ஞாயிறு, 31 மே, 2020

இயற்கையில் இருந்து கற்றுக் கொள்ள நிறையவே உண்டு

இயற்கையில் இருந்து கற்றுக் கொள்ள நிறையவே உண்டு

🗝️குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீரருந்தவும்.  குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.

🗝️பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள்.
அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.

🗝️புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள்.
நச்சுக் கனிகளை புழு துளைக்காது.

🗝️பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூசிகள் உட்காராது.

🗝️முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். 
மரம் செழிப்பாக வளரும்.
பாம்பு ஓய்வெடுக்கும் இடத்தில் உங்கள் வீட்டைக் கட்டுங்கள். பாம்புகள் குளுமையான இடங்களில் மட்டுமே ஓய்வெடுக்கும்.

🗝️பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை 
தோண்டுங்கள்.

🗝️பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள்..
நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

🗝️அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.

🗝️மீன்களை போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். 
நீங்கள் பூமியில் நடக்கும் போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.

🗝️அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும். 

🗝️நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்.

சனி, 30 மே, 2020

வேண்டாம் எதிர்பார்ப்புகளின் பாரம்..!!



வேண்டாம் எதிர்பார்ப்புகளின் பாரம்..!!

நம் ஏமாற்றங்களுக்குக் காரணம் நம் எதிர்பார்ப்புகள். நாம் எதிர்பார்ப்பது நிறைவேறாதபோது அந்த நிராசை உறவுச் சிக்கல்களாய், குடும்பப் பிரச்சினைகளாய், பின் மெல்ல மெல்ல நோய்களாய் மாறும்.

எதிர்பார்ப்புகள் வருவது இயற்கை. எந்த நிலையிலும் நமக்கு எதிர்பார்ப்புகள் உண்டு. நினைத்தது நடந்தால் சந்தோஷப்படும் நாம், பொய்த்தால் எதிராளியைக் குறை கூறுகிறோம்.

*மோசமான உறவு*

திருமணங்களில் என்ன முக்கியமான சிக்கல்? எதிர்பார்ப்புகளின் ஒவ்வாமை தான். என்னிடம் சிகிச்சைக்கு வரும் தம்பதியினரிடம் இதை அடிக்கடி சொல்வதுண்டு: மோசமான கணவன், மோசமான மனைவின்னு சொல்றதைவிட மோசமான உறவுனு சொல்றது தான் பல நேரத்துல பொருந்தும். தனித்தனியாகப் பார்த்தால் நல்ல மனிதர்களாக இருக்கிற இரண்டு பேர், திருமணம் எனும் பந்தத்தில் எதிர்பார்ப்புகளின் ஒவ்வாமையில் தோற்றுப் போகிறார்கள்.

இந்த எதிர்பார்ப்புகள் மாறக்கூடியவை. காலத்தால் அழியக்கூடியவை. அனுபவத் தால் சமரசம் செய்யக்கூடியவை என்பதை உணர்ந்து விட்டால் பல உறவுச் சிக்கல்கள் சீராகிவிடும். நம் எதிர்பார்ப்புகள் அம்மா, அப்பா, குடும்பம், சாதி, மதம், ஊர், சினிமா, அக்கம் பக்கத்து நண்பர்களால் வளர்க்கப்பட்டவை. அவை மட்டுமேதான் சரி என்பதைப் போலக் காலப்போக்கில் இறுகிப் போவதுதான் பிரச்சினையின் அடி நாதம். பற்றாக்குறைக்கு ஒப்பீடுகள் வேறு.

“என் அப்பா போல நீ இல்லை.”

“என் அம்மா போல நீ இல்லை.”

வளரும் பருவத்தில் பல பாலியல் குழப்பங்கள் வர இந்த எதிர்பார்ப்புகள்தான் காரணம். முன்னொரு காலத்தில் தகவல் பற்றாக்குறையால் அறியாமையில் குழப்பம் வந்தது. இன்று தகவல் யுகத்தில் கொட்டிக் கிடக்கும் தகவல்களில் எது சரி, எது சரியில்லை என்று தெரியாததால் வருகிறது குழப்பம். ஊடகத் தாக்கம் அதை உச்சத்துக்குக் கொண்டுசென்றுவிட்டது.

*தன் மீது எதிர்பார்ப்பு*

காதல், காமம், குடும்பம், வாழ்வு முறை எனப் பல விஷயங்களில் நிஜத்தோடு தொடர்பில்லாத எதிர்பார்ப்புகளால் பலர் தங்கள் வாழ்க்கையில் தவறான முடிவுக்கு வருகின்றனர்.

“ஒரு ஸ்மார்ட் ஃபோனும் பைக்கும் இல்லேன்னா அப்புறம் காலேஜ் ஸ்டூடண்டுங்கிறதுக்கு என்ன கெத்து?”

“எங்கப்பா வேண்டாம்னா மறு பேச்சு பேச மாட்டோம்; இன்னக்கி இருக்கிற பசங்க வார்த்தைக்கு வார்த்தை விவாதம் பண்றாங்க! வயசுக்குக் கொஞ்சம் கூட மதிப்பு கிடையாது!”

“ எவ்வளவு சம்பாதிச்சா என்னப்பா, பொம்பள வீட்டைக் கவனிக்காட்டி எப்படி?”

எதிர்பார்ப்புகள் பல சமயங்களில் வார்த்தைகளில் சொல்லாமல் செயலில் எதிர்பார்க்கப்படுவதும் உண்டு. “சொன்னாதான் தெரியுமா?” என்பார்கள்.

பிறர் மீது உள்ள எதிர்பார்ப்புகளை விடத் தன் மேலுள்ள எதிர்பார்ப்புகளின் கனம் எப்போதும் சற்று அதிகமாகத்தான் இருக்கும். தன்னை நொந்துகொள்ளும் தன்மையும், தன்னைக் குறைவாக மதிப்பிடுதலும் இதன் காரணமாகத்தான்.

*பூஜ்ய எதிர்பார்ப்புகள்*

உங்களுக்கு உங்கள் மகனுடன் பிரச்சினையா? உங்களுக்கான அஃபர்மேஷன் இதுதான்: “ நான் என் மகன் பற்றிய எல்லா எதிர்பார்ப்புகளையும் வெளியேற்றுகிறேன்.” (I release all my expectations about my son).

“எதிர்பார்ப்பே இல்லை என்றால் அவன் இஷ்டத்துக்குத் தறிகெட்டுப் போக மாட்டானா?” என்று நினைக்கிறீர்களா? இல்லை! நீங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை வெளியேற்றி னால், அவனை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள ஆரம்பிப்பீர்கள். நீங்கள் எதிர்பார்ப்பில்லாமல் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் போது அவன் உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முயலுவான். உங்களுக்கும் அவன் எதிர்பார்ப்புகள் புரிய ஆரம்பிக்கும்.

உங்களின் எல்லாச் சிக்கலான உறவிலும் இதை முயற்சி செய்து பாருங்கள். “நான் ---------- பற்றிய எல்லா எதிர்பார்ப்புகளையும் வெளியேற்றுகிறேன்.” (I release all my expectations about -------------).

எதிர்பார்ப்புகளைப் பூஜ்ஜியத் துக்குக் கொண்டுவருதல் நலம். மனைவி காபியை ஸ்ட்ராங்காகத் தான் போட வேண்டும் என்று எதிர்பார்ப்பு உள்ளபோது என்ன செய்வோம்? ஸ்ட்ராங்காகக் காபி கிடைத்தால் பேசாமல் குடிப்போம். லைட்டாக வந்தால் குதறுவோம். எதிர்பார்ப்புகளை நீக்கிப் பாருங்கள். ஒவ்வொரு ஸ்ட்ராங்கான காபியையும் நன்றியோடு ருசித்துக் குடிப்பீர்கள். லைட்டான காபி வரும்போது அதை லைட்டாக எடுத்துக்கொள்வீர்கள்.

*இயல்பாய் மலரட்டும்..*

உங்கள் எதிர்பார்ப்புகள் குறையும்போது வாழ்க்கை கனமில்லாமல் அழகாக மாறும். எதிராளியின் எதிர்பார்ப்புகள் புரிய ஆரம்பிக்கும். அது புரிதலை எளிமைப்படுத்தும்.

யோசித்துப் பாருங்களேன். பெரும்பாலான வீடுகளில் பிள்ளைகள் மேல் பெற்றோர்களுக்கான எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் எதிர்பார்ப்புகள்தானே?

குறிக்கோள்கள் இருக்கலாம். கடமைகளைச் செய்யலாம். உங்கள் எண்ணத்தைச் சொல்லலாம். ஆனால், அவை தீவிரமான எதிர்பார்ப்புகளாக மாறி அவர்கள் கழுத்தை நெறிக்க வேண்டாம். இன்று மாணவர்கள் தோல்வியின்போது துவண்டுபோவதன் முக்கியமான காரணம் ஒன்றுதான். தங்களால் பெற்றோர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியவில்லையே என்பதுதான்.

என்ன படிக்கிறான் என்று பெற்றோருக்குத் தெரியாத பல கிராமத்துக் குழந்தைகள் இயல் பாக வளர்வதற்கும், எல்லாம் கொடுத்தும் சிறு தோல்வியில் நகரக் குழந்தைகள் நொறுங்கிப் போவதற்கும் காரணம் இந்த எதிர்பார்ப்புகள்தாம்!

“என் பிள்ளையை நிபந்தனையில்லாமல் ஏற்றுக்கொள்கிறேன்” (I accept my child unconditionally) என்று சொல்லிக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைக்கான நேரமும் இடமும் கிடைக்கும். அவர்களுக்குச் சுதந்திரமாய்ச் சிந்தித்து வாழ்க்கையைக் கற்கும் வாய்ப்பு கிடைக்கும்

*எதிர்பார்ப்புகளின் பாரம் இல்லாமல் அவர்களை இயல்பாய் மலர விடுங்கள்..!!*


திங்கள், 25 மே, 2020

வருஷத்து 302 கோடி சம்பளம் வாங்கி என்னசார் பண்ணுதீங்க..?

வருஷத்து 302 கோடி சம்பளம் வாங்கி என்னசார் பண்ணுதீங்க..?

அதான் வாங்குற சம்பளத்துல 80 சதவீத சம்பளத்ததை
வைத்து, Googleலின் ஷேரை வாங்கி வைத்துள்ளனே ..
கிளிஞ்சுது, அதாவது ..

எவன்கிட்டே இருந்து சம்பளம் வாங்குறீங்களோ அவனுக்கே திரும்ப அந்த சம்பளத்த கடனா கொடுக்குறீங்க
அப்படிதானே சார்.. ?

இதுக்கு பேசாம ஊர்ல மாடே மேய்க்கலாம் சார்..
அமெரிக்கா கூகுள்னு ஓவர் பில்டப்பெல்லாம் பண்ணி பண்ணியே

ஊர்ல படிச்சிட்டு இருக்குறவனெல்லாம்
நான் சுந்தர் பிச்சை மாதிரி வருவேன்
நான் அப்துல் கலாம் மாதிரி வருவேன்னு
சொல்லிகிட்டு திரியாருணுக..

இவ்வளவு சம்பளம் வாங்குற நீங்க
சாரி நீங்க மட்டுமல்ல
உங்களைப் போன்று கோடானக்கோடி
பிறத்துறையை சார்ந்தவர்கள்
திங்குற சோற்றுக்கும்,குடிக்குற பாலுக்கும் கொஞ்சம் விவசாயத்துல முதலீடு பண்ணலாமே..?

எல்லாவனும் சேர்மார்க்கெட்டுல
கார் கம்பெனி மேலையும்,
போன் கம்பெனி மேலையும்
இப்படி எதெல்லாம் ஆடம்பரத்தேவைக்கானப் பொருளோ
அவற்றின் மீது முதலீடு செய்கிறீர்களே..

அடிப்படையை விடுத்து ஆடம்பரத்தின் மீது முதலீடு செய்யும் அறிவு என்னடா அறிவு..?

கோடி, கோடியா சம்பாதிக்கும்
சினிமா காரணும் இப்படி பலத்துறையை
சார்ந்தவனும் தான் சம்பாதித்தப் பணத்தை வைத்து கார் வாங்குறான்
ஏரோ பிளேன் வாங்குறான்
ஆனா ஒரு மாடு வளர்க்கவோ
அல்லது தன் சொந்தபந்த விவசாயிகளின் மீது முதலீடு
செய்வதற்கோ அல்லது  தானே முன்வந்து
விவசாயம் செய்வதற்கோ ஒருத்தன் கூடத் தயாராக இல்லை..

இல்ல ஒரு எம்ப்ளாயிக்கே 302 கோடி
சம்பளம்னா அப்போம் ஓனருக்கு
எவ்வளவு இலாபம்..?

அவன் அங்க உட்கார்ந்து கோடி கோடியா
தகவல் தொழில் நுட்பத்தை வைத்து
சம்பாதிப்பதற்கு..
தேசப்பக்தி என்றப் பெயரில் மக்கள் வரிப்பணத்தை வைத்து சேட்லைட்
அனுப்புறது, என்ன சார் நியாயம்..?

Tv சேனல் தனியாரு..
மொபைல் நெட்வெர்க் தனியாரு..
Google, what's App, face book போன்ற
ஹோலோபல் நெட்வெர்க் தனியாரு..
ஆனால் அந்த தகவல் தொழில் நுட்பத்தின் மூலத்தேவையான சேட்லைட்
அனுப்புறது யாரு..? அரசு..

கடலுக்கு மீன் புடிக்க போற வியாபாரிதான்டா மீன் பிடிக்க, மூலத்தேவையான  கப்பல வாங்கனும்..
மீனை விலைகொடுத்து வாங்கி திங்குற
நாங்க ஏன்டா கப்பலுக்கு கப்பம் கட்டனும்..?

அப்துல் கலாம் நல்ல மனிதர் நாட்டுக்காக தன் துறையில் சிறந்து விளங்கினார் ..அவ்வளவு தான்..
அதற்காக மனிதகுல மாணிக்கம்,மனிதகுல நன்மைக்காக வாழ்ந்தார் இதெல்லாம் ரெம்ப ஓவரு..

மேலும் அவரே ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும்
முன்னோடி என்பதெல்லாம் பெருத்த முட்டாள் தனமே.. அவரதுத் துறையை சார்ந்தவர் அவரை மெச்சட்டும்.. ஒட்டுமொத்த
கல்வியிலும்,அத்துனை மாணவர்களுக்கும் முன்னோடியாக இதுபோன்ற அறிவியல் வல்லூநர்களை
முன்னிருத்துவது மிகமிகத்தவறு..

நெல் ஜெயராமன் யாருனுத் தெரியாது
நம்மாழ்வார் யாருனுத் தெரியாது

ஆனா சுந்தர் பிச்சை யாருனுத்தெரியும்
அப்துல் கலாம் யாருனுத் தெரியும்..

நதி நீர் இணைப்புத் திட்டத்தை
ஐயா அப்துல் கலாம் ஆதரித்தார்..
நதிநீர் இணைந்தால் பாசன வசதி கூடுமாம்

அடப்பாவமே, பெரும் நதியை பல்வேறு கிளைநதிகளாக பிரித்தால் தான்
பாசன வசதி கூடுமென்பது சிறுக் குழந்தைக்குக்கூட தெரியும்..

அதை விடுத்து இரண்டு பெரும் நதியை இணைப்பது மகா முட்டாள் தனம்..

அனு உலையால் எந்த பாதிப்பும்
இருக்காது என்று கூறி அனு உலையை
ஆதரித்தவர் ஐயா அப்துல் கலாம்..
கூடங்குளம் அனு உலை வெடித்தால்
500 கிலோமீட்டர் பரப்பளவிற்கு புள்ளுக்கூட முளைக்காது..
என்பதை எல்லாம் அறியாதவரா ஐயா அப்துல் கலாம்..?
அனுக்கழிவை எங்கேக் கொட்டுவது..?
தெரியாது..?
கடல்ல கொட்டுனா கடல் உயிர்கள் பாதிக்கப்படும்..

குடிக்கிற பாலிலும், திங்குற சோற்றிலும்
தரமில்லை ஆனால்
தரமான காரு,தரமான வீடு,தரமான தங்கம்,தரமான புல்லட்டு ட்ரெயினு, தரமான மின்சாரம், தரமான பெட்ரோல்,தரமான டீசல்,தரமான மீத்தேன் 
எதுக்குடா..இதெல்லாம்..?

உலகிலேயே மிக சிறந்த ஆயுதம்
நீரும், சோறும் தான்..
ஒரு நேரம் உண்ணாமல்,பருகாமல் இருந்தால் தெரியும் சோறும்,நீரும் என்னவென்று..
ஆயிரம் துப்பாக்கியை உருவாக்குவது அல்ல வளர்ச்சி..
தான் உண்ணும் தரமான உணவை
உணவுத் தானியத்தை பாதுகாத்து
விவசாயத்தை பாதுகாத்து
தன் பிள்ளைகளுக்கும் கொடுப்பதுவே
சரியான போக்கு...

நான் குடிக்கும் மாட்டுபால் என் மகனுக்கு
கிடைக்குமா என்பதில் உத்ரவாதம் இல்லை..
நான் சாப்பிட்டு கொண்டிருக்கும் அரிசியே நாரிவிட்டது என் மகனுக்கும்,மகளுக்கும் பேரனுக்கும் பேத்திக்கும் சத்தான உணவு தானியங்கள் கிடைக்குமா என்பதில்
எந்த உத்ரவாதமும் இல்லை..

ஆனா வீடு,காரு,புல்லட் ட்ரெயின்,7G போனுக்கு தயாரா இருக்கீங்க..
எல்லாவனையும் ஆடம்பரத்த காட்டியே ,
அறிவியல் வல்லூநர்களை காட்டியே
ஏமாத்துறதுக்கு பெயரு வளர்ச்சி ..
போங்கடா நீங்களும் உங்க வளர்ச்சியும்
இது போன்ற அறிவியல் வளர்ச்சி பிம்பங்களைத் துடைத்து தூரப்போட  வேண்டிய காலமிது..

ஆரோக்கியத்தின் முதல் படி Positive எண்ணங்கள்


ஆரோக்கியத்தின் முதல் படி Positive எண்ணங்கள்...

1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.

2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.

3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.

4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள்.

6.  அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான  புத்தகங்களை படியுங்கள்.

7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள்  வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.

9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!

10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே  நிறைய உண்ணுங்கள்.

11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்,

14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.

15. பாசிட்டிவான  எண்ணங்களை உங்களின் மனதில் தினமும்  ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.

16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்.

17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.

18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.

19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,

20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.

21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள்.

22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.

24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம்,   கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள். 

25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.

26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப்  பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.

27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும்  உங்களை என்றென்றும் காப்பாற்றுவார்  என்பதை மனதார உணருங்கள்.

28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.

29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள்.  அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள். 

30. உங்களுக்கு  மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக  இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி  விடுங்கள்.

31. உங்கள் தேவைக்கு  அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

32. வாழ்வின் 'உன்னதம்' என்பது ஏற்கெனவே உங்களுக்கு  முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.

33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.

34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள்.

35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.

36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.

37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.

38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து  இறங்குங்கள்.

39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!

40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
   -தொகுப்பு, உங்கள் ஜெயஶ்ரீமகேந்திரன்.

சிறப்பான உறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன்ஏற்பாடுகள் என்னென்ன தெரியுமா?குறிப்பு :21 வயது மேல் உள்ளவர்கள் மட்டும் படிக்க?முழுவிவரம்


சிறப்பான உறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன்ஏற்பாடுகள் என்னென்ன தெரியுமா?குறிப்பு :21 வயது மேல் உள்ளவர்கள் மட்டும் படிக்க?முழுவிவரம்

அன்பை உருவாக்கும் உடலுறவை திருப்திகரமாக்குவது என்னவென்று நீங்கள் மக்களிடம் கேட்டால், உங்களுக்கு வெவ்வேறு பதில்கள் கிடைக்கும். ஆனால் நீங்கள் தீவிரமான ஃபோர்ப்ளேவில் ஈடுபட்டிருந்தால் செக்ஸ் சிறப்பாக இருக்கும் என்பதை நீங்கள் எப்போதாவது உணர்ந்தீர்களா? பிரதான பாடத்திட்டத்திற்கு முன் இதை ஒரு ஸ்டார்ட்டராக நீங்கள் நினைக்கலாம், எனவே, ஃபோர்ளேவை விரைவாக முடித்திருக்கலாம். ஒரு ஆணாக நீங்கள் படுக்கையில் உங்கள் துணையை திருப்திப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி யோசிக்காமல் இருக்கலாம். உங்கள் மனைவி அல்லது காதலிக்கு பாலியல் தூண்டுதலை உணர அதிக நேரம் தேவைப்படலாம்.


கைகள் சரியான இடங்களை ஆராயட்டும் இருவரும் படுக்கையறையில் இருக்கும் தருணம், உங்கள் கைகள் மெதுவாக உங்கள் துணையின் உடலில் சரியான இடங்களை அடையட்டும். அவளுடைய ஆடைகளை அகற்ற உங்கள் கைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவளுடைய உடலை அவளது ஆடைகளால் மூடிக்கொள்ளலாம். உங்கள் கை அவளது ஆடைகளில் நழுவி அவளது தோலையும் வளைவுகளையும் உணரட்டும். இதை உங்கள் காதலி அல்லது மனைவி மிக விரும்புகிறாள். ஆசைகளைக் கேளுங்கள், சொல்லுங்கள் உங்கள் கைகள் அவளது உடலை கட்டிப்போட்டிருக்கும்போது, அவளுக்கு என்ன வேண்டும் அல்லது என்ன விருப்பம் என்று அவளிடம் கேளுங்கள். இது சிற்றின்பக் கடித்தல் முதல் நீங்கள் அவளை அவிழ்க்கும் விதம் வரை எதுவாகவும் இருக்கலாம். அவள் குறும்பு மற்றும் ஆசைகளை வெளிப்படுத்தும்போது, அவளிடம் உங்களுடைய விருப்பங்களை சொல்லலாம். அவள் உடலுறவை ரசிக்கிறாள் என்பதையும், படுக்கையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவள் விரும்புகிறாள் என்பதையும் இந்த வழியில் நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.


ஃபோர்ப்ளேவில் அதிக நேரம் இருக்க தோன்றலாம். ஆகையால், நீங்கள் விரைவாக ஃபோர்ப்ளேவை முடித்துவிட்டு க்ளைமாக்ஸை நெருங்குவது, உங்கள் துணையை பலவீனமடையச் செய்வதற்கான வழியாகும். ஃபோர்ப்ளே என்பது ஆடைகளை அவிழ்ப்பது மற்றும் முத்தமிடுவது என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. ஃபோர்ப்ளேவை ஆராய்வதற்கு உங்களுக்கு உதவக்கூடிய சில உதவிக்குறிப்புகள் கீழே கொடுத்துள்ளோம். மேலும் உங்கள் துணை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பாலியல் ரீதியாக தூண்டப்பட இந்த வழிகள் உதவும்.


குறும்புதனம் செய்யுங்கள் பூட்டிய படுக்கையறையில் மட்டுமே ஃபோர்ப்ளே தொடங்க முடியும் என்று யார் சொன்னது? அந்த உணர்வு உங்கள் மனதைத் தாக்கும் தருணத்தில் நீங்கள் ஃபோர்ப்ளேவை தொடங்கலாம். உங்கள் மனதில் என்ன நடக்கிறது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதற்கான குறிப்பை உங்கள் துணைக்கு கொடுக்க குறும்பு மெசேஜ்களை நீங்கள் அனுப்பலாம். குறும்பு சில்மிஷ்களையும் நீங்கள் காலையில் இருந்தே தொடங்கலாம். இதன் மூலம் இருவரும் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பே உங்கள் மனைவி அல்லது காதலியை உற்சாகமாக நீங்கள் உணர வைக்கமுடியும்.


மசாஜ் செய்யுங்கள் ஒரு முன் சுருள் மசாஜை விட சிற்றின்பம் வேறு என்ன இருக்க முடியும்? நீங்கள் அவளது பின்புறத்திலிருந்து தொடங்கலாம். பின்னர் அவளது இடுப்பு, முதுகு மற்றும் வயிற்று பகுதி என உங்கள் கைகளாலும், நாவாலும் மசாஜ் செய்யலாம். பின்னர் தொடைகள் மற்றும் கணுக்காலை அடையலாம். உங்கள் துணையின் மென்மையான சருமத்தை மென்மையாக அணுகுங்கள்.மசாஜ் மென்மையாகவும், உணர்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும்போது, நீங்கள் இருவரும் உடலுறவை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்.


விளையாடுங்கள் நீங்கள் ஃபோர்ப்ளேவில் இன்னும் சில வேடிக்கைகளைச் சேர்க்க விரும்பினால், சில கின்கி செக்ஸ் பொம்மைகளை வைத்து விளையாட்டலாம். இந்த கின்கி பொம்மைகளை கண்மூடித்தனமாகப் பயன்படுத்தலாம் மற்றும் கேலி, கிண்டல் செய்தும் விளையாடலாம். உங்கள் பெண் ஆதிக்கம் செலுத்துவதை நீங்கள் காண விரும்பினால், இந்த பொம்மைகளை அவள் பொறுப்பேற்க அனுமதிக்கலாம். நீங்கள் செக்ஸ் பொம்மைகளைப் பயன்படுத்தும்போது, முத்தம் கொடுத்தலையும் தொடுதலையும் கைகோர்த்துக் கொள்ளுங்கள். இந்த வழியில் உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைக்கும்.


காதுகளில் குறும்பு விஷயங்கள் உங்கள் துணை கண்ணை மூடிக்கொண்டிருக்கும்போது, அவளுடைய காதில் குறும்பு விஷயங்களை நீங்கள் கிசுகிசுக்கலாம். அடுத்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை அவளுக்குத் தெரியப்படுத்துங்கள். அவளுடைய சொற்களை உங்கள் வார்த்தைகளில் விவரிக்கவும், உங்கள் வார்த்தைகளின் மூலம் அவளைத் தூண்டவும் முடியும். இதை நீங்களும் உங்கள் துணையும் மிகவும் விரும்புவீர்கள். உடலை புதிய வழியில் ஆராயுங்கள் நீங்கள் இருவரும் நீண்ட காலமாக உடலுறவில் ஈடுபட்டிருந்தாலும், அவளுடைய உடலை முதல் தடவையாக ஆராய்வது போல புதிய வழியை தேடுங்கள். அவளுடைய வளைவு, நெளிவுகளையும், தோலையும் நீங்கள் எத்தனை முறை பார்த்தாலும், அது எப்போதும் உங்களுக்கு ஒரு புதிய அனுபவமாகும் என்பதை அவள் உணரட்டும். நீங்கள் அதைச் செய்வதற்காக மட்டுமே செய்கிறீர்கள் என்றால், நீங்கள் முழுமையாக அனுபவிக்க முடியாது. உண்மையான அன்போடு விரும்பத்தோடு தொடங்கும்போது, அது உங்களுக்கு உச்சகட்டத்தை கொடுக்கும்.


நம் முன்னோர்கள் ‘அந்த’ விஷயத்திற்கு… எப்ப பார்த்தாலும் சுயஇன்பம்… விஷயங்களை மெதுவாக தொடங்குங்கள் ஃபோர்ப்ளேவின் போது நீங்கள் அவசரப்பட வேண்டியதில்லை. கிரிக்கெட் விளையாட்டில் எடுத்தவுடன் 6 அல்லது 4 ரன் எடுக்க வேண்டும் என்பதுபோல வேகமாக போக வேண்டாம். முதலில் பொறுமையாக சிங்கிள் ரன்னிலிருந்து ஆரம்பிக்கலாம். அதுபோல, ஃபோர்ப்ளே ஆரம்பத்தில் மெதுவாகவும் மென்மையாகவும் இருக்கட்டும். விஷயங்களை ஒரு கடினமான முறையில் தொடங்குவது ஒரு திருப்புமுனையாக இருக்கக்கூடும். எனவே ஆரம்பத்தில் அதை மெதுவாக செய்ய முயற்சிக்கவும். உங்கள் துணையின் வெளிப்பாடு மற்றும் பதிலைப் பொறுத்து நீங்கள் அதை சற்று கடினமானதாக மாற்றலாம். உறவை வலுப்படுத்தும் ஃபோர்ளேவில் அதிக நேரம் செயல்படுங்கள். இது உங்கள் உறவை மேலும் வலுப்படுத்தும். நேரம் எடுத்து ஒவ்வொரு கணமும் இன்பத்தை அனுபவியுங்கள். இந்த வழியில் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். எத்தனை முறை உறவு கொண்டாலும், உங்கள் உறவில் சலிப்பு ஏற்படாது. புதிது புதிதாகச் செயல்பட முயற்சி செய்யுங்கள்.

ஞாயிறு, 24 மே, 2020

நாட்டு நாய்களின் சிறப்புகள்


நாட்டு நாய்களின் சிறப்புகள்...,

“நாட்டு நாய்கள் மிகவும் நன்றி கொண்டவை. நாம் என்றாவது ஒரு நாள் உணவு போட்டுவிட்டு, பின்பு கல்லால் அடித்தால்கூட நம்மை பார்த்ததும் வாலை ஆட்டிக்கொண்டு பின்னால் ஓடிவரும். பட்டி நாய்கள் எனப்படும் நாட்டு நாய்களிடம், வெளிநாட்டு நாய்களிடம் இல்லாத பல்வேறு விசேஷ குணங்கள் இருக்கின்றன..” என்கிறார், நாட்டு இன நாய் ஆய்வாளர் பொன் தீபங்கர். இவருக்கு 29 வயது. டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் கற்றுவிட்டு ஈரோடு வந்திருக்கும் இவர், இந்தியாவின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதில் விவசாயம், நாட்டு இன நாய்கள் போன்ற விஷயங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

*நாட்டு இன நாய்கள் பற்றி அவர் கூறும் அபூர்வ தகவல்களின் தொகுப்பு:*

“எனது சிறுவயது பருவத்தில், எங்கள் தோட்டத்தில் உள்ள கால் நடைகளை பாதுகாக்க ராஜபாளையம் நாய் இருந்தது. அது நாம் சிந்தும் உணவை மட்டுமே சாப்பிட்டாலும் நம்மையே சுற்றி வரும். நம்மை மீறி நமது வீட்டிற்குள் நுழையாது. தோட்டத்துக்குள் எங்கேனும் ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டால் பதிலுக்கு முதல் குரல் அந்த நாயிடம் இருந்துதான் எழும்.

தமிழகத்தில் ஆடு, மாடுகளை அடைத்து வைத்திருக்கும் இடத்தை தொழுவம் அல்லது பட்டி என்று கூறுவோம். அந்த பட்டியை பாதுகாக்கும் நாய்கள்தான் அந்த காலத்தில் பட்டிநாய்கள் என்று அழைக்கப்பட்டன. மலையாள மொழியில் நாய்களை பட்டி என்று அழைப்பதற்கும் இது காரணமாக இருக்கலாம்.

எனக்கு தெரிந்தவரை பட்டி நாய்களில் கருவாய் செவலை, கருநாய், பச்ச நாய் ஆகிய மூன்று இனங்கள் இருந்திருக்கின்றன. உடல் முழுக்க செவலையும் வாய் பகுதி கருப்பாகவும் இருக்கும் கருவாய் செவலை அதிக மவுசாக இருந்திருக்கிறது. இது காவலுக்காகவும், செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்பட்டிருக்கிறது.

கருநாய் முழுக்க முழுக்க கறுப்பு நிறத்தில் இருக்கும். பட்டிகளில் காவல் காக்க இந்த நாய்கள்தான் மிகச்சிறந்தவை. இருளோடு இருளாக இந்த நாய்கள் படுத்து இருந்தால் பிற மிருகங்களுக்கு காவல் நாய் இருப்பது தெரியாமல் வந்து மாட்டிக் கொள்ளும்.

பச்ச நாய் என்றால் துரத்தித்துரத்தி கடிக்கும் ஆற்றல் கொண்டது. இந்த நாய்கள் இருக்கும் சுற்று வட்டார பகுதிக்கு யாரும் செல்ல முடியாது. பாய்ந்து வந்து கடித்து விடும். இதுபோன்று வேறு சில நாட்டு இன நாய்களும் இருந்துள்ளன.

ஆனால் இன்று வெளிநாட்டு இன நாய்களின் மோகத்தால் *நம் நாட்டு நாய்களை தெருவுக்கு துரத்தி, தெரு நாய்களாக்கி விட்டோம்.*

நமது விவசாய நிலங்களில் நச்சுப்பாம்புகளும், தேள்களும், வேறு பல விஷ ஜந்துகளும் உள்ளன. இவற்றில் இருந்து விவசாயிகளை பெரிதளவும் காத்து வந்திருப்பவை பட்டி நாய்கள்தான். முன்பு விவசாயிகள் தங்கள் தோட்டத்துக்கு செல்லும்போது பட்டி நாய்கள் அவர்களுக்கு முன்னால் நடந்து செல்லும். பாம்புகள் வந்தால் அவற்றின் குரைப்பு சத்தம் வித்தியாசமாக இருக்கும். அதை விவசாயிகள் உணர்ந்து, தங்களை காத்துக்கொள்வார்கள். எல்லா விதமான விஷ ஜந்துக்களையும் நாய்களுக்கு அடையாளம் தெரியும். அவைகளை தங்கள் எஜமானர் அருகே அணுக விடாமல் பார்த்துக்கொள்ளும். அதுபோலவே மாட்டுப்பட்டிகளை காவல் காக்கும் இந்த நாய்கள், மாடுகளை எந்த ஜந்துவும் அணுகாமல் பார்த்துக் கொள்ளும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் ஒரு உயர் போலீஸ் அதிகாரி இருந்தார். அவருடைய மனைவிக்கு வெளிநாட்டு நாய்கள் மீது கொள்ளை பிரியம். வீட்டில் 14 நாய்கள் வளர்த்து வந்தார். அந்த நாய்களுடன் ஒரே ஒரு நாட்டு நாயை, அந்த அதிகாரி விரும்பி வளர்த்து வந்தார். ஆனால் அந்த நாயை அவருடைய மனைவிக்கு கொஞ்சமும் பிடிக்காது.

ஒருநாள் இரவில் அவரது வீட்டுக்குள் திருடர்கள் புகுந்து விட்டனர். நாட்டு நாயுடன் சேர்த்து 15 நாய்களும் சுற்றிக்கொண்டன. திருடர்கள் சாமர்த்தியமாக மயக்க பிஸ்கெட்டை தூக்கி வீசினார்கள். அனைத்து நாய்களும் ஓடிச்சென்று பிஸ்கெட்டுகளை தின்று விட்டு சாப்பிட சிறிது நேரத்திலேயே மயங்கி விட, திருடர்கள் போட்ட பிஸ்கெட்டை சாப்பிடாத நாட்டுநாய் பாய்ந்து அவர்களை தாக்கியது. இதில் நிலை தடுமாறிய திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். நாயின் குரைப்பு சத்தம்கேட்டு அந்த அதிகாரி வெளியே வந்து பார்த்தபோது வெளிநாட்டு நாய்கள் மயக்கத்தில் கிடந்தன. நாட்டு நாய் மட்டுமே கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. காரணம், *நாட்டு நாய்கள், முன்பின் தெரியாதவர்கள் போடும் உணவுகளை உண்பதில்லை.*

வீட்டை மட்டுமல்ல, ஒரு கிராமத்தையே கட்டிக்காக்கும் திறன் பட்டி நாய்களிடம் உண்டு.

*இப்போது தெரு நாய்களாக்கப் பட்ட பின்பு கூட, அந்த வீதியில் தினமும் வந்து செல்பவர்களை தவிர இரவு நேரத்தில் புதிய நபர் ஒருவர் வந்தால் அதை பார்த்ததும் நாட்டு நாய் உடனடியாக குரைக்கும்.*

அதைத்தொடர்ந்து ஆங்காங்கே நிற்கும் நாய்களும் குரைக்கும். இப்படி தகவலை பரப்பி, ஒருசேர உஷாராக்கி தகவலை பரப்பும் ஆற்றல் நாட்டு நாய்களுக்கு மட்டுமே உண்டு. வேட்டிக்கட்டிக்கொண்டு செல்லும் நபர்களை பார்த்து பெரும்பாலும் நமது பட்டி நாய்கள் குரைப்பதில்லை. காரணம், வேட்டி கட்டியவன் தன்னை தாக்க மாட்டான் என்பது பட்டி நாய்களின் ஜீனில் பதிவாகி இருக்க வேண்டும்.

*இன்று நாம் கொண்டாடும் வெளிநாட்டு நாய்களின் மூலம் ஆஸ்துமா, சைனஸ் நோய்கள் உருவாகும். தொற்று நோய்கள் பரவும்.* குளிர் பிரதேசத்தில் வாழும் தன்மை கொண்ட அவைகளை, அதற்கேற்றபடி பராமரிக்கவும் வேண்டும். ஆனால், வெப்ப நாடுகளின் காலநிலைக்கு தகுந்தாற்போல *நம்மோடு வாழும் பட்டி நாய்களால் எந்த நோயும் பரவாது. அவை நோயால் பாதிக்கப்பட்டால் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு தானாகவே சென்று செத்துவிடும் அறிவாற்றல் கொண்டது.*

*கிராமங்களில் நாய் வளர்த்தவரின் வீட்டில் ஒருவர் உடல்நலமில்லாமல் இறக்கும் தருவாயில் இருந்தால், அவருக்கு பதிலாக நாய் தனது உயிரைக்கொடுத்து காப்பாற்றும் என்பார்கள்.*
எனவேதான் காலபைரவரின் வாகனமாக பட்டி நாய் அமைக்கப்பட்டு உள்ளது.

பட்டி நாய்களை சற்று உற்றுநோக்கி கவனியுங்கள். அது ஒவ்வொரு சூழலிலும் வெவ்வேறு விதமாக குரல் எழுப்பும். சிறு குழந்தைகளை கடிக்காது. பாதுகாப்பற்ற சூழலில் வீட்டைவிட்டு வெளியே செல்லும் குழந்தைகளை பார்த்தால் குரைத்து மிரட்டி மீண்டும் வீட்டுக்குள் வரும்படி செய்துவிடும். இதற்கு காரணம், முன்பு பட்டியில் இருந்து தொலைந்து போகும் கன்றுகளை, பட்டி நாய்கள்தான் தேடிக் கண்டுபிடித்து திரும்ப கொண்டு வந்து சேர்க்கும். கால்நடைகளுக்கும், மக்களுக்கும், விவசாயத்திற்கும் நாட்டு நாய்கள் காவல் அரணாகும்.

நமது கலாசாரத்தோடும், வாழ்வியல் ஆதாரங்களோடும் பின்னிப் பிணைந்த பட்டி நாய்களை பாதுகாப்பது நம் சமூக கடமை” என்கிறார், ஆய்வாளர் பொன் தீபங்கர்.

தேள் மற்றும் விஷ பூச்சிகளை பட்டி நாய்கள் எந்த பயமுமின்றி கடித்து தின்றுவிடும். பாம்புகளையும் எதிர்த்து நின்று கடித்து விரட்டும். *நாட்டு நாய்கள் விஷப்பாம்புகளையும் கடித்து கொல்லும் ஆற்றல் கொண்டவை மட்டுமல்ல, பாம்புகள் கடித்தாலும் அவற்றுக்கு எளிதில் மரணம் ஏற்படாது.*

ஏன் என்றால் உடனே அதற்குரிய பச்சிலையை தேடிச் சென்று கடித்து தின்றுவிட்டு, தரையில் மல்லாந்து படுத்துக்கொள்ளும். யோகாசனத்தில் சவாசனம் என்பார்களே அதுபோல எந்த அசைவும் இல்லாமல் சில மணி நேரம் கிடக்கும். நாம் பார்த்தால் கூட அது செத்து விட்டதோ என்று தான் தோன்றும். அருகில் சென்று பார்த்தால்தான் அதன் உடல் அசைவு தெரியும். ஏன் அது அப்படி கிடக்கிறது என்றால், பாம்பின் விஷம் தலைக்கு ஏறி மூளையில் கலந்து விட்டால் உயிரிழப்பு ஏற்பட்டு விடும்.

எனவேதான் அறிவுள்ள அந்த நாய்கள் சவாசனம்போல படுத்துக்கொள்கின்றன. அப்படி படுத்துக்கொள்ளும்போது, ரத்தம் இயற்கையாகவே சிறுநீரகத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு விஷம் சிறுநீராக வெளியேறும். சிறுநீர் வெளியேறியதும் எந்த பிரச்சினையும் இல்லாமல் அது தொடர்ந்து தனது காவல் பணியை செய்யும்...

கிருஷ்ணர் முதன்முதலாக வெண்ணெய் திருடிய கதை


கிருஷ்ணர் முதன்முதலாக வெண்ணெய் திருடிய கதை

கிருஷ்ணர் முதன்முதலாக வெண்ணெய் திருட ஆரம்பித்த கதை மிகவுமே சுவாரசியமானது. கிருஷ்ணர் குழந்தையாக இருக்கும்போது தாய் யசோதை கிருஷ்ணருக்கு அவ்வப்போது சிறிது வெண்ணெய் தருவாள். இதன் சுவை கிருஷ்ணருக்கு மிகவுமே பிடிக்கின்றது. வெண்ணெய் எங்கிருந்தோ வருவதால்தான் அம்மா நமக்கு சிறிதளவே வழங்குகின்றாள் என்று கிருஷ்ணர் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் ஒருமுறை கிருஷ்ணரும் பலராமரும் தவழ்ந்தவாறு விளையாடிக் கொண்டே ஒரு அறையின் பக்கமாக சென்றனர். அந்த அறை இருட்டாக இருப்பினும் உள்ளே சென்ற அவர்கள் பானைகள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதில் என்ன இருக்கின்றது என்ற ஆவலில் அதனைப்பிடித்துக் கொண்டு எழுந்துநின்று, பானைக்குள் கைவிட, அது வெண்ணெயால் நிறைந்திருப்பதைக் கண்டு வியப்புற்று அள்ளி அள்ளி உண்டார்கள். இவ்வளவு வெண்ணெயை வைத்துக் கொண்டு அம்மா நமக்கு சிறிது சிறிதாகத்தானே தருகின்றாள் என்று எண்ணியாறு விளையாட்டையும் மறந்து வெண்ணெயை உண்டு கொண்டிருந்தார். அச்சமயத்தில் குழந்தையை தேடிக்கொண்டு அங்கே வந்த யசோதை கிருஷ்ணர் அணிந்திருந்த ஆபரணங்களின் ஒளியில் வெண்ணெய் மயமாக இருப்பதைக் கண்டார். என்ன கிருஷ்ண வெண்ணெய் திருடி உண்கின்றாயா என்றாள். உடனே கிருஷ்ணர் என்ன சொல்வதென்று தெரியாமல் இல்லையம்மா நீங்கள் என்னை உடல் முழுவதும் ஆபரணங்களால் நிரப்பியுள்ளீர்கள், இந்த ஆபரணங்கள் எனது உடலை மிகவுமே சூடுபடுத்துவதால் அதனை தணிக்கவே வெண்ணெய் பானைக்குள் கைவிட்டு குளிர்ச்சி செய்துகொண்டேன் என்றாள். உடனே அவள் உனது கன்னம் மற்றும் வாயில் வெண்ணெய் நிரம்பியுள்ளதே அது எப்படி என்றாள். மாட்டிக்கொண்டோமே என்று நினைத்த கிருஷ்ணர் இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று நினைத்தவர், இந்த அறையின் இருட்டில் எறும்புகள் என்மேல் ஏறியதே தெரியவில்லை, எறும்புகள் எனது கன்னத்தை கடித்தபோது, எனது வெண்ணெய் கையுடன் அதனை தள்ளிவிட்டேன், அதனால்தான் கன்னம் முழுவதும் வெண்ணெயாக இருக்கின்றது அம்மா என்றார். அடடா எனது கண்ணனை நானே தவறாக நினைத்துவிட்டேனே என்றவாறு அன்புடன் தூக்கியணைத்து கொண்டாள். அப்போதுதான் கிருஷ்ணர் ஆஹா விருந்தாவனத்தின் புத்திசாலி பெண்மணியான எனது அன்னையையே நான் ஏமாற்றிவிட்டேன் என்கின்றபோது இனி யார் வீட்டில் வேண்டுமானாலும் எளிதாக வெண்ணெய் திருடலாம் என்று முடிவு செய்தார். இவ்வாறாக கிருஷ்ணர் முதன்முதலாக தனது நவநீத சோரத்தை அதாவது வெண்ணெய் திருடிய லீலையை மிக அழகாக அரங்கேற்றினார்.

#பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம்

#பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம்

*ஜீன் 1ம் தேதியன்று புதிய பாலிசிஆண்டு தொடங்குவதால் இதுவரை இந்த திட்டத்தில் இணையாதவர்கள் அவரவர் வங்கி கிளைக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொடுத்து  காப்பீட்டுதிட்டத்தில் இணையவும்.*

ஏற்கனவே இத்திட்டத்தில் இணைந்தவர்கள் இந்த மேமாத இறுதியில் அதற்கான கட்டணம் உங்கள் வங்கிகணக்கில் எடுக்கப்படஉள்ளதால் தேவையான பணஇருப்பு உள்ளதாஎன பார்த்துக்கொள்ளவும்.
________________________

*பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம்...ஒரு விளக்கம்.*

படித்தால் மட்டும் போதாது.மக்களுக்கு பகிரவும் செய்யணும்.

இந்த காப்பீட்டு திட்டம் இரு விதமாக செயல் படுத்தப் படுகிறது.

*ஒன்று விபத்து காப்பீடு மற்றொன்று ஆயுள் காப்பீடு.*

இரண்டிற்க்கும் தனித்தனியாக இரண்டு லட்ச ரூபாய் காப்பீட்டு தொகை உண்டு. மொத்தம் நான்கு லட்ச ரூபாய்.ஒருவர் இரண்டையும் சேர்த்து எடுக்கலாம் அல்லது எது வேண்டுமோ அதை மட்டும் எடுக்கலாம்.

வங்கி வாடிக்கையாளர்கள் அவரவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி மூலம் அல்லது அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு மூலம் மட்டுமே எடுக்க முடியும்.

விபத்து காப்பீட்டிற்க்காக ஆண்டுக்கு 12 ரூபாயும் ஆயுள் காப்பீட்டிற்க்காக ஆண்டுக்கு 330 ரூபாயும் ஒருவரிடமிருந்து கட்டணமாக வசூலிக்கப்படும்.இது ஒரு குழுகாப்பீடு என்பதால் யாருக்கும் தனியாக பாலிசி சான்றிதழ் தரப்பட மாட்டாது. மேலும் இது செயல்படுத்தபடும் காலம் ஜீன் 1 ம் தேதியிலிருந்து மே31 ம் தேதி வரையாகும். ஆனால் ஒருவர் எப்பொழுது வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணையலாம்.

ஒருமுறை ஒருவர் தேவையான படிவத்தை நிரப்பி கொடுத்து இத்திட்டத்தில் சேர்ந்து்விட்டால் ஒவ்வொரு ஆண்டும் அவரது கணக்கிலிருந்து காப்பீட்டு கட்டணம் தானாகவே கழித்துக் கொள்ளப்படும். ஒருவர் ஒரு வங்கி மூலம் மட்டுமே இதில் சேர வேண்டும். இறப்பு உரிமை (Death claim)ஒரு வங்கியில் மட்டுமே கோர முடியும்.
ஒருவர் திட்ட ஆரம்பத்தில் நிரப்பி தரும் படிவத்தில் பயனாளியின்
(Nominee) பெயரை குறிப்பிட வேண்டும்.

*விபத்து காப்பீட்டில் 18 வயது முதல் 70 வயது வரையிலும் ஆயுள் காப்பீட்டில் 18 வயது முதல் 50 வயதுவரை ஆண் பெண் இருபாலாரும் சேரலாம்.ஆயுள் காப்பீட்டை 55 வயது வரை தொடரலாம்.இத்திட்டத்தில் முதிர்வு தொகை என்று எதுவும் வழங்கப்பட மாட்டாது.*

*விபத்தினால் இறப்பு என்பது சாலை விபத்து மட்டுமல்ல பாம்பு கடித்து இறந்தாலும் விபத்துதான் படியில் தவறி விழுந்து இறந்தாலும் விபத்துதான்.விபத்தினால் ஏற்படும் ஊனத்திற்க்கும் இழப்பீடு உண்டு.*

*ஆயுள் காப்பீடு என்பது ஒருவர் எப்படி இறந்து போனாலும் காப்பீட்டு பணம் உண்டு.பாலிசியில் சேர்ந்த முதலாமாண்டில் மட்டும் தற்கொலை ஏற்கப்படாது.*

*மொத்தம் ஆண்டிற்க்கு 342 ரூபாய்க்கு நான்கு லட்ச ருபாய் காப்பீடு இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கிறது.*

ஒருவர் எந்த வங்கியில் இத்திட்டத்தில் சேர்ந்திருக்கிறார் என்று குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லி வைக்க வேண்டும். ஏனென்றால் ஒருவரது வங்கி கணக்கிலிருந்து கட்டணம் கழிக்கப் படுவது மட்டுமே ஆதாரம்.

நாம் அனைவரும் இத்திட்டத்தில் சேருவதோடு இல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களையும் சேர தூண்ட வேண்டும்.

நம்மால் முடிந்த ஏழைகளுக்கு நாமே வங்கி கணக்கு தொடங்கி தந்து கட்டணத்தையும் செலுத்தி இத்திட்டத்தில் சேர்க்கலாம். பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா மூலம் இருப்பு வைக்க வேண்டிய அவசியமில்லாத (0 Balance) வங்கி கணக்கு துவக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் ஏழைகளுக்கு கிடைத்த ஒரு வரப் பிரசாதமாகும்.

எளியோருக்கான உருப்படியான திட்த்தை மக்களுக்கு விளக்குவதும்,சேர்ப்பதும் தேசப்பணி என்பதை நாம் உணர்வோம்.
நன்றி.

*ஆளுக்கு ஒரு ஷேர்செய்து மக்களுக்கு தகவல் சென்றடைய உதவுவோம்*

நம்ம வாங்குற பிரெட் நல்லதான்னு எப்படி தெரிஞ்சிக்கிறது?...


நம்ம வாங்குற பிரெட் நல்லதான்னு எப்படி தெரிஞ்சிக்கிறது?...
   
இன்றைய பரபரப்பான அவசர உலகில் ஓட்ஸ், பிரெட் ஆகியவை தான் பிரதான காலை உணவுகளாகிவிட்டன.

அதனால் நாமும் அவற்றை கடைகளில் அப்படியே எதையும் கவனிக்காமல் வாங்கி வந்துவிடுகிறோம். ஆனால் நாம் பிரெட் வாங்கும்போது வேறு என்ன மாதிரியான விஷயங்களையெல்லாம் பார்த்து வாங்க வேண்டும்?

ஒயிட் பிரெட் நல்லதா? இல்லை பிரௌன் நல்லதா என்ற குழப்பத்திலேயே பலரும் இரண்டு வகை பிரெட்டையும் வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் இனிமேலாவது பிரெட் வாங்கும்போது கீழ்வரும் சில விஷயங்களை கவனித்து வாங்குங்கள்.

முழு தானியங்கள் அடங்கிய பிரெட்டைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். கடைகளில் வாங்கும்போது ஃபுல் கிரெய்ன் என்று போடப்பட்டிருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்

அத்தகைய ஃபுல் கிரெய்ன் பிரெட்டுகளில் தான் நார்ச்சத்து, புரதம், வைட்டமின், மினரல்கள் ஆகியவை இடங்கியுள்ளன.  இப்போது பருப்பு வகைகள், பிரௌன் அரிசி, கோதுமை, பார்லி, ஓட்ஸ் ஆகியவை அடங்கிய பிரெட்டகள் இப்போது கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி சாப்பிடலாம்.

ஒயிட் பிரெட் வாங்குவதை முதலில் தவிர்த்திடுங்கள். அவை முழுக்க முழுக்க மைதாவினால் செய்யப்பட்டிருக்கும்.

பிரெட் வாங்கும்போது அது 100 சதவீதம் முழுதானியம் என்று முத்திரை இடப்பட்டிருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள்.

அந்த லேபிள் இருந்தால் நீங்கள் வாங்கும் பிரெட்டில் 16 வகையான பருப்பு வகைகளும் தானியங்களும் அடங்கியுள்ளன என்று அர்த்தம்.

லேபிள் இல்லையென்றால் அதில் வெறும் 50 சதவீத சத்துக்கள் மட்டுமே அடங்கியுள்ளன.

நீங்கள் வாங்கும் பிரெட்டுகளில் நார்ச்சத்துக்கள எவ்வளவு நிரம்பியுள்ளன என்று பார்க்க வேண்டும். குறைந்தது 3 தானியங்களாவது இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். ஏனெனில் அவை உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

பிரெட்டில் ஈஸ்ட் கலக்கப்படுவதால் விரைவில் கெட்டுப்போகும் தன்மையுடையது. அதனால் தயாரித்த தேதியைப் பார்த்து வாங்குவது மிக அவசியம். எந்த பிரெட்டாக இருந்தாலும் ஒரு வாரத்துக்கும் மேல் வைத்துப் பயன்படுத்தக் கூடாது.

சனி, 23 மே, 2020

நம் நாட்டின் கோரொனா எண்ணிக்கை 100 இருந்த போது மக்களிடமிருந்த பயம், இன்று 1,00,000 ஐ தாண்டிய போது இல்லையே..

நம் நாட்டின் கோரொனா எண்ணிக்கை 100 இருந்த போது மக்களிடமிருந்த பயம்,   இன்று 1,00,000 ஐ தாண்டிய போது இல்லையே..

மனிதனின் உளவியல் ரீதியாக பார்த்தால் இதற்கு விடை கிடைக்கும். "குப்ளர் ரோஸ் மாடல் " என்று ஒரு தத்துவம் உள்ளது. அதாவது, மனிதனுக்கு எதேனும் துக்க நிகழ்வு, இயற்கை பேரிடர், விபத்து  போன்றவை நடக்கும்போது அவன் 5 கட்டங்களை கடந்து செல்கிறான். அவை,
1.Denial
2.Anger
3.Bargain
4.Depression
5.Acceptance

1.Denial - அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்பதை  நம்ப மறுப்பது. உதாரணத்திற்கு நமக்கெல்லாம் கோரொனா வராது என்று மறுத்தது. அப்படியே வந்தாலும்,  நமது ஊர் வெயிலில் அது பரவாது என்று  மீண்டும் மறுத்தது ( நான் உட்பட)

2.Anger-கோபம் கொள்வது. உதாரணத்திற்கு , ஊரடங்கு போட்டு விட்டார்களே, வருமானம் பாதிக்குமே, இயல்பு வாழ்க்கை கெட்டு விட்டதே என்று கோபம் கொண்டது.

3. Bargain- கொரோனா  வராமல் இருந்திருக்கலாமே , ஊரடங்கு உத்தரவு போடாமல் விட்டிருக்கலாமே என்று உள்ளுக்குள் புலம்புவது.

4. Depression- இப்படி ஆகிவிட்டதே என்று மன அழுத்தம்,  மனச்சோர்வு அடைவது.

5. Acceptance - கடைசி கட்டம்.  வேறு வழியில்லாமல் , அதை ஏற்றுக்கொள்வது. உதாரணம் : கொரோனாவுடன்  வாழ பழகிகொண்டது 😂😂

இந்த 5 நிலைகள் , கொரோனாவிற்கு மட்டுமல்ல. மனித வாழ்வில் உண்டாகும் அனைத்து பிரச்சினைகளக்கும்  பொருந்தும்.

புத்திசாலி என்ன செய்வான் ?
முதல் நிலையிலிருந்து நேராக ஐந்தாம் நிலைக்கு சென்று விட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைவான்.

ஐந்தாம் நிலைக்கு செல்லமுடியாமல்  சிக்கிக்கொள்பவன் மனநோயாளியாகிறான் !

Dr. பிரகாஷ் மூர்த்தி MBBS,MD, மன்னார்குடி.

வெள்ளி, 22 மே, 2020

கருஞ்சிறுத்தை


#உயிரினங்களை_அறிவோம்
#கருஞ்சிறுத்தை

கருஞ்சிறுத்தை மிகவும்  அபூர்வமானவை, அவைகளை பார்க்கவே முடியாது என்பது நம் எண்ணம். அது ஒருவகையில் உண்மையானாலும் கருஞ்சிறுத்தை என்பது தனி இனம் அல்ல, நிறக் குறைபாடு உள்ள சிறுத்தையே.
இன்னும் சொல்லப்போனால் தானொரு கருஞ்சிறுத்தை என்பது அதற்கே தெரியாது (விலங்குகள் பெரும்பாலும் நிறங்களை பிரித்து அறியாதவை).

அருகில் நோக்கினால் அவை முழுவதும் கருப்பாக இல்லாமல் மற்ற சிறுத்தைகளுக்கு இருப்பதைப்போல கருப்பு புள்ளிகள் தெரியும். இதற்கு முக்கியக்காரணம் உடலில் சுரக்கின்ற மெலனின் என்ற நிறமி. இவை அதிக அளவில் சுரக்கும்போது தோலின் நிறம் அடர் நிறத்திலும், குறைவாக சுரக்கும்போது வழக்கமான நிறத்தில் இருக்கும் விலங்குகள் தோல் வெளுத்தும் (Albino) காணப்படும்.

அல்பினோக்கு உதாரணம் வெள்ளை நிற புலிகள், வெள்ளை நிற மயில் (இவை நம் மதுரை திருப்பரங்குன்றத்தின் தென் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தன, தற்போது காண்பது அரிதாகி விட்டது.) சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் வண்டலூரிலும் காணலாம்.

கருஞ்சிறுத்தைகளின் இனப்பெருக்கம் என்பது வழக்கமாக நாம் பார்க்கும் சிறுத்தைகளுடனேயே இருக்கும். இவற்றின் பெற்றோரும் நாம் வழக்கமாக பார்க்கும் சிறுத்தைகளாகவே இருக்கும்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில், கர்நாடகத்தின் நாகர்ஹோலே, கபினி, பந்திப்பூர் புலிகள் காப்பகங்கள், குதிரைமூக்கு, கேரளத்தின் அமைதிப் பள்ளத்தாக்கு, இரவிக்குளம் தேசியப் பூங்காக்கள், பரம்பிக்குளம், பெரியார் புலிகள் காப்பகங்கள் போன்ற அடர்ந்த காட்டுப் பகுதிகளில் இவை காணப்படுகின்றன.

தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை, முதுமலை, ஆனைமலை புலிகள் காப்பகங்கள், கோவை வெள்ளியங்கிரி மலை, நீலகிரி மற்றும் சிறுவாணி அணையை ஒட்டியிருக்கும் அடர்காடுகளில் இவை காணப்படுகின்றன.

வனவிலங்குகளை பாதுகாப்பதும் நம் பிள்ளைகள் தலைமுறையினருக்கு வழங்குவதும் நமது கடமையாகும்!

இட்லி, தோசை கடை மாவு: ஒரு ஸ்லோ பாய்ஸன் !


இட்லி, தோசை கடை மாவு: ஒரு ஸ்லோ பாய்ஸன் !

என்ன தலைப்பைப் பார்த்து பயந்துவிட்டீர்களா, ஆம் இது பெரிய உண்மை.
மைதாவினால் செய்த பரோட்டா, அதில் உள்ள கெமிக்கல் உடம்புக்கு நல்லது அல்ல என கொஞ்ச நாளுக்கு முன் ஃபேஸ்புக்கில் பெரியளவில் ஷேர் செய்யபட்ட ஒரு பதிவு. இப்போது தென் இந்தியாவின் மிக முக்கியமான உணவான இட்லி தோசை பற்றி வந்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை இட்லி, தோசை போன்றவை அன்றாடம் நம் வீடுகளில் செய்யப்படும் ஒரு உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடம்பு சரி இல்லை என்றால் 'சாப்பிட கொடுங்க' என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் இட்லி தான். ஆனால் இப்போது இதிலும் (மாவிலும்) ஆபத்து இருக்கிறது என்றால் எப்படி என்பதை தொடர்ந்து படியுங்கள்.


இட்லியை நீங்கள் வீட்டில் மாவரைத்து சாப்பிட்டால் பிரச்சினை கொஞ்சமும் இல்லை. இதையே கடையில் வாங்கி சாப்பிட்டால் பல பேருக்கு ஒத்து வராது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி அதில் என்னத்தான் பிரச்சினை என்கிறீர்களா, இட்லி தயாரிக்க பயன்படும் மாவை பற்றி தான் இந்த கட்டுரை.
ஆம் முன்பு நாம் ஆட்டுரலில் மாவு அரைத்தோம், பின்பு அது மிக்ஸி மற்றும் கிரைண்டர் என்றானது. அதுவும் பரவாயில்லை வாழ்க்கை மாற்றங்களின் காரணத்தால் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகிபோனது. ஆனால் தற்போது ஒரு முக்கிய திருப்பு முனையாக இட்லி தோசை மாவு ரெடியாக இப்பொழுது பட்டிதொட்டி, அண்ணாச்சி கடை முதல் பெரிய சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது. மக்களும் வீட்டில் இட்லி மாவு அரைப்பதையே மெல்ல மறந்து வருகின்றனர்.
முன்பாவது திடீர் டிபன் என்றால் ரவா உப்புமாதான். இப்பொழுது நம்ம வாண்டுகளிடம் "தம்பி ஓடி போய் தெருமுனை கடையில ஒரு பாக்கெட் இட்லி தோசை மாவு வாங்கி வா" அப்படின்னு வாங்கி வந்த அந்த மாவை இட்லி தோசை ஊத்தியது போக மிச்சத்தை ஃபிரிஜ்ஜில் வைத்து அது தீரும்வரை போகும். பேச்சலர்ஸ் கூட இப்ப இதைபோன்றே செய்கின்றனர். இந்த மாவில் தான் பிரச்சனை இருக்கிறது.
1. நீங்கள் வாங்கும் எந்த ஒரு வெட் ஃப்ளோர்-Wet Flour (ஈர பத தோசை மாவிற்க்கு) ஐ எஸ் ஐ-ISI சான்றிதல் கிடையாது. அதனால் இது எந்த ஒரு ஆராய்ச்சி கூடத்திலும் சோதனை செய்யபடவில்லை.
2. இந்த மாவை அரைக்க மட்டமான அரிசியும் உளுந்தும் பயன்படுத்தபடுகிறது. முக்கியமாக முன்பு புண்ணுக்கு போட பயன்படும் போரிங் பவுடர் மற்றும் ஆரோட் மாவு போன்றவற்றை இதில் போடுவதால் மாவில் புளிப்பு வாசனை இருக்காது. மேலும் மாவும் நன்றாக பொங்கி நிறைய வரும் என்பதால் இதை செய்கின்றனர். வீட்டில் அரைத்த மாவை ரெண்டு நாள் வைத்து மூணாவது நாள் முகர்ந்து பார்த்தால் புளிப்பு வாசனையும் வரும் தோசையும் புளிக்கும். ஏன் என்றால் மாவு பக்குவமாவதும் தயிர் உறைவதும் ஒரு நல்ல பேக்டீரியாவின் செயலாகும். புளிப்பதை தவிர்க்க தான் கடையில் வாங்கும் மாவில் கண்டதையும் சேர்க்கிறார்கள்.
3. முக்கியமாக இந்த கிரைண்டர்கள் கமர்ஷியல் ரகம் இல்லை. அதாவ்து ஒரு நாளைக்கு 3 - 6 மணி நேரம் அரைக்க முடியும். ஆனால் இவர்கள் 12- 18 மணி
நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஆகிறது, சிறு துகள்கள் மாவிலும் விழலாம்.ஒரு நல்ல கிரைண்டர் கல்லின் ஆயுள் ஒருநாளைக்கு 12 மணி நேரம் அரைத்தால் வெறும் 6 மாதம் தான். கல்லை கொத்தி போட்டாலும் அடுத்த மூணு மாதம் தான் மேக்ஸிமம்.
4. மேலும் சமையல் செய்யும் ஆட்கள் தங்கள் கைகளை அடிக்கடி அலம்ப வேண்டும். நகங்கள் வளர்க்கவே கூடாது. ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு சுத்ததையும் இவர்கள் பேணுவதில்லை. ஒவ்வொரு நகத்தின் இடுக்கிலும் உள்ள கெட்ட பேக்டிரியாக்கள் மற்றும் கிருமிகள் ஈஸியாக சேர்ந்து விடுகிறது மற்றும் வாந்தி பேதி அடிக்கடி உடம்பு முடியாமல் போவதற்க்கு இது தான் காரணம்.
5. மேலும் இவர்கள் கிரைண்டரை ஒவ்வொரு மாவு அரைத்து முடிந்ததும் கழுவுவதில்லை அதனால் அந்த கிரைண்டரில் கிருமி அதிகரித்து கொண்டே செல்கிறது.
இவர்கள் கமர்ஷியலாக பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் வென்னீர் (Hot Water) ஊற்றி தான் சுத்தம் செய்ய வேண்டும் ஆனால் இவர்கள் ஒரு வாரத்திற்கு ஒரு முறை கழுவினாலே அதிகம், மாவு பொருட்களினால் எலிகள் மற்றும் பூச்சிகள் அந்த மிச்ச மாவை ருசித்து அந்த மிஷினின் சுத்தத்தன்மையை கெடுத்துவிடுகிறது.
6. என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீர் தான் ஊற்றீ மாவு அரைக்க வேண்டும். இவர்கள் எந்த தண்ணீரை உபயோகப்டுத்துகின்றனர் என்பது தெரியாது. இவர்கள் போர் தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரை உபயோகிக்கலாம்.
7. அந்த கால ஃபார்முலா படி நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கை ஆன்டி பயாடிக், உடம்பு உஷ்ணம் , வாய் நாற்றம், அல்சர்க்கு இது ஒரு நல்ல பொருள் ஆனால் இவர்கள் யாரும் வெந்தயத்தை உபயோகிப்பதில்லை.
8. கிரைன்டரில் மாவு தள்ளிவிடும் அந்த ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆறு மாதத்திற்க்கு அல்லது வருடத்திற்க்கு ஒரு முறை மாற்ற வேன்டும் ஆனால்
இவர்கள் அதை மாற்றவே மாட்டார்கள், அதனால் அந்த பிளாஸ்டிக் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து அதுவும் இந்த மாவில்தான்...!!
9. கிரைண்டர் ஓடும்போது நடுவில் இருக்கும் குழவியை ஒரு செயின் இணைக்கும். அந்த செயினை இவர்கள் கழட்டி விட்டு ஒரு பெல்ட்டை மாட்டி இருப்பார்கள். இதனால் அரைக்கும் போது சத்தம் வராமலும் மாவை அடிக்கடி கையால் தள்ளிவிட தேவையும் இருக்காது என்பதற்காகத்தான். நாளடைவில் அந்த கார்பன்பெல்ட் தண்ணீர் பட்டு அந்த பெல்ட் துகள்களும் இந்த மாவில்தான் விழும்.
10.இந்த மாவை இவர்கள் அரைத்து கடைக்கு பிளாஸ்டிக் பேக் மூலம் சப்ளை செய்கின்றனர். நம்ம ஊர் கிளைமேட்டுக்கு இதை ஃப்ரீஜரில் தான் வைக்க
வேண்டும் அப்பொழுது தான் இந்த மாவில் பாக்டீரியாவின் உற்பத்தியை கட்டுபடுத்த முடியும், ஆனால் நம்மூர் பாதி கடைகளில் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் இப்ப இருக்கிற மின்சார கட் பிரச்சனையில் இந்த மாவு கண்டிப்பாக கெட்டுவிடுகிறது.
கடைகளில் ஸ்டாக் வைத்திருக்கும் இட்லி தோசை மாவில், ஹைட்ரஜன் சல்பைட் உருவாக்கும் பாக்டீரியாக்கள் இருந்தது ஆய்வுகளின் போது தெரிய வந்திருக்கிறது. மனித மலத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள்,கோலிபார்ம்(COLIFORM) பாக்டீரியாக்கள் ஹைட்ரஜன் சல்பைட் உருவாக்கும் தன்மையுடையவை. தனி மனிதனின் சுத்தமின்மையும்(PERSONAL HYGIENE),மாவு அரைக்கும்போது சேர்க்கப்படும் அசுத்தமான தண்ணீருமே அதன் காரணங்களாகும்.


இது பற்றிய முழு விபரங்களை காண (நன்றி-உணவு உலகம்)
நிறைய இடங்களில், இந்த மாவில் இப்பொழுது பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிரைச்சிகளில் காணப்படும் ஈகோலி (E-COLI) எனும் பேக்டீரியா பரவி
சிலருக்கு உடனே பிரச்சினையும் சிலருக்கு இந்த மாவுகள் ஸ்லோ பாய்ஸனாக உருவாகிற்து. இந்த ஈகோலி மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும். அதனால் தயவு செய்து இவர்கள் கொடுக்கும் 6 நாள் கியாரன்டியில் ஈரமான இட்லி தோசை மாவை கண்டிப்பாக வாங்குவதை தவிருங்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அப்படியே வாங்கினால் பிரஷானது தானா நம்பகமானது தானா என கவனித்து வாங்குங்கள்.
இதே மாதிரி சிலர் மாவரைத்து நான்கு அல்லது ஐந்து பேர் என ஷேர் செய்யும் தாய்மார்களும் இதில் கண்டிப்பாக கவனம் வைக்கவேண்டும்.

சனி, 16 மே, 2020

#பூப்பெய்திய_பெண் #குழந்தைகள்_சாப்பிட #வேண்டிய #10_பத்து #உணவுகளும் #தகவல்களும் !


#பூப்பெய்திய_பெண்
#குழந்தைகள்_சாப்பிட #வேண்டிய
#10_பத்து
#உணவுகளும்
#தகவல்களும் !

ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கையில் உடல் ரீதியாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது பூப்பெய்தும் நிகழ்வுதான். விளையாட்டுத் தனமாக துள்ளித் திரிந்த ஒரு குழந்தை, முதிர்ந்த பெண்ணாகத் தன்னை உருமாற்றிக் கொள்வதற்கான தொடக்கப்புள்ளிதான் பூப்பெய்தும் நிகழ்வு. அதனால் 'பெண் குழந்தைகள் பூப்பெய்தும்போது அவர்கள் உணவு விஷயத்திலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

"பூப்பெய்திய பெண் குழந்தைகளின் விஷயத்தில் முதலில் கண்காணிக்க வேண்டியது உடல் எடையைத்தான். பெண் குழந்தைகள் பூப்பெய்தியதும் 'சத்துள்ள உணவாகச் சாப்பிட வேண்டும்' என்று நினைத்துக் கெட்ட கொழுப்பு, கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுகளை அளவுக்கு மீறிச் சாப்பிடக்கொடுக்கிறார்கள். இதனால் சரியான எடையைப் பராமரிக்க முடியாமல், உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் எடை அதிகரிப்பதால், மாதவிடாய் தள்ளிப்போவது, தைராய்டு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.


மேலும் உடல் பருமனால் கருமுட்டை வளர்ச்சிக்குத் தேவையான ஃபாலிக்கில் ஸ்டிமுலேட்டிங் (Follicle Stimulating) மற்றும் லியூட்டினைஸிங் (Luteinizing) என்ற இரு ஹார்மோன்களும் பாதிக்கப்படும். இந்த இரண்டு ஹார்மோன்களும் பாதிக்கப்படுவதால் கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் (PCOS) உருவாகி, பிற்காலத்தில் தாய்மை அடைவதும் கேள்விக்குறியாகும்.

எனவே, ஒரு பெண் குழந்தை பூப்பெய்தியதும் உடலுக்குத் தேவையான அளவு மற்றும் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டியவது அவசியம்" என்கிறார் சித்த மருத்துவர் மல்லிகா.

♦பெண் குழந்தைகள் பூப்பெய்தியதும் கொடுக்க வேண்டிய ஆரோக்கிய உணவுகளில் சில தகவல்கள் இதோ உங்கள் பார்வையில்

1. #கறுப்பு_உளுந்து

தோல் நீக்காமல் கறூப்பு உளுந்தில் வடை, களி செய்தும், சத்துமாவாகப் பொடித்தும் சாப்பிடலாம். சத்துமாவு மற்றும் களி தயாரிப்பதற்குக் கறுப்பு உளுந்தை நன்றாக வறுத்துப் பொடித்துக் கொள்ள வேண்டும். பின் நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம். அதே மாவைக் கூழ் போன்று காய்ச்சி, நல்லெண்ணெய், காய்ந்த திராட்சை, முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம். எலும்புகள் வலுவாகவும் மற்றும் சீரான மாதவிடாய் சுழற்சிக்கு உதவும் ஈஸ்ட்ரோஜன் (Estrogen), புரோஜெஸ்ட்டிரோன் (Progesterone) ஆகிய ஹார்மோன்கள் சீராகச் செயல்படவும் கறுப்பு உளுந்து உதவும்.

2. #நல்லெண்ணெய் -

ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் செயல்பாட்டிற்கு நல்ல கொழுப்பு மிகவும் அவசியம். நல்லெண்ணெய்யில் இருந்து கிடைக்கும் கொழுப்பு, நல்ல கொழுப்பு வகையைச் சேர்ந்தது. எனவே, உணவில் அடிக்கடி நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3.#நாட்டு_முட்டை

பெண் குழந்தைகள் பூப்பெய்திய உடன் உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்தை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒன்று அல்லது இரண்டு நாட்டு முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வேண்டும். எந்த முட்டையையும் சமைக்காமல் சாப்பிடக் கூடாது.

4.#கம்பு

வறுத்த கம்பு தானியத்தைப் பொடித்து, கூழாகவோ அல்லது களியாகவோ சமைத்துச் சாப்பிடலாம். எலும்புகள் வலுப்பெறக் கம்பு உறுதுணை புரியும்.

5.#பொட்டுக்_கடலை -

பொட்டுக்கடலையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடித்து நாட்டுச் சர்க்கரைச் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம். இதுவும் எலும்பை வலுப்படுத்த உதவும்.

6.#அசைவ__உணவுகள்

மீன், ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் குறைவான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

7.#கீரை_வகைகள் -

மாதவிடாய் நாள்களில் ரத்தப்போக்கு ஏற்படுவதால், சிலருக்கு ரத்தச்சோகை வர வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க முருங்கைக் கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை மற்றும் முள்ளங்கி கீரை இவற்றில் ஏதேனும் ஒரு கீரையை வாரத்திற்கு 3 முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

8.#பாகற்காய், #சுண்டைக்காய்

சில பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் நாள்களில் ரத்தப்போக்கு சற்று குறைவாக இருக்கும். மேலும் உடலில் ரத்தத்தின் அளவும் குறைய நேரிடும். இதற்கு வயிற்றில் இருக்கும் நாக்குப் பூச்சியும் காரணமாக இருக்கலாம்.

உணவில் பாகற்காய், சுண்டைக்காய் ஆகிய இரண்டையும் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் நாக்குப்பூச்சி தொந்தரவு ஏற்படாது. மருத்துவரின் ஆலோசனையுடன் நாக்குப் பூச்சி மாத்திரைகளையும் எடுத்துக்கொள்வது நல்லது.

9.#சத்துமாவு_உருண்டை

கேழ்வரகு, கம்பு, நாட்டுச் சோளம், பொட்டுக்கடலை மற்றும் பயத்தம் பருப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்படும் சத்து மாவு உருண்டையை மாதத்திற்கு 3 நாள்கள் சாப்பிட வேண்டும். மாதவிடாய் நாள்களில் சாப்பிட்டால் அதிக அளவு பலன் பெறலாம்.

10.#கொண்டைக்கடலை -

கருப்பு அல்லது வெள்ளைக் கொண்டைக் கடலையை வாரத்திற்கு 2 முறை சேர்த்துக் கொண்டால் கர்ப்பப்பை ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

சில பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்திய அடுத்த 4 அல்லது 5 மாதங்களுக்கு மாதவிடாய் வராமல் இருக்கும்.

இதனால் பெற்றோர் பதற்றம் அடையத் தேவையில்லை.

சத்தான உணவுகளைக் கொடுக்கும்போது மாதவிடாய் சீராகும்.

சில பெற்றோர் பொறுமையாக இல்லாமல், குழந்தைகளுக்குத் தேவையற்ற மருந்து, மாத்திரைகளைக் கொடுக்கிறார்கள்.

இதன் விளைவாக ஹார்மோன்களின் செயல்பாடு குறைந்துவிடும் அல்லது அதிகரித்துவிடும்...

வியாழன், 14 மே, 2020

சர்வதேச குடும்ப தினம் மே 15 !


சர்வதேச குடும்ப தினம் மே 15 !

 சர்வதேச குடும்ப தினம்!
'நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்ற வரிக்கேற்ப குடும்பம் சமுதாயத்தின் ஆணிவேராக இருக்கிறது. நாடு நன்றாக இருக்கவேண்டும் என்றால் , ஊர் நன்றாக இருக்கவேண்டும். ஊர் நன்றாக இருக்கவேண்டும் என்றால் , வீடு நன்றாக இருக்கவேண்டும். வீடு நன்றாக இருக்கவேண்டும் என்றால் குடும்பம் நன்றாக இருக்கவேண்டும். இன்று மே 15 ஆம் தேதி உலக முழுவதும் சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது.

குடும்ப ஒற்றுமையின் முக்கியத்துவத்தை அனைவரும் உணரும் நோக்கில் ஐ.நா. சார்பில் மே 15 ஆம் தேதி சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது. இந்தத் தினம் எந்தச் சூழ்நிலையிலும் எந்த வயதினிலும், யாரும் குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

ஒருவருக்கு நல்ல குடும்பம் அமைவது என்பது அரிது. ஒருவரின் வெற்றியையோ அல்லது தோல்வியையோ தீர்மானிப்பது குடும்பம்தான். இன்றைய காலத்தில் கூட்டுக் குடும்பம் என்பது மிகவும் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகிறது. சுதந்திரம் வேண்டும் என்ற நோக்கில் பெரும்பாலானோர் தனிக் குடும்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதனால், குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுக்கும் முதியோர் இல்லாமையால்,அவர்கள் வழி தவறி செல்கின்றனர். இதுமட்டுமல்லாமல், கல்வி,வேலை, போன்ற காரணங்களால் தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழ்கின்றனர். நவீன தொழில்நுட்ப காலத்தில்,குழந்தைகள் வாட்ஸ் அஃப், ஃபேஸ்புக்கில் முழுகிக் கிடக்கின்றனர். அவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் பேச நேரம் ஒதுக்குவதில்லை. அவர்களுடைய துன்பங்களையும், சந்தோஷங்களையும் பகிர்ந்து கொள்ள மனிதர்களை விட இயந்திரங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

இளைஞர்கள், தங்கள் உறவினர்கள் அனைவரோடும் கூட சந்தோஷமாக இருக்கும் நிகழ்ச்சிகளில், கலந்து கொள்வதை தவிர்த்துவிட்டு, பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடுகின்றனர். எப்போதுமே, தனிமையில் இருப்பதால், மன அழுத்தம், வெறுப்பு, நிம்மதியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

நாம் பேசும் ஒருசில வார்த்தைகளால் குடும்பம் கண்ணாடி துண்டு போல், இரண்டாகப் பிரிகிறது. உடைந்த கண்ணாடி துண்டை ஓட்ட வைப்பது எவ்வளவு கடினமோ, அதுபோன்றுதான், பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்ப்பது. அதனால், ஒருசில வேளைகளில் நம்முடைய நாவை அடக்கிக் காப்பதும் நன்மை பயக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே மனம் விட்டுப் பேசுவதால், எத்தனைப் பெரிய காரியங்களையும் எளிதாகக் கையாள முடியும்.

அதனால், நாம் அனைவரும் நல்ல குடும்பத்தை உருவாக்குவதும், இருக்கின்ற குடும்பத்தை தக்க வைத்துக் கொள்வதும் நமது கடமையாகும். நமக்கு முன் வாழ்ந்துவிட்டுச் சென்ற முன்னோர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றி நல்ல குடும்பங்களை அமைப்போம் என உறுதிமொழி எடுப்போம்.

செவ்வாய், 12 மே, 2020

விலங்குகளில் நாய்கள் மட்டும் ஏன் மனிதர்களிடம் மிக அன்புடனும் நன்றியுடனும் உள்ளன?


விலங்குகளில் நாய்கள் மட்டும் ஏன் மனிதர்களிடம் மிக அன்புடனும் நன்றியுடனும் உள்ளன?

என்ன பண்றது அதுங்களுக்கு வேற ஏதும் தெரியாதே.

அன்பால் வீழ்ந்த விலங்கினம் நாய்...!

ஏன் “தெரு நாய்கள்” மட்டும் எங்கும் உள்ளது...?

இந்த உலகில் உள்ள அனைத்து விலங்கினங்களும் தனக்கான உணவைத் தானே தேடிக் கொள்ளும் அல்லது வேட்டையாடி உண்ணும்.

ஆடு,மாடு உள்ளிட்ட விலங்குகள் மேய்ந்து கொள்ள புற்கள், இலை தழைகள் உள்ளன.

ஆனால் இந்த நாய்கள் மட்டும் மனிதன் கொடுத்தால் தான் உணவு உண்டு உயிர் வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது.

உங்கள் வீட்டில் மணக்க மணக்க சமையல் தயாராகிக் கொண்டிருக்கும் போது உங்கள் வீட்டையே ஏக்கத்துடன் சுற்றிச் சுற்றி ஏன் வருகிறது???வீட்டிற்குள் இருந்து யாராவது வந்து அந்த உணவிலிருந்து ஏதாவதும் ஒரு சிறுபங்கை தூக்கி வீச மாட்டார்களா என ஏன் நப்பாசை கொள்கிறது..?


சாலையோரக் கடையிலோ, தள்ளு வண்டிக் கடையிலோ நீங்கள் திண்பண்டங்களை ருசித்துக் கொண்டிருக்கும் போது, கல்லைத் தவிர வேறெதாவதும் வந்து விழாதா என வெறித்து வெறித்து பார்த்து ஏன் இடையூறு செய்கிறது...?

குறிஞ்சி, முல்லை என நகர்ந்து மருத நிலத்திற்கு மனிதகுலம் இடம் பெயருகிறது. மருத நிலத்தில் ஆற்றங்கரையோரம் வயல்களை உருவாக்கி வேளாண்மை செய்து தனக்கான உணவைத் தானே உற்பத்தி செய்கிறது.

குகையில் வாழ்ந்து பழகியவன், வீடு கட்டி வாழப் பழகுகிறான். மனித நாகரீகம் பிறக்கிறது. காடுகளில் இருந்து வந்த மனிதன் இன்று நாகரீக, பொருளாதார, சிந்தனை, அறிவியல், குற்ற வளர்ச்சியில் உச்சத்தை எட்டி விட்டான்.

“தெரு நாய்களுக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்” என்ற கேள்வி இந்நேரம் உங்கள் மூளையில் கசிந்திருக்கும்...

தொடர்வோம்...

ஆதிமனிதன் முதன் முதலில் மருத நிலம் நோக்கி வரும் போதும் அவன் மட்டும் வரவில்லை. தனக்குப் பயன்படக்கூடிய, தன்னால் அடக்கி ஆளக்கூடிய காட்டு விலங்குகளான ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளையும் தன்னோடு அழைத்தே வந்தான்.

அவற்றுள் முதன்மையான விலங்கினம் “நாய்”. "ஆதி மனிதனுக்கு முதல் நண்பனே நாய் தான்”.




நரி, ஓநாய், செந்நாய் குடும்ப வகையை சேர்ந்தது தான் நாயும். அவற்றைப் போல நாயும் ஒரு வேட்டையாடும் காட்டு விலங்கு தான். அவைகளுக்கு இருந்த எல்லாக் குணமும் நாய்க்கும் இருந்தது.

ஒரு குணம் மட்டும் அதிகமாக இருந்தது. அது தான் நாயை இன்று தெருவில் அலைய விட்டிருக்கிறது. அது தான் அன்பும் நன்றியுணர்வும்….

எலித் தொல்லைகள் நமக்கு இருக்கும் வரை பூனை பாக்கியசாலி தான். ஆனால், அன்பைத் தவிர வேறு எதையுமே கொடுக்க முடியாததால் கைவிடப்பட்டுத் தெருவில் அலையும் தகுதியை நாய் பெற்று விட்டது.

வேளாண்மை நேரம் போக மீதமுள்ள நேரத்தில் முயல், காட்டுப் பூனை போன்றவற்றை மனிதன் வேட்டையாட, பொழுது போக்கிற்காக நாய் தேவைப்பட்டது.


Bayeux Tapestry, C.1073 – 1083

வீட்டைக் காவல் காக்கும் இடத்தை சி.சி.டிவிகள் நிரப்பியதால், வீட்டின் மதிப்பிற்கேற்ப சில வீடுகளில் நாய் வீட்டிற்கு உள்ளேயும், சில நாய் வீட்டிற்கு வெளியேயும் போனது. பல நாய்களுக்குத் தெருவே வீடாகிப் போனது.

உங்களோடு அதற்குப் பேச மட்டும் தான் தெரியாது. உங்கள் மொழியைப் புரிந்து கொள்ளும்,. நீங்கள் பேசுவதைப் புரிந்து கொள்ளும்.

உங்கள் நண்பர் யார், பகைவர் யார் என அதற்குத் தெரியும். உங்கள் வண்டியின் சத்தத்தை இரண்டு கிலோ மீட்டருக்கு முன்பே கணித்து வாலாட்டத் தெரியும். உங்கள் குழந்தை அழுதால் ஓடிவந்து சன்னல் ஓரத்தில் அவ்...,அவ்…,அவ்…என சிணுங்கத் தெரியும்.

உங்கள் வீட்டு வாண்டுகள் அடித்தால் திருப்பித் தாக்காமல் விளையாட்டுக் காட்டத் தெரியும்.

உங்கள் வீட்டில் அக்காவோ தங்கச்சியோ அவள் வரைந்த கோலத்தை மிதித்துவிட்டுத் திட்டு வாங்கியிருக்கும். ஆனால், அவள் திருமணமாகிச் சென்று விட்டால் மூலையில் படுத்துக் கவலைப்படும்.

வெளியூருக்குப் போய் வந்த நம்மை பார்த்ததும் முன்னங் கால்களைத் தூக்கி மாரில் வைத்துத் தாடையை நக்கும். வாலை ஆட்டிக் கொண்டு மளிகைக் கடைக்கு அம்மாவோடு கூடவே போய்வரும்.

உங்களுக்கு யார் மூலமாவதும் தீங்கா?...

ஒருகை பார்த்துவிடும். இவை அத்தனையையும் செய்ய அடைக்கலமாக ஒரு வீடு எல்லா நாய்களுக்கும் கிடைப்பதில்லை.

அப்படியானால், வீடு இல்லாத நாய்களின் நிலை???

வீடு கிடைத்தவை செல்லப் பிராணியாகி விடுகிறது.

வீடு கிடைக்காதவை சமூகத்தால் தொல்லை எனப் பார்க்கப்படுகிறது. பார்க்கும் இடமெல்லாம் கல்லடி படுகிறது.

காட்டிலிருந்து வரும்போது அது எந்த மனிதகுலத்தை நம்பி வந்ததோ, அந்த மனிதகுலம் எந்தச் சம்பந்தமும் இல்லாமல் பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.

சுற்றுலாவிற்குச் செல்லும் போது அங்குள்ள விலங்குகளுக்கு உணவு காெடுக்க வேண்டாம் எனச் சொல்வது இதற்காகத் தான்.

தெருநாய்களால் இன்று காட்டிற்குச் சென்று வாழவும் முடியாது. நாட்டிற்குள் வாழ ஆதரவும் கிடையாது. தனக்கான உணவை அடைந்து கொள்ளவும் தெரியாது.

அதனால் தான் நீங்கள் சாப்பிடும் போது தெருவில் நின்று உங்கள் தட்டையே வெறித்துப் பார்த்து நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டிருக்கிறது.

அதன் நாக்கில் இருந்து சொட்டச் சொட்ட வழிவது எச்சில் அல்ல. கைவிடப்பட்ட ஒரு விலங்கின் கண்ணீர். உங்கள் உணவைப் பரிமாறி அதைத் துடையுங்கள்.

நன்றியுடன் இருப்போம்...

திங்கள், 11 மே, 2020

உலக செவிலியர் தினம் மே 12.


உலக செவிலியர் தினம் மே 12.

செவிலியர்... இன்னொரு தாய்!

பொதுமக்களுக்கு செவிலியர்கள் (நர்ஸ்) ஆற்றி வரும் உன்னத தொண்டை உலகிற்கு உணர்த்தும் வகையில், சர்வதேச செவிலியர் தினம் (International Nurses Day ) ஆண்டுதோறும் மே 12ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் "செவிலியர்கள்" என்பது எல்லோரும் ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம். 1965-ம் ஆண்டிலிருந்து உலக செவிலியர் அமைப்பு (ICN - International Council of Nurses )இந்த தினத்தை அனுசரித்து வருகிறது.

1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) பிறந்த நாளான மே 12 ஆம் தேதியை, சிறப்பாக நினைவு கூற முடிவு செய்யப்பட்டது. அன்றைய தினத்தை நாளை சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது.

இங்கிலாந்தில் ஆண்டு தோறும் மே 12-ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) சம்பிரதாயப்பூர்வமாக இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் மூலம் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அங்கு வருகைதரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும்.இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.


’கை விளக்கேந்திய காரிகை’ நைட்டிங்கேல்!

நவீன செவிலியர் முறையை உருவாக்கியவர் இங்கிலாந்தை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல், நர்ஸ் தொழிலின் புனிதத்துவத்தை உணர்த்திய இவர் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டு சேவை செய்தார்.நர்ஸ் பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் ஆரம்பித்தார்.'கை விளக்கேந்திய காரிகை' (The Lady with the Lamp)என்று அனைவராலும் போற்றப்பட்ட இவர் ஓர் எழுத்தாளர் ஆவார்.

பிரிட்டனில் செல்வச் செழிப்பு மிக்க உயர் குடிக் குடும்பத்தை சேர்ந்த நைட்டிங்கேல், இத்தாலியின் ஃபுளோரன்ஸ் நகரில் பிறந்தார். இவர் பிறந்த இடத்தின் பெயரைத் தழுவி இவருக்குப் பெயரிட்டார்கள். கிறிஸ்தவரான இவர் தனக்கு இறைவனால் விதிக்கப்பட்ட பணியாகவே செவிலியர் சேவையை உணர்ந்தார். பெற்றோர் எதிர்ப்பை மீறி நோயாளிகளைப் பராமரிக்கும் கல்வி நெறியை மேற்கொண்டு, மூன்றாண்டுகளில் நோயாளர்களைப் பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்றார்.

அந்தக் காலத்தில் செவிலியர் சேவை ஒரு கவுரவமான பணியாகக் கருதப்படவில்லை. வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே இந்தப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்தக் காலத்தில் செவிலியர், உயர் செல்வக் குடும்பங்களில் சமையல்காரியாகவும் வேலை செய்யவேண்டி இருந்தது.

பிளாரன்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அக்கறை கொண்டிருந்தார். 1844, டிசம்பரில் லண்டனிலிருந்த ஆதரவற்றோர் விடுதியன்றில் வறியவர் ஒருவர் இறந்தது பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து பிளாரன்ஸ், ஆதரவற்றோர் விடுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணியில் நின்று வாதாடினார்.

1854-ல் கிரிமியாவைக் கைப்பற்றிய ரஷ்யாவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் போர் தொடுத்தன. கிரிமியன் போரில் பாதிக்கப்பட்டுள்ள படையினருக்கு உதவும் பொருட்டு 38 செவிலியருடன் ராணுவ மருத்துவமனைக்கு சென்றார்.

வசதி குறைவுகளுக்கு மத்தியில் ராணுவ வீரர்களுக்குச் சிகிச்சை வழங்கினார். அன்பினாலும் சிகிச்சைகளாலும் பிளாரன்ஸ் டையினரைக் குணப்படுத்தினார்.

இரவு வேளைகளில் கையில் விளக்கு ஒன்றை ஏந்திய வண்ணம் நோயாளர்களிடம் சென்று நலம் விசாரித்து மருந்துகளையும் வழங்கி வந்தார்.தங்களை காக்க 'விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு வந்த தேவதை' என ராணுவ வீரர்கள் பிளாரன்ஸைக் கவுரவித்தனர்.

மருத்துவ வசதிகளுக்கும், சுகாதார நுட்பங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த மருத்துவமனைகள் பற்றிய குறிப்புக்கள் மருத்துவத் துறையில் செவிலியர் பணிக்கான நூலாக இருக்கின்றன.

போரிலிருந்து நாடு திரும்பிய ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் சாதனைப் பெண்மணியாக வரவேற்கப்பட்டார். விக்டோரியா அரசிக்கு அடுத்தபடியாக மிகவும் அறியப்பட்ட பெண்ணாக 'பிபிசி'யினால் இனங்காட்டப்பட்டார்.

நாடு திரும்பிய நைட்டிங்கேலை இங்கிலாந்து மக்கள் கவுரவபடுத்த விரும்பினர். அவருக்கு பொன்னும், பொருளும் வழங்கினர். தனக்கு கிடைத்த பணத்தின் மூலம் ஒரு நர்சிங் பள்ளியை நைட்டிங்கேல் தொடங்கினார். இது தற்போது லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஒரு பகுதியாக, 'பிளாரன்ஸ் நைட்டிங்கேல் செவிலியர் பயிற்சிக் கூடம்' என்கிற பெயரில் இயங்கி வருகிறது.

இந்தத் தினத்தில் பிளாரன்ஸ் நைட்டிங்கேலை நினைவு கூறும் அதே நேரத்தில், உலகெங்கிலும் சேவை புரியும் செவிலியர்களின் மகத்தான பணிகளை பாராட்டுவது மிக அவசியம்.

மனம் கோணாது சேவையில் சிறந்து விளங்கும் செவிலியரை இன்னொரு தாய் என்று சொல்வது அர்த்தம் உள்ளதாகவே இருக்கும்!
Thanks Vikatan.

சனி, 9 மே, 2020

அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் !!


♥அம்மாவின் அன்புக்கு💞 நிகர் யார்?💯 🤰 அன்னையர் தின வாழ்த்துக்கள்🎈😍

🤰ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை, அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்னையின் தியாகம், பெருமையை போற்றும் வகையில் உலக அன்னையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

🤰மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று (மே 09) அன்னையர் தினம் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அம்மா என்ற வார்த்தைக்குள் எத்தனை எத்தனை அன்பும், பாசமும் நிறைந்துள்ளது. உலகமே அம்மா என்ற வார்த்தைக்கு அடிமை என்று சொன்னால் அது மிகையாகாது.

🤰அம்மா என்ற வார்த்தை களங்கம் இல்லாதது, கபடம் இல்லாதது, பாசமும், அன்பும் ததும்பியது, என்றும் உயிர்ப்புடன், உலகமே அவளாக, சுமைகளை சுமந்து குடும்பத்தின் முகவரியாக வாழ்பவள்.


வீட்டின் பணிகளை செவ்வனே செய்து..
வேலைக்கு சென்று...
குடும்ப பாரத்தை பகிர்ந்து,..
கஷ்டம் இருந்தாலும்.. துன்பம் இருந்தாலும்..
அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்..
அமைதியாக அன்புடன்..
நடந்து கொள்ளும் விதம்...
அம்மா என்ற அந்த உயிருக்குள் மட்டுமே காண முடியும்.
🤰தாயிற் சிறந்ததொரு கோவில் இல்லை என்று கூறும் பழமொழி உண்மை என்றால் அது மிகையாகாது. இவ்வுலகில் தாயை தெய்வமாக மதிப்பவருக்கு அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கும். தான் பிறந்தது முதல் ஒரு பெண்ணானவள் பல்வேறு பரிமாணங்களை பெறுகிறாள். மண்ணில் புதையுறும் வரை தன்னலம் பேணாது உழைத்துக் கொண்டே இருப்பவள் தாய்.


அம்மா !!!!....
எத்தனை உறவுகள்
இந்த உலகத்தில் இருந்தாலும்,
காலத்தின் மோதலினால்
அவை மாறுபடும் !!
ஆனால், தாயே உன் அன்புக்கு இணை இவ்வுலகில் எதுவுமில்லை...!!
🤰பிரம்மா இவ்வுலகில் உள்ள உயிர்களை படைக்கிறார் என்றால், பெண்ணும் அதே பணியை தான் செய்கிறாள் என்றால் அது மிகையாகாது.

மறுபிறவி எடுப்பவள் தாய் :

🤰பெண் என்பவள் இரு முறை பிறக்கிறாள் என்பார்கள். அதாவது அவளது தாய், தந்தைக்கு மகளாக பிறக்கும்போது ஒரு முறையும், இரண்டாவது முறை அவளது குழந்தையை பிரசவிக்கும்போது பெண் மறுஜென்மம் எடுக்கிறாள்.

🤰பிரசவம் என்பது பெண்ணுக்கு தாள முடியாத வலியை கொடுக்கும் என்றாலும் அவை அனைத்தையும் தாங்கி கொண்டு குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் அதை மறந்து விடுகிறாள்.

உயர்ந்த உள்ளம் கொண்டவள் தாய் :

🤰தான் உண்ணாமல் இருந்தாலும் தன் குழந்தை உண்ண வேண்டும் என்று நினைக்கும் ஒரே உள்ளம் தாய் தான். பார்த்து பார்த்து ஒரு குழந்தையை கருவுற்று இருக்கும் போதில் இருந்தே கண்ணை இமை காப்பதற்கு மேலாக தன் குழந்தையை பாதுகாத்து வருகிறாள்.

மின்னல் மின்னும்போது...
அம்மாவைக் கட்டி அணைக்கும்...
குழந்தைக்கு தெரிந்திருக்கிறது...!!
அம்மா அதைவிட பெரிய சக்தி என்று...!!
அன்னையர் தினமான இன்று அம்மாவை மகிழ்விக்க, ஆச்சரியப்படுத்த அவர்களுக்கு ஓய்வு கொடுத்து, பரிசளித்து, விரும்பியதை வாங்கிக் கொடுத்து அவர்களுடன் இன்று ஒருநாள் உங்கள் நேரத்தை செலவிட நீங்கள் தயாராகி இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

தாயை மதிப்போம்!!.... தாய்மையை போற்றுவோம்!!...



வருங்காலம் கடினமாகத் தான் இருக்கப் போகிறது. மனதையும்,குடும்பத்தையும் தயார் செய்து கொள்வது நன்று

வருங்காலம் கடினமாகத் தான் இருக்கப் போகிறது. மனதையும்,குடும்பத்தையும்  தயார் செய்து கொள்வது நன்று

*கொரானாவுக்கு பிறகு*

உலகம் முழுவதும் பொருளாதாரம் மிகக் கடுமையாக வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பல கம்பெனிகள், அரசாங்கங்கள், தங்களது ஊழியர்களுக்கு  சம்பளம் போடக்கூட பணம் இல்லாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலை இன்னும் ஐந்து வருடங்களுக்கு நீடிக்கும் என்று கணிக்கப்படுகிறது. கணிக்கப்படும் வானிலை வேண்டுமானால் தவறாகப் போகலாம்.  ஆனால் பொருளாதார கணிப்புகள் பெரும்பாலும் மாறுவதில்லை. அதன்படி நடக்கப் போகும் சங்கதிகள் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளன.

🚗 துபாய், அபுதாபி உள்ளிட்ட UAE ல் பணியாற்றும் 17,50,000 இந்தியர்களில் ஏறத்தாழ 30% முதல் 40% பேர் வேலை இழப்பது உறுதி. அதாவது கிட்டத்தட்ட 6 இலட்சம் பேர் - யு.ஏ.ஈ. ல் மட்டுமே வேலை இழப்பார்கள்.

🚔 சவூதியில் பணியாற்றும் 15,40,000 பேரில் வேலை இழப்பவர்கள் கிட்டத்தட்ட 5,00,000 பேர்.

🚌 இவ்வாறு குவைத், கத்தார், ஓமன், பஹ்ரைனில் வேலை இழக்க உள்ளார்கள்.

💰 எனது கணவர் அல்லது மகன்,  ஐரோப்பா அல்லது அமெரிக்காவில், ஐடி வேலையில்  இருக்கிறார்கள் பிரச்சினை எதுவும் இல்லை என்று நீங்கள் நினைக்க வேண்டாம். முதலில் வேலை இழக்கப் போவதும் அல்லது அதிரடியாக சம்பளக் குறைப்புக்கு ஆளாகப் போவதும் இவர்கள்தான். அதிக பாவம் இவர்கள்தான்.

அதனால் மேற்கண்ட இவர்கள் இந்த இன்னலை சந்திக்க தயாராக வேண்டும்.

💪 வேலை இழந்து வருபவர்களில் தமிழகத்தை சார்ந்தவர்கள் மட்டும் குறைந்த பட்சம் கிட்டத்தட்ட 3,00,000 பேர் வருவார்கள். இது 5,00,000 பேர் வரை ஆவதற்கும் வாயய்ப்புகள் உள்ளது.

சரி, இவர்கள் இனி என்ன செய்யலாம்?
கஷ்டம்தான்!!! முதலில் பின்பற்ற வேண்டியது சிக்கனம்தான்.

1. வருடத்திற்கு லட்சங்கள் பீஸ் வாங்கும் பள்ளிகளை தவிர்த்து விட்டு நார்மலான பள்ளிகளில் அல்லது அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்கலாம். காரணம் பெரும்பாலான பசங்கள் தந்தையரின் நேரடி கண்கானிப்பு இல்லாத நிலையில் தாய்மார்களிடம் தங்கள் விரும்பியதை வாங்கிக் கேட்டு, படிப்பில் கவனம் இல்லாமல் பல லட்சங்கள் செலவழித்து கடைசியில் B.Com அல்லது BBA மட்டுமே படிக்கிறார்கள். ஒரு சிலர் விருப்பம் இல்லாமல் கடமைக்கு BE படிக்கிறார்கள். ஆக செலவு செய்வது வேஸ்ட். இதே படிப்பை ஒரு பைசா செலவில்லாமலே பல லட்சம் பேர் படிக்கிறார்கள்.

2. அம்மாவுக்கு சுகர், மூட்டுவலிக்கு மருத்துவம் பார்க்க சுற்றுலாவுக்கு போவது போல கார் எடுத்துக் கொண்டு குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து கொண்டு  போய், நம்ம டாக்டர் சொல்லிட்டார் என்று எந்த கேள்வியும் கேட்காமல் பணத்தை அள்ளி வீசி தேவை இல்லாத டெஸ்டுகள் எல்லாம் எடுத்து, பை நிறைய மருந்துகளும், பைல் நிறைய டெஸ்ட் ரிப்போர்டுகளும் எடுத்துக் கொண்டு, ஜவுளிக்கடைக்குள் புகுந்து, தேவையோ இல்லையோ ஒரு புது டிசைன் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

3. பேக்கரிக்குள் புகுந்து கண்டதையும் வாங்குவதையும், சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து கண்டதை எல்லாம் வாரி கூடையில் போடுவதை நிறுத்த வேண்டும்.

4. நாள் வாடகைக்கு கார் எடுப்பதை நிறுத்த வேண்டும்.

5. கார் வைத்திருப்பவர்கள் டிரைவரை வேலைக்கு அமர்த்தி சும்மா உட்கார வைத்து சம்பளம் கொடுப்பதை நிறுத்த வேண்டும்

6. எக்காரணம் கொண்டும் பழைய நகையை கொடுத்து புது நகை வாங்குகிறேன் பேர்வழி என்று கிளம்பக் கூடாது. இது ஆக முட்டாள்தனமான முடிவு. காரணம் பத்து பவுன் நகையை மாற்றினால் அது, இது என்று பிடித்து கையில் ஏழரை பவுன்தான் கொடுப்பார்கள். கடைக்காரன் பணக்காரனாகவும் நீங்கள் நஷ்டவாளிகளாக வும் ஆகிவிடுவீர்கள்.

7. பசங்க பைக் கேட்கிறார்கள் என்று எந்தக் காரணம் கொண்டும் வாங்கிக் கொடுக்காதீர்கள். அதற்கு மாத தவணையும், பெட்ரோலும் நீங்கள்தான் போட வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்

8. அதிக செலவு பிடிக்கும் விருந்து கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

9. திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தால், குதிரை, யானை, பேண்ட் வாத்தியம், வெடி இல்லாமல் சிம்பிளாக நடத்துங்கள்.

10. வரதட்சணை கேட்டால் மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வரதட்சணை வாங்காத மாப்பிள்ளை பாருங்கள்.

11. கார் எடுத்துக் கொண்டு சுற்றுலா போகலாம் என்ற நினைப்பே வரக்கூடாது. ஒன்லி பஸ், டிரைன் சுற்றுலாதான்

12. வெளிநாடுகளில் சம்பாதித்து விட்டு வேலை இழந்து ஊர் திரும்பும் சிலரிடம் நல்ல சேமிப்பு இருக்கலாம். அதை அறிந்து சில ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் முள்ளு செடியும், கள்ளி செடியும் வளர்ந்த வனாந்திரத்தை காட்டி இப்போது இதை வாங்கிப் போடுங்கள், இன்னும் இரண்டு வருடத்தில் டபுள் விலைக்கு போகும் என்று ரீல் விடுவார்கள். மாட்டிக் கொள்ளாதீர்கள். ஐந்து வருடம் ஆனாலும் போட்ட காசில் பாதி கூடக் கிடைக்காது

13. உடம்பு சரியில்லாவிட்டால் முதலில் ஒரு ஜெனரல் டாக்டரிடம் காட்டுங்கள். அவரிடம் உங்களுக்கு நோய்களை பற்றி அதிகம் தெரிந்ததாக காட்டிக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் அதிக விபரமாக பேசுபவர்கள்தான் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்களிடம் அனுப்பப்பட்டு அனைத்து டெஸ்டுகளுக்கும் உட்படுத்தப்படுவார்கள். அப்புறம் பணம் போய் விட்டதே என்று வருத்தப்படுவீர்கள்

14. மச்சான் ஒரு நல்ல பிஸினஸ் இருக்கிறது போடுங்க காசை அள்ளலாம் என்று சில மச்சினன்மார்கள் சுற்றி வருவார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் செல்போன் கடை மீது காதல் இருக்கும். ஆனால் அந்த காதல் இப்போதைய நிலையில் உங்களை பஞ்சர் ஆக்கிவிடும்

15. மச்சான் அஞ்சு ரூபாய் சப்பாத்தி, அதுக்குள்ள பத்து ரூபாய் சிக்கன், அஞ்சு ரூபாய் காய்கறியும், ஒரு ரூபாய்க்கு சாஸ் ம் ஊற்றி நூறு ரூபாய் க்கு விற்கலாம், ஒரு ஷாவர்மா விற்றால் 80 ரூபாய் லாபம், ஒரு நாளைக்கு 100 விற்கலாம், ஒரு பர்கர் விற்றால் 50 ரூபாய் லாபம். தினமும் நூறு பர்கர் விற்கலாம் என்று சிலர் தூண்டுவார்கள். அவர்களின் தொடர்பை துண்டித்துக் கொள்வது உங்களுக்கு லாபம். இல்லாவிட்டால் கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத உங்கள் ஊரின் ஒதுக்குப் புறத்தில் கடை போட்டு பத்து நாள் பந்தாவாக பிஸினஸ் செய்து விட்டு, பிறகு வியாபாரம் டல்லடித்ததும் புரோட்டாக் கடை, பிரியாணி கடை என்று அவதாரம் எடுப்பதும் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேலும் இனி வரும் ஐந்தாண்டுகள் பணப்புழக்கம் குறைவதால் ஆடம்பர ஹோட்டலுக்கு வருவது நின்று அத்தியாவசியமான, விலை குறைவான  உணவுகளையே மக்கள் வாங்குவார்கள்.

16. பிக்ஸட் டெபாசிட்டுகளை ஒரே பேங்கில் வைக்காமல் பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்

*17. அவசியம் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவம் செய்து கொள்ள பழகிக் கொள்ளுங்கள். குறைந்தது 10 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை  இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். காசு கொஞ்சம் கூடுதலாக செலவானாலும் நமக்கு பிறகு நமது குடும்பத்தினர் பொருளாதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்ற கவலை நீங்கி விடும்.*

18. பிள்ளைகளை Neet, Jee போன்ற பரீட்சைகள் எழுதவும் Professional கோர்ஸ் படிக்கவும் தயார் படுத்துங்கள்

19. அரசாங்கத்தின் கடைசி நிலையில் இருக்கும் ஊழியருக்கு இருக்கும் பணி பாதுகாப்பு, பணிக்கொடை போன்ற எதுவுமே உங்களுக்கு இல்லை அதனால் பிள்ளைகளை போட்டித் தேர்வுகளுக்கு பழக்கி அரசு ஊழியர்களாக்கி பணி நிரந்தரமாக்க முயற்சி செய்யுங்கள்.

20. அவசரம் வேண்டாம் மூன்று மாதம் சுற்றிலும் உள்ளதை கவனித்து பாருங்கள். எதில் நல்ல வாய்ப்புகளும் எதிர்காலமும் உள்ளது என்று புரியும். அதன்படி செயலாற்றுங்கள்.

21. இனி அதிக நாட்கள் நீங்கள் ஊரிலேயே இருக்க வேண்டிய நிலைமை உள்ளதால் பல இயக்கத்தவர்களும் உங்களை இழுப்பார்கள். நாங்கள்தான் சக்தி வாய்ந்தவர்கள் எங்களால் எதையும் சாதிக்க முடியும் என்று கதை அளப்பார்கள். பிடி கொடுக்காதீர்கள். முடிந்தவரை பெரிய அளவுக்கு அவர்களுக்கு பணம் அன்பளிப்பு செய்யாதீர்கள். நூறு இரு நூறுகளோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

22. எந்தக் காரணம் கொண்டும் பிற சமுதாயத்தினரோடு சச்சரவுகள் செய்வதோ, விவாதங்கள் செய்வதோ கண்டிப்பாக கூடாது. அனைவருடனும் நல்ல இணக்கத்தோடு வாழுங்கள்

பெண்களே இனி ஒரு குடும்பம் உருப்படுவதும், வீணாகப் போவதும் உங்கள் கைகளில்தான் உள்ளது. பண வரவு இல்லாவிட்டால் உங்களுக்கு கோபம் வரும். கணவரை குத்திக் காட்டுவீர்கள். கணவர் பிரிந்திருந்த நேரங்களில் நீங்களாகவே எல்லா முடிவும் எடுத்திருப்பீர்கள். இனி அது முடியாது அதனால் ஒரு இயலாமை ஏற்படும்.
இதெல்லாம் உங்களுக்கு மன அழுத்தம் தரும். ஆனால் வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக் கொண்ட பெண்களுக்கும் ஆண்களுக்கும் எந்த அழுத்தமும் வராது.

கவலைப்படாதீர்கள்.
இதுவும் கடந்து போகும்

விபிஎன் என்றால் என்ன விபிஎன் எதற்கு பயன்படுகிறது

விபிஎன் என்றால் என்ன விபிஎன் எதற்கு பயன்படுகிறது


விபிஎன் என்பது விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் ஆகும். இந்த விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் தனது பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுகிறது அதிகாரங்களை கொண்ட கணினியை பாதுகாக்க மற்றும் அதிநவீன கம்ப்யூட்டர் நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது படிப்படியாக வளர்ந்து பொதுமக்கள் உபயோகிக்கும் வகையில் செயலியாக உபயோகிக்கப்படுகிறது.ஆனால் இது இன்றைக்கு மிகவும் ஆபாச படங்களை பார்க்கும் மனிதர்களுக்கு மிகவும் பயன்படுகின்றது. இந்த வீட்டின் எதற்கு பயன்படுத்த படுகிறது உதாரணமாக மூன்று நபர்கள் இந்தியாவில் வசிக்கின்றனர் அதில் ஒரு நபர் யூடியூபில் உள்ள ஒரு வீடியோவை பார்க்க முயல்கிறார் அப்போது அந்த வீடியோ இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது இதனால் இந்தியாவில் இருந்து அந்த வீடியோவை காண இயலாது. காணவும் இந்திய அரசு அனுமதிக்காது இதனால் இந்த விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் ஓபன் செய்தால் பிற நாடுகளில் உள்ள அட்ரஸை நாம் பெற்று நாம் தேவை முடியும் வரை உபயோகித்துக்கொள்ளலாம் இப்பொழுது அந்த வீடியோவை பார்த்துக் கொள்ளலாம் இந்தியாவில் மட்டும்தான் அந்த வீடியோ தடைசெய்யப்பட்டுள்ளது வெளிநாடுகளில் இருந்து பார்த்துக் கொள்ளலாம் நாம் விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் பயன்படுத்துவதால் நமது ஐபி அட்ரஸ் வெளிநாடுகளில் இருப்பது போல் செயலாற்றும் இதனால் யூட்யூபில் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள வீடியோக்களை பார்த்து கொள்ள முடியும்.
மற்றொருவர் கல்லூரியில் படித்துக் கொண்டுள்ளார் அப்போது கல்லூரியில் இருக்கும் பொழுது பேஸ்புக்,டுவிட்டர்,வாட்ஸ் அப்,யூடியூப் அனைத்தும் தடை செய்யப்பட்டிருக்கும் அப்பொழுது விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்கை பயன்படுத்துவதால் நாம் வாட்ஸ்அப்,பேஸ்புக்,டுவிட்டர் இன்ஸ்டாகிராம்,யூடியூப் அல்லது இரண்டிலிருந்தும் படத்தை டவுன்லோட் செய்து கொள்ளலாம். மூன்றாவது நபர் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார் அவர் நிறுவனத்திலிருந்து ஒருவருக்கு தகவல் அனுப்புகிறார் ஆனால் அந்நிறுவனத்தில் இருந்து தகவல்கள் ஏதும் வெளியே செல்லாதவாறு அனைத்தும் தடை செய்யப்பட்டிருக்கும் அல்லது நாம் அனுப்புகின்றேன் தகவல் அனுமதி கேட்டு அனுப்ப முடியும். இதனால் நாம் ஒருவருக்கு தகவல் அனுப்ப வேண்டுமென்றால் விருச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் மூலமாக அனுப்பப்படும் போது மிகவும் பிரைவேட்டாக மற்றும் பாதுகாப்பாக செல்லும் சாதாரணமாக தகவல் நடத்தும் பொழுது அது பொதுவாக சென்றடையும் ஆனால் விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்கை பயன்படுத்துவதால் அது மிகவும் பாதுகாப்பாகவும் நிறுவனத்தில் யாருக்கும் தெரியாமலும் அணைத்துக் கொள்ள இயலும். இந்த விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்கை பயன்படுத்துவதால் ஹேக்கர் இடம் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் மற்றும் நம் நாட்டிற்கு தடை செய்யப்பட்டுள்ள அனைத்து விஷயங்களையும் பெற்றுக்கொள்ள இயலும் மற்றும் யூட்யூபில் நம் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள அனைத்தையும் உபயோகித்து கொள்ள முடியும். இந்த வீழ்ச்சிக்கு ஒரு பிரைவேட் நெட்வொர்க்கை பயன்படுத்துவதால் நாம் அனுப்பக்கூடிய தகவலோ அல்லது தடை செய்யப்பட்டுள்ள வீடியோக்களை பார்க்கவும் பயன்படுகிறது. சில பொது இடங்களில் பிரீப் நோட்ஸ் பார் கிடைக்கும் பொழுது அதை நாம் கணித்து செய்யும் பொழுது நம்முடைய தகவல்கள் திருட வாய்ப்புள்ளது அதனால் விரிசுருள் பிரைவேட் நெட்வொர்க்கை பயன்படுத்தினால் நம் தகவல்களை பாதுகாப்பு கொள்ள இயலும். இந்த விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் அளிப்பதாக உள்ளது நெட்வொர்க் ஐ அதிக நிறுவனங்கள் வெளியிடுகின்றன.

வெள்ளி, 8 மே, 2020

ஒரு வாரத்துக்கான ஆரோக்கியத்தை ஒரேநாளில் எடுத்துக்க முடியும்! எப்படி?

ஒரு வாரத்துக்கான ஆரோக்கியத்தை ஒரேநாளில் எடுத்துக்க முடியும்! எப்படி?


    ஒரு வாரத்துக்கான ஆரோக்கியத்தை ஒரே நாளில் எடுத்துக்க முடியும்!  எப்படி? 


        வாரம் முழுவதும் ஏசி அறையில் அதிகபட்சம் நாளை, நேரத்தை ஆபீஸ்லேயே  கழிக்க வேண்டியதாக இருக்கு.  இந்தக் காலத்தில். உடம்பு ஆரோக்கியத்தின் மேல் கவனம் செலுத்துவதில்லை. 
பசிக்கும் மட்டும்தான் சாப்பிடும் சூழ்நிலை  தான் இருக்கு. இப்படியே  போய் என் உடல் எடையை ஏறியது தான் மிச்சமே தவிர எந்த உடற்பயிற்சியும் இல்லை என்றும் ஹெல்தி டயட் கடைபிடிக்க முடியவில்லை என்று ஒரே கவலையா? 

   சரி இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் அட்லீஸ்ட் வாரத்தில் ஒரு நாளாவது வீட்டு சமையலில் கவனம் செலுத்தி அன்றைய தினத்திலேயே ஒரு வாரத்திற்கான ஆரோக்கியம் டயட் பெற்றுவிடலாம். 

அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன். 
முதலிலும் வாரத்துல ஒரு நாள், அந்த ஒரு நாளைக்கு முந்தைய நாள் இரவு ஆறு அத்திப்பழம் அல்லது உலர்ந்த அத்திப் பழங்களை மற்றும் இரண்டு பேரிச்சம் பழத்தையும்  பாலுடன்சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து குடித்து விட்டு பின்பு தூங்க செல்லவும்.
    காலையில் எழுந்த பிறகு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் கல்லுப்பு, சிறிது எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து நிதானமாக குடிக்க வேண்டும். இது இறந்த செல்களை புதுப்பிக்க உதவும். 

    பின்பு அரை மணி நேரம் விட்டு கொஞ்சம் கருவேப்பிலை, 2 பேரிச்சம்பழம் போட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி குடிக்கவும். இது ரத்தத்தை உற்பத்தி செய்யும். 

பின்பு இளம் சூடான காலை உணவானது இட்லி, தோசை இன்னும் வேறு சைவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 
   பின்பு பகல் 12 மணி அளவில் கேரட், பீன்ஸ், கொத்துமல்லி இலை, கருவேப்பிலை, புதினா, பீட்ரூட், துளசி இலை மற்றும் வெள்ளை பூசணிக்காய் இவற்றையெல்லாம் சிறிதளவு எடுத்துக்கொண்டு நன்கு வேக வைக்க வேண்டும். பின்பு அதன் நீரை எடுத்து அதனுடன் ருசிக்கேற்ப உப்பு கொஞ்சம் மிளகு சேர்த்து ஒரு ஸ்பூன் வெண்ணை போட்டு நன்கு கலந்து விடவேண்டும். இது ஒரு காய் சூப்ஆகும். சூப்பை இளம் சூட்டில் மெல்ல ரசித்து ருசித்து குடிக்க வேண்டும். இது உடலை புத்துணர்ச்சி பெறச் செய்து அடுத்த ஒரு வாரத்திற்கு தேவையான சத்தை கொடுக்கும். 

     இந்த நாளில் மட்டும் 10 அல்லது 12 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். 

      பின்பு மதியம் 2 மணிக்கு சைவம் அல்லது அசைவம் இரண்டில் எது வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளலாம். அதில் வேகவைத்த முட்டை ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும். சைவம் சாப்பிடுபவர்கள் வேக வைத்த முட்டை 1 எடுத்துக்கொள்ளலாம் . 

  
   சாயங்காலம் 4 மணி அளவில் ஹெர்பல் டீ எடுத்துக்கொள்ளுங்கள். அது எப்படி செய்வது என்றால் நீரில் கொஞ்சம் டீ பவுடர், சிறிது கொத்தமல்லி விதை, ஒரு கிராம்பு, இரண்டு மிளகு, ஒரு துண்டு இஞ்சி, சிறிது சோம்பு போட்டு நன்றாக வேகவைத்து பால் சேர்க்காமல் சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து குடிக்க வேண்டும். 

   இரவு அரை வயிறு அளவு மட்டும் எது வேண்டுமானாலும் சாப்பிடலாம். இரவு 9 மணியளவில் கொஞ்சம் துண்டுகளாக்கிய பழங்களை சாப்பிடலாம். அன்றைய தினம் முழுவதும் காபி,  டீ, பால், பாலில் செய்த பொருட்கள் எதையும் சாப்பிட வேண்டாம். கடைசியாக தூங்குவதற்கு முன் கண்டிப்பாக இரண்டு டம்ளர் நீர் குடிக்க வேண்டும். 

     இவ்வாறாக வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதுமானது. மற்ற நாட்களில் எடுத்துக்கொள்ளாத ஊட்டச்சத்து இந்த ஒரு நாளிலே பெற்றுக்கொள்ளலாம். 

     மற்ற நாட்களில் நெய் அரை ஸ்பூன் மற்றும் சிறிதளவு எண்ணையில் செய்த உணவு வகைகளை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். 

  அலுவலகத்திற்கு செல்லும் போது உலர்ந்த திராட்சை, பேரிச்சம்பழம் போன்ற ஏதேனும் சில உலர்ந்த பழங்களை வைத்திருந்து டீ குடிக்கும் நேரத்தில் அல்லது வீட்டிற்கு செல்லும் நேரத்தில் கொஞ்சம் சாப்பிடுங்கள். இது உங்களது எனர்ஜி  வீணாகாமலும், பசியால் வயிறு அடைத்தாற் போல் ஏற்படும் உணர்வுகளை சீர்செய்யும். உங்களுடைய உணவு பழக்கங்களை நல்லபடியாக வைக்கும். 

    ஏசி அறையில் இருந்து நாள் முழுவதும் வேலை பார்ப்பவர்கள் தாகம் எடுப்பதில்லை என்றாலும் சிறிதளவு தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். அப்பொழுதுதான் சிறுநீர் கடுப்பு ஏற்படாது. 

   ஆரோக்கியத்தில் சிறிது கவனம் செலுத்தி அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தாலே போதும், உங்களது உள்மனது, மூளையும் அதற்கான வாய்ப்புகளை தானாகவே தேடித்தரும். 

  இந்த டயட்டை கடைப்பிடியுங்கள். உங்களுக்கு வாரம் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும். 


இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க. 

நன்றி.