வியாழன், 31 அக்டோபர், 2019

முப்பது வயதை கடந்த பெண்களுக்கு இந்த இடத்தில் கொழுப்பு இருந்தால் ஆபத்து

♥முப்பது வயதைக் கடந்த பெண்களுக்கு இந்த இடத்தில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு இருந்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

♥பெண்களுக்கு உடலில் கொழுப்பு எளிதில் சேர்ந்துவிடும். அதனால்தான் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் விரைவில் வயதிற்குப் பொருந்தாத உடல் பருமனை அடைந்து விடுவார்கள். இதற்கு உணவு மட்டுமல்ல. உடல் சார்ந்தும், மனம் சார்ந்து பல பிரச்னைகளை முன் வைக்கின்றனர்.

♥அப்படி பெண்களுக்கு உடலில் சில இடங்களில் கொழுப்பு சேர்ந்தால் அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன. சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வில் மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களுக்கு அதிகமாக தொடையில் கொழுப்பு சேர்வதாகவும், அவர்களுக்கு இதய நோய் அதிகமாக தாக்குவதில்லை என்றும் கூறியுள்ளனர்.

♥அதேசமயம் இதய நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலானோருக்கு கால்களைக் காட்டிலும் வயிற்றில் அதிக கொழுப்பு கொண்டவர்களாக இருந்துள்ளனர். இதை யூரோபியன் ஹார்ட் ஜர்னல் வெளியிட்டுள்ள ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

♥இந்த இடத்தில் மற்றொரு எச்சரிக்கையையும் ஆய்வாளர்கள் முன் வைக்கின்றனர். அதாவது ஆப்பிள் உடல் அமைப்புக் கொண்ட பெண்கள் உடனடியாக தொப்பையைக் குறைக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

♥ஆனால் இதயப் பிரச்னை, பக்கவாதம் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் ஆழமான ஆய்வு தேவைப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

♥இந்த ஆய்வில் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்ட 2,600 பெண்களை ஈடுபடுத்தியுள்ளனர். அதில் இடுப்பு, தொடையில் அதிகக் கொழுப்புக் கொண்ட பெண்களைக் காட்டிலும் வயிற்றில் அதாவது தொப்பை அதிகமாகக் கொண்ட பெண்களுக்குத்தான் அதிக அளவிலான இதயப் பிரச்னை இருப்பது தெரியவந்துள்ளது.

♥அதேசமயம் முப்பது வயதைக் கடந்த பெண்களுக்கே அதிகமாக இந்தப் பிரச்னை தாக்குவதால் அவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம் என்கிறது ஆய்வு.

♥"பெண்ணின் உடல் அமைப்பு என்பது அவர்களுக்கு அதிகமாக கொழுப்பு எங்கு சேர்கிறதோ அதைப் பொருத்தே அமைகிறது. இவற்றைக் கரைக்க எந்த மாதிரியான உணவுப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆலோசனைக்கான ஆய்வு இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் மருத்துவரின் ஆலோசனைப் படி உங்கள் உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உணவுப் பழக்கத்தை மாற்றி அமைப்பது அவசியம்" என ஆய்வின் பேராசிரியர் கூறியுள்ளார்

செவ்வாய், 29 அக்டோபர், 2019

பெண்களின் மனஅழுத்தத்தை குறைக்க சில வழிகள் !!


பெண்களே..! இந்த பிரச்சனை உங்களுக்கு இருந்தா யோசிக்காமல் இத செய்யுங்கள்!

பெண்களின் மனஅழுத்தத்தை குறைக்க சில வழிகள் !!


👩 மனஅழுத்தம் என்பது இன்றைய சூழ்நிலையில் அனைவரும் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாகும்.

👩 குறுகிய கால மனஅழுத்தத்திலிருந்து நீண்ட கால மனஅழுத்தம் வரை அனைத்துமே நமக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதுதான்.

👩 மனஅழுத்தம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி பார்ப்போம்...

👩 காலையில் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடுங்கள். உடற்பயிற்சி, யோகா இவற்றில் ஏதேனும் ஒன்றை செய்வது மனஅழுத்தத்திற்கு மிகச் சிறந்த மருந்தாகும்.

👩 எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள் மற்றும் பொருட்களை முன்னதாகவே எடுத்து வைத்துக் கொள்வது சிறந்தது.

👩 ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வைப்பதால் நாம் எந்த வேலையையும் மறக்காமல் இருக்கவும், அதனால் ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்கவும் வழிவகை செய்யும்.

👩 பேருந்துக்காக காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். காத்திருக்கும் சமயத்தில் ஒரு புத்தகத்தை கையில் வைத்து படிப்பது காத்திருத்தலை சுகமாக்கும். அது மட்டுமல்லாமல் தேவையற்ற மனஅழுத்தத்தையும் குறைக்கும்.

👩 வேலைகளை பின்னர் செய்து கொள்ளலாம் என ஒதுக்கி வைப்பது மனஅழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.

👩 ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் முன்கூட்டியே செல்ல பழகுங்கள். பத்து நிமிடத்தில் செல்லக்கூடிய இடத்திற்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

உங்கள் வீட்டு பெண்களை நீங்கள் மேலும் ஊக்குவிக்க விரும்புகிறீர்களா? கோலம், மெஹந்தி, சமையல், வீடு பராமரிப்பு என அனைத்திலும் பெண்கள் அசத்த வேண்டுமா? இதோ உங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட செயலி மகளிர் மட்டும்.


👩 தவறாய் போன ஒரு விஷயத்தை குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றை குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

👩 செல்லும் இடங்கள், புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்வது சிறந்தது. இதனால் மனஅழுத்தத்தை குறைக்க முடியும்.

👩 மனதில் கவலைகள் இருக்கும்போது உங்களுக்கு பிடித்தவர்களுடனோ, அல்லது உங்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தின் மீதோ கவனம் செலுத்துங்கள்.

👩 மனஅழுத்தம் இருக்கும் சமயத்தில் சிறிது நேரம் அமைதியாக ஓய்வெடுங்கள்.

👩 உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்கு கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

👩 எந்தவொரு செயலும் சுலபமாக செய்துவிட முடியும் என நினைத்து செயலை செய்ய தொடங்குங்கள்... கடினம் என்று நினைத்தால் நமக்கு மனஅழுத்தம்தான் அதிகமாகும்.


ஞாயிறு, 27 அக்டோபர், 2019

தீபாவளியை பத்தி இந்த விஷயமெல்லாம் தெரியுமா உங்களுக்கு?


வருஷா வருஷம் தீபாவளி கொண்டாடுறீங்களே... தீபாவளியை பத்தி இந்த விஷயமெல்லாம் தெரியுமா உங்களுக்கு?

ஒவ்வொரு வருஷமும் தீபாவளி வந்துக்கிட்டுதான் இருக்கு, நாமளும் எல்லா வருஷமும் உற்சாகமாக கொண்டாடிட்டுகிட்டுதான் இருக்கோம். தீபாவளி பற்றிய வரலாறும், முன்கதையும் நமக்கு முழுமையா தெரியுமானு கேட்டா அதற்கு பதில் இல்லை என்பதுதான். தீபாவளியை பற்றி நமக்கு தெரியாத விஷயம் எவ்வளவோ இருக்கு.

தீபாவளிக்காக வருடா வருடம் காத்திருப்பது இந்துக்கள் மட்டுமல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? சீக்கியர்களும், சமணர்களும் கூட தீபாவளியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள மக்கள் தீபாவளி இந்தியாவின் பண்டிகை மட்டும்தான் என்று நினைக்கின்றனர், ஆனால் உண்மையில் பல நாடுகளில் கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி இருக்கிறது. இந்த பதவில் தீபாவளி பற்றி உங்களுக்குத் தெரியாத சில தகவல்களை பார்க்கலாம்.


செல்வத்தின் பண்டிகை
செல்வத்தின் கடவுளான லக்ஷ்மி தேவிக்கு மரியாதை செலுத்தவும், அவரை உங்கள் வீட்டுக்கு அழைப்பதும்தான் தீபாவளி பண்டிகையின் முக்கிய நோக்கமாகும். இந்த நாளில் வீட்டு வாசலில் விளக்கேற்றுவது என்பது உங்கள் வீட்டுக்கு லக்ஷ்மியை அழைப்பதன் அடையாளமாகும்.


புராணங்களும், தீபாவளியும்
தீபாவளி நமக்கு பல புராணக் கதைகளை நினைவூட்டுகிறது. அதில் பரவலான நம்பிக்கை கிருஷ்ணர் நரகாசுரனை அழித்ததாகும், வடஇந்தியாவை பொறுத்தவரை தீபாவளி இராமர் இராவணனை அழித்துவிட்டு அயோத்தி திரும்பிய நாளாகும். வங்காளத்தில் தீபாவளியின் போது காளி தேவியை வழிபடுகிறார்கள்.



இந்தியாவின் பண்டிகை
தீபாவளி அளவிற்கு இந்தியா முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடும் திருவிழா எதுவும் இல்லை. இந்த பண்டிகை பல்வறு நிறங்களையும், கொண்டாடங்களையும், வழிமுறைகளையும் கொண்டது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் கொண்டாடும் தீபாவளி இந்தியாவின் பண்டிகையை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கிறது.


தீபாவளியும், சமணர்களும்
தீபாவளி என்பது சமணர்களுக்கு ஒரு முக்கியமான திருவிழாவாகும், ஏனெனில் அவர்கள் மதத்தின் கடைசி தீர்த்தங்கரும், கடவுளுமான மகாவீரர் 14 ஆம் நூற்றாண்டில் 527BC , அக்டோபர் 15ல் முக்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இது அவர்களின் மிகப்பெரிய திருவிழாவாகும்.


தீபாவளியும், சீக்கியர்களும்
சீக்கியர்கள் தீபாவளியை பந்தி சோர் திவாஸ் என்று அழைக்கிறார்கள், வரலாற்றில் கூறியுள்ள படி தீபாவளி தினத்தன்று அவர்களின் குருவான குரு ஹர் கோபிந்த ஜி பொற்கோவிலை தாக்கிய இஸ்லாமிய அரசர்களின்


பிடியில் ஜஹாங்கீரின் சிறையில் இருந்து தன்னையும், சில இந்து அரசர்களையும் விடுவித்ததாக கூறப்படுகிறது. சொல்லப்போனால் 1577 ஆம் ஆண்டு தீபாவளி நாள் அன்றுதான் பொற்கோவிலுக்கான அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. அதனால்தான் இது சீக்கியர்களின் புனித நாளாக கருதப்படுகிறது.


இந்தியாவை தாண்டி தீபாவளி
இந்தியாவின் பண்டிகையான தீபாவளியை பல நாடுகள் கோலாகலமாக கொண்டாடுகிறது. இந்தியாவிற்கு அடுத்து இங்கிலாந்தின் லெய்செஸ்டர் நகரில் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலையில் நின்று வானவேடிக்கைகளையும், நடன நிகழ்ச்சிகளையும் கண்டு ரசிப்பார்கள்.



தீபாவளி விடுமுறை
இந்தியாவில் தீபாவளி ஒரு முக்கியமான பொது விடுமுறையாகும். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான தீபாவளி கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் தீபாவளிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது குறிப்பாக சூரினாம், திரிநாட், டொபாகோ, கயானா, மியான்மர், சிங்கப்பூர், நேபாள், இலங்கை, பிஜி, மொரிசியஸ் போன்ற நாடுகளிலும் தீபாவளிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

#Deepavali #தீபாவளி

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

பலவகையான தீபாவளி இரண்டுவிதமாக கொண்டாடும் அதிசயம்


பலவகையான தீபாவளி இரண்டுவிதமாக கொண்டாடும் அதிசயம்.

வெளிச்சத்தின் அருமை இருட்டில் தான் தெரியும். இருட்டில் தடுமாறும்போது, எங்கிருந்தாவது ஒளிராதா என தவிக்கிறோம். மனம் கவலையில் மூழ்கி சோகத்தால் இருண்டிருக்கும். அப்போது தீப ஒளி என்னும் நல்வழி தோன்றாதா! அதன் நடுவே நாம் குதூகலத்துடன் இருக்கமாட்டோமா என எண்ணுகிறோம்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொரு கர்மாவிற்குள் மூழ்கி இருக்க வேண்டும் என்பதுதான் எழுதப்படாத விதியாக உள்ளது. அப்படி குறிப்பிட்ட கர்மாவில் மனிதன் இருந்தாலும், இறைத் தொடர்பு, நல்ல செய்கை, நல்ல எண்ணங்கள் போன்றவற்றை மறக்காமல், எந்த மனிதன் தனது கர்மாவை பூர்த்தி செய்கிறானோ அவன் தெய்வத்திற்கு சமம். கர்மா என்பதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், வசதி வாய்ப்பு, ஏழ்மை, பசி, பட்டினி இப்படி எதுவேண்டுமானாலும் ஒரு மனிதனுக்கு நிர்ணயிக்கப்பட்ட கர்மாவாக இருக்கலாம். ஒவ்வொரு கர்மாவிற்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. வறுமை, பசி, பட்டினி போன்றவற்றில் உழன்றாலும், தெய்வ பக்தி, நேர்மை, நல்ல எண்ணம், போன்றவை உள்ள மனிதன் தெய்வத்திற்கு சமமாக கருதப்படுவான். பொன்,பொருள், வசதி, வாய்ப்பு ஏனையவை அதிகம் இருந்தும் நல்ல எண்ணமும், மற்றவருக்கு உதவும் மனப்பான்மை இன்றி, இன்னும் பொன் பொருள் சேர்ப்பதிலேயே குறியாக இருந்தால் அவன் சாத்தானைவிட கொடூரமானவனாக கருதப்படுவான். இறக்கும் போது அவன் சேர்த்த சொத்து அவனைக் காப்பாப்பாற்றாது. ஆனால் அவன் செய்த நல்லசெயல்கள் அவனுடன் துணைக்கு செல்லும், இதை உணர்த்ததான் புராணங்கள், இதிகாசங்கள், நன்னெறி நூல்கள் போன்றவை இந்து சமயத்தில் படைக்கப்பட்டதன் நோக்கமாகும்.
இது போன்ற புராணங்கள் கூறும் கருத்தை மக்கள் மறக்காமல் இருக்கவே வருடம் தோறும் ஏதோ ஒருவிதத்தில், ஒரு பண்டிகையின் வடிவில் இந்து மதத்தில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்துக்களின் பண்டிகைகளில் மிக உயர்ந்த பண்டிகைதான் தீபத் திருநாள் தீபாவளிப் பண்டிகை.
இந்தப் பண்டிகையின் முக்கிய நோக்கமே அகத்திலும், புறத்திலும் உள்ள கெட்ட எண்ணங்களை விட்டு விட்டு, தூய்மையான எண்ணத்துடன் மனித மனம் புத்தொளி பெற வேண்டும் என்பதே. இதை உணர்த்தவே அரக்கர்களை, தெய்வங்கள் கொன்று உலகில் நீதியை நிலைநாட்டுவதாக இதிகாச புராணங்கள் எடுத்துக் கூறுகிறது.
மேலும் இந்தப் பண்டிகையை கொண்டாட ஒருசில விரதமுறையும், மரண பயத்தைப் போக்கவும், நரகலோகத்திற்கு செல்லாமல் இருக்கவும் முன்னோர்களால் தீபாவளிப் பண்டிகைக்கென்றே சிறப்பு விரதமுறைகள் கையாளப்பட்டிருந்தது.
அதாவது துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் திரயோதசி அன்று மகாபிரதோஷ பூஜை செய்து, யமதீபம் ஏற்ற வேண்டும். எமதர்ம ராஜாவை மனதால் பிரார்த்தனை செய்து, அகாலமரணம் சம்பவிக்காமல் காக்கும்படி பிரார்த்திக்க வேண்டும். மறுநாள் நரக சதுர்த்தசி அன்று, நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும். எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப்பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும்.
எண்ணெயில் லட்சுமிதேவியும், அரப்புப் பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமிதேவி யும், குங்குமத்தில் கவுரியும், புஷ்பத்தில் மோகினிகளும், தண்ணீரில் கங்கையும், புத்தாடை களில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும் (தீபாவளி லேகியம் பற்றியும், அதை தயாரிக்கும் முறைபற்றியும் பக்கம் 23ல் தனியாக கொடுக்கப்பட்டுள்ளது), இனிப்பு பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப் பொறிகளில் ஜீவாத்மாவும் நமக்கு அருள்பாலிப்பார்கள். இவற்றிற்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினால் அனைவரும் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, நம் குடும்பத்தாரை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்து வருவார்கள் என்று முன்னோர்கள் கூறி யுள்ளனர்.

