கருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்...
கணிப்பொறியில் தொடர்ந்து வேலை பார்ப்பது, நள்ளிரவு வரை தொடரும் ஸ்மார்ட்போன் சாட்டிங், ஸ்ட்ரெஸ், உடம்பில் இரும்புச்சத்து குறைவு, தூக்கமின்மை மற்றும் மரபுவழிப் பிரச்னை எனப் பல காரணங்களால் கருவளையம் உருவாகிறது. இதை மறைக்க மேக்கப் வேண்டாம், கருவளையம் வந்திருப்பது எதனால் எனத் தெரிந்துகொண்டுவிட்டால் சரிசெய்வது சுலபம்.
இருட்டு அறையில் ஸ்மார்ட்போனில் படமோ அல்லது வேறு எதையோ பார்த்துக்கொண்டிருந்தால், கண்கள் பாதிக்கப்படும். கருவளையமும் கட்டாயம் வரும். இரவு நேரத்தில், ஸ்மார்ட்போன் பார்க்கும் நேரத்தைக் குறையுங்கள். பார்க்காமல் தவிர்ப்பது இன்னும் பெஸ்ட். தினமும் அரை மணி நேரம், கண்களின் மீது தண்ணீரில் நனைத்த பஞ்சை வைக்கவும்.மனதுக்குப் பிடித்த இசையைக் கேளுங்கள், நண்பர்களுடன் நல்ல விஷயங்களை உரையாடுங்கள். சரியான நேரத்தில் உறங்கச் செல்லுங்கள்.
கண்களில் மை வைக்கும் பகுதி நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கிறதா அல்லது வெளுத்துப் போய் இருக்கிறதா என்று செக் செய்யுங்கள். சிவப்பு நிறம் என்றால், உங்கள் கருவளையத்துக்கு வேறு ஏதோ காரணம். வெளுத்து இருந்தால், இரும்புச்சத்துக் குறைபாடு. முருங்கைக்கீரை, எள், பேரீச்சை போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை நிறையச் சாப்பிடுங்கள். தேவைப்பட்டால் மருத்துவரிடம் ஆலோசித்து காட்லிவர் ஆயில் மாத்திரைச் சாப்பிடலாம்.
நான் நன்றாகத் தூங்குகிறேன்,சத்தாகத்தான் சாப்பிடுகிறேன், இரவில் ஸ்மார்ட்போன் தொடுவதில்லை. ஆனாலும் கருவளையம் வந்துவிட்டதே என்பவர்கள், டாக்டரிடம் செல்லுங்கள். ஏனென்றால், ஹார்மோன் பிரச்னைகள் இருந்தாலும் கருவளையமாக வெளிப்படும்.
அம்மா, சித்தி, அத்தை என்று நெருங்கிய சொந்தங்களுக்குக் கருவளையம் இருந்தால், உங்களுக்கும் வருவதற்கு வாய்ப்புள்ளது. ஆனாலும், பயப்படத் தேவையில்லை. மரபு வழி கருவளைத்தையும் `அண்டர் ஐ' சிகிச்சை மூலம் குறைக்கலாம். Thanks TIME PASS NEWS
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக