செவ்வாய், 17 ஜூலை, 2018

குறைந்த சூரிய வெளிச்சத்தினால் உடலுக்கு ஆபத்து!

குறைந்த சூரிய வெளிச்சத்தினால் உடலுக்கு ஆபத்து!

கோப்புப்படம் குறைந்த சூர்ய ஒளி வரும் வீட்டில் நீங்கள் வசிக்கிறீர்களா அதனால் உங்கள் உடலுக்கு ஆபத்து நேரும். தெரியுமா? 
சூரிய வெளிச்சம் குறைவாக வரும் வீட்டில் நீங்கள் வசிப்பதனால் உடலளவும், மனதளவும் பாதிப்புக்குள்ளாவீர்கள் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
பெரும்பாலும் நகரத்தில் வாழும் மக்கள் பெரிய பெரிய அப்பார்ட்மென்ட்டில் வசிக்கிறார்கள். பொதுவாக ஒரு வீட்டில் ஆண், பெண் இருவரும் வேலைக்கு சென்றால் வீட்டில் அந்தளவுக்கு கவனம் செலுத்த மாட்டார்கள்.

அதேபோல் தான் நகரத்தில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டை பற்றி சிந்திக்கமாட்டார்கள். அதை சிந்திக்கும் அளவுக்கு அவர்களுக்கு நேரம் குறைவே. எல்லாரும் அப்படி இருப்பார்கள் என்று கூறிட முடியாது. மிக குறைவானவர்களே வீட்டின் மீது அதிகம் கவனம் செலுத்துவார்கள். 

வீட்டின் மீது கவனம் செலுத்தாதவர்களின் கவனத்துக்கு., வீட்டுக்கு சூரிய வெளிச்சம் வருவதனால் நன்மைகள் உண்டு. ஆனால், வெளிச்சம் இல்லாமல் பகலிலே லைட் போடுபவர்களை நம்மில் நிறைய பேர் பார்த்தது உண்டு.
பகலில் சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் வர இயலவில்லை என்றால் மன சூழற்சி நோய் ஏற்படும் என்று ஆய்வு கூறுகிறது. இது அதிகம் பாதிப்பது குழந்தைகளுக்கே. பெரியவர்களை விட அதிகம் தாக்க படுவது 7-12 வயது குழந்தைகளுக்கு தான். மன சூழற்சி நோய்யை ஆங்கிலத்தில் ஓசிடி என்று கூறுவார்கள். 


நம் அனைவருக்கும் ஏதோ ஒரு சூழ்நிலையில் வருத்தம் தரும் அளவுக்கு பல சிந்தனைகள் வருவதுண்டு. இதனை பலர் கடந்து வருவர், சிலர் அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிப்பார்கள். அப்படிபட்ட நபர்களின் உச்சகட்டம் தான் மன சூழற்சி நோய்.

இதனால் அதிகம் பாதிக்கப்படுவது சிறு வயது குழந்தைகள் தான். இந்த நோய் குழந்தைகளுக்கு இருப்பது பெற்றோர்களுக்கு தெரியாது. மனதில் வைத்து கொண்டு வெளியில் சொல்லாமல் மன சூழற்சி நோயோடு போராடி கொண்டிருப்பார்கள். 

இதைவிட்டு வெளியில் வர முயலுவார்கள். ஆனால், அவர்களால் வர இயலாது. இந்த நோயால் குழந்தைகளின் சில பழக்கவழக்கங்கள் மாறும். ஒரு விஷயம் செய்தால் திரும்ப திரும்ப அதே விஷயத்தை செய்வார்கள். அந்த விஷயம் நல்லதாக இருந்தாலும், கெட்டதாத இருந்தாலும் மீண்டும் மீண்டும் செய்வார்கள்.

இந்த விஷயங்கள் தீவிரமாகும் போது தினசரி வாழ்க்கையின் சந்தோஷத்தை இழப்பார்கள். எந்த விஷயத்திலும் ஒரு நாட்டம் இல்லாமல் இருப்பார்கள். மனதுக்குள் வைத்து கொண்டு அவர்களை அவர்களாகவே வதைத்து கொள்வார்கள்.

பெற்றோர்கள் வேலைக்கு செல்வது பிள்ளைகளுக்காக தானே. குழந்தைகளின் நலனை கவனிக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தும் என்று இனியாவது சிந்தித்து செயல்படுங்கள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் குழந்தைகளுக்கு இது சரி வருமா என்று ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுங்கள்.  

கோப்புப்படம்

குறைந்த சூர்ய ஒளி வரும் வீட்டில் நீங்கள் வசிக்கிறீர்களா அதனால் உங்கள் உடலுக்கு ஆபத்து நேரும். தெரியுமா?

சூரிய வெளிச்சம் குறைவாக வரும் வீட்டில் நீங்கள் வசிப்பதனால் உடலளவும், மனதளவும் பாதிப்புக்குள்ளாவீர்கள் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
பெரும்பாலும் நகரத்தில் வாழும் மக்கள் பெரிய பெரிய அப்பார்ட்மென்ட்டில் வசிக்கிறார்கள். பொதுவாக ஒரு வீட்டில் ஆண், பெண் இருவரும் வேலைக்கு சென்றால் வீட்டில் அந்தளவுக்கு கவனம் செலுத்த மாட்டார்கள்.


அதேபோல் தான் நகரத்தில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டை பற்றி சிந்திக்கமாட்டார்கள். அதை சிந்திக்கும் அளவுக்கு அவர்களுக்கு நேரம் குறைவே. எல்லாரும் அப்படி இருப்பார்கள் என்று கூறிட முடியாது. மிக குறைவானவர்களே வீட்டின் மீது அதிகம் கவனம் செலுத்துவார்கள்.


வீட்டின் மீது கவனம் செலுத்தாதவர்களின் கவனத்துக்கு., வீட்டுக்கு சூரிய வெளிச்சம் வருவதனால் நன்மைகள் உண்டு. ஆனால், வெளிச்சம் இல்லாமல் பகலிலே லைட் போடுபவர்களை நம்மில் நிறைய பேர் பார்த்தது உண்டு.
பகலில் சூரிய வெளிச்சம் வீட்டுக்குள் வர இயலவில்லை என்றால் மன சூழற்சி நோய் ஏற்படும் என்று ஆய்வு கூறுகிறது. இது அதிகம் பாதிப்பது குழந்தைகளுக்கே. பெரியவர்களை விட அதிகம் தாக்க படுவது 7-12 வயது குழந்தைகளுக்கு தான். மன சூழற்சி நோய்யை ஆங்கிலத்தில் ஓசிடி என்று கூறுவார்கள்.

நம் அனைவருக்கும் ஏதோ ஒரு சூழ்நிலையில் வருத்தம் தரும் அளவுக்கு பல சிந்தனைகள் வருவதுண்டு. இதனை பலர் கடந்து வருவர், சிலர் அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிப்பார்கள். அப்படிபட்ட நபர்களின் உச்சகட்டம் தான் மன சூழற்சி நோய்.
இதனால் அதிகம் பாதிக்கப்படுவது சிறு வயது குழந்தைகள் தான். இந்த நோய் குழந்தைகளுக்கு இருப்பது பெற்றோர்களுக்கு தெரியாது. மனதில் வைத்து கொண்டு வெளியில் சொல்லாமல் மன சூழற்சி நோயோடு போராடி கொண்டிருப்பார்கள்.

இதைவிட்டு வெளியில் வர முயலுவார்கள். ஆனால், அவர்களால் வர இயலாது. இந்த நோயால் குழந்தைகளின் சில பழக்கவழக்கங்கள் மாறும். ஒரு விஷயம் செய்தால் திரும்ப திரும்ப அதே விஷயத்தை செய்வார்கள். அந்த விஷயம் நல்லதாக இருந்தாலும், கெட்டதாத இருந்தாலும் மீண்டும் மீண்டும் செய்வார்கள்.
இந்த விஷயங்கள் தீவிரமாகும் போது தினசரி வாழ்க்கையின் சந்தோஷத்தை இழப்பார்கள். எந்த விஷயத்திலும் ஒரு நாட்டம் இல்லாமல் இருப்பார்கள். மனதுக்குள் வைத்து கொண்டு அவர்களை அவர்களாகவே வதைத்து கொள்வார்கள்.
பெற்றோர்கள் வேலைக்கு செல்வது பிள்ளைகளுக்காக தானே. குழந்தைகளின் நலனை கவனிக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தும் என்று இனியாவது சிந்தித்து செயல்படுங்கள். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் குழந்தைகளுக்கு இது சரி வருமா என்று ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுங்கள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக