வெள்ளி, 28 அக்டோபர், 2016

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன் ?

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன் ?

👉 தீப ஒளி திருநாள் வாழ்வில் இனிமை பொங்கச் செய்யும் ஓர் இனிய நாளாகும். தீபாவளி ஒளிநிரம்பிய விழா. வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதற்கு வழிகாட்டும் விழா.

👉 இருள் உள்ள இடத்தில் ஒளி ஏற்றினால் இருள் அகன்று விடுவது இயல்பான ஒன்று. அதை குறிப்பால் உணர்த்துவது மட்டுமல்லாமல் மனதில் இருக்கும் இருள் அகல்வதற்கு பாதை போடுகிறது இந்த தீபாவளி திருநாள்.

👉 பொதுவான நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது உடலுக்கு குளிர்ச்சியை தரச் செய்யும் குளியல் ஆகும்.

👉 எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தாலும் குளிக்கா விட்டாலும் தீப ஒளி திருநாளில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வதற்கு காரணம் உண்டு.

👉 தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும்.

👉 தீபாவளியன்று நம் வீட்டில் இருக்கும் எண்ணெயில் திருமகளாகிய மகாலட்சுமி வாசம் செய்கிறாள். சாதாரணமாக எண்ணெய் தலையைக் கண்டால் அபசகுனம் என சொல்வோம்.

👉 ஆனால், தீபாவளி நாளில் எண்ணெயில் லட்சுமி இருப்பதால் செல்வச்செழிப்பு ஏற்படும். தீபாவளியில் எண்ணெய் தேய்த்து குளித்து லட்சுமியினை வீட்டிற்கு அழைத்தால் வளம் மென்மேலும் வளரும்...

**********************************

செய்த
நாள்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எண்ணெய் தேய்த்துக் குளிப்பது
ஏன்?
தீபாவளி நன்னாளில்
எண்ணெய் தேய்த்துக்
கொள்வதும், நல்ல
நீரில் குளிப்பதும் அவசியம்.
குளிக்கும் நீர் சுத்தமாக
இருக்க வேண்டும். அது
வெந்நீராக இருப்பது
அவசியம். எண்ணெய் தேய்த்துக்
குளிப்பதில் தனிச்சிறப்பு இருக்கிறது.
தீபாவளியன்று நம் வீட்டில் இருக்கும்
எண்ணெயில் திருமகளாகிய
மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
சாதாரணமாக எண்ணெய் தலையைக்
கண்டால் அபசகுனம் என
சொல்வோம். ஆனால், தீபாவளி
நாளில் எண்ணெயில் லட்சுமி
இருப்பதால் செல்வச்செழிப்பு
ஏற்படும்.
சகோதரிகளுக்கு பரிசு: தமிழகத்தில், சிறுவீட்டுப்
பொங்கலின் போது, நீர்நிலைகளில் தீபம்
விடும் வழக்கம் இருக்கிறது. வெற்றிலையில்
கற்பூரம் ஏற்றி வைத்து மிதக்க விடுவார்கள்.
வடமாநிலங்களில் தீபாவளியை ஐந்து
நாட்கள் கொண்டாடுகின்றனர்.
இதில் ஐந்தாவது நாள் எமதர்ம வழிபாடு
நடக்கும். எமனுக்கு யமுனை என்ற தங்கை
இருந்தாள். எமன் தன் தங்கைக்கு
தீபாவளியன்று பரிசுப் பொருள்களை
வழங்கி மகிழ்ந்தான். தங்கை யமுனையும் தன்
அண்ணனுக்கு விருந்து உபசரித்து நன்றி
தெரிவித்தாள். இவ்வழக்கம் இன்றும்
தொடர்கிறது. வடமாநிலங்களில்
தங்கள் சகோதரிகளுக்கு தீபாவளிப் பரிசுப்
பொருட்களை சகோதரர்கள்
வழங்குவார்கள். பெண்களும்
சகோதரர்களுக்கு விருந்து அளித்து மரியாதை
செய்கிறார்கள். அன்றைய தினம்
பெண்கள் தீபங்களை ஆற்றில் மிதக்க
விடுவார்கள். அந்த தீபங்கள் எரிந்து முடியும்
வரை நீரில் அமிழ்ந்து விடாமலும், அணைந்து
போகாமலும் பார்த்துக்
கொள்வார்கள். தீபங்கள் நன்கு
பிரகாசித்தால் அந்த வருடம் முழுவதும்
சுபிட்சமாக அமையும் என்று நம்புகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக