செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

மார்பக புற்றுநோய் பரிசோதனை பெண்கள் எப்படி சுய பரிசோதனை செய்து கொள்வது ? ...


மார்பக புற்றுநோய் பரிசோதனை பெண்கள் எப்படி சுய பரிசோதனை செய்து கொள்வது ? ...

  பொதுவாகவே ஆண்களுக்கு
பெண்களின் மார்பகங்களின் மீது
தனி ஈர்ப்பு உண்டு .
இன்று இந்தியாவில்
பெரும்பாலான பெண்கள்
பாதிக்கப்படுவது மார்பக புற்று நோயால் தான் .

சரி ஆண்கள் தங்கள் துணைக்கு மார்பக புற்று நோய் உள்ளதா என எப்படி கண்டறிவது ?
நீங்கள் உங்கள் துணையுடன்
காதல், காம விளையாட்டுக்களில் ஈடுபடும்போது ...
உங்கள் துணையின் மார்பகங்களில்
ஏதேனும் வித்தியாசமாக கட்டி , வீக்கம்
வேறு ஏதேனும் வித்தியாசங்கள்
இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில்
மார்பக புற்றுநோய் பரிசோதனை
செய்து கொள்வது நல்லது .

இனி பெண்கள் எப்படி சுய
பரிசோதனை செய்து கொள்வது ? ...

பெண்கள் தாமே செய்து கொள்ள எளிதான மார்பக சுய பரிசோதனை முறை விளக்கம்

1. இடுப்பளவிற்கு துணிகளை இறக்கிவிட்டு பின்பு நின்றோஅல்லது உட்கார்ந்தோ கண்ணாடி முன் மார்பகங்களை கவனிக்கவும். கைகளை இருபுறமும் தளர்த்தி வைத்துக் கொள்ளவும். மார்பகத்தின் அமைப்பிலோ அல்லது தோற்றத்திலோ மாற்றம் உள்ளதா என்று கவனிக்கவும்.

இதே முறையில் கைகளை தலைக்குமேல் உயர்த்தி மார்பகங்களில் மாற்றம் உள்ளதா அல்லது மார்பகக் காம்புகளில் கசிவு உள்ளதா என்று கவனிக்கவும்.

பிறகு படுத்த நிலையில் தோள் அடியில் ஒரு மெல்லிய தலையனை வைத்து வலது கையால் இடது மார்பகத்தின் மேல் உள்ள பகுதியை பரிசோதனை செய்யவும். கைவிரல்களை சேர்த்த நிலையில் வைத்துக்கொண்டு வட்ட வடிவ முறையில் லேசாக அழுத்தி கட்டி தெரிகிறதா என்று பரிசோதனை செய்யவும்.

அதே முறையில் மார்பகத்தில் உள்ள கீழ் பகுதியை முறையாகப் பரிசோதிக்கவும்.

பின்னர் மார்பகத்தில் வெளி கீழ் பகுதியை லேசாக அழுத்தி பரிசோதனை செய்து கீழிருந்து மார்பகக்காம்பை நோக்கி வரவும்.

அதே முறையில் மார்பகத்தின் வெளிமேல் பகுதியிலிருந்து மார்பகக்காம்பு வரை பரிசோதனையை தொடரவும்.

மார்பகப் பரிசோதனைக்குப் பிறகு அக்குளில் நெரிகட்டி உள்ளதா என்று பரிசோதிக்கவும். பின்னர் இதே முறையில் இடது கையால் வலது மார்பகத்தையும்அக்குள் பகுதியையும் பரிசோதனை செய்யவும்.

           ⓂⓂ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக