செவ்வாய், 22 மே, 2018

படர்தாமரையை விரைவில் குணப்படுத்தும் நாட்டு மருத்துவம்!


படர்தாமரையை விரைவில் குணப்படுத்தும் நாட்டு மருத்துவம்!

நமது சருமங்களில் வரும் நோய்களில் ஒன்றான இந்த படர்தாமரை நமக்கு அதிக தொல்லையை கொடுக்க கூடியது. இந்த படர்தாமரை வந்தால், இடம், பொருள், ஏவல் என்று எதுவும் பார்க்காமல், சொறிய தோன்றும்.. பூஞ்சையினால் ஏற்படக்கூடிய படர்தாமரை எனும் நோய் கோடைக்காலங்களில் தோலில் அதிகமாக ஏற்படுகிறது. இது பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்கும்.

பிறப்புறுப்பில் தொடங்கி, தொடை இடுக்குகளில் பரவும் இந்த நோயால் சொறியப்படும் இடம் சிவந்திருக்கும். இந்த நோய், வேதனையான அரிப்பை பல முறை உண்டாக்கும். இந்த படர்தாமரை நோய் எப்படி வருகிறது.. அது வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? படர்தாமரை நோயை எப்படி குணப்படுத்தலாம் என்பது பற்றி எல்லாம் இந்த பகுதியில் விரிவாக காணலாம்.


*காரணம் என்ன?*


‘ஃபங்கஸ்' (Fungus) என அழைக்கப்படுகிற காளான் படை நோய்கள் வருவது அதிகம். மக்கள்தொகை பெருக்கம், பொதுச் சுகாதாரக் குறைவு, உடலில் அதிகம் வியர்ப்பது போன்ற காரணங்களால் காளான் நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது.


*சுய சுத்தம்*


சுயச் சுத்தம் குறைவாக உள்ளவர்களுக்கும், உடல் பருமன், நீரிழிவு உள்ளவர்களுக்கும், ஊட்டச்சத்து குறைந்தவர்களுக்கும் மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் வசிப்போருக்கும் தண்ணீரில் அதிகம் புழங்குபவர் களுக்கும் காளான் கிருமிகள் பாதிக்கிற வாய்ப்பு அதிகம்.


இந்தக் கிருமிகள் மண்ணிலும், மனிதர்கள் மற்றும் விலங்குகளிடத்திலும் வசிக்கக்கூடியவை. எனவே, காளான் நோயுள்ள ஒருவருடன் நெருங்கிப் பழகும்போதும், வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளிடமிருந்தும் இது பரவ வாய்ப்புள்ளது. அசுத்தமான இடங்களில் குழந்தைகள் விளையாடும்போது மண்ணிலிருந்து கிருமிகள் பரவி நோய் வருவதுண்டு.


*அறிகுறிகள்*


படர் தாமரை பரவிய இடங்களில், தோல் நிறமாற்றம் அடைந்து அடர் கறுப்பு நிறமாகிவிடும். தீராத அரிக்கும் தன்மை உடையது. இதை சொறிந்துவிட்டால் அதிலிருந்து வெளியாகும் நீர்மத்தினால், மற்ற பாகங்களுக்கும் பரவும்.


படர் தாமரை, தலையில் தாக்கினால், அரிப்பை ஏற்படுத்தும். இதனால் தலைமுடி பாதிக்கப்பட்டு, சிவப்பு படர்தாமரை வளையங்கள் தோன்றி நமைச்சல் அதிகரிக்கும். உடலில் எங்கு வேண்டுமானாலும், இந்த படர்தாமரை வரும்.


*நகங்களில்...*


பாக்டீரியா தாக்குதல், நகத்தில் சிதைவை ஏற்படுத்தும். கால் விரல் நகங்களில் அதிகம் வரும். அவ்வப்போது கால் விரல்களை கவனித்து நகங்களை வெட்டிவிட வேண்டும்.


*எந்த இடத்தில்*
*வரும்?*


படர் தாமரை ஒருவருக்கொருவர் தொற்றிக் கொள்ளும் சரும வியாதி. அந்த நுண்ணுயிர்களுக்கு பிடித்த ஈரமான இடம் கால் விரல்களின் இடுக்கு. இது, முதலில் சிறு பகுதியில் தாக்கி, பாதம் முழுவதும் புண்ணாகும்.


படர் தாமரை பரவும் இடங்கள் அக்குள், பிறப்புறுப்பு, தொடை, தொடை இடுக்குகள், கால் நகங்கள், கழுத்து மடிப்பு கால் இடுக்குகள், பெண்களுக்கு மார்பகங்களின் கீழ் சதை மடிப்புகளில் வரும்.


*பெண்களுக்கு..*


முக்கியமாக, வீட்டு வேலை செய்யும் பெரும்பாலான பெண்களுக்கு இடுப்பைச் சுற்றி, இந்தத் தொற்று இருக்கும். இவர்களுக்கு அதிகமாக வியர்க்கும் என்பதாலும், ஈரம் அதிகம் இருக்கும் இடங்களில் அதிக நேரம் பணி செய்வதாலும் கை, கால்களில், ஈரத்தில் இருக்கும் காளான் கிருமிகள் எளிதாகத் தாக்கி நோயைத் தருகின்றன. வீட்டில் ஒருவர் உடுத்திய சேலை, சுடிதார், உள்ளாடை போன்றவற்றை அடுத்தவர் உடுத்தும்போது, இது மிக எளிதில் பரவிவிடுகிறது.


*குளித்தல்*


படர்தாமரை உங்களுக்கு வராமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் கண்டிப்பாக தினமும் இருமுறை குளிக்க வேண்டும். தினமும் இருமுறை குளிப்பதால், உடலில் வியற்வையினால் உண்டான கிருமிகள் அழிந்து உடல் சுத்தமாக இருக்கும். இதனால் படர்தாமரை வராது.


*அழுக்கு துணிகள்*


சிலர் துவைக்காமலேயே ஒருமுறை பயன்படுத்திய ஆடைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்த கூடாது.. சலவை செய்த துணிகளையே பயன்படுத்த வேண்டும். இதனை பின்பற்றினால் படர்தாமரையை தடுக்க முடியும்.


*மிளகு*


மிளகை நெய்யுடன் சேர்த்து நன்கு அரைத்து இரவு படுக்கப் போகும் முன்பாக படர்தாமரை உள்ள இடத்தில் பூசி வைத்திருந்து காலையில் சீயக்காய் பொடியை தேய்த்து கழுவிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உடலில் ஏற்படும் படர்தாமரை குறையும்.


*அருகம்புல்*


அருகம்புல்லும், மஞ்சளும் சம அளவு எடுத்து அதை நன்கு அரைத்து படர்தாமரையில் பூச படிப்படியாக படர்தாமரை மறையும்.


*பூவரசங் காய்*


பூவரசங் காயை உடைத்தால் அதில் மஞ்சள் நிறமான திரவம் வெளிவரும். இதனை படர்தாமரை, தேமல் மீது தடவினால் தேமல், படர்தாமரை குறையும்.


*சந்தனம்*


சந்தனக்கட்டையை எலும்மிச்சம் பழ சாற்றில் உரைத்து பசையாக செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் படர்தாமரை குணமாகும்.


*குப்பை மேனி*


ஒரு பாத்திரத்தில் 2 பங்கு தேங்காய் எண்ணெய் விடவும். ஒரு பங்கு குப்பை மேனி மற்றும் கீழா நெல்லி சேர்ந்த இலை பசை சேர்க்கவும். சிறுதீயில் வைத்து தைலப்பதத்தில் காய்ச்சவும். ஆற வைத்து எடுத்து வைத்து பூசி வர படர்தாமரை சரியாகும்.


தோலை பற்றி தொல்லை தரும் படர்தாமரைக்கு குப்பை மேனி மருந்தாகிறது. இது பூஞ்சை காளான்களை போக்க கூடியது. நுண்கிருமிகளை அழிக்க கூடியது.


*கீழாநெல்லி*


கீழாநெல்லி மஞ்சள் காமாலைக்கு மட்டும் இல்லை.. தோல் நோய்களை போக்கும் தன்மையும் கொண்டது. கீழாநெல்லியை அரைத்து பற்று போட்டால் படர்தாமரை நோய் விலகும்.


*பூண்டு*


பூண்டு இந்த படர்தாமரைக்கு மருந்தாக பயன்படுகிறது. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு நசுக்கி வைத்த பூண்டு பற்களை சேர்க்கவும். இதை தைலப்பதத்தில் காய்ச்சி எடுக்கவும். வடிக்கட்டி படர்தாமரை இருக்கும் இடத்தில் காலை, மாலை வேளையில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்தால் படர்தாமரை சரியாகும்.


*தும்பை இலைகள்*


தும்பை இலைகளை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். 2 ஸ்பூன் தும்பை இலை பேஸ்டை எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் திரிபலா சூரணம், கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து கலந்து படர்தாமரை உள்ள இடத்தில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்துவர படர்தாமரை விரைவில் குணமாகும்.

1 கருத்து:

  1. #Psoriasis, #Vitiligo, #Eskimo, #Funculs, #Ringworm, #Warts, #Fade, #Malignant Tumors, #Varicose Veins, #காளாஞ்சகப்படை, #சொரியாசிஸ், #சோரியாசிஸ், #வெண்புள்ளி, #வெண்குஷ்டம், #தோல்நோய்கள், #Skin Problem

    அனைத்து வகையான தோல் நோய்களும் முற்றிலும் 100% தீர்ந்து வாழ்நாள் முழுக்க “தோல் நோயற்ற வாழ்வுதான் குறைவற்ற செல்வம்” என்னும் நிலையை 120 நாட்களில் அடையலாம். உணவுஅறமும் & மருந்தும் கிடைக்கும்.

    விபரங்களுக்கு கீழ்கண்ட வலைப்பக்கங்களை படியுங்கள்.

    https://skin-disesis.blogspot.com/

    பதிலளிநீக்கு