இரண்டு வகையான தீபாவளி:
கெடுதல் அழிந்து நன்மை பிறந்த கதையாக இருந்தாலும், வட இந்தியாவிலும், தென் இந்தியாவிலும் இந்த தீபாவளியை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.

தென் இந்திய மக்கள் தீபாவளி கொண்டாட காரணம் நரகாசுரன்:
தென் இந்தியாவில் இந்த தீபாவளிப் பண்டிகையை நரகாசுரனை மையமாக வைத்து கொண்டாடப்படுகிறது. நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான். நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன். அசுர வதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுர சுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்து விட்டது. நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது.
இதை அறிந்த மகா விஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார்.
அவன் மகா விஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்தய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான்.
அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி வெடி போட்டு கொண்டாட வேண்டும் என்று வேண்டினான்.
மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

வட இந்தியாவில் ராவணை மையமாக வைத்து கொண்டாடும் தீபாவளி:
தென் இந்தியாவில் நரகாசுரனை அழித்ததால் கொண்டாடப்படும் பண்டியாக தீபாவளி விளங்கினாலும் வடமாநிலங்களில் ராவணனை மையமாக வைத்து தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சீதாப்பிராட்டியை கடத்திச் சென்ற ராவணனை வதம் செய்துவிட்டு மிதுலைக்கு வந்த ராமரின் வெற்றியை கொண்டாடும் விதமாக வட மாநிலங்களில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. வால்மிகி ராமாயணத்தில் முதன் முதலாக தீபாவளி பற்றிய குறிப்புகள் உள்ளன.

அதிசய தீபாவளி:
தீபாவளிப் பண்டிகையை இந்து சமயத்தைச் சார்ந்த பல்வேறு மதங்களான, சமண, சீக்கிய மதத்தினரும் வேறு காரணங்களுக்காக கொண்டாடுகிறனர். தீபாவளி என்றாலே அது ஐப்பசி மாதம்தான் வரும். ஆனால் சில ஆண்டுகளில் அபூர்வமாக புரட்டாசி மாதமே வந்ததுண்டு. 1944, 1952, 1990-ஆம் ஆண்டுகளில் புரட்டாசி மாதம் 31-ஆம் தேதி தீபாவளி வந்தது.

சீக்கியர்களின் தீபாவளி:
1577- இல் இத்தினத்தில் , தங்கக் கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர் .

சமணர்களின் தீபாவளி:
சமணர்களின் தீபாவளி சமணர்கள் மகாவீரர் முக்தி அடைந்த புனித தினத்தை நினைவுபடுத்தும் நாளே தீபாவளி.

தீபாவளி பண்டிகை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்:
வாத்ஸ்யாயனர் எழுதிய நூலில் 'யட்ஷ ராத்திரி' என்று குறிப்பிட்டிருக்கிறார். இது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று இரவில் கொண்டாடப்படுகிறது. இதை 'சுகராத்திரி' என்றும் சொல்வதுண்டு.
விஷ்ணு புராணத்தில் தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து தீபங்களை வீட்டில் பல இடங்களில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கி.பி.1117-ல் வாழ்ந்த சாளுக்கிய திருபுவன மன்னன் ஆண்டுதோறும் சாத்யாயர் என்ற அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கூறுகிறது.
கி.பி.1250-ல் எழுதப்பட்ட லீலாவதி என்ற மராத்தி நூலில் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து நீராடுவதைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

அனைத்து நீர்நிலைகளிலும் கங்கை வாசம் செய்யும் நாள்:
தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்தஉறுப்பினர் ஒவ்வொரு வர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டுமகிழ்வர் . தீபாவளி அன்று வெந்நீரில் குளிக்க வேண்டும். வெந்நீரில் கங்கையிருப்பதாக நம்பிக்கை. கங்கை நம் பாவங்களை போக்குவாள்.தீபாவளி அன்று நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சி எடுக்கப்பட்ட எண்ணையை தேய்த்து தான் குளிக்க வேண்டும். தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதி காலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில்பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாககருதப்படுவதேயாகும். அந்த நீராடலைத்தான் "கங்கா ஸ்நானம்" என்று கூறுகிறார்கள். அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம்.
எனவே இந்த தீபாவளித்திருநாளின் சிறப்புகளை அறிந்து நாமும் மகிழ்ச்சியுடன் குடும்பத்துடன் கொண்டாடி இறையருளை பெற்று உடல் அளவிலும் மனதளவிலும் புத்துணர்ச்சியுடன் வாழ்வோம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

#Deepavali #தீபாவளி

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

தீப ஒளித் திருநாள்


தீப ஒளித் திருநாள்

#தீவாளி
அடை மழைக்குப் பேர் போன ஐப்பசியின் முக்கியப் பண்டிகை தீபாவளி. ஒரு பக்கம் அடித்து வெளுக்கும் மழை, மறுபக்கம் நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் தீப ஒளித் திருநாளாம் தீபாவளி.

தீபாவளி பண்டிகை, இந்துக்களின் முதன்மையான பண்டிகைகளில் ஒன்று. அரக்கனான நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தைத்தான் தீபாவளியாக உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.

நரகாசுரன் வதம் ...

இப்போது உள்ள நேபாளத்துக்கு அருகே உள்ள பிரக்யோதிஷ்பூர் என்ற பூமியின் மன்னனாக இருந்தவன்தான் நரகாசுரன். மக்களுக்கு மட்டுமல்லாமல் தேவர்களுக்கும் பெரும் மிரட்டலாக, பயங்கர அச்சுறுத்தலாக இருந்தவன் நரகாசுரன்.

நரகாசுரன், பூதேவியின் மகன். கடும் தவம் இருந்த நரகாசுரன், பிரம்மனிடமிருந்து ஒரு வரத்தைப் பெறுகிறான். அதாவது, எனது தாயாரின் கையால்தான் எனக்கு மரணம் நிகழ வேண்டும். வேறு யாரும் என்னை அழிக்க முடியாது என்பதுதான் அந்த வரம்.

நரகாசுரனின் கடும் தவத்தை மெச்சிய பிரம்மனும், வேறு வழியின்றி அந்த வரம் கொடுக்கிறார். அதன் பிறகு நரகாசுரனின் அட்டகாசம் அதிகரிக்கிறது.

கடவுள்களின் அன்னை என்று கூறப்படும் அதிதியின் காது வளையங்களையே திருடியவன் நரகாசுரன். அது மட்டுமா, பல்வேறு கடவுளர்களின் 16 ஆயிரம் மகள்களை கடத்தி வந்து தன் அந்தப்புரத்தில் சிறை வைத்தவன்.

நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துப் போனதையடுத்து அனைத்து கடவுளர்களும் ஒன்று சேர்ந்து கிருஷ்ணனை சந்தித்தனர். நரகாசுரனை ஒடுக்கி, அவனிடமிருந்து தங்களுக்கும், மக்களுக்கும் விடுதலை தர வேண்டும் என முறையிட்டனர்.

கடவுளர்களே வந்த முறையிட்டதால் நேரடியாக கிருஷ்ணர் களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் குறித்து அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி சத்யபாமாவை (இவர் பூதேவயின் மறு உருவம் என்பதால்) அழைத்துக் கொண்டு கிளம்புகிறார்.

நரகனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே கடும் சண்டை தொடங்குகிறது. அப்போது நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணன் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனைக் குறி பார்த்து தாக்குகிறார். நகராசுகரன் வீழ்கிறான்.

பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார்.

நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார். இதுதான் இன்றளவும் தீபாவளியன்று அதிகாலையில் எண்ணை தேய்த்து குளிக்கும் பழக்கமாக தொடருகிறது.

தீபாவளியின் இன்னொரு கதை ...

இதேபோல இன்னொரு கதையும் தீபாவளிக்கு உள்ளது. அது ஏன் தீபத் திருநாள் என்று அழைக்கப்படுகிறது என்பதற்கான கதையும் கூட.

ராவணனை வென்று சீதையை மீட்கிறார் ராமன். பின்னர் சீதையுடன் அயோத்திக்குத் திரும்புகிறார். மன்னனாக முடி சூடுகிறார். இதைத்தான் தீபாவளியாக மக்கள் கொண்டாடினராம்.

ராமரும், சீதையும் அயோத்திக்கு வந்தபோது அன்று அமாவாசை இரவு. இதனால் இருளில் தாங்கள் எங்கே போகிறோம் என்பது தெரியாமல் தடுமாறியுள்ளனர். இதையடுத்து அயோத்தி மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு அகல் விளக்குகளை ஏற்றி ஒளி கூட்டினர். இதனால் ஏற்பட்ட வெளிச்சத்தில், தீப ஒளியில், சரியான பாதையில் நடை போடத் தொடங்கினாராம் ராமரும், சீதையும். இதனால்தான் தீபாவளிக்கு தீப ஒளித் திருநாள் என்ற பெயரும் வந்தது.

பிற கதைகள் ..

விஷ்ணு, லட்சுமி தேவியின் திருமணம்தான் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்ற ஒரு புராணக் கருத்தும் உண்டு.


வங்கத்தில் காளி தேவியை வணங்கும் நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தீபாவளி ஒரு விதமாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் தீபாவளித் திருநாள் மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நான்கு நாளும் ஒரு வகையான கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபடுகிறார்கள். பூஜைகள் செய்கிறார்கள்.

முதல் நாளை நரக சதுர்தசியாக கொண்டாடுகிறார்கள். தீய சக்திகள் அழிந்து (அதாவது நரகாசுகரன் அழிந்த நாள்) வாழ்வில் வளம் பிறக்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.

தீபாவளி தினமான 2வது நாள் அமாவாசை தினம். இந்த நாளில் லட்சுமி தேவியை வணங்குகிறார்கள்.

3வது நாளில் கார்த்திகை சுத்த பதயாமி தினமாக கொண்டாடப்படுகிறது.

4 நாள் யம திவிதியை தினமாக கொண்டாடுகிறார்கள். அதாவது அன்றைய தினம் பெண்கள் தங்களது சகோதரர்களுக்கு புத்தாடைகள் கொடுத்து வணங்கி, ஆசிர்வாதம் பெறும் தினம் இது.

பட்டாசு வெடிப்பது ஏன்:

தீபாவளி என்றால் பட்டாசுகளும், பிரகாசமிடும் அகல் விளக்குகளும் இணைந்தே நினைவுக்கு வரும். ஏன் விளக்கு ஏற்றிக் கொண்டாடுகிறோம், பட்டாசுகள் வெடிப்பது ஏன் என்பதற்கும் ஒரு காரணம் உண்டு.

வீடுகளில் அன்றைய தினம் விளக்குகளை ஏற்றி வைப்பதன் மூலம் வீடுகளில் இருள் விலகி, வளம் பெருகும் என்பது ஐதீகம். அயோத்திக்கு ராமரும், சீதையும் வந்தபோது அந்த நகர மக்கள் விளக்கேற்றி வைத்தனர் என்ற புராண வழக்கமும் இதற்கு இன்னொரு காரணம்.

அதேபோல, தீய சக்திகளை விரட்டியடித்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாட பட்டாசு என்பது பட்டாசுகளுக்கான ஐதீகம்.


தென்னிந்தியாவில் நரகாசுரன் வதமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் ராமரும், சீதையும் அயோத்தி திரும்பியதையும், ராமர் பட்டம் சூட்டிக் கொண்டதையுமே, தீபாவளியாக கொண்டாடுகிறார்கள்.

இப்படி ஒவ்வொரு விதமாக இந்தியாவின் ஒவ்வொரு பகுதி மக்களும் கொண்டாடினாலும் கூட தீபாவளியின் மையக் கருத்து, நலமும், வளமும் வந்து சேரும் தீபத் திருநாள் என்பதாகவே உள்ளது என்பதால் தீபாவளித் திருநாள், இந்துக்களின் மிக முக்கிய திருநாளாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது

#Deepavali #தீபாவளி

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

சனி, 26 அக்டோபர், 2019

தீபாவளி பற்றிய தகவல்கள்


தீபாவளி பற்றிய தகவல்கள்

* இந்தியாவில் மட்டுமின்றி, அண்டை நாடுகளான, வங்கதேசம், இலங்கை, மலேஷியாவிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஆனால், பெயர்களும், கொண்டாடும் முறைகளிலும் மாற்றம் இருக்கும்.
* தமிழகத்தில், தீபாவளியன்று, சிறுவர்கள் பட்டாசு வெடிக்க விரும்புவர். ஆனால், குஜராத் மாநிலத்தில், தீபாவளி அன்று யாரும் பட்டாசை பற்றி நினைப்பதில்லை. அதற்கு பதிலாக, சிறுவர் முதல் பெரியவர் வரை, விதவிதமான பட்டங்கள் செய்து, வானில் பறக்க விட்டு மகிழ்வர்.
* காசியில், பிரசித்தி பெற்ற அன்னபூரணி கோவில் இருக்கிறது. இந்த கோவிலில், தீபாவளி சமயத்தில், மூன்று நாட்களுக்கு மட்டும், தங்க அன்னபூரணியாக காட்சி அளிப்பார்.
* நரகாசுரனை, அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணெய் தேய்த்து தலை முழுகினார். அதுதான் இன்றளவும் தீபாவளியன்று, அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கமாக தொடர்கிறது.
* தாய்லாந்தில், தீபாவளியன்று, வாழை மட்டைகளில் விளக்கு ஏற்றி வைத்து, அதை நீரில் விட்டு வழிபடுவர்.
* தீபாவளி என்றால், பட்டாசுகளும், பிரகாசமிடும் அகல் விளக்குகளும் இணைந்தே நினைவிற்கு வரும். இதற்கு ஒரு காரணம் உண்டு. விளக்குகளை ஏற்றி வைப்பதன் மூலம், வீடுகளில் இருள் விலகி, வளம் பெருகும் என்பது ஐதீகம்.அயோத்திக்கு, ராமரும் - சீதையும் வந்தபோது, அந்நகர மக்கள் விளக்கேற்றி வைத்தனர் என்ற புராண வழக்கமும், இன்னொரு காரணமாக சொல்லப்படுகிறது.

#Deepavali #தீபாவளி

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

வெள்ளி, 25 அக்டோபர், 2019

லட்சுமி கடாட்சம்.. செல்வம் பெருக.. 🎆தீபாவளி🌟 அன்று இதை செய்யுங்கள்..!!


லட்சுமி கடாட்சம்.. செல்வம் பெருக.. 🎆தீபாவளி🌟 அன்று இதை செய்யுங்கள்..!!

🎆தீபாவளியின் சிறப்புகள்🎇
🎉தீபாவளி ஒளிநிரம்பிய விழா. வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதற்கு வழிகாட்டும் விழா. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தீய எண்ணங்கள் (அகங்காரம், பொறாமை, தலைக்கனம்...) இருக்கும். அந்த தீய எண்ணங்களை அழித்து நல்ல எண்ணங்களை மனதில் ஏற்படுத்த தீபாவளி சிறந்த நாளாக அமைகிறது.

🎉அதிகாலை கங்காஸ்நானம், படபடவென வெடிக்கும் பட்டாசுகள், புத்தாடைகள், நாவில் ஊற வைக்கும் பலகாரங்கள் இவை மட்டுமின்றி செல்வ வளத்தை பெருக்கும் லட்சுமி குபேர பூஜையும் தீபாவளியின் ஸ்பெஷல் தான்.

தீபாவளி நல்ல நேரம்..!!

எண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நேரம்

அதிகாலை : 04.30 மணி முதல் 06.00 மணி வரை

புதிய ஆடை, அணிகலன்கள் அணிய உகந்த நேரம்

காலை : 07.44 மணி முதல் 10.14 மணி வரை

லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்

பிற்பகல் : 2.00 மணி முதல் 4.30 மணி வரை

இரவு : 9.00 மணி முதல் 12.00 மணி வரை
தீபாவளி வழிபாடுகள் :

🌟லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நாள் தீபாவளி திருநாள். மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜை செய்யலாம்.

🌟தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக சிறப்பு வாய்ந்தது. குபேர பகவானுக்காக செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை.

🌟தீபாவளி நன்னாள் முதற்கொண்டு வறுமையும், பசிப்பிணியும் விலகி நம் இல்லமும், உள்ளமும் மகிழ்வுற அன்னபூரணியை மனதார வழிபட வேண்டும்.

🌟தீபாவளித் திருநாளில் நரகாசுரனை அழிக்க காரணமான கிருஷ்ணரை கிருஷ்ணா! முகுந்தா! முராரி! என்று சொல்லி வழிபட வேண்டும். வீட்டில் செய்த பண்டங்களை கிருஷ்ணருக்கு நிவேதனமாகப் படைக்க வேண்டும்.

🌟செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. தீபாவளி அன்று குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். மேலும், குலதெய்வ கோவிலிற்கு சென்று வாருங்கள்.

🌟தீபாவளி நாளில் கேதார கௌரி விரதம் இருந்து வழிபட்டால் மனை தோஷங்கள் நீங்கும். வீட்டில் பொன், பொருள் சேரும். வீடு, நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும்.

🌟தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய்தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

🌟தீபாவளியன்று காலையிலும், மாலையிலும் பூஜையறையில் அவசியம் விளக்கேற்றி வழிபாடு செய்தல் வேண்டும்.

தீபாவளி அன்று நாம் செய்ய வேண்டியவை :

🌟புத்தாடைகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு அணிந்துகொள்ள வேண்டும். பெற்றோரிடமும், வீட்டுப் பெரியோர்களிடமும் ஆசீர்வாதம் பெறுதல் சிறந்தது.

🌟தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பீடைகள் விலகும்; புண்ணியம் உண்டாகும்.

🌟பட்டாசு, புத்தாடை, இனிப்பு கார வகைகள் என்று அன்றைய நாள் முழுக்க மகிழ்ச்சியும், குதூகலமும் இல்லங்களிலும், நம் உள்ளங்களிலும் வழிந்தோடும்.

🎆தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழுங்கள்🎇


செவ்வாய், 22 அக்டோபர், 2019

தைராய்டு உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்!


தைராய்டு உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

நூற்றில் ஐம்பது சதவீத பெண்களுக்கு இந்த நோய்த் தாக்கு அறிகுறி இருப்பது நிரூப்பிக்கப்பட்டுள்ளது.


இன்றைய காலக்கட்டத்தில் தைராய்டு என்பது உலக வியாதியாக மாறி வருகிறது. குறிப்பாக பெண்களை அதிகளவில் தாக்கும் தைராய்டு உணவு மற்றும் ஹார்மோன் பிரச்சனைளுக்கு தொடர்புடையது.

எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் என்று அடுக்கிக் கொண்டே போகும் பலரின் புலம்பலுகளை கேட்டிருப்போம்.


ஆனால், உண்மையிலேயே இந்த அறிகுறி எல்லாமே தைராய்டு நோயின் அறிகுறி தான் என்று சொல்லி விட முடியாது. அதே சமயத்தில் நூற்றில் ஐம்பது சதவீத பெண்களுக்கு இந்த நோய்த் தாக்கு அறிகுறி இருப்பது நிரூப்பிக்கப்பட்டுள்ளது.

சரி இந்த தைராய்டு பிரச்சனையை  எப்படி விரட்டுவது என்றால் வெறும் மருந்துகள் மட்டும் பற்றாது. அதனுடன் முறையான உணவு பழக்கமும் வேண்டும். அப்படியான உணவுகளில் தைராய்டு இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்

பால் பொருட்கள்:
கால்சியம் அதிகம் நிறைந்த பால் சம்பந்தப்பட்ட உணவுப் பொருளை முடிந்த வரையில் தவிர்க்க வேண்டும். பால் குடிப்பதால் மூன்றில் ஒரு பங்கு அயோடின் தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியும். அதே சமயம் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை குடிப்பது நல்லது.

ஆல்கஹால் :

தைராய்டு பிரச்சனை இருந்தால, ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தைராய்டு சுரப்பியையே பாதிக்கும்.

பேக்கரி உணவுகள்:

பிரெட் போன்ற பேக்கரி வகை உணவுகளில் ஓரளவு அயோடின் இருந்தாலும், செரிமானம் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி தைராய்டு சுரப்பில் பாதிப்பை உண்டாக்கும். எனவே பேக்கரிப் பொருட்களை தவிர்ப்பதும் நல்லது.

முட்டைக் கோஸ், காலிஃப்ளவர்:

அயோடின் உறிஞ்சும் தன்மைக் கொண்ட முட்டைக்கோஸ், காலிஃப்ளவர்  போன்ற காய்கறிகள் ஹார்மோன்களில் பஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும். எனவே, முடிந்த வரையில்  இந்த மாதிரியான காய்கறிகளை தவிர்க்க வேண்டும்.

மயோனைஸ் மற்றும் வெண்ணெய்:

இந்த உணவுகளில் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், அவை தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டு, அதனால் தைராக்ஸின் ஹார்மோனின் அளவு மேலும் குறையும்.பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும்.

பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் நோய்களில் தைராய்டும் ஒன்று.


பெண்களைக் குறி வைத்துத் தாக்கும் நோய்களில் தைராய்டும் ஒன்று.

இது நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதில்லை அயோடின் குறைவே இதற்குக் காரணம்.

கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைய்ராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்ட் நோய் ஏற்படுகிறது.

தைராய்ட் குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம் குறைந்த வயதிலேயே வயதுக்கு வருவதும் உண்டாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சில பெண்கள் கருத்தரிக்க முடியாமல் போவதற்கும் தைராய்ட் பிரச்சினை காரணமாகி விடுவதுண்டு. அவர்களை மகப்பேறு நிபுணர்கள் முதலில் சோதிப்பது தைராய்ட் இருக்கிறதா என்பது தான். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 5 சதவீதம் இந்தக் கோளாறினால் அவதியுறுகின்றனர். இந்த சுரப்பிகள் ஹார்மோனைக் குறைவாக சுரந்தால் கொழுப்பு சக்தி அதிகமாகி விடும் இதனால் இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும் சூழ்நிலையும் உருவாகலாம்.

ஹைப்போ தைராய்டிசன், ஹைப்பர் தைராயிடிசன், தைராய்ட் கட்டிகள் ஹார்மோன் சுரப்பி இன்மை ஆகியவை தான் தைராய்டைப் பொறுத்தவரைக்கும் ஏற்படும் முக்கிய பிரச்சினைகள் ஆகும்.

சுரப்பியின் செயல்பாடு அதிகமாகி அதனால் ஹார்மோன் உற்பத்தி அதிகம் அடைவது முதல் வகையின் குணங்கள் (ஹைப்போ தைராய்டிசன்). வயது வித்தியாசம் பொறுத்து இதன் அறிகுறிகள் மாறும் சிறுவயதில் அளவுக்கு அதிக உயரம் பருமன் இவைகள் இந்த நோயின் அறிகுறிகள்.

அடுத்தது (ஹைப்பர் தைராயிடிசன்) இதில் வயதானவர்களின் எடைக் குறைவு, அதிக வியர்வை, உடல் நடுக்கம் போன்றவை இதன் அறிகுறிகள். தைராய்ட் மருந்துகளும், ரேடியோ ஆக்டிவ் அயோடினும் இதற்குரிய மருந்துகளில் முக்கியமானவைகள் என்கிறார்கள் மருத்துவர்கள்.

50 வயதை கடந்தவர்களுக்கு நினைவாற்றல் குறைவது ஹைப்போ தைராய்ட் பிரச்சினையால் தான். சோர்வு, கவலை என மனநோயாளி போல் ஆகிவிடுவார்கள். மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இது விலகி விடும்.

கழுத்தில் கட்டிகள் வந்து வீக்கம் ஏற்படுவது சுற்றுச்சூழல், பரம்பரை என இரு காரணங்களினால் வருகிறது. இதுவும் அயோடின் குறைபாடு தான் முட்டைகோஸ், கேரட் அதிகமாக சேர்க்கக்கூடாது. இது தைராய்ட் பிரச்சினையை அதிகப்படுத்தும். மலையோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கட்டிகள் அதிகம் வரும். இவர்களின் உணவிலும் தண்ணீரிலும் அயோடின் குறைவாக இருப்பது தான் காரணம். அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும் .


தைராய்ட் கட்டிகளில் சில புற்று நோய் பாதிப்புக்குள்ளாகும். ஆனால் அது மிகவும் அபூர்வமாகவே வரும். இதனை FNAC(Fine Needle Aspiration Citation) மூலம் கண்டுபிடிக்கலாம்.

டென்ஷன் காரணமாய் தைராய்ட் பிரச்சினைகள் வருகிறதென சொல்கிறார்கள் சிலர். சில குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் குறைபாட்டுடன் பிறப்பதுண்டு.

ஆனாலும் இந்நோய் ஆண்களை விடப் பெண்களை 7 மடங்கு அதிகமாய் தாக்குகிறது. எனவே பெண்கள் இது விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

பச்சைக் காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்ப்பதும், உடற் பயிற்சி செய்வதும், இந்த நோயினின்றும் பாதுகாக்கும் முறைகளாகும்.சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும்.

வெள்ளி, 18 அக்டோபர், 2019

தீபாவளி ஸ்பெஷல்


தீபாவளி ஸ்பெஷல் !

தீபாவளி என்றால் நினைவிற்கு வருவது புது புது ஆடை மற்றும் வெடி வெடிக்கும் பட்டாசும் தான். இந்த நாளை ஏன் தீபாவளியாக அனைவரும் கொண்டாடுகிறோம். 'தீபம்" என்றால் 'விளக்கு". 'ஆவளி" என்றால் 'வரிசை". அதாவது இந்த நாளில் விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் அடுக்கி விளக்கேற்றி இருண்டு இருக்கும் வீட்டை பிரகாசமாக வைப்பது ஆகும்.

புராணக் கதை :

🎉 இரண்யன் எனும் அசுரன், பு மிதேவியை கடத்தி கொண்டு பாதாளத்தில் மறைந்தான். பு மிதேவியை மீட்க, பன்றி வடிவெடுத்து, தன் பற்களால் பு மியை அகழ்ந்து சென்றார், மகாவிஷ்ணு. இரண்யனை வதம் செய்த பின், பு மியை, தன் தெற்றுப் பல் நுனியில் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். பு மாதேவிக்கும், வராகருக்கும் ஏற்பட்ட இந்த ஸ்பரிசத்தில், பவுமன் பிறந்தான். பவுமன் என்றால், பு மியின் பிள்ளை என்று பொருள். ஆனால், இவன் சென்றால், அவ்விடத்தில் இருள் படியும் அளவுக்கு மிகவும் கறுப்பாக இருந்தான்.

🎉 பவுமன் திருமாலின் பிள்ளை என்ற தைரியத்தில், மக்களுக்கு பல்வேறு கொடுமைகளை செய்து வந்தான். அத்துடன், தேவலோகத்துக்கு சென்று, இந்திரனின் வெண்கொற்றக் குடையையும், அவனது தாய் அதிதி அணிந்திருந்த, அமுதம் சொட்டும் குண்டலங்களையும் பறித்து வந்தான்.

🎉 மனிதனாய் பிறந்திருந்தாலும், அசுர குணத்துடன் விளங்கியதால், இவனை, நரகாசுரன் என்றே மக்கள் அழைத்தனர். அவன் தேவர்களுக்கும், மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான்.

💣 இதை அறிந்த மகாவிஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பு மி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகாவிஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். மகாவிஷ்ணு கிருஷ்ணராகவும், பு மாதேவி சத்யபாமாவாகவும் பு மியில் அவதாரம் செய்தனர். பிறகு போர் நடந்தது.

💣 அசுரன் மகாவிஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்யபாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்யபாமா பு மியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான்.

💣 அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், மனம் திருந்திய நரகாசுரன், தன் இறந்த நாளை மக்கள் ஆனந்த திருநாளாக கொண்டாட வரம் கேட்டான். மகாவிஷ்ணுவும், சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

💣 தித்திக்கும் தீபாவளியை தேன் சுவைக் கொண்ட இனிப்புகளோடு வெடி வெடித்து வண்ண வண்ண ஆடை அணிந்து கொண்டாட இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

கணவன் மனைவி பாலியல் இயற்கை மருத்துவக்குறிப்புகள் :


#கணவன்_மனைவி #பாலியல்_இயற்கை #மருத்துவக்_குறிப்புகள் :-

♦மலட்டுத்தனம் நீங்க வேண்டுமா?

1. புங்கன் வேரைக் கொண்டுவந்து நீர்விட்டு அரைத்து மாதவிலக்கான மூன்றாம் நாள் அல்லது நான்காம் நாள் உள்ளுக்குள் சாப்பிட்டால் மலட்டுப் பூச்சிகள் செத்துவிடும். மலட்டுத்தனமும் நீங்கும்.

2. வேப்பங்கொழுந்து, வெள்ளைப்புண்டு, மிளகு, வசம்பு இவைகளைச் சம அளவு எடுத்து அரைத்து மாதவிலக்கு மூன்று நாட்களிலும் ஒரு கோலிகுண்டு அளவு விழுங்கி வந்தால், பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கி கர்ப்பம் தரிக்கும். ஆனால், இதை தொடர்ந்தார்ப்போல் மூன்று மாதவிலக்குகளுக்கு சாப்பிட்டு வரவேண்டும்.

♦வெள்ளை ஒழுக்கு நிற்க வேண்டுமா?

ஒரு கைப்பிடி முட்கா வேளை இலையும், பத்து மிளகும், ஒரு சிட்டிகை ஜீரகமும் எடுத்து அம்மியில் வைத்து மைபோல் அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சங்காய் அளவு கெட்டி எருமைத் தயிரில் கலந்து குடிக்க வேண்டும். காரம், புளி உணவில் சேர்க்கக்கூடாது. வறுத்த உப்பு சேர்த்து தயிர் சோறு சாப்பிட்டு வர வேண்டும். சில நாட்களில் சரியாகிவிடும்.

♦கருவுற்ற பெண்கள் - வாந்தி நிற்க :

புளிப்பு கிச்சலித் தோல் உலர்ந்தது எடுத்து 75 கிராம் ஒரு லிட்டர் கொதிக்கிற தண்ணீரில் போட்டு 12 மணி நேரம் வைத்திருந்து தோலை எடுத்து விட்டு பத்து நிமிடம் காய்ச்சி, கொதிக்கும் பொழுது ஒரு கிலோ சர்க்கரை சேர்த்து ஷர்பத் செய்து வைத்துக்கொள்ளவும். வேளை ஒன்றுக்கு 1 ஸ்பூன் அளவு இதை சாப்பிட்டு வந்தால் கருவுற்ற பெண்களின் வாந்தி நின்றுவிடும்.

♦பிரசவ வேதனை குறைய வேண்டுமா?

மாலதி மலர்ச்செடியின் வேரைக் கொண்டு வந்து சுத்தம் செய்து, கட்டி மோருடன் கலந்து உபயோகித்தால் பிரசவ வேதனை குறையும், சுகப்பிரசவமாகும்.

♦ஆண்மை பலகீனமா?

திடீரென்று ஒரு குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனதில் உள்ள ஒருவித பயம். தகாத எண்ணம். வாதம் போன்ற நோய்களுக்கு தாளகம், மனோசிலை போன்ற சுத்தம் செய்யாத மருந்துகளை அருந்துவதுதான் காரணமாகும்.

♦வெள்ளை, வெட்டை – பால்வினை நோய் நீங்க :

ஆனை நெருஞ்சியிலை தழையைச் சுத்தம் செய்து நீராகாரத்தில் தேய்க்க வழுவழுப்பான பொருள் கிடைக்கும். இதை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் வெள்ளை வெட்டை நீங்கும்.

♦மாதவிலக்கு ஒழுங்காக வேண்டுமா?

வெங்காயப் பூவை நன்றாக உலரவைத்து, இடித்துத் தூள் செய்து தினசரி ஒரு சிட்டிகை அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் மாதவிலக்கு ஒழுங்காக ஆகும். ஒரு வாரமாவது குடித்து வர வேண்டும்.

♦விதை வீக்கம் தணிய :

1. பலாப்பூவை நசுக்கி, சற்று வேக வைத்து விதை வீக்கமுள்ள இடத்தில் பற்றிட்டு வந்தால் விதை வீக்கம் தணியும்.

2. பவழமல்லிப் பூவைக் கொண்டு வந்து வதக்கி வைத்துக் கட்டினால் விi வீக்கம் குறைந்து வரும். சீக்கிரத்தில் சரியாகிவிடும்.

♦அரைக்கரப்பான் வந்துவிட்டால் :

தொடையின் இடுக்குகளில் மர்மஸ்தானங்களைப் பற்றிக்கொண்டு உண்டாகும் ஒருவகை சொரிப்புண் இது. இது நீர் சம்பந்தமாக ஏற்படக்கூடியது. கருஞ்சீரகம், கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சள் - வகைக்கு ஒரு கிராம் எடுத்து பொடித்து தேங்காய்ப் பாலில் ஊற வைத்து அடுப்பில் ஏற்ற வேண்டும். தண்ணீர் சுண்டி எண்ணெய்ப் பதம் வந்ததும் இறக்கி ஆற வைத்து அரைக்கரப்பான் மீது தடவி வந்தால் சீக்கிரத்தில் புண் ஆறிவிடும்.

♦மறைவான ரணங்கள் ஆற :

ஆண்குறி, பெண்குறி, ஆசனவாய் இங்கெல்லாம் ரணம் ஏற்பட்டிருந்தால் குங்குமப்பூவில் தேனை விட்டு நன்றாக அரைத்து சாந்து போல் ஆக்கி ரணம் ஏற்பட்டுள்ள பாகங்களில் நன்றாகப் பூசி வந்தால் சில நாட்களில் சரியாகிவிடும்.

♦கருச்சிதைவு அடிக்கடி ஏற்படுகிறதா?

மாதுளை வேர்ப்பட்டை, அசோக மரப்பட்டை, மாதுளம் பழத்தோல் இவைகளை சம அளவு எடுத்து உளர்த்தி தூள் செய்து, ஒரு நாளைக்கு இரண்டுவேளை ஒரு சிட்டிகையளவு சாப்பிட்டு வந்தால் போதும். அதன்பிறகு கருச்சிதைவு ஏற்படாது. கர்ப்பம் தங்கும்.

♦மசக்கை காலத்தில் வயிற்று வலியா?

மசக்கை காலத்தில் சிலருக்கு இலேசான வயிற்று வலி ஏற்படுவதுண்டு. அதற்கு ஆம்பல் பூவுடன் விளாமிச்சை வேரையும் சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி, சிறிது சர்க்கரை கலந்து சாப்பிடவும்.

♦மாதவிலக்குத் தள்ளிப்போக வேண்டுமா?

பயணங்களிலோ அல்லது விசேஷ காலங்களிலோ மாதவிலக்கு தள்ளி வரவேண்டும் என்று விரும்பும் பெண்கள் தினசரி காலையில் பொட்டுக் கடலையை (உடைத்த கடலையை) வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மாதவிடாய் சற்றுத் தள்ளி வெளிப்படும். எவ்வளவு நாள் வரவேண்டும் என்று விரும்புகின்றீர்களோ அத்தனை நாட்கள் உடைத்த கடலையை சாப்பிடலாம். உடம்புக்கு கெடுதல் இதனால் ஒன்றுமில்லை. ஆனால், இதற்குள்ள மாத்திரையை சாப்பிடுவதூன் கெடுதல்.

♦மாதவிலக்கு நின்ற சிரமப்பட்டால் :

நாட்டு வைத்தியக் கடையில் அன்னபேதி, கரியபோளம் இலை கிடைக்கும். 20 கிராம் அன்னபெதி, 10 கிராம் கரியபோளம், லவங்கப்பட்டைத் தூள் 10 கிராம் சேர்த்து இடித்து, தேன் சேர்த்து மாத்திரைகளாக உருட்டி, வேளைக்கு இரண்டாக நிலவேம்பு கஷாயத்துடன் சாப்பிட்டு வந்தால் அந்த சிரமம் எல்லாம் தீர்ந்துவிடும். ஆனால் கருவுற்ற பெண்கள் இதைச் சாப்பிடக்கூடாது.

♦உற்ற வயதில் பருவமடையாவிட்டால் :

செம்பரத்தைக்கு ருது உண்டாகக்கூடிய குணம் உண்டு. அதனால் செம்பருத்திப் பூவை எந்த வகையினாலாவது உள்ளுக்குச் சாப்பிட கொடுத்து வரவும். சில நாட்களில் அந்தப்பெண் ருதுவாகிவிடுவாள்.

♦ஹிஸ்டீரியா நோய் குணமாக :

இது, நரம்பு பலவீனமான பெண்களுக்குத்தான் ஏற்படும். இதை
‘பேய் பிடித்து’ ஆடுவதாகக் கூறுவார்கள். பொன்னாவரை இலை, வேர், பூ இவைகளை வகைக்கு 40 கிராம் கொண்டு வந்து இலேசாகத்தட்டி ஒரு லிட்டர் நீரில் இட்டு, அரை லிட்டராக காய்ச்சி, வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வரவேண்டும். இதனால் ஹிஸ்டீரியா நோய் குணமாகும்.

♦மார்பகங்கள் தேர்ச்சி பெற :

மாதுளம் தோளைத் தூள் செய்து கடுகு எண்ணெயில் கலந்து காய்ச்சி, மேல் பூச்சாக பூசி வந்தால், மார்பகங்கள் இரண்டு வாரத்திற்குள் நன்கு பூரித்து விம்மி புடைத்துக்கொள்ளும். பெண்கள் கட்டாயம் வாழைப்பழம் சாப்பிட வேண்டும். அதனால்; மார்பகங்கள் செழித்து வளரும்.

♦பால் பெருக இலகு வைத்தியம் :

சில தாய்மார்கள், குழந்தைக்குப் போதுமான பால் பெருகாமல் சிரமப்படுவார்கள். ஒரு தோலா ஜீரகத்தையும், ஒரு தோலா வெல்லத்தையும் சேர்த்து நசுக்கி உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால் சில நாட்களிலேயே நன்கு பால் பெருகும்.

இனிமேல் தினசரி திராட்சை, மாதுளை, அன்னாசி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில் ஏதேனுமொன்றை சாப்பிட்டு வரவேண்டும். இரத்த உற்பத்தியும் புத்துணர்ச்சியம் ஏற்படும். பெண்கள் கட்டாயம் வாழைப்பழம் சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் மார்பகங்கள் செழித்து வளரும்.

♦தேன் நிலவுக் காலங்களில் :

குஷாலாக தேன் நிலவுக்குச் சென்று உயர்ந்த ஹோட்டலில் அறை எடுத்துக்கொண்டு தங்கியிருப்பவர்கள் இரவுக்காலங்களில் உணவில் புளி, தயிர், எலுமிச்சம்பழம் சேர்த்துக்கொள்ளாதீர்கள். புளி விந்துவை சீக்கிரத்தில் வெளியேற்றிவிடும். எலுமிச்சம் பழச்சாறும் புளியைக் காட்டிலும் வேகமாய் விந்துவை கலைத்துவிடும். அதனால் இரவு உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். அப்பொழுதுதான் தேன்நிலவு, தேன் நிலவாக இருக்கும். இது தேன் நிலவுக்கு வெளியூர்ப்பயணத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல புதுமணத்தம்பதிகளுக்கு மட்டுமின்றி எல்லாத் தம்பதிகளுக்குமே பொருந்தும்.

♦துரித ஸ்கலிதத்தை நிறுத்த வேண்டுமா?

சிலருக்கு சீக்கிரத்தில் விந்து வெளியேறிவிடும். இதைத் தடுத்து நிறுத்த தாழம் பூவின் உள்ளே இருக்கும் பட்டு போன்ற பொடியை எடுத்து கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து இழைத்து ஆண்குறியின் மீது பூசிக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டால் விந்து விரைவில் வெளியேறாது.

♦விந்து கெட்டிப்பட வேண்டுமா?

பொரித்து எடுத்த படிகாரத்தை பொடியாக்கி 15 கிராம் எடுத்து அதில் கற்கண்டுத் தூள் 50 கிராம் சேர்த்துக் கலந்து வைத்துக் கொண்டு, பத்து சம பாகமாகப் பொட்டலம் கட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு நாளைக்கு ஒரு பொட்டலம் வீதம் பத்து நாட்கள் காய்ச்சிய பசும் பாலுடன் சாப்பிட்டு வரவும். நீற்றுப்போன விந்து கெட்டியாகிவிடும்.

♦விந்து பெருக வேண்டுமா?

ஆளி விதையைப் பாலில் வேக வைத்து சர்க்கரை அல்லது வெல்லம் போதுமான அளவு சேர்த்து லேகியம் பொல் கிளறி காலை - மாலை, சுண்டைக் காயளவு உட்கொண்டு வந்தால் உடல் பலகீனம் நீங்குவதுடன் விந்தும் பெருகும்.

♦நரம்புத் தளர்ச்சி வந்துவிட்டதா?

1. நரம்புத்தளர்ச்சியை நீடிக்கவிடக் கூடாது. ஜடா மஞ்சரி வேரின் தூள் 5 கிராம் எடுத்து கால் லிட்டர் தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது ஊற வேண்டும். அந்த நீரில் 1 அவுன்ஸ் வீதம் மூன்று வேளை அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

2. கருவேலன் பிசினை எடுத்து காய வைத்து அத்துடன் கற்கண்டையும் சேர்த்து நன்றாகப் பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். இதில் அரை ஸ்பூன் அளவு பாலில் போட்டு நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகிவிடும்.

♦கனவில் அடிக்கடி விந்து வெளியேறுவதை தடுப்பது எப்படி?

ஒருவருக்கு எப்பொழுதாவது கனவில் விந்து வெளியேறினால் அது ஆரோக்கிமே! அதேசமயம் அடிக்கடி தொடர்ந்து கனவில் விந்து வெளியேறினால் அது உடலை பலகீனமாக்கிவிடும். இதற்குத் தீர்வு – துளசி வேரை இடித்துப் பொடியாக்கி அதை வெற்றிலையில் வைத்து சாப்பிட வேண்டும். மூன்று நாட்களிலேயே ‘சொப்பன ஸ்கலிதம்’ (கனவில் விந்து வெளியாவது) நின்றுவிடும்.

♦ஆண்குறி உறுதிப்பட வேண்டுமா?

தனது ஆண்குறி உறுதியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படாத ஆண்கள் உண்டா? அல்லது தனது கணவனின் ஆண்குறி வலுவாக இருக்க வேண்டும் என்று விரும்பாத பெண்கள் தான் உண்டா?! இதோ அவர்கள் ஆசைக்கு அருமருந்து:

வசம்பு, அமுக்கராங் கிழங்கு, எட்டிக்கொட்டை இவைகள் சம அளவில் எடுத்து, பசும்பால் விட்டு அரைத்து ஆண்குறியின் மீது பூசி வந்தால் ஆண்குறி நன்கு உறுதிப்பட்டு மிகுந்த வலிவுகொண்டு ‘துடிப்புடன்;’ என்று எழுந்து நிற்கும். குறைந்தபட்சம் ஒரு வாரமாவது பூசி வர வேண்டும்.

♦ஆண்குறி பருக்க வேண்டுமா?

சிலருக்கு ஆண்குறி வயதிற்குத் தகுந்த பருமன் இருக்காது. அவர்கள் 15 சங்கம்பழம் கொண்டு வந்து பிழிந்து சாறு எடுத்து ஒரு கோப்பையில் வைத்துக்கொள்ளவும். அரை கிராம் அளவு பச்சை கற்பூரத்தை உள்ளங்கையில் எடுத்து வைத்து, அந்தப் பழச்சாற்றை தேவையான அளவு விட்டு நன்கு நசித்து ஆண்குறியின் மீது தடவி வர வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது தடவி வர வேண்டும். அதற்குள் ஆண்குறி நன்கு பருத்து ‘திண்’ணென்று ஆகிவிடும்.

♦தாது புஷ்டிக்கு - ஆண்மை பெருக :

1. தாது புஷ்டிக்கு சுத்தமான பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு விட்டு பால் குடித்தால் போதும், தாது புஷ்டியடையும். இரவில் படுக்கும் பொழுது இதைச் சாப்பிட வேண்டும்.

2. கருவேலன் பிசினை சிறு துண்டுகளாக்கி நெய்யில் பொரித்து உட்கொண்டு வந்தால் ஆண் தன்மை பெருகும். வீரியம் விருத்தியடையும். பேடித்தன்மை அழியும்.

3. மாம்பழச் சாற்றில் சர்க்கரையைப் போட்டு பாகு பதமாய் வந்ததும், அதில் சுக்கு, பேரிச்சங்காய், அரிசித்திப்லி, பரங்கிப்பட்டை, நிலப் பனைக்கிழங்கு, பூமிச்சர்க்கரைக் கிழங்கு இவைகளில் சூரணத்தைப் போட்டு நெய்விட்டு களிரி, தேனையும் சேர்த்து லேகிய பதமாய் ஜாடியில் எடுத்து வைக்கவும். இதற்கு ஆனந்த லேகியம் என்று பெயர். இதைத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் விந்து கட்டுப்படும் போக சக்தி பெருகும்.

4. காலை உணவுக்கப் பின் 3 பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு வெந்நீர் குடிக்கவும். இரவு உணவுக்குப் பின் 12 பேரிச்சம் பழங்களை உண்டு பசும்பால் அருந்தவும். இப்படி ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் கணசமான ஆண்மை பெருகும். இரவு உணவுக்குப்பின் உடனே ‘டூ பாத் ரூம்’ போகக்கூடாது. ஆண்மைக்குறைவு ஏற்படும்.

♦இச்சையைத் தூண்ட :

ஜாதிக்காய்க்கு போக இச்சையைத் தூண்டக்கூடிய குணமுண்டு. ஆண்மைக்
குறையுள்ளவர்களுக்கும் ஜாதிக்காய் பயனுள்ளதாகும். குறைபாடில்லாதவர்கள் அதிபோகம் விரும்பி இதை உபயொகித்து வந்தால் - பிறகு இது செயற்கை தூண்டியாக அமைந்து நிர்பந்தமாக உபயோகிக்கும் வழக்கத்தை உண்டுபண்ணி விடும். எனவே, குறையுள்ளவர்கள் சாப்பிடுவதே நல்லது.

♦இல்லற இன்பம் பெற :

பேரிச்சம் பழத்தைத் தேனில் ஊற வைத்து இரவில் தினமும் மூன்று சாப்பிட்டு உறவு கொள்ளலாம். அல்லது அமுக்கிராங் கிழங்கைப் பாலில் வேக வைத்து, உலர்த்தி இடித்து, கற்கண்டு சேர்த்து பசும்பாலில் காய்ச்சிக் கலந்து சாப்பிடலாம்.

♦அதிபோகத்தினால் உண்டான தளர்ச்சியைப் போக்கிக்கொள்ள :

கல்யாணப் பூசணிக்காயின் (சாம்பல் பூசணி) சாற்றை ஒரு அவுன்சுக்கும் குறையாமல் எடுத்து ஒரு தேக்கரண்டி தேனோ அல்லது கற்கண்டோ சேர்த்து சாப்பிட்டு வந்தால் அதிபோகத்தினால் உண்டான தளர்ச்சியைப் போக்கிக்கொள்ளலாம்.

(இதில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்கை மருந்துகள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கலாம்.)

வியாழன், 17 அக்டோபர், 2019

பெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் என்பதற்கான காரணங்கள் !


பெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் என்பதற்கான காரணங்கள் !

அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன். ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விடப் பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள்
அப்பாக்கள்.

ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம்.
ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான். முதலில் பெற்றெடுத்தத் தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்த சகோதரி உருவிலான தாய்.

மூன்றாவதாகத் தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய். இதில் நேரடியாகத் தனது இரத்தத்தின் மூலமாகக் கிடைத்த முத்தான மகள் தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள். பெரும்பாலும் ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள் தங்களது அப்பாவை, அம்மாவை விடஅதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது.

நேர்மையான நண்பன் தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாகக் கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் எனப் பெண்கள் எண்ணுகிறார்கள்.
பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான். தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர்
தந்தை தான் என்கின்றனர் பெண்கள். உலகை அறிமுகம் செய்தவர் பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகைக் கற்றுத் தரும் ஆசான் தந்தை தான். இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும்
கிடைக்கும் பரிசு இது.

கோபத்தைக் காட்டியது இல்லை மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை. வீட்டில் சகோதரன் வாங்கிய அளவு அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை.

முடியாது என்ற வார்த்தையே இல்லை மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், "முடியாது.." என்ற வார்த்தைகளை பிரயோகம்
செய்வதில்லை. தன்னால் முடிந்த வரை
மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள்
அப்பாக்கள்.

காவலன் வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால், அது எந்நேரமாக இருந்தாலும், கால்கடுக்கக் காத்திருந்து
அழைத்து வரும் காவலன் அப்பா. காதலைப் புரிய வைத்தவர் காதல் என்றால் என்ன, பருவத்தில் வரும் ஆசைகளும், மோகமும் என்ன, மெய்தனை எப்படி
உணர்வது என மகளுக்குள் காதலை புரிய வைப்பவர் அப்பா.

ஒவ்வொரு மகள்களின் முதல் காதலன் அப்பா தான்.சூப்பர் ஹீரோ தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும்
சூப்பர் ஹீரோ அப்பா தான்.

தைரியம் ஊட்டும் அம்மா என்ன தான் அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான். அம்மாவுக்கு எப்போதுமே தங்களது குழந்தைகள் மீது ஓர் பயம் இருக்கும் அது பயம் அல்ல,அக்கறை. ஆதலால், தைரியத்தை ஊட்ட அப்பாக்களால் மட்டும் தான் முடியும்.

மாற்றம் இல்லாதவர் ஓர் பெண்ணின் உறவில், அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி, தோன்றுவர். அவர்களுள் நிறைய
மாற்றங்களைக் காண முடியும். ஆனால், அம்மா, அப்பா மட்டும் தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள்.

பெண்களின் கண்ணீருக்கு உரியவர் கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும் உறவு அப்பா. அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீர் ஊற்றுக்குக் காரணமாகிறது. ஓர் மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஓர் உறவு அல்ல, தோழன், வழிகாட்டி, ஆசான், ஹீரோ, காவலன்,
என எண்ணற்ற பாத்திரங்களைத் தாங்கிக்
கொண்டிருப்பவர் தான் அப்பா.

ஆதலால் தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கிறார்கள்.

திங்கள், 14 அக்டோபர், 2019

கருவுறுதலை தடுக்கும் ஜங்க் ஃபுட் : ஆய்வு முடிவு


கருவுறுதலை தடுக்கும் ஜங்க் ஃபுட் : ஆய்வு முடிவு

ஜங்க் உணவுகள் இன்றைய வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாகி விட்டன. தற்போதைய சூழலில் காலத்துக்கு ஏற்றவாறு உணவு வகைகளும் மாறி வருகின்றன. ஒரு காலத்தில் அரிதாக இருந்த ஜங்க் ஃபுட் வகைகள் தற்போது மூலைமுடுக்கெல்லாம் கிடைக்கிறது.

நூடுல்ஸ், பர்கர், ஃபிரைட் சிக்கன், பிரெஞ்சு ப்ரைஸ் என ஜங்க் ஃபுட் வகைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். குறிப்பாக இளம் தலைமுறையினர் அதிகளவு இதுபோன்ற உணவுகளையே விரும்புகின்றனர். நண்பர்களுடன் வெளியே செல்லும்போதோ, ஆன்லைனில் ஆர்டர் பண்ணும்போதோ விதவிதமான ஜங்க் ஃபுட்ஸையே வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் உடலுக்கு அதிகளவு பாதிப்பு ஏற்படும் என பல ஆய்வுகள் எச்சரித்துள்ளன. இந்நிலையில், அந்த உணவுகளின் பேக்கிங்கில் உள்ள ரசாயனங்களாலும் உடலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வு ஒன்று கூறியுள்ளது.

இதுபோன்ற துரித உணவுகளின் பேக்கிங்கில் உள்ள ரசாயனம் கேன்சர், கருவுறுதலில் சிக்கல் போன்ற பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் தன்மை உடையவை என இந்த ஆய்வுகள் அதிர்ச்சியளிக்கின்றன.



பேக்கிங்கில் நச்சு

அமெரிக்காவில் மாசசூசெட்ஸில் உள்ள சைலண்ட் ஸ்பிரிங் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வின்படி, பர்கர் ரேப்பர்கள் மற்றும் பீட்சா பேக்கிங்கில் உபயோகிக்கப்படும் பெட்டிகளில் நச்சு ரசாயனங்கள் உள்ளதாக அறிவித்திருக்கிறது. இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள், 10,000 க்கும் மேற்பட்டவர்களிடம் பகுப்பாய்வு செய்தனர். ஆய்வுக்கு முந்தைய 24 மணிநேரம், 7 நாட்கள், 30 நாட்கள் மற்றும் 12 மாதங்கள் என நான்கு வெவ்வேறு கால அளவீடுகளில் அவர்கள் சாப்பிட்டதை நினைவு கூர்ந்து, அவர்களின் உணவைப் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டது.மேலும் அவர்களிடம் இரத்த பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

ரத்தத்தில் கலந்த ரசாயனம்

இந்த ஆய்வின் முடிவில் அதிக நச்சு கொண்ட பி.எஃப்.ஏ.எஸ், (Per- and polyfluoroalkyl substances - PFAS) ரசாயனம் அவர்களது ரத்தத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டில் அதிக உணவைச் சாப்பிட்டவர்கள் உடலில் கணிசமாகக் குறைந்த அளவு PFAS இருப்பதையும், துரித உணவை அடிக்கடி ஆர்டர் செய்தவர்களின் ரத்தத்தில் அதிகளவில் PFAS இருப்பதையும் நிபுணர்கள் கண்டறிந்தனர்.

இந்த ரசாயனத்தால் புற்றுநோய், மற்றும் தைராய்டு நோய் போன்றவை ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதிக மைக்ரோவேவ் பாப்கார்ன்களை உட்கொண்டவர்களின் ரத்தத்திலும் கணிசமாக பி.எஃப்.ஏ.எஸ் இருப்பதையும் இக்குழு கண்டறிந்தது. பெரும்பாலும் பாப்கார்ன் பைகளிலிருந்து வெளியேறும் ரசாயனங்களே இதற்குக் காரணம்.



கருவுறுதலைத் தடுக்கும்

பெண்கள் அளவுக்கு அதிகமாக ஜங்க் ஃபுட்களை எடுத்துக்கொள்வதாலும், அந்த பேக்கிங்கில் உள்ள ரசாயனத்தாலும் பெண்களின் கருத்தரிக்கும் திறனையே முற்றிலும் குறைத்துவிடும் என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது. இதனால் பெண்கள் இதுபோன்ற உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. பெண்களுக்கு கருவுறுதலைத் தடுப்பது போலவே, ஆண்கள் அதிகளவு இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் ஆண்மையைக் குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வுக்குழு நிபுணர்கள் "உணவு பேக்கேஜிங்கிலிருந்து பி.எஃப்.ஏ.எஸ் ரசாயனங்கள் உணவுக்கு இடம்பெயர்வது இந்த வேதிப்பொருட்களின் வெளிப்பாட்டின் முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று எங்கள் முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆய்வின் பொதுவான முடிவு என்னவென்றால், உங்கள் உணவுக்கும் உணவு பேக்கேஜிங்கிற்குமான இடைவெளி எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அதே அளவுக்கு பி.எஃப்.ஏ. எஸ் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் ஆகியவற்றின் பாதிப்பும் குறைவாக இருக்கும்.

இந்த சமீபத்திய கண்டுபிடிப்புகள் நுகர்வோர் ரசாயன பாதிப்புகள் கொண்ட உணவு பேக்கேஜிங்களை தவிர்க்கவும், பாதுகாப்பான உணவு பேக்கேஜிங் பொருட்களை உருவாக்க உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவும் உதவும்" எனக் கூறியுள்ளனர்.

தன் மகளை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு தகப்பனின் உணர்வுப் பூர்வமான எச்சரிக்கை...!!!


தன் மகளை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒரு தகப்பனின் உணர்வுப் பூர்வமான எச்சரிக்கை...!!!

தன் மகளை சில விசயங்களுக்காக அடிக்கடி கடிந்து கொள்வதால் அவள் அப்பாவிடம் கேட்டாள்... ஏம்பா என்னை இப்படி கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்...??? என்னை கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று...

ஆனால் அதை அப்பா சற்று கஷ்டமாகவே உணர்ந்தார்... இதை எப்படி இவளுக்கு சொல்லிக்கொடுப்பது என யோசித்தார்...

ஒரு நாள் மகள் தன் தகப்பனிடம் வந்து கேட்டாள்.. அப்பா நான் பட்டம் விட்டு விளையாடபோகிறேன், நீங்களும் வாங்க.., என அழைத்துக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றாள்...

பட்டத்தை நூலில் கட்டி பறக்கவிட்டு மகிழ்ந்தாள்... அப்படி மகிழ்ந்திருக்கும் வேளையில் அப்பா கேட்டார்... பட்டம் மேலே பறக்க, பறக்க அழகாய் இருக்கிறது.... ஆனால் அதன் விருப்பம் போல பறக்க முடியவில்லை.. அதற்கு தடையாய் இருப்பது என்னம்மா??? என கேட்டார்...

மகள் பட்டென பதில் சொன்னாள் இந்த நூல் தான் அப்பா அதை தன் இஷ்டத்திற்கு விடாமல் கட்டி வைத்திருக்கிறது என்று சொன்னாள்...

அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார்... பட்டமும் தன் இஷ்டபடி பறந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே கிழிந்த காகிதமாய் கீழே விழுந்தது...

அப்பா சொன்னார்.. மகளே.. இந்த பட்டத்தை தன் இஷ்டபடி பறக்கவிடாமல் தடுக்கவில்லை... நேரான வழியில் இந்த பட்டம் பறந்து உயரங்களை அடைய இந்த நூல் உதவியாய் இருக்கிறது...

இதேபோலத்தான் மகளே உன் அப்பாவாகிய நானும் ஒரு நூல்தான்... நீதான் அந்த பட்டம்... நீ என்னுடைய பேச்சை கேட்டு அதன்படி நடப்பாயெனில் என் பாதுகாவலுடன் உயர பறக்கலாம்... உன் இஷ்டப்படி வாழ நினைத்தால் அந்த பட்டம் கிழிந்து காகிதம் ஆனது போல உன் வாழ்க்கையும் சீரழிந்துவிடும்...

இப்போது புரிந்திருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதனை... நூலாகிய என்னை அறுத்துவிடாதே என்று சொல்லும்போதே மகள் தன் அப்பாவை கட்டி அணைத்துக் கொண்டாள்...!!!

ஆம் அன்பான பிள்ளைகளே... உங்களுக்கு இனிமையாய் தோன்றுகின்ற வழிகள் ஏராளம் இருக்கலாம்.. ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானது...

எனவே பெற்றோருக்கு கீழ் படிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் இனிய வாழ்வு உங்களை வரவேற்கும்...!!!

அப்பா அம்மாவின் அன்பும், கண்டிப்பும் இருந்தால் மகள், மகனின் வாழ்வு இனிமையாக அமையும்...

எதற்கும் ஒரு காலம் வரும்


‘’எதற்கும் ஒரு காலம் வரும்"..

ஒருவர் நம்மிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டால் நாமும் அவரிடம் அப்படியே நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது தான் பழி வாங்கும் தன்மை.

இந்தப் பழி வாங்கும் தன்மையை விட்டு விட்டால் அதுதான் சகிப்புத்தன்மை.  ஒரு செயலை வெற்றிகரமாக சாதிக்க வேண்டும் என்றால் சகிப்புத் தன்மை அவசியம் வேண்டும்.

அந்த சகிப்பு தன்மை இருந்தால் தான் நிரந்தரமான வெற்றி கிடைக்கும், அமைதியும் கிடைக்கும் ..

குடும்பம் தொடங்கி நாடு வரையில் அனைத்து இடங்களிலும் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டால் அரிய பல செயலை சாதிக்கலாம்..

முல்லா வழக்கமாக சாப்பிடும் உணவகத்திற்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த ஊரில் உள்ள முரடன் ஒருவன், உணவகத்திற்குள் வந்தான்.

அவனைப் பார்த்த மற்ற வாடிக்கையாளர்கள் ஓடி விட்டார்கள். முல்லா இதைக் கவனித்தார்.
இருந்தாலும், அந்த முரடனைப் பார்த்து பயப்படாமல் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.

முல்லாவின் அருகில் வந்த முரடன், முல்லாவின் தலைப்பாகையை தட்டி விட்டுச் சென்றான். இப்படி ஒருமுறை அல்ல. ஒவ்வொரு நாளும் முல்லா வழக்கமாக அந்த உணவகத்திற்குச் சாப்பிட வரும்போதெல்லாம்,

அந்த முரடன் வந்து முல்லாவின் தலைப்பாகையை தட்டி விட்டுச் செல்வதை வாடிக்கையாக வைத்து இருந்தான்.

இதைப் பார்த்த அங்கு இருந்தவர்கள் முல்லாவிடம் வந்து, “உங்களுக்கு இந்நாட்டு அரசர் நண்பர் தானே, .இந்த முரடனைப் பற்றி மன்னரிடம் சொன்னால் எல்லோருக்கும் நிம்மதியல்லவா?” என்றார்கள்.

அதற்கு முல்லா, ''அந்த முரடனிடம் விரோதம் எதற்கு?. ஒருவேளை அவன் தண்டனையில்  இருந்து விடுதலை ஆன உடன், நான் அவனுக்கு எதிரியாகத் தெரிவேன். எனது வேலை அவனுடன் மோதிக் கொண்டு இருப்பதல்ல.” என்றார்.

அப்படி என்றால் இந்த முரடனின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது” எனக் கேட்டனர் மக்கள்.
“எதற்கும் ஒரு காலம் வரும்" என்றார் முல்லா.

ஒருநாள். வழக்கம் போல உணவகம்  வந்து கொண்டிருந்தார் முல்லா. எதிரே மன்னரின் காவலரும் வந்து கொண்டு இருந்தார். முல்லாவும் அந்தக் காவலரும் நண்பர்கள்.

தன்னுடன் வந்து சிற்றுண்டி சாப்பிடும்படி காவலரை அழைத்தார் முல்லா. அவரும் சம்மதித்து இருவரும் உணவகத்திற்கு வந்து அமர்ந்தார்கள்.

அப்போது, அந்த முரடன் வருவதை கவனித்து விட்டார் முல்லா. உடனே அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. தனது நண்பரான மன்னரின் காவலரிடம்,

“நண்பரே என்னுடைய தலைப்பாகை உங்களுக்கு
அழகாக இருக்கும். அணிந்து பாருங்கள். ” என்றார் முல்லா. காவலரும் முல்லாவின் தலைப்பாகையை அணிந்தார்.உடனே முல்லா, ”இங்கேயே உட்கார்ந்து இருங்கள்.
இதோ வந்து விடுகிறேன்.” என்ற முல்லா, அங்கு இருந்து நழுவினார். முரடன் வந்தான். வழக்கமாக முல்லா அமர்ந்து இருக்கும் இருக்கையில் மன்னரின் மெய்க்காவலர் அமர்ந்து இருப்பதை கவனிக்காமல்,

தலைப்பாகையை பார்த்து முல்லா தான் அமர்ந்து இருப்பதாக நினைத்து தலைப் பாகையை தட்டி விட்டான் முரடன். மன்னரின் மெய்க்காவலருக்கு வந்ததே ஆத்திரம். தனது வாளை உருவி முரடனின் தலையை ஒரே சீவாக சீவிக் கொன்றார்.

இதைப் பார்த்த மக்கள் மகிழ்ந்தார்கள். முல்லாவைப் பாராட்டிப் பேசினார்கள்.

ஆம்.,நண்பர்களே..,

மனித குலம் வாழ்வதற்குத் தேவையான அன்பு, பரிவு, ஒற்றுமை ஆகிய பல உயர்ந்த உணர்வுகளுக்கு அடிப்படையாகக் குறைந்தபட்சம் "சகிப்புத் தன்மை" ஆவது நம்மிடையே இருக்க வேண்டும்...

அறுபதாம் கல்யாணம் என்றால் என்ன...???



அறுபதாம் கல்யாணம் என்றால் என்ன...???

அறுபதாம் கல்யாணம் என்பது மணமகனுக்கு 60 வயது ஆகும் போது நடத்தப்படுவது

60 வயசுக்கு என்ன விஷேசம்...???

சாதாரணமா கல்யாணம் ஆகி,

குழந்தைகள் ஈன்று அவர்களுக்கு கல்யாணம் முடித்து

பேரன் பேத்திகள் எல்லாம் ஒருவருக்கு இருக்கும்

நம்மள போல வேலை செய்பவர்களும்

ரிடையர்டு ஆகி ரிலாக்ஸ் ஆகிற நேரம்

அப்போது நடத்தப்படும் இந்த அறுபதாம் கல்யாணம் புதிய வாழ்க்கை தொடங்குகிறது என்பதைக் காட்டுகிறது...

கால ஓட்டத்தில் தொலைத்து விட்ட நிம்மதியான வாழ்க்கையை நிதானித்து அனுபவித்து

வாழ்க்கையைச் சொந்தங்கள் சுற்றங்கள் நட்புகள் இவர்கள் புடை சூழ வாழ்ந்து பார்க்கச் சொல்லும் காலம் இது

20 வயது வரை ஒரு நம்மை தயார் செய்து கொள்ளும் வாழ்க்கை

20 - 40 வரை உச்சத்தை தொடத் துடிக்கின்ற வாழ்க்கை

40-60 வரை பொறுப்பான குடும்பத் தலைவனின் வாழ்க்கை

60 க்கு மேல் எந்த ஒரு மனிதனும் தெளிவான வாழ்க்கையை மனதிற்கு பிடித்த வாழ்க்கையை அனுபவிக்கலாம்

60 க்கு மேலான வாழ்க்கையில் ஆரோக்யமான ஒவ்வொரு நாளும் நமக்கு அளிக்கப்பட்ட வரங்கள்.

அறுபதாம் கல்யாணத்தைப் பற்றி இந்து மதம் என்ன சொல்கிறது....???

மனிதன் தனக்கு

"ஆதிபௌதீகம்,
ஆதிதைவீகம்,
ஆதிஆத்மீகம்"

என்கிற இயற்கை,

தெய்வ குற்றம்,

தன் செயலால் ஏற்பட்ட பாவகாரிய பலன்கள் ஆகியவை வந்து

தீயபலன்களைக் கொடுக்காமல் இருக்கவும்

அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக

அவனது 59, 60, 61 மற்றும் 70 வயது துவக்கம் ,

78 ஆம் ஆண்டு துவக்கம்,

80 ஆம் ஆண்டு நிறைவு,

100 ஆம் ஆண்டு நிறைவு ஆகிய காலகட்டங்களில்

அதற்குரிய சாந்தி சடங்குகளை செய்து கொள்ள வேண்டும் என்று இந்து மதம் வலியுறுத்துகிறது

இது வரை வாழ்ந்த கட்டாயங்களினால் ஆன வாழ்க்கையில்

நடந்த தவறுகளுக்கு வருந்தி...

குடும்ப பாரம் இறக்கி வைத்து,

ஒரு நல்ல ஆத்மாவாக வாழ உறுதியெடுத்துக் கொள்ளுதல் இதில் முக்கியம்..

பெயரிடப்பட்ட தமிழ் ஆண்டுகள் அறுபது

பிரபவ, விபவ என்று
சாஸ்திரங்களின் படி மனிதனுக்கு என்று வழங்கப்பட்ட நிறைந்த ஆயுள் என்பது 120

கிருஷ்ணர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார் என்கிறது புராணங்கள்

பகல் இரவு என்பது போல

60 ஆண்டுகள் முதல் சுற்று முடிந்து இரண்டாம் அறுபது ஆண்டுகள் ஆரம்பமாகிறது

முதல் அறுபது ஆண்டுகளில் லௌகீக(கர்ம) வாழ்க்கை வாழ்கிறோம்

இரண்டாம் அறுபது ஆண்டுகள் கடமைகள் முடித்து தர்ம வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம்

அறுபதாம் கல்யாணம் செய்வதால்

1. நாம் நம் நிறைவான கர்ம வாழ்க்கை வாழ்ந்ததை அறிவிக்கிறோம்

2. கர்மத்தின் காரணமாக நாம் செய்த பாவங்களுக்கு வருந்தி

பரிகாரம் என்ற பெயரில் மனதை சுத்தமாக்கிக் கொள்கிறோம்

3. இனி தர்ம வழியிலான பொதுவான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உறுதிகொண்டு

இவ்வளவு காலம் கூட வந்த மனைவியை மீண்டும் மணந்து

இவ்வளவு காலம் கடமைகளினால் தரமுடியாத நல்லற வாழ்வை தருகிறோம்

இதைச் செய்யா விட்டால் ஒன்றும் பெரிய தவறு இல்லை

நாம் செய்த பாவங்களை எண்ணி வருந்தி புதுவாழ்வை தொடங்கா விட்டாலும்

உடன் வாழ்ந்து நம்மைத் தாங்கிய மனைவியின் தியாகங்களை எண்ணிப் பார்க்கவாவது அறுபதாம் கல்யாணம் செய்யலாம் .

ஆணின் வாழ்க்கையில் பெண்களின் முக்கிய தருணங்கள்..!


ஆணின் வாழ்க்கையில் பெண்களின் முக்கிய தருணங்கள்..!

ஆண் இன்றி பெண்ணும், பெண் இன்றி ஆணும் உறவு அமையாது. ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் பெண் என்பவள் பல பாத்திரங்கள் கொண்டு பயணிக்கிறாள். அதில், தாய், தங்கை, தோழி, காதலி, மனைவி, மகள் போன்ற பாத்திரங்கள் தான் ஆணின் வாழ்கையை முழுமைப்படுத்துகிறது. இவர்கள் ஓர் ஆணின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமாக இருக்கிறார்கள், இவர்களது பங்கு ஆணின் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்க்கலாம்..

தாயாக ஓர் ஆணின் வாழ்கையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறாள். இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்துவது மட்டுமின்றி, இவள் மூலமாக தான் உறவுகளும் நமக்கு அறிமுகம் ஆகிறது.

ஓர் ஆண் முதன் முதலாக காவலனாக இருப்பது அவனது சகோதரிக்கு தான். ஒவ்வொரு மகளின் முதல் ஹீரோ அப்பா என்றால், முதல் காவலன் அவளது சகோதரனாக தான் இருக்க முடியும்.

உறவினர், தாய், சகோதரிக்கு பிறகு ஓர் ஆணுக்கு கிடைக்கும் முதல் வெளியுலக பெண் உறவு, தோழி தான். ஓர் உண்மையான தோழியுடன் ஆண் தன் வாழ்க்கையின் அனைத்து சுக, துக்கங்களையும் பகிர்ந்துக் கொள்கிறான். ஏனெனில், அந்த ஒரு தோழியினால் தான் அவனது துக்கத்தை குறைக்கவும், சுகத்தை பெருக்கவும் முடியும்.

சிலருக்கு காதலி மனைவியாக அமைகிறார்கள், சிலருக்கு மனைவி தான் காதலியாக அமைகிறார்கள். ஏதோ ஓர் வகையில் அனைவருக்கும் ஓர் காதலில் கிடைத்துவிடுகிறாள். ஒவ்வொரு ஆண்மகனின் பருவ வயது ஏக்கம் காதல். ஆனால் அது பதின் வயதை தாண்டியும் நிலைத்து நின்றால் மட்டுமே புனிதம் ஆகிறது. காதல் என்பது ஓர் ஆணின் வாழ்க்கையை சொர்க்கமாக்குகிறது.

தன் துணையை நம்பி உடல், பொருள், ஆவியில் பாதி அங்கம் கொடுப்பவள் மனைவி. மனைவி தவறு செய்யும் கணவன் கண்டிப்பான், அதே கணவன் தவறு செய்யும் போது மனைவி திருத்துவாள். இதுதான் கணவன், மனைவிக்கு இடையில் இருக்கும் வித்தியாசம். உண்மையிலேயே மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் தான்.

ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும், பெண்ணுடனான உறவு என்பது, ஓர் பெண்ணின் கருவறையில் தொடங்கி, மற்றொரு பெண்ணின் கருவறையில் முடிவடைகிறது. தாயின் கருவறையில் இருந்து இவ்வுலகில் தொடங்கி, மனைவியின் கருவில் இருந்து உதித்த மகள் எனும் புதிய உலகம் என ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் இரண்டு உலகங்கள் இருக்கின்றன.

முதுமை எட்டிய பிறகு ஓர் ஆண் அதிகம் மனம் மகிழ்ந்து புன்னகைக்கிறான் எனில் அதற்கு முக்கிய காரணம் அவனது உயிரில் இருந்து ஜனித்த உயிரின் உயிராக தான் இருக்க முடியும். தாத்தா ஆரம்பித்து பேத்தி கேட்கும் விடைகளுக்கு ஏதேனும் ஓர் பதிலை அவன் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறான்...

வாழ்க்கை தத்துவம்


#வாழ்க்கை_தத்துவம் !!

♥அழிவை தருவது - #ஆணவம்...

♥ஆபத்தை தருவது - #கோபம்...

♥இருக்க வேண்டியது - #பணிவு...

♥இருக்கக்கூடாதது - #பொறாமை...

♥உயர்வுக்கு வழி - #உழைப்பு...

♥கண்கண்ட தெய்வம் - #பெற்றோர்...

♥செய்ய வேண்டியது - #உதவி...

♥செய்யக்கூடாதது - #துரோகம்...

♥நம்பக்கூடாதது - #வதந்தி...

♥நழுவ விடக்கூடாதது - #வாய்ப்பு...

♥நம்முடன் வருவது - #புண்ணியம்...

♥பிரியக்கூடாதது - #நட்பு...

♥மறக்கக்கூடாதது - #நன்றி...

♥மிகமிக நல்லநாள் - #இன்று...

♥மிகப்பெரிய தேவை - #அன்பு...

♥மிகக்கொடிய நோய் - #பேராசை...

♥மிகவும் சுலபமானது - #குற்றம்_காணல்...

♥மிகப்பெரிய வெகுமதி - #மன்னிப்பு...❣ ❣ ❣

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

பெண்ணை பெற்ற எல்லா தந்தைக்கும் இது சமர்ப்பணம்...


பெண்ணை பெற்ற எல்லா தந்தைக்கும் இது  சமர்ப்பணம்...

♥"அப்பாவை அதிகம் விரும்பும் பெண்களும் அதில் அடங்கியுள்ள ரகசியங்களும் -கட்டாயம் ஆண் பெண் இருபாலாரும் வாசிக்கணும் !!

♥உலகத்தில் எந்த மொழியில் அல்லது எந்த இனத்தில் இருந்தாலும் அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன்.

♥வாழ்க்கையின் ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள்.

♥உலகில் ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம். ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான்.

♥முதலில் பெற்றெடுத்த தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்த சகோதரி உருவிலான தாய். மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான

♥இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும். ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள் தங்களது அப்பாவை, அம்மாவை விட அதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது.

1) #நேர்மையான #நண்பன்:

♥தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் என பெண்கள் எண்ணுகிறார்கள். பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான். தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர் தந்தை தான் என்கின்றனர் பெண்கள்.

2) #உலகை #அறிமுகம் #செய்தவர் :

♥பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான். இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது. கோபத்தை காட்டியது இல்லை மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை.

3) #மகிழ்விப்பவன்:

♥வீட்டில் சகோதரன் வாங்கிய அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை. முடியாது என்ற வார்த்தையே இல்லை மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், “முடியாது..” என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை. தன்னால் முடிந்த வரை மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள் அப்பாக்கள்.

4) #காவலன் :

♥வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால், அது எந்நேரமாக இருந்தாலும், கால்கடுக்க காத்திருந்து அழைத்துவரும் காவலன் அப்பா.

5)#நண்பன் :

♥காதலை புரிய வைத்தவர் காதல் என்றால் என்ன, பருவத்தில் வரும் ஆசைகளும், மோகமும் என்ன, மெய்தனை எப்படி உணர்வது என மகளுக்குள் காதலை புரிய வைப்பவர் #அப்பா. ஒவ்வொரு மகள்களின் முதல் காதலன் அப்பா தான்.

6) #சூப்பர் #ஹீரோ :

♥தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும் சூப்பர் ஹீரோ அப்பா தான். தைரியம் ஊட்டும் அம்மா என்னதான் அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான்.

7) #தைரியம் #அளிப்பவன்:

♥அம்மாவுக்கு எப்போதுமே தங்களது குழந்தைகள் மீது ஓர் பயம் இருக்கும் அது பயம் அல்ல, அக்கறை. ஆதலால், தைரியத்தை ஊட்ட அப்பாக்களால் மட்டும் தான் முடியும்.

😎 #இறுதி #வரை #உறுதி:

♥மாற்றம் இல்லாதவர் ஓர் பெண்ணின் உறவில், அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி, தோன்றுவர். அவர்களுள் நிறையா மாற்றங்களை காணமுடியும். ஆனால், அம்மா, அப்பா மட்டும் தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள்.

9)#அப்பா:

♥பெண்களின் கண்ணீருக்கு உரியவர் கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும் உறவு அப்பா. அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீர் ஊற்றுக்கு காரணமாகிறது. ஓர் மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஓர் உறவு அல்ல, தோழன், காதலன், ஹீரோ, காவலன் என எண்ணற்ற பாத்திரங்களை தாங்கிக் கொண்டிருப்பவர் தான் அப்பா. ஆதலால் தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கிறார்கள்.

வெள்ளி, 11 அக்டோபர், 2019

ஜப்பானிய மக்களிடம் நாம் கற்றுகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்...!


ஜப்பானிய மக்களிடம் நாம் கற்றுகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்...!

*நேர்மையாக இருப்பது. அதே நேர்மையை பழகுபவர்களிடமும் எதிர்பார்ப்பது.
பர்சனலாகவே பொய் பேசுவதை வெறுப்பது.

*அடுத்தவரின் விசயத்தில் மூக்கை நுழைக்காமல் தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருகிறார்கள்.

*பொது இடங்களில், தன்னால் யாருக்கும் இடையூறு வந்து விடக்கூடாது என்ற விசயத்தில் மிகவும் கவனமாக இருகிறார்கள்.

*ரயில் பயணங்களில் செல்போன் பேசாமல் இருப்பது. முக்கியமாக சத்தம் போட்டு பேசாமல் இருப்பது. முடிந்த வரை பேசாமல் இருகிறார்கள்.

*தன் தாய்மொழியை அதிகமாக நேசிகிறார்கள்.

*ரயிலில் ஏறும்போதும் அல்லது பஸ்களில் ஏறும் போதும்(கூட்டமாக இருந்தாலும், இல்லாமல் இருந்தாலும்) யாருடைய உத்தரவின்றியும் தானாகவே க்யூவில் நின்று, பயணிகள் இறங்கியவுடன் ஒன்றன் பின் ஒன்றாக ஏறுகிறார்கள்.

*அலுவலகத்திற்கு குறித்த நேரத்திற்குள் இருகிறார்கள்.

*வேலை நேரத்தில் செல்ஃபோன் பேசாமல் இருகிறார்கள்

*12 மணி நேரம் வேலை செய்தாலும் சலிக்காமல் வேலை செய்வது. வேலை நேரத்தில் ஓ.பி அடிக்காமல்இருகிறார்கள்.

*எல்லா விசயங்களிலும் சிஸ்டமேட்டிக்காக இருகிறார்கள்

*விடுமுறை நாட்களை பொழுது போக்கிற்கு நன்கு பயன்படுத்துவாரகள்.

*அடுத்தவர்களின் பொருளுக்கு ஆசைப்பட மாட்டார்கள்.!


* சுற்றுப் புறத்தை மிகச் சுத்தமாக பேணிக் காப்பது,(உதாரணத்திற்கு குப்பைகளை எல்லாம் மட்கும்/மட்காத குப்பைகளாக பிரித்து கார்ப்பேஜில் போடுவது.ரோட்டில் எச்சில் துப்பாமல் இருப்பது,ரோட்டில் எவ்வித அசுத்தமும் செய்யாமல் இருப்பது, ரோட்டில் புகை பிடிக்காமல் இருப்பது,

* எஸ்கலேட்டர், அலுவலக படிக்கட்டுகளில் போகும் போது ஓரமாக நின்று கொண்டு, அவசரமாக செல்வோருக்கு எப்போதும் வழி விட்டு செல்வது.

* மொழி தெரியாத நபர்கள் கேட்கும் விசயத்தை சலிக்காமல் கேட்டு அவர்களுக்கு உதவி செய்வது. உதாரணம். ஏ.டி.எம் செல்ல வழி கேட்டால் அந்த இடத்திற்கு அழைத்து சென்று விடுகிறார்கள்.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

வியாழன், 10 அக்டோபர், 2019

போனஸ் என்றால் என்ன..? போனஸ் எப்படி உருவானது?



போனஸ் என்றால் என்ன..? போனஸ் எப்படி உருவானது?

இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வார சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்தது...!! ( வருடத்திற்கு 52 வாரங்கள்)

ஆங்கிலேயர்கள் மாத சம்பள முறையை அமுல் படுத்தினார்கள் 4வாரங்களுக்கு ஒரு சம்பளம் என கணக்கிட்டு மாத சம்பளமாக கொடுத்தனர்...!!(12×4=48 வாரங்கள்)

அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் 4வாரத்திற்கு ஒரு சம்பளம் என்று கணக்கிட்டு பார்த்தால் வருடத்திற்கு 13 சம்பளம் வர வேண்டும்.

இந்தியர்னா சும்மாவா?
அதனை தரும்படி 1930-1940 களில் மஹாராஷ்டிரா வில் உள்ள தொழிற்சங்க ஊழியர்கள் தங்களது 1 மாத சம்பளம் வஞ்சிக்கப் படுவதாக போராடினார்கள்.

அதன் விளைவாக அந்த ஒரு மாத சம்பளத்தை எப்போது எப்படி கொடுக்கலாம் என பிரிட்டிஷார் தொழிற்சங்க தலைவர்களுடன் ஆலோசனை செய்தார்கள்...!!
.
அப்போது தான் தீபாவளி / தசரா பண்டிகை பிரசித்தி பெற்ற பண்டிகையாதலால் அதனையொட்டி கொடுத்தால் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அது வசதியாக இருக்கும் என கோரிக்கை வைத்ததின் விளைவாக போனஸ் என்ற பெயரில் முதன் முதலில் 1940ம் வருடம் ஜூன் மாதம் 30ம் தேதி வழங்கப்பட்டது...!!

பின்நாட்களில் அது லாப விகிதத்தை கணக்கிட்டு விஸ்தரிக்கப்பட்டது.

*_ஆக போனஸ் என்பது விடுபட்ட-கொடுக்கப்படாத-  நமக்குரிய (சேர வேண்டிய) ஒரு மாத சம்பளம்_*

இன்றைக்கு பல மக்களுக்கு இந்த சரித்திர நிகழ்வு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. !!

#தெரிஞ்சிக்கோங்க_மக்களே.

செவ்வாய், 8 அக்டோபர், 2019

நம் உணவில் சிறுதானியங்கள்... ஏன் அவசியம்?... தெரிந்து கொள்ளுங்கள்..!! சிறுதானியங்களும்... அதன் பயன்களும்...!


நம் உணவில் சிறுதானியங்கள்... ஏன் அவசியம்?... தெரிந்து கொள்ளுங்கள்..!!
சிறுதானியங்களும்... அதன் பயன்களும்...!


👉 பாரம்பரிய சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

👉 அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்தும், பைடிக் அமிலம் குறைந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்களை கொண்டது.

👉 நோய் நம்மை நெருங்காமல் ஆரோக்கியமாக வைத்திருக்க சிறுதானியக் கஞ்சியும், கூழும் உதவி செய்யும். சிறுதானிய உணவான வரகு, கல்லீரலில் தேங்கியுள்ள பித்தநீரை வெளியேற்ற உதவும்.

👉 அதிகமாக ஆல்கஹால் உட்கொள்பவர்களுக்கு, உடல் பருமன் ஏற்பட்டு, செரிமானமின்மையால், பித்தக்கற்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அவர்களுக்கு வரகு உணவு நல்ல மருந்து.

👉 குடல் புண் மற்றும் உணவுக்குழாயில் ஏற்படும் புண்ணுக்கு சாமை நல்ல மருந்து. உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றின் அளவையும் கட்டுக்குள் வைக்க உதவும்.

👉 இளைத்த உடல் வலுவாகவும், உடல் எடை கூடவும் தினை உதவுகிறது. வயதானவர்களுக்கு மூட்டுகளில் உள்ள தேவையற்ற நீரினை நீக்க தினை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.

👉 மேலும், நாள்பட்ட சிறுநீரகக் கோளாறுகள், கால் வீக்கம், முகவீக்கம் ஆகியவற்றை குறைக்க உதவும். குழந்தை பெற்ற பெண்களுக்கு கர்ப்பப்பையில் உள்ள கசடுகளை வெளியேற்றவும், தாய்ப்பால் சுரக்கவும் தினை பயன்படுகிறது.

👉 பட்டைத் தீட்டப்படாத சிவப்பு அரிசியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் வாய் ஓரங்களில் ஏற்படும் புண் குணமாகும். சர்க்கரை நோய் கட்டுப்படும். புரதம் இதில் அதிகம் இருப்பதால், எலும்புகளின் வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.

👉 சோளம் செரிமானக் கோளாறைச் சரிசெய்யும். உடல்பருமனை குறைக்க உதவும். செல்களை புத்துணர்வு பெறச்செய்யும். செல்களின் வளர்ச்சிக்கு உதவும்.

👉 கேழ்வரகு உடல்பருமன் குறைய உதவும். சர்க்கரைநோயைக் குணப்படுத்த உதவும். பெண்களின் மாதவிடாய் கோளாறுகளைச் சரிசெய்யும்.

👉 கேழ்வரகுக்கூழ் அற்புதமான உணவு. பித்தத்தால் ஏற்படும் உடல் வெப்பத்தைக் கேழ்வரகு கட்டுப்படுத்தும்.

👉 கம்பு மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும். வெயில் காலத்தில் ஏற்படும் தலைச்சுற்றல், கிறுகிறுப்பு, நாவறட்சி போன்றவை நீங்க மோரில் கலந்து பருகலாம்.

👉 சிறுதானியங்கள் மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்குச் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது.

👉 ஏனென்றால் சிறுதானியங்களில் உள்ள உயர்ந்த அளவு மெக்னீசியம் மாதவிடாய் சுழற்சியின்போது பெண்களுக்கு ஏற்படும் தாங்க முடியாத வலி மற்றும் முதுகுவலியினை வராமல் தடுக்கிறது.

👉 சிறுதானியங்களில் உள்ள சத்துக்கள் புதிய செல்கள் வளர்வதை ஊக்குவிக்கின்றன. மேலும் தோலினை இளமையாகவும், பொலிவுடனும் தோற்றமளிக்க உதவுகின்றன.




திங்கள், 7 அக்டோபர், 2019

உலகிலேயே உயரமான பெண் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஞ்சலினா ஸ்டிஃபேன்.


உலகிலேயே உயரமான பெண் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஞ்சலினா ஸ்டிஃபேன். இவரது உயரம் 9அடி 7 இன்ச். எடை 198 கிலோ. உடன் நிற்பவர் நம்மைப்போல 5அடி 2 இன்ச் உயரம் கொண்ட பெண். அப்பா!!! எவ்ளோ உயரம்!!!!!!

பெண் ஜென்மம்


பெண் ஜென்மம்

ராக்காயிக்கு இருப்பு கொள்ளவில்லை... எங்கே தான் போச்சு இந்த கர்மம் புடிச்ச ரேஷன் கார்டு.... வீட்ல எங்க தேடியும் காணலியே... ச்சே... வீட்டுல நானு, எம்மவன், புருஷன் மருதும் தான்..... எனக்கும் நல்ல நாபகம் இருக்கு..... போன ரேசன் வாங்கிட்டு வந்து சாமி படத்துக்கு கீழ இருக்குற ஆணில எப்பவும் தூங்குற மஞ்சபைல தான் போட்டு வச்சேன். வீடாம் பெரிய வீடு... இருக்குறதே ரெண்டு, மூணு பானை.... நாலு சட்டி, ஒரு பாய் , ரெண்டு தலாணி.... எங்கன போச்சுனே தெரியலியே.... நானும் எடுக்கல, வெளிய இருந்தும் ஒரு பய வந்து எடுத்துருக்க முடியாது. எடுத்துட்டு போயி என்னத்த செய்ய முடியும். அவன் தான் அவனே தான் எடுத்ருப்பான் , என்று புருஷன் மேல் தான் சந்தேகம் வந்தது..... அப்படியே சோற்றையும் வடித்துவிட்டாள். ' நேத்து வெச்ச மீன்கறி மீதி இருக்கு, இன்னிக்கு மட்டும் தான் அரிசி இருக்கு, நாளைக்கு என்ன செய்ய' 'ஐயோ என்றிருந்தது அவளுக்கு..... இந்த கார்டு எங்கனே போயிருக்கும்... எங்கனே தேடுனாலும் இல்லியே,..... பக்கம் பக்கம் இருக்குரவ எல்லாம் மூட்ட மூட்டையா கொண்டு பொய் வீட்டுல அடுக்குவாளுகளே... கர்மம் பிடிச்ச கார்டு.... இப்படி எல்லாம் எண்ண அலைகள் மனமெனும் சுவற்றில் மோதி ஒலிக்க, அவன் கணவன் வந்து விட்டிருந்தான்.

காலையும், கையையும் திண்ணையில் இருந்த சருவத்தில் கழுவிவிட்டு ,

"ஏ ராக்காயி சோறு குடுடி..." என்று வந்தான் மருது.

அவளும் சோறும், பழைய மீன்குழம்பும் கொண்டு வைத்தாள்.

"இன்னா சோறும், பழைய மீன்கறியும் தானா, தொட்டுக்க வேற ஏதும் இல்லியா?" என்று கேட்டான் சலிப்புடன்.

"இந்தேரு, இது கெடைச்சதே பெருசுன்னு நெனச்சுக்கோ" என்றாள் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு,

"ஏன் ஒரு கருவாடுமா பொரிக்க இல்ல" என்று கேட்டான்.

"ஏயா கையில பத்து பைசா இல்ல, வயலு வேல தொடங்கினா காசு வரும்.... இன்னியோட அரிசியும் தீரும்.... காலங்காத்தால இருந்தே தேடுறேன் இந்த கார்ட காணல, ஆமா நீ பாத்தியா? என்று அவள் கேட்டதும் அவனுக்கு புரை ஏறியது...... தண்ணி எடுத்து வந்து வைத்தாள்.

"வெள்ளம் கூட திங்கரப்போ எடுத்து வெய்க்க துப்பு இல்லியோ" என்று சொல்லிவிட்டு தண்ணீரைக் குடித்தான்.

"அதான் மொண்டு குடுத்தாச்சு.... நீயும் குடிச்சாச்சு..... இன்னாத்துக்கு இபோ எகிறுற...விடேன்....ஆமா நீ கார்ட பாத்தியா"

"திங்குற புருசனுக்கு தண்ணி மொதவே எடுத்து வெச்சு குடுக்க துப்பு இல்ல, இதுல வாய்கிழிய பேச்சு வேற"

" இப்ப என்னா நீ புரை ஏறி செத்தா போயிட்ட"

"இப்ப நான் சாவணும்னு சொல்லுதியோ.... இல்ல தெரியாம தான் கேக்கேன், சொல்லு"

"இப்ப இன்னா சொன்னேன்னு இப்பிடி விழுந்து லாவுற...??"

"ஓ..... ஏண்டி தண்ணி வெய்க்க துப்பில்லியான்னு கேட்டா நாயாட்டம் உன்ன லாவுரியானு கேக்குற...,நா என்னா இப்போ உனக்கு அம்புட்டு கேவலமா இருக்கேனோ"

"அப்பா...சாமி.... கொஞ்சம் வாய மூடுதியா ..... சும்மா ... 'ஒணக்க ஓலைல ஒண்ணுக்கு போனது போல' சும்மா தொன தொனனு .... ஆமா உனக்கெல்லாம் வாய் வலிக்காதா.....?..."

"இந்தேரு .... எளிச்சு வந்தேன்னு வச்சுக்கோ ..... மிதி மிதின்னு மிதிச்சு தள்ளிடுவேன்.... ஆமா... சும்மா ஒண்ணுக்கு மண்ணுக்குனு"

"செரி அத்த விடு..... கார்டு எங்க?"

"எனக்கு இன்னடி தெரியும்..."

"இந்த வீட்டுல தான நீயும் இருக்க "

"பின்ன வேற எங்கன இருக்குரதாம், இத்து நா கட்டுன வீடு, உங்கொப்பனா வந்து கட்டிகுடுத்தான், அதுக்கு இன்னா இப்ப"

"இந்தேரு ... பேச்சு உனக்கும் எனக்கும் தான்.... சும்மா எதுக்கு எங்கப்பன இழுக்குற இப்ப...... என்னைய கட்டித்தந்ததே பெருசு, இத்துல வீடு வேற கட்டனுமாம்ல"

"ஆமா கட்டிக்குடுத்துட்டாலும், வக்கத்த வெறும் பய, ஒரு வண்டி உண்டா..... அவனவன், மாமனாரு வாங்கிக்குடுத்த வண்டிய எடுத்துகுனு சல்லு சல்லுனு போறானுக..... எனக்குன்னு வாச்சவன் குடுத்தான் பாரு வெறும் பத்து ஏக்கரு நெலமும், பண்டார ஓட்ட வடையும்...."

"எங்கப்பனுக்கு பத்து ஏக்கரு நெலம் இருந்த நல்ல எடத்துல என்ன குடுத்துருக்காதா ?? பாவி இந்த பாளுங்கெனத்துல கொண்டாந்து தள்ளுமா??"

"என் வீட்டுலயே இருந்துகின்னு, என் சொத்தையே தின்னுட்டு, என்னையே பாளுங்கெனருனு சொல்லுதியா, பொசகெட்ட சிறுக்கி"

"இன்னது .... உங் வீடா?? இது என் வீடுயா?? உன்கொம்மா சண்ட வளத்துகின்னு போனபோ, காதுல, கையில கெடந்தத கழற்றி அடமானம் வெச்ச பணத்துல கட்டுன வீட்ட உம்மட வீடுன்னு பீத்துரியாக்கும்....உன் வீட்டுல இருந்து ஒரு ஓட்ட பான கூட வரல ..... பெருசா பேசுற பேச்சு....!!!"

"வாய , கைய வெச்சுகினு சும்மா இருந்தா ஏன் என் ஆத்தா வெளிய தொறத்துது.... "

"நீ ஒரு நச்சவாயின்னா, ஓங்க்கொம்மா ஒரு நாறவாயி... எப்பவாது வாயி தொறந்தா பரவால, சதா தெறந்தே வெச்சுகிட்டு பொலம்பிட்டே , இது குத்தம், அது நொத்தம்னு-கிட்டு இருந்தா எவ தான் சகிச்சுப்பா..?"

"ஆத்தா , அப்பன் நல்லா வாய மட்டும் வளத்து விட்டுருக்குதுக..... அவஅவ 100 பவுன் , 200 பவுனு கொண்டு வராளுக... எனக்குன்னு வந்து வாச்ச பாரு.... வெட்டிப்பயலுக்கு பொறந்தவ.... பொண்ண மட்டும் ஓட்டி விட்டுட்டு வீட்டுலே உக்காந்துட்டான் , சொம்பப்பய"

"யோவ் ...!!! இந்தேரு ...இம்புட்டு தான் உனக்கு மருவாதி.... எங்கப்பன் காசு இல்லேனா, இரந்து குடிக்குமே தவிர , சொந்த வீட்டுலே களவாடாது....."

"இப்ப என்னத்தடி நான் திருடினேன்"

"ரேசன் கார்டு உன்னைய தவிர எங்கன போயிருக்கும்றேன்..?? இப்ப தானே நாபகம் வருது , ரெண்டு நாளு குடிச்சுக்கிட்டு வந்தியே ..... இப்போல்லே தெரியுது எப்பிடி காசு வந்திருக்கும்னு ..., எவன்கிட்டயோ ரேசன் கார்ட குடுத்து அடமானம் வெச்சுகிட்டு குடிச்சுட்டு வந்திருக்க "

"இப்போ நீ கிட்டக்க இருந்து பாத்தியா நா அடமானம் வெச்சத?"

"கிட்டக்க இருந்து வேற பாக்கணுமா.... உன் லட்சணம் தான் தெரியுமே ......"

"இங்கேரு இங்கனெ பேச்சுக்கு பேச்சு பேசுனே ....செவுள பேத்துருவேன்..."

"பேசுனா என்னைய பண்ணுவ ... பொட்டபய மாதிரி போய் அடமானம் வெச்சுட்டு வந்துருக்க, உனக்கு என்னா மருவாதி..."

அவ்ளோ தான் மருது எழுந்து வந்து சாத்து சாத்து என்று சாத்திவிட்டான்.... "இனி பேச்சுக்கு பேச்சு பேசுவியா" என்று கேட்டுவிட்டு மிதி மிதி என்றும் மிதித்து விட்டான்.

"பாவி, என்னைய போட்டு இப்பிடி பாடாப் படுத்துறியே.... உன்ன பாம்பு புடுங்க, ரேசன் கார்ட போய் எங்கனயோ அடமானம் வெச்சு குடிச்சுட்டு வந்து இப்பிடி அடிக்குறியே..... உன் கையு வெளங்காம போக , உன் காலுல கட்ட மொளைக்க,"

"என் வீட்டுல இருந்துகிட்டே எனக்கு சாபம் குடுக்குறியா....??? ஆமாடி நான் தான் டி அடமானம் வெச்சு குடிச்சேன், அவனவன் பொண்டாடியயெ வெச்சு குடிக்குறான், ரேசன் கார்ட தானே வெச்சு குடிச்சேன், உன்ன இல்லையே,... அதுக்குன்னு கண்ட பயல எல்லாம் வெச்சு அறுக்குற, இனி அவ்ளோ தான் டி... வெளிய போடி" என்று விட்டு தலைச் சிண்டைப் பிடித்து இழுத்துக் கொண்டே வீட்டின் வெளியில் தள்ளினான்.

நிலைகுலைந்து போய் தரையில் விழுந்தவள் கொஞ்ச நேரம் அப்படியே கிடந்தாள்..... அக்கம்பக்கம் வேடிக்கைபார்ப்பதை கண்டு எழுந்தவள் அப்படியே தளர்ந்தது விடாமல், சேலையை எடுத்து சரியாக கட்டிக்கொண்டாள். எழுந்து வீட்டுக்குள்ளே போயி குழந்தையை தொட்டிலில் இருந்து தூக்கிக் கொண்டு விறு விறுவென கிளம்பினாள்.

போகும் வழியில் குழந்தையை படித்துறையில் படுக்க வைத்துவிட்டு குளத்தில் இறங்கி முகம் ,கை கால் அலம்பினாள்.
பின்னர் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மண்பாதையில் ஊரின் குறுக்கே காணும் வழியில் நடக்கத் தொடங்கினாள்.
நேரே நடந்தவள் வரும் வழியில் இருந்த காளி கோயிலில்... "ஆத்தா நீயே கேளு, எவனாச்சும் ரேசன் கார்ட போயி அடமானம் வெச்சு குடிப்பானா?" என்று வேண்டி கன்னத்தில் போட்டுக்கொண்டு நடந்தாள் சாலையில்....

வெயில் கொளுத்தியதும் குழந்தையை முந்தானையால் இழுத்து முடிந்து கொண்டு நடந்தாள். சாலையைத் திரும்பி தோப்பைத் தாண்டி வளைவில் இருந்தது அவள் வீடு......

வீட்டில் கொல்லையில் அவள் அம்மா சட்டியில் மீனைக் கழுவிக் கொண்டிருந்தாள். இவளைக் கண்டதும் அரக்கப்பரக்க வந்ததும் ,"யாத்தே இப்ப எதுக்குத்தா வெயிலா வெளையுற நேரமா கேளம்பியாந்துருக்க, "

"யம்மா " என்று வாய் நுனியில் நின்றிருந்த அழுகை பீறிட்டுக் கொண்டு வெடித்ததும், தாயைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

"இப்போ என்னாத்துக்கு கரையுதவ, எனக்கு ஒண்ணும் இல்ல கண்ணு , வெறும் ஏழு தையலு தேன், குளிகேக்குனு கல்லுலே எறங்கி வரப்ப, காலு வழுக்கி விழுந்தனாக்கும்...... கரயாதவே என்னா பெத்த ஆத்தே.....உன்னாண்ட ஆரு சொன்னா, அந்த தீவட்டி தடியன் சேதுவா , சந்தைக்கு வந்தப்போ பாத்தியா கண்ணு, " என்று தாயும் மகளுடன் சேர்ந்து ஒப்பாரி வைத்தாள்.....

"ஏ புள்ள செல்லி, போயி அந்த மீன கழுவி குழம்பு பண்ணிட்டு, தோட்டத்துல நாலு கீரைய கிள்ளி கூட்டு ஆக்கிடு" என்று மகளையும் , பேரனையும் கூட்டிக் கொண்டு உள்ளே சென்றாள்.

"ஏக்கோவ் , ஆத்தா பொய்யு சொல்லுவுது.... அது ஒண்ணும் கீழ விளுவல... நம்ம அப்பாரு தான் குடிச்சுட்டு வந்து சண்டைய போட்டு அம்மாளு மண்டைய கட்டயால உடச்சுச்சு, ஏ யப்பா ...எம்புட்டு ரத்தம் தெரியுமா....." என்று அடுக்கினாள் அவள் தங்கை.

"ஏ கூறுகெட்ட சென்மம்.... இப்ப தான் அவளே வீட்டுல வந்துருக்கா அதுக்குள்ள வாய தொறக்குரியாக்கும்....போ போ ..... சீனியும் , தண்ணியும் வெச்சு அக்காவுக்கு வரக்காப்பியாச்சும் போடு ....." என்று விட்டு சுவற்றில் சாய்த்து வைத்திருந்த பாயை எடுத்து பேரனையும், மகளையும் அதில் அமர்த்தினாள்.

"அத விடுமா நம்ம அப்பா திருந்தவே திருந்தாதா ?

" அத்த விடு மா, ஏதோ குடிபோதைல செஞ்சுடுச்சு..... பெரவன நா கீழ விழுந்து கெடந்ததும் அது தான் தூக்கி சைகிழு பின்னாடி உக்கார வெச்சுகிட்டு ஆஸ்பத்திரி கூட்டிட்டு போயி தையலும் போட்டு கூட்டியாந்துது.... இருக்குற உன் 3 தங்கசியள குடி இல்லாதவனா பாத்து புடிச்சுக் குடுக்கணும்.... தம்பி உன்ன நல்லா பாத்துக்குதா மா....பிரச்சினை எதுவும் இல்லியே.....உன் மூஞ்சி வேற சரியா இல்ல"

"அதெல்லாம் ஏதும் இல்ல மா.... அங்க நாத்து நடுவை நடக்குது.....உம்மருமவனுக்கு சோறு குடுக்க வந்தேன் .... அப்பிடியே ஒரு எட்டு உன்ன பாத்துட்டு போலாமேன்னு வந்தேன்..... ஆனா வருத அவசரத்துல ஒரு வெத்தல பாக்கு கூட உனக்கு வாங்கியாரல நெனைக்கும்போ தான் மனசு வலிக்கு"

" ஏ நீ என்னா விருந்தாளியா ......இது உன் வீடு..... எப்போ வேணாலும் வரலாம்...... என் மவ நல்லா சமத்தா பொறுப்பா குடும்பம் நடத்துதே அது தான் எனக்கு வேணும்."

"அதெல்லாம் ஒரு கொறவும் வராது மா.... சரி நான் இனி பொறப்படட்டுமா"

"ஏ உச்சி வெயில்ல எங்கனே போரவ, வயத்துக்கு ரெண்டு தின்னுட்டு , ராவைக்கு தம்பிக்கு தூக்குவாளில சோத்த போட்டு எடுத்துட்டு போ"

வரக்காபியை குடித்து விட்டு சுருண்டு பாயில் படுத்தவள் தான் , எப்போது தூங்கினாள் என்றே தெரியவில்லை...... வெயில் தாழ்ந்ததும் தங்கை எடுத்துக் கொடுத்த சோத்தை தின்று விட்டு ..... தாய் கொடுத்த தூக்குவாளியில் எடுத்த சோத்தையும் எடுத்துக் கொண்டு,

"ஒரு தடவ நீயும் , தங்கச்சியளும் வீட்டுக்கு வந்துடு போயேன்..... அப்பாவையும் வரச் சொல்லுங்க..... அப்பா எங்க இன்னும் காணல "

"திருவாரூருக்கு உரமூட்ட வாங்கியார போயிருக்காக..... ஒரு நாளு காலம்பர கெளம்பி வாரோம்.....நீ கெளம்பு மா "

"சரி" என்று விட்டு பாதி தூரம் கடந்தவளின் மனதில் சிந்தனை அலைகள்...... 'ரோசத்தில புள்ளையையும் தூக்கிட்டு வந்துட்டேன்....இனி எப்பிடி ரோசங்கெட்டு போறது' என்று யோசித்துக் கொண்டே நடந்தாள்...
பாலம் கடந்து நடக்கையில் மருது சைக்கிளை மிதித்து வந்து கொண்டிருந்தான்.

இவள் அருகில் வந்து சைக்கிளை நிப்பாட்டிவிட்டு இறங்கினான். இவள் தலை கவிழ்ந்து நின்றாள்.

"இங்கேரு காலம்பர அடிசுடேனு கஷ்டமா போச்சு..... சரின்னுட்டு, இனி குடிக்கபடாது, அங்கன குடிச்சாலும் பொண்டாட்டிய அடிக்கப்படாது , எதையும் விக்கபடாதுன்னு சத்யம் பண்ணிகிட்டேன்.....இன்னிக்கு நாத்து பறிச்ச கூலிய எடுத்துப் போயி ரேசன் கார்ட திருப்பி அரிசியும் வான்கியாந்து வீட்டுல போட்டாச்சு.....உன்னையும், எம்மவனையும் எப்பிடி பிரிஞ்சு இருக்குரதாம்....அதான் சைகிளுல வெரசா மிதிச்சு வந்துட்டு இருந்தேன்....உன்ன அடிச்ச கைய அடுப்புல எரிச்ருப்பேன்... ஆனா இத வெச்சு தான நடவு வாழ்கை ஓடுது...... " என்று குழந்தையை வாங்கி முத்தமிட்டு கண்ணீருடன் அணைத்துக் கொண்டான்.

பின்னர் சைக்கிளை எடுத்து அவளையும் , குழந்தையையும் பின்னால் உட்காரவைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினான்....

"அங்க அத்த , மாமா, உன் தங்கச்சிய எல்லாம் நல்லருக்காகளா...???"

"ம்ம்"

"அடுத்த வாரம் நானும் வரேன்....மூணு பேரும் போயி பாத்துட்டு ஒரு நாளு தங்கிட்டு வருவோம் ...சரியா " என்று விட்டு வேகமாக மிதித்தான் சைக்கிளை மருது.