வெள்ளி, 21 அக்டோபர், 2016

கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்...

🖼கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்...

நம் *முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால்* கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, *கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை*. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?

அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம்- கணவரிடம்/ மனைவியிடம் எந்த *அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான்* அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் *மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது*. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது.

இது 🖼கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!"

கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் *உன் குறையைக் காட்டுகிறது*. நீ *அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும்*. அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் *நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும்*.அவர் இல்லாத போது *முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது*.

இது 🖼கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”

ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் *அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா*? இல்லையே…!

அதே போல் *நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால்* அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் *திருத்திக்கொள்ள வேண்டும்*.

இது 🖼கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”

இனி *கண்ணாடி முன்னால்* நின்று முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த *அறிவுரைகள் உங்கள் மனதை* அலங்கரிக்கட்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக