புதன், 25 மார்ச், 2020

பச்சை பசேல் மரங்கள்! ஆர்ப்பரிக்கும் அருவி! சுற்றி பார்க்கலாமா?

பச்சை பசேல் மரங்கள்! ஆர்ப்பரிக்கும் அருவி! சுற்றி பார்க்கலாமா?


கண்களுக்கு விருந்து அளிக்கும் கல்வராயன்மலை விழுப்புரத்திலிருந்து ஏறத்தாள 122 கிலோ மீட்டர் தொலைவிலும் கள்ளக்குறிச்சியில் இருந்து 46 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து 289 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
பச்சைக் கம்பளம் போர்த்தியது போல பச்சை பசேல் போன்று காட்சியளிக்கும் அழகிய மலை.
சாலையில் பயணிக்கும் போது சாலையின் ஓரத்தில் இருக்கும் அழகிய வயல்வெளிகள் கண்களுக்கு விருந்து.
கல்வராயன் மலைகள் கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடரின் ஒரு பகுதியாகும் ஓங்கி உயர்ந்த பச்சை பசும் மரங்களும் ஆர்ப்பரிக்கும் அருவிகள் பறந்து திரியும் பறவைகளும் வனவிலங்குகளும் காணப்படும் இடமாக உள்ள கல்வராயன் மலையை ஏழைகளின் மலைவாசஸ்தலம் என அழைக்கின்றனர்.
கல்வராயன் மலைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது வடக்குப் பக்கத்தில் சின்ன கல்வராயன் மற்றும் தெற்குப் பகுதி பெரிய கல்வராயன் என்று குறிப்பிடப்படுகின்றது.
இந்த இடம் மலையேற்றம் செய்பவர்களுக்கு சொர்க்கமாக இருக்கும் அது மட்டுமல்லாமல் மேகம் பெரியார் பண்ணிய பாடி போன்ற நீர்வீழ்ச்சிகள் உள்ளன.
இங்குள்ள நீர்வீழ்ச்சிகளை காண்பதும் குளிப்பதும் சுற்றுலா பயணிகளுக்கு ஆனந்தமாக உள்ளது கல்வராயன் மலை செல்பவர்கள் கோமுகி அணையை பார்க்காமல் திரும்ப மாட்டார்கள்.
ஏனென்றால் அங்கு குழந்தைகள் பூங்காவும் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டு படகு குளம் உருவாகி உள்ளது.
இங்க காட்டுப்பன்றி மற்றும் செந்நாய் மற்றும் மான் கரடி போன்ற விலங்குகளை பார்க்கும் அரிய வாய்ப்பும் கிடைக்கிறது மலையின் மீது செல்ல செல்ல சந்தன மரம் தேக்கு மரம் போன்றவற்றை காண முடியும்.
சின்ன சேலத்தில் இருந்தும் கள்ளக்குறிச்சியில் இருந்து பேருந்துகள் மூலம் கல்வராயன் மலைக்கு பயணம் செய்யலாம்.
எங்க பார்க்க வேண்டிய இடங்கள் கோமுகி அணை
மேகம் அருவி
பெரியார் அருவி
தாவரவியல் பூங்கா
வெங்கட்ரமணா கோவில்
1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாக அம்மன் கோவில்
இதர சுற்றுலாத்தலங்கள்
செஞ்சி கோட்டை
வேணுகோபால் சுவாமி கோவில்
புகழ்பெற்ற ரங்கநாதர் கோவில்
24 தீர்த்தங்கரர்கள்
மேல்நாரியப்பனூர் தேவாலயம்
உலகளந்த பெருமாள் திருக்கோவிலூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக