செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

மூலிகை வாசத்தில் மணக்கும் குற்றாலம்… கொட்டிக்கிடக்கும் இயற்கை வளங்கள்


மூலிகை வாசத்தில் மணக்கும் குற்றாலம்… கொட்டிக்கிடக்கும் இயற்கை வளங்கள்.

குற்றாலம் என்றதும் நமது நினைவுக்கு வருவது அழகிய நீர்வீழ்ச்சி மட்டுமல்ல பசுமையான மலைத்தொடரும்,அடர்ந்த வனங்களும், மூலிகைப் புதர்களும், அரிய வன விலங்குகளும், பறவைகளும் நிறைந்த அற்புத பூமி குற்றாலம்.

குற்றால மலைகளில் பல அரிய பெரிய வைத்திய குணங்களை இந்த மலையருவிகளும் மலையில் படர்ந்திருக்கும் மூலிகைகளும் கொண்டிருப்பதை உறுதிசெய்கிறார்.

1947 களில் குற்றாலம் மலையை ஆய்வு செய்த வெள்ளைக்கார டாக்டரான ஒயிட் என்பவர். 1008 வகையான மூலிகைகளைக் கொண்ட குற்றாலம் சமய சஞ்சீவி என்கிறார். டாக்டர் ஒயிட். அதோடு பல் வேறு வகையான பழங்களும் விளையக் கூடிய அற்புதமான மலை என்கிறார் அந்த ஆங்கிலேயர்

மலையின் மேல் ஓடி வரும் மழைநீர் வெள்ளம், மூலிகைச் சாறுகளுடன் கலந்து தண்ணோடு பல்வேறு கனி மங்களையும் சேர்த்துக் கொண்டு, மலையின் பல பாகங்கள் வழியே கீழே பாய்கின்றன.

2000 வகையான மலர்கள்

பாக்கும், தெளிதேனும், பாகும், பலாவும் நிறைந்த மலை. இங்கு 2000 வகையான மலர்களும், செடிகளும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

பல வகையான பழங்கள்

ரங்குஸ்தான், மலை வாழை, டொரியன், பலா, மங்குஸ்தான், சீதா, கொய்யா, சப்போட்டா, மா, நெல்லி, போன்ற எண்ணற்ற பழ வகைகள் இந்த மலைகளில் காய்க்கின்றன. பல அறிய மூலிகைகள் மலையின் மேலும் பண்ணைகளிலும் வளருகின்றன.


துளிர்க்கும் மூலிகைச் செடிகள்

தென்மேற்கு பருவக்காற்று துவங்கும் மே மாதம் முதல் ஆகஸ்ட்டின் மத்திய நாட்கள் வரையிலும் சுமார் மூன்றரை மாதங்கள் வரை நீடிக்கும் சாரல் மழை சீசனில் மலையில் உள்ள மூலிகைச் செடிகள் உயிர்பெற்று துளிர்த்துவிடும்.

தலைவலி குணமாகும்

அந்த மூலிகைச் செடிகளின் வழியே வழிந்தோடி அருவியாய் கொட்டும் தண்ணீரில் குளித்தால் சரும நோய்கள் தீருவதோடு தலைவலியும் குணமாகும் தன்மைகொண்டது.

கடுக்காய் கஷாயம்

குற்றாலநாதர் கோயிலில் சிவனுக்கு, தினமும் அர்த்தஜாம பூஜையின்போது, "கடுக்காய் கஷாயம்" நைவேத்யம் படைக்கின்றனர். அருவி விழும் இடத்தில் இருப்பதால் சிவனுக்கு ஜுரம், குளிர்காய்ச்சல் உண்டாகாமல் இருக்க இந்த கஷாயம் படைக்கின்றனர்.


சிவனுக்கு தலைவலி

குற்றாலநாதர் லிங்கத்தின் மீது, அகத்தியரின் விரல் பதிந்த தடங்கள் தற்போதும் இருக்கிறது. அகத்தியர், திருமாலின் தலையில் கை வைத்து அழுத்தியதால், சிவனுக்கு தலை வலி உண்டானதாம். எனவே, இவருக்கு தலை வலி நீங்க தினமும் காலையில் 9.30 மணிக்கு நடக்கும் பூஜையில், தலையில் தைலம் தடவுகின்றனர்.

தலைவலி நீங்கும்

பசும்பால், இளநீர், சந்தனம் மற்றும் 42 விதமான மூலிகைகளைச் சேர்த்து 90 நாட்கள் வேகவைத்து, அந்த கலவையில், செக்கில் ஆட்டி எடுத்த தூய நல்லெண்ணெய் சேர்த்து, இந்த தைலம் தயாரிக்கின்றனர். இதை தேய்த்துக் கொண்டால் தலைவலி பிரச்னை நீங்குவதாக நம்பிக்கை.


கோயிலில் சிவனுக்கு, அபிஷேகம் செய்த தலைவலி நீக்கும் மூலிகை தைலம் பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக