திங்கள், 26 செப்டம்பர், 2016

என்னைக் கவர்ந்த வாசகங்கள்...

என்னைக் கவர்ந்த வாசகங்கள்...

*பேசி தீருங்கள்.
         பேசியே வளர்க்காதீர்கள்.

*உரியவர்களிடம் சொல்லுங்கள்.
     ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.

*நடப்பதைப் பாருங்கள்.
     நடந்ததைக்  கிளறாதீர்கள்.

*உறுதி காட்டுங்கள்.
  பிடிவாதம் காட்டாதீர்கள்.

*விவரங்கள் சொல்லுங்கள்.
     வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.

*தீர்வை விரும்புங்கள்.
      தர்க்கம் விரும்பாதீர்கள்.

*விவாதம் செய்யுங்கள்.
     விவகாரம் செய்யாதீர்கள்.

*விளக்கம் பெறுங்கள்.
      விரோதம் பெறாதீர்கள்.

*பரிசீலனை செய்யுங்கள்.
     பணிந்து போகாதீர்கள்.

*சங்கடமாய் இருந்தாலும்
     சத்தியமே பேசுங்கள்.

*செல்வாக்கு இருந்தாலும்
    சரியானதைச் செய்யுங்கள்.

*எதிர் தரப்பும் பேசட்டும்.
  என்னவென்று கேளுங்கள்.
  எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.

*நேரம் வீணாகாமல்
    விரைவாக முடியுங்கள்.

*தானாய்த்தான் முடியுமென்றால்,
     வேறு வேலை பாருங்கள்.

*யாரோடும் பகையில்லை என்பது போல் வாழுங்கள்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக