ஞாயிறு, 21 ஜூன், 2020

டாப் 10 விளையாட்டு வீராங்கனைகள்!



இந்தியாவில் புகழ் பெற்ற விளையாட்டு வீராங்கனைகள் 

டாப் 10 விளையாட்டு வீராங்கனைகள்!

இன்றைய உலகில் பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை. விளையாட்டை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன?
இந்திய அளவிலும் தமிழக அளவிலும் முன்னிலை வகிக்கும் டாப் 10 வீராங்கனைகள் பற்றிய தொகுப்பு இது!

சானியா மிர்சா (26)

மகளிர் டென்னிஸில் இந்தியராலும் சாதிக்க முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்துக் காட்டியவர். கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை. ஒற்றையர் பிரிவில் அவ்வளவாக எடுபடாவிட்டாலும் மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் அலட்சியப்படுத்த முடியாத வீராங்கனை!

மேரி கோம் (30)

மணிப்பூர் மங்கை. குத்துச்சண்டையில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். லண்டன் ஒலிம்பிக்சில் வெண்கலம் வென்றார். நல்ல ஃபார்மில் இருந்தபோது, ஒலிம்பிக்கில் பாக்சிங் இடம் பெற்றிருந்தால் நிச்சயம் தங்கம் வென்றிருப்பார். அடுத்த ஒலிம்பிக்கிலும் களமிறங்கி சாதிக்கும் உறுதியுடன் பயிற்சி செய்து வருகிறார்.

சாய்னா நெஹ்வால் (22)

பேட்மிண்டன் அரங்கில் இந்தியாவின் பெயரை அழுத்தமாகப் பதிவு செய்தவர். உலக அளவில் 2வது ரேங்க் வரை முன்னேறியுள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த இந்த வீராங்கனை நம்பர் 1 ஆகும் நாள் தூரமில்லை. சூப்பர் சீரிஸ் போட்டிகளில் பட்டம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை, இந்தியாவில் கிரிக்கெட் தவிர்த்து மற்ற விளையாட்டுகளில் அதிகம் சம்பாதிப்பவர் என்ற பெருமைக்குரியவர்.
 
ஜுவாலா கட்டா (29)

மகளிர் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். கலப்பு இரட்டையர் பிரிவில், ‘வலியவீட்டில் திஜு’வுடன் இணைந்து களமிறங்கி ஏராளமான வெற்றிகளைக் குவித்துள்ளார். டெல்லி காமன்வெல்த் போட்டியில் (2010) மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தவர்.   

மித்தாலி ராஜ் (30)

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன். சிறந்த ஆல்ரவுண்டர். 2005 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை முன்னேற வைத்தவர். அந்தத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக அதிரடியாக ஆட்டமிழக்காமல் 91 ரன் விளாசி அசத்தியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் ரயில்வேஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.



தீபிகா குமாரி (18)

வில்வித்தையில் அசத்தி வரும் ராஞ்சி வீராங்கனை. டெல்லி காமன்வெல்த் போட்டியில் இரண்டு தங்கம் வென்று சாதனை படைத்தவர். மிக இளம் வயதில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக முன்னேறி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். லண்டன் ஒலிம்பிக்கில் ஏமாற்றம் அளித்தாலும், அடுத்து வரும் போட்டிகளில் அமர்க்களப்படுத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கிருஷ்ண பூனியா (35)

வட்டு எறிதலில் தேசிய சாம்பியன். டெல்லி காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தவர். தோஹா (2006), குவாங்ஸூ (2010) ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லத் தவறினாலும் 7வது இடம் பிடித்ததே பெரிய சாதனை!

ரித்து ராணி (21)

இந்திய ஹாக்கி அணியின் கேப்டன். சாம்பியன்ஸ் சேலஞ்ச் கோப்பையை வென்று பெருமை சேர்த்தவர். ஆசிய ஹாக்கி கூட்டமைப்பின் 2011ம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த உலக ஹாக்கி லீக் தொடரின் 2வது சுற்றில் இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தி 3வது சுற்றுக்கு முன்னேற வைத்தவர். இவரது தலைமையில் இந்திய அணி புதிய எழுச்சி பெறும் என்ற நம்பிக்கை உருவாகி உள்ளது.

கீதா போகத் (24)

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமைக்குரியவர். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனையும் இவர்தான். அரியானாவைச் சேர்ந்த இவர் ஆசிய கேடட் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ச்சியாக 3 முறை (2003, 2004, 2005) தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்த மாணவி.

தீபிகா பாலிகல் (21)

ஸ்குவாஷ் நட்சத்திரம். முன்னணி மாடல். உலக அளவில் ‘விஸ்பா’ தரவரிசை டாப் 10ல் இடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை. ஜூனியர் பிரிவில் ஜெர்மன் ஓபன், டட்ச் ஓபன், பிரெஞ்ச் ஓபன், ஆஸி. ஓபன், ஸ்காட்டிஷ் ஓபன் என்று சாம்பியன் பட்டங்களை அள்ளியவர். 2011ல் மட்டும் 3 விஸ்பா தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த ஆண்டு மீடோவுட் பார்மசி ஓபன் தொடரில் சாம்பியன்.  


தமிழகம் டாப் 10

திருஷ்காமினி    கிரிக்கெட்
ஜோஷ்னா சின்னப்பா    ஸ்குவாஷ்
இளவழகி    கேரம்
எஸ்.கவிதா    கபடி
காயத்ரி    தடகளம்
ஜான்சி ராணி    தடகளம்
நிரஞ்சனா    கிரிக்கெட்
மிஷல் கேத்ரினா    செஸ்
அம்ரின் முபாரக்    பேட்மிண்டன்
வாசவி கணேசன்    டென்னிஸ்

செவ்வாய், 16 ஜூன், 2020

காஃபி பிரியரா நீங்கள்? இன்ஸ்டன்ட் காஃபி மற்றும் ஃபில்டர் காஃபி இவற்றில் சிறந்தது எது தெரியுமா?



💗உடல் நலம்....


காஃபி பிரியரா நீங்கள்? இன்ஸ்டன்ட் காஃபி மற்றும் ஃபில்டர் காஃபி இவற்றில் சிறந்தது எது தெரியுமா?

காஃபி குடிக்கும் பல வீடுகளில் ஃபில்டர் காஃபியைப் புகழ்ந்து பேசுகின்றனர். ஆனால், இன்ஸ்டன்ட் காபியைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. ஆனால், மறுபுறம், உடனடி காபி பிரியர்கள் ஆடம்பரத்தையோ அல்லது அதன் உடனடி நெஸ்ஸையோ விட்டு விட்டு, ஒரு கப் காஃபியைப் பெறுவதற்கு நீண்ட மற்றும் விலையுயர்ந்த பணி என்று அழைக்கப்படும் இடத்திற்கு மாறுவது கடினம். இவர்கள் இரண்டும் ஒருவருக்கொருவர் மிகவும் வித்தியாசமாக இருப்பது ஏன்? இன்ஸ்டன்ட் மற்றும் ஃபில்டர் காஃபி ஆகியவற்றில் எது சிறந்தது? என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

*இன்ஸ்டன்ட் காஃபி..*

இன்ஸ்டன்ட் காஃபியை அறிந்திருக்காதவர்கள் யாருமில்லை. உடனடி காபியை சில நிமிடங்களில் செய்து முடித்து விடலாம். இது ஒரு வகையான காபி கரைசலாக மாற்றப்பட்டுள்ளது. இது முழு உலர்த்தும் செயல்முறைக்கு உட்படுகிறது. சிறிதளவு தண்ணீர் அல்லது பாலை கொதிக்க வைத்து, அதை ஒரு கோப்பையில் ஊற்றி சிறிதளவு காபி பொடியையம் , தேவையான அளவு சர்க்கரையும் சேர்த்து நன்கு கலக்கினால், சுவையான இன்ஸ்டன்ட் காஃபி தயார். இந்த காபி சரியான விளைவைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் இது விரைவானது மற்றும் விரைவாக வேலை செய்கிறது. இருப்பினும், சுவையானது ஒரு பெரிய அளவிற்கு மாறுபடும்.

*பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்..*

ஏனெனில், பெரும்பாலும், காபி பீன்களின் மலிவான தரம் உடனடி காபியைத் தயாரிக்கப் பயன்படுகிறது. ஆனால் நேரம் மற்றும் உடனடி காபிக்கு அதிக தேவை இருப்பதால், உற்பத்தியாளர்கள் இப்போது உடனடி காபியின் தரத்தை நன்றாக மேம்படுத்த தயாராக உள்ளனர். உடனடி காபியில் புதிய காபியின் செழுமை இல்லை, மேலும் காஃபின் குறைவாகவும் உள்ளது. காஃபினேட்டட் (caffeine) பானங்களை உட்கொள்பவர்கள் பெரும்பாலும் வயிற்றுப்போக்கு அல்லது அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், இது வெறும் வயிற்றில் பானங்கள்(காபி) உட்கொள்ளும் போது முக்கியமாக நிகழ்கிறது.

*ஃபில்டர் காஃபி..*

தமிழ்நாட்டில் ஃபில்டர் காஃபி பற்றி தெரியாதவர்களே இருக்க வாய்ப்பில்லை. அதிலும் கும்பகோணம் ஃபில்டர் காஃபி இங்கு மிக பிரபலம். இந்த காபி புதிய அல்லது வறுத்த காபி கொட்டை கொண்டு தயாரிக்கப் படுகிறது. அவை முதலில் தரையில் வைக்கப்பட்டு பின்னர் பயன்படுத்தப் படுகின்றன. முழு செயல் முறைக்கும் குறைந்தது சில நிமிடங்கள் மற்றும் சில சிறப்பு காபி உபகரணங்கள் தேவைப் படுகின்றன. இது இல்லாமல், வடிகட்டி காபியை தயாரிப்பது கடினம். இதன் மூலம், இது ஒரு திறமையான வேலை என்பதையும், அனைவருக்கும் செய்ய அவ்வளவு எளிதானது அல்ல என்பதையும் நாம் உணர வேண்டும். எனவே, உங்களிடம் நேரம் இருந்தால், இந்த காபியை உங்களுக்காக தயாரிக்கும் பணியை நீங்கள் மேற்கொள்ளலாம்.

*மிகுந்த சுவையை தருகிறது..*

ஃபில்டர் காஃபி சுவைக்கு வரும்போது, வடிகட்டி காபி நாக்கில் வெளிச்சமாகவும், உடனடி காபியை விட புத்துணர்ச்சியுடனும் உணர்கிறது. ஏனென்றால், ஃபில்டர் காஃபியில் பயன் படுத்தப்படும் காபி பீன்ஸ் பொதுவாக உயர் தரமானது மற்றும் பெரும்பாலான அத்தியாவசிய எண்ணெய்களை அப்படியே கொண்டிருப்பதால், உங்கள் நாக்கில் நுட்பமான மற்றும் முழுமையான சுவையாக இருக்கும். ஒரு வடிகட்டி அல்லது புதிய காபியில் காஃபின் உள்ளடக்கம் இயற்கையாகவே அதிகமாக உள்ளது, ஏனெனில் இது கிரவுண்டிங் செயல்பாட்டில் அதிகம் இழக்கவில்லை. மேலும் பயன் படுத்தப்படும் காபி பீன்ஸ் பொதுவாக உயர்தர ரோபஸ்டா பீன்ஸ் என்றும் கருதுகிறது.

*எது சிறந்தது?*

இன்ஸ்டன்ட் காஃபி மற்றும் ஃபில்டர் காஃபி இரண்டையும் ஒப்பீடு செய்தால், ஒரு எளிய புள்ளியில் வரும், அதுதான் ‘உங்கள் காபியை நீங்கள் எப்படி விரும்புகிறீர்கள்' என்பது. இரண்டு காஃபிகளையும் தவறாமல் வைத்திருப்பது நீங்களாக அல்லது உங்கள் வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்கும் சூழலாக இருக்கலாம். நீங்கள் காபி-க்கு மட்டுமே செல்லக்கூடிய வேகமான வாழ்க்கை இருந்தால், உடனடி காபி உங்களுக்கு ஒரு வழி. ஆனால், காலையில் நீங்கள் காபி சாப்பிடுவது புத்துணர்ச்சியாகவும், எல்லா சுவைகள் மற்றும் நறுமணங்களும் அப்படியே இருந்தால், உங்கள் பணத்தை ஒரு நல்ல காபியாக முதலீடு செய்வதை விட சிறந்த வழி எதுவுமில்லை, மேலும் நீங்கள் செல்ல அந்த கப் காபியை நீங்களே தேர்வு செய்யுங்கள்.

*முடிவு..*

காஃபி ஒருவரின் தனிப்பட்ட விஷயம். ஆனால், அது அவரின் ஆரோக்கியோத்தோடும் தொடர்புடையது. "சிறந்த" காபி இல்லை, நீங்கள் அதை எப்படி விரும்புகிறீர்கள் என்பது உங்களுடைய விருப்பம். முடிவில், நீங்கள் குடிக்கும் காபியைப் பொறுத்து காபி நீங்கள் விரும்பும் அல்லது விரும்பாத ஒன்றாக இருக்கலாம். அனைத்தையும் முயற்சித்து, உங்கள் முக்கிய இடத்தைக் கண்டுபிடித்து, உங்கள் தேவைகள் மற்றும் நீங்கள் விரும்புவதைப் பொறுத்து அந்த காஃபியை அருந்துங்கள்.

ஞாயிறு, 14 ஜூன், 2020

பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.


பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.

*வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைதால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்...!

*கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.

*இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.

*தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு மொறுப்பாக வரும்.

*கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்துவிடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும்.

*வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.

*கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

*வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

*சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது

.*பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.

*கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது

*காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சின்னு இருக்கும்.

*மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கிழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்.

*இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

*உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்

*வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.

*சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.

*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். *ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் அருமையான ருசியாக இருக்கும்.

*காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

*முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். *காய்கறிகள் வறுக்கும்போது எண்ணெய் சூடாகும் போது சிறிது சர்க்கரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.

