திங்கள், 26 ஆகஸ்ட், 2019

ஆண் கருத்தடை


ஆண் கருத்தடை

விதையிலிருந்து புறப்படும் 40செ.மீ. நீளமுள்ள வாஸ்டிபரன் ஸ் என்ற நீண்ட குழாயை வெட்டுவதன் மூலம்தான் ஆண் கரு த்தடை செய்யப்படுகிறது.

ஆண்கள் கருத்தடை செய்துகொண்டால் உடலுறவில் நாட் டம் இருக்காது என்ற தவறான கருத்து நிலவுகிறது, ஆண் கரு த்தடை அறுவை சிகிச்சைக்கும் உடலுறவுக்கும் எந்த சம்பந் தமும் இல்லை.

 கருத்தடைசெய்துகொண்ட ஆண்கள் சாதாரனமாக உடலுறவு கொள்வதுடன் உச்சகட்டத்தை அடைவதிலும் எந்த ஒரு தடையுமில்லை.

ஆண்களை மட்டுமே குறை சொல்ல வேண்டுமா?

 ‘‘தாம்பத்தியத்தில் ஆண், கொடு ப்பவனாகவும் (Active partner), பெண், பெறுபவளாகவும் Passive partner)  இருக்கிறாள். ஒரு உறவின்தன்மை, நேரம் எல்லாவற்றையும் தீர்மானிப்பது ஆண்தான்.  பெண்ணின் பங்களிப்பு இதில் குறைவு.  இல்லற உறவில் விருப்பமில்லா த பெண்களின் குறையைக் கூட (Frigidity) எளிதில் சரிசெய்து விட முடியும். பெண்களின் மற்ற பாலியல் குறைபாடுகளும் சரிசெய்யக் கூடிய வையே.

ஒரு சான்றிதழின் மூலம் ஆண்மையை நிரூபி த்துவிட முடியுமா?

‘‘மருத்துவரீதியாக ஓர் ஆண், தகுதியானவன், தகுதியற்றவன் என்பதைத் தீர்மானிக்க முடியா து. பரிசோதனையில் ஆரோக்கியமாகத் தெரியும் ஓர் ஆண் நடை முறையில் அப்படியே இருப்பான் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. சிலர் தன்பாலின விருப்பம் கொண்ட ஹோமோ செக்ஷு வலாகஇருப்பார்கள். சிலர் போதைப் பழக்கம் காரணமாக மனைவியை தவிர்ப்பார்கள். சிலரால் மனைவியுடன் மட்டும் உறவில் ஈடுபடமுடியாது. மற்ற பெண்களிடம் நார்மலாக இருப் பார்கள் (Selective impotence). இதுபோன்ற நபர்களைப் பரி சோதித்தால் ஆரோக்கியமாக இருப்பதாகவே முடிவுகள் காட்டும். பரிசோதனையில் சரியாக இல்லாத ஆண், நடைமு றையில் சரியாகச்செயல்படுபவராகவும் இருக்கலா ம்.

பாலியல் உறவில் மனம் பெரும்பங்கு வகிப்பதுதான் இதற்குக் காரணம். துணை எப்படிப்பட்டவள், அவர்களுக்குள் இருக்கும் அன்யோன்யம், சூழல் போன்ற வேறு பல காரணங்களும் இருக்கின்றன. ஆனால், இப்பரிசோதனையின் மூலம் பால்வினை நோய்கள், மலட்டுத்தன்மை, உடல் குறைகள், மனநல பாதிப்புகள் போன்றவற் றையும் கண்டுபிடித்து சரிசெய்ய முடியும்’’

ஆண் மலட்டுத்தன்மைக்கும் ஆண்மை யின்மைக்கும் என்ன வித்தியாசம்?

‘‘ஆண் மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைபாடு இரண்டும் வேறு வேறு. தாம்பத்தியத்தில் தன்னுடை ய துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ஒருவருக்கு உயிரணுக்கள் காரணமாக மலட்டுத் தன்மை இருக்கலாம். ஒருபெண்ணுடன் உறவு கொள்ளமுடியாதவர், தந்தையாகத் தகுதியுள்ள உயிரணுக்களை கொ ண்டிருக்கலாம். இதில் இன்னொரு விஷயம். ஆண்மையின்மை காரணமாக விவாகரத்து கேட்கமுடியும். மலட்டுத்தன்மையைக் காரண ம் காட்டி விவாகரத்து கேட்க முடியாது’’

தம்பதி என்ன செய்ய வேண்டும்?

‘‘துணையிடம் குறை இருப்பதை உணர்ந்தால், அவருக்குத் தைரியம் கொடுத்து மருத்துவரிடம் அழைத்து வரவேண்டும். நான்கு சுவர்களு க்குள்ளேயே சண்டை போட்டுக் கொண்டு நிம்மதியிழப்பதினால் எந்த லாபமும் இல்லை. தம்பதிக்குள் பிரிவினையை ஏற்படுத்துபவர்களாகக் குடும்பத்தினரே இருக்கிறார்கள் என்பதும் கசப்பான உண்மை. மூன்றாம் நபர் தலையீடு வராமல் தம்பதிகள் தங் களை தற்காத்துக் கொள்வதும் இதில் முக்கியம்’’

ஆண்மைக்குறைவுக்கு சிகிச்சை இருக்கிறதா?

‘‘செக்ஸில் மனம் பெரும்பங்கு வகிக்கிறது என்று முன்பே சொன்னேன். நம் நாட்டில் போதுமான பாலியல் அறிவு இல்லாததால் தேவையற்ற குழப்பமும் பயமுமே பலரது வாழ்க்கையை கெடுத்து விடுகி றது. இவர்களில் பலரும் மனரீதியான பிரச்னை உள்ளவர்கள்தான். அத ற்கு, பிரச்சனை என்னவென்று முதலில் மருத்துவருக்கு தெரியவேண்டும். பிரச்சனையை மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டு மறைக்க முயற்சிப்ப து, துணையைத் தவிர்ப்பது, அடிப்பது, மற்றவர்களோடு தொடர்புபடுத்திப் பேசுவது, திருமண உறவுக்கு வெளியே இன்னொருவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது போன்றவை ஆக்கப்பூர்வமான செயல்கள் அல்ல’’


‘‘திருமணத்துக்கு முன்பு ஒரு சித்த மருத்துவரை  சந்தித்து தனக்கிருக் கும் சந்தேகங்க ளை தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும். ஏதேனும் பிரச்ச னைகள் இருப்பது தெரிந்தால் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு அதன் பின் திருமண வாழ்க்கைக்குள் நுழையலாம். உண்மையில், பயம் காரணமாகவே மருத்துவரை சந்திப்பதைப் பலரும் தவிர்க்கிறார்கள். தயக்கம் என்ன….?


ஆண்மைக் குறைபாடுங்கிறதை இரண்டு விதமாக பார்க்கலாம். சின்ன வயசுல அந்த ஆணு க்கு ஏற்பட்ட செக்ஸ் வன்முறை, மோச மான அனுபவங்கள், அது தொடர்பான அருவெறுப்பான சம்பவங்கள், பயம்னு உளவியல் ரீதியான பிரச்னை கள், அதனால தாம்பத்திய உறவுல  ஈடு பட  முடியாமப் போகறது ஒரு வகை.  உண்மையிலேயே உடம்புல பிரச்னை கள் இருந்து, அதனால தாம்பத்திய உற வுல  ஈடுபட  முடியாத நிலை இன்னொரு வகை. இதுல முதல் வகைக் குறைபாட்டை கவுன்சலிங்ல சரிப்படுத்தலா ம். அடுத்ததுக்கு மருத்துவ சிகிச்சை அவசியம். தனக்கு ‘கருமுட்டை வளர்ச்சி சரியில்லை, கர்ப்பப்பை யில கோளாறு’னு ஒரு பெண் தயங் காம சொல்ற மாதிரி, ஆணும் தன்னோட பிரச்னைகளை வெளி யில சொல்லத் தயாராகணும். கவு ன்சலிங் மூலமா சரி செய்யக்கூடிய பல பிரச்னைகளும் தீர்க் கப்படாம பெரிசாகக் காரணம், அந்த ஆண் தரப்புல உள்ள தயக் கம். ஆலோச னைக்கு வந்தாலே பிரச்னை தீர்ந்த மாதிரிதான். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக