்பிட மாட்டார்கள்.கனிமூங்கிக்கீரை மலையில் மட்டுமே இருக்கும்.பாலைக்கீரைத் தண்டை மூக்கில் விட்டால் வரும் தும்மலில் (நெஞ்சுச்)சளி உடையும். பாச்சிட்டிக்கீரை கோவைக் கீரையைப் போலவே இருக்கும்.அப்பக்கோவைக்கீரை மலையில் மட்டுமே வளரும்.இது கெட்ட வாடை அடிக்கும்.ஆனால் சமைத்த பின் மிக ருசியாக இருக்கும்.வாதமுடக்கிக்கீரையை சதகுப்பையுடன் ரசம் வைத்து (வாதக்)காய்ச்சல் வந்தவர்களுக்குக் கொடுக்க உடன் காய்ச்சல் விலகும்.செங்கீரை என்பது தண்டங்கீரையின் ஒருவகை.ஆரைக் கீரை தண்ணீர் வற்றிய குளத்தில் அதிகம் முளைக்கும்.நிலஆவரைக்கீரை புளியந்தளைபோல் அகலமாக நிலத்தில் படர்ந்திருக்கும்.தகரக்கீரை ஆற்றுக்கால் பக்கம் இருக்கும்.நண்டு கொழுப்புக்கீரை ஓடை ஓரம் அரைஅடிக்கும் மேலே வளரும்.(நண்டு கொழுத்தால் வங்கில் இருக்காது எனும் பழமொழி எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது !).வல்லக்கீரையை ஆண்கள் உண்ணும் பழக்கம் இல்லை.குமுட்டிக் கீரை/புளிமிச்சங்கீரை என்பது கடைகீரைகள். புளிமிச்சங் கீரையைப் பறிக்கும் போது அதன் காயை கவனமாகக் களைய வேண்டும். ஏனெனில் அதன் மொளங்கு ஈக்கி மாதிரி வெள்ளையாக இருக்கும்.இது காற்றில் பறக்கும். கைகால்களில் பட்டால் அரிக்கும்.
நமது கீரைத் தொன்மையை மீட்டெடுத்து நல வாழ்வு வாழ்வோம். வாழ்வாங்கு வாழ்வோம்

117 வகையான (#பாரம்பரிய) பாட்டிவைத்திய குறிப்புகள்....!!!!



117 வகையான (#பாரம்பரிய) பாட்டிவைத்திய குறிப்புகள்....!!!!


1) பொன்மேனி தரும் குப்பைமேனி...
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு..
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் நறுவலி..
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை...
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு..
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு..
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி..
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

8)குழந்தையை காப்பான் கரிப்பான்..
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்..
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்...
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?...
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு...
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி..
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி...
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15) படர்தாமரைக்கு..
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு..
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

17) மலச்சிக்கலுக்கு...
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல...
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு...
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு..
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்...
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை...
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால்
சுரக்கும்.

23) அரையாப்பு தீர..
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை...
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்...
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக....
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்.
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

28) வெள்ளை தீர்க்கும் புங்கன்...
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு...
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

30) துத்தி டீ...
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி..
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

32) நீர்த்துவார எரிவு தீர..
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.

33) அஜீரண பேதிக்கு...
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

34) உடல் இளைத்தவருக்கு...
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

35) இரத்த கடுப்புக்கு..
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.

36) வெளுத்த மயிர் கறுக்க..
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.

37) தொண்டை கம்மல் தீர...
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

38) வண்டுகடிக்கு..
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

39) சூட்டுக்குத் தைலம்...
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

40) கிருமிகள் விழ...
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.

41) மூலம் தீர்க்கும் ஆவாரை..
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

42) மூலத்திற்கு வேது....
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

43) ஈளை தீர்க்கும் இம்பூரல்...
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.

44) கைநடுக்கம் தீர...
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

45) இருமல் தீர..
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

46) காதில் சீழ் வருதல் தீர..
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

47) தொண்டை புண்ணிற்கு..
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

48) தலைவலிக்கு...
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

49) சீதபேதிக்கு...
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

50) யானைக்கால் வீக்கம் வடிய...
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு..
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

52) புண்கள் ஆற..
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

53) முடி உதிர்வதை தவிர்க்க...
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

54) கட்டிகள் உடைய...
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.

55) அண்ட வாத கட்டு...
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.

56) கண் பூ குணமாக....
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.

57) இரத்த மூத்திரத்திற்கு...
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.

58) இரத்த மூலம் குணமாக...
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

59) அசீரணம் குணமாக...
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

60) வேர்க்குரு நீங்க...
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

61) தேக ஊறலுக்கு....
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.

62) சூட்டிருமலுக்கு..
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு...
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

64) நீர்க்கடுப்பு எரிவு தீர..
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்

65) சகல விஷத்திற்கும் நசியம்....
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்...
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.

67) பால் உண்டாக...
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு.....
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்துவேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.

69) உடல் வலுவுண்டாக....
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்துபாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி...
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

71) தேமல் மறைய..
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

72) வாயு கலைய...
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

73) பாலுண்ணி மறைய..
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

74) தொண்டை நோய்க்கு...
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

75) பெளத்திரம் நீங்க...
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

76) தீச்சுட்ட புண்களுக்கு...
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

77) தேக பலமுண்டாக..
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

78) படைகளுக்கு...
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

79) கண்ணோய் தீர...
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.

80) கற்றாழை நாற்றத்திற்கு.....
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.

81) சேற்று புண்ணிற்கு...
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.

82) நகச்சுற்று குணமாக...
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

83) முகப்பரு குணமாக.. .
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.

84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

85) பொடுகு குணமாக...
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

86) தழும்பு மறைய....
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

87) முறித்த எலும்புகள் கூட.....
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.

88) பால் சுரக்க....
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

89) தண்ணீர் தெளிய....
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.

90) கண் நீர் கோர்த்தல் தணிய....
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவரகண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.

91) புகையிலை நஞ்சுக்கு...
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.

92) குடிவெறியின் பற்று நீங்க....
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

93) நீரிழிவு நீங்க....
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

94) பெரும்பாடு தணிய.....
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.

95) நரம்பு தளர்ச்சி நீங்க....
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர,நரம்பு தளர்ச்சி நீங்கும்.

96) வீக்கத்திற்கு ஒற்றடம்....
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

97) மூட்டுப் பூச்சிகள் அகல..
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.

98)நெஞ்சு சளி.....
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

99)தலைவலி......
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

100)தொண்டை கரகரப்பு..
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

101)தொடர் விக்கல்....
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

102)வாய் நாற்றம்....
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

103)உதட்டு வெடிப்பு..
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

104)அஜீரணம்...
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

105)குடல்புண்....
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

106)வாயு தொல்லை....
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

107)வயிற்று வலி....
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

108)மலச்சிக்கல்....
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

109)சீதபேதி....
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

110)பித்த வெடிப்பு...
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

111)மூச்சுப்பிடிப்பு...
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

112)சரும நோய்...
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

113)தேமல்.
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

114)மூலம்...
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

115)தீப்புண்.....
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

116)மூக்கடைப்பு....
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

117)வரட்டு இருமல்...
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்...

சனி, 25 ஏப்ரல், 2020

பீடகாய்ன் பற்றி தெரியாத சில தகவல்கள் தெரிந்துகொள்ளுங்கள்


பீடகாய்ன் பற்றி தெரியாத சில தகவல்கள் தெரிந்துகொள்ளுங்கள்


பிட் காயின் ஒரு கரன்சிதான்.இதனை கண்ணால் பார்க்க இயலாது. இதன் வடிவத்தை நன்கு அலசி ஆராய்ந்து புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. இந்தக் காயினை நாம் நம் கையிலோ, பையிலோ வைத்துக்கொண்டு பரிமாற்றங்கள் செய்ய முடியாதது. இது ஆன்லைன் முலமாக வாங்கவும் விற்கவும் படுகிறது.
இப்போது இருக்கும் பிட்காயின்கள்: 17,554,200.1 பீட்காய்ன் மதிப்பு இந்தியா மதிப்பில் 6 லட்சங்கள் ஆகும். இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள எங்க சேனலை பாலோ பண்ணுங்க. லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க.

லாக்-டவுனில் செம ஐடியா😍 முயற்சி செய்துதான் பார்க்கலாமே🤔 வீட்டுக்கு வீடு🏠🌱 வீட்டுக்கு வீடு காய்கறி தோட்டம்..!!



லாக்-டவுனில் செம ஐடியா😍 முயற்சி செய்துதான் பார்க்கலாமே🤔 வீட்டுக்கு வீடு🏠🌱
வீட்டுக்கு வீடு காய்கறி தோட்டம்..!!

👉தற்போது உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் ஒரே விஷயம் கொரோனா. கொரோனாவை தடுக்கவும், கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்கவும் அனைவரும் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும்.

👉ஊரடங்கில் வீட்டில் பொழுதை எப்படி கழிப்பது என்று தெரியவில்லையா? நமக்கு கிடைத்திருக்கும் இந்த நேரத்தில் காய்கறி தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அமைக்கலாமே!!

👉வீட்டுத்தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அமைப்பதன் மூலம் தேவையானபோது காய்கறிகளை தோட்டத்தில் இருந்து பறித்து சமையலுக்கு பயன்படுத்தலாம். இது நம் அத்தியாவசிய செலவுகளை குறைத்து, நமக்கு லாபத்தையும் பெற்று தரும்.

லாக்-டவுனில் செம ஐடியா...!!

முயற்சி செய்துதான் பார்க்கலாமே...!!
இந்த லாக்-டவுன் நேரத்தில் நீங்களும் காய்கறி தோட்டம் அமைக்க ரெடி ஆகிட்டிங்களா..!!

🌿முதலில் தோட்டம் அமைப்பதற்கு தேவையான இடத்தை தேர்வு செய்துக்கொள்ள வேண்டும். மாடியில் தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் மண் நிரப்புவதற்கான தொட்டிகளிலோ அல்லது சாக்கு பைகளிலோ செடிகளை வளர்க்கலாம்.

🍀மாடித்தோட்டத்தில் செடி வைப்பதற்கு தேவையான மண்ணை உங்கள் நண்பரின் தோட்டத்திலோ அல்லது உங்களுக்கு அருகில் உள்ள இடங்களிலோ இருந்து சேகரித்து கொள்ளலாம். பின்னர் தோட்டத்தை எளிதாக அமைத்துவிடலாம்.

🌴அதென்ன இவ்வளவு எளிதாக சொல்லிவிட்டீர்கள் என கேட்கிறீர்களா? நிஜம்தான்..!

🌱செடி வளர்ப்பதற்கு தேவையான இடம், மண், நீர், விதை மட்டும் இருந்தாலே போதுமானது. பின்னர் செடி வளரும்போது அதற்கு தேவையான இயற்கை உரங்களை நாமே தயார் செய்து அளித்துவிடலாம்.

🌿கீரை வகைகளை விளைவிக்க 1ஃ2 அடி ஆழத்திற்கு மேல் மண் இருந்தால் போதுமானது. செடி வகைகளுக்கு 1 அடி ஆழத்திற்கு மேல் மண் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

🍀கொடி வகைகளுக்கு 3 அடிக்கு மேலாக இருக்கும்படி பைகளில் மண்ணை எடுத்துக்கொள்ளவும்.

🍃மண் போடும்போது அதோடு சம அளவு இயற்கையாக மக்கும் குப்பைகள் எதுவாயினும் மண்ணுடன் சேர்த்து கொள்ளலாம்.

🍀குப்பைகளையும், மண்ணையும் நன்கு கலந்து பைகளில் இடவேண்டும். குப்பைகளுக்காக நீங்கள் எங்கும் தேடிப்போக வேண்டிய அவசியமில்லை.

🌾உங்கள் வீட்டு அன்றாட குப்பைகளிலேயே மட்கும் குப்பைகளான காய்கறி கழிவுகள் மற்றும் வீட்டின் முன் உதிர்ந்துள்ள மர இலைகள் என எதுவாயினும் உபயோகித்து கொள்ளலாம்.

🌴முதலில் நீங்கள் மண்ணை இடும்போது கால்நடைகளின் சாணம் கிடைத்தால் சேர்த்து கொள்ளலாம். அது செடிகளுக்கு நல்ல உரமாக இருக்கும்.

🍃பின் நீங்கள் சேகரித்து வைத்துள்ள காய்கறி விதைகளை மண்ணில் ஊன்றி காலை, மாலை என தண்ணீர் ஊற்றி வளர்த்தால் போதும்!

🍀அதன்பின் இயற்கை தன் விளையாட்டை ஆரம்பித்துவிடும். அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் உங்கள் வீடுகளில், உங்கள் மாடித்தோட்டத்தில் இயற்கை முறையில் விளைந்த கீரை கூட்டாகவும், வெண்டைக்காய், புடலங்காய் குழம்பாகவும், தக்காளி பச்சடியாகவும் மணமணக்கும்.

🌿தினமும் காலையில் எழுந்ததும் செடிகளை கண்டு அதனுடன் சிறிது நேரம் உறவாடுங்கள். இதனால் செடிகள் நன்றாக வளர்வதுடன் நம் மனதிற்கு அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.


வியாழன், 23 ஏப்ரல், 2020

மழைமானி

#மழைமானி

ஆட்டுக்கல் என்பது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல.

 அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி.

வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும்.

 முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர் நிறைந்திருக்கும்.

அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வார்கள்.....

மழைப்பொழிவின் பழைய
 கணக்கு முறை செவி அல்லது பதினு எனப்படும்.

இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது.

 மழையின் அளவுக்கும்
நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு....
இதனை ‘பதினை’ என்றனர்.

அறிவியல் கணக்குபடி 18 மி.மீ வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண் உறிஞ்சிடும்.
 ஆக எத்தனை பதினு மழை பெய்திருக்கிறது எனத் தெரிந்துக்கொண்டு முதல் உழவுக்கு அணியமாவார்கள்.

மழைக்கு  பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது.....

தூறல் – பசும்புல் மட்டுமே நனைவது.
விரைவில் உலர்ந்துவிடும்....

சாரல் – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்.

மழை – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும்.

பெருமழை – நீர்நிலைகள்
நிரம்பும்....

அடைமழை –ஐப்பசியில் பெய்வது...

கனமழை – கார்த்திகையில் பெய்வது....

இதையே அறிவியல் வேறுவகையில் கூறுகிறது...

 மழைத்துளியின்
விட்டம் 0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருந்தால் அது தூறல்.
அதுவே விட்டம் 0.5 மி.மீட்டருக்கு மேல் இருந்தால் அது மழை.
 4-6 மி.மீட்டருக்கு மேல் துளியின்விட்டம் இருக்குமானால் அது கனமழையாகும்...

மழையைப் பற்றித் #திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே #மாறாநீர் என குறிப்பிட்டிருக்கிறார்...

இந்த உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூடக் குறையவும் இல்லை கூடவும் இல்லை என்பதை நாம் ஏற்கனவே அறிந்தோம்...

 அதாவது உலகில் இதுவரையுள்ள நீர் நிலையானது அளவு மாறாதது என்கிறார்.....

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி -
(குறள் 701)

இங்கு மாறாநீர் என்பது நீரின் தன்மையைக் குறிக்கும் எனச் சிலர் பொருள் கூறுவது பொருத்தமன்று என்று குறிப்பிடுவார்...

  நிலத்திற்கு ஏற்ப நீரின் தன்மை மாறுபடும் என்பதை வள்ளுவரே பிறிதோர் குறளில் கூறியிருக்கிறார்...

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு – (குறள் 452)

எனவே வள்ளுவர் ‘மாறாநீர்’ எனக் குறிப்பிடுவது நீரின் அளவைத்தான் என்பது தெளிவாகிறது.

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

புதன், 22 ஏப்ரல், 2020

அழிந்து வரும் பாரம்பரிய வாழ்வியல் செயல்பாடுகள் தருகின்ற உடல் தற்காப்பு திறனும் ஆரோக்கியமும்

அழிந்து வரும் பாரம்பரிய வாழ்வியல் செயல்பாடுகள் தருகின்ற உடல் தற்காப்பு திறனும் ஆரோக்கியமும்

 PREVENTIVE  AND PROMOTIVE  HEALTH CARE  provided by endangered traditional life  style  activities
..
 அன்பிற்கினிய உள்ளங்களே நான் வர்ம ஆசான் மருத்துவர் கணபதி பேசுகிறேன்
விளையாட்டல்ல... கேலிக்கூத்து அல்ல... சொல்லப் போகிற கருத்தை கேட்டு ஏளனம் அடைய வேண்டாம் வெட்கப் படவும்வேண்டாம். இதனுள் மறைந்து கிடக்கின்ற மருத்துவ நுட்பங்கள் ஏராளம். நமது ஆரோக்கியத்தை தந்து அதை மேம்படுத்துகின்ற உத்திமுறைகள் சூத்திரங்கள் இவை என்றால் மிகையாகாது... எத்தனையோ விதமான செயல்பாடுகள் இருப்பினும் முதலில் ஒரு சில முக்கிய செயல்பாடுகளை அறிவோம்.....

1) இடித்த நெல்லில் வடித்த சோறு
2) திண்ணைப் பேச்சு வெற்றி பேச்சு
3) கண்ணுல மையி கையில தோனி
4) மங்கலம் காக்க எங்குல கொல
5) தலப்பாக்கட்டு தலையையாட்டு
6) நொண்டி தொட்டும் தோண்டி பானையும்
7) பூணூ உள்ள  உலக்கை.. ஊண் இல்லா ஏகாதசி.
8) கேவலம் நீக்கும் கோவனக்  கட்டு
9) எண்ணெய் யை கொல்லும் சீயக்காய் கஞ்சி
10) தாரோசனை சிகிச்சை

 நம்முடைய பாரம்பரிய பழமொழி நம்முடைய வாழ்க்கையை நன்றாக செதுக்குகிறது... நம்மளுடைய சிறப்பு நம்மை சுற்றி வலம் வருகின்ற பழமொழிகள் தான். பழமொழிகள் தான் நமக்கு அவ்வப்போது சில தவறுகளில் இருந்தும் மறந்த வெளியில் இருந்தும் நமக்கு ஞாபகப்படுத்துகிறது.. ஒவ்வொரு பழமொழி கொள்ளும் ஓராயிரம் மெய்ஞான விளக்கங்களுடன் விஞ்ஞான நுட்பங்கள் மறைந்து கிடக்கின்றன. நமது பல மொழிகள் யாவும் நம்முடைய வாழ்க்கைமுறை கலாச்சாரம் மருத்துவம் சுற்றுச்சூழல் இறைவழிபாடு இவற்றோடு பின்னிப் பிணைந்தவை... வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் உள்ள இந்தப் பழமொழிகள் இப்போது உள்ள சந்ததிகள்,  உடன் இனி வரப்போகின்ற சந்ததிகளும் இதை அறிந்து உணர்ந்து கொள்ள முடியுமா என்பது ஆயிரமாயிரம் கேள்வி. ஒவ்வொரு பழமொழிகளும்  பல பக்கங்களை பிடிக்கும். எனவே சில கருத்துக்களை மட்டும் காண்போம்.

 இடித்த நெல்லில் வடித்த சோறு..

 இடித்து பெறப்பட்ட நெல்லில் தான் ஏகப்பட்ட உயிர்ச்சத்துகள் அடங்கியுள்ளன என்று தற்போது விஞ்ஞானம் கூறுகிறது.. எங்கேயாவது எப்பவாது நெல்லு கிடைச்சா அதை உடனே மிஷின்ல கொடுக்காம ஒரு நேர போக்கைக் ஆவது இடிச்சி அரிசி ய்எடுத்துக் குடுங்க. தினசரி இடிக்கிறதுக்கு ஒரு அஞ்சு நிமிஷம் கூட ஆகாது. அதை அப்படியே குக்கரில் வைத்து  சோறு ஆகாமல் அதுக்கு பதிலா தண்ணி ஊத்தி வடிச்ச சோறு எடுத்துக் குங்க.. நேரமில்லை என் மட்டும் சொல்லாதீங்க. ஒரு வாரத்திற்கு தேவையுள்ளதா நேரம் கிடைக்கிறபோது இடித்து வைத்துக் கொள்ளலாம்.

 திண்ணைப் பேச்சு வெற்றி பேச்சு

 தயவுசெய்து வெட்டிப்பேச்சு என்ன மாத்தி போடாதீங்க. நம்ம உடம்புக்கு உள்ளே இருக்கக்கூடிய ஸ்டிரஸ் ஐ குறைக்கிறது மனசுல உள்ள அழுத்தத்தை குறைப்பதற்கு நான்கு ஐந்து பேர்களோடு நமக்கு தகுந்த மாதிரி கலந்து ஆலோசனை கேட்கும் பொழுது நமக்கு நிம்மதி கிடைக்கும். வீண்பேச்சு அப்படின்னு நினைச்சு போடாதீங்க... இது ஒரு மிக நுட்பமான சிகிச்சை முறையாகும். இதைத்தான் இப்போ கவுன்சிலிங் சொல்றாங்க... நம்மை அறியாமலே நமக்கு தினசரி இதே மாதிரி பேசி கவுன்சிலிங் மாதிரி ஒன்னு கிடைக்கிறப்போ நமக்கு மன ரீதியான எந்த பிரச்சினைக்கும் கவலை இல்லை...

 கண்ணுல மையி கையில தோனி

 நம்ம கண்ணைச் சுத்தி இருக்கக்கூடிய இமைகளுக்கு கண்களுக்கு அஞ்சனம் சொல்லக்கூடிய மையிட்டு வந்த மைனா கண்ண பாதுகாக்கிறது மூலமாக உடம்பில் இருக்கக்கூடிய கப நோயின் உடையஆட்சியை நம்ம குறைக்கலாம். அழகுக்கு நினைத்துவிட வேண்டாம் இதுக்குள்ள ஆயிரமாயிரம் மருத்துவர் நுட்பங்கள் இருக்கு. கையில தோனி அப்படின்னா கையில் மருதாணி அல்லது மருதோன்றி  அரைத்து கைகளில் வைக்கக்கூடியது. இதனால அதிகம் பலம் பெறுவது இதயம்தான். கபாலத்தில் மற்றும் முள்ளெலும்பு தண்டிலிருந்து வெளிவரக்கூடிய நரம்புகள் தாம் அதிகம் பலன் பெறப்படுவது அப்படின்னு வர்ம நூல்கள் சொல்லுது.

 மங்கலம் காக்க கொல விடுவது

 இன்றைக்கு நம்மகிட்ட இருக்குடி எத்தனை பேருக்கு கொல விட தெரியும்... கிட்டத்தட்ட 75 சதவீதத்துக்கு மேல் இந்தக் கொல விடக்கூடிய கலை அழிந்து போய்விட்டது.. வெட்கப்படும் ஏற்படுத்தியும் அழித்துவிட்டோம். சர சூத்திரம் என்னும் அந்த வாசி கலையில நம சுவாசங்கள் எல்லாம் ஒன்னா சேர்ந்து நாக்குக்கு பின்புறமாக இருக்கக்கூடிய அந்த சுழுமுனை சக்கரத்தைத் தூண்டிவிட்டு செயல்படக்கூடியது இதனால உடம்புல ஆரோக்கியம் மேம்படுகிறது. சுழுமுனை நாடிசக்கரத்தை ஒரு நொடிப்பொழுது தூண்டக்கூடிய திறந்தான் இந்த கொல விடுதல இருக்கு. கொல விடுவது நம்முடைய பாரம்பரியத் என்னுடைய அடித்தளம். தோப்புக்கரணம் போட்டால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் அதே போல கொல விடுவதிலேயே உண்டு. இதையும் ஆரம்ப காலத்திலேயே குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து பயிற்சி கொடுக்க வேண்டும்.. நான்கு பேர் சேர்ந்து கொல விடும் போது அந்த சூழலை நீங்க நினைச்சு பாருங்க.. கண்களுக்கு தெரியாத தீய சக்தியை விரட்டி அடிக்கவும் கொல இடுபவர் னுடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயனாகிறது.
 தலப்பாக்கட்டு தலையை ஆட்டு
 நம்ம நாகரீகத்தின் உடைய மிக உச்சக்கட்டம் தலைப்பாகை கட்டுவது அழிந்து போய்விட்டது... இதுவும் கேலியும் எக்காலத்திற்கும் காரணமாகிவிட்டது.. எதனால அதிகம் பயன் பெறுவது நம்முடைய கண்கள் நம்மளுடைய காது நம்முடைய மூக்கு இவைகளோடு கபாலம் பாதுகாக்கப்படுவது. இன்னைக்கும் மற்ற பல நாடுகள்ல அவர்களுடைய கலாச்சாரத்துக்கு தகுந்தமாதிரி தலப்பாக்கட்டி இருந்து வருவது நமக்கு தெரியும். ஆனா தமிழ்நாட்டில் தான் இது ரொம்ப குறைந்து கொண்டே வருது. அன்றேஸ் சன் ரைஸ் அலர்ஜி ஹீட்வே அலர்ஜி இவைகளில் இருந்து பாதுகாக்க இதுவே நுட்பம்.... இது எங்கெல்லாம் யாருக்கு எப்பல்லாம் இருக்கிறதோ அதை கட்டாயமாக்க வேண்டும். குறைந்தபட்சம் வெயிலில் போகும் போதாவது இதை அறிவுறுத்த வேண்டும். ஹெல்மெட் போடுங்க அத போடுங்க இதை போடுங்கன்னு சட்டங்களை கூடிய நம்முடைய அரசு இவைகள் எல்லாத்தையும் கட்டாயமா ஆக்க வேண்டும்.
 நொண்டி தொட்டும் தோண்டி பானையம்
 எத்தனை  நம்முடைய பாரம்பரிய விளையாட்டு இருக்கு... ஆனால் நொண்டித தொட்டு விளையாடுவது மிகச்சிறப்பு. முல்லை எலும்பை பயன்படுத்துதல் கால்கள் கைகளில் உள்ள எலும்புகளை பலப்படுத்த கருத்துக்களை பலப்படுத்துதல் போன்ற பல நுட்பங்கள் இதில் உள்ளன.. நம்முடைய உடற் பயிற்சி வகுப்புகளில் இது கட்டாயமாக்கப்பட வேண்டும். விளையாட்டு மைதானத்திற்கு செல்லும்பொழுது இந்த பயிற்சியில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் குறிப்பாக இளைஞர்கள் உள்ளிட்டு முதியவர்கள் கூட முடிந்த அளவுக்கு செய்ய வேண்டும்... பெண்களும் விதிவிலக்கல்ல... மலக்குடல் உபாதை ஜீரண பாதைகள் இனப்பெருக்க உறுப்புகள் ஒட்டுமொத்த உடலும் புதிய பலம் பெறுகின்றது. தோப்புக்கரணத்துக்கு இணையான ஒரு வித விளையாட்டு...
 ஊண்  இல்லா ஏகாதேசி...
 மாதத்திற்கு ஒரு நாளாவது அதிலும் குறிப்பாக ஏகாதசியன்று உணவு அருந்தாமல் விரதம் கடைபிடிக்கப்படும் பொழுது நமது உடல் இரட்டிப்பு பலம் பெறுகின்றது. சுவாசக் கலை ஓட்டத்தில் அமிர்த நிலை சக்கரத்தின் பால் கொண்டுள்ள நுட்பத்தின் காரணமாக உடலை மேம்படுத்துவதற்காக நமக்காக கூறப்பட்டுள்ள நுட்பம்தான் ஏகாதசி விரதம் ஆகும்.... லங்கணம் பரம ஔஷதம் என்பதை மறந்து விடக்கூடாது.. குடும்பமே சேர்ந்து இருந்து மாதத்திற்கு ஒருமுறை இந்த ஏகாதசி அன்று விரதம் இருந்தால் நம்முடைய எதிர்ப்பாற்றல் மேம்படும் என்பதை நாம் சந்ததிகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்.. நடைமுறையில் கட்டாயமாக்கப்பட வேண்டும்.. உலக்கை உடைய பலத்திற்கும் பூண் எந்த அளவிற்கு பயன்படுகிறதோ அதுபோல உடலுக்கு இந்த விரதம் பயனாகும்.
 கேவலமா க   கோவணக் கட்டு
 இதைப்பார்த்து சிரிக்காதீங்க... ஒட்டுமொத்த உயிரோட்டமும் ஆண் தன்மையும் பெண் தன்மையும் இந்த கோவண கட்டிலில் தான் முடங்கிக் கிடக்கும்.. ஜட்டி போடக்கூடிய கலாச்சாரம் ஆகிவிட்டதால் கோவண கட்டு முற்றிலும் அழிந்து போய்விட்டது. கோவண கற்றால் மட்டுமே நம்முடைய இனப்பெருக்க உறுப்புகளையும் அடிவயிற்று உறுப்புகளையும் பாதுகாத்து முள்ளெலும்பு தண்டுடைய அடி பக்கத்திற்கு பலன் கொடுக்க முடியும். ஜட்டி போடுவது பேஷனுக்கு ஆகவோ கடனுக்காக அல்ல... நமது அடி வயிற்றில் தான் கும்பகம் முடிச்சு பதி பசு பாசம் என்னும் முடிச்சு என்னும் இரண்டு விதம் உயிர்முடிச்சுகள் அடிவயிற்றில் முடங்கிக் கிடக்கின்றது. இத முதல்ல பாதுகாக்கிறது தான் அதற்கப்புறம்தான் உறுப்புகளை பாதுகாக்கிறது. இந்த நுட்பம் நம்ம மக்களுக்கு தெரிய வேண்டும். எனவே கூடுமானவரை யும் நாம் இதை பயன்படுத்தினால் நல்லது. பேண்ட் போட்டு நம்ம ஆடை உடுத்தும் போது முடியுமா நிச்சயமாக முடியும். போகத்தின் நரம்புத் தளர்ச்சிக்கும் போகத்தை நல்லவிதமாக தூண்டுவதற்கும் இது ஒரு அடித்தளம்
 சீயக்காய் கஞ்சி
 எண்ணெய்க் குளியலின் போது சீயக்காயுடன் சேர்த்து வடிகஞ்சி பயன்படுத்தி வரும்பொழுது முடியை மட்டுமல்ல ஒட்டுமொத்த கபத்தையும் உடலின் உள்ளே இருக்கின்ற உறுப்புகளையும் மேம்படுத்த கூடியது.. எண்ணெய் தேய்த்து குளிப்பது ஒருவித கலை. ஷாம்பூ உள்ளிட்டவைகளை பயன்படுத்தப்படும் பொழுது மேலும் உடல் உஷ்ணம் ஆகிறது.  தனி சீகக்காய் மட்டுமில்லாது வடிகஞ்சி யும் சேர்த்து பயன்படுத்தப்படும் பொழுது உடல் உஷ்ணம் குறைக்கப்பட்டு முடியை பாதுகாத்து உடலை மேம்படுத்துகிறது.... தயவுசெய்து அந்த ஒரு நாளாவது சோறு வடித்து பெற்றுக்கொள்ளுங்கள்... இதை விற்பதற்கு வியாபாரிகள் ரெடியாக இருக்கின்றனர்... ஹேர் பிரெண்ட்லி பா டிஃபரண்ட்லி என்ற பொருளுடன் தொடர்பு வைத்தால் நல்லது.. குருமா கோழிக்கறி ஆட்டுக்கறி சமைத்து உண்ணும் நாம் இதற்கும் நேரம் ஒதுக்கினால் நல்லது.
 தா ரோசனை சிகிச்சை
 புதுசு இல்லை இது. கறந்த பசும்பாலு அதோட சூடு ஆறுவதற்கு முன்  காய்ச்சாமல் அப்படியே பருகுவதை அதுக்கு பேருதான் தா ரோசனை சிகிச்சை... இன்னைக்கு பாக்கெட் பால்ல காலம் தள்ளுற  நம இந்த சிகிச்சைக்கு கிடைக்குமா அப்படிங்கறது லட்சக்கணக்கான கேள்வி. உடம்பின் உடைய ஒட்டுமொத்த எதிர்ப்பு திறனையும் தரக்கூடியது இந்த சிகிச்சை முறை. உடம்பு வாடி போகுதல் உடம்பு நாளாக நாளாக பிணிகளுக்கு காரணம் ஆகுதல் இவைகளிலிருந்து பாதுகாக்கணும் என்ன இந்த சிகிச்சை முறை அவசியம்.... சுத்தமான பால் அதுவும் பசும்பால் கிடைக்க முடிஞ்சவரைக்கும் முயற்சி செய்யுங்கள்... தெருவுல வாக்கிங் போற நாம சற்று தூரத்திலேயே இந்த பால் கிடைச்சாலும் வாங்கி வாங்க....
 அன்பிற்கினிய உள்ளங்களே
 மேலே கூறிய பத்து செயல்பாடுகளும் நிச்சயமாக நாம் செய்ய இயலும்.... எங்கெல்லாம் எப்பெல்லாம் இதை மேற்கொள்ள முடியுமோ அங்கெல்லாம் இதை மேற்கொள்ள முயற்சியுங்கள்... இதைப் படித்துவிட்டு அடுத்த பதிவுக்கு செல்லும் முன் சற்று தனியாக யோசித்துப் பாருங்கள்..
 பின்பு தெளிந்த பின்பு செயல்பாட்டிற்கு வாருங்கள்.. குறிப்பா குழந்தைகளுக்கு ஏளனமாக கேவலமான செயல்பாடுகள் இல்லை என்பதை கட்டாயமாக அறிவுறுத்துங்கள்... முன்னோர்கள் ஆசியுடன் இறை ஆசியும் கிட்டும்.
 நன்றி. வணக்கம் !

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

பயனுள்ள 23 - பாட்டி வைத்திய முறைகள்


பயனுள்ள 23 - பாட்டி வைத்திய முறைகள்

பாட்டி வைத்திய முறைகள் என்பது வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு செய்யும் எளிய மருத்துவ முறையாகும்.

1.கீழே விழுந்து அடிபட்டால், திரிபலா சூரணம் நீரில் கொதிக்க வைத்து தெளிவான கஷாயத்தில் காயத்தைக் கழுவி பிறகு திரிபலா சூரணத்தைக் காயத்தின் மீது தூவி விடவும்.

2.காயத்திற்கும், இரத்த கசிவு அதிகமாக இருந்தாலும் அரக்கு சூரணத்தைக் காயத்தில் வைத்துக் கட்டவும்.

3.சளி, இருமலுக்கு தாளிசாதி சூரணத்தைக் குழைத்துத் தேனில் அடிக்கடிக் கொடுக்கவும்.

4.இருமலுக்கு ஆடாதோடைக் கஷாயம் தேனுடன் அடிக்கடி சாப்பிடலாம்.

5.புண்களுக்கு வேப்பிலை, மஞ்சள், ஆலம்பட்டை, அரசம்பட்டை கசாயத்தில் கழுவவும். திரிபலா சூரணத்தைப் புண்ணில் அப்பி விடவும்.

6.வெள்ளைப்படுதலுக்கு கீழாநெல்லிக் கஷாயம் மற்றும் நெல்லிக்காய்த் தூளில் பனை வெல்லம் கலந்து சாப்பிடவும்.

7.தலைவலிக்கு இரண்டு சொட்டு நொச்சித் தைலத்தை மூக்கின் துவாரங்களில் செலுத்தவும். தலையில் நொச்சித் தைலத்தைத் தராளமாகத் தடவவும்.

8.உடலில் எந்த அங்கங்களில் வலி தோன்றினாலும் சூடாகத் தைலத்தைத் தடவவும்.

9.குழந்தைகளின் சளிக்கு வெற்றிலை, கருந்துளசிச் சாற்றைத் தேனில் கலந்து கொடுக்கவும்.

10.சொத்தைப் பல்லின் வலிக்கு சுக்கு, கற்பூரம், உப்பு கலந்து பல்லில் வைத்தால் தீவிரமான வலியை உடனே கட்டுப்படுத்தும். பிறகு தகுந்த வைத்தியம் செய்து கொள்ளவும்.

11.கால் சுளுக்கினால் சூடாக உப்பு + புளி பற்றுப் போடவும்.

12.தலையில் அடிபட்டுக் காயம் இல்லாமல் வீக்கம் மட்டும் இருந்தால் முருங்கை இலையைப் பற்றுப் போடவும்.

13.குழந்தைகளின் மலச்சிக்கலுக்கு இடுப்பில் தைலம் தேய்த்து ஒத்தடம் கொடுக்கவும். வெற்றிலைக் காம்பினை விளக்கெண்ணையில் தோய்த்து ஆசன வாயில் வைக்கவும்.

14.வயிற்றுப் போக்கிற்கு முக்கியமாக குழந்தைகளுக்கு ஜாதிக்காயை இழைத்து தேனில் பலமுறை கொடுக்கவும்.

15.வயிற்று வலிக்கு வெந்நீரில் நெய், சுக்கு, சர்க்கரை கலந்து கொடுக்கவும். வலியுள்ள பகுதிக்கு சூடாக தைலம் தடவவும்.

16.வயிறு, நெஞ்சு எரிச்சலுக்கு உலர்ந்த கருப்பு திராட்சை, கடுக்காய், சர்க்கரை சமஅளவு சேர்த்து சாப்பிடவும். அவற்றை அரைத்து வில்லைகளாக்கியும் சாப்பிடலாம். பாலுடன் சுக்கு கலந்து உட்கொள்ளலாம்.

17.வயிற்று வலிக்கு ஓமத்தை அரைத்து மோரில் கலந்து கொடுக்கவும்.
பால் செரிக்காமல் வயிற்றுப் போக்கு ஏற்படுமானால் பாலுடன் நீர் கலந்து, சுக்கும் கோரைக்கிழங்கும் சேர்த்துக் காய்ச்சிக் கொடுக்கவும். பால் நன்றாகச் செரிக்கும்.

18.மலம் சரிவரப் போக சுக்கு வெந்நீரில் 1-2 ஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து சாப்பிடலாம்.

19.இஞ்சிச்சாறும், சின்ன வெங்காயச் சாறும் கலந்து வாந்தி, குமட்டல் போன்றவற்றிற்குக் கொடுக்கலாம்.

20.இஞ்சிச்சாறு, புதினா, உப்பு, வெங்காயம் கலந்து கொடுப்பது அஜீரணம், குமட்டல், பசியின்மை, வயிற்று உப்புசம் இவற்றிற்கு நல்லது.

21.குழந்தைகளின் சளிக்கு துளசி + வெற்றிலைச்சாறு தேனுடன் கலந்து கொடுக்கவும்.

22.குழந்தைகளின் சளிக்கு வேப்பெண்ணெய்யை மார்பு, முகுதுப் பகுதியில் தடவவும். வேப்பெண்ணையை உள்ளுக்கும் கொடுக்கவும்.

23.தீப்புண்களுக்குச் சோற்றுக் கற்றாழையின் உள் பகுதியிலுள்ள சோற்றைத் தடவவும்.

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!


நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!

1. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.

அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி

எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய

கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்

வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு

அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில
அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்

புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும் நலமாகட்டும் வாழக்கை நன்றி

விஷக்கடி மருந்துகள்

விஷக்கடி மருந்துகள்

1.   சிறுகுறிஞ்சான் வேர்சூரணம் 1தேகரண்டி சாப்பிட வாந்தியுண்டாகி,நஞ்சு வெளியேறும்
2.   வெள்ளருகு சமூலத்தை இடித்துச் சாறெடுத்து,50மிலி,3மணி நேர இடைவெளியில் கொடுக்க விஷக்கடி நஞ்சு வெளியேறும்
3.   நஞ்சறுப்பான் இலையையரைத்து,எலுமிச்சையளவு,கொடுக்க நஞ்சை வெளியாக்கும்
4.   நஞ்சறுப்பான் இலை,வேர் சூரணம்2தேகரண்டியுடன,சிறிது மிளகுதூள் கலந்து, தேனில் குழைத்துக் கொடுக்க நஞ்சை வெளியாக்கும்
5.   அவுரி இலையையரைத்து எலுமிச்சையளவு கொடுக்க பாம்புக்கடி விஷம்  இறங்கும்
6.   தும்பை இலைகளை கைப்பிடி அளவரைத்துக் கொடுத்து,மூக்கிலும் நசியமிட பாம்புக்கடி விஷம் நீங்கும். கடும் பத்தியம்.
 7.   முட்சங்கன்வேர் 2கிராம்,4மிளகு,சேர்த்தரைத்து,பாலில் கலந்து குடித்துவர கானாக்கடி, பூச்சிக்கடி,விஷம் குணமாகும்
8.   எருக்கம்பாலைத் தடவ  குளவி,தேனி,தேள்கொட்டு விஷம் முறியும் 
9.   ஊமத்தை இலையுடன்,மஞ்சள் சேர்த்து அரைத்துப் பற்றிட தேள்,பூரான், வண்டுக் கடியால் ஏற்படும் வீக்கம் குணமாகும்
10.  இலவங்கச் சூரணம்,கால்தேகரண்டி,தேனில் குழைத்து 3வேளைகள் உண்டுவர விஷக்கடி , தேள்கொட்டு விஷம்  முறியும்
11.  கீழாநெல்லிஇலையை எலுமிச்சை அளவு மென்று சாப்பிட தேள் கொட்டு விஷம் முறியும்
12.  கைப்பிடி கீழாநெல்லியிலைகளை,100மிலி ந.எண்ணையிலிட்டுக் காய்ச்சி, எண்ணையை கடிவாயில் தடவி,பொரித்த இலைகளை காலை,வெறும் வயிற்றில் 3நாட்கள் சாப்பிட எலிக்கடி விஷம் குணமாகும்
13.  திருநீற்றுப்பச்சை இலைகளை அரைத்துப்பூச தேள்கொட்டு வீக்கம்,குடைச்சல் குணமாகும்
14.  பெருங்காயத்தை  வெந்நீரிலுரைத்துப்பூச,தேள்கொட்டு  சரியாகும்
15.  எருக்கன் பழுப்பிலைகளை அனலில் வாட்டிச்சாறெடுத்து,தேன்,சுணணாம்பு கலந்து விஷக்கடி  கடிவாயில் தடவ ஆரம்பநிலை  விஷம் இறங்கும்
16.  விளாம்பழ  பொடியை பூச்சிக்கடி,வண்டுக்கடியால் பாதிக்கப்பட்ட  இடத்தில் வைத்துக் கட்ட  விஷம் முறியும்
17.  நாயுருவி விதையை பொடித்து 50கிராம்,100கிராம் தேனுடன் கலந்து, கொள்ள எலிக்கடி விஷம் நீங்கும்
18.  நாயுருவி இலையையரைத்துக் கடிவாயில் தடவ தேள்கடி  விஷம் இறங்கும்
19. தேன்,சுண்ணாம்பு,மஞ்சள்,உப்பு சேர்த்துக் கடிவாயில் தேய்க்க தேள்கொட்டு விஷம் இறங்கும்
20.  புளியங்கொட்டையை சூடேற கல்லில் தேய்த்து தேள்கடிவாயில் வைக்க ஒட்டிக் கொள்ளும். விஷம் இறங்கியவுடன் கொட்டை விழுந்துவிடும் 21. சுரைவேர்,அருகம்வேர்,கீழாநெல்லிவேர்,சிறுகீரைவேர்,காட்டுக்கொட்டைவேர் பட்டை,சோற்றுக்கற்றாழைச்சருகு,மிளகு ஆகியவற்றை  சிதைத்துப் போட்டு. காய்ச்சி,குடிநீர் செய்து,குடித்துவர நஞ்சு முறியும் 22.  மஞ்சள்,நன்னாரிவேர் நெய்யிலரைத்துப்பூச அட்டை விஷம் நீங்கும்
 23.  கறளகவேர்,நன்னாரி வேர்,அவுரிவேர் சமனெடுத்து,மஞ்சள் நீரிலரைத்துப்பூசி, உள்ளுக்கும் சாப்பிட பல்லி விஷம் நீங்கும்
24.  பச்சைமஞ்சளை தட்டிப்போட்ட நீரில் காயத்தை உரைத்து சேர்த்து கடிவாயில் போட பூரான் விஷம் நீங்கும்
25.  கிரந்திநாயகம் இலைகளை கசக்கித்தேய்க்க பூரான், வண்டுக்கடி விஷங்கள் நீங்கும்
26.  குப்பைமேனி வேர்5கிராம்,அரைத்து,நீரில் தினம் காலையில்,3நாள் பருகிவர எலிக்கடி விஷம் குணமாகும்
27.  சிவனார்வேம்பு சமூலத்தையுலர்த்தி,குடிநீர் செய்து பருகிவர பூச்சிக்கடி நஞ்சு நீங்கும் 28.  நிலவேம்பு இலைகளை அரைத்து வெறும்வயிற்றில் சாப்பிட்டுவர தங்கிய விடம் நீங்கும் 29.  வெங்காயத்தை வெட்டித் தேய்க்க தேள் கொட்டிய விஷம் இறங்கும்
30.  பிரமத்தண்டு இலையையரைத்துக் கடிவாயில் கட்ட  தேள்கடி விஷம்  இறங்கும் 31.  பிரமத்தண்டு சமூலச்சாறு 30மிலி உள்ளுக்குக் கொடுத்து ,இலையையரைத்துக் கடிவாயிலும் கட்ட பாம்புக்கடி விஷம் முறியும்
32.  கார்த்திகைமாதம் 30 நாளும் வேம்பின் துளிரை சாப்பிட்டுவர பாம்பு நஞ்சு நீங்கும். எந்த விடமும் பாதிக்காது
33.  ஆடுதீண்டாபாளை இலை சூரணம்  கால்தேகரண்டி இரவு வெந்நீரில் கொள்ள பாம்பு விஷம்,சில்விஷம்,கருங்குட்டம், யானைதோல் சொறி தீரும் .
34.  ஆடுதீண்டாபாளைவேரை அரைத்துக் காலைமாலை கடும் பத்தியத்துடன் கொள்ள 3 நாளில் எல்லாவிதப் பாம்பு நஞ்சுகளும் நீங்கும்
35. பேய்ச்சுரை,பெருந்தும்பட்டி,சிறுதும்மட்டி,பேய்ப்புடல்,பேய்பீர்க்கு சமூலங்களை உலர்த்திப் பொடித்து,சமன் கலந்து,காலைமாலை,அரைதேகரண்டி,வெந்நீரில் கொள்ள அனைத்து நஞ்சுகளும் நீங்கும்
36.  10கிராம் இலுப்பை பிண்ணாக்கை நீர்விட்டரைத்து,50மிலி நீரில் கரைத்துக் கொடுக்க வாந்தியுண்டாக்கி உண்ட நஞ்சை வெளியாக்கும்.
37.  பொன்னாவாரை வேருடன் மிளகு கூட்டி அரைத்து விழுங்க பாம்பு விஷம் உடனே நீங்கும்
38.  ஈஸ்வரமூலி வேர்40கிராம்,சிதைத்து,8ல்1ன்றாய்க்காய்ச்சி,30மிலி,2, 3 வேளை பருகி, கடிவாயில் இலையை கசக்கித்தேய்க்க பாம்புக்கடி, தேள்கடி விஷம் நீங்கும் 39.  கிரந்திநாயகம் இலைகளை மென்று தின்று,கடிவாயிலும் கட்ட தேள்,பாம்பு நஞ்சு நீங்கும்
40.  சிலந்திநாயகம்சமூலச்சாறு 60மிலி கொடுத்து, இலையையரைத்துக்கட்டி, கடும்பத்தியம் வைக்க அனைத்து பாம்பு நஞ்சும் முறியும் .
41.  சிறுதேட்கொடுக்கிலையை கசக்கி தேள் கொட்டிய இடத்தில் தேய்க்க நஞ்சு இறங்கி, கடுப்பு தீரும்
42.  சப்பாத்திக்கள்ளி வேர்பொடி 10கிராம் கொள்ள பூரான்,வண்டுக்கடி நஞ்சுகள் முறியும். தேள்கடிக்கு கொடுத்து ,காயை வதக்கி கடிவாயில் கட்ட குடைச்சல் தீரும் 43.  பீச்சங்குஇலைச்சாறு 250மிலி கொடுக்க பாம்பு நஞ்சு முறியும்
44.  பிரமதண்டு சமூலச்சாறு 30மிலி கொடுத்து,இலையையரைத்து கடிவாயில் கட்ட பாம்பு விஷம் இறங்கும்.
45.  மாவிலங்கம் வேர்பட்டை கொட்டை பாக்களவு அரைத்துக் கொடுத்துவர பாம்பு நஞ்சு, வண்டு நஞ்சு தீரும்
46. வாகைபூவையரைத்து,சுண்டைக்காயளவு,வெந்நீரில் கலக்கிக் கொடுத்து, கடிவாயிலும் அரைத்துக் கட்ட பாம்பு நஞ்சு நீங்கும்                                                  47.  கிரந்திநாயகம் இலைகளை மென்று தின்று,கடிவாயிலும் கட்ட தேள்,பாம்பு நஞ்சு நீங்கும்.
48.  நாட்டு வெங்காயம் 4 பாதியாக நறுக்கி தட்டையான பாகத்தை கடிவாயில் அழுத்துத் தேய்க்க தேள் கொட்டிய முள் வெளியேறி கடுப்பு நீங்கும்.                                                  49.  எட்டிப்பட்டையில் சிறுதுண்டு,3கல்லுப்பு சேர்த்து மென்று சாறை விழுங்க தேள்விஷம் இறங்கி கடுப்பு தீரும்.                                                     50.  அப்பிரக பற்பம் எருக்கிலைச்சாற்றில் குழைத்துச்சாப்பிட தேள்விஷம் உடனே இறங்கும்.                       
51.  நவச்சாரம்.சமன் சுண்ணாம்பு குழைத்துப் பற்றிட தேள்விஷம் இறங்கும்.கடுப்பு தீரும்.                                                     52.  நாயுருவி விதையைப்பொடித்து நீரில் குழைத்துப் பற்றிட தேள் விஷமிறங்கி கடுப்பு தீரும்.                                                    53.  நாயுருவிவேரை மென்று சாற்றைச் சாப்பிட தேள் விஷமிறங்கி கடுப்பு தீரும்.                                       
54.  அரளிவேரை மையாக அரைத்து கடிவாயில் தடவ தேள்விஷம் இறங்கி கடுப்பு நிற்கும்                                     
55.  தும்பை,துளசி சமன் 1பிடி உள்ளுக்கும் சாப்பிட்டு கடிவாயிலும் அரைத்துக் கட்ட தேள் விஷம் நீங்கி கடுப்பு தீரும்.                                   
56.  கல்உப்பு 1தேகரண்டி,4தேகரண்டி சுத்தமான நீரில் கரைத்து,தேள் உடம்பின் வலப்பக்கம் கொட்டினால் இடது கண்ணிலும்,இடப்பக்கம் கொட்டினால் வலது கண்ணிலும்,நடுமுதுகு,மார்பு,தலையில் கொட்டினால் 2கண்ணிலும் விட்டு, கடிவாயிலும் உப்புக்கரைசலைத் தேய்க்க சுகமுண்டாகும்.                       
57.  ஒரு கொப்பரைத் தேங்காய் அல்லது முற்றின தேங்காய் அல்லது தேங்காய்ப் பால் 1தம்ளர் சுவைத்துச் சாப்பிட நட்டுவாக்காலி விஷம் இறங்கும்.                                             58.  அவுரிவேர்,காஞ்சிரம்வேர் சமன் பொடித்து 5கிராம் வெந்நீரில் சாப்பிட நட்டுவாக்காலி விஷம் நீங்கும்.                                   
59.  அப்பிரகபற்பம் வெள்ளருகுச்சாற்றில் சாப்பிட நட்டுவாக்காலி விஷம் தீரும்.                                                60.  கஞ்சாங்கோரைச்சாறு 200மிலி பருக பாம்பு விஷம் தீரும்.  61. சாரனைவேர்,ஆடுதின்னாப்பாளை,புங்கம்வேர்,சிறுகுறிஞ்சான்,துளசி,சுக்கு, முல்லை சமனெடுத்து,மேனிச் சாற்றிலரைத்து,கடிவாயிலும்,உடம்பிலும் பூச எல்லா வகையான நஞ்சும் நீங்கும். 
62. ஆடுதின்னாப்பாளைவேர்,கவிழ்தும்பைவேர்,மரக்காரைவேர் சமனரைத்து உடம்பில்பூசி குளிக்க விஷம் இறங்கும்.                 
63.  குப்பைமேனிஇலை,உப்பு வகைக்கு150கிராம்,மஞ்சள்30கிராம் சேர்த்தரைத்து உடம்பில்பூசி 1மணிநேரம் கழித்துக் காலையில் குளிக்க (3நாள்) பூரான்கடி தடிப்பு,அரிப்பு தீரும்.                                                      64.  150மிலி வெற்றிலைச்சாறில்,35கிராம் மிளகை ஊறவைத்துப்பொடித்து திரிகடி, காலைமாலை வெந்நீரில் சாப்பிட பூரான்கடி விஷம் நீங்கும்.                 65.  ஆகாசகருடன் கிழங்கை சிறுசின்னி சாற்றிலரைத்து சுண்டைக்காயளவு தினம் 3 வேளை, 3நாள் சாப்பிட பூரான் விஷம் நீங்கும்.                       
66.  தும்பைஇலையை மென்று தின்று,அரைத்துப்பூச செய்யான் விஷம் இறங்கும்.                                67.  அழிஞ்சில் வேர்பட்டை 30கிராம் அரைத்து வெந்நீரில் காலைமாலை 8நாள் சாப்பிட எலிக்கடியால் ஏற்பட்ட இருமல்,இளைப்பு,கோழை,வாந்தி நீங்கும்.                                         
68.  அவுரிவேர் 25கிராம்,150மிலி பசும்பாலில் அரைத்து 8நாள் சாப்பிட்டு, இலையை யரைத்து கடிவாயிலும் கட்ட எலிக்கடியாலேற்பட்ட பல் கருத்தல்,உடல் எரிச்சல் தீரும்.                                     
69.  நீலக்காக்கனம்வேர் 15கிராம் பசுவின்பாலிலரைத்துச் சாப்பிட எலிக்கடியால் உண்டான பல்கருத்தல்,உடல் எரிச்சல் தீரும். 
70.  தகரைவிதையை காடியில் அரைத்துப்பூச எலிக்கடியால் உண்டான கொப்புளம் குணமாகும்.                               
 71.  எலிக்கடியால் வாயில் எச்சில் அதிகம் சுரந்தால் கடுகுரோகிணியும் கற்கண்டும் வகைக்கு 30கிராம் பொடித்துச் சாப்பிட குணமாகும்.                          72.  பச்சை நன்னாரிவேர் அரைத்து 30கிராம்,200மிலி பசும்பாலில் கலந்து பருக எலிவிஷம் முறியும்.                                                73.  ஆதளை சமூலத்தை பசும்பாலிலரைத்து 30கிராம்,200மிலி பாலில் காலையில் சாப்பிட்டு பத்தியமிருக்க 18 வகையான எலிகடி விஷமும் தீரும்.                                             
74.  அப்பிரகபற்பத்தை மலைவேம்புச்சாற்றில் குடிக்க பெருச்சாளிக்கடி விஷம் நீங்கும்.                             
75. கோவையிலை,சுண்டையிலை,மணத்தக்காளியிலை,உப்பு சேர்த்தரைத்து நாய்க்கடிவாயில் வைத்துக்கட்ட விஷம் நீங்கும்.                                   
76.  அழிஞ்சில் பட்டை10கிராம்,துளசிச்சற்றிலரைத்து வெந்நீரில் காலை 3நாள் சாப்பிட நாய்விஷம் தீரும்.                 
77. முருங்கைஈர்க்கு,சுக்கு,மிளகு,வசம்பு சுட்டகரி வகைக்கு 10கிராம் 2ல்1ன்றாய்க் காய்ச்சி வேளைக்கு 50மிலி சாப்பிட நாய்க்கடியால் உண்டான வாந்தி நிற்கும்.                               
78.  கொல்லங்கோவைக்கிழங்கு 10கிராம்,துளசிச்சாறிலரைத்து,வெந்நீரில் பருகி, கடிவாயிலும் கட்ட பூனைக்கடி விஷம் நீங்கும்.     
79.  குப்பைமேனிவேர்ப்பட்டையை பசுவின்பாலிலரைத்து காலைமாலை 7நாள், கழற்சிக்காயளவு சாப்பிட்டு பத்தியமிருக்க பூனை விஷம் நீங்கும்.
80.  அவுரிவேர்பட்டையை வெந்நீரிலரைத்து,கடிவாயிலும்,உடல்முழுதும் தடவ பூனைவிஷம் நீங்கும்.                                                 81.  சுக்கு,வசம்பு சுட்டுகரியாக்கி சமன் கலந்து,15கிராம்,காலைமாலை தேனில் 44 நாள் சாப்பிட அரனைவிஷம் தீரும்.  82. ஆடாதொடையிலை35கிராம்,பச்சைமஞ்சள்20கிராம்,மிளகு10கிராம் துளசிச் சாற்றிலரைத்து 3முறைகட்ட சிலந்திகடி தீரும்.                       
83.  அவுரிசமூலக்குடிநீர் 50மிலி,தினம்2வேளை,7நாள் சாப்பிட சிலந்திவிஷம் நீங்கும்.                                             84.  அவுரி,உத்தாமணி,மேனி இலைகளையரைத்து,கொட்டைப்பாக்களவு,பசு மோரில் சாப்பிட சிலந்திவிஷம் நீங்கும்.   
85. சித்திரமூலம்,வெள்ளைகாக்கணாங்கொடி,அவுரி,வேலிபருத்தி,ஆடுதின்னாப் பாளை   வேர்களை சமனாய் பொடித்து திரிகடி வெந்நீரில் சாப்பிட்டுவர தவளை விஷம் நீங்கி மேனி அழகு பெறும்.                                 
86. வெள்ளாட்டுப்பால்100மிலி,புளித்தமோர்100மிலி கலந்து12நாள் பருக வண்டுக்கடி தீரும்.                                                    87.  ஆடுதீண்டாப்பாளைவேர் சுண்டைக்காயளவரைத்து,200மிலி பசுமோரில் 7நாள் சாப்பிட வண்டுக்கடி தீரும்.                                       
88.  சிறுசின்னி இலை அரைத்து கழற்ச்சிக்காயளவு,200மிலி பசுமோரில் பத்தியத்துடன் 48நாள் சாப்பிட தென்னைமரவண்டு,6புள்ளிவண்டுகடி விஷம் நீங்கும்.                                                 89.  அவுரிவேர்,நன்னாரிவேர் வகைக்கு 15கிராம்,அரைத்து பசுவின்பாலில் பருக குரங்குகடி,மனிதர் கடி விஷம் நீங்கும்.                         
 90.  கொல்லங்கோவைக்கிழங்கை அரைத்துக் கடிவாயில் கட்டி,உள்ளுக்கும் சாப்பிட குரங்குக்கடி,மனிதர்க்கடி விஷம் நீங்கும்.                                     
91.  அமுக்கரா 70கிராம் பொடித்து திரிகடி,தேனில் சாப்பிட்டு,அவுரிச் சமூலத்தை அரைத்து கடிவாயில் 7நாள் கட்ட குதிரை விஷம் நீங்கும். 92. காட்டுவாகைவேர்,இலை,பட்டை,பூ,காய் வெந்நீரிலரைத்து பூச மரவட்டைகடி நீங்கும்.                                         
93. தண்ணீர்விட்டான்கிழங்குச்சாறு 50மிலி தினம்2வேளை பருகிவர மரவட்டைக்கடி விஷம் நீங்கும்.         94.  குப்பைமேனிச்சாறுடன் உப்பு,மஞ்சள் பொடி கலந்து கடிவிஷம், நமைச்சல் உள்ள இடங்களில் தடவ கம்பளிப்பூச்சிக்கடி தீரும்.   
95. வெற்றிலைச்சாறு75மிலி,ந.எண்ணையில் கலக்கிக் குடிக்க கம்பளிப்பூச்சி விழுந்த நீரைக் குடித்ததனால் உண்டான வாந்தி தீரும். 
96. வெற்றிலை,தும்பையிலை,அவுரியிலை,பெருங்காயம்,மிளகு,வசம்பு, வகைக்கு 10கிராம் சிறுகுழந்தை சிறுநீர்விட்டு தட்டிப் பிழிந்து காதிலும், மூக்கிலும் நசியமிட சகல விஷக்கடிகளாலும் பேச்சுமூச்சின்றிக் கிடந்தால் விஷம் நீங்கி உணர்வு உண்டாகும்.                                          97.  ஆமணக்குஇலையும் மிளகும் சேர்த்தரைத்து மணிக்கொருதடவை கொடுக்க பாம்பு விஷம் நீங்கும்.ஏறாது.வாந்தியாகும்.        98.  பூரான்,அரனை கடித்தவுடன் சிறிது பனைவெல்லம் சாப்பிட விஷம் முறியும்.                       
99. ஆடாதோடை,பச்சைமஞ்சள்,மிளகு சேர்த்தரைத்துக் கடிவாயில் கட்ட சிலந்தி விஷம் உடனே முறியும்.                                          100.குப்பைமேனிச்சாறும் சுண்னாம்பும் குழைத்துப்பூச எந்த விஷக்கடி வீக்கமும் வடியும்.                                                 101.35கிராம் பூவரசம்பூவை 1லி நீரில் 250மிலியாகக் காய்ச்சி காலை மாலை 100மிலி பருகிவர கானாக்கடியால் ஏற்பட்ட நமைச்சல்,தடிப்பு குணமாகும்.                                         102.மிளகும் வெல்லமும் சேர்த்து சாப்பிட்டு பின்னர் வாந்தியாகும்வரை நீர் அருந்த பல்லி,அரனை போன்ற சிறுவிஷங்கள் முறியும்.                     103.எருக்கம்பாலை கடிவாயில் தடவ நாய் விஷம் ஏறாது முறியும். 104.வெள்ளைக்கடுகை ஊறவைத்தரைத்து,நெல்லிக்காயளவு கொடுக்க வாந்தியுண்டாக்கி உண்ட நஞ்சு  வெளியேறும் 105.தும்பைஇலை,பூ சாறுபிழிந்து 20மிலி உள்ளுக்குக்கொடுத்து, கடிவாயிலும் பூச தேள்கடி,சிறுகடிவிஷங்கள் இறங்கும்.                   
106.நாயுருவி வேரை மென்று சாற்றை விழுங்க தேள்விஷம் இறங்கும்.  . 107.வெள்ளைஅரளிபூ,புகையிலை,ஏலதூள் சமனரைத்து நசியமிட  பாம்பு விஷம் இறங்கும்.                                             108.அருகம்புல்லை அரைத்துக்கட்ட பாம்பு விஷம் இறங்கும். 109.பெரியாநங்கையிலையை சாப்பிட்டு உப்பில்லா பத்தியமிருக்க பாம்பு விஷம் இறங்கும்.                   110.முருங்கையிலைச்சாறு,முற்றிய தேங்காய்ப்பால் சமன் கலந்து தினம் 50மிலி கொடுக்க இடுமருந்து முறியும் 3வேளை.
111. மஞ்சள்,துளசியிலை சேர்த்தரைத்து கடிவாயில் பூசி உள்ளுக்கும் சாப்பிட்டுவர                                              எட்டுக்கால் பூச்சி விஷம் தீரும் 112.அருகம்வேர்30கிராம்விஷக்கடி மருந்துகள்

1.   சிறுகுறிஞ்சான் வேர்சூரணம் 1தேகரண்டி சாப்பிட வாந்தியுண்டாகி,நஞ்சு வெளியேறும்
2.   வெள்ளருகு சமூலத்தை இடித்துச் சாறெடுத்து,50மிலி,3மணி நேர இடைவெளியில் கொடுக்க விஷக்கடி நஞ்சு வெளியேறும்
3.   நஞ்சறுப்பான் இலையையரைத்து,எலுமிச்சையளவு,கொடுக்க நஞ்சை வெளியாக்கும்
4.   நஞ்சறுப்பான் இலை,வேர் சூரணம்2தேகரண்டியுடன,சிறிது மிளகுதூள் கலந்து, தேனில் குழைத்துக் கொடுக்க நஞ்சை வெளியாக்கும்
5.   அவுரி இலையையரைத்து எலுமிச்சையளவு கொடுக்க பாம்புக்கடி விஷம்  இறங்கும்
6.   தும்பை இலைகளை கைப்பிடி அளவரைத்துக் கொடுத்து,மூக்கிலும் நசியமிட பாம்புக்கடி விஷம் நீங்கும். கடும் பத்தியம்.
 7.   முட்சங்கன்வேர் 2கிராம்,4மிளகு,சேர்த்தரைத்து,பாலில் கலந்து குடித்துவர கானாக்கடி, பூச்சிக்கடி,விஷம் குணமாகும்
8.   எருக்கம்பாலைத் தடவ  குளவி,தேனி,தேள்கொட்டு விஷம் முறியும் 
9.   ஊமத்தை இலையுடன்,மஞ்சள் சேர்த்து அரைத்துப் பற்றிட தேள்,பூரான், வண்டுக் கடியால் ஏற்படும் வீக்கம் குணமாகும்
10.  இலவங்கச் சூரணம்,கால்தேகரண்டி,தேனில் குழைத்து 3வேளைகள் உண்டுவர விஷக்கடி , தேள்கொட்டு விஷம்  முறியும்
11.  கீழாநெல்லிஇலையை எலுமிச்சை அளவு மென்று சாப்பிட தேள் கொட்டு விஷம் முறியும்
12.  கைப்பிடி கீழாநெல்லியிலைகளை,100மிலி ந.எண்ணையிலிட்டுக் காய்ச்சி, எண்ணையை கடிவாயில் தடவி,பொரித்த இலைகளை காலை,வெறும் வயிற்றில் 3நாட்கள் சாப்பிட எலிக்கடி விஷம் குணமாகும்
13.  திருநீற்றுப்பச்சை இலைகளை அரைத்துப்பூச தேள்கொட்டு வீக்கம்,குடைச்சல் குணமாகும்
14.  பெருங்காயத்தை  வெந்நீரிலுரைத்துப்பூச,தேள்கொட்டு  சரியாகும்
15.  எருக்கன் பழுப்பிலைகளை அனலில் வாட்டிச்சாறெடுத்து,தேன்,சுணணாம்பு கலந்து விஷக்கடி  கடிவாயில் தடவ ஆரம்பநிலை  விஷம் இறங்கும்
16.  விளாம்பழ  பொடியை பூச்சிக்கடி,வண்டுக்கடியால் பாதிக்கப்பட்ட  இடத்தில் வைத்துக் கட்ட  விஷம் முறியும்
17.  நாயுருவி விதையை பொடித்து 50கிராம்,100கிராம் தேனுடன் கலந்து, கொள்ள எலிக்கடி விஷம் நீங்கும்
18.  நாயுருவி இலையையரைத்துக் கடிவாயில் தடவ தேள்கடி  விஷம் இறங்கும்
19. தேன்,சுண்ணாம்பு,மஞ்சள்,உப்பு சேர்த்துக் கடிவாயில் தேய்க்க தேள்கொட்டு விஷம் இறங்கும்
20.  புளியங்கொட்டையை சூடேற கல்லில் தேய்த்து தேள்கடிவாயில் வைக்க ஒட்டிக் கொள்ளும். விஷம் இறங்கியவுடன் கொட்டை விழுந்துவிடும் 21. சுரைவேர்,அருகம்வேர்,கீழாநெல்லிவேர்,சிறுகீரைவேர்,காட்டுக்கொட்டைவேர் பட்டை,சோற்றுக்கற்றாழைச்சருகு,மிளகு ஆகியவற்றை  சிதைத்துப் போட்டு. காய்ச்சி,குடிநீர் செய்து,குடித்துவர நஞ்சு முறியும் 22.  மஞ்சள்,நன்னாரிவேர் நெய்யிலரைத்துப்பூச அட்டை விஷம் நீங்கும்
 23.  கறளகவேர்,நன்னாரி வேர்,அவுரிவேர் சமனெடுத்து,மஞ்சள் நீரிலரைத்துப்பூசி, உள்ளுக்கும் சாப்பிட பல்லி விஷம் நீங்கும்
24.  பச்சைமஞ்சளை தட்டிப்போட்ட நீரில் காயத்தை உரைத்து சேர்த்து கடிவாயில் போட பூரான் விஷம் நீங்கும்
25.  கிரந்திநாயகம் இலைகளை கசக்கித்தேய்க்க பூரான், வண்டுக்கடி விஷங்கள் நீங்கும்
26.  குப்பைமேனி வேர்5கிராம்,அரைத்து,நீரில் தினம் காலையில்,3நாள் பருகிவர எலிக்கடி விஷம் குணமாகும்
27.  சிவனார்வேம்பு சமூலத்தையுலர்த்தி,குடிநீர் செய்து பருகிவர பூச்சிக்கடி நஞ்சு நீங்கும் 28.  நிலவேம்பு இலைகளை அரைத்து வெறும்வயிற்றில் சாப்பிட்டுவர தங்கிய விடம் நீங்கும் 29.  வெங்காயத்தை வெட்டித் தேய்க்க தேள் கொட்டிய விஷம் இறங்கும்
30.  பிரமத்தண்டு இலையையரைத்துக் கடிவாயில் கட்ட  தேள்கடி விஷம்  இறங்கும் 31.  பிரமத்தண்டு சமூலச்சாறு 30மிலி உள்ளுக்குக் கொடுத்து ,இலையையரைத்துக் கடிவாயிலும் கட்ட பாம்புக்கடி விஷம் முறியும்
32.  கார்த்திகைமாதம் 30 நாளும் வேம்பின் துளிரை சாப்பிட்டுவர பாம்பு நஞ்சு நீங்கும். எந்த விடமும் பாதிக்காது
33.  ஆடுதீண்டாபாளை இலை சூரணம்  கால்தேகரண்டி இரவு வெந்நீரில் கொள்ள பாம்பு விஷம்,சில்விஷம்,கருங்குட்டம், யானைதோல் சொறி தீரும் .
34.  ஆடுதீண்டாபாளைவேரை அரைத்துக் காலைமாலை கடும் பத்தியத்துடன் கொள்ள 3 நாளில் எல்லாவிதப் பாம்பு நஞ்சுகளும் நீங்கும்
35. பேய்ச்சுரை,பெருந்தும்பட்டி,சிறுதும்மட்டி,பேய்ப்புடல்,பேய்பீர்க்கு சமூலங்களை உலர்த்திப் பொடித்து,சமன் கலந்து,காலைமாலை,அரைதேகரண்டி,வெந்நீரில் கொள்ள அனைத்து நஞ்சுகளும் நீங்கும்
36.  10கிராம் இலுப்பை பிண்ணாக்கை நீர்விட்டரைத்து,50மிலி நீரில் கரைத்துக் கொடுக்க வாந்தியுண்டாக்கி உண்ட நஞ்சை வெளியாக்கும்.
37.  பொன்னாவாரை வேருடன் மிளகு கூட்டி அரைத்து விழுங்க பாம்பு விஷம் உடனே நீங்கும்
38.  ஈஸ்வரமூலி வேர்40கிராம்,சிதைத்து,8ல்1ன்றாய்க்காய்ச்சி,30மிலி,2, 3 வேளை பருகி, கடிவாயில் இலையை கசக்கித்தேய்க்க பாம்புக்கடி, தேள்கடி விஷம் நீங்கும் 39.  கிரந்திநாயகம் இலைகளை மென்று தின்று,கடிவாயிலும் கட்ட தேள்,பாம்பு நஞ்சு நீங்கும்
40.  சிலந்திநாயகம்சமூலச்சாறு 60மிலி கொடுத்து, இலையையரைத்துக்கட்டி, கடும்பத்தியம் வைக்க அனைத்து பாம்பு நஞ்சும் முறியும் .
41.  சிறுதேட்கொடுக்கிலையை கசக்கி தேள் கொட்டிய இடத்தில் தேய்க்க நஞ்சு இறங்கி, கடுப்பு தீரும்
42.  சப்பாத்திக்கள்ளி வேர்பொடி 10கிராம் கொள்ள பூரான்,வண்டுக்கடி நஞ்சுகள் முறியும். தேள்கடிக்கு கொடுத்து ,காயை வதக்கி கடிவாயில் கட்ட குடைச்சல் தீரும் 43.  பீச்சங்குஇலைச்சாறு 250மிலி கொடுக்க பாம்பு நஞ்சு முறியும்
44.  பிரமதண்டு சமூலச்சாறு 30மிலி கொடுத்து,இலையையரைத்து கடிவாயில் கட்ட பாம்பு விஷம் இறங்கும்.
45.  மாவிலங்கம் வேர்பட்டை கொட்டை பாக்களவு அரைத்துக் கொடுத்துவர பாம்பு நஞ்சு, வண்டு நஞ்சு தீரும்
46. வாகைபூவையரைத்து,சுண்டைக்காயளவு,வெந்நீரில் கலக்கிக் கொடுத்து, கடிவாயிலும் அரைத்துக் கட்ட பாம்பு நஞ்சு நீங்கும்                                                  47.  கிரந்திநாயகம் இலைகளை மென்று தின்று,கடிவாயிலும் கட்ட தேள்,பாம்பு நஞ்சு நீங்கும்.
48.  நாட்டு வெங்காயம் 4 பாதியாக நறுக்கி தட்டையான பாகத்தை கடிவாயில் அழுத்துத் தேய்க்க தேள் கொட்டிய முள் வெளியேறி கடுப்பு நீங்கும்.                                                  49.  எட்டிப்பட்டையில் சிறுதுண்டு,3கல்லுப்பு சேர்த்து மென்று சாறை விழுங்க தேள்விஷம் இறங்கி கடுப்பு தீரும்.                                                     50.  அப்பிரக பற்பம் எருக்கிலைச்சாற்றில் குழைத்துச்சாப்பிட தேள்விஷம் உடனே இறங்கும்.                       
51.  நவச்சாரம்.சமன் சுண்ணாம்பு குழைத்துப் பற்றிட தேள்விஷம் இறங்கும்.கடுப்பு தீரும்.                                                     52.  நாயுருவி விதையைப்பொடித்து நீரில் குழைத்துப் பற்றிட தேள் விஷமிறங்கி கடுப்பு தீரும்.                                                    53.  நாயுருவிவேரை மென்று சாற்றைச் சாப்பிட தேள் விஷமிறங்கி கடுப்பு தீரும்.                                       
54.  அரளிவேரை மையாக அரைத்து கடிவாயில் தடவ தேள்விஷம் இறங்கி கடுப்பு நிற்கும்                                     
55.  தும்பை,துளசி சமன் 1பிடி உள்ளுக்கும் சாப்பிட்டு கடிவாயிலும் அரைத்துக் கட்ட தேள் விஷம் நீங்கி கடுப்பு தீரும்.                                   
56.  கல்உப்பு 1தேகரண்டி,4தேகரண்டி சுத்தமான நீரில் கரைத்து,தேள் உடம்பின் வலப்பக்கம் கொட்டினால் இடது கண்ணிலும்,இடப்பக்கம் கொட்டினால் வலது கண்ணிலும்,நடுமுதுகு,மார்பு,தலையில் கொட்டினால் 2கண்ணிலும் விட்டு, கடிவாயிலும் உப்புக்கரைசலைத் தேய்க்க சுகமுண்டாகும்.                       
57.  ஒரு கொப்பரைத் தேங்காய் அல்லது முற்றின தேங்காய் அல்லது தேங்காய்ப் பால் 1தம்ளர் சுவைத்துச் சாப்பிட நட்டுவாக்காலி விஷம் இறங்கும்.                                             58.  அவுரிவேர்,காஞ்சிரம்வேர் சமன் பொடித்து 5கிராம் வெந்நீரில் சாப்பிட நட்டுவாக்காலி விஷம் நீங்கும்.                                   
59.  அப்பிரகபற்பம் வெள்ளருகுச்சாற்றில் சாப்பிட நட்டுவாக்காலி விஷம் தீரும்.                                                60.  கஞ்சாங்கோரைச்சாறு 200மிலி பருக பாம்பு விஷம் தீரும்.  61. சாரனைவேர்,ஆடுதின்னாப்பாளை,புங்கம்வேர்,சிறுகுறிஞ்சான்,துளசி,சுக்கு, முல்லை சமனெடுத்து,மேனிச் சாற்றிலரைத்து,கடிவாயிலும்,உடம்பிலும் பூச எல்லா வகையான நஞ்சும் நீங்கும். 
62. ஆடுதின்னாப்பாளைவேர்,கவிழ்தும்பைவேர்,மரக்காரைவேர் சமனரைத்து உடம்பில்பூசி குளிக்க விஷம் இறங்கும்.                 
63.  குப்பைமேனிஇலை,உப்பு வகைக்கு150கிராம்,மஞ்சள்30கிராம் சேர்த்தரைத்து உடம்பில்பூசி 1மணிநேரம் கழித்துக் காலையில் குளிக்க (3நாள்) பூரான்கடி தடிப்பு,அரிப்பு தீரும்.                                                      64.  150மிலி வெற்றிலைச்சாறில்,35கிராம் மிளகை ஊறவைத்துப்பொடித்து திரிகடி, காலைமாலை வெந்நீரில் சாப்பிட பூரான்கடி விஷம் நீங்கும்.                 65.  ஆகாசகருடன் கிழங்கை சிறுசின்னி சாற்றிலரைத்து சுண்டைக்காயளவு தினம் 3 வேளை, 3நாள் சாப்பிட பூரான் விஷம் நீங்கும்.                       
66.  தும்பைஇலையை மென்று தின்று,அரைத்துப்பூச செய்யான் விஷம் இறங்கும்.                                67.  அழிஞ்சில் வேர்பட்டை 30கிராம் அரைத்து வெந்நீரில் காலைமாலை 8நாள் சாப்பிட எலிக்கடியால் ஏற்பட்ட இருமல்,இளைப்பு,கோழை,வாந்தி நீங்கும்.                                         
68.  அவுரிவேர் 25கிராம்,150மிலி பசும்பாலில் அரைத்து 8நாள் சாப்பிட்டு, இலையை யரைத்து கடிவாயிலும் கட்ட எலிக்கடியாலேற்பட்ட பல் கருத்தல்,உடல் எரிச்சல் தீரும்.                                     
69.  நீலக்காக்கனம்வேர் 15கிராம் பசுவின்பாலிலரைத்துச் சாப்பிட எலிக்கடியால் உண்டான பல்கருத்தல்,உடல் எரிச்சல் தீரும். 
70.  தகரைவிதையை காடியில் அரைத்துப்பூச எலிக்கடியால் உண்டான கொப்புளம் குணமாகும்.                               
 71.  எலிக்கடியால் வாயில் எச்சில் அதிகம் சுரந்தால் கடுகுரோகிணியும் கற்கண்டும் வகைக்கு 30கிராம் பொடித்துச் சாப்பிட குணமாகும்.                          72.  பச்சை நன்னாரிவேர் அரைத்து 30கிராம்,200மிலி பசும்பாலில் கலந்து பருக எலிவிஷம் முறியும்.                                                73.  ஆதளை சமூலத்தை பசும்பாலிலரைத்து 30கிராம்,200மிலி பாலில் காலையில் சாப்பிட்டு பத்தியமிருக்க 18 வகையான எலிகடி விஷமும் தீரும்.                                             
74.  அப்பிரகபற்பத்தை மலைவேம்புச்சாற்றில் குடிக்க பெருச்சாளிக்கடி விஷம் நீங்கும்.                             
75. கோவையிலை,சுண்டையிலை,மணத்தக்காளியிலை,உப்பு சேர்த்தரைத்து நாய்க்கடிவாயில் வைத்துக்கட்ட விஷம் நீங்கும்.                                   
76.  அழிஞ்சில் பட்டை10கிராம்,துளசிச்சற்றிலரைத்து வெந்நீரில் காலை 3நாள் சாப்பிட நாய்விஷம் தீரும்.                 
77. முருங்கைஈர்க்கு,சுக்கு,மிளகு,வசம்பு சுட்டகரி வகைக்கு 10கிராம் 2ல்1ன்றாய்க் காய்ச்சி வேளைக்கு 50மிலி சாப்பிட நாய்க்கடியால் உண்டான வாந்தி நிற்கும்.                               
78.  கொல்லங்கோவைக்கிழங்கு 10கிராம்,துளசிச்சாறிலரைத்து,வெந்நீரில் பருகி, கடிவாயிலும் கட்ட பூனைக்கடி விஷம் நீங்கும்.     
79.  குப்பைமேனிவேர்ப்பட்டையை பசுவின்பாலிலரைத்து காலைமாலை 7நாள், கழற்சிக்காயளவு சாப்பிட்டு பத்தியமிருக்க பூனை விஷம் நீங்கும்.
80.  அவுரிவேர்பட்டையை வெந்நீரிலரைத்து,கடிவாயிலும்,உடல்முழுதும் தடவ பூனைவிஷம் நீங்கும்.                                                 81.  சுக்கு,வசம்பு சுட்டுகரியாக்கி சமன் கலந்து,15கிராம்,காலைமாலை தேனில் 44 நாள் சாப்பிட அரனைவிஷம் தீரும்.  82. ஆடாதொடையிலை35கிராம்,பச்சைமஞ்சள்20கிராம்,மிளகு10கிராம் துளசிச் சாற்றிலரைத்து 3முறைகட்ட சிலந்திகடி தீரும்.                       
83.  அவுரிசமூலக்குடிநீர் 50மிலி,தினம்2வேளை,7நாள் சாப்பிட சிலந்திவிஷம் நீங்கும்.                                             84.  அவுரி,உத்தாமணி,மேனி இலைகளையரைத்து,கொட்டைப்பாக்களவு,பசு மோரில் சாப்பிட சிலந்திவிஷம் நீங்கும்.   
85. சித்திரமூலம்,வெள்ளைகாக்கணாங்கொடி,அவுரி,வேலிபருத்தி,ஆடுதின்னாப் பாளை   வேர்களை சமனாய் பொடித்து திரிகடி வெந்நீரில் சாப்பிட்டுவர தவளை விஷம் நீங்கி மேனி அழகு பெறும்.                                 
86. வெள்ளாட்டுப்பால்100மிலி,புளித்தமோர்100மிலி கலந்து12நாள் பருக வண்டுக்கடி தீரும்.                                                    87.  ஆடுதீண்டாப்பாளைவேர் சுண்டைக்காயளவரைத்து,200மிலி பசுமோரில் 7நாள் சாப்பிட வண்டுக்கடி தீரும்.                                       
88.  சிறுசின்னி இலை அரைத்து கழற்ச்சிக்காயளவு,200மிலி பசுமோரில் பத்தியத்துடன் 48நாள் சாப்பிட தென்னைமரவண்டு,6புள்ளிவண்டுகடி விஷம் நீங்கும்.                                                 89.  அவுரிவேர்,நன்னாரிவேர் வகைக்கு 15கிராம்,அரைத்து பசுவின்பாலில் பருக குரங்குகடி,மனிதர் கடி விஷம் நீங்கும்.                         
 90.  கொல்லங்கோவைக்கிழங்கை அரைத்துக் கடிவாயில் கட்டி,உள்ளுக்கும் சாப்பிட குரங்குக்கடி,மனிதர்க்கடி விஷம் நீங்கும்.                                     
91.  அமுக்கரா 70கிராம் பொடித்து திரிகடி,தேனில் சாப்பிட்டு,அவுரிச் சமூலத்தை அரைத்து கடிவாயில் 7நாள் கட்ட குதிரை விஷம் நீங்கும். 92. காட்டுவாகைவேர்,இலை,பட்டை,பூ,காய் வெந்நீரிலரைத்து பூச மரவட்டைகடி நீங்கும்.                                         
93. தண்ணீர்விட்டான்கிழங்குச்சாறு 50மிலி தினம்2வேளை பருகிவர மரவட்டைக்கடி விஷம் நீங்கும்.         94.  குப்பைமேனிச்சாறுடன் உப்பு,மஞ்சள் பொடி கலந்து கடிவிஷம், நமைச்சல் உள்ள இடங்களில் தடவ கம்பளிப்பூச்சிக்கடி தீரும்.   
95. வெற்றிலைச்சாறு75மிலி,ந.எண்ணையில் கலக்கிக் குடிக்க கம்பளிப்பூச்சி விழுந்த நீரைக் குடித்ததனால் உண்டான வாந்தி தீரும். 
96. வெற்றிலை,தும்பையிலை,அவுரியிலை,பெருங்காயம்,மிளகு,வசம்பு, வகைக்கு 10கிராம் சிறுகுழந்தை சிறுநீர்விட்டு தட்டிப் பிழிந்து காதிலும், மூக்கிலும் நசியமிட சகல விஷக்கடிகளாலும் பேச்சுமூச்சின்றிக் கிடந்தால் விஷம் நீங்கி உணர்வு உண்டாகும்.                                          97.  ஆமணக்குஇலையும் மிளகும் சேர்த்தரைத்து மணிக்கொருதடவை கொடுக்க பாம்பு விஷம் நீங்கும்.ஏறாது.வாந்தியாகும்.        98.  பூரான்,அரனை கடித்தவுடன் சிறிது பனைவெல்லம் சாப்பிட விஷம் முறியும்.   

*👩🏻‍⚕️அம்மா🩺மருத்துவம்👨🏽‍⚕️*
               
99. ஆடாதோடை,பச்சைமஞ்சள்,மிளகு சேர்த்தரைத்துக் கடிவாயில் கட்ட சிலந்தி விஷம் உடனே முறியும்.                                          100.குப்பைமேனிச்சாறும் சுண்னாம்பும் குழைத்துப்பூச எந்த விஷக்கடி வீக்கமும் வடியும்.                                                 101.35கிராம் பூவரசம்பூவை 1லி நீரில் 250மிலியாகக் காய்ச்சி காலை மாலை 100மிலி பருகிவர கானாக்கடியால் ஏற்பட்ட நமைச்சல்,தடிப்பு குணமாகும்.                                         102.மிளகும் வெல்லமும் சேர்த்து சாப்பிட்டு பின்னர் வாந்தியாகும்வரை நீர் அருந்த பல்லி,அரனை போன்ற சிறுவிஷங்கள் முறியும்.                     103.எருக்கம்பாலை கடிவாயில் தடவ நாய் விஷம் ஏறாது முறியும். 104.வெள்ளைக்கடுகை ஊறவைத்தரைத்து,நெல்லிக்காயளவு கொடுக்க வாந்தியுண்டாக்கி உண்ட நஞ்சு  வெளியேறும் 105.தும்பைஇலை,பூ சாறுபிழிந்து 20மிலி உள்ளுக்குக்கொடுத்து, கடிவாயிலும் பூச தேள்கடி,சிறுகடிவிஷங்கள் இறங்கும்.                   
106.நாயுருவி வேரை மென்று சாற்றை விழுங்க தேள்விஷம் இறங்கும்.  . 107.வெள்ளைஅரளிபூ,புகையிலை,ஏலதூள் சமனரைத்து நசியமிட  பாம்பு விஷம் இறங்கும்.                                             108.அருகம்புல்லை அரைத்துக்கட்ட பாம்பு விஷம் இறங்கும். 109.பெரியாநங்கையிலையை சாப்பிட்டு உப்பில்லா பத்தியமிருக்க பாம்பு விஷம் இறங்கும்.                   110.முருங்கையிலைச்சாறு,முற்றிய தேங்காய்ப்பால் சமன் கலந்து தினம் 50மிலி கொடுக்க இடுமருந்து முறியும் 3வேளை.
111. மஞ்சள்,துளசியிலை சேர்த்தரைத்து கடிவாயில் பூசி உள்ளுக்கும் சாப்பிட்டுவர                                              எட்டுக்கால் பூச்சி விஷம் தீரும் 112.அருகம்வேர்30கிராம்,சிறுகீரைவேர்15கிராம்,மிளகு5கிராம்,சீரகம்5கிராம்,1லிநீரில் கால் லி ஆக காய்ச்சி பால் கற்கண்டு சேர்த்து பருக மருந்துவீறு தணியும். 113.ஆலம்பட்டை,அவுரிப்பட்டை,அத்திப்பட்டை வகைக்கு40கிராம்,மிளகு10கிராம், இடித்து 8லி நீரிலிட்டு 2லி ஆக காய்ச்சி 250மிலி தினம் 3வேளை குடித்துவர பாதரச பாஷாணங்கள் வேகம் குறையும். 
114.அமுக்கரா தூள் அரைத்தேக்கரண்டி இரண்டு வேளை நாற்பத்தெட்டு நாள் எடுக்க எலி விஷம் முறியும் 115.நிலாவரை தூள் ஐந்து கிராம் குப்பை மேனி சாற்றில் மூன்று வேளை அருந்த தேள் விஷம் முறியும்
116.தேங்காய் துருவி பால் எடுத்து இருநூறு மிலி அருந்த விஷம் தேள் முறியும்.
117.அவுரி பத்துகிராம் வெந்நீரில் கலக்கி ஒருவேளை மூன்று நாள் அருந்த எலி விஷம் முறியும் . 118.சிறுகுரிஞ்சான் ஒருகிராம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க மனிதன் கடி விஷம் நீங்கும். 119.சிவனார் வேம்பு ஒருகிராம் ஒருவேளை மூன்று நாள் எடுக்க மனிதன் கடி விஷம் நீங்கும் 120.சிரியா நங்கை அரைதேக்கரண்டி வீதம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க மனிதன் கடி விஷம் நீங்கும். 121.பொன்னாவிரை கால் தேக்கரண்டி உணவுக்கு பின் ஒருவேளை மூன்று நாள் எடுக்க மனிதன் கடி விஷம் நீங்கும். 122.ஆடு தீண்டா பாளை வேர் நூறு கிராம் , பொடித்து ஐந்து கிராம் அளவு நாளும் இரண்டுவேளை எட்டுநாள் உண்ண வண்டுகடி விஷம் நீங்கும்.
123.தேங்காய் துருவி சாறு எடுத்து நூறு மிலி அருந்த விஷம் செய்யான் நீங்கும்.

124.எட்டி கொட்டை எடுத்து பால்விட்டரைத்து பாலில் அருந்த செய்யான் விஷம் முறியும். 125.குப்பை மேனி சாறு பத்து மிலி கொடுத்து சுட்ட உப்பு சுட்டபுளி உடன் உணவு எடுக்க பூரான் விஷம் நீங்கும்.
126.சிரியாநங்கை  சாறு அல்லது அரைத்து ஐந்து கிராம் எடுக்க பூரான் .விஷம் முறியும் .

127.பனை வெல்லத்தை (கருப்பட்டி) சாப்பிட பூரான் கடி தடிப்பு, அரிப்பு உடனே மாறும். 128.நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சமமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து எலுமிச்சை அளவிற்குக் காலை மாலை பத்து நாள் உட் கொள்ள வெறிநாய்க்கடி குணமாகும்.
129.சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்ட நஞ்சு இறங்கி விடும்.
130.குப்பை மேனி இலையை கசக்கிச் சாறு எடுத்துத் தேள் கடித்த இடத்தில் தடவி கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும். 131.நாயுருவியின் விதை வீசம் படி எடுத்து வெயிலில் காய வைத்துப் பொடி செய்து மூக்குப் பொடி அளவு எடுத்துத் தேனில் குழைத்துக் காலை மாலை 25 நாட்கள் சாப்பிட எலி, பெருச்சாளி, மூஞ்சுறு, தேள், பூரான் நஞ்சு நீங்கும்.

132.எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து, கடிவாயில் எலுமிச்சைப் பழ இரசத்தையும் உப்பையும் கலந்து தடவ தேள் கடி நஞ்சு இறங்கி விடும்.

133.வெள்ளைபூண்டை அரைத்து கடிவாயில் கட்ட வண்டு,பூச்சிக்கடி விஷம் முறியும்.,சிறுகீரைவேர்15கிராம்,மிளகு5கிராம்,சீரகம்5கிராம்,1லிநீரில் கால் லி ஆக காய்ச்சி பால் கற்கண்டு சேர்த்து பருக மருந்துவீறு தணியும்.

113.ஆலம்பட்டை,அவுரிப்பட்டை,அத்திப்பட்டை வகைக்கு40கிராம்,மிளகு10கிராம், இடித்து 8லி நீரிலிட்டு 2லி ஆக காய்ச்சி 250மிலி தினம் 3வேளை குடித்துவர பாதரச பாஷாணங்கள் வேகம் குறையும். 

114.அமுக்கரா தூள் அரைத்தேக்கரண்டி இரண்டு வேளை நாற்பத்தெட்டு நாள் எடுக்க எலி விஷம் முறியும் 115.நிலாவரை தூள் ஐந்து கிராம் குப்பை மேனி சாற்றில் மூன்று வேளை அருந்த தேள் விஷம் முறியும்

116.தேங்காய் துருவி பால் எடுத்து இருநூறு மிலி அருந்த விஷம் தேள் முறியும்.

117.அவுரி பத்துகிராம் வெந்நீரில் கலக்கி ஒருவேளை மூன்று நாள் அருந்த எலி விஷம் முறியும் .

118.சிறுகுரிஞ்சான் ஒருகிராம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க மனிதன் கடி விஷம் நீங்கும்.

119.சிவனார் வேம்பு ஒருகிராம் ஒருவேளை மூன்று நாள் எடுக்க மனிதன் கடி விஷம் நீங்கும் 120.சிரியா நங்கை அரைதேக்கரண்டி வீதம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க மனிதன் கடி விஷம் நீங்கும்.

121.பொன்னாவிரை கால் தேக்கரண்டி உணவுக்கு பின் ஒருவேளை மூன்று நாள் எடுக்க மனிதன் கடி விஷம் நீங்கும்.

122.ஆடு தீண்டா பாளை வேர் நூறு கிராம் , பொடித்து ஐந்து கிராம் அளவு நாளும் இரண்டுவேளை எட்டுநாள் உண்ண வண்டுகடி விஷம் நீங்கும்.
123.தேங்காய் துருவி சாறு எடுத்து நூறு மிலி அருந்த விஷம் செய்யான் நீங்கும்.

124.எட்டி கொட்டை எடுத்து பால்விட்டரைத்து பாலில் அருந்த செய்யான் விஷம் முறியும். 125.குப்பை மேனி சாறு பத்து மிலி கொடுத்து சுட்ட உப்பு சுட்டபுளி உடன் உணவு எடுக்க பூரான் விஷம் நீங்கும்.

126.சிரியாநங்கை  சாறு அல்லது அரைத்து ஐந்து கிராம் எடுக்க பூரான் .விஷம் முறியும் .
127.பனை வெல்லத்தை (கருப்பட்டி) சாப்பிட பூரான் கடி தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.

128.நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சமமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து எலுமிச்சை அளவிற்குக் காலை மாலை பத்து நாள் உட் கொள்ள வெறிநாய்க்கடி குணமாகும்.

129.சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்ட நஞ்சு இறங்கி விடும்.

130.குப்பை மேனி இலையை கசக்கிச் சாறு எடுத்துத் தேள் கடித்த இடத்தில் தடவி கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும்.

131.நாயுருவியின் விதை வீசம் படி எடுத்து வெயிலில் காய வைத்துப் பொடி செய்து மூக்குப் பொடி அளவு எடுத்துத் தேனில் குழைத்துக் காலை மாலை 25 நாட்கள் சாப்பிட எலி, பெருச்சாளி, மூஞ்சுறு, தேள், பூரான் நஞ்சு நீங்கும்.

132.எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து, கடிவாயில் எலுமிச்சைப் பழ இரசத்தையும் உப்பையும் கலந்து தடவ தேள் கடி நஞ்சு இறங்கி விடும்.
133.வெள்ளைபூண்டை அரைத்து கடிவாயில் கட்ட வண்டு,பூச்சிக்கடி விஷம் முறியும்.