ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

ஊளைச்சதை குறைய வேண்டுமா? இதை செய்து பாருங்க மாற்றம் தெரியும்!

ஊளைச்சதை குறைய வேண்டுமா? இதை செய்து பாருங்க மாற்றம் தெரியும்!

நோயற்ற வாழ்வு வாழவும்,உடலினை உறுதியாக வைத்துக்கொள்ளவும்  இயற்கை நமக்கு பல்வேறு வளங்களை வழங்கியுள்ளது.நமது உடலை வலிமையுறச் செய்வதில் கடுக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. நெல்லிக்காயுடன் கடுக்காய் சேர்த்து திரிபாலா எனப்படும் கூட்டு மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. தினமும் திரிபலா சூரணத்தை தண்ணீரில் கலந்து குடித்து வர உடல்பலம் ஏற்படும்,வயிற்றுக் கோளாறு மாறும்.
மூக்கடைப்பு,சளி குணமாக கடுக்காய் பொடி,நெல்லிக்காய் பொடி இவைகளை சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு,சளி குறையும்.கண் எரிச்சல் குணமாக அதிமதுரம்,கடுக்காய்,திப்பிலி, மிளகுப்பொடி,தேன் இவைகளை சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் கண் எரிச்சல் குறையும்.குரல் மாற்றத்தை சரி செய்யகடுக்காய் தோலை எடுத்து வாயில் அதக்கிக்கொண்டு அதில் இருந்து வரும் உமிழ் நீரை விழுங்கிக்கொண்டு வந்தால் குரல் மாற்றத்தை சரி செய்ய முடியும்.
பற்கள் உறுதியாகசுக்கு,காசுக்கட்டி,கடுக்காய்த்தூள்,இந்துப்பு இவைகளை எடுத்து பல்பொடியாக பயன்படுத்தி வந்தால் பற்கள் உறுதிபெரும்.பல் வலி குறைய புங்கம் பட்டையை இடித்து தூளாக்கி கடுக்காய்த்தூள் சேர்த்து நல்லெணெய்யில் காய்ச்சி அதை பல் மேல் தடவினால் பல் வலி குறையும். வாய்ப்புண் குணமாககடுக்காய் பொடியை சிறிதளவு எடுத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து புண்கள் மீது தடவி வந்தால் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.
இருமல் குறையஅதிமதுரம்,கடுக்காய்,மிளகு இவைகளை ஒரே அளவாக எடுத்து லேசாக வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.முடி நரைக்காமல் இருக்க அருகம்புல் பொடி,நெல்லிப்பொடி,கடுக்காய்ப்பொடி இவைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் முடி நரைக்காது.ஊளைச்சதை குறையசோம்பு,கடுக்காய்த்தூள் சேர்த்து மண் சட்டியில் தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி சுத்தமான தேன் கலந்து குடித்து வந்தால் ஊளைச் சதை குறையும். Thanks Tamil Truth

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக