புதன், 22 ஏப்ரல், 2020

அழிந்து வரும் பாரம்பரிய வாழ்வியல் செயல்பாடுகள் தருகின்ற உடல் தற்காப்பு திறனும் ஆரோக்கியமும்

அழிந்து வரும் பாரம்பரிய வாழ்வியல் செயல்பாடுகள் தருகின்ற உடல் தற்காப்பு திறனும் ஆரோக்கியமும்

 PREVENTIVE  AND PROMOTIVE  HEALTH CARE  provided by endangered traditional life  style  activities
..
 அன்பிற்கினிய உள்ளங்களே நான் வர்ம ஆசான் மருத்துவர் கணபதி பேசுகிறேன்
விளையாட்டல்ல... கேலிக்கூத்து அல்ல... சொல்லப் போகிற கருத்தை கேட்டு ஏளனம் அடைய வேண்டாம் வெட்கப் படவும்வேண்டாம். இதனுள் மறைந்து கிடக்கின்ற மருத்துவ நுட்பங்கள் ஏராளம். நமது ஆரோக்கியத்தை தந்து அதை மேம்படுத்துகின்ற உத்திமுறைகள் சூத்திரங்கள் இவை என்றால் மிகையாகாது... எத்தனையோ விதமான செயல்பாடுகள் இருப்பினும் முதலில் ஒரு சில முக்கிய செயல்பாடுகளை அறிவோம்.....

1) இடித்த நெல்லில் வடித்த சோறு
2) திண்ணைப் பேச்சு வெற்றி பேச்சு
3) கண்ணுல மையி கையில தோனி
4) மங்கலம் காக்க எங்குல கொல
5) தலப்பாக்கட்டு தலையையாட்டு
6) நொண்டி தொட்டும் தோண்டி பானையும்
7) பூணூ உள்ள  உலக்கை.. ஊண் இல்லா ஏகாதசி.
8) கேவலம் நீக்கும் கோவனக்  கட்டு
9) எண்ணெய் யை கொல்லும் சீயக்காய் கஞ்சி
10) தாரோசனை சிகிச்சை

 நம்முடைய பாரம்பரிய பழமொழி நம்முடைய வாழ்க்கையை நன்றாக செதுக்குகிறது... நம்மளுடைய சிறப்பு நம்மை சுற்றி வலம் வருகின்ற பழமொழிகள் தான். பழமொழிகள் தான் நமக்கு அவ்வப்போது சில தவறுகளில் இருந்தும் மறந்த வெளியில் இருந்தும் நமக்கு ஞாபகப்படுத்துகிறது.. ஒவ்வொரு பழமொழி கொள்ளும் ஓராயிரம் மெய்ஞான விளக்கங்களுடன் விஞ்ஞான நுட்பங்கள் மறைந்து கிடக்கின்றன. நமது பல மொழிகள் யாவும் நம்முடைய வாழ்க்கைமுறை கலாச்சாரம் மருத்துவம் சுற்றுச்சூழல் இறைவழிபாடு இவற்றோடு பின்னிப் பிணைந்தவை... வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் உள்ள இந்தப் பழமொழிகள் இப்போது உள்ள சந்ததிகள்,  உடன் இனி வரப்போகின்ற சந்ததிகளும் இதை அறிந்து உணர்ந்து கொள்ள முடியுமா என்பது ஆயிரமாயிரம் கேள்வி. ஒவ்வொரு பழமொழிகளும்  பல பக்கங்களை பிடிக்கும். எனவே சில கருத்துக்களை மட்டும் காண்போம்.

 இடித்த நெல்லில் வடித்த சோறு..

 இடித்து பெறப்பட்ட நெல்லில் தான் ஏகப்பட்ட உயிர்ச்சத்துகள் அடங்கியுள்ளன என்று தற்போது விஞ்ஞானம் கூறுகிறது.. எங்கேயாவது எப்பவாது நெல்லு கிடைச்சா அதை உடனே மிஷின்ல கொடுக்காம ஒரு நேர போக்கைக் ஆவது இடிச்சி அரிசி ய்எடுத்துக் குடுங்க. தினசரி இடிக்கிறதுக்கு ஒரு அஞ்சு நிமிஷம் கூட ஆகாது. அதை அப்படியே குக்கரில் வைத்து  சோறு ஆகாமல் அதுக்கு பதிலா தண்ணி ஊத்தி வடிச்ச சோறு எடுத்துக் குங்க.. நேரமில்லை என் மட்டும் சொல்லாதீங்க. ஒரு வாரத்திற்கு தேவையுள்ளதா நேரம் கிடைக்கிறபோது இடித்து வைத்துக் கொள்ளலாம்.

 திண்ணைப் பேச்சு வெற்றி பேச்சு

 தயவுசெய்து வெட்டிப்பேச்சு என்ன மாத்தி போடாதீங்க. நம்ம உடம்புக்கு உள்ளே இருக்கக்கூடிய ஸ்டிரஸ் ஐ குறைக்கிறது மனசுல உள்ள அழுத்தத்தை குறைப்பதற்கு நான்கு ஐந்து பேர்களோடு நமக்கு தகுந்த மாதிரி கலந்து ஆலோசனை கேட்கும் பொழுது நமக்கு நிம்மதி கிடைக்கும். வீண்பேச்சு அப்படின்னு நினைச்சு போடாதீங்க... இது ஒரு மிக நுட்பமான சிகிச்சை முறையாகும். இதைத்தான் இப்போ கவுன்சிலிங் சொல்றாங்க... நம்மை அறியாமலே நமக்கு தினசரி இதே மாதிரி பேசி கவுன்சிலிங் மாதிரி ஒன்னு கிடைக்கிறப்போ நமக்கு மன ரீதியான எந்த பிரச்சினைக்கும் கவலை இல்லை...

 கண்ணுல மையி கையில தோனி

 நம்ம கண்ணைச் சுத்தி இருக்கக்கூடிய இமைகளுக்கு கண்களுக்கு அஞ்சனம் சொல்லக்கூடிய மையிட்டு வந்த மைனா கண்ண பாதுகாக்கிறது மூலமாக உடம்பில் இருக்கக்கூடிய கப நோயின் உடையஆட்சியை நம்ம குறைக்கலாம். அழகுக்கு நினைத்துவிட வேண்டாம் இதுக்குள்ள ஆயிரமாயிரம் மருத்துவர் நுட்பங்கள் இருக்கு. கையில தோனி அப்படின்னா கையில் மருதாணி அல்லது மருதோன்றி  அரைத்து கைகளில் வைக்கக்கூடியது. இதனால அதிகம் பலம் பெறுவது இதயம்தான். கபாலத்தில் மற்றும் முள்ளெலும்பு தண்டிலிருந்து வெளிவரக்கூடிய நரம்புகள் தாம் அதிகம் பலன் பெறப்படுவது அப்படின்னு வர்ம நூல்கள் சொல்லுது.

 மங்கலம் காக்க கொல விடுவது

 இன்றைக்கு நம்மகிட்ட இருக்குடி எத்தனை பேருக்கு கொல விட தெரியும்... கிட்டத்தட்ட 75 சதவீதத்துக்கு மேல் இந்தக் கொல விடக்கூடிய கலை அழிந்து போய்விட்டது.. வெட்கப்படும் ஏற்படுத்தியும் அழித்துவிட்டோம். சர சூத்திரம் என்னும் அந்த வாசி கலையில நம சுவாசங்கள் எல்லாம் ஒன்னா சேர்ந்து நாக்குக்கு பின்புறமாக இருக்கக்கூடிய அந்த சுழுமுனை சக்கரத்தைத் தூண்டிவிட்டு செயல்படக்கூடியது இதனால உடம்புல ஆரோக்கியம் மேம்படுகிறது. சுழுமுனை நாடிசக்கரத்தை ஒரு நொடிப்பொழுது தூண்டக்கூடிய திறந்தான் இந்த கொல விடுதல இருக்கு. கொல விடுவது நம்முடைய பாரம்பரியத் என்னுடைய அடித்தளம். தோப்புக்கரணம் போட்டால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் அதே போல கொல விடுவதிலேயே உண்டு. இதையும் ஆரம்ப காலத்திலேயே குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து பயிற்சி கொடுக்க வேண்டும்.. நான்கு பேர் சேர்ந்து கொல விடும் போது அந்த சூழலை நீங்க நினைச்சு பாருங்க.. கண்களுக்கு தெரியாத தீய சக்தியை விரட்டி அடிக்கவும் கொல இடுபவர் னுடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயனாகிறது.
 தலப்பாக்கட்டு தலையை ஆட்டு
 நம்ம நாகரீகத்தின் உடைய மிக உச்சக்கட்டம் தலைப்பாகை கட்டுவது அழிந்து போய்விட்டது... இதுவும் கேலியும் எக்காலத்திற்கும் காரணமாகிவிட்டது.. எதனால அதிகம் பயன் பெறுவது நம்முடைய கண்கள் நம்மளுடைய காது நம்முடைய மூக்கு இவைகளோடு கபாலம் பாதுகாக்கப்படுவது. இன்னைக்கும் மற்ற பல நாடுகள்ல அவர்களுடைய கலாச்சாரத்துக்கு தகுந்தமாதிரி தலப்பாக்கட்டி இருந்து வருவது நமக்கு தெரியும். ஆனா தமிழ்நாட்டில் தான் இது ரொம்ப குறைந்து கொண்டே வருது. அன்றேஸ் சன் ரைஸ் அலர்ஜி ஹீட்வே அலர்ஜி இவைகளில் இருந்து பாதுகாக்க இதுவே நுட்பம்.... இது எங்கெல்லாம் யாருக்கு எப்பல்லாம் இருக்கிறதோ அதை கட்டாயமாக்க வேண்டும். குறைந்தபட்சம் வெயிலில் போகும் போதாவது இதை அறிவுறுத்த வேண்டும். ஹெல்மெட் போடுங்க அத போடுங்க இதை போடுங்கன்னு சட்டங்களை கூடிய நம்முடைய அரசு இவைகள் எல்லாத்தையும் கட்டாயமா ஆக்க வேண்டும்.
 நொண்டி தொட்டும் தோண்டி பானையம்
 எத்தனை  நம்முடைய பாரம்பரிய விளையாட்டு இருக்கு... ஆனால் நொண்டித தொட்டு விளையாடுவது மிகச்சிறப்பு. முல்லை எலும்பை பயன்படுத்துதல் கால்கள் கைகளில் உள்ள எலும்புகளை பலப்படுத்த கருத்துக்களை பலப்படுத்துதல் போன்ற பல நுட்பங்கள் இதில் உள்ளன.. நம்முடைய உடற் பயிற்சி வகுப்புகளில் இது கட்டாயமாக்கப்பட வேண்டும். விளையாட்டு மைதானத்திற்கு செல்லும்பொழுது இந்த பயிற்சியில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் குறிப்பாக இளைஞர்கள் உள்ளிட்டு முதியவர்கள் கூட முடிந்த அளவுக்கு செய்ய வேண்டும்... பெண்களும் விதிவிலக்கல்ல... மலக்குடல் உபாதை ஜீரண பாதைகள் இனப்பெருக்க உறுப்புகள் ஒட்டுமொத்த உடலும் புதிய பலம் பெறுகின்றது. தோப்புக்கரணத்துக்கு இணையான ஒரு வித விளையாட்டு...
 ஊண்  இல்லா ஏகாதேசி...
 மாதத்திற்கு ஒரு நாளாவது அதிலும் குறிப்பாக ஏகாதசியன்று உணவு அருந்தாமல் விரதம் கடைபிடிக்கப்படும் பொழுது நமது உடல் இரட்டிப்பு பலம் பெறுகின்றது. சுவாசக் கலை ஓட்டத்தில் அமிர்த நிலை சக்கரத்தின் பால் கொண்டுள்ள நுட்பத்தின் காரணமாக உடலை மேம்படுத்துவதற்காக நமக்காக கூறப்பட்டுள்ள நுட்பம்தான் ஏகாதசி விரதம் ஆகும்.... லங்கணம் பரம ஔஷதம் என்பதை மறந்து விடக்கூடாது.. குடும்பமே சேர்ந்து இருந்து மாதத்திற்கு ஒருமுறை இந்த ஏகாதசி அன்று விரதம் இருந்தால் நம்முடைய எதிர்ப்பாற்றல் மேம்படும் என்பதை நாம் சந்ததிகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும்.. நடைமுறையில் கட்டாயமாக்கப்பட வேண்டும்.. உலக்கை உடைய பலத்திற்கும் பூண் எந்த அளவிற்கு பயன்படுகிறதோ அதுபோல உடலுக்கு இந்த விரதம் பயனாகும்.
 கேவலமா க   கோவணக் கட்டு
 இதைப்பார்த்து சிரிக்காதீங்க... ஒட்டுமொத்த உயிரோட்டமும் ஆண் தன்மையும் பெண் தன்மையும் இந்த கோவண கட்டிலில் தான் முடங்கிக் கிடக்கும்.. ஜட்டி போடக்கூடிய கலாச்சாரம் ஆகிவிட்டதால் கோவண கட்டு முற்றிலும் அழிந்து போய்விட்டது. கோவண கற்றால் மட்டுமே நம்முடைய இனப்பெருக்க உறுப்புகளையும் அடிவயிற்று உறுப்புகளையும் பாதுகாத்து முள்ளெலும்பு தண்டுடைய அடி பக்கத்திற்கு பலன் கொடுக்க முடியும். ஜட்டி போடுவது பேஷனுக்கு ஆகவோ கடனுக்காக அல்ல... நமது அடி வயிற்றில் தான் கும்பகம் முடிச்சு பதி பசு பாசம் என்னும் முடிச்சு என்னும் இரண்டு விதம் உயிர்முடிச்சுகள் அடிவயிற்றில் முடங்கிக் கிடக்கின்றது. இத முதல்ல பாதுகாக்கிறது தான் அதற்கப்புறம்தான் உறுப்புகளை பாதுகாக்கிறது. இந்த நுட்பம் நம்ம மக்களுக்கு தெரிய வேண்டும். எனவே கூடுமானவரை யும் நாம் இதை பயன்படுத்தினால் நல்லது. பேண்ட் போட்டு நம்ம ஆடை உடுத்தும் போது முடியுமா நிச்சயமாக முடியும். போகத்தின் நரம்புத் தளர்ச்சிக்கும் போகத்தை நல்லவிதமாக தூண்டுவதற்கும் இது ஒரு அடித்தளம்
 சீயக்காய் கஞ்சி
 எண்ணெய்க் குளியலின் போது சீயக்காயுடன் சேர்த்து வடிகஞ்சி பயன்படுத்தி வரும்பொழுது முடியை மட்டுமல்ல ஒட்டுமொத்த கபத்தையும் உடலின் உள்ளே இருக்கின்ற உறுப்புகளையும் மேம்படுத்த கூடியது.. எண்ணெய் தேய்த்து குளிப்பது ஒருவித கலை. ஷாம்பூ உள்ளிட்டவைகளை பயன்படுத்தப்படும் பொழுது மேலும் உடல் உஷ்ணம் ஆகிறது.  தனி சீகக்காய் மட்டுமில்லாது வடிகஞ்சி யும் சேர்த்து பயன்படுத்தப்படும் பொழுது உடல் உஷ்ணம் குறைக்கப்பட்டு முடியை பாதுகாத்து உடலை மேம்படுத்துகிறது.... தயவுசெய்து அந்த ஒரு நாளாவது சோறு வடித்து பெற்றுக்கொள்ளுங்கள்... இதை விற்பதற்கு வியாபாரிகள் ரெடியாக இருக்கின்றனர்... ஹேர் பிரெண்ட்லி பா டிஃபரண்ட்லி என்ற பொருளுடன் தொடர்பு வைத்தால் நல்லது.. குருமா கோழிக்கறி ஆட்டுக்கறி சமைத்து உண்ணும் நாம் இதற்கும் நேரம் ஒதுக்கினால் நல்லது.
 தா ரோசனை சிகிச்சை
 புதுசு இல்லை இது. கறந்த பசும்பாலு அதோட சூடு ஆறுவதற்கு முன்  காய்ச்சாமல் அப்படியே பருகுவதை அதுக்கு பேருதான் தா ரோசனை சிகிச்சை... இன்னைக்கு பாக்கெட் பால்ல காலம் தள்ளுற  நம இந்த சிகிச்சைக்கு கிடைக்குமா அப்படிங்கறது லட்சக்கணக்கான கேள்வி. உடம்பின் உடைய ஒட்டுமொத்த எதிர்ப்பு திறனையும் தரக்கூடியது இந்த சிகிச்சை முறை. உடம்பு வாடி போகுதல் உடம்பு நாளாக நாளாக பிணிகளுக்கு காரணம் ஆகுதல் இவைகளிலிருந்து பாதுகாக்கணும் என்ன இந்த சிகிச்சை முறை அவசியம்.... சுத்தமான பால் அதுவும் பசும்பால் கிடைக்க முடிஞ்சவரைக்கும் முயற்சி செய்யுங்கள்... தெருவுல வாக்கிங் போற நாம சற்று தூரத்திலேயே இந்த பால் கிடைச்சாலும் வாங்கி வாங்க....
 அன்பிற்கினிய உள்ளங்களே
 மேலே கூறிய பத்து செயல்பாடுகளும் நிச்சயமாக நாம் செய்ய இயலும்.... எங்கெல்லாம் எப்பெல்லாம் இதை மேற்கொள்ள முடியுமோ அங்கெல்லாம் இதை மேற்கொள்ள முயற்சியுங்கள்... இதைப் படித்துவிட்டு அடுத்த பதிவுக்கு செல்லும் முன் சற்று தனியாக யோசித்துப் பாருங்கள்..
 பின்பு தெளிந்த பின்பு செயல்பாட்டிற்கு வாருங்கள்.. குறிப்பா குழந்தைகளுக்கு ஏளனமாக கேவலமான செயல்பாடுகள் இல்லை என்பதை கட்டாயமாக அறிவுறுத்துங்கள்... முன்னோர்கள் ஆசியுடன் இறை ஆசியும் கிட்டும்.
 நன்றி. வணக்கம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக