செவ்வாய், 30 ஏப்ரல், 2019

'உழைக்கும் கரங்கள் அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள்"


உழைக்கும் நண்பர்களுக்கு ஒரு தினம் - அதுதான் உழைப்பாளர் தினம் !

உலகம் முழுதும் எத்தனையோ இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு மருந்து போடும் நன்னாள் இன்று. காலவரையற்ற உழைப்பு, மிருகத்தனமான, கொத்தடிமைத்தனமான இன்னல்களில் இருந்து உழைக்கும் வர்க்கம் தங்களை விடுவித்துக்கொண்டு உயிர்த்தெழுந்த நாளே நாம் மே தினமாக கொண்டாடுகிறோம்.

உலகின் படைப்புகளெல்லாம் உழைப்பின்
சிதறல்களே..!
உலகத்திலிருந்து உழைப்பை கழித்தால்
வெறும் மண்ணும் கல்லும்
தான் மிச்சம்..!
அதனால், உழைப்பாளிகளை மதிப்போம்..!
💪 1880 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் தொடங்கி, 1890 - ஆம் ஆண்டு பாரீசில் உருவானது தான் மே தினம் அல்லது, உலகத் தொழிலாளர் தினம். அதாவது மே 1. இது பள்ளி விடுமுறைக் காலத்தில் வருவதால் பலரும் இந்த நாளைப் பற்றிப் பெரிதாக யோசிப்பதில்லை.

💪 மற்ற விடுமுறை நாட்களைப்போல இதுவும் ஒரு விடுமுறை நாள் என்று நாம் நினைத்துவிடக்கூடாது. மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள் முற்காலத்தில் 18 மணி நேரம் வேலை வாங்கப்பட்டனர். இதை எதிர்த்து தாங்கள் உழைக்க வேண்டிய நேரத்தை 8 மணி நேரமாக வரையறுத்து, அதற்காக போராடி அந்த உரிமையைப் பெற்ற நாளே மே தினம்.

💪 மே தினம் உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும், உறுதியையும் குறிக்கும் தினம் ஆகும்.

மே தின வரலாறு :

1889 ஆம் ஆண்டு ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் 'சர்வதேச தொழிலாளர் மாநாடு" கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.

இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுசரிப்பதற்கு வழிவகுத்தது.

முன்னோர்களின் தியாகம் :

உழைக்கும் வர்க்கத்துக்கு
உண்மைநிலை உணர்த்தி
உயர வைக்குமா இந்த மே தினம் !!
அமெரிக்கத் தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ போராளிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக, உழைப்பாளர்களின் தினமாக நம் முன் நிற்கிறது. அமெரிக்காவில் தான் உழைப்பாளர்களின் அடிப்படை உரிமை முதன் முதலில் நிலை நாட்டப்பட்டது.

எல்லோரும் எல்லாமும் பெற :

இது எல்லோருக்குமான உலகம். எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்க நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும். இந்த மே தினத்தில் நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்கவேண்டிய கேள்வி இது.

'உழைக்கும் கரங்கள் அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள்"

வியாழன், 25 ஏப்ரல், 2019

பசுமைக் காட்சி... அமராவதி அணை...!!


இது புதுசு... மீன் பிடிக்க ஆசையா? போயி தான் பாருங்களேன்...!!
பசுமைக் காட்சி... அமராவதி அணை...!!

🌟 அமராவதி அணை தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி நகரில் இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது.

🌟 அமராவதி நீர்த்தேக்கமானது 9.31 சதுர கி.மீ. பரப்பளவும், 33.53 மீ ஆழமும், 90 அடி உயரமும் கொண்டது.

🌟 இந்த அணையின் மூலம் கோவை, ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாய நிலம் பாசனம் பெறுகிறது.

சிறப்புகள் :

🌟 திருமூர்த்தி அணையின் தெற்கே அமராவதி ஆற்றின் குறுக்கே 1957ஆம் ஆண்டு காமராஜர் முதலமைச்சராக இருந்தபொழுது கட்டப்பட்டது.

🌟 இந்த அணை வேளாண்மைக்காகவும், வெள்ளக் கட்டுப்பாட்டிற்காகவும் முதன்மையாகக் கட்டப்பட்டது.

🐟 இங்கு மீன்வலைகள் வீசப்பட்டு மீன்கள் பிடிக்கப்படுகின்றன. ஒரு மீனவர் ஒரு நாளைக்கு 20 கிலோ வரை மீன்பிடிக்க முடிகிறது.

🐟 ஆண்டுக்கு 110 டன் மீன்கள் கிடைக்குமென வனத்துறை மதிப்பிடுகிறது. 1972ஆம் ஆண்டில் ஹெக்டேர் ஒன்றிற்கு 168 கிலோ கிடைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

🐊 இங்கு தென்னிந்தியாவின் இயற்கைச் சூழலில் வளர்க்கப்படும் மிகப்பெரும் முதலைப் பண்ணை உள்ளது. சேற்று முதலைகள் என அழைக்கப்படும் மக்கர் முதலைகள் இங்கு பிடிபடாத நிலையில் இயற்கையாக விடப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

🐊 இவற்றின் இருப்புத்தொகை 60 பெரியவைகளாகவும் 37 சற்றே இளையவையாகவும் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இவை மீன்கள், ஊர்வன மற்றும் பாலூட்டிகளை உண்டு வாழ்கின்றன.

🐊 நீர்த்தேக்கத்தின் ஓரமாக காட்டு முதலைகளின் முட்டைகள் எடுத்து வரப்பட்டு இப்பண்ணையில் குஞ்சு பொறித்து வளர்க்கப்படுகின்றன.

🐊 இங்கு சிறியதும் பெரியதுமான முதலைகள் ஒன்றின் மேல் ஒன்றாக ஏறி விளையாடுவதைக் காணலாம்.

🏞 அமராவதி அணையில் மிகச்சிறந்த முறையில் அழகான பூங்காவொன்று அமைந்துள்ளது. இந்த விளையாட்டுப் பூங்கா பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மகிழ்விக்கும் தன்மை கொண்டுள்ளது.

🏞 இவ்வணையில் உள்ள செங்குத்தான படிக்கட்டுகளில் சென்று வடக்கு பகுதியில் உள்ள சமவெளி பகுதியையும், தெற்குப் பகுதியில் உள்ள ஆனைமலை மற்றும் பழனிமலை அழகைக் காண முடிகிறது.

🏞 மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமைக் காட்சி வருடந்தோறும் சுற்றுலாப் பயணிகளை தன்வசம் ஈர்த்து வருகிறது.

பார்க்க வேண்டிய இடங்கள் :

🏞 அணைக்கட்டு
🏞 அழகிய பூங்கா
🏞 மீன்பிடி தலம்
🏞 முதலை பண்ணை

எப்படிச் செல்வது?

🚌 கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக 94கி.மீ. தொலைவில் உள்ள அமராவதி அணைக்கு திருப்பூர், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் என அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளது.

எப்போது செல்வது?

அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

கோடையை சமாளிக்க சூப்பர் டிப்ஸ்!!


கோடையை சமாளிக்க சூப்பர் டிப்ஸ்!!

 கோடை வெப்பத்தை தவிர்க்க வேண்டுமா?
👉 தாகம் தணிப்பதில் தண்ணீருக்கு தான் முதலிடம். தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலை குளிர்ச்சியாக்க முடியும்.

👉 கோடைக்காலத்தையும், கோடைக்கால நோய்களைத் தவிர்க்கவும், தினமும் 3 லிட்டர் முதல் 5 லிட்டர் வரை சுகாதாரமான தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். உடல் சூட்டை தணிக்க இளநீர், ஜூஸ், மோர், எலுமிச்சை ஜூஸ்கள் அதிகமாக குடிக்கலாம்.

👉 கோடையை சமாளிக்கவே இயற்கை அளித்த வரம் வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி. வெள்ளரி தாகத்தை தணிப்பதுடன் கோடைகாலத்தில் பல நோய்களுக்கும் மருந்தாகிறது. இதில் 93 சதவீதம் நீர்ச்சத்து உள்ளதால் அப்படியே பச்சையாக உண்பது தான் முழுமையான பலனைத்தரும்.

👉 கோடையில் உடலை குளிர்ச்சியாக வைக்க, அதிக அளவில் வியர்வை வெளியேறும். அதனால், அதற்கேற்ப தண்ணீர் அருந்த வேண்டும்.👉 மேலும், அதிக அளவு டீ, காபி குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

அதிக அளவு குளிரூட்டப்பட்ட பானங்கள் :

👉 கோடைகாலத்தில் அனைவரும் குளிர்ச்சியுடன் தான் இருக்க விரும்புவார்கள்.

👉 உடல் புழுக்கமான சூழ்நிலையில் குளிர்ந்த திரவங்களை உட்கொள்வதன் மூலம் தோல் இரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்பட்டு வெப்ப இழப்பை ஏற்படுத்தும். எனவே, மிகுந்த குளிரூட்டப்பட்ட பானங்களை தவிர்ப்பது நலம்.

குறைவாக தண்ணீர் குடிப்பதால் வரும் நோய்கள் :

👉 அவரவர் வேலை மற்றும் அவர்களின் உடலின் வியர்வைக்கேற்ப தண்ணீரின் தேவை மாறுபடும். உடல் உழைப்பு அதிகமானவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

👉 உடலில் நீர்ச்சத்து குறையும் பட்சத்தில் மாலையில் களைப்பு, உடல்வலி, நீர்க்கடுப்பு, காலையில் மலச்சிக்கல், நாள்பட சிறுநீர்ப் பாதை கல், மூலம், வயதானவர்களுக்கு வெக்கையினால் ஏற்படும் மயக்கம் என பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். உதடுகள் காய்ந்துபோவது, நாக்கு வறட்சி அடைவது, அடிக்கடி தாகம் எடுப்பது, எப்போதும் தூக்கம் வருவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.பொதுவான டிப்ஸ் !

👉 வெயில்கால பாதிப்புகள் பெரியவர்களை விட, குழந்தைகளுக்கு தான் எளிதில் தொற்றும். அதிக உஷ்ணம் காரணமாக, அம்மை, வியர்க்குரு தொந்தரவு ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றைத் தவிர்க்க தினந்தோறும் இருமுறை குளிப்பது நலம்.

👉 வெளியில் செல்லும்போது, கண்டிப்பாக கை பையில் எப்போதும் சிறிய பாட்டிலில் தண்ணீர் வைத்து கொள்ள வேண்டும்.


திங்கள், 22 ஏப்ரல், 2019

அவதானப்பட்டி சிறுவர் பூங்கா


இது புதுசு... சாகச படகு சவாரி... இயற்கையை ரசிக்க வேண்டுமா...?
அவதானப்பட்டி சிறுவர் பூங்கா !!


🚣 கிருஷ்ணகிரியிலிருந்து ஏறத்தாழ 7கி.மீ தொலைவிலும், சேலத்திலிருந்து ஏறத்தாழ 107கி.மீ தொலைவிலும், தருமபுரியிலிருந்து ஏறத்தாழ 48கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய ஏரி மற்றும் சிறுவர் பூங்காதான் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா.

சிறப்புகள் :

🚣 அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு பயணம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் அழகிய இடமாகும்.

🚣 இந்த ஏரிக்கு தேவையான நீர் ஆதாரம் கிருஷ்ணகிரி அணைக்கட்டில் இருந்து ஆண்டு முழுவதும் கிடைக்கப்பெறுகிறது.

🚣 எனவே, இது வற்றாத ஏரியாக ஆண்டு முழுவதும் திகழ்கிறது. இந்த ஏரி சாகச படகு சவாரிக்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது.

🚣 இங்குள்ள பூங்காவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் விளையாடி மகிழும் வகையில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் உள்ளன.

🚣 நிழல் தரும் மரங்கள், பரந்த புல் தரைகள், இளைப்பாறும் கூடங்கள், படகு இல்லம் போன்ற பொழுதுப்போக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன.

🚣 இந்த சிறுவர் பூங்கா மற்றும் ஏரிக்கு குடும்பத்துடன் சுற்றுலா வருபவர்களுக்கு ஏற்ற இடமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.


🚣 மேலும், ஏரியின் அருகே இயற்கையை ரசிக்கக்கூடிய வகையில் பசுமையான வயல்கள் உள்ளன.

🚣 குழந்தைகளுடன் ஏரியில் படகு சவாரி செய்ய உகந்த இடமாகும். இதனால் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

🚣 குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இப்பூங்கா மற்றும் ஏரிக்கு வருகை தருகின்றனர். விடுமுறை நாட்களில் உள்ள+ர் சுற்றுலாப்பயணிகள் இவ்விடத்திற்கு அதிகமாக வருகை புரிகின்றனர்.

எப்படி செல்வது?

🚌 கிருஷ்ணகிரிக்கு அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

🚙 கிருஷ்ணகிரியிலிருந்து பேருந்து அல்லது வாடகை வாகனங்கள் மூலம் இந்த ஏரிக்குச் செல்லலாம்.

எப்போது செல்வது?

அனைத்து காலங்களிலும் செல்லலாம்.


எங்கு தங்குவது?

🏠 கிருஷ்ணகிரியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

பார்க்க வேண்டிய இடங்கள் :

ஏரி.
படகு பயணம்.


கிருஷ்ணகிரி அணை.
அரசு அருங்காட்சியகம்.
கெலவரபள்ளி அணை.
காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில்.
சந்திரசூடேஸ்வரர் கோவில்.
தளி ஏரி மற்றும் பூங்கா.


 செய்துகொள்ள  கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள்   https://goo.gl/XOqGPp

கோணலாய் வளரும் மரங்கள்... மர்மக்காடு...!!


கோணலாய் வளரும் மரங்கள்... மர்மக்காடு...!!


🌲மரங்கள் என்றாலே உயரமாக வளர்வது என்பது அனைவருக்கும் தெரியும்... ஆனால், வளைந்து வளரும் மரங்களை பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

🌲ஆமாங்க... ஆராய்ச்சியாளர்களுக்கே ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் தொண்ணூறு பாகை அளவில் வளைந்து வளர்ந்துள்ள மரங்கள் அடங்கிய காடு ஒன்றுள்ளது.

🌲அப்படியொரு அதிசய காட்டைப் பற்றி தான் நாம் இன்று பார்க்கப்போகிறோம்.



🌲போலந்து நாட்டின் மேற்கே அமைந்துள்ளது விசித்திர வடிவிலான ஒரு பைன் மரக்காடு. இந்த காட்டை பார்க்கும் அனைவருக்கும் இங்குள்ள மரங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

🌲ஏனெனில், இந்த காட்டின் மரங்கள் யாவும் அடிப்பகுதியில் ஏறத்தாழ ஒரே வகையாக வளைந்து காணப்படுகின்றன.

🌲போலந்து என்னும் நாடு உருவாவதற்கு முன்னர், அதாவது ஜெர்மானிய மாகாணமான போமேரேனியாவில் இருந்தபோது இம்மரங்கள் நடப்பட்டது என்று கூறுகின்றனர்.


🌲மேலும், அங்கு நடப்பட்ட இந்த மரங்கள் விஞ்ஞானிகளே வியக்கும் வண்ணம், அடிப்பகுதியில் ஏறத்தாழ தொண்ணூறு பாகை அளவில் வளைந்து பின் நீண்டு வளர்கின்றன.

🌲ஒவ்வொரு பைன் மரமும் வடக்கிற்கும் மேலாக மேலே தரையில் வளைந்து, பின்னர் மூன்று முதல் ஒன்பது அடி பக்கவாட்டாக சென்று, மீண்டும் வளைந்து நீண்டு வளர்கிறது.

🌲இன்றும் புரியாத புதிராய் இருக்கும் இந்த காடு தற்போது கோணல் மர காடு (ஊசழழமநன குழசநளவ) என அழைக்கப்படுகிறது.


சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!!


சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.....!!

1. பத்திரப்படுத்தி வச்சுக்கங்க..

2. வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும்.

தண்ணீர் :

3.. தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி
மானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம்.

4. தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது.

5. இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம்
அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ரிப்பேர் ஆவது தடுக்கப்படும்.

6. வெப்பத்தை உணர்ந்து மின் இணைப்பை தானே துண்டித்து விடும் வகையிலான ஏற்பாடுடைய மோட்டார்களைப் பொருத்துவது புத்திசாலித்தனம்.

சிமெண்ட் :

7. தரமான சிமெண்ட்டால்தான் வலுவான கட்டடத்தை உறுதி செய்ய முடியும். அந்தத் தரத்தை சிமெண்டின் நிறத்தைப் பார்த்தே ஓரளவு யூகித்துவிட முடியும். லேசான பசுமை நிறத்தில் இருப்பது நல்ல சிமெண்ட்.

8. மூட்டைக்குள் இருக்கும் சிமெண்ட்டுக்குள் கையை விடும்போது சிலுசிலுவென்று குளுமையாக இருக்க வேண்டும். தண்ணீர் இருக்கும் வாளிக்குள் சிமெண்ட்டைப் போடும்போது அது மிதந்தால் தரத்தில் கோளாறானது என்று அர்த்தம். அதேபோல் தட்டி இருந்தாலும் தரமற்றது.

9. சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ இருக்க வேண்டும். எடை வேறுபாடு ஒரு கிலோ வரை அனுமதிக்கலாம். அதற்கு மேல் போனால், உரிய வகையில் விசாரித்து ஒழுங்கான அளவுள்ள மூட்டைகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்குங்கள்.

மணல் :

10. மணலில் அதிக தூசு துரும்பு இல்லாமல் இருக்க வேண்டும். அதிக அளவு வண்டல் கலந்திருந்தால் அதன் நிறமே காட்டிக் கொடுத்துவிடும்.

11. மணலின் மொத்த எடையில் 8% வண்டல் இருந்தால் பயன்படுத்தலாம். பார்வையாலேயே இதைக் கண்டுபிடித்துவிட முடியும். அதற்கு மேல் இருந்தால் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

12. கடல் மணலைக் கொடுத்து ஏமாற்றும் வேலைகள் நடக்கின்றன. அந்த மணலைக் கொஞ்சம் வாயில் எடுத்துப் போட, உப்புக் கரித்தால் அது கடல் மணல். இந்த மணலை பயன்படுத்திக் கட்டப்படும் சுவர்கள் பெரும்பாலும் ஈரமாகவே இருக்கும். சீக்கிரம் உதிர்ந்துவிடும். மழை பெய்தால் சீக்கிரம் அரித்து விடும். ஆகையால். கடல் மணலுக்கு கண்டிப்பாக நோ சொல்லிவிடுங்கள்.

13. மணலில் தவிடு போல் நொறுங்கிப் போகக்கூடிய சிலிக்கா
அதிகம் இருந்தாலும் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், இது சிமென்ட்டுடனான பிணைப்பை உறுதியாக உருவாக்காது.

இரும்புக் கம்பிகள் :

14. கான்கிரீட்டுக்கு வலு சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு எந்த வகை இரும்புகளைப் பயன்படுத்தினாலும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

15. ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்டு வரும் கம்பிகள், பட்டைகள், சட்டங்கள், சுருள்கள் போன்றவற்றில் சிறு பிசிறுகள் இருக்கக்கூடும். இவற்றை அகற்றிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.

16. இரும்பின் மேல் கொஞ்சம் கூட துரு இருக்கக் கூடாது. அடையாளங்களுக்காக சிறு அளவில் பெயிண்ட் தடவப்பட்டாலும் நீக்கிவிட வேண்டும். எண்ணெய், அழுக்கு, பிசுக்கு, சேறு, மண், மணல் போன்ற எந்த வித அசுத்தமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பிணைப்பு வலுவில்லாமல் போய்விடக் கூடும்.

செங்கல் :

17. வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்கு பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.

18. செங்கல் தரமானதாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய நாலைந்து செங்கற்களை எடுத்து 24 மணி நேரம் நீரில் ஊறப்போட வேண்டும். பிறகு, விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் தரம் குறைவான செங்கல் என்று அர்த்தம்.

19. இப்போதெல்லாம் ‘இன்டர்லாக் செங்கல்கள்’ என்றொரு வகையும் பயன்பாட்டில் இருக்கிறது. நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் கலந்து தயாரிக்கப்படும் இந்தக் கல் ஒன்றின் விலை 16 முதல் 20 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கல், மூன்று செங்கற்களுக்கு இணையானது. வேலையைச் சுலபமாக்கும்.

20. கட்டுமானப் பொருட்களின் சேதாரத்தை குறையுங்கள். கொண்டு வரும்போதோ, கையாளும்போதோ, பயன்படுத்தும்போதோ ஆகும் சேதாரத்தில் மட்டும் 5 சதவீத கட்டுமானப் பொருட்கள் வீணாகிவிடும். நீங்கள் களத்தில் இருந்தால்தான் இந்த சேதாரத்தை கண்காணிக்க முடியும். அலுவலகத்திற்கு விடுமுறை போட்டால் லாஸ் ஆஃப் பே ஆயிற்றே என நீங்கள் கணக்குப் போட்டால் இங்கு அதைவிட அதிக அளவு பொருட்கள் நட்டமாகும்.

21. கான்ட்ராக்டரிடம் வேலையை ஒப்படைக்கும் போது அவரது முந்தைய வேலைகள், அவருக்கும், அவரது தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள நல்லுறவு, அவரது வளைந்து கொடுக்கும் தன்மை, எல்லாவற்றையும் விட நேர்மை ஆகியவற்றை விசாரியுங்கள்.

22. மூலப் பொருட்களை ஒரேயடியாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது தவறு. கட்டுநர்களுக்கு இது சரியானது. ஆனால், முன்கூட்டியே ஒரு பெரிய அளவிலான கட்டுமானப் பொருட்களை வாங்குவதன் மூலம் நமது பணம் மறைமுகமாக ஒரே இடத்தில் முடக்கப்படுகிறது.

23. அதே சமயம் அவ்வப்போது பொருட்களை வாங்கினால், அன்றன்றைய சந்தை நிலவரம் பொறுத்துதான் நாம் பொருட்களை வாங்க முடியும். இதற்கு என்ன வழி? முன்கூட்டியே, பின் தேதியிட்ட காசோலைகளை டீலர்களிடம் கொடுத்துவிட்டு, அந்தந்த தேதியில்தேவையான பொருட்களை இன்றைய மார்க்கெட் விலைக்கு இறக்கும்படி ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்.

24. சமீபத்திய தொழிற்நுட்பங்களையும், நவீன கட்டுமானப் பொருட்களையும் பயன்படுத்துவதன் மூலம் நேரமும் கூலியும் மிச்சமாகும்.

25. செங்கற்களுக்கு மாற்றாக வந்துள்ள கட்டுமானக் கற்களை பயன்படுத்தலாம். இது விலையும் குறைவு, சேதாரமும் குறைவாகும்.

26. மர வேலைகள் நமது கட்டுமானச் செலவை பெரிதும் கபளீகரம் செய்யக்கூடியவை. எங்கள் வீட்டு வாசற்கதவு மட்டுமே 1 லட்ச ரூபாய் ஆனது என எத்தனை நாள் சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?. குறைந்தபட்சம் கிரகப்பிரவேச நாளில் இருந்து 10 நாட்கள் சொல்லப் போகிறீர்கள். அதற்கு ஏன் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் தரவேண்டும்?.

27. எல்லா வேலைகளுக்கும் மரத்தையே நாடாமல், UPVC மற்றும் அலுமினிய ஜன்னல் கதவுகளைப் பயன்படுத்துங்கள். மர லுக்கினைத் தரும் ஸ்டீல் கதவுகளைக் கூட நாம் பயன்படுத்தலாம்.

28. பரண் அமையும் இடத்தில் அதனுடைய தொடர்ச்சியாக சுவற்றின் வெளிப்புறத்தில் சன்க்ஷேடுகளை அமைத்தால் செலவு குறையும்.

29. ஆற்று மணலை வெளியில் ஒரு வார காலம் போட்டு வைத்து, பின்பு அதனை கசடுகள் நீக்கி, சலித்து பயன்படுத்துவதற்கு பதில், நன்றாக பேக் செய்யப்பட்ட M.சேண்டை பூச்சு வேலைக்குப் பயன்படுத்தலாம். சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு ஆற்று மணலைவிட M.சேண்ட் விலைகுறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

30. க்ஷட்டரிங் பிளைவுட் கொண்டு சென்ட்ரிங் செய்யும் பட்சத்தில், சீலிங் பூச்சு வேலை முற்றிலும் தவிர்க்கலாம். இதன் மூலம் 1000 சதுர அடி கட்டிடத்தில் ரூ.30,000 வரை மிச்சப்படுத்தலாம்.

31. எந்த வேலைக்கு, எந்த அளவிலான கம்பி என்பதை பொஷூயாளர் மூலமாக பார் பென்டருக்கு உணர்த்திவிடுங்கள். பொதுவாக அஸ்திவாரம், பில்லர்கள், தளங்கள் இந்த வேலைகளின் போதுதான் பொறியாளர்களின் பேச்சை பார்பென்டர்கள் கேட்கிறார்கள். ஸ்லாபு போன்ற மற்ற வேலைகளுக்கு அதிக அளவில் கம்பிகள் செலவாவதை நாம் தடுக்க வேண்டும்.

32. முடிந்த அளவு மறுசுழற்சிப் பொருட்களை பயன்படுத்த முன்வர வேண்டும். பழைய பொருட்களாயிற்றே என்ற தயக்கத்தை நீங்கள் களைந்தால், கணிசமான அளவு பணத்தை மிச்சம் செய்யலாம்.

33. உங்களது புராஜெக்டு நடத்தும் இடத்தைச் சுற்றி வலுவான காவலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நிலையில் கட்டுமானப் பொருட்களைவிட காஸ்ட்லியானது எதுவுமில்லை.

34. தேவையற்ற பார்ட்டீசியன் சுவர்களுக்கு அதிக கனமுடைய சுவர்களை அமைக்காதீர்கள்.

35. கட்டுமானப்பணி முடியும் வரை, செங்கல், சிமெண்ட், ரசாயனங்கள் போன்ற கட்டுமானப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்.

36. செலவானாலும் பரவாயில்லை என்று தரமிக்க மின் கேபிள்கள், மின் சாதனங்களையே வாங்குங்கள். இது ஒன்டைம் இன்வெஸ்ட்மென்ட்தான். இதற்குப் பிறகு ஆகும் மின் செலவை இது பெருமளவு குறைக்கும்.

37. நான் பிராண்டட் பெயிண்ட்களை உங்கள் கட்டுமானத்
திற்குப் பயன்படுத்தாதீர்கள். தரமற்ற பெயிண்ட்கள் உங்கள் பர்ஸை சிக்கனப்படுத்தும். ஆனால், கட்டிடத்தை நீண்டகாலம் பாதுகாக்காது.

38. வீட்டை சுற்றிலும் முறைப்படி அளந்து, எல்லைகளை கவன
மாக வேலியிட்டு பாதுகாத்துக் கொள்வது சிறந்தது.

39. சிமெண்ட் கட்டிட சாமான்கள், கருவிகள் இவற்றை பாதுகாக்க ஒரு சிறிய குடோன் அமைப்பது நல்லது.

40. கட்டுமான பணிக்காக முதலில் குடிநீர் தொட்டி கட்டிக் கொள்வது நல்லது அல்லது செப்டிக் டேங்க் கட்டி, கட்டிட வேலைக்கான நீர் தொட்டியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

41. போர்வெல் போட்டு, மின் இணைப்பு பெற்ற பிறகு, கட்டிட வேலையை துவங்குவது வரவேற்கத்தக்கதாகும்.

42. அதி நவீன கட்டுமான நுட்பங்கள், பொருட்களை பயன்படுத்திக் கொள்ளுதல், மிக பிரபலமாகி வரும் ரெடிமிக்ஸ் கான்கிரீட்டுகள் போன்ற அதிநவீன கட்டுமான வசதிகளை பயன்படுத்திக் கொண்டால் கட்டுமான காலம், நேரம் குறையும்.

43. அஸ்திவாரம் போட மண்வெட்டி எடுத்த உடனே மண்ணின் தன்மை தரம் பற்றி பரிசோதித்து இந்த இடத்திற்கு ஏற்ற அஸ்திவார முறையை பொறியாளர் அறிவுரையுடன் முடிவு செய்ய வேண்டும்.

44. பேஸ்மெண்ட் லெவல் கட்டி முடித்த பிறகு சாலையின் உயரத்திற்கும், வீட்டின் உயரத்திற்கும் பொருத்தமான அளவில் கட்டிடத்தை உயர்த்த வேண்டும்.

45. லிண்டல் லெவல் வந்த பிறகு, போர்ட்டிகோ. சிட் அவுட், சன்க்ஷேஷட் பொருட்கள் வைக்க, சுவரின் பக்கவாட்டில் உயரத்தில் லக்கேஜ் லாஃப்ட், சுவற்றிற்குள் வைக்கக்கூடிய ஒயர்களுக்கு இட அமைப்பு பற்றி பொறியாளருடன் ஓர் ஆய்வு செய்ய வேண்டும்.

கீழ்க்கண்ட விவரங்களை தெரிந்து கொள்ளல் அவசியம் :

46. ரூஃப் லெவல் முடிந்த பிறகு எலெக்ட்ரிக் ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் கண்ட்ரோல் பேனலுக்கு இடம் குறித்து ஆய்வு எதிர்காலத்தில் கூடுதலாக மின்வசதி தேவைப்பட்டால் அதற்கான ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் பற்றிய விவரங்கள்.

47. கதவு, நிலவு, ஜன்னல்கள் ஆகியவற்றிற்குத் தேவையான மரங்கள் அலுமினிய ஸ்டீல் கிரில்கள், ஃபர்னிச்சர் ஃபிட்டிங்ஸ், பூட்டுகள், கைப்பிடிகள், அலமாரிகள், ரூம் தடுப்புகள், வெண்ட்டிலேட்டர் அமைப்புகள், உள் அலங்கார பொருட்களுக்கான அமைவிடங்கள் பற்றிய அனைத்து விவரங்கள்.

48. தளத்திற்கு மொசைக் மார்பிள்ஸ், செராமிக் டைல்ஸ், சுவரில் பதிக்கும் டைல்ஸ், அலங்காரக் கூரை, ஓடுகள், பளபளக்கும் சமைலயறைப் பலகைகள், ஸ்டோர் ரேக்ஸ் பலகைகள் பற்றிய விவரங்கள்.

49. வண்ணப்பூச்சு உட்புறத்துக்கு ஏற்ற வண்ணம், வெளிச்சுவர்களுக்குரிய வண்ணம் கேட் டிசைனில் இருக்க வேண்டும். என்ன வண்ணம் அடிக்கலாம் என்பதைப் பற்ஷூய விவரங்கள்.

50. உள் அலங்கார அறையின் உள் அலங்கார அமைப்பிலும் அந்த அறையின் தன்மைக்கேற்ப வண்ணமும், உள் அலங்காரமும் இருப்பது பற்றிய விபரங்கள்.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

கல் உப்பு ஒரு வரப்பிரசாதம்


கல் உப்பு ஒரு வரப்பிரசாதம்

அதிகாலை எழுந்தவுடனே ரெண்டு கையிலயும் கல்லு உப்பை வச்சு மூடிக்கிட்டு கிழக்கு பக்கமாப் பாத்து உட்கார்ந்துக்கணும்!

மடியில ஒரு ஒயிட் பேப்பர் வச்சுக்கணும்!

மாமியாரால பிரச்னைன்னு வச்சுக்கோங்க...

 கண்ண மூடிக்கிட்டு
எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை.

நாங்க சந்தோஷமா இருக்கோம்.
என் மாமியார் ரொம்ப நல்லவங்க.

 நான் அவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன்.
என் மேல அவங்களுக்கு ரொம்ப பாசம்னு திரும்பத் திரும்பச் சொல்லணும்!!

அதேபோல, 
பணப்பிரச்னைன்னு வச்சுக்கோங்க...;
 கண்ணை மூடிக்கிட்டு,

எனக்கு நிறைய பணம் கிடைக்கும்!!;  என்னோட கஷ்டம் எல்லாம் தீர்ந்திடும்னு சொல்லணும்!!

உடம்புல ஏதாவது பிரச்னைன்னா,
.
 எனக்கு எந்த நோயும் இல்லை..!!;
உடம்புல இருக்கிற பிரச்னை எல்லாம் தீர்ந்துடுச்சு...!! 
நான் ஆரோக்கியமா இருக்கேன்னு சொல்லணும்!!;

மனசுக்குள்ளயும் சொல்லலாம்!!
வாய்விட்டு சத்தமாவும் சொல்லலாம்.
10 நிமிஷம் சொன்னாப் போதும்.

முடிச்சதும் கையில வச்சிருந்த உப்பை மடியில வச்சிருக்கிற ஒயிட் பேப்பர்ல கொட்டி,

 சிந்தாம மடிச்சு ஓடுற தண்ணியில கலந்து விட்டுடணும்!!

நீங்களும் செஞ்சு பாருங்க!!;
பத்து நாளுக்குள்ள பலன் தெரியும் .

உப்பில் இருக்கு மகத்துவம்.

இது என்ன வேடிக்கை?!
கையில் இருக்கிற உப்பு எப்படி வேலை செய்யும்??

“இது ஒண்ணும் புதியதில்லை. காலங்காலமா நம்ம மக்கள் மத்தியில புழக்கத்தில இருக்கிற ஒரு விஷயம்தான்!!

மந்திரிக்கும் போதும்,
திருஷ்டி சுத்தும்போதும் நம்ம மக்கள் கையில உப்பு வச்சு சுத்துவாங்க.
சில கோயில்கள்ல உப்பு வாங்கிக் கொட்டுவாங்க!

‘பாவத்தைப் போக்குறோம்’னு சொல்லி கடல்ல குளிக்கிறது,
கடல் தண்ணியை தலையில அள்ளித் தெளிக்கிறது,
கடலோரத்துல ஈமக்கிரியைகள் செய்றது, கடல்ல கால் நனைக்கறதுன்னு சொல்றதுக்கெல்லாம் காரணம் என்ன?

இதையெல்லாம் சர்வசாதாரணமா மூடநம்பிக்கைன்னு அறிவாளிகள் புறம் தள்ளிடுவாங்க!!

உண்மையிலேயே அதுக்குள்ள அறிவியல் இருக்கு.
அந்த அறிவியலை *""Ora Science""*என்று சொல்வாங்க!!

*எதிர்மறை சக்தி (Negative Energy) & நேர்மறை சக்தி (Positive Energy)*.....

இது ரெண்டும்தான் மனிதனோட குணநலன்களையும் வாழ்க்கையையும் தீர்மானிக்குது!!!

உப்பு, நெகடிவ் எனர்ஜியை வெளியேத்துற *சக்தி கொண்ட ஒரு பொருள்!!!*

கைக்குள்ள உப்பை வச்சுக்கிட்டு பாசிட்டிவ்வா நினைத்தாலோ;
அல்லது பேசினாலோ உடம்புக்குள்ள இருக்கிற நெகட்டிவ் எனர்ஜி வெளியேறிடும்!!!

*இது மாயமோ, மந்திரமோ இல்லை!! முற்றிலும் அறிவியல்!!*

உடம்புல நெகட்டிவ் எனர்ஜி வெளியாகி பாசிட்டிவ் எனர்ஜி  அதிகரிக்கும்போது;

 அதுவே  *அதிர்வுகளாக* (Vibration) வெளியில வந்து எதிராளிக்கிட்ட போகும்!!!

 எதிராளியோட அணுகுமுறையும் பாசிட்டிவ்வா மாறும்!!!

ஒரு விஷயத்தை திரும்பத்திரும்ப சொல்லும்போது நாம் அதுவாவே மாறிடுவோம்!! 
இதுவும் *அறிவியல்தான்!!*

எப்பவும் திட்டிக்கிட்டே இருக்கிற மாமியார், மருமகளை மரியாதையா நடத்துறதும்;

 எப்பவோ விட்டுட்டுப் போன அம்மா மகளைத் தேடி வந்ததும்; 
விபத்துல இருந்தவங்க குணமாகுறதும் இப்படியான நிகழ்வுகள் பாசிட்டிவ் எனர்ஜியோட விளைவுதான்!!!

இன்னைக்கும் கிராமங்கள்ல உப்பை மட்டும் ஓசி வாங்கக்கூடாதுன்னு சொல்வாங்க!!

 அப்படியே வாங்கினாலும் கையால வாங்க மாட்டாங்க!! 

அப்படி வாங்கினால், 

கொடுக்கிறவங்களோட நெகட்டிவ் எனர்ஜி வாங்குறவங்களுக்கு வந்திடும்!!! 

இந்த உண்மை கிராமத்து மக்களுக்குத் தெரிஞ்சிருக்கு..!!,
நன்றி.

சித்திரை மாதத்தில் வாகனம் வாங்கலாமா?


சித்திரை மாதத்தில் வாகனம் வாங்கலாமா?

ஜோதிடர் பதில்கள் !!

1. சித்திரை மாதத்தில் வாகனம் வாங்கலாமா?

🌟 சித்திரை மாதத்தில் வாகனம் வாங்கலாம்.

2. கனவில் பாம்பு அடிக்கடி வருகிறது. என்னை துரத்துகிறது ஆனால் கடிக்கவில்லை. இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் செயல்களின் தன்மைகளை அறிந்து செயல்படுவது நல்லது என்பதைக் குறிக்கின்றது.

3. எனக்கு குழந்தை பிறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும் என்பதைக் குறிக்கின்றது.

4. ஓணான் எனது கையை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. என் கனவில் ஒரு பெண் அழுகிறாள். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதுவிதமான மாற்றங்களால் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. என் முன்னாள் காதலன் கனவில் வந்தால் என்ன பலன்?

🌟 மனதில் நினைத்த நீண்ட நாள் ஆசைகள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

7. சிங்கம் பாய்ந்து கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சிங்கம் பாய்ந்து கடிப்பது போல் கனவு கண்டால் வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

8. சுடுகாட்டில் இருப்பது போல் கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

9. நாய் இறப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்?

🌟 நண்பர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

10. நான் இறந்தது போல் கனவு கன்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய வாய்ப்புகள் மற்றும் எண்ணிய எண்ணங்கள் நல்லமுறையில் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

11. ரயிலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 ரயிலை கனவில் கண்டால் எதிர்பார்த்த உதவிகளின் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

12. பசுமாடு கனவில் வந்தால் என்ன பலன்?

🌟 பசுமாடு கனவில் வந்தால் எதிர்காலம் சம்பந்தமான செயல்களில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

13. நல்ல பாம்பு வீட்டிற்குள் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நல்ல பாம்பு வீட்டிற்குள் வருவது போல் கனவு கண்டால் நன்மைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


கோடைகாலத்தில் முட்டை சாப்பிடலாமா??


கோடைகாலத்தில் முட்டை சாப்பிடலாமா??

🍛கோடைகாலத்தில் நாம் உண்ணும் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும். அந்த வகையில் கோடைகாலத்தில் முட்டை சாப்பிடுவது நல்லதா, கெட்டதா என்ற சந்தேகம் சிலருக்கு உள்ளது. அதைப் பற்றி இங்கு காண்போம்.

🍛முட்டையில் கனிமச்சத்து, வைட்டமின், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளது.

🍛கோடைகாலத்தில் சத்துகள் நிறைந்த முட்டையை சாப்பிட்டால், செரிமான பிரச்சனை ஏற்படும் என்ற பரவலான கருத்து இருக்கிறது. ஆனால், அது சரியான கருத்து இல்லை என்று சமையல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

🍛கோடைகாலத்தில் முட்டை சாப்பிடுவதால் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம். முட்டையில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துகள், கோடையில் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைப்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

🍛முட்டை உடலில் உள்ள ஆற்றலை நீண்டநேரம் தக்கவைத்து, கோடையில் ஏற்படும் உடல் சோர்வு மற்றும் பலவீனத்தைத் தடுக்கிறது.

🍛முட்டையை குறைவான எண்ணிக்கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அளவுக்கு அதிகமாக முட்டை சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல.

🍛வெயில் காலத்தில் அளவுக்கும் அதிகமாக முட்டையை எடுத்துக்கொண்டால், வயிறு தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

🍛கோடைகாலத்தில் முட்டையை நன்கு வேகவைத்துச் சாப்பிடுவது தான் மிகவும் நல்லது. மேலும், வெயில் காலத்தில் அசைவ உணவுகளை குறைத்துக்கொள்வது உடலுக்கு நல்லதாகும்.


சித்திரை மாதம் ஏன் குழந்தை பிறக்கக்கூடாது என்கிறார்கள் தெரியுமா?


 சித்திரை மாதம் ஏன் குழந்தை பிறக்கக்கூடாது என்கிறார்கள் தெரியுமா?


🌟 வருடத்தின் எல்லா நாட்களிலும் தாய்மார்கள் கர்ப்பம் தரிக்கலாம். குழந்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனாலும், ஆடி மாதம் கணவன்-மனைவி சேரக்கூடாது. சித்திரையில் பிள்ளை பிறக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். அவ்வாறு கூறுவதற்கு பின் ஒளிந்துள்ள ஓர் அறிவியல் உண்மையைப் பற்றி பார்ப்போம்.

🌟 பொதுவாக, ஆடி மாதத்தில் கர்ப்பம் தரிக்கும்போது பெரும்பாலும் சித்திரை மாதத்தில் குழந்தை பிறப்பு நிகழும்.

🌟 தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சித்திரையில் தான் அக்னி நட்சத்திரம் தொடங்கும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். குழந்தையின் சருமம் மிக மென்மையாக இருப்பதால் வெயிலைத் தாங்க முடியாமல் தோல் சிவந்துவிடும்.

🌟 மேலும், தாய்ப்பால் மட்டுமே உட்கொள்ளும் குழந்தைக்கு உடலில் நீர்வற்றி, உபாதைகள் வர வாய்ப்பு உள்ளது. சின்னச் சின்ன சூட்டுக் கொப்புளங்கள் உடல் முழுவதும் உண்டாகும். அச்சமயங்களில் அம்மை போடுவதற்கும் வாய்ப்புண்டு.

🌟 குழந்தையை நிறைய பேர் தூக்கிக் கொஞ்சுவதால் தொற்றுநோய்களும் ஏற்படலாம். அதேபோல் தாய்க்கும் அதிக வெப்பம் மற்றும் வியர்வையால் நாவறட்சி, மயக்கம், வாந்தி உண்டாகலாம். இது அதிகமாகும் போது பக்கவாதம் மற்றும் ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைதல் போன்ற பெரிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

🌟 இவற்றை எல்லாம் தவிர்ப்பதற்காக தான், சித்திரையில் பிள்ளை வேண்டாம் என்றனர் நம் முன்னோர்கள்.

வியாழன், 11 ஏப்ரல், 2019

தாய்ப்பால் இல்லாமல் கஷ்ட படுறீங்களா?? கவலை வேண்டாம் இதனை கடைபிடியுங்கள்!

தாய்ப்பால் இல்லாமல் கஷ்ட படுறீங்களா?? கவலை வேண்டாம் இதனை கடைபிடியுங்கள்!

கருப்பட்டி என்றதும் அனைவரும் நாக்கு ஊற ஆரம்பித்துவிடும். அந்த அளவிற்கு கருப்பட்டியின் சுவை இருக்கும். இனிப்பு சுவைக்கு இன்று சர்க்கரை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் முன்பெல்லாம் கருப்பட்டி தான் இனிப்புக்கென பயன்படுத்தி வந்துள்ளனர். சீனி என்ற வெள்ளை சர்க்கரை கண்டறிந்து பலபகுதிகள் பயன்படுத்திய போதும் கிராமப்புறங்களில் பெரும்பாலும் கருப்பட்டி காபிதான் குடிப்பார்கள். 
நம் தமிழ் பாரம்பரிய உணவு வகைகளில் முக்கியமான இடம் பிடித்த ஒன்று கருப்பட்டி. இன்று இந்த கருப்பட்டியை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. ஆனால் இதில் அடங்கியுள்ள எண்ணற்ற பலன்களைப் பற்றி அறிந்து கொண்டால் நாம் நிச்சயம் இதனை மீண்டும் பயன்படுத்த துவங்குவோம். கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் சத்து இதய ஆரோக்கியத்தை பராமரிக்க செய்கிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து அதன் மூலம் இதய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும். பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். வறட்டு இருமலை அகற்ற கருப்பட்டியை பாலில் சேர்த்து சாப்பிடவேண்டும்.

கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். மேலும், தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். காபியில் சர்ச்சரைக்கு பதில் கருப்பட்டியை சேர்த்து குடித்தால், நமது உடலுக்கு சுண்ணாம்புச் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக கிடைக்கிறது. மேலும் இதனை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்.
கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். மிக குறைந்த விலையில் கிடைக்கும் ஆரோக்கியம் தரும் கருப்பட்டியை தற்போது பெரும்பாலானோர் பயன்படுத்துவது இல்லை.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

ஐஸ் வாட்டர் உஷார் ஆளையே கொல்லும்


ஐஸ் வாட்டர் உஷார் ஆளையே கொல்லும்

வெயில் உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. 40 டிகிரி செல்சியஸ் அல்லது 105 டிகிரி அனல் காற்று வீசும் என்றும் பகலில் பயணம் செய்யாதீர்கள் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்கிறது.

இந்நிலையில் சுட்டெரிக்கும் வெயில் இயல்பாகவே நமக்கு ஐஸ் வாட்டர் மீது விருப்பத்தை தூண்டும். உடனே பிரிட்ஜில் இருந்து குளிர்ந்த நீரை எடுத்து மடக் மடக்கென்று குடிப்போம்.

அப்படி குடித்தால் நமது உடலின் சிறிய ரத்தக்குழாய்கள் வெடித்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு மருத்துவர் தனது நண்பர் வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்குள் வந்து குளிர்ந்த நீரால் பாதத்தை கழுவியிருக்கிறார். உடனே, அவருடை பார்வை மங்கி கீழே விழுந்திருக்கிறார். அவர் பயந்து நடுங்கியிருக்கிறார்.

வெயில் 100 டிகிரி அடித்தாலும், நமது உடல் அதைக்காட்டிலும் அதிக உஷ்ணமாகும். ஐஸ் வாட்டரை குடிப்பது மட்டுமே ஆபத்து அல்ல. ஐஸ் வாட்டரில் கைகளையோ, முகத்தையோ, பாதங்களையோ கழுவுவதுகூட ஆபத்து என்கிறார்கள். அதாவது, உஷ்ணமான நமது உடலை ஐஸ் நீரால் திடீரென தாக்கக்கூடாது என்கிறார்கள். வீட்டுக்குள் நுழைந்து 30 நிமிடங்கள் வரை ஆசுவாசப்படுத்தி, வீட்டுக்குள் நிலவும் வெப்பத்துக்கு நமது உடலை தயார்செய்துவிட்டு பிறகுதான் இயற்கையான குளிர் நீரிலோ, வெதுவெதுப்பான அதாவது 90 முதல் 95 டிகிரி வெப்பமுள்ள தண்ணீரை குடிக்கலாம்.

நல்ல உறுதிவாய்ந்த உடலுடைய நபர் வெயிலில் அலைந்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தார். கொதிக்கும் தனது உடலை உடனடியாக குளிர வைக்க விரும்பி குளிர்நீர் ஷவரில் குளித்தார். உடனே, அவருடைய தாடைகள் இறுகிக்கொண்டன. வாயை திறக்க முடியவில்லை. நல்லவேளை ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டுபோனார்கள். கைகால்கள் முடங்கி, உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. நடப்பதற்கே சிரமப்படும் நிலையில் அவர் இருக்கிறார் என்று ஒரு டாக்டர் கூறுகிறார்.

வெயில் நேரத்தில் பிரிட்ஜ் வாட்டர், ஐஸ் போட்ட வாட்டரை குடிக்காதீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கும் எச்சரிக்கை செய்யுங்கள். ஐஸ் வாட்டரை தவிர்த்து உடல்நலத்தை பாதுகாப்போம் என்ற பிரச்சாரம் இப்போது பரவி வருகிறது