செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

குழந்தை இல்லையா? கவலை வேண்டாம்..



குழந்தை இல்லையா? கவலை வேண்டாம்..

குழந்தையின்மை

குழந்தைகள் இல்லை என்பது ஒரு குடும்பப் பிரச்னையாகவும், சமூகப் பிரச்னையாகவும் உள்ளது. குழந்தையின்மைக்கான சிகிச்சையில் அறிவியலும், ஆராய்ச்சியும் பெரும் பங்காற்றி வருகின்றன.

குறைகளைக் கண்டறிய...

ஸ்கேனில் 3ஈ, 4ஈ டாப்லர் (ரத்த ஒட்டம் பார்ப்பது) ஆகிய நவீன வசதிகள் உள்ளன. இதனால் கர்ப்பப் பையில், சினைப்பையில், கருக்குழாயில் உள்ள குறைகளை "ஹிஸ்டீரோ சால்பின்கோக்ராம்" (Hystero​ Salphingogr​am) எனும் எக்ஸ்-ரே எடுத்து குழந்தை வளரும் இடத்தில் உள்ள குறைபாடுகள், கருக்குழாயில் உள்ள அடைப்புகள், நீர் கோர்த்தல் ஆகியவற்றைக் கண்டுபிடிக்கலாம்.

ஆண்களுக்கு கணினி மூலம் விந்து ஆராய்தல் என்னும் முறையில் மரபணுவில் உள்ள குறைபாடுகளையும் கண்டுபிடிக்கலாம். நுட்பமான முறையில் விந்தின் குறைகளைக் கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை அளித்தால் வெற்றி அடையலாம். ஆண்கள் வயது அதிகரிக்கும் பட்சத்தில் இத்தகைய குறைபாடுகள் அதிகரிக்கின்றன.

மருந்துகள் மூலமும் லாப்ரோஸ்கோப்பி அறுவைச் சிகிச்சைகள் மூலமும் பெரும்பாலான குறைகளை நிவர்த்தி செய்யலாம். கர்ப்பப் பையிலும், சினைப்பையிலும், கருக்குழாயிலும் ஏற்படும் நார்க் கட்டிகள், நீர்க் கட்டிகள், ரத்தக் கட்டிகள், நீர் கோர்த்தல் போன்றவற்றை ஸ்கேனில் லாப்ராஸ்கோப்பி, ஹிஸ்ட்ராஸ்கோப்பி மூலம் சிகிச்சை அளித்து முழுமையாகக் குணப்படுத்தலாம்.
சென்னை பிரசாந்த் ஆராய்ச்சி மையத்தில்தான் 3ஈ லாப்ரோஸ்கோப்பி முதல் முறையாக உபயோகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மிக நுட்பமாக அறுவைச் சிகிச்சை செய்வதால் ரத்தக் கசிவு குறைவாக உள்ளது.

இவ்வாறு நவீன அறுவைச் சிகிச்சை முறைகளைக் கடைப்பிடிப்பதால் குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் 90 சதவீதம் பேருக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அளிக்க முடியும். மீதமுள்ள 10 சதவீத பெண்களுக்கு கருப்பையில் விந்தணுவைச் செலுத்துதல் (IUI) அல்லது சோதனைக் குழாய் குழந்தை (ஐவிஎஃப்) அல்லது விந்தணுவை முட்டையில் செலுத்துதல் (இக்ஸி) முறை தேவைப்படுகிறது. IUI (கருப்பையில் விந்தணுவைச் செலுத்துதல்) ஆறு முறை தோல்வி அடைந்தால் IC​SI முறைக்கு (சோதனைக் குழாய் குழந்தை முறை) மாறுவது நல்ல பலனை அளிக்கும்.

1990-ஆம் ஆண்டு ஐவிஎஃப் முறையில் 8-10 சதவீத பெண்களுக்கு கர்ப்பமாகும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இன்றைய நவீன விஞ்ஞான முறைகளினால் 60-85 சதவீதம் வரை கர்ப்பமாகும் வாய்ப்பு உள்ளது. இது எப்படிச் சாத்தியமாகும் என்று நீங்கள் யோசிக்கலாம். நவீன கருவிகளையும் முறைகளையும் உபயோகிப்பதே இந்த மகத்தான வெற்றிக்குக் காரணம்.

வெற்றி அடையும் வாய்ப்பை அதிகரிக்க முட்டை, விந்தணு, கர்ப்பப்பை ஆகிய மூன்றும் சிறப்பாக அமைய வேண்டும். முட்டை வளர்ச்சியையும் அதன் தன்மையும் முதல் தரமாக ஆக்குவதற்கு சிறப்பு மருந்துகளும் யோகா, அக்குபஞ்சர், இசை ஆகியவையும் மிக உபயோகமாக உள்ளன.

எல்லோருக்கும் எவ்வளவு வயதானாலும் அவர்களுடைய முட்டைதான் வேண்டும் என்று நினைப்பது சகஜம். இன்றைய மருந்துகளும் உபயோகிக்கும் முறையில் உள்ள முன்னேற்றங்களும் இதற்கு மிகவும் உதவுகிறது. "ஐவிஎஃப் லைட் ப்ரோட்டாக்கால்' என்ற முறையைக் கடைப்பிடித்து பிறகு 42 வயது வரை உள்ள பெண்களுக்கு தன்னுடைய முட்டையை உபயோகித்து கரு உருவாக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
விந்தணு தரத்தை அதிகரிக்க மருந்துகளும் லாப்ரோஸ்கோப்பி அறுவைச் சிகிச்சையும் உள்ளன. இதைத் தவிர, மிகவும் அதிநவீன (ஐ.எம்.எஸ்.ஐ) முறையினால் விந்தணுவை கணினி (கம்ப்யூட்டர் ஜெனரேட்டட் இமேஜ்) மூலம் 7000 மடங்கு பெரிதாகப் பார்த்து மிகவும் சிறப்பான விந்தணுவைத் தேர்வு செய்யலாம்.

சிறப்பான கருவை உருவாக்கி அதில் மிகவும் சிறப்பான கருவைத் தேர்ந்தெடுப்பது எப்படி? "எம்ப்ரியோஸ்கோப்' என்பது மிகவும் அதிநவீன கருவி. இந்த இன்குபேட்டரில் கருவை பாதுகாப்பாக வைக்கிறோம். இதில் கேமரா உள்ளதால் கருவின் வளர்ச்சியை ஒவ்வொரு நிமிஷமும் பதிவு செய்ய முடியும்.
இதனால் கருவின் வளர்ச்சியில் குறை இருந்தால் அதைக் கண்டுபிடித்து கருப்பையில் செலுத்தும் முன் சிறந்த கருவைத் தேர்ந்தெடுக்க முடிகிறது. இதனால் கர்ப்பமாகும் வாய்ப்பை 10 முதல் 12 சதவீதம் வரை அதிகரிக்கலாம்.
திருமணம் ஆன ஓர் ஆண்டுக்குள் கர்ப்பம் அடையவில்லையென்றால், மருத்துவரை அணுகலாம். முக்கியமாக மாதவிடாய் தாமதமாக இருந்தாலும், மிகவும் வலியோடு இருந்தாலும் தாம்பத்யத்தில் சிக்கல் இருந்தாலும் மருத்துவரை அணுகலாம். முக்கியமாக 35 வயதுக்கும் மேற்பட்டவர்கள் காலம் தாழ்த்தாமல் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.




குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு

இந்தியாவில் 10 முதல் 15 சதவீதம் தம்பதியருக்கு மலட்டுத் தன்மை பிரச்னை உள்ளது. இது ஆண்டுக்கு 20 சதவீதம் அதிகரித்து வருகிறது. எந்தவித கருத்தடை சாதனங்களையும் பயன்படுத்தாமல் ஒரு ஆண்டு கால தாம்பத்தியத்துக்கு பின்னும் கருத்தரிக்கவில்லை என்றால் கண்டிப்பாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 மாதத்துக்குள் பரிசோதனை மேற்கொள்ளலாம். பொதுவாக குழந்தையின்மைக்கு ஆண், பெண் இருவரில் ஒருவர் அல்லது இருவருக்குமே பிரச்னை இருக்க வாய்ப்பு உள்ளது. ஆணிடம் போதுமான அளவு உயிரணுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு அவை பெண்ணின் கருப்பைக்குள் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். உயிரணுக்கள் பெண்ணின் கருமுட்டைக்குள் சென்று கருத்தரிக்க செய்யும் ஆற்றல் கொண்டதாக இருக்க வேண்டும். பெண்ணுக்கு கரு முட்டையின் உற்பத்தி சரியாக இருப்பதுடன், கருமுட்டை கருப்பைக்கு வரும் வழி அடைப்பு எதுவும் இன்றி இருக்க வேண்டும். கருவை வளர்க்கக் கூடிய பலமுள்ள நிலையில் கருப்பை இருக்க வேண்டியதும் அவசியம். தாம்பத்தியமும் சரியாக இருக்க வேண்டும். இவை சரியாக இருந்தால் குழந்தை உருவாவதில் பிரச்னை ஏற்படாது.
ஆண்களுக்கு ஹார்மோன் குறைபாடு, உடல் பருமன், நீண்ட கால புகைப்பழக்கம், மதுப்பழக்கம் மற்றும் ஆண்மைக் குறைவு பிரச்னைகள், உயிரணுக்கள் குறைந்தோ அல்லது இல்லாமலோ இருப்பது, அவற்றின் அசையும் திறன் குறைந்திருப்பது, உருவ அமைப்பு குறைபாடு, சர்க்கரை வியாதி மற்றும் மரபுரீதியான நோய்களால் ஏற்படும் குறைபாடுகள், உளவியல் காரணங்கள், உறுப்பில் குறைபாடு மற்றும் நோய்த் தொற்று போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை உண்டாகும். பெண்களுக்கு கருக்குழாய் அடைப்பு, கருப்பை வளர்ச்சியின்மை, கருப்பைக் கட்டிகள், முட்டை வெளியேறுவதில் பிரச்னை, சினைப்பை, கருப்பையில் என்டோமேட்ரியோசிஸ் பிரச்னை, ஹார்மோன் குறைபாட்டால் கருமுட்டை உற்பத்தி பாதிப்பு, கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பினால் உண்டாகும் நோய்கள், உடல் பருமன், சர்க்கரை, ரத்த கொதிப்பு, தைராய்டு பிரச்னை போன்ற காரணங்களால் குழந்தைப் பேறு தடைபடலாம்.
ஆண்மை குறைபாடு மற்றும் உயிரணு குறைபாடுகளை மருந்துகளை கொண்டு சரி செய்ய முடியும். ஆண்களுக்கு உயிரணு பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட், ஹார்மோன் பரிசோதனை குறைபாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். மாதவிலக்கு குறைபாடுகள் உள்ள பெண்கள் முன்கூட்டியே பரிசோதிக்கலாம். ஆண், பெண் இருவருமே அதிக உடல் எடையைக் குறைப்பது மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு முறைப்படி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். குறைபாட்டுக்கு ஏற்ற சிகிச்சை முறையால் குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்கிறார் மகப்பேறு சிறப்பு மருத்துவர் கல்பனா சம்பத்.
பாதுகாப்பு முறை: குழந்தைப் பேறை உருவாக்க பல சிகிச்சை முறைகள் இருந்தாலும் வருமுன் காப்பதே நல்லது. பெண்கள் மாதவிலக்கு கோளாறுகள், பரம்பரை காரணங்கள் இருப்பின் முக்கூட்டியே பரிசோதித்து சிகிச்சை மேற்கொள்ளலாம். மது , போதைப் பழக்கத்தை ஆண்கள் கைவிட வேண்டும். பாலியல் ரீதி யான குறைபாடுகளை மறைக்காமல் முன்கூட்டியே சிகிச்சை செய்து கொள்வது அவசியம். ஆண், பெண் இருவருமே தாமதமான திருமணம் மற்றும் 35 வயது வரை குழந்தை பெறுவதை தள்ளிப்போடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சத்தான உணவு, உடற்பயிற்சி, குறித்த காலத்தில் குழந்தை பெறுவது மற்றும் ஆணும் பெண்ணும் மகிழ்வான சூழலில் அன்பை பகிர்ந்து கொள்வது குழந்தையின்மைப் பிரச்னைக்கான வாய்ப்புகளை குறைக்கும்.

அவல் தோசை : அவல் மற்றும் 1 கப் தயிரை மிக்ஸ் செய்து ஊற விடவும். 1 கப் பச்சரிசி மற்றும் 1 கப் புழுங்கல் அரிசியை தனியாக ஊற விடவும். இதனுடன் வேக வைத்த ஒரு ஸ்பூன் சாதத்தை சேர்த்து அரைக்கவும். அவல் மிக்சையும் தனியாக அரைத்து அனைத்தையும் கலந்து இரண்டு மணி நேரம் புளிக்க விடவும். உப்பு சேர்த்து தோசையாக வார்க்கலாம். அவலில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.
ரெசிபி
ஓட்ஸ் வெஜ் அடை: கேரட் துருவியது அரை கப், கோஸ் அரை கப் ஆகியவற்றுடன் ஒரு டீஸ்பூன் சோம்பு சேர்த்து வதக்கி அரைக்கவும். ஒரு கப் ஓட்சில் தோசைப் பதத்துக்கு தேவை யான தண்ணீர் சேர்க்கவும். அரைத்த விழுது, பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய், அரை கப் கீரை மற்றும் உப்பு சேர்த்து தோசையாக வார்க்கலாம். அடையாகவும் சுடலாம். இதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின், மினரல்கள் உள்ளன.
கருவேப்பிலைக் குழம்பு : வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், 5 வறமிளகாய், 2 டீஸ்பூன் துவரம்பருப்பு, 1 டீஸ்பூன் மிளகு, ஒரு கப் கருவேப்பிலை சேர்த்து வதக்கி அரைக்கவும். 50 கிராம் புளியை தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளித்து அரைத்த விழுது சேர்த்து வதக்கி புளிக்கரைசல் மற்றும் தேவை யான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். இதில் இரும்புச் சத்து மற்றும் கால்சியம் உள்ளது.
டயட்
பரம்பரைக் காரணங்கள், தாமத மான திருமணம், அதிக எடை, தைராய்டு பிரச்னை, ஆண், பெண் வயது வித்தியாசம் போன்ற காரணங்களால் குழந்தையின்மை பிரச்னை உருவாகிறது. எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது, உடற்பயிற்சி இன்றி இருத்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் ஜங்க் புட், கொழுப்பு உணவுகள் அதிகம் எடுப்பதைத் தவிர்க் கவும். முழு கோதுமை, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானிய வகைகள், நல்ல கொழுப்பு உள்ள உணவு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். இரும்புச் சத்து, கால்சியம், எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை கண்டிப்பாக சேர்க்கவும். எண்ணெய்யின் பயன்பாட்டை குறைக்கவும், சோயா பருப்பு, கீரை சேர்த்துக் கொள்ளலாம். ஆட்டு ஈரல் மற்றும் மீன் ஆகியவற்றை எண்ணெய்யில் பொரிக்காமல் குழம்பில் போட்டு சாப்பிடலாம். உப்பு அதிகம் உள்ள உணவு, ரீபைண்டு செய்யப்பட்ட மைதா, சேமியா, இனிப்பு ஆகியவற்றை தவிர்க்கவும். உணவு மற்றும் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் மட்டுமே குழந்தையின்மை பிரச்னையைத் தீர்க்க முடியும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.
பாட்டி வைத்தியம்
* ஆக்ரூட் பருப்பு, சாலமிரிசி இரண்டையும் சம அளவு எடுத்து பாலில் வேக வைத்து சாப்பிட்டால் ஆண்மை குறைபாடு நீங்கும்.
* அகத்திக் கீரையை வாரத்தில் மூன்று நாட்கள் சேர்த்து கொண்டு மாதம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் குழந்தை பேறு கிட்டும்.
* அமுக்காரா, நெருஞ்சில், கோரைக் கிழங்கு தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து, தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மூட்டு, இடுப்பு, தொடை வலி குணமாகும்.
* அரச இலையை காய வைத்து பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை நீங்கும்.
* ஆடு தீண்டா பாலையை மிளகு 50 சேர்த்து அரைத்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கருப்பையில் உள்ள பூச்சிகள் ஒழிந்து குழந்தை பேறு உண்டாகும்.
* ஆலமர பூக்களை காய வைத்து பொடியாக்கி காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் குழந்தை பேறு உண்டாகும்.
* இளம் ஆலம் விழுதை 20 கிராம் எடுத்து அரைத்து பசும் பாலில் கலந்து மாதவிலக்கின் முதல் நாளில் இருந்து 5 நாட்கள் வரை குடித்தால் கரு உருவாகும்.




பரம்பரை பிரச்னைகளுக்கு என்னதான் தீர்வு?


குழந்தையின்மை என்பது பரம்பரையாக பாதிக்குமா? ஆமாம் என்றால் எப்படி அடுத்த சந்ததி தொடர்கிறது? தத்து எடுத்துக் கொள்கிறவர்களைத் தவிர, மற்றவர்களுக்கு வாரிசே இல்லாமல், அந்த சந்ததி அத்துடன் முற்றுப் பெற்றுவிடாதா? வாழைப்பழ காமெடி மாதிரியான ஒரு சந்தேகத்தை முன் வைத்து விளக்கம் வேண்டினார் சென்னையைச் சேர்ந்த வாசகி ஒருவர். பல்லாயிரம் பேரின் சந்தேகமான அதை குழந்தையின்மை சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர் ஜெயராணியின் முன் வைத்தோம்.
"குழந்தையின்மைக்கான காரணங்களில் பரம்பரையாகத் தொடர்கிற சில முக்கியமான பிரச்னைகள் ஆண்கள், பெண்கள் இருவருக்குமே உண்டு. சில பிரச்னைகளை சாதாரண சிகிச்சைகளின் மூலம் சரி செய்து, குழந்தைப் பேற்றுக்கு வழி ஏற்படுத்த முடியும். சிலவற்றுக்கு செயற்கை முறை கருத்தரிப்பு சிகிச்சைகளே தீர்வாகும்...’’ என்கிற டாக்டர் ஜெயராணி, முதலில் பெண்களை பாதிக்கிற அத்தகைய பிரச்னைகளைப் பற்றிப் பேசுகிறார். குழந்தையின்மைக்குக் காரணமான இந்தப் பிரச்னையை Genetic Infertility என்கிறோம். குழந்தையில்லாத பெண்களில் 5 சதவிகிதத்தினரைப் பாதிக்கிற இதில் முக்கியமான 5 காரணங்கள் உண்டு.
1.டர்னர்ஸ் சிண்ட்ரோம் (Turners Syndrome)
ஒவ்வொரு பெண்ணுக்கும் 46 XX குரோமோசோம்கள் இருக்க வேண்டும். சிலருக்கு 45 X குரோமோசோம்கள் இருக்கலாம். எக்ஸ் குரோமோசோமில் ஏற்படுகிற இந்த அசாதாரணம் காரணமாக, பிறக்கும்போது அந்தப் பெண் குழந்தைக்கு கருப்பை இருக்கும். ஆனால், சினைப்பை இல்லாமலோ அல்லது சினைப்பை இருந்தாலும் அதனுள் கருமுட்டைகளே இல்லாமலோ இருக்கும். அதனால் கருப்பை வளர்ச்சி குறைந்து காணப்படும். அதன் தொடர்ச்சியாக அந்தப் பெண்ணின் ஹார்மோன் செயல்பாடுகளிலும் மாற்றம் இருக்கும்.
பிறக்கும்போதே அந்தக் குழந்தையின் தோற்றத்தில் சில வித்தியாசங்களை வைத்து இதைக் கணிக்கலாம். உதாரணத்துக்கு அந்தக் குழந்தையின் கழுத்து குட்டையாகவும், உயரம் குறைவாகவும், விரல்களில் வித்தியாசமாகவும் இருக்கும். கருமுட்டையே இல்லாத நிலையில் அந்தப் பெண் பின்னாளில் எப்படிக் கருத்தரிக்க முடியும்? இவர்களுக்கு கருமுட்டை தானம் பெற்றுத்தான் கரு உருவாக்க முடியும்.
2.FSH Beta Subunit ஜீன் குறைபாடு
இதுவும் பரம்பரையாக ஒரு பெண்ணைத் தாக்குகிற பிரச்னைதான். பெண் உடலில் FSH மற்றும் LH என இரண்டு ஹார்மோன்கள் இருக்கும். கருமுட்டை வளர, FSH ஹார்மோன் அவசியம். FSH மற்றும் LH ஹார்மோன்களின் அளவில் வித்தியாசம் ஏற்படுவதும், இன்னொரு முக்கிய ஹார்மோனான ஈஸ்ட்ரோ
ஜெனில் கோளாறுகள் ஏற்படுவதும்கூட கருத்தரிக்காமைக்குக் காரணங்களாகலாம்.
ஈஸ்ட்ரோஜென் பாதிப்பின் விளைவாக மார்பகங்கள் வளர்ச்சியின்மை, கர்ப்பப்பை கோளாறுகள் போன்றவை ஏற்படலாம். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஹார்மோன் சப்ளிமென்ட்டுகள் கொடுத்துதான் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அதன் பிறகு கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யலாம்.
3.Aromatase G கோளாறு
மரபணுக் கோளாறுகளில் இதுவும் ஒன்று. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருமுட்டைகள் வளர என்னதான் ஹார்மோன்கள் கொடுக்கப்பட்டாலும் வளர்ச்சி இருக்காது. இவர்களை Poor Responders என்று அழைக்கிறோம். அரிதாக சில பெண்களுக்கு இந்த ஜீன் இருக்கும்போது, அதிக அளவில் ஹார்மோனைக் கொடுத்து முட்டை வளர்ச்சி்யைத் தூண்டச் செய்வோம். அப்போதுதான் ஓரளவுக்காவது முட்டைகள் வளரும். ஹார்மோன்கள் கொடுத்தும் பலனின்றிப் போனால் மாற்று மருத்துவ முறைகளை முயற்சி செய்ய வேண்டியிருக்கும். அதிக அளவிலான ஊசிகள் செலுத்தப்படும்.
4. ஃபோலிக் அமிலக் குறைபாடு
சில பெண்களுக்கு ஃபோலிக் அமில உற்பத்தியிலேயே பிரச்னைகள் வரலாம். அதாவது, ஃபோலிக் அமிலத்தை உற்பத்தி செய்கிற ஜீனில் கோளாறுகள் இருக்கலாம். இவர்களுக்கு வைட்டமின் பி 12 மற்றும் ஃபோலிக் அமில சப்ளிமென்ட்டுகளை கொடுத்து கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்யலாம்.
5.Thrombobillia
அடிக்கடி ஏற்படுகிற கருச்சிதைவு அல்லது கருத்தரிப்புக்கான சிகிச்சைகள் தொடர்ந்து பலனற்றுப் போவது ஆகியவற்றின் பின்னணியில் Thrombobillia என்கிற பிரச்னை இருக்கலாம். இதை Implantation Failure என்றும் சொல்கிறோம். ரத்தம் உறைகிற பிரச்னையான இதன் விளைவால் கரு பதிந்து வளர முடியாமல் போகும். இவர்களுக்கு ரத்தம் உறையாமலிருக்கச் செய்கிற மருந்துகளையும் சிகிச்சைகளையும் கொடுத்து தான் கரு பதிந்து வளர ஏதுவான சூழலை உருவாக்கித் தர முடியும். இவை எல்லாம் பெண்களின் கருத்தரிப்பைப் பாதிக்கிற மரபியல் பிரச்னைகள். இதே போன்ற பிரச்னைகள் ஆண்களுக்கும் உண்டு.


பிரச்னைகளே இல்லை... ஆனாலும் பிரச்னை!
நன்றி குங்குமம் டாக்டர்
குழந்தையின்மைக்காக சிகிச்சைக்கு வருகிற பலரும் புலம்புகிற ஒரு விஷயம்...‘நிறைய டாக்டர்களை பார்த்துட்டோம். ரெண்டு பேருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லைங்கிறாங்க. பிரச்னையே இல்லைன்னா இந்நேரம் குழந்தை பிறந்திருக்கணும்தானே? அப்புறம் ஏன் அதுல தாமதம்?’ என்பது.பிரச்னையே இல்லாததுதான் பிரச்னையா? கருத்தரிப்பதில் தாமதம் ஏன்?
- விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.
‘‘உண்மைதான்... எல்லாமே நார்மல் என்றால் அவர்களுக்குக் குழந்தை உண்டாகியிருக்க வேண்டும். ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் அவர்கள் இன்னும் கருத்தரிக்கவில்லை. பொதுவாக இதுபோன்ற நேரங்களில் அடிப்படைப் பரிசோதனைகளை செய்துவிட்டு, எல்லாம் நார்மல் என்று வந்தால் சிறப்பு பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்போம்.இதன்படி, குழந்தை இல்லாத பட்சத்தில், கணவன் - மனைவி இருவருமே பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மனைவிக்கு பரிசோதனை செய்கையில் கீழ்க்கண்ட நான்கு விஷயங்களை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
1. கர்ப்பப்பையின் உள்பக்கமும், வெளிப்பக்கமும் ஆரோக்கியமாக இருக்கிறதா என பார்க்க வேண்டும். உள்புறம் கட்டியோ, சதை வளர்ச்சியோ(Polyp)
அல்லது தடுப்புகள்(Septum) போன்றவையோ இருக்கக் கூடாது. கர்ப்பப்பை சரியான நீள, அகலத்துடன் இருக்க வேண்டும்.
2. கரு இணைக்குழாய் ஆரோக்கியமாகவும், அடைப்பின்றியும் இருக்க வேண்டும்.
3. சூலகம் என்கிற முட்டைப்பை மாதம் ஒரு கருமுட்டையை சுழற்சி முறையில் வெளியேற்ற வேண்டும்.
4. கரு முட்டை உற்பத்திக்கான ஹார்மோன் சுரப்புகள் எஃப்.எஸ்.ஹெச்., எல்.ஹெச், டி.ஆர்.எல்., தைராய்டு போன்றவை சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.ஏன் கருத்தரிக்கவில்லை என்பதை 90 சதவிகித தம்பதியருக்கு மிகச் சரியாக ஒரு மாத ஆய்வில் கண்டுபிடித்துச் சொல்லிவிட முடியும்.
கருத்தரிக்காத பெண்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளை உரிய நேரத்தில் செய்தாக வேண்டும். அதன்படி...
*மாதவிடாயான இரண்டாவது நாளில் ஹார்மோன் சோதனையும், பெல்விக் ஸ்கேன் சோதனையும்.
*மாதவிடாயான ஏழாவது நாளில் ஹெச்.எஸ்.ஜி. மற்றும் எக்ஸ்ரே.
*மாதவிடாயான 21-வது நாளில் எஸ்.பி.4 எனப்படுகிற சீரம் புரொஜெஸ்ட் ரோன் சோதனை.
*மாதவிடாயான 7-வது நாள் தொடங்கி, கருமுட்டையின் சரியான வளர்ச்சியை ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ளும் ஃபாலிகுலர் ஸ்டடி.
கருமுட்டை சூலகத்திலிருந்து வெளிவரும் நிகழ்ச்சிக்கு, சினை முட்டை வெளிவருதல்(Ovulation) என்று பெயர். அந்த நேரத்தில் என்டோமெட்ரியம் எனப்படுகிற திசுவானது 8 மி.மீ. அளவு வளர்ச்சியுடன் இருந்தால்தான், உருவான கருவானது கருப்பையில் பதியும்.இப்படி எல்லாவற்றையும் பார்த்து, எல்லா பரிசோதனை களும் நார்மல் என்று தெரிந்தால், டயக்னாஸ்டிக் ஹிஸ்ட்ரோ லேப்ராஸ்கோப்பி(Diagnostic Hystero Laproscopy) என்கிற மைனர் அறுவை சிகிச்சையை செய்ய வேண்டியிருக்கும். கர்ப்பப்பையின் கழுத்துப் பகுதியான செர்விக்ஸில் புண் ஏற்பட்டு, விந்தணு செல்கிற பாதை குறுகலாக இருந்தாலும் குழந்தைப் பேறு உண்டாவதில் தாமதமாகலாம்.
மனைவிக்கு மட்டுமே சோதனைகளும், சிகிச்சைகளும் அவசியம் என நினைக்காமல், கணவனும் அவற்றுக்குத் தயாராக வேண்டும். ஆணுக்கு விந்தணுப் பரிசோதனை அவசியம். விந்தணு எண்ணிக்கை, குறைந்தபட்சம் 20 மில்லியன் இருக்க வேண்டும். அதில் 50 சதவிகிதம் வேகமான, உந்து சக்தியுள்ள உயிரணுக்களாக இருக்க வேண்டும். சில நேரங்களில் விந்தணுக்களின் எண்ணிக்கை போதுமானதாக இருந்தாலும், அந்த விந்தணுக்களுக்கு கருமுட்டையை கருத்தரிக்கச் செய்கிற சக்தி இருக்காது. அதற்கும் சிறப்புபரிசோதனைகளும், சிகிச்சைகளும் அவசியம்.எனவே, மனம் தளராமல் சிறப்பு சிகிச்சைகளுக்கு உங்கள் கணவருடன் தயாராகுங்கள். மருத்துவம் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கிற இன்றைய உலகில் குழந்தைப் பேறு என்பது எட்டாக் கனியே இல்லை. கவலை வேண்டாம்!’’




குழந்தையின்மை குறைபாட்டை இயற்கை முறையில் போக்குவது எப்படி?

‘கைவீசம்மா கைவீசு...
கடைக்குப் போகலாம் கைவீசு...
மிட்டாய் வாங்கலாம் கைவீசு...
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு...’
- எல்லா அம்மாக்களுக்கும்... ஏன் அப்பாக்களுக்கும்கூட இப்படித் தங்கள் குழந்தைகளோடு பாட்டுப்பாடி... ஆடி ஓடி... விளையாட ஆசை இருக்காதா என்ன? எல்லாச் செல்வங்களையும்விடக் குழந்தைச் செல்வம்தான் சிறந்தது என்பார்கள். ஆனால், இன்றைக்குப் பல்வேறு சூழல்களால் குழந்தைப் பாக்கியம் கிடைக்காமல் பலரும் அவதியுறுவதைக் கண்கூடாகக் காண முடிகிறது. உணவுப்பழக்கம், சத்துக்குறைபாடு, உடல்பருமன், சுற்றுச்சூழல், பணி அமைவிடம், மனஅழுத்தம் என அதற்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். கட்டுப்பாடுகள் இல்லாத இந்த உலகத்தில் வரம்புகளை மீறுவதும் நியதிகளுக்கு உட்பட்டு வாழாதிருப்பதும் குழந்தையின்மைப் பிரச்னைக்கு மிக முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகிறது.
Advertisement
குழந்தையின்மைப் பிரச்னைக்கு ஆண் பெண் இரண்டு பேருமே காரணமாக இருக்கிறார்கள். புதிதாகத் திருமணம் செய்த தம்பதி தொடர்ந்து ஓராண்டு காலம் உடலுறவு வைத்தும் கருத்தரிக்காமல் போனால் இரண்டுபேரில் ஒருவருக்கோ இருவருக்குமோ கோளாறு இருக்கலாம் என்று அர்த்தம். அதை மனதில் கொண்டு தேவையான பரிசோதனைகளைச் செய்து சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்.
ஆணைப்பொறுத்தமட்டில் விந்தணுக்களில் குறைபாடு, விந்து செல்லும் குழாய்கள் பாதிக்கப்படுவது, சைக்கிள் - பைக் ஓட்டுவதால் பிறப்புறுப்புகளில் அடிபடுவது, பிறப்புறுப்புகளின் பிறவிக்குறைகள் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். தொடர்ந்து வரக்கூடிய ஜுரம், அதிக வெயிலில் அலைவது போன்றவற்றால் விந்தணுக்களின் உற்பத்தி, தரம், நகரும் சக்தி பாதிக்கப்படலாம். ஹார்மோன் கோளாறுகள், குடி, புகை உள்ளிட்ட போதைப்பழக்கங்களாலும் ஆண்களுக்குக் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஃபாஸ்ட்ஃபுட் உணவுகளில் சேர்க்கப்படும் சைனீஸ் சால்ட், வினிகர் போன்றவை கெமிக்கல்களே. இவை கொழுப்புச்சத்தை அதிகரிப்பதோடு அவற்றைத் தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்குக் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதேபோல் நூடுல்ஸ் வழுவழுப்பாக இருப்பதற்குக்காரணம் அதில் சேர்க்கப்படும் மெழுகு போன்ற பொருள்களே. இப்படித் துரித உணவுகளைச் சாப்பிட்டு உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்வது, தவறான வாழ்வியல் பழக்கத்தை மேற்கொள்வது, மனஅழுத்தம், மரபியல், ஹார்மோன் குறைபாடுகள் ஆகிய பல்வேறு காரணங்களால் குழந்தையின்மைக் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

பெண்களுக்கு மாதவிடாய்க்கோளாறு அடிப்படைக் காரணமாக அமைகிறது. இதற்கும் உணவுப்பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அதிக ரத்தப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், மாதவிடாயின்போது கட்டிகள் வெளிப்படுதல் மற்றும் தீராத வயிற்றுவலியை ஏற்படுத்துதல் முக்கியக் காரணங்களாக அமைகின்றன. சினைப்பையில் இருந்து முட்டைகள் வெளிவராமல் இருப்பது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளில் பரவலானது. கர்ப்பப்பையின் பிறவிக்கோளாறுகள், கர்ப்பப்பை வாய் அடைத்துக்கொள்வது, ரத்தசோகை, தைராய்டு, சர்க்கரை நோய், மனக்கோளாறுகள், கரு முட்டைக் குழாயில் பாதிப்பு போன்றவையும் பெண்களின் குழந்தையின்மை பிரச்னைக்கு முக்கியக் காரணங்களாகும். வயதான பெண்களுக்குக் கரு முட்டைகளின் எண்ணிக்கையும் தரமும் குறைந்துகொண்டே போகும் என்பதால் சரியான வயதில் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்வது நல்லது. சிலர் படிப்பு, வேலை, வசதி எனக் காரணம் காட்டி குழந்தை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போடுவதும் குழந்தையின்மைப் பிரச்னைக்குக் காரணமாக அமைகிறது. அடிக்கடி கருக்கலைப்புச் செய்துகொள்வது, குழந்தை பெற நினைக்கும் காலங்களில் பிரச்னையை ஏற்படுத்தலாம். பெண்களுக்கு உடல்பருமன் பிரச்னையும் ஒரு காரணமாக அமைகிறது. ஆகவே, பெண்கள் உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்வது அவசியம்.
ஆண் பெண் யாராக இருந்தாலும் முறையான உடற்பயிற்சி கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். புகைப்பழக்கம் இனப்பெருக்க உறுப்புகளைப் பாதிக்கும் என்பதால் புகைப்பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். குறிப்பாக ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை புகை குறைக்கக்கூடியது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதேபோல் குடி மற்றும் போதைப்பழக்கம் விந்தணுக்களையும் முட்டை உற்பத்தியையும் பாதிக்கும் என்பதால் அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உடல் கோளாறுகளுக்காக எடுத்துக்கொள்ளப்படும் மருந்து மாத்திரைகளும்கூட ஆண்களின் விந்தணுத் தன்மையைப் பாதிக்கும். எனவே, மருத்துவர் பரிந்துரை இல்லாமல் சுயமருத்துவம் செய்துகொள்வது தவறு.
இயற்கையான முறையில் குழந்தையின்மை குறைபாடுகளை நீக்கும் வழிகளைப் பற்றிப் பார்க்கலாம்.
`அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டாளாம்' என்பார்கள். `அரச மரத்தைச் சுற்றி விட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாளாம்' என்று ஒரு பழமொழி உள்ளது. அரசன் என்பது அரச மரத்தைக் குறிக்கும். அரச மரத்தின் காற்றைச் சுவாசிக்கும் பெண்களுக்குக் கருப்பைத் தொடர்பான நோய்கள் குணமாகும்; குழந்தைப்பேறுக்கும் நல்லது.
மேலும், பொதுவாகக் கைப்பிடி அரச மரத்தின் இலைக்கொழுந்தை மையாக அரைத்து தயிர் சேர்த்துக் காலையில்
வெறும் வயிற்றில் ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து சாப்பிடலாம். இலைக்கொழுந்தை அரைத்துப் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தாலும் பெண்களுக்கான கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் சரியாகும். ஆண்களும் இதே மருந்தை சாப்பிடுவதால் பலன் கிடைக்கும். குறிப்பாக ஆண்கள் அரசம் பழத்தின் பொடி 5 முதல் 10 கிராம் அளவு எடுத்துப் பாலில் கலந்து காலை, மாலை ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பலம் பெருகுவதோடு விந்தணுக்கள் கெட்டிப்பட்டு உடல் பலம் பெறும்.
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நீர்முள்ளி விதை, நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை சேர்த்து நசுக்கி கசாயம் வைத்து குடித்து வந்தால் ஆண்மை பலம் கூடும். இதேபோல் வெற்றிலையுடன் துளசி விதைப் பொடி சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும் பலம் கிட்டும்.
வாழைப்பூவை பொரியல், கூட்டு, வடை என ஏதாவது ஒரு வடிவத்தில் செய்து சாப்பிட்டு வந்தாலும் ஆண்மைக் கோளாறுகள் நீங்கும்.
முருங்கைப்பூவை பாலில் வேக வைத்து வடிகட்டிய பாலை குடித்து வருவது, பிஞ்சு முருங்கைக்காய்களைப் பாலில் வேக வைத்து வடிகட்டி குடிப்பது போன்றவற்றாலும் ஆண்மை பலப்படும்.
முருங்கைக்கீரை பொரியல், முருங்கைக்காய் கூட்டு, சாம்பார் எனச் செய்து சாப்பிடுவதும் பலன் தரும்.
ஓரிதழ் தாமரைப் பொடியை பாலுடன் சேர்த்துக் குடித்து வந்தால் ஆண்மைக்கோளாறுகள் நீங்கும்.
குழந்தை இல்லாத தம்பதிகள் ஆளுக்கு ஒரு செவ்வாழைப்பழத்தை அரை ஸ்பூன் தேன் சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
பெண்கள் இளம் ஆலம் விழுது 20 கிராம் அளவு எடுத்து அரைத்துப் பசும்பாலில் கலந்து மாதவிடாய் வந்த முதல் நாளில் இருந்து ஐந்து நாள்கள் வரை சாப்பிட வேண்டும். இதை 3 மாதங்கள் மாதவிடாய்க்காலங்களில் சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பைக் கோளாறுகள் சரியாகும்.
இதேபோல் மாதுளம்பூ சாற்றுடன் பனங்கல்கண்டு சேர்த்து காலை மாலை என மாதவிடாய் வந்த 3-வது நாள் முதல் 7 நாள்கள் குடித்து வந்தால் கர்ப்பப்பைக் கோளாறுகள் நீங்கி குழந்தைப்பேறு கிடைக்கும். கர்ப்பப்பைக் கோளாறுகளைச் சரி செய்ய மாதுளம் வேர்ப்பட்டை, மாதுளம்பழ ஓடு சேர்ந்த பொடியில் இரண்டு சிட்டிகை எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து 90 நாள் குடித்து வந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் நீர்க்கட்டிகள் சரியாகக் கழற்சிக்காய் பருப்புடன் நான்கு மிளகு சேர்த்து மென்று சாப்பிட வேண்டும். இது கசப்புத்தன்மையாக இருக்கும் என்பதால் மோர் குடிக்கலாம். வேறு எந்த மருந்துகளும் சாப்பிடாமல் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் நீர்க்கட்டிகள் சரியாகும். ஆளி விதைப்பொடியும் பலன் தரும். லவங்கப்பட்டையைக் காபி, டீ அல்லது மோர், தயிருடன் சேர்த்து குடித்து வந்தாலும் நீர்க்கட்டிகள் மறையும்.
குழந்தையின்மை பிரச்னையை முன் வைத்து காசு பார்ப்பவர்கள் மத்தியில் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். அதேவேளையில், மூட நம்பிக்கைகளை விட்டொழித்து இயற்கை வழியில் நோய்களை வென்றெடுக்கலாம், குழந்தையின்மைக் குறையைப் போக்கலாம்.



குழந்தையின்மை பிரச்னைக்கு 5 காரணங்கள்!



“பத்து வருடங்களுக்கு முன்பு வரை திருமணமாகி நான்கைந்து வருடங்கள் குழந்தையில்லாமல் போனால் பிறகுதான் மருத்துவரைச் சந்திக்க வந்துகொண்டிருந்தார்கள். ஐந்து வருடங்களுக்கு முன்புவரை திருமணமான அடுத்த மாதமே குழந்தை இல்லை என மருத்துவமனைகளுக்குப் படையெடுக்க ஆரம்பித்தார்கள். இன்று என்ன டிரெண்ட் தெரியுமா? திருமணத்துக்கு முன்னரே மருத்துவரைச் சந்தித்து, தனக்கு ஏதேனும் பிரச்னைகள் இருக்கின்றனவா?
திருமணத்துக்குப் பிறகு குழந்தை
பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் இருக்குமா என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்கள். பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். இது ஆரோக்கியமான, வரவேற்கத்தக்க விஷயம். ஆனாலும் இன்னொரு பிரிவினர் இதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் உணவுமுறையிலும் வாழ்க்கை முறையிலும் தவறுகளைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். அதன் விளைவாக, குழந்தையின்மைப் பிரச்னையை எதிர்கொள்கிறார்கள்...” என்கிறார் மகப்பேறு மருத்துவர் ப்ரியா.
குழந்தையின்மைப் பிரச்னையைத் தவிர்க்க அவசியமான ஆலோசனைகளைப் பகிர்ந்துகொள்கிறர் டாக்டர் ப்ரியா...

பிசிஓடி பயங்கரத்தைப் புரிந்துகொள்ளுங்கள்!

‘பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்’ (பிசிஓடி) எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னை இன்று மிக அதிகமாகிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கைமுறை மாற்றம், ஜங்க் உணவுகள், அதீத மன அழுத்தம், பரம்பரைத் தன்மை - இந்த நான்கும்தான் பிசிஓடிக்கான பிரதான காரணங்கள். பிசிஓடி பிரச்னை குழந்தையின்மைக்குக் காரணமாவதுடன், சர்க்கரைநோய் நெருக்கத்தில் இருப்பதற்கான எச்சரிக்கை மணியும்கூட. எனவே, அதை ப்ரீடயப்பட்டிக் அறிகுறியாகவே கருத வேண்டும். மட்டுமின்றி ஹைப்பர் டென்ஷன், மெட்டபாலிக் சிண்ட்ரோம், பருமன் போன்றவையும் வரும் அபாயம் அதிகம்.
உடற்பயிற்சியில் உறுதிகொள்ளுங்கள்!
என்னதான் வசதிகள் இருந்தாலும், ஆரோக்கியத்துக்காக சில விஷயங்களில் உடலை வருத்திக்கொண்டுதான் ஆக வேண்டும். வீட்டைவிட்டு இறங்கினாலே வண்டி, எல்லாவற்றுக்கும் உதவியாள் போன்றவற்றை மறந்து, உடற்பயிற்சிகளை தினசரிக் கடமையாக்கிக்கொள்ள வேண்டியது அவசியம்.

திருமணத்தையும் முதல் கர்ப்பத்தையும் தள்ளிப் போடாதீர்கள்!

சரியான வயதில் திருமணம் என்பது இந்தத் தலைமுறைப் பெண்களுக்கு மிக மிக முக்கியம். 30 பிளஸ்ஸில் திருமணம் ... பிறகு 2, 3 வருடங்கள் இடைவெளி... என வருடங்களைக் கடத்துவது ஆபத்தானது. வயதைக் கடந்து கருத்தரிப்பதே இன்று சவாலாக இருக்கிறது. அப்படியே கருத்தரித்தாலும், அதைக் கலைக்கிற பெண்களும் இருக்கிறார்கள். கருவைக் கலைக்க தானாகவோ அல்லது தெரிந்த மருத்துவரிடம் கேட்டோ மாத்திரைகள் எடுத்துக்கொள்கிறார்கள். அப்படி மாத்திரை எடுக்கும்போது, கருவானது முழுமையாகக் கலையாமல், மிச்ச சொச்சங்கள் உள்ளேயே தங்கிவிடும். அப்படி மிச்சம் இருந்தால், எண்டோமெட்ரியம் பகுதியில் தொற்று வரும். அடுத்த குழந்தை உருவாகாது. ரத்தப்போக்கு இருக்கலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் ஸ்கேன் சோதனை அவசியம்.
கருவைக் கலைக்க நீங்களாக மாத்திரை எடுக்காதீர்கள்!
7 முதல் 9 வாரக் கரு என்றால் மட்டுமே அதைக் கலைக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். அதைத் தாண்டிவிட்டால், மாத்திரைகளின் மூலம் கலைப்பது பாதுகாப்பானதல்ல. டி அண்ட் சி முறைப்படிதான் கருக்கலைப்பு செய்யப்பட வேண்டும்.
இது எதுவும் தெரியாமல் கருவைக் கலைக்க மாத்திரைகள் எடுத்துக்கொண்டவர்கள், நான்கைந்து நாட்கள் ரத்தப்போக்கு முடிந்ததும், ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். கர்ப்பப்பையில் கருவின் மிச்சமோ, ரத்தக் கட்டிகளோ இல்லையா என்று பார்க்க வேண்டும். அதேபோன்று எண்டோமெட்ரியம் அடர்த்தி அதிகமாக இருந்தாலும் பிரச்னைதான். அதற்கும் டி அண்ட் சிதான் செய்ய வேண்டியிருக்கும். கர்ப்பப்பையை தேவையின்றி சுரண்டி சுத்தப்படுத்துவதன் மூலம் புண்கள் ஏற்படும். அது அடுத்த கர்ப்பத்திலும் பிரச்னைகளைத் தரலாம்.
எனவே, சரியான வயதில் திருமணம்... முதல் குழந்தைப் பேற்றைத் தள்ளிப்போடாமல் சரியான வயதில் பிள்ளைப் பேறு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, பருமனைக் கட்டுப்படுத்தும் உணவு மற்றும் உடற்பயிற்சிகளைப் பின்பற்றுதல் போன்றவை மிக அவசியம்.
அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்!
பிசிஓடியை கட்டுப்படுத்த பட்டையைப் பொடி செய்து தண்ணீரில் கலந்து குடிப்பதும், இரவே ஊறவைத்த வெந்தயத்தை காலையில் எடுத்துக்கொள்வதும் உதவும்.
14, 15 வயதிலேயே பிசிஓடி இருப்பதைக் கண்டுபிடிக்கலாம். திடீரென பெண் குழந்தைகளின் உடலில் எடை எகிறும். முகம் மற்றும் உடல் முழுவதும் தேவையற்ற ரோம வளர்ச்சி இருக்கும். இதையெல்லாம் அலட்சியப்படுத்தாமல், உடனே மருத்துவரைச் சந்தித்து பிசிஓடிக்கான அறிகுறிகளா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது மிக அவசியம்.
நன்றி விகடன்.



குழந்தையின்மை
புதிதாக மணம் புரிந்த தம்பதிகள், உடலுறவு தொடர்ந்து வைத்துக் கொண்டாலும், ஒருவருடம் கழிந்தும் மனைவி கருத்தரிக்காமல் போனால், அது குழந்தை பெறுவதில் கோளாறு இருப்பதை உணர்த்தும். கோளாறு ஆணினாலும் இருக்கலாம் இல்லை பெண்ணினாலும் இருக்கலாம். குழந்தையின்மை என்பது ஆண்மை / பெண்மை குறைவல்ல. இந்த குறைகள் உடலுறவு முழுமையாக அனுபவிக்க முடியாமல் போவது. குழந்தையின்மை உடலுறவு கொண்டும் குழந்தை பிறக்காமலிருப்பது.
நமது கற்பனைக்குக் கூட எட்டாத கடவுளின் அற்புதங்களின் ஒன்று மகப்பேறு. மாதவிடாய் முடிந்த 14 அல்லது 15 நாளில், பெண்ணின் சினைப்பைகளிலிருந்து சினைமுட்டை (Ovum) வெளிபடும். இது ஒரு நாள் தான் உயிரோடு இருக்கும். அதற்குள் உடலுறவு நிகழ்ந்தால் கர்ப்பம் உண்டாகும். உடலுறவிற்கு பின் கோடிக்கணக்கான ஆணின் விந்து அணுக்கள் பெண்ணுறுப்பில் விழும். இவை ‘வெறி பிடித்தால்’ போல, ஆவேசத்துடன் முன்நோக்கி நகர்ந்து கர்பப்பையை நோக்கி நீந்தி ஒடும். ‘ஸ்பீட்’ என்ன தெரியுமா? ஒரு செ.மீ. கடக்க கிட்டத்தட்ட 3.2 நிமிடங்கள் (8 நிமிடங்களில் 1 அங்குலம்) ஆகும். கடக்க வேண்டிய தூரம் (பெண்ணுறுப்பிலிருந்து கர்பப்பையின் தூரம்) 15 லிருந்து 25 செ.மீ. இருக்கும். இவை கர்பப்பையை அடைய நீந்துவதற்கு உதவுவது வழவழப்பான விந்து திரவம். இலக்கை அடையும் முன்பே லட்சக்கணக்கான விந்தணுக்கள் சோர்வடைந்து விழுந்து விடும். வலிமையும், நகரும் துடிப்பும் உடைய விந்தணுக்கள் தான் முட்டையை அடையும். இந்த மிகச் சிறிய (புள்ளி அளவே உள்ள) முட்டையை உயிரணுக்கள் முட்டி, முட்டி மோதும். இவற்றில் சிறந்த ஒரே ஒரு உயிரணு தான் முட்டையின் வெளிச் சவ்வை துளைத்து உள்ளே நுழையும். நுழைந்த உடனே, வேறு அணுக்கள் உள்ளே புகாதபடி சினை முட்டையில் சவ்வுப் பகுதி கதவு போல் மூடிக் கொண்டு விடும்! ஒரே ஒரு விந்தணுக்குத் தான் அனுமதி!
ஆணின் விந்துவும், பெண்ணின் முட்டையும் சேர்ந்தால் கரு உண்டாகும். இந்த சேர்க்கை நிகழாவிட்டால், கருத்தரிப்பு ஏற்படாது.
காரணங்கள் – ஆண்
• ஆயுர்வேதத்தின்படி பொதுவான காரணங்கள் – விந்தணுக்களில் குறைபாடு, விந்து செல்லும் குழாய்கள் பாதிக்கப்படுவது, பிறப்புறுப்புகள் அடிபடுவது, பிறப்புறுப்புகளின் பிறவிக்குறைகள் (விரைகள் இறங்காதது மற்றும் உறுப்புகளின் வளர்ச்சியின்மை), வியாதிகள் போன்றவை. விரைகளில் அசாதரணமாக Varicose நரம்புகள் புடைத்திருப்பதும் ஒரு கோளாறு.
• விந்தணுக்கள் குறைந்திருப்பது (Oli gospermia) அல்லது இல்லாமலே போவது (azoospermia). தவிர விந்தணுக்கள் நகரும் சக்தி பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் விந்து பெண்ணின் சினைப்பை (Ovaries) யை அடைந்து முட்டைகளுடன் சேரமுடியாது. சாதாரணமாக ஒரு ஆணின் ஒரு மில்லி லிட்டர் விந்தில் குறைந்த பட்சம் 4 கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 12 கோடி கூட இருக்கும். இந்த குறைபாடு தான் முக்கியமான பிரச்சனை.
• விந்தணுவின் அடர்த்தி குறைவு. விந்தணுக்கள் நகர முடியாமல் போதல்,
நகரும் தரம் – ஒரு மி.லி. உள்ள விந்துவில் 50 அல்லது 60 சதவிகித விந்தணுக்கள் விரைவாக முன்னோக்கி நகர வேண்டும். 30% விந்தணுக்கள் சரியான உருவத்தை, வடிவத்தை கொண்டிருக்க வேண்டும். தவிர கொள்ளளவு (Volume) 2 மி.லிக்கு மேல் இருக்க வேண்டும். ப்ரூக்டோஸ் (Fructose) சரியான அளவில் இருப்பது அவசியம். Fructose இல்லாவிட்டால் விரைகளில் உள்ள சிறு குழாய்கள் (Seminal Vescicles) பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.
• தொடர்ந்து வரும் ஜுரம், அதிக வெய்யிலில் அலைவது இவை விந்தணுக்களின் உற்பத்தி, தரம், நகரும் சக்தி இவற்றை பாதிக்கும். ஏனென்றால் அதிக உஷ்ணம் ஆணுறுப்பை பாதிக்கும். உடல் உஷ்ணத்தை விட, விரைகளின் உஷ்ணம் சாதாரணமாக 2 டிகிரி குறைந்தே இருக்கும்.
• ஹார்மோன் கோளாறுகள் – தைராயிடு, அட்ரீனலின், பிட்யூடரி சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகள் விந்து உற்பத்தியை குறைக்கும். சில பிறவிக்கோளாறுகளினால் Sex chromosomes…. விந்து உற்பத்தியை குறைக்கலாம்.
• விரைகளில் வரும் Mumps…. மருந்துகள் (Steroid) போன்றவையும் விந்து உற்பத்திக்கு தடைபோடும்.
• விரைகளில் ஏற்படும் பிறவிக் கோளாறு – விந்து குழாய்கள் அடைத்துக் கொள்வது போன்றவை.
• விந்து ஒரே பாதையில், திசையில் செல்லாமல் வேறுபக்கம் பாய்வது.
• வயது.
• சுக்கிலவக (Prostate) கிருமித் தொற்று.
• லாகிரி வஸ்துகளின் உபயோகம்.
• உடல் பருமன்.
• சைக்கிள் ஓட்டுவது இதனால் பிறப்புறுக்கள் அடிபடுகின்றன.
• சுற்றுப்புற சூழ்நிலையின் மாசு நச்சுப்பொருட்கள் தாக்குதல்.
• எக்ஸ்ரே ஸ்கேன் போன் Radiation சிகிச்சைகள்.
• ஊட்டச்சத்துக் குறைவு.
• ஸ்ட்ரெஸ்.
பரிசோதனைகள்
ஆணின் விந்தணு பரிசோதனை அவசியம். இந்த சோதனையில் விந்தணு கொள்ளளவு, எண்ணிக்கை, நகரும் தன்மை, Morphology போன்றவை கணிக்கப்படும்.
காரணங்கள் – பெண்
பெண்களின் குறைபாடுகளில் பரவலானது, சினைப்பையிலிருந்து (Ovaries) முட்டைகள், மாதம் ஒரு முறை வெளிவராதது. ஒவரிகள் Progesterone என்ற ஹார்மோனை சுரக்காமல் போவது. இந்த ஹார்மோன் கருப்பப்பை சுவர்களை, கருவினை வரவேற்க பலப்படுத்தும். இது பிட்யூட்டரி சுரப்பிகளை ஊக்குவிக்கும் மூளை செயல்படாமல் போவதால் சுரக்காமல் போகும்.
இதர காரணங்கள்
• கர்ப்பப்பையின் பிறவிக் கோளாறுகள். கர்ப்பப்பையின் ‘வாய்’ அடைத்துக் கொள்வது, தொற்று நோய் பாதிப்பு போன்றவை.
• சோகை
• உடல்பருமன்
• தைராயிடு, அட்ரீனலின் சுரப்பி கோளாறுகள்
• நீரிழிவு
• மனக்கோளாறுகள்
• மாதவிடாய் சரிவர ஏற்படாதது.
• Fallopian Tube ல் அடைப்பு.
• கர்ப்பப்பை கட்டிகள்.
• Cervix ல் உண்டாகும் சளி (Mucus)
இது Ovulation சமயங்களில் குறைந்து நீர்த்து விடும். நீர்த்து விடுவதால்
விந்தணு, வழுக்கி, முன்னோக்கி நகர்ந்து, கர்ப்பப்பையை சேருவது சுலபமாகும். இந்த சளி குறைந்து வழி விடாவிட்டால் விந்தணுவின் நகரும் இயக்கம் நின்று விடும். தவிர இந்த சளியில் விந்தணுக்களை கொல்லும் எதிர் அணுக்கள் (Anti – bodies) ஏற்பட்டால் இன்னும் பிரச்சனையாகும். கர்ப்பம் நிகழாது.
• பெண்ணின் வயது (வயது அதிகமாக அதிகமாக முட்டையின் எண்ணிக்கையும் தரமும் குறைந்து கொண்டே வருகின்றது).
• உறவின் எண்ணிக்கை – பொதுவாக அதிக உறவு கொண்டால் கருவுற வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிலும் கருவுறும் வாய்ப்பு உள்ள காலங்களில் குறைந்தது வாரம் 3 முறை உறவு கொள்வது அவசியம்.
• குழந்தையின்மையின் காலம் – நீண்ட நாட்கள் குழந்தையே இல்லாமல் சிரமப்படுபவர்களுக்கு தானாகவே கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.
• பெண் கருவுற வாய்ப்புள்ள நாட்களில் குறைந்தது ஒரு வாரத்திற்கு 3 முறை முயற்சித்தும் கருவுற இயலாத தம்பதியினர் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். கருவுறுவதற்கு ஒரு திடமான முறையோ அல்லது உறவு கொள்ளும் விதமோ கிடையாது. சிலருக்கு ஒரு முறை உறவு கொண்டாலே கரு உண்டாகி விடும். சிலருக்கு பல முறை பல வருடங்கள் முயற்சித்தாலும் நடைபெறாமல் போகும். இதற்கென ஒரு முறையோ அல்லது விதமோ கிடையாது. இது அவருடைய அதிர்ஷ்டம் என்று கூட கூறலாம்.

பரிசோதனைகள்
Ovulation சமயத்தில் தான் முட்டை உற்பத்தியாக கருத்தரிக்க ஏதுவாகும். Ovalution period தொடங்கி விட்டதா என்று அறிய பெண்ணின் உடல் உஷ்ணத்தை Thermometer ஆல் தெரிந்து கொண்டால் போதும். சாதாரண சூட்டிலிருந்து 0.9 டிகிரி தி (0.5டிகிரிc) அதிகம் தெரிந்தால் Ovulation தொடங்கிவிட்டது. என அறியலாம். இதை விட வேறு பல புதிய சாதனங்களும், சோதனைகளும் (Ultra Sonography or ovulation predicter kits) வந்து விட்டன. ரத்தத்தில் உள்ள Progesterone ம், உமிழ்நீரும் சோதிக்கப்படும்.
குழந்தையின்மைக்காக ஒரு மருத்துவரை ஆலோசிப்பதற்கு முன்பாக
நீங்களே சரி செய்து கொள்ள வேண்டியவை.
உணவு: நல்ல போஷாக்கான உணவுகளை உட்கொள்வது அவசியம். நல்ல சத்தான உணவுகளை உட்கொண்டாலே கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது.
உடல் எடை
உடல் எடையை சீராக வைத்துக் கொள்வது அவசியம். குறிப்பாகப் பெண்கள் எடை அதிகமாகவும் குறைவாகவும் இருக்கக் கூடாது சரியான எடையிலிருந்தாலே இயல்பாக கருத்தரிக்க முடியும்.
உடற்பயிற்சி
முறையான உடற்பயிற்சி கருத்தரிக்கும் வாய்ப்பினை அதிகரிக்கும். ஆணுக்கும், பெண்ணுக்கும் உடற்பயிற்சி மிக முக்கியம்.
புகைப்பழக்கம்: புகை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். ஆண்களானாலும் பெண்களானாலும் புகை இனப்பெருக்க உறுப்புகளை பாதிக்கும். ஆண்களில் விந்தணு தரத்தை புகை குறைத்திடும்.
குடிப்பழக்கம்: போதைப் பொருட்களின் உபயோகம் விந்தணுக்களையும் முட்டை உற்பத்தியையும் வெகுவாக பாதிக்கும். குடி/போதை பழக்கத்தை முற்றிலும் தவிர்த்தல் அவசியம்.
பிற மருந்துகள்: ஆண்களில் பிற மருந்தகளின் உபயோகமும் வெகுவாக விந்தணுவின் தன்மையை பாதிக்கும். அல்சர் (வயிற்றுப் புண்) உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றிக்கான பிற மருந்துகளின் உபயோகமும் தவிர்க்கப்பட வேண்டும்.
உறவு: கருவுற வாய்ப்புள்ள காலங்களில் வாரத்திற்கு ஒரு முறை உறவு கொண்டால் போதாது குறைந்தது 3 முறையாவது உறவு வைத்துக் கொள்வது அவசியம்.
கருவுறும் காலம்
மிருகங்களுக்கு இயல்பாகவே எப்பொழுது கருவுற வாய்ப்புள்ளதோ அப்பொழுதே உறவு கொள்ள விருப்பம் ஏற்படுகின்றது. மாதவிடாய் போன்ற இரத்தம் போக்கும் ஏற்படுகின்றது. ஆனால், மனிதர்களில் அவ்வாறு அல்ல. எல்லா நாட்களிலும் உறவு கொண்டு முட்டை வெடிக்கும் சமயத்தில் உறவு கொள்ளாது போனால் வீணாகப் போய் விடும். எனவே, முட்டை வெடித்து சிதறும் சமயம் (இரு மாதவிடாய்களுக்கும் சுமாரான நடுப்பகுதி) உறவு கொள்வது அவசியம்.
உறவு முறை: ஒவ்வொரு மிருகத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு முறையுள்ளது. உதாரணமாக பன்றிகள் விந்தணுக்களை சேமித்து வைக்கும் திறன் கொண்டவை. கரடிகள் உறவு கொள்ளும் பொழுது விந்தணுக்கள் சிந்தி விடாமல் இருக்கும் விதத்தில் சிறப்பு அம்சம் கொண்டவை. ஆனால், மனிதனுக்கு அப்படியரு முறை எதுவும் கிடையாது.
எவ்வாறு வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம். ஆனால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முறை ஆண் மேல் புறமும் பெண் கீழ்ப்புறமும் இருந்தவாறு உறவு கொள்வதேயாகும்.
உறவு முடிந்ததும் உடன் எழுந்து விடக்கூடாது. குறைந்தது 5 நிமிடம் பெண்கள் படுத்திருக்க வேண்டும்.
பிற சாதனங்கள்
எளிதாக உறவு கொள்ள ஜெல் வகையோ அல்லது அதிக விறைப்புத் தன்மை அடைய ஸ்ப்ரேயையோ உபயோகிப்பதை ஆண்கள் தவிர்த்தல் அவசியம். ஏனெனில் இவ்வகை அலோபதி மருந்துகள் விந்தணுக்களை செயல் இழக்கச் செய்து விடும். இயற்கையான முறையில் உறவு கொள்ளுதல் அவசியம். பொதுவாக இக்காலத்தில் கருவுறும் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகிறது இதற்கு பல காரணங்கள் உள்ளன அவை.
• பெண்கள் வயது அதிகமான பின்னரே திருமணம் புரிந்து கொள்வது.
• பாலுறவினால் ஏற்படும் தொற்று நோய்கள்.
• குறைந்து கொண்டே வரும் ஆண்களின் விந்தணுக்களின் தரம்.
இன்றைய வாழ்க்கைச்சூழலில் உணவு முறை அழற்சி, மன அழுத்தம்
போன்ற பல பிரச்சனைகளும் இதற்கு ஒரு காரணமாக அமைகின்றது.
குழந்தையின்மைக்கு மருத்துவம் செய்து கொள்ள விரும்புபவர்கள் பொறுமையாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் அலோபதி முறையாக இருந்தாலும் ஆயுர்வேத முறையாக இருந்தாலும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி காலமான 28 நாட்களில் 5 நாட்களே கருவுற வாய்ப்புகள் உள்ள காலமாதலால் குறைந்தது ஒரு வருடமாவது மருத்துவம் செய்து பின்னரே அந்த மருந்துகள் வேலை செய்கின்றதா? இல்லையா? என்ற முடிவிற்கு வர முடியும்.
மீண்டும், மீண்டும் மருத்துவர்களையும் மருத்துவ முறையையும் ஓரிரு மாதங்களில் மாற்றிக் கொண்டே வந்தால் மருந்துகளும் மருத்துவமும் எந்த பயனையும் தராது வயது மட்டுமே ஏறிக்கொண்டே போகும்.
எனவே, மருத்துவம் செய்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் குறைந்தது ஒரு வருடமாவது அதே மருந்துகளையும் மருத்துவத்தையும் செய்து கொள்வது அவசியம் அப்பொழுது தான் நற்பலனைப் பெற இயலும். குழந்தையை ஈன்றெடுக்க முடியும்.
ஆயுர்வேத மருத்துவ முறையில் குழந்தையின்மைக்கு மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. அவை, முற்றிலும் மூலிகைகளாலானவை பாதுகாப்பானவை பக்க விளைவுகளற்றவை எனவே, அவற்றை தொடர்ந்து உபயோகித்து பயனடையலாம்.


ஆயுர்வேதமும் குழந்தையின்மையும்
முதலில் உடற்கோளாறுகளை சரி செய்வது அதன் பிறகு கருத்தரிக்க சிகிச்சைகளை ஆரம்பிப்பது என்பது ஆயுர்வேத சித்தாந்தம், கருத்தரித்தவுடன், கரு சரிவர வளர பிரத்யேகமான கவனம் செலுத்தப்படும்.
ஆயுர்வேத சிகிச்சைகள்
• ஸ்நேகப்னம் – மூலிகைநெய், எண்ணெய் இவை குறைந்த அளவில், அதிகாலையில் கொடுக்கப்படும். மெதுவாக மருந்து அளவுகள் ஏற்றப்படும்.
• வீதனம் – மூலிகை செறிந்த நீராவிகுளியல் செய்விக்கப்படும்.
• விரேசனம் – உடலின் கழிவு, நச்சுப் பொருட்கள் நீங்க மருந்து கொடுக்கப்படும்.
• கஷாய வஸ்த்தி – பிரத்யேக மூலிகை ‘எனிமா’ கொடுக்கப்படும். இதனால் பிறவி உறுப்பு சிறுநீரக பாதை சுத்தமாகும்.
• ஸ்நேக வஸ்தி:- மருந்துள்ள எண்ணையும் மேற்கண்ட பலனுக்காக கொடுக்கப்படும்.
• ஒத்தார வஸ்தி:- கர்ப்பப்பை, யோனி சுத்தமாக ஸ்பெஷல் நெய் கொடுக்கப்படும்.
சிறிது ஒய்வுக்குப் பிறகு ‘வாஜீகரணம்’ ஆரம்பமாகும். இது புத்துயிர்
ஊட்டி, ஆண்மையை பெருக வைக்கும். அபாரமான சிகிச்சை. விந்துவின் விந்தணு எண்ணிக்கை பெருகி, நகரும் சக்தி அதிகரிக்கும். நோயாளியின் வீரியம், பலம் அதிகமாகும்.
ஆயுர்வேதத்தில் குழந்தையின்மை குறைய போக்க உன்னதமான அற்புதமான மூலிகைகள் உள்ளன. ஆண், பெண் இருவருக்கும் சரியான தேவையான சிகிச்சை முறைகள் கிடைக்கும். குழந்தை வேண்டுமென்றால் ஆயுர்வேத மருத்துவரை அணுகினால் போதும்.
ஆயுர்வேத மூலிகைகள் தனியாக விவரிக்கப்பட்டுள்ளது.
சில மருந்துகள்
1. அஸ்வகந்தாரிஷ்டம்
2. மகரத்வஜம்
பெண்களின் மலட்டுத்தன்மை
இதன் காரணங்கள்
1. சினை முட்டையே உற்பத்தியாகமல் இருக்கலாம்
2. கர்பப்பை பின்னோக்கி வளைந்திருக்கலாம் (Retroverted Uterus)
3. ஃபலோபியன் குழாய்களில் அடைப்பு
4. கர்பப்பையில் Fibroid கட்டிகள், சிஸ்ட்டுகள் (Cyst)
5. கருப்பையின் கழுத்து வீங்குதல், கருப்பையின் ஜவ்வு போன்ற கோழை விந்துவை ஏற்று கொள்ளாமல் ‘எதிரி’ யாக பாவிப்பது.
ஆயுர்வேத மூலிகைகள், மருந்துகள்
1. ஆலமரப்பட்டை
2. பாலக்ருதம் என்ற தயாரிப்பு
3. வங்க பஸ்பம்
4. சிலாஜித்
5. பலா (Sida rhombifoloa)
6. அஸ்வகந்தா
உணவு நியமம்
வெங்காயசாறு, அதனுடன் தேன்/நெய், நெல்லிப்பொடி, பால், வெண்ணை, புரதம் செறிந்த உணவுகள் (மீன், மாமிசம், முட்டை) இவைகள் வலுவை உண்டாக்கும்.
யோகாசனங்கள் சிறந்த பலனை தரும்.



பெண் மலட்டுத்தன்மை நீங்க வழிகள்

வயதுக்கு வரும் பெண் பிள்ளைகள் நல்லெண்ணெய், உளுந்தங்களி, லேகிய வகைகள் சாப்பிடாமல் விட்டுவிடுகிறார்கள். இதுவும் மலட்டுத்தன்மைக்கு காரணமாகிறது.
மாதவிலக்கு 28 நாட்ளுக்கு ஒருமுறை வரவேண்டும். இதில் ஒருநாள் மாறுபடலாம். மாதவிலக்கு 3 நாட்கள் இருக்க வேண்டும். வயிற்றில் வலி இருக்கக்கூடாது. அப்படி வலிஇருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
நிறைய பெண்களுக்கு வெள்ளைப்படும். அதை தடுக்க சித்த மருத்துவத்தில் மருந்துகள் இருக்கின்றன. ரத்தப்போக்கு பிரச்சனை வந்தாலும் அதையும் உடனே சரிப்படுத்த வேண்டும்.
பெண்கள் மலட்டுத்தன்மையை போக்க வழி :
மலட்டுத்தன்மை கொண்ட பெண்கள் உணவு வகையிலும் கவனம் செலுத்தவும். கசப்பு, துவர்ப்பு, இயற்கையான இனிப்பு… இந்த மூன்றையும் உணவில் மூன்றில் ஒரு பங்கு குறையாது பார்த்துக்கொள்ளவும்.
அதாவது பாகற்காய், சுண்டைக்காய், வெந்தயம், கேரட், பீட்ரூட்டை தாராளமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெந்தயக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, வல்லாரைக்கீரை, தூதுவளை, இப்படி ஏதாவது ஒரு கீரையை தினமும் உணவுடன் காலை அல்லது மதியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மாதுளம் பழம், அத்திப்பிஞ்சு, திராட்சை, எலுமிச்சசம் பழம், ஆரஞ்சு நலம் தரும். பூ வகைகளில் ரோஜா, மாதுளம் பூ, ஆவராரம் பூ, செம்பருத்தி பூ நல்லது.
கர்ப்பப்பை கோளாறுகள் நீங்க :
வெண்பூசணியை தினம் உணவில் சேர்த்து வந்தால் கர்ப்பக் கோளாறுகள், மாதவிலக்கு பிரச்சனை நீங்கும்.


மலட்டுத்தன்மை நீங்க ஆண்கள் உட்கொள்ள வேண்டிய உணவுகள் !!

நகரங்களில் வசிக்கும் ஆண்களிடம் மலட்டுத் தன்மை அதிகரித்து வருகிறது. இதற்கு அறியாமைய நெருக்கடியான வாழ்க்கை முறையையும் பின்பற்றி வருவத காரணம் என்பதை மறுக்க முடியா இது போன்ற நெருக்கடியான வா முறையால் ஆண்களிடம் மலட்டுத் த உருவாகி அவர்களுடைய துன்பங் அதிகரிக்கின்றன.
முறையற்ற உணவு முறை மற்றும் மோசமான வேலை நேரங்கள் ஆகி ஆண்களுக்கு பெறுமளவு மன அழ கொடுப்பதுடன், அதன் தொடர்ச்சிய அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு உலை வைக்கவும் செய்கின்றன. இ போட்டி நிறைந்த உலகத்தின் வேக ஆண்கள் பலரும் தங்களுடைய அடிப் சுகாதாரத்தையும் அதன் காரணம வரும் மலட்டுத் தன்மையையும் பாதிப்பதை உணருவதில்லை.
ஆரோக்கியமான வாழ்வு முறையையும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ளுவதன் மூலமும் ஆண்கள் மலட்டுத் தன்மை தவிர்க்க முடியும். உடற்பயிற்சிய தொடர்ந்து செய்து வருவதால் உட உறுதிப்படுத்தி வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தையும், சுகாதாரத்தையும் நிலைநாட்ட முடியும். புகைப் பழக்கமும் மலட்டுத்தன்மை வர முக்கியமான காரணமாக உள்ளது.
புகைப் பழக்கத்தினால் மலட்டுத் தன்மையும், செயல்பாட்டில் பயமு ஏற்படும். மேலும், அதீதமான அளவி ஆல்கஹால் குடிப்பதும் மலட்டுத் தன்மையை உருவாக்கும். சில நேரங்களில் சுகாதாரமற்ற உணவு உயிரணுக்களின் தரம் மற்றும் அவற் எண்ணிக்கை ஆகியவற்றாலும் மல தன்மை ஏற்படுகிறது. வைட்டமின் மற்றும் துத்தநாகம் போன்ற தாது நிறைந்திருக்கும் உணவை உட்கொள்வதன் மூலம் மலட்டுத் தன்மையை குறைக்கவும், செயல்பாட்டை உத்வேகப்படுத்தவு முடியும்.
வைட்டமின்களான ஏ, சி, ஈ மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை தரமா உயிரணுக்கள் அதிக எண்ணிக்கை உற்பத்தியாக உதவி செய்கின்றன. வைட்டமின்களில் பெரும்பாலான பச்சைக் காய்கறிகள், ஆரஞ்சு, தக்க பீன்ஸ் போன்றவற்றில் கிடைக்கின்ற இந்த காய்கறிகளை அதிகளவில் தொடர்ந்து உட்கொண்டு வருவதன் மூலம், உங்களுக்கு மலட்டுத் தன்ம வருவதை பெருமளவு குறைக்க முடியும்.
ஆரஞ்சு
ஆண்களின் கருத்தரிக்கும் திறன அதிகப்படுத்துவதில் அடர் வண்ண காய்கறிகள் மற்றும் பழங்கள் பெரு பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு நி காய்கறி அல்லது பழத்திற்கும் குறிப்பிட்ட வகையான சுகாதார பலன்களும், கருத்தரிக்கும் திறன ஊக்கப்படுத்தும் சத்துக்களும் உள்ள ஆக்ஸிஜன் எதிர்பொருட்களும், வைட்டமின் C-யும் நிரம்பியிருக்க ஆரஞ்சுகள் செயல்பாட்டு உத்வேகத்தையும், கருத்தரிக்கும் திறனையும் மேம்படுத்த பெருமள பயன்படுகின்றன.
கீரைகள்
உடலுக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்ற தாதுக்கள் பசுந்தழைகளில் பெரு குவிந்துள்ளன. தாதுக்கள் நிரம்பி உள்ள கேல், பசலைக் கீரை, ஸ்விஸ் ச கடுகு இலைகள் ஆகியவற்றில் உள் அவசியமான ஊட்டச்சத்துக்கள் மலட்ட தன்மையை குறைக்கவும் மற்றும் உயிரணுக்களின் திறனை அதிகரிக்கவும் செய்கின்றன.
கேரட்
கேரட் சாப்பிடுவது பார்வையை தெளிவுபடுத்த உதவுவது மட்டுமல்லாமல், ஆண்களின் மலட்டுத் தன்மையை குறைக்கவும் உதவுகின்றன. கரு முட்டையை ந உயிரணுக்களை எடுத்துச் செல்ல சத்துக்கள் கேரட்டில் மிகவும் அதிக உள்ளதாக ஹார்வார்டு பல்கலைக் கழகத்தின் பொது சுகாதார துறையினரின் ஆய்வுகளில் தெர வந்துள்ளது.
தானியங்கள்
வெள்ளை ரொட்டிகள் அல்லது வெ அரிசிகளை தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக முழு தானியங்களை உ எடுத்துக் கொள்ளும் போது, அது சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவ நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தச் செய்கின்றது. உங்களுட இன்சுலின் முறையாக செயல்படு போது, ஹார்மோன் அளவுகள் மிக சமநிலையுடன் காணப்படும். இதன் மூலம் உங்களுடைய கருத்தரிக்கு தன்மை அதிகரிக்கும்.
வெண்ணெய் பழம் மற்றும் பாதாம்
உங்களுடைய உணவுடன் வெண்ண பழம் மற்றும் பாதாம் கொட்டைகள சேர்த்துக் கொள்வது நீண்ட கால அ உங்களுக்கு மிகவும் உதவும். இந்த உணவுகளில் காணப்படும் கொழுப்புகள் உடலுக்கு மிகவும் ஏற்றவையாகும். இவை உங்கள் உட உள்ள இன்சுலின் முறையாக செயல்படவும், அதன் மூலமாக ஹார்மோன்கள் சமநிலைப்படவும் செய்து, உங்களுடைய கருத்தரிக்க திறனை அதிகப்படுத்துகின்றன.
பீன்ஸ் மற்றும் பசலைக் கீரை
இயற்கையாகவே கருத்திரிக்கும் திறனை அதிகரிக்கும் போலிக் அ நிறைந்திருக்கும் உணவுளாக பீ மற்றும் பசலைக் கீரை ஆகியவை உ ஆண்கள் தங்களுடைய உயிரணுக்க எண்ணிக்கை மற்றும் அடர்த்தியை அதிகரிக்க போலிக் அமிலம் தேவைப்படுகிறது. போலேட் நிரம்பியுள்ள உணவுகளை அதிக உட்கொள்வதன் மூலமாக கருத்தரிக் தன்மையை அதிகரிக்கும் போலிக் அமிலம் இயற்கையாகவே கிடைக்க
முறை கட்டிய தானியங்கள் மற்றும் நாற்றுகள்
சமைக்காத காய்கறிகள் அல்லது நாற்றுகளில் உள்ளதை விட 100 மட அதிகளவிலான என்ஸைம்களை மு கட்டிய தானியங்கள் கொண்டிருக்கின்றன. ஆண்களின் கருத்தரிக்கும் தன்மையை அதிகப் ஆக்ஸிஜன் எதிர்பொருட்களும், புரதங்களும் அதிக அளவில் தேவைப்படுகின்றன.
தங்களுடைய கருத்தரிக்கும் தன்ம அதிகப்படுத்த நினைக்கும் ஆண்கள் தினமும் 90 கிராம் அளவிற்கு இந்த சத்துக்களை உட்கொள்ள வேண்டும்.
More details-9629933144

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக