வியாழன், 30 ஆகஸ்ட், 2018

தலைவலி என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை


தலைவலி என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை.

அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் அனுபவிக்கக்கூடிய சாதாரண விஷயம் தலைவலி. தலைவலி என்றாலே எல்லோரும் உடனே ஏதாவது மாத்திரைகளை வாங்கிப்போட்டுக் கொள்கிறோம்.

அதில் சில மருந்துகள் பயன்தரும். சிலவற்றால் பயன் ஏதும் இருக்காது. அதனால் பணம் செலவாவது தான் மிச்சமாக இருக்கும். ஆகவே இவ்வாறு பயன் தராமல் பணச்செலவு வைக்கும் மருந்துகளை வாங்கிப் போட்டுக் கொள்வதை தவிர்த்து, வீட்டிலேயே பலன் தரக்கூடிய வீட்டு மருத்துவங்கள் பல இருக்கின்றன.

அவற்றைப் பயன்படுத்தினால், பணம் செலவாகாமல் இருப்பதோடு, தலைவலி விரைவில் குணமாகும். அப்படிப்பட்ட சில வீட்டு மருந்துகளைக் கீழே தருகிறோம். அதைப் படித்து பின்பற்றி, தலைவலியை இயற்கை முறை யில் குணமாக்குங்கள்

*கிராம்பும் உப்பும் கலந்த கலவை :*

கல்லுப்பையும் சிறிது கிராம்பையும் எடுத்துக் கொண்டு, சிறிது பால் சேர்த்து அரைத்து உட்கொள்ள வேண்டும். இதனால் கல்லுப்பானது தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை படைத்தது. ஆதலால், இக்கலவையிலுள்ள உப்பு, தலையிலுள்ள ஈரத்தினை உறிஞ்சிக் கொள்கிறது. அதன் காரணமாக தலைவலியின் தீவிரம் குறைகிறது.

*வெந்நீரில் கலந்த எலுமிச்சைச் சாறு :*

ஒரு டம்ளரில் வெந்நீர் எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கலந்து குடித்தால் உடனடியாகத் தலைவலியின் தீவிரம் குறைவதை உணரலாம். பெரும்பாலான தலைவலிகள் வயிற்றில் வாயு உற்பத்தியாவதால் ஏற்படுகின்றன. அத்தகைய தலைவலிகளுக்கு இது சிறந்த பலனைத்தரும். இக்கலவை வயிற்றில் வாயு உற்பத்தியாவதையும் தடுத்து, தலைவலிக்கும் நிவாரணம் அளிக்கிறது.

*யூகலிப்டஸ் தைலம் கொண்டு மசாஜ் :*

தலைவலிக்கு மிகவும் சிறப்பான ஒரு மருத்துவம் யூகலிப்டஸ் தைலம் கொண்டு, மசாஜ் செய்தல் ஆகும். இதனைச் செய்தால் உடனடியாக நிவாரணம் கிடைப்பதை உணரமுடியும். யூகலிப்டஸ் தைலம் ஒரு சிறந்த வலி நிவாரணி ஆகும்.

*சூடான பால் அருந்துதல் :*


சூடான பசும்பால் அருந்துதல் தலைவலியை நன்றாகக் குறைக்க உதவும். மேலும் தலைவலியின் போது, உண வில் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளுதலும், தலைவலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும்.

*பட்டையை அரைத்துத் தடவுதல் :*

தலைவலிக்கு மற்றுமொரு சிறப்பான மருத்துவமாகக் கருதப்படுவது, வீட்டில் மசாலாப் பொருட்களுள் ஒன்றான பட்டையை சிறிது தண்ணீர் விட்டு பட்டுப்போல அரைத்து பசைபோலாக்கி, அதனை நெற்றியில் பற்றுப்போல தடவ வேண்டும். இதனைத் தடவினால் தலைவலியானது கணப்பொழுதில் மறைந்து விடுவதை உணரலாம்.

*மல்லியும் சர்க்கரையும் கலந்து குடித்தல் :*

சிறிது மல்லியையும், சர்க்கரையையும் எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு அரைத்து, அதனைக் குடித்தாலும் தலைவலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். ஒரு வேளை சளிபிடித்ததால் ஏற்பட்ட தலைவலியாக இருந் தால், உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

*சந்தனத்தை அரைத்துத் தடவுதல் :*

சந்தனக் கட்டையை எடுத்துக்கொண்டு, அதனை சிறிது தண்ணீர் விட்டு பசை போல மென்மையாக அரைத்து எடுத்துக்கொண்டு, அதனை நெற்றியில் பற்று போட்டால் தலைவலி பறந்துவிடும்.

*தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தல் :*

நெற்றியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும். தேங்காய் எண்ணெய் குளிர்ச்சியைத் தரும் குணம் கொண்டது. ஆகவே, கோடைக்காலத்தில் தலைவலியால் அவஸ்தைப்பட்டால், இம்மருத்துவம் நல்ல பலனைத் தரும்.


*சிறிது பூண்டு ஜுஸ் அருந்துதல் :*

சிறிது பூண்டுப்பற்களை எடுத்துக் கொண்டு, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, அதிலிருந்து ஜுஸ் எடுத்து, இந்த ஜுஸை ஒரு டீஸ்பூனாவது அருந்த வேண்டும். இதனால் குடித்த பூண்டுச்சாறு தலைப்பகுதிக்குள் ஊடுருவிச் சென்று, வலி நிவாரணி போல செயல்பட்டு, தலைவலியை நன்றாகக் குறைக்கும்.

*கால்களை வெந்நீரில் வைத்திருத்தல் :*


ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, வெந்நீர் நிரம்பிய வாளியில் கால்களை நனைக்கும் அளவுக்கு வைத்திருப்பது, தலைவலிக்கு மற்றொரு வீட்டு மருத்துவமாக செய்யப்பட்டு வருகிறது. இரவு படுக்கப்போகும் முன் பதினைந்து நிமிடங்களாவது, இதனைச் செய்ய வேண்டும்.

சைனஸினால் பாதிக்கப்பட்டு தலைவலியால் அவஸ்தைப்பட்டு வந்தாலும், நீண்டகாலமாக தலைவலியினால் அவஸ்தைப்பட்டு வந்தாலும், இம்முறையை குறைந்தபட்சம் மூன்று வாரங்களாவது செய்து வரவேண்டும். இதனால் நல்லதொரு முன்னேற்றத்தினை உணரக் கூடும்.

*ஒரு துண்டு ஆப்பிள் சாப்பிடுதல் :*

காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், ஒரு துண்டு ஆப்பிளில் சிறிது உப்பு தடவி சாப்பிட வேண்டும். ஆப்பிளை சாப்பிட்டதும், சிறிது வெதுவெதுப்பான தண்ணீரோ, சூடான பாலோ அருந்த வேண்டும். இப்படி ஒரு பத்து நாட்களுக்கு செய்து வந்தால், நாள்பட்ட தலைவலி குறையும்.

*பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தல் :*

தலைவலிக்கு நல்ல நிவார ணம் அளிக்கும் பொருட்களில் பாதாம் எண்ணெயும் ஒன்று. எனவே நெற்றியில் சிறிதளவு பாதாம் எண்ணெய் தடவி, 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால், தலைவலி நீங்கும்.


*இஞ்சி, சீரகம், தனியா கலந்த தேநீர் அருந்துதல் :*

தலைவலி உடனடியாக நீங்க வேண்டுமாப அப்படியென்றால், சிறிது இஞ்சி, சீரகம், மல்லி ஆகியவற்றை சிறிது தண்ணீரில் போட்டு, 5 நிமி டங்கள் கொதிக்க வைத்து, ஒரு தேநீர் போன்று தயாரித்து வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.


*வெற்றிலையை அரைத்துத் தடவுதல் :*


வெற்றிலைக்கு வலி நிவாரணித் தன்மை உள்ளது. இது தலைவலிக்கும் நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதற்கு சில வெற்றிலைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை நன்றாக அரைத்து எடுத்துக் கொண்டு, நெற்றியில் பற்றுப் போல தடவிக் கொள்ளவும். இதனால் தலைவலி மாயமாக மறைந்து போகும்.


*சீஸ் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளுதல்

தலைவலியினால் அவதிப்படுகிறீர்கள் என்றால், சீஸ், சாக்லெட்டுகள், ஆட்டுக்கறி போன்றவற்றை முழுவதுமாகத் தவிர்த்து விட வேண்டும். இதற்குப் பதிலாக, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் பி12, புரதம், கால்சியம் ஆகியவை நிறைந்த உணவு வகைகளை அதிகமாக சேர்த் துக்கொள்ள வேண்டும்.

அதிலும் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், வெந்தயக்கீரை போன்ற இலை வகைக் காய்கறிகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். தலைவலியிலிருந்து விடு படவேண்டுமென்று விரும்பினால், ஃபாஸ்ட் புட் மற்றும் மசாலா உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.



*நன்றாக தூங்குதல் :*

பெரும்பாலான மக்கள் தலைவலியால் அவஸ்தைப்படுவதற்கு முக்கியமான காரணம் சரியான தூக்கம் இல்லாதது தான். எனவே தலைவலியிலிருந்து முழுமையாக விடுபட வேண்டுமானால், தூக்கத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.

அதிலும் ஒரு நாளைக்கு ஆறு மணிநேரமாவது ஆழ்ந்த தூக்கம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் தலைவலி குறையும். மேலே குறிப்பிட்டுள்ளவை நமது முன்னோர்கள் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் தலைவலிக்கான கை மருத்துவங்க

திங்கள், 27 ஆகஸ்ட், 2018

குழந்தைகளின் வளர்ச்சியில் உங்கள் வீட்டின்பங்கு என்ன? (Sponsored Content)


குழந்தைகளின் வளர்ச்சியில் உங்கள் வீட்டின்பங்கு என்ன? (Sponsored Content)

குழந்தைகள் வளர ஆரம்பித்துவிட்டன. இப்போது, வீடு மாற்றவேண்டியது கட்டாயம். குழந்தைகளின் ஆரோக்கியமான மன வளர்ச்சி அவர்கள் வளரும் சூழ்நிலையைப் பொறுத்தே அமையும் என்பதால், பெற்றோர்கள் இந்த விஷயத்தில் நிறுத்தி நிதானமாக யோசித்து முடிவெடுத்தல் அவசியமாகிறது. குழந்தைகளின் வளர்ச்சி, படிப்பு, வருங்கால செயல்திறன் மேம்பாடு, இதையெல்லாம் மனதில்கொண்டு புதுவீட்டை வாங்கச் சொல்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
அடிக்கடி வீடு மாறுகிறீர்களா?
வேலை மற்றும் வாடகை காரணமாக வீட்டை நாம் மாற்றுவதுண்டு. நமக்கு என குடும்பம் ஒன்று வரும்வரை நாம் வீட்டை அடிக்கடி மாற்றலாம். குழந்தைகள் பிறந்தபின் இதே முறையை பின்பற்றுவது சரியல்ல என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். ஒரே இடத்தில் வளரும்போது குழந்தைகளுக்கு நிம்மதியான சூழலை உருவாக்கிக் கொடுக்கிறோம். பெற்றோருடன் இணைந்து பாதுகாப்பான இடத்தில் வசிப்பதால் குழந்தைகளுக்கு ஸ்திரமான மனநிலை ஏற்படுகிறது. இது, அவர்களை படிப்பிலும் பிற நடவடிக்கைகளிலும் சிறப்பாக செயல்படவைக்கும். வீடு மாறும்போது, அந்தந்தச் சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்வதில் சிறார்களுக்கு அதிகச் சிரமமாக இருக்கும். இது, தனக்கென நல்ல நட்பையும் சமூகத் தொடர்புகளையும் ஏற்படுத்துக்கொள்வதில் குழந்தைகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. எனவே, குழந்தைகள் பக்குவம் அடையும்வரை ஒரே வீட்டில் வசிப்பதே பரிந்துரைக்கப்படுகிறது.
விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!
குழந்தைகள் ஓடியாடி விளையாடுதல் முக்கியமாகப் பட்டாலும், குழந்தைகளின் பாதுகாப்பு இன்று கேள்விக்குறியாகியுள்ள நிலையில், குறிப்பாக பெண் குழந்தைகளை வெளியே விளையாட அனுப்புவதில் பெற்றோர்கள் தயங்குவது அவர்களின் தரப்பு தவிப்பை உணர்த்துகிறது. இருந்தாலும், சிறார்களை வீட்டுக்குள் அடைத்து வைப்பது பெருந்தவறு, அவர்களின் வயதை ஒத்த பிள்ளைகளுடன் பரஸ்பரம் பேசுவதும் விளையாடுவதும் முக்கியமாகும். ஸ்கூல் தவிர விடுமுறை நாள்களிளும் ஓடியாடி விளையாடும்போது, அவர்களின் சமூகத் தொடர்பு சார்ந்த செயல்பாடுகள் மேம்படுகிறது, உடல் ஆரோக்கியமாக இருக்கிறது, மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. இதனால் நாம் வசிக்கும் வீடு மற்றும் சுற்றுப்புறம் பிள்ளைகளின் பாதுகாப்புக்கும் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டியது அவசியம்!
வீட்டுக்கு அருகாமையில் பள்ளிக்கூடம்...
வீட்டுக்கு அருகில் ஸ்கூல் இருக்கும்போது, குழந்தைகளின் அலைச்சல் தவிர்க்கப்படுகிறது. இதனால் நேரம் மிச்சப்பப்படுவதோடு, பயணக் களைப்பின்றி பிள்ளைகள் வீட்டுக்கு வரமுடியும். வீடு அருகில் இருப்பதால், ஸ்கூல் விட்டபின் நேரத்துக்கு வரவேண்டிய கட்டாயத்துக்கு குழந்தைகள் வந்துவிடுகிறன்றனர். பதின்பருவக் குழந்தைகள் ஏற்படுத்திக்கொள்ளும் தேவையற்ற நட்புகளையும், அதனால் ஏற்படும் ஆபத்துகளையும் இது தவிர்க்கிறது. பெற்றோரால், குழந்தையின் நடவடிக்கைகளைச் சுலபமாகக் கண்காணிக்கவும் முடிகிறது.
நிலையான வீடு மற்றும் நல்ல சூழல் என்பது குழந்தைகளின் நலத்திலும் வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இன்றைய குழந்தைகள்தான் நாளைய சமுதாயம் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் மனதில்கொண்டு, நாம் குழந்தைகளுடன் வசிக்கவிருக்கும் வீட்டை தேர்வுசெய்வது முக்கியமாகும்!


சென்னையில் குழந்தைகளுக்கு ஏற்ற குடியிருப்புகள்...
குழந்தைகளுக்கு ஏற்றவாறும் அவர்கள் மனம் விரும்பும் வகையிலும் பல விசேஷ வீடுகளை இன்று அறிமுகப்படுத்த ஆரம்பித்துள்ளன கட்டுமான நிறுவனங்கள். CasaGrand நிறுவனத்தினர், இதேபோன்று CasaGrand ASTA எனும் குழந்தைகளுக்கு ஏற்ற குடியிருப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். சென்னை கொரட்டூர் பகுதியில், பாடி மேம்பாலத்துக்கு அருகில் அமையவிருக்கும் ASTA குடியிருப்புகள், அண்ணா நகர் மற்றும் அம்பத்தூருக்கு அருகாமையில், பிரதானமான இடத்தில் அமையவிருக்கிறது. 614 சதுர அடி முதல் 2792 சதுர அடிகளில், 2,3 & 4 பி.எச்.கே. வீடுகள் கொண்ட இத்திட்டத்தில் மொத்தம் 325 அப்பார்ட்மென்டுகள் வரவிருக்கின்றன.
அஸ்டாவின் அம்சங்கள்
குழந்தைகளைப் பராமரிக்கும் பகல் காப்பகம் அஸ்டா வளாகத்துக்கு உள்ளேயே இருப்பது வேலைக்குச் செல்லும் பெற்றோர்களுக்கு பெரும் அனுகூலமாக இருக்கும். இதனால் குழந்தை பள்ளிக்குச் செல்ல ஆரம்பிக்கும் வரை தாய்மார்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. குழந்தைகளை வீடு இருக்கும் அப்பார்ட்மென்ட் வளாகத்துக்கு உள்ளேயே பாதுகாப்பாக விட்டுவிட்டு நம் அலுவல்களை நாம் பார்க்கவியலும். குழந்தைகளுக்கு விளையாட்டுத் திடல், ஸ்கேட்டிங் வசதி, கிரிக்கெட் பயிற்சியிடம், ஹாஃப் பேஸ்கட்பால் கோர்ட், விளையாட்டு உபகரணங்கள் பொருந்திய மண் திடல், படிப்பதற்கு பிரத்தியேக அறை, தியான மண்டபம், உள்விளையாட்டு அரங்கம் என தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்ட காசாகிராண்ட் அஸ்டா அபார்ட்மென்ட்ஸ்-இன் சமீபத்தில் 4 பள்ளிகள், 5 கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவை இருப்பது பெரிய ப்ளஸ்!
குழந்தைகளோடு வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்திட விரும்பும் யாவரும், காசாகிராண்ட் அஸ்டாவில் அப்பார்ட்மெண்ட்களை வாங்க தவறவிடக் கூடாது. ஏனெனில், மகிழ்ச்சியான குழந்தைகள்தான் மகிழ்ச்சியான வீட்டுக்கு அடையாளம்!
நன்றி விகடன்.

பணம் தங்காது என்பதன் அறிகுறிகள் என்ன?


பணம் தங்காது என்பதன் அறிகுறிகள் என்ன?
**************************************************

1. ஒருவரின் வீட்டில் அடிக்கடி தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு  பிரச்சனைகள் ஏற்பட்டால், வீண் செலவுகள் அதிகரிக்கும் என்பதை குறிக்கிறது.

2.ஒருவரை தேடி வந்த நல்ல வாய்ப்பு, திடீரென்று கை நழுவிப்போனால், அது நிதி பிரச்சனையால் துன்பம் நேரிடும் என்பதை குறிக்கிறது.

3.அளவுக்கதிமாக வாயில் எச்சில் சுரந்தால் அவர்களுக்கு பணக்கஷ்டம் வரப் போகிறது என்று அர்த்தம்.

4.வீட்டில் உள்ள வளர்க்கும் செல்லப் பிராணி திடீரென்று இறந்து விட்டால், அந்த குடும்பத்தினர் பணக்கஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

5. ஒருவரின் கைவிரலில் உள்ள சூரிய மேடு பகுதியில் திடீரென்று மச்சம் உருவானால், அது அவர்களின் சேமிப்பு பணம் கரையத் தொடங்கும் என்று பொருள்.

6.வீட்டின் நுழைவாயிலில் எண்ணெய் சிதறினால், அது பணப் பிரச்சனையை ஏற்படுத்தும்.

7.ஒருவர் நகைகளை இழந்தாலோ அல்லது வீட்டில் நகைகள் வைத்த இடம் தெரியாமல் மறந்தால், அது பெரிய பண இழப்பை ஏற்படுத்த போவதாக அர்த்தம்.


#இல்லங்களில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருந்தால்தான் செல்வம் தங்கும். எப்போதும் பணப்பிரச்னை ஏற்படாது. அதற்கு 10 எளிய வாஸ்து குறிப்புகள் உள்ளன.

1. உரிமையை நிலைநிறுத்தும் பெயர்ப்பலகை

சொந்த வீட்டு உரிமையாளர்கள் தங்களது பெயர்ப்பலகையை வாசல் மதிலில் பதிக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்தப் பெயர்ப்பலகையை பார்த்துப் படிப்பவர்களின் மனதில் நீங்கள்தான் வீட்டு உரிமையாளர் என்று எழுகின்ற ஆக்கப்பூர்வமான உணர்வு உங்களது செல்வத்தை நிலைக்கச் செய்யும்.

2. ஒளிபிறந்தால் ஓடோடி வரும் செல்வம்

வீடு ஒளிமயமாக பிரகாசித்தாலே லட்சுமி கடாட்சம் பொங்கி வழியும். வீட்டு முகப்பிலும், பூஜை அறையிலும் தினசரி காலை மாலை விளக்கேற்றி வைத்தால் செல்வம் பெருகும். மங்களம் உண்டாகும்.

3. மங்களம் தரும் ஸ்வஸ்திக், ஓம்

பூஜை அறையிலும் பிரதான அறையிலும் மங்களத்தின் சின்னங்களான ஸ்வஸ்திக், ஓம் குறிகளை இடுங்கள். நல்ல அறிகுறிகள் தோன்றி வீட்டை வளமாக்கும்.

4. கண் திருஷ்டியைப் போக்கும் எலுமிச்சை

சனிதோறும் பூஜை செய்து ஒரு டம்ளரில் எலுமிச்சைப் பழத்தைப் போட்டு பூஜை அறையில் வைக்கவும். வாரந்தோறும் பூஜித்து புதிய பழத்தை வைக்கவும். இப்படி செய்தால் கண் திருஷ்டி உங்கள் இல்லத்தையும் உங்கள் குடும்பத்தாரையும் விலகி ஓடும்.

5. பூஜை அறையில் புனித கங்கை நீர்

புனித கங்கை நீர் அடங்கிய கலசத்தை பூஜை அறையில் வைத்தால் வீடு பரிசுத்தமானதாக விளங்கும். மங்காத செல்வம் உண்டாகும்.

6. தீயசக்திகளை துரத்தும் உப்பு

வீட்டின் அறை மூலைகளில் சிறிய தட்டு அல்லது கிண்ணத்தில் உப்பு நிறைத்து வைக்கவும். தீய சக்திகளை அறவே கிரகித்து நீக்கும் தன்மை உப்புக்கு உள்ளது.

7. சரியான திக்கில் சமையலறை

வாஸ்துப்படி வீட்டில் தென்கிழக்கு மூலையில் சமையலறை அமைப்பதே ஆகச் சிறந்ததாகும். அது இயலாதபட்சத்தில் அதற்கு மாற்றாக வடமேற்கு மூலையில் சமையலறையை அமைக்கலாம். இருந்தாலும் தென்கிழக்கு முகமாக அடுப்பை வைத்திருக்கோமா என்பதை உறுதி செய்யுங்கள்.

8. சமையலறையில் மருந்துகள் வைத்தலாகாது

எந்தவொரு தீயசக்தியும் சமையலறையை அண்டவிடக்கூடாது. இதற்கு முதல்படி நோய் நிவாரணிகளான மருந்துகள் சமையலறையில் வைக்கக்கூடாது. ஆரோக்கியத்துக்கும், மகிழ்ச்சிக்கும் இடமான சமையலறையில் மருந்துகளை வைத்திருப்பது ஆகாது.

9. படுக்கையறையில் தேவையில்லை முகம்பார்க்கும் கண்ணாடி

படுக்கையறையில் முகம் பார்க்கும் கண்ணாடியை அமைக்கக் கூடாது. சிலர் வீட்டில் டிரஸ்ஸிங் டேபிள் படுக்கையறையில் இருந்தால் இரவு தூங்கும்போது மறக்காமல் அதன் கண்ணாடியை திரையிட்டு மூடிவிடவும். வாஸ்துப்படி படுக்கையறையில் உள்ள கண்ணாடி பிணியையும் குடும்பத்தில் சச்சரவையும் ஈர்த்து வரும்

10. அமைதியைத் தூண்டும் மணியோசை

மணி அடுக்குகளை வீட்டில் தொங்கவிட்டால் தீய சக்திகளை தவிடு பொடியாக்கும். காற்றில் எப்போதும் நல்ல சக்தியை பரப்பும் தன்மை இந்த மணிகளுக்கு உண்டு.

#புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள் என்று ஒரு சில மாதங்கள் இருக்கின்றன அந்த மாதத்தைப்பற்றி நான் உங்களுக்கு சொல்லுகிறேன். அந்த மாதத்தில் ஏன் போககூடாது என்ற காரணத்தையும் சொல்லுகிறேன். அதனை தவிர்த்துவிடடு நீங்கள் புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போங்கள் உங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

புதிய வீட்டிற்க்கு குடித்தனம் போககூடாத மாதங்கள் ஆடி, மார்கழி, புரட்டாசி, மாசி, பங்குனி, ஆனி ஏன் போககூடாது என்ற  ரணத்தைப் பார்க்கலாம்
இராவண சம்ஹாரம் ஆடி மாதத்தில் நடந்தது.
பாரதபோர் மார்கழி மாதத்தில் நடந்தது.
இரணிய சம்ஹாரம் புரட்டாசி மாதத்தில் நடந்தது.
 பரமசிவன் ஆலகால விஷம் அருந்தியது மாசி மாதம்.
 மன்மதனை சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்த சம்பவம் பங்குனி மாதத்தில் நடந்தது.
மகாபலிச் சக்கரவர்த்தி தனது ராஜாங்கத்தை இழந்து பாதாளத்திற்க்கு போன சம்பவம் ஆனி மாதத்தில் நடந்தது.

இந்த மாதத்தில் இருக்கின்ற இடத்தை விட்டு குடிபோனால் அந்த குடும்பம் துன்பமும் துயரமும் அடையும். மேலே சொன்ன மாதங்களை தவிர்த்துவிடுங்கள்.

ஆன்மீகத்தில் சில முக்கிய விஷயங்கள்...


ஆன்மீகத்தில் சில முக்கிய விஷயங்கள்...

1. கோவிலில் உட்காருவது ஏன்???

வழிபாடு முடிந்ததும், கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து எழுகிறார்கள். இதற்கு காரணம் கண்ணுக்குத் தெரியாத கடவுளின் துாதர்கள் உள்ளனர். அவர்கள்
பக்தர்களுக்கு வழிகாட்டுவதாக ஐதீகம். வழிபாடு முடிந்ததும் அவர்களிடம் விடை பெறும் விதமாக சிறிது நேரம் கோவிலில் உட்கார வேண்டும்.
அப்போது, “தெய்வத்தின் கட்டளையை நிறைவேற்ற காத்திருக்கும் துாதர்களே! எங்கள் வேண்டுகோளை ஏற்று அருள்புரிய வேண்டும்” என்று பிரார்த்திக்க வேண்டும். சிறிது நேரம் தியானம் செய்து விட்டு கிளம்ப வேண்டும்.
____________________________________________________________

2. வெற்றி பயணத்திற்கு!!!!

அஷ்டமி, நவமி திதிகளிலும். பரணி, கார்த்திகை நட்சத்திர நாட்களிலும் வெளியூர் செல்லக் கூடாது என்பது சாஸ்திரம். ஆனால் நடைமுறையில் நாள்,
நட்சத்திரம் பார்த்து கிளம்ப முடியாது. எந்த நாளில் கிளம்பினாலும் அது வெற்றிப் பயணமாக அமைய எளிய பரிகாரம் உள்ளது.

பிள்ளையார் கோவிலில் தேங்காயை சிதறுகாயாக உடைத்து விட்டு, இரண்டு பழங்களை பசுவுக்கு கொடுத்தால் போதும். பயணம் சிறப்பாக அமையும்.
____________________________________________________________

3. செய்யும் புண்ணியம் எத்தனை தலைமுறைக்கு?

1. புனித நதி நீராடுதல் - 3தலைமுறைக்கு
2. அன்னதானம், கோவிலில் தீபம், ஏழைப் பெண் திருமணம் - 5 த.மு
3. பித்ரு கைங்கர்ய உதவி - 6 த.மு
4. கோவில் திருப்பணி - 7 த.மு
5. அனாதை அந்திமக் கிரியை - 9 த.மு
6. பசு பராமரிப்பு - 14 த.மு
7. கயாவில் திதி - 21 தலை முறைக்கு
____________________________________________________________

4. மகிழும் மகாலட்சுமி!!!!

யானையின் மத்தகத்தில் (முன் நெற்றி) லட்சுமி குடியிருப்பதாக ஐதீகம். இதனால், தினமும் கோவில் நடை திறந்ததும் கருவறை முன், யானைக்கு பூஜை நடத்தி சன்னதியை சுற்றி வரச் செய்வர்.

இதற்கு 'கஜ பூஜை' என்று பெயர். யானையின் பிளிறல் ஓசை கேட்டு லட்சுமியின் மனம் மகிழும் என 'ஸ்ரீசூக்தம்' என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. லட்சுமி அவதரித்ததும், பூமியை தாங்கும் எட்டுத்திசை யானைகளும் புனித தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வணங்கின.

இவளை 'கஜ லட்சுமி' என்பர். 'கஜம்' என்றால் 'யானை'. கஜலட்சுமி சிற்பத்தை கோவில் கருவறை நுழைவு வாயிலிலும், வீட்டில் தலைவாசலிலும் அமைப்பது வழக்கம்.


5. வரம் தரும் ''இலை''

பூஜையில் சுவாமிக்கு பிரசாதமாக தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு ஆகியவை படைப்பர். சிலர் சுத்தான்னம் (வெள்ளைச்சோறு) மட்டும் கூட வைப்பதுண்டு. பிரசாதம் வைக்கும் பாத்திரம் சுத்தமாக இருக்கவேண்டும். அது தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற உலோகத்தால் ஆனதாக இருப்பது சிறப்பு. மண்சட்டி, தாமரை இலையிலும் பிரசாதம் படைக்கலாம்.

👉தாமரை இலையில் படைத்தால், மகாவிஷ்ணு மனம் மகிழ்ந்து வரம் தருவார் என பரசுராம கல்ப சூத்திரத்தில் உள்ளது.
____________________________________________________________

6. பைரவா... பைரவா....

பைரவரின் சக்தி பற்றி சுப்ரபேதாகமம் என்ற நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. இவர் சிவபெருமானின் அம்சம். இந்த பிரபஞ்சத்தையே ஆட்டிப்படைக்கும் அளவற்ற சக்தி படைத்தவர் சிவன்.
அந்த சக்தியில் கோடியில் ஒரு பங்கால் உருவானவர் பைரவர். சிவபெருமானின் நேரடி சக்தி என்பதால், இவரை வணங்குவோர் அடையும் நன்மைக்கு அளவே கிடையாது.
பைரவர் என்ற சொல்லுக்கு 'அச்சுறுத்தும் போர்க்குரல் உடையவர்' என்று பொருள். சிவபெருமான் அசுரர்களையும், தனக்கு அடங்க மறுத்த அரசர்களையும் எதிர்த்து போரிடும் போது ஏற்ற வடிவமே பைரவக் கோலம்.

🌻இவர் ஆயுதங்களை எடுக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. சத்தம் போட்டாலே போதும்! எதிரிகள் அடங்கிப் போவார்கள். இவரை 'வைரவர்' என்று கிராமப்புறங்களில் சொல்வர்.
நவரத்தினங்களில் வைரத்தின் ஒளி பிரமிப்பு தருவதாக இருக்கும்.

👉அதுபோல், பக்தர்கள் மனதில் அஞ்ஞானத்தை அழித்து ஞானம் என்னும் ஒளியேற்றுபவர் என்பதால், இப்பெயர் ஏற்பட்டது. இவரை ஞாயிறு அன்று ராகு காலத்தில் (மாலை 4:30 - 6:00 மணி) வழிபடுவது சிறப்பு.👈
____________________________________________________________

7. 'தல' கொடுத்த 'தல'

ரங்கநாதர் தவிர வேறெந்த பெருமாளையும் பாடாதவர் தொண்டரடிப் பொடியாழ்வார். தன் தந்தையின் அன்பு கிடைக்காததால் வருந்திய துருவன் என்ற சிறுவன், நாரதர் உதவியுடன் விஷ்ணு மந்திரம் சொல்லி வந்தான். இதன் காரணமாக அவன் வானுலகம் சென்ற போது, எமலோகத்தின் தலைவனான எமதர்மன், தன் தலையைப் படிக்கட்டாக்கி வைகுண்டம் செல்ல உதவினார். இதுபோல,

🌻இந்த கலியுகத்தில் நாம் நிம்மதி பெறவும், வாழ்வுக்குப் பின் மோட்சம் செல்லவும் ரங்கநாதரின் திருநாமத்தை ஜெபிக்க வேண்டும் என்று ஆழ்வார் கூறுகிறார்.
___________________________________________________________

8. கோபமா....வரவே வராது!

முருகன் சூரபத்மனைக் கொல்லாமல், இரக்கமுடன் மயிலாகவும், சேவலாகவும் மாற்றி தன் வாகனம், கொடியாக மாற்றிக் கொண்டார். இதனை 'சூரனுக்கு பெருவாழ்வு அளித்தவர்' என முருகனைப் போற்றுவர். இரக்கம் மிக்க முருகன், கேட்ட வரம் எல்லாம் கொடுக்கும் தெய்வம் என கந்தபுராணம் கூறுகிறது.
ஒருவரிடம் ஒருமுறை உதவி கேட்கலாம்... இருமுறை கேட்கலாம்... கோடி முறை கேட்க முடியுமா என்றால் அப்போதும் முருகன் அருள்புரிவார் என்கிறது திருப்புகழ். கோடி முறை வேண்டுதல் வைத்தாலும் முருகன், அடியார்களிடம் கோபம் கொள்வதில்லை.

🌻'அடியார் கோடி குறை கருதினாலும் வேறு முனிய அறியாத தேவர் பெருமானே' என அருணகிரிநாதர் பாடியுள்ளார்.🌻
____________________________________________________________

9. அழகாய் இருக்க மந்திரம் இருக்கு!!!!

தெய்வங்களில் மூவருக்கு சுந்தரர் என்ற பெயர் வருகிறது. சிவனுக்கு 'கல்யாண சுந்தரர், சுந்தரேஸ்வரர்' என்ற பெயர்கள் உண்டு. திருமால் 'சுந்தர ராஜப் பெருமாள்' என்ற பெயர் பெறுகிறார். ராமதூதனான அனுமன் இளமையில் மிக அழகாக இருப்பார். இதனால் இவரது தாய் அஞ்சனை தன் மகனை 'சுந்தரா' என அழைத்து மகிழ்வார்.

👉இந்த மூன்று சுந்தரர்களுக்குரிய மந்திரங்களான 'ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஸ்ரீராமதாச ஆஞ்சநேய' ஆகியவற்றை தினமும் சொல்லி வருபவர்களின் முகம் பொலிவாக இருக்கும்.👈
____________________________________________________________

10. இழந்தது கிடைக்கணுமா????

ஆனி மாத வளர்பிறை ஏகாதசிக்கு 'நிர்ஜலா ஏகாதசி' என்று பெயர். வியாசரின் வழிகாட்டுதலால், பாண்டவரில் ஒருவரான பீமன் தண்ணீர் அருந்தாமல் விரதமிருந்ததால் இப்பெயர் வந்தது.
'நிர்ஜலா' என்பதற்கு 'தண்ணீர் இல்லாமல்' என்பது பொருள்.

🌻காலையில் நீராடி பெருமாள் கோவிலில் நெய் விளக்கேற்றி வழிபட வேண்டும். துளசி அர்ச்சனை செய்வது சிறப்பு. இதற்கு 'பீம ஏகாதசி' என்று பெயர். இதன் பயனாக பாண்டவர்களுக்கு இழந்த ராஜ்ஜியம் கிடைத்தது. இழந்த சொத்து, கை விட்டுப் போன பொருள் மீண்டும் கிடைக்க இந்த விரதமிருக்கலாம்.🌻
____________________________________________________________

11. இதை படிக்க மறக்காதீங்க!!!!!!

திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கு உருகார் என்பர். அடியவர் சொல்ல ஆண்டவன் கைப்பட எழுதிய பெருமை இதற்குண்டு. இதன் ஆசிரியர் மாணிக்கவாசகரின் குருபூஜை ஆனி மக நட்சத்திரத்தன்று நடக்கிறது.

🌻 அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சரான மாணிக்கவாசகர், குதிரைகள் வாங்க கொடுத்த பணத்தில் திருப்பெருந்துறையில் (புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில்) கோவில் கட்டினார். இதனால் மன்னரின் தண்டனைக்கு ஆளானார்.

♥ சிவன் பல திருவிளையாடல்களை நிகழ்த்தி, மாணிக்கவாசகரின் பெருமையை உலகறியச் செய்தார். அதன் பின் சிதம்பரம் சென்ற அவர், திருவாசகம் பாடினார். இதன் முதல் பகுதியாக உள்ள சிவபுராணம், சிவனின் பெருமைகளை விளக்குகிறது.

🌻 95 வரிகள் கொண்ட இதைப் படிக்க, முற்பிறவியில் செய்த பாவம் தீரும் என மாணிக்கவாசகர் குறிப்பிட்டுள்ளார்.
____________________________________________________________

12. நடராஜர்-பெயர் காரணம் :

சிவனின் நடனம் காண வியாக்ரபாதர், பதஞ்சலி என்ற முனிவர்கள் தவமிருந்தனர். அவர்களுக்கு சிவன் ஆனந்த தாண்டவம் ஆடி காட்டினார். இதை பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதி, தில்லை வாழ் அந்தணர்கள் ரசித்தனர். சிவன் அருகில் பார்வதியும் நின்று விருப்பமாக ரசித்தாள். இதனால் 'சிவகாமி' என்ற பெயர் அவளுக்கு ஏற்பட்டது.

🌻 இதை விட சிறந்த நடனத்தை யாராலும் ஆட முடியாது என்பதால், 'நடராஜர்' (ஆடல் அரசன்) என்னும் பெயர், சிவனுக்கு சூட்டப்பட்டது
____________________________________________________________

13. தூசியினாலும் நன்மையிருக்கு!!!

தரையில் குழந்தைகள் உருண்டு விளையாண்டால், 'ஐயோ! உடலெல்லாம் தூசாகும், எழுந்திரு,” என்று கண்டிப்போம்.

ஆனால், 👉👉 கோயிலில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் முன் கொடி மரம் முன் விழுந்து வணங்க வேண்டும். அவ்வாறு வணங்கும் போது நமது உடலில் எவ்வளவு தூசி படிகின்றதோ, அவ்வளவு வருட காலம் நாம் கைலாயத்தில் சிவ பார்வதியோடு வாழும் பாக்கியம் என்கிறது வேதம்.👈👈
 

14. நிழல்படும் நீர்நிலையில் நீராடுங்க!

அரசமரத்து நிழல்படுகின்ற நீர் நிலைகளில் வியாழக்கிழமையன்றும், அமாவாசையன்றும் நீராடுவது, அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்கு சமமானது.
____________________________________________________________

15. சிதம்பரத்தில் அரங்கேற்றம் ஏன்???

படைப்புக்கடவுளான பிரம்மா, ஒவ்வொரு யுகம் முடியும் காலத்திலும் சிவனால் அழிக்கப்படுவார். மீண்டும் உலகம் உருவாகும் போது உயிர்ப்பிக்கப் படுவார். இப்படி பிரம்மா 32 முறை அழிக்கப்பட்டு, மீண்டும் உயிர் பெற்றிருக்கிறார்.

இந்த 32 பிரம்மாக்களின் மண்டை ஓட்டினை (கபாலம்) சிவன் தன் கழுத்தில் மாலையாக அணிந்திருக்கிறார். அவரது தலையில் சூடியுள்ள சந்திரனில் இருந்து வழியும் அமிர்தம், கபாலத்தின் மீது பட்டதும் மண்டையோடு மாலை உயிர் பெற்று விடும். அந்த தலைகள் இசையுடன் பாடி, நடராஜரை வழிபடும். கபாலங்கள் பாடவும், நடராஜர் அதற்கேற்ப நடனமாட, உலகெங்கும் மகிழ்ச்சி பரவும்.

இந்த பிரம்ம கபாலங்களில் இருந்தே இசை பிறந்ததாக சங்கீத சாஸ்திரம் கூறுகிறது. 👉இதன் அடிப்படையில் இசை, நடனம் கற்பவர்கள் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் அரங்கேற்றம் நடத்துகின்றனர்.👈
____________________________________________________________

16. வணக்கம் சொல்ல மறக்காதீங்க!!!🙏🙏🙏

தெரிந்தவர், பெரியவர்களை சந்தித்தால் 'ஹலோ...' என சொல்லி கை குலுக்குகின்றனர்.(நோய் தொற்றும் அபாயம் உண்டு). கைகளைக் குவித்து வணக்கம் (நமஸ்காரம்) சொல்ல வேண்டும் என்கிறது சாஸ்திரம். நமஸ்காரம் என்பது 'நம' என்னும் சொல்லில் இருந்து வந்தது. 'நம' என்பதற்கு 'பணிதல்' என்பது பொருள். அனைவரிடமும் பணிவுடன் இருக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் சொல்வதே 'வணக்கம்'.
____________________________________________________________

17. அனுமனைப் போல் வாழ்வோம்!!!!

விவேகானந்தர் அனுமனைப் பின்பற்றி மக்கள் வாழ வேண்டும் என அறிவுறுத்துகிறார்.
“மகாவீர அனுமனை உன் வாழ்வின் லட்சியமாகக் கொள். அவர் ராமபிரானின் உத்தரவுப்படி கடலையும் தாண்டிச் சென்றார். அவருக்கு வாழ்வையும், சாவையும் பற்றிய கவலை சிறிதும் இல்லை. அவர் தன் புலன்களை முற்றிலும் அடக்கி ஆட்சி செய்தார். அற்புதமான புத்தி சாதுர்யம் கொண்டவர். ஒருபக்கம் அவர் தொண்டு என்னும் லட்சியத்தின் உருவகமாகத் திகழ்கிறார்.
இன்னொரு பக்கம் சிங்கம் போன்று தைரியத்துடன் உலகையே பிரமிக்க வைக்கிறார். ராமனின் நன்மைக்காகத் தன் உயிரையே தியாகம் செய்வதிலும் அவர் சிறிதும் தயக்கம் காட்டவில்லை.

♥♥ராமசேவையைத் தவிர மற்ற அனைத்தையும் அறவே புறக்கணித்தார்.♥♥

🌻 பிரம்மலோக பதவியையோ, சிவலோகப் பதவியையோ கூட அவர் பெரிதாக கருதாமல் வேண்டாம் என்று ஒதுக்கினார். அவருடைய வாழ்க்கையின் ஒரே லட்சியம் ராமனுக்கு நன்மை செய்வது மட்டுமே.
முழுமனதோடுஅர்ப்பணிப்பு உணர்வுடன் பிறருக்கு செய்யும் சேவையே அனுமனிடம் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம்.”
____________________________________________________________

18. ஆச்சரியப்படும் அம்பிகை!!!!

சிவனுக்கும், காளிக்கும் நடனப்போட்டி நடந்தது. இதில் சிவன் ஊர்த்துவ தாண்டவம் என்னும் வலது காலைத் தூக்கி ஆடியதால் வெற்றி கிடைத்தது. இக்கோலத்தில் சிவன் காட்சி தரும் தலம் திருவள்ளூர் அருகிலுள்ள திருவாலங்காடு. இங்குள்ள நடராஜர் 'ரத்தின சபாபதி' எனப்படுகிறார்.

🌻 இவரது நடனத்திற்கு ஈடு கொடுத்து காளி ஆடியதை பார்வதி ஆச்சரியமாகப் பார்த்தாள். இதனால் அவளுக்கு 'சமீசீனாம்பிகை'(ஆச்சரியப்படுபவள்) எனப் பெயர் வந்தது. இடது கை நடுவிரலை மடக்கி, கன்னத்தில் கை வைத்த நிலையில் ஆச்சரிய கோலத்தில் காட்சியளிக்கிறாள்.

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

மருதாணி – மருத்துவ பயன்கள்


மருதாணி – மருத்துவ பயன்கள்

மருதாணி பொதுவாக வெப்பத் தன்மையும் துவர்ப்புச் சுவையும் கொண்டது. மருதாணி இலை பித்தத்தை அதிகமாக்கும்; இலைகள் கை, கால்களில் தோன்றும் சேற்றுப் பண்கள், அழுக்குப்படை, கட்டி, பித்த வெடிப்புகள் ஆகியவற்றை குணமாக்கும்.

மருதாணி வேர், நோய் நீக்கி உடலைத் தேற்றும்; மருதாணி பூக்களைச் சேகரித்து உலர்த்தி தலையணை போல் செய்து படுத்து வர நல்ல தூக்கம் உண்டாவதுடன், தலைப் பேன்களும் குறையும்.

மருதாணி புதர்ச்செடியாகவோ, குறுமரமாகவோ காணப்படும். நடுத்தரமான அல்லது பெரிய அதிகமான கிளைகளுடன் கூடிய தாவரமாகும். மருதாணி இலைகள் ஈட்டி வடிவமானவை. நான்கு கோணங்களுடன் எதிர் எதிராக 2-3 செமீ நீளத்தில் அமைந்திருக்கும்.

மருதாணி மலர்கள், சிறியவை. வெண்மை, இள மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிறமானவை. மணம் கொண்டவை. பெரிய நுனிக் கொத்துகளில் தொகுப்பாகக் காணப்படும்.

மருதாணி பழங்கள் சிறியவை. பட்டாணி அளவில் பல விதைகளுடன் காணப்படும். அழகுக்காகவும், அதன் மருத்துவ உபயோகங்களுக்காகவும் வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன.

மருதோன்றி, ஐனாஇலை, ஐவனம், அழவணம் ஆகிய பெயர்களும் மருதாணி தாவரத்திற்கு உண்டு. மருதாணி இலை, பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

மருதோன்றி இலைகளை மைய அரைத்து அடை போன்று தட்டையாகத் தட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். இதனை தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் போட்டு 21 நாள்கள் வெயிலில் வைத்து பின்னர் வடிகட்டி பத்திரப் படுத்த வேண்டும். இந்த எண்ணெயைத் தலையில் தடவி வரவேண்டும். இதனால் இளநரை மாறுவதுடன் கண்கள் குளிர்ச்சி அடையும். நல்ல தூக்கம் உண்டாகும்.

6 தேக்கரண்டி அளவு புதிதாக சேகரித்த மருதாணி இலைச் சாற்றை வெறும் வயிற்றில் காலை வேளைகளில் குடிக்க வேண்டும். 10 நாள்கள் வரை இவ்வாறு செய்ய பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல் குணமாக்கும்.

மருதாணி இலைகளுடன் சிறிதளவு பாக்கு சேர்த்து அம்மியில் அரைத்து இரவில் கை, கால் நகங்களின் மீது வைத்து, காய்ந்த பின்னர் உறங்கி காலையில் கழுவ வேண்டும். இவ்வாறு 15 நாள்களுக்கு ஒரு முறை செய்து வர நகம் சொத்தையாவது அழுக்குடன் பளபளப்பு இல்லாமல் இருப்பது ஆகிய பிரச்சனைகள் தீரும். மேலும் நகம் தொடர்பாக ஏற்படும் எந்த நோயானாலும் தடுக்கப்படும்.

மருதாணி இலையை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூச கொப்புளங்கள் தீக்காயங்கள் குணமாகும்.

சிறிதளவு மருதாணிக் கொழுந்தை நீரில் இட்டு ஊற வைக்க வேண்டும். 1 மணி நேரம் ஊறிய பின்னர் இந்த நீரைக் கொதிக்க வைத்து கஷாயம் செய்து கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தால் வாய் கொப்பளிக்க வாய்ப்புண் மற்றும் தொண்டைப்புண் தீரும்.

மருதாணி இலைகளை அரைத்து பாதங்களில் வைத்துக் கட்டுவது சிறந்த முறையாக பாரம்பரிய மருத்துவத்தில் இன்றும் இருந்து வருகின்றது.

மருதாணி விதை எண்ணெயை உடலில் தடவ உடல் எரிச்சல் குணமாகும். மருதாணி இலைகளை அரைத்து பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.

மருதாணி இலை மற்றும் மலர்கள் குஷ்ட நோய்க்கு மருந்தாகப் பயன்படுகின்றன. இந்த தகவல்கள் மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளன.

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

சாப்பிட கூடிய நெயில் பாலிஷ் பற்றி தெரியுமா..? குழந்தைகள் கூட இதை பயன்படுத்தலாமாம் ..!

சாப்பிட கூடிய நெயில் பாலிஷ் பற்றி தெரியுமா..? குழந்தைகள் கூட இதை பயன்படுத்தலாமாம் ..!

அழகு என்பது மிகவும் முக்கியமாக இன்றைய காலகட்டத்தில் கருதப்படுகிறது. பெண்கள் எந்த அளவிற்கு தங்களை அழகாக காட்டிக்கொள்ள விரும்புகிறார்களோ அதே அளவிற்கு ஆண்களும் தங்களை அழகாக காட்டி கொள்ளத்தான் எண்ணுகிறார்கள். அழகை மேம்படுத்தி கொள்வது என்பது இன்று நேற்று வந்தது இல்லை. பல ஆயிரம் வருடங்களாக அழகை மேம்படுத்த பலரும் பல விதமான அழகியல் குறிப்புகளை பின்பற்றித்தான் வருகிறார்கள். அந்த காலத்து அழகியல் முறை முதல் இந்த காலத்து அழகியல் முறை வரை எண்ணற்ற மாற்றங்கள் அடைந்து கொண்டுதான் இருக்கிறது. அழகியல் கலைகளில் வேதி பொருட்கள் அற்ற முறைகளே எல்லா கால நிலைகளிலும் முன்னோடியாக இருந்து வருகிறது. இயற்கை முறையிலான அழகியல் குறிப்புகளே மக்களுக்கும் பிடித்தமானதாக என்றும் கருதப்படுகிறது. அத்தகைய ஒரு அழகியல் கண்டுபிடுப்புதான் சாப்பிடக்கூடிய "நெயில் பாலிஷ்"... என்னது இதை கூடவா சாப்பிட முடியும்..? அப்படினு யோசிக்கிறீங்களா..? இது முற்றிலும் உண்மையே... இந்த பதிவில் அவற்றின் முழு தகவல்களையும் தெரிந்து கொள்வோம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் அழகியல் பொருட்கள்... ஒருவரை அழகு செய்வதில் முக்கிய பங்கு வகிப்பது இந்த அழகியல் பொருட்கள்தான். எத்தகைய அழகானவராக ஒருவர் விளங்க வேண்டுமோ அதை அவ்வாறே செய்கிறது இந்த அழகியல் பொருட்கள். ஒருவரின் நகங்களை அழகாக மாற்ற பெரிதும் பயன்படுகிறது இந்த வகையான நெயில் பாலிஷுக்கள். 

இது மிக முக்கியமான அழகியல் பொருளாக அழகு நிபுணர்களால் கருதப்படுகிறது. வண்ணங்கள் ஆயிரம்..! ஒருவரின் நகங்களை அழகு செய்வதில் இந்த நெயில் பாலிஷுக்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக இவை பலவகையான வண்ணங்களில் இருக்கிறது. பெண்களில் விரல் நகங்களை அழகாக காட்டுவதில் இது முதன்மையாக உள்ளது. பலவித வண்ணங்களில் பலவித டிசைன்களை நம்மால் எளிதாக செய்து கொள்ள முடியும். பலருக்கும் இதை நகங்களில் வைப்பதால் நகங்களை கடிக்கும்போது இதை சாப்பிடுவதே ஒரு பழக்கமாக மாறி வருகிறது. ஆனால் இந்த வேதி நெயில் பாலிஷுக்கள் பல பாதிப்புகளை தர கூடியது. இந்த இலையும் காயும் பார்த்திருக்கீங்களா? மழைக்காலத்தில் வரும் எல்லா நோய்க்கும் இதுதான் மருந்து நிச்சயமான இளம் பெண்ணிடம் பிராக்கெட் போட்ட ஜொள்ளு பார்ட்டிக்கு கிடைத்த நோஸ்கட் ரிப்ளை! எங்கள தப்பு பண்ண தூண்டுனதே அப்பா தான்...சாப்பிட கூடிய நைல் பாலிஷ்..! நைல் பாலிஷை இப்போதுதான் சாப்பிட கூடாது என்று குறிப்பிட்டர்களே..! அதற்குள் சாப்பிடக்கூடிய நைல் பாலிஷ் என்று கூறுகிறீர்களே...? என்ற கேள்வி உள்ளதா...!? உண்மைதாங்க, இப்போது அழகியல் விஞ்ஞானிகள் சாப்பிட கூடிய நைல் பாலிஷை கண்டறிந்துள்ளனர். இது குறிப்பாக குழந்தைகளுக்காகவே பிரேத்தியேகமாக உருவாக்கப்பட்டது என்றே கூறுகின்றனர். இதை கையிலும் வைத்து கொள்ளலாம். அதே நேரத்தில் சாப்பிட்டும் கொள்ளலாம், என இதை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர். இதில் உள்ள மூல பொருட்கள்... இந்த நைல் பாலிஷில் பல வகையான மக்க கூடிய பொருட்களே சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது, இவை உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதாம். அத்துடன் இது நச்சு தன்மை அற்றதும் கூட. இது சில வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களினால் செய்யப்பட்டது. குறிப்பாக கேரட், ஆரஞ்ச், பீட் ரூட் , பார்லி இலைகள் போன்றவையில் இருந்து பெறப்படுகிறது. செய்வது எப்படி..? முதலில் சில வகையான இயற்கை கலரிங் பவ்டர்களை வாங்கி கொள்ள வேண்டும். 
அடுத்து ஸ்டார்ச் என்பதையும் வாங்கி கொள்ள வேண்டும். தற்போது, 1 டீஸ்பூன் கலரிங் பவ்டர், 1 டீஸ்பூன் ஸ்டார்ச், சிறிது நீர் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவை நீரை 10 நிமிடம் காய வைக்க வேண்டும். செய்முறை #2 அடுத்து காய்ந்த இந்த கலரிங் நீரை நைல் பாலிஷ் போடும் பிரஷை கொண்டு உங்கள் நகங்களில் வர்ணம் பூசி கொள்ளுங்கள். ட்ரையரை(dryer) பயன்படுத்தி நகங்களை காய வையுங்கள். இது உங்கள் கைகளை மிகவும் அழகானதாக காட்டும்.வேண்டுமென்றால் இரண்டாவது கோட்டிங்கையும் நீங்கள் கொடுத்து கொள்ளலாம். பயன்கள்... இது போன்ற நைல் பாலிஷுக்கள் உடலுக்கும் கைகளுக்கும் மிகவும் நன்மை தரும். இதனால் எந்தவித பக்க விளைவுகளும் இல்லை. குழந்தைகளுக்கு நைல் பாலிஷ் வைக்க பயப்படும் பெற்றோர்கள் இதை தாராளமாக பயன்படுத்தலாம். அத்துடன் இதில் எந்தவித வேதி பொருட்களும் சேர்க்கப்படாததால் எந்தவித ஒவ்வாமையையும் ஏற்படுத்தாது.

சனி, 18 ஆகஸ்ட், 2018

ஆண்களுக்கு பெண்களைப் பற்றி ஒரு ஆண் எழுதிய கடிதம்...


ஆண்களுக்கு பெண்களைப் பற்றி ஒரு ஆண் எழுதிய கடிதம்...

♥தான் தாலி கட்டிய மனைவி படும் கஷ்டத்திற்கு காரணமான ஒவ்வொரு ஆணுக்கும் எழுதப்படும் கடிதம் இது. அந்த மனைவிகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களின் வலிகளை இங்கு எழுதுகிறேன். நம்பிக்கையுடன் காத்திருக்கும் இந்த பெண்களுக்கான கடிதம் இது.

♥சிலருக்கு இந்த கடிதம் கொடுமையான ஒன்றாக தோன்றலாம். ஆனால் அந்த பெண்கள் அனுபவிக்கும் கஷ்டத்துடன் ஒப்பிடும் போது இது ஒன்றும் இல்லை.. இது அனைவருக்குமே தெரியும்.

♥#மனைவி
பெண் என்பவள் உங்களுடைய நிலமோ அல்லது உங்களுடைய வீரத்தை நீச்சல் அடித்து காட்ட ஆறோ இல்லை. அல்லது நீங்கள் தினமும் சாப்பிடும் உணவும் இல்லை. பெண் என்பவள் வெறும் மனைவி, சகோதரி அல்லது மகள் மட்டும் இல்லை. அவர்களும் வலி மற்றும் சந்தோஷங்கள் கொண்ட மனிதர்கள் தான். மகிழ்ச்சியாக இருப்பது அவர்களுடைய உரிமை.

♥சில ஆண்கள் தன்னுடைய மனைவி தனக்கு அடிமையாக இருக்க மட்டுமே பிறந்தவள் என்பது போல் நடத்துகிறார்கள். இரக்கமே இல்லாமல் அவர்களை நடுத்தெருவில் எரிக்கிறார்கள். வேடிக்கை பார்க்க மக்கள் தயாராக உள்ளனர். ஆனால் உதவி செய்ய ஒருவரும் முன்வருவதில்லை. கண்களில் நிறைந்த வெறியுடன் பூட்டிய அறையில் கேட்க ஆள் இல்லாத அப்பாவி பெண்களை அடிக்கிறீர்கள்.

♥இதற்காக தான் அவளை திருமணம் செய்தீர்களா? உங்களுடைய இரக்கமற்ற சாகசங்களை அவளிடம் காண்பிக்க... இனி அவள் உங்களுக்கு அடிமை இல்லை. இனி அவள் வாழ்ந்தால் பெருமையுடன் வாழ வேண்டும் அல்லது வீழ்ந்தாலும் வீர கர்ஜனையுடன் வீழ வேண்டும். அவளை கஷ்டப்படுத்த வேண்டும் என்று நீங்கள் செய்யும் செயல்கள் இனி ஒரு போதும் அவளை கஷ்டப்படுத்த போவதில்லை.

♥எடை போடாதீர்கள்
முழுமையான அன்புடன், அழகிய ஆறுதலுடன் எல்லா சூழ்நிலைகளிலும் அவளுடன் நீங்கள் இருப்பீர்கள் என்று நம்பிக்கையில் அவள் உங்களை திருமணம் செய்கிறாள். ஆனால் நீங்கள் அவளுக்கு செய்தது என்ன?

♥அவளின் உணர்ச்சிகளை எடை போடுகிறீர்கள். உங்கள் சுய விருப்பத்திற்காக அவளின் இயல்பான குணங்களை மாற்ற வற்புறுத்துகிறீர்கள். அவள் செய்யும் எல்லா விஷயங்களிலும் குறை காணும் நோக்கில் நீங்கள் ஆராய்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும் அவள் செய்யும் விஷயங்களில் கூட குறை தேடி அவளை எளிதாக காயப்படுத்தி விடுகிறீர்கள். சந்தோஷத்திற்காக ஏங்க வைக்கிறீர்கள். அவள் கணவு கண்ட, உங்களுடன் வாழ ஆசைப்பட்ட வாழ்க்கையை அவளுக்கு தர, இந்த குறை காணும் போக்கை நீங்கள் கண்டிப்பாக விட வேண்டும். அன்பு காட்டி அன்பை அடையுங்கள் வாழ்க்கை மிக அழகாக இருக்கும்.

♥வற்புறுத்துதல் கூடாது
உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆட்டி வைக்க உங்கள் மனைவி ஒன்றும் பொம்மை கிடையாது. அவர்களின் விருப்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உங்களுக்கு உடலுறவு கொள்ள விருப்பம் இருந்து, உங்கள் மனைவிக்கு இல்லை என்றால் கட்டாயப்படுத்த கூடாது. பொறுமையாக இருக்க வேண்டும்.

♥அவளுக்கு தேவையான இடைவெளி கொடுக்க வேண்டும். அவளுடைய விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வார்த்தைகளால் அவளை காயப்படுத்துவதை நிறுத்த வேண்டும். உங்களை போல் சுய விருப்பங்கள் கொண்ட சாதாரண மனுஷி தான் அவளும். உங்களுடைய கற்பனைகளை அவளின் மேல் திணிக்காதீர்கள். உங்களுடைய கற்பனைகள் நிறைவேற்ற அவளின் விருப்பமும் முக்கியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

♥கெட்ட வார்த்தைகள் மற்றும் உணர்ச்சிகளால் தாக்குதல்
கெட்ட வார்த்தைகள் மற்றும் உணர்ச்சிகளால் தாக்குதல்
வார்த்தைகளாலும், உணர்ச்சிகளாலும் பெண்களுக்கு உளவியல் ரீதியாக தொல்லை கெடுப்பது மிகவும் அதிகரித்து உள்ளது. அவர்களை அடித்து உடல் ரீதியாக கஷ்டப்படுத்துவதை விட இது கொடுமையானது. உடல் ரீதியாக பெண்கள் அடையும் வலிகளை விட மனஉளைச்சல் மற்றும் இழிமானங்கள் அதிக வலிமிக்கது. காயப்பட்ட பெண்கள் திரும்ப திரும்ப என்ன செல்கிறார்கள் என்று தெரியுமா? தனிமைப்படுத்துதலும், மனரீதியாக அடையும் அவமானங்களுக்கு உடல் வலி எவ்வளவோ பரவாயில்லை என்று. உங்களை நம்பி திருமணம் செய்த மனைவியிடம், உங்கள் வாழ்வின் சரிபாதியாக நீங்கள் ஏற்று கொண்ட பெண்ணிடம் நீங்கள் இப்படி நடந்து கொள்வது நியாயமா?

♥உடல் ரீதியாக தாக்குதல்
நீண்ட காலமாக பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி இது. மேற்குறிப்பிட்ட விஷயங்கள் போன்று இதுவும் கடினமான தண்டனைக்குரியது. எந்த காரணத்திற்காகவும் உங்கள் மனைவியை நீங்கள் அடித்து துன்புறுத்துவதையோ அல்லது கொடுமைபடுத்துவதையோ ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது. குடும்பத்தில் வன்முறை என்றாலே பெரும்பாலான மக்களுக்கு உடனே தோன்றுவது அடி உதை தான். மனரீதியாக பெண்களுக்கு கொடுக்கப்படும் தொந்தரவுகளை விட இந்த மாதிரியான உடல் ரீதியாக துன்புறுத்துதல் வெளிப்படையானது என்பதால் இதை எளிதாக மறைக்க முடியாது. பெண்களை பலவீனப்படுத்தவும், உறவு முறைகளில் அதிகாரத்தை காட்டவும் இரக்கமின்றி இது நடத்தப்படுகிறது.

♥உறவு முறைகளில் உள்ள பிரச்சனைகள்
உறவு முறைகளில் உள்ள பிரச்சனைகள்
குடும்பத்தில் நடக்கும் வன்முறைகளை பற்றி பேசும் போது, உறவு முறைகளில் உள்ள மனிதர்களால் வரும் பிரச்சினையை பற்றி பேசாமல் இருக்க முடியாது. எல்லா பெண்களுக்குமே இந்த உறவுகளினால் வரும் பிரச்சினை குறித்த பயம் இருக்கும் என்பதை உங்களால மறுக்க முடியாது. திருமணம் அடைந்த பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சினையே இந்த உறவுகள் தான். உங்களால் இதை புரிந்து கொள்ள முடியாது. உங்களுக்கு தெரியாமல் உங்கள் தாய் உங்கள் மனைவியை துன்புறுத்தலாம். உங்கள் தாயின் மேல் நீங்கள் கொண்ட அன்பின் காரணமாக அவள் இந்த கொடுமைகளை உங்களிடம் கூறாமல் தன்னுள்ளே புதைத்து கொள்கிறாள். இனியாவது வலியோடு போராடும் அவள் வாழ்க்கைக்கு வசந்தம் தர முயற்சி செய்யுங்கள்.

♥பொருளாதார சுதந்திரம்
குடும்பத்தை கவனித்து கொண்டு குடும்ப தலைவியாக இருப்பதாலே பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் மறுக்கப்படுகிறது. அவர்கள் அனுபவிக்கும் பெரும்பாலான பிரச்சினைக்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. பெரும்பாலான பெண்கள் சுயமாக சம்பாதிப்பதில்லை என்பதால் அவளுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைப்பதில்லை. ஏன் அவள் சம்பாதிப்பதில்லை? குடும்ப கௌரவம் என்ற பெயரில் உங்கள் மருமகளையோ அல்லது மகளையோ நீங்கள் வேலைக்கு அனுப்புவதில்லை அதனால் தானே.

♥ கௌரவம் என்ற பெயரில் நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? அடிமையாக இருப்பது அல்லது வலிகளை தனக்குள்ளே புதைத்து கொள்வது தான் நீங்கள் சொல்லும் கௌரவமா? உங்கள் மனைவி வலிகளோடு மட்டும் தான் வாழ வேண்டுமா? உங்கள் மனைவியை நீங்கள் வேலைக்கு செல்ல அனுமதிப்பதால் உங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்வது மட்டுமில்லாமல் உங்கள் மனைவிக்கும் இது மிக்க மகிழ்ச்சியை கொடுக்கும். அவளுக்கு தேவையான சுதந்திரத்தை அவளுக்கு கொடுக்க முயற்சி செய்யுங்கள். சங்கிலியால் கட்டி போட்டது போல் அவள் வீட்டுக்குள்ளே அடைந்து இருக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்களுடன் வாழ வேண்டும் என்று பல கனவுகளுடன் இருக்கும் அவளுக்கு, வலிகளை கொடுக்காதீர்கள்.

♥உங்கள் மனைவி ஒன்றும் மெஷின் இல்லை.
உங்கள் மனைவி ஒன்றும் மெஷின் இல்லை.
உங்கள் குடும்பத்தின் வாரிசுகளை பெற்றெடுக்க மட்டுமே அவளை திருமணம் செய்தது போல் நடத்தாதீர்கள். அவள் அதுக்காக மட்டுமே இந்த பூமியில் பிறந்தது போல் நினைக்காதீர்கள். உங்களுடைய விருப்பத்திற்கு அவள் முக்கியத்துவம் தருவது போல் அவளுடைய விருப்பத்துக்கு நீங்களும் முக்கியத்துவம் கொடுங்கள். குடும்பத்தை பெருக்கும் மெசின் அல்ல அவள். அவள் இதற்காக மட்டும் தான் உங்களை திருமணம் செய்தாலா? எல்லா சூழ்நிலைகளிலும் அவளுடன் பக்கபலமாக நிற்பீர்கள், ஈடு இணையில்லாத நேசத்தை அவள் மீது காண்பித்து அவளுடன் கோர்த்த கையை எப்போதும் விட மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் மணம் செய்து உள்ளாள்.

♥ஈகோ பிரச்சனைகள்
நீங்களும் உங்கள் மனைவியும் வேலை செய்கிறீர்கள் உங்கள் மனைவி உங்களை விட சிறப்பாக செயலாற்றினால் அதை சரியான முறையில் எடுத்து கொள்ளுங்கள். ஈகோ என்ற பெயரில் அவள் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடாதீர்கள். உங்கள் துணை இருப்பதால் தான் அவளால் சாதிக்க முடிகிறது. அவள் வெற்றி என்பது உங்கள் வெற்றியும் தான் என புரிந்து கொண்டாடுங்கள்.

♥மேற்கூறிய இந்த விஷயத்தை கவனித்து கொண்டாலே குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை தவிர்த்து கொள்ளலாம்.

♥காதல்
அன்பை விதைத்து அன்பை அறுவடை செய்யும் இந்த அழகான திருமண பந்தத்தில், பெண்கள் அடையும் கஷ்டங்களையும் துயரங்களையும் நினைத்தால் உள்ளம் வலிக்கிறது. திருமண வாக்குறுதி கொடுத்து கோர்க்கும் அவள் கரங்களை கடைசி வரை விடாதீர்கள். உங்களின் அன்பில் அவளை திளைக்க செய்யுங்கள். அவள் உங்களின் மனைவி தான் ஆனால் அவளுக்கும் சுய விருப்பங்கள் மற்றும் உணர்ச்சிகள் இருக்கும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மீது அவள் கொண்ட நம்பிக்கைக்கும் காதலுக்கும் எப்போதும் உண்மையாக இருங்கள். வாழ்க்கையில் வசந்தங்கள் வளரட்டும்.

திருமண வாழ்க்கை போர் அடிக்காமல் இருக்க தம்பதிகள் தினமும் செய்ய வேண்டியவைகள்!


திருமண வாழ்க்கை போர் அடிக்காமல் இருக்க தம்பதிகள் தினமும் செய்ய வேண்டியவைகள்!

திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமானால் தம்பதிகள் சில மணிநேரங்களை ஒன்றாக கழிக்க வேண்டும். ஆனால், அது மட்டும் போதுமா? இல்லை, தம்பதிகள் தங்களுக்கிடையில் என்றென்றும் நல்ல உறவை பராமரிக்க பல்வேறு செயல்களைச் செய்ய வேண்டும். இதில் ஒன்றாக நேரத்தைக் கழிப்பது, திருமண பந்தத்தில் மிக முக்கியமான விஷயமாகும். இதன் மூலம் இருவரும், மற்றவரின் விருப்பு, வெறுப்புகளை நன்றாக புரிந்து கொள்ளவும், பிரச்சனைகளை ஏற்படுத்தும் விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் முடியும்.

ஒரு உறவை உருவாக்கி வளர்ப்பதென்பது தொடர்ச்சியான விஷயமாகும். இதற்காக தம்பதிகள் தினமும் செய்ய வேண்டிய சில வேலைகள் உள்ளன. இரு வேறுபட்ட உலகத்தைச் சேர்ந்த, இரு மனிதர்கள் என்று புரிந்து கொண்ட போதும், இதற்கு காதலும் அடிப்படையாக இருக்கும். இந்த உறவை சுமூகமாக பராமரிப்பதற்கு மிகப்பெரிய அளவிலான மாற்றங்களை ஒவ்வொருவரும் செய்ய வேண்டியிருக்கும்.

இந்த விஷயத்தை நடைமுறையில் கொண்டு வர விரும்பினால், தம்பதிகள் தினமும் சில விஷயங்களை செய்ய வேண்டும். நீங்கள் விரும்பிய ஒரு விஷயத்தை அவர்கள் கொண்டிருந்ததால், அந்த மனிதரின் மேல் காதல் கொண்டிருப்பீர்கள். எனவே நீங்களிருவரும் சேர்ந்து ஒரு செயலைச் செய்வதென்பது ஒன்றும் கடினமாக செயலாக இராது.

அதற்கு தினமும் சில விஷயங்களை தம்பதிகள் பின்பற்றி வந்தால், உங்களுடைய உறவை நன்றாக உருவாக்க முடியும். இங்கு தரப்பட்டுள்ள ஐடியாக்களை முயற்சி செய்து பாருங்கள். அவற்றில் சில உங்களுக்கும் கூட பயனுள்ளதாக இருக்கலாம்.

*முத்தம் :*

நீங்கள் ஒன்றாக இருக்கும் நாளில், ஒரு நாள் கூட முத்தம் கொடுத்துக் கொள்ள மறவாதீர்கள். உங்களுடைய துணையின் மேல் நீங்கள் கொண்டுள்ள காதலை அழகாக வெளிப்படுத்த உதவும் அற்புதமான வழிமுறை இது தான்.

*ஒன்றாக நேரத்தை கழியுங்கள் :*

உறவு வளர்ந்து வரும் நேரத்தில், உங்களிடையே சில ஒற்றுமைகள் இருப்பதை உணர்வீர்கள். தங்களிடையே புதிய விஷயங்களை வளர்க்க விரும்பும் தம்பதிகள், மிகவும் யோசித்து அறிவுப்பூர்வமாக முடிவெடுக்க வேண்டியிருக்கும். பொதுவாக ஈர்ப்பூட்டும் விஷயங்களை நீங்கள் கவனித்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் விரும்பும் விஷயங்களும் கூட அவரிடம்/அவளிடம் இருப்பதை அறிந்து ஆச்சரியப்படுவீர்கள். உறவுகளை நீண்ட நாட்களுக்கு நிலைநாட்ட விரும்பும் சிறந்த வழிமுறைகளில் இதுவும் ஒன்றாகும்.

*மாற்றங்கள் :*

ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் இரு நபர்கள் போதுமான அளவிற்கு பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்ள முடியும். சூழலுக்கு ஏற்றபடி உங்களை மாற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டியது நீங்கள் இருவரும் செய்ய வேண்டிய விஷயமாகும். அதற்கு மன்னிக்கும் மனவோட்டத்தை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் ஒருவரையொருவர் அடிக்கடி குறை சொல்லிக் கொள்வதையும் நிறுத்தி விட வேண்டும். ஒன்றாக வாழும் தம்பதியினர் தினமும் செய்ய வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.

*திறமையாக தொடர்பு கொள்ளுதல் :*

நாட்கள் நகர்ந்து செல்லும் போது, உங்களவரை விரும்புவதாக சொல்லி நெடுநாட்கள் ஆகியிருப்பதை உணர்வீர்கள். இந்த விஷயங்களை நீங்கள் உரக்கச் சொல்ல வேண்டும்; அவர்கள் விரும்பப்படுவதை இந்த செயல் அறியச் செய்யும். இந்த விஷயம் அனைத்து விதமான உணர்வுகளுக்குள்ளும் செல்லும் ஆற்றலை பெற்றுள்ளது. உங்களுடைய உணர்வுகளை எந்தவித மாற்றமும் இல்லாமல், துணைவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த வழிமுறையை தினமும் செய்தால் உறவை காதலுடன் வளர்க்க முடியும்.

*உடல் ரீதியான தொடர்பு :*

உடலின் ஆசைகளைத் தொட வேண்டும். அது மூளையை தூண்டி விடும்! இது தான் மனித இனத்தின் மிகவும் அடிப்படையான குணமாகும். அலுவலகத்திலிருந்து வரும் உங்கள் கணவரை/துணைவியை, வீட்டுக்குள் நுழைந்தவுடன் கட்டிப் பிடித்துக் கொள்ளுங்கள்; வேறு சில நேரங்களில் இந்த விஷயம் இதே வகையில் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். இதன் மூலம் தம்பதிகள் தங்கள் உறவுகளை உறுதியாக வளர்க்க முடியும்

புதன், 15 ஆகஸ்ட், 2018

கத்தரிக்காயின் நாம் அறியாத பயன்கள் பற்றி காணலாம் வாங்க

கத்தரிக்காயின் நாம் அறியாத பயன்கள் பற்றி காணலாம் வாங்க


1.100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவிதம் கலோரிகள், 9 சதவிதம் நார்ச்சத்து உள்ளது.
2.அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் திரவப் பொருள் உள்ளது. ஆந்தோசயான் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய் எதிர்ப்புப் பொருளாகும்.

3.கொம்ப்ளக்ஸ் வகையான விட்டமின்களான பான்டோதெனிக் அசிட், பைரிடமாக்சின், தயமின் மற்றும் நியாசின் ஆகிய உயிர்ச்சத்துகளும் கத்தரிக்காயில் அடங்கியுள்ளன. மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன.

4.கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் உடற்செயலின் மாற்றங்களுக்கு மிகவும் உகந்தவை.

தலைமுடி உதிராமல் இருக்கணுமா!!அப்ப இதை ட்ரை பண்ணுங்க!

தலைமுடி உதிராமல் இருக்கணுமா!!அப்ப இதை ட்ரை பண்ணுங்க!

  • பல பெண்களின் பிரச்சினைகளில் ஒன்றாக தலைமுடி உதிர்வு காணப்படுகின்றது. இதற்கு காரணங்கள் பல வகையுள்ளது. எனவே தலை முடி உதிர்விற்கான காரணங்ளை எடுத்து நோக்கலாம்.
  • கால ஓட்டத்தின் போக்கில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள வேலைப்பழு தலை முடி உதிர்வுக்கான காரணங்களில் ஒன்றாக திகழ்கின்றது.
  • கடைகளில் விற்பனையாகும் இரசாயண சம்போக்கள் தலை முடி உதிர்வில் அதிக தாக்கம் செலுத்துகின்றன.
  • தலை முடிக்கு வெப்பம் கொடுப்பது முடி உதிர்வில் அதிக தாக்கம் செலுத்தும். சாதாரண வெப்ப காலத்திலேயே தலை முடி உதிர்வதை அவதானிக்க முடியும். அப்படிஇருக்கையில் அயன் போடுவதாக வெப்பத்தை முடிக்கு கொடுக்கும் பொழுது மண்டை ஒட்டில் படும் வெப்பம் காரணமாக முடி உதிர்கின்றது.

  • வாரம் இரு முறையாவது தலை குழிக்க வேண்டும்
  • வெப்ப காலங்களில் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்
  • எமது உடல் சூட்டுத்தன்மை உடையதாக அறியும் பட்சத்தில் திகமும் அதிகளவு பழங்களையும் நீத்துபூசனி மற்றும் வெள்ளரிக்காய் பொன்ற குளிர்மையான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
credits:google
  • இரவு வேளைகளில் தலைமுடியினை அவிழ்த்துவிடாமல் மடித்து மண்டை ஓட்டிற்கு நோகாதபடி கட்டுவதன் மூலம் தலை முடி உதிராது. இவ்வாறு கட்டும் பொழுது மண்டை ஓட்டில் இரத்த ஓட்டம் பாதிக்காத படியும் மண்டை ஓடு நோகாதபடியும் கட்டிக்கொள்ள வேண்டும்.
  • பேன், பொடுகு தொல்லைகள் இருப்பின் விரைவில் அவற்றை இல்லாமல் செய்ய வேண்டும். பேன் பொடுகு அதிகமாகும் பொழுது தலைமுடி உதிர ஆரம்பிக்கும்.
  • எனவே வாழ்க்கையில் நமது தலைமுடிக்கு விபரீதம் ஏற்படும் நிலைகளைத் தவிர்த்து தலைமுடியைப் பாதுகாக்க வேண்டும்.

பிரசவித்த பெண்களுக்கு பாட்டி வைத்தியம்..


பிரசவித்த பெண்களுக்கு பாட்டி வைத்தியம்..

♥1.   இஞ்சிச்சுரசம் 30மிலியுடன்30மிலி தேன் கலந்து ஒருமுறை கொடுக்க பிரசவ அழுக்குகள் வெளியாகும்.சன்னி நிலை வராது.கருப்பை சுருங்கும். பால் சுரக்கும். குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

♥2.ஓமம்100,பெருங்காயம்25,அரத்தை10,சுக்கு50,மிளகு10 கிராம் அளவில் பொடித்து,பனைவெல்லம்200கிராம்,தேன், நெய் சேர்த்துப் பிசைந்து,5கிராம் தினம்2வேளை 2மாதம் சுவைத்துச் சாப்பிட்டுவர மேற்கூறிய பலன் கிட்டும்

♥3.   தண்ணீர்விட்டான் கிழங்கு நெய் 1தேகரண்டி தினம்3வேளை கொடுக்க தாய்பால் சுரப்பு அதிகரிக்கும்

♥4.   அமுக்கரா இளகம் 5கிராம் தினமிருவேளை 50மிலி பாலில்கொள்ள பால்சுரப்பு அதிகரிக்கும்

♥5.   அம்மான்பச்சரிசி சமூலத்தை எலுமிச்சையளவரைத்து,200மிலி பாலில் கொள்ள தாய்ப்பால் அதிகம் சுரக்கும்

♥6.   5கிராம் எள்ளை காலையில் சாப்பிட்டுவர பால்சுரப்பு அதிகரிக்கும்

♥7.   கல்யாணமுருங்கையிலையை தே.எண்ணையில் சமைத்துச் சாப்பிட தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்                                                                                              ♥8.   5கிராம் வெந்தயத்தை வேகவைத்து கடைந்து1தேகரணடி தேன் கலந்து தினம்3 வேளை சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும்

♥9.   பப்பாளிக்காயை தோல்நீக்கி சமைத்துச் சாப்பிட தாய்ப்பால் பெருகும்.

♥10.  கோரைக்கிழங்கையரைத்து  மார்பில்பூச  பால் சுரக்கும்

♥11.  கீழாநெல்லி சமூலத்தை பாலிலரைத்துக் கொடுக்க பால் சுரப்பு அதிகரிக்கும்

♥12.  தண்ணீர்விட்டான்கிழங்குச்சூரணம் 5கிராம் பசுநெய்யில் கலந்து தினமிருவேளை உண்டுவர இளைத்த உடல் பருக்கும்.பால் சுரப்பு அதிகரிக்கும்.நீர்க்கட்டு,நீர்க்கடுப்பு குணம் ஆகும்

♥13.  முருங்கைகீரையில் தேங்காய்பூ போட்டு அதிகம் சாப்பிட்டுவர பால் சுரப்பு அதிகரிக்கும்

♥14.  இலுப்பை இலைகளை மார்பில் வைத்துக்கட்ட பால்சுரப்பு மிகும்

♥15.  1படி நீரில் 1பிடி காட்டாமணக்கு இலையை காய்ச்சி,ஒத்தடம் கொடுத்து, வெந்த இலைகளை மார்பில் கட்ட பால் சுரக்கும்.

♥16.  தாளிக்கீரை இலைகளை கொதிநீரிலிட்டு சற்று வெந்ததும் எடுத்து பிசைந்து எலுமிச்சையளவு காலை மாலை உண்டுவர பால்சுரப்பு மிகும்

♥17.  அரசவேர் கொழுந்து அல்லது விழுது கொழுந்து பசும்பாலிலரைத்துக் கரைத்து கொடுக்க பால் சுரக்கும்

♥18.  முத்தெருக்கன்செவி மூலத்தை பாலிலரைத்து புன்னைக்காயளவு 200மிலி பசும்பாலில் கொள்ள ஸ்தனம் பூரிக்கும்

♥19.  தரா இலை 5கிராம் ஓரிரு மிளகுடன் அரைத்துக்கொள்ள பால்சுரப்பு மிகும்

♥20.  நத்தைச்சூரி வேர்10கிராம் பசும்பாலிலரைத்து,கரைத்து,வடித்துக் குடிக்க தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்

♥21.  பால்பெருக்கி இலையை அரைத்து துவையல் செய்து சாப்பிட பால் பெருகும். மலச்சிக்கல் தீரும்.                                                                                                        ♥22.  சங்கிலை,வேப்பிலை சமன் அரைத்து நெல்லிக்காயளவு(20கிராம்)காய்ச்சி ஆறிய நீருடன் பிரசவ நாளிலிருந்து கொடுத்துவர கர்பாயாச அழுக்குகள் வெளியேறி சன்னி,இழுப்பு வராமல் தடுக்கும்.                                                       
♥23.  தணணீர்விட்டான் கிழங்குசாறு200மிலி,சர்க்கரை1தேகரண்டி கலந்து காலையில் பருகிவர தாய்ப்பால் சுரக்கும்

♥24.  ஆமணக்கிலையில் நெய் தடவி,அனலில் லேசாக வதக்கி இளம்சூட்டில் மார்பில் கட்ட தாய்ப்பாலதிகம் சுரக்கும்

♥25.  ஆமணக்கிலையை அரிந்து,து.பருப்பு சேர்த்து கீரை செய்து சாப்பிட தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்                                                                                   
♥26.  நொச்சிஇலையை கொதிக்க வைத்த நீரில் குளிக்க பிரசவித்தவர்களின் அசதி குறையும்

♥27.  2 தேகரணடி அமுக்கராசூரணம் பனங்கற்கண்டு கலந்து பாலில் உட்கொள்ள பிரசவகாலத்தில் ஏற்படும் உடல்அசதி நீங்கும்

♥28.  திருநீற்றுபச்சை விதையை (சப்ஜாவிதை)200மிலி நீரில் ஊறவைத்துச் சாப்பிட பிரசவத்திற்குப்பின் ஏற்படும் களைப்பு நீங்கும்                                                                 
♥29.  ஆமணக்கு எண்ணையை,தூய,மெல்லிய பருத்தி துணியில் ஊற வைத்துப்பற்றிட மார்புக்காம்புகளிலேற்படும் வெடிப்புகள்,புண்கள் குணம் ஆகும்

♥30.  கானாவாழைஇலையை அரைத்துக் கட்ட படுக்கைப்புண் ,மார்புக்காம்பைச் சுற்றி வரும் புண்கள் ஆறும்

♥31.  நொச்சிஇலையை கொதிக்கவைத்த நீரில் குளிக்க பிரசவித்தவர்களின் அசதி குறையும்

♥32.  தினம் மூன்று வேளை பசும்பாலில் தேனும் நான்கு பூண்டுப் பற்களும் சேர்த்துப் பருக தாய்பால் நன்கு சுரக்கும்.

♥33.  கல்யாண முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சமைத்துசாப்பிட்டு வர தாய்ப்பால் அதிகரிக்கும்.

♥34.  அரிசி அல்லது ஜவ்வரிசிக் கஞ்சியுடன் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும்

♥35.  ஆலம் விழுதின் துளிரையும் விதையையும் அரைத்து 5 கிராம்காலையில் மட்டும் பாலில்கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.

♥36.  அமுக்கிராங்கிழங்கு இலை கசாயம் காய்ச்சி பருக தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

♥37.  கோவை இலையை வெள்ளைப்பூண்டுடன் நெய்யில் வதக்கி காலையில் சாப்பிட்டு  வரத் தாய்ப்பால் பெருகும்.

♥38.  1 கிராம் அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரைகலந்து 2 முறை பாலுடன் குடித்து வரத் தாய்ப்பால் பெருகும்.

♥39.  வெற்றிலைகளை நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக் கட்ட தாய்ப்பால் சுரக்கும்.

♥40.  முருங்கை கீரையை பொரியல் செய்து சாப்பிட்டுவர தாய்ப்பால் அதிகரிக்கும்.

♥41.  தக்காளி இலைகளை காடியில் அரைத்து மார்பில் கட்டிவர தாய்ப்பால் பெருகும்.

♥42.  அருகம்புல்சாறுடன், தேன் கலந்து சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும்.

♥43.  அகத்தி இலையைச் சமைத்து உண்டு வரத்தாய்ப்பால் அதிகரிக்கும்.

♥44.  குழந்தைப் பிறப்பதற்கு முன்பும் பின்பும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வரத் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.

♥45.  சிறிதளவு கேழ்வரகு மாவு எள்ளு ஒன்றாக சேர்த்து இடித்து அடை செய்து தினம் 2 வேளை சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியமாக இருக்கும். தாய்ப்பால்சுரக்கும்.

♥46.  அம்மான் பச்சரிசி இலையை அரைத்துப் பாலில் கலந்து குடித்துவர தாய்ப்பால் அதிகரிக்கும்.

♥47.  இளம் பிஞ்சான நூல்கோலை சமைத்து உணவுடன் உண்ண தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.

♥48.  ஒரிதழ் தாமரை இலையை அரைத்து சிறிதளவு மோரில் கலந்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும்.

♥49.  அரைக்கீரை சமைத்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.

♥50.  சீரகத்தை வறுத்து பொடியாக்கி அதேஅளவு வெல்லம் சேர்த்து சாப்பிட்டுவர தாய்ப்பால்பெருகும்.

♥51.  தேன் 15பங்கு, அமுக்கராங்கிழங்கின் ரசம் 10பங்கு,மிளகுரசம் 15பங்கு, மணத்தக்காளி ரசம் 25பங்கு கலந்து சாப்பிட்டு வர தாய்ப்பால் தூய்மையடையும்.

♥52.  அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்ண தாய்ப்பால் சுரக்கும்

♥53.  நிலப்பூசணிச் சாறுடன் மல்லி, வெந்தயம், சீரகம் கலந்து சாப்பிட பால் அதிகமாக சுரக்கும்.

♥54. ஏலம்3பங்கு,திப்பிலி4பங்கு,அதிமதுரம்6பங்கு,ஆகியவற்றை எடுத்து இடித்து பொடி செய்து 12 பங்கு நாட்டுச்சர்க்கரை சேர்த்து சாப்பிட பால் அதிகமாக சுரக்கும்

♥55.  இஞ்சியின் மேல் தோல் நீக்கி உலர்த்திய தூள் 1 பங்கு சேர்த்து பாலுடன் கலந்து தினம் காலையில் உட்கொள்ள பால் அதிகமாக சுரக்கும்

♥56.  3 கிராம் குங்குமப் பூவை விழுதாக அரைத்து சாப்பிட, வயிற்றில் இருக்கும் அழுக்குகள் நீங்கும்.

♥57.  முல்லைப் பூவை அரைத்து அல்லது அப்படியே வைத்து மார்பில் கட்டி வர தாய்ப்பால் சுரப்பு குறையும்.

♥58.  ஆரைக்கீரையை சமைத்து உணவுடன் சாப்பிட தாய்பால் சுரப்பு நிற்கும்                   

♥59.   மல்லிகைப்பூ 20,மார்பில் வைத்துக் கட்ட பால் சுரப்பு நிற்கும்,மார்பக வீக்கம் குறையும்

♥60.  மல்லிகைபூக்களை அரைத்து மார்பில் பூச பால்சுரப்பு நிற்கும்

♥61.  அவலை வெந்நீரில் ஊற வைத்து,வெதுவெதுப்பாக மார்பில் கட்ட ,கட்டிய பால் வெளியாகும்

♥62.  ஆமணக்கிலையை,ஆமணக்கெண்ணையில் வதக்கிக்கட்ட கட்டியபால் வெளியாகும்

♥63.  பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

♥64.பச்சை உடம்பில் எடுத்தசுவாசகாசத்தின்குணம்;                    சுரங்காயும்.தலைவலிக்கும்.வியர்க்கும்,தாகிக்கும்,வயிறு பொருமி இரைந்து கழியும்.இளைப்பும்,  பெருமூச்சு மயக்கங்காணும் .5-6-9 அல்லது 18 ல் மரணம். இது தப்பினால் வியாதி தீரும் கழற்பருப்பும்,பனைவெல்லமும் அரைத்துக் கொடுக்க தீரும்.

♥1முருங்கைபட்டை,கழற்பருப்பு,பனைவெல்லம் வகைக்கு 5கிராம் அரைத்துக் கொடுக்க தீரும்.                                                               
♥ 2மல்லி,அதிமதுரம்,ஏலம்,கிராம்பு,கோஷ்டம்,செண்பகப்பூ,கோரோசனை, முத்தக்காசு,மிளகு,இருவேலி,முந்திரிப்பழம்,பேரீச்சம்பழம் சமனாய் எலுமிச்சைசாறில் அரைத்து,இலந்தை கொட்டைபோல் உருட்டி 10நாள் இளவெந்நீரில் பத்தியத்துடன் கொடுக்கவும்.

♥சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த பொருட்கள், தண்ணீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் எடுத்துக்கொண்டால் தாய்ப்பால் சுரப்பில் இழக்கும் கலோரியை ஈடுசெய்துவிடலாம்.

♥தாய்ப்பால் சுரக்க அதிக புரத சத்துள்ள, மிதமான மாவுசத்துள்ள உணவுப் பொருட்களை சாப்பிடவேண்டும்.

♥தானியங்கள்,முளைகட்டிய தானியங்கள், உலர்ந்த கொட்டைகள், பால், பால் வகைப் பொருட்கள்,மீன், ஆகியவற்றை உணவில் அதிக அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின்கள், தாதுப்பொருட்கள், அதிகமாகவுள்ள கேரட், பீட்ரூட், கோஸ் பச்சைக் காய்கறிகள் கீரை வகைகள், இவற்றில் ஒன்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

♥இரும்புச்சத்து வைட்டமின் அதிகமுள்ள உணவுப்பொருட்களான அவல் கோதுமை சோயாபீன்ஸ், சுண்டைக்காய், கொத்தமல்லி, பேரீச்சம் பழம், திராட்சை பழம், வெல்லம், கேழ்வரகு, சீரகம் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது குழந்தைக்கு தேவையான அளவு பால் கிடைக்கும்.

கைக் குழந்தைகளுக்கு வைத்தியம்...

கைக் குழந்தைகளுக்கு வைத்தியம்...

*குழந்தைகளை பத்து மாதம் சுமந்து பெற்றுக்கொள்வது பெரிய விஷய அல்ல. அந்த குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதற்குதான் மிகவும் கஷட்ப்பட வேண்டியதாகிவிடும்.*

குறிப்பாக குழந்தைகளுக்கு ஒரு வயசு ஆகும்வரை சொல்லவே வேண்டாம்... எதுக்கு அழுகிறது, பசிக்கிறதா அல்லது ஏதேனும் கடித்து விட்டதானு தெரியாம தாய்மார்கள் முழிக்க வேண்டியது தான்..

*ஐந்து மாதக் குழந்தை வயிறு வலியால் அழுதால்*

1. கடுக்காயை சந்தனம் மாதிரி உரசி குழந்தையோட வயித்துல பூசி விடவேண்டும்..

2. ஒரு வெத்தலையை விளக்குல காட்டி சூடுபடுத்தி, இளஞ்சூட்டுல குழந்தையோட தொப்புள்ல போடலாம்.. இரண்டு நிமிடங்களில் குழந்தையின் வயிற்று வலி நீங்கி குழந்தை சிரிக்கும்.

*சில குழந்தைகளுக்கு வாயில் மாவு மாதிரி வெள்ளை படிஞ்சிருக்கும்.*

அதை நீக்க, மாசிக்காயை சந்தனக்கல்ல உரசி, உரசிய விழுதை குழந்தையோட நாக்குல தடவினால் பிரச்னை சரியாகிடும்.

*சின்னக் குழந்தைகள் வாந்தி பண்ணினால்*.

வசம்பை சுட்டு பொடி செய்து ஒரு ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து, நாக்குல தடவினால் உடனே குணம் கிடைக்கும். கிராமங்களில் வசம்புக்கு *‘பிள்ளை வளர்ப்பான்’* என்றொரு பெயரே உண்டு.

*சூடு காரணமா குழந்தைக்கு மலம் தண்ணியா போகுதா கவலைப்பட வேண்டாம்.*

ஜாதிக்காயை கல்லில் உரைச்சு தாய்ப்பால்ல கலந்து குடுத்து பாருங்க, உடனே குணம் கிடைக்கும். மூன்று வேளையும் இப்படிக் கொடுத்து வந்தால் முழுவதும் குணமாகிடும்.

*ஆனால், ஜாக்கிரதை!*

ஜாதிக்காயை ரெண்டு உரைக்கு மேல உரைக்கக் கூடாது. ஜாஸ்தியாகிடுச்சினா குழந்தைக்கு மயக்கம் வரவும் வாய்ப்பு இருக்கு.

*கைக்குழந்தைகளுக்கு மாந்தம், உப்புசம் வராமல் தடுக்கும் உரை மருந்து*

ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு, கடுக்காய், சுக்கு எல்லாம் தலா ஒண்ணு எடுத்து வேகவைத்து, அதை எடுத்து வெயிலில் சுக்கா காய வைக்கவேண்டும். குழந்தையை தலைக்கு குளிப்பாட்டுகிறபோது இந்த மருந்துப் பொருட்களை சுத்தமான சந்தனக்கல்ல ஒரு உரை (அதிகம் கூடாது) உரைச்சு, ரெண்டு டேபிள்ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து புகட்டணும்.

*ஆறு மாசக் குழந்தைகளுக்கு பத்து நாளுக்கு ஒருமுறை*

ஒரு வெற்றிலை, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை ஓமம் எல்லாத்தையும் அரைச்சு, வெந்நீரில் கலந்து, ஒரு பாலாடை அளவு குடிக்க வைத்தால் குழந்தையின் வயிற்றில் வாயு சேராமல் இருக்கும்.

*பிறந்த குழந்தைகளுக்கு தலையில நல்லெண்ணெய் தேய்க்கக் கூடாது!*

தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி தேய்க்கணும். குழந்தையின் தலையிலும், உடம்பிலும் தேய்க்கத் தேவையான அளவு சுத்தமான தேங்காய் எண்ணெயைக் காய வைத்து, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப் பால் விட்டு அது கொதிச்சு அடங்கினதும் ஒரு டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடியைப் போட்டு இறக்குங்க.

குழந்தைக்கு ஒரு வயசு வரை இந்த எண்ணெயைத்தான் தேய்க்கணும். குளிக்க வைக்கும் போது எண்ணெய் நல்லா போற மாதிரி பாசிப்பயறு மாவு தேய்த்து குளிப்பாட்டணும். இப்படி செய்து வந்தால் குழந்தைக்கு உடம்புல சொறி, சிரங்குனு எதுவும் வராது, மேனி பட்டு போல இருக்கும்.


*மார்கழி பனியில் கைக்குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடிக்கும். அப்படி சளித் தொல்லையால குழந்தை அவதிப்பட்டா*

 கால் டீஸ்பூன் விளக்கெண்ணெய்யில், 2 பல் பூண்டைப் போட்டுக் காய்ச்சி, கசக்கி, அந்தச் சாறை தாய்ப்பால்ல கலந்து, ரெண்டு டேபிள்ஸ்பூன் கொடுத்தா... சளி அனைத்தும் மலத்தில் வெளியாகிவிடும்.

*குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், அடிக்கடி ஜலதோஷமும் சளித் தொந்தரவும் ஏற்படுகிறது.*

*வீட்டு வைத்தியத்தில் இதற்கு வழி இருக்கிறதா?*

அரை இன்ச் அளவுள்ள சுக்கை நன்றாக நசுக்கி, அதை ஒரு கப் தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். அது கால் கப் ஆக வரும் வரை கொதிக்க விடவும். பிறகு அந்தத் தண்ணீரை வடிகட்டி, சம அளவு பால் கலந்து, அரை டீஸ்பூன் வெள்ளை கற்கண்டு பவுடர் கலந்து கொடுக்கலாம்.

வாரம் 2 அல்லது 3 நாள் என ஒரு மாதம் குடித்தால் சளி, ஜலதோஷம், தலைவலி என எந்தப் பிரச்னையும் நெருங்காது.

சிலர் கசப்பான பொருட்களை நாக்கில் படாமல் அப்படியே முழுங்குவார்கள். இனிப்பான பொருட்களை மட்டும் ருசித்துச் சாப்பிடுவார்கள். இது தவறான பழக்கம். எல்லா ருசியும் நாக்கில் படவேண்டும். அப்படி இருந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும். அறுசுவை களையும் குறைவில்லாமல் சரியான விகிதத்தில் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு ஏற்படாது.

குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க இயற்கை வைத்தியம் பெரிதும் பயன்படுகிறது. குழந்தைகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் எளிதில் இருமல் தாக்கும். இருமல், சளி வந்ததும் அழையாத விருந்தாளியாக வந்து விடுவது மூச்சு பிரச்சனை. இவை குழந்தைகளின் உடல்நலத்தை அடிக்கடி பாதிக்கும். இந்த வகையும் பொதுவான நோய்தொற்றுகளில் ஒன்று தான்.

*குழந்தைகளை தாக்கும் இருமல் பிரச்சனையிலிருந்து விடுபட*

 ஓம
விடுபட ஓமவல்லி இலையை நன்கு கழுவி கொதிக்கும் சுடு தண்ணீரில் போட்டு ஒரு கப் வந்ததும் குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கவும் குடிப்பதற்கு முன்னர் ஒரு சில நிமிடங்கள் ஓய்வு எடுக்க செய்ய வேண்டும்.

இந்த மூலிகை தண்ணீர் குடித்து வந்தால் இருமல், சளி பிரச்னை வராமல் தடுக்கலாம்.


*டயாபர் அதிகம் உபயோகிப்பதனால் குழந்தைகளுக்கு அரிப்பு, அலர்ஜி போன்றவை ஏற்படுகிறது.*

 இந்த அலர்ஜியை தடுக்க குழந்தைகளை குளிக்க வைப்பதற்கு வைத்துள்ள தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று சொட்டு வெள்ளை வினிகர் கலந்து குளிக்க வைக்கலாம்.

*கட்டைவிரலை உறிஞ்சும் பழக்கம் கொண்ட குழந்தைகளுக்கு மனதில் ஒரு வித பயம், தனிமையில் இருக்கிறோம் என்கின்ற செயல்பாடுகளின் காரணமாகவே அவர்கள் கட்டை விரலை உறிஞ்சுகின்றனர். அதிகமான இளம் குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுவதால் குழந்தைகளுக்கு பசி எண்ணமே இருக்காது.*

இருமல் ஏன்?

டயாபர் ஒவ்வாமை குழந்தைகளை தாக்கும் இருமல் பிரச்சனையிலிருந்து விடுபட ஓமவல்லி இலையை நன்கு கழுவி கொதிக்கும் சுடு தண்ணீரில் போட்டு ஒரு கப் வந்ததும் குழந்தைகளுக்கு குடிக்க கொடுக்கவும் குடிப்பதற்கு முன்னர் ஒரு சில நிமிடங்கள் ஓய்வு எடுக்க செய்ய வேண்டும்.

இந்த மூலிகை தண்ணீர் குடித்து வந்தால் இருமல், சளி பிரச்னை வராமல் தடுக்கலாம். மேலும் இருமல் பிரச்னைக்கு பெருந்துத்தி பூக்களைக்கொண்டு குளிர்பானம் தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குளிர்பானத்தை வடிகட்டி ஒரு சிறிய துணியில் ஈரமாக்கி குழந்தையின் தொண்டை, மூச்சு குழாய், நுரையீரல் போன்ற பகுதிகளில் தேய்க்க இருமல் குணமாகும்.

*பொதுவாக பெண்கள் திருமணமாகி கருத்தரித்து குழந்தை பெற்ற பின் அக்குழந்தையை பாதுகாப்போடு வளர்ப்பதில் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர்.*

வீட்டில் பெரியவர்கள் பாட்டி, தாத்தா போன்ற அனுபவசாலிகள் இருந்தால் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு கவலை இல்லை.

அப்படி பெரியவர்கள் இல்லாத வீடுகளில் குழந்தைகளை வளர்ப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. குழந்தைகள் காரணமே இல்லாமல் திடீரென பெரும் அலறலுடன் அழும். இதற்கு பல காரணங்கள் உள்ளன.

சாதாரணமாக ஏதேனும் பிரச்னை என்றால் தான் குழந்தை அழும். சிறிய குழந்தைகளுக்கு பசி ஏற்பட்டால் அழும். மேலும் புதுவிதமான பிடிக்காத உணவை கொடுத்தாலும் அழும். அந்நேரங்களில் தாய்ப்பால் கொடுப்பது நல்லது. பசி இல்லாவிட்டாலும் உறிஞ்சுவது அக்குழந்தைக்கு ஆறுதல் அளிக்கும். சில சமயம் பெற்றோர் கண்ணில் படாத நேரங்களிலும் குழந்தைகள் அழும்.

அப்போது குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சினால் அழுகையை நிறுத்தி விடும். இறுக்கும் துணிகள், மிகவும் உஷ்ணமாக்கும், மிகவும் குளிர்ச்சியான துணிகள் அணிவதால் ஏற்படும் உணர்வால் அழும். மேலும் பல் முளைத்தல் போன்ற அசெளகரியங்கள் ஏற்படும் போதெல்லாம் கூட அழலாம்.

இப்பிரச்னையை கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.கால்களை உதைத்து உதைத்து உரக்க அழுதால் குழந்தைக்கு மலப்பையில் ஏற்பட்ட பிடிப்பினால் வயிற்று வலி உள்ளது என்று அர்த்தம்.

சாதாரணமாக காய்ச்சல் உள்ள குழந்தையின் அழுகை சத்தம் குறைவாக இருக்கும். அரற்றும். வலியின் காரணம் தெரிந்தால் சரி செய்து குழந்தையை தேற்ற வேண்டும். இல்லையென்றால் மருத்துவரை அணுக வேண்டும். கால்களை உதைத்து அழும்போது அடிவயிற்று வலி இருக்கிறது என்று அர்த்தம். இதற்கு நேராக மேல் நோக்கி சில நொடிகள் பிடிப்பது பிரச்னையை தீர்க்கும். சிவந்த, பிசுபிசுப்பான கண்களாக இருந்தால் கண் நோய் ஏற்பட்டதாக கருதலாம்.

இதற்கு கண்களை வெந்நீரால் சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகள் எப்போதாவது மலம் கழிக்கும். கெட்டியாக, சிரமப்பட்டு போனால் அதற்கு மலச்சிக்கல் நோய் தொற்றியுள்ளது என்பதை உணர வேண்டும். இதற்கு பாலூட்டுவதும், ஆகாரமும் குறைவாக உள்ளதா? என்பதை சரி பார்க்க வேண்டும். கூடுதல் திரவ ஆகாரங்கள், பழச்சாறு கொடுக்கலாம்.

இளகிய, நீராக மலம் போனால் சீத பேதி ஏற்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம். இதற்கு நிறைய திரவ பதார்த்தங்களை கொடுக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ். மற்றும் தொடர்ந்து வழக்கமான ஆகாரம் கொடுக்க வேண்டும். தொடைகள் மற்றும் பின்புறம் சிவந்திருந்தாலும் நேப்பி ரேஷ் வந்துள்ளதை அறியலாம். இதற்கு நேப்பியை அடிக்கடி மாற்ற வேண்டும். குழந்தையை சுத்தமாக, உலர்வாக வைத்திருப்பது அவசியமாகும்.

*பின்புறத்திற்கு நல்ல காற்றோட்டம் தேவையாகும்.*

*தலையில் மஞ்சள் செதில்கள் உருவாகி பொடுகால் குழந்தைகள் அழலாம்.*

 இதற்கு ஒரு வாரத்திற்கு தினமும் குழந்தையின் தலைமுடிக்கு சிகைக்காய் அல்லது அரப்பு போட்டு அலசினால் பொடுகு குணமாகும்.

இவைகள் மூலம் குழந்தைகள் என்ன காரணத்திற்காக அழுகிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்ற வைத்தியம் செய்வது குழந்தைகள் அழுகையை நிறுத்த வழி செய்யும்.

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம்.


பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும்.

சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி ஊற்றினால் வாந்தி சட்டென்று நின்றுவிடும். நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும்போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துக் கொள்ளவும். குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.

தினமும் இரவில் விளகேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்!

குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். ஆசனவாயில் வெற்றிலைக் காம்போ சீவிய மெல்லிய சோப் துண்டோ வைத்தாலே போய்விடும்.

பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும் கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம். ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது, இருந்தாலும் அகன்று விடும்.

குழந்தைகளுக்கு பேதிக்குக் கொடுப்பது எண்ணெய் தேய்த்து ஊற்றுவது, காதில் மூக்கில் எண்ணெய் விடுவது இதை அறவே தவிர்த்து விடவும்.

குழந்தைக்கு சளி பிடித்து இருந்தால் தேங்காய் எண்ணெயை சுடவைத்து, பூங்கற்பூரம் போட்டு உருக்கி, ஆற வைத்துத் தடவினால் போதும், சளி இளகிக் கரைந்து விடும்.தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும்

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

சுதந்திரம்: ஏன் நள்ளிரவில் வாங்கினோம் தெரியுமா?




சுதந்திரம்: ஏன் நள்ளிரவில் வாங்கினோம் தெரியுமா?

ஆங்கில அரசு 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுப்பதாகச் சட்டம் இயற்றியது.

நம்மவர்கள் அந்த ஆகஸ்டு 15-ம் நாள் அஷ்டமி தினம் என்றும், அன்று நாடு சுதந்திரம் பெற்றால் நாடு நலம் பெறுமா எனவும் ஐயப்பாடு கொண்டனர்.

17-ம் தேதி வேண்டுமானால் சுதந்திரம் பெறுவோம்; இவ்வளவு நாட்கள் பொறுத்தோம் இன்னும் இரண்டு நாள்கள் பொறுக்க முடியாதா என அங்கலாய்த்தனர்.

ஐவஹர்லால் நேருவிடம் இது பற்றி முறையிட்டனர். அவருக்கு அஷ்டமி-நவமி இவற்றில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் மற்றவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆங்கில அரசை அணுகினார்.

சட்டம் இயற்றியாகி விட்டது. இனி மாற்ற முடியாது என்று ஆங்கில அரசு மறுத்து விட்டது.

நம்மவர்கள் தீவிரமாக யோசித்தனர்.

ஆங்கிலேயர்களுக்கு புதிய நாள் அதாவது மறுநாள் என்பது நள்ளிரவு 12 மணிக்கே தொடங்கி விடுகிறது. ஆனால் நமக்கோ விடியற்காலை ஐந்து மணிக்குத் தான் தொடங்குகிறது.

எனவே நள்ளிரவில் சுதந்திரம் வாங்கினால் ஆங்கில அரசுக்கு அது 15-ம் தேதியாகவும் நம்மவர்களுக்கு முக்கிய நாளாகவும் இருப்பதால் அஷ்டமி-நவமி பிரச்னை இல்லாது போகும் என்று நினைத்தனர்.

இதனால் தான் சுதந்திரத்தை பகலில் பெறாமல் நள்ளிரவில் பெற்றோம்.

கிட்னியை காவு வாங்கும் AC அறைகள் !

#கிட்னியை காவு வாங்கும் AC அறைகள் !

இன்று நம்மில் பலரும்
கதவு ஜன்னல் எல்லாவற்றையும் அடைத்துவிட்டு AC போட்டு தூங்குகிறார்கள்.

பூட்டிய அறைக்குள் ஒருவர் 4 மணி நேரம் தூங்கினாலே
அந்த அறையிலுள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து விடும்.

பொதுவாக காற்றில் 21 சதவீதம் ஆக்சிஜன் உள்ளது.
இந்த அளவு பூட்டிய அறைக்குள் ஒருவர் நான்கு மணி நேரம் தொடர்ந்து உறங்கும்போது
10 சதவீதத்திற்கும் கீழே குறைகிறது.
அப்போது #நுரையீரலால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை சரியாக வைக்க முடியாத போது,
உடலில் உயிர் காப்பாற்றப்பட ஆக்சிஜன் தேவை அதிகரிக்க அதிகரிக்க
#சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது.

அது நம் உடலிலுள்ள தண்ணீரில் உள்ள ஆக்சிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.
தண்ணீரில் இரு மடங்கு ஆக்சிஜனும் ஒரு பங்கு நைட்ரஜனும் இருக்கிறது.

இந்த நீரில் இருந்து உடலுக்கு தேவையான ஆக்சிஜனை சிறுநீரகம் பிரித்துக் கொடுக்கிறது.
அதனால்தான் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்று அழைக்கிறார்கள்.

சிறுநீரகம் இந்த வேலையை செய்யத்தொடங்கியவுடன்
அதுவரை அது செய்து கொண்டிருந்த வேலையான ரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.

நமது உடலில் உள்ள தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவுநீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறது.

மீண்டும் புதிய ஆக்சிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால்
தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.
இதனால் சிறுநீரகம் அதிக வேலைப்பளுவுடன் தள்ளாடுகிறது.

இதனால் சிறுநீரகத்தில் அழுக்கு சேர்வதுடன் ரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அசுத்தங்கள் அதிகரிக்கின்றன.
மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகிறது.

சிறுநீரகத்திலும் இது படிகிறது. ரத்தத்திலும் இந்த அமிலப் படிவங்களால் தடிமன் அதிகரித்து ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
மூட்டு வலி தோன்றுகிறது.

ஏசி அறையில் இயற்கை காற்றோட்டம் இல்லாமல் தூங்கும் போது
இத்தனை உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றன.

இதனை நமது பழந்தமிழர் மருத்துவத்தில் #காற்றுத் தீட்டு என்று குறிப்பிட்டனர்!!

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

தனிமையிலும் பெண்கள் இனிமை காணலாம்..


தனிமையிலும் பெண்கள் இனிமை காணலாம்..

வீ ட்டோடு மாப்பிள்ளை என்ற கலாசாரம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்றே சொல்லவேண்டும். அதுபோல் பெண்ணுக்கு, பக்கத்து ஊரிலே மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்துகொடுத்து பக்கத்திலே வைத்துக்கொள்ளும் வழக்கமும் குறைந்துகொண்டிருக்கிறது. பெண்களும் திருமணமாகி கணவரோடு எங்கு வேண்டு மானாலும் பறக்கவும் தயாராக இருக்கிறார்கள். ஆனாலும் திருமணமாகி நாடு விட்டு நாடு, மாநிலம் விட்டு மாநிலம் செல்லும்போது, கணவர் அருகிலே இருந்தாலும் பெண்களை தனிமை சில நேரங்களில் வாட்டத்தான் செய்கிறது. புதிய மனிதர்கள், புதிய மொழி, புதிய கலாசாரம் போன்றவைகள் எல்லாம் சேர்த்து அவர்களை தவிக்கவைத்து, தனிமைப்படுத்துகிறது.
இது ெதாடர்பான ஆய்வறிக்கை ஒன்று ‘இந்தியாவில் 68 சதவீத நகர்ப்புற பெண்களும், 93 சதவீத கிராமப்புற பெண்களும் திருமணத்திற்கு பிறகு புதிய இடங் களுக்கு செல்கிறார்கள். அவர்கள் தனிமை உணர்வை அனுபவிக்கவே செய்கிறார்கள்’ என்கிறது.
வினிதாவுக்கு திருமணம் நடந்தது. கூட்டுக்குடும்பத்தைவிட்டு மும்பைக்கு சென்று கணவரோடு தனிக்குடித்தனம் செய்ய இருப்பதை நினைத்தபோது அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அங்கே சென்ற பின்புதான் அவளுக்கு பல விஷயங்கள் புரிந்தன. மொழி பிரச்சினையால் யாரிடமும் பேச முடியவில்லை. வழிதெரியாததால் வெளியே போகவும் முடியவில்லை. பக்கத்து வீட்டுக்காரர்களோடு கூட பழக முடியவில்லை. கணவர் அலுவலகம் சென்றதும் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, எவ்வளவு நேரம் தான் டி.வி பார்ப்பது, புத்தகம் படிப்பது. ஒரு சில வாரங்களிலே அவளுக்கு எல்லாமுமே அலுத்து போனது. வீடு, ஏ.சி. சிறைபோல் ஆனது. சில நேரங்களில் தனிமை பயமாகவும் இருந்தது. தான் தன்னந்தனியாக விடப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டபோது அம்ரிதாவின் நட்பு கிடைத்தது.
இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். அதனால் மணிக்கணக்கில் பேசினார்கள். வெளி இடங்களுக்கு சேர்ந்து செல்லவும் ஆரம்பித்தார்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களோடு அறிமுகப்படுத்தினாள் அம்ரிதா.
வினிதாவுக்கு பாசி மணிகளில் பொம்மைகள் செய்யவும், ஒயர் கூடை பின்னவும் தெரியும். அதை அவள் பொழுதுபோக்காக தொடங்கினாள். அம்ரிதா அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அறிமுகம் செய்துவைத்ததால் அந்த பெண்கள் பலர் அவளிடம் பயிற்சி பெறவந்தார்கள். அவர்கள் தயாரித்த கலைப் பொருட்களுக்கு அந்தப் பகுதியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவள் தொழிலும் வளர்ந்தது. தனிமையும் விலகியது.
எல்லா இடத்திலும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களோடு பழக மொழியைவிட அன்பு உள்ளங்கள்தான் அவசியம். ஒரு சிறிய புன்னகை கூட மற்றவர்களை ஈர்த்துவிடும். தனிமை எண்ணங்களை தவிர்த்துவிட்டு, மற்றவர் களோடு இன்ப, துன்பங்களை பகிர்ந்துகொள்ளும்போது அவர்களுடனான உறவு வலுப்பட்டு, தனிமை விரட்டப்பட்டுவிடும்.
அந்தந்த பகுதி மக்களின் கலாசாரத்தை புரிந்துகொண்டு அங்குள்ள மக்களின் பழக்க வழக்கங்களை தெரிந்து கொண்டு, அதற்கு தக்கபடி அவர்களோடு பழக முற்பட வேண்டும். தினமும் காலை, மாலை இரு நேரமும் அருகில் உள்ள இடங் களுக்கு சென்று சிறிது நேரம் உலாவிவிட்டு வரவேண்டும். அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் பார்வை நம் மீதுபடும். அதுவே அவர்களிடம் பழக வாய்ப்பாக அமையும்.
பெண்கள் எல்லோருமே படித்திருக்கவேண்டும். படித்திருந்தால் வாழப்போகும் ஊரில், வீட்டின் அருகில் உள்ள பிள்ளை களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க தொடங்கிவிடலாம். அந்த பிள்ளைகள் மூலம் அவர்களது பெற்றோர் அறிமுகமும், டியூசன் டீச்சர், படித்த பெண் என்ற அங்கீகாரமும் கிடைக்கும்.
நேரம் கிடைக்காமல் விட்டுப்போன படிப்பை புதிய ஊருக்கு வந்ததும் தொடரலாம். இதனால் தனிமையை பயன்படுத்தி அறிவை வளர்த்துக் கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் புகைப்படம் சேகரிப்பு, சித்திரம் வரைதல், பெயிண்டிங் செய்தல் இப்படி ஏராளமான பொழுது போக்குகளில் எதையேனும் ஒன்றை ஆரம்பித்து தனிமையை விரட்டலாம். சுவையான உணவுகளை தயாரிக்க தெரிந்துவைத்திருந்தால், விழாக்காலங்களில் அவைகளை தயாரித்து, பக்கத்து வீடுகளில் உள்ளவர் களுக்கு கொடுத்து நட்பை வளர்க்கலாம். விருந்துக்கும், பூஜைகளுக்கும் அவர்களை அழைத்து மனதில் இடம்பெறலாம்.
பெங்களூருவை சேர்ந்த மீனா திருமணமாகி கணவரோடு வாழ்வதற்காக கொல்கத்தா சென்றாள். அங்கே அவள் செய்த முதல்வேலை பெங்காலி மொழி கற்றுக்கொள்ள ஆரம்பித்ததுதான். அந்த மொழி எளிதில் பிடிபடவில்லை. பெங்காலி சேனல்களை பார்க்கத் தொடங்கினாள். திடீரென்று பக்கத்து வீட்டில் சங்கு சத்தம் கேட்டது. பயந்துபோனாள். ஏதோ விபரீதம் நடந்துவிட்டதாக நினைத்தாள்.
பக்கத்து வீட்டிற்கு சென்றபோது, அந்த வீட்டுப் பெண்மணி குழந்தையோடு வாசலில் நின்றிருந்தாள். சங்கு ஒலியோடு அவளை வரவேற்றுக் கொண்டிருந்தனர். அந்த ஊரில் நல்ல காரியங்களை சங்கு ஊதித்தான் தொடங்குவார்களாம். அந்த குழந்தையை அன்று பள்ளியில் சேர்க்க கொண்டு செல்ல இருக்கிறார்கள். அதற்காகத்தான் சங்கு ஊதியுள்ளார்கள்.
திருவனந்தபுரத்தை சேர்ந்த சரிதா, திருமணமாகி கணவரோடு மணிப்பூர் சென்றாள். கணவர் அங்கு ஆசிரியராக பணியாற்றிவந்தார். ஒருமுறை அவர்கள் இருவரும் மலைப்பகுதி ஒன்றுக்கு சென்றார்கள். அங்கு விசேஷமாக தயாரிக்கப்பட்ட கட்டில் ஒன்றை பார்த்தார்கள். அதை வாங்கி, அதில் தூங்கவேண்டும் என்று அவள் விரும்பினாள். கட்டில் ஒன்று தயாரித்து தரும்படி கேட்டாள். உடனே கட்டில் தயாரிப்பவர் சரிதாவை ஏற இறங்கப் பார்த்தார்கள். அவள் கட்டில் வேண்டும் என்று சைகையில் கூறினாள்.
பதிலுக்கு அவர்கள் படுக்கையில் கிடத்த வேண்டியவரின் உயரம் எவ்வளவு என்று கேட்டார்கள். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவழியாக விலைபேசி கட்டிலை வாங்கிவிட்டாள். அன்று மாலையே இரண்டு பேர் கட்டிலை கொண்டுவந்து வீட்டு வாசலில் போட்டார்கள். பிறகு ஏதோ கேட்டார்கள். அவளுக்கு புரியவில்லை. பக்கத்து வீட்டு பெண்ணை கூப்பிட்டாள்.
அவள், ‘இந்த கட்டிலில் கிடத்தவேண்டிய பிணம் எங்கே இருக்கிறது? என்று கேட்கிறார்கள். இது பிணத்தை கிடத்த பயன்படுத்தும் கட்டில். இதில் வைத்துதான் பிணத்தை தூக்கிச்செல்வார்கள்’ என்று விளக்கமளித்தார்கள். அதைக் கேட்டதும் சரிதா அதிர்ந்து போக, அருகில் நின்றிருந்தவர்கள் எல்லாம் சிரித்துவிட்டார்கள். இப்படி மொழி புரியாத, கலாசாரம் புரியாத மாநிலங்களுக்கு வாழச் செல்லும் பெண்களுக்கு பல்வேறு ருசிகர அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. நீங்களும் திருமணமாகாத பெண்ணாக இருந்தால், திருமணத்திற்கு பின்பு உங்களுக்கும் இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கலாம்!