புதன், 31 மே, 2017

குளித்தலை... கோட்டை... குடும்பம்! - கருணாநிதி 60


குளித்தலை... கோட்டை... குடும்பம்! - கருணாநிதி 60


‘V ery good speech’ - கருணாநிதி பேசிவிட்டு உட்கார்ந்ததும், அவர் கையில் தரப்பட்ட காகிதத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது. அந்தத் துண்டுச் சீட்டு இப்போது கிடைத்து, அதைக் கருணாநிதியின் கையில் கொடுத்தால் ஒருவேளை அவர் பேசும் சக்தியைப் பெற்று விடலாம். ஏனென்றால், முதன்முறையாக அவர் சட்டமன்றத்துக்குள் சென்று, முதன்முறையாகப் பேசிவிட்டு உட்கார்ந்ததும், முதன்முறையாகக் கிடைத்த பாராட்டு வாசகம் அது. இப்படி எழுதி அனுப்பியவர் அன்றைய சட்டப்பேரவைத் தலைவர் யு.கிருஷ்ணாராவ். எழுதி அனுப்பிய நாள் 4.5.1957. நாள் ஆகஆகத்தான் உலோகம், வைரம் ஆகிறது. தந்தைக்கு வைர விழா எடுக்கிறார் தனயன். அதை உணரும் நிலையில் தந்தை இல்லை. கோபாலபுரத்தில் குன்று போல் உட்கார்ந்து இருக்கிறார் கருணாநிதி.
முதல் நாள்!
முதல்நாளான அன்று எப்படி இருந்தது கோபாலபுரம்? 17 இலைகள் போடப்பட்டு இருந்தன. அண்ணா, கருணாநிதி, அன்பழகன், ஆசைத்தம்பி, சத்தியவாணி முத்து, ஏ.கோவிந்தசாமி, ப.உ. சண்முகம், விருத்தாசலம் செல்வராஜ், எம்.பி. சுப்பிரமணியம், ம.பா.சாரதி, களம்பூர் அண்ணாமலை, ஆனந்தன், இசப்பன், பி.எஸ்.சந்தானம், சி. நடராஜன்... ஆகிய 15 எம்.எல்.ஏ-க்கள் உட்கார்ந்து இருந்தார்கள். அந்தத் தேர்தலில் தி.மு.க. சார்பில் வென்ற 15 பேருக்குமான விருந்து அது. எம்.எல்.ஏ-க்கள் கூட்டமே அங்குதான் நடந்தது. இவர்களுடன் இருந்தார்கள் நெடுஞ்செழியனும் மதியழகனும். காலை உணவை முடித்துவிட்டு நேராகச் சட்டமன்றத்துக்கு இவர்கள் செல்ல வேண்டும். அன்றுதான் கருணாநிதி முதன்முறையாகப் பேசப் போகிறார்.
``என்ன கலைஞரே! இன்று என்ன பேசப்போகிறீர்கள்?” என்று கேட்கிறார் நெடுஞ்செழியன். ‘`நங்கவரம் விவசாயிகள் பிரச்னை பற்றிப் பேசப் போகிறேன். ‘நாடு பாதி; நங்கவரம் பாதி’ என்று நிலம் வைத்துள்ளார் அந்த நிலச்சுவான்தார். உள்ளூர் மக்களுக்குக் கூலி அதிகம் கொடுக்க வேண்டும் என்று வெளியூர் ஆட்களை வைத்து வேலை வாங்குகிறார். அவர்களுக்கும் ஒழுங்கான கூலி இல்லை. இதை இந்த அரசின் கவனத்துக்குக் கொண்டுவரப் போகிறேன்” என்றார் கருணாநிதி. கையேர் வாரம், மாட்டேர் வாரம் என்ற கூலி முறை பற்றியும், இவர்களுக்காகப் போராடிய கவுண்டம்பட்டி முத்து என்ற விவசாயி பற்றியும் விலாவாரியாகச் சொன்னார்.
சாப்பிட்டு முடித்ததும் வெற்றிலை போட்டுக் கொண்டே தன் அருகில் இருந்த ஏ.வி.பி. ஆசைத்தம்பியிடம் அண்ணா சொன்னார்: ‘`நாவலருக்குக் கருணாநிதி விளக்கம் அளித்தான் என்றா நினைக்கிறாய். கருணாநிதி இன்று சட்டசபையில் பேசப் போகிறான். அதற்காக ஒத்திகை பார்க்கிறான்” என்றார். மொத்தப் பேரும் சிரித்துவிட்டார்கள். ‘`இல்லைண்ணா’’ என்று நெளிந்தார் கருணாநிதி. வாயில் வழிந்த எச்சிலைத் துடைத்தபடி, ‘`சட்டசபையில் பேச இவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். தயார் நிலையில் இருந்து பேசும் பேச்சே தரமான பேச்சாக இருக்க முடியும்” என்றார் அண்ணா. புறப்பட்டார் கருணாநிதி.
“கவர்னர் உரையை நான் போற்றவும் வரவில்லை. தூற்றவும் வரவில்லை. என் கருத்துரையை ஆற்றவே வந்துள்ளேன்” என்று ஆரம்பித்து நங்கவரம் விவசாயிகள் பிரச்னைக்கு வந்து... தனது பேச்சை முடித்தார். முடித்ததும் தான் பேரவைத்தலைவர் கிருஷ்ணாராவ் அந்தத் துண்டுச் சீட்டை அனுப்பினார். அது காங்கிரஸ் ஆட்சிக் காலம். காமராஜர் முதலமைச்சர். ‘`நான் கருணாநிதி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று பார்த்து வியந்தேன்” என்று அன்றைய அமைச்சரும், பின்னர் முதலமைச்சராகவும் ஆன பக்தவத்சலம் சொன்னார். முதன்முறை பேசும் போது எப்படி ஒத்திகை பார்த்துப் போனாரோ, அப்படித்தான் ஒவ்வொரு நாளும் போனார்.
“சட்டசபைக்குப் போகும்போது கற்றுக்கொள்ளும் மாணவனாகவும் கற்பிக்கும் ஆசிரியனாகவும் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்” என்றார் கருணாநிதி. அப்படித்தான் இருந்தார் மாணவனாக, ஆசிரியனாக. கருணாநிதி ஒரு சுயம்பு. அதனால்தான் ஒரே நேரத்தில் இரண்டுமாக அவரால் இருக்க முடிந்தது.
மணிக்கணக்கில் பொதுக்கூட்ட மேடையில் பேசலாம். ஆனால், சட்டசபையில் வண்டி ஸ்டார்ட் ஆகாது. அது வேறு களம். இரண்டிலும் வென்றவர்கள் ஒரு சிலர்தான். அதில் ஒருவர் கருணாநிதி. கேள்வியை முடிக்கும் முன் பதில் சொல்வதும், பதில் சொன்னதும் எதிர்க் கேள்வி தொடுப்பதும் கருணாநிதி பாணி.
“வெளிநாட்டிலிருந்து வருபவர்கள், எங்களைப் பார்த்து ‘சிறப்பான ஆளுங்கட்சி’ என்று பெருமைப்படுகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களைப் பார்த்துக் கேவலமாக நினைக்கிறார்கள்” என்று முதலமைச்சர் பக்தவத்சலம் சொன்னதுமே, ‘`இவ்வளவு கேவலமானவர்களை வென்றது உங்களுக்குப் பெருமையா?” என்று திருப்பி அடித்தார் கருணாநிதி. “தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே” என்று பேசிக்கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, “கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?” என்றார் டி.என்.அனந்தநாயகி. “கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்?” என்று துடுப்பைப் போட்டார் கருணாநிதி.
“அடைந்தால் திராவிட நாடு; இல்லையென்றால் சுடுகாடு... என்றீர்களே! இப்போது சுடுகாட்டிலா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார் கருத்திருமன். அவர் உட்காருவதற்குள் கருணாநிதி பதில் சொன்னார்: ‘`இல்லை. உங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறோம்!”
அன்றைய தினம் வெளியான இதழ் ஒன்றில் கருணாநிதியைக் கிண்டல் செய்து கவிதை ஒன்று வெளியானது.
“தமிழ் எனும் தங்கச் சீப்பு உங்கள் கையில்
இருந்தும் என்ன பயன்?
நீங்கள்தான் ஏற்கெனவே
தமிழர்களை மொட்டையடித்து விட்டீர்களே!” - இந்தக் கவிதையை தமிழகச் சட்டமன்றத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னார். உடனே எழுந்த கருணாநிதி, ‘`தம்பி! என் கையில் இருப்பது உன்னைப் போன்ற சுருள் முடிக்காரர்களுக்கு சீவி விட” என்று ஐஸ் வைத்தார். பீட்டருக்கு நாக்கு எழுமா அதன் பிறகு? கேள்விக்கு உள்ளே இருந்தே பதிலைச் சொல்வதும், பதிலுக்குள் இருந்து அடுத்த கேள்வியைத் தோண்டுவதும் கருணாநிதிக்குக் கைவந்த கலை.
அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை எழுத்துக்கு எழுத்து கவனிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சியின் கடைசி சட்டமன்றக் கூட்டத் தொடர் அது. பக்தவத்சலம் முதலமைச்சர். இன்னும் சில மாதங்களில் நடக்கப்போகும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வரப் போகிறது என்ற நிலைமை. கருணாநிதி பேசும்போது, ‘`ஆண்டவன் என்ற ஒருவன் இருந்து நான் அவனைச் சந்தித்தால் அவனைப் பார்த்து, ‘முதலமைச்சரைப் போன்று சுறுசுறுப்பைக் கொடு’ என்றுதான் வரம் கேட்பேன். அவர் முதலமைச்சராக இருந்து ஓர் ஆளுங்கட்சித் தலைவர் எப்படிச் செயல்பட வேண்டும் என்று எங்களுக்கு இதுவரை கற்றுக்கொடுத்தார்” என்றார். காங்கிரஸ் உறுப்பினர்களே மகிழ்ச்சி அடைந்தார்கள். கருணாநிதி ரிவர்ஸ் கியர் போட்டார். “அதுபோல் அடுத்த தடவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து ஓர் எதிர்க்கட்சித் தலைவர் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதை அவர் எங்களுக்குச் சொல்லித் தர வேண்டும்” என்றார். தி.மு.க-வினர் மகிழ்ச்சியில் குதித்தார்கள். சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு முன்பே கதை- வசனகர்த்தாவாக இருந்ததால், கருணாநிதிக்கு வாதம் - எதிர்வாதம் இரண்டும் கைவந்த கலையானது.
கருணாநிதியின் அரசியல் மிகக் கடுமையான விமர்சனத்துக்குரியது.அவரது பொதுவாழ்க்கையில் களங்கம் உண்டு. ஆனால் சட்டமன்றத்தில் ஒரு முதலமைச்சர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக அனைவரும் படிக்க வேண்டிய பாடப் புத்தகமாக, 1997-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கு அவர் அளித்த பதிலுரை இருந்தது. தனக்கு முன்னால் பேசிய 40 பேருக்கும் பதில் சொல்லி இரண்டு மணி நேரத்துக்கு மேல் அவர் அளித்த பதில் தான், சட்டமன்ற விவாதத்தை ஒருவர் எப்படி கவனிக்க வேண்டும், மதிப்பளிக்க வேண்டும் என்பதைக் கற்றுத்தந்தது. அதேபோல், ஓர் எதிர்க்கட்சித் தலைவர் எப்படிப் பேச வேண்டும் என்பதை எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது கருணாநிதி பேசிய பேச்சு உணர்த்தும். பூம்புகார் நிறுவனத்துக்காக பல்கேரியா பால்டிகா கப்பல் வாங்குவதில் என்னென்ன விதி மீறல் என்பதை 20-க்கும் மேற்பட்ட ஆதாரங்களுடன் ஒவ்வொன்றாக அடுக்குவார் கருணாநிதி. இந்தப் பேச்சுக்குப் பிறகுதான் கப்பல் வாங்குவதை நிறுத்தினார் எம்.ஜி.ஆர்.
1996-2001 அவரது முதலமைச்சர் காலமும், 1980-84 அவரது எதிர்க்கட்சித் தலைவர் காலமும் தி.மு.க-வினருக்கு மட்டுமல்ல; அரசியல் ஆர்வமுள்ள அனைவருக்குமான சட்டசபைப் பாடம். நேர்மறை, எதிர்மறை என எல்லா பாடங்களையும் நடத்திவிட்டு பழுத்த இலையாய்ப் படுத்திருக்கிறார் கருணாநிதி. அவருடைய பிறந்த நாளான ஜூன் 3-ம் நாளை, ஒரு புதிய அரசியல் அணிக்கான அரசியல் சேர்க்கையாக தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் ஆக்கிக் காட்டத் திட்டமிட்டுள்ளார். எப்படிப் பார்த்தாலும் தி.மு.க-வுக்கு கருணாநிதி, ‘ஆயிரம் பொன்!’


கருணாநிதியின் சட்டமன்ற வாழ்க்கைக்கு வைரவிழா கொண்டாடுகிறது தி.மு.க. அதை விட அவர்களுக்குப் பெருமை தரத்தக்கப் பெரியது எதுவும் இல்லை. ஆனால், அந்த ஒரு பெருமை மட்டும் போதுமா? அண்மைக்கால தி.மு.க-வின் சட்டசபைச் செயல்பாடுகள் தி.மு.க-வுக்கும் கருணாநிதிக்கும் பெருமைதரத்தக்கதாக இல்லை. ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்த நாளில், தனபாலின் கையைப் பிடித்து முறுக்கி வெளியில் தள்ளுகிறார் ரிஷிவந்தியம் ‘வசந்தம்’ கார்த்தி. மாட்சிமை தங்கிய பேரவைத் தலைவர் இருக்கையில் அமர்கிறார்கள் வில்லிவாக்கம் ரங்கநாதனும், ஆயிரம் விளக்கு கு.க. செல்வமும். இவர்களைக் கண்டித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், தி.மு.க. செயல் தலைவர். உரிமைக்குழு அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டிய ஸ்டாலினோ, சட்டையைத் திறந்து போட்டு வருகிறார். சண்டையில் கிழியாத சட்டை கிடையாது. ஆனால், சண்டையே நடக்காத இடத்தில் சட்டை கிழிந்தது எப்படி?
“தி.மு.க. உறுப்பினர்கள் படித்துவிட்டுப் பேச வேண்டும்” என்றார் முதலமைச்சர் பக்தவத்சலம். “இது குடித்துவிட்டுச் சொல்வதுபோல இருக்கிறது” என்று கார்ட்டூன் போட்டுவிட்டது ‘முரசொலி’. கருணாநிதி வெளியூரில் இருந்தார். பார்த்துவிட்டுப் பதறிப் போனார். உதவி ஆசிரியர்மீது நடவடிக்கை எடுத்தார். மாதா கவுடர் என்ற உறுப்பினர் உரிமைப் பிரச்னை கொண்டு வந்தார். ‘`இது எனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது. வருத்தம் தெரிவிக்கச் சொல்லி இருக்கிறேன்” என்றார் கருணாநிதி. ‘`தனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது என்று உறுப்பினரே சொல்லிவிட்டபிறகு உரிமைப் பிரச்னை தேவையில்லை” என்று முதலமைச்சர் சொன்ன காட்சியைப் பார்த்த சபை இது. யாரோ செய்த தவற்றுக்கு கருணாநிதி மன்னிப்பு கேட்க, மன்னிப்பை ஏற்று, பிரச்னையை மறந்த பக்தவத்சலங்கள் வாழ்ந்த காலம் எங்கே...?
இன்றே கலவரம் ஏற்படுத்துவது... நாளையே கலைப்பது... நாளை மறுநாளே தேர்தல் நடத்துவது, வெற்றி பெறுவது என, அமைச்சர் ஆகி விடுவோம் என்ற கனவில் சட்டசபையை வாரச்சந்தையாக மாற்றிய மனிதர்கள் இங்கே! இத்தகைய தீராத விளையாட்டுப் பிள்ளைகளை நம்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்றால், தி.மு.க. கரை சேராது. காகித ஓடம் கடலலைமீது போவது போலே போய்விடும். இவர்களும் போய்விடுவார்கள். ஏனென்றால், இவர்கள் வந்தவர்கள்!
கருணாநிதி நிரந்தரம். ஸ்டாலினும் நிரந்தரம் ஆகப் போகிறாரா என்பதே முக்கியம். இத்தனை வட்டக்கழகங்கள், இத்தனை நகரக்கழகங்கள் இருப்பதால், கருணாநிதி தலைவர் அல்ல; கருணாநிதி தலைவராக இருப்பதால் இத்தனை வட்டக்கழகங்களும், நகர கழகங்களும் இருந்தன; இருக்கின்றன. கருணாநிதி என்ற பிம்பம் இதைக் காப்பாற்றி வந்தது. 234-க்கு 184-ம் கருணாநிதியால் வாங்க முடியும்; 234-க்கு 1-ம் வாங்கியவர்தான் அவர். 1971-லும் தலைவர்; 1991-லும் தலைவர் தான் என்றால், முதலமைச்சர் அல்ல அவரது அளவுகோல்.
அவரால் இன்று எழுந்து வர முடியவில்லை; எழுத முடியவில்லை; பேச முடியவில்லை. ஆனாலும் அவரது எதிரிகள், இன்னும் பலமாகத் திட்டிக்கொண்டே இருக்கிறார்கள் என்றால், என்ன பொருள்? அதுதான் கருணாநிதி என்ற பிம்பம். பெரியாரை அவர் விட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பகுத்தறிவு அல்ல, வயிற்றறிவுதான் இன்று தி.மு.க-வின் வேதம். ஆனாலும், சிலருக்கு அவரைப் பார்த்தாலே வயிறு எரிந்தது. அதுதான் கருணாநிதி என்ற பிம்பம். முதலமைச்சர் ஆவதைவிட இப்படி ஒரு பிம்பமாக ஸ்டாலின் ஆனால்தான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிமிர்ந்து நிற்க முடியும். காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் கருணாநிதியை உருவாக்கியது. காலதாமதமாக பி.ஜே.பி. எதிர்ப்பு அரசியலை ஸ்டாலின் இப்போது கையில் எடுத்துள்ளார்.
பிரதமர் மோடியை எதிர்ப்பது அல்ல, பி.ஜே.பி மோடியை எதிர்ப்பதில்தான் ஸ்டாலின் தனது பிம்பத்தை வளர்க்க முடியும். தேர்தல் காலத்து அணிச் சேர்க்கை அல்ல, தி.மு.க-வின் அடிப்படைக் கொள்கைகளுக்கான வெகு மக்கள் திரள்தான் வெற்றியைச் சேர்க்கும். இப்போதுதான் புத்தகங்களைத் திரட்டவும், படிப்பகங்களை உருவாக்கவும் முயல்கிறார் ஸ்டாலின். சட்டமன்றத்தை அடைவதற்கு முன்னால் மக்கள் மன்றத்தையும், மக்கள் மன்றத்தை அடைவதற்கு முன்னால் படிப்பு மன்றத்தையும் உருவாக்கியதாலேயே தி.மு.க. நிலைத்தது என்ற அரிச்சுவடி இப்போதுதான் ஆரம்பமாகியிருக்கிறது. ‘மானமிகு இல்லையேல் மாண்புமிகு இல்லை’ என்றவர் கருணாநிதி. அவர் வாய் திறந்தால் இதைத்தான் சொல்வார். ஏனென்றால் அவர் 20-ல் விளைந்தவர்.


எம்ஜிஆர் முதல் ரஜினிகாந்த் வரை: கருணாநிதியின் எதிர்நிலை அரசியலில் வென்று நிற்கும் தமிழக தலைவர்கள்
இடமிருந்து வலமாக: கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, வைகோ,விஜயகாந்த், ரஜினி | கோப்புப் படம்.
கருணாநிதியின் சிறுமை- பெருமைகளையோ, நல்லது- கெட்டதுகளையோ சொல்லுவதென்றால் எம்ஜிஆரை சொல்லாமல், அவரை ஒப்பிடாமல் யாராலும் நகர முடியாது. எம்ஜிஆர் கதாநாயகன் என்றால் கருணாநிதி எதிரி. கருணாநிதி கதாநாயகன் என்றால் எம்ஜிஆர் எதிரி. அதிமுகவினர் கருணாநிதியை எதிரியாகவே காழ்ப்பு கொட்டினார்கள். இன்னமும் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். திமுகவினரும் இதற்கு சளைத்தவர்களல்ல; எம்ஜிஆரை எதிரியாகவே கற்பிதம் செய்துள்ளார்கள். இத்தனைக்கும் எம்ஜிஆரும் கருணாநிதியும் ஒரே அறையில் தங்கி, ஒரே தட்டில் சாப்பிட்ட நண்பர்கள்.
எம்ஜிஆர் சினிமாவில் கதாநாயக வலம் வந்தபோது எதிர்மறை கதாபாத்திரத்திற்கும், அதன் அடியாள் பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தே காட்சிகள் அமைப்பார். அந்த வரிசையில் பி.எஸ். வீரப்பா, எம்.என். நம்பியார், அசோகன், ஜஸ்டின் என பலரும் சுடர் விட்டார்கள். அவர் அரசியலுக்கு வந்த பின்பு இந்த எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு வேலையில்லாமல் போனது. அதற்காக முன்னணி கதாநாயகர்கள் இவர்களில் சிலருக்கு வாய்ப்பு கொடுத்தும் பார்த்தார்கள். அது எடுபடவில்லை.
ஆனால் அரசியல் வாழ்வில் எம்ஜிஆருக்கு மட்டுமல்ல; தமிழகத்தில் உருவாகியிருந்த- உருவாக இருந்த எல்லோருக்குமே வெறுப்பரசியல் சொட்டும் எதிர்நிலையாகவே விளங்கினார் கருணாநிதி. அந்த எதிர்நிலை அரசியலில் நீந்திக் கடந்தவர்தான் இன்றைக்கு தொடர்ந்து 60 ஆண்டுகாலம் சட்டப் பேரவையில் அங்கம் வகித்து அந்திமக் காலத்திலும் சுடர்விட்டு பிரகாசிக்கிறார்.
ஒரு மனிதரை வாழ்த்தும்போது பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்கிறோம். அதில் கல்வி, செல்வம், பிள்ளை, வீரம் என வரும் 16 பேறுகளை வரிசையும்படுத்துகிறோம். ஆனால் யாருக்காவது 16 பேறுகளும் உள்ள வாழ்வு கிடைத்திருக்கிறதா? யோசித்துப் பார்த்தால் எல்லோரும் ஏதாவது ஒரு குறையுடனே இருக்கிறோம். இன்னமும் சுருக்கமாக சொன்னால் பெரும் செல்வம் பெற்றவன் பெரும் நோயுடன் இருக்கிறான், பெரிய, பெரிய பதவிகளில் இருப்பவன் குழந்தை செல்வம் இல்லாதிருக்கிறான்.
பெரிய செல்வந்தனாக உள்ளவன் கல்வியில் தற்குறியாக இருக்கிறான். இப்படி பெரும் குறை எதுவும் இல்லாத வாழ்வு என்பது யோசித்துப் பார்த்தால் தமிழக தலைவர்களில் கருணாநிதிக்கே வாய்த்திருக்கிறது. அவர் மீது வெறுப்பரசியல் கொண்டு காழ்ப்பை உமிழ்பவர்களும் தங்களுக்குள் இருக்கும் காரண காரியங்களை ஆராய்ந்தால் தவறு என்று ஒன்றில்லை என்ற புள்ளியில் மாயவிநோத வெறுப்புகளை அகற்றிப் பார்த்தால் அது கொஞ்சமேனும் புலப்படும். அந்த எல்லையிலேயே கருணாநிதிக்கு சட்டப்பேரவை வைர விழா பாக்கியம் கிடைத்திருப்பதாக கூடத் தோன்றுகிறது.
கருணாநிதி கோவையில் வாழ்ந்த காலம். சிங்காநல்லூரில் அண்ணாசாமி என்ற பஞ்சாலைத் தொழிலாளியின் ஒண்டுக்குடித்தன வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்து கொண்டு சென்ட்ரல் ஸ்டுடியோவுக்கு சென்று கதை வசனம் எழுதி வருகிறார். அந்த நேரத்தில்தான் மூத்த நாடக சபா காரியதரிசி ஒருவரின் சிபாரிசில் எம்ஜிஆர் கருணாநிதியை சந்திக்க வருகிறார். மொசு, மொசுவென்ற நாடக நடிக பாகவதருக்கான நிறைந்த முடியுடன் பரட்டைத் தலையுடன் செக்கச் சிவந்த நிறத்துடன் வந்த எம்.ஜி.ராமச்சந்திரனை பார்க்க அன்று அறையில் கருணாநிதி இல்லை. அவர் இரவு வெகுநேரம் கழித்தே ஸ்டுடியோவில் இருந்து திரும்ப, அவரை சந்திக்கிறார் எம்ஜிஆர். அறையில் கருணாநிதிக்கு மட்டுமேயான உணவை வைத்துவிட்டு போயிருக்கிறார் ஓட்டல் கடைக்காரர். அந்தக் கடையும் பூட்டிவிட்டார்கள். வேறு வழியில்லை. அப்போது இருந்த உணவை இருவரும் பகிர்ந்தே உண்டிருக்கிறார்கள்.
அதன் பிறகு 'மருதநாட்டு இளவரசி', 'மலைக்கள்ளன்' என படவாய்ப்புகள் பெற்று சுடர்விடுகிறார் எம்ஜிஆர். சிங்காநல்லூருக்கும், ராமநாதபுரத்துக்கும் 3 மைல் தொலைவு. சிங்காநல்லூரில் கருணாநிதி, ராமநாதபுரத்தில் எம்ஜிஆர் இருவரும் குடியிருந்து கொண்டு இந்த இடைவெளியில் இருக்கும் பட்ஷிராஜா, சென்ட்ரல் ஸ்டுடியோக்களில் இருவரும் நட்புடன் பழகுகிறார்கள். அவர் நடிக்கிறார்; இவர் கதை வசனம் எழுதுகிறார். இப்படியான நட்பு பின்னாளில் அரசியலில் விரிந்து அண்ணா கண்ட பொக்கிஷங்களாக நகர்கின்றனர். அண்ணாவுக்குப் பின்பு நெடுஞ்செழியனே என்ற நிலையில் செஞ்சோற்றுக்கடன் கழித்த நிலையிலேயே எம்ஜிஆர் கருணாநிதியை கை காட்டுகிறார். அந்த அளவுக்கு எம்ஜிஆருக்கு செல்வாக்கா?
ஆம். நிச்சயமாக என்று அந்தக் காலத்தில் இவர்களை ஊன்றிக் கவனித்த அரசியல், சினிமா புள்ளிகள் சொல்லியிருக்கிறார்கள். சிங்காநல்லூரில் வசித்து மறைந்த பழம்பெரும் நாடகக் கலைஞர் ஒருவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு பேசியது இது. ஒரு கூட்டத்திற்கு அண்ணா சென்றிருந்தார். நல்ல கூட்டம். வரவேற்பு. அண்ணா காரிலிருந்து இறங்கியவுடன் மேல் சட்டையில்லாமல் ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் ஓடிவந்து சுற்றுமுற்றும் பார்த்தான். 'என்ன தம்பி தேடறே' என்றார் அண்ணா. 'எம்ஜிஆர் வரலையா' என்று அவரிடமே கேட்டான். 'இல்லை!' என்று அவர் பதில் சொல்லி நகர, சிறுவன் விடவில்லை, 'நீங்க யாரு? எம்ஜிஆர் கட்சியா?'. 'ஆமாம் தம்பி!' என்று சிரித்துக் கொண்டே நகர்ந்தார் அண்ணா. இதுதான் அப்போது இருந்த எம்ஜிஆர் மாயை.
'ஆரிய மாயை' என்ற புத்தகத்தை எழுதி திராவிட நாடு கொள்கைகளை வளர்த்து அரசியலில் வென்றவர்தான் அண்ணா. அது அவரின் அரசியலை பறை சாற்றியது. ஆனால் அவருக்கான வெகுஜன ஓட்டு அரசியலை எம்ஜிஆரின் சினிமா மாயையே பெருமளவு அறுவடை செய்தது. அதை சரியாகப் புரிந்து கொண்டே தன் பக்கத்தில் வைத்துக் கொண்டிருந்தார் கருணாநிதி. அப்படியானால் கருணாநிதிக்கு எந்த சக்தியும் இல்லையா? என்றால் இருந்தது.
அது முழுக்க அண்ணாவின் பேச்சு, எழுத்து, அடுக்கு மொழி பேசும் சக்தி. அதையும் மீறிய அரசியல் சாணக்கியம், சாதூர்யம் அவருக்குக் கை கொடுத்தது. அரசாட்சியில் அனைத்து அதிகாரத்தன்மைகளையும் சுவிகரித்த பின்னரே கருணாநிதிக்கும், எம்ஜிஆருக்குமான அரசியல் பிணக்கு தொடங்கியது. அந்த பிணக்கை வைத்து கட்சியை உடைக்க மத்திய சக்திகள் துணை புரிந்தன. கருணாநிதி என்பவர் அணு, அணுவாக பேசிப்பேசி கவர்ந்து மக்களை திரட்டிய தலைவர் என்றால் எம்ஜிஆர் என்பவர் லட்சிய இளைஞராக நல்லவராகவே சினிமாவில் நடித்து, நல்லவராகவே வாழ்கையும் வாழ்வதாக மக்களை நம்ப வைத்து, குறிப்பாக தாய்க்குலமே என்று பெண்களை விழித்ததன் மூலம் அந்த சக்திகள் அத்தனையும் தனக்கே குவியுமாறு பார்த்துக் கொண்டவர்.
அந்த மக்கள் சக்தி மாபெரும் பிரளய சக்தியாகவே உருவெடுத்தது. எனவேதான் கருணாநிதியை கலெக்டிங் லீடர் என்றும், எம்ஜிஆரை மாஸ் லீடர் என்றும் நடுநிலையாளர்களை பேச வைத்தது. இந்த சூழ்நிலையில்தான் எமர்ஜென்சி வர, திமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு கவர்னரிடம் கொடுக்கப்பட, பத்திரிகைகள் வசைபாட, சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட, எமர்ஜென்சியில் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் சிறைக் கொடுமை அனுபவிக்க, அதை தன் பிரச்சாரத்தில் வாகாக பயன்படுத்திக் கொண்டார் எம்ஜிஆர்.
அப்போது பதியப்பட்ட கருணாநிதியின் மீதான பிம்பங்கள் அரசியல் மாச்சர்யங்கள் கடந்தது. மேடைப்பேச்சு முந்தையதை விட தாழ்நிலை அடைந்தது. தனிமனித தாக்குதல்களுக்கென்றே தலைமைக் கழக பேச்சாளர்கள் தோன்றினர். இப்படி கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்பதை மிக அழுத்தமாகவே தமிழகச் சூழலில் பதிவு செய்து விட்டார் எம்ஜிஆர். அதை எப்படிப் பார்க்க வேண்டுமென்றால் சினிமாவில் நம்பியார், அசோகன், ஆர்.எம்.வீரப்பன் போன்றோரை எதிர்மறைக் கதாபாத்திரமாகவே கற்பிதம் செய்து நிலை குழைய வைத்ததை விடவும் கூடுதல் மடங்கு விஸ்வரூபம் எடுத்தது.
எம்ஜிஆர் மட்டுமல்ல; யார் வந்து கருணாநிதியை திட்டினாலும் தமிழகத்தில் ஒரு கட்சிக்கு தலைவனாகி விடலாம் என்ற நிலையை ஏற்படுத்தியது. எம்ஜிஆர் மரணத்திற்கு முன்பே அதை பிரமாதமாக கையாண்டார் ஜெயலலிதா. மேடையில் என்னதான் திமுகவினர் கேவலமாகப் பேசினாலும் திட்டினாலும் எம்ஜிஆர் கருணாநிதியை கலைஞர் என்றும், மு.கருணாநிதி அவர்கள் என்றும் குறிப்பிட்டு பேசுவதையே வழக்கமாக கொண்டிருந்தார். அவர் முதல்வராக இருந்த அவையில் எதிர்க்கட்சி தலைவராக கருணாநிதி எதிர்ப்படும் போது அவருக்கு எழுந்து வணக்கம் செலுத்துபவராகவும், புன்னகைப்பவராகவுமே இருந்தார்.
ஆனால் ஜெயலலிதா அடுத்த நிலைக்குச் சென்றார். கருணாநிதி என்று பெயர் சொல்லியே வசைபாடினார். பல சமயங்களில் வயது வித்தியாசம் கூட கருதாமல் ஒருமையிலேயே விளம்பினார். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக அரசியலின் தீயசக்தி என்றே தாக்குதல் நடத்தினார். ஆரம்ப கட்டத்தில் கருணாநிதியும் ஜெயலலிதாவை ஒரு அரசியல் தலைவராகவே ஏற்றுக் கொள்ளவில்லை. 1989 சட்டப் பேரவைத் தேர்தலில் வென்று ஆட்சியமைத்ததற்கு பிறகு கருணாநிதி ஜெயலலிதாவை பற்றி பேட்டிகளில் குறிப்பிடும் போதெல்லாம் அந்த அம்மையார் என்றே குறிப்பிட்டு வந்தார்.
1991ல் முதல்வராக வந்த பிறகுதான் ஜெயலலிதா என்ற பெயரையே உச்சரித்தார் கருணாநிதி. அப்படியிருந்தும் கூட மேடை நாகரிகம் கருதி அவர் மீது அவச்சொல் வீசியதில்லை. சில கட்டங்களில் ஜெயலலிதாவின் ஒருமை, ஏகவசனத்தில் திட்டும் பேச்சை கேட்டு, 'நான் இந்த அம்மையாருடன் எல்லாம் அரசியல் செய்ய வேண்டியிருக்கிறதே!' என்று கூட மனம் புழுங்கி பேசியிருக்கிறார்.
இந்த கருணாநிதி எதிர்ப்பு அரசியல்தான் தமிழகத்தில் எம்ஜிஆருக்கு மாற்றாக, அவரை விடவும் வீரியமாக தமிழக முதல்வர் பதவியில் ஜெயலலிதாவை அமர்த்தியது. எம்ஜிஆர் வாழ்ந்த காலம் வரை அவரின் எதிர்ப்பு அரசியல் வலுவை மீறி கருணாநிதியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 1980ல் இந்திராகாந்தியுடன் கூட்டணி வைத்த நிலையில் தமிழகத்தின் பாராளுமன்றத் தொகுதிகள் 39ல் 38 ஐ வென்றார் கருணாநிதி.
அதை அப்படியே விட்டிருந்து அடுத்த தேர்தல் வரை காத்திருந்திருந்தால் கூட 1983ல் நடக்க இருந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்க வாய்ப்பிருந்திருக்கும். ஆனால் பொன் முட்டையிடும் வாத்தை உடைத்து எடுக்க முயற்சிக்கும் விதமாக ஆட்சியை கலைக்க இந்திரா காந்தியிடம் தூண்டுகோல் போட்டு அதை செயலாற்றியதன் மூலம் எம்ஜிஆர் வீதி, வீதியாக சென்று தாய்க்குலங்களிடம், 'யான் என்ன தவறு செய்தேன்; எதற்காக என் நல்லாட்சியை கலைத்தார்கள்?' என கண்ணீர் சிந்த, அனுதாப அலை அவர் பக்கமாக வீசி விட்டது.
முன்பிருந்த எதிர்ப்பை விட ஒரு வித எரிச்சல் அலை திமுகவிற்கு 1980ல் பெரும் தோல்வியைக் கொடுத்தது. அதன் பிறகு எம்ஜிஆர் அரசியல் சாணக்கியராகி விட்டார். 1989ல் அதிமுக உடைந்ததால் சுலபமாக திமுக ஆட்சியை பிடித்தது. அதையடுத்து வந்த இலங்கை தமிழர் பிரச்சினை, அதற்கான ஆதரவு, திமுகவில் இருந்த வைகோ கள்ளத்தோணியில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சந்திக்கச் சென்ற சூழல், இலங்கையில் இந்திய அமைதிப்படை பாதுகாப்பு, ராஜீவ் காந்தி கொலை எல்லாமே கருணாநிதியின் அரசியலுக்கு எதிர் வேலைகளை செய்து விட்டது.
1991ல் வென்ற அதிமுகவின் 1996 வரையிலான தான் தோன்றித்தனமான அரசியல் செயல்பாடு கருணாநிதிக்கு மீண்டும் தெம்பைக் கொடுத்தது. தனது நிர்வாகத்திறமையால் நல்லாட்சியே நடத்தினார் கருணாநிதி. ஆனால் அரசியல் ரீதியாக அவர் தன் மகனுக்காக பெரும்பாடு பட வேண்டியதிருந்தது.
எம்ஜிஆர் இருந்தவரை அவரின் எதிர்ப்பரசியலை எதிர்கொண்ட கருணாநிதி தன் பிள்ளைக்காகவே தன் கட்சியில் பிரபலப்பட்ட வைகோவை கட்சியை விட்டே வெளியேற்ற நேர்ந்தது. அவரும் கருணாநிதியை எதிர்க்கும் போதெல்லாம் பெரும் அரசியல் தலைவர் போலவே வைகோ சுடர் விட்டார். ஆனால் எம்ஜிஆர் ஆக முடியவில்லை.
ஏனென்றால் ஏற்கெனவே எம்ஜிஆரை விட எதிர்ப்பு அரசியலில் பிரம்மாண்ட பிம்பமாக ஜெயலலிதா விளங்கியதால் அதன் முன்பு சுடர் விட முடியவில்லை. அதிமுகவுடன் கூட்டு சேர்ந்த போது கொஞ்சமாய் ஜொலித்தவர், திரும்ப திமுகவுடன் கூட்டு வைத்த போது தன் அடையாளத்தை இழந்து நின்றார். தமிழக அரசியலை பொறுத்தவரை கருணாநிதியை எதிர்த்தால் மட்டுமே அரசியல் வாழ்கை நடத்த முடியும் என்ற முடிவுடனே அரசியல் கட்சி ஆரம்பித்து வந்த விஜயகாந்த் கருணாநிதியை திட்டும்போதெல்லாம் கறுப்பு எம்ஜிஆர் போலவே ஜொலித்தார்.
அவரே ஜெயலலிதாவை ஓங்கி திட்ட வேண்டிய நிலை வந்தபோது சிக்கலுக்குள்ளாகிப் போனார். கருணாநிதி எதிர்ப்பையும், ஜெயலலிதா எதிர்ப்பையும் ஒரே நேரத்தில் செய்வதென்றால் எம்ஜிஆரை போல் இன்னமும் பல மடங்கு பலம் வேண்டும். அது கிடைக்காத போது துவண்டார்.
இந்த இடைப்பட்ட காலத்தில் விஜயகாந்த் திமுகவுடன் கூட்டணி என்றெல்லாம் மீடியாக்கள் அலறிய வேளை அவருக்கான தனி பிம்பம் உடைய ஆரம்பித்தது. அவருக்கான உடல்நலக்குறைவு இன்னமும் அரசியல் தேய்வை கொடுத்தது. இந்த கலாட்டாக்கள் எல்லாம் நடந்த வேளை இன்னொரு எதிர் துருவமாக விளங்கிய ரஜினி அரசியலுக்கு வந்தால்? என்ற கேள்வி பலரையும் குடைந்தது.
அது திமுகவை நிறையவே குழம்ப வைத்திருக்க வேண்டும். எனவேதான் 1996ல் ரஜினி வாய்ஸ் நல்ல வாய்ஸ், படையப்பா நீ உடையப்பா என்றெல்லாம் பாராட்டிய கருணாநிதி, ரஜினி எதிர்நிலை எடுத்த வேளையில் எல்லாம் அவரைப் பற்றிய கேள்விகள் வரும்போது நோ கமெண்ட் சொல்ல ஆரம்பித்தார். அந்த நோ கமெண்ட் ஆலாபனை அவர் பேசக்கூடிய நிலையில் இருந்தவரையே தொடர்ந்திருக்கிறது.
இப்போது ஜெயலலிதாவும் இல்லை. விஜயகாந்துக்கும் பெரியதாக வரவேற்பு இல்லை. அடுத்த தேர்தல் வந்தால் சுலபமாக வென்று மு.க.ஸ்டாலின் முதல்வராக அமர வேண்டிய காலச் சூழல். இதை எதிர்பார்த்தது போலவே ரஜினிகாந்த் அரசியல் பேசுகிறார். நான் அரசியல் கட்சி தொடங்கினால் கெட்டவர்களுக்கு இடம் இல்லை என்கிறார். போர் வரட்டும் என்கிறார். அரசியல் கட்சி ஆரம்பிக்கிறீர்களா என்று கேட்டால் தேர்தல் வரட்டும் சொல்கிறேன் என்கிறார்.
அவருக்கு தோதாக கமலஹாசனும் வார்த்தைகளை விடுகிறார். ரஜினியை தமிழருவி மணியன் சந்திக்கிறார். நக்மா ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்கிறார். இந்த நேரத்தில் மு.க.ஸ்டாலின் தன் தந்தை தலைவருக்கு சட்டப்பேரவை வைர விழா அறிவிக்கிறார். ராகுல்காந்தி உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் அந்த விழாவுக்கு வருகிறார்கள்.
இதுவெல்லாம் எதை காட்டுகிறது. ரஜினியின் புதிய பிரவேசம் திமுக அரங்குக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. இதை சரிப்படுத்த வேண்டிய கட்டாயம் திமுக தலைவர்களுக்கு உள்ளது. இந்த கட்டாயமே வைர விழா தலைவரை பிரம்மாண்டப் படுத்தி கொண்டாட வேண்டிய கட்டாயத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்றும் கொள்ளலாம்


"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!" - பேசத் தொடங்கினார் கருணாநிதி
"எ ன் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே"
மேடையில் கரகரத்த குரலில் கருணாநிதி முழங்கினால், குழுமியிருக்கும் மொத்தக் கூட்டமும் ஆர்ப்பரிக்கும். ''கதையாசிரியர், எழுத்தாளர் என்பது மட்டுமல்ல... சிறந்த பேச்சாளர் என்பதும் 'கருணாநிதி' என்ற ஆளுமையின் அடையாளம்" என்பார்கள் அவர் கட்சி சாராத தலைவர்களும். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, சட்டமன்றத்தில் கருணாநிதி பேசுவதற்கு கூடுதல் நேரம் வழங்கப்படும். ஏனெனில், எம்.ஜி.ஆருக்கு எப்போதும் கருணாநிதியின் பேச்சு மொழி பிடிக்கும். எதிரும் புதிருமாகப் போட்டியிட்ட ஜெயலலிதாவும்கூட, ''கருணாநிதியின் பேச்சு முறை பிடிக்கும்'' என ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். பேச்சின் மூலம் ஒரு பெரும் கூட்டத்தைத் தம் பக்கம் திருப்பி வைத்திருந்தவர் கருணாநிதி. அப்படிப்பட்டவர், சில மாதங்களுக்கு முன் திடீரென தொண்டை, நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து அவர் வீட்டுக்குத் திரும்பிய பின்னரும் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. தொடர்ச்சியான இந்த சிகிச்சைகளால், கருணாநிதி பேசமுடியாத சூழல் ஏற்பட்டதோடு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும் தடைபட்டது. கருணாநிதியை நேரில் சந்திக்க முடியாத தி.மு.க தொண்டர்கள் முரசொலியில் அவ்வப்போது இடம்பெற்ற அவரின் படத்தைப் பார்த்து திருப்திப் பட்டுக்கொண்டனர். ஆனால், 'கால மேகம் மாறிவருகிறது. தலைவரின் மௌனம் உடைந்துவிட்டது' எனச் சமூக வலைதளங்களில் குதூகலமாகப் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர் தி.மு.க-வினர். ''ஆம்... எங்கள் தலைவர் வாய்திறந்து பேசிவிட்டார்'' என்கின்றனர் உற்சாகமாக. அதற்குச் சான்றாக நமக்கொரு பதிவை வாட்ஸ் அப்-பில் பகிர்ந்தனர்.
இதோ 'தலைவர் கலைஞரின் உடல்நிலை குறித்து கழக முன்னோடி துரைமுருகன்' எனத் தலைப்பிட்ட பதிவு :
தொண்டைக்குழி வழியாக குழாயை உள்ளே விட்டு அடிக்கடி சளி எடுக்க வேண்டி இருப்பதால், பேச இயலவில்லை...
கடந்த இருதினங்களுக்கு முன் குழாயை எடுத்துவிட்டு துவாரத்தையும் அடைத்து மருத்துவர்கள் பேசச் சொன்னார்கள்.
தலைவரிடம் ''உங்கள் பெயர் என்ன?'' எனக்கேட்க...
"என் பெயர் கருணாநிதி'' என்றார்.
அடுத்ததாக
''உங்களுக்கு யாரைப்பிடிக்கும்?'' எனக்கேட்க...
''அறிஞர் அண்ணா'' என்றார்.
பின்னர், என்னை ''யார்?'' எனக்கேட்க...
"துரை'' என்றதும், என் கண்கள் கசிந்தன.
மீண்டு வருவார் தலைவர்...
'வைரவிழா நாயகர்'
கலைஞர் '94'
- இப்படிக்கு துரைமுருகன்.
இந்தப் பதிவைப் படித்ததும் ''உண்மையா?'' என்றோம் ஆச்சர்யத்துடன். "என்ன ப்ரோ இப்படி கேட்குறீங்க? தலைவர் கருணாநிதிக்கு உடல்நிலை மோசமானதும் நாங்கள்லாம் துடிச்சுட்டோம். சீக்கிரம் குணமாகணும்னு நினைச்சோம். வீட்டுலயும் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வீட்ல டி.வி பார்க்க ஆரம்பிச்சாரு. மத்தவங்க அவருக்கு அன்றாட செய்திகளைத் தெரியப்படுத்த சத்தமா பேப்பர் படிச்சுக் காட்டுவாங்க. தினமும் செயல் தலைவர் ஸ்டாலின் ரெண்டு முறையாவது வந்து பார்த்துட்டு போவாரு. தொண்டையில் டியூப் போடப்பட்டிருப்பதால தலைவரால பேசமுடியாது. அதனால எது வேணும்னாலும் செயல் தலைவரோட கையை மெதுவா அழுத்துவாரு தலைவர். அந்த தொடுதலைப் புரிஞ்சுக்கிட்டு செயல் தலைவரும் உதவுவாரு. கொஞ்சம் கொஞ்சமா தலைவரோட சிகிச்சையில் முன்னேற்றம் வந்தது. இந்த நேரத்திலதான் 'தலைவர் பேசினார்'னு அண்ணன் துரைமுருகன்கிட்டயிருந்து பதிவு வந்தது. ஜூன் 3 - ம் தேதி வைர விழாவுக்கு எப்படியும் தலைவர்
கருணாநிதி வருவார்ங்கிற எங்க நம்பிக்கை கூடியிருக்கு" என்றனர் தூக்கலான உற்சாகத்துடன். நாம் இது குறித்து தி.மு.க-வின் முதன்மை செயலாளர் துரைமுருகனிடம் பேசினோம்.
"தலைவர் உடல்நிலை சூப்பரா இருக்கு. நல்ல நினைவாற்றலோடு இருக்கிறார். பேப்பர் படிக்கச் சொல்லிக் கேட்பாரு. அதுல பிரச்னை ஒன்றுமில்லை. தொண்டையில குழாய் வைத்திருந்ததால பேசமுடியாம இருந்தாரு. அப்புறம்தான் ரெண்டு நாள் முன்னாடி குழாயை எடுத்துட்டு மருத்துவர்கள் பேசச் சொன்னாங்க. தலைவரும் பேசினார். அந்த நொடி எனக்கு ஏற்பட்ட சிலிர்ப்பு... ஒருபுதுவிதமான உணர்வு" என்றார் மகிழ்ச்சி பீறிட. அவரிடம் ,''வைரவிழா மேடையில் கருணாநிதியைப் பார்க்கலாமா?'' என்றோம். "அது மருத்துவர்களைப் பொறுத்தது, சிகிச்சையைப் பொறுத்தது. கட்டாயம் வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கும் இருக்கிறது." என்றார். அவரின் பதிலில் தெரிந்த அழுத்தம், எதிர்பார்ப்பைக் கூட்டுவதாக உள்ளது.

கருணாநிதியின் முதல் போராட்டம் எது தெரியுமா..?
 இந்திய அரசியலில் மூத்த தலைவராக விளங்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, வருகிற 3-ம் தேதி தன்னுடைய 94-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
வாழ்க்கையில் பல மேடு பள்ளங்களை கடந்து வந்திருப்பவர் அவர் . அவருடைய பிறந்தநாளில் அவர்குறித்த சுவையான பத்து விஷயங்கள் இங்கே !
1 . கருணாநிதி எட்டாம் வகுப்பு மாணவராக இருந்த போது (1939) பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் 'நட்பு' என்ற தலைப்பில் பேசியதுதான் அவருடைய முதல் மேடைப் பேச்சு.
2 . கருணாநிதி தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சிறுவயதில் கருணாநிதிக்கு பிடித்தமான விளையாட்டாக இருந்தது கிரிக்கெட் அல்ல, ஹாக்கி. திருவாரூர் ஃபோர்டு ஹைஸ்கூல் ஹாக்கி டீமிற்காக மாவட்ட அளவில் விளையாடியிருக்கிறார்.
3 . திருச்சி வானொலி நிலையத்துக்கு 1944-ல் கருணாநிதி அனுப்பி வைத்த நாடகம், ' இதனை ஒளிபரப்ப இயலாது' என்ற பதிலுடன் திருப்பி அனுப்பப்பட்டது. ஆட்சியாளர்களை அந்த நாடகத்தின் வசனங்களும் கதாபாத்திரங்களும் வெளுத்து வாங்கியதே அதற்குக் காரணம். 'குண்டலகேசி' என்ற அந்த நாடகம்தான் பிற்காலத்தில் மந்திரிகுமாரி என்ற படமானது...
4 . நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி (1953) ஆறாயிரம் தொடக்கப் பள்ளிகளை ராஜாஜி தலைமையிலான தமிழக அரசு மூடியது. "மாணவர்கள் பள்ளிக் கல்விக்கு பாதி நேரமும் 'குலத்தொழில்' கற்க மீதி நேரமும் ஒதுக்கும்" படி ராஜாஜி அறிமுகப் படுத்திய 'குலக்கல்வி' திட்டத்துக்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. எப்போதும் போல் பெரியார் முதல் குரல் கொடுத்தார். அண்ணா போராட்டம் அறிவித்தார். ஆண்டை நினைவூட்டும் விதமாக 53 பொதுக்கூட்டங்களில் குலக்கல்வி முறையை எதிர்த்து கருணாநிதி, தொடர் உரையாற்றினார்... விளைவு, ராஜாஜி பதவி விலகினார். முதல்வராக காமராஜர் பொறுப்பேற்றார்.
5 . திருவாரூர் முத்துவேலர் என்பதை சுருக்கி டி.எம்.கருணாநிதி என்றுதான் தொடக்கத்தில் கையெழுத்திட்டு வந்தார் கருணாநிதி. பின்னர், மு.கருணாநிதி என்று அதை மாற்றிக் கொண்டார். 'உடன்பிறப்புக்கு' எழுதும் கடிதத்தில் மட்டும் அவர் மு.க. என்றே கையெழுத்திடுவார்.
6 . நடுத்தெரு நாராயணன், பெரிய இடத்துப் பெண், சாரப்பள்ளம் சாமுண்டி, அரும்பு, ஒரு மரம் பூத்தது, ஒரே ரத்தம், வான்கோழி, சுருளிமலை,வெள்ளிக்கிழமை, புதையல் போன்ற தலைப்புகளில் சமூகம் தொடர்பான காவியங்களை படைத்தவர் கருணாநிதி. தென்பாண்டி சிங்கம், பலிபீடம் நோக்கி, ரோமாபுரி பாண்டியன், பொன்னர்-சங்கர், பாயும்புலி பண்டாரக வன்னியன் போன்ற வரலாற்றுக் காவியங்களும் கருணாநிதியின் எழுத்தாற்றலுக்கு சான்றாகத் திகழ்கின்றன. கருணாநிதியின் வாழ்க்கையையும், எழுபதாண்டு அரசியல் களத்தையும் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தும் நூலாக அமைந்திருப்பது, 'நெஞ்சுக்கு நீதி' ! இந்நூலின் ஆறாம் பாகம் 2013-ல் வெளியிடப்பட்டது.
7 . தமிழ்நாடு அரசின் மாநில செய்தி வெளியீடாக வரும் தமிழ்நாடு அரசு செய்திப்பிரிவு (படச்சுருள்) படத்தையும்,  தமிழ்நாடு அரசு இதழான 'தமிழரசு' (தமிழ்- ஆங்கிலம்) இதழையும் உருவாக்கியவர் கருணாநிதிதான்.
8 . சரளமாக ஆங்கிலத்தில் பேசியதில்லை என்றாலும் கருணாநிதியின் ஆங்கில ஞானம் சற்றே அசத்தலானது... கருணாநிதியின் பேட்டி முடிந்ததும், சில நிமிட காத்திருப்பில் அந்தப் பேட்டியின் முழுமையை அறிக்கையாக அவருடைய உதவியாளர்கள் நிருபர்களுக்கு கொடுத்து விடுவார்கள்...
ஒரு நாள் அப்படி அறிக்கை கொடுப்பதில் சற்றே தாமதம். ஜெராக்ஸ் எடுக்கப் போன உதவியாளர் வரவில்லை. "சார், நாங்கள் எடுத்த பேட்டியை அப்படியே சொல்கிறோம், நீங்கள் 'டிக்டேட்' செய்தால் போதும்" என்றனர் நிருபர்கள். "நீங்கள் (நிருபர்கள்) சொல்வது போல் நான் டிக்டேட் செய்தால் நான் 'டிக்டேட்டர் ' (சர்வாதிகாரி) ஆகிவிடுவேனே" என்றார் கருணாநிதி. அந்த 'டைமிங்' ஆற்றலை கருணாநிதியிடம் அடிக்கடி காணலாம்.
9 . கருணாநிதிக்கு பிடித்த வசனம், "மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது.
10 . கருணாநிதியின் முதல்போராட்டமே கல்வி உரிமைக்கான போராட்டம்தான். திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் கருணாநிதியை ஆறாம் வகுப்பில் (1936) சேர்க்க மறுத்து விட்டனர். ' என்னை படிக்க விடவில்லை என்றால் எதிரேயிருக்கும் தெப்பக் குளத்தில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்வேன்' என்று பள்ளிக்கு எதிராகப் போராடியதோடு தெப்பக் குளத்தில் குதிக்கவும் முற்பட்டார் கருணாநிதி. வேறுவழியின்றி அவரை பள்ளியில் சேர்த்துக் கொண்டது பள்ளி நிர்வாகம்... கருணாநிதியின் முதல் போராட்டமே வெற்றிதான். -ப.திருமாவேலன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி .
நன்றி விகடன்.

மாமியார்...மருமகள்...



மாமியார்...மருமகள்...

ஆசை ஆசையாய் வளர்த்தஒரே பையனுக்கு 25 வயதானதும் திருமணம் செய்துவைக்க பத்து இடத்தில் ஜாதகம் பார்த்து, இருபது இடத்தில் சொல்லிவைத்து 30, 40 பெண்களை அலசி ஆராய்ந்து.....
ஒழுக்கம் பார்த்து,
மரியாதை பார்த்து,
படிப்பு பார்த்து,
பண்பு பார்த்து,
குலம் பார்த்து,
குடும்பம் பார்த்து,
எதுவும் போடவேண்டாம் பெண்ணை மட்டும் அனுப்பி வையுங்கள் மகளைப்போல் பார்த்துக்கொள்வதாக வாக்கு கொடுத்து ஒரு மருகளை கொண்டுவருவார்கள்.....

நிறைய செலவுசெய்து பையனுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைப்பதில் அம்மாவை விட சந்தோஷம் யாருக்கும் இருக்காது...

திருமணம் முடிந்தும் ஒரு சில நாட்களுக்கு நிறைய சம்பிரதாயங்கள் இருப்பதால் யாரும் யாரையும் கண்டுகொள்வதில்லை,

இதற்குள் முதலிரவு முடிந்திருக்கும், கணவன் மனைவிக்கு இடையே ஒருவித நெருக்கம் உருவாகியிருக்கும் ...

சொந்தபந்தங்கள் எல்லாம் ஊருக்கு சென்றபின் காலையில் எழுந்து காபி போடப்போன அம்மாவுக்கு உதவிசெய்ய மருமகளும் கிச்சனில் வந்து நிற்க....

இருபத்தைந்து வருடங்களாக தன் கட்டுப்பாட்டில் இருந்த சமையலறையில் முதன்முறையாக உரிமையோடு இன்னொரு பெண் வந்து நிற்கிறாள்....எல்லா அம்மாக்களுக்கும் ஏற்படுகிற முதல் சிறுபயம்.......

அவனுக்கு காபி strong கா இருந்தாதாம்மா புடிக்கும் !நான் போட்டுதர்றேன் கொண்டுபோய் கொடு!...

மருமகள் காபியை கொண்டுசென்று யதார்த்தமாக கதவை சாத்திக்கொள்ள, அம்மாவுக்கு மட்டும் படபடப்பாகவே இருக்கும்,....

பின் கணவனுக்கு பறிமாறல்,
கை கழுவ தண்ணீர் தருதல்,
அவ்வப்போது ரகசியமான சிணுங்கல் பேச்சு,
எப்போதும் மகனுடனே இருப்பது,
மகனும் அவளுடனே இருப்பது
என அன்றாட நடவடிக்கைகள் எல்லாம் அம்மாவுக்கு எதையோ இழந்தது போன்ற தடுமாற்றத்தை உண்டாக்கும்....



இவ்வளவு நாள் எழுப்பிவிடுவதில் இருந்து
காப்பி கொடுப்பதுசாப்பாடு பறிமாறுவது,
துணி துவைப்பது, காத்திருப்பது,
கால் அமுக்குவது என எல்லாவற்றுக்கும் தன்னை எதிர்பார்த்த மகனுக்கு இவை எல்லாவற்றையும் செய்ய புதிதாக ஒரு பெண் வந்திருக்கிறாள், அப்படியென்றால் என்னுடைய உரிமை??......

அவன் என் மகன்,
முதல் உரிமை எனக்குதான்,
என்று நினைக்கத்துவங்கிய மனம் மருமகளை போட்டியாக நினைக்க ஆரம்பிக்கிறது, அவனுக்கு நான் முக்கியமா இல்லை நீ முக்கியமா?.....

என்கின்ற போட்டிக்கு பின்னால் இருக்கின்ற உளவியல் ரீதியான பொஸஸிவ்நஸ்ஸை புரிந்துகொள்ளாமல் மருமகளும் தன்னை எந்த வேலையும் செய்யவிடுவதில்லை, எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்கிறாங்க என்று தன் பங்கு போட்டியையும் உரிமை சண்டையையும் துவங்க அது மெல்ல வளர்ந்து மகனால் எந்தபக்கமும் பேசமுடியாமல் எதாவது ஒரு டென்ஷனில் அம்மாவை திட்டிவிட அந்த நொடிமுதல் அம்மாவின் மனம் உடைந்துபோய் தன் மகன் மனைவிபேச்சை கேட்டு என்னை உதறித்தள்ளிவிட்டான் என்று புலம்பத்தொடங்கிவிடும்......

அதை மீண்டும் மீட்டெடுக்கவே முடியாது
இதை எப்படி சரிசெய்வது?....

இதை சரிசெய்யும் சக்தி மருமகளுக்கு மட்டுமே இருக்கிறது,....

திருமணமாகி வந்தவுடன் கணவனுக்கு நெருக்கமாவதற்கு முன் மாமியாருடன் நெருக்கமாகி முதலில் அவர் உங்களுக்கு மகன், அதன் பிறகுதான் என் கணவன், அதனால் முதல் உரிமை உங்களுக்கு தான் என்கின்ற நம்பகத்தன்மையை அவர் மனதில் விதைக்க வேண்டும்......

அப்படி விதைத்தால், அம்மாவின் மனது திருப்தி அடைந்து மருமகளை யாரோ என்று நினைக்காமல் மகள் போல் நினைத்து மகனை விட்டுகொடுத்துவிடுவார்!.....

ஆனால் அப்படி எந்த மருமகளும் செய்வதில்லை, வரும்போதே கணவன் மீதான தனது உரிமையை நிலைநாட்டுவதிலேயே இவர்களது முழுகவனமும் இருக்கிறது....

இதனால் 25 வருடமாக வளர்த்த அம்மாவின் மனம் தன்னிடமிருந்து மகனை பிரிக்கவந்த எதிரியாக மருமகளை வெறுப்புடன் பார்க்க தொடங்குகிறது...

Possessivenessம்அடிப்படைஅளவுக்கதிகமான அன்புதான்....

அவ்வளவு அன்புகொண்டவர்கள் அடுத்தவர்களை காயப்படுத்த மாட்டார்கள்....

பொம்மையை பிடுங்கும்போது குழந்தைக்கு ஏற்படும் அதே வலிதான் ஒவ்வொரு அம்மாவுக்கும்.......

அந்த பொம்மையை எனக்கும் மிகவும் பிடிக்கும் என்பதை மட்டும் உணர்த்திவிட்டு கொஞ்சம் காத்திருங்கள்....

அந்த குழந்தையே முழு சந்தோஷத்துடன்
அந்த பொம்மையை உங்களுக்கு கொடுத்துவிடும்....

உங்கள் மகனை பிரித்து செல்ல வரவில்லை
உங்களிடமிருந்து யாரும் பிரித்துவிடகூடாது என்பதற்காகத்தான் வந்திருக்கிறேன் என்பதை மட்டும் புரியவையுங்கள்....

உங்களுக்கு கணவன் மட்டுமல்ல போனஸாக ஒரு அம்மாவும் கிடைப்பாள்!...

செவ்வாய், 30 மே, 2017

புதிதாக கல்யாணமான தன் மகனுக்கு அம்மா சொன்ன புத்திமதிகள்



புதிதாக கல்யாணமான தன் மகனுக்கு  அம்மா சொன்ன புத்திமதிகள்

                 
1. எந்தச் சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது....!

மகனே...மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே...

உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில் 30 ஆண்டு கால அனுபவம் இருக்கு.
ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த வாழ்க்கைக்கு புதுசு.

உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து  அனுப்பியிருக்காங்க.

அவளுக்குக் சிலபல ஆண்டுகள் தேவைப்படும்.
அதற்குப் பிறகு , உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள்.

2. மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..!

மகனே, உன் மனைவி உன்னுடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி.  அம்மா இல்லை.

உன் அம்மாவுக்கு உன்னைக் கவனிப்பது மட்டும் தான் வேலை.
ஆனால் , உனக்கு உன் மனைவிய நீ நன்றாக கவனிப்பது முக்கியம்.

நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவது மிக மிக முக்கியம்.

3.மதிக்கப்படவேண்டியவள் மனைவி...!

மகனே , உன் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டது அனைத்திலும் உன் மனைவி உடனிருந்து பங்கு கொள்ளப்போகிறவள்.

அவளை மதிக்கவேண்டும்.
உன் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் அவள் பங்கு உள்ளது.

அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இரு..!

4. புகுந்த வீடு வந்த மனைவியை இயல்பாக உணர வைக்க உதவி செய்யணும்.

பிறந்து , வளர்ந்து மகிழ்ந்திருந்த பிறந்த வீட்டை விட்டு,
நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்திருக்கிறாள் உன் மனைவி...

 அவளை இயல்பாக  இருக்க வைக்க நீதான் உதவணும்..
சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம்..

அதை நீதான் கவனிச்சு அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்கணும்...!

5. எப்பொழுதும் மனைவியைக் காதலி...!

காதலிக்க வயசு ஒரு பொருட்டே இல்லை.. எப்பொழுதும்  உன் மனைவியை சந்தோஷமா வச்சுக்கோ..

சின்னச்சின்ன சர்ப்ரைஸிங்கான பரிசுகள், வெளிய அழைச்சுட்டுப் போறது, அவள் டிரஸ்ஸிங்கை சிலாகித்துப் பேசறது, சந்தோஷமா வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க ரெண்டுபேரையும்...எப்பவும இளமையா உணர வைக்கும்...!

ஐந்து பாய்ண்ட்டுகளையும் சேர்த்து ஒரே பாய்ண்ட்டா சொல்லட்டா.....!

உங்க அப்பா(நல்ல அப்பா மட்டும்) என்னை எப்படி நடத்தறாரோ....?
அது போல நீயும் உன் மனைவியை...கௌரவமா மதிச்சுக் குடும்பம் நடத்து மகனே..!

திங்கள், 29 மே, 2017

பெண்கள் தினமும் உடலுறவில் ஈடுபட்டால் என்ன நடக்கும் தெரியுமா ..?



பெண்கள் தினமும் உடலுறவில் ஈடுபட்டால் என்ன நடக்கும் தெரியுமா ..?

நாம் எவ்வளவுக்கு எவ்வளவு உடலுறவு கொள்கிறோமோ, அந்தளவு உடலுக்கும் ஆரோக்கியமும், புத்துணர்ச்சியும், சுறுசுறுப்பும் கிடைக்க உதவியாக இருக்கும். தினமும் உடலுறவு கொண்டால், பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகளான சளி மற்றும் தலைவலி போன்றவை வராமல் தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆய்வில் ஒவ்வொரு முறை உறவு கொள்ளும் போது, நம் உடலில் ஆக்ஸிடாஸின் எனப்படும் ஹார்மோன் வெளியிடப்படுகிறது. இந்த ஹார்மோனானது மூளைக்கு உடலை ரிலாக்ஸ் அடையச் செய்யுமாறு ஒருவித சமிக்ஞையை அனுப்பும்.

இதனால் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் நீங்கி, உடலானது ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் இருக்கும். தினமும் உடலுறவில் ஈடுபடுவதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

உடலுறவு கொள்ளும் போது, உடலில ஒருசில நல்ல ஹார்மோன்களுடன், அவை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும். அன்றாடம் உடலுறவில் ஈடுபடுவதன் மூலம், இரத்தமானது இரத்த நாளங்களில் சீராக உந்தப்படுவதால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆனால் இதய சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்றே உடலுறவில் ஈடுபட வேண்டும். பெண்கள் மாதவிடாய் நெருங்கும் ஒரு வாரத்திற்கு முன் உடலுறவில் ஈடுபட்டால், மாதவிடாயின் போது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படாமல் இருக்கும்..

மேலும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, சோர்வு போன்ற பிரச்சனைகள் வராது. தினமும் உடலுறவு கொண்டால், மாதவிடாய் காலத்தில் வயிற்றுப்பிடிப்பு ஏற்படாது. அன்றாடம் 30 நிமிடம் உடலுறவு கொண்டால், 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்ததற்கு சமம்.

இதனால் உடல் நன்கு ஆரோக்கியமாகவும், பிட்டாகவும் இருக்கும். மேலும் நோயெதிர்ப்பு மண்டலமானது ஊக்குவிக்கப்பட்டு, அதன் சக்தியானது அதிகரிக்கும். வாரத்திற்கு இரண்டு முறைக்கு குறைவாக உறவு கொள்பவரை விட, அதிகமாக உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு, பக்கவாதம் வரும் வாய்ப்பானது குறைவாக உள்ளது என்று ஆய்வுகள் கூறுகிறது.

பெண்கள் அன்றாடம் உடலுறவு கொள்ளும் போது, உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிப்பதால், எலும்பின் அடர்த்தியானது அதிகரித்து, ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரை வருவது தடுக்கப்படும்.



திருமணத்திற்கு பின் தம்பதிகளின் அழகு சற்று அதிகரித்துக் காணப்படும். அது ஏன் தெரியுமா? அதற்கு காரணம் உடலுறவு தான். ஆம், உடலுறவில் ஈடுபடும் போது அலாதியான இன்பத்தை அடைவதோடு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியமும் சரும அழகும் அதிகரிக்கும்.
மேலும் ஆய்வுகளிலும் அடிக்கடி உடலுறவு கொண்டால், ஒருவரின் அழகு கட்டாயம் அதிகரிக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடலுறவில் ஈடுபடும் போது உடலினுள் ஏற்படும் குறிப்பிட்ட ஹார்மோன் மாற்றங்கள் ஓர் காரணம்.
இப்போது அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவதால் கிடைக்கும் அழகு நன்மைகள் என்னவென்று பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து, இனிமேல் அழகு நிலையங்களுக்கு சென்று அழகை அதிகரிக்காமல், உங்கள் துணையுடன் படுக்கையில் புகுந்து விளையாடுங்கள்.
சரும வறட்சி குறையும்
அடிக்கடி உடலுறவில் ஈடுபடும் போது உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, அதனால் சரும வறட்சி ஏற்படுவது குறையும். மேலும் சருமம் மென்மையும் அதிகரிக்கும்.
முகப்பரு குறையும்
உடலுறவில் ஈடுபடுவதால், ஹார்மோன் சுரப்புகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் குறைந்து, அதன் உற்பத்தி சீராக்கப்பட்டு, முகப்பரு வருவது குறையும்.
இளமை தோற்றம்
அடிக்கடி உடலுறவில் ஈடுபட்டால், கொலாஜன் உற்பத்தி அதிகரித்து, சரும செல்களின் இளமைத்தன்மை தக்க வைக்கப்படும். எப்படியெனில் உடலுறவில் ஈடுபடும் போது, இளமைக்கு காரணமான DHEA என்னும் ஹார்மோனின் உற்பத்தி தூண்டப்படும்.
பொலிவான முகம்
உடலுறவில் ஈடுபடும் போது, உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதோடு, வியர்வை அதிகம் வெளியேறுவதால் சருமத்துளைகளில் இருக்கும் அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசை வெளியேறி, பொலிவு அதிகரித்து காணப்படும்.
ஆரோக்கியமான நகங்கள்
உடலுறவில் ஈடுபடும் நேரத்தில், நகங்களுக்கு ஊட்டமளித்து ஆரோக்கியதை மேம்படுத்தும் குறிப்பிட்ட ஹார்மோன்கள் வெளியிடப்படும். இதனால் அழகான மற்றும் ஆரோக்கியமான நகங்களைப் பெறலாம்.
எடை குறைவு
ஒரு மணிநேரம் உடலுறவில் ஈடுபட்டால் 300 கலோரிகளை எரிக்க முடியும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. எனவே உங்களின் எடையைக் குறைத்து, சிக்கென்று காட்சியளிக்க, ஜிம் சென்று நேரத்தை வீணடிக்காமல், துணையுடன் படுக்கையில் நேரத்தை செலவிடுங்கள்.
ஆரோக்கியமான தலைமுடி
அடிக்கடி உடலுறவில் ஈடுபட்டால், தலை முதல் கால் வரை இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, உடலின் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறன் அதிகரிக்கும். இதன் காரணமாக தலைமுடியும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். ஆகவே உங்கள் தலைமுடி ஆரோக்கியமாக இருக்க அடிக்கடி


கர்ப்பம் அடைந்த முதல் 3 மாதங்களில் உடல் உறவுக்கு லீவு விடுங்க....



கர்ப்பம் அடைந்த முதல் 3 மாதங்களில் உடல் உறவுக்கு லீவு விடுங்க....

கரு உருவாகி 25-ல் இருந்து 30 மணி நேரத்துக்குப் பிறகு கருவில் உள்ள ஒரு செல் பிரிந்து இரண்டு செல்கள் ஆகும். சில மணி நேரம் கழித்து இரண்டு நான்காகும், நான்கு எட்டாகும்... இப்படி எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டே போகும்.

இவை எல்லாமே பெலோபியன் குழாயில்தான் நடக்கும். ஐந்தாம் நாள் கருவானது பெலோபியன் குழாயில் இருந்து நகர்ந்து வந்து, கருப்பையில் வந்து உட்கார்ந்துகொள்ளும். முதல் மூன்று மாதங்களில் தாய்க்கு வாந்தி, குமட்டல் போன்ற மசக்கை அறிகுறிகள் இருக்கும்.

கர்ப்பம் தரித்த 14-ம் நாளில் இருந்து மூன்றாவது மாதம் வரை தாயின் கருவறையில் உள்ள கருவுக்கு 'எம்பிரியோ’ என்று பெயர். மூன்றாவது மாதத்துக்கு அப்புறம் 'பீட்டஸ்’ என்று பெயர். கருவில் உள்ள குழந்தைக்கு முக்கியமான உறுப்புகள் எல்லாம் உருவாகிற தருணம் இது.

எனவே, கர்ப்பிணிப் பெண் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும். மூன்று மாதத்துக்குப் பிறகு கருவைச் சுற்றி 'ஆம்னியான்’ (Amnion) எனப்படும் நீர் நிறைந்த பனிக்குடம் உருவாகும். நடப்பது, உட்கார்வது, படுப்பது எனத் தாயின் உடல் அசைவுகளின்போது கருவில் உள்ள குழந்தை சிதைவுறாமல் இருக்கவே இயற்கை இந்த ஏற்பாட்டைச் செய்கிறது.

எனவே, ஒரு பெண் கர்ப்பம் ஆனது உறுதியானவுடன், அந்தத் தம்பதி தங்களின் செக்ஸ் நடவடிக்கைக்குத் தற்காலிகமாக லீவு கொடுத்துத்தான் ஆக வேண்டும். மாறாக முதல் மூன்று மாதங்களில் உடல் உறவில் ஈடுபட்டால் வயிற்றில் வளரும் கரு ஆரோக்கியமாக உருவாவதில் சிக்கல், பனிக்குடம் உடைதல் போன்ற பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.

மூன்றாவது மாதத்தில் இருந்து ஒன்பதாவது மாதம் வரை உறவில் ஈடுபடலாம். முதல் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்திருந்தால், அதற்கு அடுத்த கர்ப்பக் காலத்தில் கட்டாயம் உடல் உறவைத் தவிர்க்க வேண்டும்.

ஏற்கெனவே கருச்சிதைவு ஏற்பட்டிருத்தல், கர்ப்பக் காலத்தில் பிறப்பு உறுப்பில் ரத்தப்போக்கு, பிரசவத்துக்கு முன்பே கருப்பையின் வாசல் (Cervix) திறந்த நிலையில் இருப்பது, நஞ்சுக்கொடி (Placenta) கருப்பை வாசலுக்கு வந்துவிடுவது போன்ற பிரச்சனைகளை எதிர் கொண்டவர்கள் கர்ப்பக் காலத்தில் உடல் உறவில் ஈடுபடக் கூடாது; மேலும் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதும் அவசியம்.

கர்ப்பம் அடைவதை தடுக்கும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை..



கர்ப்பம் அடைவதை தடுக்கும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை..

தற்போது ஒரு குழந்தையை பெற்றெடுக்கவே பலர் பல மருத்துவரை சந்தித்து, கருத்தரிக்க மருந்துகளை எடுத்து சிரமப்பட்டு வருகின்றனர்.

 இதற்கு முக்கிய காரணம், வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் தான்.

ஆனால் அத்தகைய மருந்துகளில் உதவியின்றியும் இக்காலத்தில் எளிமையாக கருத்தரிக்க முடியும். அதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்கங்களையும் பின்பற்ற வேண்டும்.

 அவை என்னவென்று பார்க்கலாம்..

கருவளத்தை அதிகரிக்க, தம்பதிகள் இருவரும் நல்ல ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உட்கொண்டு வர வேண்டும்.

அதிலும் பழங்கள், காய்கறிகள், கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டீன் நிறைந்த உணவுகள் என அனைத்தையும், அத்துடன் வாரத்திற்கு இரண்டு முறை மீனையும் உணவில் சேர்த்து வர வேண்டும்.

தற்போது மன அழுத்தம் தான் பலரையும் வாட்டி வதைக்கிறது. மேலும் மன அழுத்தமே கருத்தரிக்க பெரிதும் தடையை ஏற்படுத்துகிறது.

 எனவே மன அழுத்தத்தைக் குறைக்க தினமும் யோகா செய்து வர வேண்டும்.

இதனால் மனம் அமைதி அடைவதுடன், விரைவில் கருத்தரிக்கவும் முடியும்.

உடலில் வைட்டமின்கள் மற்றும் ஃபோலிக் ஆசிட் போதிய அளவில் இல்லாவிட்டாலும், கருத்தரிக்க முடியாமல் போகும்.

 எனவே வைட்டமின்கள் மற்றும் ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுப் பொருட்களை தினமும் எடுத்து வாருங்கள்.

புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்கள் தம்பதிகளுக்கு இருந்தால், உடனே அவற்றை நிறுத்த வேண்டும்.

மேலும் காப்ஃபைன் நிறைந்த உணவுப் பொருட்களான காபி, டீ போன்றவற்றை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று தான் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது.

 இப்படி ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், உடலில் பல பிரச்சனைகள் ஆரம்பமாகி, பின் கருப்பையில் சிசு தங்குவதில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

எனவே கருத்தரிக்க நினைக்கும் முன், தம்பதிகள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையான நல்ல உணவுகளை வீட்டிலேயே சமைத்து உண்பது, உடற்பயிற்சியில் தினமும் ஈடுபடுவது என மேற்கொண்டு வர வேண்டும்.

ஆண்களின் குறைபாடுகளும் அதற்கான இயற்கை மருத்துவத் தீர்வுகளும்...



ஆண்களின் குறைபாடுகளும் அதற்கான இயற்கை மருத்துவத் தீர்வுகளும்...

மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை கஷ்டப்படுவதும் உழைப்பதும் சொல்லொன்னாத் துயரங்களைத் தாங்கிக்கொண்டும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வது குடும்ப வாழ்வின் மகிழ்வுக்கு என்றால் அதனை யாரும் மறுப்பவர்கள் இருக்கப் போவதில்லை.

எனினும், குடும்ப வாழ்வின் மகிழ்ச்சிக்குக் காரணம் பணம் மற்றும் குழந்தைகள் மட்டுமன்றி அதனைவிட முக்கியமான விடயமொன்று உள்ளது. 

*அது தான் தம்பதியினரின் இல்லற வாழ்வாகும்.*

 இவ்வுறவானது, திருப்திகரமாக இருப்பதாக கணவன், மற்றும் மனைவியால் ஆத்மார்த்த ரீதியாக உணரப்படுமிடத்து குடும்பத்தின் முழுப் பிரச்சினையும் தூரமாகி விடுவதுதான் உண்மை.

இந்த ஒரு விடயம் அதிருப்தியாக கணவனால் அல்லது மனைவியால் உணரப்படுமிடத்து இதனை வெளியில் யாரிடமும் சொல்ல முடியாது என்ற காரணத்தினால், கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் சிறு சிறு விடயங்களையும் பெரிதுபடுத்தி மற்றும் அற்ப விடயங்களுக்கெல்லாம் அடிக்கடி சண்டையில் முடித்துக்கொள்ளும் தம்பதிகள் சமூகத்தில் நிறைந்துள்ளனர் என்பது தான் உண்மை.

இதற்கு மூலகாரணம் சில குறைபாட்டு நோயாகவும் இருக்கலாம்.

 இவையெல்லாம் குறைபாடா? அல்லது நோயா? என்று கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ தெரியாமல் இருப்பதும் இன்னுமொரு பிரச்சினையாகும்.

 பெண்களுக்கு ஏதும் குறைபாடு இருப்பின், அது தமது மாதவிடாய் சக்கரத்தின் அடிப்படையில் அல்லது குழந்தைப்பேற்றின் அடிப்படையில் இலகுவாக கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

*இதுவே ஆண்களுக்கு இருப்பின்??? என்ற கேள்வி எழலாம்.*

 இவற்றைப் பற்றிய போதியளவு அறிவு பெண்களிடம் இல்லை என்றே கூறல் வேண்டும்.

 ஆண்கள் அதனை தானாகவே உணர்ந்து கொள்வார்களேயானால், அவர்களுக்கு தாழ்வுச் சிக்கல் நிலமையை அவர்கள் உணர்வார்கள்.

இதன் வெளிப்பாடு, மனைவியுடன் காரணமின்றி வாக்குவாதம் புரிதல், ஏசுதல், சில சமயம் அடித்தல், புதிதாக புகைபிடிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுதல், மனைவியை சந்தேகப்படுதல், மனைவிக்கு கடுமையான முறையில் கட்டளையிடுதல், பரஸ்பரம் கலந்துரையாடாமை, அளவுக்கு அதிகம் கோபப்படுதல் போன்ற குணங்குறிகளை வெளிப்படுத்தலாம்.

உண்மையிலேயே இல்லற உறவு என்பது மற்றொரு சந்ததியை உருவாக்குவதை மட்டும் உள்ளடக்காது.

 மேலும், வாழ்வின் உச்ச ஆத்மார்த்தமான இன்பம், கவலைகளை மறத்தல், உளவியல் ரீதியான இன்பம், ஆரோக்கியம், பாதுகாப்பு போன்றவற்றையும் உள்ளடக்கியதாகும்.

 இங்கே நாம் பார்க்கவிருப்பது ஆண் பாலியல் நோய்கள் பற்றியல்ல ஆண்களின் இல்லற உறவின் போதான குறைபாடுகள் பற்றியாகும்.

*வினைதிறனற்ற இல்லற உறவு:*

 *இதற்குரிய பிரதான காரணங்கள்:*

1.உடற் சோர்வு - இது நீரிழிவு நோய், ஆஸ்துமா, நீண்ட நாள் மலச்சிக்கல், இரத்தச் சோகை, உளச் சோர்வு, அதீத வேலைப்பழு போன்ற காரணங்களினால் உருவாகலாம்

2.அணுக்களின் எண்ணிக்கை குறைவடைதல் - இது ஒரு நோய் நிலையாகும்
 
3.உறவை வேண்டுமென்றே தவிர்த்தல் - மாதவிடாய் நேரம், கர்ப்ப காலம், பாலூட்டும் காலம், இரவு வேலை, வெளிநாடு செல்லுதல் போன்ற காரணங்களினால் நேரலாம்

4.வேறு நோய்களினால் ஏற்படத்தக்க பக்க விளைவு – அதாவது, இருதய நோய்கள், வாயுக் கோளாறு, சிறுநீரக நோய்கள், சலக்கடுப்பு போன்றவற்றின் பக்க விளைவாகவும் இந்நிலமை ஏற்படலாம்

5.உளவியல் நோய்கள் - பதகளிப்பு, அழுத்தம்/நெருக்கீடு, குற்ற உணர்வு, மனைவியுடன் கலந்துரையாடாமை போன்ற உளவியல் நிலைமைகள்

6.அதீத மது மற்றும் புகைபிடிக்கும் பழக்கம்

7.சுய இன்பம் காணுதல் - இன்று ஆண்களுக்கிடையில் அதிகமாக உள்ள பழக்கம்.

8.நீண்ட நேரம் பிரயாணம் செய்தல் - இதுவும் குறைபாடு ஏற்படுதற்குரிய முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

கட்டுப்பாடின்றிய ஸ்கலிதம்:

அசாதாரணமாக சுய கட்டுப்பாடின்றி சிறுநீர் கழிக்கும் வேளையில், மலம் கழிக்கும் வேளையில், பாலியல் உணர்வின்போது மற்றும் பல சந்தரப்பங்களில் கட்டுப்பாடின்றி ஸ்கலிதமாகுவதாகும். 

*இதற்குரிய காரணங்கள்:*

1.அதிகளவு விந்து வெளியேற்றம்

2.விந்து அமிலத் தன்மையடைதல்

3.விறைப்படையாமை

4.அதீத உணர்வு – தேவையற்ற விடயங்களை அதிகமாக பார்த்தல்

*விரைவான வெளியேற்றம்:*

அதாவது இல்லற உறவுக்கு தயாராகும் வேளையில் அல்லது உறவின் தொடக்கத்திலேயே விந்து வெளியேறல் (5 நிமிடங்களை விட குறைந்த நேரத்திற்குள்).

*இதற்குரிய காரணங்கள்:*

1.சுய இன்பம் காணுதல் 

2.பெற்றோரின் அதீத கட்டுப்பாடான வாழ்க்கை முறை

3.சிறு வயதிலேற்பட்ட மனவடு

4.தம்பதிகளுக்கிடையிலான அல்லது குடும்ப உறவுகளுக்கிடையிலான பிரச்சினை

5.மது மற்றும் புகைபிடித்தல்

6.சில வகை மருந்துகளின் நீண்டகால பாவனை

மேற்கூறிய குறைபாடுகள்  அனைத்தும் குறித்த சில காலம் அவதானித்ததன் பின்பே முடிவுக்கு வருதல் அவசியமாகும்.

 எடுத்த எடுப்பில் முடிவெடுத்தல் கூடாது.  

மேலும் இவை அனைத்தும் இன்பகரமான இல்லற உறவுக்கு ஊறு விளைவிப்பதே தவிர குழந்தைப் பேரின்மைக்கு காரணமாக அமையாது.

 இக்குறைபாட்டை நீக்குவதில் மனைவியின் ஒத்துழைப்பும், பொறுமையும் வினைத்திறனாக அமையும். 

இக்குறைபாட்டை மனைவியானவள் கணவனுக்கு இருப்பதாக உணரும் பட்சத்தில் கணவனுடன் கனிவுடனும் சூசகமாகவும் பேசி உளவளத்துணையாளர் ஒருவரிடம் அல்லது தகுந்த வைத்தியரிடம் கட்டாயம் அழைத்துச் செல்லுதல் வேண்டும். 

*தகுந்த வைத்திய மற்றும் உளவள ஆலோசனைகள் மூலம், எமது நடைமுறை வாழ்க்கையில் செய்யத்தக்க மாற்றங்கள் என்பவற்றின் மூலமாக மிக விரைவாக இக்குறைபாட்டை முற்றிலுமாக நீக்கி இன்பகரமான இல்லற இனிமையை அனுபவிக்கலாம்.*

யுனானி மருத்துவத்தைப் பொறுத்த வரையில் குறைபாடாகவிருக்கட்டும் அல்லது நோய் நிலையாக இருக்கட்டும் இவ்விரண்டிற்கும் தகுந்த தனித்துவமான வெற்றிகரமான சிகிச்சை முறைகள் காணப்படுகின்றன.

 ஏனைய மருத்துவ முறைமைகளைப் போன்றல்லாது யுனானி மருத்துவ முறையைப் பொறுத்தமட்டில் ஒவ்வொருவரதும் உடல், உள நிலைமைகளுடன் ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமான மற்றும் தனித்துவமான முறையிலேயே சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

எனவே, ஒவ்வொருக்கும் வழங்கப்படும் சிகிச்சைகளில் மாற்றங்கள் மற்றும் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

 இதனால் இவ்வாறான மேற்கத்தேய மருத்துவம் கைவிடுகின்ற இது போன்ற பல்வேறு நோய் நிலமைகளுக்கு வெற்றிகரமான பிரத்தியேகமான சிகிச்சைகள் எமது துறையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



ஆண்மை குறைபாடு பற்றிய உண்மையும் பொய்யும்...

இன்றைய உலகில் ஏராளமான ஆண்கள் ஆண்மை குறைபாடு பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றனர். கோடிக்கணக்கான விந்தணுக்கள், பெண்ணுறுப்பிலிருந்து கர்ப்பப்பை நோக்கி செல்லும். இதில் துடிப்புடைய ஒரே ஒரு விந்தணு மட்டுமே முட்டையின் வெளிச்சவ்வை துளைத்து உள்ளே நுழைகின்றன.
பெண்ணுறுப்பிலிருந்து கர்ப்பபைக்கு கடந்து செல்ல வேண்டிய தூரம் 15 லிருந்து 25 செமீ ஆகும். இதன் பின்னரே கரு உருவாகிறது, சாதாரணமாக ஒரு ஆணின் ஒரு மில்லி லிட்டர் விந்தில் குறைந்தபட்சம் 4 கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 12 கோடி கூட இருக்கும். ஆனால், இந்த எண்ணிக்கையின் குறைபாட்டால் ஆண்மைக் குறைபாடுகள் ஏற்படுகின்றன.
ஆண்மை குறைபாட்டிற்கு காரணங்கள் என்ன?
அண்மையில் நடந்த ஆராய்ச்சியின்படி, சுமார் 25 சதவீதம் மன அழுத்தத்தின் காரணமாகவே இந்த ஆண்மைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதிக மது அருந்துதல், புகை மற்றும் போதைப்பழக்கம், நீரிழிவு நோய், மனநோய்கள், இரத்த கொதிப்பு, சில நோய்களுக்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் பக்கவிளைவுகளால் ஆணுறுப்பு விறைப்படைகிறது.
அதிகமான வெப்பத்தால் ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது, உதாரணத்திற்கு இராசயன தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கும், கதிர்வீச்சுத்துறைகளில் பணிபுரிவோருக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. விந்தணு உற்பத்திக்கும், உடல் சூட்டுக்கும் தொடர்புள்ளது. உடல் சூடு அதிகரிக்கும்போது விந்தணு உற்பத்தி பாதிக்கப்படும்.
நமது உடலின் பிற பகுதிகளில் உள்ள வெப்ப நிலையை விட விந்துப் பையின் வெப்ப நிலை 5 டிகிரி குறைவாகவே இருக்கும். அதற்கேற்றபடி விந்துப் பையானது தனது வெப்ப நிலையை சரிவிகித நிலையில் வைத்துக் கொள்ளும். எனவே உடல்சூடும் ஒருவகையில் காரணமாகிறது.
ஊட்டச்சத்து குறைபாடு, சரியான உடற்பயிற்சி இன்மை, டெஸ்டோஸ்டிரன் ஹார்மோன்(Testosterone) சுரப்பு குறைபாடினாலும் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்.
இந்த காரணங்கள் உண்மையாதா?
மன அழுத்தம் ஒருவகையில் காரணமாக கூறப்பட்டாலும், விந்தணு குறைபாட்டிற்கு மன அழுத்தம் காரணமாகிவிடமுடியாது, ஏனெனில் மனஅழுத்தம் இருந்தால் உடலுறவில் சரியாக ஈடுபட முடியாத காரணத்தால் தான் விந்தணுக்கள் வெளியேறுவதில் பிரச்சனை ஏற்படுகிறது.
ஊட்டச்சத்துக்களில் விட்டமின் சி, ஜிங்க், செலினியம், ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் போன்றவை விந்தணு உற்பத்திக்கு உதவுகின்றன. கைப்பேசி கதிர்வீச்சுகளால் ஆண்மை குறைபாடுகள் ஏற்படுகிறது என்று சொன்னாலும், அதனை நிரூபிக்கும் ஆய்வுகள் இன்னும் வெளியாகவில்லை.
உடல் சூடு ஒரு காரணமாக கூறப்படுவதால், சிலர் விதைப்பையை குளுமைப்படுத்தி விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி செய்வார்கள், ஆனால் இதனால் எவ்வித பலனும் இல்லை, அதற்கு மாறாக இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்த்தாலே போதுமானது.
வயதானவர்களுக்கு மட்டுமல்ல, இளம் வயதிலும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் ஆண்மை குறைபாடு ஏற்படும்.
மேலும் BMI எனப்படும் உடல் எடை அளவு கோளில் 20 - 25 எனும் அளவில் இருப்பவர்களுக்கு நல்ல விந்தணு உற்பத்தி இருக்கிறது, இதுவே உடல் பருமன் உள்ளவர்களுக்கு இது குறைவு என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

விந்து நாதம்


விந்து நாதம்

விந்து என்றவுடன் ஏதோ கெட்ட வார்த்தை, ஏதோ பேச தகாத  வார்த்தை என்றும்  நம் மூட மக்கள் எண்ணி கொள்கிறார்கள்.

 நாதம் என்றால் பலருக்கு என்னவென்றே தெரியாது,

ஏதோ வாத்திய கருவி என்று நினைத்து கொள்கிறார்கள்.

*சரி உண்மையில்  விந்து என்றால் என்ன?*

 *உடலுறவின்போது  வெளி வரும் வெள்ளை திரவம் அவ்வளவுதானா?*

 அதற்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் என்ன தொடர்பு?

 அதனால் உடலுக்கு என்ன நன்மை/தீமை?

*அதிகமாக விந்தை இழந்தால் உடலுக்கு என்ன தீங்கு?*

*அதிகமாக விந்தை இழந்தால் உடலுறவு கொள்ளமுடியாதா அல்லது ஆண் குறி சுருங்கிவிடுமா?*

இப்படி பலவிதமான  கேள்விகள் ,சந்தேகங்கள் நமக்குள்   இருந்தாலும் அதை வெளிபடையாக பேசி  தீர்த்து  கொள்ளவும் அறிவை வளர்த்து கொள்ளவும்  ஆரோக்கியமான சுழலை நமது சமுதாயம் அளிக்கவில்லை.

 இதை பயன்படுத்திகொண்டுதான்  லாட்ஜ்  டாக்டர்களும் ,பரம்பரை சித்த  வைத்திய கேடிகளும் நமது மக்களின்  மண்டையை குழப்பி  பணம் சம்பாரித்து கொண்டு இருக்கிறார்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம்.

*விந்து என்றால் என்ன?*

விந்து என்றால் உயிர்.விந்து சக்தி என்றால் உயிர் சக்தி.

உதாரணமாக ஒரு பல்பு  எரிய ஒருவகையான சக்தி தேவை அதை நாம் மின்  சக்தி என்கிறோம்..

 தண்ணிரை கொதிக்க வைக்க வெப்ப சக்தி தேவை.

இது போல இந்த உலகில் ஒவ்வொரு செயலை செய்யவும்,எந்த ஒரு பொருள் அசைக்கவும் ஒரு வகையான சக்தி தேவை.

 அது போல நமது இந்த உடல் எந்திரத்தை இயக்கவும் ஒரு சக்தி தேவைபடுகிறது.

அந்த உயிர் சக்தியை கொடுப்பது தான் இந்த விந்துவின் வேலை.

சுக்கிலம் என்று சொல்லகூடிய  இந்த விந்துவானது,நாம் உண்ணும் உணவின் ஒரு பகுதியில் இருந்து உண்டாக்கபடும்,பிறகு   இந்த சக்தியானது உயிர் அணுக்கள் சேர்க்க பட்டு விந்துவாக உடலில் சேமிக்க படுகிறது.

 இந்த விந்து சக்தியின் முக்கிய வேலை உடலில் உள்ள அனைத்து செல்களையும் புதுப்பித்தல் மற்றும் சேதாரமடைந்த செல்களை சரி செய்வதாகும்.

 புதுப்பித்தல் முடிந்ததும் தேவைக்கு அதிகமாக சேமிக்கப்படும்  விந்துவானது,விந்து பை நிரம்பியவுடன்  தன்னிச்சையாகவோ  அல்லது காம கனவுகளுடனோ  வெளியேறி விடும்.

ஒருவன் அதிகமான விந்தை செலவழிக்கும் போது அவனது சேதாரமான   செல்களை சரி செய்யவும் புதுப்பிக்கவும் வழி இல்லாமல் அந்த உடல் தளர்வடைந்து சீர்கெடுகிறது.

செல்களை புதுப்பித்தல் என்பது பின்வருவனவற்றை உள்ளடக்கியது.

1  சதை வளர்ச்சி
2  எலும்பு வளர்ச்சி
3  ரோம வளர்ச்சி
4  அறிவு வளர்ச்சி
5  தோல் பொலிவு
6  உயிரணு உற்பத்தி
7  உடலுறுப்புகள் பேணுதல்

ஒருவன் தேவைக்கு அதிகமான விந்தை செலவழிக்கும் போது, மேல் சொன்ன வளர்ச்சிகள்  தடை படுகிறது,

அங்கு உடல் நலம் கெடுகிறது.

இன்றும்  கிராமங்களில் ஆட்டு கிடாய்களுக்கு  ஒடை தட்டும் வழக்கம் உள்ளது.

ஏன் என்று கேட்டு பாருங்கள் அவர்கள் சொல்லுவார்கள் ஒடை தட்டினால்  சதை நன்றாக வளரும் கொழுப்பு நிரம்ப இருக்கும் என்று.

இதை நாம் விந்துவின் முக்கியதுவத்துக்கு சான்றாக எடுத்துகொள்ளலாம்.

அதிகமான விந்தை இழக்கும்போது  அந்த உடல் நலிந்து தளர்ந்து  சீர்கெட்டுபோகிறது,அத்துடன்  உடல் இளைப்பு, பசி இன்மை ,மன குழப்பம் , துக்கம் இன்மை போன்றவைகளும் சேர்ந்துகொள்கிறது.

சுக்கிலத்தின் மகிமைகளை  பின்வரும் சித்தர்களின்  பாடல்களின் மூலம் அறியலாம்.

விந்தை விட்டவன் நொந்து கெட்டான்  - திருமுலர்
சுக்கிலம் விட ,சுவர் கெடும்  -திருமுலர்
இந்தரியம் தீர்ந்துவிட்டால் சுந்தரியும் பேய் போல  - ****

சரி விந்து இழப்புக்கும் உடலுறவு கொள்ள முடியாமல் போவதுக்கும்  என்ன தொடர்பு?

அதிகமான விந்தை இழந்துவிட்ட ஒருவனது செயல்பாடுகள் அனைத்து செயல்களிலும் நிறைவனதகாவே இருக்காது.

அது போல தான் உடலுறவிலும்.உடல் சக்திஇன்மை தான் காரணம் அனைத்துக்கும் வேறு ஒன்றும் இல்லை.

ஆனால்  ஊடகங்களும்  போலி மருத்துவர்களும் இதை ஊதி  பெரிதாக்கி விட்டார்கள்.

எனவே  விந்தை விணடிக்காமல்,உடலுறவு என்பது ஏதோ கழிவை கழித்தல் போல வைத்து கொண்டால் உடல் நன்றாக இருக்கும்,

அதை விடுத்தது,ஏதோ இன்பம் கிடைகிறது என்று அதை நோண்டி கொண்டே இருந்தால்  உடல் பலம் கெட்டு , உடல் நோய்களின் இருப்பிடம் ஆகிவிடும்.

பின்வரும் ஆங்கில மருத்துவர்களின் கருத்தை பாருங்கள் .

1  விந்து என்பது எச்சில் போன்ற ஒன்று, அதை இழப்பதால் ஒன்றும் கெடுதல் இல்லை.

2  இறைக்கிற கிணறு தான் நன்றாக ஊறும்

இதை ஒருவன் பின்பற்றினால் அவன் வாழ்க்கை சிக்கி சின்னபின்னமாவது திண்ணம்.

ஐயோ  ! விந்து இவ்வளவு முக்கியமானதா  இது தெரியாமல் கண்டபடி விரயம் செய்து  விட்டோமே என்று புலம்பி  தவித்துலாட்ஜ்  டாக்டர்களிடம்  ஓட வேண்டாம்.

முறையான சத்தான உணவுகளும்,உடற்பயிற்சிகளும் ,நல்ல மருந்துகளும்  உட்கொண்டு சீர் கெட்ட உடலை சீர் செய்யலாம்.

அதிக விந்தை இழந்து  உடல், முக பொலிவை இழந்து விட்டோம் என  வருந்தும் தோழர்களே,

 பின்வரும் உணவு முறைகளை பின்பற்றுங்கள், 3  மாதங்களில் சேர்ந்த மாற்றங்களை காணலாம்.

உணவு முறை
-------------------------

காலை எழுந்தவுடன்  வெறும் வயிற்றில் ஒரு டம்ளர்  தண்ணீர்  அருந்தவும் பிறகு 10  உலர் திரட்சைகள்,5  முந்திரி, 5  பாதாம் ,5  பிஸ்தா , 1  அத்தி பழம்(பிக்),1 உலர் பேரிச்சை என்று 3  மாதங்கள்  உண்ணுங்கள் உடல் மற்றும் உயிர் சக்தி பெருகும்.

நல்ல காய்கறிகள்,பருப்பு வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

உடல் சூடு என்பது சக்தியை போக்கும் காரணி எனவே சூடு தரும் பொருள்களை தவிர்த்து விடுங்கள்.

உடல் சூடு அதிகரித்தல் விந்து பையை விட்டு வெளியேறி விடும் .

உடல் இழந்த சக்தியை பெற பின்வரும் முலிகை பொடிகளை  பாலுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.

1  ஓரிதழ் தாமரை
2  ஜாதிகாய்  சூரணம்
3  அஸ்வாகாந்த சூரணம்

100  சதவிதம் உயிர்சக்தி (ஆண்மை  குறைவு) மருந்துகள் மேல் சொன்ன மூலிகைகளில் இருந்து தான் தயாரிக்கபடுகிறது ,

எனவே கண்ட மருந்துகளை வாங்கி தின்னாமல் ,மேல் சொன்ன முலிகை பொடிகளை நல்ல ஆயுர்வேத அல்லது சித்த மருந்து  கடைகளில் வங்கி உண்டு பலன் பெறுங்கள்.

தாம்பத்தியத்தில் உடல்நலத்தின் முக்கிய பங்கு..



தாம்பத்தியத்தில் உடல்நலத்தின் முக்கிய பங்கு..

தாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன் – மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும், முக்கியம் என்பதை பார்த்தோம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும, காய்கறிகள், பழங்கள், கீரைகள், போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* எந்த சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி மருந்துகளை சாப்பிடக்கூடாது.

* சாப்பிட்டதும் உடலுறவை வைத்துக்கொள்ள கூடாது. இதனால் முழுமையான இன்பம் கிடைக்காது. வயிற்றில் உணவு முழுமையாக இருந்தால் செயல்பாடுகளில் ஆர்வம் காட்ட முடியாது.

* உறவுக்கு முன் இனிமையான உரையாடலும் உணர்வு பரிமாற-லும் முன் விளையாட்டுகளும் இருக்க வேண்டும். அப்போது தான் உறவில் முழுமை பெற முடியும்.

* தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம் இசைப்பதும், ரசிப்பதும், மென்மையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும், ஆவேசமும், அவசரமும் காட்டினால் தாம்பத்தியம் அரைகுறையாகவும் அலங்கோலமாகவும் ஆகிவிடும்.

* கோபம் சண்டையை தீர்க்கக்கூடிய சக்தி செக்ஸுக்கு உண்டு. ஆனால் மன் ஒற்றுமை, ஏற்படாமல் உடல்களால் மட்டுமே இயங்கி உடல் வேட்கையை தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல. மேலும் ஒரு ஆழ்ந்த மனபாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரியாகும்.

* தாம்பத்தியத்தில் ஒரே மாதிரி செயலாற்றும் இயந்திர தனங்கள் இனிமை தராது. அதே நேரத்தில் அளவுக்கு மீறிய எல்லா மீறல்களும் சிக்கலில் விட்டுவிடும்.
* மனமும் உடலும் உத்துழைக்கும் வரை அடிக்கடி உறவு கொள்ள முடியும் என்றாலும் தம்பதிகள் தங்களுக்கும் சில கட்டுபாடுகள் விதித்துக் கொண்டால் உறவு பற்றி ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்து இன்பமு அடைய முடியும்.

* வயது அதிகரித்ததும் குழந்தை வளர்ந்ததும் தாம்பத்திய உளவு கொள்வது பாவம் என்று நினைக்க தேவையில்லை, இன்பம் தரும் உடலுறவுக்கு வயது ஒரு தடை அல்ல.

* கணவன் – மனைவி அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அதை முடிந்த வரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

* செக்ஸில் எதுவுமே தவறில்லை என்பதால் இப்படி பேசினால் அநாகரிகம் அப்படி செய்தால் அநாகரிகம் என்று எண்ணத் தேவையில்லை. படித்தவர்கள் நல்ல வேலையில் இருப்பவர்கள் இது போன்று எல்லாம் செய்யக் கூடாது என்று தங்களுக்குள் கட்டுப்பாடு விதித்துக்கொள்ள கூடாது. இருவரது விருப்பங்களில் ஆரோக்கியமான அனைத்துமே சுகமான அனைத்துமே சுகமான அனைத்துமே பாலியல் வாழக்கை நெறிப்படி சரியானது தான்.


* தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பதில்லை. ஆணுக்கு அடிக்கடி ஆசை ஏற்படும் என்றாலும் பெண்ணுக்கு தொல்லைதரக் கூடாது என்று அடக்குபவர்கள் அதிகம். இதை மனைவி புரிந்து கொள்ளாத பட்சத்தில் மனைவி மீது வெறுப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாது. எனவே ஆண்களின் மனநிலை அறிந்து பெண்கள் ஒத்துழைக்க வேண்டும்.

* அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு. அவர்களது விருப்பத்தை ஆண்கள் உதாசீனப்படுத்தாமல் முடிந்த வரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

* செக்ஸ் இணையதளங்கள் பார்ப்பது, செக்ஸ் புத்தகம் படிப்பது, சிடி பார்ப்பது போன்றவை என்றாவது ஒருநாள் என்றால் ஏற்றுக்கொள்ள கூடியதே. ஆனால் அது இல்லாமல் உறவு கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தம்பதிகள் தெளிவாக இருக்க வேண்டும்.

* தாம்பத்திய உறவை அதிகரிக்கும் சக்தி, கீரை மற்றும் பழங்களுக்கும் உண்டு. மீன், புறா, வெள்ளாட்டுக்கறி, இறால் போன்றவை மிகவும் நல்லது. பேரீச்சம்பழம், பதாம்பருப்பு, பசும்பால் போன்றவையும் ஆண் – பெண் உறவுக்கு வலிமையும், இனிமையும் சேர்க்க கூடியவை.

* உடல் சூடாக இல்லாமல் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உறவுக்குள் நுழையும் முன் தம்பதியர் இருவரும் குளித்தல் நல்லது. குளிக்க முடியாத பட்சத்தில் உடலை நன்றாக தேய்த்துக் கழுவி வாசனைத் திரவியங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

* இருவரும் தூக்கத்துக்கு போகும் முன் கலவி நேரத்தை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அலுவலக வேலையை முடித்து விட்டு நள்ளிரவில் வந்து வீடடில் இருக்கும் மனைவியிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள கனவன் நினைத்தால் அவள் தயாராக இருக்க மாட்டாள். ஏனெனில் நீண்ட நேரம் கணவனுக்காக காத்திருந்து ஏமாந்து போயிருக்கும் அவளால் உடனடியாக கலவிக்கு தயாராக முடீயாமல் போகும்.

* தாம்பத்தியத்தில் பெரும் குறையாக இருப்பது தம்பதிகளின் அவசர உடலுறவு ஆகும். யாருமற்ற நேரம், இடம் போன்றவற்றை தேர்வு செய்து தொந்தரவு இல்லாமல் உறவை அனுபவிக்கும் போது மட்டுமே இன்பத்தின் எல்லைவரை செல்ல முடியும். கூட்டு குடும்பத்தினருக்கு இது பெரும் குறையாக இருந்தால் இதற்கென சுற்றுலா செல்லும் வாய்ப்புகளை உருவாக்குதல், தாய் வீட்டுக்கு கணவனை அழைத்துச் செல்லுதல் போன்றவை அவசியமானதாகும்.

* தம்பதிகளுக்குள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய சொல் கூச்சம். எதற்காகவும் எப்போதும் கூச்சப்படாமல் உறவில் இறங்கும் போது தான் இருவரும் ஆசைப்பட்டதை கேட்கவும் கொடுக்கவும் முடியும்.

குறிப்பாக ஆணும் பெண்ணும், தாம்பத்தியத்தில் இன்பத்தின் எல்லைவரை சென்று உச்சக்கட்டம் என்ற முத்தெடுத்து சந்தோஷமாக வாழ முடியும் என்பதை இதுவரை சொல்லி அதற்கான வழிமுறைகளையும் சொல்லி இருக்கிறோம்.

ஞாயிறு, 28 மே, 2017

சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது உடல் நலத்தை பாதிக்குமா?



சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது உடல் நலத்தை பாதிக்குமா?

🌿சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது பலருக்கும் வழக்கமான பழக்கமாக இருக்கிறது. ஆனால் அது சரிதானா என்றால், ‘இல்லை’ என்றே மருத்துவ தரப்பில் பதில் வருகிறது.

🌿நாம் உண்ணும் உணவைச் செரிப்பதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்களையும் அமிலங்களையும் சுரக்கின்றன. சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதால் அவை நீர்த்துப் போகும். செரிமானம் பாதிக்கும்.எனவே, உணவு உட்கொண்ட பின் 15 அல்லது 20 நிமிடங்களுக்குப் பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

🌿அதிலும், வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துவதால் உணவு எளிதில் செரிமானமாவதோடு உடலுக்கு கேடு விளைவிக்கும் கெட்ட கொழுப்புகளை தடுக்கிறது. இளஞ்சூடாய் தண்ணீர் பருகுவது, புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கிறது என்றுகூட தெரிவிக்கப்படுகிறது.சிலருக்கு ‘ஜில்’லென்று பிரிட்ஜில் வைத்த தண்ணீர்தான் குடிக்கப் பிடிக்கும்.

🌿ஆனால், குளிர்ந்த நீர் அருந்துவது உடலுக்கு எதிர்மறையான செயல்பாடுகளை ஏற்படுத்தும்.சாப்பிட்டு முடித்தபின்னர் ‘ஜில்’லென்று தண்ணீர் அருந்தினால், நம் உணவில் உள்ள எண்ணெய்த் துகள்கள் கெட்டியாகிவிடுவதால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் பிரச்சினை ஏற்படும். அதோடு, நமது உடலில் சேரும் கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.மேலும், இதய நோய்கள் மற்றும் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது, எனவே வெதுவெதுப்பான தண்ணீரையே குடியுங்கள்.

உங்கள் வாழ்வு செழிக்கச் கடைபிடிக்கக வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்!!

*'உங்கள் வாழ்வு செழிக்கச் கடைபிடிக்கக வேண்டிய  ஆரோக்கிய குறிப்புகள்!!

1🕹. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள்.

2🕹. பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.

3🕹. தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.

4🕹. இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.

5🕹. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல.

6🕹. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். விளையாட்டு சிறுவர்களுக்கு மட்டுமல்ல.

7🕹. ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக  இருந்து சிந்தியுங்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். அவ்வப்போது  மனதுக்குள் சிறிது நேரம்  பிரார்த்தனை செய்யங்கள் .

8🕹. டிவி பார்ப்பதை குறைத்துக் கொண்டு  நிறைய நல்ல புத்தகங்களைப்  படியுங்கள்.  பிள்ளைகளுக்கு நல்ல நிஷயங்களை  சொல்லிக் கொடுங்கள்.

9🕹. குழந்தைகளிடம் Smart Phone களை கொடுக்காதீர்கள். தேவயற்ற விஷயங்களுக்காக Whatsup, Facebook போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் நேரத்தை வீனடிக்காதீர்கள்.

10🕹. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.

11🕹. தினம் 20 நிமிடங்கள் ரிலாக்ஸாக  நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். (உடற்பயிற்சிக்காக அல்ல மன அமைதிக்காக)

12🕹. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடமே உள்ளது.

13🕹. எப்போதும் மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள்.

14🕹. கடுமையாக உழைக்காதீர்கள்.  உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

15🕹. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீனாக்காதீர்கள். உங்களைப் பற்றி புறம் பேசப்படுவதை பொருட்படுத்தாதீர்கள்.

16🕹. நீங்கள் விழித்திருக்கும் பொழுது உங்கள் தேவைகளைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.  அதை செயல்படுத்தவும்  முயற்சி செய்யுங்கள்.

17🕹. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை தானமாக கொடுத்து விடுங்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

18🕹. கடந்த காலத்தை மறந்து விடுங்கள்.  முடிந்தது முடிந்தவையாக இருக்கட்டும். நிகழ் காலத்தில் வாழுங்கள். மகிழ்ச்சியும் மன அமைதியும் தானாக வரும்.

19🕹. குறுகிய கால இந்த வாழ்க்கையில்  யாரையும் வெறுக்காதீர்கள். வெறுப்பு உங்களை தான் பாதிக்கும்.

20🕹. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள் சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

21🕹. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லிவிடுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடும்.

22🕹. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, SMS மூலமாகவோ தொடர்பு கொண்டிருங்கள். இது உங்களுக்கும் அவர்களுக்கும் மன அமைதியையும், பரஸ்பர அன்பையும் மேம்படுத்தும்.

23🕹. மன்னிக்கப் பழகுங்கள். தேவையான நேரத்தில் தயங்காமல் மன்னிப்பும் கேளுங்கள்.  உங்கள் மனபாரம் நீங்கும்.

24🕹. 60 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களுக்கு உங்கள் அன்பு தான் முக்கியம். பணம் முக்கியமல்ல.

25🕹. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள். எப்பொழுதும் உங்களைப் பற்றி நினைப்பது மாற்றவர்களின் வேலையல்ல.

26🕹. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள். உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27🕹. உங்களின் நிறைவேறிய தேவைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நிறைவேறாத தேவைக்கு பிரார்த்தனை செய்யுங்கள்.

28🕹. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் மட்டும்தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள். அவ்வப்போது உங்களிடம் உள்ள நல்லவைகளை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்.

29🕹. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, அன்பை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை ஒதுக்கி விடுங்கள்.
     
30🕹. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல. கவலைகளும், நோய்களும் கூட...
எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

மலச்சிக்கல் இல்லாமல் எழுவதும், மனச் சிக்கல் இல்லாமல் தூங்குவதும் தான் ஆரோக்கியம்.
இதை கடைபிடியுங்கள் உங்கள் வாழ்கை ஆரோக்கியமாக இருக்கும். நன்றி!

மற்றவர்களுக்கும் இதை பகிருங்கள்..
*தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....*

1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு...

தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு...

இதாங்க சரி...

2.படிச்சவன் பாட்டை கெடுத்தான்,எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்....

இதுவும் தப்பு சரியானது என்னன்னா ...........

படிச்சவன் பாட்டை கொடுத்தான் ,எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ...
.
3.ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்...

இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )

ஆயிரம் வேரை கொன்றவன் அரை வைத்தியன்.......

4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ....

சூடு அல்ல சுவடு...

சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு..

அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது...

ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும்....

5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான்....

அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்....

வள்ளல் ஆனவரை கஞ்சனாக மாற்றி விட்டோம் ...

காலப்போக்கில்....நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்...

நாம் பிற மொழிகளை கற்பதில் ஆர்வமாக இருந்துவிட்டு நம் தாய் தமிழ் மொழியை  மறந்து விட்டோம் தமிழ் மொழியை காப்போம்..

ஆங்கிலேயன் ஆங்கிலத்தை தான் முதலில் படிக்கிறான் ...ஆனால் தமிழன் தான்  ஆங்கிலத்தை முதலில் படிக்கிறான் ...

நான் ஆங்கிலத்தை படிக்க வேண்டாம் என்று கூறாவில்லை தமிழை கற்ற பிறகு ஆங்கிலம் கற்கலம் என்று தான் கூறுகிறேன்.

தமிழனாகிய நாம் தமிழுக்கு முன்னுருமை கொடுக்க வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து.

*வாழ்க தமிழ் !!!*
வாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும்........???

 இதற்கான விடையை சீன தத்துவ ஞானியான லா வோ த் ஸவின் ஒரு கதை மூலம் பார்க்கலாம்.

'என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை' என்றான் ஒரு அரசன் ஞானியிடம்.

'உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா' என்று ஞானி கேட்டார்.

'என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை.

கள்வர் பயம் இல்லை.

அதிக வரிகள் விதிப்பதில்லை.

முறையாக நீதி செலுத்தப்படுகிறது.

நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்.

ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை.

இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை' என்றான்.

'அப்படியானால் ஒன்று செய்.

உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு' என்றார் ஞானி.

'எடுத்துக் கொள்ளுங்கள்'என்றான் மன்னன்.

'நீ என்ன செய்வாய்' என்றார் ஞானி.

'நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்' என்றான் அரசன்.

'எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய்.

உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது.

அதையே செய்.

என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா.

நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்.' என்றார்.

சரி என்றான் மன்னன்.

ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார்.

அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான்.

அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்.

'அது கிடக்கட்டும்' என்ற ஞானி 'நீ இப்போது எப்படி இருக்கிறாய்' என்று கேட்டார்.

'நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்'

'முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா.....???'

'இல்லை'

'அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்.....???

இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்.......???'

விழித்தான் அரசன்.

ஞானி சொன்னார்.

'அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய்.

இப்போது இது எனதில்லை.

நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய்.

அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே.

நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும்.

இந்த உலகம் எனதல்ல.

இந்த உடல் எனதல்ல.

எனக்கு அளிக்கப்பட்டது.

இந்த உயிர் எனதல்ல.

எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்.

இதே மனநிலையுடன் நீ இந்த நாட்டை நீயே ஆட்சி செய்' என்று கூறி விடைபெற்றார் ஞானி.

சனி, 27 மே, 2017

''அம்பேத்கர் சா'தீய' தலைவராக சொல்பவர்களுக்கு இது சமர்ப்பனம்..!



''அம்பேத்கர் சா'தீய' தலைவராக சொல்பவர்களுக்கு இது சமர்ப்பனம்..!

''அம்பேத்கர் ஒரு பிராமணராக  மட்டும் பிறந்திருந்தால் கார்ல் மார்க்ஸ்க்கு இணையாக இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு இருப்பார்.மனசாட்சியற்ற இந்திய சமூகத்தில் தலித்தாக பிறந்த ஒரே காரணத்தினாலே இன்றும் தீண்டப்படாத தலைவராக நீடிக்கிறார்.உயிர்களை கொல்லும் போது மட்டுமல்ல,உன்னதமான மனிதர்களை வரலாறு வஞ்சிக்கும் போதும் என் இருதயத்திலிருந்து ரத்தம் வழிகிறது!'' என கண்களில் வழிந்த விழிநீரை துடைத்து கொண்டே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார் முன்னாள் சுப்ரிம் கோர்ட் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்.வரலாறை வன்மம் இல்லாமல் மனசாட்சியோடு வாசித்த 100 வயதை நெருங்கும் கிழட்டு வாசகனின் 'நீதி மொழிகள்' சமூகத்தின் பொட்டில் அறைகின்றன.

நீங்கள்..பாடசாலையில் கோணிப் பையில் தனியாக அமர வைக்கப்பட்டிருக்கிறீர்களா? ஆடு மாடுகள் குடிக்கும் குளத்தில் தாகத்திற்காக தண்ணீர் குடித்த போது துரத்தியடிக்கப் பட்டிருக்கிறீர்களா? ரோட்டோர வீட்டில் மழைக்கு ஒதுங்கியதற்காய் உதைத்து தள்ளப்பட்டிருக்கிறீர்களா? என்றைக்காவது அரைகுறையாய் முடி வெட்டிய தலையோடு விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறீர்களா? தலித் என்பதற்காகவே நீங்கள் பயணம் செய்த‌ வண்டிகள் கவிழ்க்கப்பட்டு இருக்கின்றனவா? அமெரிக்காவில் டாக்டர் பட்டம் வாங்கி வந்து ஆபிஸர் ஆன‌ பிறகும் உங்களுடைய‌ வேலையாளே உங்கள் மீது தீண்டாமை பாய்ச்சி இருக்கிறானா? மலத்தை வாயில் திணிக்கப்பட்ட மக்களுக்காக  நீதிக் கேட்டு 'துராத்மா'க்களால் ஒரு முறையாவது நீங்கள் அவமதிக்கப்பட்டு இருக்கிறீர்களா..? ''இல்லை'' என்றால் நிச்சயமாக,உங்களுக்கு அம்பேத்கரின் அருமை தெரியாது!

அன்றைக்கு தொட்டால் தீட்டு,பட்டால் தீட்டு என பழித்துரைக்கப்பட்ட அம்பேத்கர் தான் இன்று உலகமே உச்சி முகரும் இந்திய அரசிலமைப்பு சட்டத்தை தீட்டு தீட்டுவென தீட்டியவர்.அந்த தீண்ட தகாதவனின் வியர்வை சிந்திய‌ அரசியலமைப்பு சட்டத்தை தீண்டாமல் இந்தியாவில் ஜனாதிபதி,பிரதமர்,முதலமைச்சர் என எந்த அதிகார மையத்தாலும் ஒரு நொடிக் கூட செயல்பட முடியாது.அடுத்த வல்லரசு 'இந்தியா' தான் என பீற்றி திரியும் சூரப்புலிகளுக்கு,'இந்தியாவின் பொருளாதாரத்தை தீமானிக்கும் 'ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா' யாருடைய உழைப்பால் உருவானதென எப்படி தெரியும்? தேசிய கொடி உருவாக்கத்தின் போது மூவண்ண கொடிக்கு மத்தியில் நயவஞ்சகமாக யோசித்த காந்தி,காங்கிரசின் சின்னமான 'ராட்டையையும்',சவார்க்கர் இந்துக்களின் அடையாளமான 'ஓம்' முத்திரையும் தான் போட வேண்டும் என அடம்பிடித்த போது 'அனைவரும் சமம்' என பறைச்சாற்றும் 'அசோக சக்கரத்தை' தான் போட வேண்டும் என வலியுறுத்திய அம்பேத்கரை,இன்றைக்கு தேசிய கொடியை சட்டையில் குத்தி கொண்டு திரியும் 'ஜெய்ஹிந்த்'களுக்கு எப்படி தெரியும்? வேண்டுமானால் 'அவனின்றி அணுவும் அசையாது' என்ற சொல்லாடல் பொய்யாக இருக்கலாம்.ஆனால் இந்தியாவில் 'அம்பேத்கர் இன்றி அணுவும் அசையாது'என்பதே பேருண்மை!

அரசியல்,பொருளாதாரம்,சமூகம்,சட்டம்,வணிகம்,வரலாறு,தத்துவம்,கல்வி,மொழியியல்,இதழியல்,சமயம் என அனைத்து துறைகளிலும் கற்றறிந்த ஒரே மேதை இந்தியாவிலே அம்பேத்கர் மட்டுமே.ஆனால் அவரை பற்றி உப்பு சப்பில்லாமல் அரைப்பக்கத்திலே கடந்து போகிறது நமது பாடத்திட்டம்.'வர்க்க பேதத்திற்கு எதிராக அறிவாயுதம் ஏந்திய மார்க்ஸ்,லெனினினுக்கு அடுத்து லண்டன் மியூஸிய நூலகத்தை முழுமையாக கரைத்து குடித்தவர் பிறவி இழிவான சாதிய வர்க்கத்திற்கு எதிராக போராடிய‌ அம்பேத்கர் மட்டுமே.ஆனால் அவர் எழுதிய பல கட்டுரை தொகுதிகளை மறைத்து வைத்து இன்னமும் பூச்சாண்டி காட்டி கொண்டிருக்கிறது 'பூணூல்' இந்தியா.''ஏறத்தாழ 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி தமிழே.ஆதலால் இந்தியை விட தமிழுக்கே இந்தியாவின் தேசிய மொழியாகும் எல்லா அருகதையும் இருக்கிறது''என எந்த பச்சை தமிழனும் பேசாததை,உரத்த குரலில் பாராளுமன்றத்தில் வெடித்த‌ அம்பேத்கரின் சிலைக்கு செருப்பு மாலை போடாத கிராமங்களே தமிழகத்தில் இல்லை.''நாய்களை விடவும்,பன்றி விடவும் கேவலமாக எம்மக்களை நடத்தும் இந்து மதத்தையும்,இந்த நாட்டையும் எப்படி எங்களின் சொந்த மதமாகவும், சொந்த நாடாகவும் கருத முடியும்?''என காந்திக்கு எதிராக வீசப்பட்ட அம்பேத்கரின் முதல் கேள்விக்கு இதுவரை எந்த மகாத்மாவும் பதிலும் சொல்லவே இல்லை.தீண்டாமையை,சாதியை ஒழிக்க முற்பட‌வில்லை.இந்திய திருநாடு என ஜால்ரா அடிப்பதையும் நிறுத்தவில்லை!

''இந்தியாவில் காலந்தோறும் மகாத்மாக்கள் வந்தார்கள்.மகாத்மாக்கள் மறைந்தார்கள்.ஆனால் தீண்டப்படாதவர்கள் மட்டும் தீண்டப்படாதவர்களாகவே இருக்கிறார்கள்''என லண்டன் வட்டமேஜை மாநாட்டில் மகாத்மாக்களை அம்பேத்கர் வறுத்தெடுத்த‌ போது,மிஸ்.ஸ்லேடுடன் கடலை போட்டுக்கொண்டிருந்த காந்தி 'மகாத்மா'வானார்.ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காகவும் துடித்த அம்பேத்கருக்கு 'துரோகி,ஆங்கிலேயனின் கைக்கூலி,மகர் நாய்' என்ற பட்டங்களை பம்பாயில் வழங்கி,உருவ பொம்மையையும் கொளுத்தியது காந்தியின் ஹரிஜன சேவா சங்கம்.ஒரு கட்டத்தில் தேசிய அரசியலில் அம்பேத்கரின் வளர்ச்சியை தாங்க முடியாமல் அம்பேத்கர் 'தலித்தே' இல்லை என தலித்துகளின் வாயாலே சொல்ல வைத்தது காந்தியின் காங்கிரஸ்.'அப்படியென்றால் எங்களை ஹரிஜன சேவா சங்கத்தில் சேர்த்து கொள்ளுங்கள்'என ஹரிஜன மக்கள் கேட்ட போது,' நாங்கள் ஹரிஜன மக்களுக்காக போராடுவோம்.அவர்களை உறுப்பினர்களாக எல்லாம் சேர்த்து கொள்ள மாட்டோம்'என உடனே பல்டியடித்தார் தேசபிதா.இது தான் உண்மையிலே சத்திய சோதனை!

காலங்காலமாய் ஆண்டைகளின் அடியாளாக இருக்கும் காங்கிரஸை தூர்வாறுவது காலத்தின் கட்டாயம் என்றால்,கலங்கமற்ற கடவுளாக வலம் வரும் காந்தியின் முகத்திரையை கிழிக்க வேண்டும்.காந்தியின் சுய ரூபத்தை உடைக்காமல்,காங்கிரஸ் கோட்டையில் இருந்து ஒரு செங்கல்லை கூட பிடுங்க முடியாது என்பதே சத்தியம்.இல்லையென்றால் ஆயிரமாயிர ஆண்டுகளாக தொடரும் தலித்துகளின் புலம்பல்,பழங்குடிகளின் விசும்பல்,காஷ்மீரிகளின் ஓயாத செந்நீர்,வடகிழக்கு பெண்களின் வற்றாத கண்ணீர்,தெலங்கானாவில் நொறுக்கப்படும் எலும்புகள் ஈழத்தில் அறுக்கப்படும் தாலிகள் எல்லாம் என்றென்றும் ஜன்பத் மகாத்மாக்களால் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு கொண்டே இருக்கும்.

 'கார்ல் மார்க்ஸை வர்க்கத் தலைவர்' என்றும் 'அம்பேத்கரை சாதீய தலைவர்' என குறுகிய வட்டத்திற்குள் அடைக்க முயல்பவன் உலகிலே பெரிய முட்டாள்.ஏனென்றால் சாதிய தலைவர் என்றால் அவர் சாதிக்காக மட்டுமே அறிவாளை தூக்கி கொண்டு போராடுபவர்.ஆனால் அம்பேத்கர் அவர் பிறந்த‌ 'மகர்' சாதிக்காகவோ அல்லது மராட்டியருக்காவோ மட்டும் போராடாமல் இந்தியா மற்றும் உலகம் முழுக்க பரந்து வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட‌ சாதியால் ஒடுக்கப்பட்ட ,பிற்படுத்தப்பட்ட விளிம்புநிலை மக்களின் விடுதலைக்காக அறிவாயுதம் ஏந்தினார். தந்தை பெரியார் தலைவர் என்றழைத்த ஒரே புரட்சியாளரான அம்பேத்கரை 'சாதீய தலைவர்'என சொல்வதும் சாவான பாவமாகும்.அரைவேக்காட்டு தமிழ் தேசிய கண்ணாடியை அணிந்து கொண்டு 'அம்பேத்கரை மராட்டியர்' என சொல்பவர்களுக்கும்,அம்பேத்கர் தலித் லீடர் என சொல்லும் காவி கோஷ்டிகளின் முகத்தில் நாளைய வரலாறு காறி  உமிழப் போகும் வார்த்தை...''போடா ஃபூல்!''(படித்தேன் பகிர்கிறேன்)