திங்கள், 30 ஜனவரி, 2017

மரபு_விதைகள்

நண்பர்களுக்கு வணக்கம் ..

நம் தமிழகத்தின் மரபு விதைகளை பாதுகாப்பதற்காக ஊர் ஊராக சென்று நாட்டு ரக சேகரித்து வருகிறோம் .. அந்த விதைகளை விவசாயிகளுக்கும், வீடுகளில் தோட்டம் அமைப்பதற்கும் கொடுத்து வருகிறோம் . உங்கள் பகுதிகளில் ஏதேனும் காய்கறி, கீரை, மூலிகை, நெல், சிறுதானியம், பருப்பு வகைகள், மரங்கள் என நம் மரபு விதைகள் எதுவாக இருந்தாலும் எங்களுடைய கிராம விதை வங்கிக்கு கொடுக்கலாம். எங்களிடமும் சில விதைகள் உள்ளது அவ்விதைகள் தேவையென்றாலும் எங்களிடம் வாங்கி பயிர் செய்து விதைகளை பாதுகாக்கலாம்.

*மரபு_விதைகள்
பள்ளித்தோட்டம்
மரபு_விதைகளின்_தாம்பூல_பைகள்*

ஆகியவற்றை எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்..

• 2014-16ஆம் ஆண்டுகளில் சேகரித்த 110க்கும் மேற்பட்ட மரபு விதைகளை பகிர்ந்து கொள்கிறோம். தேவைப்படுவோர் பெற்றுக்கொள்ளவும்.

தக்காளி:
• •அன்னஞ்சி தக்காளி
• • கொடி தக்காளி
• • மஞ்சள் காட்டுத்தக்காளி
• • சிவப்பு காட்டுத்தக்காளி

கத்தரி:
• *பச்சை கத்திரி
• *நெகமம் வரி கத்திரி
• *உடுமலை சம்பா கத்தரி
• *உடுமலை உருண்டை கத்தரி
• *திண்டுக்கல் ஊதா கத்தரி
• *மணப்பாறை கத்தரி
• *எலவம்பாடி கத்தரி அ வேலூர் முள் கத்தரி
• *சேலம் முள் கத்தரி
• *கண்ணாடி கத்தரி
• *நத்தம் கீரி கத்தரி
• *கும்கோணம் குண்டு கத்திரி
• *தொப்பி அ தக்காளி கத்தரி
• *கல்லம்பட்டி கத்தரி
• *நந்தவன பச்சை கத்தரி
• *கோபி பச்சை கத்தரி
• *ஊதா முள் கத்தரி
• *கொத்து கத்தரி
• *நாமக்கல் பொன்னு கத்தரி
• *வெள்ளை வரி கத்தரி
• *பச்சை குண்டு கத்தரி
• *வெண்வரி சம்பா கத்தரி
• *வெண்வரி  உருண்டை கத்தரி
• *மணச்சநல்லூர் கத்தரி
• *காரமடை வரி கத்தரி
• *காரமடை ஊதா கத்தரி
• *கடவூர் உருண்டை கத்தரி
• *வெங்கேரி கத்தரி

மிளகாய்
• *சம்பா மிளகாய்
• *முட்டி மிளகாய்
• *காந்தாரி மிளகாய் சிறியது
• *காந்தாரி மிளகாய் பெரியது
•  *குண்டு மிளகாய்
• *தோடு மிளகாய்

வெண்டை:
•     *வெண்டைக்காய்
•     *மலை வெண்டை
•     *சிவப்பு வெண்டை

கொடி வகைகள்:
• • பாகல்
• • மிதி பாகல்

• குடுவை சுரை
• நீளச் சுரை
• கும்பச்சுரை
• ஆள் உயர சுரை
•  உருட்டு சுரை
• செம்பு சுரை

•  திருச்சி நீள புடலை
•  தேனி நீள புடலை
•  குட்டை புடலை
•   பாப்பனூத்து தரை புடலை
   
• பச்சை பட்டை அவரை
•  பெல்ட் அவரை
•  கோழி அவரை
•  செடி அவரை
•  தம்பட்ட அவரை
•  கொத்தவரை

• நீள பீர்க்கங்காய்
• மெழுகு பீர்க்கங்காய் அ நுரை பீர்க்கங்காய்

• வெள்ளை பூசணி
• கையளவு பூசணி
• சக்கரைப் பூசணி
• பரங்கிக்காய்

பொரியல் தட்டை
• வெள்ளை தட்டை

பல்லாண்டு ரகங்கள்:
• மரத்துவரை
• கருங்கண் பருத்தி
• கோவில்பட்டி முருங்கை
• • பப்பாளி
• சுண்டக்காய்
• நாட்டு ஆமணக்கு


மலைக்காய்கறி ரகங்கள்:
• • வெள்ளை முள்ளங்கி
•  சிவப்பு முள்ளங்கி

• பீன்ஸ்
• வரி பீன்ஸ்
• கருப்பு பீன்ஸ்
• சிவப்பு பீன்ஸ்
• ரெட்டை பீன்ஸ்
• குத்துசெடி பீன்ஸ்
• இலங்கை பீன்ஸ்
• பச்சை பட்டாணி
• பழ வெள்ளரி
• வரி வெள்ளரி
• குமரி வெள்ளரி

கீரை ரகங்கள்
• அரைக்கீரை
• • முளைக்கீரை
• • பச்சை சிறுகீரை
• • சிவப்பு சிறுகீரை
• • பச்சை தண்டங்கீரை
• • சிவப்பு தண்டங்கீரை
• • பச்சை புளிச்சகீரை
• • சிவப்பு புளிச்சகீரை
• • மணதக்காளி கீரை
• • கொத்தல்லி
• • பருப்பு கீரை
• • பாலக்கீரை
• • அகத்திக்கீரை
• • காசினிக்கீரை
• • சிவப்பு முள் தண்டு கீரை
•     பச்சை முள் தண்டு கீரை
•     கொடி பசலைக்கீரை
•     சவுரிக்கீரை
தொய்யக்கீரை
குப்பை கீரை

• மூலிகைகள்•
• பூனைக்காலி
   தூதுவளை
• • முடக்கற்றான்
• • துளசி
• • திருநீற்றுப்பச்சிலை thaai basil & Italian basil
• *சதகுப்பை கீரை
• • செண்டுமல்லி அ துலுக்கசாமந்தி-மஞ்சள்-2ரகம்
• செண்டுமல்லி-ஆரஞ்சு-2ரகம்

விவசாயம் செய்யும் அளவிற்கு விதைகள் கிடைக்காது . வருங்காலத்தில் தங்களுக்கு தேவையான விதைகளை தாங்களே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும், பாரம்பரிய விதைகள் புழக்கத்திலேயே இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே விதைகள் கொடுக்கப்படுகிறது.

• அந்த பருவத்தில் விவசாயம் செய்ய....கடைகளைத் தேடி ஓடாமல் முந்தைய பருவத்திலேயே அதற்கான விதைகளை பக்குவமாக எடுத்து வைப்பது சிறந்தது..
தேவைப்படுவோர் தேவைப்படும் விதைகளை மட்டும் வாங்கிக்கொள்ளவும். வேலைப்பளு இருப்பதால் வாரம் ஒருமுறை புதன்கிழமை மட்டுமே விதைகளை அனுப்பி வைக்கப்படும்..

மரபு விதைகளை சேகரிப்பது தான் நோக்கம் .. தங்களிடம் மரபு விதைகள் ஏதேனுமிருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.. பாரம்பரிய கத்தரி வகைகள் நம் நாட்டில் 4000வகைகள் உண்டாம் .. தங்களுக்கு ஏதேனும் விவரம் தெரிந்தாலும் பகிர்ந்து கொள்ளவும் நன்றி ...

______________________!____________________

   *ஆதியகையின்_தாம்பூலம்*
                                                                                            திருமணத்திற்கு வந்து வாழ்த்திச் செல்லும் உறவுகளுக்கு தாம்பூலப்பை கொடுப்பது நம் மரபு. .. அதில் தேங்காய் கொடுப்பது சிறப்பாக இருந்தது .. பயண கலைப்பு நீங்க போகும் வழியில் தாகம் தீர்க்க அந்த அற்புத நீர் பயன்படும் நோக்கில் தேங்காயை தாம்பூலப்பைகளில் கொடுத்து அனுப்பினர் ..
                                            
                                              சமீப காலமாக மரக்கன்றுகள் வழங்கி வரும் நற்காரியங்களும் நடந்து வருகிறது .. அதேபோல நகரப்பகுதிகளில் நடக்கும் திருமண நிகழ்வுகளுக்கு வந்து செல்லும் உறவுகளுக்கு தாம்பூல பைகளில் நம் பாரம்பரிய விதைகளையும் கொடுக்கலாம் என நெறைய நண்பர்கள் கேட்டுக்கொண்டதன் படி கடந்த மாதங்களில் சில திருமணங்களுக்கு "ஆதியகை திருமண தாம்பூல விதைகள் " வழங்கி வருகிறது . நம் மரபு விதைகள் அனைவரிடமும் பகிரப்பட வேண்டுமென்பதன் நோக்கத்திலும், நகரங்களின் வீடுகளில் காய்கறி தோட்டங்கள் பெருக வேண்டுமெனவும் இந்த முயற்சி பரவலாக்கப்படுகிறது ..
                                           நண்பர்களுக்கு இவ்வாறான திருமண தாம்பூல விதைகள் தேவைப்படுமாயின் 20நாட்களுக்கு முன்னர் தகவல் கொடுக்கும் பட்சத்தில் விதைகள் தருகிறோம்.

_______________________!____________________!

*ஆதியகை_பள்ளித்தோட்டம்*
                                                                  ஊர் ஊராக போய் தோட்டம் அமைத்து கொடுத்துட்டு இருக்கோம். .. ஆனா சாமானியர்களுக்கு என தோட்டம் அமைத்து தந்தது இல்ல .. யாரும் அழைத்ததும் இல்லை .. இனி அதற்கான வேலையையும் செய்யனும் ..

                      வீட்டுத்தோட்டங்களுக்கு அடுத்த படியாக பள்ளித்தோட்டங்கள் அமைத்து கொடுக்கனும் .. கிராமங்களில் இருக்கும் பால்வாடி , ஆரம்பப்பள்ளிகள் என அடிப்படையான கல்வி நிலையங்களுக்கும் இனி தோட்டம் அமைத்த தர போகிறோம் .. பள்ளிகளில் இருக்கும் இடங்களில் தோட்டம் அமைக்க மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து வீடுகளிலும் அதை இயன்ற அளவு பின்பற்ற நம்மால் இயன்ற விழிப்புணர்வை கொடுக்கனும் ..
                 
                    உங்கள் பகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்கு தோட்டம் அமைக்க எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள் . அவ்வாறு தோட்டம் அமைக்க யார் வேண்டுமானாலும் தன்னார்வலர்களாக கலந்து கொள்ளலாம் ...
                 
                    தோட்டங்களை பள்ளியில் அமைத்து சுயசார்பு எனும் விதையை பிஞ்சுகளின் நெஞ்சில் விதைப்போம் ..
                    
                    நீங்கள் பள்ளியின் ஆசிரியர்களாகவோ , பொறுப்பாளர்களாகவோ , இருக்கலாம் .. நீங்கள் ஒத்துழைப்பு தரும் பட்சத்ததில் இது சாத்தியமான ஒரு விசயமாகும் ..
                    
                   மாணவர்களுக்கான கல்வியில் அவர்கள் உண்ணும் உணவை உற்பத்தி செய்வது எவ்வாறு எனும் வாழ்வாதார கல்வியை செய்முறையுடன் கற்றுக்கொடுக்க கை கோருங்கள் ..

_______
paramez.zurich@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது
8526366796 எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளவும்

Regards:
Aadhiyagai
Village seed bank
Oddanchatram
Dindigul dt

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

பூக்களில் உள்ள ரககியங்கள்:-

பூக்களில் உள்ள ரககியங்கள்:-

நீண்ட நாள் திருமணம் ஆகாத பெண்கள் ஆடி மாதத்தில் தாழம்பூ மூன்று நாட்கள் தொடரந்து தலையில் சூடினாள் விரைவில் திருமணம்  நடக்கும். ஆடி மாதத்தில் மட்டும் தான் தாழம்பூ சூட வேண்டும் மற்ற மாதத்தல் சூட கூடாது.

வாசனை உள்ள மலரில் வாசனை இல்லா மலரை சேர்த்து கட்ட கூடாது. கட்டினால் கணவன் மனைவி இடையே மன சஞ்சலம் உன்டாகும். கன்னிபெண்கள் இதை செய்தால் நல்ல கணவன் அமையாது.

யார் அவர்?..

*"நான் குழந்தையாக* இருந்தபோது என்வீட்டுக்கு ஒருவரை புதிதாக அழைத்து வந்தார் என் *அப்பா."*

அவரை என் *அம்மாவுக்கும்* பிடித்திருந்தது. இருவரும் என்னை விட அவரை அதிகம் கவனித்தனர்.

அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை பிடிக்கவில்லை. சீக்கிரமே அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிப் போனார்.

நாட்கள் செல்லச் செல்ல எனக்கும் அவரை மிகவும் பிடித்து விட்டது.

என் அப்பாவும் அம்மாவும் எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

அவரோ அறிவுரை எதுவும் கூறுவது இல்லை அவர் கூறுவது அனைத்தும் சுவாரசியமாகவே இருந்தது.

அவர் ஒரு அற்புதமான
கதை சொல்லி,
அவர் தன்னுடைய பேச்சுத் திறமையால் மணிக்கணக்கில் கட்டிப் போட்டுவிடுவார்.

காதல் கதைகளை உள்ளம் உருக சொல்லுவார். நகைச்சுவைகள் பல நலம் பட உரைப்பார். வீரக் கதைகளை உணர்ச்சிபொங்கக் கூறுவார்.

அறிவியல்,அரசியல் வரலாறு இன்னும் பலவற்றையும் கரைத்துக் குடித்தவர். கற்றுத்தருபவர்.

விந்தைகள்பல செய்து வியக்க வைத்தார்.
அவர் என்னை சிரிக்கவும் வைப்பார்..
சிந்திக்கவும் வைப்பார்.

அழவைத்து வேடிக்கையும் பார்ப்பார். அச்சுறுத்தியும் மகிழ்வார்.
ஆனந்தத்தில் மிதக்க வைப்பார்.அவஸ்தையிலும் மூழ்க அடிப்பார்.

நாட்கள் விரைந்தது .

நாளுக்கு நாள் அவரது பேச்சு அதிகரித்ததே தவிர குறையவில்லை. *அம்மாவுக்கு* இப்போதெல்லாம் அவரைப் பிடிப்பதில்லை.

அவரை வெளியே அனுப்பிவிட விரும்பினாள். ஆனால் அது முடியவில்லை.
*அப்பா* அவரைப் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை.

தற்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு உறவினர்கள் வருவதில்லை. உறவினர்களை சரியாக கவனிக்க முடியாமல் அவர் தடுத்தார்.

நெடுநாளைய நண்பர்களும் எங்களிடமிருந்து விலகிப் போனதற்கு அவர் காரணமானார்.

எனது தந்தை மது அருந்துவதை விரும்பமாட்டார்.
அவரோ மது அருந்துவதை உற்சாகத்துடன் ஊக்குவித்தார்.

சிகரெட் பிடிப்பது புகையிலை பயன்படுத்துவது இவற்றை ஒளிவு மறைவின்றி யார் இருந்தாலும்  தயக்கம் இல்லாமல் தவறில்லை என்பது போல்  தினந்தோறும் கூறி வந்தார்.

எங்கள் அன்றாட வாழ்க்கையில் உறவுமுறை முதல் உணவு முறை வரை  அவரால் மாற்றங்கள் ஏற்பட்டது .

நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது கூட குறைந்து போனது.

எனது *தாய் தந்தையர்* பின்பற்றச் சொல்லும் நல்ல விஷயங்களுக்கு எதிராகவே கருத்து கூறி வருவதை வழக்கமாகக் கொண்டார்.

நல்ல கருத்துக்களை அவர் காது கொடுத்துக் கேட்பதில்லை .

நாங்கள் எங்கு இடம் மாறினாலும் கூடவே வந்த அவரை தடுக்க முடிய வில்லை.

இப்போது  நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்தாலும் அவரைப் பார்க்கலாம்.

இன்னமும் ஹாலில் உட்கார்ந்துகொண்டு உங்களுடன் பேசக் காத்துக் கொண்டிருக்கிறார்.

நாங்கள் பேசுகிறோமோ இல்லையோ அவர் உங்களிடம் நிச்சயம் பேசுவார்.

அப்படி யார் அவர்?அவர் பெயர் என்ன? அவருக்கும் உங்களுக்கும் உள்ள பந்தம் என்ன? என்றுதானே கேட்கிறீர்கள்?

அவருடைய பெயரை சொன்னால் நீங்கள் இப்படிப் கேட்க மாட்டீர்கள்.

கொஞ்சம் இருங்கள் அவரைப் பற்றி இடைவிடாமல் சொன்னதில் தாகம் எடுத்துவிட்டது.

இதோ தண்ணீர் குடித்துவிட்டு வந்து அவர் யாரென்று கூறுகிறேன்.

சொல்கிறேன் கேளுங்கள்.

அவரை நாங்கள்  *"டிவி"* என்றழைப்போம். அவருக்கு திருமணம் ஆகி விட்டது.

அவருடைய மனைவியும் எங்கள் வீட்டில் நிரந்தர இடம் பிடித்துவிட்டார்.
அவருடைய மனைவியின்  பெயர் *கம்ப்யூட்டர்.*

இவர்களுக்கு ஒரு குழந்தையும் உண்டு. அவனும் எங்களோடு விடாப்பிடியாக ஒட்டிகொண்டான். அவன் பெயர் *கைபேசி*
இவர்களை  குடும்பத்துடன் வெளியே அனுப்பும் காலத்தை இறைவன் விரைவிலேயே தந்தருவானாக!

படித்ததில் பிடித்தது...

சனி, 28 ஜனவரி, 2017

முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை போக்க உதவும் வழிகள்...

முகத்தில் உள்ள கரும் புள்ளிகளை போக்க உதவும் வழிகள்...

தேன் இலவங்கப்பட்டை தோலுக்கான உடனடி சிகிச்சைகளில் ஒன்று. தேன் வெற்றிகரமாக புள்ளிகளை நீக்குகிறது. மற்றும் அது  தோலுக்கு மின்னல் போன்ற ஒளியைத் தருகிறது.

தேன் ஒரு சோட்டு எடுத்து, அத்துடன் இலவங்கப்பட்டை பொடி ஒரு சிட்டிகை சேர்த்து படுக்கைக்கு செல்லும் முன் இரவில்  உங்கள் முகத்தில் உள்ல புள்ளிகளின் மூது தடவவும். மறுநாள் காலை, சுத்தமான நீரினால் முகத்தை கழுவவும். இது தோலில்  சிகிச்சையை மெதுவாக செய்யும். ஆனால் திறப்பட நிறமூட்டலோடு கரும்புள்ளிகளையும் குறைக்க உதவுகிறது.

கற்றாழை

கற்றாழை இலையை வெட்டி ஒரு சுத்தமான கத்தி கொண்டு அதை இரண்டாக பிரித்துக் கொள்ளுங்கள். நேரடியாக வட்ட  இயக்கங்களில் உங்கள் முகத்தில் கற்றாழை ஜெல்லை தடவவும். சுமார் 15 நிமிடங்கள் கழித்து தண்ணீர் விட்டு கழுவ  வேண்டும்.

முகப்பருவை குறைக்க வேண்டுமென்பவர்கள், இதனை தினமும் தடவி வந்தால், பருக்களை குறைக்க முடியும். ஏனெனில்  இதில் ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி- பாக்டீரியல் பொருட்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் சருமத்தில் இருக்கும்  பாக்டீரியா அழிவதோடு, பருக்களால் சருமத்தில் காயங்கள் ஏற்படாமலும் தடுக்கும்.

வறட்சியான சருமம் இருந்தால், அதற்கு கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி வந்தால், அவை சருமத்தை  ஈரப்பசையுடன் வைப்பதோடு, சருமத்தை மென்மையாக்கும். குறிப்பாக பெண்கள் அளவான மேக்-கப் போட வேண்டும் என்று  நினைத்தால், அதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தடவி ஊற வைத்து, கழுவி பின் மேக்-கப் போட்டால், நன்றாக  இருக்கும்.

பப்பாளி

பப்பாளியில் உள்ள பாப்பெயின் நொதி தோலிலுள்ள புள்ளிகளை குறைக்கிறது மற்றும் தோலை புதுபிக்க செய்கிறது. மேலும்  பச்சை பப்பாளி கூழ், பழுத்த பப்பாளியை விட பாப்பெயின் அதிகமாக உள்ளது.

பொடுகை விரட்ட ஆறு சிறந்த இயற்கை வழிகள்!

பொடுகை விரட்ட ஆறு சிறந்த இயற்கை வழிகள்!

கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக அரிப்பு ஏற்படும். அரிப்பு  நீங்கவும், பொடுகை போக்கவும் இயற்கையான வழிமுறைகளை தெரிந்துகொள்வது நல்லது.

வெந்தயம்

வெந்தயத்தை தலைக்குதேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும். மிளகுதூளுடன் பால்  சேர்த்து தலையில்தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், "பொடுகு தொல்லை நீங்கும்". தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகுபிரச்னை நீங்கும்.

பாசிப்பயறு

பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் ஊறவைத்து பின்னர் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். கற்றாழை 
கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.

வேப்பிலை

வேப்பிலை கொழுந்து துளசி ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தால்  பொடுகுதொல்லை நீங்கும். துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம்  ஊறவைத்து கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்கும்.

மருதாணி

வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகுதொல்லை நீங்கும். நெல்லிக்காய் தூள், வெந்தயப்பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து,  சிறிதுநேரம் கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர பொடுகு நீங்கும்.

தேங்காய் பால்

தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை தலையில் நன்றாக தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை  அலசினால் பொடுகு மறைந்துவிடும். கூந்தல் பள பளக்கும்.

முட்டை

முதல்நாள் சாதம்வடித்த தண்ணீரை எடுத்துவைத்து, மறுநாள் அதை எடுத்து வைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். முட்டை வெள்ளைக் கரு, தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகுமறையும்.

மருத்துவக் குணங்கள் நிறைந்த மாதுளம் பூ!

மருத்துவக் குணங்கள் நிறைந்த மாதுளம் பூ!

நமது உடலில் இரத்தம் அசுத்தமானால் உடலில் பலவகையான நோய்கள் ஏற்படவாய்ப்பாகிறது. இரத்தத்தைச் சுத்தப்படுத்தி இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை கூட்டி, ஹீமோ குளோபின் அளவை சீர் செய்யவும் மாதுளம் பூ சிறந்த மருந்து. 

* உடல் நன்கு பலப்பட மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடைந்து நல்ல ஆரோக்கியம் உண்டாகும்.

* மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடையும் உடலும் புத்துணர்வு பெறும்.இல்லையென்றால் காலையில் நான்கு மாதுளம் பூவைத் தின்று சிறிது பால் பருகவும் தொடர்ந்து 40 நாட்கள் உட்கொண்டுவர ரத்த சுத்தி கிடைக்கும்.

* அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றம் கொள்கிறது. இதனால் வயிற்றுக் கடுப்பு உண்டாகிறது. இவர்கள் மாதுளம் பூவை கஷாயம் செய்து அருந்துவது நல்லது.

* மாதவிலக்கு நிற்கும் காலமான மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு அதிக மன உளைச்சல் உண்டாகும். கை, கால், இடுப்பு மூட்டுக்களில் வலி உண்டாகும். இவர்கள் மாதுளம் பூவை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளைஞம் அருந்தி வந்தால் இப்பிரச்சனைகள் நீங்கும். அதுபோல வெள்ளைபடுதல் குணமாகும்.

* பெண்களுக்கு கருப்பை நன்கு வருவடைய மாதுளம் பூவை கஷாயம் செய்து காலை வேளையில் அருந்திவந்தால் கருப்பை வலுவடையும். ஆண்களுக்கு மாதுளை பூவை காயவைத்து பொடி செய்து அதனுடன் அருகம்புல் பொடி கலந்து தேனில் குழைத்து ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும்.

* மாதுளம் பூக்களை நைத்து அத்துடன் இரண்டு மடங்கு நீர்விட்டுக் காய்ச்சவும். கொதி வந்ததும், இறக்கி வடிகட்டி அத்துடன் சிறிது தேன், எலுமிச்சம்பழச்சாறு சேர்த்துக் கலக்கி வாயில் ஊற்றிக் கொப்பளித்து தொண்டைக்குள் மெதுவாக இறக்கவும்.

* மாதுளம் பூவை பசும்பாலில் வேக வைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத் தளர்ச்சி நீங்கும். தாது பலம் பெறும்.

பெண்கள் ரெட் ஒயின் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்.

பெண்கள் ரெட் ஒயின் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்.

ரெட் ஒயின் அருந்துவதன் மூலமாகப் பெண்கள், தங்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்னையை சரிசெய்ய முடியும் என தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக, அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஒர் ஆய்வை நடத்தி உள்ளனர். அதில், ரெட் ஒயின், திராட்சைப்பழம், சாக்லேட், பாதாம், பிஸ்தா போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுப்பொருட்களை அதிகளவு சாப்பிடும் பெண்களுக்கு, ஹார்மோன் சுழற்சி சீராகவும், பிரச்னை ஏதுமின்றி, இயல்பாகவும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இவ்வகை உணவுப்பொருட்களில் உள்ள பாலிஃபீனால் என்ற வேதிப் பொருள், ஹார்மோன் செயல்பாட்டை சீராக வைக்க உதவுகிறது. இதன்மூலமாக, உடல் எடை அதிகரிப்பு, மாதவிடாய் பிரச்னை, முடி கொட்டுதல், சரும பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகளை எளிதில் தீர்க்க முடிவதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, அதிக உடல் எடை காரணமாக நீரிழிவு நோய் ஏற்படுவதை முற்றிலுமாக தடுக்க இந்த பாலிஃபீனால் பயன்படுகிறது.