வியாழன், 6 பிப்ரவரி, 2020

குழந்தைகளின் பசியின்மைக்கான காரணங்கள்


குழந்தைகளின் பசியின்மைக்கான காரணங்கள்

உங்களது குழந்தை சரியாக சாப்பிடவில்லை அல்லது சாப்பிடவே இல்லை என்றால் கவலை கொள்வது மிகவும் இயல்பான ஒன்றாகும். உங்களுக்கு அவர்களுக்கு போராடி உணவூட்டி விட வேண்டும் என்ற உந்துதல் அதிகமாக இருக்கலாம், எனினும் அவர்களுக்கு இயல்பாகவே உணவில் ஆர்வம் இருக்காது.

நீங்கள் உங்களது குழந்தை சரியாக சாப்பிட மறுப்பதை நினைத்து உங்களது அமைதியை இழக்க வேண்டிய அவசியமில்லை. குழந்தைகள் அவர்களது வளர்ந்து வரும் ஆண்டுகளில் உணவில் ஆர்வம் இல்லாமல் இருப்பது மிகவும் சாதாரணமானதாகும். ஒரு வேளை உங்களது குழந்தை அதுவாகவே சாப்பிடும் சாதாரண அளவை விட குறைவாக சாப்பிட்டு எடை குறைந்தால், உங்களது குழந்தைகள் நல மருத்துவரைச் சந்தித்து அதற்கு வேறு ஏதேனும் அடிப்படை மருத்துவ காரணங்கள் இருக்கிறதா என சோதித்துக் கொள்ளுங்கள்.

உங்களது குழந்தை மிட்டாய்கள், குக்கீகள், பழச்சாறுகள் மற்றும் மற்ற ஆரோக்கியமற்ற வகை மாற்று உணவுகளை உண்டு தனது வயிற்றை நிரப்புகிறதா? ஆம் எனில், நீங்கள் இதனை சரிபார்க்க வேண்டும். உங்களது குழந்தை ஜங்க் வகை உணவுகளை உண்டு அதன் சிறிய வயிறு நிரம்பி விட்டால், பின்னர் அதற்கு உண்பதற்கு வயிற்றில் இடமோ ஆர்வமோ இருக்காது.

நீங்கள் உங்களது குழந்தை முழுமையான எண்ணெய் நிறைந்த உணவை உண்ணும் என நம்புகிறீர்களா? உங்களது குழந்தை முழுமையான எண்ணெய் நிறைந்த உணவை உண்டால் வயிறு முற்றிலும் நிரம்பிவிட்டதாக நினைக்கும், இதனால் அதற்கடுத்த வேளை உணவை அது முற்றிலும் மறுக்கக்கூடும். மேலும் நீங்கள் உங்களது குழந்தை சராசரியாக பருகும் பாலின் அளவையும் கூட குறைக்க வேண்டும்.

உங்களது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அது சாப்பிடாது. உடல்நிலை சரியில்லாத போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் நுண்ணுயிர் கொல்லிகளும் கூட அவர்களுக்கு பசியின்மை ஏற்பட வழிவகுக்கும். அதற்கு உடல்நிலை சரியான பிறகு, நன்றாக சாப்பிட ஆரம்பித்துவிடும்.

உளவியல் சொல்லும் உண்மைகள்..! 

1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்..

2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்..

3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்..

4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள்..

5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள்..

6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்..

7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள்...!

பேச்சு - சில உளவியல் ஆலோசனைகள்...! 

1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்..

2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்..

3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்..

4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்..

5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்..

6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும்.அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்..

7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்..

8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்..

9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்..

10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்..

தாழ்வு மனப்பான்மையை போக்க சில உளவியல் வழிகள்...! 

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்..

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று..

3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்..

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை..

5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது..

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்..

7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக