புதன், 28 பிப்ரவரி, 2018

தேசிய அறிவியல் தினம் (சர்.சி.வி. ராமன் விளைவு வெளியிட்ட நாள்) பிப்ரவரி- 28 .


தேசிய அறிவியல் தினம் (சர்.சி.வி. ராமன் விளைவு வெளியிட்ட நாள்) பிப்ரவரி- 28 .

⏳ *தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவலில் பிறந்து, உலக அறிவியல் அறிஞர்கள் பட்டியலில் இடம்பிடித்த அற்புதத் தமிழர், சர் சி.வி.ராமன்.*

⏳ *இவர் படிப்பில் படு சுட்டி. ஆங்கிலத்திலும் இயற்பியலிலும் தங்கப் பதக்கம் பெற்றவர். மேற்படிப்புக்கு இங்கிலாந்து செல்ல நினைத்தார். ஆனால், இவருடைய உடல்நிலை அதற்கு ஏற்றதாக இல்லை. வெளிநாடு செல்ல மருத்துவர்கள் இவருக்கு 'உடல்நிலை தகுதிச் சான்று’ அளிக்கவில்லை. எனவே இந்தியாவில் இருந்தபடியே அறிவியலில் பல்வேறு சாதனைகள் செய்து, நோபல் பரிசை வென்றார் ராமன்.*

⏳ *அவரிடம் நாம் கற்கவேண்டிய அற்புத விஷயங்கள்...*

⏳👉🏻 *வாசிப்பை நேசி! அப்பாவின் அலமாரியில் இருந்து எண்ணற்ற அறிவியல் அறிஞர்கள் எழுதிய புத்தகங்களை எடுத்து, ஓயாமல் வாசிப்பார்.*

⏳👉🏻 *மூன்று நூல்கள் அவரை மிகவும் ஈர்த்தன. எட்வின் அர்னால்டின் ஆசிய ஜோதி, யூக்லிட் எழுதிய ‘The elements’மற்றும் ஹெர்மான் ஹெல்ம்ஹோல்ட்ஸ் எழுதிய ‘The Sensations of Tone’ஆகிய நூல்களே அவை. வெவ்வேறு துறைகளில் ஆர்வம் இருந்ததால், அறிவியலில் அவரின் ஆய்வுகளும் பல்வேறு துறைகள் சார்ந்து இருந்தன.*

⏳👉🏻 *பிடித்ததில் பிணைந்திடு!*
*இந்தியாவில் அறிவியல்* *வேலைவாய்ப்புகள்* *குறைவாகவே இருந்த காலத்தில்,* *கொல்கத்தா சென்று நிதித் துறையில் வேலை பார்த்தார். கிடைத்த சொற்ப வருமானத்தில், பெரும்பாலான பணத்தை, ஆய்வுகள் செய்யவே* *பயன்படுத்திக்கொண்டார். ஒருநாள், 'பவ்பஜார்’ எனும்* *பகுதியின் வழியாகச் சென்றபோது,* *'இந்திய அறிவியல்* *வளர்ச்சிக் கழகம்’ என்ற பெயர் பலகையைப் பார்த்தார். அன்று முதல், மாலை நேரங்களில் அங்கே ஆய்வுகள் செய்தார். பிறகு, நிதித் துறை வேலையை முழுவதும் துறந்துவிட்டு, முழு நேர ஆய்வுகளில் ஈடுபட்டார்.*

⏳👉🏻 *சிக்கனம் செய்!*
*அப்போதெல்லாம் அறிவியல் ஆய்வகத்துக்கான முக்கியக் கருவிகளை வெளிநாட்டில்* *இருந்துதான் வாங்குவார்கள். ஆனால், ராமன் அதிலும் சிக்கனமானவர்.* *ஹெளராவில் இருக்கும் மார்க்கெட்டில் இருந்து பொருட்களை வாங்கி, ஆய்வுக்கான கருவிகளைத் தானே தயாரிப்பார். ராமன்* *விளைவுக்கான பெரும்பாலான ஆய்வுகளை 300 ரூபாயில் முடித்து விட்டார் ராமன். இறுதியில், ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி தேவைப்பட்டபோது, 'இதை மட்டும் வாங்கித் தாருங்கள்’ என்று* *பிர்லாவுக்குக் கடிதம் எழுதினார்.* *அந்தக் கருவியைக்* *கொண்டு முழுமையாக ஆய்வுகளை முடித்தார்.*

⏳🔬 *உலகை உற்றுக் கவனி!*
*மெடிட்டரேனியன் கடல் (Mediterranean* *Sea) என்று சொல்லப்படும்* *நடுநிலக் கடல் வழியாகப் பயணம்* *சென்றபோது, 'கடல் மற்றும் வானம் நீல நிறமாக இருப்பது ஏன்?’ என்று யோசித்ததின் விளைவாக எழுந்ததே, ராமன் விளைவு. கப்பல் பயணத்திலும் சுற்றி இருப்பனவற்றைக் கவனித்துக்கொண்டு இருந்தார் ராமன்.*

⏳👉🏻  *நம்பிக்கையோடு  முன்னேறு!*
*இயற்பியலாளர்ஆர்தர் காம்ப்டன், எக்ஸ் கதிர்கள் சிதறலைப் பற்றி ஆய்வுசெய்து, நோபல் பரிசு பெற்றதாக இவரின் மாணவர் சொன்னார். 'அது, கண்களுக்குப் புலப்படும் ஒளியிலும் இருப்பதற்கு சாத்தியம் உண்டல்லவா?’ என யோசித்தார். அந்தப் பாதையில் நம்பிக்கையோடு ஆய்வுகள் செய்து சாதித்தார்.*

⏳👉🏻 *கற்றல் முடிவில்லாதது!*
*ராமன், ஏதேனும்* *ஆய்வுகளைத் தன்னுடைய மாணவர்களோடுஇணைந்து வெளியிட்டாலும் அதில் அவர்களின்* *பெயரையே முன்னிலைப்படுத்தி* *வெளியிடுவார். ''அறிவியலைக் கற்பது என்பது, சூத்திரங்களையும் தரவுகளையும் கற்பது அல்ல, படிப்படியாகக் கேள்விகள் கேட்டு அறிந்துகொள்வதே'' என்பார். அப்படியே பாடம் நடத்தி, மாணவர்களுக்கும் வழிகாட்டினார்.*

⏳👉🏻 *பகுத்து அறி!*
*''கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று ஒருமுறை கேட்டபோது, அந்தக் கேள்வியை* *அவர் தவிர்த்தார். மீண்டும் கேட்கவே,* *''கடவுள் இருக்கிறார் என்றால், டெலஸ்கோப்பை வைத்துக்கொண்டு பிரபஞ்சம் முழுக்கத் தேடு.* *வெறும் யூகங்களை வைத்துக்கொண்டு நேரத்தை வீணாக்காதே'' என்றார் ராமன்.*

⏳👉🏻 *ஆங்கிலேய அரசு, அவரை நோபல் பரிசு வாங்கவிடாமல் தடுக்க நினைத்தது. அவருக்கு வர வேண்டிய தந்தியை மூன்று முறை தடுக்கவும் செய்தது. பிறகு தடைகளை மீறி அது, அவர் கைக்குப் போய்ச் சேர்ந்தது. 'ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக எதுவும் பேசக் கூடாது’ என்று எச்சரித்தே நோபல் பரிசு வாங்க அவரை அனுப்பினார்கள். அங்கே சென்றவர், ''ஆங்கிலேயரின் அடிமைப்படுத்தலைத் தொடர்ந்து எதிர்க்கும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு, இந்த விருது சமர்ப்பணம்' என்று கம்பீரமாக ஆரம்பித்தே தன்னுடைய உரையை வழங்கினார் ராமன்.*

⏳👉🏻 *உனக்குள்ளே ஒரு விஞ்ஞானி!*
*''ஐந்து வயதில்* *இருந்தே பிள்ளைகளை விஞ்ஞானிகளாக நடத்த வேண்டும். அவர்களின் கேள்விகளை மதித்து, பதில் சொல்ல வேண்டும். அவர்கள் கற்றல்* *அனுபவம், புத்தகங்களோடு தேங்காமல் இருக்க* *வேண்டும். அப்பொழுதுதான் அறிவியலில் நாம் ஒளிர முடியும்'' என்றார் ராமன். அவர், ராமன் விளைவைக் கண்டுபிடித்த நாளே, நம் தேசிய* *அறிவியல் தினமாகக்* *கொண்டாடப்படுகிறது.*

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

எத்தனை கங்கைகள்


எத்தனை கங்கைகள்!

கங்கையில் நீராடுவது, கங்கைக் கரையில் வசிப்பது, '#கங்கா' என்று உச்சரிப்பது, கங்கையின் நீரைப் பருகுவது, கங்கையை நினைப்பது...இவை யாவும் பாவம் போக்கும் செயல்களாகும்!

இமயமலையில், '#கோமுக்' பனிச் சிகரத்தில் உற்பத்தியாகி, #மேற்கு_வங்காளத்தில் உள்ள #கங்கா_சாகரில் (வங்கக் கடலில்) சங்கமிக்கிறாள் கங்காதேவி! இவள், தான் பாய்ந்து வரும் வழிநெடுகிலும் உள்ள பல்வேறு தலங்களில், பல்வேறு சிறப்புகளுடன் திகழ்கிறாள்

#அமர்_கங்கா:

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 12,000 அடி உயரத்தில் உள்ளது அமர்நாத் குகை. இதன் அருகே ஓடும் 'அமர் கங்கா' நதி நீர் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும்.

#நீல_கங்கா:

ஒரு முறை, பார்வதிதேவியுடன் விளையாடியபோது, அவளின் கண் மை, சிவனாரின் முகத்தில் ஒட்டிக் கொண்டது. பரமனார் கங்கையில் முகம்கழுவ... நதி நீர், நிறம் மாறியது! இதனால், 'நீல கங்கா'எனப் பெயர் பெற்றது.

#காளி_கங்கா:

அமைதியின்றி ஆர்ப்பரித்து ஓடும் இந்த நதியின் சீற்றம், காண்போரை பயம் கொள்ள வைக்கும்.

#ராம்_கங்கா:

இது, உத்தரப் பிரதேசத்தில்- காசிப்பூர் என்ற இடம் தாண்டிப் பாய்கிறது.

#ஜட_கங்கா:

உத்தரப் பிரதேசம், குமாயூன் மண்டலின் பித்தோ ராகர் என்ற ஜில்லாவில் பாய்கிறது.

#கோரி_கங்கா:

வெண்மையான நீர் கொண்டு வருவ தால் கோரி (வெள்ளை) கங்கா என்று பெயர் தார்சூலா/முன்ஸியாரி கிராமத்தையடுத்து பாய்கிறது.

#கருட_கங்கா:

உத்தரப் பிரதேசம், அல்மோரா- பைஜ்நாத் சோத்திரம் அருகே பாயும் கங்கைக்கு, 'கருட கங்கா' என்று பெயர்.

#பாண_கங்கா:

'ஜம்மு'வைத் தாண்டி, ஸ்ரீவைஷ்ணவி கோயில் அருகே பாய்கிறது பாண கங்கா.

#பால_கங்கா:

இந்த நதி நீரில், ஸ்ரீவைஷ்ணவிதேவி தன் கூந்தலை அலசிய தால், 'பால கங்கா' என்றுபெயர்!

#ஆகாச_கங்கா:

கயிலாய மலையை பரிக்ரமா (கிரிவலம்) செய்யும்போது, அங்கு காணப்படும் நதியே ஆகாச கங்கை!

#பாதாள_கங்கா:

ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீசைலம் என்ற சிவ சோத்திரத்தின் அருகே பாய்கிறது
பாதாள கங்கா

#தேவ_கங்கா:

இது, மைசூர்- சாமுண்டி மலைக்குக் கிழக்கே பாய்கிறது.

#துக்த_கங்கா:

வடமொழியில் 'துக்தம்' என்றால், பால் என்று பொருள். கேதார்நாத் என்ற ஜோதிர்லிங்க சோத்திரத்தின் அருகே பாய்கிறது.

#வாமன்_கங்கா:

வாமன் என்றால், 'குள்ளம்' என்று அர்த்தம்! மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில், 'பேடாகாட்' என்ற சலவைக்கல் பாறைகள் உள்ள இடத்தில் பாய்கிறது.

#கபில்_கங்கா:

நர்மதை பரிக்ரமா (வலம் வரும்) செய் யும் வழியில் வருவது, 'தம் கட்' என்ற ஊர். இங்கிருந்து சுமார் 3 மைல் தூரத்தில் ஓடுகிறது கபில் கங்கை!

#கரா_கங்கா:

சோணபத்திரை நதியின் உற்பத்தி ஸ்தானத்துக்குத் தெற்கில் அமைந்துள்ள இடம் பிருகு கமண்டலம். இங்கு பாய்வதே கரா கங்கா

#மோக்ஷ_கங்கா:

நர்மதை நதியை வலம் வரும்போது சூலபாணேஸ்வரர் எனும் சோத்திரம் வரும். இங்கிருந்து மூன்று மைல் தொலைவில் உள்ளது 'மோக்கடி' என்ற கிராமம். இதையட்டி, 'மோக்ஷ கங்கா' ஓடுகிறது.

நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி



டாக்டர். அனிதா சைமன் (எம். டி. குழந்தை மருத்துவர்). நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி சொல்லியிருக்கிறார்.

இந்த தகவலை தேவைப்படும் சிலருக்கு உதவ கீழேயுள்ள செய்தியை நீங்கள் அனுப்புவீர்கள் என நம்புகிறேன்.

ஒரு பெண் (65) கடந்த 20 ஆண்டுகளாக நீரிழிவு நோய் காரணமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை இன்சுலின் எடுத்துக்கொண்டார்.

அவர் ஒரு பதினைந்து நாட்களுக்கு வீட்டில் செய்த (கீழே கொடுக்கப்பட்டுள்ள) மருந்தை பயன்படுத்தினார். அதனால் இப்போது அவருக்கு நீரிழிவு நோய் முற்றிலும் குணமாகிவிட்டது. இனிப்பு உட்பட அவருக்குப்பிடித்த மற்ற உணவுகளை சாதாரணமாகவும் மற்றும் சுதந்திரமாகவும் சாப்பிடும் நிலைமைக்கு அவர் மாறிவிட்டார்.

டாக்டர்கள் அவளுக்கு இன்சுலின் மற்றும் வேறு எந்த இரத்த சம்பந்தமான சர்க்கரை மருந்துகளை இனிமேல் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.


இதை நீங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்தியை பல நபர்களுக்கு தயவு செய்து அனுப்புங்கள், மேலும் இது அதிகபட்ச நன்மைகளை அளிக்கும்

டி.ஆர். டோனி ஆல்பீடா (பாம்பே சிறுநீரக நிபுணர்) விடாமுயற்சியுடனும் மற்றும் பொறுமையுடனும் விரிவான சோதனைகள் செய்தார் மற்றும் நீரிழிவுக்கான ஒரு வெற்றிகரமான சிகிச்சையை கண்டுபிடித்தார்.

இன்றும் நீரிழிவு நோயால் பல நாட்கள், முதியவர்கள், குறிப்பாக பெண்கள் நிறையப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நீரிழிவு சிகிச்சைக்கான தேவையான பொருட்கள்:
1 - கோதுமை 100 கிராம்
2 - பார்லி 100 கிராம்
3 - கருப்பு விதைகள் (கொலுஞ்சி) 100 கிராம்
தமிழ் மொழியில் கொலஞ்சி என்றால் கருஞ்ஜீரகம்.

தயாரிக்கும் முறை:

5 கப் தண்ணீரில் மேலே உள்ள அனைத்து பொருட்களையும் போட்டு கொள்ளுங்கள்.
அதை 10 நிமிடம் கொதிக்கவைத்துவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
அதை தானாகவே குளிர்விக்க அனுமதிக்கவும்.
அது குளிர்ந்தபின் வடிகட்டி விட்டு அந்த நீரை ஒரு கண்ணாடி குடம் அல்லது பாட்டிலில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

உங்கள் வயிறு காலியாக இருக்கும் பொழுது, ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இந்த தண்ணீரை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இதை 7 நாட்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளவும்.

அடுத்த வாரம் அதையே மீண்டும் ஆனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து உட்கொள்ளவும்.

இந்த சிகிச்சையால்  2 வாரங்களில் நீங்கள் சாதாரணமாகி விடுவீர்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றத்தை உணர்வீர்கள். எல்லோரையும் போல எந்த பிரச்சனை இல்லாமல் சாதாரணமாக எல்லா உணவுகளையும் உட்கொள்ளலாம்.

குறிப்பு:
ஒரு வேண்டுகோள். முடிந்த அளவிற்கு இதை உங்கள் நண்பர் மற்றும் எல்லா குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெறியப்படுத்தவும். இதனால் மற்றவர்களும் நன்மை அடையலாம்.

இது எல்லாம் இயற்கையாக கிடைக்கும் பொருள்கள். இதனால் நம் உடலுக்கு நல்லதே. எந்த தீங்கும் இல்லை. இந்த சிகிச்சையைப் பொறுத்தவரையில் எவருக்கும் எவ்வித பாதிப்புமின்றி முயற்சி செய்யலாம்.

தமிழில் மொழியில் மாற்றம் செய்யப்பட்டது.

நண்பரின் பகிர்வு.

சனி, 24 பிப்ரவரி, 2018

ஸ்ரீ தேவி இன்றில்லை எனும் உலகு



ஸ்ரீ தேவி இன்றில்லை எனும் உலகு
..................
மனுஷ்ய புத்திரன்
***********
ஸ்ரீதேவி இறந்துவிட்டாள் என்று
ஸ்ரீதேவியே இன்று அதிகாலை கனவில்
வந்து சொன்னபிறகு
திடுக்கிட்டு எழுந்துகொண்டேன்

ஜன்னலைத் திறந்து
ஆர்பரித்துக்கொண்டிருந்த கடலிடம்
உரத்துக் கூறினேன்
' ஸ்ரீ தேவி இறந்துவிட்டாளாம்'

எல்லோரும் இறப்பதுபோலவேதான்
ஸ்ரீ தேவியும் இறந்துபோயிருக்கிறாள்
பறவைகள் வீழ்வதுபோல
மான்கள் இறப்பதுபோல
நீங்களும் நானும்
இறப்பது போல

இறப்பதற்கு
ஸ்ரீதேவிகளுக்கெனெ
விசேஷமான வழிமுறைகள் இல்லையா?
இது என்னை
மிகவும் ஏமாற்றமடையச் செய்கிறது

இந்த உலகின்
எல்லா வசீகரமான பெண்களும்
ஒரு சாயலில் ஸ்ரீ தேவியைபோலவே இருக்கிறார்கள்
இந்த உலகின்
எல்லா வசீகரமான பெண்களின் சாயல்களும்
ஏதோ ஒரு தருணத்தில்
ஸ்ரீ தேவியிடம் இருந்தன

என் இளமைக்காலம் முழுக்க
அவள் கண்கள் செல்லும் திசையெல்லாம்
நானும் சென்றுகொண்டிருந்தேன்
ஒரு சிறுமியின் களங்கமற்ற கண்களால்
இந்த உலகின் துயரங்களையெல்லாம்
வென்றுவிடலாம் என்று
அவ்வளவு முழுமையாக நம்பினேன்

ஒரு மருத்துவன்
ஸ்ரீ தேவியின் பதினாறு வயதிற்காக
அவளை ஏமாற்றும்போது
அவள் அருகிலேயே பதட்டத்துடன்
நின்றுகொண்டிருந்தேன்

ஒரு தொடர் கொலைகாரன்
துணிக்கடையில் விற்பனைப்பெண்ணான
ஸ்ரீ தேவியிடம் தன் காதலைத் தெரிவித்தபோது
அவளை எச்சரிக்க முடியாமல்
பரிதவித்துபோனேன்

தன் காதலனுக்காக
மனமுருகி ஸ்ரீ தேவி பாடிக்கொண்டிருக்கையில்
அவள் காதலனுடன் நானும்
கொட்டும் மழையில் ஓடி வந்துகொண்டிருந்தேன்

நினைவுகள் அழிந்த சிறுபெண்ணாய்
ஸ்ரீ தேவி ரயில் தண்டவாளத்தில் காது வைத்து
ரயில் வரும் சத்தத்தைக் கேட்டுக்கொண்டிருக்கையில்
அவள் நாயை கையில் பிடித்துக்கொண்டு
அருகிலேயே நின்றிருந்தேன்

ஸ்ரீ தேவி ஆங்கிலம் கற்றுக்கொண்ட
அதே ட்யூஷன் செண்டரில்
ஸ்ரீ தேவிக்காகவே நானும்
ஆங்கிலம் கற்றுக்கொள்ளப்போனேன்

ஸ்ரீ தேவியுடன் ஃப்ரேமில் வந்த நாயகர்கள்
வீடு திரும்பியதும்
அறையின் கதவுகளை சாத்திக்கொண்டு
தாழ்வு மனப்பான்மையில் மனம் உடைந்து அழுதார்கள்
ஸ்ரீ தேவி எவ்வளவோ பெருந்தன்மையுடன்
ஒவ்வொரு காட்சியிலும்
அவர்களை காதலித்தாள்
இந்த உலகின் எல்லாஸ்ரீதேவிகளும்
மங்கலான ஆண்களுக்கு ஒளியூட்டுவதுபோல
ஸ்ரீ தேவியும் ஒளியூட்டினாள்

ஸ்ரீ தேவிக்கு வசனம் எழுதியவர்கள்
அவள் குரலின் ரகசியங்களை
பாதுகாப்பதற்கு பரிதவித்தார்கள்

ஸ்ரீ தேவியின் நடங்களுக்கு
பிண்ணனி இசை சேர்த்தவர்கள்
புதிய ராகங்கள் தானாக உருவாகிவருவதைக்கண்டு
திகைத்துபோனார்கள்

தான் நேசித்த பெண்களிடம்
ஸ்ரீ தேவியை தேடிய ஆண்கள்
பிறகு மனம் கசந்து குடிகாரர்களானார்கள்

தன்னை ஸ்ரீதேவியாக உணர்ந்த பெண்கள்
தன்னம்பிக்கையுடன்
ஆண்களின் அதிகார உலகை
கேலியுடன் எட்டி உதைத்தார்கள்

ஸ்ரீ தேவி ஒரு எரிநட்சத்திரமாக வீழ்கிறாள்
காண அவ்வளவு தனிமையாக இருக்கிறது

ஸ்ரீ தேவி ஒரு வாணவேடிக்கையாக அணைகிறாள்
அப்படி ஒரு இருள் வந்துவிட்டது

ஸ்ரீ தேவி ஒரு மலரைபோல உதிர்கிறாள்
நிலம் நீண்ட நேரத்திற்கு அதிர்கிறது

25.2.2018
காலை 7.40
மனுஷ்ய புத்திரன்

விந்து ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள்


விந்து ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள்

விந்து என்பது விந்துக் கோட்டைகள்உற்பத்தி செய்யும் பல லட்சம் உயிரணுக்கள் அடங்கிய, இரண்டு சுரப்பிகளின் கலவை. விந்துக்குழாய் சுமார் 60%, புராஸ்ட்டோட் சுரப்பி 40% சுரந்து கலந்த கலவை தான் விந்து என்பது.

மேலும் இதில் 90% நீரும், 5% புராக்டோஸ் என்ற சர்க்கரைச் சத்தும் மீதி 5% மிக மிகக் குறைந்த அளவில் புரதமும், உப்பும் சளியும் மற்றும் 1% அளவில் உயிரணுவும் உள்ள.

ஒருதடவை வெளியாகும் விந்துவில் (2.3 மி.லி)சுமார் 1 சிட்டிகை அளவு சர்க்கரை சத்து (150மி.கி) தான் வெளியாகிறது. இதனால் சக்தி இழப்போ, சத்து இழப்போ எத்வும் ஏற்படுவது இல்லை.

1மி.லி விந்துவில் சுமார் 100 மில்லியன் உயிரணு இருந்தால் தான் கரு உண்டாகும் . இது 20-40 மில்லியன் அளவுக்கு குறைந்தால் கரு உண்டாக்க முடியாது.

ஆன் உயிரணுக்கள் பெண் குறியில் மட்டும் இருந்தால் சுமார் 1 மணி நேரமும் கருப்பையில்  இருந்தால் சுமார் 24-48 மணி நேரம் வரை உயிரோடு இருக்கும். சுமார் 300 மில்லியன் உயிரணுவில் சுமார் 300 மட்டுமே கருமுட்டையை சூழ்ந்து அதில் ஓன்று மட்டுமே  அதன் உள்ளே சென்று கருவாகிறது.

குழந்தை ஆனா, பெண்ணா என்பதை தீர்மானிக்க ஆண் உயிரணுவே காரணமாகிறது.

குழந்தை உண்டாகாமல் இருக்க 75% ஆண்களே காரணமாக இருக்கிறான்.



இரவு உணவுகளை பாலில் கலந்து உண்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்!

உட்கார்ந்தே வேலைப் பார்க்கும் பழக்கம் வந்ததால் ஏற்பட்ட உடல்நிலை மாற்றம் உடலில் இன்சுலின், பருமன் மற்றும் ஆண்மை குறைபாட்டை வலுவாக பாதித்து வருகிறது. ஒருவகையில் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு தான் இந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பெரும்பாலும் இந்த பிரச்சனையை மருத்துவரிடம் நிறைய ஆண்கள் எடுத்து செல்வதில்லை. அப்படி சென்றாலும் கூட அவர்களுக்கு நிரந்தர தீர்வுக் கிடைப்பதில்லை. இதற்காக ஆண்மை அதிகரிக்க மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் அவை பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதற்கு இயற்கை மருத்துவம் தான் சிறந்த பயன்தரும். நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளை பாலில் கலந்து இரவு வேளைகளில் உண்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
ஒரு கிராம் தாமரை விதையை ஒரு டம்ளர் பாலில் கலந்து இரண்டு வேளை குடித்து வந்தால் ஆண்களுக்கு விந்து உற்பத்தி அதிகரிக்கும். வெண்டைக்காய் வேரை நன்கு இடித்து பொடியாக்கி, இரவு உணவருந்திய பிறகு பாலில் கலந்து பருகி வந்தால் ஆண்களுக்கு விந்து உற்பத்தி அதிகரிக்கும். கரும்பு சாறோடு கொஞ்சம் கற்கண்டும் சேர்த்து காய்ச்சி ஒரு ஸ்பூன் முருங்கை பூவை சேர்த்து குடித்து வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும். வெங்காயத்தை வதக்கி தேன் கொஞ்சம் கலந்து இரவில் சாப்பிட்ட பிறகு பசும்பால் பருகி வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
கொடிப்பசலைக் கீரை சாறில் பாதாம் பருப்பை ஊறவைத்து, அது உலறிய பிறகு பொடியாக்கி, பாலில் ஒரு ஸ்பூன் வீதம் கலந்து பருகி வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும். அரச இலை கொழுந்தை அரைத்து சிறிதளவு சூடான பாலில் கலந்து காலை வேளையில் வெறும் பயிற்றில் ஓரிரு மாதங்கள் பருகி வந்தால் விந்து குறை நீங்கி, விந்து உற்பத்தி அதிகரிக்கும். உலர்த்திய செம்பருத்திப் பூ சூரணத்துடன் உலர்த்திய முருங்கைப்பூ பொடியும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரித்து ஆண்மை குறைபாடு நீங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனித குலத்தை காத்திட அனைவருக்கும் பகிருங்கள்...


மனித குலத்தை காத்திட அனைவருக்கும் பகிருங்கள்...

ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே சென்றால், மனித இனத்தின் அடையாளமே அழிந்து போய்விடலாம் என்று அஞ்சப்படுகிறது..

உலக நாடுகளில் பலவற்றில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துக் கொண்டே செல்வது மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இது நேரடியாக இனபெருக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஆண்களின் விந்துக்களின் எண்ணிக்கையானது ஒருவர் உட்கொள்ளும் உணவு மற்றும் பழக்க வழக்கங்களுடனும் தொடர்புடையது. மனித உடலின் செயல்பாடுகளுக்கு அடிப்படை உணவே.
உணவில் கொழுப்புச் சத்து அதிகம் இருந்தால், விந்தணுக்களின் எண்ணிக்கை குறையும்.

அமெரிக்காவில் கருவுறுதல் மருத்துவமனை ஒன்றில் 99 ஆண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் நொறுக்குத்தீனிகளை (ஜங்க் ஃபுட்) அதிகம் சாப்பிட்டால், விந்தணுக்களின் தரம் பலவீனம் அடைவது கண்டறியப்பட்டது.
உடலில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போதுமான அளவில் இருப்பவர்களின் விந்தணுக்களின் தரம் சிறப்பாக இருக்கிறது. மீன் மற்றும் காய்கறி எண்ணெய்களில் ஒமேகா-3 அதிக அளவில் உள்ளது.
விந்தணுக்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த ஆய்வின்படி, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை உட்கொள்பவர்களின் விந்தணுக்களின் தரம் 43 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. ஒமேகா-3 அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடுபவர்களின் விந்தணுக்கள் அதிக தரமுள்ளதாக இருக்கிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி, ஒரு மில்லிலிட்டர் விந்துவில், 1.5 முதல் 3.9 மில்லியன் அளவிலான விந்தணுக்களின் எண்ணிக்கை இருப்பது இயல்பானது.

ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தற்போதைய வேகத்தில் தொடர்ந்து குறைந்துக் கொண்டே சென்றால், மனித இனத்தின் அடையாளமே அழிந்து போய்விடலாம் என்று பல ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

கடந்த 40 ஆண்டுகளில் வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வசிக்கும் ஆண்களின் விந்தணுக்களின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
விந்தணுக்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

வாழ்க்கை முறைகளை மாற்றியமைக்காவிட்டால், எதிர்காலத்தில் அதன் விளைவு அச்சமூட்டுவதாக இருக்கும்.
ஒரு ஆணின் விந்துவில் 5 முதல் 15 கோடி வரை விந்தணுக்கள் இருந்தால் மட்டுமே அவை வெளிப்பட்ட உடனே பெண்ணின் கருப்பையை நோக்கி நீந்த ஆரம்பிக்கின்றன. இது அவ்வளவு சுலபமான நடைமுறை அல்ல. பல நேரங்களில் ஒற்றை விந்தணு மட்டுமே பெண்ணின் கருப்பையை சென்றடையும். தன்னுடைய இலக்கை எட்டும்.
விந்தணுக்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

விந்தணுக்களின் எண்ணிக்கையையும், தரத்தையும் மேம்படுத்த வேண்டுமா?
இன்று முதல் இவற்றை கடைபிடித்தால் போதும்:
மிகவும் இறுக்கமான உள்ளாடையை அணியவேண்டாம். மிகவும் சூடான நீரில் குளிக்கவேண்டாம்.
பாலியல் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கவும்.
மது அருந்துவதை நிறுத்துங்கள். மது அருந்துவதால் பாலியல் திறனுடன் நேரடியாக தொடர்புடைய டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் பாதிக்கப்படுகிறது.

உடலை ஆரோக்கியமாக, வைத்துக் கொள்ளுங்கள்.
உடற்பயிற்சி செய்வது அவசியம். ஆனால், அதிகமாக செய்ய வேண்டாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சு என்ற பழமொழி உடற்பயிற்சிக்கும் பொருந்தும்.
எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதற்கும், கருவூட்டும், கருத்தரிக்கும் திறனுக்கும் தொடர்பு இருக்கிறது.

ஆணோ, பெண்ணோ தினசரி ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்கவில்லை என்றால், அது இனப்பெருக்கத்தை நேரிடையாக பாதிக்கும்.

ஒரு ஆய்வின்படி, தினசரி 6 மணி நேரத்திற்கு குறைவாக உறங்குபவர்களின் இனபெருக்க திறன் 31 சதவிகிதம் குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆரோக்கியத்திற்குமட்டுமல்ல, இனப்பெருக்கத்திற்கும் ஆழ்ந்த உறக்கம் அவசியமானது.

நன்றி:http://www.bbc.com/tamil/science-43143410

கவிஞர் கண்ணதாசனின் இல்லற தர்மம்.....




கவிஞர் கண்ணதாசனின் இல்லற தர்மம்.....

தகராறு இல்லாத குடும்பம் இல்லை..
வீட்டுக்கு வீடு வாசப் படி..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை..
யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால் அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை..

ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலையென்றால்
பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை..

காதலித்து கல்யாணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போட்டதுண்டு
பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் பேரன்பு பெருக்கெடுப்பதுண்டு

அன்பிருந்தும் பணமிருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களும் உண்டு
சந்ததி இருக்கும் குடும்பங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டபடுவதுண்டு

அமெரிக்காவில் பகல் என்றால் இந்தியாவில் இருட்டு
பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை
ஆக அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும் தான் கஷ்டப் படுவது போலவும் பிரமை வேண்டாம்

கணவர் வீட்டுக்கு வரும் போதே பிர்ச்சனையோடு வரக் கூடாது
மனைவியும் அவரை கேள்விகுறிகளோடே வர வேற்க கூடாது..

கணவர் எதையும் அடித்து சொல்ல கூடாது
மனைவி எதையும் இடித்து பேச கூடாது

"நீங்க வாங்கின காய்கறி மகா மட்டம் "என்று மனைவி சொன்னால்.."எந்த நாய் சொன்னது?" என்று கணவன் பதில் சொன்னால் தான் பிரச்சனை..தன் தவறை ஒத்துக் கொண்டு.."சரி இனி பார்த்து வாங்குகிறேன்" என்று சொல்லி விட்டால் முடிந்தது

"நீ செய்த சாப்பாடு சகிக்கலை" என்று கணவன் சொன்னால்..
"எனக்கு தெரிந்த லட்சணம் இவ்ளோதான் ..நீங்க உங்க அம்மா வீட்டுக்கு போய் சாப்பிடுங்க" என்று மனைவி பதில் சொன்னால் தான் பூகம்பம் ஆரம்பம்.."இன்னிக்கு உடம்பு முடில..நாளைக்கு நன்றாக சமைக்கிறேன்" என்று சொன்னால் அன்பு வெள்ளம் தான்...

மனைவி புது புடவை உடுத்தினால் ...."இந்த புடவை நன்றாக இருக்கு.. அழகா இருக்கே" என்று சொல்லணும்
கணவன் வெளியிலிருந்து வரும் போது" ஏன் இப்படி வியர்த்திருக்கிறது..எளச்சு போய்ட்டீங்களே" என்று அக்கறையோடு மனைவியும் விசாரிக்க வேண்டும்..

மனைவியைக் கணவன் "அம்மா" என்று அழைக்கணும்
கணவனை மனைவி "அப்பா" என்று அழைக்கணும்

தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால் கணவனுக்கு நிம்மதி
தன் தாய் வீட்டை கணவன் பெருமையாக கூறினால் மனைவிக்கு நிம்மதி

BedRoom இல் Board Room இல் பேசுவது போல் பேசக் கூடாது..கணக்கு பண்ணும் நேரத்தில் கணக்கு வழக்குகள் பேசக் கூடாது..

பகலில் நடக்கும் எந்த வாக்குவாதமும் அன்று இரவிற்குள்
சரி செய்யப் பட்டு சேர்ந்து விட வேண்டும்..

முக்கியமாக கணவனும் மனைவியும் சிந்திக்க வேண்டிய விஷயம்..வார்த்தைகளில் ஜாக்கிரதை

எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம்
சொல்லைக் கொட்டி விட்டால் பொறுக்க முடியாது

முள்ளால குத்தின காயம் ஆறிடும்
சொல்லால குத்தினா ஆறவே ஆறாது..

ஒருவரையொருவர் அனுசரித்து போனால் உலகையே தனக்குள் அடக்கி கொள்ள முடியும்

*இரண்டு கைத் தட்டினால் தான் ஓசை என்பார்கள்..ஒருவர் கோபம் கொள்ளும் போது இன்னொருவர் விட்டு கொடுக்க வேண்டும்.*.

"பெண்டாட்டி தானே சொல்லிவிட்டு போகிறாள் ".என்றும்.."கணவன் தானே ..பேசட்டும்" என்றும் விட்டுக் கொடுத்து விட்டால் உள்ளம் துடிக்காது..உடல் வலிக்காது..ஊர் சிரிக்காது..

வாழ்க இல்லறம்...

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

இன்றைய பெற்றோர்களுக்கு...



இன்றைய பெற்றோர்களுக்கு...

உங்கள் மகன் மற்றும் மருமகளுடன் ஒரு கூரையின்கீழ் வாழ ஆசைப்படாதீர்கள். வாடகை வீடு எடுத்தாவது அவர்களைத் தனியே வையுங்கள். வீட்டையும் அவர்கள் வசதிக்கேற்ப அவர்களையே தேடச் சொல்லுங்கள். அது மகனோ, மகளோ, உங்களுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் எந்த அளவுக்கு இடைவெளி இருக்கிறதோ, அந்தளவுக்கு உங்களுக்கிடையில் நல்ல உறவு நிலவும்.

மருமகளை உங்கள் மகனின் துணையாக மட்டுமே பாருங்கள். உங்கள் மகளாகப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. வேண்டுமானால் ஒரு தோழிபோல பார்க்கலாம். உங்கள் மகன் எப்போதும் உங்கள் ஜூனியர்தான். அதற்காக, மருமகளையும் அதே ரேங்கில் பார்க்க வேண்டும் என்பதோ, மகனைத் திட்டுவது போல மருமகளைத் திட்டலாம் என்பதோ நிச்சயம் கூடாது.

 உங்கள் மருமகளைத் திட்டுவதற்கும், அவள் தவறுகளை சரிசெய்வதற்கும் முழு உரிமைப் பெற்றவர், அவளைப் பெற்ற அம்மா மட்டுமே.

உங்கள் மருமகளிடம் இருக்கும் குணங்கள் அல்லது விருப்பங்கள் என்பது, உங்கள் மகனுடைய பிரச்னைதானே தவிர உங்களுடையது அல்ல.

ஒருவேளை ஒரே வீட்டில் வசித்தாலும், அவர்களின் துணிகளை துவைப்பது, அவர்களுக்கும் சேர்த்துச் சமைப்பது, அவர்களின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது போன்ற வேலைகளைச் செய்யாதீர்கள். ஆனால், இந்த உதவிகளை உங்கள் மருமகள் கேட்டு, உங்களால் முடியுமென்றால் செய்யுங்கள். அந்த உதவிகளுக்குப் பிரதிபலனாக மருமகளிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

மகனுக்கும் அவன் மனைவிக்கும் இடையில் சண்டை நடந்தால், கண்ணும் தெரியவில்லை; காதும் கேட்கவில்லை என்று இருங்கள். பொதுவாக, இளம் தம்பதியர் தங்கள் பிரச்னையில் பெரியவர்கள் தலையிடுவதை விரும்ப மாட்டார்கள்.

உங்கள் பேரப் பிள்ளைகள், உங்கள் மகன் மற்றும் மருமகளுக்கு உடையவர்கள். அவர்கள் பிள்ளையை அவர்கள் எப்படியும் வளர்த்துக்கொள்ளலாம். அது, அவர்கள் பாடு. அவர்கள் வளர்ப்பால் வரும் நன்மையும் தீமையும் அவர்களைச் சார்ந்தது.

 உங்கள் மகனின் மனைவி உங்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். உங்களுக்குப் பணிவிடை செய்யவேண்டும் என்று அவசியமில்லை. அது, உங்கள் மகனுடைய வேலை மட்டுமே. நீங்கள் உங்கள் மகனைச் சரியான நபராக வளர்த்திருந்தால் மட்டுமே, உங்களுக்கும் உங்கள் மகனுடைய மனைவிக்கும் இடையில் நல்ல உறவு நிலவும்.

உங்கள் ஓய்வுக் காலத்தில் உங்கள் மகனைச் சார்ந்திருக்காதீர்கள். ஏனென்றால், உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் நீங்கள் வெகுதூரம் கடந்துவிட்டீருப்பீர்கள். ஆனால், உங்கள் பிள்ளைகளோ அப்போதுதான் வாழ்க்கையின் புதுப்புது அனுபவங்களைப் பெற ஆரம்பித்திருப்பார்கள். தவிர, ஓய்வுக் காலத்தை உங்கள் விருப்பப்படி என்ஜாய் செய்யுங்கள். இறப்பதற்கு முன்னால், அத்தனை சந்தோஷங்களையும் அனுபவித்துவிடுங்கள்.

பேரப் பிள்ளைகள் உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்ல; அவர்கள், அவர்களுடைய பெற்றோர்களின் விலைமதிப்பில்லாத சொத்து.

*வக்கீல் அருள்மொழி என்ன சொல்கிறார்?*

''இந்தக் கருத்துகள் அனைத்தையும் என் வாழ்க்கையின் அனுபவமாகவே பார்க்கிறேன்.

 இன்றைய காலச்சூழலில் ஒரு பண்பட்ட வாழ்க்கை முறைக்கு வழிகாட்டும் கருத்துகள் இவை. நல்ல மாமனார் - மாமியாரை மதிக்காத மருமகளைப் பார்த்த அனுபவமும் வலியும் இதில் தென்படுகிறது. இதுபோன்ற வலியில் சிக்கிக்கொள்ளாமல், நிம்மதியாக இருப்பதற்காக இவற்றைப் பின்பற்றலாம் என்பதுதான் என் கருத்து.

'என் மருமகளை மகள்போல பார்த்துக்கொள்கிறேன்' என்பதும், 'மாமியார் என் இன்னோர் அம்மா' எனச் சொல்வதும் இயல்பான விஷயம் கிடையாது.

 மனைவியை மருமகளாக மட்டுமே பாருங்கள். அதேபோல, மருமகள்கள் தங்கள் மாமியார்களுக்கு அத்தைக்கான மரியாதையைக் கொடுங்கள் போதும். அதுதான் இயல்பானது.
இப்படி மரியாதையைக் கொடுத்து மரியாதையை வாங்கும் வழக்கம், இனி வரும் காலகட்டங்களில் பெண்ணைப் பெற்ற பெற்றோர்களுக்கும் தேவைப்படும்.''


புதன், 21 பிப்ரவரி, 2018

அம்பேத்கர் புத்த மதம் மாறிய போது ஏற்ற உறுதிமொழிகள் என்ன தெரியுமா


அம்பேத்கர் புத்த மதம் மாறிய போது ஏற்ற உறுதிமொழிகள் என்ன தெரியுமா?

சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து
*"நான் இந்துவாக பிறந்தது என் குற்றமல்ல. ஆனால் ஒரு போதும் இந்துவாக சாகமாட்டேன்"*
என்று கூறினார்.

அதை கூறியது மட்டுல்ல செய்தும் காட்டினார். அம்பேத்கர், அக்டோபர் 15, 1956 அன்று நாக்பூரில் பௌத்த சமயத்தைத் தழுவியபோது ஏற்றுக்கொண்ட 22 உறுதிமொழிகள்.

01. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் கடவுளாகக் கருதி வணங்கமாட்டேன்.


02. ராமன், கிருஷ்ணன் இரண்டும் இறைவனின் அவதாரமென எண்ணி வணங்கமாட்டேன்.


03. கணபதி, 'கௌரி' மற்றும் இந்து தேவதைகளை தெய்வங்களாக ஏற்று வணங்கமாட்டேன்.


04. கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்ததாகவோ நம்ப மாட்டேன்.


05. மகாவிஷ்ணுவின் அவதாரம்தான் புத்தர் என்ற விஷமத்தனமான பிரசாரத்தை எதிர்த்து முறியடிப்பேன்.


06. இறப்பு நிகழ்ச்சியில் இந்துமதச் சடங்குகளை செய்யமாட்டேன்.


07. புத்தரின் போதனைகளையும் நெறிகளையும் மீறமாட்டேன்.


08. பார்ப்பனர்களின் எந்தவொரு ஆச்சாரச் செயலையும் அனுமதிக்க மாட்டேன்.


09. மானுட சமத்துவத்தை நம்புவேன்.


10. சமுத்துவத்தை நிலைநிறுத்த முழுமூச்சாக பாடுபடுவேன்.


11. புத்தரின் எட்டு வழிநெறிகளை நம்பிக்கையோடு பின்பற்றுவேன்.


12. புத்தரின் பத்து தம்ம போதனைகளை ஏற்று செயல்படுவேன்


13. எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டி, பாதுகாத்து, வாழவைப்பேன்.


14. பொய் பேச மாட்டேன்.


15. களவு செய்ய மாட்டேன்.


16. உடல் இன்பத்துக்காகத் தவறுகள் இழைக்கமாட்டேன்.

17. மது அருந்த மாட்டேன்.


18. புத்தரின் அன்பு, அறிவு, பரிவு ஆகிய உயரிய நெறிகளின் அடிப்படையில் என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயற்சி செய்வேன்.


19. மனித நேயத்துக்கு முரணான, சமுத்துவம் இல்லாத கேடுகெட்ட இந்து மதத்தை விட்டொழித்து, இன்றுமுதல் மேன்மைமிகு பௌத்தத்தை தழுவிக்ககொள்கிறேன்.


20. புத்தரும் அவர் தம்மமும் உண்மையான மார்க்கம் என்று உறுதியாக ஏற்கிறேன்.


21. இன்று மறுவாழ்வு பெற்றதாக நம்புகிறேன்.


22. புத்தரின் கொள்கை கோட்பாட்டுக்கு ஏற்ப இன்று முதல் செயல்படுவேன்.


*இப்படி உறுதியேற்று இந்த மதத்தையும் அதன் கடவுள்களையும் பார்ப்பனர்களையும் எதிர்த்த அம்பேத்கரைத்தான் சங்பரிவாரங்கள் தங்களுக்குசொந்தம் கொண்டாடத் தொடங்கியுள்ளன.*

பரப்புவோம் - பகிர்வோம்...

செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

உலக தாய்மொழி தினம் பிப்ரவரி-21.



உலக தாய்மொழி தினம் பிப்ரவரி-21.


தமிழ்.
------------------

*அன்னை அருளிய அன்பு மொழி விண்ணைத் தாண்டிய ஆசை மொழி மண்ணின் மாண்பை போற்றும் மொழி உருவம் வெல்லும் உலகமொழி!*

*அருகும் மொழி போல் ஆகாது பருகும் மொழி போல் பயின்றிடுவோம் உருகும் உணர்வின் உதய(ம்) மொழி பெருமை பேசிட செய்திடுவோம்!*

*தாய் மண்ணே வணக்கம் என்போம் தாய் மொழி இணக்கம் கொள்வோம், தாய் மொழி பற்றுக்  கொள்வோம், தமிழ்மொழி கற்று வெல்வோம்!*

*தாய்மொழி நம் உயிர்மொழி. அது நம் தாயைப் போல புனிதமானது. சிந்தனை எனும் சிற்பத்தைச் செதுக்கத் தாய்மொழி எனும் உளியால் மட்டுமே முடியும்.*

*மொழி வரலாறு:*

🌸 *காந்தியின்* சத்தியசோதனையை *தன் தாய்மொழியான குஜராத்தியில்தான் முதலில் எழுதினார்.*

🌸 *மகாகவி பாரதி*  புகழ் மிக்க கவிதைகளையும் கட்டுரைகளையும் தந்தது நமது தாய்மொழியான *தமிழில்தான்.*

🌸 *தாகூர், கீதாஞ்சலி* எனும் நோபல்பரிசு பெற காரணமானது அவரது தாய்மொழியான *வங்கமொழியில்தான்.*

🌸 *ஒருவருக்கு ஒருவர், தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி, பின்னாளில்,* இனத்தின் அடையாளமாக *மாறியது.*

🌸 *உலகளவில் மொழியானது நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது.*

🌸 *உலகில் பேசப்படும் மொழிகள், பொது மொழி, தாய்மொழி என இரண்டு வகையாக, பிரிக்கப்பட்டுள்ளது.*

🌸 *உலக அளவில், 100 ஆண்டுகளுக்கு முன், 6,200 ஆக இருந்த மொழிகள், இன்று, 3,000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக, மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.*

🌸 *இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட,* 22 மொழிகள் *அதிகாரப்பூர்வமாக உள்ளன.*

🌸 *உலகில் உள்ள மொழிகளுக்குள், ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும், ஆண்டுதோறும்* இன்று பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழி தினம் *யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.*

🌸 *இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்,* பாகிஸ்தானில், "உருது மொழி' *அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருந்தது.*

🌸 *1952ம் ஆண்டு அன்றைய* கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்கதேசம்) உருது மொழிக்குப் பதிலாக, வங்க மொழியை *அங்கீகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள், கோரிக்கை தெரிவித்தனர்.*

🌸 *1952,  பிப்ரவரி 21ம் தேதி பாகிஸ்தான் அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி, டாகா பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில்,* நான்கு மாணவர்கள் *போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.* பலியான மாணவர்களின் நினைவாக, யுனெஸ்கோ அமைப்பு, 1999ம் *ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது.*

*தாய்மொழி, தேசிய மொழி மற்றும் தொடர்பு மொழி என பொதுவாக மூன்று விதமான மொழிகள், ஒருவருக்கு தெரிந்திருந்தால், எங்கு வேண்டுமானாலும் வாழ்வதற்கு துணையாக இருக்கும், என அறிஞர்கள் கூறுவர்.ஆனால், தொடர்புகளுக்காக உருவான மொழியின் பெயரால், இனவாதம் துவங்கியது, துரதிஷ்டமானது. உலக மக்களால் பயன்படுத்தப்படும் அனைத்து மொழிகளுக்கும் பாதுகாப்பும், உரிய மரியாதையும் அளிக்க வேண்டும்.*

🌸 *எந்த மொழியையும் அழிக்கக் கூடாது.* "ஒருவர் பல மொழிகளை தெரிந்து கொள்ளவும், வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளவும், மொழிபெயர்ப்பு மூலம் அமைதியை உருவாக்கவும்' *இத்தினம் வலியுறுத்துகிறது.*
-------------------
🌸 *நமது தாய்மொழி-தமிழ்.*🌸

*கடல் கடந்தும் இனிக்கும் தாய்மொழி:*
மலேசியாவின் *நெருக்கடி மிகுந்த ஒரு நெடுஞ்சாலையின் பெயர்* மாமன்னர் ராஜராஜசோழன் சாலை!

🌸 சிங்கப்பூரின் *ஆட்சி மொழியாய்* தமிழ் *அமர்ந்திருப்பதால்* அடுமனையகம், நகையகம், பனிக்கூழகம், துணியகம் *என்று* விமானநிலையம் முதல் இல்லம் வரை *பெயர் பலகைகளில் ஆங்கிலத்தோடு தமிழ் கொலுவிருப்பதைக் காண முடியும்.*

🌸 பிரான்சு *தேசத்தில் பல்வேறு பகுதிகளில் நன்கு செயல்படும்* தமிழ் வகுப்புகளும்,
பரத நாட்டிய வகுப்புகளும், *மேலும், பல்வேறு* தமிழ் இலக்கிய விழாக்களுமே *நாம் சான்றாக கொள்ளலாம்.*

🌸 *இந்தியா பல மொழிகள் பேசும் நாடு. இதில் 74 சதவீத மக்கள் இந்திய, ஐரோப்பிய மொழிகளையும், 23 சதவீத மக்கள் தமிழை உள்ளடக்கிய திராவிட மொழியையும் பேசுகின்றனர். இருப்பினும் இந்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.*

🌸 *மொழியின் பிறப்பிடம் எது?*

 🌸 *தாயின் கருவறை. கருவறை இருளில் கண்கள் மூடியிருக்கும் கருக்குழந்தை, சும்மா இருப்பதில்லை. தாயுடன் பேசுபவர்களின் குரலை, சூழ்ந்து ஒலிக்கும் சத்தங்களை சதா கேட்டுக் கொண்டேயிருக்கும்.*

🌸 *மனிதனின் அடையாளம்,  அவனது தாய்மொழி தான். மொழியில் மூத்த, தமிழ்மொழியைப் பேசுவதே பெருமையான விஷயம். அதுவே, தாய்மொழியாய் நமக்கு அமைந்தது பெரும்பேறு. உச்சரிக்க இனிதான, நமது மொழியின் அருமை தெரியாமல், பிறமொழி மோகத்தில் தமிழை, தள்ளி வைத்து வேடிக்கை பார்க்கிறோம்.*

🌸 *தாய் மொழி தமிழின் அருமையை, இனிமையை, மேன்மையை உளமார உணர இந்த நாள் உதவட்டும்.*

🌸 *தமிழ் பேசுவோம்!*

சாதிக்க நினைப்பவர்களுக்கு எழுத்தாளர் சுஜாதா வழங்கிய அறிவுரைகள்



சாதிக்க நினைப்பவர்களுக்கு எழுத்தாளர் சுஜாதா வழங்கிய  அறிவுரைகள்

1. புத்தகங்களைத் துணை கொள் ....அதை  விட   சிறந்த   நண்பனில்லை  ....

2. உடலுழைப்பை  அதிகரி .... அது   மட்டுமே   உன்னை   உயர்த்தும்  ,  ஆனந்தமும்   ஆரோக்கியமும்   அதில்   மட்டுமே   கிடைக்கும்  ..

3. குளிர்ந்த   நீரில்   குளி . உடல்  சுறுசுறுப்பாகும்  ...

4. தியானம்  கைக்கொள்.... உன்னை   நீ   உணர்ந்து  கொள்ள   அது  மட்டுமே   வழி காட்டும்  ....

5. இரவு உறங்கும்  முன் நெடுந்தொலைவு   நட .... உன்   தூக்கம்   இன்பமாக  இருக்கும்  ...

6. தாய்  தந்தையைப்   போற்றி   வணங்கு  ..... அது   உன்   கடமை.    

7. உணவில்  கீரை   சேர்த்துக் கொள் ....

8. எத்தனை  வலித்தாலும்  அழாதே  . சிரி  . வலிமைக்குக்  மேல்   வலிமை   பெற்று   வானம்   தொடுவாய்  ....

9. ஆத்திரம்   அகற்று .
எதற்கும்  கோபப்படாதே ....
கோபம்   உன்னை   ஒரேயடியாக   அழித்து விடும் ....

10. கேலிக்கு   புன்னகையை    பரிசாக்கு  ...

11. கோபத்திற்கு   மௌனத்தைக்   கொடு  . திருப்பித்  தாக்கி விடாதே  ....

12. நட்புக்கு   நட்பு   செய் .
 பகைவனைக்  கூட   நேசிக்கப்  பழகு  .....

13. வேலை   சொல்லித்  தருபவரிடம்  மிகப் பணிவாக  இரு  ....
மேலும்   மேலும்   உயர்வாய்  ...

14. அலட்சியப்படுத்தினால்   விலகி   நில் .  ஆத்திரப்பட்டுவிடாதே  ....

15.. அன்பு   செய்தால்   நன்றி  சொல் .... நன்றியுணர்வு    உன்னைப்  பெரியவனாக்கும்  ...

16. இதமாகப்  பேசு .
  இனிமைகள்   உன்னை   அரவணைத்துக்  கொள்ளும்  ....

17 . நீயும்   நானும்   எதைச்   செய்தாலும்   இறைவன்   மௌனமாகப்   பார்த்துக் கொண்டே   இருக்கிறார்  .....அவருக்கு   நாம்   பதில்   சொல்லியே   ஆக வேண்டும் .... ஆகவே    நல்லதைச்   செய்  .....

நீ ஜெயிப்பாய்....    நிச்சயமாக  ஜெயிப்பாய் ..

வாழ்க்கையில்   உன்னத   நிலைக்கு   வருவாய்.

அந்தமாதிரி படங்களை பார்க்கலாமா ?


அந்தமாதிரி படங்களை பார்க்கலாமா ?

பழமைவாய்ந்த தமிழ அறிவர்கள் எல்லாவற்றிலும் தேர்ந்தும் சிறந்தும் விளங்கினார்கள் இந்த குமுகத்திற்கு தம்மை முழுமையாக அற்பனித்துகொண்டு பல கலைகளையும் அதன் கூறிய நுட்பங்களையும் நமக்கு கொடையாக வழங்கினார்கள் . பாலியல் தொடர்பாக பலநிலைகளில் சிந்தித்து செழுமைபடுத்தி இந்த குமுக அமைப்பிற்கு எந்த தீய விளைவுகளையும் அது உண்டக்கிவிடகூடது என்ற எண்ணம் கொண்டு நேர்த்தியாக கட்டமித்தர்கள் .

இன்று பெண் என்பவள் வெறும் பாலியல் இன்பத்திற்காக படைக்கப்பட்டவள் என்ற தவறான கற்பிதம் கற்பிக்கப்பட்டு வருகிறது . இந்த சீரழிவு பண்பாடு எங்கிருந்து தேற்றம் கொண்டது ? குடும்ப உறவுகளையும் கணவன் மனைவி உறவுகளையும் சிக்கலாகி சீக்களியகி கொண்டிருக்கிறது இந்த குமுக அமைப்பு .மனிதமே நோயாளியாகி கொண்டிருக்கிறதே ஏன்? இன்றைய வாழ்க்கைமுறை இனிமையாக பயணிக்கிறதா? என்றால் இல்லை என்று கூறலாம் .இன்று வெறித்தனமான பாலியல் சிந்தனைகள் எங்கிருந்து ஊற்றெடுத்தன ? இத்தகு சீரழிவு பண்பாடு எங்கிருந்து தோற்றம் கொண்டது? இலைமறை காயாக இருந்த இந்த பாலியல் தொடர்பான செய்திகள் சிக்கலாகி வருவது பரிணாம வளர்ச்சியா ? மனித இனத்தின் சீரழிவுகளின் தொடர்ச்சியா? கதைப்போமா?

நம் நாடுகளை போன்ற கிழ்திசை நாடுகளில் இத்தகு சீரழிவுகள் எல்லாம் இருக்கவில்லை பின் எங்கிருந்து வரத்தொடங்கியது ? எல்லாம் இந்த பாழாய் போன ஆங்கிலேயர்களினால் தான் . ஆங்கிலேயர்களின் வருகையை போற்றும் மேட்டடிமைத் தனங் கொண்டவர்கள் ஒன்றை சிந்திப்பதில்லை சாலைவசதிகளும் தொடர்வண்டி (இரயில் )அஞ்சல் சேவையும் ஆங்கிலேயர்களின் வருகையினால் வந்தது என வாய்கிழிய பேசுவார்கள் . இவைகள் எல்லாம் நம் நாட்டில் இருந்த அளவற்ற்ற செல்வங்களை கொள்ளையடித்து செல்லவேயன்றி வேறல்ல . வந்தவன் நம் உயர்ந்த மொழியையும் பண்பாட்டையும் நாகரீகத்தையும் சீரழித்துவிட்டு நம் செல்வங்களை கொள்ளையடித்து சென்றான் என்பது உண்மை .

ஆபாச படங்களோ புத்தகங்களோ உளவியல் ரீதியில் தனிமனிதன் மனமாற்றத்தை உண்டாக்கவில்லை என்பதுதான் அறிவியல் உண்மை . பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் இதை உண்மையாக்குகிறது . பாலியல் படங்களையும் , கட்சிகளையும் பார்ப்பதால் அது குமுக நேரடியான சிக்கலை உண்டாக்கவில்லை என்பது தெளிவாக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது ?.

பாலியல் தொடர்பான தொடர்சிந்தனை ? நம் முன்னவர்கள் காட்டிய பட்டறிவு (அனுபவம் )என்பது அறிவு நிறைந்தது . அறிவைமட்டுமே அடிப்படையாக கொண்டது அனால் இன்று எந்தப்பொருளையும் ஆய்வு முடிவுகளையும் மேலை நாட்டவர்களை ஒப்பிட்டு உயர்த்தி காட்டவே செய்கின்றனர் பாவம் அவர்களின் அறியாமையை எனவென்பது? மறுப்பது உளநோய் மருந்தென சாலும் ... என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உளவியலை படம் பிடிக்கிறார் திருமுலர் .அனால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்வந்த சிக்மண்ட் பிராய்டு பெரிதாக தெரிவார் நம் புல்தடுக்கி பயில்வான்களுக்கு. உளவியலின் தந்தை சிக்மண்ட் பிராய்டு என கொஞ்சம் கூட நானப்படாமல் சொல்லுவார்கள் . அதேபோல பாலியலையும் அழகாக படம்பிடித்து கட்டியவர்கள் நம்மவர்களே என்பது உண்மை .

மேலைநாடுகளின் அறிவியலுக்கும் . கலைகளுக்கும் தய்போன்றது தமிழ் மொழி என்பதை மேலைநாட்டவர்கள் அறிவர் நம்மவர்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்பதே நம் அவா .தமிழ அறிவு மரபு என்பது மனித இனக்குழுக்களின் அறிவு மரபுகளுக்கு முன்னேடியானது என்பதை புரிந்து கொண்டால்தான் எல்லாம் விளங்கும் என்பதற்குதான் நீண்டவிளக்கம்.

இந்த பாலியல் தொடர்பான எண்ணங்களும் அது குறித்தான வேட்கைகளும் பல்வேருதரப்பிலும் இன்று கண்மூடித்தனமாக பெருகிவருவது நோயின் அறிகுறியே எனலாம் . பாலுறவு என்பது உணவு உண்ணுதல் . உறங்குதல் , நீரருந்துத்தல் . போன்ற இயல்பான செயல்களே ஆனால் இதை அதாவது உணவு உண்ணுதலை நாள்முழுக்க சிந்தித்து கொண்டிருப்பதில்லை . சுவைமிகுந்த உணவு உண்ணுதலை எப்போதும் சிந்தித்து கொண்டிருப்பதில்லை அனால் பாலியல் இன்பத்தை .இந்த சிந்தனையில் நாள் கணக்கில் ஈடு பாடு கொண்டு சிந்தித்து கொண்டு இருப்பது ஏன் சிந்தித்தோமா ?

இப்படி எப்போது வேண்டுமானாலும் ஒரு மனிதன் தின்று கொண்டிருக்கிறான் எனவைத்து கொள்வோம் அவன் நோயாளியாவான்.இதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவர் கழி பெரிரையான் கண் நோய் எனவிளக்குவார்.

ஒருவர் கணக்கில்லாமல் நாள் கணக்கில் பாலியல் தொடர்பான காட்சிகள்.படங்கள் , பார்த்துகொண்டு இருப்பதால் அவரின் நரம்பு மண்டலம் மேலும் மேலும் தூண்டப்பட்டு உணர்வு கிளர்ந்து எழுந்து குறிப்பிட்ட அந்த நரம்பு மண்டலமும் உடலும் தூண்டப்பட்டு தளர்ச்சி அடைந்து நோயாளி ஆகும்தானே .வலுகட்டாயமாக இப்படி மனித உணர்வுகளை தூண்டிவிட்டு விரைந்து நோயை பெற்று கொள்வதை விட தான் அளப்பரிய நேரத்தை முறையாக செலவழிக்கலாமே ?

அளவற்ற மனித இனத்தின் நேரத்தை உயர்ந்த மணித்துளிகளை முறையான நேரத்தை உற்பத்தி நடவடிக்கை , வேலைவாய்புகள் ,கல்வி, பொருளாதரத்தை உயர்த்துதல் கலைகளை கற்றுகொள்ளுதல் போன்றவற்றில் செலவிடலாம் இல்லையா ? திணைக்களம் (துறை )தோறும் புதிய
கண்டுபிடிப்புகளை செய்யலாம் இல்லையா நிலத்தை செப்பனிட்டு உற்பத்தியை விரிவு படுத்தி வேலை வாய்ப்புகளை உண்டாக்கலாம் இல்லையா? பாலியல் தொடர்பான எண்ணங்களில் வலுகட்டாயமாக செலவிடுவதால் மனிதன் நோயாளியகிவிடுவான் தானே . இது தானே அறிவியல் விதி

இப்படி உடலையும் உள்ளத்தையும் கெடுத்து கொண்டு மனித வாழ்வின் பொன்னான நேரத்தை மணித்துளிகளை இந்த குமுகத்திர்க்காக செலவிடலாம் தானே . இந்த குமுகம் தான் பயணத்தை தடையின்றி தொடரவும் ஆக்கப்பணிகளை செய்து நாடும் உயர்ந்து இந்த புடவியையும் நோயற்ற குமுகமாக தோற்றங்கொள்ள செய்வோம் .

நூறு மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்


நூறு மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்

1.அகத்தி – Sesbania grandiflora – FEBACEAE
கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் மற்றும் கோப்பி தேனீர் குடிப்பதால் ஏற்படும் உடல் வெப்பம் தணியும்.
இலைச்சாறும், நல்லெண்ணையும் சமஅளவு எடுத்து பதமாகக் காய்ச்சி தலையிலிட்டு வாரம் ஒருமுறைக் குளித்து வர பித்தம் தணிந்து தலைவலி நீங்கும்.

2.அசோகு – Saraca asoca – CAESALPINIACEAE
அசோகு மரப்பட்டை – 100 கிராம் ஐ சிதைத்து 400 மி.லி. நீர்விட்டுக் காய்ச்சி 100 மி.லியாக வற்ற வைத்து 100 மி.லி. பாலில் கலந்து நாள்தோறும் 2 அல்லது 3 வேளை பருக பெரும்பாடு தீரும்.

3.அமுக்கரா – Withania somnifera – SOLANACEAE
அமுக்கராக் கிழங்கைப் பொடி செய்து தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட உடல் பலவீனம், தளர்ச்சி இவை நீங்கும்.
அமுக்கரா சூரணத்தைப் பாலில் கலந்துப் பூசி வர படுக்கைப்புண், வீக்கம் ஆகியவை தீரும்.

4. அம்மான் பச்சரிசி – Euphorbia hirta – EUPHORBIACEAE
இலையை சமைத்து உண்ண உடல் வறட்சி அகலும் வாய், நாக்கு, உதடுவெடிப்பு, புண் தீரும்
பாலைத்தடவி வா நகச்சுற்று, முகப்பரு, பால்பரு, மறையும். கால் ஆணியின் வலி குறையும்.
பூ – 30 கிராம் எடுத்து அரைத்து கொட்டைப் பாக்களவு பாலில் கலந்து 1 வாரம் உண்ண தாய்ப்பால் பெருகும்.

5. அரசு – Ficus religlosa – MORACEAE
அரசந்துளிர் இலைகளை அரைத்துப் பற்றிடபுண்கள் ஆறும்
அரசு விதைத் தூளை உண்டு வர உயிர் அணுக்களைப் பெருக்கி ஆண் மலட்டை நீக்கும்.
அரச மரத்து புல்லுருவியை பால் விட்டு அரைத்து உண்டுவர பெண் மலடு நீங்கும்.

6.அரிவாள்மனைப் பூண்டு – Sida acuta – MALVACEAE
இலையைக் கசக்கி வெட்டுக் காயத்தில் பிழிய இரத்தப் பெருக்கு நிற்கும். காயம் வெகு சீக்கரத்தில் ஆறும்.
இலையுடன் சமஅளவு குப்பைமேனி இலை, பூண்டுப்பல் – 2, மிளகு – 3 சேர்த்து அரைத்து புன்னைக்காய் அளவு உள்ளுக்குக் கொடுக்க நஞ்சு முறியும்.

7.அறுகம்புல் – Cynodon dactylon – POACEAE

அறுகம்புல்லை இடித்துப் பிழிந்த சாற்றை கண்ணுக்குப் பிழிய கண்புகைத்தல் தீரும்.
30 கிராம் புல்லை அரைத்து பாலில் கலந்து பருக இரத்த மூலம் குணமடையும்.
30 கிராம் புல்லை நன்றாக அரைத்து சமஅளவு வெண்ணெய் கலந்து 20-40 நாட்கள் வரை சாப்பிட உடல் தளர்ச்சி நீங்கி உறுதிப்படும்.

8.ஆடாதோடை – Adathonavasica – ACANTHACEAE
ஆடாதோடை மணப்பாகு 1 தேக்கரண்டி கலந்து சாப்பிட மார்ச்சளி, இருமல், காசம் ஆகியவை குணமாகும். குரல் இனிமை உண்டாகும்.
ஆடாதோடை இலை – பங்குக்கு எட்டு பங்கு நீர் சேர்த்து எட்டில் ஒன்றாகக் குறுக்கி வடிகட்டிய குடிநீரை சீலையில் தோய்த்து ஒற்றடமிட வீக்கம் கீல்பிடிப்பு இவை தணியும்.

9.ஆடுதீண்டாப்பாளை – Aristolochia bracteolate – ARISTOLOCHIACEAE
உலர்ந்த இலை – 10 கிராம் அளவு எடுத்து ¼ படி வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி 15 மி.லி. – 30 மி.லி. வீதம் உள்ளுக்குக் கொடுக்க நுண்புழுக்கள் சாகும்.
வேரை அரைத்து 4 கிராம் அளவுக்கு உள்ளுக்கு கொடுக்க பாம்பு நஞ்சு முறியும்.
இலைச்சாறுடன் நல்லெண்ணெய் கூட்டி எரித்து பக்குவமாக்கி வடிகட்டி கரும்படை, கரப்பான் இவைகளுக்கு பூச குணமாகும்.

10.ஆமணக்கு – Ricinus communnis – EUPHORBIACEAE
இலையை விளக்கெண்ணெய் தடவி அனலில் வாட்டி மார்பகத்தில் வைத்துக் கட்டி வர பால் சுரப்பு மிகுதியாகும்.
கண் வலியின் போதும், கண்ணில் தூசி விழுந்த போதும் ஒரிரு துளி விளக்கெண்ணெய் கண்ணில் விட வலி நீங்கும்.
ஆமணக்குத் துளிர் இலைகளை விளக்கெண்ணெய்யில் வதக்கி அடிவயிற்றில் வைத்துக் கட்ட மாதவிடாய் வயிற்று வலி தீரும்.

11.ஆல் – Ficus benghalensis – MORACEAE
ஆலம்பழுப்பு இலைகளை சுட்டுச் சாம்பலாக்கி நல்லெண்ணெய்யில் கலந்து கரப்பானுக்குப் பூச குணமாகும்.
ஆலம்பட்டையை இடித்து 10 மடங்கு நீர்விட்டு குடிநீராக்கி வாய் கொப்புளித்து வர வாய்ப்புண், ஈற்றுப்புண் இவை போகும்.

12.ஆவாரை – Cassia auriculata – CAESALPINIACEAE
பூவின் சூரணத்தையோ அல்லது பூவைக் குடிநீராக்கி பாலில் கலந்து தினமும் குடிக்க மேகவெட்டை, உடல்சூடு இவைநீங்கும்.
ஆவாரை இலை பூ, காய், பட்டை, வேர் என இவ்வைந்தின் குடிநீரைக் குடிக்கச் செய்ய நீரிழிவு தீரும்.

13.ஆனை நெருஞ்சில் – Pedalium murex – PEDALIACEAE
இலயை அரைத்துப் பற்றிட காயங்கள் ஆறும்.
இதன் இலையை நீரில் கலக்க நீர் வழுவழுப்பாக மாறும். இதனை சிறிது சர்க்கரை சேர்த்து நாள்தோறும் காலையில் பருகி வர வெள்ளை, நீர்க்கடுப்பு, சொட்டு மூத்திரம் இவை தீரும்.

14.இலந்தை – Ziziphus mauritiana – RAMNACEAE
இலை – 1பிடி, மிளகு – 6, பூண்டு – 4 எடுத்து அரத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வர கருப்பைக் குற்றங்கள் நீங்கி பெண் மலடு நீங்கும்.
பச்சை இலையை அரைத்து சிறுஎலுமிச்சாங்காயளவு புளித்த மோரில் கொடுக்க எருவாய்க் கடுப்பு குணமாகும்.

15.இலவு – Ceiba pentandra – BOMBACACEAE
இலையை அரைத்து பசும்பாலில் கலக்கி கொடுக்க சிறுநீர் எரிச்சல் நீங்கும்.
பூவை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி 100 மி.லி. காலை மாலை குடிக்கச் செய்ய மலச்சிக்கல், நீர்க்கட்டு நீங்கும்.

16.இலுப்பை – Madhuca longifolia – SAPOTACEAE
இலுப்பை இலையை மார்பகத்தில் வைத்துக் கட்டி வர பால் சுரப்பு மிகும்.
இலுப்பை எண்ணெயை வெதுவெதுப்பாக சூடு செய்து தடவி செந்நீர் ஒற்றடம் கொடுக்க இடுப்பு வலி தீரும்.
10 கிராம் பூவை 200 மி.லி. பாலில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்து வர தாது பெருகும்.

17.இம்பூறல் – Oldenlandia umbellate – RUBIACEAE
இலைச்சாற்றைத் தடவி வர சுர வேகத்தில் காணும் உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல் தீரும்.
வேரை நிழலில் உலர்த்திப் பொடி செய்து, அதனுடன் சிறிதளவு அரிசி மாவு கலந்து அடை செய்து காலை, மாலை சாப்பிட அனைத்து கப நோய்களும் தீரும்.

18.உசில் – Albizia amara – MMOSACEAE
உசிலம் இலையைப் பொடி செய்து எண்ணெய் முழுக்கின் போது தேய்த்துக் குளிக்க உடல் குளிர்ச்சி பெறும்.
இதன் வேர்ப்பட்டை, வெங்காயம், கரியாக்கிய வசம்பு வகைக்கு 10 கிராம் எடுத்து நீரிலிட்டு காய்ச்சி குடிநீராக்கி வேளைக்கு 1-2 தேக்கரண்டி 3 வேளை கொடுக்க குழந்தைகளின் அள்ளு மாந்தம் குணமாகும்.

19.ஒதியன் – Lannaea coromandelica – ANACARDIACEAE
ஒதியன் மரப்பட்டைக் குடிநீரால் புண், புரையோடிய புண்கள் இவற்றைக் கழுவலாம்.
ஒதிய மரத்தின் பிசினைப் பொடி செய்து 400 மி.கி. அளவு கொடுக்க இருமல் நோய் குணமாகும்.

20.உப்பிலாங்கொடி – Pentatropis capensis – ASCLEPIADACEAE
இலையை வதக்கிப் பிழிந்த சாறு – 10 மி.லியை 10 மி.லி தாய்ப்பாலுடன் காலை, மாலை கொடுத்து வர குழந்தைகளுக்குக் காணும் மாந்தம், இரத்தக் கழிச்சல் இவை நீங்கும்.
மாந்தத்தினால் வயிறு உப்பிகாணின் குழந்தைகளின் அரையில் இக்கொடியை கட்ட தீரும்.

 31.கல்யாண முருங்கை – Erythrina indica – CAESALPINIACEAE
இலைச்சாறு 30 மி.லி. 10 நாட்கள் மட்டும் கொடுக்க மாதவிடாய்க்கு முன், பின் காணும் வயிற்றுவலி தீரும்.
இலைச்சாறு – 10 துளி, 10 துளி – வெந்நீர் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க வாந்தியாகி வயிற்றுப் புளிப்பு, கபக் கட்டு, கோழை நீங்கி பசியும் செரிப்புத் தன்மையும் அதிகப்படும்.

32.கழற்சி – Caesalpinia crista – CAESALPINIACEAE
கொழுந்துஇலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வர விரைவீக்கம், விரையழற்சி குணப்படும்.
கழற்சி விதையும், மிளகும் சமஅளவு பொடித்துக் கலந்து 4 கிராம் அளவாக காலை மாலை சாப்பிட காய்ச்சல், குடல்வலி ஆகியவை தீரும்.

33.களா – Carissa spinarum – APOCYNACEAE
களாப் பழத்தை உணவு உண்ட பின்பு சாப்பிட உணவு விரைவில் செரிக்கும்.
தூய்மையான களாப்பூவை நல்லெண்ணெயிலிட்டு பூ மிதக்கும் வரை வெயிலில் வைத்திருந்து வடிகட்டி இரண்டொரு துளிகள் நாள்தோறும் கண்களில் விட்டு வர கண்ணிலுள்ள படலங்கள் மாறும்.

34.கறிவேம்பு – Murraya koenigii – RUTACEAE
கறிவேப்பிலைப் பொடியுடன் சர்க்கரை கலந்து காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர நீர்க்கோவை, சூதக வாய்வு தீரும்.
இலை சிறிதளவு, மிளகாய் இவற்றை நெய்யில் வதக்கி பழம்புளி, வறுத்த உப்பு சேர்த்து துவையலாக்கி முதல் பிடி சோற்றில் நெய் விட்டு பிசைந்து உண்ண குமட்டல், வாந்தி, அசீரணபேதி போன்ற வயிற்றுக் கோளாறு ஆகியவை தீரும்.

35.அவுரி / நீலி – Indigofera tinctoria – PAPILINODEAE
அவுரி இலை, வேர்ப்பட்டை, பொரித்த பெருங்காயம், மிளகு சமன் சேர்த்து சுண்டை அளவு மாத்திரை செய்து 1 நாளைக்கு 3 வேளை கொடுக்க நரம்பு சிலந்தி, கீல்வாதம் தீரும்.
அவுரி இலையைக் கொட்டைப் பாக்களவு அரைத்து 250 மி.லி. வெள்ளாட்டுப் பாலில் கலக்கி வடிகட்டி அதிகாலை 3 நாள் கொடுக்க மஞ்சள்காமாலை தீரும்.

36.கானாவாழை – Commelina benghalensis – COMMELINACEAE
இலையைக் கசக்கி முகப்பருவிற்கு போட விரைவில் அது குணமடையும்.
இலையை அரைத்துக் கட்ட படுக்கைப் புண், மார்புக் காம்பைச் சுற்றி வரும் புண்ணாறும்.
இலைச்சாறுடன் நல்லெண்ணெய் கூட்டி எரித்துப் பக்குவமாக்கி வடிகட்டி கரும்படை, கரப்பான் இவைகளுக்குப் பூச குணமாகும்.

37.கிணற்றுப்பாசான் / வெட்டுக்காயப்பூண்டு – Tridax procumbens –COMPOSITAE
இலையை நீர் விடாது அரைத்து வெட்டுக்காயம் சிராய்ப்பு ஆகியவற்றில் பற்றிட சீழ்ப்பிடிக்காமல் விரைந்து ஆறும்.

38கிரந்தி நாயகம் – Dipteracanthus patulus – ACANTHACEAE
இலையை அரைத்து நகச்சுற்றுக்குப் பூச அவை குணமாகும்.
இலையை மென்றுத் தின்ன தேள், பாம்பு ஆகியவற்றின் நஞ்சு நீங்கும். கடிவாயில் இலையை அரைத்துப் பூசலாம்.

39.கீழாநெல்லி – Phyllanthus amarus – EUPHORBIACEAE
இலையை உப்பு சேர்த்து அரைத்து தடவிக் குளிக்க சொறி, சிரங்கு நமைச்சல் நீங்கும்.
கீழாநெல்லியுடன் சமன் கரிசலாங்கண்ணி சேர்த்து அரைத்துப் பசும்பாலுடன் 45 நாள் சாப்பிட கல்லீரல் பழுது பாண்டு, சோகை தீரும்.
இலைச்சாறு, பொன்னாங்கண்ணி இலைச்சாறு சமன் கலந்து நல்லெண்ணெயுடன் கலந்து காய்ச்சி தலைமுழுக பார்வைக் கோளாறுகள் தீரும்.

40.குப்பைமேனி – Acalypha indica – EUPHORBIACEAE
குப்பைமேனி சமூலச் சூரணத்துடன் நெய் கலந்து காலை, மாலை 40 நாட்கள் கொடுக்க பவுத்திர நோய் தீரும்.
இலையுடன் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சற்று நேரம் கழித்துக் குளிக்க தோல் நோய்கள் தீரும்.
[1/30, 10:33 AM] Erumbur Balaji: 21.ஊசித்தகரை – Cassia tora – CAESALPINIACEAE
இலையை நீரிலிட்டுக் காய்ச்சி 10 மி.லி வீதம் காலை, மாலை கொடுக்க குழந்தைகள் பல் முளைக்குங்கால் ஏற்படும் காய்ச்சல் தணியும்.
விதையைப் புளித்த மோரில் அரைத்துத் தடவ படை, சிரங்கு, ஆறாப்புண் ஆகியவை குணமாகும்.

22.எருக்கு – Calotropis gigantean – ASCLEPIADACEAE
இலையை வதக்கி கட்டிகளுக்குக் கட்ட அவை பழுத்து உடையும்
பூ – 1 பங்கு; மிளகு – 1 பங்கு, கிராம்பு – ½ பங்கு சேர்த்து மிளகளவு உருட்டிக் கொடுக்க கடின இரைப்பு உடனே தணியும்.

23.எழுத்தாணிப் பூண்டு – Launaea sarmentosa – COMPOSITAE
இலைச்சாறுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து பதமாகக் காய்ச்சி உடம்பில் தடவ சொறி, சிரங்கு இவை குணமாகும்.
வேர் – 5 கிராம் பாலில் அரைத்து கலக்கி வடிகட்டி காலை, மாலை உண்டு வர மார்பகம் வளர்ச்சியுறும்.

24.ஓமவல்லி / கற்பூரவல்லி – Coleus aromaticus – LABIATAE
இலைச்சாறுடன் கற்கண்டு சேர்த்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் இருமல். தொண்டைச் சதை வளர்ச்சி குணமாகும்.
இலைச்சாறுடன், சர்க்கரை, நல்லெண்ணெய் இவற்றை நன்கு கலந்து நெற்றியில் பற்றிட தலைவலி நீங்கும்.
இலைச்சாறுடன் நல்லெண்ணெய் கூட்டி எரித்துப் பக்குவமாக்கி வடிகட்டி கரும்படை, கரப்பான் இவைகளுக்குப் பூச குணமாகும்.

25.ஓரிதழ் தாமரை – lonidum suffruticosum – VIOLACEAE
இலையை நாள்தோறும் சிறிதளவு மென்று தின்று பால் அருந்தி வர 40 நாளில் தாது இழப்பு, வெட்டைச்சூடு, பலவீனம் ஆகியவை தீரும்.
இலை, கீழாநெல்லி இலை, யானை நெருஞ்சில் இவை மூன்றையும் 1 பிடி அளவு எடுத்து அரைத்து எருமைத் தயிரில் கலந்து 10 நாட்கள் சாப்பிட நீர்த்தாரை புண், வெள்ளை ஒழுக்கு ஆகியவை தீரும்.

26.கண்டங்கத்திரி – Solanum xanthocarpum – SOLONACEAE
இதன் பழத்தை உலர்த்தி நெருப்பிலிட்டு வாயில் புகைப்பிடிக்க பல்வலி தீரும்.
கண்டங்கத்திரி சமூலத்தைக் குடிநீரிட்டுக் குடிக்க உடலின் நீரேற்றம், மூக்கு நீர் பாய்தல், இரைப்பு இவை தீரும்.

27.கரிசாலை / கரிசலாங்கண்ணி – Eclipta prostrate – ASTERACEAE
கரிசாலை, பூக்காத கொட்டைக் கரந்தை, ஆகியவற்றின் சூரணம் சமன் கலந்து நாள்தோறும் காலை, மாலை ½ தேக்கரண்டி தேனில் சாப்பிட்டு வர இளவயதில் தோன்றும் நரை மாறும்.
மஞ்சள் கரிசாலையைக் கறியாகச் செய்து உண்ண உடல் பொன்நிறம் பெறும். அறிவு தெளிவு பெறும்.

28.ஊமத்தை – Datura metel – SOLANACEAE
இலையை நல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம் ஆகியவை தீரும்.
இலைச்சாறுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி இளஞ்சூட்டில் காதில் விட சீதளத்தால் வந்த காதுவலி தீரும்.
இலையை நீர் விடாது நல்லெண்ணெயில் வதக்கி நாய்க்கடிப் புண்ணில் கட்ட ஆறும்.

29.கருணை – Typhonium trilobatum – ARACEAE
கருணைக்கிழங்கைத் தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி உலர்த்தி தயிரில் 3 நாள் ஊற வைத்து, எலுமிச்சம்பழச்சாற்றால் அரைத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பக்குவமாக பிசைந்து நெல்லி அளவு காலை, மாலை 6 மாதம் சாப்பிட மூலம் தீரும்.

30.கருவேல் – Acacia nilotica – MIMOSOIDEAE
கருவேலம்பட்டைக் குடிநீரைக் கொண்டு வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண், பல்லீறு அழுகல், பல்லாட்டம் ஆகியவை குணமாகும்.
இலையை அரைத்துப் புண்கள் மீது கட்ட விரைந்து ஆறும்.

 41.குமரி / சோற்றுக் கற்றாழை – Aloe vera – LILIACEAE
பெண்ணின் கருப்பைக் குற்றங்கள்
அனைத்திற்கும் இது நன்மருந்தாகும்.
சோற்றை 10 முறை நீரில் அலசி காலையில் சாப்பிட வயிற்றுப்புண், உடல்சூடு, மூலம் தணியும்.
கற்றாழை சோறு – 100 கிராம், பனைவெல்லம் – 100 கிராம், வெள்ளைப்பூண்டு – 25கிராம் எடுத்து இதில் பனைவெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து வடிகட்டி அதனுடன் கற்றாழை சோறு சேர்த்து அடுப்பேற்றி நன்றாகக் கிளறிப் பாகு பதத்தில் வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கிளறிப் பத்திரப்படுத்தவும். காலை, மாலை 5 கிராம் உண்டு வர உடல்சூடு தணிந்து வெள்ளை வெட்டை நீங்கி குழந்தைப்பேறு கிட்டும். வயிற்றுப்புண், மூலம் குணமாகும்.

42.கொட்டைக்கரந்தை – Sphaeranthus indicus – COMPOSITAE
கொட்டைக் கரந்தை சூரணத்துடன் கரிசலாங்கண்ணி சூரணம் சமன் கலந்து தேனில் குழைத்து சாப்பித இளநரை தீரும்.
கொட்டைக் கரந்தைப் பொடி – 5 கிராம் சிறிது கற்கண்டு பொடி கலந்து சாப்பிட வெள்ளை தீரும். நீண்ட நாள் சாப்பிட மூளை, இருதயம், நரம்பு ஆகியவை பலப்படும். கரப்பான் குணமாகும்.

43.கோவை – Coccina grandis – CUCURBITACEAE
1 பிடி இலையை 200 மி.லி. நீரில் சிதைத்துப் போட்டு 100 மி.லியாகக் காய்ச்சி காலை, மாலை குடித்து வர உடல்சூடு, கண்ணெரிச்சல் ஆகியவை தீரும்.
2 பச்சைக் காயை தினமும் சாப்பிட்டு வர மது மேக நோயைத் தடுக்கலாம்.

44.கோபுரந்தாங்கி – Indoneesiela echioides – ACANTHACEAE
இலைச்சாறுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து பதமுறக் காய்ச்சி தலை முழுகி வர தலைமயிர் உதிர்தல் நிற்கும்.
வேரை உலர்த்திப் பொடி செய்து சமன் கற்கண்டு பொடி கலந்து காலை, மாலை ½ தேக்கரண்டி நெய்யில் சாப்பிட்டு வர எலும்பு, நரம்பு, தசை ஆகியவை வலுப்படும்.

45.சத்திச்சாரனை – Trianthema decandra – AIZOACEAE
இலைச்சாற்றை தாய்ப்பாலுடன் கலந்து கண்ணுக்கு மைபோல் தீட்டி வர கண்ணோய் அனைத்தும் தீரும்.
இலையை நெய்விட்டு வதக்கிக் கீரையாகப் பக்குவப்படுத்தி உண்டு வர பசியின்மை, வயிற்றுளைச்சல், வயிற்றுவலி ஆகியவைத் தீரும்.

46.சரக்கொன்றை – Cassia fistula – CAESALPINIACEAE
பூவை வதக்கி துவையலாக்கி உணவுடன் சாப்பிட மலச்சிக்கலும் அகலும்.
சரக்கொன்றைப் புளியை உணவுக்குப் பயன்படுத்தும் புளியுடன் சமன் கலந்து உணவு பாகங்களில் பயன்படுத்த மலச்சிக்கல் தீரும்.

47.சிற்றாமுட்டி – Pavonia zeylaica – MALVACEAE
தாதுக்களின் எரிச்சலைத் தணிக்கும் அருமருந்து.
வேர் – 10 கிராமை 100 மி.லி நீரிலிட்டு 25 மி.லியாகக் காய்ச்சி 2 சிட்டிகை திரிகடுகு சூரணம் சேர்த்து காலை, மாலை 3 நாள் கொள்ள சுரம் தீரும்.

48.சிவனார்வேம்பு – Indigofera aspalathoides – PAPILIONOIDEAE
இலையை அரைத்துப் பற்றிட கட்டிகள் உடையும் அல்லது அமுங்கி விடும்.
செடியை சுட்டு சாம்பலாக்கித் தேங்காய் எண்ணெயில் குழைத்து தடவி வர சொறி, சிரங்கு ஆகியவை தீரும்.

49.சிறுநெருஞ்சில் – Tribulus terrestris – ZYGOPHYLLACEAE
30 மி.லி சமூலசாற்றுடன் மோர் (அ) பால் கொள்ள சிறுநீருடன் இரத்தம் போதல் குணமாகும்.
நெருஞ்சில் விதையைப் பாலில் வேக வைத்து உலர்த்திப் பொடி செய்து கொண்டு காலை, மாலை கொடுத்து வர தாது கட்டும், இளநீரில் சாப்பிட்டு வர கல்லடைப்பு, நீர்க்கட்டு குணமாகும்.

50.சிறுகண்பீளை – Aerva lanata – AMARANTHACEAE
சமூலத்தை நீரிலிட்டுக் குடிநீராக்கி காலை, மாலை சாப்பிட்டு வர சிறுநீரக கற்கள் கரையும்.
சிறுபீளைச்சாறு – 50 மி.லி காலை, மாலை குடித்து வர சூதகவலி தீரும்.

 51.சீந்தில் – Tinospora cordifolia – MENISPRMACEAE
முதிர்ந்த கொடிகளை உலர்த்திப் பொடித்துக் காலை, மாலை பாலுடன் சாப்பிட்டு வர உடல் உரம் பெறும். பனங்கற்கண்டுடன் சாப்பிட மதுமேகத்தால் தோன்றும் கை, கால், அசதி, மிகு தாகம், உடல் மெலிவு ஆகியவை தீரும்.

52.சீமை அகத்தி – Cassia alata – CAESALPINIACEAE
இலையை எலுமிச்சம் பழச்சாறு கலந்து அரைத்துப் பற்று போட கரப்பான், புண், புரைகள் குணமாகும்.
இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மதியம், இரவு என சாப்பிட வண்டுக்கடி, அரிப்பு ஆகியவை தீரும்.

53.சுண்டை – Solanum torvum – SOLANACEAE
சுண்டை வற்றலைக் குழம்பாக்கி உண்ண, ஏப்பம் வயிறு ஊதுதல், வயிற்றுவலி முதலியன போகும்.
காயை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம் இவைகளை சிறிது கூட்டி வறுத்துப் பொடித்து உணவுடன் கொள்ள மூலம், செரியாமை தீரும்.

54.செம்பரத்தை – Hibiscus esculentes – MALVACEAE
பூவை நீரில் ஊற வைத்து வேளைக்கு 30 மி.லி. கொடுக்க சிறுநீர் நோய்கள் தீரும், உடற்கு குளிர்ச்சி தரும்.
அதிகுருதி அழுத்த நோயுள்ளவர்கள் இதன் இதழ்களை தினமும் தின்று வர குருதி சுற்றோட்டம் சீராக அமையும்.

55.தண்ணீர்விட்டான் கிழங்கு – Asparagus racemosa – LILIACEAE
இலைச்சாறுடன் சம அளவு பால் கலந்து பருகி வர உடல் வெப்பம் தணியும்.
கிழங்கைப் பொடித்து தேனில் அல்லது பாலில் இருவேளை சாப்பிட உடல் உரமாகும்.

56.தழுதாழை – Clerodendrum phlomoides – VERBENACEAE
இலையை நீரில் கொதிக்க வைத்துக் குளிக்க வாதவலி அனைத்தும் நீங்கும்.
இலைச்சாற்றை மூக்கால் உறிஞ்ச மண்டைக் குடைச்சல், மூக்கு நீர் பாய்தல் குறையும்.

57.திருநீற்றுப்பச்சிலை – Ocimum basilicum – LAMIACEAE
இலையை அரைத்துப் பூச கட்டி மறையும்
இலையை முகர்வதால் தலைவலி, தூக்கமின்மை ஆகியவை தணியும்

58.துத்தி – Abutilon indicum – MALVACEAE
இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வர இரத்த மூலம், சீழ்மூலம் ஆகியவை தீரும்.
பூவின் சூரணத்துடன் சமன் சர்க்கரை கலந்து ½ தேக்கரண்டி அளவு காலை, மாலை பாலில் கொள்ள காசம், நுரையீரல் கபம் ஆகியவை தீரும்.

59.தும்பை – Leucas aspera – LABIATAE
தும்பைப் பூவை நல்லெண்ணெயில் காய்ச்சி முழுக தலைப்பாரம், நீரேற்றம் தீரும்.
இலையை அரைத்துத் தடவி குளிக்க நமைச்சல், சொறி, சிரங்கு தீரும்.

60.துளசி – Ocimum sanctum – LABIATAE
இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்த சாறு 5 மி.லி காலை, மாலை சாப்பிட்டு வர பசி அதிகரிக்கும்.
துளசி – 50 கிராம், மிளகு – 20 கிராம், இவற்றை மையாய் அரைத்து பயறளவு மாத்திரையாக்கி காலை, மாலை வெந்நீரில் இழைத்துக் கொடுக்க சகலவித காய்ச்சலும் தீரும்.
[1/30, 10:33 AM] Erumbur Balaji: 71.நாய்த்துளசி – Ocimum canum – LABIATAE
இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு தயிரில் கலந்து காலை, மாலை கொடுக்க மூலச்சூடு கணச்சூடு ஆகியவை தீரும்.
இலையை அரைத்துத் தடவிக் குளிக்க சொறி, சிரங்கு ஆகியவை தீரும்.

72.நாய்வேளை – Cleome viscosa – CAPPARACEAE
இலைச்சாற்றை சமஅளவு நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி வடித்துக் காதில் விட்டு வரச் சீழ்வடிதல் தீரும்.
நாய்வேளை இலையைப் பிற கீரைகளுடன் சமைத்து சாப்பிட வயிற்று வாயுவு அகலும், பசி மிகும்.

73.நித்தியகல்யாணி – Catharanthus roseus – APOCYNACEAE
6 பூவை அரைலிட்டர் நீரில் போட்டு காய்ச்சி கால் லிட்டராக வற்ற வைத்து 1 நாளைக்கு 4 வேளை கொடுக்க அதிதாகம், அதி மூத்திரம், மிகுபசி, உடல் பலவீனம் தீரும்.
இலைகளை தேங்காய் எண்ணெயிலிட்டு வெயிலில் காய வைத்து கை, கால் வலிகளுக்கு பயன்படுத்தலாம்.

74.நிலப்பனை – Coruligo orchoides – HYPOZYDACEAE
கிழங்கின் தோல், நரம்பு ஆகியவற்றை நீக்கி, உலர்த்திப் பொடி செய்து 5 கிராம் அளவுக்கு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வர இடுப்புவலி தீரும்.
½ தேக்கரண்டி நிலப்பனைக் கிழங்குப் பொடியை 200 மி.லி பாலில் சேர்த்துச் சர்க்கரை கூட்டி 2 வேளை பருக வெள்ளை, வெட்டை தீரும்.

75.நிலவேம்பு – Andrographis paniculata – ACANTHACEAE
இது காய்ச்சலை அகற்றி நல்ல பசியைக் கொடுக்கும்.
கடைகளில் விற்கும் நிலவேம்பு குடிநீர் சூரணத்தை வாங்கி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிநீராக்கி குடிக்க சகல சுரங்களும் தீரும்.

76.நிலாவாரை – Cassia senna – CAESALPINIACEAE
நிலாவாரை இலைக்குடிநீரை சொறி, சிரங்கு, படை மீது தடவ அவை ஆறும்.
நிலாவாரை இலையைத் துவையலாய் அரைத்து இரவில் உண்ண மலசிக்கல் தீரும்.

77.நீர்பிரமி – Bacopa monnieri – SCHROPHULARIACEAE
இலையை வேக வைத்து அரைத்து மார்பில் கட்டி வர சளி மிகுதியால் வரும் இருமல் குணமாகும்.
இலையை அரைத்துப் பற்றுப்போட வீக்கம் குறையும்.
இலைச் சாறுடன் நெய் சேர்த்து பதமாகக் காய்ச்சி 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை கொடுக்க சித்தபிரமை தீரும்.

78.நீர்முள்ளி – Hygrophilla auriculata – ACANTHACEAE
நீர்முள்ளி சமூலத்தை இடித்து 200 கிராம் அளவு எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டு ½ லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 100 மி.லி வீதம் தினம் 4 வேளை கொடுக்க ஊதிப்பெருத்த உடல் மெலியும்.
நீர்முள்ளி குடிநீரை குடித்து வர அனைத்து சிறுநீரக நோய்களும் குணமாகும்.

79.நுணா – Morninda tinctoria / cictrifolia – RUBIACEAE
குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் தீர நுணாச்சாறு – 1 பங்கும், நொச்சி, பொடுதலை, உத்தாமணி ஆகிய மூன்றின் சாறு – 1 பங்கும் கலந்து 3, 4 வேளை 50 துளிக் கணக்கில் 6 மாத குழந்தைக்கு கொடுக்கவும். 1 வயதுக்கும் மேல் 10-30 மி.லி. வரையும் கொடுக்கலாம்.
இலையை அரைத்துப் பற்றிட இடுப்புவ்லி தீரும்.

 61.தூதுவளை – Solanum trilobatum – SOLANACEAE
இலைச்சாற்றை சம அளவு நெய்யில் காய்ச்சி காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மார்புச் சளி நீங்கும்.
10 கிராம் பூவை தினமும் காய்ச்சி பால், சர்க்கரை கூட்டி 40 நாட்கள் பருக உடல் பலம் பெறும்.

62.தொட்டால்சுருங்கி – Mimosa pudica – MIMOSACEAE
இலையை அரைத்து பற்றுப் போட விரைவீக்கம், மூட்டு வலி, வீக்கம் ஆகியவை தீரும்.
இலையை நீரிலிட்டு கொதிக்க வைத்து ½ மணி நேரம் கழித்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வர சிறுநீரகக் கற்கள் கரையும்.

63.தேள்கொடுக்கு – Heliotropium indium – BORAGINACEAE
இலையைக் கசக்கி தேள் கொட்டின இடத்தில் தேய்க்க நஞ்சு இறங்கி, கடுப்பு தணியும்.
இலைச்சாறு நல்லெண்ணெய் சமன் கலந்து பதமுறக்காய்ச்சி வடித்து காதுகளில் விட்டுவர காதடைப்பு தீரும்.

64.நஞ்சறுப்பான் – Tylophora indica – ASCLEPIADACEAE
இலையை உலர்த்திப் பொடித்து 1,2 கிராம் வெந்நீரில் 3 வேளையாக சாப்பிட்டு வர வியர்வை பெருகும்.
இலையை நன்கு அரைத்து எலுமிச்சங்காயளவு உள்ளுக்குக் கொடுத்து கடிவாயினும் வைத்துக் கட்ட வாந்தியாகி எல்லாவித நஞ்சும் முறியும்.

65.நத்தைச்சூரி – Hispida spermacoce – RUBIACEAE
10 கிராம் வேரைப் பசும்பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டி காலை, மாலை கொடுத்து வர தாய்ப்பால் பெருகும்.
20 கிராம் வேரைச் சிதைத்து குடிநீராக்கி 200 மி.லியாக நாளொன்றுக்கு 3 வேளை கொடுக்க உடம்பைப் பற்றிய எவ்வித நோயும் படிப்படியாகக் குறையும்.

66.நந்தியாவட்டை – Tabernaemontana divaricata – APOCYNACEAE
கண் வலியுடையோர் இதன் பூக்களை கண்ணில் வைத்து ஒரு துணியால் இலகுவாகக் கட்டி உறங்கி வர கண் வலி, கண் எரிச்சல், கண் சிவப்பு மாறும்.
பூவால் ஒற்றடம் கொடுக்க கண் எரிச்சல் நீங்கும்.
வேரை மென்று துப்ப பல்வலி நீங்கும்.

67.நல்வேளை / தைவேளை – Cleome gynandra – CAPPARACEAE
இலைச்சாறு 1 துளி காதில் விட சீழ் வருதல் நிற்கும்.
இலையை அரைத்து பற்றுப் போட சீழ்பிடித்த கட்டிகள் உடைந்து ஆறும்.
இலைகளை அரைத்துச் சாறு பிழிந்து, சக்கையை தலையில் வைத்துக் கட்டி வர தலைபாரம் குணமாகும்.

68.நன்னாரி – Hemidesmus indicus – ASCLEPIADACEAE
பச்சை நன்னாரிவேர் – 5 கிராமை நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், நீர்ச்சுருக்கு ஆகியவைத் தீரும்.
20 கிராம் வேரை ½ லிட்டர் நீரிலிட்டு 200 மி.லியாகக் காய்ச்சி காலை, மாலை சாப்பிட நாட்பட்ட வாதம், பாரிச வாதம் ஆகியவை தீரும்.
நன்னாரி மணப்பாகு கோடைக்கு ஏற்ற குளிர்ச்சியான பானம்.

69.நாகமல்லி – Rhinacanthus nasuta – ACANTHACEAE
இலை அல்லது வேரை மென்று தின்ன பாம்புக்கடி நஞ்சு அகலும்.
இலை அல்லது வேரை எலுமிச்சம்பழச்சாறு விட்டு அரைத்து பற்றுப் போட சொறி, கரப்பான் ஆகியவை தீரும்.

70.நாயுருவி – Achyranthes aspera – AMARANTHACEAE
துத்திக் கீரையை வதக்கி, நாயுருவி விதை சூரணம் – 20 கிராமுடன் கலந்து உணவில் சேர்த்து உண்ண மூலம் அனைத்தும் தீரும்.
நாயுருவி வேரால் பல்துலக்கப் பல் தூய்மையாகும்.

 81.நெல்லி – Phyllanthus emblica – EUPHORBIACEAE
10 கிராம் நெல்லிக்காயை இடித்து ½ லிட்டர் நீரிலிட்டு 100 மி.லியாகக் காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து, 40 மி.லி குடிநீரை 3 வேளை சாப்பிட பித்தம் தணியும்.
இலையை நீரிலிட்டுக் காய்ச்சி வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண் தீரும்.

82.நேத்திரப்பூண்டு – Blepharis maderaspatensis – ACANTHACEAE
200 கிராம் சமூலம் ஒரு துணியில் முடிந்து 400 மி.லி. நல்லெண்ணெயில் போட்டு வேடு கட்டி 15 நாள் வெயிலில் புடம் வைத்து வடிகட்டி காலை, மாலை 2 துளி கண்ணில் விட பார்வைமங்கல், கண்ணெரிச்சல், கண்சிவப்பு, பீளை கட்டல், பார்வைக் குறைவால் வரும் ஒற்றை தலைவலி தீரும்.

80.நொச்சி – Vitex negundo – VERBENACEAE
இலையை தலையணையாகப் பயன்படுத்த மண்டை இடி, கழுத்து, நரம்பு வலி தீரும்.
நொச்சி இலை – 2, 4 மிளகு, 1 இலவங்கம், 4 பூண்டுப்பல் வாயில் போட்டு மென்று சுவைத்துச் சாற்றை மெதுவாக விழுங்கினால் மூச்சுத்திணறல் தீரும்.

83.பிரண்டை – Cissus quadrangularis – VITACEAE
பிரண்டைத் துவையல் செரியாமையை நீக்கி பசியைத் தூண்டும்.
ஓரிரு துளி பிரண்டை சாற்றை காதில் விட்டுவர சீழ்ப்பிடித்தல் தீரும்.

84.பிரம்மதண்டு – Argemone Mexicana – PAPAVARACEAE
இலையை அரைத்துக்கட்டி வர கரப்பான், சொறி, சிரங்கு தீரும்.
பிரம்மத்தண்டு சாம்பலால் பல் தேய்த்து வர பல்லட்டம், பல்சொத்தை, பல் கரைதல் ஆகியவைத் தீரும்.

85.சங்கங் குப்பி – Clerodendrum inerme – VERBENACEAE
இலைச்சாறு விளக்கெண்ணெயில் காய்ச்சி தேக்கரண்டி காலை, மாலை சாப்பிட சொறி, சிரங்கு, கருமேகம் தீரும்.
வேர்ச்சாறு – 5-6 துளி, தாய்ப்பாலில் கலந்து காலை, மாலை கொடுக்க பிறந்த குழந்தைகளுக்கு காணும் செவ்வாப்பு நோய் தீரும்.

86.புரசு – Butea monosperma – PAPILIONOIDEAE
இலையை வதக்கி அடிவயிற்றில் ஒற்றடம் கொடுக்க சிறுநீர்த்தேக்கம் விலகும்.
புரசம் விதைப் பொடி – 300 மி.கிராம், மூன்று வேளையாக, மூன்று நாட்களுக்குக் கொடுத்து நான்காம் நாள் விளக்கெண்ணெய் பேதிக்கு கொடுக்க குடல் புழுக்கல் வெளியேறும்.

87.புங்கு – Pongamia pinnata – PAPILIONOIDEAE
பூவை நிழலில் உலர்த்தி நெய்யில் வறுத்துப் பொடி செய்து, 1 சிட்டிகை காலை, மாலை தேனில் கொள்ள மதுமேகம் தீரும்.
புங்கன் எண்ணெய் எவ்வித புண்களையும் ஆற்றும்.

88.புன்னை – Calophyllum inophyllum – CLUSIACEAE
பட்டைக் குடிநீரால் புண்களைக் கழுவலாம்.
புன்னை விதையை அரைத்து கொதிக்க வைத்து பற்று போட முடக்குவாதம், வாதவலிகள் தீரும்.
மிக அழகிய மலர்களை உடைய மரம்.

89.பூவரசு – Tnespesia populnea – MALVACEAE
பழுப்பை உலர்த்திக் கருக்கித் தேங்காய் எண்ணெயில் கலந்து போடச் சொறி, சிரங்கு கரப்பான் குணப்படும்.
இலையை அரைத்து வதக்கிக் கட்ட வீக்கம் குறையும்.

90.பொடுதலை – Phylla nodiflora – VERBENACEAE
இலையை உளுத்தம் பருப்புடன் நெய்யில் வதக்கி துவையலாக்கி பகல் உணவில் கொள்ள உள்மூலம், இரத்தமூலம் தீரும்.
சமூலச் சாற்றில் சமன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வடித்து வாரம் இருமுறை தலை முழுகி வர கொடுகு தீரும்.

 91.வெற்றிலை – Piper betal – PIPERACEAE

5 மி.லி. வெற்றிலைச்சாறுடன் சமஅளவு தேன் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு காணும் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும்.
வெற்றிலையை மார்பகத்தில் ஒட்டி வைக்க பால்சுரப்பைத் தடுக்கும்.

92.வெள்ளறுகு – Enicostemma axillare – GENTIANACEAE
சமூலத்தை அரைத்து வெந்நீரில் குழைத்து உடம்பில் பூசி 1 மணி நேரம் கழித்துக் குளிக்க சொறி, சிரங்கு தீரும்.
மாதவிடாயின் முதல் 3 நாட்கள் சமூலத்தை அரைத்து எலுமிச்சங்காயளவு குடிக்க கர்ப்பப்பை புழு, மாதவிடாய் கோளாறு தீரும்.

93.விஷ்ணுகிரந்தி – Evolvulus alsinoides – CONVOLVULACEAE
சமூல விழுது 10 கிராம் தயிரில் கொடுக்க இரத்த பேதி, சீதபேதி தீரும்.
சுரத்துக்கான குடிநீரில் சேரும்.

94.மாவிலங்கம் – Cretaeva magna – CAPPARACEAE
இலையை அரைத்துப் பற்று போட அனைத்து வீக்கங்களும் கரையும்.
பட்டை – 1 பங்கு, பூண்டு – ½ பங்கு; மிளகு – ¼ பங்கு அரைத்துக் கொட்டை பாக்களவு காலை வெறும் வயிற்றில் கொடுத்து வர முடக்கு வாதம் நீங்கும்.

95.மூக்கிரட்டை – Boerhavia diffusa – NYCTAGINACEAE
இலையை பொரியல் துவையலாக வாரமிருமுறை சாப்பிட்டு வர காமாலை, சோகை, வாய் நோய்கள் வராமல் தடுக்கலாம்.
இலையை தொடர்ந்து பயன்படுத்தி வர பொலிவும், இளமையும், வசீகரமும் உண்டாகும்.

96.மருதம் – Terminalia arjuna – COMBRETACEAE
மருத இலையை அரைத்து எலுமிச்சங்காயளவு காலை மட்டும் சாப்பிட்டு வர பித்த வெடிப்பு ஆகியவை தீரும்.
பட்டைத் தூளுடன் ஆடாதோடைச்சாறு – 1 தேக்கரண்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கொள்ள நுரையீரல் புண் தரும்.
பட்டைக் குடிநீர் இதய நோய்களை குணமாக்கும்.

97.மகிழ் – Mimusops elengi – SAPOTACEAE
பட்டையைக் கொதிக்க வைத்துக் குடிநீராக்கி வாய்க்கொப்பளிக்க வாய்ப் புண்ணாறும்.
காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்பப் பல்லாட்டம் நீங்கி பல் உறுதிப்படும்.

98.மலைவேம்பு – Melia azadirachta – MELIACEAE
10 மி.லி இலைச்சாற்றைப் பாலில் கலந்து மாதவிலக்கான 3 ஆம் நாள் அதிகாலையில் கொடுத்து வரக் கருப்பைக் குற்றங்கள் நீங்கி குழந்தைப்பேறு கிட்டும்.
இலையையும், பூவையும் அரைத்துப் பற்று போட கடும் தலைவலி தீரும்.
மலைவேம்பாதித் தைலம் கடைகளில் கிடைக்கும்.

99.முடக்கறுத்தான் – Cardiospermum halicacabum – SAPINDACEAE
இலையை அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட உடல்வலி தீரும்.
இலையை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டி வர கீல்களில் உள்ள வாதபிடிப்பு தீரும்.

100.வல்லாரை – Centella asiatica – APIACEAE
இலையை விளக்கெண்ணெயில் வதக்கி நீண்ட நாள் கட்டி வர யானைக்கால் நோய் தீரும்.

திங்கள், 19 பிப்ரவரி, 2018

பெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா...???


பெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா...???
.
இனிமே தினமும் வைத்து கொள்ளுங்கள்...!!!
.
உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன.

ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன.

அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
.
பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
.


பூக்களைச் சூடும் கால அளவு
.
முல்லைப்பூ - 18 மணி நேரம்
அல்லிப்பூ - 3 நாள்கள் வரை
தாழம்பூ - 5 நாள்கள் வரை
ரோஜாப்பூ - 2 நாள்கள் வரை
மல்லிகைப்பூ - அரை நாள்கள் வரை
செண்பகப்பூ - 15 நாள்கள் வரை
சந்தனப்பூ - 1 நாள்கள் மட்டும்
மகிழம்பூ மற்றும் குருக்கத்திப் பூ - சாப்பிடும்போது மட்டும் சூடிக்கொள்ளலாம்.

மந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ - இந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.
.


பூக்களின் பயன்கள்:
.
ரோஜாப்பூ - தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
.
மல்லிகைப்பூ - மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.
.
செண்பகப்பூ - வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.
.
பாதிரிப்பூ - காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.
.
செம்பருத்திப் பூ - தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
.
மகிழம்பூ - தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.
.
வில்வப்பூ - சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.
.


சித்தகத்திப்பூ - தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
.
தாழம்பூ - நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.
.
தாமரைப்பூ - தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.
.
கனகாம்பரம்பூ - தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.
.
தாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ செண்பகப்பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.
.


பூக்களைச் சூடும் முறை:
.
பூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும்.
.
உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது.
.
மணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது.
அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.
.
ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.
.
மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால்
மனம் அமைதி பெற உதவும்.

மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும்.
.
முல்லைப்பூ, வில்வப்பூவை
குளித்த பின்பு சூடலாம்.
.
உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்.
.
பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள்:
.
பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.
.
இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.
.

தலையில் பூ வைப்பது,
மனமாற்றத்துக்கு உதவும்.
.
ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.
.
மனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது.


.
பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது.

மனமாற்றத்துக்கு உதவுகிறது.
.
மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.

#சும்மாவா சொன்னாங்க பெரியவங்க பெண்களை  #பூவைன்னு

முடி உதிர்வைத் தடுக்கும் உணவுகள்...


முடி உதிர்வைத் தடுக்கும் உணவுகள்...

ஒருவருக்கு அழகைக் கூட்டுவதில் முக்கியமானது தலைமுடி. ஆரோக்கியமான, அடர்த்தியான கூந்தல் வேண்டும் என ஆசைப்படாதவர்கள் யாருமில்லை. அதற்காகவே கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பார்த்து,
கண்ட ஷாம்பூக்களைப் பயன்படுத்துகிறோம் . ஆனாலும், பலருக்கு முடி உதிர்வது குறைந்திருக்காது; சிலருக்கு ஆசைப்பட்டபடி அடர்த்தியான கூந்தலும் வளர்ந்திருக்காது. என்ன காரணம்?


முடி பராமரிப்புக்காக சந்தையில் விதவிதமான எண்ணெய்கள், ஷாம்பூக்கள் கிடைக்கின்றன. அவை வெளிப்புறப் பராமரிப்புக்கு உதவுமே தவிர, உள்ளிருந்து ஊட்டமளிக்காது. கூந்தலின் ஆரோக்கியத்துக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த உணவை உண்டால்தான் பலன் கிடைக்கும்.
உறுதியான கூந்தலுக்கு வைட்டமின் ஏ, சி, இ, பி5, பி6, பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், புரதம், கொழுப்பு அமிலங்கள் மிக அவசியம். இவை முடி உதிர்வை தவிர்க்கவும், நம் கூந்தலை ஆரோக்கியமாகவும் மாற்றக்கூடியவை. எனவே இந்த சத்துக்கள் எந்தெந்த உணவுகளில் உள்ளன; எந்ததெந்தச் சத்துக்கள் முடி வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் அவசியம்; எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் முடி உதிர்வைத் தவிர்க்கலாம் என்பதைப் பார்க்கலாம்.


1. முட்டை:
முட்டையில் புரோட்டீன், வைட்டமின் பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இவை முடி வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கக்கூடியவை. முட்டையில் உள்ள வெள்ளைப் பகுதியில் ‘அல்புமின்’ என்ற புரதம் உள்ளது. அது கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதில் முடி உதிர்வைக் கட்டுபடுத்தும் பயோட்டின் என்கிற வைட்டமினும் உள்ளது.
2. பீன்ஸ்:
பீன்ஸில் கறுப்பு பீன்ஸ், கிட்னி பீன்ஸ், நேவி பீன்ஸ், பின்டோ பீன்ஸ், சோயா பீன்ஸ் எனப் பல வகைகள் உள்ளன. இந்த பீன்ஸ் வகைகளில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி, சி மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைவாக உள்ளன. இவை தலைமுடிக்கு நல்ல உறுதியையும் வளர்ச்சியையும் கொடுக்கும். மேலும், முடி உதிர்வைக் கட்டுப்படுத்தக்கூடிய இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. குறிப்பாக கிட்னி பீன்ஸ், சோயா பீன்ஸ், கறுப்பு பீன்ஸ் ஆகியவை கூந்தல் அடர்த்தியாக வளர உதவி புரிகின்றன.

3. பசலைக் கீரை:
பசலைக் கீரையில் அதிகளவு இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, புரதம் உள்ளன. முடி உதிர்வுக்கு ஒரு முக்கியக் காரணமான இரும்புச்சத்து குறைபாட்டுக்கு தீர்வாக இது இருக்கிறது. மேலும், தலையில் உள்ள எண்ணெய்ச் சுரப்பியைத் தூண்டி, முடிக்கு இயற்கையான கண்டிஷனராகச் செயல்படுகிறது. இதில் உள்ள மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், ஒமெகா 3 கொழுப்பு அமிலங்கள் தலை முடிக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பதோடு, முடிக்கு நல்ல பளபளப்பையும் தரக்கூடியவை.
4. ஓட்ஸ்:
ஓட்ஸில் வைட்டமின் பி-யும் தாதுஉப்புக்களும் நிறைவாக உள்ளன. மெலனின் என்ற நிறமி, முடிக்கு நிறமளிக்கக் கூடியது. ஓட்ஸ்சில் உள்ள சத்துக்கள் மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்கின்றன. முடி வளர்ச்சிக்குத் தேவையான பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் ஆகிய சத்துக்கள் ஓட்ஸில் உள்ளன. இவை முடி வேகமாகவும் கறுமையான நிறத்திலும் வளரத் தேவையான சத்துக்கள்.
5. சர்க்கரை வள்ளிக்கிழங்கு:
வறட்சியான சருமம், முடி, பொடுகு போன்றவை வைட்டமின் ஏ குறைபாட்டாலும் வரக்கூடியவை. இதில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால், செல் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், புரதம், தாமிரம், இரும்புச்சத்தும் உள்ளன. இவை, முடி கொட்டுவதைத் தவிர்க்க உதவுவதுடன், முடிக்கும் சருமத்துக்கும் ஆரோக்கியத்தைத் தருகின்றன.


6. சூரிய காந்தி விதைகள்:
சூரியகாந்தி விதைகள் அதிக ஆற்றல் தரக்கூடியது. நல்ல சுவையுள்ளது; இதை மற்ற பருப்புகள்போலவே மென்று தின்னலாம். சூரியகாந்தி விதைகளில் துத்தநாகம், மக்னீசியம், பையோட்டின், வைட்டமின் பி, இ, புரோட்டீன், இரும்புச்சத்து, பொட்டாசியம், தாமிரம், கால்சியம், செலினியம் போன்ற தலைமுடியைப் பாதுகாக்கும் ஊட்டச்சத்துகள் உள்ளதால் முடி இழப்பை தடுப்பதோடு, தலைமுடியை வளமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றன.
7. கேரட்:
வைட்டமின் ஏ உள்ளதால் முடியோடு சேர்த்து, கண்களுக்கும் நல்லது. தோல் மற்றும் முடியை பாதுகாக்கும்ம் தன்மை இதற்கு உண்டு. கேரட்டில் அதிக அளவு பீட்டாகரோட்டின் சத்துக்கள் உள்ளன. இவை ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்குத் தூண்டுகின்றன. தலையில் உள்ள எண்ணெய் சுரப்பியைத் (சீபம்) தூண்டி, தலையில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படுகிறது.


8.நட்ஸ் & டிரைஃப்ரூட்ஸ்
இவற்றில் அதிக அளவு துத்தநாகம், பயோட்டின், புரோட்டீன், இரும்புச்சத்து உள்ளன. குறிப்பாக, புரோட்டீன் தலைமுடிக்கு நல்ல உறுதியையும் வளர்ச்சியையும் கொடுக்கும். முடி உலர்ந்துபோகாமல் தடுக்கும். ீ பாதாம், பீநட்ஸ், வால்நட், முந்திரி ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவை முடிக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும். முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும். தோலுக்கு நல்ல நிறத்தையும் முடிக்கு நல்ல பளபளப்பையும் தரக்கூடியவை. நன்றி விகடன்.

முடி வளர மற்றும் முடி கொட்டுவதை தடுக்கும் வழிகள்


முடி வளர மற்றும் முடி கொட்டுவதை தடுக்கும் வழிகள்

முடி கொட்டுபவர்களுக்கு என்னதான் முடிக்கு பராமரிப்பு செய்தாலும் உள்ளே உட்கொள்ளும் சத்தான முக்கியமாக இரும்பு சத்துள்ள உணவுகள் மூலமாகவே நல்ல பலன்கள் கிடைக்கும்.

பெண்கள் முக்கியமாக வெளிநாட்டில் வசிக்கும் மற்றும் புதிதாக குழந்தை பெற்றவர்களுக்கும் முடி கொட்டுவது என்பது பொதுவான பிரச்சனை.எல்லோருக்கும் வெளிநாட்டில் முடி கொட்டுகிறது என்பார்கள்.
நான் படிக்கும் போதும் என் பிரண்ட்ஸ் புலம்புவார்கள்.சிலருக்கு முக்கியமாக பாராஷூட் ஒத்துக்கொள்ளாது.ஆனாலும் அதைப்பற்றி தெரியாமல் நான் சுத்தமான எண்ணெய்தான் உபயோகிக்கிறேன் ஆனாலும் கொட்டுகிறது என்பார்கள்.

முக்கியமான ஒன்று,அதிக வாசனை உள்ள எதுவும் சருமத்துக்கோ, தலைக்கோ நல்லதல்ல. தேங்காய் எண்ணெய் உபயோகப்படுத்தினால் முடிக்கு மிகவும் ஏற்றது.மேலும் இதனால் முடிக்கு ஒவ்வாமை ஏற்படாது.இதைவிட சிறந்தது வீட்டில் தயாரிக்கும் தேங்காய் எண்ணேய்.அதற்காக வீட்டில் தென்னை மரம் வளர்க்க முடியுமா என்று கேட்காதீர்கள்.நாம் கடையில் வாங்கும் ஒரு தேங்காயை கொண்டே வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம்.செய்முறையை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.எண்ணெய் தேய்ப்பதற்கு முக்கிய காரணம் எண்ணெய்யை தேய்க்கும் போது தலையில் அழுத்தி தேய்ப்பதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.முடி வளர அதுவும் அவசியம்.எண்ணெய்யை வெளியில் தேய்த்தாலும் அது வேர்க்கால்களில் ஊடுருவி உள்ளே செல்லும்.அதனால் தான் சில எண்ணெய்களை,கிரீம்களை முடியில் தேய்க்கும் போது முடி கொட்டி விடுகிறது.

என்னதான் முடி வளர பரம்பரை ஒரு காரணம் என்றாலும் நாம் முயன்றால் கொஞ்சம் வளர்ச்சியை கொண்டு வரலாம் அல்லது இருப்பதையாவது காப்பாத்தலாம்.இரும்பு சத்துள்ள உணவு சாப்பிடுவது மிக அவசியம்.ஒரு நாளைக்கு ஒரு கட்டு கீரையை தனியாக நீங்கள் மட்டும் சாப்பிடுங்கள்.இதனால் சாதம் எடுத்து கொள்ளும் அளவும் குறையும்.உடம்பும் குறையும் எந்த கஷ்டமும் இல்லாமல். மலேஷியாவில் கீரையை மிக எளிதாக சமைப்பார்கள்.கீரை இல்லாமல் அவர்கள் உணவு இல்லை.ஒரு ஸ்பூன் எண்ணெய்யில் 3 பல் பூண்டுகளை அரிந்து போட்டு வதக்கி,கீரையை போட்டு வதக்கி 1 சிட்டிகை உப்பு போட்டு ஒரு தட்டு வைத்து மூடி 3 நிமிடம் கழித்து இறக்கவும்.So Simple.
இதைவிட அனைவருக்கும் உகந்த மருந்து பேரிட்சை பழம்.குழந்தை பிறந்தவுடன் சிலருக்கு மிகவும் அதிகமாக முடி கொட்டும்.அல்லது புது ஊரில் குடியேறும் நிறைய பேருக்கு இந்த பிரச்சனை உண்டு.தினமும் 10 பேரிட்சை பழத்தை சாப்பிடுங்கள்.முடி கொட்டுவது நிற்கும் வரை சாப்பிடுங்கள்.அப்படியே சாப்பிட பிடிக்காட்டி பாலில் நன்றாக ஊற வைத்து மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் போல சாப்பிடுங்கள்.எனக்கு தெரிந்த வரையில் இது நிச்சயம் பலன் தரும்.இதில் முக்கியமான ஒன்று எந்த இரும்பு சத்துள்ள உணவை அதிகம் சாப்பிட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும்.எனவே மற்ற உணவுகளை அதற்கு தகுந்தாற்போல் சாப்பிடுங்கள்.வாழைப்பழம்,தயிர்,கொய்யாப்பழம் முதலியவற்றை உடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆண்களுக்கு முக்கியமான ஒன்று,என்னதான் முடி கொட்டுவதற்கு பரம்பரை ஒரு காரணமென்றாலும் நீங்கள் முடியை பராமரிக்கும் விதமும் ஒரு காரணம்.தினமும் ஷாம்பூ போட்டு குளிப்பது,அதுவும் மிக அதிகமா உபயோகப்படுத்துவது,தலை குளித்தால் சரியாக துவட்டாமல் இருப்பது,சுடு தண்ணீரில் குளிப்பது,அதிகம் தலைக்கு தொப்பியை உபயோகப்படுத்துவது(புதிதாக ஹெல்மேட் வேறு),தலைக்கும் வியர்த்தால் அப்படியே துடைக்காமல் விடுவது,வாரம் ஒரு முறை கூட தலையில் எண்ணெய் தேய்த்து விடாமல் இருப்பது அல்லது மசாஜ் செய்து விடாமல் இருப்பது,லேசாக முடி கொட்டினாலும் உடனே கண்டதையும் வாங்கி உபயோகிக்கத் துவங்குவது என்று இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.தினமும் ஷாம்பூ போடாதீர்கள்.இரண்டு முறை போதும்.அதுவும் மிகவும் மைல்டான ஷாம்பூ பயன்படுத்துங்கள்.தலைக்கு தனித் துண்டு உபயோகியுங்கள்.Anti Dandruff ஷாம்பூ அடிக்கடி உபயோகிக்காதீர்கள்.வாரம் ஒரு முறை போதும்.வாரம் ஒரு முறை தலையில் எண்ணெய் தேய்த்து குளியுங்கள்.ஆண்கள் வெளியில் அதிகம் செல்வதால் மண்,தூசும் ஒரு காரணம்.வெளியில் சென்றுவிட்டு வந்தால் தலையை நன்கு உலர விடுங்கள்.தூங்கும் முன் தலையை மெதுவாக அழுத்தி மசாஜ் செய்து விடுங்கள் அல்லது பிரஷ்ஷால் வாரி விடுங்கள்.தலையணை உறையை அடிக்கடி புதுசாக மாற்றுங்கள்.ஒரு முறை பொடுகு வந்து போக்குவதற்கு ட்ரீட்மெண்ட் எடுத்தால் அன்றே சீப்பு,தலையணை உறையை புதிதாக அல்லது துவைத்து உபயோகியுங்கள்.
இப்படி செய்தால் முடிக்கொட்டுவது நிற்கும்.


முடி உதிர்வது என்பது பெண்களுக்கு மட்டுமேயான பிரச்சனை அல்ல. பல ஆண்களும் இன்று வலுக்கு தலையுடனே வலம் வருகிறார்கள். காலம் கடந்த பின் சூரியன் நமஷ்காரமா என்று அவர்கள் கண்டு கொளவதுமில்லை.
ஏன் இந்த முடி உதிரும் பிரச்சனையை முன்கூட்டியே சரி செய்ய முடியாதா ? என்றால் கண்டிப்பாக கட்டுப்படுத்த முடியும். அதற்கு சற்று நேரம் ஒதுக்கி நம் முடியை பேனிக்காக்க வேண்டும். இவ்வாறு, தன் முடிக்காகவும், முக அழகிற்காகவும் இளம் பெண்கள் சற்று அதிகமாகவே நேரத்தை ஒதுக்கிறார்கள். ஆனாலும், உதிரும் மயிர்களை கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை என்று, வித விதமான எண்ணெய்களை உபயோகிப்பார்கள். அதிலும் , விளம்பரத்தில் வரும் பொருட்களுக்கே முன்னுரிமையும் வழங்குவர். ஆண்கள், ஆனால் அப்படி அதிகப்படியான நேரத்தை தன் முடிக்கு / தலைக்கு ஒதுக்குவதும் இல்லை, தடுக்க வழிமுறையும் தேடுவதும் இல்லை. பின்னர், அதிகப்படியான முடிகள் தன் தலையில் இல்லை என்ற பின்னரே ஒடுவர் என்ன செய்வதென்று.
முடி உதிர்வது என்பது ஒர் பரம்பரை வியாதியும் கூட. இதை நாம், நம் ஊரில் உள்ள ஒரு சில குடும்பத்தை வைத்தே தெரிந்து கொள்ளலாம். தாத்தாவும் வலுக்கு , அப்பனுக்கும் வலுக்கு , இன்று பயனுக்கு பாதி முடிய காணல …
ஆண்களுக்கு முடி உதிர்வது என்பது, பெரும்பாலும் உச்சம் தலை வலுக்கு அல்லது முன் தலை வலுக்காக சென்று முடியும். ஆனால் பெண்களுக்கு அப்படி வலுக்கு தலை அளவிற்கு செல்வது இல்லை, குறைந்து கொஞ்சமாக இருக்கும் (அதைப் பார்த்து ஒர் நல்ல வார்த்தை சொல்லுவாங்க-**)…. சிலர் வெளிப்பார்வையை தடுக்க சவரி முடியைக் கொண்டு கொண்டை போட்டுக் கொள்வர்.
ஆனால் , ஆண்கள் ஆங்கில மருத்துவப்படி தன் தலைகளில் செயற்கை முடிகளை நட்டிக் கொள்கின்றனர். டோப்பாவும் சிலர் பயன் படுத்தி வருகின்றனர் என்றாலும் பெரும்பான்மையானவர் செலவற்ற தொப்பியையே பயன் படுத்தி வருகிறார்கள்.
ஒரு பெண்ணின் அழகை மேலும் கூட்ட இம்முடியும் ஒரு காரணியாகவே அமைந்துள்ளது. அப்படி இரு பாலருக்கும் முக்கியாமான அழகுக் காரணியாய் அமைந்த முடியை இழக்காமல் தடுக்க என்ன செய்யலாம்….
ஆங்கில மருத்துவ முறையில் பல மருந்துகள் வந்தாலும் அதை நம் பெண்கள் விரும்புவதில்லை. பெர்ம்பான்மையானவர் நமது தமிழ் இயற்கை சித்த வைத்திய முறையையே பயன்படுத்தி வருகின்றனர்.
முடி உதிர்வது என்பது ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படிகிறது என்றாலும் அதனை முழுவதுமாக தடுக்க சரியான ஆங்கில மருந்து இன்றளவும் இல்லை.
இங்கே சில சித்த மருத்துவ குறிப்புகளை உங்களின் தலைக் கூந்தல் முடி உதிர்வதனை மெல்ல தடுத்து வளர்க்க எழுதுகிறேன்:
1. முடி வளர : முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதை, மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து வர முடி வளரும்.
2. சொட்டைத் தலையில் முடி வளர : பூசனி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கிய சாறு தலையில் தடவிவர முடி வளரும்.
3. வழுக்கைத் தலையில் முடி வளர : கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும், முடியும் வளரும்.
4. முடி இல்லாமல் சொட்டையாக இருக்கும் இடத்தில் முடி வளர நேர்வளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து பசுநீர் விட்டு மைய அரைத்து தடவாலாம்.
5. முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க பிஞ்சு ஊமத்தின் காயை அரைத்து பூசினால் புது முடி முளைக்கும்.
முடி உதிர்வதை தடுக்க வேப்பிலையை நன்கு வேகவைத்து மறுநாள் குளிக்கும்போது அந்த நீரைக் கொண்டு அலசினால் முடி கொட்டுவது நின்று விடும்.
தலையில் உள்ள சொட்டை மற்றும் வழுக்கை மறைய இரவில் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி செம்பருத்திப் பூவுடன் கலந்து அரைத்து அந்தச்சாறை மேற்குறிப்பிட்ட இடங்களில் தடவினால் தலைமுடி வளர வாய்ப்பு உண்டு
தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்து நல்லா கலக்கி தலையில் தேய்த்து மஜாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இப்படி செய்தாலும் முடி நல்லா செழித்து வளரும். முடி கொட்டுவதும் நிற்கும்


அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, கறிவேப்பிலை, கற்பூரவல்லி, வெந்தயக்கீரை இந்த ஐந்த இலைகளையும் தலா ஒரு கப் எடுத்து, அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை ஒரு கப் தேங்காய் எண்ணெயில் போட்டு பச்சை நிறம் மாறாமல் காய்ச்சி இறக்கிவிடுங்கள்.
இதை ஒரு பாட்டிலில் சேமித்து ஒருநாள் வைத்திருந்தால் தெளிந்து விடும். தெளிந்த எண்ணெயைத் தனியாகப்பிரித்து சேமியுங்கள். அதை வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் தேய்த்து, சீயக்காய் போட்டு அலசினால்… கூந்தல் உதிர்வது நின்று விடும். அது எந்தக் காரணத்தினாலும் உதிர்ந்தாலும் தடுத்து நிறுத்த வேண்டிய வேலையை இந்தக் கீரைத் தைலம் பார்த்துக் கொள்ளும்.
சரியாகச் சாப்பிடாமல் ரத்த சோகையால் முடி கொட்டுகிறது என்றால்…. அதை அரைக்கீரை நிவர்த்தி செய்துவிடும். இந்தத் தைலத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் கறிவேப்பிலை… இளநரைக்கு தடா போடும். உடல் உஷ்ணத்தால் முடி கொட்டிக் கொண்டிருந்தால் அதை தடுத்து நிறுத்தும் வேலையை பொன்னாங்கண்ணி பார்த்துக் கொள்ளும்.
பொடுகு அரிப்பினால் முடி வளர்வது தடைபட்டால் வெந்தயக்கீரை அரை விவர்த்தி செய்வதோடு… மிருதுவாகவும் மாற்றி வைக்கும். உணவு பழக்கத்தாலும் முடி உதிர்வதுண்டு…. இதன் காரணமாக முடி உதிராமல்….. கட்டுக்குள் கொண்டு வர கற்பூரவல்லி உதவும்.