வெள்ளி, 31 மே, 2019

அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது?


அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது?

ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். அது ஏன்?

அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்.! மேலும் படியுங்கள்.

அப்போதெல்லாம் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. காரணம் பசு வறட்டியில் உள்ளது. நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல்.

18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம். அப்படியான சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால் வீட்டுச்சுவற்றில் அடித்து வந்தனர். இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

அதுபோல, வளி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு அந்த வீடே அணுக்கதிர்கள் கூட துளைக்க முடியாத ஒரு எஃகு அரணாக மாறிப்போகும். ஆனால் இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே. இதனாலேயே சோழர்களின் கோட்டையை ஆங்கிலேயர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது தனிக்கதை.


மேலு‌ம், இம்மாதிரியான வறட்டி தட்டும் பழக்கம் கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது. சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு தான் தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர். வறட்டி தயாரிக்கும் முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர். ஆனால் நாமோ, பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .

நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!

நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை... அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..!

மறக்காம ஷேர் செய்ங்க!!

புதன், 29 மே, 2019

நன்றி சொல்வதன் முக்கியத்துவம்


நன்றி சொல்வதன் முக்கியத்துவம்...

நம்முடைய வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்பதில் நாம் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறோமோ அதே போல் அந்த மாற்றம் விரைவாக நிகழ வேண்டும் என்றும் ஆசைப்படுவோம்.

ஆனால் அவசரம் என்பது கூட ஒரு எதிர்மறை உணர்வு தான்.

மாற்றங்கள் விரைவாக நிகழ வேண்டும் என்று சொன்னால் நாம் நன்றியுணர்வோடு வாழ வேண்டியது அவசியம்.

இதுவரை நீங்கள் நன்றியுணர்வோடு இருந்தீர்களா என்பது இப்போது விஷயமல்ல எனவே இந்த நொடியில் இருந்து நன்றியுணர்வோடு வாழ போகிறேன் என்று உறுதிமொழி எடுத்து கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கை படிப்படியாக மாறும் என்ற புரிதலோடு முன்னேறுங்கள்.

வாழ்க்கை உங்கள் வசமாகட்டும்.

உங்களுக்கு பயன்படும் அனைத்து விஷயங்களுக்கும் நன்றி செலுத்துங்கள் .

உங்கள் உறவுகளுக்கு நன்றி செலுத்துங்கள்.

நீங்கள் நன்றி செலுத்தும் அணைத்து விஷயங்களையும் பட்டியலிடுங்கள்.

ரகசியம் திரைப்படத்தில் கூறியது போல் அதன் மாயாஜாலத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது ,

நாம் ஒவ்வொரு வேளை உணவு உண்ண வேண்டும் என்று சொன்னால் அதன் பின்னால் எத்தனை மனிதர்களின் உழைப்பும் , இயற்கையின் கொடையும் இருக்கிறது என்று சிந்தித்து பார்க்கிறேன்...

எத்தனை நெற்பயிர்களின் தியாகம் இருக்கிறது என்பதை உணரும்போது...

ஒரு உயிரின் தியாகம் தான் மற்றோரு உயிரின் வாழ்க்கை.

நம்மை சுற்றி உள்ள அனைத்துமே ஏதோ ஒரு வகையில் நம் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை..

உண்மையில் நாம் நன்றி செலுத்தும் விஷயங்கள் தான் அதிகமே தவிர குறைகூறும் விஷயங்கள் அல்ல.

ஒரு செயலை துவங்கும்போதும் நன்றி என்று சொல்லுங்கள்.

முடிந்த பின்னும் நன்றி என்று சொல்லுங்கள்.

இனி செய்ய போகும் செயலுக்கும் நன்றி என்று சொல்லுங்கள்.

உங்களுடைய ஒரே பிரார்த்தனை நன்றி செலுத்துவது தான் என்றால் , அது போதும்.

நாம் நன்றியுணர்வுடன் வாழ துவங்கியதும் நம் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை நம்மால் உணர முடியும். அதன் சக்தியை நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள் அது உங்கள் வாழ்வில் உள்ள அனைத்தையும் மாற்றும் வல்லமையை உங்களுக்கு கொடுக்கும்.

நாம் எதற்கு நன்றி செலுத்துகிறோமோ அதையே பெறுகிறோம். நீங்கள் நன்றி செலுத்தும் விஷயங்கள் உங்கள் வாழ்வில் அதிகரிக்க துவங்கும்.

நன்றியுணர்வு நீங்கள் எப்போதும் நல்ல உணர்வுடன் இருப்பதை உறுதி செய்து உங்கள் விருப்பங்கள் விரைவாக நிகழ அது வழி செய்யும்.
நன்றியுடன் மதி....

செவ்வாய், 28 மே, 2019

வெயிலை வெறுக்கக்கூடாது. அது தரும் அனுகூலங்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.


வெயிலை வெறுக்கக்கூடாது. அது தரும் அனுகூலங்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். 

வெயில் என்றால் காலையில் அடிக்கும் இளவெயில் மிகவும் நல்லது. மாலை நேர மஞ்சள் வெயிலும் நல்லது தான். அதேநேரம் உச்சி வெயில் உடம்புக்கு ஆகாது. 

கோடை காலம் தொடங்கி விட்டது. எடுத்த எடுப்பிலேயே ‘டாப் கியர்’ வேகம் போல் 100 டிகிரி வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. இன்னும் நாலைந்து மாதங்களுக்கு கஷ்டகாலம் தான். என்றாலும், எப்படி இயற்கையின் கொடை, மழையோ அதுபோல் வெயிலும் ஒரு கொடையே. நமக்கு ஆரோக்கியம் தரும் சூரிய ஒளியின் மகத்துவத்தை நாம் அறியாமல் அதனை வெறுக்கிறோம். காலை வெயிலும், மாலை வெயிலும் எண்ணற்ற மருத்துவ பலன்களை நமக்கு அளிக்கின்றன. 

காலையில் 7 மணிக்கு முன்னும், மாலையில் 4 மணிக்கு பின்னும் சூரிய ஒளி நம் உடலில் படுவதால் வாத நோய் குணமாகிறது. தேவையான அளவு சூரிய ஒளி நம் உடலில் படுவதால் தோலுக்கடியில் மறைந்திருக்கும் ஒருவித வைட்டமின், வைட்டமின் “டி”யாக மாறுகிறது. இதனால் உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதை அதிகப்படுத்தி எலும்புகளை, தசைகளை பலப்படுத்தி வலிமைப்படுத்துகிறது. தோலின் அடியிலுள்ள கொழுப்பு சூரிய ஒளியால் கரைகிறது. 


சோரியாசிஸ் எனப்படும் ஒரு வகை தோல் நோய்க்கு, வெட்பாலை தைலத்தை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, இளவெயிலில் சிறிது நேரம் காட்டினால் நல்ல நிவாரணம் கிடைக்கும். சூரிய ஒளியால் கிடைக்கும் வைட்டமின் ‘டி’, அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது. இதனால் உடல் எடை குறைகிறது. முகத்தில் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தேய்த்து 5 நிமிடம் சூரியஒளி படும்படி இருந்து பின்னர் இதமான வெந்நீரில் முகத்தை கழுவினால் முகம் பொலிவுபெறும், சூரிய ஒளி, நீர் நிலைகளில் இருக்கும் கெட்ட கிருமிகளை அழிக்கிறது. 

உடலில் செரடோனின் எனும் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து டிப்ரஷன் எனும் மனச்சோர்வைத் தடுக்கிறது. தினமும் காலை சூரிய ஒளி படும்படி நடைபயிற்சி மேற்கொண்டால் வாழ்நாள் அதிகரிக்கிறது. சூரிய ஒளியால் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. நமக்கு எண்ணற்ற பலன்களை தரும் தாவரங்கள் சூரிய ஒளியின் மூலமே அதிக மகசூல் பெற்று நமக்கு காய்கள், பழங்களைத்தருகின்றன. இப்படி எண்ணற்ற மகத்துவம் கொண்ட வெயிலை வீட்டுக்குள் விடாமல் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் அடைந்து கிடந்தும், வாகனங்களை பயன்படுத்தியும் நோயை விலை கொடுத்து வாங்குகிறோம். 

ஆக வெயில் என்றால் காலையில் அடிக்கும் இளவெயில் மிகவும் நல்லது. மாலை நேர மஞ்சள் வெயிலும் நல்லது தான். அதேநேரம் உச்சி வெயில் உடம்புக்கு ஆகாது. எனினும், கொளுத்தும் மதிய நேர வெயிலில் இருந்து நம்மை காக்க நாம் இருக்கும் இடங்களில் அதிக அளவில் மரங்களை நட்டும், அதிக அளவில் சுத்தமான குடிநீரை பருகியும், கம்பங்கூழ், மோர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, இளநீர், நுங்கு, பதநீர், மண்பானை நீர் போன்றவற்றை அருந்தியும் கொதிக்கும் வெப்பத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம். 

ஒரேயடியாக வெயிலை வெறுக்கக்கூடாது. அது தரும் அனுகூலங்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். 

வெயிலை வெறுக்காதீர்கள்


வெயிலை வெறுக்காதீர்கள்

வெயில் என்பது  இறைவனின் பெரும்  அருட்கொடையாகும்

வெயிலின் உஷ்ணசக்தியை கொண்டே உலகம் இயங்குகின்றது.

பனிக்காலம்
மழைக்காலம்
குளிர்காலம்  இவைகளைவிட வெயில்காலமே மிகவும்  சிறந்ததாகும் ,

வெயில் நம் மீது படும்போது அதன்  சக்தியை  கிரகித்து நமது எலும்புகள் பலம் பெறுகின்றது.

மூட்டுவலி  உள்ளவர்களுக்கு வெயில் அருமருந்தாகும் , தொற்று நோய் பரவல் கடும் வெயிலின் மூலமாகவே கட்டுபடுத்த படுகின்றது ,

பல காய்கள் வெயிலினாலேயே பழமாகின்றது

நமது உடலின் ரத்த ஓட்டம் வெயில்காலத்திலேயே  அதிகளவு உடலை சுற்றிவருகின்றது ,

வெயிலின் சக்தியை கிரகித்தே மரங்கள் வளருகின்றன.. மழைகாலங்களில் குறைவான வளர்ச்சியையே மரங்கள் பெறுகின்றது...

நீர் எந்தளவுக்கு  விவசாயத்துக்கு  முக்கியமோ அதே  அளவு வெயிலின் உஷ்ண சக்தியும் மிகவும்  அவசியமானதாகும்.

வியர்வை எனும்  அற்புதமான உடல் கழிவுகளை வெளியேற்றும் நிகழ்வு வெயில் காலத்திலேயே அதிகம்  நிகழ்ந்து நமது ஆரோக்கியத்தை உயர்த்துகின்றது,

இந்த வியர்வையின் மூலமாக  சிறுநீரகங்களின் வேலை பளு குறைகிறது.  சிறுநீரகங்கள் பலம் பெறுவதும் வெயிலினால்தான் நடைபெறுகின்றது...
இதை அனுபவிக்காமல்
ஏசி  ரூம்களில்  முடங்கி  கிடக்கலாமா?

*வெயிலை அனுபவியுங்கள்* *அத்துடன்  உங்களது  ஆரோக்கியத்தையும் அதிகரித்து கொள்ளுங்கள் .

திங்கள், 20 மே, 2019

திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா இடங்கள்...


திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா இடங்கள்...

திருநெல்வேலியை 'திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், 'தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், 'பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி,திருநெல்வேலி ஆகும். திருநெல்வேலி பெயர்க் காரணம் இந்து பழங்கதைகளின் படி சிவ பெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி எனப்படுகிறது என்ற கருத்து உள்ளது.

திருநெல்வேலி என்றவுடன் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது 'திருநெல்வேலி அல்வா'தான். இந்த ஊரின் அல்வாவின் சுவையே தனிதான். அதிலும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவிற்கு இருக்கும் ருசியே தனிதான். திருநெல்வேலிக்கு வருபவர்கள் அல்வா வாங்காமல் திரும்ப மாட்டார்கள் என்பது தனிச் சிறப்பு. திருநெல்வேலியை நெல்லை என்றும் அழைப்பர்.

அம்பாசமுத்திரம்

கோயில்கள் நிறைந்த ஊர். காசி விஸ்வநாதர் கோயில், திருமூநாந்தசாமி கோயில், அம்மையப்பர் கோயில், கிருஷ்ணர் கோயில், புருசோத்தம பெருமாள் கோயில், லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் என்று நிறையக் கோயில்கள் இங்கு உள்ளன.

ஆத்தங்கரை பள்ளிவாசல்

நெல்லையிலிருந்து 46 கி.மீ. தொலைவில் இந்தப் பள்ளிவாசல் உள்ளது. இங்கு சையத் அலி பாத்திமா மற்றும் ஷேக் முகமது இருவருக்கும் இரண்டு கோபுரக் கூடுகள் உள்ளன. இவர்கள் இருவரும் சூஃபி ஞானிகள், அனைத்து மதத்தினரும் வந்து வழிபடும் இடம் இது.

அய்யனார் சுனை

நாட்டார் தெய்வமான அய்யனார் கோயிலோடு இயற்கையான சுனையும் அமைந்த இடம். அருகில் சந்தனக்காடும் உள்ளது. பார்க்கச் சிறந்த இடம்.

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்

நெல்லையிலிருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ளது. டிசம்பர் மாதக் கடைசியில் பல நாட்டுப் பறவைகளும் இங்கு வந்து தங்கும். சுமார் 35 வகைப் பறவைகள் இவ்வாறு வலசை வந்து ஜூன் ஜூலை மாதம் வரை தங்கி குஞ்சு பொரித்து பிறகு அவற்றுடன் பறந்து செல்கின்றன. மிக முக்கியமான பறவைகள் சரணாலயமாக இது இருந்து வருகிறது.

குற்றாலம்

பெயரைச் சொல்லும் போதே உற்சாகம் பிறக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அருவிகள் நிறைந்த பகுதி. திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் ஏற்பட்டது.

குற்றால அருவிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது. குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன.

குற்றாலத்தின் பெரிய அருவி தவிர சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி, பழத்தோட்ட அருவி, புது அருவி என ஏராளமான அருவிகள் உள்ளன. எல்லா அருவிகளுக்கும் சென்று வர போக்குவரத்து வசதி உள்ளது. இந்த அருவிகளில் வரும் தண்ணீரில் மூலிகைக் குணம் கலந்திருப்பதால் இவற்றில் நீராடுபவர்களுக்கு எல்லா நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

குற்றாலநாதர் கோயில்

பெரிய அருவியின் பக்கத்தில் கோயில் கொண்டுள்ளார் குற்றாலநாதர். திரிகூட ராசப்ப கவிராயர் பாடிய குற்றாலக் குறவஞ்சியின் நாயகன் இவர்தான். தொலைபேசி - 04633-210138.

தோரணமலை

தோரணமலை முருகன் கோவில்

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள கடையம் அடுத்த தோரணமலை மீதும் முருகப்பெருமான் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார். இந்த மலை பல்வேறு சிறப்புகளைப் பெற்று விளங்கி வருகிறது. முருகப்பெருமான் வீற்றிருக்கும் இந்த அருள்மலையான தோரணமலை, பார்ப்பதற்கு யானை ஒன்று உட்கார்ந்த நிலையில் துதிக்கையால் நிலத்தில் ஊன்றியிருப்பது போல் அமைந்திருக்கும்.

யானை என்பதற்கு வாரணம் என்று பொருள் உண்டு. எனவே இந்த மலை வாரணமலை என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் அந்தப் பெயர் மருவி தோரணமலை என்றாகியுள்ளது. யானை வடிவமாய் அமைந்துள்ள தோரணமலையானது குலுக்கை மலை, ஆனைமலை என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

வரலாறு

தென்திசை வந்த அகத்தியர் :

இமயமலையில் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தைக் காண்பதற்காக முப்பது முக்கோடி தேவர்களும், உலக மக்களும் அங்கே குவிந்தனர். இதனால் இமயமலை இருக்கும் வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. பூமியின் அதிர்வால் திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் நடுங்கிப்போனார்கள்.

தங்கள் அச்சம் குறித்து சிவபெருமானிடம் அனைவரும் எடுத்துரைத்தனர். அப்போது சிவபெருமான், குறு முனிவரான அகத்திய முனிவரை அழைத்து, ‘அகத்தியா! உலகத்தை சமநிலை பெறச் செய்ய உன்னால்தான் இயலும். ஆகவே நீ இப்போதே தென்பகுதியில் உள்ள பொதிகை மலைக்குச் செல்!’ என்று கூறினார்.

அகத்தியன், சிவபெருமானின் கட்டளையை ஏற்றுக்கொண்டார். ஆனால் அவருக்குள் பெரிய வருத்தம் ஒன்று இருந்தது. அதனை ஈசனிடம் வெளிப்படுத்தவும் செய்தார். ‘ஐயனே! தங்கள் கட்டளையை மீறி நடக்க எனக்கு சக்தியில்லை.

இருப்பினும் உலகமே காண வாய்ந்திருக்கும் உங்களது திருக்கல்யாண கோலத்தை என்னால் காண இயலாமல் போகிறதே, என்பதை எண்ணி நான் மிகவும் துயரப்படுகிறேன்’ என்றார் அகத்தியர். அவரை தேற்றி ஆறுதல் படுத்திய சிவபெருமான், ‘அகத்தியா! நீ எப்போது நினைத்தாலும் நான் திருமண கோலத்தில் காட்சி தருவேன்’ என்று நல்லாசி கூறினார்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் தென்திசை நோக்கி பயணப்பட்டார் அகத்திய முனிவர். அவர் பொதிகை மலைக்கு வந்தபோது உலகம் சமநிலையை அடைந்தது. அகத்திய முனிவர் வந்த வழியெல்லாம் புனித பூமியானது.

திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை அவர் திருக்குற்றாலம் வந்தார். அங்குள்ள மகாவிஷ்ணு கோவிலை சிவன் கோவிலாக மாற்றியது அவர்தான். அங்கிருந்து பொதிகை மலை செல்லும் போது அவரது பாதச்சுவடுகள் பட்ட இடம்தான் தோரணமலை.

தோரணைமலையில் தங்கிய அகத்தியர் :

அகத்தியரின் மருத்துவ திறனை பயன்படுத்தி தேரையரின் சமயோசித புத்தியை வெளிப்படுத்தி சித்த மருத்துவத்தின் சிறப்பை உலகறிய செய்ய முருகப்பெருமான் திருவிளையாடல் நடத்திய தலம் இது. தோரணமலையில் ஒரு நாழிகை நேரம் தியானம் செய்து முருகப்பெருமானை வழிபட்டால் உலகையே வெல்லும் ஞானம் கிடைக்கிறது.

எப்படிப்பட்ட நோயும் தானாகவே குணமடைகிறது. அகத்தியர் திருக்குற்றாலம் வந்தபோது அங்கு வைணவத்தலத்தில் நின்ற கோலத்தில் எழுந்தருளிய பெருமாளை இலஞ்சி குமாரசாமியின் அருளால் சிவபெருமானாக்கி வழிபட்டு பொதிகைமலை நோக்கி வந்தார். வரும் வழியில் வானளாவ கநுவாகன அமைப்பில் உயர்ந்து நிற்கும் தோரணமலையின் அழகில் மனம் லயித்தார்.

மூலிகை செடிகள் ஏராளமாக செழிப்புடன் வளர்ந்திருப்பதை கண்டு பூரிப்படைந்தார். சிறிது காலம் இம்மலையில் தங்கி தவம் புரியவும், சித்த மருத்துவம் ஆராய்ச்சி செய்யவும் விரும்பினார். அப்பொழுது தன் இஷ்ட தெய்வமான முருகப்பெருமானை மலைமீது தவமிருந்து வணங்கி வந்தார்.

மருத்துவ ஆராய்ச்சியில் அவருக்கு உதவியாக அவ்வையாரின் பரிந்துரையின் பேரில் பிறவி ஊமையான ராமதேவன் எனும் அந்தணன் சீடனாக இருந்து வந்தார். மருத்துவ ஆராய்ச்சியில் தனக்கு உதவியாகவும், சிகிச்சையில் சமயோசிதமாகவும் செயல்பட்ட தன் சீடன் ராமதேவனை பாராட்டிய அகத்தியர் அவரை தேரையர் என்று அழைக்க தொடங்கினார்.

தேரையரின் ஊமைத்தன்மையை நீக்கி பேச்சுத்திறனை ஏற்படுத்தினார். தனக்கு தெரிந்த மருத்துவ நுணுக்கங்களையும் தேரையருக்கு கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு பொதிகைமலைக்கு சென்று விட்டார். அவரத ஆலோசனையின்பேரில் தோரணமலையில் முருகப்பெருமானை வழிபட்டு சித்த மருத்துவ ஆராய்ச்சி செய்து வந்தத தேரையர் சுமார் 700 ஆண்டு காலம் தோரணமலையில் தவமிருந்து இறுதியில் அங்கேயே ஜீவசமாதி ஆகிவிட்டார்

தேரையர் வழிபட்ட தலம் :

இந்த மலையில் அகத்தியில் சில காலம் தங்கி இருந்துள்ளார். அவரது ஆணைக்கு இணங்க, அகத்தியரின் சீடரான தேரையர் தோரணமலையிலேயே தங்கியிருந்து தவம் இயற்றி, பல சித்துக்களை செய்துள்ளார். தனது இறுதி காலத்தில் தேரையர் இங்கேயே அடங்கியதாக வரலாறு கூறுகிறது.

தேரையரே இந்த மலையில் முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும் அறியப்படுகிறது.  அகத்திய முனிவர் காலடி பட்டதாலும், சித்தர் ஐக்கியமானதாலும் இந்த பூமி மகத்துவம் நிறைந்ததாக போற்றப் படுகிறது. சித்தரின் அருள் அதிர்வலைகள் இப்போதும், எப்போதும் இந்த மலையில் பிரதிபலித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

இது தவிர்த்து பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட வெங்கலவன் என்ற நாயக்க மன்னன் தோரணமலையில் முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்றும் தகவல்கள் உள்ளன. நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த கோவில் 1928–ம் ஆண்டு மீண்டும் தோற்றம் பெற்றது.

தோரணமலை வரலாறு

1000 வருடங்களுக்கு முன்பு அகத்தியரின் மருத்துவமனையாக விளங்கிய இந்த தோரணமலை நாளடைவில் தூர்ந்துவிட்டது .இங்கு முருகனுக்கு அமைக்கபடிருந்த கோயிலும் காணாமல்போய்விட்டது இதற்கிடையில் முத்துமாலைபுரம் என்னும் ஊரைச் சேர்ந்த நா.பெருமாள் என்பவரின் கனவில் வேல் ஏந்திய சிறுவன் தோன்றி தான் மலைமேல் உள்ள சுனையில் கிடக்கிறேன் என்றும் என்னை எடுத்து வணங்குகள் என்றும் கூறினான் .முருகபெருமானை வணங்கி சுனையில் தேடியபோது அங்கே முருகன் சிலை கிடைத்தது.அதை எடுத்து தற்போது உள்ள இடத்தில் வைத்து வணங்க ஆரம்பித்தனர். இன்று வரை அந்த சிலையே மூலவராக காட்சியளிக்கிறது.

இதற்கு பின் ஆசிரியர் திரு.கே.ஆதிநாராயணன் (பரம்பரை அறங்காவலர்) என்பவர் இந்த கோயிலை மக்களுக்கு அறிமுகபடுத்த பல முயற்சிகள் செய்தார். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுமார் 150 சினிமா தியேட்டர்களில் தோரணமலை குறித்த சிலேடு கட்டினார். ஒரு கோயிலுக்கு விளம்பரமாக இது போல் சினிமா தியேடரில் சிலேடகா காட்டிய வரலாறு வேறு எங்கும் நடந்ததாக தெரியவில்லை .அதை பார்த்து பல பக்தர்கள் தோரணமலை வர ஆரம்பித்தனர் முருகபெருமானை வணங்க ஆரம்பித்தனர்.இரு நதிகளுக்கிடையே ஒரு கோவில் இருந்தால் அது சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும் அந்த வகையில் தோரனமலையும் தனிச்சிறப்பு பெற்றது.

தோரணமலைக்கு தென்புறம் ராமநதி மலையில் இருந்து பாய்ந்து வருகிறது,மலையின் வடபுறம் ஜம்பு நதி தவழ்ந்து வருகிறது.இந்த இரு நதிகளுக்கு இடையேதான் தோரணமலை கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த நதிகள் இரண்டும்தோரனமாலைக்கு மாலையிட்டது போல்காணபப்டுகிறது. இந்த மலைக்குச் சென்றாலே நாம் அறியாமல் உடல் சிலிர்ப்தை நாம் அறிய முடியும்.அங்கெல்லாம் பலசித்தர்கள் அரூபமாக வாழ்ந்துதான் வருகிறார்கள்

இங்குள்ள 64 சுனைகளில் தேடிச் சென்று பார்த்தால் தெரியும் ஆனால் கைக்கு எட்டவில்லை.அதோடு மட்டுமல்லாமல் இந்த சுனைகள் எல்லாம் சித்தர்கள் தற்போதும் தங்கி தவம் புரியும் இடமாகத்தான் பக்தர்கள் கருதுகிறார்கள்.அடிவாரத்தில் வல்லப விநாயகர்,கன்னிமார் அம்மன், வியாழ பகவான்,நவகிரகங்களுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. மேலும் சுனைகளும் சுதையாலான சிவபெருமான்,சரஸ்வதி,மகாலெட்சுமி ஆகியோரின் தரிசனமும் கிட்டுகிறது. அருகே அரசமரத்தடியில் சப்த கன்னியர் வீற்றிருக்க மரத்தில் வளையல்களும், தொட்டில்களும் பிராத்தனைக்காக கட்டப்பட்டுள்ளன.

மலைக்கு செல்லும் படிக்கட்டு தொடங்கும் இடத்தில் தனிச் சன்னிதியில் சுதியாலான பாலமுருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மலை ஏறி மூலவரை தரிசிக்க முடியாதவர்கள் கீழே இவரை தரிசித்து அருள் பெறலாம். உச்சியை அடைய 926 படிகட்டுகள் ஏற வேண்டும். ஒரு காலத்தில் இந்த படிகட்டுகள் கிடையாது பாறையில் பெரும்விரலை மட்டும்ஊனும்படி ஓட்டை வடித்து வைத்திருப்பார்கள் அதன் வழியாகத் தான் ஏற வேண்டும்.ஆனால் தற்போது அப்டியல்ல படிக்கட்டு வழியாக நன்றாக ஏறிச்செல்லலாம். வழியில் இரண்டு மொட்டை பாறைகள் உள்ளது அங்கு படிக்கட்டுகளைப் பிடித்து ஏற வசதியாக கம்பிகளும் உள்ளன. அந்த வழியில் செல்வது இந்த பிறவியில் ஏற்பட்ட கஷ்டங்களை நாம் கடந்து விட்டதை உணர்த்துகிறது. வழியில் சுயம்பாக அமைந்த சிவபெருமானை தரிசிக்கலாம்.

இந்த இடங்கள் எல்லாம் நல்லசுவாச காற்றும், அருமையான நறுமணம் தரும் மூலிகை காற்று நமது உடல் பிணியை போக்கும் வண்ணம் நம்மை தொட்டு செல்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலையின் இயற்கை அழகையும் அதில் தவழ்ந்து வரும் மேகக்கூடங்களையும், புறப்பட்டு வரும் கடனா, ராம, ஜம்பு நதிகளை ரசித்துக்கொண்டேஉச்சியை அடையலாம்.மலையின் உச்சியில் உள்ள குகையில் தான் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.கையில் வேல் ஏந்தி மயில் வாகனத்தோடு நின்ற கோலத்தில் அழகின் அரசனாக திகழ்கிறார் மூலவர் முருகப்பெருமான்.

இந்த குகை இயற்கையில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இந்த முருகன் திருச்செந்தூர் முருகனை நோக்கிய வண்ணம் இருப்பாதால் இவரை வழிபட்டால் திருச்செந்தூர் முருகனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும். முருகப்பெருமானின் இடதுபுறம் சற்று உயரமான இடத்தில் இருக்கும் சுனை புனித நீராக கருதப்படுகிறது. இந்த சுனையில் இருந்து தான் முருகப்பெருமானுக்கு அபிஷேகத்துக்கு தண்ணீர் எடுத்துவரப்படும். மலை உச்சியில் பெரும் பாறைக்கு இடையில் இப்படி ஊற்று பொங்கி வருவது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். மலை மீது ஏறி இதில் குளிப்பது ஆனந்தமாக இருப்பதோடு அருளும் கிடைப்பதை அந்தநொடியிலேயே உணரலாம்.