*இட்லி சுடும்போது மாவில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள் கெடாமலும் இருக்கும்

. *சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும

*கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.

*உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கி அதை உருட்டி கடலை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தால் வெஜிடபுள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு எளிய வழியாக இருக்கும்.

*சமையல் அறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தமாக வைத்துக் கொள்ள பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

*காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.

*அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.

*சேனைகிழங்கு சீக்கிரம் வேக வைப்பதற்கு வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்

*புளிகுழம்பு வைக்கும் போது கடைசியில் மிளகு, சீரகம் அரைத்து பொடியை போட்டால் சுவையாக இருக்கும்.

*இறைச்சியை வேக வைக்கும் போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும். *எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.

*சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.

*தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்

*காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.

*ரவா உப்புமா அதிகமாகி விட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும்.

*ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

*கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.

*தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

*தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் புளிக்காது.

*வாழைப்பூ வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கி மோர் கலந்த நீரில் வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும். கரையும் பிடிக்காது. அதில் உள்ள துவர்ப்பும் நீங்கி விடும்.

*மழைகாலத்தில் உப்பில் நீர் சேர்ந்து விடாமல் இருப்பதற்காக நாலைந்து அரிசியை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் தண்ணீர் படியாமல் இருக்கும்.

*நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.

*இடியாப்பம் செய்து மீந்து விட்டால் அதனை ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ளலாம். நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு தேவையான போது வறுத்து சாப்பிடலாம்

. *பாகற்காயை சமைப்பதற்கு முன்னால் அரைமணி நேரம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் அதன் கசப்பு போய்விடும்...

வியாழன், 11 ஜூன், 2020

படுக்கையறை பாடம் பற்றியும் பராமரிப்பு பற்றியும் நாம் அறிய வேண்டியவை

படுக்கையறை பாடம் பற்றியும் பராமரிப்பு பற்றியும் நாம் அறிய வேண்டியவை


நாம் அனைவருமே நமது வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதி நேரத்தை படுக்கையறையில் செலவிடுகிறோம். அதாவது படுக்கை அறையில் தூங்கிக் அளிக்கிறோம் தூங்கும் போது, உடலின் நோயெதிர்ப்பு கட்டமைப்பு பகல் நேரங்களில் உருவாகும் நச்சுத்தன்மை களில் இருந்து விடுபட்டு நோய் எதிர்ப்பு திறனை வளர்த்துக் கொள்கிறது. மிக முக்கியமான இந்த செயல்பாடு தூக்கத்தில் நடைபெறுவதால் படுக்கை அறை மிக சுத்தமாக அமைய வேண்டியது அவசியம்கா. காற்றும், வெளிச்சமும் போதுமான அளவு கிடைப்பது அவசியம். படுக்கையறை சட்டத்திற்காக தெரிந்து கொள்ள வேண்டிய பாடங்கள் என்னென்ன தெரியுமா? இதோ அந்த பட்டியலைக் கீழே பார்ப்போம். முதலில் படுக்கை அறையை பாசி அண்டவிடாமல் பராமரிக்க வேண்டும் தினமும் தூங்கி விழித்த உடன் படுக்கையை சுத்தம் செய்ய வேண்டும் இதுவே சுத்தத்திற்கு அடையாளம். படுக்கை விரிப்பு மற்றும் தலையணை உறையை அவ்வப்போது மாற்ற வேண்டியது அவசியம் அப்படி இல்லை என்றால் சுத்தம் தங்காது. படுக்கை அல்லது தலையணை உறையை மாற்ற வடிவிலும் புகைப்பது நன்று வாரத்திற்கு ஒரு முறையாவது குறைப்பது மிகமிக நன்று. படுக்கையறை ஜன்னல்களில் சுத்தம் காற்றை தரும் விதத்தில் சில வகைச் செடிகளை வைக்கலாம் அதில் இருக்கும் செடிகளை தேர்ந்தெடுத்து வாங்கி பயன்படுத்துங்கள். அதுமட்டுமில்லாமல் கட்டில் ஜன்னல் காற்றாடி உள்ள தூசிகளை தினமும் செய்ய முடியாவிட்டாலும் வாரத்திற்கு ஒருமுறையாவது அல்லது மாதத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்வது மிகவும் நன்று.

கொசுக்களை விரட்டுவதற்காக பொருள்களை படுக்கை அறைக்குள் பயன்படுத்தும்போது அறையை விட்டு வெளியே வந்து விடுங்கள்.

கொசுவர்த்தி உபயோகிக்கும் போது உள்ளே படுத்து தூங்குவது நல்லதல்ல. கொசுவர்த்தி கள் எரியும்போது படுக்கை அறை கதவு ஜன்னல்களை திறந்து விடுவது நல்லது து படுக்கை அறை கதவு ஜன்னல்களை திறந்து விடுவது நல்லது. தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு கொசுவர்த்தி கலை அணைத்துவிடுங்கள் அதுவே நல்லது. உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தினமும் 7 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குகிறார்கள் ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி தினமும் 8 மணிநேர தூக்கம் அவசியம், இதயநோய் மன அழுத்தம், சர்க்கரை வியாதி உடல் பருமன் என்று பல பிரச்சனைகளை கைப்பற்றி அழைத்துவரும். தினமும் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் உறங்குவதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதமும் சராசரியாக ஏழு முறை இரவு தூக்கம் கவலைகளால் பாதிக்கப்படுகிறது இரவில் விழித்திருக்க வைத்திருப்பதில் பணப்பிரச்சனை ஆரோக்கிய அச்சம் வேலையை பற்றி கவலைகள் முக்கிய இடங்களைப் பிடிக்கின்றன கவலையால் உறக்கத்தை இறந்திருப்பது தமது அன்றாட நலத்தை பாதிப்பதை உணர்த்துவதாக பத்தில் ஏழு பேர் கூறுகிறார்கள்.

படுக்கையறையில் வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ் ஆக இருப்பது தான் சரியானது ஏன் இயல்பாகவே இரவில் நம் உடல் வெப்பநிலை தணிக்கிறது இந்நிலையில் படுக்கையறையின் குளுமை நமது உடல் வெப்பநிலை உடன் இணைந்து நல்ல உறக்கத்துக்கு உதவும். படுக்கைக்கு செல்வதற்கு 90 நிமிடங்களுக்கு முன் குளிப்பது நல்லது குளியலுக்குப் பின் உடல் வெப்பநிலை உடனடியாக குறைவதால் தூக்கம் உங்களை தாலாட்ட தொடங்கிவிடும். படுக்கையில் உறக்கத்தை எதிர்நோக்கி எவ்வளவு நேரம் கண்மூடி கிடப்பது சுமார் 20 நிமிடங்கள் எதிர்கொள்ளலாம் என்று கருத்து சொல்கிறார்கள் நிபுணர்கள் உறக்கம் உங்களை தழுவுவதற்கு அவ்வளவு நேரம் மட்டும் அனுமதிக்கலாம். அதற்குப் பின்பும் உறக்கம் வரவில்லை எனில் குறைந்த ஒளியில் மெல்லிசை கேட்பது ஏதாவது புத்தகம் வாசிப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

காபி, செயற்கை குளிர்பானங்கள், டீ, சாக்லேட் ஆகியவற்றின் தாக்கம் முழுமையாக நீங்குவதற்கு சராசரியாக எட்டு மணி நேரம் ஆகிறது. எனவே நீங்கள் மாலையில் நேரம் கடந்து பருகும் ஒரு காபி இரவில் உங்கள் தூக்கத்தில் குறுக்கிட கூடும் பிற்பகல் 2 மணிக்கு மேல் காபி பருகுவதை தவிர்ப்பது நல்லது. உங்கள் படுக்கையில் உங்களுடைய வியர்வை என்னை மட்டுமல்ல இறந்த சரும செல்களும் படுகின்றன இந்த செல்கள் கண்களுக்கு தெரியாது நுண்ணுயிரிகளுக்கு நல்ல உணவாகின்றன இந்த நுண்ணுயிரிகள் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும் தேசிய ஒழுக்கவியல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி படுக்கை விரிப்பு சுத்தமாக இருக்கும்போது தங்களால் ஆழ்ந்து உறங்கும் முடிவதாக 71 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்கின்றனர் எனவே ஏழு நாட்களுக்கு ஒருமுறையாவது வாரம் ஒருதடவை படுக்கை விரிப்பு தலையணை உறைகளை துவைத்து உலர்த்தி பயன்படுவதை வழக்கமாக வைத்திருங்கள். வெறும் ஆறு நிமிடங்கள் புத்தகம் வாசிப்பது 68 சதவீதம் அளவுக்கு மன அழுத்தத்தை குறைக்கிறது என்கிறது இங்கிலாந்து பல்கலைக்கழக ஆய்வு எனவே நூல் வாசிப்பது என்பது உறக்கத்திற்கு முன் செய்யக்கூடிய சரியான செயல் அது நம் உறக்கத்தைப் பாதிக்கும் கவலைகளில் இருந்து திசை திருப்புகிறது.

பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கவனத்திற்கு - உடனடியாக இதனை செய்யுங்கள்.


பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கவனத்திற்கு - உடனடியாக இதனை செய்யுங்கள்.

 
இனி, நம் குழந்தைகள் ÷ அனைவரும்   1, 6, 9, 11  வகுப்பு  புதிய  பாடத்திட்டத்தில்  புதிய கற்பித்தல் முறைகளுக்காக '  smartphones' பயன்பாடும், ' cam scanner, Diksa, Mx  Videoplayer,  Es file manager' போன்ற  Android Apps, ' You tube 'யும் பயன்படுத்த  தேவையும் வரலாம்.  அவ்வாறு  பயன்படுத்தும் போது, அடிக்கடி    இடையிடையே  சில முகம் சுளிக்கும்  விளம்பரங்களும்  வரலாம்.

எனவே, முன்னெச்சரிக்கையாக 'Phone 'ல் செய்ய வேண்டியது; ' Play store'     சென்று ' Settings'            ல் ' Parent control' option ஐ     'on'      செய்யவும். அதன் கீழே உள்ள 'Apps and Games' ஐ கிளிக் செய்து    '12+'ல் டிக் செய்யவும். அடுத்ததாக   ' Films'     ஐ   கிளிக் செய்து     '  U' என்பதை    டிக் செய்யவும். 

அதேபோல்    '  YOU TUBE' settings ல்  general  ல்   ' Restriction mode '           ஐ   'On'        செய்யவும். இப்போது, நம் குழந்தைகளின் smartphone ல், தேவையற்ற  விளம்பரம்,Video குறுக்கிடாமல்   பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதாக இருக்கும்.

திங்கள், 8 ஜூன், 2020

சரக்கலை ரகசியங்கள்


சரக்கலை ரகசியங்கள்

*விரும்பிய குழந்தைகளை உருவாக*

ஆணுக்கு வலது நாசியிலும் பெண்ணிற்கு இடது நாசியிலும் சுவாசம் ஓடும் போது உறவு கொண்டு கரு உருவானால் அது *ஆண் குழந்தையாக உருவாகும்*

இதே போல ஆணுக்கு இடது நாசியிலும் பெண்ணுக்கு வலது நாசியிலும் சுவாசம் ஓடும் போது உறவு கொண்டு கரு உருவானால் அது *பெண்ணாக உருவாகும்...*

இருவருக்குமே ஒரு பக்கமாக சுவாசம் ஓடினால் *அலியாக பிறக்கும்...*

ஆணுக்கு விந்து வெளியாகும் போது அபான வாய்வு அதனை எதிர்க்குமானால் *ஒன்றிற்கு மேற்பட்ட கரு உருவாகும்...*

அடுத்து

*கரு சிதைவு ஏற்பட காரணம் என்ன??*

இருவரின் மனமும் ஒத்து போகாத போதும், மன அழுத்தம் இருக்கும் போதோ, விருப்பமே இல்லாமல் உறவு கொண்டு கரு உருவானாலோ, இருவரும் இயல்பாக இல்லாமல் இருக்கும் போது உறவு கொண்டு கரு உருவானால் இவ்வாறு ஆகும்...

*ஊனமாய்/ குறைகள் உள்ள கரு உருவாக காரணம் என்ன????*

திருமூலர் கூறியது

*மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் உருவாக காரணம்* தேக சம்பந்தம் வைத்து கொள்ளும் போது பெண் வயிற்றில் மலம் மிகுந்து இருத்தலே காரணம்

*ஊமை குழந்தை உருவாக காரணம்* பெண்கள் வயிற்றில் சிறுநீர் மிகுந்து இருத்தலே காரணம்

*குருடனாக குழந்தை உருவாக காரணம்* பெண்கள் வயிற்றில் சிறுநீர் மற்றும் மலம் மிகுந்து இருத்தலே காரணம்

*குள்ளமாக குழந்தை உருவாக காரணம்* உடல் உறவின் போது ஆணின் சுவாசம் குறைவாக இருந்தால் இது போல் ஆகும்

*முடமாக / நொண்டியாக குழந்தை உருவாக காரணம்* உறவின் போது ஆணின் சுவாசம் திடமின்றி வெளிப்பட்டால் இது போல் ஆகும் 

*கூனாக குழந்தை உருவாக காரணம்* ஆணின் சுவாசம் திடமின்றி & குறைவாக வெளியானால் இது போல் நடிக்கும்

*குறைகளற்ற குழந்தைகள் பிறக்க*

உடல் உறவின் போது ஆண் & பெண் சுவாசம் சீராக இருக்க வேண்டும் அதே போல் ஆணின் விந்து வெளியாகும் போது சுவாசம் சீராக இருக்க வேண்டும் இந்த நேரத்தில் கரு உருவானால் எந்த குறைகளும் இல்லாத குழந்தைகள் பிறக்கும்

நன்றி


சனி, 6 ஜூன், 2020

இரவில் தொப்புளில் தினமும் ஒரு சொட்டு #எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!


இரவில் #தொப்புளில் தினமும் ஒரு சொட்டு #எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் #நன்மைகள்!!

♥நமது உடலில் அனைத்து நரம்புகளின் மையப்புள்ளி தொப்புளில்தான் அமைந்துள்ளது என்பதை அறிவீர்களா? குறைந்தது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் அளவு பூமீயின் சுற்றளவு இருமடங்கு இருப்பதைப் போல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

♥அத்தகைய தொப்புளை பெண்களிடம் கவர்ச்சி அம்சமாகவும், ஆண்களிடம் கண்டு கொள்ளாமலும் வைத்திருக்கிறோம். இப்போதும் கிராமத்தில் குழந்தைகள் அழுதால் தொப்புளில் சிறிது எண்ணெய் துளி விட்டதும் அடுத்த நொடியை குழந்தை நிப்பாட்டுவது நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.

♥வாயுக் கோளாறுகள் இருந்தால் தொப்புளில் சிறிது பெருங்காயத்தை நீரில் கரைத்து தொப்புளில் தடவுவது உண்டு. அப்படி தடவுவதால் உடனடி பலன் கிடைக்கும் என்பதில் சந்தெகமில்லை.

♥அப்படி உடனடி நிவாரணம் தரும் முக்கிய புள்ளியான தொப்புளில் எண்ணெய் சிறிது விடுவதால் கிடைக்கும் நன்மைகளை அறிவீர்களா? தொடர்ந்து படியுங்கள்

#கண்பார்வை :
♥தொப்புளில் நீங்கள் தினமும் எண்ணெய் விட்டால் கண் பார்வை தெளிவடையும் . கம்ப்யூட்டர் , மொபைல் சதா சர்வ காலமும் பார்ப்பதால் நிறைய பேருக்கு கண் வறட்சி உண்டாகிறது. அவர்களுக்கு இந்த வைத்தியம் வரப்பிரசாதம். கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு போன்றவற்றை குணப்படுத்துகிறது

#பாதவெடிப்பு, #சருமபிரச்சனை :
♥உடல் சூட்டினால் உண்டாகும் பித்த வெடிப்பு குணமாகிறது. சருமம் பளபளக்கிறது. உதடு வறட்சி மறைகிறது. தலை முடி ஆரோக்கியமாக செழித்து வளரும்.

#மூட்டுவலி :
♥முழங்கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகிறது. கால் குடைச்சல் சாத சர்வ காலம் சிலருக்கு இருக்கும். இதற்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உண்டாகும். அவர்கள் தொப்புளில் எண்ணெய் விடுவதால் கால் நரம்புகள் ஆசுவாசமடைகின்றன. இதனால் மூட்டு, கால் வலிகள் குணமாகிறது.

#உடல்சோர்வு :
♥உடல் நடுக்கம், சோர்வு மற்றும் கணைய பாதிப்புகள் குணமாகிறது. கர்ப்பப்பை வலுப்பெறுகிறது. உடல் சூடு குறையும். நல்ல தூக்கம் வரும். எந்த எண்ணெய் எந்த பாதிப்பைப் போக்கும் என இப்போது பார்க்கலாம்.

#நரம்புபாதிப்புகள் :
♥நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் துவண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை வலுப்படுத்தும். இதனால் சீரான ரத்தம் பாய்ந்து உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

#தேங்காய்எண்ணெய் :
♥தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் கண்வலி, சரும வறட்சி குணமாகும்.

#விளக்கெண்ணெய்
♥இரவில் தொப்புளில் விளக்கெண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை இஞ்ச் அளவிற்கு மசாஜ் செய்யும்போது முழங்கால் வலி, மூட்டு வலி , கால் வலி போன்றவை குணமாகின்றன.

#வேப்பெண்ணெய் :
♥வேப்பெண்ணெயை தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும், தொற்றுக்களும் குறைகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. நச்சுக்கள் அழிகிறது.

#எலுமிச்சை எண்ணெய் :
♥எலுமிச்சை என்ணெய் வைத்தால் உடலில் பூஞ்சை தொற்று காரணமாக வரும் வயிற்று வலி குணமாகும்.. தொற்றும் அழிந்துவிடும்.

#பாதாம் எண்ணெய் :
♥சருமம் பளபளக்கிறது. முகம் இளமையாக மாறும். சுருக்கங்கள் மறையும். தினமும் இரவில் தொப்புளில் தடவி மசாஜ் செய்தால் பத்து நாட்களில் முகம் பளபளப்பாகிறது.

#ஆலிவ் எண்ணெய் :
♥தொப்புளின் மேல் ஒரு துளி ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து போகும்.

உணவு பாதுகாப்பு தினம் ஜூன் 07.

உணவு பாதுகாப்பு தினம் ஜூன் 07.

இன்று ஜூன் 07ஆம் தேதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 10 பேரில் 1 பேர் அசுத்தமான உணவை சாப்பிடுவதால் நோய்வாய்ப்படுகிறார்கள் என அறிவித்துள்ளது. உணவுப் பாதுகாப்பு முறைமைகளை ஒழுங்காக கையாளுவதன் மூலம் எமக்கான உணவு சுத்தமானதாகவும் பாதுகாப்பானதாகவும் பெற்றுக்கொள்ள இயலும். இது குறித்து உலக சுகாதார அமைப்பு எளிய ஐந்து வழிமுறைகளை தந்துள்ளது.


1. எப்போதும் தூய்மை

நாம் சமையலறைக்குள் நுழைவதற்கு முன்பு, கைகளை கழுவுவதும், சமைக்கும் போது எல்லா நேரங்களிலும் தூய்மையையும் சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

2. பதப்படுத்தப்பட்ட மற்றும் சமைக்காத உணவுகளை பிரிப்பது

பதப்படுத்தப்பட்ட உணவுகளை சமைக்காத உணவுகளிலிருந்து வெவ்வேறு கொள்கலன்களில் வைப்பது நல்லது. இது இரண்டில் ஏதேனும் மாசுபடுவதற்கான அபாயத்தைத் தடுக்கும்.

3. நன்றாக சமைக்கவும்

எந்தவொரு கிருமிகளையும் கொல்லவும், ஊட்டச்சத்தை அதிகரிக்கவும், உணவு பரிமாறுவதற்கு முன்பு முழுமையாகவும் ஒழுங்காகவும் சமைக்கப்படல் வேண்டும்.

4. உணவு வகைகளுக்கு தகுந்த வெப்பநிலை

வேவ்வேறு வகையான உணவுகளுக்குத் தகுந்தாற்போல் வேவ்வேறு முறைகளில் அவைகளை சேமிக்க வேண்டும். (பாதுகாக்க வேண்டும்). உணவு சேமிப்பு இடம் மற்றும் வெப்பநிலை வாரியாகவும்; உணவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும்.

5. சுத்தமான நீர் மற்றும் பாதுகாப்பான மூலப்பொருட்களைப் பயன்படுத்துங்கள்

சமையலின் போது பாதுகாப்பான மூலப்பொருட்களும், சுத்தமான பாத்திரங்கள் மற்றும் சுத்தமான நீரை எல்லா நேரங்களிலும் பயன்படுத்துங்கள்.

இந்த வழிமுறைகளை நாம் அடிக்கடி செய்வோர் ஆயினும் இந்த நோய் பேரிடர் காலத்தில் மீண்டும் கூடுதல் அவதானமாக உணவுகளை பாதுகாப்பாக வைத்திருப்பது அதனை உட்கொள்வோர் அனைவரினதும் கடமையாகும். மேலும் ஊரடங்கு காலத்தில் புதிதாக தங்களது திறமைகளை வெளிப்படுத்த சமையலைறைகளுக்குள் நுழைந்திருப்பவர்கள் உணவை பாதுகாக்கும் இந்த ஐந்து முக்கிய வழிமுறைகளை தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளுங்கள், தெரிந்திருந்தால் வாழ்த்துக்கள். வாருங்கள் உணவை பாதுகாப்பாக உட்கொள்வோம்!

 

நுகர்வோர்கள் இனிப்பு மற்றும் கார வகைகளை உணவு அங்காடிகளில் வாங்கும் பொழுது கடை பிடிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு முறைகள் :-

1. அதிகப்படியான செயற்கை வண்ண நிறமிகள் (Artificial Colouring Agent) கொண்டு இனிப்பு பொருட்கள் இருந்தால் வாங்குவதை தவிர்த்தல் வேண்டும்.


2. இனிப்பு வகைகளை பரிசு பொருட்களாக பேக்கிங் செய்து விற்பனை செய்யும்பொழுது. அதில் பால் வகையான இனிப்புகளை மற்ற இனிப்புகளோடு கலந்திருந்தால் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஏன் என்றால், பாலால் செய்யப்பட்ட இனிப்புகளின் சேமிக்கும் நிலை மற்றும் காலாவதியாகும் தேதி மாறுபடும். எனவே, அது குறிப்பிடப்பட்டுள்ளதா என கவனித்து வாங்க வேண்டும்.


3. ஈக்கள் மொய்க்கும் வண்ணம் இனிப்பு மற்றும் கார வகைகள் இருந்தால் வாங்குவதை தவிர்த்தல் வேண்டும்.


4. துர்நாற்றம் வீசும்; இனிப்பு மற்றும் கார வகைகளை தவிர்த்திட வேண்டும்.


5. உணவு அங்காடிகளில் வாங்கும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு முறையான ரசீது பெற்றிருத்தல் வேண்டும்.


6. உணவு கையாளும் பணியாளர்கள் தூய்மையான ஆடைகள் அணிந்தும் நகங்களை சீர்செய்தும், தலைகவசம், கையுறையுடன் இனிப்பு கார வகைகளை கையாளுகின்றனரா என்பதை உறுதி செய்தல் வேண்டும்.


7. இனிப்பு கார வகைகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய். நெய் விபரங்களை தகவல் பலகையாக உணவு விற்பனை கூடத்தில் வைத்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.


8. நுகர்வோர் இனிப்பு மற்றும் கார வகைகளை விற்பனை கூடங்களில் பொட்டலமிட்டு வாங்கும் பொழுது உணவு சேமிப்புக்குரிய தரத்துடன் (Food Grade containerlPacking Mpterial) உள்ள பிளாஸ்டிக் கொள்கலன்களில் வழங்குவதை உறுதி செய்தல் வேண்டும்.

நிலங்கள் ஐந்து






நிலங்கள்  ஐந்து

குறிஞ்சி நிலம்

நிலங்கள்  ஐந்து தெரியுமா?
    நலங்கள்  தருமே புரியுமா?
குன்றும்  மலையும் காணலாம்
     கொடியும் செடியும்  பார்க்கலாம்
தேனும் தினையும் உண்ணலாம்
    தெவிட்டா நீரைப் பருகலாம்
குரங்கும் மயிலும் ஆடுமாம்
    குறிஞ்சி  என்றே பாடுமாம்


முல்லை நிலம்


நிலங்கள்  ஐந்து தெரியுமா?
    நலங்கள்  தருமே புரியுமா?
காடுகள் அடர்ந்து இருக்குமாம்
    கன்றும் மாடும் மேயுமாம்
பாலும் தயிரும் பெருகுமாம்
    ஆயன் ஆட்சி நடக்குமாம்
முல்லைப் பூவும் மணக்குமாம்
    முல்லை பெருமை பேசுமாம்

.மருதம் நிலம்


நிலங்கள்  ஐந்து தெரியுமா?
    நலங்கள்  தருமே புரியுமா?
வயல்கள் விரிந்து கிடக்குமாம்
     கயல்கள்  துள்ளிக் குதிக்குமாம்
கரும்பும் நெல்லும் வளருமாம்
   அரும்பும் பூத்து சிரிக்குமாம்
வளமை செறிந்த மருதம் என்றே
     வண்டினங்கள்  இசைக்குமாம்

   நெய்தல்


நிலங்கள்  ஐந்து தெரியுமா?
    நலங்கள்  தருமே புரியுமா?
கடலே இறை எனக் கொள்வோமே
    கயலே இரை என உண்போமே
பரதவர் வாழ்வு சிறக்கவே
     படகும் கலமும் இருக்குமே
ஆழ்கடல் முத்தும் மிதக்குமே
     அழகு நெய்தலைப் போற்றுமே

பாலை நிலம்


நிலங்கள்  ஐந்து தெரியுமா?
    நலங்கள்  தருமே புரியுமா?
களவும் கொலையும் அதிகமாம்
    அச்ச உணர்வு கூடுமாம்
பூமி  வெடித்து இருக்குமாம்
   புல்லும் பொடியாய்ப் போகுமாம்
நீரும் நிழலும் இல்லாத
      பாலை வாழ்வு கொடுமையாம்

நன்றி - முனைவர்  ஜெயந்தி நாகராஜன்

ஞாயிறு, 31 மே, 2020

இயற்கையில் இருந்து கற்றுக் கொள்ள நிறையவே உண்டு

இயற்கையில் இருந்து கற்றுக் கொள்ள நிறையவே உண்டு

🗝️குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீரருந்தவும்.  குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.

🗝️பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள்.
அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.

🗝️புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள்.
நச்சுக் கனிகளை புழு துளைக்காது.

🗝️பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூசிகள் உட்காராது.

🗝️முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். 
மரம் செழிப்பாக வளரும்.
பாம்பு ஓய்வெடுக்கும் இடத்தில் உங்கள் வீட்டைக் கட்டுங்கள். பாம்புகள் குளுமையான இடங்களில் மட்டுமே ஓய்வெடுக்கும்.

🗝️பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை 
தோண்டுங்கள்.

🗝️பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள்..
நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

🗝️அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.

🗝️மீன்களை போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். 
நீங்கள் பூமியில் நடக்கும் போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.

🗝️அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும். 

🗝️நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்.

சனி, 30 மே, 2020

வேண்டாம் எதிர்பார்ப்புகளின் பாரம்..!!



வேண்டாம் எதிர்பார்ப்புகளின் பாரம்..!!

நம் ஏமாற்றங்களுக்குக் காரணம் நம் எதிர்பார்ப்புகள். நாம் எதிர்பார்ப்பது நிறைவேறாதபோது அந்த நிராசை உறவுச் சிக்கல்களாய், குடும்பப் பிரச்சினைகளாய், பின் மெல்ல மெல்ல நோய்களாய் மாறும்.

எதிர்பார்ப்புகள் வருவது இயற்கை. எந்த நிலையிலும் நமக்கு எதிர்பார்ப்புகள் உண்டு. நினைத்தது நடந்தால் சந்தோஷப்படும் நாம், பொய்த்தால் எதிராளியைக் குறை கூறுகிறோம்.

*மோசமான உறவு*

திருமணங்களில் என்ன முக்கியமான சிக்கல்? எதிர்பார்ப்புகளின் ஒவ்வாமை தான். என்னிடம் சிகிச்சைக்கு வரும் தம்பதியினரிடம் இதை அடிக்கடி சொல்வதுண்டு: மோசமான கணவன், மோசமான மனைவின்னு சொல்றதைவிட மோசமான உறவுனு சொல்றது தான் பல நேரத்துல பொருந்தும். தனித்தனியாகப் பார்த்தால் நல்ல மனிதர்களாக இருக்கிற இரண்டு பேர், திருமணம் எனும் பந்தத்தில் எதிர்பார்ப்புகளின் ஒவ்வாமையில் தோற்றுப் போகிறார்கள்.

இந்த எதிர்பார்ப்புகள் மாறக்கூடியவை. காலத்தால் அழியக்கூடியவை. அனுபவத் தால் சமரசம் செய்யக்கூடியவை என்பதை உணர்ந்து விட்டால் பல உறவுச் சிக்கல்கள் சீராகிவிடும். நம் எதிர்பார்ப்புகள் அம்மா, அப்பா, குடும்பம், சாதி, மதம், ஊர், சினிமா, அக்கம் பக்கத்து நண்பர்களால் வளர்க்கப்பட்டவை. அவை மட்டுமேதான் சரி என்பதைப் போலக் காலப்போக்கில் இறுகிப் போவதுதான் பிரச்சினையின் அடி நாதம். பற்றாக்குறைக்கு ஒப்பீடுகள் வேறு.

“என் அப்பா போல நீ இல்லை.”

“என் அம்மா போல நீ இல்லை.”

வளரும் பருவத்தில் பல பாலியல் குழப்பங்கள் வர இந்த எதிர்பார்ப்புகள்தான் காரணம். முன்னொரு காலத்தில் தகவல் பற்றாக்குறையால் அறியாமையில் குழப்பம் வந்தது. இன்று தகவல் யுகத்தில் கொட்டிக் கிடக்கும் தகவல்களில் எது சரி, எது சரியில்லை என்று தெரியாததால் வருகிறது குழப்பம். ஊடகத் தாக்கம் அதை உச்சத்துக்குக் கொண்டுசென்றுவிட்டது.

*தன் மீது எதிர்பார்ப்பு*

காதல், காமம், குடும்பம், வாழ்வு முறை எனப் பல விஷயங்களில் நிஜத்தோடு தொடர்பில்லாத எதிர்பார்ப்புகளால் பலர் தங்கள் வாழ்க்கையில் தவறான முடிவுக்கு வருகின்றனர்.

“ஒரு ஸ்மார்ட் ஃபோனும் பைக்கும் இல்லேன்னா அப்புறம் காலேஜ் ஸ்டூடண்டுங்கிறதுக்கு என்ன கெத்து?”

“எங்கப்பா வேண்டாம்னா மறு பேச்சு பேச மாட்டோம்; இன்னக்கி இருக்கிற பசங்க வார்த்தைக்கு வார்த்தை விவாதம் பண்றாங்க! வயசுக்குக் கொஞ்சம் கூட மதிப்பு கிடையாது!”

“ எவ்வளவு சம்பாதிச்சா என்னப்பா, பொம்பள வீட்டைக் கவனிக்காட்டி எப்படி?”

எதிர்பார்ப்புகள் பல சமயங்களில் வார்த்தைகளில் சொல்லாமல் செயலில் எதிர்பார்க்கப்படுவதும் உண்டு. “சொன்னாதான் தெரியுமா?” என்பார்கள்.

பிறர் மீது உள்ள எதிர்பார்ப்புகளை விடத் தன் மேலுள்ள எதிர்பார்ப்புகளின் கனம் எப்போதும் சற்று அதிகமாகத்தான் இருக்கும். தன்னை நொந்துகொள்ளும் தன்மையும், தன்னைக் குறைவாக மதிப்பிடுதலும் இதன் காரணமாகத்தான்.

*பூஜ்ய எதிர்பார்ப்புகள்*

உங்களுக்கு உங்கள் மகனுடன் பிரச்சினையா? உங்களுக்கான அஃபர்மேஷன் இதுதான்: “ நான் என் மகன் பற்றிய எல்லா எதிர்பார்ப்புகளையும் வெளியேற்றுகிறேன்.” (I release all my expectations about my son).

“எதிர்பார்ப்பே இல்லை என்றால் அவன் இஷ்டத்துக்குத் தறிகெட்டுப் போக மாட்டானா?” என்று நினைக்கிறீர்களா? இல்லை! நீங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை வெளியேற்றி னால், அவனை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள ஆரம்பிப்பீர்கள். நீங்கள் எதிர்பார்ப்பில்லாமல் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் போது அவன் உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முயலுவான். உங்களுக்கும் அவன் எதிர்பார்ப்புகள் புரிய ஆரம்பிக்கும்.

உங்களின் எல்லாச் சிக்கலான உறவிலும் இதை முயற்சி செய்து பாருங்கள். “நான் ---------- பற்றிய எல்லா எதிர்பார்ப்புகளையும் வெளியேற்றுகிறேன்.” (I release all my expectations about -------------).

எதிர்பார்ப்புகளைப் பூஜ்ஜியத் துக்குக் கொண்டுவருதல் நலம். மனைவி காபியை ஸ்ட்ராங்காகத் தான் போட வேண்டும் என்று எதிர்பார்ப்பு உள்ளபோது என்ன செய்வோம்? ஸ்ட்ராங்காகக் காபி கிடைத்தால் பேசாமல் குடிப்போம். லைட்டாக வந்தால் குதறுவோம். எதிர்பார்ப்புகளை நீக்கிப் பாருங்கள். ஒவ்வொரு ஸ்ட்ராங்கான காபியையும் நன்றியோடு ருசித்துக் குடிப்பீர்கள். லைட்டான காபி வரும்போது அதை லைட்டாக எடுத்துக்கொள்வீர்கள்.

*இயல்பாய் மலரட்டும்..*

உங்கள் எதிர்பார்ப்புகள் குறையும்போது வாழ்க்கை கனமில்லாமல் அழகாக மாறும். எதிராளியின் எதிர்பார்ப்புகள் புரிய ஆரம்பிக்கும். அது புரிதலை எளிமைப்படுத்தும்.

யோசித்துப் பாருங்களேன். பெரும்பாலான வீடுகளில் பிள்ளைகள் மேல் பெற்றோர்களுக்கான எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் எதிர்பார்ப்புகள்தானே?

குறிக்கோள்கள் இருக்கலாம். கடமைகளைச் செய்யலாம். உங்கள் எண்ணத்தைச் சொல்லலாம். ஆனால், அவை தீவிரமான எதிர்பார்ப்புகளாக மாறி அவர்கள் கழுத்தை நெறிக்க வேண்டாம். இன்று மாணவர்கள் தோல்வியின்போது துவண்டுபோவதன் முக்கியமான காரணம் ஒன்றுதான். தங்களால் பெற்றோர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியவில்லையே என்பதுதான்.

என்ன படிக்கிறான் என்று பெற்றோருக்குத் தெரியாத பல கிராமத்துக் குழந்தைகள் இயல் பாக வளர்வதற்கும், எல்லாம் கொடுத்தும் சிறு தோல்வியில் நகரக் குழந்தைகள் நொறுங்கிப் போவதற்கும் காரணம் இந்த எதிர்பார்ப்புகள்தாம்!

“என் பிள்ளையை நிபந்தனையில்லாமல் ஏற்றுக்கொள்கிறேன்” (I accept my child unconditionally) என்று சொல்லிக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைக்கான நேரமும் இடமும் கிடைக்கும். அவர்களுக்குச் சுதந்திரமாய்ச் சிந்தித்து வாழ்க்கையைக் கற்கும் வாய்ப்பு கிடைக்கும்

*எதிர்பார்ப்புகளின் பாரம் இல்லாமல் அவர்களை இயல்பாய் மலர விடுங்கள்..!!*


திங்கள், 25 மே, 2020

வருஷத்து 302 கோடி சம்பளம் வாங்கி என்னசார் பண்ணுதீங்க..?

வருஷத்து 302 கோடி சம்பளம் வாங்கி என்னசார் பண்ணுதீங்க..?

அதான் வாங்குற சம்பளத்துல 80 சதவீத சம்பளத்ததை
வைத்து, Googleலின் ஷேரை வாங்கி வைத்துள்ளனே ..
கிளிஞ்சுது, அதாவது ..

எவன்கிட்டே இருந்து சம்பளம் வாங்குறீங்களோ அவனுக்கே திரும்ப அந்த சம்பளத்த கடனா கொடுக்குறீங்க
அப்படிதானே சார்.. ?

இதுக்கு பேசாம ஊர்ல மாடே மேய்க்கலாம் சார்..
அமெரிக்கா கூகுள்னு ஓவர் பில்டப்பெல்லாம் பண்ணி பண்ணியே

ஊர்ல படிச்சிட்டு இருக்குறவனெல்லாம்
நான் சுந்தர் பிச்சை மாதிரி வருவேன்
நான் அப்துல் கலாம் மாதிரி வருவேன்னு
சொல்லிகிட்டு திரியாருணுக..

இவ்வளவு சம்பளம் வாங்குற நீங்க
சாரி நீங்க மட்டுமல்ல
உங்களைப் போன்று கோடானக்கோடி
பிறத்துறையை சார்ந்தவர்கள்
திங்குற சோற்றுக்கும்,குடிக்குற பாலுக்கும் கொஞ்சம் விவசாயத்துல முதலீடு பண்ணலாமே..?

எல்லாவனும் சேர்மார்க்கெட்டுல
கார் கம்பெனி மேலையும்,
போன் கம்பெனி மேலையும்
இப்படி எதெல்லாம் ஆடம்பரத்தேவைக்கானப் பொருளோ
அவற்றின் மீது முதலீடு செய்கிறீர்களே..

அடிப்படையை விடுத்து ஆடம்பரத்தின் மீது முதலீடு செய்யும் அறிவு என்னடா அறிவு..?

கோடி, கோடியா சம்பாதிக்கும்
சினிமா காரணும் இப்படி பலத்துறையை
சார்ந்தவனும் தான் சம்பாதித்தப் பணத்தை வைத்து கார் வாங்குறான்
ஏரோ பிளேன் வாங்குறான்
ஆனா ஒரு மாடு வளர்க்கவோ
அல்லது தன் சொந்தபந்த விவசாயிகளின் மீது முதலீடு
செய்வதற்கோ அல்லது  தானே முன்வந்து
விவசாயம் செய்வதற்கோ ஒருத்தன் கூடத் தயாராக இல்லை..

இல்ல ஒரு எம்ப்ளாயிக்கே 302 கோடி
சம்பளம்னா அப்போம் ஓனருக்கு
எவ்வளவு இலாபம்..?

அவன் அங்க உட்கார்ந்து கோடி கோடியா
தகவல் தொழில் நுட்பத்தை வைத்து
சம்பாதிப்பதற்கு..
தேசப்பக்தி என்றப் பெயரில் மக்கள் வரிப்பணத்தை வைத்து சேட்லைட்
அனுப்புறது, என்ன சார் நியாயம்..?

Tv சேனல் தனியாரு..
மொபைல் நெட்வெர்க் தனியாரு..
Google, what's App, face book போன்ற
ஹோலோபல் நெட்வெர்க் தனியாரு..
ஆனால் அந்த தகவல் தொழில் நுட்பத்தின் மூலத்தேவையான சேட்லைட்
அனுப்புறது யாரு..? அரசு..

கடலுக்கு மீன் புடிக்க போற வியாபாரிதான்டா மீன் பிடிக்க, மூலத்தேவையான  கப்பல வாங்கனும்..
மீனை விலைகொடுத்து வாங்கி திங்குற
நாங்க ஏன்டா கப்பலுக்கு கப்பம் கட்டனும்..?

அப்துல் கலாம் நல்ல மனிதர் நாட்டுக்காக தன் துறையில் சிறந்து விளங்கினார் ..அவ்வளவு தான்..
அதற்காக மனிதகுல மாணிக்கம்,மனிதகுல நன்மைக்காக வாழ்ந்தார் இதெல்லாம் ரெம்ப ஓவரு..

மேலும் அவரே ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும்
முன்னோடி என்பதெல்லாம் பெருத்த முட்டாள் தனமே.. அவரதுத் துறையை சார்ந்தவர் அவரை மெச்சட்டும்.. ஒட்டுமொத்த
கல்வியிலும்,அத்துனை மாணவர்களுக்கும் முன்னோடியாக இதுபோன்ற அறிவியல் வல்லூநர்களை
முன்னிருத்துவது மிகமிகத்தவறு..

நெல் ஜெயராமன் யாருனுத் தெரியாது
நம்மாழ்வார் யாருனுத் தெரியாது

ஆனா சுந்தர் பிச்சை யாருனுத்தெரியும்
அப்துல் கலாம் யாருனுத் தெரியும்..

நதி நீர் இணைப்புத் திட்டத்தை
ஐயா அப்துல் கலாம் ஆதரித்தார்..
நதிநீர் இணைந்தால் பாசன வசதி கூடுமாம்

அடப்பாவமே, பெரும் நதியை பல்வேறு கிளைநதிகளாக பிரித்தால் தான்
பாசன வசதி கூடுமென்பது சிறுக் குழந்தைக்குக்கூட தெரியும்..

அதை விடுத்து இரண்டு பெரும் நதியை இணைப்பது மகா முட்டாள் தனம்..

அனு உலையால் எந்த பாதிப்பும்
இருக்காது என்று கூறி அனு உலையை
ஆதரித்தவர் ஐயா அப்துல் கலாம்..
கூடங்குளம் அனு உலை வெடித்தால்
500 கிலோமீட்டர் பரப்பளவிற்கு புள்ளுக்கூட முளைக்காது..
என்பதை எல்லாம் அறியாதவரா ஐயா அப்துல் கலாம்..?
அனுக்கழிவை எங்கேக் கொட்டுவது..?
தெரியாது..?
கடல்ல கொட்டுனா கடல் உயிர்கள் பாதிக்கப்படும்..

குடிக்கிற பாலிலும், திங்குற சோற்றிலும்
தரமில்லை ஆனால்
தரமான காரு,தரமான வீடு,தரமான தங்கம்,தரமான புல்லட்டு ட்ரெயினு, தரமான மின்சாரம், தரமான பெட்ரோல்,தரமான டீசல்,தரமான மீத்தேன் 
எதுக்குடா..இதெல்லாம்..?

உலகிலேயே மிக சிறந்த ஆயுதம்
நீரும், சோறும் தான்..
ஒரு நேரம் உண்ணாமல்,பருகாமல் இருந்தால் தெரியும் சோறும்,நீரும் என்னவென்று..
ஆயிரம் துப்பாக்கியை உருவாக்குவது அல்ல வளர்ச்சி..
தான் உண்ணும் தரமான உணவை
உணவுத் தானியத்தை பாதுகாத்து
விவசாயத்தை பாதுகாத்து
தன் பிள்ளைகளுக்கும் கொடுப்பதுவே
சரியான போக்கு...

நான் குடிக்கும் மாட்டுபால் என் மகனுக்கு
கிடைக்குமா என்பதில் உத்ரவாதம் இல்லை..
நான் சாப்பிட்டு கொண்டிருக்கும் அரிசியே நாரிவிட்டது என் மகனுக்கும்,மகளுக்கும் பேரனுக்கும் பேத்திக்கும் சத்தான உணவு தானியங்கள் கிடைக்குமா என்பதில்
எந்த உத்ரவாதமும் இல்லை..

ஆனா வீடு,காரு,புல்லட் ட்ரெயின்,7G போனுக்கு தயாரா இருக்கீங்க..
எல்லாவனையும் ஆடம்பரத்த காட்டியே ,
அறிவியல் வல்லூநர்களை காட்டியே
ஏமாத்துறதுக்கு பெயரு வளர்ச்சி ..
போங்கடா நீங்களும் உங்க வளர்ச்சியும்
இது போன்ற அறிவியல் வளர்ச்சி பிம்பங்களைத் துடைத்து தூரப்போட  வேண்டிய காலமிது..

ஆரோக்கியத்தின் முதல் படி Positive எண்ணங்கள்


ஆரோக்கியத்தின் முதல் படி Positive எண்ணங்கள்...

1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.

2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்.

3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.

4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

5. அதிக நேரம் ஏதாவது விளையாடுங்கள்.

6.  அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான  புத்தகங்களை படியுங்கள்.

7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள்  வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.

9. அடிக்கடி நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!

10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை பச்சையாக அப்படியே  நிறைய உண்ணுங்கள்.

11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

13. உங்களுக்குள் உன்னதமான ஆற்றல் மறைமுகமாக இருப்பதை உணருங்கள்,

14. நீங்கள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் வானில் சுதந்திரமாக பறக்கும் பறவையாக உணருங்கள்.

15. பாசிட்டிவான  எண்ணங்களை உங்களின் மனதில் தினமும்  ஐந்துமுறை உருவாக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி வாழுங்கள்.

16. நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கையே உலகில் சிறப்பானது என்று உணருங்கள்.

17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.

18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.

19. எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழ்ந்தால் இறைவனும் உங்களிடம் அன்பு செலுத்துவான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்,

20. வாழ்க்கையை டேக் இட் ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.

21. அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள்.

22. உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

23. மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களை உருவாக்கிய இறைவனை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.

24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் காரணம்,   கடவுள் உங்களிடம் காட்டும் கருணைதான் என்பதை என்றுமே மறவாதீர்கள். 

25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.

26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப்  பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.

27. இதுவரை உங்களை காப்பாற்றி வந்த கடவுள் இனியும்  உங்களை என்றென்றும் காப்பாற்றுவார்  என்பதை மனதார உணருங்கள்.

28. நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.

29. உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள்.  அவர்களிடம் நிரந்தரமாக தொடர்பு வைத்திருங்கள். 

30. உங்களுக்கு  மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக  இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி ஓடி  விடுங்கள்.

31. உங்கள் தேவைக்கு  அதிகமாகவே அனைத்தையும் உங்களுக்கு தந்து வருகிற இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

32. வாழ்வின் 'உன்னதம்' என்பது ஏற்கெனவே உங்களுக்கு  முழுவதுமாக நிச்சயம் வந்து விட்டது என்று நம்புங்கள்.

33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.

34. உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள்.

35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.

36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.

37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு சிறிய செயலையாவது செய்யுங்கள்.

38. நீங்கள் வரம்பே இல்லாத வலிமை பெற்றவர் என்பதை அறிந்து எந்தச் செயலிலும் துணிந்து  இறங்குங்கள்.

39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!

40. நீங்கள் தூங்கும் முன்பு மகிழ்ச்சிகரமான தினத்தை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
   -தொகுப்பு, உங்கள் ஜெயஶ்ரீமகேந்திரன்.

சிறப்பான உறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன்ஏற்பாடுகள் என்னென்ன தெரியுமா?குறிப்பு :21 வயது மேல் உள்ளவர்கள் மட்டும் படிக்க?முழுவிவரம்


சிறப்பான உறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன்ஏற்பாடுகள் என்னென்ன தெரியுமா?குறிப்பு :21 வயது மேல் உள்ளவர்கள் மட்டும் படிக்க?முழுவிவரம்

அன்பை உருவாக்கும் உடலுறவை திருப்திகரமாக்குவது என்னவென்று நீங்கள் மக்களிடம் கேட்டால், உங்களுக்கு வெவ்வேறு பதில்கள் கிடைக்கும். ஆனால் நீங்கள் தீவிரமான ஃபோர்ப்ளேவில் ஈடுபட்டிருந்தால் செக்ஸ் சிறப்பாக இருக்கும் என்பதை நீங்கள் எப்போதாவது உணர்ந்தீர்களா? பிரதான பாடத்திட்டத்திற்கு முன் இதை ஒரு ஸ்டார்ட்டராக நீங்கள் நினைக்கலாம், எனவே, ஃபோர்ளேவை விரைவாக முடித்திருக்கலாம். ஒரு ஆணாக நீங்கள் படுக்கையில் உங்கள் துணையை திருப்திப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி யோசிக்காமல் இருக்கலாம். உங்கள் மனைவி அல்லது காதலிக்கு பாலியல் தூண்டுதலை உணர அதிக நேரம் தேவைப்படலாம்.


கைகள் சரியான இடங்களை ஆராயட்டும் இருவரும் படுக்கையறையில் இருக்கும் தருணம், உங்கள் கைகள் மெதுவாக உங்கள் துணையின் உடலில் சரியான இடங்களை அடையட்டும். அவளுடைய ஆடைகளை அகற்ற உங்கள் கைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவளுடைய உடலை அவளது ஆடைகளால் மூடிக்கொள்ளலாம். உங்கள் கை அவளது ஆடைகளில் நழுவி அவளது தோலையும் வளைவுகளையும் உணரட்டும். இதை உங்கள் காதலி அல்லது மனைவி மிக விரும்புகிறாள். ஆசைகளைக் கேளுங்கள், சொல்லுங்கள் உங்கள் கைகள் அவளது உடலை கட்டிப்போட்டிருக்கும்போது, அவளுக்கு என்ன வேண்டும் அல்லது என்ன விருப்பம் என்று அவளிடம் கேளுங்கள். இது சிற்றின்பக் கடித்தல் முதல் நீங்கள் அவளை அவிழ்க்கும் விதம் வரை எதுவாகவும் இருக்கலாம். அவள் குறும்பு மற்றும் ஆசைகளை வெளிப்படுத்தும்போது, அவளிடம் உங்களுடைய விருப்பங்களை சொல்லலாம். அவள் உடலுறவை ரசிக்கிறாள் என்பதையும், படுக்கையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவள் விரும்புகிறாள் என்பதையும் இந்த வழியில் நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.


ஃபோர்ப்ளேவில் அதிக நேரம் இருக்க தோன்றலாம். ஆகையால், நீங்கள் விரைவாக ஃபோர்ப்ளேவை முடித்துவிட்டு க்ளைமாக்ஸை நெருங்குவது, உங்கள் துணையை பலவீனமடையச் செய்வதற்கான வழியாகும். ஃபோர்ப்ளே என்பது ஆடைகளை அவிழ்ப்பது மற்றும் முத்தமிடுவது என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. ஃபோர்ப்ளேவை ஆராய்வதற்கு உங்களுக்கு உதவக்கூடிய சில உதவிக்குறிப்புகள் கீழே கொடுத்துள்ளோம். மேலும் உங்கள் துணை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பாலியல் ரீதியாக தூண்டப்பட இந்த வழிகள் உதவும்.


குறும்புதனம் செய்யுங்கள் பூட்டிய படுக்கையறையில் மட்டுமே ஃபோர்ப்ளே தொடங்க முடியும் என்று யார் சொன்னது? அந்த உணர்வு உங்கள் மனதைத் தாக்கும் தருணத்தில் நீங்கள் ஃபோர்ப்ளேவை தொடங்கலாம். உங்கள் மனதில் என்ன நடக்கிறது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதற்கான குறிப்பை உங்கள் துணைக்கு கொடுக்க குறும்பு மெசேஜ்களை நீங்கள் அனுப்பலாம். குறும்பு சில்மிஷ்களையும் நீங்கள் காலையில் இருந்தே தொடங்கலாம். இதன் மூலம் இருவரும் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பே உங்கள் மனைவி அல்லது காதலியை உற்சாகமாக நீங்கள் உணர வைக்கமுடியும்.


மசாஜ் செய்யுங்கள் ஒரு முன் சுருள் மசாஜை விட சிற்றின்பம் வேறு என்ன இருக்க முடியும்? நீங்கள் அவளது பின்புறத்திலிருந்து தொடங்கலாம். பின்னர் அவளது இடுப்பு, முதுகு மற்றும் வயிற்று பகுதி என உங்கள் கைகளாலும், நாவாலும் மசாஜ் செய்யலாம். பின்னர் தொடைகள் மற்றும் கணுக்காலை அடையலாம். உங்கள் துணையின் மென்மையான சருமத்தை மென்மையாக அணுகுங்கள்.மசாஜ் மென்மையாகவும், உணர்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும்போது, நீங்கள் இருவரும் உடலுறவை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்.


விளையாடுங்கள் நீங்கள் ஃபோர்ப்ளேவில் இன்னும் சில வேடிக்கைகளைச் சேர்க்க விரும்பினால், சில கின்கி செக்ஸ் பொம்மைகளை வைத்து விளையாட்டலாம். இந்த கின்கி பொம்மைகளை கண்மூடித்தனமாகப் பயன்படுத்தலாம் மற்றும் கேலி, கிண்டல் செய்தும் விளையாடலாம். உங்கள் பெண் ஆதிக்கம் செலுத்துவதை நீங்கள் காண விரும்பினால், இந்த பொம்மைகளை அவள் பொறுப்பேற்க அனுமதிக்கலாம். நீங்கள் செக்ஸ் பொம்மைகளைப் பயன்படுத்தும்போது, முத்தம் கொடுத்தலையும் தொடுதலையும் கைகோர்த்துக் கொள்ளுங்கள். இந்த வழியில் உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைக்கும்.


காதுகளில் குறும்பு விஷயங்கள் உங்கள் துணை கண்ணை மூடிக்கொண்டிருக்கும்போது, அவளுடைய காதில் குறும்பு விஷயங்களை நீங்கள் கிசுகிசுக்கலாம். அடுத்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை அவளுக்குத் தெரியப்படுத்துங்கள். அவளுடைய சொற்களை உங்கள் வார்த்தைகளில் விவரிக்கவும், உங்கள் வார்த்தைகளின் மூலம் அவளைத் தூண்டவும் முடியும். இதை நீங்களும் உங்கள் துணையும் மிகவும் விரும்புவீர்கள். உடலை புதிய வழியில் ஆராயுங்கள் நீங்கள் இருவரும் நீண்ட காலமாக உடலுறவில் ஈடுபட்டிருந்தாலும், அவளுடைய உடலை முதல் தடவையாக ஆராய்வது போல புதிய வழியை தேடுங்கள். அவளுடைய வளைவு, நெளிவுகளையும், தோலையும் நீங்கள் எத்தனை முறை பார்த்தாலும், அது எப்போதும் உங்களுக்கு ஒரு புதிய அனுபவமாகும் என்பதை அவள் உணரட்டும். நீங்கள் அதைச் செய்வதற்காக மட்டுமே செய்கிறீர்கள் என்றால், நீங்கள் முழுமையாக அனுபவிக்க முடியாது. உண்மையான அன்போடு விரும்பத்தோடு தொடங்கும்போது, அது உங்களுக்கு உச்சகட்டத்தை கொடுக்கும்.


நம் முன்னோர்கள் ‘அந்த’ விஷயத்திற்கு… எப்ப பார்த்தாலும் சுயஇன்பம்… விஷயங்களை மெதுவாக தொடங்குங்கள் ஃபோர்ப்ளேவின் போது நீங்கள் அவசரப்பட வேண்டியதில்லை. கிரிக்கெட் விளையாட்டில் எடுத்தவுடன் 6 அல்லது 4 ரன் எடுக்க வேண்டும் என்பதுபோல வேகமாக போக வேண்டாம். முதலில் பொறுமையாக சிங்கிள் ரன்னிலிருந்து ஆரம்பிக்கலாம். அதுபோல, ஃபோர்ப்ளே ஆரம்பத்தில் மெதுவாகவும் மென்மையாகவும் இருக்கட்டும். விஷயங்களை ஒரு கடினமான முறையில் தொடங்குவது ஒரு திருப்புமுனையாக இருக்கக்கூடும். எனவே ஆரம்பத்தில் அதை மெதுவாக செய்ய முயற்சிக்கவும். உங்கள் துணையின் வெளிப்பாடு மற்றும் பதிலைப் பொறுத்து நீங்கள் அதை சற்று கடினமானதாக மாற்றலாம். உறவை வலுப்படுத்தும் ஃபோர்ளேவில் அதிக நேரம் செயல்படுங்கள். இது உங்கள் உறவை மேலும் வலுப்படுத்தும். நேரம் எடுத்து ஒவ்வொரு கணமும் இன்பத்தை அனுபவியுங்கள். இந்த வழியில் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். எத்தனை முறை உறவு கொண்டாலும், உங்கள் உறவில் சலிப்பு ஏற்படாது. புதிது புதிதாகச் செயல்பட முயற்சி செய்யுங்கள்.

ஞாயிறு, 24 மே, 2020

நாட்டு நாய்களின் சிறப்புகள்


நாட்டு நாய்களின் சிறப்புகள்...,

“நாட்டு நாய்கள் மிகவும் நன்றி கொண்டவை. நாம் என்றாவது ஒரு நாள் உணவு போட்டுவிட்டு, பின்பு கல்லால் அடித்தால்கூட நம்மை பார்த்ததும் வாலை ஆட்டிக்கொண்டு பின்னால் ஓடிவரும். பட்டி நாய்கள் எனப்படும் நாட்டு நாய்களிடம், வெளிநாட்டு நாய்களிடம் இல்லாத பல்வேறு விசேஷ குணங்கள் இருக்கின்றன..” என்கிறார், நாட்டு இன நாய் ஆய்வாளர் பொன் தீபங்கர். இவருக்கு 29 வயது. டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் கற்றுவிட்டு ஈரோடு வந்திருக்கும் இவர், இந்தியாவின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதில் விவசாயம், நாட்டு இன நாய்கள் போன்ற விஷயங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

*நாட்டு இன நாய்கள் பற்றி அவர் கூறும் அபூர்வ தகவல்களின் தொகுப்பு:*

“எனது சிறுவயது பருவத்தில், எங்கள் தோட்டத்தில் உள்ள கால் நடைகளை பாதுகாக்க ராஜபாளையம் நாய் இருந்தது. அது நாம் சிந்தும் உணவை மட்டுமே சாப்பிட்டாலும் நம்மையே சுற்றி வரும். நம்மை மீறி நமது வீட்டிற்குள் நுழையாது. தோட்டத்துக்குள் எங்கேனும் ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டால் பதிலுக்கு முதல் குரல் அந்த நாயிடம் இருந்துதான் எழும்.

தமிழகத்தில் ஆடு, மாடுகளை அடைத்து வைத்திருக்கும் இடத்தை தொழுவம் அல்லது பட்டி என்று கூறுவோம். அந்த பட்டியை பாதுகாக்கும் நாய்கள்தான் அந்த காலத்தில் பட்டிநாய்கள் என்று அழைக்கப்பட்டன. மலையாள மொழியில் நாய்களை பட்டி என்று அழைப்பதற்கும் இது காரணமாக இருக்கலாம்.

எனக்கு தெரிந்தவரை பட்டி நாய்களில் கருவாய் செவலை, கருநாய், பச்ச நாய் ஆகிய மூன்று இனங்கள் இருந்திருக்கின்றன. உடல் முழுக்க செவலையும் வாய் பகுதி கருப்பாகவும் இருக்கும் கருவாய் செவலை அதிக மவுசாக இருந்திருக்கிறது. இது காவலுக்காகவும், செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்பட்டிருக்கிறது.

கருநாய் முழுக்க முழுக்க கறுப்பு நிறத்தில் இருக்கும். பட்டிகளில் காவல் காக்க இந்த நாய்கள்தான் மிகச்சிறந்தவை. இருளோடு இருளாக இந்த நாய்கள் படுத்து இருந்தால் பிற மிருகங்களுக்கு காவல் நாய் இருப்பது தெரியாமல் வந்து மாட்டிக் கொள்ளும்.

பச்ச நாய் என்றால் துரத்தித்துரத்தி கடிக்கும் ஆற்றல் கொண்டது. இந்த நாய்கள் இருக்கும் சுற்று வட்டார பகுதிக்கு யாரும் செல்ல முடியாது. பாய்ந்து வந்து கடித்து விடும். இதுபோன்று வேறு சில நாட்டு இன நாய்களும் இருந்துள்ளன.

ஆனால் இன்று வெளிநாட்டு இன நாய்களின் மோகத்தால் *நம் நாட்டு நாய்களை தெருவுக்கு துரத்தி, தெரு நாய்களாக்கி விட்டோம்.*

நமது விவசாய நிலங்களில் நச்சுப்பாம்புகளும், தேள்களும், வேறு பல விஷ ஜந்துகளும் உள்ளன. இவற்றில் இருந்து விவசாயிகளை பெரிதளவும் காத்து வந்திருப்பவை பட்டி நாய்கள்தான். முன்பு விவசாயிகள் தங்கள் தோட்டத்துக்கு செல்லும்போது பட்டி நாய்கள் அவர்களுக்கு முன்னால் நடந்து செல்லும். பாம்புகள் வந்தால் அவற்றின் குரைப்பு சத்தம் வித்தியாசமாக இருக்கும். அதை விவசாயிகள் உணர்ந்து, தங்களை காத்துக்கொள்வார்கள். எல்லா விதமான விஷ ஜந்துக்களையும் நாய்களுக்கு அடையாளம் தெரியும். அவைகளை தங்கள் எஜமானர் அருகே அணுக விடாமல் பார்த்துக்கொள்ளும். அதுபோலவே மாட்டுப்பட்டிகளை காவல் காக்கும் இந்த நாய்கள், மாடுகளை எந்த ஜந்துவும் அணுகாமல் பார்த்துக் கொள்ளும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் ஒரு உயர் போலீஸ் அதிகாரி இருந்தார். அவருடைய மனைவிக்கு வெளிநாட்டு நாய்கள் மீது கொள்ளை பிரியம். வீட்டில் 14 நாய்கள் வளர்த்து வந்தார். அந்த நாய்களுடன் ஒரே ஒரு நாட்டு நாயை, அந்த அதிகாரி விரும்பி வளர்த்து வந்தார். ஆனால் அந்த நாயை அவருடைய மனைவிக்கு கொஞ்சமும் பிடிக்காது.

ஒருநாள் இரவில் அவரது வீட்டுக்குள் திருடர்கள் புகுந்து விட்டனர். நாட்டு நாயுடன் சேர்த்து 15 நாய்களும் சுற்றிக்கொண்டன. திருடர்கள் சாமர்த்தியமாக மயக்க பிஸ்கெட்டை தூக்கி வீசினார்கள். அனைத்து நாய்களும் ஓடிச்சென்று பிஸ்கெட்டுகளை தின்று விட்டு சாப்பிட சிறிது நேரத்திலேயே மயங்கி விட, திருடர்கள் போட்ட பிஸ்கெட்டை சாப்பிடாத நாட்டுநாய் பாய்ந்து அவர்களை தாக்கியது. இதில் நிலை தடுமாறிய திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். நாயின் குரைப்பு சத்தம்கேட்டு அந்த அதிகாரி வெளியே வந்து பார்த்தபோது வெளிநாட்டு நாய்கள் மயக்கத்தில் கிடந்தன. நாட்டு நாய் மட்டுமே கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. காரணம், *நாட்டு நாய்கள், முன்பின் தெரியாதவர்கள் போடும் உணவுகளை உண்பதில்லை.*

வீட்டை மட்டுமல்ல, ஒரு கிராமத்தையே கட்டிக்காக்கும் திறன் பட்டி நாய்களிடம் உண்டு.

*இப்போது தெரு நாய்களாக்கப் பட்ட பின்பு கூட, அந்த வீதியில் தினமும் வந்து செல்பவர்களை தவிர இரவு நேரத்தில் புதிய நபர் ஒருவர் வந்தால் அதை பார்த்ததும் நாட்டு நாய் உடனடியாக குரைக்கும்.*

அதைத்தொடர்ந்து ஆங்காங்கே நிற்கும் நாய்களும் குரைக்கும். இப்படி தகவலை பரப்பி, ஒருசேர உஷாராக்கி தகவலை பரப்பும் ஆற்றல் நாட்டு நாய்களுக்கு மட்டுமே உண்டு. வேட்டிக்கட்டிக்கொண்டு செல்லும் நபர்களை பார்த்து பெரும்பாலும் நமது பட்டி நாய்கள் குரைப்பதில்லை. காரணம், வேட்டி கட்டியவன் தன்னை தாக்க மாட்டான் என்பது பட்டி நாய்களின் ஜீனில் பதிவாகி இருக்க வேண்டும்.

*இன்று நாம் கொண்டாடும் வெளிநாட்டு நாய்களின் மூலம் ஆஸ்துமா, சைனஸ் நோய்கள் உருவாகும். தொற்று நோய்கள் பரவும்.* குளிர் பிரதேசத்தில் வாழும் தன்மை கொண்ட அவைகளை, அதற்கேற்றபடி பராமரிக்கவும் வேண்டும். ஆனால், வெப்ப நாடுகளின் காலநிலைக்கு தகுந்தாற்போல *நம்மோடு வாழும் பட்டி நாய்களால் எந்த நோயும் பரவாது. அவை நோயால் பாதிக்கப்பட்டால் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு தானாகவே சென்று செத்துவிடும் அறிவாற்றல் கொண்டது.*

*கிராமங்களில் நாய் வளர்த்தவரின் வீட்டில் ஒருவர் உடல்நலமில்லாமல் இறக்கும் தருவாயில் இருந்தால், அவருக்கு பதிலாக நாய் தனது உயிரைக்கொடுத்து காப்பாற்றும் என்பார்கள்.*
எனவேதான் காலபைரவரின் வாகனமாக பட்டி நாய் அமைக்கப்பட்டு உள்ளது.

பட்டி நாய்களை சற்று உற்றுநோக்கி கவனியுங்கள். அது ஒவ்வொரு சூழலிலும் வெவ்வேறு விதமாக குரல் எழுப்பும். சிறு குழந்தைகளை கடிக்காது. பாதுகாப்பற்ற சூழலில் வீட்டைவிட்டு வெளியே செல்லும் குழந்தைகளை பார்த்தால் குரைத்து மிரட்டி மீண்டும் வீட்டுக்குள் வரும்படி செய்துவிடும். இதற்கு காரணம், முன்பு பட்டியில் இருந்து தொலைந்து போகும் கன்றுகளை, பட்டி நாய்கள்தான் தேடிக் கண்டுபிடித்து திரும்ப கொண்டு வந்து சேர்க்கும். கால்நடைகளுக்கும், மக்களுக்கும், விவசாயத்திற்கும் நாட்டு நாய்கள் காவல் அரணாகும்.

நமது கலாசாரத்தோடும், வாழ்வியல் ஆதாரங்களோடும் பின்னிப் பிணைந்த பட்டி நாய்களை பாதுகாப்பது நம் சமூக கடமை” என்கிறார், ஆய்வாளர் பொன் தீபங்கர்.

தேள் மற்றும் விஷ பூச்சிகளை பட்டி நாய்கள் எந்த பயமுமின்றி கடித்து தின்றுவிடும். பாம்புகளையும் எதிர்த்து நின்று கடித்து விரட்டும். *நாட்டு நாய்கள் விஷப்பாம்புகளையும் கடித்து கொல்லும் ஆற்றல் கொண்டவை மட்டுமல்ல, பாம்புகள் கடித்தாலும் அவற்றுக்கு எளிதில் மரணம் ஏற்படாது.*

ஏன் என்றால் உடனே அதற்குரிய பச்சிலையை தேடிச் சென்று கடித்து தின்றுவிட்டு, தரையில் மல்லாந்து படுத்துக்கொள்ளும். யோகாசனத்தில் சவாசனம் என்பார்களே அதுபோல எந்த அசைவும் இல்லாமல் சில மணி நேரம் கிடக்கும். நாம் பார்த்தால் கூட அது செத்து விட்டதோ என்று தான் தோன்றும். அருகில் சென்று பார்த்தால்தான் அதன் உடல் அசைவு தெரியும். ஏன் அது அப்படி கிடக்கிறது என்றால், பாம்பின் விஷம் தலைக்கு ஏறி மூளையில் கலந்து விட்டால் உயிரிழப்பு ஏற்பட்டு விடும்.

எனவேதான் அறிவுள்ள அந்த நாய்கள் சவாசனம்போல படுத்துக்கொள்கின்றன. அப்படி படுத்துக்கொள்ளும்போது, ரத்தம் இயற்கையாகவே சிறுநீரகத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு விஷம் சிறுநீராக வெளியேறும். சிறுநீர் வெளியேறியதும் எந்த பிரச்சினையும் இல்லாமல் அது தொடர்ந்து தனது காவல் பணியை செய்யும்...

கிருஷ்ணர் முதன்முதலாக வெண்ணெய் திருடிய கதை


கிருஷ்ணர் முதன்முதலாக வெண்ணெய் திருடிய கதை

கிருஷ்ணர் முதன்முதலாக வெண்ணெய் திருட ஆரம்பித்த கதை மிகவுமே சுவாரசியமானது. கிருஷ்ணர் குழந்தையாக இருக்கும்போது தாய் யசோதை கிருஷ்ணருக்கு அவ்வப்போது சிறிது வெண்ணெய் தருவாள். இதன் சுவை கிருஷ்ணருக்கு மிகவுமே பிடிக்கின்றது. வெண்ணெய் எங்கிருந்தோ வருவதால்தான் அம்மா நமக்கு சிறிதளவே வழங்குகின்றாள் என்று கிருஷ்ணர் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் ஒருமுறை கிருஷ்ணரும் பலராமரும் தவழ்ந்தவாறு விளையாடிக் கொண்டே ஒரு அறையின் பக்கமாக சென்றனர். அந்த அறை இருட்டாக இருப்பினும் உள்ளே சென்ற அவர்கள் பானைகள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதில் என்ன இருக்கின்றது என்ற ஆவலில் அதனைப்பிடித்துக் கொண்டு எழுந்துநின்று, பானைக்குள் கைவிட, அது வெண்ணெயால் நிறைந்திருப்பதைக் கண்டு வியப்புற்று அள்ளி அள்ளி உண்டார்கள். இவ்வளவு வெண்ணெயை வைத்துக் கொண்டு அம்மா நமக்கு சிறிது சிறிதாகத்தானே தருகின்றாள் என்று எண்ணியாறு விளையாட்டையும் மறந்து வெண்ணெயை உண்டு கொண்டிருந்தார். அச்சமயத்தில் குழந்தையை தேடிக்கொண்டு அங்கே வந்த யசோதை கிருஷ்ணர் அணிந்திருந்த ஆபரணங்களின் ஒளியில் வெண்ணெய் மயமாக இருப்பதைக் கண்டார். என்ன கிருஷ்ண வெண்ணெய் திருடி உண்கின்றாயா என்றாள். உடனே கிருஷ்ணர் என்ன சொல்வதென்று தெரியாமல் இல்லையம்மா நீங்கள் என்னை உடல் முழுவதும் ஆபரணங்களால் நிரப்பியுள்ளீர்கள், இந்த ஆபரணங்கள் எனது உடலை மிகவுமே சூடுபடுத்துவதால் அதனை தணிக்கவே வெண்ணெய் பானைக்குள் கைவிட்டு குளிர்ச்சி செய்துகொண்டேன் என்றாள். உடனே அவள் உனது கன்னம் மற்றும் வாயில் வெண்ணெய் நிரம்பியுள்ளதே அது எப்படி என்றாள். மாட்டிக்கொண்டோமே என்று நினைத்த கிருஷ்ணர் இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று நினைத்தவர், இந்த அறையின் இருட்டில் எறும்புகள் என்மேல் ஏறியதே தெரியவில்லை, எறும்புகள் எனது கன்னத்தை கடித்தபோது, எனது வெண்ணெய் கையுடன் அதனை தள்ளிவிட்டேன், அதனால்தான் கன்னம் முழுவதும் வெண்ணெயாக இருக்கின்றது அம்மா என்றார். அடடா எனது கண்ணனை நானே தவறாக நினைத்துவிட்டேனே என்றவாறு அன்புடன் தூக்கியணைத்து கொண்டாள். அப்போதுதான் கிருஷ்ணர் ஆஹா விருந்தாவனத்தின் புத்திசாலி பெண்மணியான எனது அன்னையையே நான் ஏமாற்றிவிட்டேன் என்கின்றபோது இனி யார் வீட்டில் வேண்டுமானாலும் எளிதாக வெண்ணெய் திருடலாம் என்று முடிவு செய்தார். இவ்வாறாக கிருஷ்ணர் முதன்முதலாக தனது நவநீத சோரத்தை அதாவது வெண்ணெய் திருடிய லீலையை மிக அழகாக அரங்கேற்றினார்.

#பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம்

#பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம்

*ஜீன் 1ம் தேதியன்று புதிய பாலிசிஆண்டு தொடங்குவதால் இதுவரை இந்த திட்டத்தில் இணையாதவர்கள் அவரவர் வங்கி கிளைக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொடுத்து  காப்பீட்டுதிட்டத்தில் இணையவும்.*

ஏற்கனவே இத்திட்டத்தில் இணைந்தவர்கள் இந்த மேமாத இறுதியில் அதற்கான கட்டணம் உங்கள் வங்கிகணக்கில் எடுக்கப்படஉள்ளதால் தேவையான பணஇருப்பு உள்ளதாஎன பார்த்துக்கொள்ளவும்.
________________________

*பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம்...ஒரு விளக்கம்.*

படித்தால் மட்டும் போதாது.மக்களுக்கு பகிரவும் செய்யணும்.

இந்த காப்பீட்டு திட்டம் இரு விதமாக செயல் படுத்தப் படுகிறது.

*ஒன்று விபத்து காப்பீடு மற்றொன்று ஆயுள் காப்பீடு.*

இரண்டிற்க்கும் தனித்தனியாக இரண்டு லட்ச ரூபாய் காப்பீட்டு தொகை உண்டு. மொத்தம் நான்கு லட்ச ரூபாய்.ஒருவர் இரண்டையும் சேர்த்து எடுக்கலாம் அல்லது எது வேண்டுமோ அதை மட்டும் எடுக்கலாம்.

வங்கி வாடிக்கையாளர்கள் அவரவர் கணக்கு வைத்திருக்கும் வங்கி மூலம் அல்லது அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு மூலம் மட்டுமே எடுக்க முடியும்.

விபத்து காப்பீட்டிற்க்காக ஆண்டுக்கு 12 ரூபாயும் ஆயுள் காப்பீட்டிற்க்காக ஆண்டுக்கு 330 ரூபாயும் ஒருவரிடமிருந்து கட்டணமாக வசூலிக்கப்படும்.இது ஒரு குழுகாப்பீடு என்பதால் யாருக்கும் தனியாக பாலிசி சான்றிதழ் தரப்பட மாட்டாது. மேலும் இது செயல்படுத்தபடும் காலம் ஜீன் 1 ம் தேதியிலிருந்து மே31 ம் தேதி வரையாகும். ஆனால் ஒருவர் எப்பொழுது வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணையலாம்.

ஒருமுறை ஒருவர் தேவையான படிவத்தை நிரப்பி கொடுத்து இத்திட்டத்தில் சேர்ந்து்விட்டால் ஒவ்வொரு ஆண்டும் அவரது கணக்கிலிருந்து காப்பீட்டு கட்டணம் தானாகவே கழித்துக் கொள்ளப்படும். ஒருவர் ஒரு வங்கி மூலம் மட்டுமே இதில் சேர வேண்டும். இறப்பு உரிமை (Death claim)ஒரு வங்கியில் மட்டுமே கோர முடியும்.
ஒருவர் திட்ட ஆரம்பத்தில் நிரப்பி தரும் படிவத்தில் பயனாளியின்
(Nominee) பெயரை குறிப்பிட வேண்டும்.

*விபத்து காப்பீட்டில் 18 வயது முதல் 70 வயது வரையிலும் ஆயுள் காப்பீட்டில் 18 வயது முதல் 50 வயதுவரை ஆண் பெண் இருபாலாரும் சேரலாம்.ஆயுள் காப்பீட்டை 55 வயது வரை தொடரலாம்.இத்திட்டத்தில் முதிர்வு தொகை என்று எதுவும் வழங்கப்பட மாட்டாது.*

*விபத்தினால் இறப்பு என்பது சாலை விபத்து மட்டுமல்ல பாம்பு கடித்து இறந்தாலும் விபத்துதான் படியில் தவறி விழுந்து இறந்தாலும் விபத்துதான்.விபத்தினால் ஏற்படும் ஊனத்திற்க்கும் இழப்பீடு உண்டு.*

*ஆயுள் காப்பீடு என்பது ஒருவர் எப்படி இறந்து போனாலும் காப்பீட்டு பணம் உண்டு.பாலிசியில் சேர்ந்த முதலாமாண்டில் மட்டும் தற்கொலை ஏற்கப்படாது.*

*மொத்தம் ஆண்டிற்க்கு 342 ரூபாய்க்கு நான்கு லட்ச ருபாய் காப்பீடு இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கிறது.*

ஒருவர் எந்த வங்கியில் இத்திட்டத்தில் சேர்ந்திருக்கிறார் என்று குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லி வைக்க வேண்டும். ஏனென்றால் ஒருவரது வங்கி கணக்கிலிருந்து கட்டணம் கழிக்கப் படுவது மட்டுமே ஆதாரம்.

நாம் அனைவரும் இத்திட்டத்தில் சேருவதோடு இல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களையும் சேர தூண்ட வேண்டும்.

நம்மால் முடிந்த ஏழைகளுக்கு நாமே வங்கி கணக்கு தொடங்கி தந்து கட்டணத்தையும் செலுத்தி இத்திட்டத்தில் சேர்க்கலாம். பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா மூலம் இருப்பு வைக்க வேண்டிய அவசியமில்லாத (0 Balance) வங்கி கணக்கு துவக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் ஏழைகளுக்கு கிடைத்த ஒரு வரப் பிரசாதமாகும்.

எளியோருக்கான உருப்படியான திட்த்தை மக்களுக்கு விளக்குவதும்,சேர்ப்பதும் தேசப்பணி என்பதை நாம் உணர்வோம்.
நன்றி.

*ஆளுக்கு ஒரு ஷேர்செய்து மக்களுக்கு தகவல் சென்றடைய உதவுவோம்*

நம்ம வாங்குற பிரெட் நல்லதான்னு எப்படி தெரிஞ்சிக்கிறது?...


நம்ம வாங்குற பிரெட் நல்லதான்னு எப்படி தெரிஞ்சிக்கிறது?...
   
இன்றைய பரபரப்பான அவசர உலகில் ஓட்ஸ், பிரெட் ஆகியவை தான் பிரதான காலை உணவுகளாகிவிட்டன.

அதனால் நாமும் அவற்றை கடைகளில் அப்படியே எதையும் கவனிக்காமல் வாங்கி வந்துவிடுகிறோம். ஆனால் நாம் பிரெட் வாங்கும்போது வேறு என்ன மாதிரியான விஷயங்களையெல்லாம் பார்த்து வாங்க வேண்டும்?

ஒயிட் பிரெட் நல்லதா? இல்லை பிரௌன் நல்லதா என்ற குழப்பத்திலேயே பலரும் இரண்டு வகை பிரெட்டையும் வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் இனிமேலாவது பிரெட் வாங்கும்போது கீழ்வரும் சில விஷயங்களை கவனித்து வாங்குங்கள்.

முழு தானியங்கள் அடங்கிய பிரெட்டைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். கடைகளில் வாங்கும்போது ஃபுல் கிரெய்ன் என்று போடப்பட்டிருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்

அத்தகைய ஃபுல் கிரெய்ன் பிரெட்டுகளில் தான் நார்ச்சத்து, புரதம், வைட்டமின், மினரல்கள் ஆகியவை இடங்கியுள்ளன.  இப்போது பருப்பு வகைகள், பிரௌன் அரிசி, கோதுமை, பார்லி, ஓட்ஸ் ஆகியவை அடங்கிய பிரெட்டகள் இப்போது கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி சாப்பிடலாம்.

ஒயிட் பிரெட் வாங்குவதை முதலில் தவிர்த்திடுங்கள். அவை முழுக்க முழுக்க மைதாவினால் செய்யப்பட்டிருக்கும்.

பிரெட் வாங்கும்போது அது 100 சதவீதம் முழுதானியம் என்று முத்திரை இடப்பட்டிருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள்.

அந்த லேபிள் இருந்தால் நீங்கள் வாங்கும் பிரெட்டில் 16 வகையான பருப்பு வகைகளும் தானியங்களும் அடங்கியுள்ளன என்று அர்த்தம்.

லேபிள் இல்லையென்றால் அதில் வெறும் 50 சதவீத சத்துக்கள் மட்டுமே அடங்கியுள்ளன.

நீங்கள் வாங்கும் பிரெட்டுகளில் நார்ச்சத்துக்கள எவ்வளவு நிரம்பியுள்ளன என்று பார்க்க வேண்டும். குறைந்தது 3 தானியங்களாவது இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். ஏனெனில் அவை உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

பிரெட்டில் ஈஸ்ட் கலக்கப்படுவதால் விரைவில் கெட்டுப்போகும் தன்மையுடையது. அதனால் தயாரித்த தேதியைப் பார்த்து வாங்குவது மிக அவசியம். எந்த பிரெட்டாக இருந்தாலும் ஒரு வாரத்துக்கும் மேல் வைத்துப் பயன்படுத்தக் கூடாது.

சனி, 23 மே, 2020

நம் நாட்டின் கோரொனா எண்ணிக்கை 100 இருந்த போது மக்களிடமிருந்த பயம், இன்று 1,00,000 ஐ தாண்டிய போது இல்லையே..

நம் நாட்டின் கோரொனா எண்ணிக்கை 100 இருந்த போது மக்களிடமிருந்த பயம்,   இன்று 1,00,000 ஐ தாண்டிய போது இல்லையே..

மனிதனின் உளவியல் ரீதியாக பார்த்தால் இதற்கு விடை கிடைக்கும். "குப்ளர் ரோஸ் மாடல் " என்று ஒரு தத்துவம் உள்ளது. அதாவது, மனிதனுக்கு எதேனும் துக்க நிகழ்வு, இயற்கை பேரிடர், விபத்து  போன்றவை நடக்கும்போது அவன் 5 கட்டங்களை கடந்து செல்கிறான். அவை,
1.Denial
2.Anger
3.Bargain
4.Depression
5.Acceptance

1.Denial - அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்பதை  நம்ப மறுப்பது. உதாரணத்திற்கு நமக்கெல்லாம் கோரொனா வராது என்று மறுத்தது. அப்படியே வந்தாலும்,  நமது ஊர் வெயிலில் அது பரவாது என்று  மீண்டும் மறுத்தது ( நான் உட்பட)

2.Anger-கோபம் கொள்வது. உதாரணத்திற்கு , ஊரடங்கு போட்டு விட்டார்களே, வருமானம் பாதிக்குமே, இயல்பு வாழ்க்கை கெட்டு விட்டதே என்று கோபம் கொண்டது.

3. Bargain- கொரோனா  வராமல் இருந்திருக்கலாமே , ஊரடங்கு உத்தரவு போடாமல் விட்டிருக்கலாமே என்று உள்ளுக்குள் புலம்புவது.

4. Depression- இப்படி ஆகிவிட்டதே என்று மன அழுத்தம்,  மனச்சோர்வு அடைவது.

5. Acceptance - கடைசி கட்டம்.  வேறு வழியில்லாமல் , அதை ஏற்றுக்கொள்வது. உதாரணம் : கொரோனாவுடன்  வாழ பழகிகொண்டது 😂😂

இந்த 5 நிலைகள் , கொரோனாவிற்கு மட்டுமல்ல. மனித வாழ்வில் உண்டாகும் அனைத்து பிரச்சினைகளக்கும்  பொருந்தும்.

புத்திசாலி என்ன செய்வான் ?
முதல் நிலையிலிருந்து நேராக ஐந்தாம் நிலைக்கு சென்று விட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைவான்.

ஐந்தாம் நிலைக்கு செல்லமுடியாமல்  சிக்கிக்கொள்பவன் மனநோயாளியாகிறான் !

Dr. பிரகாஷ் மூர்த்தி MBBS,MD, மன்னார்குடி.

வெள்ளி, 22 மே, 2020

கருஞ்சிறுத்தை


#உயிரினங்களை_அறிவோம்
#கருஞ்சிறுத்தை

கருஞ்சிறுத்தை மிகவும்  அபூர்வமானவை, அவைகளை பார்க்கவே முடியாது என்பது நம் எண்ணம். அது ஒருவகையில் உண்மையானாலும் கருஞ்சிறுத்தை என்பது தனி இனம் அல்ல, நிறக் குறைபாடு உள்ள சிறுத்தையே.
இன்னும் சொல்லப்போனால் தானொரு கருஞ்சிறுத்தை என்பது அதற்கே தெரியாது (விலங்குகள் பெரும்பாலும் நிறங்களை பிரித்து அறியாதவை).

அருகில் நோக்கினால் அவை முழுவதும் கருப்பாக இல்லாமல் மற்ற சிறுத்தைகளுக்கு இருப்பதைப்போல கருப்பு புள்ளிகள் தெரியும். இதற்கு முக்கியக்காரணம் உடலில் சுரக்கின்ற மெலனின் என்ற நிறமி. இவை அதிக அளவில் சுரக்கும்போது தோலின் நிறம் அடர் நிறத்திலும், குறைவாக சுரக்கும்போது வழக்கமான நிறத்தில் இருக்கும் விலங்குகள் தோல் வெளுத்தும் (Albino) காணப்படும்.

அல்பினோக்கு உதாரணம் வெள்ளை நிற புலிகள், வெள்ளை நிற மயில் (இவை நம் மதுரை திருப்பரங்குன்றத்தின் தென் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தன, தற்போது காண்பது அரிதாகி விட்டது.) சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் வண்டலூரிலும் காணலாம்.

கருஞ்சிறுத்தைகளின் இனப்பெருக்கம் என்பது வழக்கமாக நாம் பார்க்கும் சிறுத்தைகளுடனேயே இருக்கும். இவற்றின் பெற்றோரும் நாம் வழக்கமாக பார்க்கும் சிறுத்தைகளாகவே இருக்கும்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில், கர்நாடகத்தின் நாகர்ஹோலே, கபினி, பந்திப்பூர் புலிகள் காப்பகங்கள், குதிரைமூக்கு, கேரளத்தின் அமைதிப் பள்ளத்தாக்கு, இரவிக்குளம் தேசியப் பூங்காக்கள், பரம்பிக்குளம், பெரியார் புலிகள் காப்பகங்கள் போன்ற அடர்ந்த காட்டுப் பகுதிகளில் இவை காணப்படுகின்றன.

தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை, முதுமலை, ஆனைமலை புலிகள் காப்பகங்கள், கோவை வெள்ளியங்கிரி மலை, நீலகிரி மற்றும் சிறுவாணி அணையை ஒட்டியிருக்கும் அடர்காடுகளில் இவை காணப்படுகின்றன.

வனவிலங்குகளை பாதுகாப்பதும் நம் பிள்ளைகள் தலைமுறையினருக்கு வழங்குவதும் நமது கடமையாகும்!

இட்லி, தோசை கடை மாவு: ஒரு ஸ்லோ பாய்ஸன் !


இட்லி, தோசை கடை மாவு: ஒரு ஸ்லோ பாய்ஸன் !

என்ன தலைப்பைப் பார்த்து பயந்துவிட்டீர்களா, ஆம் இது பெரிய உண்மை.
மைதாவினால் செய்த பரோட்டா, அதில் உள்ள கெமிக்கல் உடம்புக்கு நல்லது அல்ல என கொஞ்ச நாளுக்கு முன் ஃபேஸ்புக்கில் பெரியளவில் ஷேர் செய்யபட்ட ஒரு பதிவு. இப்போது தென் இந்தியாவின் மிக முக்கியமான உணவான இட்லி தோசை பற்றி வந்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை இட்லி, தோசை போன்றவை அன்றாடம் நம் வீடுகளில் செய்யப்படும் ஒரு உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடம்பு சரி இல்லை என்றால் 'சாப்பிட கொடுங்க' என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பதும் இட்லி தான். ஆனால் இப்போது இதிலும் (மாவிலும்) ஆபத்து இருக்கிறது என்றால் எப்படி என்பதை தொடர்ந்து படியுங்கள்.


இட்லியை நீங்கள் வீட்டில் மாவரைத்து சாப்பிட்டால் பிரச்சினை கொஞ்சமும் இல்லை. இதையே கடையில் வாங்கி சாப்பிட்டால் பல பேருக்கு ஒத்து வராது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி அதில் என்னத்தான் பிரச்சினை என்கிறீர்களா, இட்லி தயாரிக்க பயன்படும் மாவை பற்றி தான் இந்த கட்டுரை.
ஆம் முன்பு நாம் ஆட்டுரலில் மாவு அரைத்தோம், பின்பு அது மிக்ஸி மற்றும் கிரைண்டர் என்றானது. அதுவும் பரவாயில்லை வாழ்க்கை மாற்றங்களின் காரணத்தால் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகிபோனது. ஆனால் தற்போது ஒரு முக்கிய திருப்பு முனையாக இட்லி தோசை மாவு ரெடியாக இப்பொழுது பட்டிதொட்டி, அண்ணாச்சி கடை முதல் பெரிய சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கிறது. மக்களும் வீட்டில் இட்லி மாவு அரைப்பதையே மெல்ல மறந்து வருகின்றனர்.
முன்பாவது திடீர் டிபன் என்றால் ரவா உப்புமாதான். இப்பொழுது நம்ம வாண்டுகளிடம் "தம்பி ஓடி போய் தெருமுனை கடையில ஒரு பாக்கெட் இட்லி தோசை மாவு வாங்கி வா" அப்படின்னு வாங்கி வந்த அந்த மாவை இட்லி தோசை ஊத்தியது போக மிச்சத்தை ஃபிரிஜ்ஜில் வைத்து அது தீரும்வரை போகும். பேச்சலர்ஸ் கூட இப்ப இதைபோன்றே செய்கின்றனர். இந்த மாவில் தான் பிரச்சனை இருக்கிறது.
1. நீங்கள் வாங்கும் எந்த ஒரு வெட் ஃப்ளோர்-Wet Flour (ஈர பத தோசை மாவிற்க்கு) ஐ எஸ் ஐ-ISI சான்றிதல் கிடையாது. அதனால் இது எந்த ஒரு ஆராய்ச்சி கூடத்திலும் சோதனை செய்யபடவில்லை.
2. இந்த மாவை அரைக்க மட்டமான அரிசியும் உளுந்தும் பயன்படுத்தபடுகிறது. முக்கியமாக முன்பு புண்ணுக்கு போட பயன்படும் போரிங் பவுடர் மற்றும் ஆரோட் மாவு போன்றவற்றை இதில் போடுவதால் மாவில் புளிப்பு வாசனை இருக்காது. மேலும் மாவும் நன்றாக பொங்கி நிறைய வரும் என்பதால் இதை செய்கின்றனர். வீட்டில் அரைத்த மாவை ரெண்டு நாள் வைத்து மூணாவது நாள் முகர்ந்து பார்த்தால் புளிப்பு வாசனையும் வரும் தோசையும் புளிக்கும். ஏன் என்றால் மாவு பக்குவமாவதும் தயிர் உறைவதும் ஒரு நல்ல பேக்டீரியாவின் செயலாகும். புளிப்பதை தவிர்க்க தான் கடையில் வாங்கும் மாவில் கண்டதையும் சேர்க்கிறார்கள்.
3. முக்கியமாக இந்த கிரைண்டர்கள் கமர்ஷியல் ரகம் இல்லை. அதாவ்து ஒரு நாளைக்கு 3 - 6 மணி நேரம் அரைக்க முடியும். ஆனால் இவர்கள் 12- 18 மணி
நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஆகிறது, சிறு துகள்கள் மாவிலும் விழலாம்.ஒரு நல்ல கிரைண்டர் கல்லின் ஆயுள் ஒருநாளைக்கு 12 மணி நேரம் அரைத்தால் வெறும் 6 மாதம் தான். கல்லை கொத்தி போட்டாலும் அடுத்த மூணு மாதம் தான் மேக்ஸிமம்.
4. மேலும் சமையல் செய்யும் ஆட்கள் தங்கள் கைகளை அடிக்கடி அலம்ப வேண்டும். நகங்கள் வளர்க்கவே கூடாது. ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு சுத்ததையும் இவர்கள் பேணுவதில்லை. ஒவ்வொரு நகத்தின் இடுக்கிலும் உள்ள கெட்ட பேக்டிரியாக்கள் மற்றும் கிருமிகள் ஈஸியாக சேர்ந்து விடுகிறது மற்றும் வாந்தி பேதி அடிக்கடி உடம்பு முடியாமல் போவதற்க்கு இது தான் காரணம்.
5. மேலும் இவர்கள் கிரைண்டரை ஒவ்வொரு மாவு அரைத்து முடிந்ததும் கழுவுவதில்லை அதனால் அந்த கிரைண்டரில் கிருமி அதிகரித்து கொண்டே செல்கிறது.
இவர்கள் கமர்ஷியலாக பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் வென்னீர் (Hot Water) ஊற்றி தான் சுத்தம் செய்ய வேண்டும் ஆனால் இவர்கள் ஒரு வாரத்திற்கு ஒரு முறை கழுவினாலே அதிகம், மாவு பொருட்களினால் எலிகள் மற்றும் பூச்சிகள் அந்த மிச்ச மாவை ருசித்து அந்த மிஷினின் சுத்தத்தன்மையை கெடுத்துவிடுகிறது.
6. என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீர் தான் ஊற்றீ மாவு அரைக்க வேண்டும். இவர்கள் எந்த தண்ணீரை உபயோகப்டுத்துகின்றனர் என்பது தெரியாது. இவர்கள் போர் தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரை உபயோகிக்கலாம்.
7. அந்த கால ஃபார்முலா படி நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கை ஆன்டி பயாடிக், உடம்பு உஷ்ணம் , வாய் நாற்றம், அல்சர்க்கு இது ஒரு நல்ல பொருள் ஆனால் இவர்கள் யாரும் வெந்தயத்தை உபயோகிப்பதில்லை.
8. கிரைன்டரில் மாவு தள்ளிவிடும் அந்த ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆறு மாதத்திற்க்கு அல்லது வருடத்திற்க்கு ஒரு முறை மாற்ற வேன்டும் ஆனால்
இவர்கள் அதை மாற்றவே மாட்டார்கள், அதனால் அந்த பிளாஸ்டிக் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து அதுவும் இந்த மாவில்தான்...!!
9. கிரைண்டர் ஓடும்போது நடுவில் இருக்கும் குழவியை ஒரு செயின் இணைக்கும். அந்த செயினை இவர்கள் கழட்டி விட்டு ஒரு பெல்ட்டை மாட்டி இருப்பார்கள். இதனால் அரைக்கும் போது சத்தம் வராமலும் மாவை அடிக்கடி கையால் தள்ளிவிட தேவையும் இருக்காது என்பதற்காகத்தான். நாளடைவில் அந்த கார்பன்பெல்ட் தண்ணீர் பட்டு அந்த பெல்ட் துகள்களும் இந்த மாவில்தான் விழும்.
10.இந்த மாவை இவர்கள் அரைத்து கடைக்கு பிளாஸ்டிக் பேக் மூலம் சப்ளை செய்கின்றனர். நம்ம ஊர் கிளைமேட்டுக்கு இதை ஃப்ரீஜரில் தான் வைக்க
வேண்டும் அப்பொழுது தான் இந்த மாவில் பாக்டீரியாவின் உற்பத்தியை கட்டுபடுத்த முடியும், ஆனால் நம்மூர் பாதி கடைகளில் ஃப்ரிட்ஜில் வைத்தாலும் இப்ப இருக்கிற மின்சார கட் பிரச்சனையில் இந்த மாவு கண்டிப்பாக கெட்டுவிடுகிறது.
கடைகளில் ஸ்டாக் வைத்திருக்கும் இட்லி தோசை மாவில், ஹைட்ரஜன் சல்பைட் உருவாக்கும் பாக்டீரியாக்கள் இருந்தது ஆய்வுகளின் போது தெரிய வந்திருக்கிறது. மனித மலத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள்,கோலிபார்ம்(COLIFORM) பாக்டீரியாக்கள் ஹைட்ரஜன் சல்பைட் உருவாக்கும் தன்மையுடையவை. தனி மனிதனின் சுத்தமின்மையும்(PERSONAL HYGIENE),மாவு அரைக்கும்போது சேர்க்கப்படும் அசுத்தமான தண்ணீருமே அதன் காரணங்களாகும்.


இது பற்றிய முழு விபரங்களை காண (நன்றி-உணவு உலகம்)
நிறைய இடங்களில், இந்த மாவில் இப்பொழுது பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிரைச்சிகளில் காணப்படும் ஈகோலி (E-COLI) எனும் பேக்டீரியா பரவி
சிலருக்கு உடனே பிரச்சினையும் சிலருக்கு இந்த மாவுகள் ஸ்லோ பாய்ஸனாக உருவாகிற்து. இந்த ஈகோலி மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும். அதனால் தயவு செய்து இவர்கள் கொடுக்கும் 6 நாள் கியாரன்டியில் ஈரமான இட்லி தோசை மாவை கண்டிப்பாக வாங்குவதை தவிருங்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அப்படியே வாங்கினால் பிரஷானது தானா நம்பகமானது தானா என கவனித்து வாங்குங்கள்.
இதே மாதிரி சிலர் மாவரைத்து நான்கு அல்லது ஐந்து பேர் என ஷேர் செய்யும் தாய்மார்களும் இதில் கண்டிப்பாக கவனம் வைக்கவேண்டும்.