வியாழன், 19 ஜூலை, 2018

தும்மல், விக்கல் மற்றும் ஏப்பம் ஏன் வருகிறது தெரியுமா? வாங்க பார்க்கலாம்..

தும்மல், விக்கல் மற்றும் ஏப்பம் ஏன் வருகிறது தெரியுமா? வாங்க பார்க்கலாம்..


நம்மில் சில சமயங்களில் தூசு இல்லாமல் தும்மல் வருவதும், உணவருந்தாமல் ஏப்பம் வருவதும், மற்றும் விக்கல் போன்றவை ஏன் வருகிறது என்று பலரும் அறிவதில்லை. இப்போது இவை எதனால் வருகிறது என்பதை பார்க்கலாம் வாங்க.
தும்மல் என்பது மனிதனின் சுவாசம் சம்மந்தப்பட்டது மட்டுமில்லாமல், இதயம் மற்றும் மூளை பகுதிகளில் தேங்கும் கனமான சூடான காற்றாகும். இது குளிர்ச்சி அடையும் போது அல்லது தூண்டிவிடப்படும் போது மிக வேகமாக உந்தப்படும்.

ஏறத்தாழ நொடிக்கு 152 அடி வேகத்தில் தும்மல் உந்தப்படும் போது வெளியேறுகிறது. திடீரென வரும் தும்மல் காரணமாக மரணமடைந்தவர்களும் இருக்கிறார்கள்.

ஏப்பம் என்பது இரைப்பையிலும், சிறு குடல்களிலும் உற்பத்தியாகும் வாயுவின் தேக்கமே ஆகும். இந்த வாயுவின் வெளிபாடு தான் ஏப்பம். சில சமயங்களில் நாம் பேசிக்கொண்டே உண்ணும் போது உணவோடு சேர்த்து காற்றையும் விழுங்கிவிடுவோம்
. இதனால் தான் உண்ணும் போது அவசரப்படாமல், பேசாமலும், நன்கு மென்று உண்ண வேண்டும் என பெரியவர்கள் கூறுகிறார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக