சனி, 30 நவம்பர், 2019

மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை


 மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை

☔ *தற்போது மழைகாலம் என்பதால்  முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்து கொள்ளுங்கள்...*

☔ *மழையினால் மின்தடை ஏற்படலாம் எனவே நீர் மோட்டர் போட்டு நீர் தொட்டியில் உடனுக்குடன் நீர் நிரப்பி வைத்து கொள்ளுங்கள்*


☔ *மின்சாரம் இருக்கும்போது செல்போன்களை முழு சார்ஜ் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்*

☔ *செல்போனை அவசர உபயோகத்துக்கு மட்டும் பயன்படுத்துங்கள் பாட்டுக்கேட்பது, வீடியோ அல்லது பேஸ்புக் பார்ப்பது போன்ற விஷயங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்*


☔ *இன்வர்ட்டர் உள்ளவர்கள் அவசர தேவைக்கு மட்டும் இன்வர்ட்டர் உபயோகித்து கொள்ளுங்கள்*


☔ *பிஸ்கட்*

☔ *பால்*

☔  *அவசர மாத்திரைகள்*

☔ *தண்ணீர் கேன்*

☔ *பேட்டரி செல்கள்*

☔ *மெழுகுவர்த்தி*

☔ *காய்கறிகள்*

☔ *மளிகை சாமான்கள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்*

☔ *குடைகளையும் ரெயின்கோட்டையும் தயாராக வைத்திருங்கள்*

☔ *குழாய் தண்ணீரைப் பயன்படுத்துவோர் காய்ச்சிப் பயன்படுத்துங்கள்*

☔ *கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் மிகவும் கவனமாக ஓட்டவும்*

☔ *இடி மின்னல் நேரங்களில் டி.வி பார்க்காதீர்கள்*

☔ *பழைய சுவர் அருகில் இருக்காதீர்கள்*

☔ *மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் எனவே எச்சரிக்கையுடன் நடக்கவும்*

☔ *மழை நீர் தேங்கி திடீர் பள்ளம் ஏற்படும் எனவே ஜாக்கிரதை*


100ஆண்டுகள்_வாழும்_ரகசியம்_முடிந்தவரைகடைபிடியுங்கள்...


100ஆண்டுகள்_வாழும்_ரகசியம்_முடிந்தவரை கடைபிடியுங்கள்...

*🏆அதிகாலையில் எழுபவன்.*
*🏆 இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்.*
*🏆 முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்.*
*🏆 மண்பானைச் சமையலை உண்பவன்.*
*🏆 உணவை நன்கு மென்று உண்பவன்.*
*🏆 உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்.*
*🏆 வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன்.*
*🏆கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன்.*
*🏆 மலச்சிக்கல் இல்லாதவன்.*
*🏆 கவலைப்படாத மனிதன்.*
*🏆 நாவடக்கம் உடையவன்.*
*🏆 படுத்தவுடன் தூங்குகிறவன்.*
*🏆எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும்.*
*🏆 தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன்.*
*🏆 கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன்.*
*🏆 கற்பு நெறி தவறாது வாழ்பவன்.*
*🏆 மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன்.*
*🏆 ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன்.*
*🏆 வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன்.*
*🏆 இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன்.*
*🏆தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன்.*
*🏆 உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன்.*
*🏆 வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன்.*
*🏆 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன்.*

 *மேற்கண்ட முறைகளை கடைபிடிப்பவன் 100 ஆண்டுகள் இவ்வுலகில் நோயின்றி வாழ்வான்...*


வியாழன், 28 நவம்பர், 2019

#திருமணம்_என்ற_சொல்லின்_விளக்கம்


#திருமணம்_என்ற_சொல்லின்_விளக்கம்:

நம் #முன்னோர்கள் எத்துணை #விவரமானவர்கள்..!!
=============================

திருமணம் என்ற சொல்லின் உட்பொருள் மணம்.மணம் மலரினின்று தோன்றுவது.திரு என்பது
இங்கு அடைமொழி.மணத்தை நுகர்வோன் மணமகன்.மலராக மணமகள் குறிக்கப்படுவது மரபு.

#தாலி:
=====

தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன்
மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்கு தாலி என்ற பெயர் வந்தது.தாலமாகிய பனை ஓலையினால்
செய்தது என்பது இதன் பொருள்.பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க
உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப்பொன்னால் செய்து அணிந்துகொண்டனர்

#அருகு-மணை எடுத்தல்:
==================

தாலிகட்டிய பின்பு வயதும் ஒழுக்கமும் முதிர்ந்த பெரியோர்கள் மணமக்களுக்கு நல்வாழ்த்துக் கூறுவர்.முற்காலத்தில் அருகம்புல்லை மணமக்கள்மீது தூவி ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம்சூழ
வாழ்வீர் என்று வாழ்த்துவர்.

"அறுகெடுப்பார் அயனும் அரியும்"என்பது திருவாசகம்.இதன் உட்பொருள்
அருகம்புல் படர்கின்ற இடம் எங்கும்
வேரூன்றி நிலைபெறும்.மழையின்றி மேல்பாகம் வரண்டாலும் மழைபெய்தால் மீண்டும் தழைத்து
வளரும்.இத்தகைய அருகுபோன்று வாழ்வின் இடையில் வருகின்ற வறுமை போன்ற துன்பச் சூழலில் அழிந்துபோகாமல் ஆண்டவன் அருள்நீரால் எத்தகைய துன்பச் சூழலையும் தாங்கிப் புத்துணர்வுடன் தளிர்த்து மீண்டும் செழிப்புடன் வாழ்வாயாக என்பது இதன் கருத்தாகும்.

பிற்காலத்தில் அருகுதூவி வாழ்த்துவதற்குப் பதில் மஞ்சள் கலந்த பச்சரிசியைத் தூவும் வழக்கம் வடநாட்டு மக்களின் தொடர்பால் வந்த பழக்கமாகும். அருகைத்தேடும் சிரமம் இல்லாமல் மஞ்சள்
அரிசியைத் தூவுதல் சுலபமானதால் மக்கள் எளிதாக இதைப் பின்பற்றினர்.

ஆயினும் மணமக்கள் மீது மலர்தூவி வாழ்த்துவதே சிறப்பான முறையாகும்.

#முகூர்த்தக்கால் நடுதல்:
========================

முகூர்த்தக்கால் திருமணப் பந்தலின் வடகிழக்கு மூலையில் நடவேண்டும். வடகிழக்கு மூலையை "ஈசானதிசை"எனப் போற்றுவர் பெரியோர்.ஈசானம் சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசை. நடைபெறப்போகும் திருமணம் இறை அருளோடு கூடி மணமக்கள் இன்புற்று வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.

#அரசாணிக்கால் நடுதல்:
========================

மணவறைக்கு முன்னால் அரசாணிக்கால் நடுதல்.அதாவது அரச மரத்தின் கிளையையும்
பேய்க்கரும்பையும் சேர்த்து நடுதல் அரசாணிக்கால். இந்திரன் கற்பக மரமாகக் கொள்ளப்படுகிறான். மரங்களில் சிறந்தது அரசு. அதனால்தான் அதற்கு அரசு என்று பெயர் வைத்தனர். போகியாகிய
இந்திரனை அதில் எழுந்தருளச்செய்து வழிபாடு செய்யப்படுகிறது. மணமக்கள் போகியாகிய இந்திரனைப்போல வாழவேண்டும் மற்றும் அரசமரத்தின் பழங்கள் தித்திப்பு உடையன. பேய்க்கரும்பு கசப்புடையது.
நம் வாழ்வில் இன்பமும் துன்பமும்,விருப்பான செயல்களும் வெறுப்பான செயல்களும் கலந்தே வருவன. இவை இரண்டையும்
சமமாகக்கொண்டு வாழ்க்கையில் சோர்ந்துபோய்விடாமல் கடமைகளைப் பற்றின்றிச்
செய்து காலத்தை வென்று நிமிர்ந்து வாழ்வீர்களாக என்று அர்த்தமாகும்.

மணமக்கள் #கிழக்குநோக்கி அமர்தல்:
============================

கிழக்கும் வடக்கும் உத்தம திசை என்று போற்றப்படுவன.உலக வாழ்விற்கு இரு
கண்கள் போன்று ஞாயிறும் மதியும் தோன்றி உயர்ந்து பல உயிர்களுக்கும் நலம் பயப்பன போன்று உங்கள் வாழ்வு உயர்ந்து சிறந்து நின்று பல்லோருக்கும் பயன்பட நீங்கள் வாழவேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.கிழக்கு இந்திரன் திசை. இந்திரன் போகி. அவனைப்போன்று மணமக்கள் போகத்தை நுகர்தல் வேண்டும் என்பதாகும்.

#திருமண வேள்வி:
==============

அத்தி,ஆல்,அரசு,மா,பலா முதலிய மரங்களின் உலர்ந்த சுள்ளிகள் கொண்டு தீ வளர்த்துப் பொங்கழல்
வண்ணனாகிய இறைவனை எழுந்தருளச் செய்து வணங்கி வாழ்க்கை வளம் பெற வேண்டுதல்
வேண்டும்.மேற்கண்ட சுள்ளிகளுக்குரிய மரங்கள் தம் வாழ்நாள் முழுவதும் பல்லோருக்கும் பயன்பட்டுத்
தாம் எரிந்து மறையும்போதுகூடத் தெய்வச் சுடரை எழுப்பி மக்கள் வாழத் திருமணத்தைக்கூட்டி வைப்பதுபோல் மணமக்களின் வாழ்க்கை தங்கள்
சுயநலத்திற்காக மட்டுமின்றிப் பல்லோருக்கும் பயன்பட்டு சுழல் ஓம்பலுக்கும் பயன்படும் குச்சிகள் போல இறுதியில் இறை அருளுடன் ஒன்றி நிறைவு எய்துவதாக வேண்டும் என்பது கருத்தாகும்.

#பாலிகை இடுதல்:
=============

நவதானியங்களைக் கொண்டு பாலிகையிட்டு வளர்த்து மணவறையின் முன்பு வைப்பது பாலிகை இடுதல் எனப்படும். பாலிகை எட்டு மங்கலப்பொருள்களில் ஒன்று.அதில் நவ தானியங்களும் நன்கு
வளர்ந்து நாட்டுக்கு நலம் பயப்பது போல உங்கள் வாழ்வு சிறந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நலன் பயப்பதாக
இருத்தல் வேண்டும் என்பது கருத்தாகும்.

#ஆறு குணங்கள்:
=============

1.உண்மை உரைத்தல்.
2.தர்மம் செய்தல்.
3.சோம்பல் தவிர்த்தல்.
4.பொறாமை விடுதல்.
5.பொறுமை கொளல்.
6.தைரியம் பேணல்.

#பதினாறு பேறுகள்:
===============

1.நன்மக்கள்.
2.செல்வம்.
3.அழகு.
4.நோயின்மை.
5.இளமை.
6.கல்வி.
7.வாழ்நாள்.
8.நல்வினை.
9.பெருமை.
10.துணிவு.
11.வலிமை.
12.வெற்றி.
13.நல்லுணர்வு.
14.புகழ்.
15.நுகர்ச்சி.
16.நல்ல நண்பன்.

#மஞ்சள்,#மருதாணியின் சிறப்பு:
=======================

1.குளிக்கும்போது தாலிச்சரட்டில் மஞ்சள் பூசுவதால் கழுத்து மற்றும் மார்புப்பகுதியில் மஞ்சள்பட்டு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.
2.மருதாணி மூளையின் செயல்திறனை மேம்படுத்தும். எனவே அடிக்கடி மருதாணி இட்டுக்கொள்ளலாம்.
3.மஞ்சளுடன் மருதாணியும் கலந்து உள்ளங்கையில் பூசுவதால் கருச்சிதைவு ஏற்படாது.
4.கை,கால்களில் மஞ்சள் பூசுவதால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை வராது.

#அம்மிமிதித்து #அருந்ததி பார்த்தல்:
==========================

இது மிகத் தொன்மையான பழக்கமாகும்.கல்லானது எவ்வளவு பாரத்தையும் தாங்கும். ஆனால் தன் சக்திக்கு மீறினால் பிளந்து போகுமே தவிர வளைந்து கொடுக்காது. இத்தகைய கல்லைப்போல் உன்
வாழ்க்கையில் உன் கற்பிற்கு சோதனை வருமானாலும் உறுதியுடன் இருந்து உன் கற்பைக் காத்துக்கொள்
என்பதே இதன் பொருள்.

அருந்ததி காணக்கிடைப்பதற்கரிய அருமையான நட்சத்திரம். கற்புடைய பெண் அருந்ததியைப் போல்
போற்றப்படுவாள் என்பதே இதன் உட்பொருளாகும்.

#சங்குமோதிரம் எடுத்தலின் ரகசியம்:
============================

மணவறை முன் உள்ள நீர் நிறைந்த மண்பானையில் சங்கும் மோதிரமும் இட்டு மணமக்களை எடுக்கச்
சொல்வார்கள் பெரியவர்கள். அப்போது மணமகன் பொன்னால் ஆன மோதிரத்தையும்
மணமகள் பொன் சங்கையும் எடுக்கவேண்டும். இல்வாழ்க்கைக்கு இன்றியமையாத பொன்னை மணமகன் தேடுதல் வேண்டும். மக்களைப் பாலூட்டி
வளர்க்கும் பாங்கினை மணமகள் மேற்கொள்ளுதல் வேண்டும் என்பது இதன் உட்பொருள். நீர் நிறைந்த மட்பானை நீரால் சூழப்பட்ட இப்பூவுலகைக் குறிப்பதாகும்.

#வெற்றிலைபாக்கு மாற்றுதல்:
=======================

மணமகனின் தந்தையும் மணமகளின் தந்தையும் கிழக்கு மேற்காக அமர்ந்து
வெற்றிலை பாக்கு வைத்து மூன்று
தலைமுறையினரைச் சொல்லி இன்னார் மகளை இன்னார் மகனுக்கு கொடுக்கின்றோம் என
இருவீட்டாரும் கூறி ஏழு
பாக்கும் ஏழு வெற்றிலையும் வைத்து மாற்றுதல். எழுவகைப் பிறப்பிலும் இன்று
சொன்ன சொல் தவறுவதில்லை
என்று பலர் முன்னிலையில் உறுதியளிப்பதாகும்.

உறவின்முறை விளக்கம்:
====================

#கணவன், #கொழுநன்:
-------------------------------

கண் அவன்.பெண்ணுக்கு கண் போன்றவன் என்பதாகும்.நம்மை நல்வழி நடத்திச்
செல்லும் கண்ணைப் போல்
பெண்ணை நல்வழிப்படுத்திச் செல்லும் கட்டுப்பாடு உடையவன் கணவன் என்பதாகும்.

கொழுநன் பெண்ணுக்குக் கொழு கொம்பு போன்றவன் என்பதாகும். கொடி படர்ந்து உயர்வதற்குக் கொழு கொம்பு எப்படி இன்றியமையாததோ அதே போல் பெண்மைக்குப் பாதுகாவலுக்குரிய ஆண்மகன் என்பதாகும்.

#மனைவி:
--------------
மனைவி,துணைவி,இல்லாள் இச்சொற்கள் இல்லறநெறி காப்பவள் என்பதைக் குறிப்பிடுவனவாகும். மனைக்கு உரியவள் மனைவி என்பதாகும்

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

எது கெடும் ?!?


எது கெடும் ?!?

அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா ?

01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.

11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.

21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும்  கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.

31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.

41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.

51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.

கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு.....

செவ்வாய், 26 நவம்பர், 2019

குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுப்பது சரியா?.. தவறா?...


குழந்தைகளை வயதிற்கேற்ப எப்படி அணுக வேண்டும்?


🌞நாம் வாழக்கூடிய சமூகம் எதை சரி என்று சொல்கிறதோ அதை செய்யவும், எதை தவறு என்று சொல்கிறதோ அதை செய்யாமல் இருக்கவும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதே ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பதாகும்.

🌞குழந்தைகளிடத்தில் கத்துவது எந்த அளவிற்கு ஆபத்தோ, அதே அளவு குழந்தைகளை கண்டிக்காமல் இருப்பதும் ஆபத்தே ஆகும். குழந்தைகளை அவர்கள் வயதிற்கு தகுந்தாற்போல் எப்படி அணுக வேண்டும்? என்று பார்க்கலாம்.

குழந்தைகளை எப்படி அணுக வேண்டும்?

🌞குழந்தைகள் செய்யும் சேட்டைகளுக்கு பெற்றோர்கள் கோபப்பட்டு கத்துவது என்பது இயல்பே. இது குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகிறது.

🌞ஒரு வயது குழந்தைகளுக்கு அரவணைப்பு என்பது மிகவும் அவசியம். விளையாட்டாகவோ அல்லது உங்களை அறியாமலோ குழந்தையிடம் மிரட்டும் விதத்தில் கத்துவது என்பது மிகவும் ஆபத்தை விளைவிக்கும். இதனை தவிர்க்க மென்மையாக அவர்களை அணுகுவதே சிறந்த முறையாகும்.

🌞மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஓடியாடி விளையாடுவார்கள். பெரும்பாலும் அவர்கள் பின்னால் ஓட முடியாமல், அவர்களை தடுக்க முடியாமல் பெற்றோர்கள் கத்துவது என்பது அவர்களை நல்வழிப்படுத்தாது. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை குலைத்து அவநம்பிக்கையை ஏற்படுத்தும்.

🌞ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றவர்களை ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்துவிடுகிறது. தன்னிடம் யார் நன்றாக பேசுகிறார்கள், எப்படி தன்னிடம் அணுகுகிறார்கள் என்று புரிந்துக்கொள்ள ஆரம்பிக்கிறது. இந்த வயதில் குழந்தைகளிடம் கத்துவது பெற்றோர், குழந்தை உறவுமுறையை பாதிக்கும். தன்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்தாமல் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள ஆரம்பித்துவிடுகிறது.

குழந்தைகளிடம் செய்யக்கூடாதவை :

🌞குழந்தைகளிடம் ஏதாவது தேவை என்றால், 'அடம்பிடித்தால் கிடைத்துவிடும்" என்ற எண்ணங்கள் இருக்கும். ஆனால், அந்த சமயங்களில் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடவேண்டும். இதனால், அடம்பிடித்தாலும் பெற்றோர்கள் பொருட்படுத்தமாட்டர்கள் என்ற எண்ணம் அவர்களிடம் வந்துவிடும்.

🌞குழந்தைகள் செய்யும் தவறுகளுக்காக தண்டனையை கொடுப்பதில் மட்டுமே கவனமாக இருக்கக்கூடாது. ஏதாவது நல்ல விஷயங்களை செய்தால் அதை பாராட்ட வேண்டும். ஆனால், அதையும் சொல்லிக்காட்டி செய்யக்கூடாது. செயலில் புரிய வைக்க வேண்டும்.

🌞குழந்தைகள் நிரந்தரமாக தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால், அடித்து உணர்த்தும் வழிமுறை பலனளிக்காது. நீங்கள் இருக்கும்போது சரியாக நடந்துகொள்வார்கள். இல்லாதபோது மீண்டும் அந்த தவறுகளை செய்வார்கள்.

🌞குழந்தைகளிடத்தில் கத்துவது எந்த அளவிற்கு ஆபத்தோ அதே அளவு குழந்தைகளிடம் பேசாமல் இருப்பதோ அல்லது அவர்களை கண்டிக்காமல் இருப்பதோ தவறு.

🌞சிறுவயதில் அதிக செல்லத்துடன் அவர்களை அணுகினால் வளர்ந்த பின்பும், தவறுகள் செய்யும்போதும் அதே செல்லத்துடன் தன்னை அணுக வேண்டும் என்று விரும்புவார்கள். அது பொய்க்கும்போது மனரீதியாக பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

உடல் எடையை விரைவாக குறைக்க வேண்டுமா? ஆறே ஆறு வழிமுறைகள்தான்...!!


உடல் எடையை குறைக்க உதவும் எளிய பயிற்சிகள்!!


👉 தினமும் உடற்பயிற்சி செய்து கலோரிகளை எரிப்பதன் மூலம் எந்த உணவுக் கட்டுப்பாடும் இல்லாமல் ஒரு மாதத்தில் தோராயமாக மூன்று கிலோ வரை எடையை குறைக்க முடியும்.

👉 உடல்நலத்தை காக்க வேண்டும் என வாக்கிங் செய்பவர்களை விட, உடல் எடையை குறைக்க வேண்டும் என்று வாக்கிங் செல்பவர்களே அதிகம்.

👉 மேலும் உடல் எடையை குறைந்து, பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்று இன்றைய தலைமுறைக்கு ஆசை உள்ளது.

👉 இதற்காக ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கில் செலவு செய்து விலை உயர்ந்த உடற்பயிற்சி கருவிகளை வாங்குதல், டயட்டில் இருத்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் பலரும் உள்ளனர்.

👉 அதேபோல் நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவராக இருந்தால், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஐந்து நிமிடங்கள் இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும்.

👉 இந்த ஐந்து நிமிடத்திற்கு சின்னதாக உங்கள் இடத்தைச் சுற்றி நடக்கலாம். இப்படி செய்வதன் மூலம் ஒரு நாளைக்கு 20 நிமிடம் வாக்கிங் சென்றதன் பலனை நாம் பெறலாம்.

வீட்டு வேலையைச் செய்வதன் மூலமாக உடல் எடையை குறைக்கலாம் :

👉 நாம் தினமும் வீட்டு வேலை செய்வதன் மூலம் நம்மால் 100 கலோரிகளை எரிக்க முடியும். அதற்கான எளிய உடற்பயிற்சி பற்றி இங்கு காண்போம்.

👉 முதல் உடற்பயிற்சி தினமும் 30 நிமிடம் 1 மைல் தூரத்துக்கு நடைபயிற்சி செய்யலாம்.

👉 இரண்டாம் உடற்பயிற்சி தினமும் 20 நிமிடம் தோட்டத்தில் புல் வெட்டுதல் அல்லது செடி நடும் வேலை செய்யலாம்.

👉 மூன்றாம் உடற்பயிற்சி 30 நிமிடத்திற்கு வீட்டை சுத்தம் செய்வதன் மூலமாக கலோரிகளை எரிக்க முடியும்.

👉 நான்காம் உடற்பயிற்சி 10 நிமிடத்திற்கு ஓட்டப் பயிற்சி செய்வதால் உடல் எடையை குறைக்க முடியும்.

👉 ஐந்தாம் உடற்பயிற்சி தினமும் ஸ்கிப்பிங் 10 நிமிடம் செய்தால் உடல் எடையை குறைக்க முடியும்.

👉 ஆறாம் உடற்பயிற்சி தினமும் 20 நிமிடம் வீட்டின் தரையை நன்கு குனிந்து துடைத்து சுத்தம் செய்வதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். இந்த ஆறு பயிற்சியை வீட்டில் செய்வதன் மூலம் உடல் எடையை விரைவாக குறைக்க முடியும்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

திங்கள், 25 நவம்பர், 2019

கார்த்திகை மாத பௌர்ணமி மட்டுமல்ல... அமாவாசையும் சிறப்பு தான்...!!


கார்த்திகை மாத பௌர்ணமி மட்டுமல்ல... அமாவாசையும் சிறப்பு தான்...!!

கார்த்திகை மாத அமாவாசை வழிபாடு...!


🌟நம் ஊரில் உள்ள கோவில்களில் அமாவாசை அன்று சிறப்பாக பூஜை செய்யக் காரணம், அன்று தெய்வங்கள் மற்ற நாட்களில் சக்தியுடன் இருப்பதை காட்டிலும் அதிக சக்தியுடன் அமானுஷ்ய விஷயங்களிலிருந்து ஊரை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான்.

🌟சிவபெருமான் ஜோதி வடிவில் தோன்றிய தினமான கார்த்திகை மாத பௌர்ணமி எப்படிச் சிறப்பு வாய்ந்ததோ, அதே மாதிரிதான் கார்த்திகை மாத அமாவாசையும் சிறப்பு மிக்கதாகும். இன்று கார்த்திகை மாத அமாவாசை தினமாகும். முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடச் சிறந்த நாளாகும்.

🌟இந்த நாளில், மாலையில் வீட்டைப் பெருக்கி சுத்தப்படுத்துங்கள். குளித்துவிட்டு, நம் முன்னோரின் திருவுருவப் படங்களுக்கு பூக்கள் சார்த்துங்கள். பூஜையறையிலும், வீட்டு வாசலிலும் விளக்கேற்றுங்கள்.

🌟மேலும், நம் பித்ருக்களுக்கு அதாவது இறந்துவிட்ட நம் தாய், தந்தையருக்குப் பிடித்தமான உணவை நைவேத்தியம் செய்யலாம். அப்போது குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து, பித்ருக்களை மனதார வழிபடுவது மிக மிக அவசியம்.

அமாவாசை அன்று வழிபடக்கூடிய தெய்வங்கள் :

🌟விநாயகர், குலதெய்வம், காளி, பிரத்யங்கரா தேவி, ஸ்ரீவராஹி அம்மன், நரசிம்மர், ஆஞ்சநேயர், ஆற்றங்கரையில் வீற்றிருக்கின்ற சிவன் ஆலயங்கள் மற்றும் மாசாணியம்மன், அங்காள பரமேஸ்வரி.

🌟அமாவாசையன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உட்பட அனைத்து தேவதைகளும், ஜீவன்களும், நம்முடைய முன்னோர்களும் பூலோகத்திற்கு வந்து புண்ணிய நதிக்கரைகளிலும், கடலோரங்களிலும் காசி, ராமேஸ்வரம், கயை போன்ற புண்ணிய தலங்களிலும் தர்ப்பண பூஜையை ஏற்றுக்கொள்கின்றனர் என்பது சாஸ்திரங்கள் நமக்கு உரைத்திடும் உண்மைகள்.

🌟சில சடங்குகளுக்கும், சில வழிமுறைகளுக்கும் அமாவாசை தினம் சிறந்தது. அதில் ஒன்று தான் பித்ரு தர்ப்பணம். முன்னோர்களில் மூன்று தலைமுறையினரையாவது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தால் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஐதீகம். நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மை சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.

காகத்திற்கு உணவிடுங்கள் :

🌟காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை.

🌟தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக... என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.

🌟முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களை சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்கிறோம். அமாவாசை நாட்களில் தீர்த்தங்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும்.

🌟சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் சூரியனின் அருளைப் பூரணமாக பெறமுடியும்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

உடல் பருமனை குறைப்பது எப்படி?


உடல் பருமனை குறைப்பது எப்படி?

இன்று (நவம்பர் 26-ந் தேதி) உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம்.
நவம்பர் 26,

உடம்பால் அழிவின் உயிரால் அழிவர் என்பது திருமூலரின் வாக்கு. அவ்வகையில் நோய்களுக்கு பல்வேறு காரணம் இருப்பினும் உடல் பருமன் சமீப காலமாக அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. உடல் பருமன் என்பது அதிக உடல் எடையை குறிக்கும். இதனை பிஎம்ஐ (உடல் பருமனை குறிக்கக்கூடிய குறியீடு) எனும் அளவீட்டால் கணிக்கலாம். சராசரியாக ஆண்கள் 21 முதல் 25 பிஎம்ஐ, பெண்கள் 18 முதல் 23 பிஎம்ஐ கொண்டவர்களாக இருக்கலாம். இந்த அளவை தாண்டினால் அதிக உடல் எடையாக கருதப்படும். பிஎம்ஐ 30 தாண்டினால் உடல் பருமனாக கருதப்படும்.

உலக அளவில் உடல் பருமன் நாளுக்கு நாள் அதிகமாகிறது. உலக மக்கள் தொகையில் 350 மில்லியன் மக்கள் உடல் பருமனாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. உடல் பருமன் அதிகம் உள்ள நாடுகளின் தர வரிசை பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 30 மில்லியன் மக்கள் இந்தியாவில் மட்டும் உடல் பருமனாக உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உடல் பருமன் மிக முக்கிய தொற்றா நோய்களான சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், இருதய நோய்கள், பக்கவாதம், மூட்டு நோய்கள், பித்தப்பை கல், சிலவகை புற்று நோய்கள் இவற்றிற்கு ஆதாரமாக உள்ளது. உடல் பருமனுக்கு காரணங்கள் என்ன? உடல் பருமனை கணிப்பது எப்படி? உடல் பருமனை குறைப்பது எப்படி? என்பதை பார்க்கலாம்.

உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை கணிப்பது எளிது. உயரத்தை சென்டிமீட்டரால் அளந்து 100 கழிக்க வருவது உடல் எடையாக இருக்க வேண்டும். அதற்கு அதிகமாக இருப்பது அதிக உடல் எடை. போதுமான உடற்பயிற்சி இன்மை, உடல் உழைப்பு இல்லாமை, அதிக கலோரி கொண்ட உணவை உண்பது இதற்கு முதல் காரணம். தைராய்டு சுரப்பி குறைந்த நிலை, ஹார்மோன் பிரச்சினைகள், சினைப்பை நீர்க்கட்டி, மன அழுத்த நோய்கள், சிலவகை மருந்துகள், சில பரம்பரை நோய் குறைபாட்டினால் கூட உடல் பருமன் ஏற்படக்கூடும். .

உண்ணும் உணவில் பெரிய மாற்றம் கொண்டு வர வேண்டும். அதிக கலோரி சத்து கொண்ட அரிசி சார்ந்த உணவுகளை அறவே நீக்க வேண்டும். அதற்கு மாற்றாக அதிக நார்சத்து கொண்ட, குறைந்த கலோரி சத்து உடைய கேழ்வரகு, கோதுமை, தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை சத்து அதிகம் உள்ள கிழங்கு வகைகள், பட்டாணி வகைகள் முற்றிலும் நீக்கவும். நீர்சத்து அதிகம் உள்ள வெள்ளரி, சுரை, முள்ளங்கி போன்ற குறைந்த கலோரி சத்து உள்ள காய்கறிகளையும், நார்சத்து மிக்க கீரைகளையும் உண்ணும் உணவில் அதிகம் சேர்க்கவும். பப்பாளி, கொய்யா, அன்னாசி போன்ற பழங்களை அதிகம் சேர்க்கலாம். அவற்றை நொறுக்கு தீனிக்கு பதில் எடுத்துக்கொள்ளலாம். வாழைப்பழம், திராட்சை இவற்றை தவிர்க்கலாம். புளிப்பான பழங்களை சேர்த்தால் வயிற்றில் அமிலம் சுரந்து பசியினை அதிகப்படுத்தும் என்பதால் அதனை தவிர்க்கலாம். எண்ணெயில் வறுத்த உணவு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. குடிநீருக்கு வெந்நீர் மட்டுமே பயன்படுத்த நம் உடலில் கொழுப்பு கரைவதை துரிதப்படுத்தும். காலை உணவினை முற்றிலும் நீக்குவது தவறு. அதற்கு மாற்றாக பழங்களையாவது எடுத்து கொள்ளலாம். உணவினை பிரித்து அளவோடு உண்பது சிறந்தது. அதிக கலோரி சத்து கொண்ட குளிர்பானங்களை முற்றிலும் நீக்குவது நல்லது. அசைவ பிரியர்கள் முட்டை வெள்ளை கரு, மீனினை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

பால் மற்றும் பால் பொருட்கள் உடல் பருமனை கூட்டும் என்பதால் மோரினை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு பதிலாக கிரீன் டீ எடுத்துக்கொள்ளலாம். பால் எடுக்க அவசியம் இருப்பின் டீ, காபிக்கு பதில் நத்தைசூரி எனும் மூலிகை விதையினை வறுத்து பொடியாக்கி, காபி தூளுக்கு பதிலாக பயன்படுத்தலாம். வெந்தயத்தை லேசாக வறுத்து பொடியாக்கி பகல் நேரங்களில் வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.

தினமும் 4, 5 பல் பூண்டு எடுத்து பாலில் வேகவைத்து இரவில் உண்ணலாம். இது உடலில் உள்ள கெட்டகொழுப்பு குறைவதுடன் உடல் பருமனை குறைக்க உதவும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சேர்ந்த திரிபலா சூரணத்தை ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் கலந்து இரவு உணவுக்கு முன் எடுத்துக்கொள்ளலாம். இரவு 8 மணிக்கு மேல் உணவினை தவிர்ப்பது நல்லது. வீட்டில் பயன்படுத்தும் புளிக்கு பதிலாக கொடம்புளியை பயன்படுத்தலாம். இதில் உள்ள ஹைடிராக்சி சிட்ரிக் ஆசிட் எனும் வேதிப்பொருள் பசியினை கட்டுப்படுத்தும் தன்மை உடையது. சர்க்கரை சத்து அல்லாத உணவை எடுத்துக்கொள்ளுதல் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கும் எளிமையான வழிமுறை. சீரகம் அல்லது கொத்துமல்லி விதைகளை சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரையே குடித்து வர உடல் எடையை குறைக்க உதவும்.

உடல் பருமனை குறைக்க உடல் பயிற்சி அவசியம். தினமும் குறைந்தது அரை மணி நேரம் நடை பயிற்சி அவசியம். நீச்சல் அடித்தல், சைக்கிள் ஓட்டுதல் முதலிய பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். உடல் பருமனை குறைக்கும்படியான யோகாசன பயிற்சிகளான சூரிய நமஸ்காரம், வீராசனம், திரிகோணாசனம், அர்த்த மச்சேந்திரசனம், ஹலாசனம், தணுராசனம், பட்சி மோத்தாசனம், தடாசனம், பாவனா முக்தாசனம் போன்றவற்றை முறைப்படி செய்யலாம்.

இவ்வாறாக உடல் எடையின் முக்கியத்துவம் அறிந்து உடல் எடை அதிகரிப்பதற்கான நோய் காரணத்தை மருத்துவரை அணுகி அறிந்து, மேற்கூறிய உணவு பழக்க வழக்கம், வாழ்வியல் மாற்ற நெறிமுறைகளை பின்பற்றி வாழ்ந்தால் உடல் பருமனில் இருந்து விலகி வாழலாம்.

நன்றி தினதந்தி.
Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

சர்வதேச உடல் பருமன் எதிர்ப்பு தினம் நவம்பர் 26.


சர்வதேச உடல் பருமன் எதிர்ப்பு தினம்: செழிப்பையும் கொழுப்பையும் தரும் குருபகவான்!

சமீபத்தில் உலகம் முழுவதும் அக்டோபர் 26-ம் தேதி உடல் பருமன் தினம் அனுசரித்த நிலையில் இன்று பல நாடுகளில் சர்வதேச உடல் பருமன் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அளவுக்கு அதிகமாக உடலில் சதைப் போடுவதை உடல் பருமன் அல்லது உடல் கொழுப்பு என்கின்றனர். அதீதமாகக் கொழுப்பு சேருவது உடல் நலத்துக்கு ஆபத்தானது. உடல் பருமன் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்னையாகக் கருதப்படுகிறது. உடல் பருமனால் ஆண்டிற்கு 3 மில்லியன் மக்கள் உலகளவில் இறக்கின்றனர். உடல் பருமனால் ஏற்படும் தீமையை விளக்கவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்னையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும். பெண்களைப்  பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்துபோனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில்  அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது.



தற்போது வேகம் நிறைந்த உலகில், அனைவரும் மன அழுத்தத்துடன், அதிக உடல் எடையாலும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் உடலில் பல நோய்கள் வருவதோடு, எதையும் சரியாக செய்ய முடியாத  நிலை ஏற்படுகிறது. உலகம் முழுவதும் குழந்தை மற்றும் இளம்வயதினர் உடல் பருமன் விரைவாக அதிகரித்து வருகிறது. பிற்கால உடல் நலத்தையும் கல்வியையும் தரமான வாழ்க்கையையும்  பாதிக்கும் இந்நிலையை எதிர்த்து சில நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஒபிஸிட்டி’ எனப்படும் உடற்பருமன், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று அதிகரித்துள்ளதாக மருத்துவத்  தகவல்கள் எச்சரித்து வருகின்றன

ஒபிஸிட்டி இன்று இந்தளவுக்கு அதிகரித்து வருவதற்குக் காரணம், மாறிவரும் வாழ்க்கை முறைதான் காரணம் என உடல் நல மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு வேளை, ஒவ்வொரு வகை உணவிலும் பலவித நன்மைகள் அடங்கியபடி வகுத்து வைத்த நம் முன்னோர்களின் உணவுப் பழக்கங்கள், இன்றைக்கு அடியோடு மாறிவிட்டன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் துரித உணவு என்று சொல்லப்படும் ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளிடம் அடிமையாகிவிட்டனர். இதனால் பர்கர், கோலா பானங்கள், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற ஜங்க் ஃபுட் வகைகள், உடலின் கொழுப்பை  அதிகரிக்கச் செய்து பலவிதமான நோய்களை இலவசமாகக் கொடுக்கின்றன.



இன்றைய உலகில் பெரும்பான்மையோர், குறிப்பாக இளைஞர்கள், தங்கள் தோற்றத்தைக் குறித்து அதிருப்தி அடைந்து எடையைக் குறைப்பது அதி முக்கியமானது என்று கருதுகின்றனர். ஆனால், உடல்  பருமன் என்பது ஒரு மருத்துவ நிலை என்பதையும் அது பல்வேறு நோய்களையும் மரணத்தையும் கூட உண்டாக்கும் என்பதை மக்கள் அடிக்கடி மறந்து போகின்றனர். உண்பதினால் மட்டுமன்றி தவறான  உணவுப் பழக்க வழக்கங்களினாலும் உடல் பருமன் உண்டாகிறது.

கடந்த சில வருடங்களாக ஓடி ஆடி வேலை செய்பவர்களை விட, ஏசியில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம் உள்ளது. அதனால் உண்ணும் உணவுகள் செரிமானமாகாமல், அதில் உள்ள கொழுப்புக்கள் வயிற்றில் தங்கி தொப்பையை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி, இப்போது ஆரோக்கியத்தைக் கெடுக்கும் வகையில் நிறைய உணவுகள் வந்துள்ளன.  இவை அனைத்தும், பசியின் உணர்வை அடிக்கடி தூண்டுபவை. ஆகவே ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைந்து, தொப்பை இருப்போரின் எண்ணிக்கையும்  அதிகரித்துவிட்டது. இவ்வாறு தொப்பை இருப்பவர்களுக்கு, நோய்கள் மிகவும் விரைவில் தாக்கும். மேலும் சிலருக்கு அவர்களது உடலையே சுமந்து நடக்க முடியாத நிலை ஏற்படும்.



உடல் பருமன் உடல் எடையில் இருந்து மாறுபட்டது. உடல் பருமன் என்றால் அதிகக் கொழுப்பு நமது திசுக்களில் இருக்கிறது என்று பொருள். ஒரு மனிதனுக்கு உயரத்துக்குத் தகுந்தவாறு இருக்க வேண்டிய ஆரோக்கியமான எடையை விட அதிகமாக இருப்பதே இவ்விரண்டின் அர்த்தமாகும். உங்களுக்குத் தேவையான எரிசக்தியை விட அதிக அளவில் உட்கொள்ளுவதாலேயே உடல் பருமன்  ஏற்படுகிறது. உள்ளெடுக்கும் மற்றும் வெளியேற்றும் எரிசக்திக்கு இடையில் இருக்கும் சமநிலை நபருக்குநபர் வேறுபடும். உங்கள் மரபான உடலமைப்பு, மிகை ஊட்டம், அதிக கொழுப்புள்ள பொருட்களை உன்னுதல், உடற்பயிற்சியின்மை ஆகிய காரணிகளால் உங்கள் எடை அளவு பாதிக்கப்படும். உடல் பருமனாய் இருப்பதால், நீரிழிவு, இதய நோய், மாரடைப்பு, கீல்வாதம், சில புற்று நோய்  வகைகள், மிகை இரத்த அழுத்தம், இளமையில் மிகை கொலஸ்ட்ரால் ஆகிய பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உள்ளது.

உடல் பருமனுக்கான ஜோதிட காரணங்கள்

உடல் பருமனுக்கும் ஜோதிடத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா எனப் பார்த்தபோது, ஆச்சரியமூட்டும் வகையில் நிறையவே தொடர்பு இருப்பதாகத் தெரிய வந்தது. உடல் பருமனுக்கு காரகர் குரு  என்றும் ஊளைச் சதைக்கு காரகர் சுக்கிரன் என்றும் பாரம்பரிய ஜோதிடம் கூறுகிறது. குருவும், சுக்கிரனும் லக்னதில் ஆட்சி பெற்று நிற்பது, உச்சம், மூல திரிகோணம், கேந்திர திரிகோணங்களில் நின்று லக்னத்தை பார்ப்பது, பஞ்ச மகா புருஷ யோகங்களில் குருவால் ஏற்படும் ஹம்ச யோகம்,  சுக்கிரனால் ஏற்படும் மாளவியா யோகம் ஆகிய யோகங்கள் பெற்று நின்று தனது தசா புத்தியை நடத்தும்போது  உடல் பருமனும் ஊளைச் சதையும் ஏற்படுகின்றது. முக்கியமாகக் கொழுப்பின் காரகரே குரு தான் என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது. சில பணக்கார்களுக்கு தொப்பை இருக்கும்போது அதை  “பணத்தொப்பை” எனக் குறிப்பிடும் வழக்கம் இன்றளவும் இருக்கிறது. பணத்திற்கும் செல்வ செழிப்பிற்கும் காரகரான தனகாரக குரு கொழுப்பு சத்திற்கும் காரகர் என்பது பொருத்தமன்றோ?



ஜோதிட ரீதியாக உடல் பருமனை ஏற்படுத்தும் பாவங்களாக கால புருஷனுக்கு போஜன ஸ்தானமான ரிஷபம் மற்றும் அதன் அதிபதி சுக்கிரன், ஜெனன ஜாதக இரண்டாம்பாவம், அதன் அதிபதி, கால புருஷனுக்கு ஒன்பதாம் பாவமான தனுசு மற்றும் அதன் அதிபதி, ஜெனன ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் மற்றும் அதன் அதிபதி லக்னத்தோடு தொடர்புகொள்ளும் போது உடல் பருமன் ஏற்படுகிறது என  மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.

மேலும் ஜெனன ஜாதகத்தில்  குருவும் சுக்கிரனும் லக்னாதிபதியாகவோ, போஜன ஸ்தானதிபதியாகவோ இருப்பது மற்றும் லக்னத்தையோ அல்லது போஜன ஸ்தானத்தையோ தொடர்பு கொள்ளும்போது  ஜாதகருக்கு இனிப்புகளில் அதிகம் நாட்டம் ஏற்படும். அதனால் உடல் பருமன் ஏற்படும். பானை வயிறு படைத்தவர் என்று போற்றப்படும் விநாயக பெருமானின் ஜாதகத்தில் நீர் ராசியான விருச்சிக  லக்னமாகி லக்னத்தில் கேதுவும் கால புருஷ இரண்டாமிடமான ரிஷபத்தில் ராகுவும் நின்று ஐந்தாமதிபதியாகிய குரு நீர் ராசியில் உச்சம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

உடல் பருமனை ஏற்படுத்தும் கிரஹ சேர்க்கைகள்

1. லக்னம் நீர் ராசியான கடகம் அல்லது மீனமாகி அதில் குரு பகவான் ஆட்சி உச்சம் ஆகி நிற்பது அல்லது நீர் ராசியாகிய விருச்சிகமாகி அதை நீர் ராசிகளில் ஆட்சி உச்சம் பெற்ற குரு பார்ப்பது.   இத்தகைய அமைப்பைப் பெற்றவர்கள் ஒருமுறை குண்டாகிவிட்டால் பின் மீண்டும் உடல் பருமனில் இருந்து விடுபடுவது என்பது மிகவும் கஷ்டமான விஷயமாகும்.



2. லக்னம்/சந்திரன் காற்று ராசிகளான மிதுனம், துலாம் மற்றும் கும்பம் ஆகி அதில் குரு நின்று காற்று ராசி அதிபதிகளோடு தொடர்பு கொள்வது.

3. பொதுவாக குரு தான் இருக்கும் வீட்டின் காரகத்தை வளர்த்துவிடுவார் என்பது ஜோதிட விதி. அந்த வகையில் எந்த லக்னமானாலும், காலபுருஷனுக்கு ஐந்தாமிடமான சிம்மம் வயிறு பாகத்தையும்   ஆறாமிடமும் அடி வயிற்றினை குறிக்கும் இடங்களாகும்.

அ. குரு சிம்மத்தில் அல்லது ஜெனன ஜாதக ஐந்தாமிடத்தில் ராகுவோடு சேர்ந்து நிற்கும் போது மிகப்பெரிய வயிற்றுடன் கூடிய உடல் பருமன் ஏற்படுகிறது. ராகுவோடு சேராமல் தனித்து சிம்மத்தில்  நிற்பது குறைந்த அளவிலாவது தொப்பை இருக்கும்.



ஆ. கன்னி மற்றும் ஜெனன ஜாதக ஆறாமிடத்தில் குரு நிற்பது முக்கியமாக லிவர் எனப்படும் கல்லீரல் பாதிப்பால் உடல் பருமன் ஏற்படும். மேலும் கன்னியில் குரு நிற்பவர்களுக்கு சர்க்கரை நோயும் சேர்ந்து வர இதுவே காரணமாகும். அதிலும் சனைச்சரனும் சேர்ந்துகொண்டால் நீரிழிவு மற்றும் உடல் பருமன் இரண்டும் சேர்ந்து அமைந்துவிடுகிறது.

4. கால புருஷ இரண்டாமதிபதியான சுக்கிரனும், கால புருஷ ஒன்பதாமதிபதியான குருவும் எந்த விதத்திலும் சேர்க்கை பெற்று நிற்பது.

5. காற்று ராசியான மிதுனத்தில் சுக்கிரன் நின்று தனுர் ராசியைப் பார்ப்பது மற்றும் நீர் ராசியான விருச்சிகத்தில் குரு நின்று ரிஷப ராசியைப் பார்ப்பது.

6. ராகுவும் கேதுவும் லக்னத்தில் குரு/சுக்கிரனின் சாரம்பெற்றும் நிற்பது மற்றும் தனது திரிகோண பார்வையாலும் 3-7-11 பார்வையாலும் குருவையோ சுக்கிரனையோ பார்ப்பது. ராகுவும் கேதுவும்  லக்னத்தில் நிற்கப்பெற்றவர்கள் சமூக பழக்கங்களுக்கு கட்டுப்படாதவர்களாக இருப்பதோடு அந்நிய உணவு வகைகள் மற்றுக் துரித உணவுகளை அதிகம் உண்பதால் உடல் பருமன் ஏற்படும்.

7. குரு மற்றும் சுக்கிரனின் மேற்கண்ட தொடர்புகளை கொண்டு செவ்வாய் நீசமடைந்து நிற்பது, கடகம் மற்றும் மீனத்தில் நீர் ராசிகளில் நிற்பது, தனது வீட்டிற்கு பன்னிரண்டில் நிற்பது, 6-8-12 தொடர்புகள் பெறுவது போன்றவை ஜாதகரை உடற்பயிற்சியற்ற நிலைக்கு உட்படுத்தி அதனால் உடல் பருமன் ஏற்படுகிறது. மேலும் உடல் கட்டழகு, உடல் பயிற்சியின் காரகர் செவ்வாய் என்பது  குறிப்பிடத்தக்கது.

8. லக்னம்/சந்திரன் காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் லக்னமாகி, அங்கு குரு சாரத்தில் (புனர்பூசம், விசாகம், பூரட்டாதி) ராகு நின்று, சுக்கிரனின் சாரத்தில் (பரணி, பூரம், பூராடம்) கேது நின்று குருவுக்கும் சுக்கிரனுக்கும் பலமான தொடர்பு ஏற்படுத்துவது. முக்கியமாகக் கும்ப லக்னத்தில் ராகு நின்று சிம்மத்தில் கேது நிற்கும்போது கால புருஷனுக்கு வயிறு பாகம் பாதிப்படைவதால் பானை  போன்ற வயிறு ஏற்படுகிறது.



9. குருவோடு சனி, யுரேனஸ், நெப்ட்யூன், புளுட்டோ போன்ற கிரஹங்கள் லக்னத்திலோ, குருவின் வீடுகளிலோ, சுக்கிரன் வீடுகளிலோ, ஐந்து மற்றும் ஒன்பதாம் வீடுகளிலோ தொடர்பு கொள்ளும்போது  திடீரென உடல் பருமன் ஏற்படுகிறது என மேற்கத்திய ஜோதிடம் கூறுகிறது.

10. ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் மற்றும் கர்ம ஸ்தானம் எனப்படும் பத்தாமிடத்தில் இருக்கும் கிரஹங்களை பொருத்து ஒருவரின் வேலை மற்றும் வாழ்க்கை முறை அமைந்துவிடுகிறது. பத்திலே ஒரு  பாவி இருக்க வேண்டும் அல்லது ஒரு பாம்பாவது (ராகு/கேது) இருக்க வேண்டும் என்பது ஜோதிட சொலவடை. பத்திலே அசுப கிரஹங்கள் இருந்தால் அவர்கள் வேலை கடுமையான உடல் உழைப்புடன் அமையும். மாறாக குருவோ சுக்கிரனோ அமர்ந்துவிட்டால் அவர்களுக்கு வேலை வொயிட் காலர் ஜாப் எனப்படும் சொகுசு வேலையிலேயே நாட்டம் இருக்கும். இவர்களையே உடற்பருமன் அதிகம்  தாக்குவதை காணலாம்.

உடல் பருமன் ஏற்படும் காலம்

மேற்கண்ட கிரஹ நிலைகள் ஒருவருக்கு இருந்து குரு தசை ராகு புக்தி, குரு சாரம் பெற்ற ராகு தசை குரு புக்தி போன்றவை நடைபெறும் காலங்களில் உடல் பருமன் ஏற்படுகிறது, 6/8/12 அதிபதிகளுடன் தொடர்பு கொண்டு குரு தசை புத்தி ஏற்படுபோது உடல் பருமன் நோயாக அவஸ்தையைத் தருகிறது.

பெண்களுக்குப் புத்திர காரக குரு பிரசவ காலத்திற்கு பிறகு உடல் பருமனை ஏற்படுத்துகிறார். பிரசவத்திற்கு முன் "குச்சி குச்சி ராக்கம்மாவாக" இருந்தவர்கள் கூட ஒரு குழந்தையை பெற்றவுடன் உடல்  பருமனடைவதை பார்க்க முடிகிறது.

உடல் பருமனை குறைக்கும் மருத்துவம் மற்றும் பரிகாரங்கள்

1. உடல் பருமனை ஏற்படுத்தும் கிரஹ நிலைகள் ஜாதகத்தில் கொண்டவர்கள் குருவின் காரகம் நிறைந்த இனிப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகள் முக்கியமாக நெய் சேர்த்த உணவுகளை மற்றவர்களுக்கு  அளிக்கவேண்டுமே தவிர அவர்கள் சாப்பிடக்கூடாது. ஆனால் குருவின் அம்சம் நிறைந்தவர்களை இனிப்பு சாப்பிடாமல் கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியமாகும்.

2. செவ்வாயின் காரகம் கொண்ட யோகா, உடற்பயிற்சி செய்வது போன்றவை உடல் பருமனை குறைக்க வழி செய்யும். அழகன் எனப்படும் முருகப்பெருமானைத் திருச்செந்தூர் ஸ்தலத்தில் வணங்குவது.



3. கேதுவின் தானியமான கொள்ளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது உடல் பருமனை குறைக்கும் மற்றும் கேதுவின் அதிதேவதையான விநாயக பெருமானுக்கு தோப்புக்கரணம் போட்டு  வணங்குவது.

4. அநேகமான உடல் பருமனுக்கு குருவின் காரக விட்டமினான கொலின் குறைபாடு கல்லீரல் (லிவர்) பாதிப்பை ஏற்படுத்தி வயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் கொழுப்பு சேர செய்து உடல் பருமன் நோயிற்குக் காரணமாகிறது. எனவே, தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் கோலின் விட்டமினை எடுத்துகொள்ளும்போது உடல் பருமன் நாளடைவில் குறைகிறது.

5. ஆயுர்வேத மருந்துகளில் நவக குக்குலு, யோகராஜ குக்குலு, கோஷிராதி குக்குலு போன்ற குக்குலு மருந்துகளைத் தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக்கொள்வது. முக்கியமாக வாரனாதி  கஷாயம் அல்லது கொடாம்புளி சூப் போன்றவற்றுடன் எடுத்துக்கொள்வது விரைவில் பலனளிப்பதை காணமுடிகிறது.

6. வாயு பொருட்கள், கிழங்குகள், எண்ணெய்யில் பொரித்த உணவுகள் சனி குருவின் சேர்க்கையால் கொழுப்புச்சத்தை அதிகரிக்கிறது. எனவே அத்தகைய உணவுகளைத் தவிர்த்து தன்வந்திரி வடி, பாஸ்கர  லவனம், அஷ்ட சூரணம் போன்ற மருந்துகளை உட்கொள்வதால் வாயு தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் வாயு மைந்தன் ஆஞ்சனேயனை வணங்குவதும் உடல் பருமனை  குறைக்கும்.



7. செவ்வாயின் காரகம் நிறைந்த வெள்ளைப் பூண்டினை அதிக அளவு சேர்க்கும்போது கொழுப்புச்சத்து கரைந்து உடல் பருமன் நோய் நீங்கும் என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது. இது அனைத்து மருத்துவ முறையிலும் ஏற்கப்பட்ட ஒரு எளிய வழியாகும். மேலும் செவ்வாயின் காரகம் நிறைந்த இஞ்சி மற்றும் சுக்கு ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்ப்பது ஜீரண கோளாறுகளை நீக்கி உடல் பருமனை தடுக்கிறது.

8. வயிறு சமந்த பிரச்னைகளை போக்கவும் உடல் பருமனை குறைக்கவும் மருத்துவ குணம் கொண்ட செவ்வாயின் காரகம் நிறைந்த கருஞ்சீரகம் பெருமளவு உதவுகிறது. கருஞ்சீரக எண்ணெய்யுடன்  தேன் சேர்த்து சாப்பிடுவது, கருஞ்சீரக கஷாயம் போன்றவை உடல் பருமனை குறைக்க உலகளவில் புகழ் பெற்ற மருத்துவ முறையாகும் என்றாலும் மாதவிடாயை ஏற்படுத்தும் தன்மை கொண்ட  கருஞ்சீரகத்தை கருவுற்றிருப்பவர்கள் உட்கொள்ளக்கூடாது.

10. ராஜ கனி எனப்படும் குரு ஆதிக்கம் பெற்ற எலுமிச்சை உடல் பருமனை குறைக்கும் அற்புத மருந்தாகும். காலையில் வெறும் வயிற்றில் கதகதப்பான சுடு நீரில் எலுமிச்சை சாரு மற்றும் தேன்  கலந்து பருகுவது மிகச்சிறந்த மருந்தாகப் பயன்படுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து புத்துணர்ச்சியை அளிக்கிறது.

11. இவற்றிகெல்லாம் முத்தாய்ப்பாக உடல் பருமன் கொண்டவர்கள் அடிக்கடி ஏதாவது உணவுகள் மற்றும் நொறுக்கு தீனி கொறிப்பதை நிறுத்தவேண்டும். முக்கியமாக தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிடுவது, படித்துக்கொண்டே சாப்பிடுவது போன்றவை தவறான உணவு பழக்கங்களாகும். முக்கியமாக குருவின் காரகம் நிறைந்த கடலையை அடிப்படையாகக் கொண்ட உணவுகள், நெய் நிறைந்த இனிப்பு வகைகள் ஆகியவற்றை சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த டிவி, மொபைல் போன் ஆகியவற்றைப் பார்த்துக்கொண்டே சாப்பிடும்போது குரு மற்றும் சுக்கிரன் இருவரும் நமது உடலை ஒரு கை  பார்த்துவிடுவார்கள்.

கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆவார். கண்டதைத் தின்றால் குண்டராவார்” என்பது குருவின் சிறப்பை விளக்கும் சொல் வழக்காகும். எனவே குரு பகவானை வணங்கி உடல் ஆரோக்கியத்துடன்  வாழ்வோமாக!
நன்றி தினமணி.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

சனி, 23 நவம்பர், 2019

பிள்ளைகளிடம் கையாள வேண்டிய உளவியல் உண்மைகள்-


பிள்ளைகளிடம் கையாள வேண்டிய உளவியல் உண்மைகள்-
How to treat a child psychologically:-

1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள்.

2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடன் எழும்புவதற்கு
துணை புரியும்.

3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப் படுகிறேன்

உனக்கு ஏதாவது நான் உதவிகள் செய்து தரவேண்டுமா?

நீ நல்ல ஒரு திறமை சாலி ஆற்றல் மிக்கவன் என்று சொல்லுங்கள்

அவர்களை அன்பாக அனைத்து முத்தமிடுங்கள்.

4. காலையில் நித்திரையிலிருந்து எழும்பிய உடன்

டீவி பார்ப்பதையோ , ஐபேட் மொபைல் போன்ஸ் போன்றவைகள் பாவிப்பதையோ ஒருகாலமும் அனுமதித்து விடாதீர்கள்.

ஏனெனில் அதன் கதிர்கள் தூங்கி எழும்பிய நிலையில் இருக்கும் கண்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.


5.உங்கள் குழந்தைகள் உறங்கும் முன் அவர்களது முதுகை தடவி விடுங்கள்.

அது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்
இடையே ஓர் உணர்வு பூர்வமான தொடர்பை உண்டு பண்ணும்.

சிறந்த முறையில் குழந்தை நித்திரை கொள்வதற்கும், சாப்பிட்ட உணவு விரைவில் செரிமானமாவதற்கும் காரணமாய்
அமையும்

6.குழந்தைகள் சற்று வளர்ந்து விட்டாலும் வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாக

கணவன் மனைவி குழந்தைகள் என்று ஒரே இடத்தில் உறங்குங்கள்.

அது உங்கள் குழந்தைகளின் உள்ளத்திலிருக்கும் பாரத்தை
மனக் கவலைகளை நீக்கி
உங்கள் மீது அவர்களையறியாத
ஓர் உள்ளார்ந்த பிணைப்பை ஏற்படுத்தி விடும்.

7. குழந்தைகளின் வேண்டுதல்கள் தேவைகள் நிறைவேறாத பொழுது அவர்கள் அழுது மன்றாடி ஒரு பொருளை அடைய முயற்சிப்பதை தடுத்து நிறுத்துங்கள்.

ஏனெனில் அழுதால் ஒரு பொருள் கிடைக்கும் என்ற மனப்பதிவை அது அவர்களுக்கு உண்டு பண்ணி பிடிவாதத்தால் சாதிக்க நினைக்கின்ற எண்ணம் அவர்களிடம் உண்டாகி விடும்.

8. உண்மை, நேர்மை,
துணிவு,
விட்டுக் கொடுத்தல், மன்னித்தல்,
அன்பு காட்டல் போன்ற நல்ல பண்புகள் மீது அவர்களுக்கு ஆர்வத்தை
ஊட்டுங்கள்.

9. பொய், ஏமாற்று,
திருட்டு, அநீதியிழைத்தல், பெருமை, பொறாமை, சூழ்ச்சி செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளரவிடாமல் அவர்களை எச்சரித்து வையுங்கள்.

10. பாதை ஒழுங்குகளைக் கற்றுக்கொடுங்கள்.

பாதையில் செல்லும் போது அமைதியாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளப் பழக்குங்கள்.

உங்கள் குழந்தைகள் உங்களை அப்படியே பின்பற்ற முயற்சிப்பர். எனவே, நீங்கள் நல்ல முன்மாதிரியாக நடந்து அவர்களை வழிநடத்துங்கள்.


11. குழந்தைகளை படிக்கும் படி திணிக்காதீர்கள்.

கல்வியின் முக்கியத்துவம்,

ஏன் கற்க வேண்டும் என எடுத்துரையுங்கள்.

12. பிறருக்கு மத்தியில் குழந்தைகளை திட்டாதீர்கள்.

பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள்.

அது உளவியல் பிரிவினைகளை ஏற்படுத்தும்.

13. அவர்களின் விளையாட்டு, ஓய்வு நேரம், மகிழ்ச்சிகரமான நேரங்களில் நீங்களும் அவர்களுடன் பங்கெடுங்கள்.

அவர்கள் பூரண பாதுகாப்புடனும், அன்பான அரவணைப்புடனும் வாழ்கின்றனர் என்பதை அவர்கள் உணரும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள்.

14. பிள்ளைகளின் அறிவை கண்ணியப்
படுத்துங்கள்;

அவர்கள், பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதை அவதானியுங்கள்.

15. குழந்தைகள் நவீன தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள உதவுங்கள்;

 கணினி-இணையப் பயன்பாட்டை அவர்கள் அறிந்துகொள்ளவும்,
அதன் மூலம் பயன்பெறவும் வழிகாட்டுங்கள்.

16. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை போதிக்க வேண்டும்.

அது எதிர்காலத்தில் நேர்மையானவர்களாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.

17. அவர்கள் உடல் ஆரோக்கியம் மிக்க விளையாட்டுக்களில் ஈடுபட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுங்கள்.

18. இயற்கை உபாதைகளை அடக்கி வைக்க கூடாது என்பதை கற்றுக்கொடுங்கள்.

குறிப்பாக சிறுநீரை அடக்கி வைப்பது ஆபத்தானது

(பயந்த சுபாவத்தையும் தாழ்வு மனப்பான்மையையும் உண்டுபண்ணும்,

சிறுநீரகத்தில் மற்றும் சிறுநீர்ப் பாதையில் கற்கள் உருவாகும்) என்பதை புரியவையுங்கள்.

இப்படி தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொண்டால் பிள்ளைகளிடம் நல்லவிதமான மாற்றங்களை விரைவில் காண்பீர்கள்.

குறிப்பு:

நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு

எந்த மருந்துகளாலும் மருத்துவ முறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

வெள்ளி, 22 நவம்பர், 2019

அந்தரங்க பகுதியில் வளரும் முடி பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் !


அந்தரங்க பகுதியில் வளரும் முடி பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் !

உடலில் உள்ள மிகவும் சென்சிடிவ்வான பகுதிகளில் ஒன்று அந்தரங்க பகுதி. இந்த பகுதியில் அனைவருக்குமே முடி வளரும். இந்த பகுதியில் வளரும் முடியைக் குறித்து ஏராளமான கட்டுக்கதைகள் மக்களிடையே உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான கருத்துக்களை தெரிவிப்பார்கள்.

அந்தரங்க பகுதியில் வளரும் முடி பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள், antharangam, aan urppil mudi, pen uruppil mudi, aanuruppu, Hair grows in the pubic area

ஆனால் அந்தரங்க பகுதியில் வளரும் முடியைக் குறித்த சில உண்மைகளை ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இங்கு அந்தரங்க பகுதியில் வளரும் முடி பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

#1
அந்தரங்க பகுதியில் வளரும் முடி பாலியல் நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் என்று பல நிபுணர்களும் கூறுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் சீன ஆய்வு ஒன்றில், ஆண்களின் அந்தரங்க பகுதியில் வளரும் முடியில் உள்ள பாபிலோமா வைரஸ், பெண்களுக்கு எளிதில் நோய்த்தொற்றுக்களை உண்டாக்கும் என தெரிய வந்துள்ளது. எனவே ஒவ்வொருவரும் அந்தரங்க பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

#2
தலையில் இருப்பது போன்ற பேன், அந்தரங்க பகுதியில் வளரும் முடியிலும் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே அந்தரங்க பகுதியில் பேன் எதுவும் வராமல் இருக்க வேண்டுமானால், அவ்வப்போது அப்பகுதியில் வளரும் முடியை நீக்க வேண்டும்.

#3
பலரும் அந்தரங்க பகுதியின் சுத்தம் என்று வரும் போது, அப்பகுதியில் வளரும் முடியை ஷேவ் செய்து நீக்கினால் போதும் என்று நினைக்கின்றனர். ஆனால் எந்த ஒரு பாலியல் மருத்துவ ஆய்விலும் அம்மாதிரியான நன்மை ஏதும் நிரூபிக்கப்படவில்லை.

#4
உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், அந்தரங்க பகுதியில் வளரும் முடியை சுத்தம் செய்யும் போது மிகுந்த ஆபத்தை சந்திப்பார்கள். ஆய்வு ஒன்றிலும், உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள் அந்தரங்க பகுதியை ஷேவ் செய்யும் போது மற்றவர்களை விட இருமடங்கு அதிகமாக சிராய்ப்பைப் பெறுவதாக தெரிய வந்துள்ளது.

#5
அந்தரங்க பகுதியில் வளரும் முடியை ஷேவ் செய்யாமல் அப்படியே விட்டாலும், அது குறிப்பிட்ட அளவு தான் வளரும். ஒருவேளை, அப்பகுதியில் வளரும் முடியின் வளர்ச்சி அதிகம் இருந்தால், ஷேவ் செய்யாமல் இருப்போரின் கெதியை நினைத்துப் பாருங்கள்.

#6
அந்தங்க பகுதியில் வளரும் முடியும் வெள்ளையாகும். ஆனால் உடலிலேயே மிகவும் தாமதமாக வெள்ளையாகும் முடி என்றால் அது அந்தரங்க பகுதியில் வளரும் முடி தான்.
Thanks-Tamilpiththan
Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

100 பயனுள்ள மருத்துவ குறிப்புகள்


100 பயனுள்ள மருத்துவ குறிப்புகள்

1.காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியை பாதிக்கும்.

6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.எலும்புகள்

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவி விடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும் கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.

பெண்களுக்காக…
10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.பெண்

12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா..? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.

கர்ப்பக் கால கவனிப்பு
14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே…!

15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.

16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.கர்ப்பம்

17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.

20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.

26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.

27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.

28. தாய்ப்பாலை சேமித்து கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.

31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.உணவே மருந்து….!

32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்..!

33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

உணவே மருந்து
34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.

42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.மருந்தே வேண்டாம்….!

49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.

50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.

மருந்தே வேண்டாம்
51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.

52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும் தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனை தராது.

இதயம்
53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபட தேவையில்லை.

55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.இதயம்

57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

கிட்னியை கவனியுங்கள்
58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.

59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்!

60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.

61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை.

பல்லுக்கு உறுதி
62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.

63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.

65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.

கிட்னி
66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.

68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.

69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.

70. முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.

71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள்,வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.

72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.

74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்

75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஜெனரல் வார்டு
76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.

77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்… உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.வைத்தியசாலை

78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.

79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.

80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்… வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.

81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா..? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.

82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.

83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.

84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை.

85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.நில்… கவனி… செல்…!

86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது… தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே – வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.

நோயாளிகள் தங்கும் இடம்
87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.

88. ‘போஸ்ட்மார்ட்டம்’ என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்… பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.

89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.

90. ‘போரடிக்கிறது’ என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்… தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.

91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.

92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்… கறுப்பே சிறப்பு.

93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது… அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.

எச்சரிக்கை
95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.

97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.

98. அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்

99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.

100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும், ஆகவே பச்சை குத்துவதை தவிர்ப்பது சிறந்தது...

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

வியாழன், 21 நவம்பர், 2019

பெண்களுக்காக… 50 முக்கிய இயற்கை மருத்துவ குறிப்புகள்:


பெண்களுக்காக… 50 முக்கிய இயற்கை மருத்துவ குறிப்புகள்:

*முடி அடர்த்தியாக வளர....! பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான். இன்றைய அவசர உலகில் பெண்களுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல். அதுமட்டுமல்லாது இன்றைய பெண்கள் தமது கூந்தலை முடியை கலர் செய்வது, ரீபொன்டிங், கேர்லிங் என பல வகைகளில் தமது முடியை அலங்கரித்துக் கொள்கின்றனர்.*

 *சக்திவாய்ந்த இரசாயனங்களை தலைமுடிகளுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் விரைவாக சேதமடைகிறது. மேலும் நமது சுற்றுப்புற சுழலில் உள்ள மாசுக்களால் கூந்தல் பாதிப்படைகின்றது. அது போன்ற பாதிப்பை வேலைக்குச் செல்லும் பெண்களே அதிகளவில் சந்திக்க நேரிடுகிறது. தலை முடி அடர்த்தி குறைவாக இருக்கிறதே என இனி கவலைப்பட தேவையில்லை.*

*தலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்:*

*1. ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.*

*2. முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய்யை தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.*

*3. செம்பருத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.*

*4. கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.*

*5. கடுக்காய், செம்பருத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.*

*6. வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.*

*7. ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும்,அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.*

*8. மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும்.*

*9. செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றைக் கலந்து மிக்சியில் அரைத்து, தயிர் சிறிதும் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊர வைத்து குளித்தால், தலை “ஜில்’ லென்றிருக்கும். தலை முடி “புசுபுசு’வென அதிகமாய் ஜொலிக்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வந்தால், அரை அடி கூந்தலும் ஆறடி கூந்தலாகி விடும்.*

*10. மருதாணிஇலையை நன்றாக அரைத்து சிறு சிறு அடைகளாகத் தட்டி நிழலில் உலர்த்தித் தேங்காய் எண்ணெயில் சில நாள்கள் (2 அல்லது 3 நாட்கள்) ஊறவிட்டு, அதை நன்றாகக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்தால் நீண்ட அடர்த்தியான தலைமுடி வளரும். அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும். பொதுவான குறிப்புகள் ....!*

*11. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.*

*12. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது, எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.*

*13. மருதாணி இலையை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அரைத்து கால்வெடிப்புக்கும், கால் எரிச்சலுக்கும் வெளிப்பூச்சாக உபயோகித்தால் நல்ல பலன் பெறலாம்.*

*14. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வராமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.*

*15. பெண்களுக்கு மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.*

*16. மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா..? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.*

*17. அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் தொப்பை கரைய ஆரம்பிக்கும். வெள்ளைப்படுதல், ரத்தப்போக்கு....!*

*18. தினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நீங்கும். கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது.*

*19. பப்பாளிக் காயை இடித்து சாறு எடுத்து. ஒரு அவுன்ஸ் சாப்பிட்டால், மாதவிலக்கு சமயங்களில் வலி குறையும்.*

*20. பச்சை வாழைக்காயை இடித்து, வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கு கால ரத்தப்போக்கு கட்டுப்படும்.*

*21. நல்லெண்ணெயுடன், முட்டையை கலந்து குடித்தால், மாதவிலக்கு பிரச்சினைகள் தீரும்.*

*22. புளியம்பழத்தோல், முருங்கைக்காய், சுக்கு மூன்றையும் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால், மாதவிலக்கு குளறுபடிகள் இருக்காது.*

*23. மாம்பழக் கொட்டையை காயவைத்து பொடியாக்கி, தேன் கலந்து சாப்பிட்டால் மாதவிலக்கு ரத்தப்போக்கு குறையும்.*

*24. கொள்ளு பயறு அவித்த நீரை குடிப்பது மாதவிலக்கு காலத்துக்கு ஆரோக்கியம்.*

*25. புளி, மஞ்சள், மல்லி மூன்றையும் சேர்த்து அரைத்து, சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்சினைகள் ஓரளவு கட்டுப்படும்.*

*26. பீட்ருட்டை உணவில் அதிகம் சேர்த்தல் இரத்த போக்கினால் ஏற்படும் இழப்பு சமன் செய்யப்படும்.*

*27. வேப்பமரப் பட்டை- பூ- வேர்- காய்- பழம் அனைத்தையும் அரைத்து, பாலில் கலந்து சாப்பிட்டால், கர்ப்பமாகும் சக்தி அதிகரிக்கும்.*

*28. உளுத்தம் பருப்பை நெய்யில் வறுத்து, பொடியாக்கி, பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உயிரணு உற்பத்தி அதிகரிக்கும்.*

*29. பேரீச்சம்பழம், கொத்தமல்லி இலை இரண்டையும் அரைத்து, பசும்பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் கர்ப்பம் தரிக்கும்! கர்ப்பக் கால கவனிப்பு...!*

*30. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.*

*31. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.*

*32. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.*

*33. கர்ப்பிணிகளின் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதில் வாழைப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.*

*34. கர்ப்பக் காலத்தில் மற்றும் பிரசவ காலத்துக்குப் பின்னும் தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் நடைபயிற்சி மிக நன்று.*

*35. கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.*

*36. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.*

*37. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.*

*38. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமி மற்றும் பரம்பரை நிறம்.*

*39. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.*

*40. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.*

*41. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம் துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.*

*42. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளை வாதத்தைக் கூட கொண்டு வரக்கூடும் தாய்ப்பால் நன்றாகச் சுரக்க....!*

*43. பப்பாளிப் பழத்தைத் தேனில் தொட்டு உண்டால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். இதைத் தாய்ப்பால் கொடுப்பவர்கள் தினமும் உண்ணலாம்.*

*44. குழந்தை பெற்ற தாய்மார்கள் தினம் சிறிது வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டுவர பால் அதிகம் சுரக்கும். குழந்தையும் கொழு கொழுவென ஆகும்.*

*45. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.*

*46. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.*

*47. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள் உணவே மருந்து….!*

*48. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்..!*

*49. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.உணவே மருந்து எல்லா வகை பழங்களையும் சாறு எடுத்து அருந்துவது உடலுக்கு நன்மை தரும்.*

*50. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வை வெளிப்பட வேண்டும்.*

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

திங்கள், 18 நவம்பர், 2019

சர்வதேச ஆண்கள் தினம் நவம்பர் 19


ஆண்களுக்கு ஒரு தினம் – ஏன்?

 ‘சர்வதேச ஆண்கள் தினம்’ (நவம்பர் 19).  எதற்கு ஆண்களுக்கு  என்று ஒரு தினம்? இந்த தினத்தின்முக்கியத்துவம் என்ன?

‘சர்வதேச பெண்கள் தினம்’ (மார்ச் 8) பிரபலம் அடைந்த அளவுக்கு, ஆண்கள் தினம் அவ்வளவு பிரபலமாகவில்லை. சமீப காலமாகத்தான் இதற்கான கொண்டாட்டங்கள், வருடா வருடம் அதிகரித்து வருகின்றன.

இதைப் பற்றிய ஒரு பார்வை…

IMD (International men’s Day) உலகம் முழுவதும், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு தினமாகக் குறிப்பிடப்படுகிறது.

உண்மையில் 1960களிலேயே  ‘ஆண்கள் தினம்’  தேவை என்ற அறை கூவல்கள் தொடங்கிவிட்டன. 1992ல் அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில், தாமஸ் ஆஸ்டர் என்பவரால் முதன் முதலில் இதற்கான விதை விதைக்கப்பட்டது.  எனினும், சட்ட பூர்வமாக, Dr Teelucksingh என்பவரால் 1999ம்ஆண்டு, Trindad – Tobagoவில்  கொண்டாடப்பட்டது.

இந்தியாவில், முதன் முதலில் 2007ம் வருடம்  ‘ஆண்கள் உரிமைகள் கழகம்’ என்ற அமைப்பு இந்த தினத்தைக் கொண்டாடியது. 2009ம் வருடம் முதல், ஆண்களின் பிரத்யேக ஆடைத் தயாரிப்பு நிறுவனமான  ‘Allen Solly’ உடன் இணைந்து, கொண்டாட்டங்கள் சூடு பிடித்துவருகின்றன.

Happy-International-Mens-Day-Wallpaper

இந்த நாள் கடைப்பிடிக்கப்படுவதின் முக்கிய நோக்கம் யாதெனில் –

சமுதாய முன்னேற்றத்துக்குப் பாடுபட்ட சிறந்த ஆண்களின் பங்களிப்பையும் தியாகத்தையும் கௌரவப்படுத்துவது.
சமூகத்தில் அதிகரித்து வரும் ஆண்களின் தற்கொலை விகிதம், ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை, தந்தை – மகன் உறவு சிக்கல்கள், சமூகத்தில் ஆண்கள்  எதிர்கொள்ளும் பாலினரீயிலான பிரச்னைகள் மற்றும் சவால்கள் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி, விவாதித்து, தகுந்த உதவிகள் மூலம் இவற்றை தீர்க்க  விழையும் முயற்சி ஆகும்.
இப்படிப்பட்ட தினங்களை கடைப்பிடிப்பது ,

இனப் பாகுபாடுகளை கடந்து,
பாலின உறவுகளை மேம்படுத்தி,
ஆண்-பெண் சமத்துவத்தை ஊக்குவித்து
பெண்கள் மற்றும் சக மனிதர்களை பரஸ்பரம் மதித்து பல முன் மாதிரியான ஆண்களை உருவாக்க ஏதுவாகும்.
இந்த கட்டுரையைப் படிக்கும் ஆண்கள் மற்றும் இணையம் தாண்டியும் வாழும் ஆண் குலத்துக்கும் ‘குங்குமம் தோழி’யின் இனிய ‘ஆண்கள் தின வாழ்த்துகள்.’ மேம்பட்ட மனித உறவுகளால் அமைந்த ஒரு சிறந்த சமுதாயமே நம் வருங்கால சந்த்தியினருக்கு நாம் அளிக்கும் கொடை. மனிதம் வளர்ப்போம்!
ஆண்கள் தின வாழ்த்துக்கள்...
நன்றி குங்குமம் தோழி.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

40 வயதுக்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்!


40 வயதுக்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்!

*சொந்த காலில் நில்!*
அப்பா, அம்மா, அண்ணன் என மற்றவர்களிடம் உதவி நாடி இருக்காமல், உங்கள் சொந்த காலில் நிற்கும் அளவிற்கு நீங்கள் நல்ல நிலையை அடைந்திருக்க வேண்டும்.
நால்வருக்கு உதவ வேண்டும் என்பதில்லை,
யாருடைய உதவியும் இன்றி வாழ்வது என்பதே ஓர் பெரிய கெளரவம் தான்.

*உலகம் சுற்றும் வாலிபன்!*
குறைந்தபட்சம் சிங்கபூர், மலேசியா-வாவது சென்று வந்துவிட வேண்டும்.
புது இடம், புதிய கலாச்சாரம் உங்களை நீங்களே மெருகேற்றிக் கொள்ள, புத்துணர்ச்சி அடைய பெருமளவு உதவும்.

*பேரார்வம்!*
பேரார்வம் என்பது உங்கள் வேலையை குறிப்பது.
ஆரம்பத்தில், வேலை வேண்டும் என்பதற்காக ஏதாவது வேலையில் சேர்ந்திருக்கலாம்.
ஆனால், 30 வயதுக்குள்ளாவது உங்களுக்கு பிடித்த துறை / தொழில் / வேலையில் சேர்ந்துவிட வேண்டும்.

*தோல்வி!*
தோல்வியில் கற்காத பாடத்தை நீங்கள், வேறு எங்கும் கற்க முடியாது. தோல்வி உங்களை ஒழுங்குப்படுத்தும் ஆசான்.
ஓர் தோல்வியையாவது நீங்கள் சந்தித்துவிட வேண்டும். இல்லையேல், 30 வயதை கடந்த வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை கையாள முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படலாம்.

*முதலீடு!*
சம்பாதித்த பணத்தை, வருமானம் ஈட்டும் வகையில் எதிலாவது முதலீடு செய்து வைத்துவிட வேண்டும்.
அதை செலவு செய்யாமல், வருங்காலத்திற்காக சேமிக்க வேண்டும்.

*தீய பழக்கம்!*
ஏதேனும் ஒரு கெட்டப் பழக்கத்தையாவது 30 வயதுக்குள் நிப்பாட்டி விட வேண்டும்.
புகை, மது, கெட்ட வார்த்தை பேசுதல், பெண்மையை கொச்சையாக எண்ணுதல் என எதையாவது ஒன்றையாவது.
எந்த கெட்டப் பழக்கமும் இல்லையா,
நீங்களே உங்களுக்கு ஒரு சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள்.
 ஏனெனில், தூய நல்லவர்களை இந்த உலகம் கேலி கிண்டல் தான் செய்யும்.

*உண்மையான நட்பு!*
எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், எவ்வளவு பெரிய வெற்றி வந்தாலும், உங்கள் அருகில் நின்று தோள் கொடுக்க ஓர் தோழமை.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான தோழமை அமைத்துக் கொள்ள வேண்டும்.

*பிடிக்காவிடில் பிரிவு!*
ஓர் நபருடன் பழகுவது பிடிக்கவில்லையா, உங்கள் சுற்றதிர்காகவும், அலுவலக நண்பர்களுக்காகவும் விட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்களா?
வேண்டவே வேண்டாம்.
முற்றிலுமாக பிரிந்துவிடுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு நல்லது நினைக்கும் நபர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு இனி நீங்கள் பயணம் செய்வது தான் நல்லது.

*சேமிப்பு!*
பெரும்பாலும் 30 வயதை கடக்கும் போது, சிலர் திருமணம் ஆகியும், சிலர் குழந்தை குட்டி என இருப்பார்கள்.
எனவே, அடுத்த தலைமுறைக்கான சேமிப்பை அளவிற்கு குறையாமல் எடுத்து வைக்க வேண்டும்.
இது உங்களுடைய கடமை.

*கைதேர்ந்தவர்!*
நீங்கள் செய்யும் பணியில் நீங்கள் கைதேர்ந்தவர் என்ற நற்பெயருடன் விளங்க வேண்டும்.
அட, அவரு கிட்ட இந்த வேலைய கொடுங்க, சரியா செய்வார் என நால்வர் கூற வேண்டும்.

*ஆராய்ந்து செயல்படுதல்!*
கனிமங்களை ஆராய தெரிந்தவர்கள் தான் ஆராய்ச்சியாளர்கள் என்றில்லை.
மனிதர்களை ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

*நேரம் பொன் போன்றது!*
நேரத்தை அளந்து செலவு செய்ய வேண்டும்.
30 வயதுக்கு மேல் நேரத்தை வீண் விரயம் செய்வது, உங்கள் வாழ்க்கையில் பெரும் இழப்பாக அமையும்.

*நெட்வர்க்!*
ஊரோடு ஒத்துவாழ் என்பார்கள்.
 ஆம், 30 வயதுக்கு மேல் நீங்கள் ஓர் நெட்வர்க் போல, பணியிடம், வாழ்விடத்தில் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
இது உங்களை பல நிலைகள் உயர உதவும்.

*நீங்களாக இருங்கள்!*
மற்றவர்களுக்காக உங்களை மாற்றி அமைத்துக் கொண்டு வாழ தேவையில்லை. நீங்கள் நீங்களாக வாழ வேண்டிய தருணம் இது.

*படிப்பில் உயரம்!*
உங்கள் துறை சார்ந்த படிப்பில், முழுமை அடைந்திருக்க வேண்டும்.
பி.எச்.டி முடித்தால் முழுமை  என்றில்லை.
 இன்றைய அப்டேட் என்ன என்று அறிந்து வைத்திருந்தாலே போதுமானது.

வெள்ளி, 15 நவம்பர், 2019

உலக பொறுமை தினம் நவம்பர் 16.


உலக பொறுமை தினம் நவம்பர் 16.

பொறுமை—நம்பிக்கையோடு சகித்திருப்பது

முன்பு எப்போதையும்விட இப்போது நமக்கு ரொம்பவே பொறுமை தேவை! ஏனென்றால், சமாளிக்க முடியாத அளவுக்குக் கடினமான இந்த “கடைசி நாட்களில்” நாம் வாழ்கிறோம். (2 தீ. 3:1-5) நம்மைச் சுற்றியிருக்கும் நிறைய பேருக்கு பொறுமையே இல்லை. சுயநலவாதிகளாகவும், வாக்குவாதம் செய்கிறவர்களாகவும், சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். அதனால், நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘என்ன சுத்தியிருக்கிற மக்கள மாதிரி நானும் பொறுமை இல்லாம நடந்துக்குறேனா? பொறுமையா இருக்குறதுனா உண்மையிலேயே என்ன? பொறுமைங்குற குணத்த என் சுபாவத்தோட ஒரு பாகமா ஆக்கிக்குறதுக்கு நான் என்ன செய்யணும்?’

பொறுமை என்றால் என்ன?

பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் “பொறுமை” என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? வெறுமனே ஒரு பிரச்சினையைப் பொறுத்துக்கொள்வதை அது அர்த்தப்படுத்துவது கிடையாது. அதற்குப் பதிலாக, பிரச்சினைகளை நம்பிக்கையோடு சகித்திருப்பதைத்தான் அது அர்த்தப்படுத்துகிறது. அதாவது, நிலைமைகள் சரியாகும் என்ற நம்பிக்கையோடு இருப்பதை அது அர்த்தப்படுத்துகிறது. பொறுமையோடு நடந்துகொள்ளும் ஒருவர், தன்னைப் பற்றி மட்டுமே யோசிக்க மாட்டார்; மற்றவர்களுடைய உணர்ச்சிகளையும் கருத்தில் எடுத்துக்கொள்வார். தன்னைக் காயப்படுத்தியவர்களுடைய அல்லது அவமானப்படுத்தியவர்களுடைய உணர்ச்சிகளையும் அவர் மதிப்பார். தனக்கும் தன்னைக் காயப்படுத்தியவர்களுக்கும் இடையில் ஒரு சுமூகமான உறவு நிச்சயம் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு இருப்பார். அதனால்தான், அன்பு என்ற குணத்திலிருந்து பொறுமை என்ற குணம் பிறப்பதாக பைபிள் சொல்கிறது.* (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (1 கொ. 13:4) அதோடு, பொறுமை என்ற குணம், ‘கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களில்’ ஒன்று! (கலா. 5:22, 23) அதனால், உண்மையிலேயே பொறுமையாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

பொறுமை என்ற குணத்தை எப்படி வளர்த்துக்கொள்வது?
பொறுமையை வளர்த்துக்கொள்வதற்கு, கடவுளுடைய சக்தியின் உதவியைக் கேட்டு நாம் அவரிடம் ஜெபம் செய்ய வேண்டும்; தன்னை நம்புபவர்களுக்கு அவர் அந்தச் சக்தியைக் கொடுக்கிறார். (லூக். 11:13) அந்தச் சக்திக்கு அதிக வல்லமை இருப்பது உண்மைதான்; ஆனால், நாம் செய்த ஜெபத்துக்குத் தகுந்தபடி உழைப்பது அவசியம். (சங். 86:10, 11) அதாவது, ஒவ்வொரு நாளும் பொறுமையோடு இருப்பதற்காக நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும்; அந்தக் குணத்தை நம் சுபாவத்தின் ஒரு பாகமாக ஆக்கிக்கொள்ள வேண்டும். ஆனால், சிலசமயங்களில் நாம் பொறுமை இழந்துவிடலாம். அப்படியென்றால், தொடர்ந்து பொறுமையோடு இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

இயேசுவின் பரிபூரண முன்மாதிரியைப் பற்றி வாசித்து, அதை ஆழமாக யோசித்துப்பார்க்க வேண்டும். “புதிய சுபாவத்தை” பற்றி பவுல் பேசியபோது, “கிறிஸ்து தருகிற சமாதானம் உங்கள் இதயங்களில் ஆட்சி செய்யட்டும்” என்று சொன்னார். அந்தச் சுபாவத்தில் பொறுமையும் அடங்குகிறது! (கொலோ. 3:10, 12, 15) கிறிஸ்து தருகிற சமாதானம் நம் இதயங்களில் ஆட்சி செய்ய வேண்டுமென்றால், நாம் இயேசுவின் உதாரணத்தைப் பின்பற்ற வேண்டும். அதோடு, சில விஷயங்களைச் சரியான நேரத்தில் கடவுள் சரிசெய்வார் என்று நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை இருந்தால், நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் சரி, நாம் பொறுமை இழந்துவிட மாட்டோம்.—யோவா. 14:27; 16:33.

சீக்கிரத்தில் புதிய உலகம் வர வேண்டுமென்று நாம் எல்லாரும் ஆசைப்படுகிறோம். ஆனால், யெகோவா நம்மிடம் எவ்வளவு பொறுமையைக் காட்டியிருக்கிறார் என்பதை யோசித்துப்பார்க்கும்போது, பொறுமையோடு இருப்பதற்கு நாமும் கற்றுக்கொள்கிறோம். “யெகோவா தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றத் தாமதிப்பதாகச் சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அவர் தாமதிப்பதில்லை. ஒருவரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனம் திருந்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதனால்தான் உங்கள்மேல் பொறுமையாக இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (2 பே. 3:9) யெகோவா எவ்வளவு பொறுமையோடு இருக்கிறார் என்பதை யோசித்துப்பார்க்கும்போது, நாமும் மற்றவர்களிடம் பொறுமையோடு இருப்போம். (ரோ. 2:4) நாம் எந்த மாதிரியான சூழ்நிலைகளில் பொறுமை காட்ட வேண்டியிருக்கலாம்?

பொறுமை காட்ட வேண்டிய சில சூழ்நிலைகள்
நம்முடைய அன்றாட வாழ்க்கையில், பொறுமையைக் காட்ட வேண்டிய நிறைய சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. உதாரணத்துக்கு, முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டுமென்பதற்காக, இன்னொருவர் பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் குறுக்கிடாமல் இருக்க நமக்குப் பொறுமை தேவை! (யாக். 1:19) யாராவது நம்மை எரிச்சலூட்டும்போதும் நமக்குப் பொறுமை தேவை! இந்த மாதிரியான சமயங்களில், நாம் பொறுமை இழந்துவிடக் கூடாது. நம்முடைய பலவீனங்களை யெகோவாவும் இயேசுவும் எப்படிப் பொறுத்துக்கொள்கிறார்கள் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும். உதாரணத்துக்கு, நாம் அடிக்கடி சின்னச் சின்ன தவறுகளைச் செய்துவிடுகிறோம். ஆனால், அவர்கள் இரண்டு பேரும் அவற்றையே பார்த்துக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, நம்முடைய நல்ல குணங்களைத்தான் பார்க்கிறார்கள்; மாற்றங்கள் செய்வதற்குப் பொறுமையோடு காலத்தை அனுமதிக்கிறார்கள்.—1 தீ. 1:16; 1 பே. 3:12.

நாம் சொன்ன அல்லது செய்த ஏதோவொன்று தவறு என்பதாக யாராவது சுட்டிக்காட்டும்போதும் நமக்குப் பொறுமை தேவை! அதுபோன்ற சமயங்களில், ஒருவேளை நாம் உடனடியாகப் புண்பட்டுவிடலாம் அல்லது நாம் சொன்னதையோ செய்ததையோ நியாயப்படுத்தலாம். ஆனால், அப்படிச் செய்ய வேண்டாமென்று பைபிள் சொல்கிறது. “பெருமையைவிட பொறுமை நல்லது. சட்டென்று கோபப்படாதே; இது முட்டாளின் அடையாளம்” என்று அது சொல்கிறது. (பிர. 7:8, 9, அடிக்குறிப்பு) நம்மேல் சொல்லப்பட்ட குற்றச்சாட்டு முழுக்க முழுக்கத் தவறென்றாலும், பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்; பேசுவதற்கு முன் நன்றாக யோசிப்பதும் முக்கியம். மற்றவர்கள் தன்மேல் பொய்க் குற்றம் சாட்டியபோது, இயேசு இதைத்தான் செய்தார்.—மத். 11:19.

பிள்ளைகள் தங்களுடைய மனப்பான்மையை அல்லது தவறான ஆசைகளை மாற்றிக்கொள்வதற்கு, பெற்றோர்கள் உதவ வேண்டியிருக்கலாம். அப்போது, பெற்றோர்கள் பொறுமையாக இருப்பது ரொம்பவே அவசியம். மத்தியாஸ் என்ற சகோதரரின் அனுபவத்தைப் பார்க்கலாம். அவர் இப்போது ஸ்கேண்டினேவியாவில் இருக்கும் பெத்தேலில் சேவை செய்கிறார். அவர் டீனேஜில் இருந்தபோது, அவரோடு பள்ளியில் படித்தவர்கள், அவருடைய மத நம்பிக்கைகளைப் பற்றி கேலி செய்துகொண்டே இருந்தார்களாம். ஆரம்பத்தில், இதைப் பற்றி அவருடைய அப்பா அம்மாவுக்குத் தெரியவில்லை. ஆனால், தன்னுடைய மத நம்பிக்கைகளை மத்தியாஸ் சந்தேகப்பட ஆரம்பித்ததை அவர்கள் கவனித்திருக்கிறார்கள். அந்தச் சமயங்களில், தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் ரொம்பவே பொறுமை தேவைப்பட்டதாக மத்தியாஸின் அப்பா கில்லிஸ் சொல்கிறார். “கடவுள் யாரு? பைபிள கடவுள்தான் கொடுத்தாருன்னு எப்படி நம்புறது? நாம அதை செய்யணும் இதை செய்யக் கூடாதுனு கடவுள்தான் சொல்றாருன்னு நமக்கு எப்படி தெரியும்?” போன்ற கேள்விகளை மத்தியாஸ் கேட்டிருக்கிறார். அதோடு, அவருடைய அப்பாவிடம், “நீங்க நம்புறதையெல்லாம் நானும் நம்பலேங்குறதுக்காக, நான் தப்பான வழியில போறேன்னு ஏன் சொல்றீங்க?” என்றும் கேட்டிருக்கிறார்.

தன்னுடைய டீனேஜ் பையன் பேசுவதை ஓர் அப்பா பொறுமையாகக் கேட்கிறார்
“சிலசமயத்துல எங்க பையன் கோபமா பேசுவான். ஆனா, அந்த கோபம் என் மேலயோ அவனோட அம்மா மேலயோ இல்ல; சத்தியத்தின் மேலதான். ஏன்னா, சத்தியம் அவன் வாழ்க்கைய கட்டுப்படுத்துறதா அவன் நினைச்சான்” என்று கில்லிஸ் சொல்கிறார். தன்னுடைய மகனுக்கு கில்லிஸ் எப்படி உதவினார்? “நானும் என் பையனும் உட்கார்ந்து மணிக்கணக்கா பேசுவோம்” என்று அவர் சொல்கிறார். பொதுவாக, மத்தியாஸ் பேசுவதை கில்லிஸ் பொறுமையாகக் கேட்பாராம்; மத்தியாஸுடைய உணர்ச்சிகளையும் கருத்துகளையும் புரிந்துகொள்ள சில கேள்விகளையும் கேட்பாராம். சிலசமயங்களில், ஏதோவொரு விஷயத்தை விளக்கிவிட்டு, ஒரு நாளோ அதற்கும் மேலாகவோ அதைப் பற்றி யோசிக்கும்படியும், பிறகு அதைப் பற்றிப் பேசலாமென்றும் சொல்வாராம். மற்ற சமயங்களில், மத்தியாஸ் சொன்னதைப் பற்றி யோசித்துப்பார்க்க தனக்கு சில நாட்கள் தேவை என்று சொல்வாராம். இப்படித் தவறாமல் பேசியதன் மூலம், மீட்புவிலை... நம்மேல் யெகோவா வைத்திருக்கும் அன்பு... நம்மை ஆட்சி செய்வதற்கு யெகோவாவுக்கு இருக்கும் உரிமை... ஆகியவற்றைப் பற்றி மத்தியாஸ் நன்றாகப் புரிந்துகொண்டாராம். “இதுக்கெல்லாம் ரொம்ப நேரம் தேவைப்பட்டுச்சு. நிறைய சமயங்கள்ல கஷ்டமாத்தான் இருந்துச்சு. ஆனா, கொஞ்சம் கொஞ்சமா யெகோவாமேல இருக்குற அன்பு அவனுக்கு அதிகமாச்சு. எங்க மகனோட டீனேஜில, அவனுக்கு பொறுமையா உதவுறதுக்காக நாங்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைச்சுது. நாங்க சொன்ன விஷயங்கள் அவனோட மனசுல பதிஞ்சுது. இத நினைக்குறப்போ எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று கில்லிஸ் சொல்கிறார்.

தங்களுடைய மகனுக்குப் பொறுமையாக உதவி செய்துகொண்டிருந்த அதேசமயத்தில், யெகோவா தங்களுக்கு உதவுவார் என்றும் மத்தியாஸின் அப்பா அம்மா நம்பிக்கையோடு இருந்தார்கள். “மத்தியாஸ நாங்க ரொம்ப நேசிக்குறதாவும், விஷயங்கள புரிஞ்சுக்க யெகோவா அவனுக்கு உதவணும்னு கேட்டு நாங்க ஊக்கமா ஜெபம் செய்றதாவும் அவன்கிட்ட அடிக்கடி சொல்வேன்” என்று கில்லிஸ் சொல்கிறார். பொறுமையோடு இருந்ததையும் விட்டுக்கொடுக்காமல் இருந்ததையும் நினைத்து கில்லிஸும் அவருடைய மனைவியும் சந்தோஷப்படுகிறார்கள்.

ரொம்ப நாட்களாக வியாதிப்பட்டிருக்கும் குடும்பத்தாரையோ நண்பர்களையோ கவனித்துக்கொள்ளும்போதும் நமக்குப் பொறுமை தேவை! எலன் என்பவருடைய அனுபவத்தைப் பார்க்கலாம்.* (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இவரும் ஸ்கேண்டினேவியாவில்தான் இருக்கிறார்.

உடல்நிலை சரியில்லாத தன்னுடைய கணவனிடம் ஒரு மனைவி பொறுமையாக நடந்துகொள்கிறார்
சுமார் எட்டு வருஷங்களுக்கு முன்பு, எலனுடைய கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அது அவருடைய மூளையின் செயல்பாட்டை பாதித்தது. அதனால், சந்தோஷம்... துக்கம்... பரிதாபம்... என எந்த உணர்ச்சியும் அவருக்கு இல்லாமல் போய்விட்டது. இந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பது எலனுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. “ரொம்ப பொறுமையா இருக்க வேண்டியிருக்கு, நான் நிறைய ஜெபம் செய்றேன் . . . எனக்கு ரொம்ப பிடிச்ச வசனம், பிலிப்பியர் 4:13! அது எனக்கு ஆறுதலா இருக்கு. ‘என்னைப் பலப்படுத்துகிறவர் மூலம் எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கிறது’னு அந்த வசனம் சொல்லுது” என்கிறார் எலன். யெகோவா தரும் பலத்தாலும், அவருடைய ஆதரவாலும், இந்தச் சூழ்நிலையை எலன் பொறுமையாகச் சமாளித்துவருகிறார்.—சங். 62:5, 6.

யெகோவாவைப் போலவே பொறுமையோடு இருங்கள்
பொறுமையைக் காட்டுவதில் யெகோவாதான் மிகச் சிறந்த முன்மாதிரி! (2 பே. 3:15) யெகோவாவின் பொறுமையைப் பற்றி நாம் அடிக்கடி பைபிளில் படிக்கிறோம். (நெ. 9:30; ஏசா. 30:18) சோதோமை அழிப்பதென்று யெகோவா முடிவெடுத்தபோது, ஆபிரகாம் யெகோவாவிடம் அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டார். அப்போது யெகோவா என்ன செய்தாரென்று ஞாபகம் இருக்கிறதா? அவர் ஆபிரகாமைத் தடுக்கவில்லை! ஆபிரகாம் எழுப்பிய ஒவ்வொரு கேள்வியையும் பொறுமையோடு கேட்டார், ஆபிரகாமின் கவலைகளைப் புரிந்துகொண்டார். பிறகு, ஆபிரகாம் சொன்ன வார்த்தைகளையே திரும்பச் சொன்னதன் மூலம், அவர் பேசியபோது தான் பொறுமையோடு கேட்டுக்கொண்டிருந்ததை வெளிக்காட்டினார். சோதோம் நகரத்தில் 10 பேர் நீதிமான்களாக இருந்தால்கூட அதை அழிக்கப்போவதில்லை என்று அவருக்கு உறுதியளித்தார். (ஆதி. 18:22-33) யெகோவா எப்போதுமே பொறுமையைக் காட்டுகிறார்; அவர் ஒருபோதும் உணர்ச்சிவசப்படுவதில்லை!

பொறுமை என்ற குணம், புதிய சுபாவத்தின் ஒரு பாகம்! அது எல்லா கிறிஸ்தவர்களுக்கும் இருக்க வேண்டிய ஒரு குணம்! உண்மையிலேயே பொறுமையாக இருப்பதற்கு நம்மால் முடிந்ததையெல்லாம் செய்யும்போது, நம்மேல் அக்கறையாக இருக்கிற... நம்மிடம் பொறுமையைக் காட்டுகிற... நம் அப்பா யெகோவாவுக்கு நம்மால் புகழ் சேர்க்க முடியும். அதோடு, ‘விசுவாசத்தாலும் பொறுமையாலும் கடவுளுடைய வாக்குறுதிகளைப் பெற்றவர்களுடைய’ பட்டியலில் நாமும் ஒருவராக இருக்க முடியும்.

‘கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களை’ விளக்கும் இந்தத் தொடர்கட்டுரையில், அன்பு என்ற குணத்தைப் பற்றி முதல் கட்டுரையில் சிந்தித்தோம்.

Posted by -
புவனாமகேந்திரன்,
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*