அதேபோல் முருகப்பெருமானின் வலதுபுறம்பாறையில் ஒரு கை மட்டுமே போகும் அளவுக்கு பொந்து ஒன்று உள்ளது. அது சாதாரண பொந்து அல்ல அதுவும் ஒரு சுனை தான் அதனுள்ளும் தண்ணீர் எப்போதும் இருக்கும். எதிரே ராமர் பாதம் அதன் அருகே பத்திரகாளி அம்மனுக்கு தனியே ஒரு சன்னதியும் உள்ளது.துன்பம் தீர்க்கும் தோரணமலை முருகனுக்கு ஒவ்வொரு ஆண்டும் தைபூசம், வைகாசி விசாகம், சித்திரை திருநாளும் முக்கிய திருவிழாக்களாக வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
வழிபாடுகள்

பலன் தரும் வழிபாடுகள்..

சிறந்த பிரார்த்தனை தலமாக விளங்கும் தோரணமலை முருகன் கோவிலில் தமிழ்மாத கடைசி வெள்ளிக்கிழமை தோறும் உச்சிகால பூஜையின் போது (11 மணி முதல் 1.30 மணி வரை) சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் அன்னதானமும் நடக்கின்றன.

திருமணம், மகப்பேறு ஆகியவற்றுக்காகவும் நோய் குணமாகவும் சொத்து தகராறு, குடும்பத்தகராறு நீங்கவும் தோரணமலை முருகனை வழிபட்டு வருகின்றனர். மருத்துவ படிப்பு, விரும்பிய வேலை, தொழில் அமையவும் உயர்பதவி கிடைக்கவும் அருள்பாலிக்கிறான் முருகன். செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் கார்த்திகை, விசாகம் ஆகிய நட்சத்திரங்களும் முருகனை வழிபட உகந்ததாகும்.

மலை அடிவாரத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். வல்லவ விநாயகர், குருபகவான், நவகிரகங்கள், சிவன், கிருஷ்ணர், பார்வதி, மகாலட்சுமி, சரஸ்வதி, சப்தகன்னியர் ஆகியோரையும் அடிவாரத்தில் தரிசிக்கலாம்.

தொடர்பு கொள்ள
தகவல் அறிய :

9965762002 (கே.ஏ.செண்பகராமன்) என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கோவில் பற்றிய விவரங்களை அறியலாம்..

மாவட்ட அறிவியல் மையம்

தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள நாட்டின் மிக முக்கியமான அறிவியல் மையங்களில் இதுவும் ஒன்று. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையுடன் இணைந்த தேசிய அறிவியல் காட்சி சாலைகள் கழகத்தின ஒரு பிரிவு இது. இந்தியாவில் உள்ள 124 அறிவியல் மையங்களில் இதுவும் ஒன்று. இங்கு கடல் பற்றிய மூன்று நிரந்தரக் காட்சி சாலைகள், 6 ஏக்கரில் அறிவியல் பூங்கா ஆகியவை அமைந்துள்ளன. மேலும் நடமாடும் அறிவியல் பொருட்காட்சி, கோளரங்கம் தற்காலிக அறிவியல் மற்றும் நாடகக் காட்சி வசதிகளும் உள்ளன.

களக்காடு வனவிலங்கு சரணாலயம்

நெல்லையிலிருந்து 47 கி.மீ. தொலையில் உள்ள விலங்குகள் சரணாலயம் . அடிப்படையில் இது புலிகளுக்கான சரணாலயம் எனினும் சிங்கவால் மற்றும் நீளவால் குரங்குகளும் இங்கு உண்டு. வனத்துறையிடம் அனுமதி பெற்று வாகனத்தில் பயணம் செய்யலாம். செங்கால் தேரி வன ஓய்வகத்தில் உணவு உறைவிட வசதி கிடைக்கும். செப்டம்பர் முதல் மார்ச் வரை இங்கு செல்லலாம்.

கிருஷ்ணாபுரம்

நெல்லையிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள பெருமாள் கோயில் இது. இக்கோயிலின் ஆளுயர சிற்பங்கள் பிரமிப்பூட்டுபவை.

மாஞ்சோலை

நெல்லையிலிருந்து 57 கி.மீ தூரத்தில் 1162 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்களின் பகுதிதான் மாஞ்சோலை. இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் 4000 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்.

குறுக்குத்துறை முருகன் கோயில்

தாமிரபரணி ஆற்றிலிருந்து கிளம்பும் பனிமுட்டம் தழுவ, முருகன் கோயில் கொண்டிருக்கும் திருஉருவ மலை. இந்தப் பாறையில் இருந்துதான் 1653 ஆம் ஆண்டு திருச்செந்தூர் முருகன் சிலை வடிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

நாங்குநரி

நெல்லையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள அழகான ஊர். சுற்றிலும் வயல்களும் பெரிய குளமும் பசுமையான காட்சிகள். இஸ்லாமியர்களும் இந்துக்களும் பேதமின்றி கூடிவாழும் அழகிய ஊர்.

மணிமுத்தாறு அணை

நெல்லையிலிருந்து 47 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த அணைக்கட்டு. இங்கிருந்து 5 கி.மீ தூரத்தில் மணிமுத்தாறு அருவி இருக்கிறது. அணைக்கட்டில் இருந்து 10 கி.மீ. தூரத்தில்தான் மாஞ்சோலை எஸ்டேட் இருக்கிறது.

கழுகுமலை

சமண மதத்தின் மிக முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்று. சமணர்களின் சிற்பக் கலைத்திறனுக்குச் சிறந்த உதாரணம் இங்குள்ள கோயில்தான். சிவபெருமானுக்கென்று கட்டப்பட்ட குடைவரைக் கோயிலான வெட்டுவான் கோயிலும் இந்தக் கழுகுமலையில்தான் உள்ளது.

முருகன் கோயில்

முருகனுக்கு இரண்டு கோயில்கள் உள்ளன. ஒன்று நகரின் இதயப் பகுதியிலும் இன்னொன்று தாமிரபரணி நதியின் தீவுப்புறத்தில் உள்ள பாறைக் கோயிலும் ஆகும்.

அருங்காட்சியகம்

நெல்லையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாளையங்கோட்டையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இது ஒரு பல்நோக்கு தொல்லியல் அருங்காட்சியகமாகும். அனுமதி இலவசம்.

பாபநாசம்

பாவங்கள் அனைத்தையும் நாசம் செய்யும் இடம் என்பதால் இது பாபநாசம் என்று அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் பொதிகை மலையில் இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது. அகத்தியருக்கு இங்கு கோயில் உள்ளது. சிவனும் பார்வதியும் அகத்தியருக்கு நேரில் காட்சி தந்த இடம் இதுதான் என்றும் கூறப்படுகிறது. பாபநாசம் நீர்வீழ்ச்சி இதன் அருகில்தான் உள்ளது. நெல்லையிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ளது.

நம்பி மலை

ஒரு குன்று. அதைச் சுற்றி அழகிய கிராமம். இந்தக் குன்றில் நம்பியாண்டவர் குடி கொண்டுள்ளார். மலை நம்பி என்றும் இவரை அழைக்கிறார்கள். குன்றிலிருந்து கிராமத்தின் முழு அழகையும் ரசிக்கலாம்.

பத்தமடை

மென்மையான கைக்குள் சுருட்டும் அளவு நேர்த்தியான கோரைப்பாய்களுக்கு பெயர் பெற்ற ஊர். நீரோடைக் கரைகளில் நீண்டு வளரும் கோரைகளால் இந்தப் பாய் பின்னப்படுகிறது. சுவாமி சிவானந்தா இந்த ஊரில்தான் பிறந்தார்.

சாலைக் குமரன் கோயில்

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள இந்தக் கோயில் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது என்பதற்காக 1965 இல் வெற்றி விருது பெற்றது.

கும்பருட்டி அருவி

குற்றாலத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் மேற்கு மலைத் தொடரில் இருக்கும் அருவி. இந்த அருவியை ஒட்டி நீந்துவதற்கு வசதியாகக் குளமும் உள்ளது.

பொட்டல் புதூர் தர்கா

1674 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மிகப் பழமையான தர்கா. இந்தத் தர்காவின் கட்டட அமைப்பு இந்திய கட்டடக் கலையைச் சார்ந்தது. இங்கு நடக்கும் வழிபாடும்கூட இந்துக்களின் சாயலை ஒத்ததாகவே இருக்கும். இங்கு நடக்கும் கந்தூரி திருவிழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வார்கள். தொலைபேசி - 04634-240566.


நெல்லையப்பர் - காந்திமதி கோயில்

நெல்லையின் முக்கியமான சிறப்பே நெல்லையப்பர் - காந்திமதி கோயில்தான். அம்மைக்கும் அப்பனுக்கும்தனிக் கோயில்கள் இங்கு உள்ளன. அரிய வேலைப்பாடுகள் உள்ள ஆவணங்கள், தங்க அல்லிக்குளம் இசைத் தூண்கள் ஆயிரங்கால் மண்டபம் போன்றவை இக்கோயிலின் தனிச்சிறப்புகள். தொலைபேசி - 0462 - 2339910.

சங்கரன் கோயில்

சிவனும், பெருமாளும் ஒருவராய் இணைந்திருக்கும் கோயில் என்பதால் இந்தக் கோயிலில் உள்ள மூலவர் சங்கர நாராயணர் ஆகும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தச் சிலையின் திருவடிகளை கதிரவன் தழுவுவதாகக் கூறப்படுகிறது. சிவனுக்கும் பார்வதிக்கும் தனித் தனி சந்நிதிகளும் இங்குண்டு. நெல்லையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது சங்கரன் கோயில். தொலைபேசி - 04636-222265.

முண்டன் துறை வனவிலங்கு சரணாலயம்

நெல்லையிலிருந்து 56 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த வனவிலங்கு சரணாலயம். இதன் பரப்பளவு 567 ச.மீட்டர்கள். இங்கு புலி, சிங்கவால் குரங்கு, கரடி, கேளை ஆடு, ஓநாய் போன்ற மிருகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. வனத்துறை அனுமதி பெற்று வாகனத்தில் சுற்றிப் பார்க்கலாம். முண்டன்துறை வன ஓய்வகத்தில் உணவு மற்றும் உறைவிட வசதி உள்ளது. தொலைபேசி - 04364-250594.

தென்காசி - காசி விஸ்வநாதர் கோயில்

வடநாட்டுக்கு ஒரு காசி இருப்பது போல் இது தென்னாட்டில் உள்ள காசி. தென்காசி பேருந்து நிலையம் அருகில்தான் காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. கோயிலின் நீளம் 554 அடி அகலம் 318 அடி. இதன் பிரமாண்டமான கோபுரத்தை 1456 ஆம் ஆண்டு பராக்கிரம பாண்டிய மன்னன் கட்டியுள்ளான். 1924 ஆம் ஆண்டு பேரிடி ஒன்று தாக்கியதில் இந்தக் கோபுரம் தகர்ந்து விழுந்தது. சமீபத்தில் 168 அடி உயரத்தில் மீண்டும் அந்தக் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. இக்கோயிலில் 1927 ஆம் ஆண்டு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியால் தொடங்கப்பட்ட திருவள்ளுவர் கழகம் இன்றும் சிறப்பாகத் தமிழ்ப்பணியில் ஈடுபட்டு வருகிறது. நெல்லையிலிருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ளது தென்காசி. தொலைபேசி - 04633-222373.

திருக்குறுங்குடி

மேற்குத் தொடர்ச்சி மலையில் நம்பி ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகிய கிராமம். புராணங்களில் நாராயணன் வந்து இவ்வூரில் தங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ட்ரினிடி கதீட்ரல் தேவாலயம்

திருநெல்வேலியின் முக்கிய அடையாளங்களில் இதுவும் ஒன்று. 1826 ஆம் ஆண்டு ரெவரன்ட் ரெகினியஸ் என்பவரால் கட்டப்பட்ட அழகிய தேவாலயம். நெல்லையிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் முருகன் குறிச்சி என்ற இடத்தில் அமைந்துள்ளது.

திருவிடைமருதூர்

நெல்லையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகிய கோயில். இங்கு அதலநாதர் மற்றும் நாறும்பூநாதர் ஆகியோர் கோயில் கொண்டுள்ளனர். இக்கோயில் சேர சோழ பாண்டியர்கள் மட்டுமல்லாது விஜயநகரப் பேரரசின் கட்டுமான சிற்பக் கலைகளையும் பிரதிபலிக்கும் சாட்சியாக இருந்து வருகிறது.

ஞாயிறு, 19 மே, 2019

அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்..


அவசியம் கடைபிடிக்க வேண்டிய  ஆரோக்கிய குறிப்புகள்..

1🍁. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள்.

2🍁. பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.

3🍁. தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.

4🍁. இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.

5🍁. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல.

6🍁. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். விளையாட்டு சிறுவர்களுக்கு மட்டுமல்ல.

7🍁. ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக  இருந்து சிந்தியுங்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். அவ்வப்போது  மனதுக்குள் சிறிது நேரம்  பிரார்த்தனை செய்யங்கள் .

8🍁. டிவி பார்ப்பதை குறைத்துக் கொண்டு  நிறைய நல்ல புத்தகங்களைப்  படியுங்கள்.  பிள்ளைகளுக்கு நல்ல நிஷயங்களை  சொல்லிக் கொடுங்கள்.

9🍁. குழந்தைகளிடம் Smart Phone களை கொடுக்காதீர்கள். தேவையற்ற விஷயங்களுக்காக Whatsup, Facebook போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

10🍁. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.

11🍁. தினம் 20 நிமிடங்கள் ரிலாக்ஸாக  நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். (உடற்பயிற்சிக்காக அல்ல மன அமைதிக்காக)

12🍁. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடமே உள்ளது.

13🍁. எப்போதும் மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள். 

14🍁. கடுமையாக உழைக்காதீர்கள்.  உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

15🍁. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள். உங்களைப் பற்றி புறம் பேசப்படுவதை பொருட்படுத்தாதீர்கள்.

16🍁. நீங்கள் விழித்திருக்கும் பொழுது உங்கள் தேவைகளைப் பற்றி நிறைய கனவு காணுங்கள்.  அதை செயல்படுத்தவும்  முயற்சி செய்யுங்கள்.

17🍁. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை தானமாக கொடுத்து விடுங்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

18🍁. கடந்த காலத்தை மறந்து விடுங்கள்.  முடிந்தது முடிந்தவையாக இருக்கட்டும். நிகழ் காலத்தில் வாழுங்கள். மகிழ்ச்சியும் மன அமைதியும் தானாக வரும்.

19🍁. குறுகிய கால இந்த வாழ்க்கையில்  யாரையும் வெறுக்காதீர்கள். வெறுப்பு உங்களை தான் பாதிக்கும்.

20🍁. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள் சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

21🍁. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லிவிடுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடும்.

22🍁. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, SMS மூலமாகவோ தொடர்பு கொண்டிருங்கள். இது உங்களுக்கும் அவர்களுக்கும் மன அமைதியையும், பரஸ்பர அன்பையும் மேம்படுத்தும்.

23🍁. மன்னிக்கப் பழகுங்கள். தேவையான நேரத்தில் தயங்காமல் மன்னிப்பும் கேளுங்கள்.  உங்கள் மனபாரம் நீங்கும்.

24🍁. 60 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களுக்கு உங்கள் அன்பு தான் முக்கியம். பணம் முக்கியமல்ல.

25🍁. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள். எப்பொழுதும் உங்களைப் பற்றி நினைப்பது மாற்றவர்களின் வேலையல்ல.

26🍁. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள். உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27🍁. உங்களின் நிறைவேறிய தேவைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நிறைவேறாத தேவைக்கு பிரார்த்தனை செய்யுங்கள்.

28🍁. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் மட்டும்தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள். அவ்வப்போது உங்களிடம் உள்ள நல்லவைகளை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்.

29🍁. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, அன்பை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை ஒதுக்கி விடுங்கள்.
     
30🍁. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல. கவலைகளும், நோய்களும் கூட...
எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

மலச்சிக்கல் இல்லாமல் எழுவதும், மனச் சிக்கல் இல்லாமல் தூங்குவதும் தான் ஆரோக்கியம்.

இதை கடைபிடியுங்கள் உங்கள் வாழ்கை ஆரோக்கியமாக இருக்கும்.

வெள்ளி, 10 மே, 2019

மாதவிடாய் நாட்களில் மனைவியிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்…?


மாதவிடாய் நாட்களில் மனைவியிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்…?

மாதவிடாய் என்பது பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து நாற்பத்தைந்து அல்லது ஐம்பது வரை மாதாமாதம் வரக்கூடியது. மூன்றில் இருந்து ஐந்து நாட்கள் வரை இது நீடிக்கலாம். இந்த நாட்கள் பெண்களின் வாழ்க்கையில் மிகவும் வலி மிகுந்த நாட்களாகும்.

கணவனான நீங்கள் இம்மாதிரி சமயங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று அவசியம் தெரிந்துக் கொள்ளுங்கள்.

மனைவி இம்மாதிரி சமயங்களில் கணவனிடம் அதிகமாக எதிர்பார்ப்பது என்ன தெரியுமா?

#கணவனின்_அன்பும்,
#அதிக_அக்கறையும்_தான்.

மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு கோபம் சற்று அதிகமாகவே வரும். காரணம் அவர்கள் தாங்கிக் கொண்டிருக்கும் அந்த வலி. எனவே, மாதவிடாய் நாட்களில் மனைவி கோபப்பட்டால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் வேண்டுமென்று அவ்வாறு கோபமடைவதில்லை. முடிந்தால் இந்த நாட்களில் உணவுகளை நீங்கள் சமைக்கவோ அல்லது அவர்களுக்கு உதவவோ செய்யலாம். அல்லது ஓட்டல்களில் வாங்கி வந்து சாப்பிடலாம்.

மாதவிடாய் நாட்களில் அவர்கள் வீட்டு வேலைகள் சரிவர செய்யவில்லை என கணவர்கள் கோபப்பட வேண்டாம். இது உடலளவில் சோர்ந்து போயிருக்கும் அவர்களின் மனதை மேலும் சோர்வடைய செய்யும்.

அந்த நாட்களில் பெண்களுக்கு இடுப்பு மிகவும் வலியெடுக்கும். கால் வீக்கம் சில பெண்களுக்கு இருக்கும்.

கணவன்மார்கள் மனைவியிடம் கேட்டு இதமாக பிடித்து விடலாம். பெண்கள் இம்மாதிரி நாட்களில் அதிகம் அலைய முடியாது என்பதால், மார்கெட் சென்று வருவது போன்ற வேலைகளை நீங்கள் செய்யலாம்.

வலி மிகுதியாக இருக்கிறதா என அவ்வப்போது கேட்பதால் மனைவியிடம் நீங்கள் காட்டும் அக்கறை தெரிய வரும். அவர்களுக்கு இது ஆறுதலாகவும் இருக்கும்.

இன்று நாம் இரண்டு பேறும் ஒன்றாக வெளியே  போலாம் என்று பார்த்தேன், நல்ல நாள், நல்ல காரியம் இன்று போய் இப்படி மாதவிடாய் என்று கூறுகிறாயே… என பல வீடுகளில் ஆண்கள் கோபத்தில் திட்டுவது வழக்கம்.

மாதவிடாய் என்பது ஒவ்வொரு மாதமும் நடக்கும் இயற்கையான நிகழ்வு. இதை தடுக்க முடியாது. எனவே, ஏற்கனவே வலியில் இருக்கும் அவர்களை வார்த்தைகளால் துன்புறுத்துவதை தவிர்க்கவும்.

வீட்டிற்கு மாதாந்திர சாமான்கள் வாங்கும் போது மனைவியே மறந்து விட்டாலும், அவர்களுக்கு தேவையான நாப்கின்கள், டெட்டால் மற்றும் சோப்பு வகைகளை வாங்க நினைவுப்படுத்த வேண்டும். இதை படிப்பதுடன் நிறுத்தி விடாமல், வாழ்க்கையில் கடைப்பிடிப்பது அவசியமானதே!?

பெண்களின் மனது பூ போலத்தான் அதில் வாசனை வருவதும் வாடிப்போவதும் ஆண்களின் கையில் தான் உள்ளது.

புதன், 8 மே, 2019

ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட்டை உற்று நோக்கியபடியே நீண்ட நேரம் விளையாடும் குழந்தைகளுக்கு கண் அழுத்த நோய் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.


ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லெட்டை உற்று நோக்கியபடியே நீண்ட நேரம் விளையாடும் குழந்தைகளுக்கு கண் அழுத்த நோய் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

மனித உடலில் கண்கள் மிக உன்னதமானது.. காட்சிகளை நரம்பு வழியாக மூளைக்கு அனுப்பி அதனை உணர வைக்கின்ற மிக அற்புதமான பாகம்..! அதனை நாம் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்வது அவசியம்..!
கண்களுக்கு வெளியே அதனை அழகு படுத்துவதற்கு அதீத ஆர்வம் கொள்ளும் நாம் கண்களை பாதுகாப்பதில் அதிக அக்கறை காட்டுவதில்லை என்பதற்கு கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே உதாரணம்..!
நிமிடத்திற்கு 6 முறை அணிச்சை செயலாக மூடி திறக்கும் இமையின் வேலை என்பது கார் கண்ணாடியை துடைத்து பளிச்சிட வைப்பருக்கு ஒப்பானது.
அந்த இமையின் வேலையை கூட நம்மில் பலர் செய்ய விடுவது இல்லை. அந்த அளவிற்கு செல்போன், டேப்லெட், கம்யூட்டர், டிவி என கண்ணை பாதிக்கும் அதீத செளிச்சம் கொண்ட மின்சாதன பொருட்களை கண்கொட்டாமல் உற்று நோக்கி அதில் மூழ்கிக் கிடக்கின்றனர்.
அதிலும் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் ஒரு படிமேல், வீடியோ கேம் விளையாடுவதாக கையில் ஸ்மார்ட் போனை எடுத்து விட்டால் போதும் சுற்றி என்ன நடக்கிறது ? என்பதை எல்லாம் பார்ப்பதில்லை. கோடை விடுமுறை என்பதால் கடிவாளம் கட்டிய குதிரை போல தங்களது இரு கண்களின் பார்வை திறனையும் முழுவதுமாக ஸ்மார்ட் போனை கையாளுவதிலேயே கழிக்கின்றனர்...!
சிறுவர்கள் இப்படி என்றால் வாட்ஸ் ஆப் மற்றும் சமூகவலைதள அடிமைகளாக இருக்கின்ற இளைஞர்கள் மற்றும் தங்கள் வேலைக்கு என்று தினமும் கணினியோடு கழிக்கும் பணியாளர்கள் என பலருக்கும் கண்களைப் பற்றி போதிய அக்கறையோ விழிப்புணர்வோ இருப்பதாக தெரியவில்லை..!
குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் தாய்மார்களும் தொலைக்காட்சிகளை பார்ப்பதில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். தொடர்ந்து இது போன்ற செயல்களை செய்வதால் தற்போது வரை சென்னையில் மட்டும் 10 சதவீதம் பேர் கண் அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குனர் ஆனந்தபாபு தெரிவித்துள்ளார்.
கண் அழுத்த நோய் ஏற்பட்டால், ஆரம்பத்தில் தலைவலி ஏற்படும், கண்கள் சிவப்பாகும், கண்ணில் எரிச்சல் உண்டாகும், அப்போது சரி செய்யவில்லை என்றால் பார்வை திறன் மெல்ல குறுகி நேராக உள்ள பொருட்கள் மட்டுமே கண்களுக்கு தெரியும் அப்போதும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து ஸ்மார்ட் போனே கதி என்று சுற்றினால் பார்வையை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
40 வயதிற்கு மேற்பட்டவர்கள் எப்போதும் கணினியுடன் பணியில் இருப்பவராக இருந்தால் 20 நிமிடத்திற்கு 20 நொடியாவது கண்களை வேறு பொருட்களை உற்று நோக்க வேண்டும்.
குறிப்பாக சிறு குழந்தைகள், சிறுவர்கள் கூடுமானவரை செல்போனிலும், டேப்லெட்டிலும் விளையாடுவதை தவிர்த்து பூங்காவில் சென்று நண்பர்களுடன் உற்சாகமாக விளையாடி மகிழுங்கள் அப்போது உங்கள் உடலில் வியர்வை போல, கண்ணின் வலது மற்றும் இடது புறங்களில் அமைந்துள்ள குளுமோமா சுரபி இயல்பாக சுரக்க தொடங்கும். கண் அழுத்த நோயும் நீங்கும்..! என்கின்றனர் மருத்துவர்கள்.
குழந்தைகளை கண்ணே... மணியே... என்று கொஞ்சினால் மட்டும் போதாது அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களை வழி நடத்துவதும் ஒவ்வொரு பெற்றோரின் கடமை..!


புதன், 1 மே, 2019

வடுவூர்... பறவைகள் சரணாலயம்


வடுவூர்... பறவைகள் சரணாலயம்...!!


🐦 வடுவூர் பறவைகள் சரணாலயம் திருவாரூரிலிருந்து ஏறத்தாழ 44கி.மீ தொலைவிலும், தஞ்சாவூரிலிருந்து ஏறத்தாழ 24கி.மீ தொலைவிலும், மன்னார்குடியிலிருந்து ஏறத்தாழ 16கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

சிறப்புகள் :

🐦 தஞ்சாவூரிலிருந்து மன்னார்குடி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இடம்தான் வடுவூர்.

🐦 பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அழகிய ஏரி, நடுவே கருவேள், கொடுக்காப்புளி மற்றும் நீர்க்கடம்பு என பலவகையான மரங்கள் இங்கு பறவைகளுக்கு இளைப்பாற இடம் தருகின்றன.

🐦 இங்கு பார்வையாளர்கள் பறவைகள் ரசிப்பது மட்டுமின்றி அவற்றின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள மரம் நெடுகிலும், பறவைகளின் படம், பெயர், வாழ்விடம், வருகை என எல்லாவற்றையும் பட்டியலிட்டிருக்கிறார்கள்.


🐦 ஏரியை சுற்றிப் பார்க்க சிமெண்ட் கட்டைகளால் பாதை அமைக்கப்பட்டிருக்க, சுற்றிலும் வளர்ந்திருக்கும் மரங்கள் நிழற்குடை விரிக்க, பைனாகுலர் உதவியோடு பறவைகளை அருகில் பார்க்கலாம்.

🐦 பல நாடுகளிலிருந்து இங்கு பறவைகள் அதிகம் வருகை தருகின்றன. அதனால் சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் இடமாக உள்ளது.

🐦 உணவு, தங்குமிடம் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றிற்கான பொருத்தமான சூழலை வழங்கும் இந்த இடம் பறவைகளுக்கு மிக ஏற்றதாக உள்ளது.

🐦 இப்பகுதியின் விவசாயிகள் புலம்பெயர்ந்த பறவையின் வருகையை நேசிக்கிறார்கள். குழந்தைகளுடன் இவ்விடத்திற்கு செல்வதற்கு ஏற்ற இடமாகும்.


எப்படி செல்வது?

🚌 திருவாரூரிற்கு அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. திருவாரூரிலிருந்து வடுவூர் பறவைகள் சரணாலயத்திற்கு செல்வதற்கு பேருந்து வசதிகள் உள்ளது.

🚉 மேலும் தஞ்சாவூரிலிருந்து பேருந்து அல்லது வாடகை வாகனங்களின் மூலம் வடுவூருக்கு செல்லலாம். அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் ரயில் மற்றும் பேருந்து வசதிகள் தஞ்சாவூருக்கு உள்ளன.

எங்கு தங்குவது?

🏩 திருவாரூர் மற்றும் தஞ்சாவூரில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

மேலும், இதுபோன்ற சுவாரஸ்யமான பல சுற்றுலா தலங்கள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள வேண்டுமா? அதற்கு இதுதான் சிறந்த செயலி... 👇


இங்கே கிளிக் செய்யுங்கள்..👆👆👆
இதர சுற்றுலாத்தலங்கள் :

🐦 உதயமார்த்தாண்டபுரம் பறவையகம்.
🌳 முத்துப்பேட்டை சதுப்பு நில காடுகள்.
🙏 தியாகராஜசுவாமி திருக்கோவில்.