ஞாயிறு, 31 டிசம்பர், 2017

புத்தாண்டை பற்றி சிறப்பு 10 தகவல்கள்.


புத்தாண்டை பற்றி சிறப்பு 10  தகவல்கள்.

1. பன்டைய பாபிலோன் தான் 4000 வருடங்களுக்கு முன் கொண்டாடபட்ட உலகின் முதல் விடுமுறை தினமாம். ஜூலியஸ் சீஸர் 53 கிமு வில் தான் ஜூலியன் கேலன்டர் படி முதல் தினம் புத்தாண்டு தினம் என்று அறிவிக்கபட்டாலும் பின்பு அதை அரசு விடுமுறைதினமாய் அறிவித்த முதல் அரசு ரோமபுரி அரசுதான்.
2. ஜனவரி என்ற வார்த்தை - God Janus என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து வந்தது. இந்த வார்த்தைக்கு அர்த்தம் கதவு என்பதாகும்.
3. 1582 ஆம் ஆண்டு கிரோகரியன் கேலன்டர் ஜனவரி 1 புத்தாண்டின் முதல் தேதியாகும் என்று அறிவித்த அன்றிலுருந்து தான் உலகம் முழுவது கிரோகிரியன் கேலன்டர் முறைப்படி ஆங்கில புத்தாண்டு கொண்டாடபடுகிறது
.
4. லண்டனில் உள்ள பிக் பென் கடிகாரத்தில் சரியாக 12 மணிக்கு மணி அடித்த உடன் ‘Auld Lang Syne’ = "the good old days",என்ற பாடலை மக்கள் குழுமி பாடுவது 1700 முதல் இன்று வரை வழக்கம். இதை ராபர்ட் பர்ன்ஸ் என்பவர் எழுதினார். இந்த பாட்டின் அர்த்தம் - பழைய நண்பர்கள் பழைய நாட்கள் குறித்து நியாபகபடுத்தி பாடுவதாகும்.
5. புத்தாண்டு சபதம் - New Year resolution முதன் முதலில் ஒரு சம்பிரதாயமாக கொண்டு வந்தது பாபிலோனியர்கள் தான். அதிகமாய் ஒவ்வொரு ஆண்டும் எடுக்கும் சபதம் - நான் இந்த வருடம் கண்டிப்பாய் உடம்பை குறைத்து சிக்குனு இருக்கனும்ங்கிறது தான் ஆனால் எத்தனை நாளுக்கு அது வேலிட் என்று தெரியாது.
6. ஸ்பானிஸ் வழக்கபடி பன்னிரென்டு திராட்சைகளை சாப்பிடுவது வழக்கம். இதன் மூலம் பன்னிரென்டு மாதங்களும் நன்கு அமையும் என்று ஒரு நம்பிக்கை.
7. டென்மார்க்கில் உள்ள டானிஷ் வகையினர் தன் வீட்டுக்கு முன்னாடி சாப்பிடும் தட்டுகளை வைத்து உடைத்தெறிவார்கள். உடைந்த இந்த குப்பைகள் வீட்டு வாசலில் இருப்பது அவர்கள் நம்புவது ஒரு வகை.
8. தீபாவளி போல் புத்தாண்டு அன்று வெடி வெடிப்பது இருள் விலகி ஒளி நிறைந்த புத்தாண்டாய் மாறும் என்ற நம்பிக்கை பல நூறு வருடங்களுக்கு முன்பே இருந்ததாகும்.
9. ரோமானியர்கள் தன் நண்பர்களுக்கு மரகன்றுகள் செடி கொடிகளை கொடுப்பது ஒரு ஐதீகம்.
10. இத்தாலியில் எல்லோரும் புத்தாண்டு பிறப்பன்று சிவப்பு வகை உள்ளாடைகளை அணிவர்.
கொசுறாக - The tiny island of Kiribati என்ற சமோவா (கிரிபாட்டி) தீவுதான் உலகத்தில் முதலில் 2014 கவுன்ட் டவுனை கொண்டாடுவார்கள். அதே சமயம் அமெரிக்காவின் சமோவா பாகோ பாகோ American Samoa - Pago Pago தான் கடைசியாக புத்தாண்டை கொண்டாடும்.

வியாழன், 28 டிசம்பர், 2017

ஆறில் ஆரோக்கியம் !


ஆறில் ஆரோக்கியம் !

*ஆறு அறிவு மனிதன் என்கிறோம். ஆனால் இவனுக்குத்தான் ஓராயிரம் நோய்கள்.*

ஆறு விடையத்தை நீங்கள் கடைப்பிடித்தால் உங்களுக்கு உள்ள பிரச்சனை தீர்வதுடன் வாழ்நாள் முழுவதும் எந்த நோய்களும் வராது.

*இதோ !*
-----------------

1 - பசி
2 - தாகம்
3 - உடல் உழைப்பு
4 - தூக்கம்
5 - ஓய்வு
6 - மன அமைதி

*பசி !*
----------

உங்கள் உடலுக்கு உணவு தேவையா இல்லையா என்பது சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு தெரியுமா ? தெரியாதல்லவா பின் ஏன் நேரம் பார்த்து சாப்பீடுகிறீர்கள்.

யாரெல்லாம் நேரம் பார்த்து வேளாவேளைக்கு சரியாக சாப்பிடுகிறாரோ அவர் மிகப்பெரிய நோயாளி ஆகப்போகிறார் என்று அர்த்தம்.

இதைத்தான் வள்ளுவப்பெருமான் சொல்கிறார்

"மருத்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்."

விளக்கம் - நாம் ஏற்கனவே உண்ட உணவு செரித்த பின் மீண்டும் பசித்து சாப்பிட்டால் இந்த உடலுக்கு எந்த மருந்தும் தேவையில்லை என சொல்லியிருக்கிறார்.

"தீயள வன்றத் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்."

*விளக்கம்* - பசியின் அளவு தெரியாமல் அதிகமாக சாப்பிட்டால் நோய் அளவில்லாமல் வரும் என்கிறார்.

பசியின் அளவு தெரியாமல் அதிகமாக உண்டால் நோய் அளவில்லாம் வரும் போது, பசியே இல்லாமல் சாப்பிட்டால் என்னவாகும் !

உணவை பசித்து, சவைத்து, சுவைத்து கவனித்து, இடையில் தண்ணீர் குடிக்காமல் உண்ண வேண்டும்.

இதை நீங்கள் சரியாக செய்ததின் மூலம் ஆரோக்கியத்தின் முதல் படியில் கால் வைக்கிறீர்கள்.

*தாகம் !*
-----------------

அனைவருக்கும பொதுவாக தண்ணீரின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது, இது தவறு. Ac யில் வேலை பார்க்கும நபருக்கு 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படாது, மீறி குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

வெயிலில் கட்டிட வேலை செய்பவருக்கு 3 லிட்டர் போதாது, இவருக்கு அதிகம் தேவைப்படும், இவர் 3 லிட்டர் குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

சரி எவ்வளவுதான் குடிப்பது என கேட்கிறீர்களா ! ஒரு மனிதர் உண்ணும் உணவு, வாழும் இடம், செய்யும் வேலை இதை பொருத்து தண்ணீரின் அளவு மாறுபடும்.

தாகம் எடுக்கும் போது குடியுங்கள், தாகம் தீரும் வரை குடியுங்கள், மீண்டும் தாகம் எடுத்தால் குடியுங்கள். அளவுகளை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

*Ro, Mineral, Filter, boiled water பேராபத்து*

இதை நீங்கள் குடித்தால் சிறுநீரகம் சிதைந்து, இது தொடர்பான் ஆயிரம் நோய்கள் வரும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் குழந்தை பிறக்காது.

தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரிக்க பருத்தி துணியில் வடித்து மண் பானை, செம்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்து குடிக்கலாம்.

"தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே"

என்பார்கள்

நீரின் முக்கியத்துவத்தை இந்த பழமொழி நமக்கு உணர்த்தும்.

தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரித்து குடித்ததின் மூலம் நீங்கள் ஆரோக்கியத்தின் இரண்டாவது படியை அடைந்தீர்கள்.

*உடல் உழைப்பு !*
---------------------------------

ஒரு வாகனத்தை 3 மாதம் ஓட்டாமல் வைத்திருந்தால் என்னவாகும். அதே நிலைதான் உடலுக்கும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது உடல் உழைப்பு அவசியம்.

இதற்கு நீங்கள் Walking, yoga, Gym இதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை, வீட்டு வேலைகளை இயந்திரத்துனையின்றி செய்தாலே போதுமானது.

உடலுக்கு வேலை கொடுத்ததின் மூலம் நீங்கள் ஆரோக்கியத்தின் மூன்றாம் படி அடைந்தீர்கள்.

*தூக்கம் !*
-------------------

யாருக்கு தூக்கம் வரும் ? உடலுக்கு வேலை கொடுப்பவருக்கே தூக்கம் வரும். மனதிற்கு வேலை கொடுப்பவருக்கு தூக்கம் வராது. மனதிற்கு மட்டும் வேலை கொடுத்துவிட்டு நீங்கள் தூக்கத்தை எதிர்பார்க்க கூடாது.

ஒரு நாள் குனிந்து நிமிர்ந்து உடலுக்கு வேலை கொடுத்து பாருங்கள் எப்படி தூக்கம் வருகிறதென்று.

ஒரு மனிதன் உயிர் வாழ உணவு, காற்று, நீர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு தூக்கமும் முக்கியம்.

இரவு கண் விழித்து வேலை பார்ப்பது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

பகலில் உறங்கி சமன் செய்யதுவிடலாம் என நினைக்காதீர்கள். நீங்கள் தலைகீழாக நின்றாலும், கோடி கோடியாய் கொடுத்தாலும் இரவு உறக்கத்தை உங்களால் ஈடு செய்யவே முடியாது. இரவு தூங்க வேண்டிய சரியான நேரம் 9மணி.

நீங்கள் 10 மணிக்கு மேல் கண் விழித்திருப்பவராக இருந்தால், மருத்துவ செலவிற்கு பணம் சேர்த்து வைத்துக்கொளுங்கள், உங்களுக்கு மிகப்பெரிய நோய் வரப்போகிறது.

இரவு உறக்கம் சரி இல்லை என்றால் கல்லீரல், பித்தப்பை தொடர்பான ஆயிரம் நோய்கள் வரும்.

நீங்கள் இரவு 9மணிக்கு உறக்கச்சென்றதின் மூலம் ஆரோக்கியத்தின் நான்காம் படியில் கால் அடி எடுத்து வைத்துள்ளீர்கள்.

*ஓய்வு !*
---------------

சளி, காய்ச்சல், தலைவலி, அசதி போன்ற உடலின் கழிவு நீக்க செயலுக்கு நாம் ஓடி ஓடி மருந்து மாத்திரை எடுக்காமல், உடலிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

சளி, காய்ச்சலுக்கு ஆங்கில மருத்து எடுப்பது தற்கொலை செய்வதற்கு சமம்.

உடல் கேட்கும் போது ஓய்வு கொடுத்ததால் நீங்கள் ஆரோக்கியத்தின் ஐந்தாம் படி அடைந்தீர்கள்.

*மன நிம்மதி !*
---------------------------

ஐந்து கட்டத்தை வெற்றிகரமாக தாண்டி வந்த உங்களுக்கு மன நிம்மதி என்று ஒன்று இல்லை என்றால் பின் கீழ் சறுக்கி பழைய நிலைக்கு சென்றுவிடுவீர்கள்.

மனம் நிம்மதியாக இருக்க யாரிடமும் எதற்காகவும் கடன் வாங்காதீர்கள்.  உங்களுக்கு பிடித்ததை படியுங்கள், பிடித்த வேலை செய்யுங்கள், மாதம் ஒரு நாளாவது உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு சென்று வாருங்கள்.

மனதை நிம்மதியாக வைக்கும் கலைகளை கற்று தேர்ந்து ஆறாவது படியில் வீற்றிருக்கும் ஆரோக்கிய அன்னையை அடைந்துவிட்டீர்கள்.

இனி எமன் உங்களை கண்டு அஞ்சுவார்.

*ஆறு படியை கடந்தோம்*
*ஆரோக்கியத்தை அடைந்தோம்.*

செவ்வாய், 26 டிசம்பர், 2017

சில உளவியல் உண்மைகள்!


சில உளவியல் உண்மைகள்!

1. அதிகம் சிரிப்பவர்கள்..... தனிமையில் வாடுபவர்கள்..

2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்..

3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்..

4. அழுகையை அடக்குபவர்கள்... மனதால் பலவீனமானவர்கள்..

5. முரட்டுத்தனமாக உண்பவர்கள்..!!! மன அழுத்தத்தில் இருப்பவர்கள்..

6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள்!!!! அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்..

7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள்... அன்புக்காக ஏங்குபவர்கள்...!!!!

பேச்சு - உளவியல் ஆலோசனைகள்...!
8. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்..

9. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்..!!

10. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள் ..

11. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்துப் பேசவும்.

12. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். .

13. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும்...
அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்....

14. நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்..

15. நம்பிக்கையோடு கூடிய புன்னகை , நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்..

16.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும். .

17. உங்கள் பேச்சை விளக்குவதற்கு , உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.. ...
தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...!

18. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள்.
யாரும் சொன்னாலும் ரசித்தாலும்...தான்.... நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்..

19. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். ... உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள்... இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று..

20. உங்களால் எது முடியாது... உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும்.., அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்..

21.என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள்... எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை... என்பதே உண்மை....

22.உங்களுக்கு எதுவும் தெரியாது.... எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்... இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது..

23.கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள்.... உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்....

24. அழும் போது தனியாக அழுங்கள்... நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்...!!!
கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்...

25.உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,. நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.....

திங்கள், 25 டிசம்பர், 2017

மார்கழி மாதத்தில் ஏன் திருமணம் செய்யக்கூடாது?


மார்கழி மாதத்தில் ஏன் திருமணம் செய்யக்கூடாது?


✴ மார்கழி மாதம் நம் உடம்பை திடப்படுத்திக் கொள்ளவும், ஆற்றலைப் பெருக்கி சேமித்துக் கொள்ளவும், உடலில் சமன்பாட்டைக் கொண்டு வரவும் சாத்தியமான காலம் ஆகும். ஏனெனில் மார்கழி மாதம் மனித உடலின் சக்தி மையம் கீழிலிருந்து மேல்நோக்கி ஈர்க்கப்படுகிறது.

✴ மார்கழியில் பு மியின் வடபாதியில் புவிஈர்ப்பு விசை குறைவாகவே இருக்கும். இந்நிலையில் விதைவிதைத்தால் அது முளைக்காது. உயிர்சக்தி மந்தமாயிருக்கும்.

✴ இயற்கைக்கே இந்நிலை என்றால் மனிதனின் நிலை என்னவாகும். ஆதலால் தான் இம்மாதத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்வுகளை நம் முன்னோர் மேற்கொள்ளாமல் இம்மாதத்தை வழிபாட்டிற்கென்றே ஒதுக்கி வைத்தனர்.

✴ ஆதலால் தான் பனிரெண்டு மாதங்களில் வழிபாடுகளுக்கென்றே தனியாக ஒதுக்கப்பட்ட இம்மார்கழி மாதத்தில் நம் முன்னோர் சுபநிகழ்ச்சிகளை நிகழ்த்துவதில்லை. எனினும் அதற்கான முன்னேற்பாடுகளான பெண்பார்த்தல் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தலாம் என ஜோதிட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

✴ மார்கழி மாதத்தில் சு ரியசக்தி கீழ்நோக்கி செயல்படுவதால் மனநோயாளிகள் தங்கள் மனநிலையில் சமநிலைக்கு கொண்டுவருவதற்கு உகந்த நேரமும் இதுதான். நம் உடலை நாம் பாதுகாக்கத் தவறினால் உடம்பின் நீராதார சமநிலையில் மாற்றம் ஏற்பட்டு அது மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்காக பிரம்ம முகூர்த்தத்தில் மூழ்கி நீராடினால் உடல் வலிமை பெறும்.

✴ மார்கழி மாதமானது இயல்பாகவே நமது உடம்பில் ஒரு உறுதியான நிலையையும், மன அமைதியையும் கொடுக்கிறது. இந்த மார்கழி மாதம் ஸ்திரமாக(உறுதி) இருப்பதற்கும், அடுத்து வரும் தை மாதம் நகர்ந்து முன்னேறுவதற்கும் பயன்படுகிறது. உடல் நிலை திடமாக இருந்தால்தான் வாழ்க்கையை சுலபமாக பயணிக்கத் துணிவு வரும். எனவே மார்கழி உடம்பை திடப்படுத்தவும், சமநிலைக்கு கொண்டு வரவும் உதவுகிறது.

✴ மார்கழியை பொறுத்தவரை பருவநிலை மாற்றம் ஏற்படும். குறிப்பிட்ட வகைப் பயிர்கள் அறுவடைக்காக காத்திருக்கும். எனவே இதனை அறுவடைக் காலமாகவும் முன்னோர்கள் கருதினர். இது போன்ற காரணங்களால் தான் திருமணத்தை இந்த மாதத்தில் நடத்தாமல் இருந்தனர்.

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

வாஷிங் மெஷின் பராமரிப்பும் பாதுகாப்பும்...


 வாஷிங் மெஷின் பராமரிப்பும் பாதுகாப்பும்...

அனைவர் வீடுகளிலும் துணிகளை துவைப்பதற்கு வசதியாக வாஷிங் மெஷின்கள் உள்ளன.

இந்த வாஷிங் மெஷின்கள் தினசரி தண்ணீர், சோப்பு தூள் போன்றவற்றில் இயங்க வேண்டியுள்ளது.

இதனால் வாஷிங் மெஷின்களின் உட்புறம், வெளிபுறம் விரைவில் துருபிடிப்பது, உட்புறப்பகுதிகளில் துர்நாற்றம், சில மாறுபட்ட செயல்முறைகளில் இயக்க பாதிப்புகள் போன்றவை ஏற்படும்.

எனவே வாஷிங்மெஷின்கள் வைத்திருப்போர் அதனை சரிவர பராமரிப்பதும், பாதுகாப்பதும் வேண்டும்.

அந்த வகையில் வாஷிங் மெஷின் பராமரிப்புக்கு ஏற்ற சில குறிப்புகளை காண்போம்.

வாஷிங்மெஷினை இயக்கிடும் போது கவனிக்க வேண்டியவை :

வாஷிங்மெஷினில் துணிகளை அதில் குறிப்பிட்டுள்ள அளவின் படியே உட்செலுத்த வேண்டும். அதிக துணிகளை போட்டு நிரப்பி வாஷிங்மெஷினின் இயக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்த கூடாது. சரியான அளவு துணி உள்ள போது தான் சிறப்பான வாஷிங் மற்றும் உலர்த்துதல் பணி சிறப்புற இருக்கும். மெஷினின் ஆயுட்காலமும் நீடித்து இருக்கும். அது போல் அதிக கனமாக துணிகளான பெட்ஷீட், உல்லன் போர்வைகளை துவைக்க முயலும் போது அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். சில சமயம் ஓவர்லோட் வார்னிங் தந்தும் அசட்டையாக இருந்தால் மெஷின் அவ்வளவுதான்.

வாஷிங் மெஷினை சமதளமான இடத்தில் ஏற்ற இறக்கமின்றி வைத்திட வேண்டும். அப்போது மெஷினில் இருந்து அதிக சத்தமின்றி, உதறல் ஏதும் இன்றி வாஷிங்மெஷின் இயங்கிட முடியும். அது போல் வாஷிங்மெஷினில் துணி செலுத்தும் அளவு பிரிவுகளுக்கு ஏற்ப துணியை செலுத்தி அந்த பிரிவு பட்டன்களை அழுத்தி விட வேண்டும்.

வாஷிங்மெஷினில் உள்ள பில்டர்களை சுத்தம் செய்தல் :

பில்டர்களில் அடைப்பு ஏற்பட்டு சுத்தம் செய்யாவிடின் தண்ணீர் உட்செலுத்துவது மற்றும் தண்ணீர் வெளியேறுவதில் பிரச்சினை ஏற்படும். எனவே அவ்வப்போது சுத்தம் செய்யவும். மெஷர் பில்டர்களை ஆண்டுக்கு இருமுறை சுத்தம் செய்யவும். அது போல் டெபிரிஸ் பில்டரை ஆண்டுக்கு ஐந்து (அ) ஆறு முறை சுத்தம் செய்ய வேண்டும். அப்போது தான் அடைப்புகள் ஏற்படாது.

சோப்புதூள் மற்றும் திரவம் போடும் டிராயரை மாதம் ஒருமுறை சுத்தம் செய்வது நல்லது. இல்லையெனில் அதில் பழைய சோப்பு தூள் சேர்ந்து அடைத்து கொள்ளும் சில சமயம் திரவங்கள் ஒழுகி வீணாகி விடும். அதுபோல் சரியான தரமான சோப்பு தூள்களை அதற்கு தேவையான அளவுகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வாஷிங் டிரம்-யை சுத்தம் செய்திடல் வேண்டும்:

சில வாஷிங்மெஷின்களில் உட்புற டிரம்-யை சுத்தம் செய்ய வசதியான அமைப்பு உள்ளது. அதனை இயக்கி உட்புற டிரம்-யை சுத்தம் செய்து கொள்ளலாம். அப்படி இல்லையெனில் மாதம் ஒரு முறை துணிகள் ஏதுமின்றி சுடு தண்ணீர் நிரப்பி அதில் 2 கப் வினிகர் விட்டு துவைக்க செய்யவும். பின் நடுவில் கொஞ்சம் சோப்புதூள் போட்டு முழு சுழற்சி அளவு வாஷிங் செய்யவும். பிறகு டிரையினர் வழியாக தண்ணீரை திறந்து விட்டு வாஷிங்மெஷினை சற்று நேரம் திறந்து வைத்திருக்கவும்.

அதுபோல் ஒவ்வொரு முறை துணி துவைத்தலுக்கு பின் வாஷிங் மற்றும் ஸ்பின் பகுதிகளை திறந்தே வைத்திட வேண்டும். இதன் மூலம் உட்புறம் காற்று சென்று துர்நாற்றம் வீசுவதை குறைக்கும். உட்புற பகுதி முழுமையாக காய்ந்து விட உதவிகரமாக இருக்கும்.

எப்போதும் வாஷிங்மெஷினின் குழாய்களை சோதித்து பார்த்தே வாஷிங் மெஷினை இயக்கிட வேண்டும். குழாய்களில் பாதிப்பு இருந்தால் தண்ணீர் உட்செல்வதில் பிரச்சினை ஏற்பட்டு வாஷிங் மெஷின் இயங்குவதில் பிரச்சினை ஏற்படும்.

வியாழன், 21 டிசம்பர், 2017

தக்காளி மீன் வறுவல்



தக்காளி மீன் வறுவல்

 தக்காளி - 4
மீன் - 1/4 கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பொடித்த சோம்பு - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தனியா தூள் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு



செய்முறை:

தக்காளியை மிக்ஸியில் இட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதுடன் இஞ்சி பூண்டு விழுது, பொடித்த சோம்பு, மிளகுத்தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கலந்து மீன் துண்டுகள் மீது தடவி, சிறிது நேரம் ஊறிய பிறகு எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

முக அழகு குறிப்புகள் மருத்துவ டிப்ஸ்


முக அழகு குறிப்புகள் மருத்துவ டிப்ஸ்
அழகுக்குறிப்பு

வரண்ட சருமத்திற்க்கு தினமும் இரவில்,கைகள் கால்கள் பாதங்கள் போன்ற இடங்களில், ஆலிவ் எண்ணையை தடவி வர, வரண்ட சருமம்-பட்டு போல் மாறி விடும்!!!!

சுருக்கங்களை போக்க முட்டையின் வெள்ளையை தேன் கலந்து,முகத்தில் தடவி,பின் 15நிமிடம் கழித்து கழுவிவிடவும்.

வழ வழ முகத்திற்க்கு பழுத்த வாழை பழத்தைப் பாலோடு கலந்து,பிசைந்து,முகம் கழுத்து கைகள்ளில் தடவி, 30நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

ப்ரகாசமான முகத்திற்க்கு ஆரஞ்சு பழத்தோல் பொடியை,தயிரில் கலந்து முகம்,கழுது பகுதிகளில் தடவிவர, பளிச்சென ப்ரகாசமாய் சிவப்பழகுடன் மாறி விடும் முகம்!

முக்கியமான அழகுக்குறிப்பு எப்போதும் சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருங்கள்!!! அந்த ஒரு சிரிப்பே நம்மை உலக அழகியாக்கிவிடும்!!!

முக பருவை போக்க.. அதிக எண்ணெய் பசை இருந்தால் முகத்தில் பரு வர வாய்ப்புகள் அதிகம். ஆகையால் எண்ணெய் பசையில்லாமல் பார்க்கவும் இதை தடுக்க... 1 டீஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை 1 டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறிய பிறகு மிருதுவாக துடைக்கவும். பருவை விரலால் கிள்ளாதீர்கள். கிள்ளினால் முகத்தில் மாறாத வடுக்கள் விழுந்துவிடும். எருமைப்பால் ஆடையை இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவுங்கள். பரு போய்விடும். பயத்த மாவு, கடலை மாவு, காய்ந்த ரோஜா இதழ், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அதை முகத்தில் தடவி காய்ந்தவுடன் அலசவும்

முகப்பொலிவிற்கு உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

தினமும் இரவு கண் இமைகளிலும் புருவதிலும் விளக்கெண்ணை தடவி வரவும். இவ்வாறு செய்து வர,கண்கள் அழகு பெரும்.உடல் சூட்டை தனிக்கும். அதனால் இமைகள் அடர்தியாக உள்ளது. செய்து பாருங்கள்! பலன் பெருங்கள்

மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்கணுமா..?


மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்கணுமா..?

இதெல்லாம் ட்ரை பண்ணுங்க…

பண்டிகை காலங்களில் பெண்கள் தங்கள் கைகளில் பல டிசைன்களில் மெஹந்திகளை வைத்துக் கொள்வார்கள்.

அப்படி வைக்கும் சில பெண்களுக்கு மட்டும் மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்காது.

உங்களுக்கும் அப்படியென்றால் இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்களை பின்பற்றினால், நிச்சயம் உங்கள் கைகளில் மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிப்பதோடு, நீண்ட நாட்களும் இருக்கும்.

சமையல் எண்ணெய்

மெஹந்தி நல்ல நிறத்தில் பிடிக்க வேண்டுமானால், அதை கைகளுக்கு வைக்கும் முன் கைகளில் சமையல் எண்ணெயைத் தடவிக் கொள்ளுங்கள்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை

எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்து கலந்து, அக்கலவையை கைகளில் வைத்த மெஹந்தி காய்ந்த பின்னர் பஞ்சின் உதவியால் தடவி 15 நிமிடங்கள் வைத்திருந்தால், மெஹந்தி நல்ல நிறத்தில் கைகளில் பிடிக்கும்.

கடுகு எண்ணெய் அல்லது விக்ஸ்

மெஹந்தி வைத்து நன்கு உலர்ந்த பின்னர், அதனை நீரில் கழுவாமல், உலர்ந்ததை சுரண்டி எடுத்துவிட்டு, கைகளில் கடுகு எண்ணெய் அல்லது விக்ஸ் தடவினால், கையில் உள்ள மெஹந்தியின் நிறம் அதிகரிக்கும்.

கிராம்பு புகை

கைகளில் உள்ள மெஹந்தியில் எலுமிச்சை சாற்றினைத் தடவிய பின், ஒரு வாணலியில் கிராம்பை போட்டு நன்கு வறுத்து அடுப்பை அணைத்துவிட்டு, அப்போது வாணலியில் உள்ள கிராம்பில் இருந்து வெளிவரும் புகையில் கைகளை சிறிது நேரம் காட்ட வேண்டும். இதன் மூலமும் மெஹந்தியின் நிறம் அதிகரிக்கும்.

குறிப்பு

vகைகளில் மெஹந்தி வைத்தால் குறைந்தது 4-5 மணிநேரம் வைத்திருப்பதோடு, 12 மணிநேரத்திற்கு கைகளை நீரில் கழுவக்கூடாது. அப்படி கழுவினால், கைகளில் உள்ள மெஹந்தியின் நிறம் மங்க ஆரம்பிக்கும்..

சமையலும் மிச்சங்களும்


சமையலும் மிச்சங்களும்

என்னதான் அளந்து அளந்து சமைத்தாலும் தினசரி சமையலில் ஏதேனும் ஒன்று மிச்சமாவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. மனிதன் இயந்திரமாய்ச் செயல் பட்டாலும் உணவு என்று வரும்போது அதில் மனதின் பங்கு முதன்மை பெறுகிறது. பிடித்தமான உணவு என்றால் அடுத்து சாப்பிட இருப்பவர்களைப் பற்றி கவலைபடாமல் உபரியாக உள்ளே தள்ளுபவர்களால் வரும் பிரச்சனை வேறு. அது பற்றாக்குறை.

ஆனால் ஒரு கால் கிராம் உப்பு குறைவு என்பதாலோ, அரை கிராம் புளிப்பு அதிகம் என்பதாலோ அரை குறையாகச் சாப்பிட்டு தட்டைக் கழுவி வைக்கும்போது தான் உணவு மிச்சம் என்னும் பிரச்சனை உருவாகிறது. சில சமயங்களில் அஜீரணம் போன்ற இயற்கைக் காரணங்களாலும், முன்னிரவு உண்டு களித்த பெருவிருந்தின் மிகைக் கலோரிகள் காரணமாகவும் தினசரி சாப்பிடும் அளவை விட குறைவாக சாப்பிட நேரிடலாம்.
நல்லதொரு குடும்பத்தில் ஏற்படும் பல்சுவைக் கலகங்களாலும் சிறு மனஸ்தாபம் ஏற்பட்டு அது உண்ணும் அளவில் பிரதிபலிப்பதும் அன்றாட நிகழ்வுகள்தான்.  வீட்டுக்கு வீடு இத்தகைய பிரச்சனைகள் உண்டு என்றாலும் நாம் அதனை எப்படிக் கையாள்கிறோம் என்பதில் தான் அதற்கான தீர்வுகள் இருக்கின்றன.

சமையல் என்பதும் ஒரு வகை முதலீடுதான். அதன் இடுபொருட்கள் விலையேற்றம் அதனை நம் சம்பாதிப்பில் கணிசமான அளவை இப்போது அபகரிக்கரிக்கின்றன. முன்பு மளிகைச் செலவுகளும், தினசரி காய்கறிச் செலவுகளும் ஏனைய செலவுகளும் ஒப்பிடும்போது குறைந்த சதவீதமாக இருந்தது இப்போது நாலு நாட்டு காய்கள் வாங்கினாலே அதன் மின்னணு பில் நானூறு என்று காட்டி பின்னர் வரக் காத்திருந்த ஹார்ட் அட்டாக்கை முன்னரே அனுப்பிவைக்கிறது..

காய்கறிகளைச் சமைப்பதா அல்லது பார்த்துக்கொண்டே காலத்தைத் தள்ளுவதா என மலைப்பாக இருக்கிறது. கையில் காசு, பணம், துட்டு எல்லாம் தொலைந்து போய் அட்டை வந்து ஒட்டிக்கொண்ட நாள் முதலாய் எப்படி என்ன செலவு செய்து தொலைக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் வங்கி இருப்பு வரண்டு போகுமளவு செலவழிக்கிறோம். அது என்னவோ தேய்க்கத் தேய்க்கத் தேயாத அமுதசுரபியாய் எண்ணி வாங்கும்போது ஆசையின் உந்துதலில் வாங்கிவிட்டு பின் அவசியம் என்று வரும்போது அல்லல்படுகிறோம்.

அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்வதாகவே ஒரு பதிவை எழுதுவது சுலபம்தான். மாறாக அடுத்தவர்களின் எண்ணம் என்ன என்று ஒரு கலந்தாய்வாய் இருந்தால் பல நல்ல யோசனைகள் படிக்கும் அனைவருக்கும் கிடைக்க வாய்ப்புண்டு என்பதால் நண்பர்களே இதனை இத்தோடு நிறைவு செய்கிறேன். இனி உங்கள் பாடு.

சமையலில் சிக்கனம் அவசியமா? ஆம் என்றால் எப்படியெல்லாம் ‘சிக்’ என சிக்கனம் பிடிக்கலாம்? ஆகக் குறைந்த அளவு மீதமாகும்படி சமைப்பது எப்படி? எதிர்பாராமல் அதிகம் மீதமாகிவிட்டால் உணவை வீணாக்காமல் சமாளிப்பது எப்படி? என்பதற்கான தங்களின் மேலான ஆலோசனைகளை தனிப் பதிவாகவோ பின்னூட்டமாகவோ அளிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொண்டு…….என் சிற்றுரையை சிக்கனமாக முடிக்கிறேன்.

பின்குறிப்பு:

கூடுமானவரை தமிழ் செயலியை பதிவிரக்கம் செய்து செந்தமிழில் தட்டச்சு செய்ய முயற்சிக்கவும். சமையல் போலவே முதலில் சுமாராக,  நாலு பேர் பார்த்துச் சிரிக்குபடியாக இருந்தாலும் போகப் போக அசத்துவீர்கள்.

முகப்பருவை போக்கும் துளசி பவுடர்


முகப்பருவை போக்கும் துளசி பவுடர்


துளசி, சந்தனம், வெட்டிவேர்… இன்னும் பல மூலிகைகள் அடங்கியது என்று பல விளம்பரங்கள் சொல்லக் கேட்டிருப்போம். அழகுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களே சுவீகரித்துக் கொள்ளும் அளவுக்கு அழகு பலன்கள் நிரம்பியது துளசி!

* பொதுவாக, குளிர்காலத்தில் பருக்கள் வராது. வந்தால் சீக்கிரத்தில் போகாது. இப்படி வரும் பருக்களை விரட்டியடிக்கிறது துளசி பேக் சந்தனத்தூள், எலுமிச்சைச்சாறு, துளசிச்சாறு, வெட்டிவேர் பவுடர் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து, கலந்து பருக்கள் மீது தடவி, ஐந்து நிமிடம் கழித்து கழுவுங்கள். ஒரே வாரத்தில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

* பனிக்காலத்தில் மேக்கப் போடும்போது முகத்தில் நீர் கோத்துக் கொண்டு பொத பொதவென்று ஆகிவிடும். இதற்கும் தீர்வு இருக்கிறது. 10 துளசி இலையுடன், சுக்குப் பவுடர் 2 சிட்டிகை லவங்கம் 1 இவை மூன்றையும் நன்றாக அரைத்து, முகத்தில் தடவி கழுவுங் கள். பிறகு மேக்கப் போடுங்கள். தோல் இறுக்கமாகும்.

* பற்களைத் தூய்மையாக்கி, பளிச்சிட வைப்பதில் துளசிக்கு பெரும்பங்கு உண்டு. சம்பா கோதுமையை வறுத்து அரைத்த பவுடர் ஒரு கப், துளசி பவுடர், சர்க்கரை – தலா கால் கப், பொடித்த பச்சைக் கற்பூரம் – 10 கிராம். இவற்றை சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். இந்தப் பவுடரால் தினமும் பல் தேய்த்து வர, பல் கூச்சம், வாய் துர்நாற்றம், ஈறு வீக்கம் போன்றவை நீங்கி, பற்கள் பளபளக்கும்.

புதினா – 50


புதினா – 50

1. புதினா அஜீரணத்தை அகற்றும்.

2. வயிற்றுப்போக்கை நிறுத்தும்

3. குடல்பிணிகளை நீக்கும்

4. சீதபேதிக்கு நல்ல பலன் கொடுக்கும்.


5. சிறுநீர்த்தடைகளை நீக்கும். அகட்டு வாய்வை நீக்கும். பித்தம் தொடர்பான நோய்கள் அகலும்.


6. குடற்கிருமிகளை அழித்து வெளியேற்றும்.


7. ரத்தம் சுத்தியாகும். ரத்தக்குழாய்கள் பலமடையும். ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.


8. சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல் கோளாறுகள் நிவர்த்தியாகும்.


9. கபநோயும், வயிற்றுப்போக்கும் நீங்கும். கீல் வாத நோய்கள் கட்டுப்படும்.


10. கண் நோய்கள் நிவர்த்தியாகும்.


11. கர்ப்பகால வாந்திக்குச் சிறந்த நிவாரணியாகும்.


12. தலைவலி, நரம்பு வலி, வாத வலிகளுக்குப் பயன்படுத்தினால் நோய்கள் நிவர்த்தியாகும்.


13. பெண்களின் மாதவிடாய்ப் பிரச்சினைகளுக்கும் வெள்ளைப் படுதல் பெரும்பாடுகளை நீக்குகிறது.


14. சருமப் பாதுகாப்பிற்குத் துணைபுரிகிறது.


15. பொதுவில் ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்கு இணையாகச் செயல்படுகிறது.


16. அசைவ உணவுகளைச் செரிமானம் ஆக்கவும் கொழுப்புப் பொருள்களைக் கரைக்கவும் பயன்படுகிறது.


17. கர்ப்பிணிப் பெண்களுக்கும், வளரும் குழந்தைகளுக்கும், புதினா நல்ல செரிமானத்தைக் கொடுத்து சத்துக்களைக் கிரகிக்க உதவுகிறது.


18. முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினாவை சூப்செய்து சாப்பிடுவது நல்லது.


19. புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.


20. சிறு நீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாக் குடிநீர் தயார் செய்து குடித்து வர எரிச்சல் தணியும். உடல் உஷ்ணம் தணியும்.


21. வாய்த்துர்நாற்றத்தைப் போக்கும் புதினாக்கீரை பற்களில் ஏற்படும் பல வியாதிகளைக் குணப்படுத்தும். பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினா குணப்படுத்துகிறது.


22. புதினாக்கீரையைக் கஷாயமாகத் தயாரித்துச் சாப்பிட்டால் தொடர்ந்து நீடிக்கும் விக்கல் குணமாகும்.


23. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.


24. ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.



25. புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம்.


26. இளைப்பு நோயையும், ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.


27. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.


28. புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து . சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகுக்கு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பள பளக்கும்.


29. வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.


30. புதினா பற்பொடியை ஒருவர் தினசரி உபயோகித்து வருவாரானால், அவர் ஆயுள்வரை பல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியினாலும் பீடிக்கப்பட மாட்டார்.


31. புதினா புத்துணர்ச்சியை அளிப்பதோடு, எலுமிச்சை சாறு சேர்த்திருப்பது பசியின்மையையும் போக்கும்.


32. புதினாவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு கஷாயமாகத் தயாரித்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை கொடுத்து வந்தால் காய்ச்சல் தணியும்.


33. மூச்சுத்திணறல் உடனே நிற்க வேண்டுமானால், புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து இந்த ஊறல் குடிநீரைக் குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும்.


34. கைப்பிடியளவு புதினாக் கீரையைச் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொண்டு ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டுச் சாப்பிட்டு வந்தால் வாய் வேக்காளம் குணமாகும்.


35. புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும்.


36. வெயிலிலிருந்து களைப்பாக வீடு திரும்பிய கணவருக்கோ, விளையாடிவிட்டு வந்த குழந்தைகளுக்கோ கொடுத்தால் உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும்.


37. புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.


38. சிறு நீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாக் குடிநீர் தயார் செய்து குடித்து வர எரிச்சல் தணியும். உடல் உஷ்ணம் தணியும்.


39. தொண்டைப்புண் உள்ளவர்கள் புதினாக் கீரையை அரைத்து தொண்டையின் வெளிப்பகுதியில் பற்றுப்போட்டால் தொண்டைப் புண் ஆறிவிடும்.


40. புதினாக் கீரை 60 கிராம் அளவில் எடுத்து 200 மில்லி தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைத்து, இந்த தண்ணீரைக் குடித்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.


41. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது.


42. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.


43. மணமூட்டியாக சமையலைக் கமகம ஆக்குகிறது, காய்கறி பிரியாணி செய்யும் போது ஒரு கைப்பிடி புதினாவும் சேர்த்து சமைத்தால் வாசனை ஊரைக் கூட்டும்.


44. புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது.


45. புதினா உடற்சூட்டைத் தணிக்க உதவும்.


46. பழச்சாறு பரிமாறும் பொழுது அதன் மேல் ஓரிரு புதினா இலைகளைத் தூவி பரிமாறலாம். நாம் குடிக்கும் நீரிலும் கூட போட்டு வைக்கலாம். இதனால் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.


47. புதினா உடலுக்கு வெப்பம் தருவதால் மூல நோய்கள் உள்ளவர்கள் இக்கீரையை தவிர்த்தல் நல்லது .


48. பித்தத்தால் ஏற்படும் பாத எரிச்சலுக்கு, ஒரு கைப்பிடி புதினாவுடன் கல் உப்பு கலந்து வெறும் வாணலியில் வறுத்து, சூட்டுடன் ஒரு துணியில் மூட்டையாகக் கட்டி எரிச்சல் உண்டான பாதத்தில் ஒத்தடம் கொடுக்க எரிச்சல் குறையும்.


49. சளி, கப கோளாறுகளுக்கும் புதினா நல்ல மருந்தாகும்.


50. ‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்பார்கள், விலை மலிவானாலும் தரத்திலும் மருத்துவகுணங்களிலும் சிறந்தஅலட்சியப்படுத்தாமல் புதினாவைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அமெரிக்காவில் 99 சென்ட்ஸ் மட்டுமே, இது 3 பேர் கொண்ட குடும்பத்துக்கு ஒரு வேளை புதினா சாதத்திற்கு உதவும்.. புதினா சாதம், புதினா புலாவ், புதினா துவையல், புதினா சப்பாத்தி, புதினா சூப், புதினா இட்லி என்று பலவிதங்களில் செய்து அசத்தலாம்..

புதன், 20 டிசம்பர், 2017

நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொ ண்டு சுழன்று கொண்டிருக்கிறது.

 நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொ ண்டு சுழன்று கொண்டிருக்கிறது.

🔴ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.

🔴 *விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம்*.

இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.
தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

🔴 *விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம்*.

காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.

🔴 *காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்*.

இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.

🔴 *காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்*.

காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும். நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

🔴 *முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம்*.

இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.

🔴 *பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்*.

இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.

🔴 *பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம்*.

நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

🔴 *மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம்*.

பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

🔴 *இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம்*.

பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.

🔴 *இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர்* என்பது ஒரு உறுப்பல்ல.
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
இணைக்கும் பாதை. *இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது*.

🔴 *இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம்*.

 இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.

🔴 *இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம்*.

இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.
கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.

🔴 மிகவும் பயனுள்ள தகவல்கள்..அனைவரும் ஷேர் செய்தால் படிப்பவர் மிகப்பயன் பெறுவர். I

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்ரி புலே



இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்ரி புலே

பள்ளிக்குச் செல்லும்போது இரண்டு புடவைகளை எடுத்துச் சென்றது ஏன் தெரியுமா?

அந்தப் பெண் தினமும் இரண்டு புடவைகளைத் தன்னோடு எடுத்துக்கொண்டுதனது பணிக்குக் கிளம்புவாள்.

ஏனெனில்,

அவள் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்ததுமே,
வழி நெடுகிலும் சில ஆண்கள் சாணத்தையும் சேற்றையும் மண்ணையும் வாரி வாரி அவள் மீது வீசுவார்கள்.
அவற்றை அமைதியாக எதிர்கொண்டு தனது பள்ளிக்கு வந்ததும், புடவையை மாற்றிக்கொள்வாள்.

 *அவள் செய்த குற்றம்தான் என்ன?*

கல்வியின் அவசியத்தை உணர்ந்து, பெண்களுக்கும் கல்வி கற்பித்தாள். விதவை என முடக்கப்பட்ட சிறுமிக்குப் புதுப்பாதை காட்டினாள். *அனைவரும் சமம் என்று மனிதத்தை தூக்கிப் பிடித்தாள்.*

அவளே
*இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை, சாவித்ரி புலே.மராட்டிய மாநிலத்தில் 1831-ம் ஆண்டு பிறந்த சாவித்ரி, தனது பத்தாவது வயதில் ஜோதிராவ் என்பவருக்கு மனைவி ஆனார்.*

அவர் கணவரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து அகமதாபாத்தில் மிஸ்.பாரார் கல்வி நிலையத்திலும், பிறகு புனேவில் உள்ள மிஸ்.மிட்செல் கல்வி நிலையத்திலும் சாவித்ரியைப் படிக்கவைத்தனர்.1848-ம் ஆண்டு தம்பதியர் இருவரும் இணைந்து பெண்களுக்கென முதல் பள்ளியை உருவாக்கினர். அவர்களுக்கென 1863-ம் ஆண்டு தனி நூலகத்தையும் நிறுவினர்.

கல்வி பணியோடு நில்லாமல் சமுதாயப் பணிகளையும் மேற்கொண்டனர்.

 *சிறுவயதில் கணவனை இழந்தப் பெண்களுக்கும் சிறுவயதிலே பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களுக்கும் ஆதரவு அளித்தனர். அதற்கென தனியாக இல்லம் ஒன்றைத் தொடங்கினர். பெண் குழந்தைகளை சிசுக் கொலையிலிருந்து மீட்டு எடுத்தனர். குழந்தைத் திருமணத்தை எதிர்த்தனர். சாதியின் பெயர் சொல்லித் தாழ்த்தப்பட்ட பெண்களுக்குக் கல்வி அளித்தனர். விதவை மறுமணம், சாதிக் கலப்புத் திருமணம் என அனைத்து சமுதாயத் சீர்திருத்தங்களுக்கும் குரல் கொடுத்தனர்.*

இந்தப் புனித செயலுக்கு அவர்களுக்குக் கிடைத்தது பூங்கொத்தோ, வாழ்த்துகளோ அல்ல. சமுதாயம் புறக்கணித்தது. அவர்கள் உறவினர்களால் வீட்டைவிட்டுத் துரத்தி அடிக்கப்பட்டார்கள். கேட்க இயலாத வசைச் சொற்களை வீசினர். எங்கும் கல்வீச்சு அவர்களை வரவேற்றது. அதற்கெல்லாம் சாவித்ரி புலே புன்னகையை மட்டுமே தந்தார்.

*'கல்வி என்னும் புனிதத்தை உலகத்துக்கு வழங்கும் எனக்கு, இந்தக் கற்கள் மலர்களாகவே தோன்றுகின்றன' என்றார்.*

தொடர்ந்தது சமுதாயப் பணியாற்றினார்சாவித்திரி புலே.

"கல்வி என்பது இது சரி இது தவறு என்று ஆராயும் திறனைத் தரவேண்டும். அது மெய்யும் பொய்யும் உணரவைக்க வேண்டும்' என்ற கோட்பாட்டின் மூலம் புது பாடத்திட்டத்தை அன்றைய மராட்டிய அரசுக்குப் பரிந்துரைத்தார்.

*திருமணங்களின்போது பெண்ணை படிக்கவைப்பேன் என்று மாப்பிள்ளையை மணமேடையில் உறுதிமொழி எடுக்கவைத்தார்.*

அவர் எழுதிய நூல்களும் கவிதைகளும் இன்றளவும் சமூகத்தின் காயங்களுக்கு மருந்து அளித்து வருகின்றன.

1897-ல் இந்தியாவில் பிளேக் பரவிய காலகட்டத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்குஅழைத்துவந்து சிகிச்சை அளித்தார். இதனால் அந்தநோய் சாவித்ரியையும் தொற்றிக்கொண்டது. *மார்ச்- 10 1897-ம் ஆண்டு பிரியா விடை பெற்றார்.*

*பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதே குற்றமாக கருதப்பட்ட காலத்தில், தன் கணவனின் இறுதி சடங்கைத் தானே செய்யும் கம்பீரத்தைப் பெற்றவர்.*

*ஓர் சமுதாயத்தின் பிழையைத் திருத்தும் போராளியான இவர், வாள் இல்லா வீராங்கனை. ஆசிரியராகப் பலரது தலை எழுத்தை மாற்றியவர்.*

*குரு, மாதா, பிதா என்று பலருக்கும் உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்.*

*இத்தகைய திடப் பேராண்மைகொண்ட ஆசானை, வழிகாட்டியை, விடிவெள்ளியை மறந்தது காலத்தின் கொடுமை.*

*பெண் உருவில் அவர் அற்புதத்தை நிகழ்த்தவில்லை;*

*அற்புதமே பெண் உருவானது*

பத்து முத்திரைகள்...



பத்து முத்திரைகள்...

“முத்திரை (முத்ரா)” என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும் முழு உடலை கொண்டும் முத்திரை காட்டப்படும். புத்தர் பல முத்திரைகளை கையாண்டிருப்பதை அவருடைய சிலைகளில் காணலாம்.
பரத நாட்டியத்தில் 200-க்கும் மேற்பட்ட முத்திரைகளும், மோகினி ஆட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட முத்திரைகளும் கையாளப்படுகிறது. தாந்தீரிகத்தில் 108 முத்திரைகள் உள்ளன. அன்றாட நம் உடல் ஆரோக்கியத்திற்கு கீழ்க்கண்ட 10 முத்திரைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
நமது கைகளின் ஐந்து விரல்கள் ஐம்பூதங்களை குறிக்கின்றன..
1. கட்டைவிரல் – தீ
2. ஆள்காட்டி விரல் – காற்று
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – நிலம்
5. சுண்டுவிரல் – நீர்
இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.

1. அறிவு முத்திரை:
ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் எண்டாக்ரின் சுரப்பிகளுக்கு ஆதாரம். ஆள்காட்டி விரல் நுனியால் அழுத்தம் கொடுக்கும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும். இந்த முத்திரையை நின்ற நிலை, உட்கார்ந்த நிலை, படுத்த நிலையிலும் செய்யலாம். அறிவை கூர்மையாக்கி நினைவாற்றலை அதிகரிக்கும். தூக்கமின்மையை போக்கும். கோபம் குறையும்.

2. வாயு முத்திரை:
ஆள்காட்டி விரலை கட்டை விரல் அடியில் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்தால் வாயுவால் ஏற்படும் தொந்தரவை 24 மணி நேரத்தில் நிவர்த்தி செய்யும். தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வந்தால் வாயுப்பிடிப்பு, கீழ் வாதம், பாரிச வாயு போன்ற வியாதிகளை கட்டுப்படுத்தும். வயிறு சம்பந்தப்பட்ட வாயு உபாதைகளும் நீங்கும்.

3. சூன்ய முத்திரை:
நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வை இது நிவர்த்தி செய்யும். தினமும் 40 முதல் 60 நிமிடங்கள் செய்ய வேண்டும். காது தொடர்புடைய நோய்களை இந்த முத்திரை கட்டுப்படுத்தும்.

4. பூமி முத்திரை:
மோதிர விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். சோர்வை இது குறைக்கும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். சோர்வான எடை குறைந்தவர்களுக்கு உடல் எடை கூடும். மேனி அழகை கூட்டி பளபளப்பாக்கும். உடலை சுறுசுறுப்பாக்கி ஆரோக்கியத்தை நிலைப்படுத்தும்.
நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும் – மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வின்மையை இது நிவர்த்தி செய்யும். தினமும் இப்படி 40 முதல் 60 நிமிடங்கள் செய்து வந்தால் நோய் குணமாகும். காது வலியை 4 அல்லது 5 நிமிடத்தில் குணமாக்கும். காது கேளாதோர் மற்றும் மூளை பாதிக்கப்பட்டோர்க்கு இந்த முத்திரை உதவும். பிறவி நோயாக இருந்தால் பயன் தராது.

5. வாழ்வு முத்திரை:
சின்ன விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். பெயருக்கு ஏற்றார்போல் வாழ்வின் சிறப்பிற்கு வகை செய்யும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் குறைபாடு நீங்கும். சோர்வு நீங்கும். கண்பார்வை சிறப்பாகும்.

6. ஜீரண முத்திரை:
நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனியின் மூலம் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் பயிற்சி தரவும். சர்க்கரை வியாதி, மலச்சிக்கல் போன்றவற்றை சீராக்கும்.

7. இதய முத்திரை:
நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனிகள் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். ஆள் காட்டி விரல் நுனி கட்டைவிரலின் அடியை தொட வேண்டும். சின்ன விரல் மட்டும் நேராக இருக்க வேண்டும். இது இதய நலத்துக்கு சிறந்தது. இதய நோய் உள்ளவர்கள் தினமும் இருமுறை தலா 15 நிமிடம் செய்தால் பலன் தெரியும்.
8. சூரிய முத்திரை:
மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். தைராய்டு சுரப்பியை தூண்டும் சக்தி இந்த முத்திரைக்கு உண்டு. தினமும் இரு முறை 5 முதல் 15 நிமிடங்கள் பயிற்சி தரலாம். கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். நிம்மதியின்மை, ஜீரணமின்மை போன்ற குறைபாட்டை களைய வகை செய்யும்.

9. நீர் முத்திரை:
சின்ன விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். இது உடலில் உள்ள நீரை கட்டுப்பாட்டில் வைத்து நீர் குறைவால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும். இதனை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஜீரண கோளாறு மற்றும் சதை பிடிப்புகள் வராது.

10. லிங்க சக்தி முத்திரை:
இரு கைகளையும் சேர்த்து விரல்கள் ஒன்றுக்கொன்று பின்னி இருப்பது போல் சேர்த்து கொள்ளவும். இப்படி செய்யும்போது இடது கை கட்டை விரல் நேராகவும் வலது கை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் நடுவில் இருக்குமாறும் வைத்துக் கொள்ளவும். இது உடலில் உஷ்ணத்தை தரும். எனவே இதை பயிற்சி செய்யும்போது நெய், அதிக நீர் மற்றும் பழ ரசம் பருகவும். இதை அதிக நேரம் செய்யக் கூடாது. ஏனெனில் இந்த முத்திரை குளிர் காலத்தில் செய்தால் கூட வியர்வை வரும். கபம் மற்றும் சளி போன்ற சுவாச சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்த வல்லது.

இந்த முத்திரைகளை செய்து உங்களில் மாற்றம் ஏற்படுகிறதா என்று பாருங்களேன்!

விடுகதைக‌ள் எ‌ன்பது வெறு‌ம் ‌விளையா‌ட்ட‌ல்ல... நமது ‌சி‌ந்தனைகளு‌க்கு ஒரு ப‌யி‌ற்‌சியு‌ம் ஆகு‌ம்.



விடுகதைக‌ள் எ‌ன்பது வெறு‌ம் ‌விளையா‌ட்ட‌ல்ல... நமது ‌சி‌ந்தனைகளு‌க்கு ஒரு ப‌யி‌ற்‌சியு‌ம் ஆகு‌ம்.

1. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?

2. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?

3. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?

4. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?

5. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?

விடைகள்:

1. சைக்கிள், 2. பட்டாசு, 3. தராசு, 4. எறும்புக் கூட்டம், 5. அஞ்சல் பெட்டி.

------------------------------------------------------------------

கீழே கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரி‌ந்தா‌ல் கூ‌றி‌விடு‌ங்க‌ள். இ‌ல்லையெ‌ன்றா‌ல் அடு‌த்த ப‌க்க‌த்‌தி‌ற்கு‌ப் போ‌ய் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌‌ங்க‌ள்.

1. அடி மலர்ந்து நுனி மலராத பூ எது?

2. காகிதத்தைக் கண்டால் கண்ணீர் விடும் அது என்ன?

3. காக்கைப் போலக் கருப்பானது, கையால் தொட்டால் ஊதா நிறம், வாயால் மென்றால் நீல நிறம் அது என்ன?

4. தாடிக்காரன், மீசைக்காரன். கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன் அது என்ன?

5. சிவப்புப் பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது அது என்ன?

6. காற்றிலே பறக்கும் கண்ணாடி குண்டு, தொட்டுவிட்டால் பார்க்க முடியாது அது என்ன?

7. ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?

8. ஒற்றைக் காலில் ஒய்யாரமாய் ஆடுவான். ஓய்ந்து விட்டால் படுத்துவிடுவான் அவன் யார்?

9. பச்சை வீட்டுக்கு சிவப்பு வாசல் அது என்ன?

10. நடைக்கு உதாரணம் சொல்வார்கள். ஆனால் குறுக்கே நடந்தால் சிலருக்கு பிடிக்காது. அது என்ன?



விடைக‌ள்

1. வாழைப்பூ

2. பேனா

3. நாவல் பழம்

4. தேங்காய்

5. காய்ந்த மிளகாய்

6. நீர்க்குமிழி

7. விரல்கள்

8. பம்பரம்

9. கிளி

10. பூனை

--------------------------------------------------------------------------------------------

விடுகதைக‌ள் படி‌த்து ரொ‌ம்ப நா‌ட்க‌ள் ஆ‌கி‌வி‌ட்டதா? இதோ வ‌ந்து‌வி‌ட்டது உ‌ங்களு‌க்கான ‌விடுகதைக‌ள். படி‌த்து‌வி‌ட்டு ‌விடைகளை‌த் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌‌ங்க‌ள்.

1. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?

2. தலை மட்டும் கொண்‌ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?

3. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?

4. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?

5. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்.

6. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்?

1. தீக்குச்சி

2. தபால் தலை

3. கடல் அலை

4. சாமரம்

5. வெங்காயம்

6. செல்பேசி

-------------------------------------------------------------------------------------------

1) உச்சியிலே கிரீடம், உடம்பெல்லாம் கண்
–அது என்ன?
-

2) எப்போதும் கிடைக்காத மதி, எல்லோரும்
விரும்பும் மதி – அது என்ன?
-

3) இரவெல்லாம் பூக்காடு, பகலெல்லாம் வெறுங்காடு
- அது என்ன?
-
4) உச்சிக் குடுமிக்காரன், கொள்ளிவச்சா வெடிப்பான்
-அது என்ன?
-

5) பெட்டியைத் திறந்தால் கிருஷ்ணன் பிறப்பான்
-அது என்ன?



விடைகள்:
-
1) அண்ணாசிப்பழம்
2) நிம்மதி
3) வானம்
4) பட்டாசு
5) வேர்க்கடலை

-------------------------------------------------------------------------------------------



1) பார்த்தால் பசப்புக்காரி, சுவைத்தால் கசப்புக்காரி
- அது என்ன?
-
2) குறுக்குச் சிவந்திருப்பாள், செவ்விதழை ஒத்திருப்பாள்,
வால் முளைத்திருப்பாள், வந்திடுவாள் சந்தைக்கு
- அவள் யார்?
-
3) மலரைத் தழுவுவது , மாதர் மனதைத் தொடுவது,
தெற்கில் வருவது தீண்ட முடியாதது – அது என்ன?
-
4) பச்சைக்கிளையில் மஞ்சள் குருவி – அது என்ன?
-
5) பூமியில் சிறந்தது, புனிதர்களை போற்றும் பூ – அது என்ன?
-
==============================================
விடைகள்:

-
1) பாகற்காய்
2) மிளகாய்ப்பழம்
3) தென்றல் காற்று
4) எலுமிச்சம்பழம்
5) அன்பு

--------------------------------------------------------------------------------------------

1) அண்ணன், தம்பி ஐவர், ஆனால் ஒவ்வொருவரும்
ஒரு உயரம் – அவை என்ன?
-
2) காய் அவள், பழுப்பாள் என்று பார்த்தால்,
வெடித்தாள்.- அது என்ன?
-
3) உயிர் உள்ளவரை, இரவும்,பகலும் இவள் விழிதிருப்பாள்
அது என்ன?
-
4) பச்சை நிறத்தழகி
பவளவாய்ச் சொல்லழகி
வீட்டிலும் இருப்பாள்
காட்டிலும் இருப்பாள் – அது என்ன?
-

5) கோபத்திற்கு வாயைக் காட்டுவான்
நன்றிக்கு வாலைக் காட்டுவான் -அது என்ன?
-
===================================
விடைகள்:
1) கை, கால் விரல்கள்
2) இலவம்பஞ்சு
3 இதயம்
4) கிளி
5) நாய்

--------------------------------------------------------------------------------------------



1) காலம் காட்ட இந்தக் கரிசன ஓட்டம் – அது என்ன?
-
2) குரல் இனிப்பு. அவளோ கருப்பு – அது என்ன?
-
3) பச்சைப் பசேல் என்றிருக்கும். வாய் வைத்தால் கசக்கும்.
குழம்பு வைத்தால் ருசிக்கும் – அது என்ன?
-
4) கண்ணைக் குத்தி தின்றேன். பசியும் மாறிப்போச்சு -
அது என்ன?
-
5) விரும்பி வாங்குபவர்கள் குறுக்கே வந்தால் சகுனம்
சரியில்லை என்பார்கள் – அது என்ன?
-
=====================================================
விடைகள்:
1) கடிகாரம்
2) குயில்
3) பாகற்காய்
4) நுங்கு
5) பூனை

---------------------------------------------------------------------------------------------

1) பச்சை குடை அழகி, சமையலுக்கு வேண்டியவள்,
சற்றே ஆ என்று அலற வைப்பாள் – அது என்ன?
-
2) அன்று மலரும் பூ, அனைவரையும் கவரும் பூ,
கையில் எடுக்க முடியாத பூ. அது என்ன?
-
3) அழகான பூ, அருகில் ஆபத்து – அது என்ன?
-
4) அணையா விளக்கு. ஆனால் பகலிலும் எரி விளக்கு.
-அது என்ன?
-
5) தாளத்தோடு ராகத்தோடு கரை வழிப்பயணம் -
அது என்ன?

-
================================
விடைகள்:
-
1) பச்சை மிளகாய்

2) கோலம்

3) ரோஜா முள்

4) நிலா

5) கடல் அலை

---------------------------------------------------------------------------------------------


1) குதி குதியெனக் குதிக்கிறான், கெட்டைப்
பல்லால் சிரிக்கிறான் – அது என்ன?
-
2) குழந்தைக்கு எந்தக் கை பலமான கை?
-
3) குட்டியும் போடும், குவலயத்திலும் பறக்கும் –
அது என்ன?
-
4) குட்டைப் பெண்ணுக்கு எட்டு முழச்சேலை –
அது என்ன?
-
5) குடுக்கை நிறைய வைரமணி – அது என்ன?
-
விடைகள்:
————–
1) சோளப்பொறி
2) அழுகை
3) வௌவால்
4) நீர் இறைக்கும் வாளி
5) மாதுளம் பழம்





1) குண்டு முழி ராசாவிற்கு குடலெல்லாம் பல். அது என்ன?
-
2) ஊசி நுழையாத கிணற்றில் ஒரு ஆழாக்கு தண்ணீர் – அது என்ன?
-
3) உயரப்பறக்கும். ஊன்றுகோலில் நிற்கும். அது என்ன?
-
4) நடைக்கு உவமை, நளனின் தூதுவன். அது என்ன?
-
5) மூடிய அரங்குக்குள் முத்துச்சிப்பிகள் – அது என்ன?
-
6) திரவமாகப் பிறந்தான். புகையாய் மறைந்தான். அது என்ன?
-
7) இருட்டு வீட்டில் முரட்டுச் சிப்பாய் – அது என்ன?
-
8) பகலில் துயிலுவான், இரவில் அலறுவான் – அது என்ன?
-
9) பாடத் தெரிந்தவனுக்கு ஆடத் தெரியாது. ஆடத்தெரிந்தவனுக்குப்
பாடத் தெரியாது. – அது என்ன?
-
10) பதுக்கி வைத்த முத்துக்கள் எங்கே, பவள வாய் திறந்து
பார்ப்போமா? – அது என்ன?
-
==============================

விடைகள்:

1) மாதுளம்பழம்
2) இளநீர்
3) கொடி
4) அன்னம்
5) வாய், பற்கள்
6) பெட்ரோல்
7) பூட்டு
8) ஆந்தை
9) மயில், குயில்
10) பற்கள்


--------------------------------------------------------------------------------------------



1)  அடித்தால் வலிக்கும், குழம்புக்கு ருசியாக இருக்கும் – அது என்ன?

2) தலைக்கு கவசம் வைத்திருப்பான், உரசினால் கூட திவசம்தான் -
அவன் யார்?
-
3) ஒலி கொடுத்து அழைத்து, உடனடி தகவல் தரும் – அது என்ன?
-
4) ஊசி முனையில் ஒய்யார சங்கீதம் – அது என்ன?
-
5) அவன் நகராதவன், ஆனாலும் அவன் வாய்க்குள் போட்டவை நகரும்-
அது என்ன?
-
===============================================
விடைகள்:

1) முருங்கைக்காய்
2) தீக்ககுச்சி
3) டெலிபோன்
4) இசைத்தட்டு
5) தபால்பெட்டி

--------------------------------------------------------------------------------------------

1) உடலோ வெள்ளை நிறம்,. உள்ளமோ தங்க நிறம் – அது என்ன?
-
3) சிவப்பு தொட்டியில் மலரும் பூ, சிடு சிடுத்தால் மறையும் பூ – அது என்ன?
-
3) என் உடம்பெல்லாம் முள். ஆனால் உள்ளமோ தேன் சுவை – நான் யார்?
-
4) மீன் பிடிக்க தெரியாது. ஆனால் வலை பின்னுவான் – அவன் யார்?
-
5) சுற்றிக் கொண்டேயிருப்பேன். ஆனால் எனக்கு தலை வலிக்காது – நான் யார்?
-
6) இரவு ராணி அவள். தினமும் விழித்திருப்பாள்.
மாதம் ஒரு முறை உறங்கிடுவாள் – அவள் யார்?
-
7) சட்டை மேல் சட்டையாய், பல சட்டை போட்டவன். சட்டைகளை
கழற்றிப் பபார்த்தால், உடம்பை மட்டும் காணோம் – அவன் யார்?
-
8) வீட்டிற்குள் இருப்பான். உலகத்தை காட்டுவான் – அவன் யார்?
-
9) சூரிய ஒளியில் உணவை சமைப்பேன். சுற்றுச் சூழலைப் பேணிக்காப்பேன் -
நான் யார்?
-
10) பல் துலக்க மாட்டான். ஆனால் இவன் பல் எப்பொழும் வெள்ளை
- இவன் யார்?



விடைகள்:
1) முட்டை
2) சிரிப்பு
3) பலாப்பழம்
4) சிலந்தி
5) காற்றாடி
6) நிலா
7) வெங்காயம்
8) கணினி, தொலைக்காட்சி
9) மரம்
10) வெள்ளைப் பூண்டு



1. சுற்றும்போது மட்டும் சுகம் தருவாள். அது என்ன?



2. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. அது என்ன?

3. கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன், பள்ளநீரைக் கண்டு பதைபதைக்கிறான். அது என்ன?

4. கலர்ப்பூ கொண்டைக்காரி, காலையில் எழுப்பிவிடுவாள். அது என்ன?

5. கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன?

6. கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ எது?

7. கறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளைக் காகம் நிற்குது. அது என்ன?

8. காலாறும் கப்பற்கால் கண்ணிரண்டும் கீரை விதை. அது என்ன?

9. மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது. அது என்ன?

10. உருவத்தில் சிறியவன். உழைப்பில் பெரியவன். அவன் யார்?



விடுகதைகள் விடைகள்

1. மின்விசிறி

2. தொலைபேசி

3. நெருப்பு

4. சேவல்

5. சோளக்கதிர்

6. உப்பு

7. உளுந்து

8. ஈ

9. ஈசல்

10. எறும்பு



--------------------------------------------------------------------------------------

1. என்னைப் பார்க்க முடியும், ஆனால் எனக்கு எடை கிடையாது. என்னை ஒரு பாத்திரத்தில் போட்டால் அதன் அளவை குறைத்திடுவேன். நான் யார்?

2. நான்தான் சகலமும். என்னைப் பார்க்க முடியாது, பிடிக்கவும் முடியாது. எனக்கு வாயில்லை, ஆனால் நான் ஓசை எழுப்புவேன். நான் யார்?

3. என்னுடைய நிறம் கருப்பு. மிகுந்த தேடலுக்குப் பின் நான் கிடைப்பேன். என்னை கண்டறிந்த பிறகு என்னுடைய கவசத்திடமிருந்து பிரித்தெடுப்பார்கள். நான் யார்?

4. நான் மயிலிறகைவிட மென்மையானவன். ஆனால் மனிதர்கள் அதிக நேரம் என்னை பிடித்து வைக்க முடியாது. நான் யார்?

5. எனக்கு உயிரில்லை. ஆனால் நான் வளர்வேன். எனக்கு நுரையீரல் கிடையாது. ஆனால் எனக்கு காற்று மிகவும் அவசியம். எனக்கு வாயில்லை ஆனால் பல கைகள் உண்டு. நான் யார்?

6. இருட்டறைக்குள் என்னை அழைத்துச் சென்று என்மேல் தீயை வைப்பார்கள். நான் அழுவேன். பிறகு என்னுடைய தலை துண்டிக்கப்படும். நான் யார்?

7. ஒரே இடத்தில் இருப்பேன். எனக்குத் தொண்டை கிடையாது. ஆனால் நான் ஓசை எழுப்புவேன். நான் யார்?

8. நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது. நான் யார்?

9. பேசாத வரை நான் இருப்பேன். பேசினால் நான் உடைந்துவிடுவேன். நான் யார்?

10. இது பேசினால் கேட்கமுடியும். ஏனென்றால், இதற்குப் பெரிய வாயுள்ளது. ஆனால் இதனால் சுவாசிக்க முடியாது. அது என்ன?

விடைகள்:
1. துவாரம்
2. காற்று
3. நிலக்கரி
4. சுவாசம்
5. தீ
6. மெழுகுவர்த்தி
7. நீர்வீழ்ச்சி
8. தென்றல்
9. அமைதி
10. கோவில் மணி

செவ்வாய், 19 டிசம்பர், 2017

மாதவிடாய் நிற்றல் (மெனோபாஸ்) ஒவ்வொரு பெண்ணும் அறிந்திருக்க வேண்டிய பருவ உடல் மாற்றம்



மாதவிடாய் நிற்றல் (மெனோபாஸ்) ஒவ்வொரு பெண்ணும் அறிந்திருக்க வேண்டிய பருவ உடல் மாற்றம்

#மெனோபாஸ் எம்பது மாதவிடாய் நிறுத்தம் என பொருள்படும், பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும், வயதுக்கு வரும்போதும் (பூப்பெய்துதல்), திருமணத்தின் போதும், பிரசவதின் போதும் உடல் உள், வெளி உறுப்புகளில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது போன்ற ஒரு பருவ உடல் மாற்றம் மெனோபாஸ் பருவ காலத்திலும் நிகழ்கின்றது. மெனோபாஸ் ஏற்படும் போது அவர்கள் பல உடல் மற்றும் மன ரீதியான உபாதைகளுக்கு உள்ளாகின்றார்கள்.

#வயதிற்கு வரும் ஒரு பெண்ணில் (பூப்பெய்தும் போது) இனப்பெருக்க உறுப்புகள் விருத்தியடைவதோடு, அதற்கான ஹார்மோன் சுரப்புகளும் உற்பத்தியாகின்றன, ஆனால் மெனோபாஸ் நிகழும் போது இனப்பெருக்க உறுப்புகள் செயலிழக்கப்படுவதோடு அதனோடு தொடர்புடைய ஹார்மோன் சுரப்புகளும் நிறுத்தப்படுகின்றன.

ஒரு பெண் வயதிற்கு வரும்போது மாதவிடாய் ஆரம்பிக்கின்றது. மெனோபாஸின்போது மாதாவிடாய் நிறுத்தம் ஆகின்றது. பூப்பெய்திய காலம் முதல் மெனோபாஸ் ஆகும் வரையும் உள்ள காலமே பெண்களின் பொற்காலம் என்றும் கூறலாம்.

எனவே மெனோபாஸ் என்பது பூப்பெய்தல் போன்ற ஆனால், எதிர்மாறான ஒரு பருவ மாற்றம் மட்டும்தான். இதை எதிர் கொள்ள பயப்பட வேண்டியதில்லை. இது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் கட்டாயம் ஏற்படக் கூடியது. இந்தச் சமயங்களில் எதிலெதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.


பெண்களின் மெனோபாஸ் நாட்கள்

நம்மில் பல பெண்களுக்கு, ‘மெனோபாஸ்’ என்றால் ‘மாதவிடாய் நின்றுவிடும்’ என்றுதான் மேலோட்டமாகத் தெரியுமே தவிர, அந்த வயதில் தங்களுடைய உடலில் என்னென்ன மாறுதல்கள் நடக்கிறது? ஏன் மாதவிடாய் நிற்கிறது? அதனால் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்ற விபரங்கள் பெரும்பாலும் தெரிவதில்லை.

அதே போல ‘மெனோபாஸ்’ என்றாலே, வியாதிகள் வரும் நேரம் என்றும் சிலர் பயந்து போவதுண்டு. இந்த பயங்களும் தேவையில்லை.

#மெனோபாஸ் #என்றால் #என்ன?

நாற்பத்தைந்து வயதுக்கு மேல், பெண்ணின் ஓவரியின் (சூலகத்தின்) செயல்பாடு குறைந்து, பீரியட்ஸ் முறையற்றதாகி, கடைசியாக சுமார் ஐம்பது வயதில் பீரியட்ஸ் சுத்தமாக நின்று விடுவதற்குப் பெயர்தான் மெனோபாஸ். அதாவது மாதவிடாய் நின்று விடும் நிலைக்குப் பெயர்தான் மெனோபாஸ்!

மெனோபாஸ் ஏற்பட்டதற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியுமா?

மெனோபாஸிற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியாது. ஏனென்றால் கருத்தரிக்கத் தேவையான கரு முட்டையின் உற்பத்தி குன்றிவிடும்.

#எந்த #வயதில் #மெனோபாஸ் #வரலாம்?

சாதாரணமாக ஐம்பது வயதைக் கடந்தாலே மெனோபாஸ் வந்துவிடும். சிலருக்கு முப்பத்தைந்து வயதுக்கு முன்னாலும் கூட மெனோபாஸ் வரலாம். அதற்கு ப்ரீமெச்சூர் மெனோபாஸ் (Premature Menopause) என்று பெயர்.


என்னென்ன காரணங்களால் ப்ரீமெச்சூர் மெனோபாஸ் வருகிறது?

ஓவரியில் (சூலகத்தின்) ஏதேனும் கட்டி இருந்து, ஓவரியை அறுவை சிகிச்சையில் எடுத்திருந்தாலோ, கீமோ தெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சை எடுத்தாலோ, இல்லையென்றால் வைரஸ் இன்பெக்க்ஷனாலோ, ப்ரீமெச்சூர் மெனோபாஸ் வரலாம்.

ஒரு பெண் மெனோபாஸ் நிலையை நோக்கிப் போகும்போது அவளுக்கு என்னென்ன அசௌகர்யங்கள் ஏற்படும்?
1. அதிக வியர்வை (ஹாட் ஃப்ளஷ்):

ஏ.ஸி.யில் இருக்கும்போதும் நடுத்தர வயதுப் பெண்களுக்கு வேர்த்துக் கொட்டும். இதை ஹாட் ஃப்ளஷ் என்போம்! மெனோபாஸ் அவர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதன் அறிகுறியே இந்த வியர்வை.
இது எல்லாம்... நம் பாட்டி காலத்திலேயே நாற்பதைக் கடந்த பெண்களுக்கும் கூட இப்படித்தான் வியர்த்துக் கொட்டியிருக்கும் இதில் சங்கடப்பட என்ன இருக்கிறது என்கிறீர்களா!

பாட்டி காலத்தில், பெண்கள் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, காற்றோட்டமாகத் திண்ணையில் அமர்வார்கள். அவர்களுக்கு, இது ஒரு பெரிய விஷயமாக இருக்காது! ஆனால் நாற்பதைக் கடந்த இன்றைய பல பெண்கள், அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வியர்த்துக் கொட்டினால் அத்தனை நன்றாக இருக்காது. அதனால் இது போன்ற அசௌகர்யங்களே, மனதளவில் அவர்களுக்குப் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. அதனால் அதிக வியர்வையால் பாதிக்கப்படும் பெண்கள் மருத்துவரை அணுகி சிகிச்சைகூட எடுத்துக் கொள்ளலாம்.

2. இரவு நேர படபடப்பு (நைட் ஸ்வெட்ஸ்):

இரவில் திடீரென வியர்த்துக் கொட்டும். மிகவும் படபடப்போடு காணப் படுவார்கள். இதனால் அமைதியான தூக்கம் போய், ஒரு வித சோர்வுக்கு ஆளாவார்கள்.

3. அடிக்கடி மாறும் மன நிலை (மூட் ஸ்விங்ஸ்):

அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை, விரக்தி என்று எல்லா உணர்ச்சிகளும் மாறி மாறி வரும்.

4. வெஜைனா (பெண் உறுப்பு) உலர்ந்து போதல்:
ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் குறைவால், வெஜைனாவின் பாதையை வழுவழுப்பாக வைத்திருக்கும் சுரப்புகள் குறைய ஆரம்பிக்கும். அதனால் (பெண் உறுப்பு) உலர்ந்து போய், தாம்பத்திய உறவின் போது அசௌகர்யமும், வலியும் உண்டாகலாம். தவிர, வெஜைனா பாதையில் வழுவழுப்பு ஏற்படுத்தும் இந்த திரவம்தான், அந்தப் பகுதியின் மென்மையான திசுக்களில், இன்பெக்க்ஷன் ஏற்படாமல் தடுக்கிறது. ஈஸ்ட்ரஜன் குறைவால் இந்த சுரப்பும் குறையும் போது அங்கே இன்பெக்க்ஷன் ஏற்பட ஏதுவாகிறது.


மெனோபாஸிற்குப் பிறகு வரும் நீண்ட கால விளைவுகள் என்னென்ன?

பல பெண்களுக்கு எலும்புகள் தேய்ந்து போகலாம்.. இதற்கு, ‘போஸ்ட் மெனோபாசுவல் ஆஸ்டியோ போரோஸிஸ்’ என்று பெயர்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? மெனோபாஸிற்குப் பிறகு, பெண்களின் எலும்புகள் தேய்மானமடைந்து விடுவதால், லேசாக அவர்கள் தடுக்கி விழுந்தாலோ அல்லது குண்டுங் குழியுமான இடங்களில் ஆட்டோவில் சென்றாலோ கூட, எலும்புகள் உடைந்து எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் இருக்கிறது.

அதனால் எலும்புத் தேய்மானத்திற்கு அவர்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டால், இத்தகைய பிரச்னைகளைத் தவிர்க்கலாம். (எலும்புகள் தேய்மானம் அடைவதற்கு முன்பே, மருத்துவரின் ஆலோசனைப்படி கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் எடுத்துக்கொண்டால், இந்தப் பிரச்னைகளைத் தவிர்த்து விட முடியும்!...)

பெண்களின் பிரத்யேக ஹார்மோனான ஈஸ்ட்ரஜன், இருதய பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க ஒரு பாதுகாப்புக் கவசம் போல் செயல்பட்டு வந்தது. மெனோபாசுக்குப் பிறகு ஈஸ்ட்ரஜன் சுரப்பு நின்று விடுவதால், இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மெனோபாஸ்சினால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் ஏற்படலாம். உடலில் கவனம் கொள்ள வேண்டும்!


#மெனோபாஸ் – மாதவிடாய் மறையும் காலம்

பெண்களுக்கு பொதுவாக 45 லிருந்து 55 வயதுக்குள் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் முட்டை உற்பத்தி குறைந்து மாதவிடாய் வருவது நின்று விடுகிறது. இதனையே மெனோபாஸ் எனவும் இறுதி மாதவிடாய் நிறுத்தம் எனவும் கூறுகின்றோம்.

இது பெரும்பாலான பெண்களுக்கு இயல்பாக தெரியாமலேயே எந்த தொந்தரவும் இல்லாமல் ஏற்படுகின்றது. மாதவிடாய் நிரந்தரமாக நின்ற பிறகு பெண்களுக்கு குழந்தை இனி பிறக்காது.

மாதவிடாய் நிரந்தரமாக நிற்பதை பல பெண்மணிகள் அதுவும் வேலைக்கு செல்பவர்கள் விரும்பி வரவேற்பார்கள். இந்தநிலையால் மாதாந்திர விலக்கு தொல்லை மற்றும் எதிர்பாராமல் கர்ப்பம் ஏற்படும் பயத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது. சில பெண்களுக்கு நமக்கு வயதாகி விட்டதே என்ற உணர்வும் வரலாம்.



#மெனோபாஸ் #தரும் #தொல்லைகள்

• திடீரென சூடாக உணர்வது

• திடீரென இரவில் வியர்ப்பது

• யோனி உலர்ந்து காணப்படுவது

• தேவையற்ற ரோமங்கள் வளர்வது (குறிப்பாக முகத்தில்)

• சருமம் உலர்ந்து காணப்படுவது

• பின்னர் எலும்புகள் வலுவிழந்து எளிதாக உடையும் தன்மையை அடைவது

• இரத்த நாளங்கள் குறுகி விடுவது.

இத்தகைய பாதிப்புகள் வராமல் தவிர்ப்பதற்கும் வந்த பிரச்சனைகள் குறைவாக ஆகுவதற்கும் அதிக பால் அருந்துவது மிக மிக அவசியம் பாலில் அதிக கால்ஷியம் மற்றும் வைட்டமின் ஏ சத்து உள்ளதால் மாதவிடாய் இறுதியாக நிற்கும் சமையத்தில் ஏற்படக்கூடிய கால்ஷியம் இழப்பை "பால்" ஈடு செய்கின்றது.

உடற்பயிற்சி மேற்கொள்வது நிலைமை மேலும் மோசமடைவதை தவிர்க்கும். மெல்லோட்டம், நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் பயிற்சி, போன்றவை நல்ல பலன் தரும்.

சராசரி வயது 52. சாதாரணமாக 45 வயதிலிருந்த 55 வயதுக்குள் மெனோபாஸ் ஏற்படுகிறது. இதற்கு முன்பாகவே மாதவிடாய் நின்றுவிடலாம். ஒரு பெண்ணிற்கு 40 வயதுக்கு முன்பே மாதவிடாய் நின்றுவிட்டால் கதிரியக்கம், புற்றுநோய் மருந்துகளின் பக்கவிளைவுகளால், புகைபிடித்தல், சினைப்பைக்கு ரத்தஒட்டம் சில அறுவை சிகிச்சைகளால் குறைந்துவிடுவது போன்றவை காரணங்கள் ஆகும்.

ஒவரிகளும், கருப்பப்பையும் அறுவை சிகிச்சையால் நீக்கப்பட்டிருந்தாலும் மாதவிடாய் நின்றுவிடும்.


#மாதவிடாய் #நிரந்தரமாக #நிற்கபோகும் #அறிகுறிகள்

பெண் ஹார்மோன்கள் உற்பத்தி குறைய, குறைய மாதவிடாய் சுழற்சி ஏறுமாறாகும். இந்த மாற்றங்கள், கடைசி மாதவிலக்கு வருவதற்கு 3-5 வருடங்களுக்கு முன்பிருந்தே, தோன்ற ஆரம்பிக்கும். இந்த காலகட்டத்தில் பல அறிகுறிகள் தோன்றும். இந்த மாறுதல்கள் பெண்ணிற்கு பெண் வித்யாசப்படும்.

பல பெண்களுக்கு எந்த மாற்றமும் தோன்றுவதில்லை. சில பெண்களுக்கு குறைவான மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஏனைய பெண்களுக்கு இந்த மாற்றங்கள் தீவிரமாக இருக்கும். இதனால் மெனோபாஸ் பற்றிய அறியாமையால் பெண்களுக்கு பயமும் பீதியும் உண்டாகி பலதொல்லைகளை சந்திக்க நேரிடும். எனவே, இதைப்பற்றி அறிந்துக் கொண்டு, தவிர்க்க முடியாத இந்த இயற்கையின் நியதியுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

#அறிகுறிகள்.

மெனோபாஸ் நெருங்க நெருங்க உங்கள் மாதவிடாய் சுழற்சி ஒரே ரீதியாக இல்லாமல் மாறுபடும். வழக்கத்தைவிட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உதிரபோக்கு உண்டாகலாம்.

• இரண்டு மாதவிலக்கின் நடுவில் உள்ள நாட்கள் குறையலாம், அல்லது கூடலாம்.

• இல்லாவிட்டால் வழக்கமான முறையான மாதவிடாய் சுழற்சி தொடர்ந்து, திடீரென்று எவ்வித அறிகுறியுமின்றி நின்று விடலாம்.

• வழக்கத்துக்கு மாறாக அதிக உதிரப்போக்கு ஏற்பட்டால் மருத்துவரை நாடவும்.


#உடல்ரீதியான #மாற்றங்கள்

1. இரவில் வியர்த்தல்
இரவில் அதிக வியர்வை ஏற்பட்டு உங்கள் தூக்கம் தடைப்படும்.
நடுஇரவில் நீங்கள் எழுந்து உடைகளை மாற்றவோ இல்லை ‘ஷவரில்’ குளிக்கவோ நேரிடும். இதனால் உங்கள் தூக்கமும் உங்கள் துணைவரின் தூக்கமும் கெடும். தளர்வான பருத்தி ஆடைகளை உபயோகியுங்கள்.

2. யோனி உலர்தல்
யோனியின் ‘சுவர்கள்’ தங்கள் மென்மையையும், ‘எலாஸ்டிக்’ தன்மையையும் இழந்துவிடும். நமைச்சல், சொறி ஏற்பட்டு, யோனியில் தொற்றுநோய் உண்டாகலாம். சாதாரணமாக உடல் உறவின்போது, யோனியை ஈரமாக வைக்க சுரக்கும் திரவம், இந்த மெனோபாஸ் சமயத்தில், சரிவர சுரக்காது. இதனால் யோனி காய்ந்துவிடும் உடல்உறவு மகிழ்ச்சியை விட அதிக வேதனையை உண்டாக்கும். எனவே, உடலுறவை தவிர்க்கவும்.

3. இதர உடல் பாதிப்புகள்

தலைவலி, உடல்வலி, களைப்பு, வயிற்று தொல்லைகள், மார்பகம் மென்மையடைதல், தூக்கமின்மை, எடைகூடுதல் இவையெல்லாம் உண்டாகும். தோல்கள் சுருக்கமடைந்து ‘கோடுகள்’ உண்டாகும். தலை முடி அதன் பளபளப்பை இழக்கும். முகத்தில் உள்ள முடிகள் முரடாகி அதிகரிக்க கூடும். தலைமுடி உதிர்ந்து குறைந்து விடலாம். ஆஸ்டியோ – போரேசிஸ் என்ற எலும்பு நோய் தோன்றலாம்.

மனோரீதியான பாதிப்புகள்
• உடல் தொல்லைகளால் எரிச்சலும் களைப்பும் ஏற்படும். அடிக்கடி எரிந்து விழுவீர்கள்.

• மறதி, அடிக்கடி மனநிலை மாறுவது, ஒரு விஷயத்தில் ஈடுபாடு இல்லாமல் போவது, இனந்தெரியாத பலஉணர்வுகள் காரணமில்லாமல் அழுகை இவையெல்லாம் ஏற்படும்.

• உங்கள் ‘டென்ஷனால்’ சிறிய பிரச்சனைகள் பூதாகாரமாக பெரிதாக தெரியும்.

#இதர #சிக்கல்கள்.

1. இதய சம்மந்த நோய்கள்

நல்ல கொலஸ்ட்ராலையும், தீய கொலஸ்ட்ராலையும் ஒருகட்டுப்பாட்டில் வைப்பது ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் ஆகும். இது நிரந்தரமாக மாதவிடாய் நின்று விடும் போது சுரப்பது குறைந்துவிடும். இதனால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த முடியாமல் போகும். தீய கொலஸ்ட்ரால் அதிகரித்து இதய நோய்கள் உண்டாகும்.

2. ஆஸ்டியோ போரோசிஸ்

இந்த எலும்பு மண்டல நோய் அதிகவயதினால் ஏற்படுவதை விட மெனோபாஸ் ஆல் அதிகம் ஏற்படுகிறது. இதற்கும் ஈஸ்ட்ரஜன் (Estrogen) தான் காரணம். இந்த ஹார்மோன் ‘கால்சியம்’ உடலில் படிவதற்கு உதவுகிறது. ஈஸ்ட்ரஜன் குறைந்தால் எலும்பிலிருந்த கால்ஷியம் குறையும். நாளடைவில் எலும்புகள் வலுவிழந்து எலும்புகள் அடிக்கடி முறிய நேரிடும். மெனோபாஸ் க்கு பிறகு வரும் முதல் அல்லது இரண்டாவது ஆண்டுகளில் அதிகமான எலும்பு இழப்பு நேருகிறது. ஆசிய பெண்கள் தான் அதிக அளவு ஆஸ்டியோ போரோசிஸ் நோய்க்கு உள்ளாகுகிறார்கள்.

3. நரம்பு சம்மந்த மறதிநோய்
இது நரம்புத்தளர்ச்சி நோய். இது தொடர்பான ஞாபகசக்தி குறைந்து முழு மறதியை உண்டாக்கிவிடும். இதனால் மனச்சோர்வும் வரும்.


#மருத்துவம்

பாதிப்பு அதிகமாக உடைய பெண்கள் அதிமதுரம் வேரை சுத்தம் செய்து பொடியாக்கி வைத்துக் கொண்டு தினசரி இரு வேளை (காலை, இரவு) ஒரு ஸ்பூன் அளவு சூடான பாலில் கலந்து பருகி வரலாம். அதிமதுரம் வேரில் பெண் இன ஹார்மோன் ‘ஈஸ்ட்ரோஜென்’ போன்ற பொருள்கள் காணப்படுவதால் அது இறுதியாக மாதவிடாய் நிற்கும் சமயம் ஏற்படக் கூடிய திடீர் ஹார்மோன் குறைபாடை சீர் செய்கின்றது.


நிரந்தர மாதவிடாய் நிற்கும் போது கவனிக்க வேண்டியவை

• சரிசம விகித உணவை உட்கொள்ளவும், பச்சை காய்கறிகள், கீரை, அவரைக்காய், உருளைக்கிழங்கு, ஆப்பிள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

• கால்சியம் செறிந்த தயிர், ஆடை இல்லாத பால், பால் பொருட்கள், பீட்ரூட், கேரட், முட்டை கோஸ் போன்ற உணவுகள் ஆஸ்டியோ போரோசிஸ் வராமல் பாதுகாக்கும்.

• மசாலா, வறுத்த பொருட்கள், வெங்காயம், பூண்டு, மிளகாய், தக்காளி, வினிகர் போன்ற உடலை சூடாக்கும் உணவுகளை தவிர்க்கவும்.

• உடற்பயிற்சி, தியானம், யோகா இவை உதவும், குறைந்த பட்சம் தினசரி நடக்கவும்.

• உடற்பயிற்சி யோகாசனங்களை உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொள்ளவும்.

• மெனோபாஸ் தவிர்க்க முடியாத இயற்கையின் நியதி. இந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு முக்கியமாகத் தேவைப்படுவது மனவலிமை மட்டுமே. நல்ல மருத்துவம், உணவு வகைகள் இவற்றால் நீங்கள் இந்த கால கட்டத்தில் ஏற்படும் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

திங்கள், 18 டிசம்பர், 2017

உங்க ஆடும் பல்லை வலுவாக்கனுமா? இந்த பழங்கால கைவைத்தியம் ட்ரை பண்ணிப் பாருங்க


உங்க ஆடும் பல்லை வலுவாக்கனுமா? இந்த பழங்கால கைவைத்தியம் ட்ரை பண்ணிப் பாருங்க!!

பற்கள் ஆடினா உடனே அவற்றை பிடுங்கத்தான் வேண்டுமா அல்லது அவை விழும் வரை காத்திருக்கனுமா? தேவையில்லை. உங்கள் ஈறுகளை வலுவாக்கினால் ஆடும் பல்லைக் கூட நிறுத்த முடியும். அனுபவப் பூர்வமாக சிலரருக்கு நடந்துள்ளதால் உங்களுக்காக இந்த குறிப்புகள் தரப்பட்டுள்ளன.

பல் ஆடுவதற்கு என்ன காரணம் ?

உங்கள் பல் ஆடுவதற்கு பலவீனமான ஈறு மற்றும் பற்கள் காரணம். மோசமான பராமரிப்பு மிக முக்கிய காரணம். பற்சொத்தை ஏற்படுவதாலும் பற்கள் ஆடத் தொடங்கும். . எனவே ஆடும் சமயத்தில் பற்கள் மற்றும் ஈறுகளின் மீது கவனம் செலுத்தினால் பற்கள் ஆடாமல் மேலும் வலுவாக்க முடியும். அப்படியான குறிப்புகளை பார்க்கலாம்.

தேவையானவை :

நல்லெண்ணெய் - கால் கப்
நெல்லிக்காய் பொடி - கால் கப்
மஞ்சள்- 1 ஸ்பூன்
பட்டைப் பொடி - கால் ஸ்பூன்
கிராம்புப் பொடி - அரை ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்.

மேற்சொன்ன பொடிகளை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இதுதான் மூலிகைப் பொடி. மஞ்சள், பட்டை, கிராம்பு, கல் உப்பு போன்றவற்றையும் ஒன்றாக கலந்து பொடி செய்து கொள்ளலாம். அல்லது நேரடியாக பொடியாகவும் வாங்கிக் கொள்ளலாம். நல்லெண்ணெய் லேசாக சூடுபடுத்திக் கொண்டு அதில் இந்த பொடிகளை கலக்க வேண்டும்.

1.இந்த எண்ணெயால் தினமும் காலையில் ஆயில் புல்லிங்க் செய்ய வேண்டும். இந்த எண்ணெய் எல்லா பற்களிலும் படும்படி 20 நிமிடங்கள் வாயிலேயே வைத்து இருக்க வேண்டும். பின்னர் உமிழ்ந்து விடுங்கள். இப்படி தினமும் ஆயில் புல்லிங்க் செய்வதால் உங்கள் ஈறு பலம்பெற்று நன்றாக வலுப்பெறும். ஆடிய பற்களும் நின்று போய் விடும்.

தினமும் இந்த மூலிகைப் பொடியால் பல் துலக்க வேண்டும். ஆடும் பல்லின் மீதும் , அதன் ஈறின் மீதும் இந்த பொடியை வைத்து மசாஜ் செய்யுங்கள். இப்படி காலை மற்றும் இரவு தூங்கும்போது செய்தால் ஆடும் பல் கெட்டிப்பட்டுவிடும்.

நெல்லிக்காய் ஈறுகளில் உள்ள நரம்புகளை பலப்படுத்துகிறது. உப்பு கிருமி நாசினி மற்றும் அங்கிருக்கும் தொற்றுக்கலை நீக்குகிறது. நல்லெண்ணெய் பற்களின் நடுவே ஊடுருவி ஈறுகளை பலப்படுத்தும். பட்டை கிராம்பு, பற்களை சிதைவிலிருந்து பாதுகாக்கும்.

இந்த மூலிகைப் பொடி சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும் இல்லையென்றாலும், மூலிகைப் பொடி நீங்களே வீட்டில் தயாரிக்கலாம்.

தேவையானவை:

படிகார உப்பு - 6 ஸ்பூன்
மிளகு -1ஸ்பூன்
சாம்பிராணி - 1 ஸ்பூன்
இந்துப்பு - 1 ஸ்பூன்
ஓமம் - அரை ஸ்பூன்
கிராம்பு - 2.5 ஸ்பூன்
வேப்பம்பட்டை - 10 ஸ்பூன்

மேற்கண்ட பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியை தினமும் பல் துலக்கப் பயன்படுத்தலாம். இவை பல்வலி, பல் கூச்சம், வாய் துர்நாற்றம், பல் நோய்கள், பல் ஆடும் பிரச்னை, பலவீனமான ஈறுகள் ஆகிய பிரச்னைகளைத் தீர்க்கும்.

தேவையானவை:

சுக்கு - 1 ஸ்பூன்
கடுக்காய் - 1 ஸ்பூன்
இந்துப்பு - 1 ஸ்பூன்.

இந்த நான்கையும் ஒன்றாகச் சேர்த்து இடித்து, பொடி செய்துகொள்ளவும். தேவைப்படும்போது இந்தப் பொடியால் பற்களைத் துலக்கவும். பல் ஈறுகளில் ரத்தம் கசிதல், பல் ஆடுவது, சொத்தையாவது போன்ற பிரச்னைகள் தீரும

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

பயனுள்ள மருத்துவ குறிப்புகள் 57.



பயனுள்ள மருத்துவ குறிப்புகள் 57.

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.

6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்... உடனே 'கையால் நீவிவிடு' என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்... நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா... நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா... என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து 'ரிலாக்ஸ்' செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.


பெண்களுக்காக...


10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.

கர்ப்பக் கால கவனிப்பு!
14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை 'மெலனின்' எனப்படும் நிறமிகளே!

15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.

16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல... உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.

20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.

26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.

27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.

28. தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில்
புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்... வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.

31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.



உணவே மருந்து!

32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்... ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது... உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.

42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு... இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.


மருந்தே வேண்டாம்!

49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்... கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.

50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.

51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.

52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும்தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனைத் தராது.

லப்... டப்..!

53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்... இதயத்தைப் பற்றி கவலையேபடத் தேவையில்லை.

55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.

57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.