புதன், 30 மே, 2018

நீண்ட நேரம் உட்க்காருவது உயிருக்கு ஆபத்து

நீண்ட நேரம் உட்க்காருவது உயிருக்கு ஆபத்து

நீண்ட காலம் வாழ ஆசையா... இதை உட்கார்ந்து படித்து கொண்டிருப்பவர்கள் எழுந்து நில்லுங்கள்..  ஆம். ஒரு நாளில் 11 மணி வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 4௦% ,அடுத்த  3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு மிரட்டுகிறது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பொதுநல மருத்துவ பிரிவு பேராசிரியர்ஹேட் வான் டெர் பெலாஜ். இவரது தலைமையில் ஒரு குழு நடத்திய ஆயில் 2 லட்சம் பேர் பங்கேற்றனர். அதன் அறிக்கை அர என்ற மருத்துவ இதழில் வெளியானது. அதில் இடம்பெற்ற விவரங்கள்.
நீண்ட தூரம் உட்காந்திருப்பதே பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்த கூடியது. பருமன், டயபடீஸ் ஆகியவை அவற்றில் முக்கியமானவை. ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு குறைவாக உட்கார்ந்தே இருபவர்களுடன் ஒப்பிடுகையில், ௧௧ மணி நேரத்திற்கு அதிகமான நேரம் உட்கார்ந்து இருப்பவர்கள் மிகவும் பாதிக்கபடுகிறார்கள். இவர்களில் 40 % உயிர் இழக்கும் அபாயம் இருக்கிறது.
2 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட உடல் உழைப்பு, எடை, உடல் ஆரோக்கிய நிலை ஆகியவற்றின் அடிப்படியில் துல்லியமாக நடத்திய ஆய்வில் இது தெரிய வந்தது. ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி நடைபயிற்சி ஆகியவையும் அவசியம் தான். அனால், அவற்றை விட மிக முக்கியமானது நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காராமல் இருப்பது.
அலுவலக நேரத்தில் எத்தனை முறை முடியுமோ 20 முதல் 30 வினாடிகள் வரை எழுந்து நிற்கலாம். போன் பேசும் போது நிற்கலாம். லிப்ட், எஸ்கேலான்டர் தவிர்த்து படிகளில் ஏறலாம்.
ஆய்வில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்,
40 வயதுள்ள 2 லட்சம் பேரிடம் 2009 முதல் 2013 வரை, 5 ஆண்டுகள் ஆய்வு நடத்தப்பட்டது.
ஒரு நாளில் மூன்று மணி நேரம் வரை உட்காந்திருப்பவரைவிட  6 மணி நேரம் உட்காந்திருப்பவர் 15ஆண்டுகளுக்குள் இறக்க நேரிடலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
பணி நேரம் மட்டுமின்றி ஓய்வை சேர்த்து ஒருநாளில் 90 % நேரத்தை பெரும்பாலோர் உட்கார்ந்தே செலவிடுகின்றனர். இது முற்றிலும் ஆபத்தானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக