செவ்வாய், 31 டிசம்பர், 2019

2019ஆம் ஆண்டின் மோசமான பாஸ்வேர்ட்கள் ..!!

2019ஆம் ஆண்டின் மோசமான பாஸ்வேர்ட்கள்
..!!

123456.. இது உங்கள் பாஸ்வேர்டா? நீங்கள் படிக்க வேண்டிய பதிவு இது..!!


இன்றைய டிஜிட்டல் சூழ்நிலையில், நாம் பயன்படுத்தும் சாதனங்கள் அனைத்திலும் பாஸ்வேர்ட்கள் அமைக்க வேண்டியுள்ளது. இந்த சாதனங்களின் எண்ணிக்கை அதிகமாவதால், பயனாளர்கள், பல பாஸ்வேர்ட்களை நினைவில் கொள்ள சிரமப்பட்டு, ஒரே பாஸ்வேர்டினை அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்துகின்றனர்.

நாம் பயன்படுத்தும் மொபைல், கணினிகள், டிஜிட்டல் வாலெட்கள், இ-மெயில்கள், நெட்பேங்கிங் உள்ளிட்ட பலவற்றிற்கும் பாஸ்வேர்ட்களை விரல் நுனியில் நினைவில் வைத்திருப்பது சற்று கடினமான வேலை தான்.

நமக்கு எளிதாக நினைவில் நிற்கும் பாஸ்வேர்ட்கள், ஹேக்கிங்கில் ஈடுபடுவோர் திருட்டு வேலைகளில் ஈடுபட மிக எளிதாக அனுமதிக்கின்றோம் என்பதே உண்மை.

தற்போது 2019ஆம் ஆண்டின் மோசமான Pயளளறழசன-களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது :

சர்வதேச அளவில் 2019ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட எளிதாக கணிக்கக்கூடிய 10 பாஸ்வேர்ட்களின் பட்டியலை, றழசளவ pயளளறழசனள ழக 2019 என்ற பெயரில் ளுpடயளா னுயவய நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் இப்பட்டியல் வெளியிடப்பட்டாலும் இதில் இடம்பெறும் பாஸ்வேர்ட்களில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. டாப் 10ல் உள்ளவையே மாறி மாறி மீண்டும் பட்டியலில் இடம் பிடித்து வருகிறது.

பட்டியல் விவரம் பின்வருமாறு :

1. 123456

2. 123456789

3. ஙறநசவல

4. pயளளறழசன

5. 1234567

6. 12345678

7. 12345

8. டைழஎநலழர

9. 111111

10. 123123

நீங்கள் இந்த புத்தாண்டிற்கு ஒரு தீர்மானத்தை எடுக்க நினைக்கிறீர்கள் என்றால் உங்கள் பாஸ்வேர்ட்களை மேம்படுத்த சபதம் செய்யுங்கள். மின்னஞ்சல், வங்கி மற்றும் கிரெடிட் கார்டுகள் போன்ற உங்கள் முக்கியமான கணக்குகளுக்கு குறைந்தபட்சம் வலுவான மற்றும் தனித்துவமான பாஸ்வேர்ட்களை உருவாக்கி கொள்ளுங்கள்.

பாஸ்வேர்டை கவனமாக கையாள சில டிப்ஸ் :

பாஸ்வேர்டுகள் குறைந்தபட்சம் 8 எழுத்துக்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் அல்லது 10 முதல் 12 எழுத்துக்கள் கொண்டதாக இருக்க வேண்டும்.

உங்கள் பாஸ்வேர்டு குழப்பமானதாக இருக்க வேண்டும். அதாவது பாஸ்வேர்டு எளிதாக இருக்கக்கூடாது.

ஒரு ஆங்கிலச் சொற்றொடரை எடுத்துக்கொண்டு அதில் உள்ள வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை மட்டும் வரிசையாக எழுதிவிட்டுப் பின்னர் இடையிடையே எண்களையும், நிறுத்தல் குறிகளையும் சேர்க்கலாம்.

திருமண நாள், பிறந்த நாள், செல்லப் பிராணியின் பெயர், பள்ளியின் பெயர் நினைவில் கொள்ள எளிதாக இருக்கும். ஆனால், இத்தகைய பாஸ்வேர்ட்கள் பாதுகாப்பற்றவையாக உள்ளன.

நம் பாஸ்வேர்டை அவ்வப்போது அல்லது மாதத்திற்கு ஒரு முறையாவது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். பாஸ்வேர்ட் எவ்வளவு சிக்கலானதாக, பாதுகாப்பானதாக அமைக்கப்பட்டிருந்தாலும், அடிக்கடி மாற்றப்பட வேண்டும். இல்லையெனில் அது இணையக் கள்வர்கள் கையில் சென்றுவிடும் அபாயம் இருக்கிறது.

பாஸ்வேர்ட்டை மூன்று வகைகளாக பிரிக்கலாம்...

ரேஅடிநசள (1இ2இ3...)

யுடிhயடிநவள (யஇடிஇஉ...)

ஊhயசயஉவநசள (!இ;இசூ...)

123456, யடிஉன இந்த மாதிரியான பாஸ்வேர்டுகள் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தக்கூடியவை. ஆனால், நம்முடைய பாஸ்வேர்ட்டை யாரும் கண்டுபிடிக்க முடியாத வகையில் வைக்க வேண்டும்.

நீங்கள் வைக்கும் பாஸ்வேர்டில் கண்டிப்பாக ரேஅடிநசளஇ யுடிhயடிநவளஇ ஊhயசயஉவநசள என மூன்று நிச்சயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

டிஜிட்டல் உலகில் பாஸ்வேர்ட் மிகவும் இன்றியமையாத ஒன்று...

பிறக்கும் புத்தாண்டில் உங்களின் பாஸ்வேர்ட்டை மாற்றி அமையுங்கள்...


திங்கள், 30 டிசம்பர், 2019

கோலம் போடுவதால் இவ்வளவு நன்மையா?


கோலம் போடுவதால் இவ்வளவு நன்மையா?தெரியாம போச்சே...!!
வாசலில் கோலம் போடுவதால் ஏற்படும் நன்மைகள்..!!

🌟கோலம் - இப்பெயரை கேட்டவுடன் அனைவரின் மனதிலும் தோன்றக்கூடிய ஒரே விஷயம் எதுவென்றால் அது அழகுதான். ஆனால், அழகிற்காக மட்டும் கோலம் போடுகிறார்கள் என்றால் கிடையாது. பல மருத்துவக் காரணங்களுக்காகவும், காலம் காலமாக கடைபிடித்து வரும் சம்பிரதாயத்திற்காகவும் கோலம் போடுகிறார்கள். வாசலில் கோலம் போடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.


கோலம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் :

🌟காலையிலேயே குனிந்து, நிமிர்ந்து கோலம் போடுவதால் உடலில் இருக்கும் இரத்த ஓட்டமானது சீராகிறது.

🌟கோலத்தின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை, ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளி என கோடுகளால் இணைக்கும் கோலம் உங்கள் சிந்தனையை ஒருநிலைப்படுத்துவதோடு உங்கள் சிந்தனை சிதறல்களை குறைக்கும் ஒரு பயிற்சியாகும்.

🌟மேலும் புள்ளிக்கோலத்தை போடும்;போது உங்களது கண் ஒரு புள்ளியை கூர்ந்து கவனிப்பதால் உங்களின் கண்பார்வையும் அதிகரிக்கின்றது. இது உங்கள் கண்களுக்கு நீங்கள் கொடுக்கும் இன்னொரு பயிற்சியாகும்.

🌟பசு சாணத்தாலோ, தண்ணீராலோ வாசலை தெளிக்கும்போது, வாசலில் இருக்கும் கிருமிகள் விலகுகிறது. இதனால் ஆரோக்கியமான சூழல் உருவாகிறது.

🌟விரல்களால் கோல மாவை எடுத்து, வளைத்து கோலம் போடும்போது, அது நம் கைவிரல்களுக்கு நல்ல பயிற்சியாக அமைகிறது. இதனால் நரம்பு மண்டலங்கள் நன்றாக வேலை செய்கின்றன. புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.

🌟கோலம் போடுவதால் நம் கற்பனை திறனும், நினைவாற்றலும் வளர்கிறது.

🌟அழகாக கோலம் போடுபவரின் கையெழுத்து பார்க்க அழகாக இருக்கும்.

🌟குனிந்து பெருக்குதல், குனிந்து கோலமிடுதல் இவையெல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக வருகிறது. இடுப்புப் பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலை தரக்கூடியது.

🌟கோலமிடுதல் என்பது வீட்டை நல்ல முறையில் அலங்கரித்தல் மற்றும் வரவேற்றல், உபசரிக்கும் குணம், மேலும் வீடு மங்களகரமாக இருக்கிறது என்பதற்காகவும் போடப்படுகிறது.

🌟தினமும் விடியற்காலையில் கோலம் போடுவதால் வீட்டிற்கு மட்டும் நன்மை கிடைப்பதில்லை. அதை போடும் பெண்களுக்கும் புத்திக்கூர்மை, ஞாபகசக்தி, உற்சாகம், செயலில் கவனம், பொறுமை, பிரச்சனைகளை கையாளும் திறன் ஆகியவையும் கிடைக்கப்பெறுகிறது.

🌟கோலத்தால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது. அதனால் கோலம் போடுவதை ஒரு கடமையாக செய்யாமல் நமக்கும், இந்த பூமிக்கும் நன்மை கிடைக்கிறது என்ற நோக்கத்தோடு செய்வோம்.


Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

குளிர்காலத்தில் எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?



குளிர்காலத்தில் எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

குளிர்காலத்திற்கு ஏற்ற உணவுகள் !!



🍜 குளிர்காலங்களில் ஏற்படும் கடும் குளிரிலிருந்து காத்துக்கொள்ள நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

🍜 மழை, பனி போன்ற குளிர்காலத்தில் சுற்றுப்புறச்சூழலின் வெப்பம் குறைவாக இருப்பதால் உடலில் ஜீரண சக்தி குறைவாக இருக்கும். அதனால் நாம் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

🍜 உடல் வெப்பத்தை தக்க வைக்கும் உணவுகளை உண்பதன் மூலம் உடலை குளிர்காலத்திற்கு ஏற்ற வகையில் வைத்துக்கொள்ள இயலும். குளிர்காலத்திற்கு ஏற்ற உணவுகள் என்னென்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

குளிர்காலத்தில் சாப்பிட வேண்டியவை :

🍜 குளிர்காலங்களில் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் நீங்கள் அவதிப்பட நேரிடலாம். பாக்டீரியா மற்றும் வைரஸ்களினால் பரவும் நோய்களை எதிர்க்கும் சக்தி பூண்டில் உள்ளது. இதனால், குளிர்காலத்தில் தொண்டைகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு 2-3 பூண்டு பற்களை மென்று விழுங்குவதன் மூலம் தீர்வு காண முடியும்.

🍜 குளிர்காலங்களில் உணவில் தேனை சேர்த்து கொள்வது மிகச்சிறந்த ஒன்றாகும். இது ஜீரண சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்த உதவும்.

🍜 குளிர்காலங்களில் சரியான உணவுமுறையை பெறுவதற்கும், தேவையான பிராணவாயுவை உட்கொள்வதற்கும், வேர்க்கடலையை சிறிதளவு உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

🍜 பாதாம் பருப்பு அதிகளவில் பலன் தரக்கூடியது. இதன்மூலம் குளிர்காலங்களில் ஏற்படும் மலச்சிக்கலை தவிர்க்க முடியும்.

🍜 நீர்ச்சத்துக்கள் நிறைந்த சுரைக்காய், பூசணிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், வெள்ளரி போன்ற காய்கறிகளை குறைந்த அளவிலேயே சாப்பிடலாம்.

🍜 காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.

🍜 இரவு தூங்குவதற்கு முன்பு பசும்பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இதனால், ஜலதோஷம் தொடர்பான பிரச்சனைகள் வராது.

சாப்பிடக்கூடாதவை :

🍜 உணவில் இனிப்பு அதிகம் சேர்த்து கொள்ளக்கூடாது.

🍜 எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது.

🍜 இரவு உணவில் பச்சைப் பயிறு, கேழ்வரகு ஆகியவற்றை சேர்க்க வேண்டாம்.

🍜 சிலருக்கு மழைக்காலத்தில் எலுமிச்சை பழம் மற்றும் ஆரஞ்சு ஜுஸ் பருகினால் ஒத்துக்கொள்ளாது. அதனால், பருகாமல் இருப்பது நல்லது.

🍜 மழைக்காலங்களில் இரவில் கீரை வகைகளை அதிகம் சாப்பிடக்கூடாது.

🍜 பால், தயிர், வெண்ணெய் மற்றும் நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக்கூடாது.


குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது. ஏன் தெரியுமா?


குளித்து முடித்ததும் முதலில் தலையை துவட்டக்கூடாது... ஏன் தெரியுமா?

👉 ஒருவரை நாம் திட்டும்போது, மூதேவியே என்கிறோம். எதிர்மறை சக்திக்கு உதாரணமாக மூதேவியை நாம் குறிப்பிட்டாலும், தென்னிந்தியாவில் ஒரு காலத்தில், மூதேவி என்று அழைக்கப்படும் மூத்த தேவி வழிபாட்டிற்கு உரியவளாக இருந்திருக்கிறாள்.

தேவிகளின் தோற்றம் :

👉 புராணத்தின் படி, தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது, அதனிலிருந்து வெளிபட்ட ஆலகால விஷத்திலிருந்து பிறந்தவளே மூத்த தேவி என்றும், அதன்பிறகு வெளிப்பட்ட அமிர்தத்திலிருந்து பிறந்தவள் ஸ்ரீ தேவியாகிய லட்சுமி என்றும் தெரிகிறது. ஸ்ரீ தேவியாகிய லட்சுமிக்கு முன் தோன்றியவள் என்பதால், இவள் மூத்த தேவி என்றழைக்கப்படுகிறாள். இதுதான் பின் நாளில் மூதேவி என்று மாறிவிட்டது என்கிறார்கள்.

👉 அவளுடைய தோற்றத்தைப் பொறுத்த வரையில், ஆகம நூல்களின் படி மூத்த தேவி, அகோரமான மற்றும் அவலட்சணமான தோற்றத்தை உடையவள் என்றும், காக்கை கொடியினை ஏந்தியவள் என்றும் கூறப்படுகின்றனர்.

மூத்த தேவியின் வசிப்பிடம் :

👉 துர்வாடை, அழுக்குத்துணிகள், துன்பம், புலம்பல், அலங்கோலமாக ஆடுதல், எதிர்மறையான எண்ணங்கள், அடிக்கடி கொட்டாவி விடுதல், தீராத மனக்கஷ்டம், எப்போதும் அழுக்கு ஆடைகளை அணிதல் இவை அனைத்துமே மூதேவிக்குப் பிடித்த இடங்களாகும்.

மூதேவி நம் வீட்டில் தங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

👉 நமது வீட்டில் மூதேவி தங்காமல் இருப்பதற்கு தீபம், உப்பு, மஞ்சள், கண்ணாடி, பட்டு ஆடைகள், தேங்காய், பால், வெண்ணெய், மாவிலை, கோமியம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.

நடைமுறையில் பின்பற்ற வேண்டியவை :

👉 குளிக்கும்போதும் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள். குளிக்கும்போது, எடுத்தவுடன் தலைக்கு நீரை ஊற்றிக்கொள்ளக்கூடாது. முதலில் பாதத்தில் ஊற்றி, பிறகு உடலில் ஊற்றிக்கொண்டு கடைசியாகத்தான் தலையில் நீரை ஊற்ற வேண்டும். குளித்து முடித்ததும், துடைத்து கொள்ளும்போது முதலில் தலையை துவட்டக்கூடாது. பின்பக்க முதுகைத்தான் துடைக்க வேண்டும்.

👉 ஏனென்றால், நாம் தினமும் குளிக்கும்போது, நம் உடலில் வந்து அமர்வதற்கு மகாலட்சுமியும், அவரது அக்கா மூதேவியும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கொண்டு வாசலில் காத்துக்கொண்டு நிற்பார்களாம். நாம் குளித்து முடித்தவுடன் யார் முதலில் வந்து அமர்வது என்று அவர்களுக்குள் ஒரு போட்டி. முடிவில் அக்காதான் முதலில் சென்று உட்கார வேண்டும் என்கிற நியதிப்படி, நாம் குளித்து முடித்தவுடன், தலையை முதலில் துவட்டிக் கொண்டால், அங்கு மூதேவி வந்து அமர்வாள். அதனால், நம் புத்தி வேலை செய்யாது.

👉 ஆகவே, முதலில் முதுகை துடைக்க வேண்டும். அப்போதுதான் மூதேவி முதுகில் அமர்வாள். அடுத்தது நம் முகத்தை துடைக்கும்போது மகாலட்சுமி வந்து முகத்தில் அமர்வாள். எனவே நம் முகம் தெளிவாகவும், சென்ற இடமெல்லாம் நமக்கு அதிக வரவேற்பும் கிடைக்கும். முதலில் முகத்தை துடைத்து கொண்டால் மூதேவி வந்து அமர்ந்து நம்மை மற்றவர் வெறுப்புக்கு ஆளாக்கி விடுவாள்.

👉 எனவே மேற்கூறியவாறு நாம் குளித்ததும் முதலில் முகத்தை துடைக்காமல் புத்திசாலித்தனமாக முதுகை துடைத்து பின் முகத்தை துடைப்போமானால் ஸ்ரீதேவியின் அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.


சனி, 28 டிசம்பர், 2019

குழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசியங்கள்


குழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசியங்கள்
 
நவம்பர் மாதம் என்றதுமே நினைவுக்கு வருவது குழந்தைகள் தினம். அத்தகைய சிறப்பு மிக்க குழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசியங்களை பார்க்கலாம்.

நவம்பர் மாதம் என்றதுமே நினைவுக்கு வருவது குழந்தைகள் தினம். இதை நமது தேசம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகிறோம். உலகின் சிறப்பு வாய்ந்த தினங்களுள் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினம். எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிறவர்கள் என்று பெரியவர்கள் கூறும் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் தினம் குழந்தைகள் தினம். அத்தகைய சிறப்பு மிக்க குழந்தைகள் தினம் பற்றிய சில சுவாரசியங்கள்...

* வெள்ளை மனம் கொண்டவர்கள் குழந்தைகள். கள்ளமற்ற இந்த குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20-ம் நாள் சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் நவம்பர் 14-ம் நாள் இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு.

* 1889 நவம்பர் 14-ந் தேதி அலகாபாத்தில் நேரு பிறந்தார். பிரதமராக நேரு இருந்த போது, நாடு முழுவதும் குழந்தைகள், இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். இடைவிடாத பணியின் இடையே, குழந்தைகளுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

* நேரு, அரசியல் துறையில் தேர்ச்சியும், ஞானமும், அனுபவமும் எத்தனை பெற்றிருந்தும், உள்ளத்தால் குழந்தை மனதையும் பெற்று இருந்ததால், குழந்தைகளின் வளர்ச்சி, முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டினார். குழந்தைகளுக்கு சரியான முறையில் கல்வி போதிக்கப்பட, வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.


* உலகிலேயே அதிக அளவிலான குழந்தைகளைக் கொண்ட நாடுகளில் முக்கியமான நாடாக இந்தியா விளங்குகிறது. குழந்தைகள் மீது நேருவும், நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு வைத்திருந்ததால் தான் அவரது பிறந்தநாளை நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம். அவரது சிறந்த புகைப்படங் களுள் ஒன்று, குழந்தைகளோடு அவர் இருப்பதாக உள்ளது.

* இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்ற உண்மையை தெளிவுபடுத்துவதற்காக குழந்தைகள் தினத்தன்று பள்ளிகளில் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை, ஓவியம் என பல போட்டிகள் நடத்தப்படுகிறது.

* இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாமல், அனைத்துக் குழந்தைகளும் அடிப்படை கல்வி பெற்று முழு பாதுகாப்புடன் அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கம்.

* 1925-ம் ஆண்டு ஜெனீவாவில், குழந்தைகள் நல்வாழ்வு தொடர்பாக ஒரு சர்வதேச மாநாடு நடைபெற்றது. அதில் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களுக்கான கல்வி உறுதி குறித்து அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.


* 1954-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்சபை, சர்வதேச குழந்தைகள் தினம் என்ற ஒரு கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டது. இன்று பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

* குழந்தைகளை வளர்க்கும்போது, பெற்றோரும் குழந்தைகளோடு, குழந்தைகளாக மாறினால் மட்டும்தான் அவர்கள் நாளைய வெற்றியாளராக உருவெடுப்பார்கள்.

* நாட்டின் முன்னேற்றத்திற்கு, அடித்தளமாக விளங்குவது குழந்தைகளே. குழந்தைப் பருவத்தில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்தான், எதிர்காலத்திலும் பிரதிபலிக்கும். குழந்தைப் பருவத்தில் நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். தங்கள் குழந்தைகளை, மற்ற குழந்தைகளுடன் பழக விட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு இடையே சகோதரத்துவம், உதவும் மனப்பான்மை வளரும்.

* ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கனவு இருக்கும். அதை தெரிந்துகொண்டு, நிறைவேற்ற பெற்றோர் முயற்சிக்க வேண்டும். குழந்தைகள் தினத்தில் பெற்றோர், ஆசிரியர்கள் தத்தம் குறைபாடுகளை நீக்கிவிட்டு, குழந்தைகளின் ஆர்வத்தையும், அனுபவத்தையும், ஆசைகளையும், அணுகுமுறைகளையும், மனநிலையையும் கூர்மையாக கவனிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு எப்படியெல்லாம் பாடத் திட்டங்கள் அமைய வேண்டும், எப்படி போதிக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அந்த சிறப்பான அணுகுமுறையானது குழந்தைகளின் நாளைய ஆக்கப்பூர்வமான சாதனைகளுக்கு அடிப்படையாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை!
 

117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள்



117 வகையான இயற்க்கை மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள்

1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

8)குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால்
சுரக்கும்.

23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

32) நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.

33) அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

34) உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

35) இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.

36) வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.

37) தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

38) வண்டுகடிக்கு
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

39) சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

40) கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.

41) மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

42) மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

43) ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.

44) கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

45) இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

46) காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

47) தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

48) தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

49) சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

50) யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

52) புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

53) முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

54) கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.

55) அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.

56) கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.

57) இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.

58) இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

59) அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

60) வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

61) தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.

62) சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

64) நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்

65) சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.

67) பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்துவேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.

69) உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்துபாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

71) தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

72) வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

73) பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

74) தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

75) பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

76) தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

77) தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

78) படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

79) கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.

80) கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.

81) சேற்று புண்ணிற்கு
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.

82) நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

83) முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.

84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

85) பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

86) தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

87) முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.

88) பால் சுரக்க
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

89) தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.

90) கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவரகண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.

91) புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.

92) குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

93) நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

94) பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.

95) நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர,நரம்பு தளர்ச்சி நீங்கும்.

96) வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

97) மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.

98)நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

99)தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

100)தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

101)தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

102)வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

103)உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

104)அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

105)குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

106)வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

107)வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

108)மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

109)சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

110)பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

111)மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

112)சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

113)தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

114)மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

115)தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

116)மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

117)வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்...

வாழ்க வளமுடன்...வளா்க நலமுடன்...

வெள்ளி, 27 டிசம்பர், 2019

மார்கழி மாதத்தில் என்னென்ன செய்யலாம்?... என்னென்ன செய்யக்கூடாது?


மார்கழி மாதத்தில் என்னென்ன செய்யலாம்?
என்னென்ன செய்யக்கூடாது?


🔯மார்கழி மாதம் என்றாலே அது தெய்வீக மாதமாகும். இம்மாதம் தெய்வ வழிபாட்டிற்கும், நல்ல அறநெறிகளை பின்பற்றக்கூடியதாகும்.

🔯மார்கழி மாதத்தை செல்வம் தரும் மாதம் என்று அழைக்கின்றனர். மார்கழி மாதம் மிகவும் மகத்துவம் நிறைந்த மாதமாகும். வருடம் முழுவதும் கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள், மார்கழி மாதம் மட்டும் கோவிலுக்கு சென்றாலே வருடம் முழுவதும் கோவிலுக்கு சென்ற பலன் கிடைத்துவிடும்.

🔯மார்கழி மாதம் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது பனி. அதிகாலையில் புகைப்போல் படரச் செய்து, சூரியன் வருகையை ஸ்பெஷலான காட்சியாக்கிவிடும்.

🔯இவ்வாறு தெய்வீகமாக கருதப்படும் மார்கழி மாதத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதை தெரிந்து கொள்வோம்...!!

மார்கழியில் செய்யக்கூடியவை :

🔯மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்தத்திலேயே கண் விழிக்க வேண்டும்.

🔯மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும்.

🔯அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து, வாசலில் வண்ணக் கோலமிட்டு இரண்டு அகல் விளக்குகளை வைக்க மகாலட்சுமியின் அருள் அதிகாலையிலேயே கிடைத்துவிடும்.

🔯ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பூ தூவி காலையும், மாலையும் வழிபட வேண்டும்.

🔯அதிகாலையில் பஜனை பாடுவதுடன், திருப்பாவை, திருவெம்பாவை பாடல் பாடுவதும், கேட்பதும் புண்ணியம். இல்லாவிட்டால் கோலம் போடும் நேரத்தில் மட்டுமாவது பாட வேண்டும்.

🔯மார்கழி மாதத்தில் திருமணத்திற்கு வரன், பொருத்தம் பார்ப்பதோடு ஜாதகம் பரிமாற்றமும், கர்ப்பிணி பெண்களுக்கு சீமந்தமும் செய்யலாம்.

🔯நிலம் மற்றும் வீடு வாங்க முன்பணம் கொடுப்பதோடு பத்திர பதிவும் செய்யலாம்.

மார்கழியில் செய்யக்கூடாதவை :

🔯முதல் நாள் இரவே கோலம் போடுவதை தவிர்க்க வேண்டும்.

🔯மார்கழியில் விதை விதைக்கவோ, திருமணம் செய்யவோ கூடாது.

🔯அதிகாலைக்குப் பிறகும், சூர்ய உதயத்திற்கு பின்பும் தூங்கக்கூடாது.

🔯அதிகாலையில் குளித்துவிட்டு வாசல் தெளித்து அரிசி மாவில் கோலம் போட வேண்டும்.

🔯மார்கழி மாதத்தில் புதுமனை புகுவிழா, வாடகை வீடு மாறுதல், அலுவலகம் மாறுதல், திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் செய்தல், காது குத்துதல், புதிய வீடு மற்றும் புதிய வாகனமும் வாங்கக்கூடாது.

பல்வேறு நாடுகளில் புத்தாண்டு எவ்வாறு கொண்டாடப்படுகிறது. ரஷ்யாவில் புத்தாண்டு

புத்தாண்டு விடுமுறை பற்றி குழந்தைகளுக்கான கதை. புத்தாண்டு வெவ்வேறு நாடுகளில் கொண்டாடப்படுவதால்.

வெவ்வேறு நாடுகளின் புத்தாண்டு மரபுகளைப் பற்றிய குழந்தைகளுக்கான கதை.

புதிய ஆண்டு- முழு உலகின் பழமையான மற்றும் மிகவும் வேடிக்கையான விடுமுறை நாட்களில் ஒன்று. மேலும், இதுபோன்ற வேறுபட்ட தேதிகளில் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் வேறு எந்த விடுமுறையும் இல்லை என்பதும், அதன் மரபுகள் மிகவும் வித்தியாசமாக இருப்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. ரஷ்யாவிலும், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளைப் போலவே, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலும், புத்தாண்டு ஜனவரி 1 ஆம் தேதி தொடங்குகிறது. 1700 ஆம் ஆண்டில், ரஷ்ய ஜார் பீட்டர் I ஒரு ஆணையை வெளியிட்டார், அதன்படி புத்தாண்டு கொண்டாடப்பட வேண்டும். மக்கள் வீடுகளை பைன், தளிர் மற்றும் ஜூனிபர் கிளைகளால் அலங்கரித்தனர், தீ வேடிக்கை மற்றும் பண்டிகை படப்பிடிப்பு ஏற்பாடு செய்தனர். காலப்போக்கில், அவர்கள் வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரிக்கத் தொடங்கினர். எனவே பச்சை கிறிஸ்துமஸ் மரம் இந்த விடுமுறையின் அடையாளங்களில் ஒன்றாக மாறியது, சாண்டா கிளாஸ் மற்றும் ஸ்னோ மெய்டனுடன் இணைந்து அதன் முக்கிய அலங்காரமாக மாறியது. மூலம், சாண்டாஸ் எல்லா நாடுகளிலும் வித்தியாசமாக இருக்கிறார். எங்கள் ரஷ்ய சாண்டா கிளாஸ் குதிகால் வரை ஒரு ஃபர் கோட் அணிந்துள்ளார், பூட்ஸ், உயர் ஃபர் தொப்பி என்று உணர்ந்தார், மேலும் ஒரு கைகளையும் பரிசுகளையும் ஒரு கையில் வைத்திருக்கிறார்.
அமெரிக்காவில், புத்தாண்டு தாத்தா - சாண்டா கிளாஸ் - ஒரு குறுகிய சிவப்பு ஜாக்கெட் மற்றும் அவரது தலையில் ஒரு வேடிக்கையான தொப்பி அணிந்துள்ளார். அவர் ஒரு கலைமான் பனியில் சறுக்கி ஓடும் வாகனம் மீது காற்று வழியாக பயணித்து, புகைபோக்கி வழியாக குழந்தைகளின் வீடுகளுக்குள் நுழைகிறார்.
பெல்ஜியம் மற்றும் போலந்தில், புத்தாண்டு தாத்தா செயிண்ட் நிக்கோலஸ் முதல் சாண்டா கிளாஸ் என்று கருதப்படுகிறார், ஏனெனில், ஒரு பழங்கால, பழங்கால புராணத்தின் படி, அவர் தங்க ஷூக்களை தங்க ஷூவில் தனது காலணியில் நெருப்பிடம் முன் வைத்தார். செயிண்ட் நிக்கோலஸ் ஒரு வெள்ளை அங்கி அணிந்து குதிரையை சவாரி செய்கிறார், அவருடன் ஒரு வேலைக்காரன் மூர், பிளாக் பீட்டர், கீழ்ப்படிதல் குழந்தைகளுக்கு ஒரு பெரிய சாக் பரிசுகளை எடுத்துச் செல்ல உதவுகிறார். சிறிய ராஸ்கல்கள் பரிசுகளைப் பெறவில்லை - அவர்களுக்கு பிளாக் பீட்டர் தண்டுகளை அணிந்துள்ளார்.
பிரான்சில், ஒரு தாத்தா ஒரு ஊழியரும், அகலமான தொப்பியும் கொண்டவர், அதன் பெயர் பெர் நோயல் ("கிறிஸ்துமஸ் தாத்தா"), பரிசுகளை நேரடியாக புகைபோக்கிக்குள் வைக்கிறது.
ஸ்வீடிஷ் தாத்தா - யோலோகோம்டன் - அடுப்பில் பரிசுகளை அடுக்கி வைக்கிறார், மற்றும் ஜெர்மன் சாண்டா கிளாஸ் தனது பரிசுகளை ஜன்னலில் விட்டுவிடுகிறார்.
மெக்ஸிகன் குழந்தைகள் ஒரு துவக்கத்தில் பரிசுகளையும், ஆங்கிலத்தில் ஒரு சாக் ஒன்றையும் காணலாம். புத்தாண்டு கடிகாரத்தின் முதல் பஞ்ச் மூலம், பிரிட்டிஷ் மற்றும் ஸ்காட்ஸ் பழைய ஆண்டை வெளியிடுவதற்காக வீட்டின் பின்புற கதவைத் திறக்கிறார்கள், மேலும் கடிகாரத்தின் கடைசி பஞ்சைக் கொண்டு அவர்கள் முன் கதவைத் திறந்து, புத்தாண்டில் அனுமதிக்கிறார்கள்.
இத்தாலியில், புத்தாண்டு தினத்தன்று, தாத்தா பாபோ நட்டலே மற்றும் நல்ல தேவதை பெபனா ஆகியோர் குழந்தைகளுக்கு வருகிறார்கள். அவர்கள் கீழ்ப்படிதலான குழந்தைகளுக்கு பால்கனியில் விட்டுச்செல்லும் பரிசுகளை வழங்குகிறார்கள், சோம்பேறிகளும் மனநிலையும் நிலக்கரியை மட்டுமே பெறுகிறார்கள். புத்தாண்டு தினத்தன்று இத்தாலியர்கள் ஜன்னல்களுக்கு வெளியே பழைய விஷயங்களை வீசுகிறார்கள் - நொறுங்கிய மலர் பானைகள், கந்தலான நாற்காலிகள், துளை பூட்ஸ் நடைபாதையில் பறக்கின்றன ... நீங்கள் தூக்கி எறியும் விஷயங்கள், சன்னி இத்தாலி மக்கள் நினைக்கிறார்கள், புதிய ஆண்டு அதிக செல்வத்தை கொண்டு வரும்.
வேடிக்கையான பெயர், ஒருவேளை, பின்னிஷ் சாண்டா கிளாஸ் - ஜூலூபூக்கி (பின்னிஷ் மொழியில் “யோ-உலு” - கிறிஸ்துமஸ், மற்றும் “ஃபார்ட்ஸ்” - ஒரு ஆடு).
இந்த பெயர் அவருக்கு தற்செயலாக வழங்கப்படவில்லை: பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒரு ஆடு தோலை அணிந்து ஒரு சிறிய ஆடு சவாரி செய்யும் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
உஸ்பெக் பனி தாத்தா கோர்போபோ ஜூலூபூக்கிக்கு பின்னால் இல்லை, அவர் ஒரு கோடிட்ட அங்கி அணிந்து, கழுதை மீது சவாரி செய்யும் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்குகிறார்.
அவருடன் அவரது பனி கன்னி கோர்கிஸும். மங்கோலியாவில், தாத்தா உவ்லின் உவ்குன் கால்நடை ஆடைகளை அணிந்துள்ளார், ஆம், ஏனெனில் மங்கோலிய புத்தாண்டு கால்நடை வளர்ப்பு பண்டிகையுடன் ஒத்துப்போகிறது.
சில்வெஸ்டர் என்ற ஆஸ்திரேலிய சாண்டா கிளாஸ் நாடு முழுவதும் நீச்சல் டிரங்குகளிலும் ஸ்கூட்டரிலும் ஒரு கங்காருவை வெட்டுகிறது - இது விடுமுறை நாட்களில் வழக்கத்திற்கு மாறாக சூடாக இருக்கும். நீச்சலுடை உள்ள உள்ளூர் ஸ்னோ மெய்டன் சில்வெஸ்டருக்கு பரிசுகளை வழங்க உதவுகிறது.
கிரீஸ் மற்றும் சைப்ரஸில், புத்தாண்டு தாத்தாவுக்கு செயிண்ட் பசில் என்று பெயரிடப்பட்டது, ஸ்பெயினில் - பாப்பா நோயல், கம்போடியாவில் - டெட் ஜார், கொலம்பியாவில் - பாப்பா பாஸ்குவல், நெதர்லாந்தில் - சாண்டர்கிளாஸ், ருமேனியாவில் - மோஷ் ஜெரிலோ, செக் குடியரசில் - டெட் மிகுலாஸ்.
ஆனால், எடுத்துக்காட்டாக, நோர்வேயில், சிறிய பிரவுனிகள் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்குகின்றன - நிசா. அவர்கள் பின்னப்பட்ட தொப்பிகளை அணிந்துகொள்கிறார்கள் மற்றும் இனிப்புகளை மிகவும் விரும்புகிறார்கள். எனவே, அவர்களை சமாதானப்படுத்தவும், அதிகமான பரிசுகளைப் பெறவும், புத்தாண்டு தினத்தன்று, குழந்தைகள் வீட்டைச் சுற்றி பல்வேறு நன்மைகளை ஒதுங்கிய மூலைகளில் இடுகிறார்கள்.
இந்தியாவில், புத்தாண்டு தினத்தன்று, பெற்றோர்கள் தட்டில் சிறிய பரிசுகளை வைக்கின்றனர், மேலும் புத்தாண்டின் காலையில், குழந்தைகள் தட்டில் கொண்டு வரப்படும் வரை கண்களை மூடிக்கொண்டு காத்திருக்க வேண்டும்.
ஜப்பானில், புத்தாண்டு தினத்தன்று, வீட்டின் முன் வைக்கோல் கொத்துகள் தொங்கவிடப்படுகின்றன, இது குடியிருப்பாளர்களின் கூற்றுப்படி, மகிழ்ச்சியை ஈர்க்கிறது மற்றும் தீய சக்திகளை பயமுறுத்துகிறது. புதிய ஆண்டு தொடங்கும் நேரத்தில், ஜப்பானியர்கள் சிரிக்கத் தொடங்குகிறார்கள், வரும் ஆண்டு சிரிப்பு தங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்புகிறார்கள். ஜப்பானிய சாண்டா கிளாஸின் பெயர் ஓஜி-சான்.
பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில், புதிய ஆண்டின் முதல் நாளில் ஒரு நபரின் நடத்தை வரும் ஆண்டில் அவருக்கு என்ன காத்திருக்கிறது என்பதைப் பொறுத்தது என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, இந்த நாளில், மக்கள் எதையும் செய்ய முயற்சிக்கிறார்கள். அவர்கள் நிறைய சுவையான உணவை முன்கூட்டியே சமைத்து, புதிதாக ஒன்றைப் போடுகிறார்கள்.
ஹங்கேரியில், புதிய ஆண்டின் முதல் நாளின் காலையில், அவர்கள் கைகளை சோப்புடன் அல்ல, நாணயங்களால் கழுவுகிறார்கள் - இதனால் பணம் ஆண்டு முழுவதும் தங்கள் கைகளில் மாற்றப்படாது.
யூகோஸ்லாவியாவில், புத்தாண்டுக்காக, பல்வேறு பொருள்கள் மேசையில் வைக்கப்பட்டுள்ளன: ஒரு பைன் கிளை (அதிர்ஷ்டத்திற்காக), ஒரு மோதிரம் (திருமணத்திற்கு), ஒரு பொம்மை (ஒரு குழந்தையின் பிறப்புக்கு), பணம் (செல்வத்திற்காக) மற்றும் அவற்றை ஒரு ஃபர் தொப்பியால் மூடி வைக்கவும். பின்னர், மேஜையில் உட்கார்ந்திருக்கும் ஒவ்வொருவரும் மூன்று முறை ஒரு பொருளை வெளியே இழுக்க வேண்டும், அதே விஷயத்தை அவர் மூன்று முறை பெற்றால், புத்தாண்டில் இந்த பொருள் குறிக்கும் நிகழ்வை அவர் பெறுவார் என்பதாகும்.
ஈரானில், புத்தாண்டுக்கு சில வாரங்களுக்கு முன்பு, கோதுமை அல்லது பார்லி தானியங்கள் ஒரு சிறிய பாத்திரத்தில் நடப்படுகின்றன - முளைத்த தானியங்கள் வசந்த காலத்தின் தொடக்கத்தையும் வாழ்க்கையின் புதிய ஆண்டையும் குறிக்கின்றன.
கலைநயமிக்க சீன மக்கள் புத்தாண்டின் தொடக்கத்தை இரண்டு முறை கொண்டாடுகிறார்கள்: ஜனவரி 1 மற்றும் ஜனவரி 23 முதல் பிப்ரவரி 19 வரை மீண்டும் எங்காவது - தேதி எல்லா நேரத்திலும் மாறுகிறது, ஏனெனில் இந்த நாள் புத்தாண்டு என்பதால், சீன சந்திர நாட்காட்டியின் படி கணக்கிடப்படுகிறது.
அமாவாசையின் போது புத்தாண்டு ஈவ் ஒரு அற்புதமான அழகான காட்சி! பட்டாசுகள் மற்றும் பட்டாசுகளுடன் கூடிய தெரு ஊர்வலங்கள் வீடுகளிலிருந்து தீய சக்திகளை பயமுறுத்துகின்றன, அதனால் அவர்கள் நிச்சயமாக உள்ளே வரக்கூடாது என்பதற்காக, குடியிருப்பாளர்கள் ஜன்னல்களையும் கதவுகளையும் காகிதத்தால் மூடுகிறார்கள். இந்த வேடிக்கையில், சீன புத்தாண்டு தாத்தா ஷோ ஹின் பங்கேற்கிறார்.
அதற்கான தயாரிப்பு புத்தாண்டு வாழ்த்துக்கள்  கிழக்கு நாடுகளில், மற்ற இடங்களைப் போலவே, விடுமுறைக்கு முன்பே தொடங்குகிறது. சுமார் இரண்டு வாரங்களில், பண்டிகை சந்தைகள் அனைத்து நெரிசலான சதுரங்களிலும் திறக்கப்படுகின்றன, அங்கு நீங்கள் பல்வேறு பொம்மைகள், நட்சத்திரங்கள், பல்வேறு அளவுகள் மற்றும் வடிவங்களின் விளக்குகள் - மீன், டிராகன்கள், குதிரைகள், பறவைகள் வடிவில் வாங்கலாம். இந்த வினோதமான புள்ளிவிவரங்களுக்குள், மெழுகுவர்த்திகள் எரிகின்றன. இந்த நாட்களில் நிறைய மாவுகளிலிருந்து வடிவமைக்கப்பட்ட பொம்மைகள் விற்கப்படுகின்றன: குதிரைகளுடன் வாள்களை சவாரி செய்யும் வீரர்கள், பல வண்ண ஆடைகளில் ரோவர்களுடன் ரூக்ஸ், அவர்களின் அழகில் அற்புதமான தாமரைகள், விலங்குகள் மற்றும் பறவைகளின் புள்ளிவிவரங்கள். மற்றும் விலங்குகள் மற்றும் மக்களின் களிமண் புள்ளிவிவரங்கள்.
வியட்நாமில், புத்தாண்டு பொதுவாக பிப்ரவரியில் தொடங்குகிறது. ஒவ்வொரு வீட்டிலும் கடவுள் வாழ்கிறார் என்று உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள், புதிய ஆண்டில், குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் கடந்த ஆண்டை எவ்வாறு கழித்தார்கள் என்பதை விரிவாக உச்ச இறைவனிடம் சொல்ல இந்த கடவுள் சொர்க்கத்திற்குச் செல்கிறார்.
ஒரு குறிப்பிட்ட நாளில், அடுப்பின் ஆவியின் உருவத்திற்கு முன், மக்கள் மெழுகுவர்த்திகள் மற்றும் தூபக் குச்சிகளை ஒளிரச் செய்கிறார்கள், அதே போல் இனிப்பு உணவுகளை வைக்கின்றனர். ஒரு காரணத்திற்காக இனிப்புகள் கொண்டு வரப்படுகின்றன - இதனால் ஆவியின் உதடுகள் ஒன்றாக ஒட்டிக்கொள்கின்றன, அவர் சொர்க்கத்தில் அதிகம் சொல்லவில்லை. கடவுள் தனது முதுகில் நீந்துகிறார் என்று வியட்நாமியர்கள் நம்புகிறார்கள்
கெண்டை, பின்னர் விடுமுறை நாட்களில் அவர்கள் ஒரு உயிருள்ள கெண்டை வாங்கி பின்னர் அதை ஒரு நதி அல்லது குளத்தில் விடுவிக்கிறார்கள். கூடுதலாக, வியட்நாமில், புத்தாண்டுக்காக, நீங்கள் நிச்சயமாக ஒரு தொப்பியை வாங்க வேண்டும், அவை புத்தாண்டு சந்தைகளில் பலவிதமான பாணிகளிலும் வண்ணங்களிலும் விற்கப்படுகின்றன.
கிழக்கில் தொப்பிகள் ஒரு சிறப்பு உறவைக் கொண்டுள்ளன. தொப்பி என்பது அதிகாரத்தின் அடையாளமாகவும் ஒரு பெரிய முதலாளியின் அலமாரிக்கு இன்றியமையாத பண்பாகவும் உள்ளது. கொரியாவில், பல கிறிஸ்துமஸ் மரம் பஜாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில், எங்களைப் போன்ற பீச் மரங்கள் விற்கப்படுவதில்லை, ஆனால் பீச் கிளைகளும் மரங்களும் வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும்.
கிழக்கில் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் வரும் வண்ணமயமான விழாக்கள் மிகவும் திட்டவட்டமான பொருளைக் கொண்டுள்ளன. விடுமுறையை மறைக்காதபடி தீய சக்திகளை வெளியேற்றும் பட்டாசுகளின் இடைவிடாத குறியீட்டைத் தவிர, இன்னும் பல மரபுகள் உள்ளன. புத்தாண்டு கொண்டாட்டம் பொதுவாக பல நாட்கள் நீடிக்கும். இரண்டாவது நாளில், பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் தனித்தனியாக வாழ்ந்தால் நீங்கள் அவர்களைப் பார்க்க வேண்டும், மூன்றாம் நாளில் ஆசிரியரிடம் சென்று அவரை வாழ்த்த மறக்காதீர்கள். புதிய ஆண்டின் முதல் நாட்களில், நீங்கள் வெள்ளை ஆடைகளை அணிய முடியாது (கிழக்கில் இது துக்கத்தின் நிறம்), நீங்கள் மரணம், கோபம், குரங்குகளைப் பின்பற்றுவது மற்றும் குப்பைகளை வெளியே எடுப்பது பற்றி பேச முடியாது.
சில நாடுகளில் பொதுவாக புத்தாண்டு குளிர்கால மாதங்களில் கொண்டாடப்படுவதில்லை. எனவே, இந்தோனேசியாவில், இந்த நிகழ்வு அக்டோபரில் வருகிறது. புதிய ஆண்டின் முதல் நாளில், அங்குள்ள மக்கள் அனைவரும் கடந்த ஆண்டு ஏற்படுத்திய தொல்லைகளுக்கு ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்கிறார்கள். பர்மாவில், புத்தாண்டு கொண்டாட்டம் மிகவும் வெப்பமான ஏப்ரல் நாட்களில் வருகிறது. ஏப்ரல் 1 முதல், ஒரு வாரம் முழுவதும் மக்கள் இதயத்துடன் ஒருவருக்கொருவர் தண்ணீரை ஊற்றி, டிஞ்சன் நீர் திருவிழாவில் வேடிக்கையாக இருக்கிறார்கள். ஈரானியர்கள் மார்ச் 21 அன்று புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள்.
பெரும்பாலும், யூதர்கள் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள் - நான்கு முறை. இலையுதிர்காலத்தின் தொடக்கத்தில், அறுவடை காலத்தில், அறுவடை செய்யப்பட்ட பழங்களை கடவுளுக்கு பலியிடும் விருந்து தொடங்குகிறது. சர்வவல்லமையினரிடம் திரும்பி, அறுவடையை பாதுகாக்க மக்கள் கேட்கிறார்கள். இந்த விடுமுறையிலிருந்து பண்டைய யூதர்கள் புதிய ஆண்டின் நாட்களைக் கணக்கிட்டனர்.
பின்னர், செப்டம்பர் நடுப்பகுதியில், யூதர்கள் ஆதாமின் பிறந்தநாளையும் ரோஷ் ஹஷனாவையும் கொண்டாடுகிறார்கள். காலெண்டரை வைத்திருப்பதற்கான புத்தாண்டின் தொடக்கமாக இது கருதப்படுகிறது. ஒரு நபர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதை இந்த நாளில் இறைவன் தீர்மானிக்கிறார் என்று நம்பப்படுகிறது. எனவே, இந்த விடுமுறையில், மக்கள் கடந்த வருடத்தில் மகிழ்ச்சியடைந்து, அடுத்த ஆண்டு அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். பிரார்த்தனை கூறுகிறது: "இந்த ஆண்டு நல்லதாகவும் இனிமையாகவும் இருக்கட்டும்!" பண்டிகை உணவில் எப்போதும் தேன் இருக்கும், அதில் நீங்கள் ஆப்பிள் மற்றும் ரொட்டி துண்டுகளை நனைக்க வேண்டும்.
வசந்த காலத்தின் துவக்கத்தில், யூதர்கள் மரங்களின் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள் - இஸ்ரேலில் இந்த நேரத்தில் பாதாம் பூக்கும். மக்கள் மலர்ந்த மொட்டுகளையும் முதல் பச்சை இலைகளையும் வாழ்த்துகிறார்கள், இதன் மூலம் வாக்குறுதியளிக்கப்பட்ட நிலத்தில் ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கத்தை நினைவுகூர்கின்றனர். இந்த நாளில், மரங்களை நடவு செய்வது வழக்கம்.
உண்மையில், மக்கள் புத்தாண்டை எப்போது, \u200b\u200bஎப்படி கொண்டாடுகிறார்கள் அல்லது பனி தாத்தாவின் பெயர் என்ன என்பது முக்கியமல்ல, முக்கிய விஷயம் என்னவென்றால், புத்தாண்டு தினத்தன்று அனைத்து வகையான மற்றும் கீழ்ப்படிதலுள்ள குழந்தைகள் எப்போதும் சாண்டா கிளாஸிடமிருந்து அற்புதமான பரிசுகளைப் பெறுகிறார்கள்!
பின்வரும் முகவரிகளில் நீங்கள் எப்போதும் சாண்டா கிளாஸுக்கு ஒரு கடிதம் எழுதலாம்:
அதிகாரப்பூர்வ அஞ்சல் முகவரி:  162340, ரஷ்யா, வோலோக்டா ஒப்லாஸ்ட், வெலிகி உஸ்ட்யுக் நகரம், சாண்டா கிளாஸின் வீடு.
சாண்டா கிளாஸின் மாஸ்கோ குடியிருப்பு:  109472, ரஷ்யா, மாஸ்கோ, குஸ்மின்ஸ்கி காடு, தாத்தா ஃப்ரோஸ்டுக்கு.
நினைவில் கொள்ளுங்கள், குழந்தை, சாண்டா கிளாஸ் அவருக்கு அனுப்பிய ஒவ்வொரு கடிதத்திற்கும் பதிலளிப்பார், மேலும் அவரது நண்பர்கள் அவருக்கு உதவுகிறார்கள் - ஸ்னெகுரோச்ச்கா, பன்னி மற்றும் பிற விசித்திரக் கதாநாயகர்கள்!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ஃபின்னிஷ் முக்கிய குளிர்கால விடுமுறை கிறிஸ்துமஸ் ஆகும், இது டிசம்பர் 25 அன்று கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு ஈவ் சாண்டா கிளாஸின் தாயகத்தில்  பார்ச்சூன் டெல்லிங் நடைமுறையில் உள்ளது - எங்கள் பாரம்பரியத்தைப் போலவே, முக்கிய குளிர்கால தேவாலய விடுமுறைக்குப் பிறகு மாய சக்திகளுக்கு திரும்புவது வழக்கம். அவர்கள் மெழுகின் உதவியுடன் எதிர்காலத்தைப் பார்க்கிறார்கள் - அவர்கள் ஒரு கேள்வியைக் கேட்கிறார்கள், பின்னர் உருகிய மெழுகுவர்த்தி தண்ணீரில் விடப்படுகிறது, அதன் பிறகு அது விளைந்த வடிவத்தை பகுப்பாய்வு செய்கிறது. ஒவ்வொரு ஃபினுக்கும் புனிதமானது புத்துணர்ச்சி மற்றும் வலுவான பானங்கள் கொண்ட ஏராளமான விருந்து, அவற்றில் நிச்சயமாக இருக்க வேண்டும் பிளம் ஜெல்லி  மற்றும் இனிப்பு அரிசி கஞ்சி. மற்றும், நிச்சயமாக, சாண்டா கிளாஸ் இல்லாத ஒரு புத்தாண்டு!
பின்னிஷ் தாத்தா என்று அழைக்கப்படுகிறார் Joulupukki, அதாவது "கிறிஸ்துமஸ் ஆடு". பெயர் ஒன்றும் புண்படுத்தக்கூடியதல்ல - பரிசுகளுடன் தாத்தா ஒரு சிறிய வேகனில் நகர்கிறார், அதில் ஆடு கட்டப்பட்டிருக்கும். ஜூலூபூக்கி கனிவானவர், எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்கிறார், முக்கிய விஷயம் மிகவும் சத்தமாக கோருவது அல்ல. பின்னிஷ் ஃப்ரோஸ்டுக்கு நல்ல காது உள்ளது, அவர் ஒரு கிசுகிசுப்பைக் கேட்பார். ஆனால் நீங்கள் கூச்சலிட்டால், தீய சக்திகள் ஆசையைக் கேட்க முடியும், பின்னர் அதன் நிறைவேற்றத்திற்கு யாரும் உத்தரவாதம் அளிக்க மாட்டார்கள்.
ஸ்காட்லாந்தில் புத்தாண்டு எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்று விசாரிக்க வந்த ஒரு சுற்றுலாப் பயணி, விடுமுறை என்று அழைக்கப்படுவதை அறிகிறார் ஹோக்மனாய்- இது ஒரு உண்மையான தீ திருவிழா! வழக்கப்படி, ஜனவரி 1 ஆம் தேதி, இரவு, பொதுமக்கள் தார் பீப்பாய்களை எரித்து, தெருக்களில் உருட்டினர், இதனால் பழைய மற்றும் புதிய ஆண்டை அழைக்கிறது. கூடைகளை எரிப்பதன் அர்த்தத்தை வெளிப்படுத்தும் இரண்டு புனைவுகள் உள்ளன. முதலாவது பேகன் நம்பிக்கைகளைக் குறிக்கிறது, அதன்படி ஃபயர்பால்ஸ் சூரியனைக் குறிக்கிறது. அவற்றை கடலுக்குள் எறிந்து, ஸ்காட்லாந்து கடல் மக்களுக்கு ஒளி மற்றும் வெப்பத்தின் ஒரு பகுதியைக் கொடுத்தது - பின்னர் நீர் உறுப்புக்கு ஆதரவாக தங்கியிருக்க. மற்றொரு நம்பிக்கை என்று கூறுகிறது தீ தீய சக்திகளை சுத்தப்படுத்துகிறது  மற்றும் பேய்கள்.
செயலில் பொழுது போக்குக்கு ஏராளமான விருந்து தேவை. சிறப்பு பாரம்பரிய உணவுகளால் ஸ்காட்ஸ் நீண்ட காலமாக மரியாதைக்குரியது: புத்தாண்டு காலை உணவுக்கு ஓட் கேக்குகள், புட்டு மற்றும் ஒரு சிறப்பு வகை சீஸ் - கெபன், மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு - வேகவைத்த வாத்து  அல்லது ஸ்டீக், பை அல்லது ஆப்பிள்கள் பேஸ்ட்ரியில் சுடப்படுகின்றன.
பண்டைய ஸ்பானிஷ் பாரம்பரியத்தின் படி, புத்தாண்டு தினத்தன்று ஒவ்வொரு நபரும் நல்ல அதிர்ஷ்டத்திற்காக 12 திராட்சை சாப்பிடுங்கள்  - உள்ளூர் மணிநேரங்களின் ஒவ்வொரு துடிப்புடனும் ஒன்று (ஸ்பாஸ்கயா கோபுரத்தின் கடிகாரத்தின் மாட்ரிட் அனலாக் என்பது புவேர்டா டெல் சோலில் உள்ள டயல்). "12" என்ற எண் ஆண்டின் பன்னிரண்டு மாதங்களை குறிக்கிறது, ஆனால் திராட்சை என்பது உள்ளூர் விவசாயிகளின் புத்திசாலித்தனமான சந்தைப்படுத்தல் தந்திரமாகும், அவர்கள் 1908 ஆம் ஆண்டில் பாரம்பரியத்தில் பணம் சம்பாதிக்க முடிவு செய்தனர். உள்ளூர் கடைகளில், விடுமுறைக்கு முன்னதாக, தோல் மற்றும் விதைகளிலிருந்து உரிக்கப்படும் ஒரு டஜன் பெர்ரிகளுடன் ஆயத்த ஜாடிகளை நீங்கள் காணலாம். ஸ்பெயினியர்கள் உள்ளே வருவார்கள் என்று நீங்கள் கூறலாம் அடைத்த வாயுடன் புதிய ஆண்டு. ஆரம்பவர்களுக்கு ஆலோசனை: தற்செயலாக மூச்சுத் திணறக்கூடாது என்பதற்காக சிறிய திராட்சைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
மற்றொரு உள்ளூர் பாரம்பரியம் ஒரு கொண்டாட்டத்தை நடத்த வேண்டும் சிவப்பு உள்ளாடை  - இது பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் பொருந்தும். வணிக மற்றும் நிதி நல்வாழ்வில் சிவப்பு அதிர்ஷ்டத்தை ஈர்க்கிறது என்று நம்பப்படுகிறது. காதலில் உள்ள பல தம்பதிகள் விடுமுறை தினத்தன்று ஒரு நெருக்கமான அலமாரி விவரங்களை பரிமாறிக்கொள்கிறார்கள்.
தென்கிழக்கு ஆசியாவின் நாடுகளில், குறிப்பாக, வியட்நாமில், அவர்கள் ஆண்டைக் கொண்டாடுகிறார்கள் ஜனவரி 21 முதல் பிப்ரவரி 19 வரை. இருப்பினும், பல்வேறு நாடுகளில் புத்தாண்டு கொண்டாடப்படுவதால், டிசம்பர் 31 அன்று ஒரு முக்கியமான தேதி கொண்டாடப்பட்டாலும், ஆசியாவில் பனி மற்றும் கிறிஸ்துமஸ் மரங்கள் இன்னும் கடைபிடிக்கப்படாது. எனவே, வியட்நாமிய விடுமுறையின் முக்கிய பண்பு தாராளமாக உள்ளது அலங்கரிக்கப்பட்ட ரேக். அவை தேவை, நிச்சயமாக, அவை மீது மீண்டும் மீண்டும் காலடி எடுத்து வைப்பதற்காக அல்ல. பரந்த மற்றும் பணக்கார ரேக், மேலும் மேலும் அவர்கள் மகிழ்ச்சியிலும் செழிப்பிலும் குலுங்க முடியும் என்று நம்பப்படுகிறது. வியட்நாமிய சாண்டா கிளாஸ் - பாத்திரம் தாவோ குவென், இது குடும்ப அடுப்பு ஆவி என்று அழைக்கப்படுகிறது. புத்தாண்டு தினத்தன்று, அவர் ஒரு கெண்டை மீது சொர்க்கத்திற்குச் செல்கிறார், அது ஒரு டிராகனாக மாறும், பின்னர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் நற்செயல்கள் மற்றும் செயல்களைப் பற்றி பரலோக ஆட்சியாளரிடம் தெரிவிக்கிறார். ஒரு விருப்பத்தை உருவாக்குவது எளிதானது - புத்தாண்டு தினத்தன்று நீங்கள் அதை அருகிலுள்ள உடலுக்குள் விட வேண்டும் நேரடி கெண்டைமுன்பு அவரது விருப்பத்தை அவரிடம் கிசுகிசுத்தார். பின்னர் இலவச கெண்டை ஒரு பயணத்தில் செல்லும், அதன் முடிவில் அது சர்வவல்லவருக்கு ஆசைகளை தெரிவிக்கும்.
சந்திக்க மற்றொரு நல்ல பாரம்பரியம் சந்திர புத்தாண்டு  (இது ஆசியாவில் அழைக்கப்படுகிறது) - மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நீண்ட ஆயுளின் வாழ்த்துக்கள், சிவப்பு காகிதத்தில் கருப்பு மை அச்சிடப்பட்டுள்ளது. எதிர்காலத்திற்கான குறிக்கோள்களைக் கொண்ட கலைப் பொருள்கள் வியட்நாமிய குடியிருப்புகளின் வாழ்க்கை அறைகளை அலங்கரிக்கின்றன - தொடர்ச்சியாக 12 மாதங்கள், அவை வரும் ஆண்டின் முற்பகுதியில் புதுப்பிக்கப்படும் வரை.
மற்ற நாடுகளைப் போலவே, இத்தாலியிலும் புத்தாண்டைக் கொண்டாடுவது அவசியம் என்று நம்பப்படுகிறது, பழையதை அகற்றுவது. ஆகையால், பல இத்தாலியர்கள் இடைக்கால வழக்கத்தை கடைபிடிக்கின்றனர், டிசம்பர் 31 தேவையற்ற, பாழடைந்த மற்றும் சலிப்பான விஷயங்களை தங்கள் ஜன்னல்களிலிருந்து வெளியேற்றுகிறார்கள். நிச்சயமாக, அது மட்டுமல்ல, புதிய மற்றும் அவசியமானவை அவற்றின் இடத்தைப் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன். பெரிய ரஷ்ய மெகாசிட்டிகளில் வசிப்பவர்கள் மனோபாவமுள்ள தென்னகர்களின் உதாரணத்தை எச்சரிக்கையுடன் பின்பற்ற வேண்டும் - எல்லாவற்றிற்கும் மேலாக, இத்தாலியில் இந்த வழக்கம் முக்கியமாக சிறிய நகரங்களில் செழித்து வளர்கிறது, அங்கு வீடுகள் அதிகபட்சம் மூன்று தளங்களைக் கொண்டுள்ளன.
ஜனவரி 1 ம் தேதி இத்தாலியர்களுக்கும் நிறைய சிரமங்கள் உள்ளன. முதலில் அதை வீட்டிற்கு கொண்டு வாருங்கள் ஒரு மூலத்திலிருந்து நீர்  - சுத்தமாக ஓடும் நீர் மகிழ்ச்சியைத் தருகிறது என்று நம்பப்படுகிறது. இரண்டாவதாக, காலையில் வெளியே செல்வது கவனமாக அர்த்தமுள்ளதாக இருக்கிறது சுற்றி பாருங்கள். சாளரத்திலிருந்து வெளியே எறியப்பட்ட ஒருவரின் குப்பைக்கு தற்செயலாக அடியெடுத்து வைக்கக்கூடாது என்பதற்காக மட்டுமல்லாமல், சந்தித்த முதல் நபர் சரியான நபராகவும் இருக்கிறார். ஒரு துறவி அல்லது குழந்தையைப் பார்ப்பது ஒரு நல்ல அறிகுறியாகக் கருதப்படுவதில்லை, ஆனால் ஒரு வயதான மனிதர் மிகவும் அதிர்ஷ்டத்திற்கு.
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பரிசுகள் சாண்டா கிளாஸால் கொண்டுவரப்படவில்லை, ஆனால் ஒரு வயதான பெண்மணியால் - தேவதை பெபனா. அவள் ஒரு மாய விளக்குமாறு மீது பறக்கிறாள், ஒரு தங்க சாவியுடன் கதவைத் திறந்து, நெருப்பிடம் விசேஷமாக தொங்கவிடப்பட்ட காலுறைகளுடன் பரிசுகளை நிரப்புகிறாள்.
ஆண்டிஸில் வசிப்பவர்கள் பாரம்பரியமாக புத்தாண்டை சற்றே விசித்திரமான மனப்பான்மையுடன் கொண்டாடுகிறார்கள் - பழைய ஆண்டின் கடைசி வாரத்தில், முக்கிய நகரங்களில் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன, இதன் நோக்கம் எல்லாவற்றையும் வாங்குவதல்ல, பல்வேறு சடங்குகளை நடத்துவதும், ஷாமன்களுடன் சந்திப்பு  மற்றும் எதிர்காலத்திற்கான அதிர்ஷ்டம். பீர் மற்றும் முட்டையின் மஞ்சள் கருக்கள் மீது அதிர்ஷ்டம் சொல்வது மிகவும் பொதுவான நடைமுறை. முட்டை ஒரு நுரை பானத்துடன் ஒரு கண்ணாடிக்குள் உடைந்து, அதன் விளைவாக வரும் வரைபடத்தின் படி மந்திரவாதி வருவதை முன்னறிவிக்கிறது. முன்னறிவிப்பு ஏமாற்றமளித்தால் அது பயமாக இல்லை - நீங்கள் அதிர்ஷ்டத்தை நேரடியாக முட்டை-பீர் கலவையுடன் நிரப்பலாம்.
புத்தாண்டு காலத்தில் பெரு அல்லது ஈக்வடாரிலும், நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்க நீங்கள் சடங்குகளை எளிதாகக் காணலாம். இந்த நோக்கத்திற்காக, அவர்கள் வழக்கமாக ஒரு இளம் கவர்ச்சியான பெண்ணைத் தேர்ந்தெடுத்து, அவளை அலங்கரித்து, பழங்கள் மற்றும் பிற பழங்களால் அலங்கரிக்கிறார்கள் - அவை செல்வத்தையும் நிதி நல்வாழ்வையும் குறிக்கின்றன. ஒரு சடங்கின் கதாநாயகியாக இருப்பது வரையப்படாவிட்டால், ஆனால் நீங்கள் செல்வத்தை ஈர்க்க விரும்பினால், நீங்கள் துணிகளை மட்டுமே அணியலாம் மஞ்சள் நிற நிழல்கள் அனைத்தும்  - இந்த நிறம் மகிழ்ச்சியின் பல்வேறு வெளிப்பாடுகளுக்கு ஒரு சக்திவாய்ந்த காந்தமாக கருதப்படுகிறது.
ஜப்பானில் ஆண்டைக் கொண்டாடும் சில மரபுகள் புதிய நாடுகளை மற்ற நாடுகளில் எவ்வாறு கொண்டாடுகின்றன என்பதற்கு நெருக்கமானவை. உதாரணமாக, ரைசிங் சூரியனின் நிலத்தில் கொண்டாடுவதும் வழக்கம் புதிய ஆடைகளில்இது ஆரோக்கியத்திற்கும் நல்ல அதிர்ஷ்டத்திற்கும் உத்தரவாதம் அளிக்கிறது. ஒரு "புனித மரம்" உள்ளது: ஜப்பானில் கிறிஸ்துமஸ் மரங்களின் பங்கு மோட்டிபானாவின் புத்தாண்டு மரத்தால் வகிக்கப்படுகிறது. நீங்கள் பைன் கிளைகளைக் காணலாம் - அவை முன் கதவை அலங்கரிக்கின்றன. முழுமையான மக்கள் முக்கிய பாரம்பரியத்தை கடைபிடிக்கின்றனர் - குடும்பத்தின் மகிழ்ச்சியைத் தரும் ஆண்டின் தெய்வத்தை திருப்திப்படுத்த, வீட்டின் முன் அலங்கார பாடல்களை ஏற்பாடு செய்யுங்கள் - kadomatsuஇதில் மூன்று மூங்கில் கிளைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. செல்வந்த ஜப்பானிய மக்கள் குள்ள பைன், ஒரு மூங்கில் படப்பிடிப்பு மற்றும் ஒரு சிறிய பிளம் அல்லது பீச் மரத்தை வாங்குகிறார்கள்.
ஆனால் புத்தாண்டு விருந்துகள், நிச்சயமாக, நம் சுவைக்கு தெரிந்தவர்களிடமிருந்து வேறுபடுகின்றன. ஜப்பானில் ஆலிவியருக்கு பதிலாக, புத்தாண்டு அட்டவணைக்கு முதலில் செல்ல வேண்டியது நூடுல்ஸ், அரிசி, கெண்டை மற்றும் பீன்ஸ். இவை நீண்ட ஆயுள், செல்வம், வலிமை மற்றும் ஆரோக்கியத்தின் அடையாளங்கள்.
ஜப்பானியர்கள் தங்கள் சொந்த "மணிகள்" வைத்திருக்கிறார்கள். ஆண்டின் வருகை அறிவிக்கப்படுகிறது 108 மணிகள்  - புராணத்தின் படி, அவரது மோதிரம் மனித தீமைகளைக் கொல்கிறது, அதாவது அவரைக் கேட்ட நபர் புதிய ஆண்டில் கொஞ்சம் சிறப்பாக இருப்பார்.
புத்தாண்டு என்பது பல மாநிலங்களில் முக்கிய விடுமுறை. ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த சிறப்பு மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் உள்ளன, அதன்படி அதை பூர்த்தி செய்ய வேண்டும்.
சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம்  அவரது ஸ்லாவிக் மக்களை எவ்வாறு சந்தித்தார் என்பதில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அதிர்ச்சியூட்டும் முதல் விஷயம் அதுதான்   ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை வெவ்வேறு தேதிகளில் வருகிறதுசந்திர நாட்காட்டியைப் பொறுத்து. கூடுதலாக, மக்கள் தங்கள் புத்தாண்டை “ வசந்த விடுமுறை"பண்டைய காலங்களிலிருந்து இது மிகவும் விசித்திரமானது என்று குறிப்பிட்டார்: வீடுகளில் தங்களைத் தாங்களே பூட்டிக் கொண்டு ஒரு பயங்கரமான அசுரனுக்கு அஞ்சினர்.
மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவில்லை, அவர்கள் தங்கள் வாழ்க்கையின் கடைசி நாளைப் போலவே ஜெபித்தார்கள், சாப்பிட்டார்கள், குடித்தார்கள்.  காலையில், காலை வரை பிழைத்து, தெருக்களுக்கு வெளியே ஓடியது. சேதத்தின் அளவை அவர்கள் அறிய விரும்பினர். Nian  (அந்த பயங்கரமான அசுரனின் பெயர்) மற்றும் உங்கள் அன்புக்குரியவர்கள் அனைவரையும் சரிபார்க்கவும்.
இது தெளிவாகும் வரை இது நீடித்தது அசுரன் சிவப்புக்கு மிகவும் பயப்படுகிறான், பிரகாசமான ஃப்ளாஷ் மற்றும் உரத்த சத்தம். மக்கள் பிரகாசமான ஆடைகளை அணிந்து கொள்ளவும், விளக்குகளை இயக்கவும், சத்தமாக பாடவும் நடனமாடவும், தட்டுங்கள், பட்டாசுகள் மற்றும் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கினர்.
நியான் - சீனர்களுக்கு ஒரு பயங்கரமான அசுரன், புத்தாண்டு தினத்தன்று தண்ணீரிலிருந்து வெளிப்படுகிறது
புத்தாண்டு என்பது ஒவ்வொரு சீனர்களுக்கும் ஒரு சந்தர்ப்பமாகும் நிறைய பைரோடெக்னிக்ஸில் சேமிக்கவும்.  மற்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்த விடுமுறையை சந்திக்கும் இத்தகைய கொந்தளிப்பான பாரம்பரியத்திற்கு அடித்தளம் அமைத்தது சீனர்கள்தான் என்று நாம் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.
நியானாவைத் தவிர சாத்தியமான அனைத்து தீய சக்திகளையும் பயமுறுத்துவது வழக்கம்அன்று நகரத்தை சுற்றி பறந்து ஒரு புகலிடத்தைத் தேடுகிறது. ஒரு நபர் சத்தம் போடாமல் அவர்களை விரட்டவில்லை என்றால், பேய்கள் அவரது வீட்டில் குடியேறி, துரதிர்ஷ்டவசமானவர்களை துன்புறுத்தின  அடுத்த சுன் ஜீ வரை.
இதனுடன், நவீன சீன மக்களும் புத்தாண்டை ஒரு குடும்ப விடுமுறை என்று கருதுகிறது.  இந்த நாள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது   பணக்கார அட்டவணையை அமைக்கவும்.  சில தீவிர காரணங்களுக்காக ஒரு நபர் விருந்தில் கலந்து கொள்ள முடியாவிட்டால், அவருக்கு ஒரு இடம் எப்படியும் விடப்படுகிறது, அதை யாரும் எடுக்க முடியாது.
இரவு உணவு முடிந்ததும், ஒவ்வொரு பெரியவரும் தனது குழந்தைக்கு பணம் கொடுக்க வேண்டும்.  இந்த பரிசில் எந்தவொரு கடுமையான கட்டுப்பாடுகளும் இல்லை, ஆனால் வழங்கப்பட வேண்டும் சிவப்பு உறைகளில்  (செல்வம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் நிறம்). நன்கொடையளிக்கப்பட்ட பணம் ஒரு நபரின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் என்று நம்பப்பட்டது.


  சீனாவில் சிவப்பு உறை சிறந்த பரிசு
ஆர்வம்: சீனர்கள் இப்போது ஒருவருக்கொருவர் காகிதக் குறிப்புகளைக் கொடுக்க முடியும், பண்டைய காலங்களில் சரியாக தயாரிக்கப்பட்ட நெக்லஸைக் கொடுப்பது வழக்கமாக இருந்தது நூறு நாணயங்கள். ஒவ்வொரு நபரும் அதை சுயாதீனமாக உருவாக்கினர். இந்த பரிசு சிறந்த வாழ்த்து மற்றும் நூறு ஆண்டுகள் வாழ விருப்பமாக கருதப்பட்டது.
நவீன சீனாவில் மற்றொரு சுவாரஸ்யமான புத்தாண்டு பழக்கம் உள்ளது, அது அழைக்கப்படுகிறது "முதல் வெளியேறு". கொண்டாட்டத்திற்குப் பிறகு, ஒரு நபர் வீட்டை விட்டு வெளியேறி, இந்த ஆண்டு ஜாதகம் சாதகமாகவும் மகிழ்ச்சியாகவும் கருதும் திசையில் சரியாக ஆறு படிகள் எடுப்பார் என்று அவர் பரிந்துரைக்கிறார். அதன் பிறகு, நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும். எதிர்காலத்தில் அதிர்ஷ்டம் மற்றும் மகிழ்ச்சிக்கு இது அவசியம்.
   சீனாவின் தெருக்களில் பண்டிகை அணிவகுப்பு

  விடுமுறை விளக்குகள் விளக்கு

  புத்தாண்டு அலங்கார

  பண்டிகை பட்டாசு

  விடுமுறை அட்டவணை

இத்தாலியில் புத்தாண்டைக் கொண்டாடுவது எப்படி: மரபுகள்

எந்த நாட்டையும் போல, "குளிர்கால" விடுமுறை கூட்டத்திற்கு இத்தாலி கவனமாக தயாராகி வருகிறது: வீதிகள் மற்றும் சதுரங்களை அலங்கரிக்கிறது, சிவப்பு ரிப்பன்களிலிருந்து வில்ல்களைத் தொங்குகிறது, மலர் படுக்கைகளை ஏற்பாடு செய்கிறது. புத்தாண்டு மக்கள் ஒரு நல்ல மனநிலை மற்றும் நகைச்சுவை உணர்வுடன் உணரப்படுகிறதுஉதாரணமாக, வெனிஸில் நகரின் ஒவ்வொரு சின்னத்திற்கும் தொப்பிகள் மற்றும் சாண்டா கிளாஸின் தாடியை அணிவது வழக்கம் - வெனிஸ் சிங்கம்.
ஆர்வம்: சீனாவைப் போலவே, இத்தாலியும் நம்புகிறது புதிய ஆண்டின் சிவப்பு வண்ண சின்னம்  ஒரு நபரை தீமையிலிருந்து பாதுகாத்து அவருக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது. அதனால்தான் இந்த நாளில் ஒவ்வொரு சுயமரியாதை இத்தாலியரும் இருக்க வேண்டும் சிவப்பு ஒன்றை அணிந்து கொள்ளுங்கள்: உடை, சட்டை, பேன்ட், ஆடை, டை, வில்-டை, சாக்ஸ்.


  புத்தாண்டில் இத்தாலி
மிக அதிகம் அசாதாரண இத்தாலிய பாரம்பரியம் –  பழைய மற்றும் தேவையற்ற விஷயங்களை அகற்றவும். இது மிகவும் எதிர்பாராத விதத்தில் செய்யப்படுகிறது - சாளரத்தை வெளியே எறிவதன் மூலம். அதனால்தான் சுற்றுலாப் பயணிகள் இத்தாலியின் அழகிய இரவு வீதிகளில் உலாவ வேண்டாம், அல்லது தலையில் ஹெல்மெட் அணிய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பழைய அணிந்திருந்த சட்டைக்கு பதிலாக, ஒரு நபர் ஒரு ஜன்னலுக்கு வெளியே ஒரு வறுக்கப்படுகிறது பான் எறிய மாட்டார் என்பதில் இருந்து யாரும் பாதுகாப்பாக இல்லை. நீங்கள் சாலையில் சுதந்திரமாக நடக்கலாம், ஏனென்றால் இத்தாலியில் புத்தாண்டு தினத்தன்று போக்குவரத்து குறைவாக உள்ளது.
ஆர்வம்: இத்தாலியர்கள் குப்பைகளை வெளியே எறிவதைத் தவிர, பணம் பெரும்பாலும் ஜன்னல்களிலிருந்து விழும். ஏனென்றால், நல்ல பழைய பாரம்பரியத்தின் படி விண்டோசில் ஒரு சிறிய அளவு நாணயங்களை வைப்பது வழக்கம்  அடுத்த ஆண்டு நல்ல அதிர்ஷ்டம்.


  பழைய விஷயங்களை ஜன்னலுக்கு வெளியே எறிவது - இத்தாலிய பாரம்பரியம்
அது இரகசியமல்ல இத்தாலியர்கள் உணவை நேசிக்கிறார்கள், மதிக்கிறார்கள்ஒய். அவர்கள் ஒவ்வொரு நாளும் சுவையான உணவை சாப்பிட விரும்புகிறார்கள், குறிப்பாக புத்தாண்டு தினத்தன்று. இத்தாலியில் காலா இரவு உணவு   பொதுவாக "செயின்ட் சில்வெஸ்டரின் இரவு உணவு" என்று அழைக்கப்படுகிறது.
நீங்கள் அதை தொடங்க வேண்டும் மாலை ஒன்பதாம் மணி நேரத்திற்கு முன்னதாக இல்லை, இது முக்கியமாக நள்ளிரவு வரை நீடிக்கும். சுவாரஸ்யமான விஷயம் அது அட்டவணையில் குறைந்தது ஏழு வெவ்வேறு உணவுகள் இருக்க வேண்டும்.  பயறு, கொட்டைகள், பன்றி இறைச்சி, சிவப்பு கேவியர் மற்றும் திராட்சை எந்த வடிவத்திலும் இருக்க வேண்டும்!
ஆர்வம்: புத்தாண்டு அட்டவணையில் பன்றி இறைச்சி கால்கள் உள்ளன வெளிச்செல்லும் பழைய ஆண்டின் நினைவாக.  இத்தாலியர்களுக்கு பன்றி இறைச்சி மிக முக்கியமான தயாரிப்பு. கால்களைத் தவிர, பன்றி இறைச்சி தலை, தொத்திறைச்சி மற்றும் குண்டு சமைப்பதில் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.


  இத்தாலிய புத்தாண்டு அட்டவணை
பன்றி இறைச்சியைப் போலன்றி, கோழி சாப்பிடுங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, அவர்கள் பறவை விரைவான மற்றும் முட்டாள் அல்ல என்று கருதுகிறார்கள். ஆனால் நீங்கள் குறைந்தது ஒரு ஸ்பூன் கேவியர் சாப்பிட்டால், நீங்கள் செல்வத்தையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் குற்றம் சாட்டுவீர்கள். விருந்து முடிவுக்கு வர வேண்டும் துண்டுகள் மற்றும் மது.
ஆர்வம்: இத்தாலியில் புத்தாண்டு தினத்தன்று குடிக்க ஷாம்பெயின் மற்றும் பீர் - ஏற்றுக்கொள்ளப்படவில்லை.  மேலும், இது மோசமான வடிவமாகவும் அடுத்த ஆண்டு மோசமான சகுனமாகவும் கருதப்படுகிறது.
வேடிக்கையான இத்தாலிய புத்தாண்டு பாரம்பரியம் சிமிங் கடிகாரத்தின் கீழ் 12 திராட்சை சாப்பிடுங்கள். ஒரு நபர் ஒவ்வொரு பக்கவாட்டிலும் ஒரு பெர்ரி சாப்பிட முடிந்தால், அவர் அடுத்த ஆண்டு மிகவும் வேகமான மற்றும் மகிழ்ச்சியாக இருப்பார் என்று நம்பப்படுகிறது.
கூடுதலாக, இந்த பாரம்பரியத்திற்கு ஒரு தொடர்ச்சி உள்ளது என்பது அனைவருக்கும் தெரியாது! கடிகாரத்தின் கடைசி பக்கவாதத்திற்குப் பிறகு, காலை 12 மணியளவில் சரியாக ஒளி சில விநாடிகளுக்கு அணைக்கப்படும்.  இது அவசியம் மேஜையில் இருந்தவர்கள் ஒருவருக்கொருவர் முத்தமிட்டனர்!


  பன்னிரண்டு திராட்சை - புத்தாண்டு பாரம்பரியம்
காலை 12 மணிக்குப் பிறகு, மக்கள் வீதிகளில் இறங்கத் தொடங்குகிறார்கள்  உங்கள் வேடிக்கையைத் தொடரவும். உதாரணமாக, ரோமில், புத்தாண்டைக் கொண்டாட மிகவும் பிரபலமான இடம் பிரதான சதுரம். உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது பட்டாசுகளைத் தொடங்கவும்.  இத்தாலியர்களின் மூடநம்பிக்கை அவர்களை உருவாக்குகிறது கொண்டாட்டத்தின் இரவில் ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் கவனம் செலுத்துங்கள்: அவர்கள் யார் சந்தித்தார்கள், இரவு எப்படி சென்றது. உதாரணமாக:
  • வயதானவரை சந்திக்கவும் - அதிர்ஷ்டத்திற்கு
  • பாதிரியாரை சந்திக்கவும் - ஏமாற்றத்திற்கு
  • ஒரு சிறிய குழந்தையை சந்திக்கவும் - வேடிக்கையாக
  • ஹம்ப்பேக் செய்யப்பட்ட மனிதரை சந்திப்பது பணம் மற்றும் செழிப்புக்கான அறிகுறியாகும்.
கூடுதலாக, ஒரு இத்தாலியன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வருகை தருகிறார் என்றால், அவர் நிச்சயமாக இருக்க வேண்டும்   உங்களுடன் ஒரு பாட்டில் சுத்தமான தண்ணீரைக் கொண்டு வாருங்கள். அடுத்த ஆண்டு புதிய ஆற்றலைக் கண்டுபிடிக்க விரும்பும் உரிமையாளர்களுக்கு இது வழங்கப்பட வேண்டும். இத்தாலியில் பண்டிகைகளுக்குப் பிறகு, பண்டிகை மேஜையில் மீண்டும் உட்கார்ந்தபின் இரவு உணவிற்கு முன் தூங்குவது வழக்கம்.
இத்தாலியில் பழக்கமான சாண்டா கிளாஸ் அல்லது சாண்டா கிளாஸ் என்று அழைக்கப்படுகிறது போபோ நடேல்.  அவர் சமீபத்தில் இந்த நாட்டில் தோன்றினார், 19 ஆம் நூற்றாண்டில், அவரது உருவம் இருந்தது அமெரிக்க கலாச்சாரத்தில் கடன் வாங்கப்பட்டது.  போபோவுடன் சேர்ந்து, பெஃபானா என்ற ஒரு தேவதை குழந்தைகளின் வீடுகளுக்கு வருகிறது.
சுவாரஸ்யமான விஷயம் அது தேவதை கவர்ச்சியாகத் தெரியவில்லை மற்றும் அவரது தோற்றம் பாபா யாகத்துடன் ஒப்பிடத்தக்கது.  போபோ நடேல் கிறிஸ்துமஸ் மரத்தின் கீழ் பரிசுகளை விட்டுவிடுகிறார், மேலும் பெஃபானா நெருப்பிடம் மீது காலுறைகளில் ஆச்சரியங்களை வைக்கிறார். குழந்தை மோசமாக நடந்து கொண்டால், சாக்ஸில் அவர் இனிப்புகளுக்கு பதிலாக நிலக்கரியைக் கண்டுபிடிப்பார்.


  போபோ நடேல்

  வெனிஸில் கொண்டாட்டம்

  பெஃபன் தேவதை

  இத்தாலியில் கொண்டாட்டம்

இங்கிலாந்தில் புத்தாண்டைக் கொண்டாடுவது எப்படி: மரபுகள்

இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாடுங்கள்.  இத்தாலியைப் போலவே, கிறிஸ்துமஸும் பயபக்தியுடன் நடத்தப்படுகிறது, அதை நெருங்கிய மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் செலவிடுகிறது, மற்றும் புத்தாண்டு நண்பர்களுடன் கொண்டாடப்படுகிறது.  சாண்டா கிளாஸுக்கு பதிலாக, முக்கிய வழிகாட்டி பொதுவாக அழைக்கப்படுகிறார் சாண்டா பிரிவு. நாடு முழுவதும், விடுமுறைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கும்.
நாட்டின் வீதிகள் பண்டிகை அணிவகுப்புகளை நிரப்புகின்றனஇதில் அன்புக்குரியவர்கள் பங்கேற்கிறார்கள்   விசித்திரக் கதாபாத்திரங்கள்:  ஹம்ப்டி டம்ப்டி, பஞ்சா, மார்ச் ஹரே, லார்ட் மெஸ். தெரு விற்பனையாளர்களின் அலமாரிகளில் அனைவரும் வாங்கலாம் வண்ணமயமான முகமூடிகள், பட்டாசுகள், விசில், பிரகாசிகள் மற்றும் பொம்மைகள். புத்தாண்டு தினத்தன்று, சத்தம் போடுவது, வேடிக்கை பார்ப்பது, பாடுவது, நடனம் ஆடுவது வழக்கம்.
ஆர்வம்: விடுமுறை அட்டைகளுடன் ஒருவருக்கொருவர் வாழ்த்துவது இங்கிலாந்தில் தோன்றிய ஒரு பாரம்பரியம். இங்குதான் 1843 ஆம் ஆண்டில் விருப்பங்களும் வரைபடங்களும் கொண்ட முதல் அட்டை லண்டனில் அனுப்பப்பட்டது.
ஆங்கில புத்தாண்டு பாரம்பரியம் குழந்தைகள் படுக்கைக்குச் செல்வார்கள் என்று கூறுகிறது ஒரு பெரிய தட்டை அம்பலப்படுத்துங்கள்.  இந்த தட்டில் சாண்டா கிளாஸ் வேண்டும் பரிசுகளை வைக்கவும்.  அவர்கள் தங்கள் வீட்டை நம்புகிறார்கள்   சாந்தா ஒரு கழுதை மீது வருகிறார்  எனவே இது சமாதானப்படுத்தப்பட வேண்டும். இதைச் செய்ய, நெருப்பிடம் மேலே உள்ள காலுறைகளில் ஒரு சிறிய வைக்கோல் அல்லது ஓட்ஸ் விட வேண்டும்.
புதிய ஆண்டு இங்கிலாந்தில் வந்துவிட்டது, மணி ஒலிக்க செய்யப்பட்டது.  காதலில் இருக்கும் ஒரு ஜோடி புத்தாண்டு மணியின் சத்தத்திற்கு முத்தமிட்டால், அவள் புதிய ஆண்டு முழுவதையும் ஒன்றாக செலவிடுவாள் என்று ஒரு பாரம்பரியம் உள்ளது.
ஆங்கில புத்தாண்டு அட்டவணையில் முக்கிய உணவு வறுத்த வான்கோழி. உருளைக்கிழங்கு மற்றும் கஷ்கொட்டை கொண்டு சமைப்பது வழக்கம். கூடுதலாக, இறைச்சி பை, புட்டு மற்றும் பிரஸ்ஸல்ஸ் முளைகள் ஒரு பக்க உணவாக வழங்கப்படுகின்றன.


  பண்டிகை பட்டாசு

  விடுமுறை அட்டவணை

  பண்டிகை அலங்கார

ஜப்பானில் புத்தாண்டு எவ்வாறு கொண்டாடப்படுகிறது மற்றும் கொண்டாடப்படுகிறது?

புத்தாண்டு ஈவ் நாட்டின் வீதிகள் விடுமுறை கண்காட்சிகளுடன் பரிசுகளுடன் நிறைவுற்றவை, உடைகள் மற்றும் இன்னபிற பொருட்கள். ஒவ்வொரு ஜப்பானியரும் வாங்க வேண்டும்   Hamano  - இது ஒரு வகையான அம்புகள், இது தீய சக்திகளிடமிருந்து ஒரு பாரம்பரிய தாயாக செயல்படுகிறது. இருப்பதும் அவசியம் takarabune  - உணவு நிரப்பப்பட்ட சிறப்பு படகுகள் (அரிசி, பயறு, பீன்ஸ்). அவர்கள் அடுத்த ஆண்டு தங்கள் உரிமையாளர்களுக்கு செழிப்பையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வருகிறார்கள்.
ஆர்வம்: ஜப்பானில், ஒரு பண்டிகை மரத்தை அலங்கரிப்பதும் வழக்கம் - ஒரு பைன். ஆனால், இந்த மரம் இயற்கையானது அல்ல, ஆனால் மூங்கில், வைக்கோல் மற்றும் ஃபெர்ன் ஆகியவற்றால் ஆனது.


  விடுமுறை வீட்டு அலங்கார: மோட்டேபானா
பண்டைய ஜப்பானிய பாரம்பரியம்  - வீட்டை ஒரு மொட்டெபனாவுடன் அலங்கரிக்கவும். இவை பிரகாசமான வண்ணங்களால் வரையப்பட்ட மூங்கில் கிளைகள். கடவுள்களை திருப்திப்படுத்த நீங்கள் ஒரு முக்கிய இடத்தில் ஒரு மொட்டெபானாவை தொங்கவிட வேண்டும். கூடுதலாக, காலை 12 மணிக்கு உறுதி செய்யுங்கள். ஒரு புத்த மணியை ஒலிக்கவும்  சரியாக 108 முறை. இது மகிழ்ச்சியின் கடவுளை ஈர்க்கும்.
ஜப்பானில் புத்தாண்டு ஏற்றுக்கொள்ளப்படுகிறது ஒரு குடும்ப விருந்துக்கு வீட்டில் கொண்டாடுங்கள்.  சத்தம் போடுவது மற்றும் வேடிக்கை பார்ப்பது வழக்கம் அல்ல, மாறாக, நீங்கள் அமைதியாக உட்கார்ந்து கடந்த ஆண்டின் நிகழ்வுகளை நினைவில் கொள்ள வேண்டும். விருந்துக்குப் பிறகு, எல்லோரும் பரிசு அட்டைகளைப் படித்து பரிசுகளை மதிப்பாய்வு செய்யத் தொடங்குவார்கள்.


  புத்தாண்டுக்கான ஜப்பானிய குடீஸ்

  புத்தாண்டு ஆடை

  ஜப்பானில் புத்தாண்டு அணிவகுப்பு

அமெரிக்காவில் புத்தாண்டு எவ்வாறு கொண்டாடப்படுகிறது மற்றும் கொண்டாடப்படுகிறது?

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ்  புத்தாண்டை விட முக்கியமானது. கிறிஸ்துமஸ் அன்று, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கூடுவார்கள் பணக்கார மேஜையில்இரவு உணவு சாப்பிட. இரவில் குழந்தைகளுக்கு வருகிறது சாண்டா பிரிவு  மற்றும் மரத்தின் அடியில் மற்றும் நெருப்பிடம் காலுறைகளில் பரிசுகளை விட்டு விடுகிறது. குழந்தைகள், இதையொட்டி, சாண்டாவுக்கு ஒரு கிளாஸ் பால் மற்றும் குக்கீகளை விட்டு விடுங்கள்எனவே அவர் ஒரு நீண்ட பயணத்திற்குப் பிறகு சாப்பிடலாம்.
இருப்பினும், அமெரிக்காவில் புத்தாண்டும் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.. நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அவரைச் சந்திப்பது வழக்கம். சில அன்பு பொது இடங்களில் புத்தாண்டைக் கொண்டாடுங்கள். எப்படியிருந்தாலும், நாட்டின் தெருக்களில் "சத்தம்", மக்கள் வேடிக்கை, கத்தி மற்றும் பட்டாசுகளை போடுகிறார்கள்.
பிரகாசமான புத்தாண்டு புத்தாண்டு மரபுகளில் ஒன்று   பந்தைக் குறைத்தல். இது 1097 முதல் செய்யப்படுகிறது. டிச. சரியாக 00:00 மணிக்கு, பந்து அதன் மிகக் குறைந்த புள்ளியை அடைகிறது.
ஆர்வம்: அமெரிக்கர்களுக்கு மிகவும் பிரபலமான மரபுகளில் ஒன்று   நீங்கள் அருகில் நிற்கும் நபரை முத்தமிடுங்கள்சரியாக கடைசி மணி நேரத்தில். கூடுதலாக, இரண்டு பேர் அதிர்ஷ்டசாலி என்றால் புல்லுருவியின் புதரின் கீழ்ஒரு அலங்கார ஆபரணமாக தொங்க, அவர்கள் முத்தமிட வேண்டும்.


  வீட்டு அலங்காரம், முற்றத்தில்

  நியூயார்க்கின் தெருக்களைக் கொண்டாடுகிறது

  பண்டிகை பட்டாசு

  சாண்டா பிரிவு

  நியூயார்க்கில் புத்தாண்டு பந்து

  கிறிஸ்துமஸ் பந்தைக் குறைக்கிறது

ஜெர்மனியில் புத்தாண்டைக் கொண்டாடுவது எப்படி: மரபுகள்

ஜேர்மனியர்கள் புத்தாண்டை மட்டுமே கொண்டாடுவார்கள்   அன்புக்குரியவர்களின் வட்டத்தில்.  கொண்டாட தனியாக இருப்பது ஒரு கெட்ட சகுனம்.  உங்களிடம் ஒரு நிறுவனம் இல்லையென்றால், வெளியே சென்று வழிப்போக்கர்களை வாழ்த்தத் தொடங்குங்கள்.
கூடுதலாக, அவரது   புத்தாண்டுக்கு வீட்டுவசதி தயாராக இருக்க வேண்டும்.  ஒவ்வொரு ஜேர்மனியும் டிசம்பர் தொடக்கத்தில் கிறிஸ்துமஸ் மாலை அணிவித்து கதவை அலங்கரிப்பதை உறுதிசெய்து, அதன் மூலம் விடுமுறை நாட்களில் கவுண்ட்டவுனைத் தொடங்குங்கள்.
புத்தாண்டுக்குத் தயாராகும் ஜெர்மன் பாரம்பரியத்தில், அதிக முக்கியத்துவம் விடுமுறை அட்டவணை மற்றும் ஒரு அழகான நேர்த்தியான கிறிஸ்துமஸ் மரம்.  மரம் பெரியதாகவும், பசுமையானதாகவும், மாலைகள், பொம்மைகள், டின்ஸல் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும். முக்கிய கிறிஸ்துமஸ் உணவு   Stollen. இது ஒரு சுட்ட வாத்து, அதை மல்லட் ஒயின் கொண்டு குடிப்பது வழக்கம்.


  பண்டிகை ஸ்டோலன்
டிசம்பர் தொடக்கத்தில், ஜெர்மனியில் ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கிறது வருகை காலண்டர்  - இது டிசம்பருக்கான சிறப்பு நாட்காட்டியாகும், விடுமுறை நாட்கள் வரை நாட்களைக் கணக்கிடுகிறது. சாண்டா கிளாஸுக்குப் பதிலாக, செயிண்ட் நிக்கோலஸ் வீட்டிற்குள் வந்து, வீட்டைச் சுற்றி பரிசுகளை விட்டுவிடுகிறார்: கிறிஸ்துமஸ் மரத்தின் கீழ், காலுறைகளில், தலையணைகளின் கீழ்.


  அட்வென்ட் காலண்டர்

  ஜெர்மனியில் புத்தாண்டு அணிவகுப்பு

  செயிண்ட் நிக்கோலஸ்

  ஜெர்மனியில் கொண்டாட்டம்

ஸ்பெயினில் புதிய ஆண்டைக் கொண்டாடுவது மற்றும் கொண்டாடுவது எப்படி?

ஸ்பெயினில் புத்தாண்டைக் கொண்டாடுங்கள்   சத்தம் மற்றும் சத்தமாக  நிச்சயமாக - வீட்டில் இல்லை. அதனால்தான் பெரும்பாலான ஸ்பெயினியர்கள் கிளப்புகள், உணவகங்கள், கஃபேக்கள் ஆகியவற்றில் வேடிக்கையாக இருங்கள்.  வீதிகள் பண்டிகை ஊர்வலங்கள் மற்றும் அற்புதமான திருவிழா விழாக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அடையாளங்களுடன் பெரிய புள்ளிவிவரங்கள் தோன்றும், சிதறல் மிட்டாய்கள், நாணயங்கள், டின்ஸல்.
ஸ்பெயினில் புத்தாண்டைக் கொண்டாடுங்கள் காலை வரை. புத்தாண்டு தினத்தன்று ஒவ்வொரு சுயமரியாதை ஸ்பானியரும் உறவினர்களுக்கும் அந்நியர்களுக்கும் இனிப்புகளுடன் சிகிச்சையளிப்பது உறுதி  மற்றும் குடீஸ்: கொட்டைகள், தேன், ஒயின். புத்தாண்டு ஈவ் இருக்க வேண்டும் உங்கள் அலமாரிகளில் சிவப்பு நிறம் இருக்கும்இது வரும் ஆண்டில் நல்ல அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் தரும். வீட்டை பூக்களால் அலங்கரிக்கவும் puansetii.
ஆர்வம்: சாண்டா கிளாஸ் ஸ்பெயினில் இல்லை, ஆனால் உள்ளது அப்பா நோயல். அவர் ஒரு பிரகாசமான எம்பிராய்டரி உடையில் அணிந்துள்ளார். அவர் நகரத்தை சுற்றி நடந்து பால்கனிகளில் பரிசுகளை வீசுகிறார். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவரது கைகளில் ஒரு ஊழியர்கள் இல்லை, ஆனால் ஒரு பாட்டில் மது. புத்தாண்டு அட்டவணையை அலங்கரிப்பது பேலா, வான்கோழி, ஜமான், முலாம்பழம், ஒயின் ஆகியவையாக இருக்க வேண்டும்.


  ஸ்பெயினில் கொண்டாட்டம். ஸ்பெயினில் புத்தாண்டுக்கான வேடிக்கை.

  ஸ்பெயினில் புத்தாண்டு அட்டவணை

இந்தியாவில் புத்தாண்டு எவ்வாறு கொண்டாடப்படுகிறது மற்றும் கொண்டாடப்படுகிறது?

இந்தியாவில் புத்தாண்டு  - இது அனைவரையும் சேகரிக்கும் ஒரு சிறந்த குடும்ப விடுமுறை   பணக்கார மேஜையில். இங்கே கிறிஸ்துமஸ் மரத்தின் இடம் நேர்த்தியானது மற்றும் டின்ஸல் மற்றும் பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மா மரம். சுவாரஸ்யமாக, சாண்டா கிளாஸுக்கு பதிலாக, மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள் பரிசுகளுடன் கிறிஸ்துமஸ் பெண்கள்.  வாழை இலைகள் மற்றும் பிரகாசமான விளக்குகளால் வீட்டை அலங்கரிப்பது வழக்கம்.
இந்தியாவில் மது மீதான அணுகுமுறை கண்டிப்பானது, ஆனால் அது புத்தாண்டு விடுமுறை நாட்களில் தான் வலுவான பானங்களை குடிக்கவும், அதிகாரப்பூர்வமாக குடிக்கவும்  முற்றிலும் எல்லோரும்: ஆண்கள், பெண்கள், போலீசார். புத்தாண்டை மட்டும் கொண்டாட பெண்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை, அவர்கள் கணவன் அல்லது பெற்றோருக்கு அடுத்ததாக இருக்க வேண்டும் (திருமணமாகாதவர்கள்).


  இந்தியாவில் புத்தாண்டு கொண்டாட்டம்

பின்லாந்தில் புத்தாண்டைக் கொண்டாடுவது எப்படி: மரபுகள்

பின்லாந்தில் கொண்டாட்டம் பாரம்பரியமாக டிசம்பர் 31 முதல் ஜனவரி 1 இரவு வரை வருகிறது. இந்த கொண்டாட்டத்தின் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் ஸ்லாவிக் மதங்களுக்கு மிகவும் ஒத்தவை. ஃபின்னிஷ் விடுமுறை ஒரு விசித்திரக் கதைக்கு மிகவும் ஒத்திருக்கிறது: விளக்குகள், வீட்டு அலங்காரங்கள், ஸ்மார்ட் கிறிஸ்துமஸ் மரங்கள், குட்டிச்சாத்தான்கள் மற்றும், நிச்சயமாக, சாண்டா கிளாஸ்.
வேடிக்கை, பாடல்கள், முகமூடி மற்றும் விடுமுறை ஊர்வலம்  பின்லாந்தில் ஜனவரி 1 வரை நீடிக்கும். கொண்டாட்டத்தின் நோக்கம் வெறுமனே சுவாரஸ்யமாக உள்ளது. பின்னிஷ் புத்தாண்டு கொண்டாட்டத்தின் அசாதாரண மரபுகளில் ஒன்று   இது தாரில் எண்ணெயிடப்பட்ட பட்டாம்பூச்சிகளை எரிப்பதாகும்.  அத்தகைய பட்டாம்பூச்சி எரிப்பைப் பார்த்து, கடந்த ஆண்டு அவர்களுக்கு ஏற்பட்ட அனைத்து தோல்விகளையும் சிக்கல்களையும் மக்கள் அழைத்துச் செல்கிறார்கள்.
மற்றொரு பண்டைய பாரம்பரியம் இறந்த முன்னோர்களை மதிக்கவும். இது புத்தாண்டுக்கு சில நாட்களுக்கு முன்பு செய்யப்பட வேண்டும். நீங்கள் கல்லறைக்கு வர வேண்டும் மற்றும் இறுதி சடங்கு மெழுகுவர்த்திகள். இத்தகைய விளக்குகள் நாடு முழுவதும் புத்தாண்டு பருவத்தில் காணப்படுகின்றன. கூடுதலாக, ஃபின்ஸ் தங்களால் இயன்ற அனைத்தையும் வெளிச்சத்தால் அலங்கரிக்க முயற்சி செய்கிறார்கள்: வீடு, முகப்பில், கூரை, கதவுகள், ஜன்னல்கள், முற்றம், மரங்கள்.
பாரம்பரிய சாண்டா கிளாஸுக்கு பதிலாக, இங்கே ஜூலூபூக்கி குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்குகிறார்.  புத்தாண்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஏராளமானவை உள்ளூர் மக்களுக்கான சவாரிகள்  மற்றும் சுற்றுலாப் பயணிகள்: பனிச்சறுக்கு, பனி சறுக்கு, ஸ்லெடிங், பனிச்சறுக்கு. ஃபின்ஸின் இந்த நேரத்தில் முக்கிய விடுமுறை நிகழ்வு “ பனி மற்றும் பனி விழா". எஜமானர்கள் விசித்திரக் கதாபாத்திரங்கள் மற்றும் பனிக்கட்டி துண்டுகளிலிருந்து அழகான யதார்த்தமான உருவங்களை உருவாக்குகிறார்கள்.


  Joulupukki

  பின்லாந்தில் புத்தாண்டு நகரம்

ஆப்பிரிக்காவில் புத்தாண்டைக் கொண்டாடுவது மற்றும் கொண்டாடுவது எப்படி: மரபுகள்

ஆப்பிரிக்காவில், புத்தாண்டு என்பது மக்களால் கருதப்படுகிறது வாழ்க்கையின் ஒரு புதிய கட்டத்தின் ஆரம்பம். இந்த கண்டத்தில், கொண்டாட்டம் முதலில் கொண்டாடப்பட்டது   எகிப்தில்உலகின் முதல் காலண்டர் உருவாக்கப்பட்டது. ஆச்சரியம் என்னவென்றால், அந்த நாட்களில் புத்தாண்டின் வருகை இருந்தது   செப்டம்பர் இறுதியில்.
ஆப்பிரிக்காவின் சிறிய பழங்குடியினரில், புத்தாண்டு நிச்சயமாக கணக்கிடப்படவில்லை அல்லது கொண்டாடப்படவில்லை. ஆப்பிரிக்கா ஒரு ஐரோப்பிய காலனியாக மாறியபோது மாற்றங்கள் நிகழ்ந்தன: ஐரோப்பியர்கள் குடியேறிய மற்றும் ஐரோப்பிய மரபுகளுடன்.  இப்போது, \u200b\u200bபுத்தாண்டு ஈவ் பாரம்பரியமாக ஜனவரி 1 ஆம் தேதி இங்கு கொண்டாடப்படுகிறது, மற்ற நம்பிக்கைகள் இருந்தபோதிலும், புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளது கத்தோலிக்க மரபுகளுடன் பொதுவானது.
ஆப்பிரிக்காவின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் - ஏழைகள். துல்லியமாக ஏனெனில்   புத்தாண்டை பெரிய அளவில் கொண்டாடுங்கள் இங்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆயினும்கூட, இந்த விடுமுறை குடும்பங்களை ஒன்றிணைக்கிறது, ஆண்கள் வருவாயிலிருந்து தங்கள் மனைவிகளுக்கும் குழந்தைகளுக்கும் திரும்பும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். வீடு பனை ஓலைகள் மற்றும் பிற தாவரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரவு உணவிற்கு, இல்லத்தரசிகள் முயற்சி செய்கிறார்கள் இறைச்சி உணவுகளை சமைக்கவும், மற்றும் ஹாப்ஸிலிருந்து வீட்டில் தயாரிக்கப்பட்ட பீர் குடிக்கவும்.
ஆப்பிரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பிற பயன்பாடுகள்:
  • கென்யா மற்றும் தான்சானியா  அனைவருக்கும் வழக்கமான முறையில் புத்தாண்டைக் கொண்டாடுங்கள்: ஒரு பசுமையான அட்டவணை, வாழ்த்துக்கள் மற்றும் பரிசுகள். புத்தாண்டின் முதல் நாளில் தேவாலயத்திற்கு செல்வது வழக்கம் (நாடுகளில் பல ஆர்த்தடாக்ஸ் மக்களும் கத்தோலிக்கர்களும் உள்ளனர்).
  • தென்னாப்பிரிக்காவில்  புத்தாண்டு தினத்தன்று, தொண்டு வேலைகளைச் செய்வது மற்றும் ஏழைகளுக்கு பிரசாதம் கொடுப்பது வழக்கம். நல்வாழ்வு உள்ளூர்வாசிகளும் அரசாங்கமும் இதைச் செய்கின்றன.
  • மேற்கு ஆப்பிரிக்காவில்  புத்தாண்டின் அசாதாரண மரபுகள் நிறைய. உதாரணமாக, பந்தயப் போட்டிகள், சடங்கு நெருப்பைச் சுற்றி நடனமாடுவது மற்றும் கத்திகளால் தன்னைத்தானே குத்திக்கொள்வது.


  ஆப்பிரிக்காவில் புத்தாண்டு ஈவ்

பிரேசிலில் புதிய ஆண்டைக் கொண்டாடுவது மற்றும் கொண்டாடுவது எப்படி?

பிரேசிலில் புத்தாண்டு  - இது ஒரு மகிழ்ச்சியான பசுமையான விடுமுறை. பிரேசிலியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸை மிதமாக கொண்டாடினால், புத்தாண்டில் அவர்கள் நாடுகிறார்கள் வீட்டை விட்டு வெளியேறி நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். எல்லா நகரங்களின் வீதிகளும் உண்மையில் “வெண்மையாக மாறும்” பனியிலிருந்து அல்ல, ஆனால் எல்லோரும் முயற்சி செய்கிறார்கள் என்பதிலிருந்து ஜன்னலுக்கு வெளியே காகிதத்தை எறியுங்கள்.  இந்த பாரம்பரியம் வேலை ஆண்டின் முடிவைக் குறிக்கிறது.
இது புத்தாண்டுக்கு பிரேசிலில் சூடாக இருக்கிறது. பறக்கும் வீதிகள், வீடுகள் மற்றும் அபார்ட்மெண்ட் ஜன்னல்கள் பண்டிகை விளக்குகள் மற்றும் மாலைகளுடன் தொங்கவிடப்பட்டது.  பிப்ரவரி திருவிழா வரை நகைகள் அகற்றப்படாது. மக்கள் அடைத்த வீடுகளில் உட்கார மாட்டார்கள், ஆனால் விடுமுறையை தெருவில் கொண்டாடுங்கள், சதுரத்தில் மற்றும் கடற்கரையில் கூட. உடை அணிய   இந்த நாளில் வெள்ளை உடைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
பிரேசிலில், பலர் பின்னிப் பிணைந்தனர் வெவ்வேறு கலாச்சாரங்களின் பழக்கவழக்கங்கள்: ஐரோப்பிய, ஆப்பிரிக்க, இந்தியன். சுவாரஸ்யமாக, விடுமுறையின் பாரம்பரிய பெயர் “புத்தாண்டு” இங்கே பயன்படுத்தப்படவில்லை, ஆனால் தெரிகிறது "சகோதரத்துவம்" அல்லது "சகோதரத்துவம்". உள்ளூர்வாசிகள் நம்புவதால் இது நடந்தது: விடுமுறை என்பது மக்களை ஒருவரையொருவர் "சகோதரர்" என்று அழைக்கும் அளவுக்கு மக்களை ஒன்றிணைக்கிறது.
ஆர்வம்: சரியாக நள்ளிரவில், பிரேசிலின் கருப்பு வானம் புத்தாண்டின் அடையாளமாக, பட்டாசுகளின் பிரகாசமான வண்ணங்களால் நிரம்பியுள்ளது. வரவிருக்கும் ஆண்டின் முதல் விநாடிகளில், ஒவ்வொரு பிரேசிலியனும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க சரியாக ஏழு முறை குதிக்க வேண்டும்.


  பிரேசிலில் கொண்டாட்டம்

பிரான்சில் புதிய ஆண்டைக் கொண்டாடுவது மற்றும் கொண்டாடுவது எப்படி?

டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கூட்டத்திற்குப் பிறகு பிரான்ஸ் கொண்டாட்டத்திற்குத் தயாராகிறது புதிய ஆண்டு. அவர்கள் அதை டிசம்பர் 31 அன்று செய்கிறார்கள்   உணவகங்கள் அல்லது கஃபேக்கள் ஆகியவற்றில், அவர்கள் பார்வையிட செல்லலாம்.  பிரஞ்சு காதல் ருசியான உணவுடன் விடுமுறையைக் கொண்டாடுங்கள்: வான்கோழி, கோழி, பன்றிக்குட்டி. கூடுதலாக, வழிப்போக்கர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளுடன் தெளிக்கலாம்.
ஆர்வம்: பிரான்சில் ஒரு நேர்த்தியான கிறிஸ்துமஸ் மரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, அது அழகாகவும் அற்புதமாகவும் இருக்க வேண்டும். வண்ணமயமான கிறிஸ்துமஸ் மரங்கள் வீடுகளில் மட்டுமல்ல, முற்றத்தையும் அலங்கரிக்கின்றன. கதீட்ரல்களில் நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் உள்ளன.
பிரஞ்சு சாண்டா கிளாஸ் அழைத்தார் ஒன்றுக்கு நோயல். பழக்கவழக்கங்களின்படி, அவர் ஒரு கழுதையின் மீது வந்து புகைபோக்கி வழியாக வீட்டிற்குள் ஏறுகிறார். மந்திரவாதியை சமாதானப்படுத்த குழந்தைகள் அவருக்காக காலணிகளில் காலணிகளை வைக்கிறார்கள்  நல்ல நடத்தைக்காக அவர் அவர்களுக்கு சிறந்த பரிசுகளை விட்டுவிடுவார் என்று தொடர்ந்து நம்புகிறார்.
அசல் பிரெஞ்சு புத்தாண்டு பாரம்பரியம் - ஒரு பதிவுக்கு தீ வைக்கவும்கிறிஸ்துமஸ் காலத்தில் மீண்டும் செய்யப்பட்டது. இது தெருவில் செய்யப்படுகிறது, சுடரைப் பார்ப்பது, வேண்டும் விருப்பங்களைச் செய்யுங்கள். மீதமுள்ள உட்பொருட்களை ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் சேகரிக்க வேண்டும்   அதை நல்லதாக வைத்திருங்கள்  அடுத்த ஆண்டு வரை.
ஆர்வம்: மற்றொரு அசல் பாரம்பரியம் மதுவுடன் தொடர்புடையது. ஒயின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், அல்லது இந்த பானத்தை வெறுமனே பாராட்டுபவர்கள், புத்தாண்டு வாழ்த்துக்களை தங்கள் மதுவின் சிறந்த பீப்பாய் (பாட்டில்) வாழ்த்த வேண்டும்.


  பிரான்சில் கொண்டாட்டம்

  பிரான்சில் புத்தாண்டு கொண்டாட்டம்

செக் குடியரசில் புத்தாண்டு எவ்வாறு கொண்டாடப்படுகிறது மற்றும் கொண்டாடப்படுகிறது?

செக் குடியரசில் கொண்டாட்டம் தொடங்குகிறது "செயின்ட் நிக்கோலஸ் தினம்"  டிசம்பர் 6. முக்கிய விடுமுறை இன்னும் கத்தோலிக்க கிறிஸ்துமஸ். பண்டிகை மேசையில் முக்கிய உணவு   கெண்டை.  மீன் செதில்கள் பொதுவாக தட்டுகளின் கீழ் வைக்கப்படுகின்றன. ஒரு நாணயம் அங்கு வைக்கப்படுகிறது, இது விருந்தினருக்கு மகிழ்ச்சியைத் தரும்.
ஆர்வம்: செக் குடியரசில் புத்தாண்டு கெண்டையின் அளவு ஒரு தாயத்து என்று கருதப்படுகிறது, எனவே இது பெரும்பாலும் பணப்பையில் அணியப்படுகிறது.
கிறிஸ்துமஸ் ஈவ் பெயர்களில் ஒன்று “தாராளமான மாலை”. அந்த நாள் மேஜையில் இருக்க வேண்டும் குறைந்தது பன்னிரண்டு மெலிந்த உணவுகள், மேலும், நீங்கள் ஒவ்வொரு முயற்சி செய்ய வேண்டும். பாரம்பரியத்தின் படி, விடுமுறை அட்டவணையில் கூடுதல் தட்டு போடுவது அவசியம், அவர்கள் சொல்வது போல், "எப்போதாவது விருந்தினருக்கு."
ஆர்வம்: கார்ப் முக்கிய புத்தாண்டு உணவாக இருப்பதைத் தவிர, செக் குடியரசின் தெருக்களில் சிறிய கார்ப்ஸ் மீன்களை வழங்கும் விற்பனையாளர்களை நீங்கள் சந்திக்கலாம். நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்க இதுபோன்ற ஒரு மீனை வாங்கி உடனடியாக தண்ணீரில் விட வேண்டும்.
பெரும்பாலும் செக் குடியரசில் புத்தாண்டு கொண்டாட்டம் என்று அழைக்கப்படுகிறது "சில்வெற்றோவா". இந்த விடுமுறை அட்டவணையும் இருக்க வேண்டும் நிறைய சுவையான விருந்துகள் உள்ளன. முக்கிய பாடநெறி நன்றாக தானிய கஞ்சி, இது "உங்கள் பைகளில் பணத்தை செலவிட" உங்களை அனுமதிக்கிறது. புத்தாண்டில், பட்டாசுகளும் தொடங்கப்படுகின்றன, அவை ஒருவருக்கொருவர் அட்டைகளையும் பரிசுகளையும் தருகின்றன.


  செக் குடியரசில் கொண்டாட்டம்

உலகில் புத்தாண்டைக் கொண்டாடும் நாடுகள் எது?

புத்தாண்டு ஈவ் விரைவில் அல்லது பின்னர் நாடுகளில் மணிநேர வரம்பைப் பொறுத்தது. உலகின் விரிவான வரைபடத்தைப் பார்த்தால், பார்வை புத்தாண்டு வலமிருந்து இடமாக "நகர்கிறது". அதாவது, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அவரை முதன்முதலில் சந்தித்தன, கடைசியாக ஹவாய் தீவுகள் மற்றும் சமோவா.

வீடியோ: “உலகின் 10 வெவ்வேறு நாடுகளில் புத்தாண்டை எவ்வாறு கொண்டாடுவது”

குழந்தைகளுக்கான படங்களுடன் உலகின் பல்வேறு நாடுகளில் புத்தாண்டைக் கொண்டாடுவது எப்படி
பாலர் குழந்தைகளுக்கான உரையாடல் "பூமியின் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு ஈவ்"
  லியாபிசேவா எலெனா பெட்ரோவ்னா, கல்வியாளர், நகராட்சி மாநில பாலர் கல்வி நிறுவனம் மழலையர் பள்ளி எண் 1 "ஸ்வெஸ்டோச்ச்கா", கலாச்-ஆன்-டான், வோல்கோகிராட் பிராந்தியம்.
விளக்கம்:  இந்த உரையாடலை மழலையர் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஆரம்ப பள்ளி குழந்தைகள் பயன்படுத்தலாம், மேலும் கோப்புறை-கோப்புறையின் காட்சி பொருளாகவும் பயன்படுத்தலாம்.
குறிக்கோள்:  வெவ்வேறு நாடுகளின் புத்தாண்டு மரபுகளைக் கொண்ட குழந்தைகளைப் பழக்கப்படுத்துதல்.
நோக்கங்கள்: பண்டிகை கலாச்சாரத்தின் மரபுகள் பற்றிய குழந்தைகளின் அறிவை விரிவுபடுத்துவதற்காக, பிற நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பழக்கவழக்கங்கள்.

வெவ்வேறு நாடுகளின் புத்தாண்டு மரபுகள்
ஒவ்வொரு நாட்டிலும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது, ஆனால் அது வெவ்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு தேசத்திற்கும் அதன் சொந்த மரபுகள் மற்றும் புத்தாண்டின் பண்புகள் உள்ளன. ஐரோப்பாவிலிருந்து எங்கள் பயணத்தைத் தொடங்குகிறோம்.
புத்தாண்டு தினத்தன்று, இங்கிலாந்தின் தலைநகரில் பிக் பென் ஒலிக்கத் தொடங்குகிறது, ஆனால் முதலில் மணிகள் ஒரு போர்வையில் போர்த்தப்பட்டு, கோபுரத்திலேயே ஒலிக்கும். ஆனால் கடிகாரம் 12 ஐத் தாக்கியவுடன், போர்வை அகற்றப்பட்டு, மணிகள் ஒலிப்பது மாவட்டம் முழுவதும் கேட்கப்படுகிறது. ஆங்கிலேயர்கள், முதல் சிமிங் கடிகாரத்துடன், பழைய ஆண்டை வெளியே வர ஏதுவாக தங்கள் வீடுகளின் பின்புற கதவுகளைத் திறந்து, புதிய ஆண்டு நுழையும்படி முன்பக்கத்தைத் திறக்கவும். எனவே, இங்கிலாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு திறந்த நாள்.
பிரான்சில் புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு வேடிக்கையான இரவு. பிரெஞ்சுக்காரர்கள் இந்த இரவு கடினமாக சாப்பிட மற்றும் வேடிக்கையாக விரும்புகிறார்கள். ஒரு பாரம்பரியம் உள்ளது, அதன்படி பிரெஞ்சு எஜமானிகள் உள்ளூர் ஆதாரங்களுக்குச் சென்று தண்ணீர் சேகரிக்கின்றனர். முதலில் வருபவர் தனக்கு அருகில் ஒரு மாவு விருந்தை விட்டுவிட வேண்டும், அடுத்தவர் இந்த விருந்தை எடுத்துக்கொண்டு அவளை விட்டுவிட வேண்டும். எனவே இல்லத்தரசிகள் ரொட்டி பரிமாறிக்கொள்வதால் புதிய ஆண்டு தாராளமாக இருக்கும். பிரான்சில், புத்தாண்டு தாத்தாவின் பெயர் பெர் நோயல். அவர் அனைத்து வெள்ளை நிற உடையணிந்துள்ளார், சில காரணங்களால் குளிரைப் பற்றி மிகவும் பயப்படுகிறார். வெளிப்படையாக, அதனால்தான் அவர் குழந்தைகளுக்கான பரிசுகளை நெருப்பிடம் மற்றும் அடுப்புகளுக்கு அருகில் விட்டுவிடுகிறார்.
ஸ்பானிஷ் புத்தாண்டு தூய வேடிக்கை மற்றும் பண்டிகை. இந்த விடுமுறையில் வீட்டில் உட்கார ஸ்பெயினியர்கள் விரும்புவதில்லை, எல்லோரும் தங்கள் நகரங்களின் சதுக்கத்திற்குச் செல்கிறார்கள். மணிநேரங்களுக்குப் பிறகு, அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்கள். ஸ்பெயினில் ஒரு சுவாரஸ்யமான புத்தாண்டு பாரம்பரியம் உள்ளது. இளம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தங்கள் பெயர்களை துண்டு பிரசுரங்களில் எழுதி ஜோடிகளாக இழுக்கிறார்கள். இந்த வழியில் தம்பதிகள் உருவாகிறார்கள், யார் புத்தாண்டு கொண்டாட்டங்களை காதலர்களாக சித்தரிக்க வேண்டும்.
நள்ளிரவில் கடைசி கடிகார வேலைநிறுத்தத்துடன், இத்தாலியர்கள் ஜன்னல்களைத் திறந்து பழைய மற்றும் தேவையற்ற விஷயங்களை வீதியில் வீசுகிறார்கள். நீங்கள் எவ்வளவு அதிகமாக குப்பைகளை வீசுகிறீர்களோ, அவ்வளவு புதியது உங்களிடம் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
புத்தாண்டு தினத்தன்று எஜமானிகள் ஒரு பெரிய கிண்ணத்தில் அரிசி கஞ்சியை மேசைக்கு பரிமாறுகிறார்கள். கஞ்சியில் ஒரு சிறிய நட்டு மறைக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் அவரைக் கண்டால், அடுத்த ஆண்டு நிச்சயம் திருமணம் செய்து கொள்வார் என்று நம்பப்படுகிறது.

  இப்போது நாங்கள் ஆசிய நாடுகளின் வழியாக எங்கள் பயணத்தைத் தொடர்கிறோம்.
ஜனவரி 1 ஆம் தேதி காலையில், ஜப்பானில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்கள் அனைவரும் சூரிய உதயத்தை சந்திக்க வெளியே செல்கின்றனர். சூரியனின் முதல் கதிர்கள் மூலம், ஜப்பானியர்கள் வரும் ஆண்டில் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் மற்றும் பரிசுகளை பரிமாறிக்கொள்கிறார்கள். ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று, அவர்கள் நீண்ட நூடுல்ஸை சாப்பிடுகிறார்கள், இதனால் வாழ்க்கை நீண்டது.
மங்கோலியா
இந்த நாட்டில் புத்தாண்டு கால்நடை வளர்ப்பு பண்டிகையுடன் ஒத்துப்போகிறது, எனவே, இது விளையாட்டு, திறமை மற்றும் தைரியத்தின் சோதனைகளால் வகைப்படுத்தப்படுகிறது. ஐரோப்பா மக்களைப் போலவே, மங்கோலியர்களும் கிறிஸ்துமஸ் மரத்தில் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள், சாண்டா கிளாஸும் அவர்களிடம் வருகிறார், ஆனால் அவர் ஒரு உரோமம் கோட், நரி தொப்பி அணிந்து ஒரு மேய்ப்பருக்கு மிகவும் ஒத்தவர்.
இங்கே புத்தாண்டு ஆண்டின் வெப்பமான நேரமாக வருகிறது, எனவே அதன் வருகையை "நீர் விழா" கொண்டாடுகிறது. நகரங்கள் மற்றும் கிராமங்களின் தெருக்களில், மக்களைச் சந்திக்கும் போது, \u200b\u200bஒருவருக்கொருவர் பல்வேறு உணவுகளிலிருந்து தண்ணீர் ஊற்றவும். யாரும் புண்படுத்தவில்லை, ஏனென்றால் அதே நேரத்தில் அவர்கள் புதிய ஆண்டில் மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் விரும்புகிறார்கள்.

  அடுத்து நாம் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் புத்தாண்டு விடுமுறைக்கு வருகிறோம்
கனடாவில், நண்பர்கள் மற்றும் அந்நியர்களின் நிறுவனத்தில் தெருவில் புத்தாண்டைக் கொண்டாடுவது பாரம்பரியமாக வழக்கம். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பலர் கூடுகிறார்கள், பாப் நட்சத்திரங்கள் நிகழ்த்துகிறார்கள். கனடியர்கள் புத்தாண்டு தினத்தில் சறுக்குவதை விரும்புகிறார்கள்.
மெக்ஸிகோவில், புத்தாண்டு தினத்தன்று, அவர்கள் ஒரு களிமண் பானையை இனிப்புகளுடன் நிரப்புகிறார்கள், அவை அறையில் தொங்குகின்றன, பின்னர் கூடியிருந்த விருந்தினர்கள் ஒவ்வொன்றாக கண்களை மூடிக்கொண்டு கையில் ஒரு குச்சியை வைக்கிறார்கள். புதிய ஆண்டில் பானையை உடைத்தவர் நிச்சயமாக அதிர்ஷ்டசாலி.
அர்ஜென்டீனா
புத்தாண்டு தினத்தன்று, பழைய ஆவணங்கள், செய்தித்தாள்கள், ரசீதுகள், பில்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு வெளியே வீசப்படுகின்றன. பழையவற்றிலிருந்து விடுபட்டு, புத்தாண்டை கடந்த காலத்தின் சுமை இல்லாமல் கொண்டாடுவதற்காகவே இவை அனைத்தும் செய்யப்படுகின்றன.
பிரேசில்
பிரேசில் எப்போதும் துடிப்பான திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளுக்கு பிரபலமானது. புத்தாண்டு ஈவ் இதற்கு விதிவிலக்கல்ல. ஆண்டின் இந்த நேரத்தில், பிரேசிலின் நகரங்களின் வீதிகள் உள்ளூர்வாசிகள் மற்றும் விருந்தினர்களின் வண்ணமயமான அணிவகுப்புகள் மற்றும் ஊர்வலங்களால் நிரப்பப்பட்டுள்ளன. இத்தகைய நிகழ்வுகள் எப்போதும் சத்தமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும்.

  இப்போது ஆப்பிரிக்க கண்டத்தில் புத்தாண்டு விடுமுறைகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.சுடானிய மக்கள் வழக்கமாக நைல் நதி அல்லது பிற நீர்நிலைகளுக்கு அருகே புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள். இது அவர்களின் வீட்டிற்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும் என்று அவர்கள் நம்புகிறார்கள். புத்தாண்டு தினத்தன்று சூடானுக்கு பச்சை நட்டு கிடைப்பது சூடானியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. யாரும் புண்படுத்தாதபடி, பச்சை கொட்டைகள் முன்கூட்டியே சிதற ஆரம்பித்தன.
துனிசியாவில், புத்தாண்டுக்கு முன்னதாக, ஒரு பெரிய திருவிழா நடத்தப்படுகிறது, அவற்றில் சிறப்பம்சமாக ஒட்டக பந்தயங்கள் உள்ளன. இத்தகைய போட்டிகள் எப்போதுமே கண்கவர் மற்றும் உள்ளூர்வாசிகளிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.

  ஆஸ்திரேலியாவின் பிரதான நிலப்பகுதியில் தனியாக அமைந்துள்ள எங்கள் விசித்திரமான பயணத்தை நாங்கள் முடிக்கிறோம்.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியர்கள் வீட்டில் புத்தாண்டைக் கொண்டாடுவது பிடிக்காது. அனைத்து பண்டிகைகளும் உணவகங்களிலும் கடற்கரையிலும் நடைபெறுகின்றன, ஏனென்றால் இந்த ஆண்டு இந்த நேரத்தில் கோடை காலம் மற்றும் மிகவும் வெப்பமாக இருக்கும். ஆஸ்திரேலியாவில் சுவாரஸ்யமானது சாண்டா கிளாஸ். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு சூடான நாட்டில், நீங்கள் ஒரு ஃபர் கோட் போல இருக்க முடியாது, எனவே அவர் நீச்சல் டிரங்குகளில் ஒரு சர்பத்தில் பயணம் செய்கிறார். ஆனால் தாடி ஒரு மாறாத பண்பாக உள்ளது.

எல்லா குழந்தைகளும் புத்தாண்டு விடுமுறைகளை எதிர்நோக்குகிறார்கள், ஏனென்றால் இந்த நேரம் பொதுவாக பலவிதமான இனிப்புகள் மற்றும் அற்புதமான பரிசுகளால் நினைவில் வைக்கப்படுகிறது. நிச்சயமாக, குழந்தைகளுக்கு விடுமுறையின் இந்த பகுதி முக்கியமானது, ஆனால் தாத்தா ஃப்ரோஸ்ட் கீழ்ப்படிதலுள்ள குழந்தைகளுக்கு மட்டுமல்ல, புத்தாண்டின் வரலாற்றை அறிந்தவர்களுக்கும் பரிசுகளை தருகிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே, விடுமுறைக்கு முன்கூட்டியே தயாராகி, நம் நாட்டில் புத்தாண்டு வரலாற்றை இன்னும் அறிந்து கொள்வது நல்லது. மற்ற மக்களிடமிருந்து புத்தாண்டைக் கொண்டாடும் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் அசாதாரண மரபுகளையும் நாங்கள் அறிந்துகொள்வோம், மேலும், அவர்களிடமிருந்து பல சடங்குகளை நாங்கள் கடன் வாங்குவோம். எல்லாவற்றையும் சற்றே வித்தியாசமாகக் கொண்டிருந்தாலும், ஆண்டின் கடைசி மாதம் முடிவடையும் போது இரவில் புத்தாண்டைக் கொண்டாடப் பழகிவிட்டோம்.
மூலம், உலகின் சில நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் ஆண்டின் முற்றிலும் மாறுபட்ட நேரத்தின் மற்றொரு மாதத்தில் வருகிறது.
எனவே, சில காலத்திற்கு முன்பு அவர்கள் எப்படி, எப்போது புத்தாண்டைக் கொண்டாடினார்கள் என்பதைக் கண்டுபிடிப்போம். புதிய ஆண்டின் வரலாறு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சுவாரஸ்யமானது. கூடுதலாக, பிற நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்த சில சுவாரஸ்யமான உண்மைகளையும் நாங்கள் அறிந்து கொள்வோம்.

புத்தாண்டு கதை - குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு

விடுமுறை மார்ச் 1.பனி, இருண்ட வானம் மற்றும் கடுமையான உறைபனி இல்லாமல் புத்தாண்டைக் கொண்டாடுவதை கற்பனை செய்து பாருங்கள்? நிச்சயமாக, எங்கள் மார்ச் பெரும்பாலும் ஜனவரி மாதத்தை ஒத்திருக்கிறது, ஆனால், இருப்பினும், எல்லோரும் வசந்த புத்தாண்டை விரும்புவதில்லை.
கொண்டாட்டத்தின் நுணுக்கங்களைப் பற்றி மக்கள் சிந்திக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் அந்த நேரத்தில் அவர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட கவலைகள் இருந்தன. சரி, எங்களுக்கு, ஒரு புத்தாண்டு மனநிலை இல்லாதது ஒரு உண்மையான சோகம் போல் தோன்றலாம்.
மார்ச் ஏன் புதிய ஆண்டின் தொடக்க புள்ளியாக மாறியது? உண்மை என்னவென்றால், இந்த மாதத்தில்தான் மக்கள் ஏற்கனவே வயல்களை விதைப்பதற்கான தயாரிப்புகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர், ஏனெனில் அவர்களின் வசதியான இருப்பு நேரடியாக பயிரைச் சார்ந்தது.
ஆகையால், அடுத்த ஆண்டு கொண்டாட அவர்கள் முடிந்தவரை சிறந்த முறையில் முயன்றனர், இதனால் அது அவர்களுக்கு ஒரு சிறந்த அறுவடை கிடைக்கும். மூலம், இந்த மந்திர காலத்தில் மாலைகளின் விளக்குகள் அந்தக் காலத்திலிருந்தே தோன்றின. எல்லாவற்றிற்கும் மேலாக, ஸ்லாவ்களிடையே, விளக்குகள் விளக்குகள் இந்த ஆண்டு அறுவடை வளமாக இருக்க வேண்டும் என்பதாகும்.
புத்தாண்டு செப்டம்பர் 1.ஆனால், ஏற்கனவே கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டதால், அனைத்தும் மாறிவிட்டன, செப்டம்பர் 1 ஆம் தேதி புத்தாண்டு கொண்டாடத் தொடங்கியது, அப்போது அறுவடையின் பெரும்பகுதி அறுவடை செய்யப்பட்டிருந்தது.
இந்த பருவத்தில்தான் மக்கள் ஏராளமான ருசியான உணவுகளுடன் உண்மையான விடுமுறையை ஏற்பாடு செய்ய முடியும்.
ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு தினம்.  ஆனால் ஏற்கனவே 1700 முதல், பீட்டர் எல் ஒரு ஆணையை வழங்கினார், இது மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலவே புதிய ஆண்டின் கவுண்டன் ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கும் என்று கூறியது.

இந்த நேரத்தில்தான் ஒரு சாதாரண தளிர் பல்வேறு ஆபரணங்களால் அலங்கரிக்க ஒரு பாரம்பரியம் தோன்றியது, அது ஒரு உண்மையான புத்தாண்டு மரமாக மாற்ற உதவுகிறது.
அப்போதிருந்து, நாம் நீண்ட காலமாக பழக்கப்படுத்திய அனைத்து மரபுகளின்படி மக்கள் புத்தாண்டைக் கொண்டாடத் தொடங்கினர்.
ஆடம்பரமான கொண்டாட்டங்கள், பட்டாசு மற்றும் ஆடை விழாக்களுடன் நடைபெற்றது.

புத்தாண்டு என்பது குழந்தைகளுக்கான விடுமுறை கதை. வெவ்வேறு நாடுகளின் மரபுகள்

சில நாடுகளின் புத்தாண்டு மரபுகள் எங்களுக்கு ஓரளவு “காட்டு” என்று தோன்றலாம், இருப்பினும் அவர்கள் வசிப்பவர்களுக்கு அவை தெரிந்திருக்கும்.
ஒருவேளை யாராவது மற்றும் எங்கள் பழக்கவழக்கங்கள் சில ஆச்சரியங்களை ஏற்படுத்தக்கூடும், ஆனால் இது அவர்கள் மதிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்று அர்த்தமல்ல, இல்லையா?
வெவ்வேறு நாடுகளில் இந்த அற்புதமான இரவைக் கொண்டாட மக்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம். சுவாரஸ்யமாக, அண்டை நாடுகளில் கூட முற்றிலும் ஒத்த மரபுகள் இல்லை.
வெவ்வேறு நாடுகளில் புத்தாண்டை எவ்வாறு கொண்டாடுவது என்பது பற்றி நாங்கள் பேசுவோம், கொண்டாட்டங்களின் மிகவும் சுவாரஸ்யமான எடுத்துக்காட்டுகளை மட்டுமே கருத்தில் கொள்ளுங்கள், அவை அவற்றின் அசாதாரணத்தால் நிச்சயமாக உங்களை ஆச்சரியப்படுத்தும்.

1. இங்கிலாந்து

சரியாக நள்ளிரவில், பிரிட்டிஷார் பின்புறத்தில் எதிர்கொள்ளும் கதவுகளைத் திறக்கிறார்கள், இதனால் கடந்த ஆண்டில் நடந்த மோசமான விஷயங்கள் அனைத்தும் இந்த வீட்டை விட்டு வெளியேறின.
எனவே, அவர்கள் கடந்த கால தொல்லைகளுக்கு விடைபெறுவது மட்டுமல்லாமல், இந்த ஆண்டு நடந்த நல்ல எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். இந்த சடங்கு நள்ளிரவு தொடங்கியவுடன் நடத்தப்படுகிறது.
ஆனால் கடிகாரம் புதிய ஆண்டின் ஒரு நிமிடத்தைக் காண்பிப்பதற்கு முன், முன் கதவைத் திறக்க உங்களுக்கு நேரம் இருக்க வேண்டும். அது சரி, அவர்கள் புத்தாண்டுக்கு தங்கள் வீட்டிற்கு மட்டுமல்ல, அவர்களின் வாழ்க்கையையும் அழைக்கிறார்கள்.
கிறிஸ்மஸ் மரத்தைத் தவிர, ஆங்கிலேயர்கள் தங்கள் வீட்டை புல்லுருவிகளால் அலங்கரிக்கின்றனர், இது வீட்டு வாசலுக்கு மேலே அமைந்துள்ளது. இது ஒரு தந்திரமான நடவடிக்கை, ஏனென்றால் அத்தகைய தாவரத்தின் கீழ் தங்களைக் கண்டுபிடிக்கும் இருவரும் முத்தமிட வேண்டும்.

2. ஹங்கேரி

புத்தாண்டு விடுமுறையை “சில்வெஸ்டர்” என்று ஹங்கேரியர்கள் பெரும்பாலும் அழைப்பது சுவாரஸ்யமானது, மேலும் கொண்டாட்டத்தின் ஆரம்பம் டிசம்பர் 31 மாலை வருகிறது. இந்த நாள் ஹங்கேரியர்களால் “சில்வெஸ்டர் தினம்” என்று கருதப்படுகிறது.
ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வழியில் அத்தகைய விடுமுறைக்குத் தயாராகிறார்கள், ஆனால், புதிய ஆண்டின் முதல் நொடிகளில், எல்லோரும், ஒருவராக, பல்வேறு விசில் மற்றும் கொம்புகளில் ஊதத் தொடங்குகிறார்கள்.
இவ்வாறு, மக்கள் ஒரே நேரத்தில் தீய சக்திகளை தங்கள் சொந்த வீடுகளிலிருந்து வெளியேற்றி, விடுமுறை கொம்பிலிருந்து வரும் ஒலிகளின் உதவியுடன் வீட்டிற்கு மகிழ்ச்சியைத் தூண்டுகிறார்கள்.

3. ஜெர்மனி

கடிகாரம் "புத்தாண்டு" தாக்குவதற்கு ஒரு நிமிடம் முன்னதாக, பண்டிகை மேஜையில் அமர்ந்திருக்கும் அனைவரும், தங்கள் நாற்காலிகளில் ஏறி நள்ளிரவு வரை காத்திருக்கிறார்கள்.
முதல் கண்காணிப்பு வேலைநிறுத்தத்துடன், நாற்காலிகளில் நிற்கும் அனைவரும் ஒரு கணத்தில் அவர்களிடமிருந்து குதித்து, ஏற்கனவே புதிய ஆண்டில் நகர்வது போல. பல குழந்தைகள் வசிக்கும் ஒரு வீட்டில் எவ்வளவு சத்தம் இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

4. இத்தாலி

சரி, இத்தாலியர்கள் தங்கள் உன்னதமான பாணியில் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள். இத்தாலிய சண்டைகளைப் பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருக்கிறோம், இதன் விளைவுகள் டன் உடைந்த உணவுகள், எனவே அவை நிச்சயமாக புத்தாண்டு தினத்தன்று தங்கள் மரபுகளை மாற்றப்போவதில்லை.
கடந்த வருடத்தில் குவிந்து கிடந்த அதே உடைந்த உணவுகளை மக்கள் ஜன்னல்களிலிருந்து வெளியேற்றுகிறார்கள். ஆனால், இது தவிர, பழைய தளபாடங்கள் மற்றும் உடைகள் ஜன்னலுக்கு வெளியே வீசப்படுகின்றன.
ஆனால் இதுபோன்ற தேவையற்ற விஷயங்களை கூட சரியாக அழைத்துச் செல்ல வேண்டும், ஆகவே, அவை பட்டாசுகள் மற்றும் கான்ஃபெட்டி பறக்கின்றன.
இத்தகைய சடங்கு சற்றே வீணானதாகத் தோன்றலாம், ஆனால் இத்தாலியர்கள் இதைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை.
பழையதை அகற்ற அவர்கள் பயப்படுவதில்லை, ஏனென்றால் ஒரு புதிய கொள்முதல் எப்போதும் நிறைய மகிழ்ச்சியைத் தருகிறது.
நல்லது, குழந்தைகள், வழக்கமான சாண்டா கிளாஸுக்குப் பதிலாக, சூனியக்காரி பெபனாவுக்காகக் காத்திருக்கிறார்கள். புராணத்தின் படி, புத்தாண்டு தினத்தன்று, அவள் ஒரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தனது விளக்குமாறு மீது பறக்கிறாள், மேலும் குழந்தைகளுக்கு அவர்கள் ஆண்டு முழுவதும் கனவு கண்ட பரிசுகளை வழங்குகிறாள்.
குழந்தைகள், பெற்றோருடன் சேர்ந்து, அதே மாலையில் சிறிய காலணிகளை நெருப்பிடம் தொங்க விடுகிறார்கள், இதனால் சூனியக்காரி அவர்களுக்கு பரிசுகளை நிரப்புகிறார்.

5. ஸ்பெயின்

இந்த தேசத்திற்கு அதன் சொந்த வினோதமான மரபுகள் உள்ளன, அவற்றில் ஒன்று திராட்சை சாப்பிடுவது. மேலும், ஸ்பெயினியர்கள் இதை ஒரு குறிப்பிட்ட தொகையில் மட்டுமே சாப்பிடுகிறார்கள், இது 12 ஆம் எண்ணுக்கு சமம். இதனால், அவர்கள் அடுத்த ஆண்டு ஒவ்வொரு மாதங்களுக்கும் தங்கள் மரியாதையை வழங்குகிறார்கள்.

6. ஸ்காண்டிநேவியா

இந்த மக்கள், அநேகமாக, மிகவும் அசாதாரணமான புத்தாண்டு மரபுகளின் அனைத்து பதிவுகளையும் முறியடித்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக, எல்லோரும் புத்தாண்டு தினத்தன்று முணுமுணுக்க மாட்டார்கள், இல்லையா? அவர்களின் வழக்கம் முணுமுணுப்பதைக் குறிக்கிறது, அவர்கள் அதை மேசையின் கீழ் செய்கிறார்கள்.
ஸ்காண்டிநேவியர்கள் இந்த வழியில், உங்கள் குடும்பத்திலிருந்து எல்லா கஷ்டங்களையும் எளிதாக விரட்ட முடியும் என்பதில் உறுதியாக உள்ளனர். பொதுவாக, அத்தகைய மோசமான வழி அல்ல, மிக முக்கியமாக - ஒரு வேடிக்கையானது.

7. சீனா

உங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது சீன விளக்குகளைப் பார்த்தீர்களா? ஆமாம், நிச்சயமாக அவர்கள் செய்தார்கள், ஏனென்றால் அவை நவீன சீனாவின் மிகவும் குறிப்பிடத்தக்க அடையாளமாகக் கருதப்படுகின்றன. எனவே, புத்தாண்டு, விளக்குகளின் பண்டிகையாக கருதப்படுகிறது.
இந்த விடுமுறை ஒவ்வொரு முறையும் வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகிறது, அல்லது மாறாக, அதன் தேதி மாறுகிறது. அதாவது, புதிய ஆண்டின் தொடக்கப் புள்ளி முற்றிலும் எந்த தேதியாகவும் இருக்கலாம்.
ஆனால், எண்கள் தோராயமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன என்று நினைக்க வேண்டாம், அது இல்லை. விடுமுறை நாட்களைப் பொறுத்தவரை, சீனர்கள் எப்போதும் காலெண்டரைப் பின்பற்றுகிறார்கள்.
நாங்கள் நேரடியாக கொண்டாட்டத்திற்கு செல்கிறோம். இந்த நாட்டோடு நாம் இணைக்கும் மிகவும் ஆரஞ்சு விளக்குகளை விளக்குவதில் இது உள்ளது.
ஆனால், அவற்றின் முக்கிய நோக்கம் அழகியல் அல்ல. இதுபோன்ற விளக்குகளால் மட்டுமே அனைத்து தீய சக்திகளையும் விரட்ட முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

8. ஜப்பான்

புத்தாண்டு தினத்தன்று, ஜப்பானிய குழந்தைகள் குடும்பத்திற்கு செழிப்பைக் கொடுக்கும் புதிய ஆடைகளை அணிந்துகொள்கிறார்கள். கூடுதலாக, குழந்தைகளுக்கு ஒரு சிறப்பு பணி உள்ளது.
சாண்டா கிளாஸுக்கு ஒரு கடிதம் எழுதுவதற்கு நாங்கள் பழகிவிட்டோம், அதில் குழந்தை பருவ ஆசையின் ரகசியம் வெளிப்படும்.
ஆனால் இந்த தேசத்தின் குழந்தைகள் தங்கள் கனவை ஒரு வெற்று தாளில் வண்ணப்பூச்சுகள் அல்லது பென்சில்களுடன் சித்தரிக்கிறார்கள். இதை எப்படி அடைய முடியும் என்று நம்பப்படுகிறது.

9. இந்தியா

ஆச்சரியம் என்னவென்றால், இந்தியாவில், புத்தாண்டு எட்டு முறை கொண்டாடப்படுகிறது. கற்பனை செய்து பாருங்கள், நாம் எப்போதும் ஒரு இரவைத் தாங்குவதில்லை, அங்கே ஆண்டின் எட்டு இரவுகளுக்கும் ஒரே வருடத்தை பொறுப்புடன் சந்திக்க வேண்டும்.
மூலம், இந்த கொண்டாட்டங்களில் ஒன்றில், மிகச்சிறந்த சுவையில் மிகவும் வித்தியாசமாக இல்லாத நிம்-நிம் மர இலைகளை அவர்கள் சாப்பிட வேண்டும், குறைந்தபட்சம் சொல்ல வேண்டும்.
இது கசப்பானது, ஆனால் மக்கள் அதைச் செய்ய வேண்டும், ஏனென்றால் அவர்களின் நம்பிக்கை மிகவும் வலிமையானது. இந்த மரத்தின் பசுமையாக ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் என்றும், எந்தவொரு பிரச்சனையையும் சமாளிக்க உதவும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

10. பல்கேரியா

ஆனால் இந்த நாட்டில், மக்கள் அடுத்த வருடம் வீட்டில், பொதுவாக, நம்மைப் போலவே கொண்டாடப் பழகுகிறார்கள். இந்த விடுமுறை குடும்பமாக கருதப்படுகிறது, எனவே பண்டிகை மேஜையில் மிக நெருக்கமானவர்கள் மட்டுமே உள்ளனர்.
இளைய குழந்தை கிறிஸ்துமஸ் மரத்தின் அருகே ஒரு மலத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது, மேலும் குழந்தை மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் கரோல்களை செய்கிறது. அனைவருக்கும் நல்வாழ்வை வழங்க அவர் விரும்புகிறார், அதற்காக அவர்கள் குழந்தைக்கு பரிசுகளை வழங்குகிறார்கள்.

11. கியூபா

கியூபர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான வழக்கம் உள்ளது, இது அனைத்து கப்பல்களையும் தண்ணீரில் நிரப்ப வேண்டும். சரியாக நள்ளிரவில், எல்லா நீரும் ஜன்னல்களிலிருந்து வெளியேறும். இந்த வழியில், கடந்த ஆண்டை மக்கள் பார்க்கிறார்கள்.

12. பிரான்ஸ்

குழந்தைகள் தங்கள் பரிசுகளைக் கண்டுபிடிப்பார்கள், இது பெர்-நோயல் விட்டுச் சென்றது, மரத்தின் அடியில் அல்ல, நாங்கள் பழகியபடி, ஆனால் சிறிய காலணிகளில். அவை நேரடியாக நெருப்பிடம் மீது தொங்கவிடப்படுகின்றன அல்லது அதன் அருகே விடப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் சுடப்படும் விடுமுறை கேக்கில் பீன் மறைக்கப்பட்டுள்ளது. அவரைக் கண்டுபிடிக்கும் எவரும் "பீன் ராஜா" என்று அழைக்கப்படுவார்கள், அதாவது எல்லா ராஜாவின் விருப்பங்களும் இப்போதே நிறைவேற வேண்டும். ஆனால் அத்தகைய ஒரு சிறிய சக்தி வெற்றியாளருக்கு ஒரு இரவு மட்டுமே செல்கிறது.

13. சுவீடன்

ஒவ்வொரு ஆண்டும், குழந்தைகள் ராணி லூசியாவை முன்கூட்டியே தேர்வு செய்கிறார்கள், அவர் ஒரு வெள்ளை அங்கி அணிந்திருப்பார் (அவள் ஒளியின் ராணி, எல்லாவற்றிற்கும் மேலாக).
கீழ்ப்படிதலுள்ள குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் அனைத்து பரிசுகளையும் வழங்குவதே அவரது முக்கிய பணி. கூடுதலாக, அவள் செல்லப்பிராணிகளை புறக்கணிப்பதில்லை.

மற்ற நாடுகளில் சாண்டா கிளாஸ் என்ன அழைக்கப்படுகிறது?

அத்தகைய ஒரு பாத்திரத்தை "ஃப்ரோஸ்ட்" என்று அழைக்க நாங்கள் பழகிவிட்டோம், அநேகமாக நமது கடுமையான குளிர்காலங்களுக்கு மட்டுமே.
எங்கள் தாத்தா ஒரு சூடான சிவப்பு கோட் அணிந்திருக்கிறார், இது அவரை ஜனவரி பனிக்கட்டிகளில் உறைய விடாது. அவர் ஒரு நீண்ட சாம்பல் தாடி, மற்றும் அவரது தலையில் ஒரு ஃபர் கோட் நேரத்தில் ஒரு சிவப்பு தொப்பி உள்ளது.

ஒவ்வொரு குழந்தைக்கும் சாண்டா கிளாஸ் தெரியும், ஒவ்வொரு ஆண்டும் அதை எதிர்நோக்குகிறார். ஆனால் அவர் வழக்கமாக தனியாக வருவதில்லை, ஆனால் அவரது உதவியாளரான ஸ்னோ மெய்டனுடன், கீழ்ப்படிதலுள்ள எல்லா குழந்தைகளுக்கும் பரிசுகளை விநியோகிக்க உதவுகிறார்.
இங்கே, எடுத்துக்காட்டாக, மேற்கு ஐரோப்பாவில், அதே போல் அமெரிக்காவிலும், இதுபோன்ற ஒரு பண்டிகை பாத்திரம் சாண்டா கிளாஸ் என்று அழைக்கப்படுகிறது.
பெரும்பாலும், அவர் எங்கள் சாண்டா கிளாஸ் போல தோற்றமளிக்கிறார், ஏனென்றால் அவர் வெள்ளை ரோமங்களால் அலங்கரிக்கப்பட்ட சிவப்பு நிற உடையும் அணிந்துள்ளார்.
சாண்டா கிளாஸ் மட்டுமே தொப்பிக்கு பதிலாக தலையில் ஒரு தொப்பி வைத்திருக்கிறார். கூடுதலாக, அவர் அதிக உடல் அடர்த்தியானவர்.
இங்கே ஸ்வீடனில்அத்தகைய இரண்டு கிறிஸ்துமஸ் சின்னங்கள் உள்ளன. முதல் தாத்தா யூல்டோம்டெனோம் என்றும், இரண்டாவது யூல்னிசார் என்ற பெயரைப் பெற்றார். இரண்டு கதாபாத்திரங்களும் புத்தாண்டு பரிசுகளை வழங்கும் பணியில் பங்கேற்கின்றன, அவை குழந்தைகள் அறைகளில் உள்ள ஜன்னல்களில் விடுகின்றன.
பின்லாந்து  ஜூலுபுகி என்ற பெயரைப் பெற்ற அவரது “சாண்டா கிளாஸ்” என்பதற்காக அவள் மிகவும் நினைவில் இருந்தாள். அவர் ஒரு சிவப்பு நிற உடையிலும் உடையணிந்துள்ளார், இது கூம்பு வடிவ சிவப்பு தொப்பியால் பூர்த்தி செய்யப்படுகிறது. அவரது உதவியாளர்களை வண்ணமயமான உடையில் அணிந்திருக்கும் குள்ளர்கள் என்று அழைக்கலாம்.
பிரான்ஸ்  ஒரு சின்னத்தில் வசிக்க முடியவில்லை, எனவே அவர்களுக்கு இரண்டு சாண்டா உட்பிரிவுகளும் உள்ளன. ஒருவர் நீண்ட காலமாக கனவு கண்ட பரிசுகளை குழந்தைகளுக்கு அளிக்கிறார், அவர் அவற்றை ஒரு தீய கூடையில் கொண்டு வருகிறார். மற்றொன்று எதிர்மறையான கதாபாத்திரத்தின் பாத்திரத்தை வகிக்கிறது, அவர் இப்போதெல்லாம் குறும்பு குழந்தைகளை தண்டிக்கிறார்.
இத்தாலியில்  சாண்டா கிளாஸின் பாத்திரத்தை தேவதை பெபானா வகிக்கிறார், அவர் ஒரு புகைபோக்கி வழியாக ஒரு புகைபோக்கி வீட்டிற்குள் பறக்கிறார். அவள் கீழ்ப்படிதலுள்ள குழந்தைகளுக்கு மட்டுமே பரிசுகளை விட்டு விடுகிறாள், ஆனால் இந்த ஆண்டு நன்றாக நடந்து கொள்ளாதவர்களுக்கு, அவள் சாம்பலை மட்டுமே விட்டுவிடுகிறாள்.
புத்தாண்டை எவ்வாறு கொண்டாடுவது என்பது முக்கியமல்ல, மிக முக்கியமாக, பூர்வீக மக்கள் அனைவரும் அருகிலேயே இருக்கிறார்கள், விரல்களைக் கிளிக் செய்வதன் மூலம் ஆசைகள் உணரப்படுகின்றன.
மற்றும், நிச்சயமாக, பரிசுகள் இந்த மாய இரவு வர ஆண்டு முழுவதும் காத்திருக்கும் ஒவ்வொரு குழந்தையின் விருப்பங்களுக்கும் ஒத்ததாக இருக்க வேண்டும். யார் பரிசைக் கொண்டு வருகிறார்கள் என்பது முக்கியமல்ல - சாண்டா கிளாஸ் அல்லது ஒரு தேவதை, ஏனென்றால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அது குழந்தைக்கு வழங்கப்படும்.
குழந்தைகளுக்கான புத்தாண்டு கதை சுவாரஸ்யமானதாகவும் தகவலறிந்ததாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். நினைவில் கொள்ளுங்கள், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், வயதைப் பொருட்படுத்தாமல் ஒரு விசித்திரக் கதையை நம்புவது. அற்புதங்களை நம்ப மறக்காதீர்கள், ஏனென்றால் உங்கள் நம்பிக்கை மட்டுமே அவர்களுக்கு உணவளிக்கிறது.
புத்தாண்டு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி குழந்தைகளுக்கு பிடித்த விடுமுறை. ஒவ்வொரு குழந்தையும் இந்த விடுமுறையிலிருந்து ஏதாவது மந்திரத்திற்காகக் காத்திருக்கிறார், அவர் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிப்பதில் மகிழ்ச்சியடைகிறார், மேலும் முக்கிய மந்திரவாதியான சாண்டா கிளாஸின் வருகையை எதிர்பார்க்கிறார். நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா - இந்த அற்புதமான விடுமுறையின் கதை என்ன? இன்று நான் கடந்த காலத்திற்குள் மூழ்கி இந்த புனிதமான நாளின் கொண்டாட்டத்தின் வரலாற்றை கொஞ்சம் படிக்க முன்மொழிகிறேன். நிச்சயமாக, ஒவ்வொரு குழந்தையும் கடந்த நூற்றாண்டுகளில் வசிப்பவர்களின் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கும். தவிர, இதுபோன்ற ஒரு பொழுதுபோக்கு கதை குழந்தையின் எல்லைகளையும் விரிவாக்கும்.
பாலர் குழந்தைகளுக்கான புதிய ஆண்டின் வரலாறு எப்போதும் மிகவும் சுவாரஸ்யமானது, அற்புதமானது, ரகசியங்களில் மூடப்பட்டிருக்கும். குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பேட் மூச்சுடன் கேட்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இது குழந்தைகளுக்கு பிடித்த விடுமுறை. சாண்டா கிளாஸ், கிறிஸ்துமஸ் மரம், பரிசுகள், இது மிகவும் உற்சாகமாகவும் பயபக்தியுடனும் இருக்கிறது.

ரஷ்யாவில் குழந்தைகளுக்கான புதிய ஆண்டின் கதை

ரஷ்யாவில் புத்தாண்டைக் கொண்டாடுவதில் மிகவும் எதிர்பாராத உண்மை என்னவென்றால், இந்த நாள் எப்போதும் ஜனவரி முதல் தேதி கொண்டாடப்படவில்லை, ஏனெனில் நாம் அனைவரும் எண்ணிப் பழகிவிட்டோம்.
ஒரு நீண்ட காலத்திற்கு, ஆண்டின் ஆரம்பம் மார்ச் 1 அன்று கொண்டாடப்பட்டது. 988 ஆம் ஆண்டில் இளவரசர் விளாடிமிர் ரஷ்யாவில் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டபோது இதுபோன்ற ஒரு கணக்கீடு தொடங்கியது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வசந்தத்தின் முதல் நாள் தற்செயலாக தேர்ந்தெடுக்கப்படவில்லை, ஏனென்றால் இந்த நாளில், களப்பணி தொடங்கியது, மற்றும் குளிர்காலத்திற்குப் பிறகு நிலம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது.
ஏற்கனவே அந்த நாட்களில், மக்கள் கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரித்து அவர்கள் மீது விளக்குகள் ஏற்றி வைத்தனர். மரத்தில் அதிக பிரகாசிக்கும் விளக்குகள் இருப்பதால், வரும் ஆண்டு அதிக உற்பத்தி இருக்கும் என்று நம்பப்பட்டது. விளக்குகள், நிச்சயமாக, இப்போது நாம் அவற்றைப் பார்க்கவில்லை.

எங்கள் முன்னோர்கள் பண்டிகை விளக்குகளுக்கு மெழுகுவர்த்தியைப் பயன்படுத்தினர், அவை கண்ணாடி பாத்திரங்களில் நிறுவப்பட்டன.
மூலம், தளிர் ஒரு புத்தாண்டு மரமாக செயல்பட்டது மட்டுமல்லாமல், அது வேறு எந்த மரமாகவும் இருக்கலாம். அவர்கள் அதை இனிப்புகள், கொட்டைகள் அல்லது பழங்களால் அலங்கரித்தனர்.
சிறிது நேரம் கழித்து, பாரம்பரியம் செப்டம்பர் மாதத்தில் புத்தாண்டைக் கொண்டாடத் தோன்றியது, மார்ச் 1 ஆம் தேதி தேவாலய நாட்காட்டியின் படி ஆண்டின் தொடக்கமாக இருந்தது.
இது சம்பந்தமாக, கொண்டாட்டத்தில் சில குழப்பங்கள் இருந்தன, எனவே விடுமுறையை செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பது குறித்து ரஷ்ய ஜார் ஒரு ஆணையை வெளியிட்டார்.
புத்தாண்டு முக்கியமாக நகர சதுக்கங்களில், தேவாலயங்கள் மற்றும் கோயில்களுக்கு அருகில் கொண்டாடப்பட்டது. காலையில், மன்னர் மக்களிடம் சென்று பிச்சை விநியோகித்தார். இந்த நாளில், ஒவ்வொருவரும் தங்கள் மனுக்கள் மற்றும் பிரச்சினைகளுடன் ராஜாவிடம் முறையிட உரிமை உண்டு.
ஒவ்வொரு குடும்பமும் புத்தாண்டு அட்டவணையை ஏராளமான சுவையான உணவுகளுடன் அமைக்கின்றன. குறிப்பாக பிரபலமான துண்டுகள், பெரும்பாலும் பட்டாணி மாவிலிருந்து சுடப்படும்.

நிரப்புதல் மீன், இறைச்சி, பெர்ரிகளைப் பயன்படுத்தியது. மேலும், அப்பத்தை மற்றும் அப்பத்தை மேசையில் சுட்டனர். பானங்களில், பண்டைய ஸ்லாவியர்கள் பெர்ரி ஜெல்லி சமைக்க விரும்பினர்.
பெரியவர்கள் பெர்ரி, பழங்கள் மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றின் அடிப்படையில் அறுவடை செய்யப்பட்ட ஆல்கஹால். காய்கறிகளில், பண்டிகை அட்டவணையில் வழக்கமாக ஒரு முள்ளங்கி மற்றும் டர்னிப்ஸ் இருந்தன, அவை சாலட்களிலும் வெட்டு வடிவத்திலும் இருந்தன.
வாத்துகள் அல்லது வாத்துக்களின் இறைச்சியும் சமைக்கப்பட்டன, அவை கரியின் மீது சுடப்பட்டன. ஸ்லாவியர்கள் குடிசைகளை ஃபிர் கிளைகளால் அலங்கரித்தனர்.
1699 ஆம் ஆண்டில், பீட்டர் தி கிரேட் செப்டம்பர் 1 அன்று புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்யும் ஆணையை வெளியிட்டார். அந்த நேரத்திலிருந்து, விடுமுறை அதிகாரப்பூர்வமாக ஜனவரி 1 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
பீட்டர் தி கிரேட் ஐரோப்பிய மரபுகளை நேசித்தார், எனவே அவர் ரஷ்யாவில் வாழ்க்கையை பொருத்தமானதாக மாற்ற முயற்சித்தார்.
அந்த நேரத்திலிருந்து, புத்தாண்டு ஒரு வேடிக்கையான மற்றும் சத்தமான விடுமுறையாக மாறிவிட்டது, ராஜா முதல் பட்டாசு ராக்கெட்டைக் கூட கட்டினார்.
கூடுதலாக, அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளை சுடுவது வழக்கம், இதனால் விடுமுறை இன்னும் பிரமாண்டமாகத் தெரிந்தது.
அவர்கள் ஆண்டின் தொடக்கத்தை காலை வரை கொண்டாடத் தொடங்கினர், பாடல்களைப் பாடி, தயாரிக்கப்பட்ட பரிசுகளைப் பரிமாறிக் கொண்டனர்.
ஆனால் பிரியமான மந்திரவாதி பின்னர் தோன்றினார். இன்னும் துல்லியமாக, அவர் முன்பு இருந்தார், ஆனால் வேறு போர்வையில். இது நம்பமுடியாத தாராள மனப்பான்மையைக் கொண்ட ஒரு அற்புதமான பாத்திரம். புத்தாண்டு ஹீரோ மிகவும் கனிவானவர், ஒவ்வொரு குழந்தைக்கும் பரிசுகளை கொண்டு வந்தார்.
ஆனால் மந்திரவாதி வழக்கமான ஆடைகளைப் பெற்றார் - ஒரு சிவப்பு கோட், ஒரு ஊழியர்கள் மற்றும் ஒரு நீண்ட தாடி 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மட்டுமே, மற்ற விஷயங்களில், நவீன பெயர் - சாண்டா கிளாஸ்.

சிறிது நேரம் கழித்து, அவருக்கு ஒரு உதவியாளர் தோன்றினார் - ஸ்னோ மெய்டனின் பேத்தி.
ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், புத்தாண்டு வழிகாட்டி ரஷ்ய மக்களின் கற்பனை மட்டுமல்ல. ஒவ்வொரு நாட்டிலும் இது போன்ற ஒரு நல்ல விடுமுறை துணை உள்ளது, ஒவ்வொரு நாட்டிலும் மட்டுமே அதன் சொந்த பெயர் உள்ளது.

பிற நாடுகளில் புத்தாண்டு வரலாறு

இப்போது மற்ற நாடுகளில் புத்தாண்டு எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்று பார்ப்போம்.

ஜப்பான்

ஜப்பானில், எங்கள் வழக்கமான சாண்டா கிளாஸ் ஓஜி-சான் என்று அழைக்கப்படுகிறது. புத்தாண்டு விடுமுறை டிசம்பர் 25 முதல் கிட்டத்தட்ட ஒரு மாதம் நீடிக்கும்.
குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை தளிர் கிளைகள் அல்லது ஆலிவ் கிளைகளால் அலங்கரிக்கின்றனர். இது வரும் ஆண்டில் செல்வத்தை உறுதிப்படுத்துகிறது என்று நம்பப்படுகிறது.
விடுமுறைக்கு முன்பு, ஜப்பானியர்கள் கோயில்களைப் பார்வையிட்டு ஒருவருக்கொருவர் அரிசி கேக்குகளால் நடத்துகிறார்கள். மேலும், இந்த கேக்குகளின் நிறம் இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிறமாக இருக்க வேண்டும், ஏனெனில் இந்த வண்ணங்கள், ஜப்பானில் வசிப்பவர்களின் கூற்றுப்படி, உங்கள் முயற்சிகளில் மகிழ்ச்சியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தருகின்றன.

சீனா

சீன வழிகாட்டி ஷோ-ஹின் என்று அழைக்கப்படுகிறது, மேலும் விடுமுறை பிப்ரவரி மாதத்தில் வருகிறது. அனைத்து வகையான பட்டாசுகள், பட்டாசுகள் மற்றும் பட்டாசுகளைப் பயன்படுத்தி விடுமுறை மிகவும் சத்தமாக இருக்கிறது.

புத்தாண்டு தினத்தன்று அவர்கள் எவ்வளவு வேடிக்கையாகவும் சத்தமாகவும் ஒலிக்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் தீய சக்திகளை பயமுறுத்துவார்கள், முடிந்தவரை அவர்களை விரட்டுவார்கள் என்று சீனர்கள் நம்புகிறார்கள்.

தாய்லாந்து

ஆனால் சூடான தாய்லாந்தில், ஆண்டின் ஆரம்பம் ஏப்ரல் 13 அன்று வருகிறது. நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்க, மல்லிகை அல்லது இளஞ்சிவப்பு பூக்களின் இதழ்களுடன் சுத்தமான தண்ணீருடன் தைஸ் நீர் புத்தர் சிலைகள்.
இருப்பினும், அதற்குச் செல்வது சிலைகள் மட்டுமல்ல; விடுமுறையில் தெருவில் தன்னைக் காணும் ஒவ்வொரு குடியிருப்பாளரும் ஒரு பண்டிகை பொழிவின் கீழ் வருகிறார்கள்.
பாரம்பரியத்தின் படி, இந்த நாட்டில் வசிப்பவர்கள், அவர்கள் சந்தித்த நண்பர்கள் மற்றும் அந்நியர்களை வாழ்த்துவதற்காக அசாதாரணமான முறையில் ஏராளமான நீர் துப்பாக்கிகள் மற்றும் பல்வேறு தெளிப்பு சாதனங்களை அறுவடை செய்கிறார்கள்.

கிரீஸ்

விடுமுறைக்கு முன்னதாக, குடியிருப்பாளர்கள் வேடிக்கையான கரோல்களை செலவிடுகிறார்கள், பின்னர் பண்டிகை அட்டவணைக்குச் செல்கிறார்கள். ஒரு கட்டாய விருந்தாக, ஒவ்வொரு வீட்டிலும் ஒரு இனிப்பு பெர்ரி பை உள்ளது, அதில் ஒரு துண்டு செயின்ட் பசிலுக்கு விடப்படுகிறது.

மற்றொரு சுவாரஸ்யமான பாரம்பரியம் குடும்பத் தலைவரால் மாதுளை சிதறடிக்கப்படுகிறது. இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், ஒரு கையெறி குண்டு விழும்போது, \u200b\u200bஅது பல தானியங்களாக சிதறடிக்கப்படும், மேலும் தானியங்கள் சிதறுகின்றன, வரும் ஆண்டு மிகவும் வெற்றிகரமாக இருக்கும்.

துருக்கி

துருக்கியில், புத்தாண்டு ஜனவரி 1 ஆம் தேதி வருகிறது. குடியிருப்பாளர்கள் கிறிஸ்துமஸ் மரங்களை முன்கூட்டியே அலங்கரிக்கின்றனர், வீடுகளை விளக்குகளால் அலங்கரிக்கின்றனர். பணக்கார விடுமுறை அட்டவணையில் எப்போதும் ஒரு அடைத்த வான்கோழி, புதிய பழங்கள், பல்வேறு இனிப்புகள் உள்ளன.
குழந்தைகள் புனித நிக்கோலஸை பிரதான வழிகாட்டியாக கருதுகின்றனர், யாருக்கு அவர்கள் பரிசுகளைப் பற்றிய விருப்பங்களுடன் முன்கூட்டியே கடிதங்களை எழுதுகிறார்கள்.

ஜெர்மனி

ரஷ்யாவைப் போலவே ஜெர்மனியும் ஜனவரி 1 ஆம் தேதி விடுமுறையைக் கொண்டாடுகிறது. இருப்பினும், ரஷ்யாவில் அமைப்பது வழக்கத்தை விட அட்டவணை சற்று வடு.
புத்தாண்டு அட்டவணையின் முக்கிய உணவு சுடப்பட்ட கெண்டை. மேலும், ஜேர்மனியர்கள் புதிய பழங்கள், ஷாம்பெயின், குத்துக்கள், இனிப்பு கேக்குகள் அல்லது பேஸ்ட்ரிகளால் அட்டவணையை அலங்கரிக்க விரும்புகிறார்கள்.
ஆனால் இந்த நாட்டில் பரிசுகள் ஆண்டின் தொடக்கத்தில் வழங்கப்படுவதில்லை, அவை வழங்கப்பட்டால், அவை முற்றிலும் குறியீடாக இருக்கின்றன - வரும் ஆண்டின் அடையாளத்துடன் அஞ்சலட்டைகள் அல்லது காந்தங்கள் வடிவில்.

விஷயம் என்னவென்றால், ஒரு வாரத்திற்கு முன்பு, ஜெர்மனி கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறது. இந்த விடுமுறை மேலும் கொண்டாடப்படுகிறது, எனவே குடியிருப்பாளர்கள் டிசம்பர் 25 அன்று பரிசுகளை பரிமாறிக்கொள்கிறார்கள்.

சுவிச்சர்லாந்து

சுவிஸ் குடியிருப்பாளர்கள் டிசம்பர் 31 முதல் ஜனவரி 1 வரை இரவு புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள். இந்த நாட்டில் சுற்றியுள்ள அனைத்தும் பிரகாசமாகவும் பண்டிகையாகவும் மாறும்.
வீதிகள், கடை ஜன்னல்கள், வீடுகள் மற்றும் முற்றங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நகரத்திலும் தெரு கண்காட்சிகள் செயல்படத் தொடங்குகின்றன, அங்கு நீங்கள் பல்வேறு நினைவுப் பொருட்கள், கிறிஸ்துமஸ்-மர அலங்காரங்கள் மற்றும் கையால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கலாம்.
கண்காட்சியின் மையத்தில் விளக்குகளில் ஒரு பச்சை வன அழகு வெளிப்படுகிறது.
விடுமுறை பொதுவாக ஒரு குடும்ப விருந்துடன் தொடங்குகிறது. குடீஸில் பொதுவாக ஃபாண்ட்யூ, வீட்டில் தயாரிக்கப்பட்ட குக்கீகள், பல்வேறு வகையான சீஸ்கள் சமைக்கப்படுகின்றன.

மற்றும் பானங்களில், சுவிஸ் குறிப்பாக சூடான சாக்லேட் அல்லது ஷாம்பெயின் மதிக்கிறது.
இத்தகைய வித்தியாசமான மரபுகள் மற்றும் புத்தாண்டு தேதிகள் கூட இருந்தபோதிலும், நாம் ஒவ்வொருவரும் விடுமுறையை எதிர்நோக்குகிறோம். இது மிகவும் அருமையாக இருக்கிறது, ஒரு கணம் மட்டுமே, ஆனால் இன்னும் குழந்தை பருவத்திற்குத் திரும்பி, மந்திரத்தில் கொஞ்சம் நம்புங்கள் ...

புத்தாண்டு வழங்கல். விடுமுறை கதை - வீடியோ

வெவ்வேறு நாடுகளில் புத்தாண்டு கொண்டாடுவது எப்படி, வரலாறு மற்றும் மரபுகள் - தளத்தில் அழகு மற்றும் ஆரோக்கியம் பற்றி