ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

நட்பு எப்படி உடைகிறது காரணங்கள்.


நட்பு எப்படி உடைகிறது காரணங்கள்.

*இரண்டு நண்பர்களில் ஒருவர்*, *மற்றொருவர் வேலைப்பளுவில் (பிசியாக) இருக்கிறார் என்று நினைக்கலாம்.*
*எனவே அவரை தொடர்பு கொண்டு பேசினால் அது அவருக்கு தொந்தரவாக இருக்கும் என்று நினைத்து தொடர்பு கொள்ளாமல் இருக்கலாம்.*
*காலம் செல்லசெல்ல* *"நாம் ஏன் தொடர்பு கொள்ள வேண்டும்*..
*அவர் நம்மை தொடர்பு கொள்ளட்டுமே" என்ற சிந்தனை உருவாகும்.*
*மேலும் சிறிது காலம் செல்லும்போது இது மற்றொரு விதத்தில் தீவிரப்படும்.*
*அதாவது, அவர் நம்மை முதலில் தொடர்பு கொள்ளட்டும்*..
*பிறகு நாம் பேசுவோம் என்று நினைப்பு இருவரின் மனதிலும் பரஸ்பரம் தோன்றும்.*
*இங்கு என்ன ஆகிறது? நட்பால் விளைந்த அன்பு வெறுப்பாக மாறுகிறது*.
*இறுதியில் அவ்விரு நண்பர்களுக்குள் தொடர்பு இல்லாமல் போனதால்*, *நட்பால் விளைந்திருந்த பசுமை நினைவுகள் மறந்து போகிறது.*
*ஒருவர் மற்றொருவரை மறந்து போகிறார்.*
*எனவே நட்பு தொடர்ந்து நீடிக்க* *அடிக்கடி நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள்.*
*நட்பு சிறக்க பத்து பொன் விதிகள்*:
1 . *ஆனால் நட்பு இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்க்க சோதனை ஏதும் வைக்காதீர்கள்.*
2 . *மேலும் நண்பரிடம் உதவி ஏதும் கேட்க நினைத்தால் அவரின் நிலை அறிந்து கேளுங்கள்.*
3. *நண்பரே குறிப்பறிந்து உதவி செய்தால் அதற்கு நன்றி தெரிவியுங்கள்.*
4. *ஆனால் அதே நேரத்தில் நாம்தான் அவருக்கு உதவி செய்திருக்கிறோமே என்று அவரிடமிருந்து பிரதி உதவி எதிர்பார்க்காதீர்கள்*.
5. *நண்பர் உதவவில்லையானால் "* *அவருக்கு என்ன சூழ்நிலையோ*,
*கஷ்டமோ தெரியவில்லை?*" *என்று நினைக்கப் பழகுங்கள்.*
6. *உதவ முடியாத நிலைக்கு நண்பர் வருத்தம் தெரிவித்தால், அதை ஏற்றுக்கொண்டு பழையபடி நட்பை தொடருங்கள்.*
7. *நண்பருக்கு கஷ்டம், துன்பம் என்று கேள்விப்பட்டால் அதை அறிந்து முடிந்த உதவி செய்யுங்கள். பக்கத்துணையாக நில்லுங்கள்.*
*நல் ஆலோசனை நல்குங்கள்.*
8 . *நண்பர் தன் கஷ்டத்தை முதலில் சொல்லட்டும், பிறகு உதவி செய்யலாம் என்று இருப்பது நட்புக்கு நன்று அல்ல*.
9 . *அதே போன்று நண்பர்களிடம் சோகத்தை பகிர்ந்து கொண்டால் அது பாதியாகும்.*
10 . *அவ்வாறே மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டால் அது இரட்டிப்பாகும்.*
*வாழ்க நண்பர்கள் ! வளர்க நட்பு !!*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக