வெள்ளி, 30 செப்டம்பர், 2016

நீங்கள் எந்த அளவு அதிர்ஷடசாலி இதை படிங்க

நீங்கள் எந்த அளவு அதிர்ஷடசாலி இதை படிங்க:-

இதைப் படிப்பதால்.. உங்கள் வாழ்க்கை முறை.. கவலைகள் பழக்க வழக்கங்களில் கூட மாற்றம் ஏற்படலாம்...

* உண்ண உணவும்.. உடுத்த உடையும்.. வசிக்க இடமும் உனக்கு இருந்தால்.. உலகில் உள்ள 75% மக்களை விட.. நீ வசதி பெற்றிருக்கிறாய்..!!

* வங்கியில் பணமிருந்தால்.. அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள்.. நீயும் ஒருவன்..!! உலகில் உள்ள 80% மக்களுக்கு வங்கி கணக்கே இல்லை..!!

* உன்னிடம் கணிப்பொறி இருந்தால்.. நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற.. 1% மனிதர்களுள் ஒருவன்..!!
நினைத்த நேரத்தில்.. நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால்.. அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும்.. 175 கோடி மக்களை விட நீ மேலானவன்..!!

*நோயின்றி காலையில்.. புத்துணர்வுடன் நீ எழுந்தால்.. அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலையே.. உயிர் துறந்த பலரை விட.. நீ பாக்கியசாலி..!!

* பார்வையும்,, செவித் திறன்,, வாய் பேசாமை.. உள்ளிட்ட எந்த குறைபாடுகளும்.. இல்லாது நீ இருந்தால்.. அவ்வாறு உள்ள உலகில் உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய்..!!

* போர்,, பட்டினி,, சிறைத்தண்டனை போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால்.. உலகில் உள்ள 70 கோடி மக்களுக்கு கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என அறிந்து கொள்..!!

*கொடுமைகளுக்கு உள்ளாகாமல்.. நீ விரும்பும் தெய்வத்தை தொழ முடிந்தால்.. உலகில் உள்ள 300 கோடி மக்களுக்கு கிடைக்காத சலுகையை நீ பெற்றுள்ளாய்..!!

* உன் பெற்றோரை பிரியாமல் அவர்களுடன் இருந்தால்.. நீ துன்பத்தை அறியாதவன் என்பதை புரிந்து கொள்..!!

* தாகம் எடுத்தால் குடிப்பதற்கு.. உங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறதா..?
அப்படியெனில் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்..!!
ஏனெனில் உலகம் முழுதும்.. சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு.. பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை..!!

* கல்வி அறிவு பெற்று.. இந்த செய்தியை உன்னால் படிக்க முடிந்தால்.. அவ்வாறு செய்ய இயலாத 80 கோடி பேர்களுக்கு கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய்..!!
உலக அளவில் எழுத படிக்க தெரியாத.. மக்களின் எண்ணிக்கை மட்டுமே 80 கோடிக்கும் மேல்..!!

* இணையத்தில் இந்த செய்தியை.. உன்னால் படிக்க முடிந்தால்.. அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்..!!

* உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால்.. அவ்வாறு செய்ய இயலாத அளவுக்கு தைரியமும்.. நம்பிக்கையும் இல்லாதவர்களை விட.. நீ கொடுத்து வைத்தவன்..!!

* நீங்கள் அனுபவித்து வரும்.. வசதிகளையும்.. தொழில்நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல்.. ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல்.. கோடிக்கணக்கானோர் இவ்வுலகில் இருக்க.. ஆண்டவன் இவ்வளவு விசயம் உங்களுக்கு.. கொடுத்திருக்கும் போது.. நீங்கள் அதிர்ஷடசாலி இல்லையா பின்ன..??

* நீங்கள் அதிர்ஷடசாலி தான்..!!
வீண் கவலைகளை விட்டு.. அந்த கவலைகளை காரணம் காட்டி குடும்பத்தில் குழப்பங்கள்.. போதை பொருட்கள்.. என்பவற்றை விட்டு.. விட்டு
நான் அதிர்ஷடசாலி என்ற தைரியத்தோடு.. இயன்றவரை மற்றவர்களுக்கு உங்களால் முடிந்த வரை உதவுங்கள்..!!
உங்கள் வாழ்க்கை மேலும் அழகாகும்...

சில மனோதத்துவ உண்மைகள்..

நம்மை ஆச்சரியப்பட வைக்கும் சில மனோதத்துவ உண்மைகள் குறித்து  காண்போம்.

1/10
உண்மை #1
3 நாட்களுக்கு மேல் ஒருவர் மீது கோபம் என்பது சாத்தியமற்றது. ஒருவேளை 3 நாட்களுக்கு மேல் கோபம் நீடித்தால், அது அவர்கள் மீது அன்பு இல்லை என்பதை வெளிக்காட்டும்.

2/10
உண்மை #2
உண்மையான அன்பை ஒருவர் உங்கள் மீது கொண்டிருந்தால், உங்களது வலியை உங்கள் கண்களைக் கொண்டே அறிந்து கொள்வார்கள். என்ன தான் நீங்கள் வெளியே போலி சிரிப்பை மேற்கொண்டாலும் அறிவார்கள்.

3/10
உண்மை #3
ஆண் மூளை, பெண் மூளை என்று இரு வேறு மூளைகள் உள்ளன என்று மூளையைப் பற்றிய கட்டுக்கதை ஒன்று உள்ளது. உண்மையில் அப்படி ஏதும் இல்லை.

4/10
உண்மை #4
சிறு வயதில் ஆண்களை விட பெண்கள் மிகவும் வேகமாக வாக்கியம் அமைத்துப் பேசுவார்கள். அதனால் தான் பெண்கள் அதிகமாக பேசுகிறார்கள்.

5/10
உண்மை #5
முத்தம் கொடுத்தால், வாழைப்பழம் அல்லது சாக்லேட் சாப்பிட்டால் மற்றும் சூயிங் கம் மென்றால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது தெரியுமா? ஆனால் இது உண்மையே.

6/10
உண்மை #6
பிறக்கும் போது நம் கண்கள் எந்த அளவில் இருந்ததோ, வளர்ந்தாலும் அதே அளவில் தான் இருக்கும். ஆனால் காதுகள் மற்றும் மூக்குகள் குறிப்பிட்ட வயது வரை வளரும்.

7/10
உண்மை #7
இனிப்புக்களையும், சாக்லேட்டுக்களையும் அதிகம் விரும்பி சாப்பிடுபவர்கள் மகிழ்ச்சியானவர்களாகவும், வெளிப்படையாக பேசும் சுபாவம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

8/10
உண்மை #8
ஒருவர் சிங்கிளாக இருக்கும் போது, சந்தோஷமான தம்பதிகளையும், காதலில் விழுந்த பின் சந்தோஷமான சிங்கிளையும் காணக்கூடும் என மனோதத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது.

9/10
உண்மை #9
ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 3000 சிந்தனைகளைக் கொண்டிருப்பான் என்பது தெரியுமா?

10/10
உண்மை #10
உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றொரு வழி குளிக்கும் போது பாட்டு பாடுவது. உண்மையில் இவ்வாறு செய்யும் போது, மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்றவை குறைந்து, மனநிலை மேம்படும்

நல்ல பழக்கங்கள்...

நல்ல பழக்கங்கள்...

*🍁நகத்தை பற்களால் கடிக்க கூடாது.*
  *🍁மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது.*
  *🍁தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது.*
*🍁துணி இல்லாமல் குளிக்கக் கூடாது.*
*🍁நெருப்பை வாயினால் ஊதக்கூடாது.*
*🍁செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சதுர்த்தி, சதுர்த்தசி, சஷ்டி, பௌர்ணமி, நவமி ஆகிய திதிகளில் முடிவெட்டுதல் கூடாது ஆனால் அந்தத் திதி அமையும் நாள் ஞாயிறு அல்லது வியாழனாயிருந்தால் மேற்படிதிதி தோஷம் இல்லை.*
*🍁அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது. அத்துடன் துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷத்தை உண்டாக்கும்.*
*🍁ஆலயத்தில் இரவுநேரத்தில் குளிக்கக்கூடாது. கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம். ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது, உதறக்கூடாது*
*🍁தண்ணீரிலும், எண்ணெய்யிலும் நம் நிழலை நாம் பார்க்கக்கூடாது.*
*🍁இருட்டிலோ, நிழல் விழும் இடங்களிலோ அமா்ந்து உண்ணக்கூடாது.வெளிச்சத்தில் அமா்ந்தே உண்ணவேண்டும்.*
*🍁உண்ணும்போது முதலில் இனிப்பையும், முடிவில் கசப்பையும் உண்ணவேண்டும்.*
*🍁ஈர ஆடையுடனும், தலைமுடியை அவிழ்த்துவிட்டும் உண்ணக்கூடாது.*
*🍁நெல்லிக்காய், இஞ்சி, தயிா், வறுத்தமா. இவற்றை இரவில் உண்ணக் கூடாது.*
*🍁உறவினர்களை ஊருக்கு அனுப்பிவிட்டு உடனே எண்ணெய் தேய்த்து நீராடக் கூடாது.*
*🍁கன்றுக்குட்டி,மாடு ஆகியவை கட்டியிருக்கும்கயிற்றை தாண்டக்கூடாது.*
*🍁பெண்கள் கண்ணீா்விடும் வீட்டில் செல்வம் தங்காது. அவா்கள் தலையை விாித்துப்போட்டிருப்பதும், இரு கைகளாலும் தலையை சொறிவதும் வறுமையை உண்டாக்கும்.*
*🍁தன்தாய், தந்தை பிணத்தை தவிர பிறபிணங்களை பிரம்மச்சாாி சுமந்து செல்லக்கூடாது.*
*🍁தன்மனைவி கருவுற்றிருக்கும் காலத்தில் கணவன் அந்நியா் பிணத்தை சுமந்து செல்லக்கூடாது. ஆனால் தன்தாய், தந்தை, பிள்ளையில்லாத சகோதரன், பிள்ளையில்லாத மாமன் ஆகியோாின் பிணத்தை சுமக்கலாம்.*
*🍁தீட்டு உள்ளவா்கள் கட்டிலில் படுக்க கூடாது. தரையில் தான் படுக்க வேண்டும்.*
*மாலைவெயில், ஓமப்புகை, தூயநீா்பருகுதல், இரவில் பாற்சோறு சாப்பிடுதல் என்பன ஆயுளைவிருத்தி செய்யும்.*

உங்கள் யாவருக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள். இந்த நல்ல செய்தி நாடு முழுதும் செல்ல நீங்கள் ஒவ்வொருவரும் ஐந்து ஐந்து பேர்களுக்கு ஒரு சங்கிலி தெடர் போல் அனுப்பும்படி கேட்டுக் கொள்ளுங்கள்.

வியாழன், 29 செப்டம்பர், 2016

உடல் சங்கேதமும் அதன் பாதிப்புகளும் :-

உடல் சங்கேதமும் அதன் பாதிப்புகளும் :-
**************************"********
உங்கள் முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் --- உங்கள் கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.

**உங்களுக்கு வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் --- உங்கள் கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.

**உங்கள் கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் --- உங்களுக்கு ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.

**உங்களது காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் --- உங்களுக்கு காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.

**உங்கள் கைமடிப்பு,கழுத்து மடிப்பு,கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால் --- உங்கள் கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.

**உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் --- அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.

**உங்கள் கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால்-- - உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்.

**உங்கள் முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால் --- உடலில் அதிக எடை கூடிவிட்டது அதனை குறைக்கவேண்டும் என அர்த்தம்.

**தொடர்ந்து உங்களது முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால் --- அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.

**உங்கள் உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு,பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால் --- உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்பசையும்  குறைந்துவிட்டது என அர்த்தம்.

**உங்கள் தோள்பட்டை, முதுகுத்தாரை,குதிங்கால் இவற்றில் இருக்கமோ வலியோ வந்தால் --- உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.

**உங்கள் கைவிரல் கண்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால் --- இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்.

**என்னிடம் இருந்து உங்களுக்கு  மெசேஜ் வந்தால் - நல்லதை அறிந்து கொள்ளுங்கள் என அர்த்தம்.

மனஅழுத்தம் இன்றி வாழ வழி முறைகள்.!

🎈மனஅழுத்தம் இன்றி வாழ வழி முறைகள்.!
====================================

🎈* காலையில்  முன்னதாகவே எழுந்துவிடுங்கள்.

🎈* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

🎈* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

🎈* காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

🎈* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.செய்யவேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.

🎈* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

🎈* வேலை செய்யாதவைகளைக் கட்டி அழாதீர்கள். சரி செய்ய முயலுங்கள் காலணிஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும்.

🎈* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

🎈* காஃபி , டீ  அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.

🎈* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதை- இதைச் செய்வேன் என்பது போன்றவை.

🎈* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

🎈* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

🎈* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

🎈* சற்று நேரம் கைபேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்துவிடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்தத்தொந்தரவும இன்றி.

🎈* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் , ‘மன்னிக்கவும்.. என்னால ்செய்ய இயலாது’ என்று சொல்லப்பழகுங்கள்.

🎈* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

🎈* எளிமையாக வாழுங்கள்.

🎈* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

🎈* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.

🎈* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தை த்தரும்.

* ஆழமாக , நிதானமாக  மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள்.

🎈* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

🎈* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

🎈* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

🎈* பிறருக்காக எதையேனும   செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

🎈* என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

🎈* உங்கள் உடை, நடை பாவனைகளினல் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

🎈* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

🎈* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதைப் புத்துணர்ச்சியாக்குங்கள்.

🎈* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

🎈* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

🎈*மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப் படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

🎈இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்குவசப்படும்.

புதன், 28 செப்டம்பர், 2016

நவராத்திரி கொலு வைக்கும் முறைகள்...

நவராத்திரி கொலு வைக்கும் முறைகள்...

நவராத்திரியின் சிறப்பு அம்சம்
கொலு வைப்பதேயாகும்.
கொலு
என்பது பல படிகளை கொண்ட
மேடையில் பலவித பொம்மைகளை
நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும்.
ஐம் பூதங்களி ல் ஒன்றான
மண்ணினால் செய்யப்பட்ட
பொம்மைகளை சக்தியின்
அம்சங்களாக எண்ணி நவராத்திரியில்
பூசிப்பவர் களிற் கு சகல நலங்களையும்
தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றா.
இனி நவராத்திரி கொலு எப்படி
அமைக்க வேண்டு ம் என்று பார்ப்போம்.
கொலு மேடை 9 படிகள்
கொண்டதாக இருக்க வேண்டும்.
1
. முதலாம் படி :–
ஓரறிவு உயிர்களான புல், செடி,
கொடி போன்ற தாவரங்களின்
பொம்மைகள்.
2. இரண்டாம் படி:-
ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு
போன்ற பொம்மைகள்.
3. மூன்றாம் படி :-
மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு
போன்ற வற்றின் பொம்மை
கள்.
4. நாலாம்படி :-
நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு
,வண்டு போன்றவற்றின் பொம்
மைகள்.
5. ஐந்தாம்படி :-
ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள்
ஆகி யவற்றின் பொம்மைகள
6. ஆறாம்படி :-
ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.
7. ஏழாம்படி :-
மனித நிலையிலிருந்து உயர்நி லையை அடைந்த
சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர்,
வள்ளலார்) போன்றோரின் பொ
ம்மைகள்.
8. எட்டாம்படி :-
தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக
அதிபதிகள் போன்ற தெய்வங்கள்
தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.
9. ஒன்பதாம்படி :-
பிரம்மா, விட்ணு, சிவன் ஆகியோர்
அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக
ஆதிசக்தி வை க்கவேண்டும்.
மனிதன் படிப்படியாக உயர்ந்து
தெய்வ நிலை யை அடைய வேண்டும்
என்பதற் காகவே இப் படி கொலு
அமைப்பது வழக் கம்.
நவராத்திரி வழிபாட்டு முறை.
1. முதலாம் நாள் :-
சக்தித்தாயை முதல்நாளில்
சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும்.
தெத்துப்பல் திருவாயும்,
முண்டமாலையும் அணிந்தவள். முண்டன்
என்ற அசுரனை சம்ஹாரம் செய்த
சக்தி அவள். இதனால் சாமுண்டா
எனவும் அழைப்பர். இவள்
மிகவும் கோபக்காரி. நீதியைக் காக்கவே
இவள் கோபமாக உள்ளாள். மற்றும்
இவளது கோபம் தவறு செ ய்தவர்களை
திருத்தி நல் வழிபடுத் தவே ஆகும்.
மதுரை மீனாட்சி அம்மனை முதல் நாளில்
அண்ட சராசரங்களைக் காக்கும
ராஜராஜேஸ்வரி அம்மனாக
அலங்கரிப்பர்.
முதல்நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப்
பொங்கல்.
2. இரண்டாம் நாள் : –
இரண்டாம் நாளில் அன்னையை வரா ஹி
தேவியாக கருதி வழிபடவேண்டும். வராஹ
(பன்றி)முகமும் தெத்து பற்களும்
உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுத
ங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை
தாங்கியிருப்பவள். தனது தெத்து
பற்களால் பூமியை தூக்கியிருப்பவள்.
இவளிற்கு மங்கள மய நாராயணி,
தண்டினி, பகளாமுகி போ ன்ற
திருநாமங்களும் உண்டு. இவள் அன்
னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில்
லி சூனியம், எதிரிகள்
தொல்லையிலிருந்து விடுபட இவளின்
அருளைப் பெறுவது அவசியம்.
மதுரை மீனாட்சி அம்மன் இன்று விறகு விற்ற
லீலையில் காட்சி அளிப்பாள். அதாவது
சுந்தரர் விற்றவிறகை மீனாட்சி அம்மன்
தலையில் ஏற்றும் படலம் நடக்கும். குடும்ப
பாரத்தை கணவனுடன் சேர்ந்து மனைவியும்
சுமக்க வேண்டும் என்ற தத்து வத்தினை
வலியுறுத்துவ தாக நாம் கருதலாம்.
இரண்டாம் நாள் நைவேத்தியம் :-
தயிர்ச்சாதம்.
3. மூன்றாம் நாள் :-
மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திரா
ணியாக வழிபட வேண் டும். இவளை
மாஹேந்தரி, சாம் ராஜ தாயினி என்றும்
அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள்.
கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள்.
ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம்
கொண்டவள். விருத்திராசுரனை
அழித்தவள். தேவலோக த்தை பரிபா லனம்
செயபவளும் இவளே யாகும்.
பெரிய பெரிய பதவிகளை அடைய
விரும்புப வர்களிற்கு இவளின் அருட்பார்வை
வேண்டும். மற்றும் வேலையில்லாதவரிற்கு வேலை
கிடைக்க, பதவியில் உள்ளவரிற்கு பதவியுயர்வு,
சம்பள
உயர்வு கிடைக்க அருள் புரிபவளும் இவளே
யாகும்.
இன்று மீனாட்சி அம்மன் கல்யானைக்கு
கரும்பு கொடுத்த
அலங்காரத்தில் காணப்படுவார்.
மூன்றாம் நாள் நைவேத்தியம் :-
வெண் பொ ங்கல்.
4. நான்காம் நாள் :-
சக்தித்தாயை இன்று வைஷ்ணவி தேவியாக
வழிபட வேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில்
ஆகியவற்றை கொண்டிருப்பவள்.
தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின்
வாகனம் கருடன்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருமண
கோலத்தில் காட்சி
யளிப்பார்கள்.
நான்காம் நாள் நைவேத்தியம் :- எலுமிச்சை
சாதம்.
5. ஐந்தாம் நாள் :-
ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி
தேவி யாக வழிபடவேண்டும். அன்னை
மகேஸ்வரனின் சக்தியா வாள். திரிசூலம்,
பிறைச் சந்திரன், பாம்பு தரித்து இடப
வாகனத்தில் எழுந்த ருளியிருப்பவள்.
அளக்கமுடியாத பெரும் சரீரம்
உடையவள். சர்வ மங்களம் தருபவள்.
தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளி
கள் உழைப்பின் முழுப்பலனை பெற
அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் நாரைக்கு
மோட்சம் கொடுத்த
அலங்காரத்தில் காட்சி யளிப்பார்
கள்.
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- புளியோதரை.
6. ஆறாம் நாள் :-
இன்று அன்னையை கவுமாரி தேவி யாக
வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல்
கொடியும் உடையவள். தேவ சேனா
திபதியான முருக னின் வீரத்திற்கு
ஆதாரமானவள். ஓங்கார
சொரூபமானவள். சகல
பாவங்களையும் விலக்கி டுபவள். வீரத் தை
தருபவள்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன்
பாணணிற்கு அங்கம் வெட்டிய
அலங் காரத்தில் அருள்புரிவார்கள்.
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :-
தேங்காய்ச்சாதம்.
7. ஏழாம் நாள் :-
ஏழாம்நாள் அன்னையை மகா லட்
சுமியாக வழிபட வேண்டும். கையில்
ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில்,
கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டா
யுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு,
சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை,
கமண்டலம் ஆகியவற்றைக்
கொண்டிருப்பவள். விஷ்ணு
பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த
நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில்
அமர்ந்து சகல ஐசவரியங்களையும்
தருபவள் அன்னை யாகும்.

ன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவ சக்தி
கோலத்தில் மக்களிற்கு அருள்
பாலிப்பார்கள்.
ஏழாம் நாள் நைவேத்தியம் :- கல்க்
கண்டுச் சாதம்.
8. எட்டாம் நாள் :-
இன்று அன்னையை நரசிம்ஹி ஆக
வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம
தலையும் உடையவள். கூரிய நகங்களுடன்
சங்கு,
சக்கர தாரிணியாக சிம்ம
வாகனத்தில் காட்சி தருபவள். சத்ரு
க்கள் தொல்லையில் இருந்து விடுபட
அன்னையின் அருள் வேண்டும்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் மகிஷா
சுர மர்த்தினி அலங்காரத்தில்
காட்சியளிப்பார்கள்.
எட்டாம் நாள் நைவேத்தியம் :- சர்க் கரைப்
பொங்கல்.
9. ஒன்பதாம் நாள் :-
இன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழி பட
வேண்டும். அன்ன வாகனத்தில் இரு
ப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள்.
ஞானசொரூபமானவள்.
கல்விச் செல்வம் பெற அன்
னையின் அருள் அவசியமாகும்.
இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவபூசை
செய்யும் கோலத்தில் அருளாட்சி
புரிவார்கள்.
ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :- அக்கர
வடசல்.