புதன், 29 ஜனவரி, 2020

உடல் உறவு என்பது வெறும் இச்சைக்காக அல்ல அது மருத்துவம்


உடல் உறவு என்பது வெறும்
இச்சைக்காக அல்ல அது மருத்துவம்

ⓂⓂ

ஆரோக்கியம் தரும் செக்ஸ்

உடல் உறவு என்பது வெறும் இச்சைக்காக அல்ல அது மருத்துவம் இதை தவறாக நினைக்காதிர்கள் எல்லா உயிர்களுக்கும் உள்ள நிகழ்வு தான் .

உடலுறவு கொள்வதன் பயன் 30 மற்றும் 40 வயதிற்கு மேல் பட்ட ஆண் பெண் உங்களுக்கு அவசியம்....

தினமும் தன் துணையுடன் உடல் உறவு கொண்டால் அது மன அழுத்தத்தைக் குறைக்கும், உடலுறவின் போது #டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது #மன_அழுத்தத்தை குறைக்கும்.

வாரத்திற்கு மூன்று (முடியாதவர்கள் வாரம் ஒரு நாள்) நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓர் மாதத்தில் 50 மைல்கள் ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகிங்கோ போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.

 செக்ஸ் உறவு கொள்வது……

👉ரத்த அழுத்தத்தை குறைக்கும்,

👉டயஸ்டாலிக் ப்ளட் பிரஷர் எனப்படும் இரத்த அழுத்த கீழ் லிமிட்டினை குறைக்க உதவும்.

👉சளி பிடிப்பதலிருந்து விடுவிக்கும்,

👉எதிர்ப்பு சக்தியை கூட்டும்

👉தினமும் செக்ஸ் உறவு கொள்பவர்களுக்கு அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

👉ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருள் உடல் உறவு கொள்வதால் உடலில் சுரக்கும், இது சளிபிடிப்பதை எதிர்க்கும் ஆண்டிஜென் ஆகும், இதனால் சளிபிடிப்பது போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.

👉தினம் உடலுறவு கொள்வது உங்களை இளமையாக வைத்திருக்கும்.
மேல்நாட்டவரின் 100% ரகசியம் இதுதான்.

👉ஆரோக்கியமான இதயம், அடிக்கடி உடலுறவு கொள்ளும் ஆண் பெண் இருவருக்கும் இதய நோய் பாதிப்பு மற்றவர்களை விட 85% குறைவாக உள்ளதாம்.

👉மேலும் ஸ்ட்ரோக்கின் பாதிப்பும் 95% குறைவாக உள்ளதாம்.

👉மைக்ரேன் தலைவலி,
உடல் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டுமெனில் நல்ல உடலுறவு கொண்டால் போதும்.

👉மாதத்திற்கு 20 நாளுக்கு மேல் உடலுறவு கொள்ளும் ஆண் பெண் இருவருக்கும் 99% கேன்சர் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்.

♦அதிக உடல்உறவில் ஈடுபடும் பெண்களுக்கு……

1. இரத்த சோகை ( தலஸ்மியா)

2. கர்பபை புற்று

4. கர்பபை நீர் கட்டி ( பைப்ராய்ட் )

5.மூச்சடைப்பு

6. கை கால் மூட்டு வழி

7. வெள்ளை படுதல்

8. உடல் சோர்வு

9.கண்பார்வை குறைதல்

10. உடல் பருமன்

மிக முக்கியமாக மார்பக புற்றுநோய் கர்ப்பபை புற்றுநோய் வரவே வராது..
ஆகியவை அன்டாது.

நமது இந்திய பெண்களில் 9% மட்டுமே 40 வயதை தான்டியும் 99 சதவிகித உடல் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் காரணம்❓

அவர்கள் 35 வயதுக்கு மேல் உடல்உறவில் ஆர்வம் கொள்வதில்லை.
அதனால் உடல் புத்துணர்ச்சி பெறுவதில்லை.

உடல் உறவு என்பது வெறும் இச்சைக்காக அல்ல அது மருத்துவம் ஆகவே பெண்கள் ஆரோக்யமாக இருக்க உறவு கொள்ளுங்கள் கணவறோடு அவருக்கும் இது மருத்துவமாகும். இல்லறமே நல்லறம்..

*தாது_புஷ்டி_சூரணம்*

1. சாலாமிசிரி
2. ரூம்மிஸ்தகி
3. பாதாம் பருப்பு
4. அரரூட் பருப்பு
5. ஆலம் விதை
6. தாமரை விதை
7. சின்ன வெங்காய விதை
8. வாகைப் பிசின்
9. ஆவாரம் பிசின்
10. இலவம் பிசின்
11. கருவேலம் பிசின்
12. சீந்தில் சர்க்கரை
13. அதி மதுரம்
14. சாரப் பருப்பு
15. ஜப்சா விதை
16. நீர்முள்ளி விதை
17. கடலை மாவு
18. திப்பிலி
19. வலம்புரிக்காய்
20. ஜாதிக்காய்
21. யானை திப்பிலி
22. ஜாதி பத்திரி
23. சிறுதிப்பிலி
24. கிராம்பு
25. அக்ரகாரம்
26. சித்தரத்தை
27. நயம் சாம்பிராணி
28. வால்மிளகு
29. முருங்கை பிசின்
30. பாதாம் பிசின்
31. வேப்பம்பிசின்
32. கூகைநீர்
33. சிசகாகப்பூ
34. நிலப்பினை கிழங்கு
35. பூமி சர்க்கரை கிழங்கு
36. சீன அமுக்கரா
37. மாசிக்காய்
38. மதனப்பூ
39. ரோஜாப்பூ
40. கோஸ்டம்
41. பெருஞ்சீரகம்
42. செண்பக மொட்டு
43. திராட்சை
44. முந்திரி பருப்பு
45. கசகசா
46. மூங்கில் உப்பு
47. தக்கோலம்
48. மாதளம் ஓடு
49. பச்சை கற்பூரம்
50. பிஸ்தா பருப்பு
51. இஸ்கோல் அரிசி
52. முள்ளங்கி விதை
53. நற் சீரகம்
54. முருங்கை பூ
55. வெள்ளரி விதை
56. பேரிச்சம் காய் (4 மடங்கு )
57. முருங்கை விதை ( 2 மடங்கு)
58. குங்குமப்பூ
59. கருஞ்சீரகம்
60. முருங்கை பிஞ்சு-50 எண்ணம்
61. எள்ளு
62. உளுந்து
63. இலவன்வித்து
64. இந்துப்பு
65. கடுக்காப்பூ
66. இலுப்பைபூ
67. நெருஞ்சில் பருப்பு
68. தண்ணீர்விட்டான்
69. சத்திராச்சாணை
70. குராசானிவோமம்
71. சிறுதேக்கு
72. செங்கழுநீர்பூ
73. சீந்தில் தண்டு
74. ஆவாரை
75. சிறுகாஞ்சோரி
76. சுக்கு
77. கசகசா
78. கானப்பயிறு
79. அத்திப்பழம்
80. ஒரிதழ் தாமரை

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் 50 கிராம் வாங்குகிறோம் என்றால் பேரிச்சம்பழம் (4 மடங்கு ) அதாவது 200 கிராம். முருங்கைவிதை
(2 மடங்கு ) அதாவது 100 கிராம் வாங்க வேண்டும். இந்த அனைத்து சரக்குகளையும் நன்கு காயவைத்து இடித்து பொடிசெய்து 500 ml கிராம் சாப்பாடு சாப்பிடுவதற்கு முன் காலையிலும், மாலையிலும் பசும்பாலில் சாப்பிட வேண்டும். (மருந்து சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு பின் சாப்பிட வேண்டும் )


*பயன்கள்*

⭐தாது வலிமையை தரும்.

⭐உடல் புத்துணர்ச்சி பெரும்.

⭐கடினமான வேலை செய்தாலும் உடல் சளைக்காது.

⭐சனேந்திர உறுப்புகள் பலம் பெரும்.

⭐உயிரணு அபரிவிதமாக உற்பத்தி ஆகும்.

⭐ஆண்களுக்கான அருமருந்து.

⭐போக சக்தியை அதிக படுத்தும்.

⭐விரைப்பு தன்மை நீடித்து இருக்கும்.

⭐நரம்புகள் முறுக்கேறும்,விந்து பலம் பெறும்,குன்மம்
(வயிற்று நோய் ),இருமல்,வாத ரோகங்கள் பலவும் குணமாகும்.

⭐பெண்கள் உண்ண தேகம் கட்டுப்படும்.

⭐மார்பகம் இறுகும்.

⭐குழந்தை பாக்கியம் உண்டாகும்.

*முறையற்ற*

உறவு கொடிய நோய்க்கு வழிவகுக்கும்…எச்சரிக்கை

இதயப் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையோடு உடலுறவில் ஈடுபடவும்..

அதிகம் உடலுறவு வைத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா


அதிகம் உடலுறவு வைத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா

உடலுறவு சுவாரஸ்யமானதும் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு செயல்பாடு மட்டுமல்ல. இது உங்கள் துணையுடனான உறவுக்கு ஒரு இணைப்பை சேர்க்கிறது மற்றும் இரண்டு பேரை நெருக்கமாகக் வைத்திருக்க உதவுகிறது. உடலுறவு உங்கள் உடல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். அடிக்கடி உடலுறவு கொள்வது உங்கள் இரத்த அழுத்த அளவைக் குறைக்கும், சகிப்புத்தன்மையை அதிகரிக்கும், மன அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் உங்களை மகிழ்ச்சியான நபராக மாற்றும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இது விவாகரத்து விகிதங்களைக் குறைக்கிறது மற்றும் உறவில் மகிழ்ச்சியற்ற தன்மையை நீக்குகிறது.

இந்த பதிவில், அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.

இது மன ஆரோக்கியத்தை அதிகரிக்கும்

அடிக்கடி உடலுறவு கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, ஆனால் தரமான முறையில் உடலுறவு கொள்வதும் முக்கியமானது. இது ஒரு மன அழுத்த எதிர்ப்பானாகவும் (ஸ்ட்ரெஸ் பஸ்டராகவும்) வேலை செய்யலாம். உண்மையில், பல வல்லுநர்கள் கூறுகையில், இன்று மக்கள் நீண்டகால மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள், ஏனெனில் அவர்களுக்கு போதுமான தரமான உடலுறவு இல்லை. நீங்கள் அழுத்தமாக இருக்கும்போது, ​​உங்கள் உடல் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் ஆகியவற்றை வெளியிடுகிறது. இந்த ஹார்மோன்கள் சோர்வு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற சுகாதார நிலைகளுக்கு வழிவகுக்கும். இந்த ஹார்மோன்களின் விளைவுகளை செக்ஸ் எதிர்க்கும். மேலும், நீங்கள் உடலுறவில் ஈடுபடும்போது, ​​உங்கள் உடல் எண்டோர்பின் ஹார்மோன்களை வெளியிடுகிறது. எரிச்சலையும் மன அழுத்தத்தையும் குறைக்கும் ஒரு “ஃபீல் குட்” ஹார்மோன் ஆகும். நீங்கள் உச்சநிலையை அனுபவிக்கும் போது, ​​உங்கள் உடல் புரோலேக்ட்டின் ஹார்மோனை வெளியிடுகிறது. இது நீங்கள் நல்ல தூக்கம் பெற உதவுகிறது.



உங்களை மேலும் ஆரோக்கியமாக்குகிறது

உடலுறவில் உடல் செயல்பாடும் அடங்கும். மேலும் எந்தவிதமான உடல் செயல்பாடுகளும் ஆரோக்கியத்திற்கு நல்லது. அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் பாலியல் செயல்பாடுகளின் ஒரு அத்தியாயம், உடலுறவு  வைத்துக்கொள்வது விறுவிறுப்பான நடைபயிற்சி மேற்கொள்வது அல்லது இரண்டு படிக்கட்டுகளில் ஏறுவதற்கு சமம் என்று கூறுகிறது. இந்த செயல்பாடு உங்கள் வயிற்று மற்றும் இடுப்பு தசைகளை இறுக்கி, உங்கள் வயிற்றைக் குறைக்க உதவும்.

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும்

செக்ஸ் இரத்த அழுத்த அளவைக் குறைக்கும். நாம் அனைவரும் அறிந்தபடி, உயர்ந்த இரத்த அழுத்த அளவு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். செக்ஸ் இரத்த நாளங்களை நீர்த்துப்போகச் செய்கிறது மற்றும் உடலின் உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களின் ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஆனால் நீங்கள் ஏற்கனவே இதய நோயாளியாக இருந்தால், உடலுறவை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். ஏனென்றால், அதிகப்படியான உடலுறவு உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். உங்களுக்கு இதய குறைபாடு இருந்தால், எந்தவொரு பாலியல் செயலிலும் அடிக்கடி ஈடுபடக்கூடாது.

மூளைக்கு நல்லது

கோவென்ட்ரி மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், அடிக்கடி பாலியல் செயல்பாடு வயதானவர்களில் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது என்று கூறுகிறது. தி ஜர்னல்ஸ் ஆஃப் ஜெரண்டாலஜி, சீரிஸ் பி: சைக்காலஜிகல் அண்ட் சோஷியல் சயின்ஸில் ஒரு ஆய்வின்படி, வழக்கமான பாலியல் செயல்பாட்டில் ஈடுபடும் நபர்கள், அவர்களின் வாய்மொழி சரளத்தையும், பொருள்களையும் அவற்றுக்கிடையேயான இடைவெளிகளையும் பார்வைக்கு உணரும் திறனையும் அளவிடும் சோதனைகளில் அதிக மதிப்பெண்களைப்  பெறுகின்றனர்.

செவ்வாய், 28 ஜனவரி, 2020

குறிஞ்சிப்பூ

குறிஞ்சிப்பூ [தமிழ்ப்பூ]

நமக்கு அதிகம் பழகாத நெருங்காத மலர் குறிஞ்சிப்பூ. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் இந்தப் பூ பூக்கும் எனினும் இப்போதெல்லாம் இந்தப் பூ 6, 18, 36 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கின்ற பூக்களாகவும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
சங்க இலக்கியம் வெகுவாகக் கொண்டாடும் தமிழ்ப்பூ இது நீலக் குறிஞ்சி என்று அழைக்கப்படும் இந்தப் பூ வெளிர் ஊதா நிறம் கொண்டு கொத்துக் கொத்தாக ஒரே சமயத்தில் பூக்கும். சங்க காலத்தில் தமிழர்களது நிலங்கள் இயற்கையோடு மக்கள் வாழும் முறைகளின் அடிப்படையில் நான்காகப் பிரிக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றுதான் குறிஞ்சி. மலையும் மலைசார்ந்த பகுதிகளையும் குறிஞ்சி என்று பெயரிட்டார்கள்.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாமாங்க வருடமும் மகாமகக் குளியலும் விசேஷம் தானே? குறிஞ்சிப்பூ என்றதும் நமக்கு ஊட்டியும் கொடைக்கானலும் தான் நினைவுக்கு வரும். உடுமலையருகே மறையூர் மலைப்பகுதிகள் மூணாறு பகுதியில் ராஜமலைப் பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தமிழ் நாடு கேரளா எல்லைப்பகுதிகளில் அஞ்சு நாடு என்றழைக்கப்படும் காந்தலூர் மறையூர் கீழாந்தூர் வட்டாவட கொட்டா கொம்பு ஆகிய இடங்களிலும் குறிஞ்சிமலர் பூத்துக் குலுங்குவதுண்டு. இதிலுள்ள தேன் விசேஷம். இதன் வாசனை அதைவிட விசேஷம் தமிழ்க் கடவுளான முருகப்பெருமானுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் பிரத்யேகப்பூ. கொடைக்கானலில் எழுந்தருளியுள்ள குறிஞ்சி ஆண்டவர் கோயிலும் விசேஷம்தான்.

1936 ம் ஆண்டு இந்து மதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஐரோப்பிய பெண் இந்து ஒருவரை திருமணம் செய்து கொண்டு தமிழ்க் கடவுளான முருகப்பெருமானுக்கு இந்தக் கோயிலைக் கட்டியதாகத் தெரிகிறது. அவரது பெயர் லீலாவதி ராமனாதன். இக்கோயிலில் குடிகொண்டிருக்கும் முருகப்பெருமானின் பெயர் குறிஞ்சீஸ்வரன். இவனுக்கு குறிஞ்சி மலர்களிலிலிருந்து எடுக்கப்பட்ட தேனிலேயே மிகச் சிறந்த தேனால்தான் அபிஷேகம் நடக்குமாம். சங்கத் தமிழ் இலக்கியம் குறிஞ்சிப்பூவை பல பெயரிட்டு அழைக்கிறது. நீலக் குறிஞ்சி, கல் குறிஞ்சி, செறு குறிஞ்சி,நெடுங்குறிஞ்சி இடக் குறிஞ்சி என்றும், வெள்ளைப்பூக்களைப் பூக்கும் கருத்தண்டை கொண்ட குறிஞ்சியை கருங்காற் குறிஞ்சி என்றும் போற்றுகின்றன.
இது சமீபத்தில் இலங்கையில் ஒட்டன்புல் நிலத்தில் [நுவரேலியா பகுதியாம்] 2013 ம் ஆண்டு நவம்பர் மாதம் குறிஞ்சி பூத்ததை பார்த்து ரசித்து சிலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் 2006 ம் வருடம் மலைப்பகுதிகளில் பல் இடங்களில் பல வகைப்பட்ட குறிஞ்சி மலர்கள் பூத்துக்குலுங்கியதாக அறிய முடிகிறது.
இந்த மலர்களைப் பறித்து சூடிக்கொள்ளவோ ஆண்டவனுக்கு அர்ப்பணிக்கவோ செய்வதைவிட கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து கண்ணாரக் கண்டு மனம் நிறையவே விரும்புகிறது. இந்தப் பூவுக்கு மட்டுமே இந்தப் பெருமை. இதனை ‘ ஸ்ட்ரோபிலான்தஸ்குந்தியானா” என்றழைக்கின்றனர்.
நீலகிரி வாசியான காக்பர்ன் என்பவர்தான் அப்பகுதிகளில் குறிஞ்சி மலர் பூத்த வருடங்களின் விவரங்களைத் தொகுத்துள்ளார். இவருடைய தாத்தா தோடர்களிடமிருந்தும் கோதே இனத்தவரிடமிருந்தும் இந்தப் பூக்கள் பற்றி பேசிப் பேசி விஷயம் சேகரித்து தந்து டைரியில் எழுதி வைத்திருந்தாராம். 1857 ம் ஆண்டில் captain Beddome என்பவர் இந்தப் பூவை முறைப்படி ஆவணப்படுத்தி பெயர் சூட்டியதாகவும் தெரிகிறது. இந்தத் தமிழ் பூவுக்காக நமது அரசாங்கம் தபால் தலை வெளியிட்டுள்ளது.
குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கும்போது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கின்றது. குருபகவான் சிம்மத்தில் சஞ்சரிக்கும்போது மாசிமக விழா நடைபெறுகிறது. நம் வாழ் நாளில் ஒரு முறையாவது குறிஞ்சி மலர் பறித்து குறிஞ்சி ஆண்டவரின் பாதங்களில் சமர்ப்பிக்கும் பாக்கியம் கிடைத்தற்கரியது.

திங்கள், 27 ஜனவரி, 2020

இயற்கை எழில் கொஞ்சும் காந்தலூர்


கண்ணை கவரும் காந்தலூர்

காந்தலூர் (കാന്തല്ലൂർ; Kanthalloor) இந்திய நாட்டின் கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில், தேவிகுளம் வட்டத்தில் காந்தலூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு வருவாய் ஊர் ஆகும். மலையாள மொழி சட்டத்தின் படி இந்த ஊர் தமிழ் மொழி பேசும் சிறுபான்மையினர் வாழும் பகுதியாகும்.


காந்தலூர் .കാന്തല്ലൂർ (மலையாளம்)
KANTHALLOOR
வருவாய் ஊர் (Revenue Village)
நாடு
 இந்தியா
மாநிலம்
கேரளம்
மாவட்டம்
இடுக்கி மாவட்டம்
வட்டம்
தேவிகுளம் வட்டம்
வட்டார தன்னாட்சி நிறுவனம்
காந்தலூர் ஊராட்சி
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்
6,758
மொழிகள்
 • அலுவல்
தமிழ்,மலையாளம்
நேர வலயம்
IST (ஒசநே+5:30)
PIN
685620

ஜனத்தொகை கணக்கெடுப்பு 2011

மொத்த ஜனத்தொகை 6758
மொத்த ஆண்கள் 3339
மொத்த பெண்கள் 3419
பட்டியல் ஜாதியினர் 2291
பட்டியல் பழங்குடியினர் 887
கல்வியறிவு உள்ளோர் 4681


நிலப்பரப்பு

மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு சரிவில் கீழந்தூர், மறையூர், கொட்டாகொம்பூர், வட்டவடை மற்றும் கண்ணன் தேவன் மலைக்குன்றுகளை எல்லையாக உள்ள இந்த ஊர் 4842 ஹெக்டர் பரப்பளவை கொண்டுள்ளது.

முக்கிய தொழில்

இந்த ஊரின் முக்கிய தொழில் வேளாண்மை ஆகும். இங்கு குளிர்கால காய்கறிகள் பழங்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. முக்கிய காய்கறிகள் பீன்ஸ், முட்டகோஸ், காலிஃப்லவர், காரட், உருளைக்கிழங்கு, வெள்ளப்பூடு ஆகியனவும் பழங்கள் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளம், ப்லம், பேறிக்காய், கொய்யா, தாட்டுபுட்டான் ஆகியவையும் ஆகும்.


முக்கிய மொழிகள்

90 சதவீத மக்களின் தாய்மொழியாக தமிழ் உள்ளது, மீதமுள்ளவர்கள் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளை தாய் மொழியாக கொண்டவர்களாவர். இப்பகுதியில் வாழும் மக்கள் தமிழ் மொழியை அனைத்து தேவைக்கும் பயன்படுத்தலாம். இப்பகுதி மக்கள் கேரள மாநிலத்தின் அனைத்து அரசு துறைகளிலும் விண்ணப்பங்கள் தமிழில் கொடுக்கலாம், அதற்கான பதிலும் தமிழிலேயே இருக்க வேண்டும் என மலையாள மொழி சட்டம் 2015 கூறுகிறது.


முக்கிய பண்டிகைகள் மற்றும் விழாக்கள்

கார்த்திகை தீபம், தீபாவளி, தமிழ் புத்தாண்டு ஆகியன முக்கிய பண்டிகைகளும், ஆவணி நோன்பு, சித்திரை திருவிழா, சிவராத்திரி, சித்திர குப்த்தன் பொங்கல் ஆகியன முக்கிய விழாக்களுமாகும்.

சமயங்கள் மற்றும் ஆலயங்கள்

பெரும்பான்மையான மக்கள் இந்து சமயத்தைச் சார்ந்தவர்களாவர், மீதமுள்ளவர்கள் கிருத்தவ மதத்தை பின்பற்றுபவர்கள் ஆவர். ஒரேஒரு முஸ்லிம் குடும்பமும் உள்ளது. பெருமலை மலையாள பகவதியம்மன் ஆலயம், இராமர் குகைக்கோவில், காந்தலூர் உடையபெருமாள் ஆலயம், புத்தூர் பிடாரியம்மன் ஆலயம், வெட்டகாரன் கோவில், சிறுமலர் ரோமன் கத்தோலிக்கன் தேவாலயம், வேளாங்கண்ணி மாதா சுரியன் கத்தோலிக்கன் தேவாலயம் ஆகியவை முக்கிய வழிபாட்டு தளங்கலாகும்.


கல்விச்சாலைகள்

அரசு உதவிப் பெரும் ஆரம்ப் பள்ளி(Aided Primary School, Kanthalloor) தமிழ் மற்றும் மலையாள வழி கல்வி, மவுன்ட் கார்மல் ஆரம்ப பள்ளி தமிழ் வழி கல்வி மற்றும் திரு இருதய உயர்நிலை பள்ளி தமிழ் மற்றும் மலையாள வழி கல்வி ஆகியன முக்கிய கல்வி சாலைகளாகும்.


சுற்றுலா தளங்கள்

மன்னவன் சோலை (ஆணைமுடி சோலை தேசிய பூங்கா), பட்டிச்சேறி அணை, ஆப்பிள் தோட்டம், குழச்சிவயல் சூட்டிங் பாறை, இராமர் குகைக்கோவில், சர்க்கரை ஆலைகள்(மறையூர் சர்க்கரை).


 காந்தலூர் ஆப்பிளுக்கு மவுசு

கேரளாவில் தங்கள் பகுதியில் விளையும் ஆப்பிளுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு அதிகரித்து வருவதால் அதன் சாகுபடியை அதிகரித்து வருகின்றனர் காந்தலுார் விவசாயிகள். கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது காந்தலுார் கிராமம். சுற்றிலும் மலைகள் சூழ்ந்து எப்போதும் குளிர்ச்சியான காலநிலை காணப்படுவதால் இப்பகுதியில் அதிகளவில் பழ சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலும் ஆரஞ்சு சாத்துக்குடி பிளம்ஸ் பிச்சீஸ் பேரிக்காய் உட்பட பல்வேறு வகையான பழங்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தியாவில் காஷ்மீர் சிம்லா பகுதிகளே ஆப்பிள் விளைச்சலில் முக்கிய பங்கு வகிக்கிறது. தென்மாநிலங்களில் கேரளாவின் காந்தலுார் பகுதிகளில் அதே போன்ற குளிர்ச்சியான சூழ்நிலை காணப்படுவதால் அப்பகுதி விவசாயிகளும் பரிசோதனை முறையில் ஆப்பிள் சாகுபடியை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர்.


காந்தலுாரில் 25 ஏக்கரில் அதன் சாகுபடியை மேற்கொண்டுள்ளனர். பார்லே பியூட்டி என்ற ரகத்தை பயிர் செய்துள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை அறுவடை மேற்கொள்ளப்படுகிறது. நடவு செய்து மூன்று ஆண்டுகளில் காய்க்க ஆரம்பிக்கிறது. மார்ச் மாதத்தில் பூக்க ஆரம்பித்து ஆக. undefined செப். மாதங்களில் அறுவடைக்கு தயாராகிறது. ஒருமுறை சாகுபடி செய்தால் தொடர்ந்து இருபது ஆண்டுகள் வரைக்கும் பலன் கொடுக்கிறது. ஆண்டுக்கு சராசரியாக ஒரு மரத்திலிருந்து 20 முதல் 25 கிலோ வரை மகசூல் கிடைப்பதாகவும் காஷ்மீர் ஆப்பிளைவிட உள்ளூர் பகுதியில் விளையும் ஆப்பிளுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.


இதுகுறித்து காந்தலுார் பகுதி விவசாயிகள் கூறியதாவது: இப்பகுதியில் ஆண்டு முழுவதும் குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால் ஆப்பிள் விளைச்சலுக்கு ஏற்றதாக உள்ளது. காஷ்மீர் சிம்லா ஆப்பிள்களில் மெழுகு தடவி விற்பதால் எங்கள் பகுதியில் விளையும் ஆப்பிளுக்கு பொதுமக்களிடம் அதிகளவில் வரவேற்பு உள்ளது. இங்கு இயற்கையான முறையில் சாகுபடி செய்து நேரடியாக மரத்திலிருந்து பறித்து கொடுக்கப்படுகிறது. இதனால் காஷ்மீர் ஆப்பிளைவிட விலை சற்று அதிகமாகவே காணப்படுகிறது. காந்தலுார் ஆப்பிள் கிலோ 200 முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலையும் ஓரளவு இருப்பதால் விவசாயிகளுக்கு கணிசமான வருமானம் கிடைத்து வருகிறது. நிரந்தர பயிர் என்பதால் பராமரிப்பு செலவு மற்றும் நேரம் குறைவாகவே உள்ளது. இதனால் விவசாயிகளிடையே ஆப்பிள் சாகுபடி ஆர்வம் அதிகரித்து வருகிறது.
       தொகுப்பு  -
            புவனேஸ்வரி மகேந்திரன்,
               மதி கல்வியகம், நெல்லை.

மஞ்சள் காமாலை அல்லது ஹெபடைடிஸ் பி ஆகியவை கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளாகும்.


மஞ்சள் காமாலை அல்லது ஹெபடைடிஸ் பி ஆகியவை கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளாகும்.

 இந்த நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. கண்களில் இருக்கும் வெள்ளை நிறம் மஞ்சள் நிறமாக மாறுகிறது. சிறுநீரும் மஞ்சள் நிறமாக மாறுகிறது. அலோபதி மருத்துவத்தினால் மஞ்சள் காமாலையை சரி செய்ய முடிவதில்லை. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நிறைய ஓய்வு எடுத்து கொள்ள வேண்டியது அவசியம்.
எண்ணெய் உணவு பொருட்களை தவிர்க்க வேண்டியது கட்டாயம். தகுந்த மருத்துகளையும், இந்த பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் சில இயற்கை மருத்துவ முறைகளையும் கடைபிடியுங்கள்.

*வேப்பிலை:*

வேப்பிலையில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. இது வைரஸை எதிர்த்து போராடும் தன்மை கொண்டுள்ளது. மேலும் வேப்பிலை கல்லீரலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
பயன்படுத்தும் முறை:
வேப்பிலையை நன்றாக கழுவி சுத்தப்படுத்தி, மிக்ஸியில் போட்டு 30மிலி ஜூஸாக செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் பாதியளவு தேனை கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்து வர வேண்டும்.

*நெல்லிக்காய்:*

நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகளவில் அடங்கியுள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடண்டுகள் அதிகளவில் உள்ளது. இது கல்லீரல் சேதமடைவதை தடுக்க உதவுகிறது. நெல்லிக்காய் ஜூஸை தினமும் பருகுவதால் மஞ்சள் காமாலையில் இருந்து தப்பிக்கலாம்.

*எலுமிச்சை:*

உங்களுக்கு நெல்லிக்காய் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் எலுமிச்சையை பயன்படுத்தலாம். இதிலும் விட்டமின் சி அதிகளவில் அடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி கல்லீரலை பாதுகாப்பதில் இது பெரும் பங்கு வகிக்கிறது. எனவே நீங்கள் எலுமிச்சை ஜூஸையும் பருகலாம்.

*அர்ஜுனா மரம்:*

அர்ஜுனா மரம் (Arjuna tree) இதயம் மற்றும் சிறுநீர் பிரச்சனையை போக்குவதில் சிறந்தது. இது கல்லீரலில் உள்ள கொழுப்புகளை போக்க உதவுகிறது. மஞ்சள் காமாலையை போக்க இது ஒரு மிகச்சிறந்த மருந்தாகும்.
பயன்படுத்தும் முறை:
அரை டீஸ்பூன் அளவு அர்ஜுனா பவுடரை சிறிதளவு நெய்யுடன் கலந்து பேஸ்டாக செய்து தினமும் இரண்டு முறை சாப்பிட்டு வர வேண்டும். இந்த அர்ஜுனா பவுடர், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

*மஞ்சள்:*

சில பகுதி மக்கள், மஞ்சள் அதிகம் சேர்த்துக் கொள்வதால்தான் மஞ்சள் காமாலைக்கு காரணமாகிறது என நினைக்கின்றார்கள். இது மிகவும் தவறு. ஆனால் மஞ்சள், மஞ்சள் காமாலைக்கு மருந்தாக இருக்கிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட், ஆன்டி – மைக்ரோபையல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அடங்கியுள்ளது.
பயன்படுத்தும் முறை:
முக்கால் தேக்கரண்டி மஞ்சளை எடுத்து, ஒரு டம்ளர் மிதமான சூடுள்ள தண்ணீரில் கலந்து தினமும் மூன்று முறை குடித்து வர சிறந்த பலன் கிடைக்கும்.

*தக்காளி:*

தக்காளி கல்லீரலில் உண்டாகும் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது. புதிய தக்காளி ஜூஸை காலையில் ஒரு டம்ளர் அளவு வெறும் வயிற்றில் குடிப்பது மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

*முள்ளங்கி:*

முள்ளங்கி கல்லீரலில் ஏற்படும் சேதம் மற்றும் அடைப்புகளை நீக்க உதவுகிறது. முள்ளங்கியின் மேல் இருக்கும் இலைகளை சுத்தமாக கழுவி, அதனை ஜூஸ் செய்து தினமும் ஒருமுறை குடித்தால் பத்து நாட்களில் மஞ்சள் காமாலை குணமாகும்.

பூ சூடுங்கள் – பெண்களே தினமும் பூ சூடுங்கள்!


பூ சூடுங்கள் – பெண்களே தினமும் பூ சூடுங்கள்!

பெண்களே தினமும் பூ சூடுங்கள் என்ற இக்கட்டுரையில் பூக்களின் பயன்கள், பூக்களை சூடும் கால அளவு, பூக்களை சூடும் முறை, பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள் ஆகியவை பற்றி பார்க்கலாம்.

உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூக்களின் வகைகள் உள்ளன.

ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன.

அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.


பூக்களின் பயன்கள்

ரோஜாப்பூ – தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

மல்லிகைப்பூ – மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.

செண்பகப்பூ – வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.

பாதிரிப்பூ – காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.

செம்பருத்திப் பூ – தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.

மகிழம் பூ – தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.

வில்வப் பூ – சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.

சித்தகத்திப் பூ – தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.

தாழம் பூ – நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.

தாமரைப் பூ – தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.

கனகாம்பரம் பூ – தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.

தாழம் பூ, மகிழம் பூ, சந்தனப் பூ, ரோஜாப் பூ செண்பகப் பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.


பூக்களைச் சூடும் கால அளவு

முல்லைப்பூ – 18 மணி நேரம்

அல்லிப்பூ – 3 நாள்கள் வரை

தாழம்பூ – 5 நாள்கள் வரை

ரோஜாப்பூ – 2 நாள்கள் வரை

மல்லிகைப்பூ – அரை நாள் வரை

செண்பகப்பூ – 15 நாள் வரை

சந்தனப்பூ – 1 நாள் மட்டும்

மகிழம்பூ மற்றும் குருக்கத்திப் பூ – சாப்பிடும்போது மட்டும் சூடிக்கொள்ளலாம்.

மந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ – இந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.

பூக்களைச் சூடும் முறை

பூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும்.

உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது.

மணமுள்ள பூக்களை மணமில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது. அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.

ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.

மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால் மனம் அமைதி பெற உதவும்.


மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும்.

முல்லைப் பூ, வில்வப் பூ ஆகியவற்றை குளித்த பின்பு சூடலாம்.

உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்.

பூ சூடுங்கள் நன்மை பெறுங்கள்

பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.

இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மன அமைதிக்கு உதவுகிறது.

தலையில் பூ வைப்பது, மனமாற்றத்துக்கு உதவும்.

ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.

மனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது.

பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது.

மனமாற்றத்துக்கு உதவுகிறது.

மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

மகிழ்ச்சியை உண்டாக்குகிறது

ஆகவேதான் பெண்களே தினமும் பூ சூடுங்கள் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு! காஞ்சிவரம் பட்டுப் புடவைகள்!

 

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு!
காஞ்சிவரம் பட்டுப் புடவைகள்!

காஞ்சிபுரம் சென்னையை அடுத்து 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. பட்டு நெசவு தவிர இயல்பில் இது ஒரு கோயில் நகரம், சோழர் காலத்திலும் அவர்களுக்குப் பின்னான பல்லவர் காலத்திலும் கட்டப்பட்ட கலைநயம் மிக்க பல கோயில்கள் இந்நகர் முழுதும் நிறைந்திருக்கின்றன. காஞ்சி கைலாசநாதர் கோயில் மற்றும் ஏகாம்பரேஸ்வரர் கோயில் இரண்டுமே பல்லவர் கட்டிடக் கலைக்கு மகத்தான சான்றுகள். அது தவிர பொற்கூரை வேயப்பட்ட காஞ்சி காமாட்சியம்மன் தரிசனம் பெறாதோர் தமிழ்நாட்டில் எவருளர்? இங்குள்ள கோயில்களை ஒருமுறை கூட வாழ்நாளில் காணும் வாய்ப்பில்லாதோர் கூட அங்குள்ள சிலா ரூபங்கள், கோபுர வடிவங்கள், கடவுள் பிரதிமைகளை இங்கிருந்து உலகம் முழுமைக்கும் விற்பனை செய்யப்படும் காஞ்சீவரம் பட்டுப்புடவைகளின் ஜரிகைக் கரைகள் மற்றும் முந்தானை அலங்காரத்தில் கண்டு ரசிக்க முடியும். அத்தனை சிறப்பாக இங்குள்ள நெசவாளர்கள் கோயில் சிற்பங்களின் மகத்துவமிக்க அடையாளங்களை தங்களது நேர்த்தியான நெசவில் பாந்தமாகப் பதிவு செய்திருக்கின்றனர். இங்கே நெசவு செய்யப் படும் 90 சதவிகிதப் புடவைகளும் பட்டுப் புடவைகள் மட்டும் தான். வெறும் 10 சதம் தான் பிற புடவைகளின் நெசவுக்கு ஒதுக்கப்படுகிறது.


தமிழகத்தின் செல்லப் புடவை!

காஞ்சீவரம் பட்டைப் பற்றி புதிதாக நாம் வேறென்ன சொல்லி விட முடியும்! பிறந்து தொட்டிலில் போடப்படும் குழந்தைகள் முதற்கொண்டு ஆண்டு அனுபவித்துப் பழுத்துப் பழமாகி கிழமானாலும் நம்மை விடாது பின் தொடரும் மோகம் அல்லவா இந்த காஞ்சிப்பட்டு. தமிழகத்தின் செல்லப் புடவை இது! ஒவ்வொரு தீபாவளிக்கும் வாங்கிக் கொள்ள முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் தலை தீபாவளிக்கோ, தலைப் பொங்கலுக்கோ மட்டுமாவது பட்டு வாங்கிக் கட்டாதோர் யார்! பட்டில் அப்படி என்ன விசேஷம் என்று யாரும் கேட்டு விட முடியாது. தமிழ் நாட்டைப் பொருத்த வரை பட்டு வாங்கி உடுத்துக் கொள்வது என்பது வெறும் அந்தஸ்து மற்றும் பகட்டுக்கான வெளிப்பாடு மட்டுமில்லை அது கலாச்சார ரீதியாக அவரவர் ரசனை சார்ந்த வெளிப்பாடு என்றும் சொல்லலாம். அயல் மாநிலங்களை விட்டு விடலாம் நமது தமிழகத்தில் மட்டுமே ஆரணி, தர்மாவரம், திருபுவனம், சின்னாளம் பட்டி, என்று பல இடங்களில் பட்டு நெசவு நடைபெறுகிறது என்றாலும் காஞ்சிப்பட்டின் தனித்தன்மை தான் பெரிதாகப் பேசப்படுகிறது.


காஞ்சீவரம் நெசவுத் தொழில்நுட்பம்:

காஞ்சீவரம் பட்டுப் புடவை நெசவு செய்ய குறைந்த பட்சம் இரண்டு பேர் தறியில் அமர வேண்டும். இந்த நெசவுக்கு மூன்று விதமான விண் குழித்தறிகள் பயன்படுத்தப் படுகின்றன. இந்தத் தறிகளில் பட்டுப் புடவைகள் ’அடை’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெசவு செய்யப்படுகின்றன. அதாவது உடல் பகுதி தனியாகவும், பல்லு எனப்படும் முந்தானைப் பகுதி தனியாகவும், பார்டர் ஜரிகைப் பகுதி தனியாகவும் முன்று விதமாக தனித் தனியாக நெசவு செய்யப்படுகிறது. காஞ்சீவரம் பட்டு நெசவில் தூய மல்பெரி பட்டு நூல் மற்றும் தூய தங்க, வெள்ளி ஜரிகை நூல் பயன்படுத்தப்படுவதால் இந்திய நெசவுக் கூடங்களில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு விதமான வகை வகையான பட்டுப் புடவைகளில் காஞ்சிப் பட்டு தான் பிரதானமாக முதல் இடம் பிடித்திருக்கிறது.

உடல் முழுதும் சரிகையில் இழைக்கப்பட்டு நெசவு செய்யப் படும் தூய காஞ்சிப் பட்டுப்புடவை ஒன்றின் எடை சுமார் 500 கிராம் வரையிலும் கூட இருக்கலாம். நெசவில் தூய வெள்ளி மற்றும் தங்க நூல் பயன்படுத்தப் படுவதால் புடவையின் கனம் பிற பட்டுப்புடவைகளைக் காட்டிலும் சற்று அதிகமாகத் தான் இருக்கும். ஆனால் நேர்த்தியிலும், மனம் கவரும் தன்மையிலும், மென்மையிலும் இதை அடித்துக் கொள்ள இன்னொரு புடவை இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை என்று சொன்னால் கூட அது மிகையில்லை.

காஞ்சீவரத்தில் கைத்தறிகளில் பட்டுப்புடவை எப்படி நெசவு செய்யப் படுகிறது என காட்சியாகக் காண விரும்புவோர் கீழே உள்ள யூ டியூப் விடியோ இணைப்பை அழுத்திப் பாருங்கள்.


விடியோவுக்கான விளக்கம்:
தறியில் அமர்ந்து நெசவு செய்வதற்கு முன்பாக முதலில் கோரா எனப்படும் வெள்ளை பட்டு நூல்களை கைகளால் சுழற்றி தனித் தனியாகப் பகுத்து சிறு சிறு நூற்கட்டுகளாக மாற்றிக் கொள்கின்றனர். பிறகு இந்த கோரா நூற் திரட்டுகளை துல்லியமாக 0.008 கிராம் மட்டுமேயான அளவில் சாயப் பொடி கலந்து கொதிக்கும் நீரில் நீளமான கொம்புகளில் தொங்கலிலிட்டு மாற்றி மாற்றி முக்கி எடுக்கின்றனர். கோரா நூலில் சாயம் ஏறியதும் சாயமேற்றப்பட்ட நூல்கள் அறை வெப்பநிலையில் குளிர்ந்த நீரில் மீண்டும் மீண்டும் அமிழ்த்தி எடுக்கப்பட்டு அதிகப்படியான சாயம் வெளியேற்றப்படுகிறது. பிறகு மாற்றி மாற்றி உதறியும் பிழிந்தும் கோரா நூலில் ஈரம் அகற்றும் வேலை தொடங்குகிறது. ஈரம் அகற்றப்பட்ட சாயமேற்றப்பட்ட பட்டு நூல் அடுத்த படியாக அந்தந்த நிறங்களுக்கு ஏற்ப சர்க்காவில் உருளை வடிவ தனித் தனி நூற்கண்டுகளாக காட் போர்டுகளில் ஸ்பிண்டில்களாகச் சுற்றப்படுகிறது. இந்த உருளை வடிவ ஸ்பிண்டில்கள் அடுத்தபடியாக தறியில் பிணைக்கப்பட்டு நெசவாளர்களால் தனித்துவம் மிக்க பட்டுப் புடவைகளாக நெசவு செய்யப்படுகின்றன. இந்த முறையில் ஒரு புடவை நெசவு செய்ய குறைந்த பட்சம் 15 நாட்கள் தேவைப்படுகின்றனவாம்.

காஞ்சிப் பட்டின் மற்றொரு சிறப்பம்சம் அவை மடிக்கப்பட்டு கடைகளில் அடுக்கப்பட்டிருக்கும் விதம். ஒரு முறை புடவையைப் பிரித்து விட்டோம் என்றால் கடைக்காரர்கள் உதவியின்றி நம்மால் அவற்றை பழைய படி நறுவிசாக மடிக்கவே முடியாது. இதோ கீழே இணைக்கப்பட்டுள்ள இந்த யூ டியூப் விடியோவில் கோரா நூலைப் பிரித்தெடுத்து அது தறியில் புடவையாக மாறுவதிலிருந்து பிறகு ஒவ்வொரு புடவையாக நேர்த்தியாக மடித்து விற்பனைக்காக அடுக்கப்படும் அழகைக் காணலாம்.


காஞ்சிப் பட்டு நெசவின் பூர்வீகம்:

இந்து புராணக் கதைகளின் படி காஞ்சிப் பட்டு நெசவின் பூர்வீக கர்த்தாவாகக் கருதப்படுபவர் துறவி ”மார்கண்டேயர்” மனிதர்களுக்கு மாஸ்டர் டெய்லர் என்று சிலர் இருப்பது போல இவர் கடவுள்களுக்கு மாஸ்டர் நெசவாளர். தாமரைப் பூ தண்டிலிருந்து நூல் எடுத்து இந்துக் கடவுள்களுக்கு இவர் ஆடைகள் நெசவு செய்து தருவாராம். இதிலும் சில கடவுள்களுக்கென்று சில ஸ்பெஷல்கள் நெசவுகள் உண்டு. சிவனுக்கு பருத்தி நெசவு, விஷ்ணுவுக்கு பட்டு நெசவு என்று ஸ்பெஷலாக மார்கண்டேயர் நெய்து கொடுத்ததாக நெசவாளக் குடும்பங்களில் கதைகள் சொல்லப் படுகின்றன. அது மட்டுமல்ல அயோத்யா, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, துவாரகா என்று வகைப்படுத்தப் படும் ஏழு முக்கியமான இந்தியப் புனிதத் தலங்களுக்கான வரிசையில் பிரமிக்க வைக்கும் சிற்ப வேலைப்பாடுகளுடனான கோயில்கள் மற்றும் கைத்தறிப் பட்டு நெசவு, எனும் பெருமைக்குரிய காரணங்களால் காஞ்சிக்கும் வேத காலம் தொட்டு முக்கியப் பங்குண்டு.

என்றென்றும் மணப்பெண்களுக்கான சிறப்புப் புடவை!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காஞ்சிப் பட்டு என்பது திருமண விழாக்கள் மட்டுமல்ல வாழ்வின் முக்கியமான தருணங்கள் அனைத்திலும் உடுத்துவதற்கு உகந்த ஒரு பெருமை மிகு அடையாளம். பிற விசேஷமான நாட்களில் வேறு புடவைகளுக்கு முக்கியத்துவம் தந்தாலும் மணப்பெண்களுக்கான சிறப்பு உடையாக இன்னமும் கோலோச்சுவது காஞ்சீவரம் பட்டுப் புடவைகள் தான். ஆனால் இப்போது பவர்லூம்கள் அதிகரித்து வருவதால் ஹேண்ட்லூம்களுக்கான முக்கியத்துவம் குறைந்து கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் படு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நல்லதொரு தீர்வாகத் தான் மத்திய அரசு ”இந்தியா ஹேண்ட்லூம் பிராண்ட்” என்ற விசயத்தை தொடங்கியிருக்கிறது. தொடங்கி ஓராண்டுக்கு மேலாகிறது ஒரே தளத்தில் இந்தியாவிலிருக்கும் அனைத்து விதமான கைத்தறி நெசவாடைகளைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது என்பதைத் தாண்டி இதில் நெசவாளர்களுக்கு குறிப்பிடத்தகுந்த நன்மைகள் என்ன கிடைக்கக் கூடும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பட்டு சேலை அறிய வேண்டிய விஷயங்கள்


பட்டு சேலை அறிய வேண்டிய விஷயங்கள்

விதவிதமான பல சேலைகள் இருந்தாலும் பெண்களுக்கு பிடித்தமானது என்றால் இது பட்டு புடவைதான்.

பட்டு சேலை அறிய வேண்டிய விஷயங்கள்

விதவிதமான பல சேலைகள் இருந்தாலும் பெண்களுக்கு பிடித்தமானது என்றால் இது பட்டு புடவைதான். பண்டிகைகளில், வீட்டு விசேஷங்களுக்கு அணிய உயர் அந்தஸ்து கொண்ட சேலைதான் பட்டு சேலை. புதியதாய் பட்டு புடவை வாங்கினாலே பெண்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியே அலாதி.

உலகளவில் பல நாட்டு பெண்களும் அணிய விருப்பப்படும் சேலையாக பட்டு சேலை உள்ளது. பட்டு சேலையின் மென்மை தன்மையும், பளபளப்பும், அணியும் பெண்களின் அழகை அதிகப்படுத்தி காட்டுகின்றன. பட்டின் கூடுதல் சிறப்பு என்னவென்றால் ஆலயத்திற்கு அணிந்து செல்லும் போது அங்கிருக்கும் இறை சக்தியை நம் உள்வாங்கி தருகிறதாம். அதன் காரணமாய் ஆலயம் செல்லும்போது அவசியம் பட்டு சேலை கட்டி வருகின்றனர். அதுபோல் பட்டு சேலைக்கு என தோஷமும் கிடையாது.

பார்போற்றும் பட்டு சேலையை பாவையர் உடுத்தி செல்லும் போது உள்ளமெல்லாம் உற்சாகமாய் துள்ளும். அத்தகைய பட்டு சேலைகள் நெய்யப்படும் ஊர்களை வைத்துதான் அதிகமாய் பிரபலமாகின்றன. காஞ்சீபுரம், ஆரணி, தர்மாவரம், திருபுவனம் போன்ற தமிழக பகுதிகளும், பனாரஸ் போன்ற வெளி மாநிலத்தில் பல நகரங்களின் பெயர்களிலும் பட்டு சேலைகள் அழைக்கப்படுகிறது. அந்தந்த ஊரில் நெய்யப்படும் கைதிறன் அடிப்படையில் அவை தனிச்சிறப்பு சேலையாக உலக பிரசித்தி பெற்றுள்ளன.


பட்டு நூலின் முக்கியமான அம்சங்கள் :

உலகளவில் சீனாவிற்கு அடுத்தப்படியாய் இந்தியாவில் தான் பட்டு துணிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டு சேலைகளுக்கான பட்டு நூலில் நான்கு வகைகள் உள்ளன. அதாவது, மல்பரி, டஸ்ஸர், எரி, முகா போன்றவை தான் அவை.

மங்கையர் மணங்கவரும் பட்டு நூல் வகையில் உலகளவில் அதிகளவு உற்பத்தி செய்யப்படுவது மல்பரி பட்டு தான். அதாவது உலகின் மொத்த பட்டு உற்பத்தியில் 90 சதவீதம் மல்பரி பட்டு வகைதான் பயன்படுத்தப்படுகிறது.

மல்பரி வகை பட்டுப்புழுக்களில் இருந்து இந்த வகை பட்டு நூல் தயாரிக்கப்படுவதால் இதற்கு மல்பரி பட்டு எனப்பெயர். மல்பரி பட்டு நூல் வழவழப்பும், உறுதியும் கொண்டது. மல்பரி பட்டு நூலில் சாயங்கள் ஏற்றுவதும், விரும்பிய டிசைனை உருவாக்குவதும் சுலபமாக உள்ளன. அதிக உற்பத்தி, பயன்படுத்த லகுவான பட்டு நூல் என்பதால் மல்பரி பட்டு முதலிடம் பிடிக்கிறது.

டஸ்ஸர், எரி, முகா போன்ற பட்டு நூல்கள் அஸ்ஸாம் மற்றும் தென் கிழக்கு இந்தியாவில் உள்ள காட்டு பகுதியில் இயற்கையாக வளரும் பட்டு புழுவில் இருந்து தயாரிக்கப்படுபவை. இதன் உற்பத்தி மிக குறைவு என்பதால் இதன் விலையோ மிக அதிகமானது.

இந்த மூன்று ரக பட்டுகளை “வன்யா” என்று அழைப்பர். “வன்யா” ரக பட்டுகள் அதிக வழவழப்பின்றி பருத்தி நூல் போன்றே தோற்றமளிக்கும். மிகுந்த பழக்கப்பட்டவர்களுக்கு தான் இந்த பட்டை அறிய முடியும். மல்பரி பட்டு நூல் விலையை விட வன்யா ரக கழிவு பட்டே மூன்று மடங்கு விலை அதிகமானது.

அஸ்ஸாம் மக்கள் ‘வன்யா” ரக பட்டுகளைதான் விரும்பி அணிகின்றனர். உலக புகழ் பெற்ற இந்த வகை பட்டு நூல்களிலும் பல தரப்பட்ட ஆடைகள் நெய்யப்படுகிறது.

பட்டு சேலையின் தரமும், பாதுகாக்கும் விதமும் :

நாம் அதிக விலை கொடுத்து வாங்கும் பட்டு சேலை தரமானதா என்ற கேள்விக்கு விடையாய் மத்திய அரசு தரமான பட்டு சேலையின் மீது “சில்க் மார்க்” எனும் முத்திரையை பதித்து தருகிறது. இதன் மூலம் சாதாரண மற்றும் கலப்பட பட்டு சேலைகளை கண்டறிந்து வாங்க முடியும்.

பட்டு சேலையை வீட்டில் துவைப்பதைவிட டிரைவாஷ் கொடுப்பது உத்தமமானது. அதுபோல் பட்டு சேலையை அயர்ன் மடிப்புடன் நீண்டநாள் வைத்திருக்க கூடாது. பிறகு பட்டு புடவை எடுக்கும் போது மடிப்புபடிப்பாய் இழைவிட்டு விடும். பட்டு புடவையை அவ்வப்போது திருப்பி திருப்பி மடித்து வைக்க வேண்டும்.

அதுபோல் இதமான வெயிலில் அவ்வப்போது காயவைத்து பாதுகாக்க வேண்டும். பட்டு சேலையின் மீது ஏதும் கறை படிந்தால் உடனே சாதாரண தண்ணீர் கொண்டே துடைத்து விடவும். அதிக கறை எனில் டூத்பேஸ்ட் கொண்டு துடைத்து விடலாம். பட்டு சேலை பளபளப்புடன் திகழ சிறந்த பராமரிப்பும் அவசியம். 

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர்



திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
பட்டு சேலைகள் அணிவதன் விஞ்ஞான ரகசியம் !!!
வலைத்தளத்தில் உலவிய பொழுது கிடைத்த ஒரு அதிர்ச்சி தரும் விசயமே என்னை
இந்த பதிவு எழுத தூண்டியது.
தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மைபொருளும் கலந்தே இருந்தன. நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது.


இப்பொழுதாவது இதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன்இல்லை என்றால் அமெரிக்கா இதற்கும் காபி ரைட் வாங்கி விடும்.
பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு.அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின்சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும்.


திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மணப்பெண்ணிற்கும்மணமகனுக்கும் அரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே அணிகின்றனர். இதை சில நாடுகளும்தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது. மேலும்
இதில்வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை.


கோவில்களுக்கு செல்லும்பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே.
இவை எதுவும் தெரியாமல்  நாகரீகம் என்று தனக்கு தானே புலம்பிக்கொண்டு தானும் நாசமாவதுடன் மற்றவர்களையும் கெடுக்கின்றனர்.

வெள்ளி, 24 ஜனவரி, 2020

இந்திய குடியரசு தினம் ஜனவரி 26.


இந்திய குடியரசு தினம்  ஜனவரி 26.

இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும். ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது. இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க திருநாளான குடியரசு தினம் என்றால் என்ன? அதை கொண்டாடப்படுவதற்கான முதற்காரணம் என்ன? என்பதை விரிவாகக் காண்போம்.

ஆங்கிலேயரின் ஆட்சி

ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், கடல்வழிப் பயணமாக 1948 ஆம் ஆண்டு இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது வாணிக முகாம்களை அமைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள், பிரெஞ்சுகாரர்களும் என இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்திக்கொண்டு வாணிபத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும், வணிகத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டாலும், பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி என்ற ஒன்றை நிறுவி நிரந்தரமாக வணிகத்தில் ஈடுபட்டனர். நாளடைவில் இந்திய மன்னர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையை நன்றாகப் பயன்படுத்தி, படிப்படியாக தங்களுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்தி, இந்தியாவை முழுமையாகத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். குறுகிய காலத்திற்குள் இந்தியாவைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ்காரர்கள், இந்திய வளத்தை சுரண்டியது மட்டுமல்லாமல், மக்களை அடிமையாக்கி கொடுங்கோல் ஆட்சி புரியத் தொடங்கினார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைதல்

ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்ட மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள், கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டே விரட்ட எண்ணினர். அதன் அடிப்படையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரித்தானிய இந்தியாவில் தேசியவாத உணர்வுகள், காட்டுத் தீ போல் இந்திய மக்களிடையே பரவத்தொடங்கியது. ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’ என்னும் அமைப்பில் ஒன்றிணைந்த இந்திய மக்கள், ‘மின்டோ-மார்லி சீர்திருத்தம்’, ‘மாண்டேகு செமஸ் போர்டு சீர்திருத்தம்’, ‘காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்’, ‘சட்ட மறுப்பு இயக்கம்’, ‘சைமன் கமிஷனுக்கு எதிர்ப்பு’, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’, ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல போராட்டங்களை ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரங்கேற்றினர். இறுதியில், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை இந்தியா என்ற புதிய பாரதம் உதயமானது.

இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்

1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.


இந்தியக் குடியரசு தினம்

1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு,  இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

குடியரசு என்பதன் பொருள்

குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.

குடியரசு தினக் கொண்டாட்டம்

இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய  மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.

இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.

#வாழ்க_பாரதம்!!!! #ஜெய்கிந்த்!!! #republic_day


வியாழன், 23 ஜனவரி, 2020

இன்றைய பெண் குழந்தைகள்..!நாளைய சாதனைப் பெண்மணிகள்…தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24.


        இன்றைய பெண் குழந்தைகள்..!நாளைய சாதனைப் பெண்மணிகள்…!     

        பெண் குழந்தையைப்பாதுகாப்போம்: பெண்மையைப்  போற்றுவோம் ...!

பெண் குழந்தைகள் வாழும் வீடு...அழகியதேவதைகள் வாழும் வீடு..

பெண் குழந்தைகளை பெருமை படுத்தும் விதமாக ஜனவரி 24 ஆம் தேதி (இன்று)  தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.                                               

''மங்கையராய் பிறப்பதற்கே நல்ல  மாதவம்செய்திட வேண்டுமம்மா''… என்று பெண்கள்  பிறப்பின்  சிறப்பு பற்றி கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை  கூறியுள்ளார்.பெண்களை போற்றுவதற்குகிடைத்தவாய்ப்புகள் அனைத்தையும், கவிஞர்களும்,புலவர்களும்,  நன்குபயன்படுத்திவிட்டனர்.நம் இந்தியாவில்நதிகள் அனைத்திற்கும் பெண்களின்பெயரையே வைத்து பெண்மைக்கு பெருமைசேர்த்துள்ளனர் .நம்மைத் தாங்கும் பூமியைபூமாதேவி என்றும், நிலவை பெண்ணாகஉருவகப்படுத்துவதும் காலம் காலமாகநடந்து வருகிறது.

தொல்காப்பியம், போன்ற இலக்கண நூல்கள், சங்கஇலக்கியங்கள்,நீதிநூல்கள்,காப்பியங்கள் போன்ற நூல்களில்பெண்ணை- மனைவி, கிழத்தி, காமக்கிழத்தி, நல்லோள், காதலி, கிழவி, கிழவோள், பேடை, பெட்டை, பெடை, பெண்,பாட்டி, தோழி, செவிலி, விறலி, பரத்தை, ஒண்டொடி மாதர், அரிவை, வாலிழைமகளிர், மகளிர், ஒளியிழாய், நறுநுதால், திருந்திழாய், நெட்டிருங்கூந்தலாள், நன்னுதால், கொய்தளிர்மேனியர், சுடர்நுதல்குறுமகள், மடமகள், அணிஇழையாள், கூந்தல் விறலியர், வளைமகள், மெல் இயல்மகளிர், சில் வளைவிறலி, மனைமாண்இனியோள், பொற்றொடி மகளிர், தென்தமிழ்ப் பாவை, கற்பின் கொழுந்தே!, பொற்பின் செல்வி, கனங்குழை மாதர்,நறுநுதலாள், இல்லாள்,கட்கினியாள், தாயென்பாள், நற்பெண்டிர், பண்புடையாள், ஈன்றாள், மடவார், நிலைநின்ற பெண்,இனியார் தோள் போன்ற சிறப்பானசொற்களை பாடல்வரிகளில்கையாண்டுள்ளனர் .

வாழ்க்கைக்குப் பெண்ணின் பங்கு மிகவும்முக்கியம் என்பதை அறிந்து , அன்றேசங்ககாலப்  புலவர்கள் பெண்களின்பெருமையயும், முக்கியத்துவத்தையும்பாடல்களாக  அமைத்தனர். இப்பாடல்கள்2500 ஆண்டுகளாக மக்கள் மத்தியில்  பெண்பெருமை பேசிக்கொண்டு உயிருடன்உலாவி வரும் சீரினையும் காண்கின்றோம். இதே  போன்று சங்ககாலத்தில் ஐம்பதுக்கும்மேற்பட்ட பெண்பாற்  புலவர்கள்இருந்துள்ளனர் .

வரலாற்றில்  போற்றத்தகுந்தவகையில் ஔவையார்,காக்கைப்பாடினியார்,ஆண்டாள்,வேலு நாச்சியார்,ராணி லட்சுமிபாய் ,சாவித்திரி பாபுலே , சரோஜினி நாயுடு , ராணி மங்கம்மாள்,விஜயலட்சுமி பண்டிட் ,டாகடர் .முத்துலட்சுமி , தில்லையாடிவள்ளியம்மை, அன்னைதெரசா,இந்திராகாந்தி, எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி ,  கல்பனா சாவ்லா  போன்றோர் சிறந்தசாதனை பெண்மணியாக  திகழ்ந்து  பெண்மைக்கே பெருமை சேர்த்துள்ளார் .

பத்தொன்பதாம் நுாற்றாண்டில் வாழ்ந்ததமிழறிஞர் மாயூரம் வேதநாயகர்  பெண்கள்முன்னேற்றத்திற்காக அவர்செய்திருக்கும்தொண்டுகள் அளவிடமுடியாது.பெண்களின் முன்னேற்றத்திற்காக.1869-ல் பெண்களுக்கெனத்தனிப்பள்ளிஒன்றை மாயூரத்தில் சொந்தமுறையில்தொடங்கி நடத்தினார்.

