பலாப்பழத்தினால் வரும் நன்மைகளும் தீமைகளும்.....
முக்கனிகளில் இரண்டாவது கனியான பலா அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது.இங்கு அவற்றின் நன்மைகளும் தீமைகளும் காண்போம்.
நன்மைகள்:
- உடல் உஷ்ணத்தை குறைத்து பித்த மயக்கம், கிறுகிறுப்பு ஆகியவற்றை குறைக்கிறது.
- பலா பழத்தை தேனில் நனைத்து சாப்பிட்டுவர மூளை நரம்புகள் வலுப்பெறும்.வாதநோய், பைத்தியம் போன்றவை நீங்கும்.
- பலா மரத்தின் வேறை அரைத்து சொறி சிரங்குகளில் பூசி வர தீரும்.
தீமைகள்:
- அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதற்கேற்ப பலா பழத்தை அளவுடன் உண்ண வேண்டும். அளவுக்கு மிஞ்சி உண்டால் வயிறு மந்தமாகி வயிறு வலியும் வாந்தியும் உண்டாக்கும்.
- பலாபிஞ்சினை அதிகமாய் உண்பதால் செரியாமை, வயிற்று வலி ஏற்படுவதுடன் சொறி,சிரங்கு, கரப்பான், கோழைக்கட்டு, இருமல், இரைப்பு, வாதநோய்கள் ஏற்படும்.
- "அப்பண்டிசைடீஸ்" உள்ளவர்கள் பலாப்பழத்தை அறவே சாப்பிடக்கூடாது.
- அதிகமாக சாப்பிட்டால் அத்துடன் ஒரு வாழைப்பழத்தையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக