செவ்வாய், 31 ஜூலை, 2018

குழந்தைகளுக்கு கொடுக்கும் தாய்ப்பாலின் மாண்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

குழந்தைகளுக்கு கொடுக்கும் தாய்ப்பாலின் மாண்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

குழந்தைக்குத் தாய்ப்பாலை ஊட்ட வேண்டிய ஊக்கத்தையும் சூழ்நிலையையும் பெற்ற தாய்க்கு நாம் ஏற்படுத்த வேண்டும். அதற்கு வேண்டிய மனநலம், சத்துணவு, தண்ணீர், போதிய நம்பிக்கை யாவையும் தாய்க்குக் குறையாமல் அமைய ஊக்குவிக்க வேண்டும். குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே தாய்ப்பாலை ஊட்டத் தொடங்கலாம். குழந்தை பசிக்காக அழும்போதெல்லாம் பால் கொடுப்பதே சிறந்த முறையாகும்.
குழந்தை இரண்டு அல்லது மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை பால் அருந்தும். ஒவ்வொரு முறையும் முதலில் சில மணித்துளிகளே குடிக்கும். பிறகு 15 முதல் 20 மணித்துளிகள் தொடர்ந்து பால் அருந்தும். பசிக்காகக் குழந்தை அழுதால் குழந்தைக்குப் பால் கொடுப்பதில் தவறில்லை. சில குழந்தைகள் இரவு நேரங்களிலும் பாலுக்காக அழும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இப்பழக்கம் தானே நின்று விடும்.
credit:Breastfeeding Support
இயல்பாகவே குழந்தைகள் தாமாகவே தமக்கென்ற ஒரு நெறிமுறைக்கு வந்துவிடும். இரண்டு, மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பால் அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும். இரண்டு, மூன்று மாதத்திற்கு மேல் இரவில் பால் அருந்துவதையும் நிறுத்தி நிம்மதியாக உறங்கும்.

ஒவ்வொரு பக்கமாகக் குழந்தைக்கு முழுமையாகப் பால் ஊட்ட வேண்டும். குழந்தை ஒழுங்காகப் பாலை உறிஞ்சுமானால் பால் சுரப்பது எளிதாகும். ஒவ்வொரு முறையும் முழுமையாக உறிஞ்சிப் பாலுண்ணும் திறனை இயல்பாகவே குழந்தைக்குக் கற்பிக்கலாம். குழந்தைக்குப் போதுமான வசதியான உடை அணிவது அவசியம். குழந்தையை வெது வெதுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் அதிகரிக்க சாப்பிட வேண்டிய 25 எளிய வகை உணவுகள்!





தாய்ப்பால் அதிகரிக்க சாப்பிட வேண்டிய 25 எளிய வகை உணவுகள்!



குழந்தைகளுக்கு குறைந்தது முதல் ஆறு மாதம் வரையாவது கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியமாகும். குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்ப்பால் மூலமாக மட்டுமே கிடைக்கிறது. எனவே தாய்ப்பாலை நிறுத்திவிடாமல் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். மருத்துவர் அறிவுரையின் பெயரில் மட்டுமே தாய்ப்பாலை நிறுத்த வேண்டும். மற்றபடி எந்த காரணத்திற்காகவும் தாய்ப்பாலை நிறுத்துவது என்பது தவறு.

சில பெண்கள் தங்களது அழகு குறைந்து 
விடும் என்று நினைத்து தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விடுகின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறான ஒரு சிந்தனையாகும். இவ்வாறு செய்வதால் குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். தாய்ப்பாலுக்கு நிகரான சத்தை எந்த ஒரு உணவும் கொடுத்துவிட முடியாது.
தாய்ப்பால் கொடுப்பது குழந்தையின் நலனுக்காக மட்டுமில்லை. தாய்ப்பால் கொடுப்பது தாயின் ஆரோக்கியத்திற்கும் நல்லது தான். ஆம், தாய்ப்பால் கொடுப்பதால் பெண்கள் மார்பக புற்றுநோயில் இருந்து விடுபட முடிகிறது.
சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனை இருக்கும். அவர்களுக்கு குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்காது. இதற்கு எல்லாம் காரணம், ஊட்டச்சத்து குறைபாடு மட்டும் தான். இதனை நீங்கள் மிகவும் எளிமையான முறையில் சரி செய்ய முடியும். இதற்கு நீங்கள் வீட்டிலேயே, மிகவும் சத்துவாய்ந்த தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும் உணவுகளை சாப்பிட்டாலே போதுமானது...! இந்த பகுதியில் தாய்ப்பால் சுரப்பிற்கு உதவும் உணவு வகைகளை பற்றி காணலாம்.
1. வெந்தயம்
வெந்தயம் பெண்களுக்கு உற்ற தோழி என்று கூறினால் மிகையாகாது. வெந்தயம் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை முதல் பால் சுரப்பு பிரச்சனை என அனைத்திற்கும் உதவியாக உள்ளது.
வெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி சிறிது சர்க்கரை கலந்து பாயாசம் போல செய்து குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும். மேலும், சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் சுரக்கும்.
2. பேரிச்சம் பழம்
பேரிச்சையில் அதிகளவு இரும்புச் சத்து உள்ளது. 100 கிராம் பே‌ரிச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு‌ச் ச‌த்து உள்ளது. இது இரத்தம் அதிகரிக்க உதவியாக உள்ளது. மேலும் இதில் வைட்டமின் ஏ, ஆன்டி ஆக்ஸிடென்ட், பொட்டாசியம் போன்றவை உள்ளன.
பேரிச்சம்பழத்தை குழந்தை பிறப்பதற்கு முன்னும், பிறந்த பின்னும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும். குழந்தையும் நன்கு வளரும். குழந்தைப் பிறப்பதற்கு முன்பும் பின்பும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
3. வெற்றிலை
வெற்றிலையின் பயன்கள் பற்றி நமக்கு அதிகமாக தெரியாது. இந்த வெற்றியிலையில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த வெற்றிலைகளை நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக் கட்ட தாய்ப்பால் சுரக்கும்
4. பாகற்காய்
கொடி வகையைச் சேர்ந்த பாகற்காய், கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைப்படும். இதன் சுவை என்னவோ கசப்பாக இருந்தாலும், எண்ணற்ற மருத்துவ குணங்கள், இந்த காயில் அடங்கியுள்ளது. பாகற்காயின் இலையை அரைத்து மார்பகங்களில் பற்றுப் போட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
மேலும் பாகற்காயை உணவில் சேர்த்தால், இது பல நோய்களை போக்கும் தன்மை கொண்டது. குடற்புழுக்களை போக்க பாகற்காயை உண்ணலாம். இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது.
5. ஆலம் விழுது :
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் அளவு பாலில் காய்ச்சி உண்டால், தாய்பாலில்லாத பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் உற்பத்தியாகும்.
6. அருகம்புல் சாறு
அருகம்புல் சாறுடன் தேனை கலந்து பருகி வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும். இது இரத்த சோகையை நீங்கி, இரத்தத்தை அதிகரிக்கும். கர்ப்பப்பை கோளாறுகளை நீக்க இது உதவுகிறது. வயிற்றுப் புண்களை நீக்கவும் இது உதவியாக இருக்கும்.
7. நட்ஸ்!
பாலூட்டும் பெண்கள் பாதாம் சாப்பிடுவது மிகச்சிறந்தது. பாதாம், வால்நட்ஸ், வேர்க்கடலை ஆகியவை பாலூட்டும் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இது அதிக அளவு ஊட்டச்சத்துகளையும், புரோட்டின் மற்றும் கால்சியத்தையும் தருகிறது.
8. நிலப்பூசணி
தாய்ப்பாலை அதிகரிக்க, நிலப்பூசணிச் சாறுடன் மல்லி, வெந்தயம், சீரகம் நாட்டுச்சர்க்கரை போன்றவற்றை கலந்து சாப்பிட வேண்டும்.
9. பூண்டு
பூண்டை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம். அதிகம் பூண்டு சேர்த்து தயாரிக்கப்பட்ட சூப் மிதமான சூட்டுடன் அருந்தி வந்தால் பால் சுரப்பு நன்றாக இருக்கும்.
10. கேழ்வரகு
கேழ்வரகை முளைக்கட்டி இடித்து கஞ்சியாகச் குடிக்க வேண்டும். இதில் முளைகட்டிய வெந்தயப் பொடியை சேர்த்து குடித்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்.
11. பால்
பால் அதிகளவு சத்துக்களை கொண்டுள்ளது. பிரசவித்த பெண்கள் தினமும் 5 அல்லது 6 கப் பால் குடித்தால் குழந்தைகளுக்கு அதிக அளவு தாய்ப்பால் கிடைக்கும்.
12. பால் சுறா
அசைவ உணவு சாப்பிடுபவராக இருந்தால், நீங்கள் கடலில் கிடைக்கும் பால்சுறா மீனுடன் பூண்டு சேர்த்து புட்டு போல் உண்டால் பால் சுரப்பு அதிகமாகும்.
13. முருங்கை கீரை
முருங்கை கீரையில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. முருங்கை கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து கொண்டால் தாய்ப்பால் அதிகரிக்கும்.
14. காட்டாமணக்கு இலை
காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் வைத்துக் கட்டிகொண்டால் தாய்பால் அதிகம் சுரக்கும். இந்த இலை கிராமப் பகுதிகளில் அதிகளவில் கிடைக்கும்.
15. கோவை இலை
கோவை இலையை வெள்ளைப் பூண்டுடன் நெய்யில் வதக்கி தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும். கோவை இலையும் கிராமப் புறங்களில் அதிகளவில் கிடைக்கும். இந்த கொடியானது முற்களின் மீது கூட படர்ந்து காணப்படும்.
16. பாசிப்பருப்பு
முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.
17. பூண்டு பால்
தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடி‌த்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப்பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.
18. பப்பாளி
பப்பாளி பழங்காலமாக பால் சுரப்பிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பப்பாளியை ஜூஸ் ஆகவோ அல்லது அப்படியேவோ சாப்பிடுவதன் மூலமாக பால் சுரப்பு அதிகரிக்கும்.
19. ஒட்ஸ்
நீங்கள் ஓட்ஸ் கஞ்சியை விரும்பி குடிப்பவராக இருந்தால், தாய்ப்பாலை அதிகரிக்க ஓட்ஸ் சாப்பிடலாம். ஓட்ஸ் கொழுப்பு குறைவான ஒன்று. இது தாய்ப்பாலை அதிகரிப்பதற்காக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
20. கீரைகள்
உங்களது உணவில் கீரைகளுக்கு முக்கிய இடம் இருக்க வேண்டியது அவசியம். கீரைகள் தாய்ப்பாலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே கீரைகளை மறக்காமல் உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
21. கேரட்
கேரட்டில் அதிகளவு சத்துக்கள் உள்ளன. கேரட்டை நீங்கள் பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ, சூப் செய்தோ சாப்பிடுவதால் தாய்ப்பால் அதிகரிக்கும்.
22. முருங்கை
முருங்கை கீரையை போலவே முருங்கை காய்க்கும் தாய்ப்பாலை அதிகரிக்கும் தன்மை உள்ளது. இது நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் நரம்பு மண்டலத்தை காக்கவும் இது உதவியாக உள்ளது.
23. தண்ணீர் மற்றும் ஜூஸ்
தண்ணீர் மற்றும் ஜூஸ் வகைகள் உங்களது உடலில் உள்ள ஈரப்பதத்தை அதிகரிக்கும். உடலுக்கு தேவையான அளவு நீரின் அளவை அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்தம் ஓட்டம் சீராகிறது. இது பால் சுரப்பிற்கு உதவியாக இருக்கிறது.
24. பிரவுன் ரைஸ்
பிரவுன் ரைஸ் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. இது தாய்ப்பால் சுரப்பிற்கான ஹார்மோனை தூண்டி விட்டு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. பிரவுன் ரைஸை நீங்கள் சமைத்து, இதனுடன் சத்தான காய்கறிகள் சேர்த்து சாப்பிடலாம்.
25. முட்டை
முட்டையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள், விட்டமின் ஏ, விட்டமின் பி2, பி12, ஒமேகா-3, கால்சியம், பாஸ்பரஸ், மினரல்கள் ஆகியவை உள்ளன. இது குழந்தைக்கு தேவையான அளவு புரதச்சத்தை கொடுக்கிறது. முட்டை தாய்ப்பாலின் அளவை மட்டும் அதிகரிக்காமல் தரத்தையும் அதிகரிக்கிறது. நீங்கள் முட்டை சாப்பிடுவதால் உங்களது குழந்தைக்கு அலர்ஜி அதாவது வாந்தி, தடிப்புகள், அசௌகரியம், சுவசப் பிரச்சனை, வாந்தி போன்றவை இருந்தால், நீங்கள் முட்டை சாப்பிடுவதை தவிர்த்து விடவும்.  Thanks tamil boldsye.

வெள்ளி, 27 ஜூலை, 2018

பின்புறத்தில் தொங்கும் அசிங்கமான சதையை குறைக்க தினமும் இதை செய்தாலே போதும்.

பின்புறத்தில் தொங்கும் அசிங்கமான சதையை குறைக்க தினமும் இதை செய்தாலே போதும்...


சிலர் மெலிந்த தேகத்தை கொண்டவர்களாக இருந்தாலும், பின்புறத்தில் அதிகளவு சதை இருக்கும். அதனால் எந்த உடை போட்டாலும் அவர்களுக்கு பார்க்க அசிங்கமாக இருக்கும். இவர்கள் சில பயிற்சிகளை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
தோப்புக்கரணம் போடுவதால் பின்பக்க கொழுப்பு மட்டும் அல்லாமல் கால், தொடையையும் வலுப்பெறும். கீழே உள்ள இந்த பயிற்சியை தினமும் செய்து வந்தால் விரைவில் பின்புறத்தில் உள்ள கொழுப்பை குறைக்கலாம்.

எவ்வாறு தோப்புக்கரணம் போடுவது?
இந்த பயிற்சியை செய்ய முதலில் தரையில், முட்டியை மடக்கி பாதத்தின் மேல் உட்கார வேண்டும். முன் உடலை வளைத்து, கைகளைத் தரையில் ஊன்றி, (யானைபோல்) நிற்க வேண்டும். தலை தரையைப் பார்த்த படி இருக்கட்டும்.

இப்போது வலது கால் முட்டியை மடக்கி, மேல் நோக்கி உயர்த்தி இறக்க வேண்டும். பின்னர், இதைப் போல் இடது கால் முட்டியை மடக்கி உயர்த்தி இறக்க வேண்டும். இதேபோல ஆரம்பத்தில் 15 முறை செய்ய வேண்டும்.

பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம். பின்பக்கம் அதிகளவு கொழுப்பு இருப்பவர்கள் அதிக எண்ணிக்கையில் இந்த பயிற்சியை செய்ய வேண்டும். இந்த பயிற்சியை செய்ய ஆரம்பித்த ஒரு மாதத்திலிருந்தே படிப்படியாக வித்தியாசம் ஏற்படுவதை அவதானிக்கலாம்.

இலியானா போல மெல்லிடை வேண்டுமா, இத தினமும் செய்யுங்க..

இலியானா போல மெல்லிடை வேண்டுமா, இத தினமும் செய்யுங்க..

அழகைப் பொருத்த வரையில், எல்லாப் பெண்களுக்கும் இருப்பது ஒரே வகையான ஆசை தான். ஆம், சருமம் வெள்ளையாக இருக்க வேண்டும், கூந்தல் நீளமாக இருக்க வேண்டும், மெல்லிய இடை இருக்க வேண்டும் என்பன தான்.

மெல்லிடை வேண்டும் எனும் ஆசையில் பல பெண்கள் க்ரீன்டீ, ஒருவித கஷாயம் முதலான அனைத்தையும் பயன்படுத்துவதுண்டு. மேலும் சிலர் எடையைக் குறைக்க வேண்டும் எனும் ஆசையில் கடையில் விற்கப்படும் மருந்துகள் சிலவற்றையும் உட் கொள்வதுண்டு.
ஆனால் அவ்வாறு செய்வது முற்றிலும் தவறானது. நமது நன்மைக்கென நாம் உட்கொள்ளும் மருந்துப் பொருட்களே எமது உயிருக்கு ஆபத்தாக வந்து விடுவதுண்டு. ஆனால், எடையைக் குறைக்கும் விடயத்தில் உடற்பயிற்சிகளை முயன்று பார்க்கலாம்.
அதிலும் குறிப்பாக மெல்லிடையைப் பெற நினைக்கும் பெண்கள் அதற்கேற்ற உடற் பயிற்சியை முயற்சித்தால் மெல்லிடையைப் பெறலாம். ஆகவே மெல்லிடைக்கான உடற்பயிற்சியை எப்படி செய்வது என்று இப்போது விரிவாகப் பார்ப்போம்!
தரையில் நேராகப் படுக்கவும். கைகளை இடுப்புக்கு அப்புறம் வைத்தபடி கால்களை எந்த அளவுக்கு உயர்த்த முடியுமோ அந்த அளவுக்கு உயர்த்தவும். இந் நிலையில் அடிவயிற்றை உள்ளிழுத்து சில நொடிகள் அப்படியே இருக்கவும். பின் கால்களைக் கீழே இறக்கவும். இதே போல் தினசரி பத்து முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சியால் இடுப்புப் பகுதியில் உள்ள தேவைற்ற கொழுப்புகள் அனைத்தும் குறையும். 

தினமும் நீச்சல் பயிற்சி மேற் கொள்வதால் என்ன நன்மைகள் தெரியுமா

தினமும் நீச்சல் பயிற்சி மேற் கொள்வதால் என்ன நன்மைகள் தெரியுமா


01. கணினியில் வேலை பார்ப்பவர்கள் முதுகு வலியால் அவதிப்படுவார்கள். நீச்சல் அடிப்பதால் முதுகுதண்டுவடம் வலிமை பெற்று முதுகுவலி ஏற்படாது. தோல்வலி மற்றும் கழுத்துவலி என்பன நீங்கும்.

02. நீச்சல் பயிற்சி நம் உடலில் உள்ள பெரும்பாலான பகுதிகளை வலிமைப்படுத்தும் நல்ல உடற்பயிற்சியாக அமைகின்றது. தற்போது உடல் எடையை குறைக்க நீச்சல் பயிற்சி சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.
credit: newsminute
03. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடலில் உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் நீச்சல் பலனளிக்கும். இதனால் உடல் தசைகள் வலிமையாகும். அழகும் கூடும்.

04. நீச்சல் அடிப்பதால் பெண்களுக்கு ஏற்படும் ஹோர்மோன் பிரச்சனைகள் மற்றும் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும்.
05. நீச்சல் பயிற்சி என்பது ஒரு காற்றலைப் பயிற்சி. நுரையீரல் வலுப்பெறுவதற்கும் இதயத்தில் இரத்த ஓட்டம் சீராக இயங்குவதற்கும் நீச்சல் பயிற்சி நன்கு உதவுகிறது.

வீட்டிலிருக்கும் வெறும் மூன்று பொருட்களால் உடல் சூட்டை தணிக்கலாம் என தெரியுமா

வீட்டிலிருக்கும் வெறும் மூன்று பொருட்களால் உடல் சூட்டை தணிக்கலாம் என தெரியுமா

மாறி வரும் காலநிலை மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ;ணம் ஏற்படுகிறது. இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது.
இதன் விளைவாக ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலைமுடி உதிர்தல், வயிற்றுவலி, உடல்எடை குறைதல் போன்றன நிகழ்கின்றன. இவற்றிற்கு நாம் வீட்டிலிருந்தே தீர்வு காண முடியும்.

தேவையான பொருள்கள்
01. நல்லெண்ணெய்
02. பூண்டு
03. மிளகு

செய்முறை
நல்லெண்ணையை ஒரு கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறியதும் எண்ணையை, காலின் (இருகால்) பெரு விரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும்.
2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி, ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம், உஷ;ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன் பெறுங்கள்.

தினமும் காலையில் இதை சாப்பிட்டு வந்தால் மாரடைப்புக்கு நிரந்தரமா குட்பை சொல்லலாம்

தினமும் காலையில் இதை சாப்பிட்டு வந்தால் மாரடைப்புக்கு நிரந்தரமா குட்பை சொல்லலாம்

நோய்கள் எனும் போது, சில பாரதூரமான நோய்களாகவும் சில சாதாரண நோய்களாகவும் காணப்படுகின்றன. இருப்பினும் சில நோய்களுக்கு எமது வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே தீர்வு காணமுடியும்.
அந்த வகையில் நாம் சில நோய்கள் மற்றும் வருத்தங்கள் தொடர்பில் தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.

01. சிறுநீரக பிரச்சினைக்கு
அன்னாசி பழம் சாப்பிட்டு வர சிறுநீரக பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம்.
02. கிருமிகள் நீங்க
வேப்பம் பூவை ரசம் வைத்துச் சாப்பிட உடம்பில் உள்ள கிருமிகள் நீங்கும். உடல்ஆ ரோக்கியம் பெறும். பித்தம் குறையும்.
credit: newsminute
03. உஷ்ணம் குறைய
வெந்தயத்தை ஒருநாள் விட்டு ஒருநாள் சாப்பிட்டுவர உஷ;ணம் குறைந்து விடும். வெந்தயம் நீரிழிவு நோய்க்கும் சிறந்த மருந்தாக விளங்குகின்றது.
04. கர்ப்பிணிகளுக்கு
கர்ப்பிணிப் பெண்கள் தினமும் கேழ்வரகினை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஏனெனில் கேழ்வரகில் இரும்புச்சத்தும், சுண்ணாம்புச் சத்தும் போதிய அளவு உள்ளது.
05. மாரடைப்பை தடுக்க
இதயநோயாளிகள் காலையில் அருகம்புல் சாறு சாப்பிட்டு வர மாரடைப்பை தடுக்கலாம்.
06. தொற்று நோய்களில் இருந்த தப்பிக்க
முள்ளங்கிக் கீரையில் விட்டமின் ‘ஏ’ தொற்று நோய்களில்இருந்து பாதுகாப்பளிக்கின்றது.

குதி கால்களில் பித்த வெடிப்பா, இயற்கையாக குணமாக்க இதோ சில வீட்டு குறிப்புக்கள்..

குதி கால்களில் பித்த வெடிப்பா, இயற்கையாக குணமாக்க இதோ சில வீட்டு குறிப்புக்கள்..

நாம் ஒவ்வொரு வரும் எமது பாதங்களை பூ போல் பாதுகாக்க வேண்டும். ஏனெனில் இந்த பாதங்களில் வெடிப்பு ஏற்படுமாயின் அது அழகைக் கெடுப்பதோடு ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.
பாதணிகள் அணியாது வெளியில் செல்வதால் இந்த வெடிப்பு ஏற்படுகிறது என பலர் கூறுவார்கள். எப்படியிருப்பினும் இந்த வெடிப்புக்களை சரி செய்து கொள்வதென்பது பணத்தையும் அதிகளவில் செலவழிக்க வைக்கும்.

01. வேப்பிலையை அரைத்து அதனுடன் பயித்தம் பருப்பு பொடி, மஞ்சள் மற்றும் எலுமிச்சைசாறை கலந்து தினமும் பாதங்களில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தொடர்ந்து செய்தால் சுருக்கங்களின்றி, வெடிப்பு மறைந்து பாதம் பளபளக்கும்.

02. கால் பக்கெற்று வெதுவெதுப்பான நீரில் 2 கோப்பை அப்பிள் வினிகரை கலந்து அதில் கால்களை அமிழ்த்துங்கள். இதிலுள்ள அமிலத்தன்மை பாதத்திலுள்ள கடினத்தன்மையைஅகற்றிமென்மையாக்கிவிடும். வெடிப்பும் வேகமாக மறைந்து விடும்.

03. தேவையான பொருட்கள்
தேன் – 1 கோப்பை
பால் – 1 தேக்கரண்டி
ஒரேஞ்ச்சாறு – 2 தேக்கரண்டி
செய்முறை
தேனை இலேசாக சூடு படுத்துங்கள். பின்னர் அதில் பால் மற்றும் ஒரேஞ்ச் சாறை கலக்கவும். பாதம் மிகவும் கடினமாக இருந்தால் ஒரேஞ்ச்சாறை அதிகப்படுத்திக் கொள்ளவும்.

இன்று முழு சந்திர கிரகணம்... இதை செய்ய மறந்து விடாதீர்கள் !!


இன்று முழு சந்திர கிரகணம்... இதை செய்ய மறந்து விடாதீர்கள் !!

சந்திர கிரகணம் !!

இந்த ஆண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் இன்று (ஜூலை 27ஆம் தேதி) வெள்ளிக்கிழமை உத்திராடம், திருவோணம் நட்சத்திரங்களில் நிகழ இருக்கிறது.

கிரகணம் ஏற்படும் நாளில் பௌர்ணமி வருவதால் இந்த நாள் மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம்?

உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும்.

கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டுவிட வேண்டும்.

ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.

கிரகண விமோசன காலத்தில் அதாவது, கிரகணம் முழுவதும் முடிந்த பிறகு ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.

இன்று ஆன்மீகம் சார்ந்தே அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது. ஆன்மீகத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எண்ணற்றவை.

ஏன்? எதற்கு? எப்படி? செய்ய வேண்டியவை.. செய்யக்கூடாதவை என உங்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விடையாக வந்திருக்கிறது.. ஜோதிடம் ஆன்மீகம் கொஞ்சம் அறிவியல் என்னும் புத்தகம்.

மேலும் உங்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கிறது இப்புத்தகம். அதுவும் இப்பொழுது 10மூ தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.


இப்புத்தகத்தை உடனே பெற இங்கே கிளிக் செய்யுங்கள் !
பின்பு, ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

கிரகணம் முடிந்ததும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.

கிரகண காலத்தில் உடலில் எண்ணெய் தேய்ப்பது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது.

கிரகண சமயத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். ஒரு பெண் இந்தச் சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும்.

சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனை துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.

கர்ப்பிணி பெண்கள் சந்திர கிரகணத்தைப் பார்க்கக்கூடாது. கிரகணத்தின் போது உறங்கக்கூடாது. வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.

மிகப்பெரிய சந்திர கிரகணம் :

இந்த நூற்றாண்டின் மிக நீளமான இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவின் அனைத்து பகுதிகளில் உள்ளவர்களும் கண்டு ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திர கிரகணம் ஆரம்ப காலம் இரவு 11.54 மணி

சந்திர கிரகணம் மத்திம காலம் அதிகாலை 01.52 மணி

சந்திர கிரகணம் முடிவு காலம் அதிகாலை 3.49 மணி


குழந்தைகளுக்கு என்னவெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்...

குழந்தைகளுக்கு என்னவெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்...

குழந்தைகளுக்குக் முக்கியமான விஷயங்களை கற்றுக் கொடுத்தாலே போதும், தங்களுடைய எதிர்காலத்தை புரிந்து குறிக்கோளை நிறைவேற்ற முயற்சி செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
குழந்தைகளுக்கு என்னவெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்
பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கட்டாயமாக சொல்லிக் கொடுக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. அவற்றை முறையாகக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தாலே போதும், குழந்தைகள் தங்களுடைய எதிர்காலத்தை மிக அழகாகப் புரிந்து குறிக்கோளை நிறைவேற்ற முயற்சி செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
அப்படி குழந்தைகளுக்கு என்னென்ன விஷயங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்?
குழந்தைகளை நிறைய பயணிக்கச் செய்ய வேண்டும். பயணங்களின் போது, குழந்தைகளின் அறிவுத்திறன் அதிகரிக்கும்.
நல்ல நண்பர்களை வாழ்க்கையில் இருக்க வேண்டும். நல்ல நண்பர்கள் இருந்தால் தான் நாமும் நன்றாக இருக்க முடியும் என்பதை குழந்தைக்கு நன்கு புரிய வைக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட கொடுக்க வேண்டும்

குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட கொடுக்க வேண்டும்


காய்கறிகள் மற்றும் கீரைகளை சுத்தம் செய்வது மிகவும் முக்கியமானதொன்று. ஏனெனில், நாம் கடைகளில் வாங்கும் மரக்கறி மற்றும் கீரையில் பூச்சிகள் இருக்கும்.

சில வேளைகளில் இந்தப் பூச்சிகள் குழந்தைகளின் உடலுக்குள் செல்லும் பட்சத்தில் அது அவர்களின் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும் சந்தர்ப்பங்களும் உண்டு என்றால் நீங்கள் நம்புவீர்களா?
ஆம், அது போன்றதொரு சம்பவம் நிஜத்திலும் நிகழ்ந்துள்ளது. எனவே குழந்தைகளுக்கு கொடுக்கும் மரக்கறிகள் மற்றும் கீரைகள் தொடர்பில் மிகுந்த அவதானம் தேவை.

சமையல் செய்ய ஆயத்தமாவதற்கு 4 நிமிடத்திற்கு முன்னால் அகன்ற பாத்திரம் ஒன்றில் இளம் சுடுநீரையும் உப்பு நீரையும் சரிசமமாக கலந்து கொள்ளவும். கீரையை கட்டிலிருந்து ஒவ்வொன்றாக பிரித்தெடுத்து தண்ணீரில் முழுவதும் முழ்கும் படி வையுங்கள். பின்னர் 4 நிமிடம் கழிந்த பின் நல்ல தண்ணீரில் கழுவினால் புழு மற்றும் பூச்சிகள் இருந்தால் இறந்து விடும்.

மரக்கறி வகைகளை எவ்வாறு சுத்தம் செய்வது?
எந்த மரக்கறியாக இருந்தாலும் சரி, அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்வதற்கு முன்னர் ஓடும் தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும். பின்னர் அதனை உப்பு கலந்த நீரில் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், மரக்கறிகளில் உள்ள பூச்சிகள் இறந்து விடும்.

வியாழன், 26 ஜூலை, 2018

அப்துல் கலாம் ஐயாவின் நினைவு திருக்குறள்.


அப்துல் கலாம் ஐயாவின் நினைவு திருக்குறள்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

குறள்: 231

*ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது*
*ஊதியம் இல்லை உயிர்க்கு.*

ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

குறள்: 232

*உரைப்பார் உரைப்பவை எல்லாம்* *இரப்பார்க்கொன்று*
*ஈவார்மேல் நிற்கும் புகழ்.*

சொல்வார் சொல்வன எல்லாம், இல்லை என்று வருபவர்க்குத் தருபவர்மேல் சொல்லப்படும் புகழே.

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

குறள்: 233

*ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்*
*பொன்றாது நிற்பதொன் றில்.*

ஒப்பற்றதாகவும், அழிவில்லாததாகவும் இந்த உலகத்தில் நிலைத்திருப்பது புகழைத் தவிர வேறு எதுவுமே இல்லை.

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

குறள்: 234

*நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்*
*போற்றாது புத்தேள் உலகு.*

தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐

குறள்: 235

*நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்*
*வித்தகர்க் கல்லால் அரிது.*

துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

குறள்: 236

*தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்*
*தோன்றலின் தோன்றாமை நன்று.*

ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.

🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼🌸

குறள்: 237

*புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை*
*இகழ்வாரை நோவது எவன்.*

புகழ் பெருகுமாறு வாழமுடியாதவர் அதற்குக் காரணர் தாமே என்று தம்மீது வருந்தாமல், தம்மை இகழ்வார் மீது வருத்தம் கொள்வது எதற்காக?.

💐🌷💐🌷💐🌷💐🌷💐🌷💐

குறள்: 238

*வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்*
*எச்சம் பெறாஅ விடின்.*

புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாது போனால், இந்த உலகத்தவர்க்கு அதுவே பழி என்று அறிந்தோர் கூறுவர்.

🌻🌸🌻🌸🌻🌸🌻🌸🌻🌸🌻

குறள்: 239

*வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா*
*யாக்கை பொறுத்த நிலம்.*

புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி, தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவு படும்.

🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀

குறள்: 240

*வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய*
*வாழ்வாரே வாழா தவர்.*

தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.

🍁🍂🍁🍂🍁🍂🍁🍂🍁🍂🍁

திருவள்ளுவர் புகழ் என்ற அதிகாரத்தை அப்துல் கலாம் ஐயாவுக்குகாக ஏழுதியிருப்பதாக தோன்றுகிறது

*🌹அப்துல் கலாம் ஐயாவின் சிந்தனைகள்:*🌹

1. முடியாது என்ற நோய்

“கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தி யடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களும் நினைத்திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. சி.சுப்பிர மணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்காது.
வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியில் வெற்றி அடைந்து இருக்காது. விக்ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று செயற்கைக்கோளை இந்தியா ஏவியிருக்க முடியாது.

முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால் தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது. எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 54 கோடி இளைஞர்கள்தான், இந்திய நதிகளை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்தான் அனுபவத்தின் துணை கொண்டு வெற்றியைகாண வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும் என்றால் என்ன வேண்டும்… “முடியும்’ என்ற நம்பிக் கை முதலில் ஓவ்வொரு இந்திய னுக்கும் வேண்டும் “

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

2. மனித நாகரிகம் வளர காரணமே வீரம்தான்

மனித நாகரிகம் வளர்ந்ததற்குக் காரணமாக நான் நினைப்பதே வீரத்தினால்தான்.
மனிதன் எடுத்து வைத்த ஒவ்வொரு காலடிக்கும் வீரம் தேவைப்பட்டது என்பதுதான் வரலாறு. தன்னுடைய பிரதேசத்தைக் காத்துக் கொள்ள வீரம் தேவைப்பட்டது. புதிய வாசல்களைத் திறக்க, புதிய இடங்களைத் தேடிச்செல்ல வீரம் தேவைப்பட்டது. பழமையை மீறவும் புதியவற்றைக் கண்டு பிடித்து புதுமைகள் செய்யவும் வீரம் தேவைப்பட்டது. சகமனிதனின் கண்ணீரைத் துடைத்து புரட்சிகளை உருவாக்க வீரம் தேவைப்பட்டது. மனிதநேயம் என்கிற பேனாவில் வீரம் என்னும் மையினால் எழுதப்பட்டது தான் நீண்ட நெடிய மனிதனின் வரலாறு என்பது என் எண்ணம்

🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

3. உறுதியும், நம்பிக்கையும்

உறுதியும், நம்பிக்கையும் தலைமைப்பண்பும் கொண்ட நம்முடைய இளம் ஆண்களும் பெண்களும் ராணுவப்படைகளில் ஆர்வமுடன் சேர முன்வர வேண்டும் என்பது என் ஆசை. இன்றைய வேகமான அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக ராணுவத்தின் எத்தனையோ சவாலான, சுவாரஸ்யமான வேலைகள் உருவாகி வருகின்றன. இளைஞர்களுக்கு அவை பெரும் சாகசங்களாகத் திகழும்.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

4. சிந்தனை செய்

இந்தியாவுக்கு நாம் என்ன செய்யலாம் என்று சிந்தனை செய்.
இந்தியாவை மேம்படுத்த வேண்டியவற்றைச் சிந்தனை செய்,
அமெரிக்கா, மற்ற மேலை நாடுகள் அடைந்துள்ள மேன்மைப்பாடுகளை நாமும் பெற வேண்டுமானால்! “புலப்படாத எதிர்காலத்துக்கு மட்டும் ஒருவர் வாழ்ந்து வருவது ஆழமற்ற மேலொட்டிய செயலாகும்.”

🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

5.  ”என்னால் மாற்ற முடியாதவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன். 

வாழ்க்கையில் உன்னை வரவேற்கும் சக்திகளும், அறவே எதிர்க்கும் சக்திகளும் இருக்கத்தான் செய்யும்.  பலனளிக்கும் ஆற்றல்கள், பயனற்ற ஆற்றல்களின் வேறுபாடுகளைத் தெளிவாகத் தெரிந்து, அவற்றுக்கு இடைப்பட்ட முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.”

🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋🐋

6. “கனவு காண், கனவு காண், கனவு காண்,  பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு.  சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும்.  நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி.  ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும்.  அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

7.“முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட் டியிடும் பெருங்கனவு எங்க ளுக்கு அறவே இல்லை!  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்!  தேசீயரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”

💥💥💥💥💥💥💥💥💥💥💥

8. இமயத்தின் உச்சியை எட்டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடை வதாயினும் சரி, மேலே ஏறி ச்செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி தேவைப்படுகிறது.”

🌻🌾🌻🌾🌻🌾🌻🌾🌻🌾🌻

9.மாணவப்பருவத்தில் பல்வேறு தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகள் எதிர்பார்த்தவாறு அமையாவிட்டால், அதற்காக மாணவர்கள் மனம் சோர்ந்து விட வேண்டியதில்லை. தேர்வு முடிவுகள்தான் வாழ்க்கையில் இறுதியானது எனக் கருத வேண்டாம்.கடவுள் நம்முடன் இருப்பாரானால், ஒருவரும் உங்களுக்கு எதிராகச் செயல்பட முடியாது. எனவே, தொடர்ந்து முயற்சி செய்தால், நிச்சயம் வெற்றி கிட்டும். தாற்காலிகமாக ஏற்படும் பின்னடைவுக்காக மனம் சோர்ந்து போய்விட வேண்டாம்.

🌿🌴🌿🌴🌿🌴🌿🌴🌿🌴🌿

10. வெற்றி எப்பொழுதுமே மகிழ்ச்சியைத் தரும். ஆனால், பல காரணங்களால் சில சமயம் தேர்வில் நாம் பின்னடைவைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதையும் நாம் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்.வாழ்க்கையில் நாம் சில எதிர்பாராத பிரச்னைகளை எதிர் கொள்வதற்கு எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் பிரச்னைகள் நம்மை மேலாதிக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது. நாம்தான் பிரச்னைகளை மேலாதிக்கம் செய்ய வேண்டும். பிரச்னைகளை தோல்வியுறச் செய்து, வெற்றி காண வேண்டும்

உங்களை மேன்மேலும் மெருகூட்ட‍ சில வரிகள்

நீ நட்சத்திரமாக ஜொலிக்க விரும்பினால், நீ யார் என்பது முக்கியமல்ல;
உனது மனது எதை விரும்புகிறதோ,
அது நிச்சயம் உன்னை வந்து சேரும்.”

எதிர்பாராத பிரச்னைகளை எதிர்கொண்டு அதில் வெற்றி பெறுவதுதான் இளைஞர்களின் தனித்தன்மையாகும்

🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

தோற்ற்றம் - மறைவு

அக்டோபர் 15, 1931 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து ஜூலை 27, 2015 அன்று இந்தியாவின் மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் (மாலை சுமார் 6.30 மணியளவில்) இறைவனடி சேர்ந்தார்.