வேதநாயகாரின் 'பெண்மதி மாலை', 'பெண்கல்வி', 'பெண் மானம்' என்னும்நுால்களிலும் பெண்களின்முன்னேற்றத்திற்கான பலஅரியசிந்தனைகள் இடம் பெற்றுள்ளன. தமிழில்பெண்கள் முன்னேற்றத்திற்காகப்பாடுபட்டசான்றோர்கள் பட்டியலில்வேதநாயகருக்குமுதல் இடம் உண்டு.

பெண் என்பவள் சமூக வாழ்வில் ஒருபிரிக்கமுடியாத அங்கம். அவள்இல்லையேல் வீடும், நாடும் இயங்கமுடியாது . அவள் இயங்கும் சக்தியாகவும், இயக்குவிக்கும் சக்தியாகவும் காணப்படுகிறாள். வரலாற்றுக்கு முற்பட்டகாலங்களிலும், சங்ககாலங்களிலும்,அவளின் அறிவாற்றல், சிறப்புகள், பெருமைகள் போன்றவற்றைபல்வேறு  நூல்களின்  வாயிலாகஅறிகின்றோம்.பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலமாக வரலாற்றின்வளர்ச்சி காலத்தில், தனது  திறமையை யும், ஆற்றலையும்,வெளிப்படுத்தி சமூகத்தில்பெண்கள் சிறந்த நிலையைஅடைந்துள்ளனர்  என்பதுவெளிப்படையான உண்மை . பெண்குழந்தை பிறந்தவுடன் குடும்பங்களில் ஏற்படும் மகிழ்ச்சியை  அளவிட  முடியாது.பெண் குழந்தைகளை 'மகாலட்சுமி' எனவும், 'ஏஞ்சல் ' எனவும், ‘பர்கத்‘ எனவும்அவரவர் மதம், இனத்திற்கு ஏற்பஒவ்வொருவகையான பெயர்களில் ஏற்றுக் கொள்ளும்பக்குவம் நமக்கு உண்டு.

பழமைவாதம், மூடநம்பிக்கைகளை ஒருகாலிலும், தவறான எண்ணங்கள், புரிதல்களை மற்றொரு காலிலும் கட்டிக்கொண்டு பயணிக்காமல் எந்த திசையைநோக்கி பயணித்தால்,அவர்களை வழி  நடத்தலாம் என்று , நாம் அவர்களுடன்  பயணிக்க வேண்டும் . பெண் குழந்தைகள்தடம் மாறி செல்லாமலிருக்க , அவர்களையும் அவர்களின் உள்ளத்தின்உணர்வுகளையும் புரிந்து கொண்டு  அவர்களை நல்ல முறையில்  வழிநடத்தவேண்டும் .

இன்று பல சிறுமிகள்காதல்வசப்படுகிறார்கள்.  இதற்கு காரணம்பெற்றோர்கள்தான். சில பெற்றோர்கள்சுதந்திரமாக வளர வேண்டும் என்றுகுழந்தைகளின் நடத்தைகளை கண்டுகொள்ளமாட்டார்கள். இன்னும் சிலபெற்றோர்கள் தங்கள் குழந்தையிடம்  மிகவும் கண்டிப்புடனும் நந்துகொள்வார்கள். இவை இரண்டுமே தவறு.குழந்தைகளிடம்சில நெறிமுறைகளோடும், நட்போடும்  பழகவேண்டும்.

 அதற்கு முதலில் அவர்கள் பேசுவதைகாதுகொடுத்து கேட்க வேண்டும். அவர்களின் ஆண் நண்பர்களை அழைத்துப்பேச வேண்டும். அவர்களின் நட்பைஆதரிக்க வேண்டும்.அதே நேரம்  அவர்களுக்கான எல்லையையும்அவர்களின் மனம்  நோகாதவாறு புரியவைக்க வேண்டும்.உங்கள் பெண்குழந்தையின் மேல் நீங்கள்  முழு நம்பிக்கை  வைத்திருப்பதை அவர்களுக்குத்தெரியப்படுத்துவதும் அவசியம். அப்போதுதான் அவர்களின் இன்பம், துன்பம், குழப்பங்கள்,முடிவு எடுத்தல்  போன்றவற்றை உங்களுடன்பகிர்ந்துகொள்வார்கள்.

 பெண் குழந்தையின்  உடல் பற்றியும், பாலியல் தீண்டல்களில் இருந்துஅவர்களைப்  பாதுகாக்க அவர்களுக்குக்கற்றுத் தரவேண்டும். குழந்தைக்கு விபரம்தெரிந்ததுமே, அவர்களுக்கு ‘’குட் டச், பேட்டச்’’ பற்றிச் சொல்லி கொடுப்பதுகாலத்தின்அவசியமாகும். உங்களைச்சுற்றியிருக்கும்பெண் பிள்ளைகளை  நீங்கள் கொண்டாட வேண்டாம். அவர்களின்குழந்தைப் பருவக்கொண்டாட்டத்தைசிதைக்காமல் இருந்தால் போதுமானது. மேலும் நீங்கள் கடந்து செல்லும் ஒவ்வொருபெண் குழந்தைக்கும் உங்களால் முடிந்தகுறைந்தபட்ச பாதுகாப்பைக் கொடுத்துவாழவிடுங்கள். அதுவே அவர்களுக்கு பெரிய வாழ்த்தாக அமையும்!.

இந்தியாவில் பெண் குழந்தைகளைவழிநடத்தும் விதம் காலம் காலமாகஅன்புடனும், அரவணைப்புடனும்தொடர்கிறது. பெரியோரை மதிப்பது, சமூகசிந்தனைகளை வளர்ப்பது  போன்றவற்றை  பெண் குழந்தைகளுக்கு  கற்றுக்கொடுக்கிறோம்..

பெண் குழந்தைகளுக்கு நல்வழியை சிறந்தகல்வி மூலம் கற்று கொடுக்கவேண்டும்.அவர்களை சரியான பாதையில்கால் பதிக் வைத்து, அவர்களுடன் கைகோர்த்து,அவர்கள் செல்லும் பாதையைசெம்மைப்படுத்தி, வழித்தடங்களில்இருக்கும் கரடு முரடுகளையும், முட்புதர்களையும்,அகற்றி விட்டாலேபோதும். சிறந்த இலக்கை அடையும் சக்தி,பெண் குழந்தைகளிடம் உள்ளது.எந்த விதகேள்விகளுக்கும் அவர்களாவே  ஒரு சிறந்ததிறன் மிக்க பதிலை தேர்ந்தெடுத்து. எந்தஒரு சூழ்நிலையிலும்  சிக்கல்களைசமாளித்து  வெற்றி வாகை சூட சிறந்த சமூகசிந்தனையுடன் கூடிய கல்வி அவர்களுக்குவழங்கப்பட வேண்டும். . கல்வி தான் சிறந்தபாதுகாப்பு என்பதை பெண்களுக்குஉணர்த்த வேண்டும்.

ஆறுதலாக இளைப்பாறும் மடிஒருதாயாகவோ... தந்தையாகவோ... சிறந்தநண்பராகவோ... இருக்க வேண்டும் .எனசொல்லி கொடுக்க வேண்டும். பெண்களைவெறும் கவர்ச்சிப் பொருளாகவும் , அழகுப்பதுமைகளாகவும்         பெண்குழந்தைகளை காட்டாமல்,தோல்விகண்டாலும், துவண்டு போகாமல், அதைஎதிர்த்துப்  போரிடும்குணத்தையும்,தன்னைத்  தானே செதுக்கிக்கொண்டு ஒருகுடும்பத்தையும்,சமூகத்தையும்  அவர்களால்மட்டுமே முன்னேற்ற முடியும் என்பதை நாம்அனைவரும் உணரவேண்டும்.

பெண் குழந்தைகள் அழகுப்பதுமைகள்அல்ல... அறிவுச்சுடர்கள்.

இன்றைய  பெண் குழந்தைகள்..! நாளைய  சாதனைப்  பெண்மணிகள்…!

 பெண் குழந்தையைப் பாதுகாப்போம்:பெண்மையை போற்றுவோம் ...!

த.புவனேஸ்வரிமகேந்திரன், எம்.ஏ.எம்.எட்.
மதி கல்வியகம்,திருநெல்வேலி.

இன்றைய பெண் குழந்தைகள்..!நாளைய சாதனைப் பெண்மணிகள்…!


     இன்றைய பெண் குழந்தைகள்..!நாளைய சாதனைப் பெண்மணிகள்…!              பெண் குழந்தையைப்பாதுகாப்போம்பெண்மையைப்  போற்றுவோம் ...! 
பெண் குழந்தைகள் வாழும் வீடு...அழகியதேவதைகள் வாழும் வீடு...
பெண் குழந்தைகளை பெருமை படுத்தும் விதமாக ஜனவரி 24 ஆம் தேதி (இன்று)  தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.     ''மங்கையராய் பிறப்பதற்கே நல்ல  மாதவம்செய்திட வேண்டுமம்மா''… என்று பெண்கள்  பிறப்பின்  சிறப்பு பற்றி கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை  கூறியுள்ளார்.பெண்களை போற்றுவதற்குகிடைத்தவாய்ப்புகள் அனைத்தையும்கவிஞர்களும்,புலவர்களும்,  நன்குபயன்படுத்திவிட்டனர்.நம் இந்தியாவில்நதிகள் அனைத்திற்கும் பெண்களின்பெயரையே வைத்து பெண்மைக்கு பெருமைசேர்த்துள்ளனர் .நம்மைத் தாங்கும் பூமியைபூமாதேவி என்றும்நிலவை பெண்ணாகஉருவகப்படுத்துவதும் காலம் காலமாகநடந்து வருகிறது.
தொல்காப்பியம்போன்ற இலக்கணநூல்கள் ,சங்க இலக்கியங்கள்,நீதிநூல்கள்,காப்பியங்கள் போன்ற நூல்களில்பெண்ணைமனைவிகிழத்திகாமக்கிழத்திநல்லோள்காதலிகிழவிகிழவோள்பேடைபெட்டைபெடைபெண்,பாட்டிதோழிசெவிலிவிறலிபரத்தைஒண்டொடி மாதர்அரிவைவாலிழைமகளிர்மகளிர்ஒளியிழாய்நறுநுதால்திருந்திழாய்நெட்டிருங்கூந்தலாள்நன்னுதால்கொய்தளிர்மேனியர்சுடர்நுதல்குறுமகள்மடமகள்அணிஇழையாள்கூந்தல் விறலியர்வளைமகள்மெல் இயல்மகளிர்சில் வளைவிறலிமனைமாண்இனியோள்பொற்றொடி மகளிர்தென்தமிழ்ப் பாவைகற்பின் கொழுந்தே!, பொற்பின் செல்விகனங்குழை மாதர்,நறுநுதலாள்இல்லாள்,கட்கினியாள்தாயென்பாள்நற்பெண்டிர்பண்புடையாள்ஈன்றாள்மடவார்நிலைநின்ற பெண்,இனியார் தோள் போன்ற சிறப்பானசொற்களை பாடல்வரிகளில்கையாண்டுள்ளனர் .
வாழ்க்கைக்குப் பெண்ணின் பங்கு மிகவும்முக்கியம் என்பதை அறிந்து , அன்றேசங்ககாலப்  புலவர்கள் பெண்களின்பெருமையயும்முக்கியத்துவத்தையும்பாடல்களாக  அமைத்தனர்இப்பாடல்கள்2500 ஆண்டுகளாக மக்கள் மத்தியில்  பெண்பெருமை பேசிக்கொண்டு உயிருடன்உலாவி வரும் சீரினையும் காண்கின்றோம்இதே  போன்று சங்ககாலத்தில் ஐம்பதுக்கும்மேற்பட்ட பெண்பாற்  புலவர்கள்இருந்துள்ளனர் .
வரலாற்றில்   போற்றத்தகுந்தவகையில்ஔவையார் ,காக்கைப்பாடினியார்,ஆண்டாள்,வேலு நாச்சியார்,ராணி லட்சுமிபாய் ,சாவித்திரி பாபுலே , சரோஜினி நாயுடு , ராணி மங்கம்மாள்,விஜயலட்சுமி பண்டிட் ,டாகடர் .முத்துலட்சுமி , தில்லையாடிவள்ளியம்மைஅன்னைதெரசா,இந்திராகாந்திஎம்.எஸ்.சுப்புலக்ஷ்மி ,  கல்பனா சாவ்லா  போன்றோர் சிறந்தசாதனை பெண்மணியாக  திகழ்ந்து  பெண்மைக்கே பெருமை சேர்த்துள்ளார் .
பத்தொன்பதாம் நுாற்றாண்டில் வாழ்ந்ததமிழறிஞர் மாயூரம் வேதநாயகர்  பெண்கள்முன்னேற்றத்திற்காக அவர்செய்திருக்கும்தொண்டுகள் அளவிடமுடியாது.பெண்களின் முன்னேற்றத்திற்காக.1869-ல் பெண்களுக்கெனத்தனிப்பள்ளிஒன்றை மாயூரத்தில் சொந்தமுறையில்தொடங்கி நடத்தினார்.
வேதநாயகாரின் 'பெண்மதி மாலை', 'பெண்கல்வி', 'பெண் மானம்என்னும்நுால்களிலும் பெண்களின்முன்னேற்றத்திற்கான பலஅரியசிந்தனைகள் இடம் பெற்றுள்ளனதமிழில்பெண்கள் முன்னேற்றத்திற்காகப்பாடுபட்டசான்றோர்கள் பட்டியலில்வேதநாயகருக்குமுதல் இடம் உண்டு.
பெண் என்பவள் சமூக வாழ்வில் ஒருபிரிக்கமுடியாத அங்கம்அவள்இல்லையேல் வீடும்நாடும் இயங்கமுடியாது . அவள் இயங்கும் சக்தியாகவும்இயக்குவிக்கும்சக்தியாகவும்காணப்படுகிறாள்வரலாற்றுக்கு முற்பட்டகாலங்களிலும்சங்ககாலங்களிலும்,அவளின் அறிவாற்றல்சிறப்புகள்பெருமைகள் போன்றவற்றைபல்வேறு  நூல்களின்   வாயிலாகஅறிகின்றோம்.பல்வேறுஆராய்ச்சிகளின் மூலமாக வரலாற்றின்வளர்ச்சி காலத்தில்தனது  திறமையை யும்ஆற்றலையும்,வெளிப்படுத்தி சமூகத்தில்பெண்கள் சிறந்த நிலையைஅடைந்துள்ளனர்  என்பதுவெளிப்படையான உண்மை .பெண்குழந்தை பிறந்தவுடன் குடும்பங்களில்ஏற்படும் மகிழ்ச்சியை  அளவிட  முடியாது.பெண் குழந்தைகளை 'மகாலட்சுமிஎனவும், 'ஏஞ்சல் ' எனவும், ‘பர்கத்‘ எனவும்அவரவர் மதம்இனத்திற்கு ஏற்பஒவ்வொருவகையான பெயர்களில் ஏற்றுக் கொள்ளும்பக்குவம் நமக்கு உண்டு.
பழமைவாதம்மூடநம்பிக்கைகளை ஒருகாலிலும்தவறான எண்ணங்கள்புரிதல்களை மற்றொரு காலிலும் கட்டிக்கொண்டு பயணிக்காமல் எந்த திசையைநோக்கி பயணித்தால்,அவர்களை வழி  நடத்தலாம் என்று , நாம் அவர்களுடன்  பயணிக்க வேண்டும் . பெண் குழந்தைகள்தடம் மாறி செல்லாமலிருக்க , அவர்களையும் அவர்களின் உள்ளத்தின்உணர்வுகளையும் புரிந்து கொண்டு  அவர்களை நல்ல முறையில்  வழிநடத்தவேண்டும் . 
இன்று பல சிறுமிகள்காதல்வசப்படுகிறார்கள்.  இதற்கு காரணம்பெற்றோர்கள்தான்சில பெற்றோர்கள்சுதந்திரமாக வளர வேண்டும் என்றுகுழந்தைகளின் நடத்தைகளை கண்டுகொள்ளமாட்டார்கள்இன்னும் சிலபெற்றோர்கள் தங்கள் குழந்தையிடம்  மிகவும் கண்டிப்புடனும் நந்துகொள்வார்கள்இவை இரண்டுமே தவறு.குழந்தைகளிடம்சில நெறிமுறைகளோடும்நட்போடும்  பழகவேண்டும்.
 அதற்கு முதலில் அவர்கள் பேசுவதைகாதுகொடுத்து கேட்க வேண்டும்அவர்களின் ஆண் நண்பர்களை அழைத்துப்பேச வேண்டும்அவர்களின் நட்பைஆதரிக்க வேண்டும்.அதே நேரம்  அவர்களுக்கான எல்லையையும்அவர்களின் மனம்  நோகாதவாறு புரியவைக்க வேண்டும்.உங்கள் பெண்குழந்தையின் மேல் நீங்கள்  முழு நம்பிக்கை  வைத்திருப்பதை அவர்களுக்குத்தெரியப்படுத்துவதும் அவசியம்அப்போதுதான் அவர்களின் இன்பம்துன்பம்குழப்பங்கள்,முடிவு எடுத்தல்  போன்றவற்றை உங்களுடன்பகிர்ந்துகொள்வார்கள்.
 பெண் குழந்தையின்  உடல் பற்றியும்பாலியல் தீண்டல்களில் இருந்துஅவர்களைப்  பாதுகாக்க அவர்களுக்குக்கற்றுத் தரவேண்டும்குழந்தைக்கு விபரம்தெரிந்ததுமேஅவர்களுக்கு ‘’குட் டச்பேட்டச்’’ பற்றிச் சொல்லி கொடுப்பதுகாலத்தின்அவசியமாகும்உங்களைச்சுற்றியிருக்கும்பெண் பிள்ளைகளை  நீங்கள் கொண்டாட வேண்டாம்அவர்களின்குழந்தைப் பருவக்கொண்டாட்டத்தைசிதைக்காமல் இருந்தால் போதுமானதுமேலும் நீங்கள் கடந்து செல்லும் ஒவ்வொருபெண் குழந்தைக்கும் உங்களால் முடிந்தகுறைந்தபட்ச பாதுகாப்பைக் கொடுத்துவாழவிடுங்கள்அதுவே அவர்களுக்கு பெரிய வாழ்த்தாக அமையும்!.
இந்தியாவில் பெண் குழந்தைகளைவழிநடத்தும் விதம் காலம் காலமாகஅன்புடனும்அரவணைப்புடனும்தொடர்கிறதுபெரியோரை மதிப்பதுசமூகசிந்தனைகளை வளர்ப்பது  போன்றவற்றை  பெண் குழந்தைகளுக்கு  கற்றுக்கொடுக்கிறோம்..
பெண் குழந்தைகளுக்கு நல்வழியை சிறந்தகல்வி மூலம் கற்று கொடுக்கவேண்டும்.அவர்களை சரியான பாதையில்கால் பதிக் வைத்துஅவர்களுடன் கைகோர்த்து,அவர்கள் செல்லும் பாதையைசெம்மைப்படுத்திவழித்தடங்களில்இருக்கும் கரடு முரடுகளையும்முட்புதர்களையும்,அகற்றி விட்டாலேபோதும்சிறந்த இலக்கை அடையும் சக்தி,பெண் குழந்தைகளிடம் உள்ளது.எந்த விதகேள்விகளுக்கும் அவர்களாவே  ஒரு சிறந்ததிறன் மிக்க பதிலை தேர்ந்தெடுத்துஎந்தஒரு சூழ்நிலையிலும்  சிக்கல்களைசமாளித்து  வெற்றி வாகை சூட சிறந்த சமூகசிந்தனையுடன் கூடிய கல்வி அவர்களுக்குவழங்கப்பட வேண்டும். . கல்வி தான் சிறந்தபாதுகாப்பு என்பதை பெண்களுக்குஉணர்த்த வேண்டும்.
ஆறுதலாக இளைப்பாறும் மடிஒருதாயாகவோ... தந்தையாகவோ... சிறந்தநண்பராகவோ... இருக்க வேண்டும் .எனசொல்லி கொடுக்க வேண்டும்பெண்களைவெறும் கவர்ச்சிப் பொருளாகவும் , அழகுப்பதுமைகளாகவும்         பெண்குழந்தைகளை காட்டாமல்,தோல்விகண்டாலும்துவண்டு போகாமல்அதைஎதிர்த்துப்  போரிடும்குணத்தையும்,தன்னைத்  தானே செதுக்கிக்கொண்டு ஒருகுடும்பத்தையும்,சமூகத்தையும்  அவர்களால்மட்டுமே முன்னேற்ற முடியும் என்பதை நாம்அனைவரும் உணரவேண்டும்.
பெண் குழந்தைகள் அழகுப்பதுமைகள்அல்ல... அறிவுச்சுடர்கள்.
இன்றைய  பெண் குழந்தைகள்..! நாளைய  சாதனைப்  பெண்மணிகள்…!
 பெண் குழந்தையைப் பாதுகாப்போம்:பெண்மையை போற்றுவோம் ...!