வியாழன், 26 செப்டம்பர், 2019

சாதனைப் பெண்கள்

சாதனைப் பெண்கள்
1
அன்னை தெரேசா
அன்னை தெரேசா (’Mother Teresa, ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்திய குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார்.

2

கல்பனா சாவ்லா
கல்பனா சாவ்லா(Kalpana Chawla, ஜூலை 1, 1961 - பெப்ரவரி 1, 2003) இந்தியாவின் பஞ்சாபில் பிறந்த அமெரிக்கர் ஆவார். விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப்பெண் என்ற பெருமை இவருக்கு உண்டு. பிப்ரவரி 1, 2003 இல் ஏழு வீரர்களுடன் STS-107 என்ற கொலம்பியா விண்ணோடத்தில் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது விண்கலம் வெடித்து உயிரிழந்தார்.

3

ஆங் சான் சூச்சி
ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi, பிறப்பு: சூன் 19, 1945) மக்களாட்சி-ஆதரவாளர், மியான்மாரில் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் ஆவார். மக்களாட்சியை நாட்டில் ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். கடைசியாக 1990 ஆம் ஆண்டில் இருந்து 2010 நவம்பர் 13 ஆம் நாள் இராணுவ ஆட்சியாளர்களால் விடுவிக்கப்படும் வரை வீட்டுக்காவலில் இருந்து வந்துள்ளார்.


4 இரோம் சானு சர்மிளா அல்லது ஐரோம் ஷர்மிளா (Irom Chanu Sharmila, பிறப்பு: மார்ச் 14, 1972) மணிப்பூரின் இரும்பு மங்கை என அழைக்கப்படுபவராவார். இவரை அவரது வட்டார மொழி மக்கள் மெங்ஙௌபி என அழைக்கின்றனர். மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958ஐ [ASFPA] இந்திய அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என்று கூறி 2000ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்றிலிருந்து இவர் உண்ணாநிலைப் போராட்டம் இருந்துவருகிறார். இது 500 வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து வருகிறது. இதுவே உலகின் நீண்ட உண்ணாப் போராட்டமாகும்.

...முன்மொழிய
மேலும்...





5

இராஜேஸ்வரி சண்முகம்
இராஜேஸ்வரி சண்முகம் (மார்ச்சு 16, 1940 - மார்ச் 23, 2012) இலங்கை வானொலி புகழ் வானொலி அறிவிப்பாளரும், நாடகக் கலைஞரும் ஆவார். 1950 களில் இலங்கை வானொலியில் சானா சண்முகநாதன் நாடகத் தயாரிப்பாளராக இருந்தபொழுது வானொலி நாடகங்களில் நடிப்பதற்காக இவர் வானொலித்துறைக்கு வந்து தொடர்ந்து நீண்ட காலமாக நடித்தவர். ஆரம்பத்தில் தற்காலிக அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் தமிழ் வர்த்தக சேவையில் நிரந்தர அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

6

நிவேதிதா
சகோதரி நிவேதிதா (அக்டோபர் 28, 1867 - அக்டோபர் 13, 1911), (இயற்பெயர்:மார்கரெட் எலிசபெத் நோபல்), சமூக சேவகியும் எழுத்தாளரும் ஆசிரியையும் சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரும் ஆவார். ஆங்கில - ஐரியப் பெண்ணான இவர் 1895ஆம் ஆண்டில் இலண்டனில் விவேகானந்தரை சந்தித்து அவருடைய கொள்கைகளால் கவர்ந்திழுக்கப்பட்டு 1898ஆம் ஆண்டு ஜனவரி 28இல் இந்தியால் கல்கத்தா நகருக்கு வந்தார். நிவேதிதையை வரவேற்க சுவாமி விவேகானந்தரே துறைமுகத்திற்குச் சென்றிருந்தார். மார்ச் 28, 1898 ஆம் ஆண்டு பிரம்மச்சரிய தீட்சைக் கொடுக்கும்போது விவேகானந்தர் தெய்வத்திற்கு அர்ப்பணிப்பு எனும் பொருள்படும் நிவேதிதா என்ற பெயரை அளித்தார். இவ்வாறு இந்து சமயத்தில் தீட்சை வழங்கப்பட்ட முதல் மேற்கத்திய பெண் இவர் என்று சொல்லப்படுகிறது.
.
மேலும்...

மேரி கியூரி
இந்திரா காந்தி
அன்னை சாரதா தேவி
இராணி மங்கம்மாள்
இலட்சுமி சாகல்
ராணி அப்பக்கா (Rani Abbakka Chowta) - மங்களூர் பகுதியில் வெளிநாட்டு காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடிய ராணி.
மகாசுவேதா தேவி
முத்துலட்சுமி ரெட்டி
கஸ்தூரிபாய் காந்தி
ருக்மிணி தேவி அருண்டேல்
ருக்மிணி லட்சுமிபதி
ஜான்சி ராணி
ஹேரியட் பீச்சர் ஸ்டோவ் (எழுத்தாளர்)
நடின் கோர்­டிமர் (Nadien Gordimer)


Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

புதன், 25 செப்டம்பர், 2019

பெண்களைப் போற்றும் வாக்கியங்கள்


பெண்களைப் போற்றும் வாக்கியங்கள்

பெ‌ண்களை போ‌ற்றுவத‌ற்கு ‌கிடை‌த்த வா‌ய்‌ப்புக‌ள் அனை‌த்தையு‌ம், க‌வி‌ஞ‌‌ர்களு‌ம் ச‌ரி, புலவ‌ர்களு‌ம் ச‌ரி, அனைவருமே ந‌ன்கு பய‌ன்படு‌த்‌தி‌வி‌ட்டன‌ர்.

‌ ந‌ம் இ‌ந்‌தியா‌வி‌ல் ஒரு படி மே‌லே போ‌ய் ந‌தி அனை‌த்‌தி‌ற்கு‌ம் பெ‌ண்க‌ளி‌ன் பெயரையே வை‌த்து ‌சிற‌ப்‌பி‌த்தன‌ர்.

ந‌ம்மை‌த் தா‌‌ங்கு‌ம் பூ‌மியையு‌ம் பூ‌மாதே‌வி எ‌ன்று‌ம், ‌நிலாவை பெ‌ண்‌ணாக உருவக‌ப்படு‌த்துவது‌ம் கால‌ம் காலமாக நட‌ந்து வரு‌கிறது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் பெ‌ண்மையை ‌சிற‌ப்‌பி‌க்கு‌ம் ‌சில மொ‌ழிக‌ள் உ‌ள்ளன. அவை,

தாயை‌ச் ‌சிற‌ந்த கோ‌யிலு‌ம் இ‌ல்லை.

ஒ‌வ்வொரு ஆ‌ணி‌ன் வெ‌ற்‌றி‌க்கு‌ம் ‌பி‌ன்னா‌ல் ஒரு பெ‌ண் இரு‌ப்பா‌ர்.

ஆ‌ண் பு‌த்‌தி மு‌ன் பு‌த்‌தி, பெ‌ண் பு‌த்‌தி ‌பி‌ன் பு‌த்‌தி. (‌பி‌ன்னா‌ல் நட‌க்க‌ப்போவதையு‌ம் ‌சி‌ந்‌தி‌த்து‌ச் செய‌ல்படுவா‌‌ள்.)

அ‌ரிது அ‌ரிது பெ‌ண்ணா‌‌ய் ‌பிற‌ப்பது அ‌ரிது - ஒ‌ளவையா‌ர்

ஒரு நல்ல தாய், நூறு ஆசிரியர்களுக்கு சமம் - ஹெர்பட்

பெண்ணும், ஆணும் ஒரு கத்திரிக்கோலின் இரண்டு அலகுகள் போன்றவர்கள் - பெஞ்சமின் பிராங்ளின்

பெண் மனம் அறிவு பெறுவதைப் பொறுத்தே மனி த சமுதாய‌ம் அறிவும் வளர்ச்சியு‌ம் பெறுகிறது - ஹெரிடன்

அழகான பெண் கண்களுக்கு விருந்து அளிக்கிறாள். குணமுள்ள பெண் இதயத்துக்கு இதம் அளிக்கிறாள் - நெப்போலியன்

வாஞ்சையின் சரித்திரம்தான் பெண்ணின் வாழ்க்கை - இர்விங்

விண்ணுல‌கில் கவிதை மலர்கள் விண்மீன்கள். மண்ணுலகில் கவிதை மலர்கள் பெண்கள் - ஹார்கிரேவ்

ஆண்களின் வாதம் சாதிக்காததை பெண்களின் பார்வை சாதித்துவிடும் - ஹெவில்.

அன்னையை எவரோடும் ஒப்பிடக் கூடாது, அவள் ஈடற்றவள்.

தந்தையின் அன்பு கல்லறை வரை, தாயின் அன்பு உலகுள்ள வரை.

பெ‌ண்‌ணி‌ன் அழகற்ற மனதைவிட அழகற்ற முகமே சிறந்தது.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

பெண் பெருமை பேசும் தமிழ் இலக்கியங்கள்


பெண் பெருமை பேசும் தமிழ் இலக்கியங்கள்

திருக்குறள்:- சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருவள்ளுவர் (கி.மு.31) யாத்த திருக்குறளில் ‘மனத்தக்க மாண்புடையள்’ (51) என்றும், ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்’ (54) என்றும், ‘தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்’ (55) என்றும், ‘கனங்குழை மாதர்’ (1081) என்றும், ‘பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு’ (1089) என்றும், ‘இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது’ (1091) என்றும், ‘கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள.’ (1101) என்றும், ‘அணியிழை’ (1102) என்றும், ‘இவள் நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்’ (1104) என்றும், ‘காமம் செறிதோறும் சேயிழை மாட்டு’ (1110) என்றும், ‘நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள்’ (1111) என்றும், ‘முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு’ (1113) என்றும், ‘மலரன்ன கண்ணாள்’ (1119) என்றும், ‘அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்’ (1120) என்றும் பெண்கள் பெருமை பேசப்படுகின்றது

.(9) நாலடியார்:- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடியாரில் ‘அறுசுவையுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட’ (1-1) என்றும், ‘மனையாள்’ (3-4) என்றும், ‘முல்லை முகைமுறுவல் முத்தென்றும்’  (45-1) என்றும், ‘நிரைதொடீஇ’ (111-3) என்றும், ‘இனியார் தோள்’ (338-3) என்றும், ‘பூங்குழையார்’ (370-1) என்றும், ‘கொய்தளிர்’ (373-3) என்றும், ‘அரும்பெறற் கற்பின்’ (381-1) என்றும், ‘நறுநுதலாள்’ (381-4) என்றும், ‘மாதர் மனைமாட்சியாள்’ (382-4) என்றும், ‘மாண்கற்பின் இல்லாள் அமர்ந்ததே இல்’ (383-3,4)  என்றும், ‘கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள், உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள், உட்கி இடன் அறிந்து ஊடி யினிதின் உணரும;, மடமொழி மாதராள் பெண்.’  (384)  என்றும், ‘சுடர்த்தொடீஇ’ (398-2) என்றும் பெண்ணழகு பேசப்படும் சீர் இவையாம்.

(10) நான்மணிக்கடிகை:- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நான்மணிக்கடிகையில் ‘பெண்மை நலத்துக்கு அணியென்ப நாணம்’ (11-2,3) என்றும், ‘நிலைநின்ற பெண் நன்று’ (15-1,2) என்றும், ‘மனைக்காக்கம் மாண்ட மகளிர்’ (20-1) என்றும், ‘மனைக்குப்பாழ் வாள்நுதல் இன்மை’ (22-1) என்றும், ‘தாயின் சிறந்த தமரில்லை’ (35-2) என்றும், ‘தாயென்பாள் முந்துதான் செய்த வினை’ (45-3,4) என்றும், ‘உருபோடு அறிவுடையாள் இல்வாழ்க்கைப் பெண்ணென்ப’ (55-2,3) என்றும், ‘கொடுங்குழை நல்லாரை நல்லவர் நாணுவப்பர்’ (56-2,3) என்றும், ‘ஈன்றாளோடெண்ணக் கடவுளு மில்’ (57-3,4) என்றும், ‘பேணிய நாணின் வரைநிற்பர் நற்பெண்டிர்’ (90-2,3) என்றும், ‘பாழொக்கும் பண்புடையாள் இல்லா மனை’ (101-3,4) என்றும், ‘மனைக்கு விளக்கம் மடவார்’ (105-1) என்றும் பெண் புகழ் பாடப்படுகின்றது.



முடிவுரை

இதுவரை தொல்காப்பியம;, குறுந்தொகை, கலித்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, சிலப்பதிகாரம், திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை ஆகிய பத்துச் (10)  சங்க இலக்கிய நூல்களில் பெண் பெருமை பேசும் பாங்கினைப் பார்த்தோம். அவற்றில் பெண்ணை- மனைவி, கிழத்தி, காமக் கிழத்தி, நல்லோள், காதலி, கிழவி, கிழவோள், பேடை, பெட்டை, பெடை, பெண், பாட்டி, தோழி, செவிலி, விறலி, பரத்தை, ஒண்டொடி மாதர், அரிவை, வாலிழை மகளிர், மகளிர், ஒளியிழாய், நறுநுதால், சுடர்த்தொடீஇ, திருந்திழாய், நெட்டிருங் கூந்தலாள், நன்னுதால், கொய்தளிர் மேனியர், சுடர்நுதல் குறுமகள், மடமகள், அணிஇழையாள், கூந்தல் விறலியர், வளைமகள், மெல் இயல் மகளிர், சில் வளை விறலி, மனைமாண் இனியோள், பொற்றொடி மகளிர், தென் தமிழ்ப் பாவை, கற்பின் கொழுந்தே!, பொற்பின் செல்வி, கனங்குழை மாதர், நறுநுதலாள், இல்லாள், கட்கினியாள், தாயென்பாள், நற்பெண்டிர், பண்புடையாள், ஈன்றாள், மடவார், நிலைநின்ற பெண், இனியார் தோள் போன்ற சொற்பதங்களை அடக்கிச் சங்க இலக்கிய நூல்களில் பாடல் சமைத்தமை சங்கப் புலவர்கள் மனித வாழ்வியலின் உச்ச நிலையை மனத்தில் பதித்துச் செயற்பட்டனர் என்பது தௌ;;ளத் தெளிவாகின்றது.

ஆண், பெண் ஆகிய இருவரும் ஒன்று சேர்ந்து செயற்படின் அவர்கள் வாழ்வியல் சிறந்தோங்கும் என்பதில் ஐயப்பாடேதும் இருக்காது. வாழ்க்கைக்குப் பெண்ணின் பங்கு மிகவும் முக்கியம் என்பதை யாவரும் ஏற்பர். அதை அன்றே சங்கப் புலவர்களும் அறிந்திருந்து பெண்கள் பெருமையும், சீரும், சிறப்பும் பேசிப் பாடல்கள் யாத்தனர் போலும். இப்பாடல்கள் இரண்டாயிரத்து ஐநூறு (2500) ஆண்டுகளாக மக்கள் மத்தியிற் பெண் பெருமை பேசிக்கொண்டு உயிருடன் உலாவி வரும் சீரினையும் காண்கின்றோம்.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

ஒருமுறை.. இருமுறை அல்ல... 638 முறை... அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனம் என்றால் மிகையில்லையே..!!


ஒருமுறை.. இருமுறை அல்ல... 638 முறை... அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனம் என்றால் மிகையில்லையே..!!..!!


👉ஃபிடல் காஸ்ட்ரோ பதவியேற்றதை அமெரிக்காவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் ஃபிடல் காஸ்ட்ரோவிற்கும், அமெரிக்காவிற்கும் நேரடியான மோதல்கள் நடைபெற தொடங்கியது. ஆனால் இதையெல்லாம் ஃபிடல் காஸ்ட்ரோ வெற்றிகரமாக முறியடித்தார்.

👉இந்த மோதல்களில் ஏமாற்றத்தை சந்தித்த அமெரிக்கா, எப்படியாவது ஃபிடல் காஸ்ட்ரோவை தன் பக்கம் தக்க வைத்துக்கொள்ள திட்டம் தீட்டியது. ஆனால், அமெரிக்கா தீட்டிய அனைத்து திட்டங்களுமே தோல்வியிலேயே முடிந்தது.

👉ஃபிடல் காஸ்ட்ரோ, கியூபாவிற்கு சொந்தமான எல்லா வளங்களும் கியூபா மக்களுக்கே சொந்தம். வேறு எந்த ஏகாதிபத்தியத்திற்கும் அது கிடையாது என அறிவித்தார்.

👉ஃபிடல் காஸ்ட்ரோ அறிவித்த இந்த அறிவிப்பினால் கியூபா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இந்த தடையால் கியூபாவில் உற்பத்தியான பொருட்கள் அனைத்தும் கியூபாவிலேயே தேங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

👉இந்த இக்கட்டான சூழலில், கியூபாவிற்கு உதவ ரஷ்ய அரசு முன்வந்தது. கியூபாவின் பொருட்களை ரஷ்யாவில் இறக்குமதி செய்ய ரஷ்ய அரசு சம்மதித்தது.

👉நாளுக்குநாள் எழுச்சி பெறும் ஃபிடல் காஸ்ட்ரோவின் இந்த வளர்ச்சியை, அமெரிக்காவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்றது அமெரிக்கா.

👉ஃபிடல் காஸ்ட்ரோவுடனான நேரடி மோதல்கள் எதுவும் வெற்றி பெறாததால் அமெரிக்காவின் மத்திய உளவுப் பிரிவின் துணையோடு ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்ல திட்டம் தீட்டியது.

👉ஃபிடல் காஸ்ட்ரோ கொலை செய்ய ஒரு முறை, இருமுறை அல்ல 638-க்கும் அதிகமான முறை கொல்ல முயற்சிகள் மேற்கொண்டது அமெரிக்காவின் மத்திய உளவுப் பிரிவு.

👉அதாவது

👉சுருட்டில் விஷம் தடவிக் கொடுப்பது

👉ரசாயனக் குண்டுகள் போடுவது

👉மேலாடையில் விஷ வாயுவைத் தேய்த்துக் கொடுப்பது

👉விஷ மாத்திரைகளைக் கொடுப்பது

👉விபத்தினை ஏற்படுத்துவது

👉துப்பாக்கியால் சுடுவது போன்ற திட்டங்களை செயல்படுத்தி 638-க்கும் மேற்பட்ட முறையில் ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்ல முயற்சி செய்தது அமெரிக்கா. ஆனால் இந்த முயற்சிகள் அனைத்திலும் ஃபிடல் காஸ்ட்ரோ தப்பித்துக் கொண்டே இருந்தார்.

👉ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்ல முயன்ற 10 அமெரிக்க அதிபர்களின் பதவிக்காலம் முடிந்த பிறகும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாகவே விளங்கினார் ஃபிடல் காஸ்ட்ரோ.

பெண்குழந்தையைக் காப்போம், கற்பிப்போம்


பெண்குழந்தையைக் காப்போம், கற்பிப்போம்

பின்னணி

ஆண் பெண் குழந்தை விகிதம் (Child Sex Ratio (CSR) குறைந்திருப்பது கவனத்துக்குரியது. 1961 முதல் 0-6 வயதுக்குள் 1000 ஆண் குழந்தைகளுக்குச் சமமாகப் பெண்குழந்தைகளும் பிறந்தன. 1991இல் இவ்விகிதத்தில் பெண்குழந்தைகள் 945 எனவும் 2001இல் 927 எனவும் 2011ல் 918 என்றும் குறைந்திருப்பது அபாயகரமானது.

இந்த விகிதவேறுபாடு இரண்டு காரணங்களால் ஏற்படுகிறது. பிறப்புக்கு முன்பே கண்டுகொள்ளும் கருவிகளால் பாலினத் தேர்வும், பிறப்புக்குப் பின்னர் பெண்சிசுக்கொலையும் ஆகியன அவை.

ஒருபுறம் பெண்குழந்தைகளுக்கு எதிரான சமூகக்கட்டமைப்பும், மறுபுறம் பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டுகொள்ளும் கருவிகள் எளிதில் கிடைப்பதும், வாங்க முடிவதும், தொடர்ந்து தவறாகப் பயன்படுத்துவதன் காரணமாகப் பெண்குழந்தைகள் தேடி அழிக்கப்படுவதனால் ஆண் பெண் குழந்தை விகிதம் குறைந்துள்ளது.

பெண்குழந்தைகளுக்கு அதிகாரத்தையும் பாதுகாப்பையும், இயல்பாக வாழ்வதற்காக உத்தரவாதமளிக்கவும் கூட்டுறவான அனைத்து தரப்புச்சங்கமாகக் கூடிய  முயற்சிகளுக்காகவும் இந்திய அரசு “பேட்டிபச்சாவ் பேட்டி படாவ்” (பெண்குழந்தையைக் காப்போம், கற்பிப்போம்) என் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. “பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்” ((BBBP) என்ற திட்டம் ஆண்பெண் குழந்தை விகிதத்தைச் சமன்படுத்துவதற்காக 2014 அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது தேசிய பிரச்சாரம் மூலமாக செயலாக்கப்படுறது. ஆண் பெண் குழந்தை விகிதம் குறைவாக உள்ள அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 161 மாவட்டங்களை கவனத்தில் கொண்டு, பல அடுக்குச் செயல்திட்டமாக செயலாற்றபடுகிறது.

இது பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்ற அமைச்சகம், உடல்நலம் மற்றும் குடும்பநல அமைச்சகம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டுமுயற்சியினால் தொடங்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த குறிக்கோள்
பெண் குழந்தை பிறப்பைக் கொண்டாடுவதும் அவளது கல்விக்கு உத்தரவாதமளிப்பதும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்கள்
ஆண்பெண் குழந்தை விகிதம் குறைவாக இருக்கின்ற அடிப்படையில் 161 மாவட்டங்களை அடையாளங்காண்பது. தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பகுதியிலிருந்து குறைந்தது ஒரு மாநிலத்திற்கு ஒரு மாவட்டம் வீதம் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தேர்ந்தெடுக்க வேண்டும்.
மாவட்டங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மூன்று விதிகளாவன:-
தேசிய ஆண்பெண் குழந்தை விகிதத்தைவிட குறைவான விகிதம் உடைய மாவட்டங்கள் (87 மாவட்டங்கள் / 23 மாநிலங்கள்)
தேசிய ஆண்பெண் குழந்தை விகிதத்தைவிட அதிகமான விகிதம் உள்ள மாவட்டங்கள், ஆனால் குறைந்துவரும் தன்மையைக் காட்டுபவை (8 மாவட்டங்கள் / 8 மாநிலங்கள்)
தேசிய ஆண்பெண் குழந்தை விகிதத்தைவிட அதிகமான விகிதம் உள்ள மாவட்டங்கள், மேலும் கூடிவரும் தன்மையைக் காட்டுபவை ( 5 மாவட்டங்கள் / 5 மாநிலங்கள்). இவை, ஆண்பெண் குழந்தை விகித அளவுகள் பராமரிக்கப்படுவதோடு மற்ற மாவட்டங்களும் இந்த அனுபவத்தின் அடிப்படையில் பின்பற்றிக் கற்றுக்கொள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
நோக்கங்கள்
பாலின தேர்வு அடிப்படையில் கருவழிப்பதைத் தடுக்க வேண்டும்.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பையும் இயல்பாக வாழ்வதையும் உறுதி செய்தல்
பெண் குழந்தைகளுக்கு கல்வியை உறுதி செய்தல்.
செயல் திட்டம்
பெண்குழந்தைகளுக்குச் சமமதிப்பை உருவாக்கவும்,  அவர்களுக்கு  கல்வி அளிக்கவும் தொடர்ச்சியான சமூக ஒருஙகிணைப்பு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
ஆண் பெண் குழந்தை விகிதம் / பால்விகிதச் சமநிலை (SRB) குறைவாக இருக்கின்ற பிரச்சினையை மக்களுக்கு முன்வைத்து, விவாதித்து, எது சரியான தீர்வாகப் பெறப்படுகிறதோ அதனை மேம்படுத்துவது.
ஆண்பெண் குழந்தை விகிதம் குறைவாக இருக்கும் நகரங்களையும் மாவட்டங்களையும் தேர்ந்தெடுத்து, தனிக்கவனம் செலுத்தி திட்டத்தைச் செயல்படச்செய்வது.
பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் / நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் / சமூக மாற்றத்திற்கான ஊக்கிகளாக விளங்கும் கடைநிலைப்பணியாளர்கள் ஆகியோரைத் திரட்டி, பயிற்சி தந்து, உள்ளுர் / பெண்கள் / இளைஞர் குழுக்களின் உதவியுடன் திட்டமிடுதல்.
சேவை  அமைப்புகள் / திட்டங்கள் / செயல்திட்டங்கள் ஆகியவை பாலின சமநிலையோடு, குழந்தைகள் உரிமைகளை பாதுகாத்து, போதுமான பொறுப்புடன் செயல்படும் வகையில் அமைவதை உறுதிசெய்யவேண்டும்.
கடைநிலை / ஒன்றிய / மாவட்டம் அளவில் நிறுவனங்களுக்கிடையில் கூட்டமைப்பை ஏற்படுத்துவதை உறுதிசெய்யவேண்டும்.
திட்ட கூறுகள்
பெண் குழந்தைகளைக் காப்போம்; கற்பிப்போம்: என்ற முழக்கத்தை ஊடகங்கள் வாயிலாகப் பரப்புவது.

இந்தச் செயல்திட்டம் “பெண்குழந்தைகளைப் காப்போம்; கற்பிப்போம்” என்ற முழக்கத்துடன் தேசிய அளவில் விழிப்புணர்வு உருவாக்கிப் பெண்குழந்தைகளைக் கொண்டாடவும் அவர்களுக்குக் கல்விதரவும் செய்ய உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர்முழக்கம், பெண்குழந்தைகள் பிறப்பதை உறுதி செய்வதும் பாதுகாப்பிலும் வேறுபாடின்றி கல்வி கற்பிப்பதும் இந்த நாட்டில் சம உரிமையுடன் நாட்டின் ஆண்களைப் போல அதிகாரம் பெறுவதும் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் தொடர்முழக்கம், மத்திய, மாநில, மாவட்ட அளவில் ஊடகத் தொடர்புகொண்டு சமூக அளவிலான செயல்பாட்டினை 161 மாவட்டங்களில் பலரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தித் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஆண்பெண் குழந்தை விகிதம் குறைவாக இருக்கின்ற மாநில / யூனியன்களில் 161 மாவட்டங்களில் பல் முனை செயல்திட்டங்கள் செயலாற்றுவது.

பல கூறுகளை ஒருங்கிணணத்துச் செயல்படுத்த மனிதவள மேம்பாடு & உடல்நலம் மற்றும் குடும்ப நல அமைச்சங்களின் ஆலோசனைகளைப் பெற வேண்டும். ஆண்பெண் குழந்தை விகிதாச்சாரத்தைச் சமப்படுத்த, மாவட்ட, மாநில அளவில் செயல்படும் திட்டங்களை ஒருங்கிணைத்து குறிப்பிடத்தக்க வெளிப்பாட்டினை உருவாக்க வேண்டும். இதனை செயல்படுத்த, வளைந்து கொடுக்கக்கூடிய செயல்கட்டமைப்பை அமைத்து, நோக்கங்ககள் நிறைவேற கண்காணிக்க வேண்டும்.

திட்டச்செயலாக்கம்
மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் இத்திட்டத்திற்கான நிர்வாகமும் வரவு செலவு திட்டமிடவும் செய்யவும், மாநில அளவில் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் ஒட்டுமொத்த இயக்கத்திற்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறையின் செயலாளர் பொறுப்பேற்பார். திட்டத்தின் நடைமுறை அமைப்பினைப் பின்வருமாறு காணலாம்.

தேசிய அளவில்

“பெண் குழந்தைகளைப் காப்போம்; கற்பிப்போம்” என்ற தேசிய சவாலை நிறைவேற்றுவோராக பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறையின் செயலாளர் தலைமையில் உடல்நலம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம், மனிதவளத்துறை அமைச்சகம், தேசிய சட்டச்சேவை நிறுவனம் / மாற்றுத்திறனாளி நலத்துறை, தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் ஆகிய துறைகள் இணைந்து, பாலின வல்லுநர்களும் சமூகப்பிரதிநிதிகளும் இணைந்து செயலாற்றுவர்.

மாநில அளவில்

மாநில அரசுகள், திட்ட செயலாற்றுக் குழு ஒன்றை அமைத்து அதில் உறுப்பினர்களாக உடல்நலம் & குடும்பநலம், கல்வி,  பஞ்சாயத்துராஜ் / நகர்ப்புற வளர்ச்சி ஆகிய துறைகள் உள்ளடக்கிய மாநில சேவை அமைப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்துறை ஆகியன “பெண்குழந்தைகளைக் காப்போம்; கற்பிப்போம்” என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

துறைகளுக்கிடைியிலான கூட்டுச்செயல்பாடும் ஒருங்கிணைப்பும் தேவைப்படும் பட்சத்தில் திட்ட செயலாற்றுக் குழுவின் தலைவராக முதன்மைச் செயலாளர் செயல்படுவார். யூனியன்களில் நிர்வாகத்தலைவர் திட்ட செயலாற்றுக் குழுவின் தலைவராகச் செயல்படுவார்.

சில மாநிலங்களில் / யூனியன்களில் தங்களது மாநிலச்செயல்திட்டத்திலேயே பெண்களுக்கான அதிகாரமளித்தல், பாலின மற்றும் குழந்தைகள் தொடர்பான பிரச்சினைக்களுக்குத் தீர்வுகாணும் அமைப்பு இருந்தால் அதனையும் ஈடுபடுத்தலாம், அல்லது அவற்றைப் பலப்படுத்தலாம்.

முதன்மைச் செயலாளர், பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி / சமூகநலம் இந்த அமைப்பின் நெறியாளராகச் செயல்படவேண்டும். ICDS இன் இயக்குநரகம் மூலம் மாநிலங்களில் / யூனியன்களில் இத்திட்டம் சார்ந்த பணிகளை நிறைவேற்றவும் ஒருங்கிணைக்கவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை பொறுப்பேற்க வேண்டும்.

மாவட்ட அளவில்

மாவட்ட திட்ட செயலாற்றுக் குழு ஒன்று மாவட்ட ஆட்சியர் / துணை ஆணையர் உடன் தொடர்புடைய துறைகளின் பிரதிநிதிகள் (உடல்நலம் / குடும்பநலம் / கல்வி / பஞ்சாயத்ராஜ் / கிராமப்புறவளர்ச்சி, காவல்) ஆகியோருடன் மாவட்ட சட்டச்சேவை அதிகாரி (DLSA) யும் இணைந்து மாவட்ட செயல்திட்டத்தைத் திறமையாகச் செயல்படுத்தவும் முறைப்படுத்தவும், கண்காணிக்கவும் வேண்டும்.

ஓன்றிய அளவிலான செயல்திட்டங்களை, மாவட்ட செயல் அலுவலர், மாவட்ட ICDS அலுவலர் ஆகியோர் அமைத்துள்ளனர். அவர்களின் துணையோடு தொழில்நுட்ப உதவியையும் வழிகாட்டுதலையும் பெற்று மாவட்ட செயல்திட்டப்பணிகளை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒரு பாலின வல்லுநர் / சமூக சேவையாளர் ஒருவரும் செயலாற்றுக் குழுவில் இடம்பெற வேண்டும்.

ஒன்றிய அளவில்

துணை வட்டார நீதிபதி /துணைவட்டார அலுவலர் / வட்டார வளர்ச்சி அலுவலர் (தொடர்புடைய மாநில அரசால் முடிவுசெய்யப்பட்டவர்) தலைமையிலும் வட்டார அளவில் ஒரு குழு அமைக்கப்படவேண்டும். வட்டாரச் செயல்திட்டத்தினை நடைமுறைப்படுத்தவும்,  முறைப்படுத்தவும் கண்காணிக்கவும் அக்குழுவுக்குத் மேற்கண்டவர்கள் துணையிருப்பார்கள்.

கிராமப் பஞ்சாயத்து / வார்டு அளவில்

பொருத்தமான பஞ்சாயத்துச்சபை/ வார்டு சபைகள் (மாநில அரசுகளால் முடிவு செய்யப்பட்டது) கிராம பஞ்சாயத்து / வார்டு எல்லைக்குட்பட்ட அமைப்புகள் ஒருங்கிணைந்து இத்திட்டத்தைத் திறன் வாய்ந்த வகையில் செயல்படுத்திக் கண்காணிக்க வேண்டும்.

முன்னணி பணியாளர்கள் (AWW, ASHAS) ANMs) ஆண்பெண் குழந்தை விகிதம் குறித்த விழிப்புணர்வை கடை நிலை வரை உருவாக்கவும், தரவுகளைத் திரட்டவும், பெண்குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தொடர்பான செயல்திட்டங்கள்/ பணித்திட்டங்கள் குறித்த தகவல்களைப் பரப்பவும் வேண்டும்.

நகரங்கள் / நகர்ப்புறம்

மாநகராட்சிகளின் தலைவர் வழிகாட்டுதலுடன் இத்திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும்.

சமூக ஊடகம்
குழந்தைகளின் பால்விகிதக்குறைவுப் பிரச்சினைபற்றி அறிந்து கொள்ளப் பொருத்தமான காணொளிப் பதிவுகள் அனைத்தும் “பெண்குழந்தைகளைக் காப்போம்; கற்பிப்போம்” என்ற யு..டியூப் (YouTube) சேனல் ஒன்று அமைக்கபட்டுள்ளது. வீடியோ காட்சிகள் தொடர்ச்சியாகக் சேர்க்கப்படும். இதன்மூலம் விழிப்புணர்வை உருவாக்கவும் எளிதாகச் செய்தியைப் பரவச் செய்யலாம்.

மேலும், ‘பெண் குழந்தைகளைக் காப்போம்; கற்பிப்போம்’ என்ற கொள்கை முழக்கத்தை தேசிய அளவில் உருவாக்க ‘எனது அரசாங்கம்’ (MyGov) என்ற மின்தளம் வழியாகச் கருத்து பகிர்வு அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணையவும் உங்கள் மதிப்பு வாய்ந்த ஆலோசனைகள், விமர்சனங்கள் முதலியவற்றை வழங்க உங்களை அழைக்கின்றோம்.

நிதி ஒதிக்கீடு
12ஆவது திட்டத்தில், இத்திட்டத்தினைப் பொதுமக்களிடையே பிரபலப்படுத்த ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் ரூ. 100 கோடி பன்னாட்டு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி ஆகியவை மூலம் திரட்டப்படும்.

நிதி நிர்வாகம்

பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் மத்திய அரசு அளவில் திட்டத்தை நிர்வகிக்கவும் நிதித்திட்டக்கட்டுப்பாட்டிற்கும் பொறுப்பாகும். தொடர்புடைய மாநில அரசுகளுக்கு இச்செயல்திட்ட ஒப்புதலுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க நிதியை அம்மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகத்திற்கு வழங்கப்படும்.

மதிப்பீடு
12 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முடிவில் இச்செயல்திட்டத்தின் தாக்கத்தை மதிப்பீடு செய்து தேவையான சரிப்படுத்தும் முயற்ச்சிகளை எடுக்கவேண்டும். ஆண் பெண்குழந்தை பிறப்பு ஆண்டு சதவீதத்தை அடிநிலைக்கணக்கீடு செய்து தொடர்ச்சியாக மதிப்பீடு செய்ய வேண்டும்.



ஆதாரம் : மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்




Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

திங்கள், 23 செப்டம்பர், 2019

பெண்களுக்கான நோய்களும் அதற்கான தீர்வுகளும்...


பெண்களுக்கான நோய்களும் அதற்கான தீர்வுகளும்...

பெண்கள் குழந்தைகளாக இருக்கும்போது சளி பிடிக்கும்
அதற்குப் பிறகு ஹார்மோன் மாற்றங்கள் உண்டாகும்
இன்றைய காலகட்டத்தில் hybrid உணவுகள் கோழி கறிகள் சாப்பிடுவதனால் இளம் வயதில் பூப்பெய்தும் விடுகிறார்கள்

மாதவிடாய் சிக்கல்கள் வருகிறதுஉடல் எடை கூடுவது அல்லது குறைவது வெள்ளைப்படுவது போன்ற பிரச்சனைகளை உருவாகிறது
ஒரு சில பெண்களுக்கு தைராய்டு பிரச்சினை உண்டாகி
ஹைபோதைராய்டு ஆக இருந்தால்
மாதவிடாய் அதிகமாக இரத்தப்போக்கு நடைபெறுகிறது

இது தொடர்ந்து நடைபெறும் பொழுது இரத்த சோகை உண்டாகிறது
லோ தைராய்டு ஹார்மோன் பிரச்சினை இருந்தால்
மாதவிடாய் கண்டும் காணாமல் சீராக செல்வதில்லை

இதனால் உடல் பருமன் ஆகிறது
தைராய்டு கட்டிகள் உண்டாகிறது தொண்டை பகுதியில்

பிறகு திருமணம் நடைபெற்று ஒரு சில பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகிவிடுகிறது
ஒரு சிலருக்கு காலதாமதம் ஆகிறது

குழந்தை பிறக்கும்போது சுகப்பிரசவமாக இல்லாமல் அறுவை சிகிச்சையின் மூலம் பிறக்கிறது

இது மாதிரி தொடர்ந்து மூன்று குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறக்கும்பொழுது

அவர்களுக்கு ஏதேனும் ஒரு தீராத உபாதைகள் வந்து விடுகிறது
ஒரு சிலருக்கு ஒரு தடவைஅறுவை சிகிச்சை செய்யும் பொழுது
இதற்கு முன்பு சீராக மாத விடாய் நடந்துகொண்டு இருக்கும்
அறுவை சிகிச்சைக்குப் பிறகு மாதவிடாய் சீரற்ற முறையில் நடைபெறுகிறது
இதனால் கர்ப்பப்பை கட்டி pcod problem உண்டாகிறது

ஒரு சில பெண்களுக்கு தோல் உபாதைகளும் உண்டாகிறது
தொடர்ந்து சளிக்கு நோய் எதிர்ப்பு மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதால் உடல் அலர்ஜி உண்டாகி றது

ரத்தம் சுத்தம் செய்ய வேண்டும்

அருகம்புல் வெள்ளருகு நாவல்கொட்டை கருங்காலிப்பட்டைகொட்டைக்கரந்தை அவுரி கருவேப்பிலை போன்ற மூலிகைகளை சூரணமாக. வாங்கி சமஅளவு கலந்து ஒவ்வொரு கிராம் சாப்பிடவேண்டும் இருவேளை காலை இரவு

செரிமான பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும்

சுக்கு மிளகு திப்பிலி வெட்பாலை அரிசி ஓமம் சோம்பு சீரகம் பிரண்டை சதகுப்பை கொத்தமல்லி போன்ற மூலிகைகளை சம அளவு கலந்து சூரணமாக செய்து ஒவ்வொரு கிராம் காலையும் இரவும் சாப்பிடவேண்டும்

,நரம்பு மண்டலங்கள் பலப்படுத்த வேண்டும்

அஸ்வகந்தா நத்தைசூரி நிலப்பனைக் கிழங்கு பூமி சர்க்கரைக் கிழங்கு பூனைக்காலி விதை கோரைக்கிழங்கு கடுக்காய் நெல்லிக்காய் தான்றிக்காய் வல்லாரை தேற்றான்கொட்டை தேசாவரம் பற்பாடகம் போன்ற மூலிகைகளை சூரணமாக வாங்கி சமஅளவு கலந்து ஒவ்வொரு கிராம் காலையும் இரவும் சாப்பிடவேண்டும்

வாய்வு தொல்லைகள் சரி பண்ணவேண்டும்
முடக்கத்தான் இலை வாத நாராயணா இலை குறுந்தொட்டி வேர் கொடிவேலி வேலிப்பருத்தி சிறு தும்பை போன்ற மூலிகைகளை சூரணமாக வாங்கி சமஅளவு கலந்து ஒரு கிராம் காலையும் இரவும் சாப்பிட வேண்டும்

உடல்சூடு சிகிச்சையளிக்க வேண்டும்

வில்வம் துத்தி இலை அத்தி விதை அத்திப்பட்டை அத்தி இலை
நாயுருவி வெந்தயம் அதிமதுரம் ரோஜா இதழ் செம்பருத்தி பூ வெண்தாமரை மருதம்பட்டை வெட்டிவேர் நன்னாரி கீழாநெல்லி கரிசலாங்கண்ணி பொன்னாங்கண்ணி
போன்ற மூலிகைகளில் சூரணமாக வாங்கி சமஅளவு கலந்து ஒரு கிராம் காலையும் இரவும் சாப்பிட வேண்டும்

கர்ப்பபையை பலப்படுத்த வேண்டும் கருப்பையில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற வேண்டும்
அரசு இலை அசோகப் பட்டை லோந்த்ரா பட்டை
ஓரிதழ் தாமரை போன்ற மூலிகைகளை சம அளவு கலந்து ஒரு கிராம் சாப்பிட வேண்டும் இது கர்ப்பபையில் பலப்படும்

தோல் வியாதிகள் இருந்தால் அதை குணப்படுத்த வேண்டும்

சிறியாநங்கை தான்றிக்காய் ஆடுதின்னாபாளை ஆகாச கருட கிழங்கு நொச்சிஇலை குப்பைமேனி வாய் விடங்கம் சிறு செருப்படை இலை போன்ற மூலிகைகளை சம அளவு கலந்து ஒவ்வொரு கிராம் காலையும் இரவும் சாப்பிடவேண்டும்

சனி இருந்தால் சளியை குணப்படுத்த வேண்டும்

ஆடாதொடை இம்பூரல் சித்தரத்தை சிறுதும்பை
தூதுவளை விஷ்ணுகிரந்தி முசுமுசுக்கை தாளிசபத்திரி
கண்டங்கத்திரி போன்ற மூலிகைகளை சூரணமாக சமஅளவு கலந்து ஒரு கிராம் சாப்பிட வேண்டும் காலையும் இரவும்

கர்ப்பப் பையில் நீர் கட்டிகள் கட்டிகள் இருந்தாலும் கரைக்க மூலிகைகள்

வேலிப்பருத்தி கழர்ச்சிக்காய் சித்தரத்தை இலவங்கப்பட்டை தொட்டால் சுருங்கி மாவிலங்கப்பட்டை போன்ற மூலிகைகளை சம அளவு கலந்த சூரணமாக வாங்கி காலையும் இரவு ஒரு கிராம் சாப்பிட வேண்டும்

கர்ப்ப பையில் உள்ள கட்டிகளை கரைப்பதற்கு இனிமா கப் உபயோகித்து மாதவிடாய் நடக்கும் சமயத்தில் மென்சஸ் பாதையில் வேப்பிலை 2 உள்ளங் கைப்பிடி அளவு பெருங்காயம் ஒரு சிட்டிகை அளவு கசாயம் செய்து
செலுத்த வேண்டும் இது மாதிரி செலுத்தினால் கட்டிகள் கரைந்து வருவதை நீங்களே கண்கூடாக பார்க்கலாம்

மாதவிடாய் நடக்கும் சமயத்தில் எப்போதும் தொடர்ந்து கடை பிடித்தால் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எப்போதும் வராது

புதைந்து வரும் அந்தக் காலம்... பரிசாக கொடுப்போம் நம் சந்ததியினருக்கு..! எழிலாய் பழமையே பேசும்.... அந்தக் காலம்..... இந்தக் காலம்..!



புதைந்து வரும் அந்தக் காலம்... பரிசாக கொடுப்போம் நம் சந்ததியினருக்கு..!
எழிலாய் பழமையே பேசும்.... அந்தக் காலம்..... இந்தக் காலம்..!

'அது அந்தக் காலம், இது இந்தக் காலம்" என்று சொன்னால் நமக்கு சிறு வயதில் கேட்ட திரைப்பட பாடல் தான் ஞாபகத்திற்கு வரும்.

'காலம் கண் போன்றது...
கடமை பொன் போன்றது".
எனவே, காலத்தின் அருமையை உணர்ந்து கிடைக்கும் நேரத்தையும், சந்தர்ப்பங்களையும் உங்களுக்கு பயனுள்ள வகையில் அமைத்து கொள்ளுங்கள்.

உண்மையிலேயே அந்தக் கால நினைவுகளை நினைத்துப் பார்த்தால், நம் மனதிற்கு இதமாக இருக்கும்.

சரி, நாம் இன்று அந்தப் பொற்காலத்தில் மகிழ்ந்துள்ள நினைவுகளையும், இந்தக் காலத்தில் இழந்துள்ள விஷயங்களையும் பற்றி பார்க்கலாம்.

தொலைக்காட்சியில் இரண்டு சேனல்கள் வந்தாலே சந்தோஷத்தில் துள்ளி குதித்தது - அந்தக் காலம்.

இருநூறு சேனல் இருந்தபோதும், சேனலை மாற்றி மாற்றி கை அலுத்துப் போவது - இந்தக் காலம்.

திருவிழாவில் இரவு நேரங்களில் நண்பர்களோடு சினிமா பார்க்க சென்றது - அந்தக் காலம்.

திரையரங்குபோல் வீடு இருந்தும், சினிமாவை சேர்ந்து பார்க்க நண்பர்கள் இல்லாமல் இருப்பது - இந்தக் காலம்.

உற்றார் உறவினர்களுடன் கூடி வாழ்ந்தது - அந்தக் காலம்.

சோபா, செல்போனுடன் சேர்ந்து வாழ்வது - இந்தக் காலம்.

பாட்டியிடம் கதைக்கேட்டு மகிழ்ந்தது - அந்தக் காலம்.

சமூக வலைதளங்களில் கதைக்கேட்டு மகிழ்வது - இந்தக் காலம்.

கரிசல் காட்டில் காலை முதல் மாலை வரை உழைத்தது - அந்தக் காலம்.

கம்ப்யூட்டர் ஃ கைப்பேசி இல்லாமல் நாளை தொடங்க முடியவில்லை - இந்தக் காலம்.

குனிந்து, வளைந்து வேலை செய்வதே உடற்பயிற்சியாக இருந்தது - அந்தக் காலம்.

கூகுளில் உடற்பயிற்சி செய்வது எப்படி? எனத் தேடுவது - இந்தக் காலம்.

உரலையும், குழவியையும் வைத்து சமைத்து சாப்பிட்டது - அந்தக் காலம்.

மிக்ஸி, கிரைண்டரை வைத்து சமைத்து சாப்பிடுவது - இந்தக் காலம்.

கொஞ்சம் கொஞ்சமாக புதைந்து வரும் அந்தக் காலத்தை...!
புதையல் பரிசாகக் கொடுப்போம் நம் சந்ததியினருக்கு...!

இதை படித்தவுடன் உங்களுக்கும் மலரும் நினைவுகள் ஞாபகத்தில் வந்துவிட்டதா?

உங்களின் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து மகிழ விரும்புகிறீர்களா?

உங்களின் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து மகிழ...


ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

பெண் படைப்பாளிகள் சிலர், அப்பாவைப் பற்றிச் சிந்திய மனச்சித்திரங்கள்...


பெண் படைப்பாளிகள் சிலர், அப்பாவைப் பற்றிச் சிந்திய மனச்சித்திரங்கள்...

சுகிர்தராணி

இது தந்தைவழிச் சமூகம்தான். என் தந்தை ஆணாதிக்கவாதிதான். என்றாலும் நான் அவனைப் பார்த்துத்தான் வளர்ந்தேன். பெண்ணடிமைத்தனத்திற்கு ஆட்பட்ட என் தாயைப் பார்த்து வளர முடியாது. நீச்சலடிக்க, மரமேற, மலையேற, எதிரியை எதிர்த்து நிற்க, போராடக் கற்றுக் கொடுத்தவன் அவன்தான். என்னை சமூகம் எதிர்பார்க்கும் பெண்ணாக வளர விடாமல் பார்த்துக் கொண்டவன் அவனே. அவன் என் தந்தை... அவன் என் கதாநாயகன்... நான் அப்பாவின் மகள்.

ச.விஜயலட்சுமி

மீசைக்குள் தாய்மை ஒளித்திருந்த அப்பாவின் நளபாகம் இப்போது என் கையில். வீடும் ஊரும் உறங்கிக் கிடக்கும்... அப்பா வந்தவுடன் சாப்பிடக் காத்திருக்கும் மென்பிஞ்சு பாசம், இருளும் நிலவும் அறிந்தவை. பிஞ்சு மனதின் நண்பன்... அவரணைப்பில் மனசு பூனைக்குட்டியாய் சுருண்டு கிடக்கும். அப்பாவுக்கு தெரியும் எனக்கான அம்மா வாசம்... எனக்கான வாசம்!

இளம்பிறை

அப்பா, மகளுக்கு நம்பிக்கையின் உச்சம். இணையற்ற அக்கறை. சொல்லிக்கொள்ளாத பேரன்பு. மற்றவர்களிடம் ஏற்படும் நட்பு, மேகங்களைப் போல கொஞ்ச நேரத்தில் கலைந்து போய்விடலாம். ஆனால், இறுதி மூச்சு உள்ளவரை நினைவில் தெரியும் வானமே தந்தை.

அ.வெண்ணிலா

அப்பா என்றதும் நினைவுக்கு வருவது... அவரின் உச்சபட்ச ேகாபமும், உச்சபட்ச ரசனையும்தான். கொதிக்கும் வெந்நீரும், ஆழ்கிணற்றின் குளிர்நீரும் போல இரு துருவங்களின் கலவை. சோர்ந்திருக்கும் கோழிக் குஞ்சுக்கு அலகு திறந்து தண்ணீர் ஊற்றுவார். அதே கணத்தில், குடிக்கும் தேநீரில் குறையும் ஒரு துளி சர்க்கரைக்காக கெட்ட வார்த்தைகளை வீசுவார். அப்பா எப்போதுமே சிறு விஷயங்களில் பெரு மகிழ்ச்சி காணும் குழந்தை மனசுக்காரர். என் வாழ்வின் உயரம் அவரே!

சுமதி

ஏன் இந்த அப்பாக்கள் மட்டும், எப்போதும் குழந்தைகளைத் தோளில் தூக்குகிறார்கள்? நான் பார்க்காத உலகத்தையும் சேர்த்து என் பிள்ளை பார்க்க வேண்டும், தான் தொடாத உயரத்தையும் சேர்த்து என் பிள்ளை தொட வேண்டும் என்பதற்காகத்தான். தனக்கு கிடைக்காதது, தன் பிள்ளைகளுக்கு கிடைத்தே ஆகவேண்டும் என்பதில் அப்பாக்களின் பிடிவாதம் அதீதமானது. மனைவிக்கு மறுக்கிற அங்கீகாரம், சுதந்திரத்தைக் கூட தன் மகளுக்குக் கொடுப்பதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர்கள் ஆண்கள்.

உமா மோகன்

சில பேருக்கு பொறுப்பு, சில பேருக்கு அலங்காரம், சில பேருக்கு கடமை, இன்னும் சிலருக்கோ பொறுமை, அப்பா என்றதும் ஆசை பொங்கி வரவோ, நெகிழவோ, பெருமை கொள்ளவோ முடிந்தவர்கள் பாக்கியவான்கள். இடுப்பில் கட்டிக்கொண்டு பழக்கியிருந்தாலும், நீரில் தள்ளிவிட்டுப் பழக்கியிருந்தாலும், காவலுக்கு நின்று நீந்த வைத்த அப்பாக்களின் பிள்ளைகள் மட்டுமே அந்த உறவின் மேன்மை போற்றுகிறார்கள்.

கவின்மலர்

இசைக் கருவிகள் வாசிக்கத் தெரிந்த, இன்றும் பெருங்குரலெடுத்து அழகாய்ப் பாடக்கூடிய கலைஞன் அப்பாவாக வந்தது எவ்வளவு பெரிய பேறு! நுண்ணுணர்வு கொண்டவர்கள் கலைஞர்கள். அது போல உணர்வு வயப்படுவோரும் கூட. அந்தக் குணம் அப்படியே எனக்கும். பால்யத்தில் எங்கள் வீட்டு வாசலில் அமர்ந்து ‘முதல் மரியாதை’ திரைக்கதை சொன்ன காலம் திரும்பக் கிடைக்காதது.

லீனா மணிமேகலை

அப்பா, நீங்கள் என்னிடம் சொல்லாமல் சென்று இன்றோடு பதினேழு வருடங்கள். காலையில் எழுந்ததும் உங்கள் மர நாற்காலியில், வெற்று மார்போடு அமர்ந்தபடி செய்தித்தாள்  வாசிப்பீர்கள். சரியாகத் துடைக்காமல் அணிந்திருக்கும் உங்கள் மூக்குக் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துத் தருவேன்! இதோ அதே மர நாற்காலியில் அமர்ந்து இதை எழுதுகிறேன்.

அது உங்களை எங்கே எனக் கேட்கிறது. பொன்னீலன் மாமா எழுதிய ‘ஜீவா என்றொரு மானுடன்’ என்ற புத்தகத்தில் உங்கள் கையெழுத்தைத் தொட்டுப் பார்க்கிறேன். அந்த புத்தகத்திற்கு நீங்கள் போட்ட அட்டை கூட அப்படியே இருக்கிறது! உயிரோடு இருந்திருந்தால் உங்களோடு பேசித் தீர்க்கலாம்.

மனுஷி

அப்பாக்களின் ராஜ்ஜியத்தில் மகள்கள்தான் இளவரசிகள் என்கிறார்கள். ஆனால், சிறுவயது முதல் அப்பாவின் ஸ்பரிசம் படாமல் வளர்ந்த மகள் நான். அப்பாவைப் பற்றிச் சிலாகித்துச் சொல்லிக்கொள்ள எந்த நினைவுகளும் இல்லை என்னிடம். அப்பாவின் மீது எந்த வெறுப்பும் இல்லை. அன்பும் இல்லை. அவ்வளவுதான். சிறுகதைகளில், நாவல்களில், கவிதைகளில், சில சினிமாக்களில், சில பாடல் வரிகளில் மகள் மீது அளவு கடந்த பாசத்தைப் பொழியும் அப்பாக்களைத் தரிசிக்கிறபோது  அந்த இடத்தில் அம்மாவை மட்டும்தான் வைத்துப் பார்த்து ஏக்கம் கொள்கிறது மனம்!

தி.பரமேஸ்வரி

அச்சமும் சினமும் அன்பும் நிரம்பிய மீசை வைத்த என் முதல் ஆண். அழ வைத்துப் பின் சிரிக்கச் செய்யும் பேரழகன். மதுப்போத்தலின் மீது விசையெனக் கிளம்பி விண்ணேகியவன். பேராற்றின் பாறையிடுக்கில் சிக்கிய சிறு இலையெனச் சிதைந்த வாழ்வு.

கே.வி.ஷைலஜா

அப்பா என்ற உறவின் குளிர்மையை வேண்டி நான் ஒரு இரவில் அழுதபோது எனக்கு வயது 22. என் அப்பா இறந்தும் 22 வருடமாகியிருந்தது. என் மகளுக்கும் அவள் அப்பாவுக்குமான நட்பில், உறவில், கொஞ்சலில், மிரட்டலில் நான் என்னை மீட்டெடுப்பதுண்டு. கலையும் இலக்கியமும் பேர் தரலாம்;  புகழ் தரலாம்; சில நேரங்களில் பணம்கூட தரலாம்.

ஆனால் எனக்கு அப்பாவைத் தந்தது. என் முதல் புத்தகமான சிதம்பர நினைவுகள் படித்துவிட்டு கே.எஸ்.சுப்ரமணியன், ‘‘அவளைப் பார்க்கும்போது என் மகள் மாதிரியான வாத்சல்யம் ஏற்படுகிறது’’ என்று சொன்னதும்... தன் மரணம் வரை ‘‘என் மகள் ஷைலு’’ என்று இயக்குனர் பாலு மகேந்திரா என்னைத் திணறடித்ததும்... நான் என் அப்பாக்களின் செட்டைக்குள் பத்திரமாக இருக்கிறேன்.
நன்றி குங்குமம்.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

சர்வதேச மகள்கள் தினம்



இன்று சர்வதேச மகள்கள் தினம் உலகின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டம்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் மகள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. உலக அளவில் 28-ம் தேதியும் இது கொண்டாடப்படுகிறது. பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் நேற்று மகள்கள் தினமாகும். இந்த ஆண்டு மட்டும் செப்டம்பர் மாதத்தில் 5 ஞாயிற்றுக் கிழமைகள் வருகின்றன. அதனால் 4-வது ஞாயிற்றுக் கிழமையைக் கணக்கில் கொண்டு மகள்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

பெண் குழந்தைகளை கௌரவிக்கும் வகையில் இன்று மகள்கள் தினம் உலகின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.

ஆண்களின் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் கடந்து செல்பவர்கள்தான் பெண்கள். அம்மாவாக, காதலியாக, தோழியாக, மனைவியாக, உறவினராக அன்பைப் பொழிகிறார்கள். இத்தனை பெண்களையும் தாண்டி, ஒருவனுக்கு மகிழ்ச்சியையும், வாழ்க்கை மீதான பிடிப்பையும் தருவது மகள் என்ற உறவு மட்டும்தான்....

பெற்றோர் எவ்வளவுதான் செல்லமாக வளர்த்தாலும், பெண் என்பவள் வேறொரு வீட்டில் வாழப்போகிறவளாகவே பார்க்கப்படுகிறாள். ஆனாலும், புகுந்தவீட்டிற்கு அவள் சென்றபின் பிறந்துவளர்ந்த வீடு வெறிச்சோடிப் போய் விடுகிறது...

சகோதர சகோதரிகளுடன் ஆடிப் பாடிய பால்ய பருவம், பூப்படைந்ததும் மாறி விடுகிறது. புகுந்த வீட்டிற்குச் சென்றபின் புதுப்புது உறவுகள் என பெண்ணுக்கு புதுப் பிறவியாகவே அமைகிறது.

மகள் பிறந்த போது அவள் வடிவில் ஒரு தாயும் பிறக்கிறாள் என்பது பழமொழி. கருத்தரிக்கும் பேறு- இயற்கை பெண்களுக்குத்தான் தந்துள்ளது. பத்துமாதம் சுமந்து குழந்தையைப் பிரசவிக்கும்போது அவள் மறுபிறவி எடுக்கிறாள்..

அனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஆளுமை செலுத்திவரும் இந்தக் காலத்தில், பெண்சிசுக்கொலை, பாலியல் வன்கொடுமை, குழந்தைத் திருமணம் போன்ற கொடுமைகளும் நடைபெறத்தான் செய்கின்றன. பெண்களுக்கு எதிரான தீங்குகள் ஒழியட்டும், பெண்களின் பெருமையை இவ்வுலகம் என்றென்றும் போற்றட்டும்..


Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

சனி, 21 செப்டம்பர், 2019

தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், விளக்குகளும்


தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், விளக்குகளும்
:
• கோலமிடப்பட்ட வாசலில் ஐந்து விளக்குகள் ஏற்றி வைத்தால் லட்சுமி கடாட்சம்.
• பூஜையறையில் இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலங்கள் உண்டாகும்.
• சமையல் அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.
• தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில், எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும், ஆயுள்விருத்தி உண்டாகும்.
• திண்ணைகளில் நான்கு விளக்குகள் ஏற்றுவதன் மூலன் தீயவைகள் வீட்டில் அண்டாது.
• மாடக்குழிகளில் இரண்டு விளக்குகள் ஏற்றுவது சிறந்த பலனைக் கொடுக்கும்.
தீபத்தின் வகைகள்:
தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் எற்றியதும், தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம். தீபங்களில் பலவகைகள் உண்டு. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.
சித்ர தீபம்
வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம் சித்ர தீபம் ஆகும்.
மாலா தீபம்
அடுக்கடுக்கான தீபத் தட்டுகனில் ஏற்றப்படும் தீபம் மாலா தீபம் ஆகும்.
ஆகாச தீபம்
வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படும் தீபம் ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதி நாளில் இந்தத் தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.
ஜல தீபம்
தீபத்தை எற்றி நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபத்திற்கு ஜல தீபம் என்று பெயர்.
படகு தீபம்
கங்கை நதியில் மாலை வேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றி வைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்கவிடுவதற்குப் பெயர் படகு தீபம் ஆகும்.
சர்வ தீபம்
வீட்டின் அனைத்துப் பாகங்களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகம்.
மோட்ச தீபம்
முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோயில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம் மோட்ச தீபம் ஆகும்.
சர்வாலய தீபம்
கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று மாலை வேளையில் சிவன் கோயில்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபமாகும்.
அகண்ட தீபம்
மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம் ஆகும்.
லட்ச தீபம்
ஒரு லட்சம் விளக்குகளால் கோயிலை அலங்கரிப்பது லட்ச தீபமாகும்.
மாவிளக்கு தீபம்
அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபம் ஆகும்

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

மூலிகைகளும் அதன் சத்துக்களும்...


மூலிகைகளும் அதன் சத்துக்களும்...

1. அத்தி – இரும்புச்சத்து
2. அம்மான் பச்சரிசி – வெள்ளிச்சத்து
3. அக்கிரகாரம் – செம்புச்சத்து
4. ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து
5. ஆவாரம் – செம்புச்சத்து
6. ஆரைக்கீரை – இரும்புச்சத்து
7. ஆவாரை, ஆடாதொடா, கற்றாழை, – தாமிரச்சத்து
8. ஊமத்தை – இரும்புச்சத்து, உப்புச்சத்து
9. எட்டி – இரும்புச்சத்து, கந்தகச்சத்து
10. எள்ளு, கடுகு – கந்தகச்சத்து
11. கத்திரிக்காய் – மெக்னீசியம்
12. கரிசலாங்கண்ணி – தங்கச்சத்து, வெள்ளிச்சத்து
13. கருவேப்பிலை – இரும்புச்சத்து
14. கீழாநெல்லி – காரீயச்சத்து
15. கோபுரந்தாங்கி – தங்கச்சத்து
16. கோவைஇலை – கால்சியம், பாஸ்பரஸ், போரான், இரும்புச்சத்து
17. சங்கு, நாரயணசஞ்சீவி – சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து
18. செந்தொட்டி – செம்புச்சத்து, கந்தகச்சத்து
19. தும்பை – செம்புச்சத்து
20. துத்தி – கால்சியம்
21. தூதுவளை – ஈயச்சத்து
22. நன்னாரி – இரும்புச்சத்து
23. நிலவாகை – தங்கச்சத்து, கந்த்கச்சத்து, ஈயச்சத்து
24. பற்பாடகம் – கந்தகச்சத்து
25. பிரம்மத்தண்டு – தங்கச்சத்து
26. பிரண்டை – உப்புச்சத்து
27. புதினா – இரும்புச்சத்து
28. பெரும்தும்பை – தங்கச்சத்து
29. பொன்னாங்கண்ணி – இரும்புச்சத்து, ஈயச்சத்து, செம்புச்சத்து
30. மணத்தக்காளி – இரும்புச்சத்து, கால்சியம் சத்து
31. முசுமுசுக்கை – சுண்ணாம்புச்சத்து, தாமிரச்சத்து
32. முருங்கை – இரும்புச்சத்து
33. வெள்ளை அருகு – ஈயச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உப்புச்சத்து
34. வெண்டைக்காய் – அயோடின்.
35. நுணா – தாமிரச்சத்து

இந்த பழங்கள் பெண்களுக்கு அமிர்தம் போன்றவை, நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்!


இந்த பழங்கள் பெண்களுக்கு அமிர்தம் போன்றவை, நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்!

நல்ல ஆரோக்கியத்திற்காக, நாம் பெரும்பாலும் பழங்களை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறோம், பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை, ஒவ்வொரு பழத்திற்கும் அதன் சொந்த சிறப்பு உள்ளது, எனவே இன்று இதுபோன்ற ஒரு பழத்தைப் பற்றி உங்களுக்கு சொல்லப்போகிறோம், இது பல நோய்களுடன் தொடர்புடையது. அகற்றுவதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது

நாம் பேசும் பழம் பிளம், இந்த பழம் எண்ணற்ற குணங்களால் நிறைந்துள்ளது, எனவே இந்த பழத்தை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை அறிந்து கொள்வோம்.


பிளம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

நீங்கள் இரத்த அழுத்தத்தில் பிளம்ஸை உட்கொண்டால், இதில் நிறைய நன்மை இருக்கிறது, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பிளம்ஸ் சாப்பிட வேண்டும், இது தவிர, நீங்கள் தவறாமல் சாப்பிடும்போது கெட்ட கொழுப்பின் அளவு குறைகிறது, இதன் காரணமாக இதயம் தொடர்பான பிரச்சினைகள் எதுவும் இல்லை.

கண்கள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு, பிளம் மிகவும் நன்மை பயக்கும், பிளம் கண்பார்வை மற்றும் பிற பிரச்சினைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

இன்றைய வாழ்க்கை முறை மாறிவருவதால், பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் பிரச்சினை மிக வேகமாக அதிகரித்து வருகிறது, எனவே மார்பக புற்றுநோயைத் தடுக்க பிளம் மிகவும் உதவியாக இருக்கும் என்பதை உங்களுக்குச் சொல்வோம், இதற்காக, பிளம் தலாம் கொண்டு சாப்பிட வேண்டும், ஏனெனில் அதன் தலாம் புற்றுநோய் மற்றும் கட்டி உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.


பிளம்ஸ் பழத்தின் அசத்தலான பலன்கள்: தோலுடன் சாப்பிடுங்கள்

#Cancer #Cold Fever #Constipation #Eye Problems
இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையை கொண்ட சிவப்பு நிறமுள்ள பிளம்ஸ் பழத்தில் பொட்டாசியம், ஃபுளோரைடு, இரும்புச்சத்து, விட்டமின் A, C, K, பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் உள்ளது.

பிளம்ஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
பிளம்ஸ் பழம் சாப்பிடுவதால், அது ரத்தம் உறைதல், ரத்தத்தை விருத்திக்கு உதவுவதுடன், ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைத்து, சிவப்பணுக்களை அதிகரிக்கிறது.
சிறுநீரகக் கோளாறுகளை நீக்கி, தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து, மென்மையாக்கி, மூளை நரம்புகளின் பலத்தை அதிகமாக்கி, மனஅழுத்தத்தைக் குறைக்கிறது.
கண்பார்வையை கூர்மையாக்கி, செரிமான செயல்பாட்டை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, நோய்த் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும் சளித்தொல்லை மற்றும் நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
பிளம்ஸ் பழங்களைத் தோலுடன் சாப்பிட்டால், அது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், முதுமைத் தோற்றத்தை தடுத்து, புத்துணர்ச்சியை அளிக்கிறது.
பிளம்ஸ் பழத்தின் சதைகளை மட்டும் தனியாக எடுத்து, நிழலில் உலர்த்தி, தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
பிளம்ஸ் பழத்தில் உள்ள ஃபிளேவனாய்டுகள், எலும்புத் திசுக்களின் சிதைவுகளை தடுத்து, ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.
பிளம்ஸ் பழத்தில் உள்ள எபிக்கேட்சின் (Epicatachin) எனும் மூலக்கூறு வீரியமிக்க புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, கல்லீரல் மற்றும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

புதன், 18 செப்டம்பர், 2019

புன்னகை என்னும் மாய சக்தி..


‘’புன்னகை என்னும் மாய சக்தி..’’

நாம் எங்கு சென்றாலும் யாராவது ஒருவர் நம்மைப் பார்த்துப் புன்னகைத்தால், நமக்கு, ‘அப்பாடா’ என்றிருக்குமல்லவா? புன்னகையின் சக்தி அப்படி. அதற்கு வேறு பயன்களும் இருக்கின்றன.

எல்லாமே விஞ்ஞான ரீதியில் உண்மை ஆனவை.
புன்னகை நம்மை வசீகரமானவராகக் காட்டும். நம்மை அழகாகக் காட்டுவதற்கு நூற்றுக்கணக்கில் செலவழிக்கிறோம்.

என்னதான் பூச்சு, அலங்காரம் இருந்தாலும் அதனுடன் உண்மையான புன்னகை இல்லை என்றால் எப்படி இருக்கும்? அழகை வசீகரமாக்குவது புன்னகைதான்.


இருவர் இருந்தாலும் இருபது பேர் இருந்தாலும், ஒரே நபர் புன்னகைத்தாலும் அனைவருக்கும் பரவும். அந்த இடத்தின் நிலையே மாறிவிடும். நேர்மறைச் சிந்தனையில் தொடர்ந்து இருக்க உதவும்.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். சிறிது நேரம் இயல்பாக உட்கார்ந்திருங்கள். ரத்த அழுத்தத்தை சோதியுங்கள். அதைக் குறித்துக் கொள்ளுங்கள்.

அதன் பின் ஒரு நிமிடம் ஏதாவது நல்ல விஷயத்தை நினையுங்கள். அதன் பின் மறுபடியும் ரத்த அழுத்த சோதனை செய்யுங்கள். நிச்சயமாக ரத்த அழுத்த நிலை குறைந்தே இருக்கும்.

நாம் மனதளவில், உடலளவில், சோர்ந்து, களைத்து இருக்கிறோம் என்பதை மறைக்க நூறு வார்த்தைகளுக்குப் பதிலாக ஒரு புன்னகை போதும்.


ஆகையால் புன்னகையுங்கள்.செலவின்றி அனைத்து வகையிலும் லாபம் பெற உதவும். புன்னகைக்க முகத்தில் 17 தசை நார்கள் வேலை செய்தால் போதும்.

முகம் சுளிக்க? 43 தசை நார்கள் வேலை செய்ய வேண்டும். இப்போது சொல்லுங்கள் அனைத்தையும் மறந்து புன்னகைக்கலாம் அல்லவா!

ஆம்.,நண்பர்களே..,

நாம் மனதளவில், உடலளவில், சோர்ந்து, களைத்து இருக்கிறோம் என்பதை மறைக்க நூறு வார்த்தை களுக்குப் பதிலாக ஒரு புன்னகை போதும்.

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

பிறக்கப்போகிறது புரட்டாசி மாதம்... புரட்டாசி சனி... அசைவம் சாப்பிடக்கூடாது... ஏன்?


பிறக்கப்போகிறது புரட்டாசி மாதம்... புரட்டாசி சனி... அசைவம் சாப்பிடக்கூடாது... ஏன்?

புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதம் !!


🌟 புரட்டாசி மாதம், தமிழ் மாதங்களில் ஆறாவது மாதமாகும். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம்.

🌟 பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி. புரட்டாசியில் பக்தர்கள் விரதமிருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள்.

🌟 புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும், அங்கு இருக்கும் திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர். புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும், பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். முன்னோர்களின் ஆசியை பெற்றுத்தரும் மிக அற்புதமான மாதம் புரட்டாசி மாதமாகும்.

புரட்டாசி மாதத்தில் இருக்கும் சிறப்புகள் என்னென்ன?

புரட்டாசி சனி :

🌟 புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பை தரும். திருப்பதியில் புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும்.

🌟 புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும், செல்வம் செழிக்கும் மற்றும் துன்பங்கள் விலகும்.

🌟 புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைத்து விரதமிருந்தால் சனி தோஷம் நீங்கும்.

வாடகைக்கு ஆட்கள் தேடி கொண்டிருப்பவரா?

வீடுஃஅடுக்குமாடி குடியிருப்பு

கடைஃஅலுவலகம்

மனைஃகாலியிடம்

பேயிங் கெஸ்ட்... இதுபோன்ற உங்களின் இடங்களை வாடகைக்கு விட வேண்டுமா?

உங்கள் வீடு, கடை, அலுவலகம், மனை வாடகையை பதிவு செய்ய : இங்கே கிளிக் செய்யுங்கள் !!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது?

🌟 புரட்டாசி மாதம் வெயிலும், காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம்.

🌟 இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது.

🌟 இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும்.

🌟 அதனால்தான் புரட்டாசி மாதத்தில் அசைவத்தை ஒதுக்கி வைத்தனர் நம் முன்னோர்கள்.

புரட்டாசி அமாவாசை :

🌟 மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது. பட்சம் என்றால் 15 நாட்கள் என்பது பொருள். அதாவது, மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மகாளய பட்சம் என்று கூறுகிறோம்.

🌟 மகாளய பட்சம், புரட்டாசி மாத பௌர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் துவங்கி அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.

நவராத்திரி :

🌟 மக்களின் பண்பாட்டை வளர்க்கும் விழாக்களில் முக்கியமானது நவராத்திரி. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி ஆகும். வீடுகளில் நவராத்திரி பூஜையை சிறப்பாக கொண்டாடுவார்கள்.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

சாக்லேட்


சாக்லேட்

இலக்கியம் இல்லா இன்னிசையாய்

இலக்கணமற்ற தேன்மழையாய்

அறுந்தறுந்து விழும் அழகிய கவிதையாய்

காற்றோடு சிறு நடனமாடி

காணும் விழியை வருட செய்து

ம்மா… சாக்லேட்… ம்மா… என அபிநயம் செய்கையில்

சாக்லேட் ஆகவே மாறிவிடுகிறாள் வைஷு…

தேவதைகளின் தேவதை

சாக்லேட் தேவதையாய்…

சாக்லேட்… இந்த வார்த்தையைக் கேட்டவுடன், குழந்தைகள் முதல் முதியவர்கள்  வரை முகத்தில் மகிழ்ச்சி திளைக்கும். இது வாய், மனது மற்றும் இதயத்தை புத்துணர்வு ஆக்கும். எந்த ஒரு மகிழ்ச்சியான தருணத்திலும், முதலிடம் பிடிப்பது இதுவாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு சாக்லேட் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கிறது.

gift-sets

உலகளவில் ‘சாக்லேட் தினம்’, வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில் செப்டம்பர் 4ம் தேதி ‘உலக சாக்லேட் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. சாக்லேட் ‘கோகோ’ மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.

இது ஒரு இனிப்பு பொருள். கேக்குகள், ஐஸ்க்ரீம்கள் உள்ளிட்டவற்றில் சாக்லேட் சேர்க்கப்படுகிறது. மேலும், சாக்லேட், பல்வேறு இடுபொருட்களுடன் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. சாக்லேட் சாப்பிடுவதால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இது பக்கவாதத்தைத் தடுக்க உதவுகிறது, இதயம் தொடர்பான நோய்களைத் தடுக்கிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.  (அதே நேரத்தில் சாக்லேட் சாப்பிடுவதால் உடல் பருமன், வயிற்றில் பூச்சி உள்ளிட்ட சில தீமைகளும் உள்ளன என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்).

chocolate

கொலம்பியாவுக்கு முற்பட்ட மத்திய கால அமெரிக்காவில் சாக்லேட் ஓர் உயர் மதிப்புள்ள பொருளாகவே கருதப்பட்டு வந்தது. பண்ட மாற்றுக்குக் கூட சாக்லேட் பயன்படுத்தப்பட்டதில் இருந்து அதன் முக்கியத்துவத்தை அறிய முடிகிறது. சாக்லேட், சோளக்கூழ் மற்றும் தேனுடன் சேர்த்து பானமாக பருகப்பட்ட வழக்கமும் பண்டைய காலத்தில் இருந்து வந்ததே. நாம் இப்போது அதிகம் விரும்பி உண்ணும் கன செவ்வக வடிவ சாக்லேட்டுகளுக்கு முன்னோடி ஜோசஃப் ஃபிரை என்ற ஆங்கிலேயர். இவர்தான் முதன் முதலில் 1847ம் ஆண்டு கன செவ்வக வடிவிலான சாக்லேட்டுகளை வார்த்து உலகுக்கு அறிமுகப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாக்லேட்டை விரும்பாதவர்கள் இல்லை. ‘சாக்லேட், இதய ஆரோக்கியத்துக்கு நன்மை தரும்’ என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றும் தெரிவித்துள்ளது. இந்த இனிப்பான ஆய்வு முடிவை வெளியிட்டவர்கள் ‘கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக’ ஆராய்ச்சியாளர்கள். தினசரி சிறிதளவு சாக்லேட் சாப்பிடுவதால் இதய நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவதாக கடந்த சில ஆண்டுகளாக நடந்த 7 ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டது. சாக்லேட்டுகளில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. சாக்லேட் சாப்பிடுவதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் குறைகிறது. இன்சுலின் சுரப்பு சரியாகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றை ஒருங்கிணைத்து 8வது ஆய்வை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்தினர். இதயநோய் பாதித்த, பாதிக்காத ஒரு லட்சம் பேர் பங்கேற்ற இந்த ஆய்வில் ஒரு பிரிவினருக்கு சாக்லேட் அளிக்கப்படவில்லை. மற்றொரு பிரிவுக்கு அதிகளவில் சாக்லேட் அளிக்கப்பட்டு வந்தது. தினசரி ஒன்று என்ற அளவில் சாக்லேட் பார் சாப்பிட்டு வந்தவர்களுக்கு மற்றவர்களைவிட இதய நோய் ஆபத்து 37 சதவிகிதம் குறைவாக இருந்தது சோதனையில் தெரிய வந்தது. 29 சதவிகிதம் பக்கவாத அபாயம் நீங்கியது. எனினும், மாரடைப்பைத் தடுப்பதில் சாக்லேட்டுக்கு பங்கில்லை என்பதும் தெரிந்தது. முதல்கட்ட 6 ஆய்வுகளில் சாக்லேட்டுக்கும் இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கும் தொடர்பு இருப்பது நிரூபணமானது. பார், சாக்லேட் டிரிங்க், பிஸ்கெட், டெஸர்ட் என பால் அதிகமுள்ள சாக்லேட், சாக்கோ அதிமுள்ள சாக்லேட் (டார்க் சாக்லேட்) என எதுவாக இருந்தாலும் பெரிய வித்தியாசம் ஏதும் தெரியவில்லை. எனினும், ‘சாக்லேட் சாப்பிடுவதில் எச்சரிக்கை தேவை’ என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஏனெனில், கடைகளில் விற்கப்படும் சாக்லேட்களில் 100 கிராமுக்கு 500 கலோரிகள் உள்ளன. அதை அதிகளவு சாப்பிடுவதால் உடல் எடை கூடவும், டயாபடீஸ் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, ‘கலோரி குறைந்த தரமான சாக்லேட்களில் இருக்கும் பொருட்களே ரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்தி இதய நோயைத் தடுக்க உதவும்’ என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதனால்தான் காதலர்கள் தங்களின் மனம் கவர்ந்தவர்களின் இதயத்தை பாதுகாக்க சாக்லேட்டை பரிசாக அளிக்கின்றனரோ என்னவோ? நீங்களும் தினசரி ஒரு சாக்லேட் சாப்பிடுங்களேன். இதயம் பலமாகும்.

Chocolate-City

தயாரிக்கும் முறை:

கோகோ (Cocoa) மரத்தின் கொட்டையின் திட மற்றும் கொழுப்பு பாகங்களின் கலவை, சர்க்கரை, பால் மற்றும் பல இடு பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது. இனிப்பூட்டப்படாத சாக்லேட், கருப்பு சாக்லேட், பால் சாக்லேட், மிதமாக இனிப்பூட்டப்பட்ட சாக்லேட், கசப்பு-இனிப்பு சாக்லேட், வெள்ளை சாக்லேட், கோகோ தூள் என பல வகைகளில் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது.

சாக்லேட் என்பது கோகோ மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களைக் குறிக்கும் சொல். இது, கோகோ கொட்டையின் திட மற்றும் கொழுப்பு பாகங்களின் கலவையுடன் சர்க்கரை, பால் மற்றும் பிற பொருட்களை சேர்ப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. சாக்லேட் என்ற சொல் மத்திய மெக்ஸிகோவில் வாழ்ந்த சிவப்பிந்தியர்களிடமிருந்து தோன்றியது.

பல்வேறு இனிப்புகள், கேக்குகள், ஐஸ்க்ரீம்கள் மற்றும் குக்கீஸ்களிலும் மூலப்பொருளாக சாக்லேட் பயன்படுத்தப்படுகிறது. சாக்லேட்டுகள் பெரும்பாலும் அவற்றின் சுவை, நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடுகின்றன. அவற்றில், இனிப்பூட்டப்படாத சாக்லேட், கருப்பு சாக்லேட், கூர்வெர்சர், பால் சாக்லேட் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இனிப்பு மட்டுமல்ல… கசப்பு சுவை கொண்ட சாக்லேட்டுகளும் சந்தையில் கிடைக்கின்றன. சாக்லேட்டின் சுவையை மேலும் மெருகூட்ட அவற்றில் ஆரஞ்சு, புதினா, ஸ்ட்ராபெர்ரி போன்ற சுவையூட்டிகளும் சேர்க்கப்படுகின்றன.

Portfolio : http://fr.fotolia.com/p/201433930

இதோ நாம் அனைவரும் விரும்பும் சாக்லேட்ஸ் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்…

* ஒரு பவுண்டு (450 கிராம்) சாக்லேட் தயாரிக்க சுமார் 400 கிராம் கோகோ அவரைகள் தேவைபடுகின்றன.

* அமெரிக்காவின் மாபெரும் சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான ‘ஹெர்ஷே சாக்லேட் நிறுவனம்’ ஒரு நாளைக்கு 80 மில்லியன் சாக்லேட்டுகளை தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் நிறுவனரான Milton Hershey என்பவரின் சுவாரஸ்யமான தகவல் இது. இன்று வரை பேசப்படும் பெரிய விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலில் பயணமாக இருந்தவர் இவர். ஆனால், கடைசி நிமிடத்தில் பணி நிமித்தமாக அப்பயணத்தை ரத்து செய்தாராம்.

20ம் நூற்றாண்டிலிருந்து சாக்லேட் அமெரிக்க போர் வீரர்களின் ஒரு பிரதான உணவுப் பங்கீடாக கருதப்படுகிறது.

* ஒரு தனி சாக்லேட் சிப் உங்களுக்கு 150 அடி தூரம் நடப்பதற்கான ஆற்றலைத் தருகிறது.

* சாக்லேட்டுகள் கோகோ பழங்களின் உள்ளே இருக்கும் நெற்றுக்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இது முதன்மையாக மத்திய, தென் அமெரிக்கா, மேற்கு ஆப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளில் வெப்ப மண்டலங்களில் வளருகின்றன.

*சாக்லேட்டில் உள்ள ஒருவகை பாக்டீரியாக்களை அழிக்கும் பண்பு பற்சிதைவை தடுக்க உதவுகிறது.

*ஐவரி கோஸ்ட் மற்றும் கானா நாடுகளில் உள்ள கோகோ பண்ணைகளில் 5-17 வயதுடைய சுமார் 1.8 மில்லியன் சிறார்கள்

கட்டாயப் பணிகளில் அமர்த்தப்பட்டனர் என 2010ம் ஆண்டு அறிக்கை ஒன்று தெரிவித்தது. ஆனால், சிவப்பு வர்த்தக சான்றளிக்கப்பட்ட சாக்லேட் கட்டாய குழந்தை தொழிளார்களிடமிருந்து வரவில்லை எனக் கூறப்படுகிறது.

* டார்க் சாக்லேட்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும், சாக்லேட் உண்பது உடலுக்கு உகந்தது எனக் கூறுவது இந்த கரும் சாக்லேட்டுக்களைதான். ஏனென்றால் இதில் பால் மற்றும் வெள்ளை வகைகளை விட கோகோவின் அளவு கூடுவதுடன் குறைவான சக்கரையும் பயன்படுத்தப்படுகிறது.

* கி.மு 1900க்கு முன் சாக்லேட் : அஸ்டெக்குகள் கோகோ அவரைகள் கடவுள் அளித்த வரம் என நம்பப்பட்டு அவற்றை ஒரு நாணய வடிவத்திலும் பயன்படுத்தியதாக அறியப்படுகிறது. மேலும் முதலில் மசாலா வகைகள், மது அல்லது சோளக் கூழ் போன்றவற்றுடன் கோகோ சேர்க்கப்பட்டு ஒரு கசப்பான பானமாகவே தயாரிக்கப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட பதினாறாம் நூற்றாண்டில்தான் ஸ்பானியர்கள் கோகோவுடன் சர்க்கரை சேர்ப்பதை அறிமுகபடுத்தினார்கள்.

* பெரும்பாலான மக்களால் சாக்லேட் விரும்பப்படுவதற்கான காரணம் சாப்பிட்ட பின் சாக்லேட்டின் நறுமணம் மூளையின் ஒருவித திறன் அலைகளை அதிகரிக்கச்செய்வதுடன் ஓய்வுணர்வையும் அளிப்பதே…

நம்ம வீட்டு செல்லங்களுக்காக ஓர் எளிய ஹோம் மேட் சாக்லேட் முறையை பார்ப்போமா?

home made chocolate

என்னென்ன தேவை?

டார்க் சாக்லேட் பார் – 1, பிரவுன் சாக்லேட் பார் – 1, முந்திரி, திராட்சை, பாதாம், ஜாம் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

* சாக்லேட் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

* டார்க் சாக்லேட் பார், பிரவுன் சாக்லேட் பார் இரண்டையும் கத்தியால் துண்டுகளாக கட் பண்ணி வைக்கவும், அல்லது துருவி வைக்கவும். அதே போல் டிரை ஃப்ரூட்ஸையும் நறுக்கி வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீ­ர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

* அந்த பாத்திரத்தின் மேல், வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து அதனுள் நறுக்கி வைத்திருக்கும் சாக்லேட் பீஸ்களை கொட்டவும்.

* அடுப்பை ஒரே சூட்டில் வைத்திருக்கவும். அப்போதுதான் சூடு, மேலே இருக்கும் பாத்திரத்துக்கு சீராக வரும்.

* சாக்லேட் பீஸ்களை போட்ட பின் ஸ்பூனால் கட்டி இல்லாமல் நன்கு கலக்க வேண்டும்.

* சாக்லேட் உருகி தோசை மாவு பதத்துக்கு வர வேண்டும்.

* பின்னர், சாக்லேட் ட்ரேயை எடுத்து அதனுள் உருகிய சாக்லேட்டை ஊற்ற வேண்டும்.

* ட்ரேவில் உள்ள வடிவத்தில் கால் பாகம் மட்டும் நிரப்பவும்.

* அதன் மேல் நறுக்கி வைத்திருக்கும் டிரை ஃப்ரூட்ஸ் போடவும்.

* பின்னர், அதன் மேல் மீண்டும் சாக்லேட் கலவையை ஊற்றவும்.

* இந்த ட்ரேயை எடுத்து ஃப்ரீசரில் 15 நிமிடங்கள் வைத்திருக்கவும். பின்னர் எடுத்து குழந்தைகளுக்கு தரவும்.

* எல்லா டிபார்ட்மென்டல் கடைகளிலும், இந்த சாக்லேட் பார் கிடைக்கும்.

குறிப்பு: கீழே வைக்கும் பாத்திரத்தை விட, மேலே வைத்திருக்கும் பாத்திரம் பெரியதாக இருக்க வேண்டும், அப்போதுதான் ஆவி வெளியில் போகாமல் சாக்லேட் உருக எளிதாக இருக்கும். சாக்லேட் கலவையை கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால், கெட்டியாக வாய்ப்பு இருக்கிறது. அதே நேரம் கீழே உள்ள பாத்திரத்தில் தண்ணீ­ர் குறைந்தால் மறுபடியும் ஊற்றவும். சாக்லேட் ட்ரே இல்லை என்றால், ஃப்ரிட்ஜில் வைக்கும் ஐஸ் க்யூப் ட்ரேவை உபயோகப்படுத்தலாம். ஹோம் மேட் சாக்லேட் குறைந்த செலவில், வீட்டிலேயே பண்ணலாம். டிரை ஃப்ரூட்ஸ்க்கு பதிலாக, நம் விருப்பத்துக்கு எதை வேண்டும் என்றாலும் சேர்க்கலாம். உதாரணத்துக்கு: டியூட்டி ஃப்ரூட்டி, ஓட்ஸ், ஜாம், வேஃபர்ஸ், மேரி கோல்ட் பிஸ்கட், ஹார்லிக்ஸ், ஃப்ரூட் பல்ப், லிட்டில் ஹார்ட் பிஸ்கெட், போலோ.
நன்றி - குங்குமம் தோழி.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

புதன், 11 செப்டம்பர், 2019

பாரம்பரியமிக்க ஓணம் பண்டிகை !


ஓணம் வந்தல்லோ... அத்திப்பூ... விதவிதமான சமையல்... களைகட்டுகிறது..!!

பாரம்பரியமிக்க ஓணம் பண்டிகை !


🌟கேரளாவின் பாரம்பரியமிக்க ஓணம் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாவாகும். கேரளாவில் மட்டுமல்லாது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

🌟ஓணம் பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து திருவோண நட்சத்திரம் வரை பத்து நாட்களும் கொண்டாடப்படுகிறது.

🌟மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கை அடக்கிட, வாமன அவதாரம் எடுத்த திருமாலை வணங்கியும், ஆண்டுக்கு ஒருமுறை தன் மக்களை காண வரவேண்டும் என வரம் வாங்கிய மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக கேரள மக்கள் கொண்டாடும் திருவிழா தான் ஓணம் பண்டிகை.

அத்திப்பூ கோலம் :

🌟ஓணம் பண்டிகையின் சிறப்பு மகாபலி மன்னனை மகிழ்ச்சியோடு வரவேற்கும் விதமாக வீட்டின் வாசலில் மன்னன் மனம் மகிழ அத்திப் பூக்கோலம் போடுவார்கள்.

🌟ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான பூக்கள் இடம்பெறும். முதல் நாள் ஆண்கள் பறித்து வரும், 'அத்திப்பூ" என்ற ஒரு வகை பூவோடு ஆரம்பிக்கும் இந்த கோலம், இரண்டாம் நாள் இரண்டு வகை பூக்கள், மூன்றாம் நாள் மூன்று வகை பூக்கள் என நாளுக்கு நாள் மெருகேறி பத்தாம் நாள், பத்து வகையான பூக்களைக் கொண்டு மிகப்பெரிய கோலமாக மலரும்.

ஓணம் ஸ்பெஷல் உணவு :

🌟ஓணம் பண்டிகையின்போது கசப்பை தவிர்த்து 64 வகையான உணவு, ஒன்பது வகையான சுவையுடன் தயாரித்து விருந்து படைப்பார்கள். இந்த உணவு படையலை, 'ஓண சத்யா" என்று அழைக்கின்றனர்.

🌟புது அரிசி மாவில் செய்த அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரைப்புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம் காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என பல வகையான உணவுகளை தயாரித்து கடவுளுக்கு படைப்பார்கள். பெரும்பாலான உணவுகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும்பங்கு வகிக்கிறது.

🌟இவ்வகை உணவை சாப்பிட்ட பிறகு செரிமானம் ஆவதற்கு, இஞ்சிக்கறி, இஞ்சிப்புளி உணவில் சேர்த்துக் கொள்வார்கள்.

கசவு :

🌟கசவு என அழைக்கப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து, தங்கள் மனதிற்கு பிடித்த மகாபலி மன்னனை நினைத்தும், வரவேற்றும் மகிழ்ந்து ஆடிப்பாடி நடனம் ஆடுவர்.

விளையாட்டு :

🌟ஓணம் பண்டிகையில் கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களரி, படகுப்போட்டிகள், பாரம்பரிய கதகளி நடனப் போட்டி என பத்து நாட்களுமே களைக்கட்டும்.

யானை திருவிழா :

🌟பத்தாம் நாள் சிறப்பாய் அமைவது இந்த யானை திருவிழாவால் தான். யானைகளுக்கு பொன் மற்றும் மணிகளால் தங்க கவசமிட்டு, பூத்தோரணங்களால் அலங்கரித்து யானைகளுக்கு என தயாரித்த சிறப்பு உணவுகளை அளித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர்.

மனநிறைவு :

🌟பத்து நாட்களின் விருந்து, கலை நிகழ்ச்சிகள், உணவு படையல், போட்டி என அனைத்தையும் கண்டுகளித்து, தாம் விட்டு வந்த தம் நாட்டு மக்கள் எல்லா செல்வங்களுடனும், வளத்துடனும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்கிற மனநிறைவுடன் மகாபலி மன்னர் பாதாள லோகத்திற்கு திரும்பி செல்வதாய் ஐதீகம் என்று நினைத்து மகிழ்கின்றனர்.

🌟கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும், மக்கள் ஓணம் பண்டிகையை இன்று மகிழ்ச்சியுடன் கொண்டாடி கொண்டிருக்கின்றனர்.


செவ்வாய், 10 செப்டம்பர், 2019

திரு ஓணம் நல்வாழ்த்துகள்...


‘ஓணம் ஸ்பெஷல்’

ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் இரு நட்சத்திரங்களுக்குத்தான் ‘திரு’ என்ற அடைமொழி உண்டு. ஒன்று சிவபெருமானுக்குரிய திருவாதிரை, இன்னொன்று பெருமாளுக்குரிய  திருவோணம்.  ஆவணி  மாதத்தில்  வரும்  திருவோணம் நட்சத்திரம்தான்  கேரள மக்களால் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.


ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் இரு நட்சத்திரங்களுக்குத்தான் ‘திரு’ என்ற அடைமொழி உண்டு. ஒன்று சிவபெருமானுக்குரிய திருவாதிரை, இன்னொன்று பெருமாளுக்குரிய  திருவோணம்.  ஆவணி  மாதத்தில்  வரும்  திருவோணம் நட்சத்திரம்தான்  கேரள மக்களால் ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் 10 நாட்களும் இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சிவன் கோயில் விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அப்போது, கோயிலுக்குள் புகுந்த எலி ஒன்று எதேச்சையாக விளக்கில் ஏறியது. அதன் வால், திரி மீது பட்டது. திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமானது.


தன்னையறியாமல் எலி செய்த அந்த காரியம் அதற்கு புண்ணி யத்தை தந்தது. அடுத்த ஜென்மத்தில் எலிக்கு சக்கரவர்த்தி யோகத்தை தந்தருளினார் சிவபெருமான். அந்த எலிதான் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக அவதரிக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ புண்ணிய காரியம் செய்தாலும் பலன் உண்டு என்பதற்கு உதாரணம் இந்த புராண நிகழ்வு.

தற்போது ‘கேரளா’ என அழைக்கப்படும் மலையாள தேசம்தான் மகாபலி சக்கரவர்த்தியின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயப்படும்படியும், பொறாமை கொள்ளும் வகையிலும் நல்லாட்சி செய்தார் மகாபலி. மக்களின் மனம் கோணாமலும் கேட்பவர்களுக்கு வாரி

வாரி வழங்கியும் பொற்கால ஆட்சி நடத்தி வந்தார். அவரை அசுர குரு சுக்கிராச்சாரியார் (சுக்கிரன்) வழிநடத்தி வந்தார். தேவர்கள் பொறாமைப்பட்டு தேவேந்திரனிடம் முறையிட்டனர். அவர் விஷ்ணுவிடம் கூறினார்.

நல்லாட்சி நடத்தி வரும் மகாபலி மீது தேவர்கள் குறை கூறுகிறார்களே என்று நினைத்தார் மகாவிஷ்ணு. இந்த வையம் நிலைத்திருக்கும் வரையில் மகாபலி புகழுடன் இருக்குமாறு அனுக்கிரகம் செய்ய முடிவு செய்தார். குள்ளமான வாமனனாக அவதாரம் எடுத்து பூலோகம் வந்தார். தானம் கேட்பதற்காக கொடை வள்ளலாம் மகாபலியிடம் சென்றார். விஷ்ணுதான் வாமன அவதாரம் எடுத்து வருகிறார் என்பதை ஞான திருஷ்டியில் தெரிந்துகொண்டார் சுக்கிராச் சாரியார்.

‘வாமனனாய் வந்திருப்பது சாட்சாத் மகாவிஷ்ணு, அவசரப்பட்டு எந்த வாக்கும் கொடுத்துவிடாதே. அது உன் ஆட்சி, அதிகாரம் மட்டுமின்றி ஆயுளுக்கும் ஆபத்தாய் முடியும்’ என்று மகாபலியை எச்சரித்தார்.

மகாபலி கேட்கவில்லை. ‘நான் சிறப்பாக ஆட்சி நடத்துவதை, மக்களுக்கு வாரி வழங்குவதை அகில உலகமும் பாராட்டுகிறது. இதைக் கேள்விப்பட்டு பகவானே இறங்கி வருவது நான் செய்த பாக்கியம். எல்லோரும்  கடவுளிடம்தான்  கேட்பார்கள். அந்த கடவுளே இறங்கிவந்து என்னிடம் கேட்கப் போகிறார் என்றால், அவருக்கு கொடுப்பதைவிட வேறு என்ன புண்ணியம் இருக்கப் போகிறது’ என்றார் மகாபலி.

விஷ்ணுவை தரிசிக்க காத்திருந்தார். மகாபலியிடம் வந்து சேர்ந்த வாமனன் தனக்கு மூன்றடி நிலம் தேவைப்படுவதாக கூறினார். குள்ளமான உருவத்துடன் வந்த வாமனனை மகாபலி விழுந்து வணங்கினார். ‘மூன்றடி நிலம்தானே.. தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார். ‘நிலம் தருவதாக தாரை வார்த்துக் கொடு’ என்றார் வாமனன்.

இடையே புகுந்தார் சுக்கிராச்சாரியார். ‘மகாபலி! வந்திருப்பது விஷ்ணு. மூன்றடி நிலம்தானே என சாதாரணமாக நினைத்து தாரை வார்த்துக் கொடுத்துவிடாதே’ என்றார். அப்போதும் மகாபலி கேட்கவில்லை. தாரை வார்ப்பதற்காக கமண்டல நீரை சாய்க்கத் தொடங்கினார். குரு சுக்கிராச்சாரியாரின் மனம் கேட்கவில்லை. வண்டாக மாறி கமண்டலத்தின் துளையை அடைத்துக் கொண்டார்.

மகாபலி கமண்டலத்தை எவ்வளவு சாய்த்தும் தண்ணீர் வரவில்லை. சுக்கிரனின் இந்த காரியத்தை தெரிந்துகொண்டார் வாமனன். கையில் இருந்த தர்ப்பையை எடுத்து கமண்டல துளையில் குத்தினார். வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்ணில் குத்தியதால் பார்வையை இழந்தார். கமண்டலத்தில் இருந்து நீர் வெளியேற, அதை தன் கையில் பிடித்து மூன்றடி நிலத்தை தாரை வார்த்துக்  கொடுத்தார் மகாபலி.

‘மூன்றடி நிலம் எடுத்துக் கொள்ளலாமா? என்றார் வாமனன். ‘தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார் மகாபலி. குள்ள வாமனனாக இருந்த மகாவிஷ்ணு, ஓங்கி உலகளந்த உத்தமனாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார். ஒரு பாதத்தை பூமியிலும் இன்னொரு பாதத்தை ஆகாயத்திலும் வைத்தார். ‘மூன்றடி கொடுப்பதாக சொன்னாய். இரண்டு அடி அளந்துவிட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது?’ என்றார்.

‘உலகையை அளக்கும் பரந்தாமனே. உங்களுக்கு என்னையே தருகிறேன். மூன்றாவது அடியை என் தலையில் வைத்து அளந்துகொள்ளுங்கள்’ என்று சொல்லி சிரம் தாழ்த்தி நின்றார் மகாபலி. அவரது தலையில் தன் பாதத்தை வைத்து அழுத்தி பாதாள லோகத்துக்கு அனுப்பினார் மகாவிஷ்ணு.

கொடை வள்ளலாக திகழும் மகாபலியின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கவும் அருள் செய்தார். மகாவிஷ்ணுவிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார் மகாபலி. ‘நீங்கா புகழ் தந்தருளிய பெருமாளே. நாட்டு மக்களை என் உயிராக கருதி ஆட்சி செய்து வந்திருக்கிறேன். அவர்களை பிரிவது கஷ்டமாக இருக்கிறது.

ஆண்டு தோறும் ஒருநாளில் அவர்களை நான் சந்திக்க வரம் அருள வேண்டும்’ என வேண்டினார். அவ்வாறே நடக்க அருள் செய்தார் மகாவிஷ்ணு. தன் நாட்டு மக்கள் வளமாக, சந்தோஷமாக இருக்கிறார்களா என்று பார்க்க ஆண்டுதோறும் ஓணப் பண்டிகையின்போது மகாபலி பூவுலகுக்கு வருவதாக ஐதீகம். அதனால்தான், அவரை வரவேற்கும் விதமாக 10 நாள் பண்டிகையாக ஓணத்தை கொண்டாடுகின்றனர்.


மக்களை பார்ப்பதற்காக ஊர் ஊராக, வீதி வீதியாக மகாபலி வருவார் என்பது நம்பிக்கை. இதனால் தெருக்கள்தோறும் மக்கள் வண்ண மலர்களால் அத்தப்பூ  கோலமிட்டு தோரணங்கள் கட்டி அழகுபடுத்துகிறார்கள். கலை, கலாசார நிகழ்ச்சிகள், படகு போட்டிகள், மாறுவேட போட்டிகள் நடத்தி உற்சாகம் அடைகிறார்கள். மகாபலிபோல வேடமிட்டு வருபவர்கள், எல்லோருக்கும் ஆசி வழங்குவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

பெருமாளின் நட்சத்திரம் திருவோணம். இந்த நாளில் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்டால் தடைகள், இடையூறுகள் நீங்கி சுபயோக வாழ்வு கிடைக்கும். திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சந்திர திசை நடப்பவர்கள் பெருமாளை தரிசித்து வணங்குவது சிறப்பாகும்.

ஓணம் நல்வாழ்த்துகள்...


ஞாயிறு, 8 செப்டம்பர், 2019