சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஜாதிக்காய் உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு நல்ல மருந்தாகும்
ஜாதிக்காய் துவர்ப்புத் தன்மையும் அதிகக் காரமும் கொண்டது. ஜாதிக்காய் சிறிதளவே உபயோகப்படுத்த வேண்டும். பெரியவர்கள் பயன்படுத்தும் போது மருத்துவர்களின் அலோசனையை பெற வேண்டும்.
- ஆண்களுக்குக் காமப் பெருக்கம், குழந்தைப்பேறு இன்மை, ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைந்து வருவது, உடலுறவில் நாட்டமின்மை.
- வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்தப் புற்றுநோயைத் தடுக்கிறது.
- ரத்தத்தில் கொழுப்பைக் குறைக்கிறது.
- ஜாதிக்காய், சுக்குத்தூள் இரண்டையும் சம அளவு எடுத்துக்கொண்டு, அதற்கு இரண்டு பங்கு சீரகத்தைச் சேர்த்துப் பொடி செய்து, உணவுக்கு முன்னதாக மூன்று சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றில் ஏற்படும் வாயுத்தொல்லை மற்றும் அஜீரணம் நீங்கும்.
- வைரஸ், பாக்டீரியா காரணமாக வரும் அத்தனை வயிற்றுப் போக்குகளுக்கும் ஜாதிக்காய்த் தூள் சிறந்த மருந்து.
- மனஅழுத்தத்தைப் போக்கி, நரம்பு வன்மையையும், தூக்கத்தையும் தரும்.
- ஜாதிக்காய், சணல் விதை, ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம், வெண்கொடிவேலி வேர் ஆகியவற்றை சுத்தம் செய்து சம அளவு எடுத்துக்கொள்ளவும். இவற்றை நன்கு நுண்ணியமாகப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இதை வயிற்றுவலி, மாதவிடாய் தீவிர வலி, மைக்ரேன் தலைவலி ஆகியவற்றுக்குக் கொடுக்கலாம்.
- குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கை நீக்குகிறது.
- ஆஸ்துமா
இன்னும் பல நோய்களுக்கு, சித்த மருத்துவம் ஜாதிக்காயைப் பரிந்துரைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக