சனி, 30 ஜூன், 2018

சுரைக்காய் சாற்றை யாரும் கூடிக்கவேண்டாம்...

சுரைக்காய் சாற்றை யாரும் கூடிக்கவேண்டாம்...

புனேயில் ஒரு பெண் ஜந்து கிலோ மிட்டர் ஓடிவிட்டு வந்து சுரைக்காய் சாறு ஒரு டம்லார் கூடித்து உடல் நலம் கூறைவால் அவள் இறந்துவிட்டாள்.சுரைக்காய் சாறு கசப்பு இருந்தால் அதில் தீங்கு விளைவிக்கும் Bacteriaக்கல் இருக்கும் என்று கண்டறிந்துள்ளனர்.




டேபிள் மேனர்ஸ் தெரிந்து கொள்வோமா?​


டேபிள் மேனர்ஸ் தெரிந்து கொள்வோமா?​*

* பொதுவாக விருந்துகளுக்குச் செல்லும்போது பலருக்கு இருக்கும் ஒரு பிரச்னை, ஸ்பூன் மற்றும் ஃபோர்கில் உணவுகளை எவ்வாறு சாப்பிடுவது? அவைகளை எப்படிக் கையாள்வது

  * நம்மை விட வயதில் மூத்தவர்கள் அமரும்வரை நாம் நாற்காலியின் பின் காத்திருந்து பிறகு அமரவேண்டும். அமர்ந்த உடன் நாற்காலியை ஒலி எழுப்பாமல் மேஜையை அணைத்தபடி நகர்த்தி அமர வேண்டும். பிறகு மேஜையின் மீது வைத்துள்ள நாப்கினை (Napkin) எடுத்து மடியில் விரித்துக்கொள்ளவேண்டும். நமது கைகளை மடியிலோ அல்லது வேறுவிதமாகவும் வைக்காமல், முழங்கைகளை மேஜையின் மீது வைத்துகொண்டால், ஜென்டில் லுக் தரும். அமரும் போது கன்னத்தில் கைவைத்துக் கொண்டு இருக்கக் கூடாது.

 ​
  * விருந்துகளில் முதலில் பரிமாறப்படுவது சூப். சூப் அருந்தும் போது பெரியதாக வாயைத் திறக்காமல், அதே நேரம் சத்தம் வராமலும் முதுகு கூன் விழாமலும் சூப்பைக் குடிக்க வேண்டும். சூப் ஸ்பூனை வலது கைகளைக் கொண்டு உபயோகப்படுத்தவும். சூப் மேலே சிந்தாமல் இருக்க, நெக் நாப்கினை (Neck Napkin) அணிந்துகொள்ள வேண்டும். சூப் குடித்து முடித்த உடன் நெக் நாப்கினைக் கழற்றி மடித்து வைத்து விட வேண்டும்.

 * பலரும் சாப்பிட தடுமாறும் ஓர் உணவு நான்-வெஜ். அதை சாப்பிட ஆரம்பிக்கும் முன்பு அதற்கேற்றவகையில் இடது கையில் ஃபோர்க் ஸ்பூனும் (Fork Spoon) வலது கையில் நைஃபும் வைத்துக் கொள்ளவும். தட்டில் பரிமாறப்படும் நான்-வெஜ் வகைகள் சூடாக இருந்தால் சாப்பிடுவது மிகவும் எளிது. ஏனெனில், சூடாக இருக்கும் நான்-வெஜ்ஜை ஃபோர்கால் எடுத்து சாப்பிட இலகுவாக இருக்கும். அவை ஆற ஆரம்பித்தால் ஃபோர்கால் எடுப்பது சற்று கடினமாகிவிடும். நான்-வெஜ்ஜை எடுக்கும் போது, கத்தியால் சிறிய துண்டுகளாக்கி ஃபோர்க்கால் எடுத்து சாப்பிட வேண்டும்.


  * இனிப்பு வகைகளை சாப்பிடுவதற்கு நார்மலான சின்ன வகை ஸ்பூனில் சாப்பிடலாம். உணவை உண்ணும் போது வாயை மூடி உண்ண வேண்டும். வாயில் உணவு இருக்கும் போது, பேசக் கூடாது. அது மற்றவர்களுக்கு தர்மசங்கடத்தைத் தரும்.

 * மேஜையின் மீது வைக்கப்பட்ட உணவுகளில் உங்களுக்குப் பிடித்தமான உணவு தூரமாக இருந்தால், எழுந்து கையை நீட்டி இழுக்கக் கூடாது. அந்த உணவுக்கு அருகில் இருக்கும் நபரை மெதுவாக அழைத்து, ‘உணவை என் அருகே பாஸ் செய்யுங்கள்’ என்று சொல்ல வேண்டும். நீங்கள் கேட்கும் நேரத்தில் வேறு யாராவது அந்த உணவை எடுக்கவிருந்தால், அவர்கள் அதை எடுத்துவிட்டு உங்கள் பக்கம் தரும் வரை அமைதி காக்க வேண்டும்.

 * ஸ்பூனால் எடுக்க முடிந்த காய்களை ஸ்பூனாலும், குத்தி எடுக்க முடிகிற நிலையில் இருக்கும் காய்களை ஃபோர்க்காலும் எடுத்து சாப்பிடுங்கள்.
  ​
  * சேரில் நிமிர்ந்து உட்கார வேண்டும். தட்டுக்கு அருகே உங்கள் முகத்தைக் கொண்டு வந்து உண்ணக்கூடாது. அதற்கு பதில் நிமிர்ந்து உட்கார்ந்து ஸ்பூனால் எடுத்து உண்ண வேண்டும். சாப்பிடும் போது வாயை மூடி சத்தம் வராமல் மெல்ல வேண்டும்.

 * நீங்கள் உணவு அருந்தி முடித்துவிட்டால், உங்கள் மடியின் மீது இருக்கும் நாப்கினை டேபிள்மீது வைத்துவிட்டு அனைவரும் உணவு அருந்தும் வரை காத்திருப்பது நம் ஒழுக்கத்தைக் காட்டும்.

 * மேஜையை விட்டு எழுந்திருக்க வேண்டுமென்றால் ‘எக்ஸ்கியூஸ் மீ’ என்று சொல்லிவிட்டு எழுந்திருக்க வேண்டும். நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்று மற்றவர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

 * உணவை ‘கட்’ செய்து உண்ணும் போது உங்கள் உடல் டேபிளுக்கு நெருக்கமாகவும், முழங்கைகளை டேபிள் அருகிலும் வைத்திருக்கவும்.

 * சாப்பிடும்போது விக்கல் அல்லது இருமல் வந்தால், அமைதியாக ‘ஸாரி’ சொல்லிவிட்டு கர்ச்சீப்பால் வாயை அணைத்துக்கொள்ளுங்கள்.

 * சாப்பிடும்போது உங்கள் பற்களின் இடையே உணவு மாட்டிக்கொண்டால், விரல்களை வாயில் வைத்து, அதை எடுக்க முயற்சிக்கக் கூடாது. ‘டூத்பிக்’ உபயோகித்து எடுக்கக் கூடாது.
வாஷ் ரூமுக்கு சென்று வாயை சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
 ​
* நீங்கள் பபிள்கம் சுவைத்துக்கொண்டே ஹோட்டலுக்கு செல்கிறீர்கள் என்றால், அவற்றைத் துப்பிவிட்டு பிறகே டேபிளில் அமர வேண்டும். அதைவிடுத்து, டேபிளில் பபிள்கமை ஒட்டுவதோ, சேரில் அமர்ந்த பின்னர் எழுந்து சென்று துப்புவதோ நல்ல பழக்கம் இல்லை.

டேபிளில் பரிமாறப்பட்ட உணவுகளில் உங்களுக்குப் பிடிக்காத உணவு ஏதேனும் இருந்தால், எந்த கமெண்டுகளும் சொல்லாமல், அதை எடுப்பதைத் தவிர்த்துவிடுங்கள். அதே போல நீங்கள் குடிக்கும் சூப்பில் உப்போ அல்லது காரமோ குறைவாக இருந்தால், எந்தக் குறையும் சொல்லாமல் அங்கு வைத்திருக்கும் உப்பு, மிளகை உங்கள் தேவைக்கு ஏற்றாற் போல் பயன்படுத்துங்கள்.
 ​

🏵 *ஹோட்டலில் இருந்து வெளியே வரும்போது, ‘தேங்க்யூ’ என்று சொல்லிவிட்டு புன்னகையோடு வெளியே வாருங்கள்.

வெள்ளி, 29 ஜூன், 2018

நினைத்தது நிறைவேறனுமா? உள்ளங்கையில் இப்படி கல் உப்பை எடுத்துக்கோங்க!!

நினைத்தது நிறைவேறனுமா? உள்ளங்கையில் இப்படி கல் உப்பை எடுத்துக்கோங்க!!

இப்பவும் கிராமங்களிலும் சாஸ்திரம் தெரிந்தவர்களும் நம்பும் ஒரு விஷயம் உப்பை
கையால் தரக் கூடாது என்பதுதான்.
காரணம் உப்பு நெகடிவ் எனர்ஜியையை வெளியேற்றக் கூடியது. அதனால் வெறும்
கைகளில் கல் உப்பை தரும்போது அவர்களின் நெகடிவ் எனர்ஜி வாங்குபவர்களுக்கு
சென்றுவிடும்.
அதுமட்டுமல்லாமல் கல் உப்பைக் கொண்டு திருஷ்டி சுற்றுவார்கள். இதற்கும் தேவையற்ற எதிர்மறை செயல்கள் மற்றும் திருஷ்டி வெளியேற்றிவிடும் என்பதால்தான்.
நமக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கும். சரியாக ப்ரோமோஷன் இல்லாமல், வெளி நாட்டு வாய்ப்பு, வேலை கிடைக்காமல், நோய்கள் என பலவித பிரச்சனைகள் இருக்கும். உங்களுடைய தீராத பிரச்சனைகளை உங்களூடைய பாஸிடிவ் எண்ண்ங்களால் சரி செய்ய முடியும்.
விவேகானந்தர் கூறியிருப்பார். ” நீ எதை நினைக்கிறாயோ அதாகவே ஆகிறாய்” என்று.
ஆழ்மனதை நன்றாக படித்து அதனை ஆய்வு செய்தவர்கள் கூறும் வாசகம் இது.
அப்படி நீங்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்ற கல் உப்பு உதவி செய்யும் எப்படி
தெரியுமா?

நினைத்தது நிறைவேற :

தினமும் அதிகாலையில் எழுந்ததும் இரு உள்ளங்கையில் கல் உப்பை வைத்துக்
கொண்டு கிழக்குப் பார்த்து அமர்ந்து கொள்ளுங்கள்.பின்னர் உங்களுடைய பிரச்சனை சரியாக வேண்டும், வேலை கிடைக்க வேண்டும், ப்ரோமோஷன் கிடைக்க வேண்டும் என எது நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதனை ஐந்து நிமிடங்கள் மனதிற்குள்ளோ அல்லது வாய்விட்டோ சொல்ல வேண்டும்.

ஓடும் நீரில் :

பின்னர் அந்த உப்பை ஒரு வெள்ளைத் தாளில் சிந்தாமல் போட்டு ஓடும் நீரில்
போட்டுவிடுங்கள்.
இப்படி தினமும் செய்தால் நீங்கள் நினைத்தது நிறைவேறும் என்பது  அனுபவப் பூர்வமான உண்மை.

கல் உப்பு :

ஏன் கல் உப்பிற்கு இவ்வளவு சக்தி தெரியுமா? கடலிலிருந்து வரும் இந்த வெண்துகள்கள் மிக அதிக நேர்மறை குணங்களை பெற்றவை. அவை நம்மிடமிருக்கும் நெகடிவை வெளியேற்றி பாஸிடிவ் எனர்ஜியை நமக்கு அளிக்கும் தன்மையுடையவை. உப்பு நிறைந்த கடல் பூஜை புண்ணிய காரியங்களுக்கு பயன்படுத்துகிறோம். கடலை கடவுளாக வழிபடுகிறார்கள்.

நன்மை :

வெள்ளிக்கிழமைகளில் உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம் வரும். செல்வம் சேரும்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!


நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

தென் இந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம் திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் இடையே அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும்.

ஜூன் முதல் செப்டம்பர் வரை, தென் மேற்கு பருவமழையால் அருவிகளில் தண்ணீர், மிதமான வெப்பநிலை, குளிர் காற்று என குற்றாலம் அருவி களைகட்ட தொடங்கிவிடும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு பருவமழையால் கடும் பனி மற்றும் சில நேரங்களில் கன மழை என சுற்றுசூழல் மாறிவிடும். அந்நேரம் நீர்வீழ்ச்சியில் வெள்ளம் அதிகரிப்பதால் மக்கள் குளிக்க சில நேரங்களில் அனுமதிக்கபடுவதில்லை.


குற்றாலத்தில் உள்ள அருவிகள்
குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் உள்ளன.

1)பேரருவி ( MAIN FALLS ), இது 60 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் அருவி, இடையில் பொங்குமாகடலால் அழுத்தம் தடைப்பட்டு, மக்கள் குளிக்க பாதுகாப்பான வகையில் குறைந்த தாக்கத்தை தருகிறது.

2) சிற்றருவி (CHITRARUVI), இங்கு நீரின் அழுத்தம் குறைந்தே காணப்படும், இதன் வழியே தா ன் செண்பகாதேவி மற்றும் தேனருவிக்கு செல்ல முடியும்.

3) செண்பகாதேவி அருவி ( SHENBAGADEVI FALLS ) செண்பக மரங்கள் வழியாக பாய்கிறது. அங்கு செண்பகாதேவி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் உள்ளது.

4) அங்கிருந்து 3 கீ.மீ தூரத்தில் தேனருவி ( THENARUVI ) உள்ளது. இரண்டு பெரிய கற்கள் இடையே 40 மீட்டர் உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சி தொடங்குகிறது.

5) ஐந்தருவி ( AINTHARUVI ) இவ்வனைத்திலும் மாறுபட்ட அருவியாகும். இங்கு ஐந்து தனித் தனி அருவிகள் உள்ளன.

6) இந்த அருவிக்கு மேலே பழத்தோட்டம் அருவி ( PAZHATHOTTA ARUVI ), அல்லது விஐபி அருவி இருக்கிறது.

7) பழைய குற்றாலம் அருவி ( PAZHAYA COURTALLA ARUVI ) இரண்டு பாறைகள் இடையே உள்ள பள்ளத்தாக்கில் இருந்து விழுகிறது. இடையில் இது மூடப்பட்டு பின் நீரின் போக்கை மாற்றி குளிப்பதற்கு ஏதுவாக பாறைகள் செதுக்கபட்டபின் மீண்டும் திறக்கப்பட்டது.

8)புலி அருவி ( PUZHIARUVI ) செயற்கையாக உருவாக்கப்பட்டது. இவ்வருவியின் நீர் பாசனத்திற்காக திருப்பிவிடபடுகிறது

9) ஐந்து அருவி மேலே அரசு தோட்டக்கலை பூங்காவில் ஒரு சிறிய அருவி உள்ளது, ஆனால் அது பொது வரம்புக்குள் இல்லை.


அருகில் பார்க்க வேண்டிய இடங்கள்:

1) தெற்குமலை எஸ்டேட் - தேனருவியில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் இதை அடையலாம்.

2) ஐந்து அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவி அருகில் உள்ள படகு சவாரி.

3) பேரருவி அருகில் உள்ள பாம்பு மற்றும் மீன் பண்ணை

4) சிறு குழந்தை பூங்காக்கள்.

குற்றாலத்தின் சிறப்புகள்:

1) குற்றாலம் அருவிகள் சார்ந்த இடம் மட்டும் அல்ல, தெய்வீகமான இடமும் கூட. சிவனின் ஐந்து சபைகளில் ஒன்றான சித்ரா சபை, இங்கு தான் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியங்கள் பல இங்கு உள்ளது.

2) தமிழ் கவிஞர் திருகூடராசப்ப கவிராயர் இதன் உச்சத்தை தனது குற்றால குறவஞ்சியில் பாடியுள்ளார்.

3) மலையின் அடிவாரத்தில் உள்ள கோவில் இந்து சமய பாரம்பரியபடி சங்கு வடிவம் உள்ளது சிறப்பு.

குற்றாலம் அருகில் உள்ள சில கோவில்கள்:

1) பேரருவியில் உள்ள திருகுற்றாலனாதர் கோவில்.சித்திரை மாதம் முழு நிலவின் போது பத்து நாள் சிறப்பு பிரார்த்தனை இங்கு நடைபெறும்.

2) பண்பொழியில் உள்ள திருமலைக்கோவில் - குற்றாலத்திலிருந்து இருந்து 8 கிமீ.

3) இலஞ்சியில் உள்ள குமரன்கோவில், குற்றாலத்திலிருந்து 1 கிமீ.

4) தென்காசியில் உள்ள காசிவிசுவநாதர்கோவில், குற்றாலத்திலிருந்து இருந்து 6 கிமீ.

5) புளியரையில் உள்ள தக்ஷினாமூர்த்தி கோவில், குற்றாலத்திலிருந்து இருந்து 12 கிமீ.

6) பாபநாசம் உலகாம்பிகை மற்றும் சிவன் கோவில், குற்றாலத்திலிருந்து 35 கி.மீ.

7) ஆரியன்கா ஐயப்பன்கோவில், குற்றாலத்திலிருந்து 35 கிமீ.

அருகில் உள்ள மற்ற சுற்றுலாத்தளங்கள்:

1) பாலருவி - கேரளாவில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி.

2) பாபநாசத்தில் உள்ள பாபநாசம் ஆறு, குற்றாலத்திலிருந்து இருந்து 35 கிமீ.

3) அகஸ்தியர் அருவி - பாபநாசம் அருகே உள்ளது.

4) பாணத்தீர்த்தம் அருவி - பாபநாசம் அருகே உள்ளது.

5) பாபநாசம் (லோயர்) அணை - பாபநாசம் அருகே உள்ளது.

6) பாபநாசம் (உயர்), காரையார் அணை - பாபநாசம் அருகே உள்ளது.

7) சேர்வலார் அணை - பாபநாசம் அருகே உள்ளது.

8)மணிமுத்தாறு அணை - பாபநாசம் அருகே உள்ளது.

9) களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் - பாபநாசம் அருகே உள்ளது.

10) மஞ்சோலை எஸ்டேட், மணிமுத்தாறு எஸ்டேட் & ஊத்து எஸ்டேட் - பாபநாசம் அருகே உள்ளது. இவ்வனைத்தும் 2300 முதல் 4200 அடி வரை அமைந்துள்ளன.

குற்றாலத்துக்கு வருவது எப்படி:

சாலை மூலமாக:
சாலை வழியில் குற்றாலத்திலிருந்து பல்வேறு இடத்திற்கான தூரம்:
மதுரை: 160 கி.மீ.
திருநெல்வேலி: 59 கி.மீ
தென்காசி: 5 கி.மீ
செங்கோட்டை: 5 கி.மீ
மதுரை விமான நிலையத்தில் இருந்து: 160 கி.மீ
தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து: 120 கி.மீ
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து: 120 கி.மீ

தென்காசி மற்றும் செங்கோட்டை இருந்து குற்றாலம், பஸ் போக்குவரத்து மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து செங்கோட்டை வரும் பேருந்துகளாலும், திருநெல்வேலியில் இருந்து தென்காசி மற்றும் செங்கோட்டை வரும் பேருந்துகளாலும் குற்றாலத்தை அடையலாம். மேலும் கேரளா மாநிலம் புனலூரில் இருந்து செங்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் மதுரை செல்லும் பேருந்துகள் மூலவும் குற்றாலத்தை அடையலாம்.

தொடர் வண்டி மூலமாக:

குற்றாலத்தில் தொடர் வண்டி நிலையம் இல்லை, ஆனால் செங்கோட்டை மற்றும் தென்காசி நிலையத்தில் இருந்து இருபது நிமிடங்களில் குற்றாலத்தை அடையலாம்.
இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் தொடர் வண்டிகள்..
பொதிகை எக்ஸ்பிரஸ்: செங்கோட்டை - சென்னை, சென்னை - செங்கோட்டை
பயணிகள் வண்டி: செங்கோட்டை - மதுரை, மதுரை - செங்கோட்டை
பயணிகள் வண்டி: செங்கோட்டை - திருநெல்வேலி, திருநெல்வேலி - செங்கோட்டை
பயணிகள் வண்டி: செங்கோட்டை - கொல்லம், கொல்லம் - செங்கோட்டை
சில நேரங்களில் சென்னை, ஈரோடு மற்றும் தூத்துக்குடிக்கு சிறப்பு வண்டிகள் தெற்கு ரயில்வே மூலம் இயக்கப்படுகின்றன.

அனைவரும் ஒரு தடவையாவது குற்றாலம் வந்து இயற்கை அன்னை நெல்லை மாவட்டத்திற்கு அளித்திற்கும் பரிசை வந்து பாருங்கள்.

புதன், 27 ஜூன், 2018

உங்களின் பற்களுக்கு முன்னால் பின்னால் மஞ்சள் கரை உள்ளதா, எளிதில் போக்க இதை செய்யுங்கள் தீர்வு விரைவில் கிடைக்கும்...

உங்களின் பற்களுக்கு முன்னால் பின்னால் மஞ்சள் கரை உள்ளதா, எளிதில் போக்க இதை செய்யுங்கள் தீர்வு விரைவில் கிடைக்கும்...

வணக்கம் நண்பர்களே, நீங்கள் தினமும் பல் துலக்கினால் கூட சிறிது கரை வந்து விடும். பிறகு அது பல்லின் வெண்மை நிறத்தை போக்கி மஞ்சள் நிறமாக மாற்றி விடும். நம்மில் சிலர் சிலர் வாய்விட்டு சிரிப்பதற்க்கே கூச்சப்படுவார்கள். அதற்கான காரணம் அவர்களின் பற்களில் இருக்கும் மஞ்சள் நிற கரை தான்.




பற்களின் கரையை போக்க எளிய வழி:
நீங்கள் ஒரு பாத்திரத்தில் சிறிது சமையல் சோடாவை எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிது நீர் சேர்த்து, பின்னர் பயன்படுத்தும் பிரஷை நன்றாக சோடாவில் நனைத்து எப்போதும் போல் நன்றாக பல் துலக்கவும் இது உப்பு சுவை மிகுந்ததால் சிறிது சிறிதாக பயன்படுத்தவும். இல்லையேல் உங்களுக்கு மிகவும் சுவை காக்கிம். இதை ஒரு வாரத்திற்கு நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் பல் கரை போய்விடும்.
இதேபோல், நீங்கள் செய்திகளை பெற விரும்பினால் நமது சேனலை பின்தொடரவும் மற்றும் கருத்து தெரிவிக்கவும். பிடித்திருந்தால் மறக்காமல் லைக்ஸ் போடவும். வேறு எதைப்பற்றிய தகவல் வேண்டும் என்பதை கருத்து பெட்டியில் தெரிவிக்கவும்.

உடலின் ஸ்டாமினாவை அதிகரிப்பதற்கான எளிய வழிமுறைகள்!!!


உடலின் ஸ்டாமினாவை அதிகரிப்பதற்கான எளிய வழிமுறைகள்!!!

 *உடலை ஒருமுறை பரிசோதித்துக் கொள்ளுங்கள்*

உடலில் ஸ்டாமினாவை அதிகரித்துக் கொள்ள விரும்புகிறீர்கள் என்றால், உடலை ஒருமுறை அடிப்படை மருத்துவ ரீதியாகப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உடல் தகுதி என்ன என்று நன்கு அறிந்து கொள்ள முடியும். மேலும் அடிபட்டுக் காயங்கள் ஏற்பட்டாலோ, மயக்கம் வந்தாலோ, வேறு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டாலோ, அவற்றை எந்த அளவுக்கு நம்மால் எதிர்கொள்ள முடியும் என்று தெரிந்து கொள்ளவும் முடியும்.
 

 *சரிவிகித சமச்சீரான உணவு உண்ணுங்கள்*

நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கவனியுங்கள். கொழுப்பு குறைவான உணவுப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், கொழுப்பில்லாத மாமிசம் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது உடலின் ஆரோக்கியம் அதிகரிக்கவும், உடல் மற்றும் மனதின் ஸ்டாமினா அதிகரிக்கவும் உதவும்.
 

 *பிடித்தமான விளையாட்டை விளையாடுங்கள்*

அனைத்து விதமான வெளியரங்கு விளையாட்டுகளும் களைப்பை நீக்கவும், ஸ்டாமினாவை அதிகரிக்கவும் உதவும். ஏனெனில் விளையாட்டுக்கள் என்பது ஒருவிதமான ஏரோபிக் உடற்பயிற்சி போன்றவை. கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுக்கள் இதயத்தை நன்றாக வலிமைப்படுத்தும். அதன் மூலம் அதிக அளவிலான ஆக்ஸிஜன் உடல் முழுவதும் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
 
 *மெதுவாகத் தொடங்குங்கள்*

ஸ்டாமினாவை அதிகரிப்பதற்கான பயிற்சிகளை இப்போது தான் செய்யத் தொடங்கியுள்ளீர்கள் என்றால், எடுத்தவுடனே கடினமான பயிற்சிகளை அசுர வேகத்தில் செய்யாமல், பயிற்சிகளை சிறிது சிறிதாக மெதுவாகச் செய்யத் தொடங்குங்கள். ஒரு குறிப்பிட்ட தூரத்தை ஓடிக் கடக்க வேண்டும் என்று விரும்பினால், முதலில் மெதுவாக நடந்து செல்லுங்கள். பிறகு மெதுவாக ஓடிப் பழகுங்கள். அதுவும் குறைவான தூரம் மட்டும் ஓடுங்கள். அந்த தூரத்தைக் கடக்கும் ஸ்டாமினாவை உடல் அடையும் வரை பயிற்சிகளை சிறிது சிறிதாக அதிகரியுங்கள்.


 *கார்டியோவாஸ்குலார் பயிற்சிகளை செய்யுங்கள்*

உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்கச் செய்வதற்கு சிறந்த வழிகளில் ஒன்று தினந்தோறும் சிறிது நேரம் ஒதுக்கி கார்டியோவாஸ்குலார் பயிற்சிகளைச் செய்வது தான். ஓட்டம், நீச்சல், குதித்தல் போன்ற கார்டியோவாஸ்குலார் பயிற்சிகளை தினசரி உடற்பயிற்சிகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 *ஓய்வு நாட்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்*

ஸ்டாமினாவை அதிகரிக்க விரும்பினால், ஓய்வு நாட்களைக் குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். மிகவும் கடினமாக உணர்ந்தீர்கள் என்றால், சில வினாடிகள் ஓய்வுகொள்ளுங்கள்.
 

 *சிறு அளவில் நிறைய தடவை உண்ணுங்கள்*

உடலுக்கு தடையின்றி சக்தி கிடைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்றால், சிறு அளவில் குறிப்பிட்ட சீரான இடைவெளிகளில் நிறைய முறை உண்ணுங்கள்.
 

 *குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரியுங்கள்*

உடலிலிருந்து நீர்ச்சத்து வெளியேறாமல் இருக்கவும், களைப்படையாமல் இருக்கவும், போதுமான அளவு தண்ணீர் பருகுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பொதுவாக குடிக்கும் தண்ணீரின் அளவு குறைந்தால், உடலின் இரத்தம் கெட்டியாகி இரத்த ஓட்டம் குறையும். இதனால், உடலுக்கு ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லும் வேகம் குறைந்து, உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் சப்ளை குறையும்.
 

 *சோடியம் அளவினைக் கட்டுப்படுத்துங்கள்*

நாள் முழுவதும், பகலென்றும் இரவென்றும் பாராமல், உடற்பயிற்சிகளை செய்து கொண்டிருந்தீர்கள் என்றால், உடலிலிருந்து வியர்வை அதிகமாக வெளியேறி, அதன் மூலம் உப்புச்சத்துக்களும் உடலை விட்டு வெளியேறிவிடும். உடலில் உப்புச்சத்துக்கள் குறைந்தால், உடலில் எலக்ட்ரோலைட் சமமின்மை உண்டாகும். இதனால், ஸ்டாமினா குறைந்து எப்போதும் களைப்பாகவும் மயக்கமாகவும் உணர்வீர்கள். இந்த ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்கு எப்போதும் உடலில் உப்புச்சத்துக்கள் நீங்கா வண்ணம் கவனித்துக் கொள்ளுங்கள். அதே நேரத்தில், இரத்தக்கொதிப்பு இருக்கிறதா என்றும் பார்த்துக் கொள்ளுங்கள்.

 *கார்போஹைட்ரேட்டுகளைத் தேர்ந்தெடுங்கள்*

உணவில் போதுமான அளவு கார்போஹைட்ரேட்டுகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அவற்றிலுள்ள ஸ்டார்ச்சுகள் மற்றும் சர்க்கரையானது, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தந்து, ஸ்டாமினாவை தொடர்ந்து நீடிக்குமாறு பேணும். அதிலும் பருப்புகள். பிரட், பழங்கள், காய்கறிகள், பாஸ்தா, பால் போன்ற கார்போஹைட்ரேட் நிறைந்த பொருட்களை உணவில் தவறாது இடம்பெறச் செய்யுங்கள்.
 

 *எல்லைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்*

உடலால் முடியாத வேலைகள் மற்றும் பயிற்சிகளை உடலின் மீது திணிக்க வேண்டாம். ஏனெனில் இதன் காரணமாக காயமோ, தசைப்பிடிப்புகளோ ஏற்படலாம்.
 

 *தீய பழக்கங்களை விட்டொழியுங்கள்*

நம்மிடம் சில நல்ல பழக்கங்களும், சில தீய பழக்கங்களும் இருக்கும். அது நமக்கும் தெரியும். நம்மிடம் இருக்கும் இரண்டு பழக்கங்களின் பட்டியல் ஒன்றைத் தயார் செய்யுங்கள். புகைப்பிடித்தல், அளவுக்கு அதிகமாக மது அருந்துதல், துரித உணவுகள்,

பெண்களின் உடலுக்கு கால்சியம் முக்கியமானது.


பெண்களின் உடலுக்கு கால்சியம் முக்கியமானது.

*பெண்களின் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச் சத்துகளில் கால்சியம் முக்கியமானது. அதனால் பெண்கள் தினமும் பால் பருகி வருவது அவசியமானது.*

பெண்களின் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துகளில் கால்சியம் முக்கியமானது. பற்கள், எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம் அவசியமானது. இதயத்துடிப்பு, ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தவும், திரவ சமநிலையை சீராக பராமரிக்கவும் கால்சியம் இன்றியமையாதது. இது ஏராளமான உணவு பொருட்களில் நிறைந்திருக்கிறது. அவைகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருவதன் மூலம் கால்சியம் பற்றாக்குறையில் இருந்து விடுபடலாம். ஆண்களுக்கு தினமும் குறைந்தபட்சம் 1000 மில்லி கிராம் கால்சியமும், பெண்களுக்கு 1200 மில்லி கிராம் கால்சியமும் அவசியம்.

ஒரு கப் பாலில் 276-352 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது. பாலாடை கட்டி போன்ற பால் வகை பொருட்களிலும் கால்சியம் அதிகம் கலந்திருக்கிறது. பாலில் வைட்டமின் ஏ, டி மற்றும் புரத சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. அதனால் பெண்கள் தினமும் பால் பருகி வருவது அவசியமானது.

தயிரிலும் கால்சியம் உள்ளது. தொடர்ந்து தயிர் சாப்பிடுவது உடல் நலனை மேம்படுத்தும். வளர்சிதை மாற்றத்துக்கு உதவும். நீரிழிவு நோய், இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

பாதாமும் கால்சியம் அதிக அளவு நிரம்பப்பெற்றது. தினமும் பாதாம் சாப்பிட்டு வருவது, உடல் கொழுப்பு, ரத்த அழுத்தம் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்கான பிற ஆபத்துக்களை குறைக்க உதவும்.

100 கிராம் பீன்சில் 36 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது. அதனை வேகவைத்தோ, சூப்பாக தயாரித்தோ, காய்கறிகளுடன் சமைத்தோ உண்ணலாம்.


100 கிராம் கோழி இறைச்சியில் 13 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. ஆனால் வேகவைத்த கோழி முட்டை ஒன்றில் 50 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. ஆதலால் தினமும் உணவில் ஒரு முட்டையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

100 கிராம் பேரீச்சம்பழத்தில் 64 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது.

கால் கப் சோயா பாலில் 100 மில்லி கிராம் கால்சியம் நிறைந்திருக்கிறது. இதில் புரதம் மற்றும் ஒமேகா 3 அமிலமும் சேர்ந்திருக்கிறது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இதய நோய்க்கான அபாயத்தை குறைக்கலாம். உடலுக்கு தேவையான ஆற்றலையும் பெறலாம்.

வேக வைத்த கால் கப் கீரையை சாப்பிட்டால் அதன் மூலம் 120 மில்லி கிராம் கால்சியம் பெறலாம். கீரைவகைகளுடன் பாஸ்தா போன்ற உணவு களை கலந்து சாப்பிட்டு கால்சியத்தின் அளவை அதிகப்படுத்தலாம்.

ஆரஞ்சு பழத்தை சாறு எடுத்தோ, பிற பழவகைகளுடன் கலந்து சாலட்டாகவோ தயார் செய்து சாப்பிடலாம். அரை கப் ஆரஞ்சுபழம் சுமார் 50 மில்லிகிராம் கால்சியத்தை வழங்கும்.

அன்னாசி பழத்தையும் அடிக்கடி சாப்பிட்டு வரலாம். அதிலும் நிறைய கால்சியம் உள்ளது.

கடல் உணவுகள், பழங்கள், பருப்பு வகைகள் உள்ளிட்டவைகளிலும் கால்சியம் அதிக அளவு இருக்கிறது.

பெண்களுக்கு தேவையான சத்துக்கள்..


பெண்களுக்கு தேவையான சத்துக்கள்..

ஆண்களை விட பெண்களுக்கு இரும்பு சத்து அத்தியாவசியமானதாக இருக்கிறது. பெண்களுக்கு தேவையான சத்துக்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

ஆண்களை விட பெண்களுக்கு இரும்பு சத்து அத்தியாவசியமானதாக இருக்கிறது. ஆண்களுக்கு தினமும் 8 மில்லி கிராம் இரும்பு சத்து போதுமானது. ஆனால் பெண்களுக்கு 18 மில்லி கிராம் தேவைப்படுகிறது. அதிலும் கர்ப்பிணியாக இருக்கும் காலகட்டத்தில் 27 மில்லி கிராம் வரை தேவைப்படும். கருவுற்றிருக்கும்போது குழந்தையின் வளர்ச்சிக்காக அதிக ரத்தம் தேவைப்படுகிறது. அதற்காகவும் பிரசவத்தின்போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடுகட்டவும் போதுமான அளவு இரும்பு சத்து உடலுக்கு அவசியப்படுகிறது.

மேலும் மாதவிடாய் சுழற்சியின்போது ரத்தத்தின் அளவை சீராக பராமரிக்கவும் இரும்பு சத்து நிறைந்த உணவை சாப்பிட வேண்டும். சோயா பீன்சில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. அத்துடன் கால்சியம், மெக்னீசியம், செலீனியம் போன்றவைகளையும் உள்ளடக்கியது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் இதய நோய்களில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.

பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட்ஸ், வேர்க்கடலை உள்ளிட்டவைகளில் இரும்பு சத்து அதிகம். 30 கிராம் முந்திரி பருப்பில் 2 மில்லி கிராம் இரும்பு சத்து இருக்கிறது. இறைச்சியிலும் இரும்பு சத்து அதிகம் கலந்திருக்கிறது. பூசணி விதை, இரும்பு சத்து நிரம்பப்பெற்றது. அதனை பச்சையாகவோ, வறுத்தோ சாப்பிடலாம்.

உலர் திராட்சை, பேரீச்சம் பழம் ஆகியவையும் இரும்பு சத்து அதிகம் கொண்டவை. வாழைப்பழம், பீன்ஸ், பருப்பு வகைகள், பட்டாணி, ஓட்ஸ் மற்றும் கீரை வகைகளையும் அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். அவற்றில் இரும்பு சத்து மட்டு மின்றி பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான இதர ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.


உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் ஆழ்ந்த தூக்கம் அவசியம்...

உடல்  ஆரோக்கியத்திற்கு தினமும் ஆழ்ந்த தூக்கம் அவசியம்...

தினமும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தூங்கச் செல்லுங்கள். ஒரு நாள் 8 மணி, ஒரு நாள் 10 மணி, லீவு நாட்களில் 12 மணி என்று செல்லாதீர்கள். தொடர்ந்து ஆரோக்கியம் நிலைக்க வேண்டும் என்றால் தினமும் ஆழ்ந்த தூக்கம் இருக்க வேண்டும். ஆழ்ந்த தூக்கத்தில் சுரக்கும் ஹார்மோன்கள் கல்லீரலை சுத்தம் செய்கின்றன. செல்களை புதுப்பிக்கின்றன. தசைகளை வலுப்படுத்துகின்றது. கொழுப்பினை உடைக்கின்றது. 
ரத்தத்தில் சர்க்கரை அளவினை சீர் செய்கின்றது. எனவே தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி குறிப்பிட்ட நேரத்தில் எழ பழகுங்கள். அத்துடன் தினமும் 8-10 மணி நேரம் தூங்குங்கள். தூக்கம் வரவில்லை எனில் ஒரு நல்ல புத்தகம் படியுங்கள். சீக்கிரம் தூங்கி விடுவீர்கள். 
* இரவு உணவினை சீக்கிரம் முடித்து விடுங்கள் என்ற அறிவுரையினை மருத்துவ உலகம் கூறுகின்றது. 7 மணிக்குள் உணவினை முடித்துக் கொண்டால் 9 மணிக்கு ஏதேனும் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகின்றது என பலர் கூறுகின்றனர்.  ஏதேனும் புரதமாக சிறிதளவு எடுத்துக் கொள்வது வயிறு நிறைவினை தரும். ஆரோக்யத்தினையும் அளிக்கும். சிறிதளவு பன்னீர் அல்லது சில பாதாம் கொட்டைகள் இவையே போதும். மாவு சத்து, சர்க்கரை சேர்ந்த உணவு கண்டிப்பாக வேண்டாம். 
* தூங்குவதற்கு முன்னால் சில எளிய யோகாசனங்கள் செய்யலாம். 
* குடல், உணவுப் பாதை நன்கு இருந்தால் உடல் சிறந்த ஆரோக்கியம் பெறும். எனவே அன்றாட உணவில் கொழுப்பில்லாத தயிர், மோர் இவற்றினை எடுத்துக் கொள்வதும் தூக்கத்திற்கு உதவும். 
* கால்ஷியம், மக்னீசியம் இவை தேவையான அளவு உங்கள் உடலில் உள்ளதா என்பதை உங்கள் மருத்துவர் மூலம் அறிந்து கொள்ளுங்கள். 
* வெந்நீரில் 1/2 எலுமிச்சை பிழிந்து சாப்பிடுவது இரவில் உடலினை ஆசிட் தன்மை இல்லாது  வைக்கும். ஆசிட் தன்மை இல்லாது இருந்தாலே உடல் தொந்தரவின்றி இருக்கும். 

குழந்தைகளை நிறைய சாப்பிட வைக்க என்ன செய்யலாம் ?

குழந்தைகளை நிறைய சாப்பிட வைக்க என்ன செய்யலாம் ?

எல்லா பெற்றோர்களுக்குமே தங்கள் குழந்தைகள் நிறைய சத்துள்ள உணவுவகைகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வளரவேண்டும் என்ற ஆசை சற்று அதிகமாகவே இருக்கும்.
அதற்காக தனக்கு உணவில்லாவிட்டாலும் பரவாயில்லை, குழந்தைகளுக்கு எவ்வளவு செலவானாலும் சத்தான உணவழிக்க வேண்டும் என பாடுபடுகிறார்கள்.ஆனால் குழந்தைகளோ பெற்றோர் கொடுக்கும் உணவு வகைகளை தீண்டுவதே இல்லை.

                                                    
எதைக் கொடுத்தாலும் வேண்டாம் என அடம்பிடித்து சாப்பிட மறுக்கிறார்கள்.இது பெற்றோருக்கு மிகுந்த மன வேதனையை அளிப்பதோடு குழுந்தையை அடித்தல், குழந்தை சாப்பிடாததால் அதனுடன் பேசாமல் இருத்தல் போன்ற எதிர்மறை விளைவுகளையும் உண்டாக்குகிறது.
ஏன் குழந்தைகள் சாப்பிடுவதில்லை என்பதை தெரிந்துகொள்ள ஒரு உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு மிக அதிக உணவு தேவையில்லை. உதாரணமாக ஒரு பெரிய சாக்லெட் சாப்பிட்டால் அதற்கு மதிய உணவு தேவைப்படாது.எனவே மதிய உணவு கொடுத்தால் அதை சாப்பிட மறுப்பதில் வியப்பேதும் இல்லை.
பெற்றோர்களுக்கு மற்ற குழந்தைகள் சாப்பிடும் அளவோடு தன் குழந்தை சாப்பிடும் அளவை ஒப்பிட்டு பார்க்கும் பழக்கம் உண்டு.அவ்வாறு ஒப்பிட்டு பார்க்கும் போது எப்போதும் அடுத்த குழந்தையை விட தன் குழந்தை குறைவாகவே உண்பதாக தோண்றும்.இது ஒரு மாயத் தோற்றமே                                                    
தன் குழந்தை "நன்றாக சாப்பிடுகிறது"என பிறரிடம் சொன்னால் கண் திருஷ்டி ஏற்பட்டுவிடும் என்று நினைத்துக்கொண்டு பல பெற்றோர்கள் "என் குழந்தை சாப்பிடுவதே இல்லை" என குழந்தையின் முன்பாகவே பிறரிடம் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.அதை கூர்ந்து கவனிக்கும் குழந்தைகள் சாப்பிடுவதை தவிர்க்க ஆரம்பிக்கின்றன.
குழந்தைகள் ஒரே உணவை எப்போதும் விரும்பி உண்பதில்லை அவர்களின் உடலில் என்ன சக்தி குறைவாக உள்ளதோ அந்த சக்தி அதிகமாக உள்ள உணவை விரும்பி சாப்பிடுவார்கள்.உடலில் பற்றாக்குறையாக இருந்த சக்தி தேவையான அளவு சேர்ந்தவுடன் அந்த சக்தி இருக்கும் உணவை விரும்ப மாட்டார்கள்.
உதாரணமாக முட்டையில் உள்ள சக்தி குறைவாக இருக்கும் ஓர் குழந்தை முட்டையை தொடர்ந்து சில காலத்திற்கு விரும்பு சாப்பிடும்.அக்குழந்தைக்கு முட்டையில் உள்ள சக்தி தேவையான அளவு உடலில் சேர்ந்தவுடன் முட்டையை அறவே வெறுக்க ஆரம்பித்துவிடும்.

                                                      
எனவே ஒரே வகையான உணவை சாப்பிடுமாறு குழந்தையை கட்டாயப்படுத்தக்கூடாது.ஓர் உணவை சாப்பிடவில்லை எனில் வேறு உணவை கொடுத்து உண்ணச் சொல்ல வேண்டும்.

அவரைக்காயின் மருத்துவப் பயன்கள்

அவரைக்காயின் மருத்துவப் பயன்கள்






அவரைக்காய் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறையும்.
🥒அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.
🥒இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுவதால், இதனை இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
🥒அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
🥒சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை சரியாகும்.

சர்க்கரை நோயை அடியோடு காலி பண்ணும் வில்வ இலை. தினமும் டீ வெச்சு குடிங்க.

சர்க்கரை நோயை அடியோடு காலி பண்ணும் வில்வ இலை. தினமும் டீ வெச்சு குடிங்க.

சில இனத்தவர்கள் மற்றும் சில நாட்டினர் இந்த மூலிகை முறைகளை பாரம்பரியமாக பின்பற்றி வருகிறார்கள். உங்களுக்கு நன்றாகவே தெரியும் தாய்லாந்து நாட்டில் உள்ள துளசி மூலிகை மிகவும் புகழ் பெற்றது.
நமது இந்தியாவிலும் தாய்லாந்திலும் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கிய மூலிகைகள் உள்ளன. இந்தியாவில் காணப்படும் மருத்துவ மூலிகைகள் ஏராளமான பிணிகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது. அப்படிப்பட்ட ஒன்று தான் இந்த வில்வம் இலை. இந்த வில்வம் இலை கடவுள் வழிபாட்டுக்கு மாத்திரம் இல்லாமல் ஏராளமான தனிச் சிறப்புகளை உள்ளடக்கியுள்ளது.







வேர்க்கடலையில் உள்ள கொழுப்புச் சத்து உடலுக்கு நல்லதா? கெடுதலா?

வேர்க்கடலையில் உள்ள கொழுப்புச் சத்து உடலுக்கு நல்லதா? கெடுதலா?

வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு மற்றும் புரதச் சத்து அதிகமாக உள்ளது.
வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு. எனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை  எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம். மேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத்  துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது.

வேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன. இந்த வைட்டமின்கள்  கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது. இந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது.

வேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது. வேர்க்கடலையைச் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச்  செய்கிறது. இதனால் ரத்தம் சீராக இருப்பதோடு, ரத்த அழுத்தம் குறையும்.

வேர்க்கடலை சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் இப்படித் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள்  தள்ளிவிட்டுவிடும். தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.
இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும். வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கிறது.
வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.

நீங்கள் வைட்டமின் ஈ கேப்சூல் வாழ்க்கையில் ஒருமுறை சாப்பிடுவதால் என்ன கிடைக்குமென்று தெரியுமா.

நீங்கள் வைட்டமின் ஈ கேப்சூல் வாழ்க்கையில் ஒருமுறை சாப்பிடுவதால் என்ன கிடைக்குமென்று தெரியுமா.
வணக்கம் நண்பர்களே, வைட்டமின் ஈ கேப்சூல் ஒரு அற்புதமான ஒன்றாகும். இதனை அடிக்கடி பயன்படுத்த தேவையில்லை. ஆனால் பயன்படுத்துவதால் நிறைய பலன் உங்களுக்கு கிடைக்கும். அதனால் கிடைக்கும் நன்மைகளை பார்ப்போம்.




வைட்டமின் ஈ கேப்சூல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
வைட்டமின் ஈ கேப்சூல் சாப்பிடுவதால் நம் கண்களுக்கு பார்க்கும் திறனை அதிகரித்து நன்மை தருகிறது.
முடி உதிரும் மற்றும் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதை இவை எளிதில் சரியாக்கிவிடும்.
வைட்டமின் ஈ இன் கேப்சூல்கள் இதய நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்காக மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதேபோல், நீங்கள் செய்திகளை பெற விரும்பினால் நமது சேனலை பின்தொடரவும் மற்றும் கருத்து தெரிவிக்கவும். பிடித்திருந்தால் மறக்காமல் லைக்ஸ் போடவும். வேறு எதைப்பற்றிய தகவல் வேண்டும் என்பதை கருத்து பெட்டியில் தெரிவிக்கவும்.