புதன், 8 ஏப்ரல், 2020

இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்

இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்


இஞ்சியை நீரழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். இதனால் நீரழிவு நோயுள்ளவர்கள் இஞ்சி சார்ந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.
இஞ்சி டீ குடித்து வந்தால் சளித்தொல்லை நீங்கும். இதனால் சளித்தொல்லை உள்ளவர்கள் இஞ்சி டீயை குடித்து வரலாம். மேலும் இஞ்சியை சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கிருமிகளையும் அழிக்கும். மேலும் நோய்களின் தாக்கத்தில் இருந்து காக்கும்.
நமது உடலில் வேகல் நெர்வ் என்னும் வேகல் நரம்பு தான் வயிற்றில் செரடோனின் அமிலங்களை அதிகம் சுரக்கச்செய்து வாந்தி ஏற்பட காரணமாக இருக்கிறது. இஞ்சியை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் வேகல் நரம்பு தூண்டப்படுவது குறைந்து அடிக்கடி வாந்தி ஏற்படுவது நிற்கும். இதனால் வாந்தி எடுக்காமல் இருக்க இஞ்சியை சாப்பிட்டு வரலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக