புதன், 26 பிப்ரவரி, 2020

பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்!


பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்!

உங்களின் எடை குறைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உங்களுக்கு ஜீன்ஸ் பொருத்தமாக இருக்கும். அதை அணிந்து அழகு பாருங்கள். அதே நேரத்தில் திடீரென்று உங்கள் எடை குறைந்தது ஏன் என்பதைக் கண்டறிய மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளுங்கள்.

உங்கள் குடும்பத்தினருக்கோ, அருகில் வசப்பவர் களுக்கோ சிறு விபத்தோ, இதய பாதிப்போ ஏற்படலாம். அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்ப்பது அவசியம் என்றாலும், உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட வேண்டும். முதலுதவி பற்றி நீங்களும் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள்.

எப்போதும் சரியான உள்ளாடைகள் அணிவது அவசியம். இறுக்கமான உள்ளாடைகளை அணிவது பல்வேறு உடல் தொந்தரவுகளுக்கு காரணமாகும். அதுபோல் தொள தொள உள்ளாடைகளும் அணியக்கூடாது. எப்போதும் பொருத்தமான உள்ளாடைகளை மட்டுமே அணிய வேண்டும்.

பெண்கள் புதிதாக தொழில் தொடங்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்கள் முக்கியமாக தொழில் நேர்த்தியை கற்றுக்கொள்ள வேண்டும். நட்பான அணுகுமுறை அவர்கள் முன்னேற்றத்தின் படிக்கல் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

சிலர் ஹோட்டலில் சுவை நன்றாக இருக்கிறது என்று எண்ணி அடிக்கடி ஹோட்டல்களில் சாப்பிடுகிறார்கள். ஆனால் வீட்டில் சமைக்கும் உணவில்தான் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கிறது. வீட்டில் சாதம், கூட்டு, பொரியல் ஆகியவற்றை சுவையாக சமைபது எப்படி என்பதை பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது பற்றி பல தகவல்கள் புத்தகங்களிலும், இணையதளங்களிலும் கிடைக்கின்றன.

வீட்டில் பொழுதுபோக்குக்காக ஒதுக்கபடும் நேரங்களில் இசையை ஈடுபாட்டுடன் கேட்கலாம். மனது இலகுவாகும்.

டி.வி பார்க்கும் போது அருகில் இருப்பவர்கள் திடீரென உங்கள் மீது விழுந்தாலோ, அருகில் உள்ள மேஜையிலிருந்து யாராவது இருமினாலோ உங்களுக்கு எரிச்சல் வரும் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலிலே நீங்களாகவே அந்த மாதிரியான தொந்தரவுக்கு இடம் கொடுக்காமல் தள்ளி உட்கார்ந்து விடுங்கள்.


வீட்டில் பொருள்கள் ஆங்காங்கே ஒழுங்கு இல்லாமல் சிதறிக் கிடந்தால் எரிச்சல் ஏற்படும். இப்படி சிதறிக் கிடக்கும் பொருள்களை ஒழுங்குபடுத்தலாம். மேலும் ஆங்காங்கே கிடக்கும் குப்பைகளை எடுத்து குப்பைத் தொட்டியில் சேகரிக்கும் நல்ல பழக்கத்தையும் கற்றுக் கொள்ளலாம்.

குடிநீரை கொதிக்க வைக்கும்போது அதில் சீரகம் கலந்திடுங்கள். கொதிக்க வைத்து ஆறியபின் அதை குடிராக அருந்துங்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்தினால் வெப்பத்தால் உடான உடல் சூடு குறையும். சீரக தண்ணீர் உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைத்திருக்க உதவும்.

வீட்டில் தனியாக இருக்கும் போது திருடர்கள் உங்களை தாக்கும் நோக்கத்தோடு வந்தால் அவர்க ளிடமிருந்து தப்பிக்க காரத்தே போன்ற கலைகளை தெரிந்து வைத்திருங்கள். தற்காப்பு கலை எதுவும் தெரிந்திருக்காவிட்டாலும் உங்கள் மனது எப்போதும் தன்னம்பிக்கையோடு இருக்கட்டும்.

பெண்கள் தொழில், படிப்பு போன்ற காரணங்களுக்காக வெளியூர்களில் தனியாக வசிக்க நேரிடலாம். அந்த மாதிரியான வேளைகளில் தனியாக இருக்க பழகிக்கொள்ள வேண்டும். அப்படி இருபதால் மனரீதியாக தைரியம் கிடைக்கும்.

பெண்கள் பணத்தை சம்பாதிப்பதை விடவும், அதை சேமிப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டும். சரியான நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். நுறு ருபாய் என்றாலும் ஒன்றுக்கு பலமுறை யோசித்தே முதலீடு செய்யவேண்டும்.

திடீரென உங்கள் வீட்டிற்கு உறவினர்கள் அதிக பேர் வந்தால் உங்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். அந்த நேரங்களில் டென்ஷன் ஆகாமல் இன்முகத் தோடு வேலையை பாருங்கள். உங்கள் முகத்தில் தோன்றும் புன்னகையே விருந்தாளிகளின் பாதி பசியை போக்கிவிடும்.

புத்தகங்களை படிப்பது போல் சிறந்த பொக்கிஷம் வேறென்றும் இல்லை. நல்ல நல்ல சிந்தனை உள்ள புத்தகங்களைம், வரலாற்று பதிவுகளையும் படிப்ப தன் முலம் பல விஷயங்களை வீட்டில் இருந்தவாறு தெரிந்து கொள்ளலாம்.

தினமும் அதிகாலை 5 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். வெயில் வரும் முன்னே சமையல், வீட்டு வேலைகளை முடித்து விடுவது நல்லது.

சிறுநீர் கழிப்பது பற்றி நாம் பெரிதாக அறியாத 15 உண்மைகள்


சிறுநீர் கழிப்பது பற்றி நாம் பெரிதாக அறியாத 15 உண்மைகள்

📍நம் உடலில் தேவையானவற்றை ஊட்டச்சத்தாக, கொழுப்பாக பிரித்து எடுத்த பிறகு, வேண்டாதவற்றை உடல் மலமாகவும், சிறுநீராகவும் வெளியேற்றுகிறது.

மலம், மற்றும் சிறுநீர் உடலுக்கு வேண்டாதவை என்ற போதலும், ஒருவரது உடல் நலம் எப்படி இருக்கிறது? அவரது ஆரோக்கியம் சீர்குலைந்து வருகிறதா? ஒருவரது உடலில் என்ன நோய் தொற்று அல்லது நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை மலம் மற்றும் சிறுநீரில் ஏற்படும் மாற்றங்களை வைத்து கண்டறிய முடியும்!

சிறுநீர் கழிப்பதில் இருந்து நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில உண்மைகள்🍀

🎍உண்மை 1
ஒருநாளுக்கு ஒருவர் 7 முறை வரை சிறுநீர் கழிப்பது சாதாரணமாகும். இதை காட்டிலும், மிக குறைவாக அல்லது அதிகமாக சிறுநீர் கழிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.

🎍உண்மை 2
நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் 7 நொடிகளாவது சிறுநீர் கழிப்பீர்கள். மிக அவசரமாக சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு இருந்தும் 2 நொடிகள் மட்டும் சிறுநீர் கழிக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஏதோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என அர்த்தம்.

🎍உண்மை 3
முதிர்ச்சி அடைந்த ஓர் நபரின் சிறுநீர்ப்பை 300 – 500 மி.லி அளவிலான சிறுநீரை அடக்கி வைத்துக் கொள்ளும் அளவிற்கும்.

🎍உண்மை 4
ரோமானியர்கள் அவர்களது சிறுநீரை கொப்பளிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். சிறுநீரில் இருக்கும் அமோனியா பற்களை வெள்ளையாக வைத்துக் கொள்ள உதவும் என அவர்கள் எண்ணினார்.

🎍உண்மை 5
உங்கள் சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்கள் உடல்நிலையை பற்றி அறிந்துக் கொள்ள முடியும்.,

வெள்ளை (சுத்தமாக) – நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது.

வெளிறிய மஞ்சள் – போதுமான அளவு நீர்ச்சத்து

மஞ்சள் – உடலில் நீரச்சத்து குறைந்து வருகிறது.

பிரவுன் – கல்லீரல் தொற்று / பழைய இரத்தம்.

சிவப்பு / பின்க் – தூய இரத்தம் சிறுநீரில் கலந்துவருகிறது / சிறுநீரக கோளாறு / புற்றுநோய்.

நீலம், பச்சை – தவறான மருந்துகள் உட்கொள்ளுதல் / உணவில் அதிகப்படியான சாயம் கலப்பு

🎍உண்மை 6
சிறுநீர் கழிக்கும் போது இனிப்பு வாசனை வருகிறது எனில், உங்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.

🎍உண்மை 7
சிறுநீர் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது எனில், சிறுநீரகத்தின் வழியாக க்ளூகோஸ் மற்றும் புரதம் அதிகப்படியாக வெளியேறுகிறது என்று அர்த்தம்.

🎍உண்மை 8
மருத்துவர்கள் ஒளிகுர்யா (oliguria) எனும் ஓர் நிலை இருக்கிறது. இது, நீங்கள் போதுமான அளவு சிறுநீர் கழிப்பது இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது என்கின்றனர்.

🎍உண்மை 9
நாம் கழிக்கும் சிறுநீரில் சோடியம், பொட்டாசியம் மற்றும் க்ளோரைட் போன்ற 3000 வகையிலான கூறுகள் இருக்கின்றன.

🎍உண்மை 10
 காரமான உணவுகள், காபி போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் உங்கள் சிறுநீரின் நாற்றத்தில் மாற்றம் உண்டாக்கும்.

🎍உண்மை 11
காட்டில் அல்லது ஆட்கள் இல்லாத இடத்தில் தொலைந்து போனாலோ, கையில் நீர் இல்லாத சமையத்தில் சிறுநீரை அருந்தலாம் என சிலர் கூறுவதுண்டு. ஆனால், இது தவறு. சிறுநீரில் இருக்கும் அதிகப்படியான உப்பு, உடலில் நீர் வறட்சி உண்டாக காரணியாக அமையும்.

🎍உண்மை 12
Parauresis எனப்படுவது சிறுநீர் கழிக்க வெட்கப்படும் நிலை ஆகும். அருகில் யாரேனும் இருந்தால் சிலர் சிறுநீர் கழிக்க கூச்சப்படுவார்கள்.

🎍உண்மை 13
நீச்சல் குளத்தில் குளிக்கும் போது கண்கள் சிவப்பது குளோரின் காரணத்தால் அல்ல. நீச்சல் குளத்தில் அதிகமாக சிறுநீர் கலப்பு ஏற்பட்டிருப்பதால்.

🎍உண்மை 14
குழந்தைகள் கருப்பையில் இருக்கும் போதே சிறுநீர் கழிக்க துவங்கிவிடுவார்கள்.

🎍உண்மை 15
காலையில் முதன் முறை கழிக்கும் சிறுநீரில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும்.

திங்கள், 24 பிப்ரவரி, 2020

குவியல்களிலிருந்து நிவாரணம் பெற சில இயற்கை வீட்டு வைத்தியம் இங்கே...

குவியல்களிலிருந்து நிவாரணம் பெற சில இயற்கை வீட்டு வைத்தியம் இங்கே...


குவியல்களை மருத்துவ ரீதியாக மூல நோய் என்று அழைக்கிறார்கள். இது ஆசனவாய் உள்ளே அல்லது வெளியே உள்ள நரம்புகள் வீங்கி அல்லது வீக்கமடையும் ஒரு நிலை. மலத்தை கடக்கும்போது வலி மற்றும் எரிச்சல் குவியலின் அறிகுறிகளாகும். சில சந்தர்ப்பங்களில், நிலை கடுமையாக இருக்கும்போது, இரத்தப்போக்கு ஏற்படலாம். குவியல்களிலிருந்து நிவாரணம் பெற சில இயற்கை வீட்டு வைத்தியங்கள் இங்கே.
1. மாதுளை தோலை சிறிது தண்ணீரில் கொதிக்க வைக்கவும். இந்த தண்ணீரை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும்.
2. குவியல்களால் ஏற்படும் வலியைக் குறைக்க, உப்பு, இஞ்சி மற்றும் மிளகு கலந்த தண்ணீரை குடிக்கவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடுங்கள்.
3. குவியல்களிலிருந்து இரத்தப்போக்கு நீங்க, ஒரு டீஸ்பூன் கடுகு தூளை அரை கப் ஆட்டின் பாலுடன் கலந்து சிறிது சர்க்கரை சேர்க்கவும். காலையில் வெறும் வயிற்றில் இதை குடிக்கவும்.
4. மா விதைகளை அரைக்கவும். இந்த பொடியின் இரண்டு டீஸ்பூன் சிறிது தேனுடன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடுங்கள்.
5. தேன் மற்றும் தேனுடன் ஒரு டீஸ்பூன் இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு கலக்கவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை சாப்பிடுங்கள்.
6. குவியல்களால் ஏற்படும் வலியைக் குறைக்க, ஒரு கப் பாலுடன் ஒரு வாழைப்பழத்தை கலக்கவும். இந்த கலவையை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை சாப்பிடுங்கள்.
7. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்காய் பயன்படுத்துவதால் எரியும் அரிப்புகளும் நீங்கும்.
8. மண்ணில் கிருமி நாசினிகள் மற்றும் குணப்படுத்தும் பண்புகள் உள்ளன. எனவே, ஒரு டீஸ்பூன் தரையையும் புதிய மஞ்சள் வேரையும் சாப்பிடுங்கள்.
9. நறுக்கிய வெங்காயத்தில் இரண்டு தேக்கரண்டி தேனை கலக்கவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடுங்கள்.

மாற்றப்பட வேண்டியது உணவு அல்ல... மாறவேண்டியது நமது உணவுப் பழக்கவழக்கம்...

மாற்றப்பட வேண்டியது உணவு அல்ல... மாறவேண்டியது நமது உணவுப் பழக்கவழக்கம்...


உணவு விஷயத்தில் நாக்கை அடக்க முடியாமல் வயிறுமுட்ட தின்றுவிட்டு பழியை உணவுப்பொருட்களின் மீது போடுவதில் நாம் கைதேர்ந்தவர்கள். அந்த வகையில் அதிமாக சபிக்கப்பட்டவை வாயு பொருட்கள் என்ற செல்லக்கூடிய கிழங்கு வகைள், வாழைக்காய், பருப்பு வகைள் போன்றவை. பசி உணர்வு ஏற்படாத நிலையில் உருளைக்கிழங்கு சிப்ஸ், உருளைக்கிழங்கு போண்டா, வாழைக்காய் பஜ்ஜி போன்றவற்றைச் சாப்பிடுகிறோம்.
எந்த விதமான உடல் உழைப்பும் இல்லாமல், பசி என்ற உணர்வு கொஞ்சம் கூட வராமல் நீங்கள் எதைச் சாப்பிட்டாலும் செரிமானக் கோளாறு ஏற்ப்பட்டு அதில் முதலில் உறுவாகும் கழிவு கெட்ட வாயுக்கள். அன்றாடம் வெளியேற முடியாத இந்த கெட்ட வாயுக்கழிவுகள் உடலில் ஆங்காங்கே தங்கி காலையில் தோள்பட்டை, நண்பகல் நடுமுதுகு, மாலையில் வயிறு, இரவில் இடுப்பு என்று அப்படியே நகர்ந்து நகர்ந்து வலியானது கொடுமைப்படுத்தும்.
குனியவும் முடியாது.. நிமிரவும் முடியாது... பாடாய் படுத்தும். சில சமயம் நெஞ்சில் வந்து மாட்டிக்கொண்டு மூச்சு விடும்போது குத்துவது போன்ற வலியை கொடுக்கும். நீங்கள் ஹார்ட் அட்டாக் போல இருக்கு என்று பயந்துபோய் 108க்கு போன் செய்வீர்கள். அதன் பின்னர் உங்களுக்கு அவசரசிகிச்சை கொடுக்கப்படும். நீங்களும் லட்சம் ரூபாயை மருத்துவமனைக்கு மொய் எழுதிவிட்டு வருவீர்கள்.... 
சர்க்கரை நோய் உட்பட பெரும்பாலான நோய்கள் நமக்கு வருவதற்கு முன்னர் இந்த கேஸ் டிரெபிள் என்ற வாயு பிடிப்பு வந்துவிடும். அப்போதே நீங்கள் விழித்துக்கொள்ள வேண்டும். வயிறு கெட்டுவிட்டது, பசித்துச் சாப்பிடவேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 
பசியை உணர்ந்து உருளைக்கிழங்கு, வாழைக்காய், என்று எதைவேண்டுமானாலும் சாப்பிடுங்கள் கேஸ் ப்ராப்ளம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பசிக்காமல் அமிர்தத்தையே சாப்பிட்டாலும் தேர் ஈஸ் நோ யூஸ். கேஸ் டிரபிள் முதல் கேன்சர் வரை நோய்களை வரவழைத்துக்கொண்டது நம்முடைய முறைகேடான பழக்கவழக்கங்களால்தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். சிறுவர்களாக, இளைஞர்களாக இருந்த போது பத்து பஜ்ஜி சாப்பிட்டாலும் ஒன்றும் செய்யாத வாழைக்காயும் உருளையும் இப்போது ஒன்று சாப்பிட்டதும் உயிரை வாங்குகிறதே...! 
பிரச்னை உணவிலா....? நம்மிடத்திலா....?
அடிக்கடி கேஸ் தொந்தரவு உருவாகிறதென்றால் நாளை நீங்கள் சர்க்கரை, பி.பி., மூட்டுவலி... போன்ற நோய்கைளால் அவதிப்படப் போகிறீர்கள் என்று அர்த்தம். இப்போது உஷாராகுங்கள். நீங்கள் சரிசெய்ய வேண்டியது உங்கள் ஜீரணத்தை. உணவுப் பொருட்களின் மீது பழிசுமத்துவதை விட்டு விட்டு, நம் உணவு பழக்கத்தையும், சாப்பிடும் முறையையும் ஒழுங்கு செய்வோம்! 

வெந்தயம் இப்படி பயன்படுத்தினால் நன்மை அதிகமாக இருக்கும்!

வெந்தயம் இப்படி பயன்படுத்தினால் நன்மை அதிகமாக இருக்கும்!


வெந்தயக் கீரை சாப்பிடுவதால் என்னபயன்கள் தெரியுமா....!
                                                         
வெந்தயக்கீரையில் வைட்டமின் ஏ மற்றும் சுண்ணாம்புச் சத்து இருப்பதால் மாரடைப்பு, கண்பார்வைக் கோளாறு, வாதம், நாள்பட்ட சொறி, சிரங்கு உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும். இக்கீரையை பச்சையாக அரைத்து தீக்காயங்களுக்கு புற்றுப் போட்டு வைப்பதால் காயம் குணமாவதோடு குளிர்ச்சியாகவும் இருக்கும். நாம் உண்ணும் நூறு கிராம் அளவு கிரையில் 
·
1) 86.1 சதவீதம் ஈரச்சத்தும்,
2) 4.4சதவீதம் புரதச்சத்தும்,
·        3) 1.1சதவீதம் நார்ச்சத்தும்,
·        4) 1.5சதவீதம் தாதுச்சத்துக்களும்,
·        5) 0.9சதவீதம் கொழுப்புச் சத்தும் அடங்கியுள்ளது.
பயன்கள்:
1.      வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது.
2.      வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது.
3.      வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது.
4.      வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக் கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும்.
 இடுப்பு வலு நீங்கும்
வெந்தயக் கீரையோடு, நாட்டுக் கோழி முட்டையில் வெள்ளை கரு, தேங்காய் பால், கசகசா, சீரகம், மிளகு, பூண்டு போன்றவற்றை சேர்த்து சிறிதளவு நெய் கலந்து சமைத்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும்.

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்ட மாதுளம் பழம் !

மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்ட மாதுளம் பழம் !


மாதுளம் பழம்
மாதுளம்பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. சுண்ணாம்பு சத்து, தாது உப்புக்கள், இரும்புச்சத்து என நோயை எதிர்க்கும் அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம் பழத்தை சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.
மாதுளையின் பழம், பூ, பட்டை ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டவை.
மாதுளம் பழம் வயிற்று வலிக்கு சிறந்த மருந்தாகும். உடலில் உள்ள நீர் சத்துகளை அதிகரிக்கும் தன்மையும் மாதுளம் பழத்திற்கு உண்டு.
மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும். அதிக தாகத்தைப் போக்கும். மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும்.
மாதுளம் பழம் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வராது
Credit:www.google.co.search
மாதுளம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளர் சங்கத்தின் கேன்சர் பிரிவென்சன் ரிசர்ச் பத்திரிகையில் தகவல் வெளியாகியுள்ளது.
மார்பக புற்றுநோய் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.உடலில் ஏற்படும் சில ஹார்மோன் குறைபாடுகள் காரணமாகவே மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எனவே மாதுளம் பழம் சாப்பிடுவதால் இந்த ஹார்மோன் குறைபாட்டிலிருந்து நம் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மாதுளம்பழத்தில் உள்ள சில அமிலச் சத்துகள் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கின்றன.
மாதுளம்பழத்தை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நோய்களை நீக்கி ஆரோக்கியத்தையும் சக்தியையும் அதிகரித்து உடலை சுறுசுறுப்பாக வைக்கும்.

கண்பார்வை தெளிவாக தெரிய வீட்டில் உள்ள பொருட்களை வைத்து பயன்படுத்துவதை பற்றி பார்ப்போமா?

கண்பார்வை தெளிவாக தெரிய வீட்டில் உள்ள பொருட்களை வைத்து பயன்படுத்துவதை பற்றி பார்ப்போமா?


கிட்டப்பார்வை அல்லது துரப்பார்வை பிரச்சனை இருந்தால் தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் kஉதித்து வரவும் அல்லது 1 கேரட்டை தினமும் சாப்பிட்டு வர வேண்டும்.இதில் உள்ள வைட்டமின் A உள்ளதால் கண்பார்வை மேம்படும்.
ஒரு கைபிளவு பாதாமை இரவில் படுக்க போகும் முன் நீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் பாதம் தோலை உறித்து, அதனை அரைத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து தினமும் குடித்து வர கண் பார்வை தெளிவாக தெரியும்.
தினமும் சில பற்கள் பூண்டை சாப்பிட்டு வந்தால் அல்லது உணவில் பூண்டை சேர்த்து சாப்பிட்டு வரவும்.இதனால் கண் பார்வை மேம்பட்டு, கண் பிரச்சனை அண்டாமல் தடுக்கலாம்.

உங்கள் உயரத்தை அதிகரிக்க நீங்கள் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்

உங்கள் உயரத்தை அதிகரிக்க நீங்கள் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்


உங்கள் உயரத்தை 3 முதல் 5 அடி வரை அதிகரிக்க விரும்புகிறீர்களா அல்லது இங்கே 4 முதல் 6 அடி வரை அதிகரிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் தினமும் ஓடவோ குதிக்கவோ அல்லது தவிர்க்கவோ கூடாது. இந்த விஷயங்களை தினமும் சாப்பிட்டு உங்கள் உயரத்தை அதிகரிக்கவும்.
அன்னாசிபழம்:
அன்னாசிப்பழம் போதுமான தூக்கத்தைப் பெற உங்களுக்கு உதவும், உங்களுக்கு போதுமான தூக்கம் வந்தால் நீங்கள் அதிக அளவு HGH ஐ உற்பத்தி செய்வீர்கள், மேலும் இந்த HGH உங்கள் உயரத்தை அதிகரிக்க உதவும். இது சிறந்த செரிமானத்திற்கும் உதவும்.
2. சால்மன் மீன்:
சால்மன் ஒரு புரதம் நிறைந்த உணவு. இதில் ஒமேகா -3 உள்ளது, இது இரண்டு வகையான அமிலங்களை உற்பத்தி செய்கிறது, இது உங்கள் உடலின் வளர்ச்சிக்கு உதவும் டி.எச்.ஏ ஆகும், மற்றொன்று ஈ.பி.ஏ ஆகும், இது உங்களை இதய நோயிலிருந்து தடுக்கும்.
3. ஆரஞ்சு:
ஆரஞ்சு மற்றும் பிற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது மற்றும் வைட்டமின் சி நம் உடலின் ஒவ்வொரு திசுக்களையும் வளர்க்க உதவுகிறது.
4. முட்டை:
பருக்கள் பருக்கள் அல்லது வளர்ச்சிக்கு பல வழிகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேய்ச்சல் முட்டைகள் சாதாரண முட்டைகளை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் அவை ஒமேகா -3 மற்றும் வைட்டமின் ஏ ஆகியவற்றில் நிறைந்துள்ளன, இது வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.
5. பாதாம்:
பாதாம் மிகவும் பயனுள்ள உலர் பழங்கள். அவை பொட்டாசியம், இரும்பு மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றில் நிறைந்துள்ளன. அல்சைமர் நோய் மற்றும் பிற நச்சு நோய்கள் போன்ற பல நோய்களிலிருந்து அவை உங்களைப் பாதுகாக்கின்றன.

சயனைடு கொண்டிருக்கும் இந்த உணவுகளை தவறவிடாதீர்கள் ..

சயனைடு கொண்டிருக்கும் இந்த உணவுகளை தவறவிடாதீர்கள் ..


ஹைட்ரஜன் சயனைடு (நிறமற்ற வாயு) மற்றும் பொட்டாசியம் சயனைடு (ஒரு திட) ஆகியவை சயனைடுகளுக்கு பொதுவான எடுத்துக்காட்டுகள், அதே நேரத்தில் நீரில் உள்ள ஹைட்ரஜன் சயனைடு ஹைட்ரோசோனிக் அமிலம் என்று அழைக்கப்படுகிறது. இயற்கை செயல்முறைகள் (எ.கா. எரிமலைகள், காட்டுத்தீ, நுண்ணுயிரியல் நடவடிக்கைகள்) மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் (எ.கா., எலக்ட்ரோபிளேட்டிங், தங்க சுரங்கம், ஜவுளி மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தி போன்றவை) இருந்து, சயனைடுகள் காற்று, நீர் மற்றும் மண்ணில் நுழைகின்றன.
சயனைடு கொண்ட பொருட்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தாவரங்களில் இயற்கையாகவே நிகழ்கின்றன;
இவற்றில் சில மூங்கில் தளிர்கள், கொட்டைகள் அல்லது விதைகள், ஆப்பிள், பாதாமி, பேரிக்காய், பிளம்ஸ், செர்ரி, பீச் முளைகள் அல்லது விதைகள்.
இந்த தாவரங்களில், சர்க்கரை மூலக்கூறுகள் சயனோஜெனிக் கிளைகோசைடுகளின் வடிவத்துடன் தொடர்புடையவை. சயனோஜெனிக் கிளைகோசைடுகள் ஒவ்வொன்றும் ஒப்பீட்டளவில் நச்சுத்தன்மையுடையவை; இருப்பினும், அவை குடலில் உள்ள நச்சு ஹைட்ரஜன் சயனைடாக மாற்றப்படுகின்றன
இளம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மரவள்ளிக்கிழங்கு அல்லது மிளகுத்தூள் சாப்பிடும்போது வேகவைத்த தண்ணீரை மட்டும் வடிகட்டுவது நல்லது.

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்துதான் உங்கள் குணத்தை தீர்மானிக்கிறதாம்


உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்துதான் உங்கள் குணத்தை தீர்மானிக்கிறதாம்!

ஜப்பான் நாட்டில் ஒரு விநோனதமான உளவியல் ஜோதிடத்தை நம்புகின்றனர். அதன்படி 3 என்ற எண் மிக முக்கியமான எண்ணாக பார்க்கப்படுகிறது.

 உங்கள் பெயரில் மூன்றாவதாக வரும் எழுத்திற்கும் உங்கள் குணத்திற்கும் அதிகமான தொடர்பு இருப்பதாக அந்த நாட்டு மக்கள் கருதுகின்றனர். அந்த வகையில் இந்த செய்தியில் எந்தந்தெந்த எழுத்திற்கு என்னென்ன பலன்கள் இருக்கிறது என வழங்கியுள்ளோம். உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தில் என்ன குணங்கள் இருக்கிறது, உங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்களின் மூன்றாவது எழுத்தில் என்னென்ன குணங்கள் உள்ளது என பார்க்கலாம் வாருங்கள்.

A என்ற சொல் அதிகமாக வலிமை வாய்ந்தது. இவர்களுக்கு, தைரியம், உறுதி, மற்றும் பேராராட்டகுணம் இயற்கையாகவே இருக்கும், ஒரு சுழ்நிலையை இவர்கள் தீர்மானிப்பது போலவே கொண்டு செல்ல நினைப்பார்கள், மற்றவர்கள் இவர்களை வழிநடத்துவது இவர்களுக்கு அறவே பிடிக்காது.

B ஆக கொண்டவர்கள் மற்றவர்கள் பார்த்து பெருமைபடும்படி நடந்து கொள்வார்கள். இவர்கள் வாழ்க்கையில் எமோஷன், ஃபீலிங்ஸ், என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மனிதர்களை எப்படி கையாள வேண்டும் என்பதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

C என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவதாக கொண்டவர்கள் சற்று வெள்ளந்தியானவர்கள். அதே நேரத்தில் அதிக திறமைசாலிகள், மற்றவர்களுடன் எளிதாக பழகிவிடுவார்கள். சமூகத்தில் உங்களுக்கு நல்ல பெயர் இருக்கும். அதே நேரத்தில் அவர்களை ஒருவர் மனதால் காயப்படுத்திவிட்டால் காயப்படுத்தியவரை பழி வாங்க அவர்கள் போடும் திட்டங்களை எல்லாம் மற்றவர்களால் யோசித்துக்கூட பார்க்க முடியாது. மற்றவர்கள் ஒரு வார்த்தை அவர்களை தவறாக பேசினால் கூட அதை அவர்களால் தாங்கி கொள்ள முடியாது. இவை எல்லாம் அவர்களின் பிறவி குணங்கள். அதே போல பேச்சில் உங்களை மிஞ்ச முடியாது. அடுத்து நடக்க விருப்பது குறித்து அவர்களுக்கு அவ்வப்போது ஒரு இன்டியூஷன் வரலாம்.

ஆங்கிலத்தில் D என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது பெயராக கொண்டவர்கள் அனைவராலும் அதிகமாக விரும்பப்படுபவராக இருப்பார்கள். D என்ற எழுத்து சமநிலை, பாதுகாப்பு மற்றும் கடின உழைப்பை வழங்கும். நீங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பீர்கள். எடுத்த இடத்தில் எழுத்த பொருளை வைக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பமாக இருக்கும். வாழ்வின் அர்த்தையும் போக்கையும் நன்கு புரிந்து வைத்திருப்பீர்கள். அதனாலேயே பல இடங்களில் தலைமை பொறுப்பு உங்களுக்கு கிடைக்கும். அதே நேரத்தில் எதிலும் நீங்கள் படிவாதமாக விட்டுக்கொடுக்காமல் இருப்பீர்கள்.

E என்ற எழுத்தை பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் மற்றவர்கள் விரும்பும் நல்ல குணத்துடன் இருப்பார்கள். இவர்கள் இயற்கையாகவே கருணையுடனும், மென்மையாகவும் இருப்பார்கள். மிக கடினமான பிரச்னைகளையும் எளிதாக முடிப்பார்கள். இவர்களின் நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்பவர்கள் இவர்கள் அழகில் அசந்துதான் போவார்கள். ஆனால் இவர்கள் காதல் வாழ்வில் நம்ப முடியாத அதே நேரம் போனில் கடலை மட்டும் போடும் நபராக இருக்க அதிக வாய்ப்பு உண்டு, ஒரே நபரை நீண்ட நாட்கள் காதலிப்பது என்பது இவர்கள் அகராதியில் இல்லாத வார்த்தை.

F - என்ற சொல் இருக்கிறதா அவர்கள் மற்றவர்கள் மீது அக்கறை கொள்ளக்கூடிய அதே நேரத்தில் பொறுப்பு மற்றும் குடும்ப பாசம் அதிகம் மிகுந்த நபராக இருப்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் இயற்கையாகவே தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக ஈடுபாட்டுடனும், அதிக ரொமான்டிக்காகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களின் இருக்கும் குழந்தைதனமும், வஞ்சமான எண்ணமும் தான் மோசனமான குணங்கள். இவர்களில் சிலர் போலியானவர்களாக இருக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

G- என்று இருந்தால் அவர்கள் புதிதான விஷயங்களை செய்வதில் எப்பொழுதும் அதிக விருப்பத்துடன் இருப்பார்கள். அவர்களின் விருப்பதிற்கு ஏற்பவே அவர்களின் வாழ்வை வாழ நினைப்பார்கள். இவர்கள் சற்று புத்திசாலியாகவும், விரைவாக சிந்திப்பவருமாக இருப்பார்கள். ஒருவர் சொல்வது உண்மையா இல்லை என்பதை கண்டுபிடிப்பதில் கை தேர்ந்தவர்கள் இவர்கள்.

H - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் அதிக பிராக்டிக்கல் மைண்ட் உடையவர்கள் மேலும் சற்று மூர்க்க குணமும் அதிகமாக இருக்கும். தொழில் செய்ய ஏற்ற நபர்கள் இவர்கள் தான். இதனால் இவர்களிடம் சிறந்த தலைமை பண்பும் இருக்கும். பொறுமையும், பொறுப்புணர்ச்சியும் இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். வெற்றிக்காக அதிகமாக உழைப்பார்கள். ஆனால்கள் உறவுகளில் இவர்கள் சற்று போசஷிவ் மற்றும் சுயநலம் மிக்கவராக இருப்பார்கள்.

I - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் புனிதமான எண்ணங்களையும், கனிவான மனதையும் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த முடிவையும் ஆழமாக யோசித்த பின்பு தான் முடிவு செய்வார்கள். அதிகமாக மற்றவர்களுக்கு உதவி செய்து இவரது இயற்கை குணம். இவர்களுக்கு அதிர்ஷ்டம் சற்று குறைவு தான். இவர்களின் மோசமான குணம் அவ்வப்போது இவர்களது செயல் மற்றவர்களை எரிச்சலூட்டும். ஆனால் இவர்கள் எளிதில் மற்றவர்களிடம் ஏமாந்து போவார்கள்.

J - என்ற எழுத்தை தங்களது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் இயற்கையாகவே அவர்கள் இருக்கும் சூழநிலைகளை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் செயல்படுபவர்கள். வாழ்வில் அவர்களுக்கு ஒரு விஷயம் வேண்டும் என்றால் அதற்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருப்பார்கள். தன்னம்பிக்கையும், தீர்மானமும் இவர்களிடம் அதிகமாக காணப்படும். வாழ்க்கை துணையை புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.

K - என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் பல இடங்களில் மற்றவர்கள் கவனத்தை அதிகமாக ஈர்ப்பார்கள். ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதில் இருவரையும் சமாதானப்படுத்துவது இவராக தான் இருக்கும். மற்றவர்கள் மீது அதிக அக்கறைகளை கொண்டிருப்பார். இதனால் உறவுகளில் இவருக்கு விளையாட்டு பிடிக்காது. தனது வாழ்க்கை துணையின் அன்பு என்றும் உறுதியானதாக இருக்க வேண்டும் என நினைப்பவர்.

L - என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் தங்களது வாழ்க்கையையும் சக மனிதர்களையும் பார்க்கும் விதமே வித்தியாசமானதாக இருக்கும். இந்த உலகிலேயே இவர்களுக்கு முக்கியமான நபர் இவர்களது வாழ்க்கை துணை தான். இவர்களுக்கு இயற்கையாவே நகைச்சுவை உணர்வு சற்று அதிகமாக இருக்கும்.

M - என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் இயற்கையாகவே உண்மையாகவும், கடும் உழைப்பாளியாகவும் இருப்பவர். சிலர் போதைக்கு அடிமையானது போல் இவர்கள் உழைப்பிற்கு அடியானவர்கள். இவர்கள் மற்றவர்களிடம் சென்று உதவி கேட்க பிடிக்காது எதுவாக இருந்தாலும் தானாவே செய்து கொள்வார்கள். இவர்களின் பொறுமைய ஒருவர் சோதித்தால் அவ்வளவு தான் கடும் கோபக்காரர்களாக மாறிவிடுவார்கள்.

N - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் எதை செய்தாலும் சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டவர்கள். மேலும் இவர்கள் இயற்கையாகவே மற்றவர்களுடன் நன்கு பழகும் குணத்தை கொண்டவர்கள். இவர்கள் ஆட்டு மந்தை போல செயல்படமாட்டார்கள். ஆட்டு கூட்டத்தில் தனியாக தெரிய வேண்டும் என நினைப்பார்கள்.

O- என்ற ஆங்கில எழுத்தில் தங்கள் பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் மற்றவர்களிடம் அதிகம் அன்பு காட்டும் நபராக இருப்பார்கள். மற்றவர்களுக்கு கற்றுதருவதில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவும் ஆர்வம் காட்டுவார்கள்.

P - என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் பெரும்பாலும் எல்லாவிஷயங்களிலும் முதன்மையாக இருக்க விரும்புவார்கள். இயற்க்கையாவே இவர்கள் பிடிவாதக்கார்களாக இருப்பார்கள். ஆனால் சுற்றியுள்ளவர்களை எப்பொழுதும் சந்தோஷமாகவே வைத்திருக்க விரும்புவார்கள். ஆனால் இவர்கள் சற்று சுயநல சிந்தினையுடன் உடையவர்கள். ஆதே நேரத்தில் நல்ல நகைச்சுவை உணர்வுகள் இவர்களுக்கு இருக்கும்.

Q - என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் தங்கள் வாழ்வில் உண்மையாகவும், நேர்மாகவும் வாழ நினைப்பாவர்கள். அவர்கள் நட்பாக பழகவும், அறிவுரைகள் கேட்கவும் சிறந்த நபர்கள். எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் எதையும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். மற்றவர்கள் ஒரு பாதையில் சென்றால் இவர்கள் வேறு பாதையில் செல்லவிரும்புவார்கள். இவர்களுக்கு கூச்ச சுபாவமும் இருக்கும்.

R - என்ற எழுத்தை தங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் நல்ல ஞானம் உடையவர்கள் அதே நேரத்தில் இவர்களுக்கு இரக்க குணமும் அதிகமாக இருக்கும். மற்றவர்களின் கஷ்டங்களை போக்குபவராக இருப்பார்கள். இவருக்கு பிடித்தவர்களுக்கு உதவி செய்ய எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள். ஆனால் முன்கோபம் இவர்களின் மோசமான குணம்.

S- என்ற எழுத்தை தங்களின் பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் அதிக நம்பகத்தன்மை கொண்டவர்கள். இவர்களின் திறமை மற்றும் அழகு அவர்கள் இருக்கும் இடத்தில் அவர்களை ஈர்க்க வைக்கும். இவர்கள் பணக்கார்களாக ஆசைப்படுவார்கள். அதனால் பணம் சம்பாதிப்பதிலும் சேர்ப்பதிலும் இவர்களை மிஞ்ச ஆட்கள் இல்லை.

T - என்ற ஆங்கில எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் டிப்ளமேட்டிக்காக செயல்படுபவர்கள். இருவருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டால் அதை தீர்த்து வைப்பதில் இவர்களது பங்கு முக்கியமாக இருக்கும். இவர் அதிர்ஷ்டத்தை விட உழைப்பை அதிகம் நம்புவார்கள். இவர்களது வெகுளித்தனமும், உதவி செய்யும் குணமும் மற்றவர்களை ஈர்க்கும். புதுமையை விரும்பும் இவர்கள் பழைய விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள்.

U- ஆங்கிலத்தில் என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் கடினமான உழைப்பாளிகள். இவர்கள் சொகுசாகவும், வசதியாகவும் வாழ விரும்புவார்கள். இவர்களுக்கு எதை எப்பொழுது செய்ய வேண்டும் என்று தெளிவாக தெரியும். புதிய புதிய விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு செல்ல அவர்கள் விரும்பும் நபரை பிரியவும் தயங்கமாட்டார்கள்.

V- என்ற எழுத்தை தங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் உண்மையான மனிதர்களாக இருப்பார்கள். இவர்களது அதிக நியாபக திறன் இருக்கும். சின்ன விஷயத்தையும் அதிக நாட்கள் நியாபகமாக வைத்திருப்பார்கள். உறவுகளின் சற்று போசஷிவ்வானவர்கள் இவர்கள். கடின உழைப்பாளியான இவர்கள் அவ்வப்போது கிசுகிசுகளிலும் சிக்குவார்கள். மற்றவர்களை சார்ந்து வாழ்ந்தாலும், அவர்களை மற்றவர்கள் சார்ந்து வாழ்ந்தாலும் அதற்கு ஏற்றார் போல் நடந்துகொள்வார்கள்.

W - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக உள்ள நபர்கள் பெரும்பாலும் மன தள்ளட்டத்துடனேயே காணப்படுவார்கள். அவர்களுக்குள் தான் சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டோமோ என்ற பயம் எப்பொழுதுமே இருக்கும். எப்பொழுதுமே ரெஸ்ட்லெஸாக காணப்படுவார்கள்.

X - என்ற ஆங்கில எழுத்தை தனது பெயரின் மூன்றாம் எழுத்தாக கொண்டவர்கள் எப்பொழுதும் ஒரு கமிட்மென்டிற்குள் வர விரும்பமாட்டார்கள்.

Y- என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் கவனமுடன் செயல்படுபவராக இருப்பார்கள். இவர்களில் பலர் பணக்கார வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க விரும்புவார்கள். அவர்களது சொந்த இடத்தில் இருக்க தான் விரும்புவார்கள். மற்றவர்களுடன் எளிதில் சேர்ந்து விட மாட்டார்கள்.

Z - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவருக்கு உடலில் அதிக ஸ்டாமினா மற்றும் வில் பவர் இருக்கும். அவர்கள் இலக்கை நோக்கி பயணிப்பவர்கள். அதனால் இவர்கள் அலுவலகத்தில் சிறப்பான ஆளாக அவர்களின் பாஸால் பார்க்கப்படுபவர். அதிக நம்பிக்கை மற்றும் ஒற்றுமை குணம் கொண்டவர்கள். இவர்களிடம் இருந்துதான் ஒரு வேலையை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.

சனி, 22 பிப்ரவரி, 2020

திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள்... ஏன் தெரியுமா?


திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள் எதற்காக தெரியுமா?

🌟 திருமணத்தின்போது மணமகனும், மணமகளும் அக்னியை சுற்றி வலம் வருவார்கள். இந்த வலமானது 7 அடிகள் கொண்டதாக அமைய வேண்டும் என்பதே நியதி. ஆகவே, திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள் எதற்காக என்பதைப் பற்றி பார்ப்போம்.

🌟 திருமணத்தின் போது மணமகனும், மணமகளும் அக்னியை வலம் வருவதை, வடமொழியில் சப்தபதி என்று கூறுவார்கள். அதாவது ஏழு அடிகள் மணமகனும், மணமகளும் சேர்ந்து நடந்து வருவதைக் குறிக்கும் சொல் அது. அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும்போது மாப்பிள்ளை பெண்ணிடம் இறைவன் உனக்கு துணையிருப்பான் என்று கீழ்க்கண்டவாறு தனது பிரார்த்தனையைச் சொல்கிறார்.

முதல் அடி :

🌟 பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.

இரண்டாவது அடி :

🌟 ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

மூன்றாவது அடி :

🌟 நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.

நான்காவது அடி :

🌟 சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.

ஐந்தாவது அடி :

🌟 லட்சுமி கடாட்சம் பெற வேண்டும்.

ஆறாவது அடி :

🌟 நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.

ஏழாவது அடி :

🌟 தர்மங்கள் நிலைக்க வேண்டும்.

🌟 இந்த சம்பிரதாயத்தில் மனிதர்களிடம் இருக்கும் மிகவும் சூசகமான மனோவியல் விஷயத்தை உணர்த்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள்.

🌟 இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால் அவர்களுக்குள் சிநேகிதம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம். உதாரணமாக நாம் சாலையில் நடக்கும்போது அறிமுகமில்லாத ஒருவரை கடக்கும்போது சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் நன்றாக கவனியுங்கள்.

🌟 ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டிவிடுவோம் அல்லது அவர்களை முன்னே போகவிட்டு விடுவோம். முழுமையாக ஏழு அடிகள் ஒன்றாக நடக்க மாட்டோம்.

🌟 இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும்போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குள்ளாக நடந்துவிடும் என்பது ஒரு சூசகமான விஷயம்.

🌟 இதை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து அதை ஒரு சம்பிரதாயமாக வைத்திருப்பதை நாம் அனுபவித்து உணர வேண்டும்.


திங்கள், 17 பிப்ரவரி, 2020

நல்ல அர்த்தமுள்ள தமிழ் பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு....

நல்ல அர்த்தமுள்ள தமிழ் பழமொழிகள்  சிந்தித்து  ரசிப்பதற்கு

1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.
2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.
3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.
4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.
5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.
7. கரந்தப் பால் காம்பில் ஏறாது.
8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை.
9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.
10. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்.
மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.
11. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.
12. கூப்பாட்டால் சாப்பாடாகுமா?

13. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல,
கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல,
சில்லரைக் கடன் சீரழிக்கும்.

14. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?

15. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
(எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும். கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்).
16. அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா?
(இன்று பலரும் இப்படித்தானே இருக்கிறார்கள்?)

17. ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது!
(எல்லாம் காலத்தின் கோலம்!)

18. அறப்படித்தவன் அங்காடிக்குப் போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.
(அதிகமாய் படித்தவர்கள் பலரும் இப்படித்தான்).

19. உள்ள பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்கு திருப்பதிக்கு நடக்கிறாள்.
(இருக்கிற குழந்தைக்கு சோறு போடாமல் அது உரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தானியத்தை நக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையில் அடுத்த பிள்ளை வேண்டும் என்று திருப்பதிக்கு வேண்டிக் கொண்டு நடக்கிறாளாம். இப்படியும் இருக்கிறார்கள்).

20. இறுகினால் களி. இளகினால் கூழ்.
21. ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது.
(யாருக்கு உதவுகிறோம் என்று சிந்தித்து உதவா விட்டால் இப்படித்தான்)


22. எடுப்பது பிச்சை. ஏறுவது பல்லாக்கு.
(பலருடைய போக்கு இப்படித்தான் இருக்கிறது)

23. எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?
(எட்டி பழுத்தாலும் அதன் கசப்பால் சாப்பிட உதவாது. கஞ்சனுக்கு எத்தனை செல்வம் வந்தாலும் அதில் யாரும் பலன் அடைய முடியாது).

24. விசாரம் முற்றினால் வியாதி.
(கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்).
25. பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.
(நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம். அதாவது நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம்.)
26. காற்றில்லாமல் தூசி பறக்காது.
(நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி)
27. பண்ணின புண்ணியம் பலனில் தெரியும்.
(நாம் அனுபவிக்கும் பலன்களைப் பார்த்தாலே சேர்த்திருக்கும் புண்ணியம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்).
28. பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது.
(துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கு அழகான பழமொழி. ஒரு மரத்தில் ஏறி ஒரு கொம்பைப் பிடித்துக் கொள்ளும் போது அது ஒடிந்து போக, கீழே விழாமல் இருக்க இன்னொரு கொம்பில் காலை வைத்து ஊன்றினால் அந்தக் கொம்பும் முறிந்தால் எப்படி இருக்கும்?)
29. பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.
(பதர் என்பதே அரிசி இல்லாத நெல் தான். அதனால் என்ன தான் குத்தினாலும் அதில் அரிசி கிடைக்க வாய்ப்பில்லை. மனிதனின் பயனில்லாத முட்டாள்தனமான முயற்சி குறித்துச் சொல்லும் பழமொழி)
30. இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது.
(விதைத்ததெல்லாம் பயிராகி பலன் தருவதில்லை. அது போல பெற்றதெல்லாம் பிள்ளையாகி நல்லபடியாக நம்மைப் பார்த்துக் கொள்ளும் என்று நினைத்துவிட முடியாது).
31. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான்.
(தயிரில் வெண்ணெய் எடுத்த பிறகு தான் மோராகிறது. அந்த மோரிலேயே மீண்டும் வெண்ணெய் எடுக்கும் அளவு சாமர்த்தியம் வாய்ந்தவர்களைப் பற்றி இந்தப்பழமொழி சொல்கிறது.
32. வாங்குகிற கை அலுக்காது.
(வாங்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு அலுப்பே இருக்காது.)
33. அடுத்த வீட்டுக்காரரே பாம்பைப் பிடியுங்க. அது அல்லித்தண்டு போல ஜில்லென்றிருக்கும்.
(என்ன சாமர்த்தியம் பாருங்கள்!)
34. உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?

35. அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.
36. அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.

37. அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.

38. ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான்.
ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.

39. ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான்,
அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.
40. ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?

41. இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்?
42. இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்?

43. இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.

44. இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால் என்ன?

45. உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது.

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

விட்டமின் சி அதிகம் கொண்ட முந்திரி பழம்;-


விட்டமின் சி அதிகம் கொண்ட முந்திரி பழம்;-

முந்திரி பழம் நம்மில் பலர் அடிக்கடி ருசித்தது கிடையாது. ஆனால் இதனுடைய அசத்தலான இனிப்பு கலந்த புளிப்பு சுவை பெரும்பாலோரை கவர்ந்திழுக்கும்.

முந்திரிப் பருப்பினை பற்றி எல்லோரும் நன்கு அறிவர். ஆனால் முந்திரி பழத்தினை வெகு சிலரே தெரிந்திருப்பர்.

இப்பழமானது பொதுவாக முந்திரி ஆப்பிள் என்றழைக்கப்படுகிறது. இப்பழம் ஓர் ஆண்டில் குறிப்பிட்ட ஒரு பருவத்தில் மட்டும் கிடைக்கிறது.

முந்திரி பழம் உண்மையில் பழமல்ல. இது போலி பழவகையைச் சார்ந்தது. உண்மையில் பழம் என்பது முந்திரிக் கொட்டை ஆகும். இக்கொட்டையினுள் முந்திரிப் பருப்பு காணப்படுகிறது.

நாம் முந்திரிப் பழம் என்றழைக்கும் பகுதி பூவின் தடித்த காம்பு பகுதி ஆகும்.

இப்பழம் நீள் வட்டமாக பேரிக்காய் வடிவில் காணப்படுகிறது. இது பளபளப்பான மெல்லிய நீர்சத்து மிக்க மேல் தோலினை கொண்டுள்ளது.

இப்பழத்தின் மேல்தோல் மெல்லிதாக இருப்பதால் இப்பழம் விரைவில் சேதமுற்று சீக்கிரம் கெட்டு விடும். எனவே இப்பழத்தினை வெளியிடங்களுக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

மேலும் இப்பழம் பறித்த 24 மணி நேரத்திற்குள் கெட்டுவிடும். இதனால் இப்பழம் எல்லா இடங்களிலும் பரவலாகக் கிடைப்பதில்லை.

முந்திரி அனார்க்காடியம் என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதனுடைய அறிவியல் பெயர் அனார்க்காடியம் ஒசிடென்டேல் என்பதாகும்.

தாவரத்தை உண்ணும் விலங்குகளை போலிப்பழமான முந்திரிப் பழம் கவர்ந்திழுக்கிறது. இதனுடைய சுவையின் காரணமாக விலங்குகள் உண்மையான பழத்தை (முந்திரிக் கொட்டை) உண்ணாது விட்டுவிடுகின்றன.


முந்திரியின் அமைப்பு மற்றும் வாழ்விடம்

முந்திரியானது வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலத்தில் இருக்கும் மரவகைத் தாவரத்திலிருந்து கிடைக்கிறது. இம்மரம் 10 மீ உயரம் வரை வளரும்.

முந்திரி மரம்

இம்மரத்தில் இலைகள் மஞ்சள் கலந்த பச்சை நிறம் முதல் அடர் பச்சை நிறம் வரை உள்ளன. இம்மரத்தில் பச்சை கலந்த இளம்சிவப்பு பூக்கள் தோன்றுகின்றன.

முந்திரி பூக்கள்


பூக்களிலிருந்து மஞ்சள் அல்லது சிவப்பு நிற முந்திரி ஆப்பிள்கள் தோன்றுகின்றன. முந்திரிக் கொட்டையானது முந்திரி ஆப்பிளின் முனைப்பகுதியில் உருவாகின்றன.

முந்திரி காய்கள் மற்றும் பழங்கள்

முந்திரி ஆப்பிளானது இனிப்பு கலந்த புளிப்பு சுவையினை உடையது. இதனை உண்ணும் போது தொண்டையில் ஒருவித கரகரப்பினை உண்டாக்குகின்றது. இந்தியாவில் இம்மரம் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பூக்களைப் பூக்கின்றன.


முந்திரியின் வரலாறு:-

முந்திரியானது தென்அமெரிக்க நாடான பிரேசிலின் வடபகுதியை தாயகமாகக் கொண்டது. 1560-ல் இந்தியாவில் உள்ள கோவாவிற்கு இது போர்த்துக்கீசியரால் கொண்டுவரப்பட்டது.

பின் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கும் முந்திரியானது பரவியது. இன்று வெப்பமண்டல நாடுகள் பலவற்றிலும் இது காணப்படுகிறது. இந்தியா, நைஜீரியா, பிரேசில், வியட்நாம் ஆகிய நாடுகளில் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இது அதிகளவு பயிர் செய்யப்படுகிறது.

முந்திரி பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

முந்திரி பழத்தில் விட்டமின் பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), விட்டமின் சி (ஆரஞ்சைப் போல் ஐந்து மடங்கு) ஆகியவற்றைப் பெற்றுள்ளது.

இதில் கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்றவை காணப்படுகின்றன. மேலும் இதில் கார்போஹைட்ரேட், புரதம், நீர்ச்சத்து, கரோடீனாய்டுகள், டேனின் முதலியவை உள்ளன.

முந்திரி பழத்தின் மருத்துவப் பண்புகள்:-

கல்லீரலை சுத்தப்படுத்த

இப்பழமானது கல்லீரல் உட்பட உடலின் எல்லா பாகங்களையும் சுத்தப்படுத்துகிறது. இப்பழத்தின் காரத்தன்மை கல்லீரல் உள்பட உடல் பாகங்களில் உள்ள நச்சுக்கிருமிகளை அழித்து கழிவுகளாக வெளியேற்ற காரணமாகிறது.

அத்துடன் உடலின் பி.எச். அளவினை பராமரிக்கிறது. இப்பழத்தின் தோலில் உள்ள பெக்டின் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது.

இதய நலத்தை காக்க

இப்பழமானது இதய நலத்திற்கு தேவையான ஆன்டிஆக்ஸிஜென்டுகள், பாலிபீனால்கள், ஃப்ளவனாய்டுகள் ஆகியவற்றை அதிகளவு கொண்டுள்ளது.

இப்பழத்தில் காணப்படும் அதிகளவு பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தை சீராக்கி இதயத்தை மாரடைப்பு உள்ளிடவைகளிலிருந்து பாதுகாக்கிறது. எனவே இதய நலத்தை பேணவிரும்புபவர்கள் இப்பழத்தினை உண்ணலாம்.

கொலஸ்ட்ராலின் அளவினைக் குறைக்க

இப்பழத்தினை உண்ணும்போது அவை கொழுப்பினை எரித்து தேவையான ஆற்றலினை வழங்குகின்றன. இப்பழத்தினை உண்டு உடற்பயிற்சி செய்யும்போது அதிகளவு கொழுப்பானது எரிக்கப்படுகிறது. இதனால் கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது.

நுரையீரல் செயல்பாட்டினை சீராக்க

இப்பழத்தில் காணப்படும் தனித்துவமான ஃப்ளவனாய்டுகள் நுரையீரலை ஆரோக்கியமாக வைப்பதுடன் அதனை சீராக செயல்பட வைக்கின்றன.

இப்பழத்தின் சாற்றினை முறையாக பயன்படுத்துபவர்கள் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகளிருந்து நிவாரணம் பெறுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே இப்பழத்தினை உண்டு நுரையீரல் செயல்பாட்டினை சீராக்கலாம்.

எலும்புகளின் ஆரோக்கியம் மேம்பட

எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் போன்றவை இப்பழத்தில் காணப்படுகின்றன. எனவே இதனை உண்டு எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பேணலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க

இப்பழத்தில் காணப்படும் அதிகளவு விட்டமின் சி-யானது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கிறது. இதனால் பாக்டீரியா மற்றும் வைரஸினால் உண்டாகும் சளி, காய்ச்சல் போன்றவை விரைவில் குணமாவதோடு மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன.

புற்றுநோயினை தடை செய்ய

இப்பழத்தில் காணப்படும் ஃப்ளவனாய்டுகள், பாலிபீனாக்கில்கள் புற்றுச் செல் உருவாவதை தடைசெய்கின்றன. இப்பழத்தினை உண்பதால் நுரையீரல் உள்ளிட்ட இடங்களில் புற்றுநோய் உருவாவது தடுக்கப்படுகிறது.

மலச்சிக்கலினைத் தடுக்க

மலச்சிக்கலானது கழிவில் உள்ள நீர்ச்சத்தினை பெருங்குடல் உறிஞ்சும்போது உண்டாகிறது. இப்பழானது சார்பிட்டால் என்ற வேதிப்பொருளைக் கொண்டுள்ளது.

இப்பொருளானது பெருங்குடலினை அடையும் போது பெருங்குடலுக்குத் தேவையான நீர்ச்சத்தினை வழங்கி மலத்தினை இளக்கி எளிதில் வெளியேற்றுகிறது. இதனால் மலச்சிக்கல் தீரும். எனவே மலச்சிக்கல் வராதிருக்க இப்பழத்தினை உண்ணலாம்.

சருமம் மற்றும் கேச பராமரிப்பிற்கு

இப்பழத்தில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் சருமத்தில் உண்டாகும் வீக்கம், அரிப்பு, சுருக்கம் மற்றும் வெடிப்பு ஆகியவற்றைப் போக்குகிறது.

கேசத்தில் இப்பழச்சாற்றினை தேய்க்கும்போது பொடுகு உள்ளிட்ட கேசப்பிரச்சினைகள் தீருகின்றன. சருமம் மற்றும் கேசத்திற்கு பயன்படுத்தும் கிரீம்கள், சாம்புகள் உள்ளிட்டவைகளின் தயாரிப்பில்; இப்பழச்சாறு பயன்படுத்தப்படுகிறது.

முந்திரிப்பழத்தினைப் பற்றிய எச்சரிக்கை

இப்பழமானது அதிகளவு உண்ணும்போது தொண்டையில் அதிகளவு கரகரப்பினை ஏற்படுத்தி புண்களைத் தோற்றுவிக்கும். இதனால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உண்டாகும். இதனால் இப்பழத்தினை அளவோடு உண்ண வேண்டும்.

முந்திரிப்பழத்தினை வாங்கும் முறை

இப்பழத்தினை வாங்கும்போது மேற்பரப்பில் வெடிப்புகள் இல்லாமல் ஒரே சீரான நிறத்துடன் இருப்பவற்றை வாங்க வேண்டும். இதனை அறையின் வெப்ப நிலையில் ஒரு நாள் வைத்திருந்து உண்ணலாம்.

குளிர்பதனப்பெட்டியில் பாலிதீன் கவரில் போட்டு இருவாரங்கள் வரை பாதுகாத்து பயன்படுத்தலாம். இப்பழத்தினை லேசாக அவித்தோ, உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் ஊறவைத்தோ உண்ணும்போது தொண்டையில் கரகரப்பினை உண்டாக்குவதில்லை.

இப்பழம் அப்படியேவோ, பழச்சாறாகவோ உண்ணப்படுகிறது. இதிலிருந்து ஜாம், சாலட், இனிப்புகள், கேக்குகள், ஊறுகாய்;, சட்னி, காக்டெயில், வெயின், பென்னி ஆகியவை தயார் செய்யப்படுகின்றன.

இப்பழம் உலர்த்தப்பட்டும், அழுகிய நிலையிலும் கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்தப்படுகின்றன.

சத்துகள் நிறைந்த, சீசனில் கிடைக்கும் முந்திரி பழத்தினை ரசித்து உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.

பாமாயில் கொடிய நஞ்சு... பாமாயில் பற்றிய விழிப்புணர்வு பதிவு...

பாமாயில் கொடிய நஞ்சு... பாமாயில் பற்றிய விழிப்புணர்வு பதிவு...

*✍சமையல் எண்ணெய்களில் நாம் பயன் படுத்துவது நல்லெண்ணை, கடலை எண்ணை, தேங்காய் எண்ணை, சூரியகாந்தி எண்ணை, பாமாயில்... இவைகளில் பாமாயில் எண்ணெய் பற்றி இன்று பார்ப்போமா?.*

*நீங்கள் நினைக்கும் பாமாயில் என்றால் என்ன?...*

*தேங்காய் எண்ணை தேங்காய் விதை பருப்பில் இருந்து எடுக்கப் படுகிறது.*

*எள் எண்ணை எள் விதையில் இருந்து எடுக்கப்படுகிறது.*

*கடலை எண்ணை கடலை விதையில் எடுக்கப் படுகிறது.*

*அதே போல் எண்ணை பனையில் இருந்து பாமாயில் ஒரு சில நாடுகளில் எடுக்கப் படுகிறது.*

*✍நம் நாட்டிற்குள் வரும் பாமோலின் எனும் பாமாயில் விதையில் இருந்து எடுக்கப்படுவது அல்ல. கொட்டையில் இருந்து எடுத்து உலகம் முழுவதும் சப்ளை செய்யவும் இயலாது.*

*✍Oil Palm எனும் எண்ணை பனை ஆப்ரிக்கா கண்டத்தின் பூர்வீகம்.*

*✍நமக்கு வருவது எண்ணை பனை பிசினில் இருந்து வரும் திரவத்தை கொதிக்க வைத்து உருவாக்கப் படுகிறது. இது குழம்பு போன்ற பதமும், துர் நாற்றமும், பிரவுன் கலரும் கூடியது.*

*✍இதை கொதிக்க வைத்து உருவாக்கப் படுவது தான் RBD எனும் Refind Bleached Deodorized Oil.*

*✍Refind என்றால் 100 டிகிரிக்கு கொதிக்க வைக்கப்பட்டு சட்டென்று குளிர்விக்கப் படும் போது சக்கை போன்ற கழிவுகள் அடியில் தங்கி விடும். இந்த எண்ணை கெட்ட கொழுப்பு எண்ணையாக மாறி விடும். அதாவது LDL எனும் Low Density Lipoprotein கொழுப்பாக ஆகிவிடும்.*

*✍இந்த எண்ணையை கெமிக்கல் போட்டு பிளீச் செய்தால் தான் கட்டி குறைந்து தண்ணீர் போல மாறும். அதன் துர்நாற்றத்தை போக்க அதற்கும் கெமிக்கல் தான். பாலோனில் இருந்து எடுக்கப்படுவது RBD பாமாயில்.*

*✍இதன் விலை குறைவு என்பதால் ரேஷன் கடைகளில் நம் மக்களின் உயிர் வாங்கியாக இந்த எண்ணை ஜெர்ஸி மாடு, பிராய்லர் கோழி, பிராய்லர் கூண்டு ஆடு, சத்துணவு சூனிய முட்டை போல் மக்களின் உயிர் வாங்கியான இலுமினாட்டியின் சதி வலைகளால் இந்த எண்ணை கொண்டு வரப்படுகிறது.*

*☘என்ன மக்காக்களே!!இதற்கெல்லாம் அசந்து விட்டால் எப்படி!?.*

*✍குரூடாயிலை லிட்டர் 80 பைசாவுக்கு வாங்கி அதில் பாமாயில் எசன்ஸ்களை கலந்து அடக்க விலை ரூபாய் 1 மட்டும்.*

*இதுதான் உங்களுக்கான நவீன பாமாயில்.*

*✍பூமியில் உள்ள குரூடாயில் தான் மினரல் பாமாயில் பெயரில் உங்களுக்கு படைக்கப் படுகிறது.*

*✍ரேஷன் என்றால் சீனி வெள்ளை விஷ சீனி, விஷ குரூட் ஆயில் பாமாயில் இப்படி தான் கிடைக்குமே தவிர கருப்பட்டி, சிறுதானியங்கள், செக்கு எண்ணை கிடைக்குமோ!!*

*✍இங்கு கலப்படத்தை தவிர வேறு எதுவும் தர மாட்டாங்க என் அருமை மக்காக்களே.*

*✍இந்திய பாமாயில் உடலுக்கு நன்மை தராது. மாறாக தீராத நோயை தருவது.*

*ஆரோக்கியமானவற்றை உண்ணுங்கள் ,வளமோடு வாழுங்கள்...

சாதத்தை இப்படி சாப்பிட்டால் தான் ஒரு நோய்கள் வராது !


சாதத்தை இப்படி சாப்பிட்டால் தான் ஒரு நோய்கள் வராது !

சாதம் எப்படி சாப்பிட வேண்டும்?

🍄தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதால் அதிக அளவில் சர்க்கரை நோய் வருவதாக பலரும் சொல்கிறார்கள். ஆனால் அது தவறு. நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம்.

🍄#சர்க்கரை_நோய் எப்படி வருகிறது ?

🍄இன்று குக்கரில் வேகவைத்த சாதத்தை பலரும் சாப்பிடுகிறார்கள். கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது.

🍄#கஞ்சியின்_பயன்கள் :

🍄சாதம் வடித்த கஞ்சி சு+டாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை சரியாகும்.

🍄ஆனால் கஞ்சியை ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும்.

🍄சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப் பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும்.

🍄சாதத்தை எப்பொழுது சாப்பிட வேண்டும்?

🍄கொதிக்கக் கொதிக்க சாதத்தை சாப்பிடக்கூடாது.

🍄சாதத்தை மிதமான சு+ட்டிலேயே சாப்பிட வேண்டும்.

🍄ஆனால் சாதத்தை சில்லென்று, ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும்.

🍄#பழையச்_சோறு :

பழையச் சோறு சாப்பிட்டுத்தான் நம் முன்னோர்கள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள்.

🍄சாதத்தில் தண்ணீர் ஊற்றி, மறுநாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு, அல்சர், மூட்டு வலி, தோல் நோய்கள் ஆகியவை பாதிக்காமல் பாதுகாக்கிறது.

🍄பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது. மோரைக் கடைந்து ஊற்றி சாப்பிட வேண்டும்.

🍄#சாதத்தின்_பயன்கள் :

🍄சாதம் வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர்த்தாகம் ஏற்படுவதும், பித்தம் உண்டாவதும் நீங்கும்.

🍄பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச் சாப்பிட வாதம், பித்தம் நீங்கும்.

🍄மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது.

🍄சம்பா சோறு வயிற்றுப்பொருமலுக்கு மிகவும் நல்லது.

🍄வாழையிலையில் சாப்பிடுவதால் அதிலுள்ள துவர்ப்பு சத்து உடலில் சேர்ந்து நன்மை செய்கிறது.

🍄ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை :

🍄காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் தோல் நீக்கிய இஞ்சித் துண்டைச் சாப்பிட்டால் தொப்பையைக் கரைக்கும்.

🍄உணவை நன்றாக மென்று, பொறுமையாக உண்ணுங்கள்.

🍄ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெயில் மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பட்ட பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. இதனால் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்.

🍄மைதாவினால் செய்யப்படும் பரோட்டா போன்ற பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள. இது வாழ்நாளைக் குறைக்கும்.

🍄பிராய்லர் கோழிக்கறி சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். இதற்கு பதில் மீன் அல்லது ஆட்டுக்கறி, நாட்டுக்கோழி சாப்பிடுங்கள்.

🍄மதியம் சாப்பாட்டுக்கு ஒரு மணி நேரம் முன்பு சுக்குக் காபி சாப்பிடுவது மிகவும் நல்லது.

🍄உண்ட உணவு முழுமையாகச் செரிக்கும் முன்பு திட உணவு சாப்பிடக் கூடாது.

🍄பாதாம், முந்திரி, உலர்பழம், பழங்கள், கீரைகள், கிரின் டீ, கடலை மிட்டாய், எள் உருண்டை, பனைவெல்லம் ஆகியவற்றை நாள்தோறும் சாப்பிடுவது நல்லது.

பாலும் பால் சார்ந்த பொருட்களும்...


பாலும் பால் சார்ந்த பொருட்களும்...

பால்... ஒரு முழுமையான உணவு நாம் மிகவும் அதிகமாகப் பருகும் பானமாக இருக்கும் பால் பெரு மற்றும் சிறு நுண்ணூட்டச் சத்துக்கள் (Macro & Micro Nutrients) நிறைந்தது. குழந்தைப் பருவம் முதல் இளமைப் பருவம் வரை அனைவருக்கும் அவசியமான பானமான பால் ஒரு முழுமையான உணவுப் பொருளாக(Complete food) போற்றப்படுகிறது. 100 மில்லி அளவுள்ள பசும்பாலில் ஆற்றல் 73 Kcal, மாவுச்சத்து 5g, புரதசத்து 3g, கொழுப்புச்சத்து 4g, மொத்த நிறைவுற்ற கொழுப்பு அமிலம் 3g, ஒற்றை நிறைவுறாத கொழுப்பு அமிலம் 1g, சோடியம் 25 mg, பொட்டாசியம் 115mg, பாஸ்பரஸ் 97mg, கால்சியம் 120mg அளவிலும் இருக்கிறது.

*மாவுச்சத்து:*

லாக்டோஸ்(Lactose) என்பது ஒரு வகையான மாவுச்சத்து. அதுவே பாலின் இனிப்புச் சுவைக்கு காரணமாக உள்ளது. நம்மில் பெரும்பாலானோர் காலையில் எடுத்துக்கொள்ளும் முதல் உணவாக பால் இருப்பதோடு, ஒரு நாளுக்குத் தேவையான முழு ஆற்றலையும், புத்துணர்ச்சியையும் நமக்குத்
தருகிறது.

*புரதச்சத்து:*

பாலிலுள்ள புரதச்சத்தில் இருக்கும் அதிகப்படியான அமினோ அமிலங்கள் உடலில் இருக்கும் திசுக்களை வலுவடையச் செய்கிறது. மேலும் சேதம் அடைந்த செல்களைச் சரி செய்கிறது.

*கொழுப்புச்சத்து:*

பாலில் உள்ள ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலம் (MUFA-Monounsaturated Fatty Acid) மற்றும் பிற கொழுப்பு அமிலங்களால்(Fatty acids) நம் உடலில் ஏற்படும் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
சுண்ணாம்புச்சத்து:
பாலில் சுண்ணாம்புச்சத்து அதிகமாக இருப்பது அனைவரும் அறிந்ததே. இச்சத்து நம் உடலில் உள்ள பற்கள், எலும்புகளை வலுவாக்கவும், எலும்பு தேய்மானத்தை(Osteoarthritis) தடுக்கவும் உதவுகிறது.

*வைட்டமின்கள்:*

பாலில் உள்ள வைட்டமின் B மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான A, D, E, K போன்றவை நம் உடலுக்கு பல வகையான நன்மைகளைத் தருகிறது. உதாரணமாக இதிலுள்ள வைட்டமின் B12 என்பது நம் உடலில் உள்ள நரம்பு மண்டலம் மற்றும் மூளையை வலுவாக்க உதவுகிறது.

*தயிர்:*

பாலைப் போன்று பாலிலிருந்து பெறப்படும் பொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய் மற்றும் யோகர்ட் போன்றவற்றிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் பல உள்ளன. காய்ச்சாத பால் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் மற்றும் நுண்ணுயிரிகள்(Bacteria) பாலில் இருந்து தயிர் தயாரிக்க உதவுகிறது.

*தயிரின் பலன்கள்:*

தயிரில் உள்ள சார்பு உயிரிகள்(Probiotics) நம் குடலில் நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குகிறது. இது நம் வயிற்று உபாதைகளை சரி செய்ய உதவுகிறது. இதிலுள்ள அதிகப்படியான சுண்ணாம்புச்சத்து நம் எலும்புகளை வலுவடையச் செய்கிறது. தயிர் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நம் தோலில் உள்ள ஈரப்பதமூட்டும் விளைவுகளை உண்டாக்கி, சருமம் வறட்சி அடையாமல் தடுக்கிறது.

*யோகர்ட்:*

பாலுடன் Lactobacillus bulgaricus மற்றும் Streptococcus thermophiles இவை இரண்டும் இணைந்து புளிப்புத் தன்மையை ஏற்படுத்துவதால் உருவாகும் ஒரு வகை தயிர் யோகர்ட் என்று அழைக்கப்படுகிறது. இது பல சுவைகளில் தயார் செய்யப்படுகிறது. இது நம் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது.

*மோர்:*

நீரினில் தயிரைக் கலந்து கடைந்தால் கிடைப்பதை மோர் என்று சொல்கிறோம். இது கோடை காலத்தில் உடலுக்கு குளிரூட்டும் பானமாகத் திகழ்கிறது.

*மோரின் பலன்கள்:*

மோர் உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கான சிறந்த குளிரூட்டியாகத் திகழ்கிறது. இது வயிற்றின் அமிலத் தன்மையைக் குறைக்க உதவுகிறது. வாயிலுள்ள தோலின் அணுக்களை கிருமித் தாக்கத்திலிருந்து (Anti inflammatory effect) பாதுகாக்கிறது. மோருடன் இஞ்சி, சீரகம், மிளகு சேர்த்து பருகுவதால் குடல் உபாதைகள் விலகி செரிமானத்திற்கு உதவுகிறது. வியாதியஸ்தர்கள் நடுவேளையில் வரும் பசியை அடக்குவதற்கு மோர் பருகுவதன் மூலமாக உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. மேலும் அது உடலின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

*வெண்ணெய்:*


பாலிலிருந்து பெறப்படும் மற்றொரு பொருள் வெண்ணெய். பாலிலுள்ள கொழுப்புகள் உடைக்கப்பட்டு பின்பு சேர்க்கப்பட்டு வெண்ணெய்க்கான திடத்தன்மை பெறுகிறது. தயிரிலிருந்தும் வெண்ணெய் தயார் செய்யலாம்.
வெண்ணெயின்

*பலன்கள்:*

வெண்ணெயில் அதிகளவு உள்ள வைட்டமின் A தைராய்டு மற்றும் அட்ரினல் சுரப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதிலுள்ள வைட்டமின் D மூலமாக கால்சியம் சத்து நம் உடலில் சேர்வதற்கு (Absorption) உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நம் உடலில் உள்ள செல்கள் தீவிர சேதமடையாமல் பாதுகாக்க உதவுகிறது. வெண்ணெய் உடலில் உள்ள ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தும் தன்மை கொண்டது. இது வாயில் ஏற்படும் புண்களை ஆற்ற உதவுகிறது.

*நெய்:*

உருக்கப்பட்ட வெண்ணெய்தான் நெய் என்று அழைக்கப்படுகிறது. அந்நாட்களில் நெய்யை சமையல் எண்ணெயாக பெரும்பாலானோர் பயன்படுத்தினர். நெய் ஆரோக்கியமான கொழுப்பு சத்து உடையது.

*நெய்யின் பலன்கள்:*


நெய் நமது உணவில் ருசியைச் சேர்ப்பதுடன், நிறைவாய் உணவு உட்கொண்ட திருப்தியைக் கொடுக்கிறது. இது Glycemic index அளவை நம் உணவில் குறைப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு உணவின் மூலம் அதிகரிக்கும் சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. நமது உணவில் தினமும் 2 அல்லது 3 தேக்கரண்டி நெய் சேர்த்து சாப்பிட்டால் அதிலுள்ள நிறைவுறா கொழுப்பு (Saturated fat) நமது மூளை திறம்பட செயல்பட உதவுகிறது. மேலும் இது நமது சருமத்தை மிருதுவாகவும் மென்மையாகவும் வைக்க உதவுகிறது. இது மலச்சிக்கலை கட்டுப்படுத்துகிறது.
மேற்சொன்ன பொருட்களைத் தவிர பாலிலிருந்து பனீர், சீஸ், ஐஸ்கிரீம் மற்றும் பல வகை இனிப்பு பண்டங்களும் தயாரிக்கப்படுகிறது. நமது அனுதின உணவில் பால் ஒரு இன்றியமையாத பங்கு வகிக்கிறது. எனவே பால் மற்றும் பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை ஏதாவது ஒரு வகையில் அன்றாட உணவில் எடுத்துக்கொள்வது நல்லது.


லாக்டோஸ் இன்டாலரன்ஸ் (Lactose Intolerance):
பாலில் உள்ள லாக்டோஸ் ஜீரணம் ஆவதற்கு நமது குடலில் லாக்டேஸ் என்கிற திரவம் சுரக்க வேண்டும். இந்த லாக்டேஸ் குறைபாடு உள்ளவர்கள் பால் உட்கொண்டால், அவர்களுக்கு வயிறு உபாதைகள், வயிற்று வலி, வயிறு உப்புதல் (Bloating), வாயு மற்றும் வாந்தி போன்ற உடல்நல பிரச்னைகள் ஏற்படும். இந்த பிரச்னை உள்ளவர்கள் முதன்மை லாக்டோஸ் இன்டாலரன்ஸ் (Primary Lactose Intolerance), இரண்டாம் லாக்டோஸ் இன்டாலரன்ஸ் (Secondary Lactose Intolerance) என்று இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறார்கள். Primary Lactose Intolerance இந்த வகை பிரச்னை உள்ளவர்களுக்கு பிறப்பிலேயே லாக்டோஸ் திரவம் சுரக்காமல் இருக்கும் அல்லது அவர்கள் வளரும்போது அந்த திரவ அளவு குறைவுபடும்.
Secondary Lactose Intolerance:
இவர்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சை அல்லது சிறுகுடலில் ஏற்பட்ட வியாதியின் நிமித்தமாக லாக்டோஸ் திரவம் சுரக்கும் அளவு குறைவுபடும். இந்த இருவகைப் பிரிவினரில் சிலருக்கு பாலிலிருந்து தயாரிக்கப்படும் மற்ற உணவுப் பொருட்கள் ஒத்துக்கொள்ளும் தன்மையுடையதாக இருக்கும். ஆனால் முற்றிலும் ஒவ்வாமை உள்ளவர்கள் சோயா பால், பாதாம் பால், தேங்காய் பால் மற்றும் பிற பல வகையான பாலை உட்கொள்ளலாம்.
பால் இல்லா உணவுமுறை:
Reddit என்கிற இணையதள பக்கத்தில் அசைவ உணவு முறையைத் தவிர்த்து, வீகன் உணவு முறையைப் பின்பற்றுவது மற்றும் அதனால் ஏற்படும் பலன்கள் குறித்தும் Veganuary என்ற பெயரில் பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரசாரத்தில் இந்த புத்தாண்டின் முதல் ஒரு மாதம் முழுவதற்கும் இதைப் பின்பற்றும்படி பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரசாரம் இங்கிலாந்து உள்ளிட்ட ஐக்கிய ராஜ்ஜியங்களில் (United Kingdom) 2014-ம் ஆண்டில் Jane Land, Matthew Glover என்கிற கணவன் மற்றும் மனைவி ஆகியோரால் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பிரசாரத்தின்படி 192 நாடுகளைச் சேர்ந்த 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் அசைவ உணவுமுறையைத் தவிர்த்து வீகன் உணவுமுறையை ஒரு மாதத்திற்கு பின்பற்றுவது என்ற உறுதிமொழியை 2020-ம் ஆண்டின் நவநாகரீக தீர்மானங்களில் ஒன்றாக எடுத்து இந்த உணவுமுறையில் இணைந்துள்ளனர். தாவரங்கள் மற்றும் அதிலிருந்து பெறப்படும் பொருட்களான காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள் மற்றும் பழங்கள் போன்ற சைவ வகை உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்கிற உணவுமுறைக்கு வீகன் டயட்(Vegan diet) என்று பெயர்.
இந்த உணவுமுறையைப் பின்பற்றுபவர்கள் விலங்குகளின் இறைச்சி மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படும் பால், முட்டை போன்ற பொருட்களை எடுத்துக் கொள்வதில்லை. ஹாலிவுட் நட்சத்திரங்களான Joaquin Phoenix, Alicia Silverstone, Mayim Bialik ஆகியோர் இந்த பிரசாரத்தில் தங்கள் பெயரை இணைத்துக் கொண்டுள்ளனர். மேலும் Natalie Portman என்ற நட்சத்திரம் புத்தாண்டு தினத்தன்று தன்னை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் 59 லட்சம் பேரையும் இந்த உறுதிமொழியை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
Veganuary மூலம் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஒரு மாதத்திற்கு இறைச்சி, பால் ஆகியவற்றை கைவிடுவதன் மூலம், 45 ஆயிரம் டன் அளவிலான கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக, உணவு உற்பத்தியின் சுற்றுச்சூழல் தாக்கத்தை ஆய்வு செய்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் Joseph Poore என்பவர் தெரிவித்துள்ளார். எனினும் வீகன் உணவு முறையைப் பின்பற்றுபவர்கள் இறைச்சி மற்றும் மாட்டுப் பால் அருந்தமாட்டார்கள். இதனால் உடலில் பல ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. எனவே, இவர்கள் உணவியல் அல்லது ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனைப்படி தங்கள் உணவுமுறையை சீராக அமைத்துக் கொள்வது நல்லது.
நன்றி குங்குமம் டாக்டர்!

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️