புதன், 31 ஜனவரி, 2018

மஞ்சள் பூசி குளிங்க கருப்பை புற்றுநோய் எட்டிக்கூட பார்க்காது!!!


மஞ்சள் பூசி குளிங்க கருப்பை புற்றுநோய் எட்டிக்கூட பார்க்காது!!!

முகத்திற்கு பூசுவதற்கு வித விதமாய் அழகு சாதன கிரீம்கள் வந்த பின்னர் மஞ்சள் பூசி குளிப்பது இன்றைக்கு மறந்தே போய்விட்டது. ஆனால் மஞ்சள் பூசி குளிப்பவர்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


மஞ்சள் பூசிய முகத்துக்கென்று ஒரு தனி அழகு உண்டு. ஆனால், அது வெறும் அழகோடு நிற்காமல் அதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு என்பது இன்றைய இளம் யுவதிகளுக்குப் புரிவதில்லை.


இன்றைய இளம் பெண்கள் பலருக்கும் சோப்பு போட்டு குளித்த பின்னர் மஞ்சள் பூசி குளிப்பதன் மகிமை தெரியாமல் போனதன் காரணம் அதைப் பற்றி சரியான புரிதலும், விழிப்புணர்வும் இல்லாமல் போனதுமே காரணம்.  எனவேதான் மஞ்சள் பூசி குளித்தவர்கள் கூட, நாளடைவில் தோழிகள் சிரிக்கிறார்களே என்று தற்போது மஞ்சளை மறந்தே விட்டார்கள்.

மஞ்சள் ஒரு கிருமிநாசினி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அது பெண்களுக்கு ஏற்படும் கொடிய புற்றுநோயான கருப்பை வாய் புற்றுநோயைக் கூட கட்டுப்படுத்துகிறதாம்.


மஞ்சள் பூசி குளிக்கும் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோயை உருவாக்கும் ஹியூமன் பப்பிலோமா வைரஸ் (எச்பிவி) அழிக்கப்படுவதும், புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு அது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்படுவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுத்தும் எச்பிவி கிருமிகள் கருப்பை வாயில் இருப்பது கண்டறியப்பட்ட பெண்களில் பாதி பேருக்கு மஞ்சள் கொடுத்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. சிலருக்கு எப்போதுமான மருந்துகள் மட்டும் கொடுக்கப்பட்டது.


அதில் மஞ்சள் பயன்படுத்தியவர்களுக்கு எச்பிவி கிருமியால் ஏற்பட்ட பாதிப்பு சரியாகியிருந்ததும், மேலும் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இனி பெண்கள் குளிக்கும் போது, மஞ்சள் தேய்த்து குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அலுவலகம் மற்றும் பள்ளிக்குச் செல்லும் பெண்கள் விடுமுறை நாட்களிலாவது மஞ்சள் பூசுவது அவசியம்....


பெண்களுக்காக… 50 முக்கிய குறிப்புகள் - இயற்கை மருத்துவம்


பெண்களுக்காக… 50 முக்கிய குறிப்புகள் - இயற்கை மருத்துவம்

முடி அடர்த்தியாக வளர....!

பெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான்.

இன்றைய அவசர உலகில் பெண்களுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல். அதுமட்டுமல்லாது இன்றைய பெண்கள் தமது கூந்தலை முடியை கலர் செய்வது, ரீபொன்டிங், கேர்லிங் என பல வகைகளில் தமது முடியை அலங்கரித்துக் கொள்கின்றனர். சக்திவாய்ந்த இரசாயனங்களை தலைமுடிகளுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் விரைவாக சேதமடைகிறது.

மேலும் நமது சுற்றுப்புற சுழலில் உள்ள மாசுக்களால் கூந்தல் பாதிப்படைகின்றது. அது போன்ற பாதிப்பை வேலைக்குச் செல்லும் பெண்களே அதிகளவில் சந்திக்க நேரிடுகிறது. தலை முடி அடர்த்தி குறைவாக இருக்கிறதே என இனி கவலைப்பட தேவையில்லை. தலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்:

1. ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.

2. முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய்யை தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.

3. செம்பருத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

4. கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

5. கடுக்காய், செம்பருத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.

6. வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.

7. ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும்,அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.

8. மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும்.

9. செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றைக் கலந்து மிக்சியில் அரைத்து, தயிர் சிறிதும் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊர வைத்து குளித்தால், தலை “ஜில்’ லென்றிருக்கும். தலை முடி “புசுபுசு’வென அதிகமாய் ஜொலிக்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வந்தால், அரை அடி கூந்தலும் ஆறடி கூந்தலாகி விடும்.

10. மருதாணிஇலையை நன்றாக அரைத்து சிறு சிறு அடைகளாகத் தட்டி நிழலில் உலர்த்தித் தேங்காய் எண்ணெயில் சில நாள்கள் (2 அல்லது 3 நாட்கள்) ஊறவிட்டு, அதை நன்றாகக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்தால் நீண்ட அடர்த்தியான தலைமுடி வளரும்.

அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும்.


பொதுவான குறிப்புகள் ....!

11. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

12. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது,

எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

13. மருதாணி இலையை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அரைத்து கால்வெடிப்புக்கும், கால் எரிச்சலுக்கும் வெளிப்பூச்சாக உபயோகித்தால் நல்ல பலன் பெறலாம்.

14. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வராமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

15. பெண்களுக்கு மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

16. மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா..? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.

17. அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் .இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.

வெள்ளைப்படுதல், ரத்தப்போக்கு....!

18. தினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நீங்கும். கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது.

19. பப்பாளிக் காயை இடித்து சாறு எடுத்து. ஒரு அவுன்ஸ் சாப்பிட்டால், மாதவிலக்கு சமயங்களில் வலி குறையும்.

20. பச்சை வாழைக்காயை இடித்து, வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கு கால ரத்தப்போக்கு கட்டுப்படும்.

21. நல்லெண்ணெயுடன், முட்டையை கலந்து குடித்தால், மாதவிலக்கு பிரச்சினைகள் தீரும்.

22. புளியம்பழத்தோல், முருங்கைக்காய், சுக்கு மூன்றையும் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால், மாதவிலக்கு குளறுபடிகள் இருக்காது,

23. மாம்பழக் கொட்டையை காயவைத்து பொடியாக்கி, தேன் கலந்து சாப்பிட்டால் மாதவிலக்கு ரத்தப்போக்கு குறையும்.

24. கொள்ளு பயறு அவித்த நீரை குடிப்பது மாதவிலக்கு காலத்துக்கு ஆரோக்கியம்.

25. புளி, மஞ்சள், மல்லி மூன்றையும் சேர்த்து அரைத்து, சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்சினைகள் ஓரளவு கட்டுப்படும்.

26. பீட்ருட்டை உணவில் அதிகம் சேர்த்தல் இரத்த போக்கினால் ஏற்படும் இழப்பு சமன் செய்யப்படும்.

27. வேப்பமரப் பட்டை- பூ- வேர்- காய்- பழம் அனைத்தையும் அரைத்து, பாலில் கலந்து சாப்பிட்டால், கர்ப்பமாகும் சக்தி அதிகரிக்கும்.

28. உளுத்தம் பருப்பை நெய்யில் வறுத்து, பொடியாக்கி, பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உயிரணு உற்பத்தி அதிகரிக்கும்.

29. பேரீச்சம்பழம், கொத்தமல்லி இலை இரண்டையும் அரைத்து, பசும்பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் கர்ப்பம் தரிக்கும்!

கர்ப்பக் கால கவனிப்பு...!

30. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.

31. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

32. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

33. கர்ப்பிணிகளின் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதில் வாழைப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.

உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது.

வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.

34. கர்ப்பக் காலத்தில் மற்றும் பிரசவ காலத்துக்குப் பின்னும் தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் நடைபயிற்சி மிக நன்று.

35. கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.

36. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

37. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

38. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமி மற்றும் பரம்பரை நிறம்.

39. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

40. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

41. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

42. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளை வாதத்தைக் கூட கொண்டு வரக்கூடும்.

தாய்ப்பால் நன்றாகச் சுரக்க....!

43. பப்பாளிப் பழத்தைத் தேனில் தொட்டு உண்டால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். இதைத் தாய்ப்பால் கொடுப்பவர்கள் தினமும் உண்ணலாம்.

44. குழந்தை பெற்ற தாய்மார்கள் தினம் சிறிது வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டுவர பால் அதிகம் சுரக்கும். குழந்தையும் கொழு கொழுவென ஆகும்.

45. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

46. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.

47. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.

உணவே மருந்து….!

48. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்..!

49. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.உணவே மருந்து.

எல்லா வகை பழங்களையும் சாறு எடுத்து அருந்துவது உடலுக்கு நன்மை தரும்.

50. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்..

செவ்வாய், 30 ஜனவரி, 2018

சந்திர கிரகணத்தன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?


சந்திர கிரகணத்தன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

நிகழும் ஹேவிளம்பி வருடம் தை மாதம் 31-ம் தேதி புதன்கிழமை (31-01-2018) சந்திர கிரகணம் மாலை 6.21 மணி முதல் இரவு 7.37 மணி வரை முழு சந்திர கிரகணம் இருக்கும். 7.37 மணி முதல் நிழல் விலக ஆரம்பித்து 8.41 மணிக்கு முழுமையாக விலகிவிடும். இருப்பினும் இரவு 9.38 மணிக்கு பிறகே நிலவு அதன் முழு ஒளியுடன் ஜொலிக்கும்.
சூரியன் பூமி சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணங்கள் ஏற்படுகின்றன. இதில் சந்திரன் மறைக்கப்படும் போது சந்திரகிரகணமும், சூரியன் மறைக்கப்படும்போது சூரியகிரகணமும் நிகழ்கிறது.
• பௌர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும், அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும்.
• சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும்.
• சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், அரைகுறையாக ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரிய, சந்திரர்கள் கிரகணம் நிகழும்
பொழுது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும், கேதுவின் பிடியில் இருந்தால் கேது கிரகஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
• கிரகணம் எல்லா நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் தென்படாது. மாறாக வெவ்வேறு நேரங்களிலேயே தென்படும். கிரகணத்தின் போது புவி மேற்பரப்பில் வெளிச்சம் குறைவதை காணலாம்.
சந்திர கிரகணம் பற்றி புராணக்கதை என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்....
சந்திரன் அவர் செய்த பாவம் காரணத்தால் அவருக்கு ராகு தோஷம் வந்துவிடுகிறது. இதனால் ராகு (பாம்பு) அவரைப் பிடித்து அவரை முடமாக்க நினைக்கிறார். ஆனால் சந்திரன், பகவானைப் பிரார்த்தித்து, ஸ்லோகங்கள் சொல்லவும், இறைவன் சந்திரனுக்கு அருள, சந்திரனுக்கு இருந்த ராகுதோஷம் நீங்குகிறது. இதனால் கிரகணத்தின் போது பக்தியுடன் இறைவனைப் பிரார்த்தித்து வந்தால் அவரவர் செய்த பாவங்கள் தீரும். இறைவன் அருளும் கிடைக்கும்.
• கிரகண காலத்தில் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது. இது பீடை காலம் எனப் புராணங்கள் கூறுகிறது. ஆனால் சந்திரனின் கதிர்களின் கதிர்வீச்சில் ஏற்படும் மாற்றம் கர்ப்பிணி பெண்களைப் பாதிக்கும் என்பதால் கர்ப்பிணி பெண்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
சந்திர கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
• கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்தவித உணவும் உட்கொள்ளக் கூடாது.
• கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது.
• ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.
• செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை புல்லினைப் போட்டு வைக்க வேண்டும்.
• கிரகணத்தின் போது நவக்கிரக துதியைப் பாராயணம் செய்யலாம். அதுபோலவே சந்திர கிரகணத்துக்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.
• கிரகண விடுபடும் போது அதாவது கிரகணம் முழுதும் முடிந்ததும் ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.
• ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
• கிரகணம் முடிந்ததும், பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.
• சந்திர கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனைத் துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். கிரகணம் முடிந்ததும், ஆலய வழிபாடு செய்வது இன்னும் சிறப்புகளைக் கொடுக்கும்.

தைப்பூசம் பற்றிய வரலாறும் வழிபாடும்


தைப்பூசம் பற்றிய வரலாறும் வழிபாடும்

தைப்பூசம் : 31.01.2018

அசுரனை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, தமிழ்க்கடவுள் முருகன் கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும். தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக (பறுவம்) இருக்கும்.தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றை சிறப்பாக செய்து வைப்பார்கள். மற்றும் அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள்.இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில் களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.


தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். வரலாறு தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை.எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது.

அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார். சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான். தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம். தைப்பூசத்தை முன்னிட்டு

முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர்.

சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்து வதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக்கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.

நிலாவிருந்து மூன்று ... கலர் கலர் நிலாகள் மூன்றும் ஒரே நேரத்தில்...



நிலாவிருந்து மூன்று ... கலர் கலர் நிலாகள் மூன்றும் ஒரே நேரத்தில் ...

(Jan 31 : Super moon, blue moon, blood moon மூன்றும் ஒரே நேரத்தில் ....)

வரும் ஜனவரி 31 ஆம் தேதி நிலா நமக்கு ஒரே நேரத்தில் மூன்று விருந்து வைக்க உள்ளது.. அதாவது super moon , blue moon, blood moon இந்த மூன்று அதிசய நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் நடக்க உள்ளன. கூடவே முழு சந்திர கிரகணம் எனும் நிகழ்வையும் சேர்த்து கொள்ள மறக்காதீர்கள்.

இந்த கலர் கலர் நிலாகள் ...இவைகள் என்ன என்பதை பார்ப்போமா ??


🌙 Super moon :

நிலா நம்மை நீள் வட்ட பாதையில் சுற்றுவதை நாம் அறிவோம். அப்படி சுற்றும் போது எப்போவாவது மிக மிக அருகில் வந்து போகும். அப்படி மிக அருகில் வரும் நிகழ்வுக்கு பெயர் சூப்பர் மூன். அன்றைக்கு நிலா வழக்கத்தை விட மிக பெரிதாக தெரியும் வழக்கமான வடிவத்தை விட 14 சதம் அதிகம் பெரிதாக 30 சதம் அதிக வெளிச்சமாக தெரியும்.


🌙 blue moon :

இது நீல நிறத்தில் எல்லாம் தெரியாது சும்மா பெயர் தான் ப்ளூ மூன்.
ஒரே மாதத்தில் இரண்டாவது முழு நிலவு தோன்றினால் அந்த நிகழ்வு தான் blue moon.


🌙 Blood moon :

முழு சந்திர கிரகணத்தின் நடக்கும் ஒரு நிகழ்வு படி சூரிய கதிர்களில் உள்ள நீல நிறங்கள் வழியிலேயே சிதரடிக்க பட சிகப்பு நிறத்தை மட்டும் பிரதி பலிக்கும் ரத்த நிலா தான் blood moon

இப்படி பூமிக்கு மிக பக்கத்தில் சூப்பர் மூனாக வந்து ...கூடவே ப்ளூ மூணாகவும் வந்து... ரத்த நிறத்திலும் வரும் jan 31 ஆம் தேதி தெரிய போகும் முழு சந்திர கிரகணம் ஒரு மிக மிக அறிய நிகழ்வு...
கடந்த 150 ஆண்டுகள் கழித்து வரும் ஒரு அபூர்வ நிகழ்வு...
வெறும் கண்ணால் பார்க்க தடை இல்லை என்பதால் உங்கள் பகுதியில் தெரியும் பட்சத்தில் பார்த்து மகிழுங்கள்..

சுகப்பிரசவம் இனி ஈஸி கட்டிகளால் கவலை வேண்டாம்!


சுகப்பிரசவம் இனி ஈஸி கட்டிகளால் கவலை  வேண்டாம்!

உடலில்  சிறிய கட்டி தோன்றினாலே கலவரம் அடையும் காலம் இது. கட்டியைப் பார்க்கும் போதெல்லாம், அது புற்றுநோய்க் கட்டியாக இருக்குமோ, இல்லை, இப்போது சாதாரணமாகத் தெரிந்தாலும், பிற்காலத்தில் புற்றுநோயாக மாறிவிடுமோ என்றெல்லாம் மனசுக்குள் பதற்றம் கொள்ளாதவர்கள் இருக்க முடியாது.

நிலைமை இப்படி இருக்கும்போது கருப்பையில் கட்டி தோன்றினால் கவலைப்படாமல் இருக்க முடியுமா? அதிலும் கர்ப்பம் ஆன பிறகு அங்கே கட்டி தோன்றிவிட்டால், பிரசவம் ஆகும் வரைக்கும் அந்தக் கர்ப்பிணிக்கு அச்சம் ஏற்படாத நாளே இருக்காது.

சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கே பயந்துபோய் ‘கருக்கலைப்பு செய்துவிடலாம்’ என முடிவு செய்கிறவர்கள்தான் நம்மிடம் அதிகம். அப்படியானால், ‘கருப்பையில் கட்டி இருக்கிறது’ என்று தெரிந்ததும், கர்ப்பிணிகள் இதே முடிவுக்கு வருவதில் ஆச்சரியமில்லை... ஆனால், அது அவசியமுமில்லை!

கர்ப்பிணிக்கு ஏற்படும் கட்டிகளில் பயப்பட வேண்டிய கட்டிகளும் இருக்கின்றன; பயப்படத் தேவையில்லாத கட்டிகளும் இருக்கின்றன. பொதுவாக, கர்ப்பிணிக்கு மூன்று இடங்களில் கட்டிகள் தோன்றலாம். 1.கருப்பை 2. கருப்பை வாய் 3. சினைப்பை. இவற்றில் கருப்பையில் ஏற்படும் ஃபைப்ராய்டு (Fibroid அல்லது Fibromyoma) எனப்படும்  ‘நார்த்திசுக் கட்டி’பெண்களுக்கு ரொம்பவும் சகஜம்.

*நார்த்திசுக் கட்டி என்பது என்ன?*

கருப்பையின் உட்புறத் தசைகளில் உருவாகும் ஒருவகை கட்டி இது. இயற்கையாகவே பல பெண்களிடம் இது காணப்படுவதுண்டு. சாதாரண கட்டிதான் இது; புற்றுநோயைச் சேர்ந்தது இல்லை. எனவே, இதற்குப் பயப்படத் தேவையில்லை.

இத்தகைய கட்டிகள் இருக்கும்போது ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது என்பது சற்று சவாலுக்குரியதுதான். என்றாலும், இன்றைய நவீன தொழில்நுட்ப வசதிகளால், கருப்பையில் கட்டி உள்ள பெண்களும் கர்ப்பம் தரித்து, கர்ப்பகாலத்தில் எவ்விதத் தொல்லையும் ஏற்படாமல், சுகப்பிரசவம் ஆவது சாத்தியமாகியுள்ளது.

முன்பெல்லாம் 100 கர்ப்பிணிகளில் ஒருவர் அல்லது இருவருக்கு இந்தக் கட்டி தோன்றியது. இப்போதைய உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களால் அதிகம் பேருக்கு இந்தக் கட்டி தோன்றுகிறது எனத் தெரிய வருகிறது.

அதிலும் ‘அல்ட்ரா சவுண்ட்’ எனும் பரிசோதனைக் கருவியின் கண்டுபிடிப்புக்குப் பின், இந்தக் கட்டி உள்ளதை உடனடியாகப் பார்க்க முடிவதால், இதன் தோற்றத்தையும் வளர்ச்சியையும் தெளிவாகக் கவனித்து சிகிச்சை கொடுக்க முடிகிறது.

மேலும், இந்தப் பிரச்னை கால் நூற்றாண்டுக்கு முன்புவரை 50 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்குத்தான் ஏற்பட்டது. ஆனால் தற்போது இளம் வயதிலேயே இக்கட்டி தோன்றுவது வழக்கமாகி வருகிறது. முக்கியமாக, உடற்பருமன் உள்ள பெண்களுக்கு இது வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம்.

பரம்பரையாகவும் இது வரக்கூடும்.பெரும்பாலான சமயங்களில் இந்தக் கட்டி இருப்பது வெளியில் தெரியாது. எந்தவித அறிகுறியும் காண்பிக்காமல் ‘அமைதியாக’ இருக்கும். தற்செயலாக வேறு காரணங்களுக்காக வயிற்றை ஸ்கேன் செய்யும்போது பலருக்கும் இது இருப்பது தெரியவரும்.

இது பெரும்பாலும் ஓர் ஆப்பிள் விதை அளவுக்குத்தான் இருக்கும். சிலருக்கு மட்டும் ஒரு திராட்சைப் பழம் அளவுக்கு இது வளரலாம். ஒருவருக்கு மூன்று கட்டிகள்வரை தோன்றலாம். இவை மெதுவாக வளரும் தன்மையுள்ளவை. மாதவிலக்குக்குப் பிறகு கரு உற்பத்தி ஹார்மோன்களின் அளவுகள் குறைந்ததும் தானாகவே இவை சுருங்கிவிடும்.

கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சை, கருப்பையை அகற்றும் சிகிச்சை போன்றவற்றை வேறு வழியே இல்லாத பட்சத்தில்தான் மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.


*கட்டியின் வகைகள்*

இது கருப்பையில் நான்கு இடங்களில் தோன்றுவது வழக்கம்.
1. கருப்பையின் உட்சவ்வை ஒட்டி வளர்வது ஒரு வகை (Submucous fibroid).
2. கருப்பைத் தசைகளுக்கு இடையில் வளர்வது மற்றொரு வகை (Intramural fibroid).
3. கருப்பையின் வெளிச்சுவரை ஒட்டி வளர்வது மூன்றாம் வகை (Subserous fibroid).
4. கருப்பை வாய்ப்பகுதியில் தோன்றும் கட்டிகள் கடைசி வகை (Cervical  fibroid).

என்ன அறிகுறிகள்?

அடிவயிற்றில் வலி ஏற்படும். அடிவயிற்றைத் தொட்டாலே சிலருக்கு வலி ஏற்படுவதுண்டு. அடி வயிறு சிறிது பெரிதாகவும் தெரியலாம். லேசாக காய்ச்சல், வாந்தி, முதுகுவலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், அல்லது சிறுநீர் அடைத்துக் கொள்ளுதல், மலச்சிக்கல் போன்ற தொல்லைகள் ஏற்படும்.

*எப்படி கண்டுபிடிப்பது?*

மகப்பேறு மருத்துவர் கர்ப்பிணியின் வயிற்றைத் தொட்டுப் பரிசோதிக்கும்போது, கர்ப்ப நாட்களுக்கு அதிகமாக வயிறு பெரிதாக இருப்பதாக உணர்ந்தால், சந்தேகத்தின் பேரில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொள்ளச் சொல்வார். அதில் ‘நார்த்திசுக் கட்டி’ இருப்பது தெரியும்.

கட்டி எந்த இடத்தில் உள்ளது, அளவு என்ன, எத்தனை கட்டிகள், பிரசவத்துக்குத் தொந்தரவாக இருக்குமா என பல தகவல்களை அதில் தெரிந்துகொள்ள முடியும். அதற்கேற்ப கர்ப்பிணிக்குத் தேவையான சிகிச்சை முறைகளைத் தேர்வு செய்துகொள்ள முடியும்.

*கர்ப்பிணிக்கும் சிசுவுக்கும் என்ன பாதிப்பு?*

எல்லா ‘நார்த்திசுக் கட்டி’களும் ஆபத்தைத் தரும் என்று கூறமுடியாது. அது உருவாகும் இடம் மற்றும் அதன் அளவைப் பொருத்துத்தான் பாதிப்பு ஏற்படும். சமயத்தில் அது பெரிய கட்டியாகவே இருந்தாலும் கருப்பையின் உள்ளே மேல்புறத்தில் இருந்தால், கருவைப் பாதிக்காது; சுகப்பிரசவம்கூட ஆகலாம்.

சில கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் நார்த்திசுக் கட்டி வளர ஆரம்பித்து, கருவை அழுத்த ஆரம்பித்தால், கருச்சிதைவு ஆவது உண்டு. சிலருக்கு கட்டிகள் உடைய ஆரம்பித்து ரத்தக்கசிவும் அடிவயிற்றில் வலியும் ஏற்படலாம். அப்போது கர்ப்பிணி நல்ல ஓய்வில் இருந்துகொண்டு, அந்தப் புண் ஆறுவதற்கு மருந்துகளை சாப்பிட்டாலே போதும்.

கருப்பையின் அடிப்புறத்தில் கட்டிகள் தோன்றினால் மட்டும் பிரசவத்தேதிக்கு முன்னரே குழந்தை பிறந்துவிடலாம். குறைப்பிரசவம் ஆகலாம். கருப்பையின் வெளிச்சுவரை ஒட்டி வளரும் கட்டிகள் ஒரு சிலருக்குத் திருகிக் கொள்ளும் (Torsion of fibroid).

அப்போது அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு கட்டியை அகற்ற வேண்டியது வரும். கருப்பையின் அடிப்புறத்தில் கட்டிகள் தோன்றும்போது சிசுவின் உடலமைப்பில் சில மாறுதல்கள் உண்டாகலாம். இவை எல்லாம் மிகச் சிலருக்கு மட்டுமே ஏற்படக் கூடியவை.

எப்படி கவனிப்பது?

கர்ப்பத்தின் ஆரம்பத்திலிருந்தே மகப்பேறு மருத்துவர் ஆலோசனைப்படி முறையான பரிசோதனைகளை மேற்கொண்டு, கட்டியின் வளர்ச்சிப்போக்கைத் தொடர்ந்து கவனித்து வந்தால், சுகப்பிரசவம் ஆவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. கட்டியானது கர்ப்பிணிக்கு அல்லது சிசுவுக்கு ஆபத்துஏற்படுத்துகிறது எனும்போது மட்டுமே மற்றசிகிச்சைகளை யோசிக்க வேண்டும்.

பொதுவாக, இந்தக் கட்டியில் ‘சிவப்புச் சிதைவு’ (Red degeneration) எனும் கடுமையான  விளைவு ஒன்று ஏற்படும். அப்போது சிசேரியன் தேவைப்படும். கருப்பையின் அடிப்புறத்தில் கட்டிகள் தோன்றும்போதும், கருப்பையின் உள்ளே இருக்கும் கட்டி பிரசவ நேரத்தில் குழந்தையை கர்ப்பிணியின் இடுப்புக்குழிக்கு இறங்கவிடாமல் தடுக்கும்போதும், குழந்தையின் நிலை இயல்பாக இல்லாமல், குறுக்காக அல்லது ஒரு பக்கமாகச் சாய்ந்து கிடக்கும்போதும், சிறிய கட்டியாகவே இருந்தாலும்  அது கருப்பை வாய்ப் பகுதியில் தோன்றும்போதும் சிசேரியன் தேவைப்படும்.

சினைப்பைக் கட்டி பயப்பட்டே தீர வேண்டிய கட்டி என்று பார்த்தோமல்லவா? அது சினைப்பைக் கட்டிதான் (Ovarian tumor). இதில் திடக் கட்டி, நீர்க் கட்டி, சாதாரணக் கட்டி, புற்றுநோய்க் கட்டி எனப் பல வகை உண்டு. கட்டியின் அளவு, எண்ணிக்கை, வகை, கர்ப்பகாலம் ஆகியவற்றைப் பொறுத்து பிரச்னை ஆரம்பமாகும்.

‘கார்ப்பஸ் லூட்டியம்’ (Corpus luteum) என அழைக்கப்படும் சினைப்பை பகுதியில் - அதாவது, சினைமுட்டை கருத்தரிப்புக்காக வெளியேறிய பிறகு மீதமுள்ள சினைப்பை பகுதியில்  சின்னதாக கட்டி தோன்றலாம்.

கர்ப்பிணியின் முதல் செக்கப்பில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையில் தெரியும் இந்தக் கட்டி, பெரும்பாலும் முதல் டிரைமெஸ்டரிலேயே கரைந்துவிடும். அதனால், இந்தக் கட்டி குறித்து பயப்படத் தேவையில்லை. இரண்டாம் டிரைமெஸ்டரில் மீண்டும் ஒருமுறை  ஸ்கேன் செய்து இதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

 சினைப்பையில் ஏற்படும் மற்ற கட்டிகளும் ஆரம்பத்தில் எவ்வித அறிகுறியையும் வெளிக்காட்டுவதில்லை. ஸ்கேன் பரிசோதனையில் மட்டுமே அவை தெரியும் அல்லது போகப்போக அடிவயிறு பெரிதாகத் தெரியும்.

கட்டியானது கர்ப்பிணியின் சிறுநீர்ப்பையை அழுத்தும் என்பதால், கர்ப்பிணிக்கு அடிக்கடி சிறுநீர் கழியும். சிலருக்கு கட்டி திடீரென்று திருகிக்கொள்ளும். அப்போது வயிற்று வலி கடுமையாக இருக்கும். அந்த நிலைமையில் அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்ற வேண்டியது வரும்.

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

மறுக்க முடியாத உண்மைகள்!!!


மறுக்க முடியாத உண்மைகள்!!!

மருமகள் நைட்டி போட்டதால்
சண்டை வந்த வீடுகளில் எல்லாம்,
பேத்திகள் லெக்கிங்ஸ் போடுகிறார்கள்!

👄👩🏼👖👠👜

தான் செஞ்ச தவற்றைப்
பொண்டாட்டிகிட்ட மறைக்கிறவன்
சராசரி மனுஷன்;

தனக்கு ஒரு பொண்டாட்டி
இருக்கிறதையே மறைக்கிறவன்
பெரிய மனுஷன்!

😇🤡😇🤡

OMR -ல சம்பாதிக்கிறதை
ECR-ல செலவு பண்றாங்க!

🍿🥛🍻🥃

குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதைக் குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் பொம்மைகளை அழவிடுவது இல்லை!

😺😺😽👶

ஆண்களின் பெருங்குறைகளுள் ஒன்று...
'அன்பாக இருக்கத் தெரியும்;
ஆனால், யார் மீதெனத்
தேர்ந்தெடுக்கத் தெரியாது!’

😅😆🤠😆

ஒரு நடிகர் நாலு பொண்ணுங்களோடு ஆடினா, அது ‘ஓப்பனிங் சாங்’காம்.

அதே ஒரு நடிகை நாலு பசங்களோடு ஆடினா, அது ‘அயிட்டம் சாங்’காம்.

ஆணாதிக்கச் சமூகம்!

💃🏼👯‍♂🕺🏻👗

நம்மதான் விளம்பரம் போடுறப்பல்லாம் சேனலை மாத்திடுறோமே...
அப்புறம் ஏன் இவ்வளோ செலவு பண்ணி விளம்பரம் பண்றாங்க?

💿📽📡📽

முன்னர் எல்லாம் மழைக்காலம்
என ஒன்று இருந்தது.

இப்போது மழை நாட்கள் மட்டுமே!

⛈☔💦☔

Fact என்னன்னா,
88% மனைவிமார்களுக்குத்
தம் புருஷனோட ஃப்ரண்ட்ஸைப் பிடிக்காது.

ஆனா,  98% கணவன்மார்களுக்குத்
தம் மனைவியோட ஃப்ரண்ட்ஸை
ரொம்பப் பிடிக்கும்!

🤷🏼‍♀🏃🏼‍♀👨‍👦🏃🏼‍♀

ஆன்லைனால் மிச்சமான நம் நேரத்தை, ஆன்லைனிலேயே செலவழிக்கிறோம்!

💯🈁📶🔈

நம்ம வீட்ல 24 மணி நேரமும் டி.வி ஓடிட்டே இருந்தாலும் கண்டுக்காத நாமதான்,
சலூன்ல வாயைப் பிளந்துகொண்டு பார்த்துட்டு உட்கார்ந்திருக்கோம்!

💥🖥⚡💥

யாரும் இல்லாதபோதும்
குழந்தைகள் காதுக்குள் வந்தே
ரகசியங்கள் சொல்கிறார்கள்!

🤰🏼🙎🏼👨‍👩‍👦‍👦🙎🏼

நம் வீட்டைச் சேர்ந்த ஒருவர்
வெளியில் சென்றிருக்கும்போது
அவரை மொபைலில் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால்,
அவர் ஏதோ ஆபத்தில் இருப்பது போன்ற பிரமை வருகிறது.

📞📲📱

‘ஏன் எங்கிட்ட பேசல?’னு ஆரம்பிச்சு,
பேசாம இருந்ததுக்காகச் சண்டைபோட்டு,
அதுக்குத் தண்டனையா நம்மகூடப் பேசாம இருக்கப் பெண்களால் மட்டும்தான் முடியும்!

⛄😥⛄😥

ஒருகாலத்தில் நல்லா ஆங்கிலம் பேசறவங்களை வியந்து பார்த்த நாம,
இப்ப நல்லா தமிழ் பேசறவங்களை வியந்து பார்க்கிற நிலைமைக்கு ஆளாகிட்டோம்!!

🕺🏻🤹🏼‍♂🕺🏻🤹🏼‍♂

"அப்பாக்கிட்ட காசு இல்லம்மா"
எனும் சொல் கேட்டு
அழகாகத் தலையாட்டும் மகளின் புரிதல்,
தந்தைக்குச் சோகமயமானது!

💃🏼👫💃🏼👫

காசு கொடுத்துக் கடவுளைப் பார்த்து,
கடவுளுக்கும் காசு கொடுத்து,
கடைசியில கடவுள்கிட்டயே
காசு வேணும்னு கேட்கிறவன்தான் மனிதன்!

சனி, 27 ஜனவரி, 2018

ஆண்களை விட பெண்கள் அதிகம் தூங்க வேண்டும்.


ஆண்களை விட பெண்கள் அதிகம் தூங்க வேண்டும்...

அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது தூக்கம். ஆனால், அதிலும் பெண்களுக்குப் பாரபட்சம்தான். `ஆணைவிடப் பெண் ஒரு மணி நேரம் அதிகமாகத் தூங்க வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். `ஆணைவிட குறைந்தது இருபது நிமிடங்களாவது அதிக நேரம் தூங்க வேண்டும்’ என்று  ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. குறைந்தது ஓர் ஆண் ஆறு மணி நேரமும், பெண் ஏழு மணி நேரமும் தூங்க வேண்டும் என்பது பொதுவாக மருத்துவர்கள் தெரிவிக்கும் கருத்து. ஆண்களைவிடப் பெண்கள் அதிக நேரம் தூங்க வேண்டும்... ஏன்?

அவர்கள் ஒரேயொரு வேலையை மட்டும் பார்ப்பதில்லை. காலையிலிருந்து கொட்டிக்கிடக்கின்றன வீட்டு வேலைகள். வெளியே வேலைக்குச் செல்பவராக இருந்தால் வீடு, பணியிடம் என இரட்டைச் சுமை தலையில் விழுகிறது பெண்ணுக்கு. எல்லா வேலைகளையும் முடித்து உறங்கப் போவதற்கு குறைந்தது இரவு 11 மணியாவது ஆகிவிடுகிறது. மீண்டும் காலையில் ஐந்து மணிக்காவது எழுந்தால்தான் அன்றைய வீட்டுச் சக்கரத்தின் சீரான இயக்கத்தை ஆரம்பிக்க முடியும். குழந்தைகள், கணவர், வீட்டிலுள்ள பெரியவர்கள் அனைவருக்கும் அவரவருக்குத் தேவையானதைச் செய்து கொடுக்கமுடியும். இதில் சில பெண்கள், விதிவிலக்காக இருக்கலாம். பல பெண்கள் இதுபோன்ற வேலைகளோடு அனைவரிடமும் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே கண்டதையும் நினைத்து அதிகமாகச் சிந்திப்பார்கள். மூளைச் செயல்திறனை மீட்டுருவாக்கம் செய்ய அவர்கள் அதிக நேரம் தூங்கவேண்டியது அவசியமாகிறது.

அதிக நேரம் தூங்கலாம்தான். நேரம்? பெரும்பாலான பெண்கள் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் மட்டுமே உறங்குகின்றனர். நேரம் இருந்தும் தூக்கம் வராத, தூங்காத பெண்களும் இருக்கிறார்கள். `இப்படி மிகக் குறைவான நேரம் தூங்குவதால் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன’ என்கிறார்கள் மகளிர் நல மருத்துவர்கள்.



 *மூளைச் செயல்திறன் பாதிக்கும்!*

தேவையான நேரத்தைவிட குறைவாகத் தூங்கும்போது மூளையின் செயல்திறன் வெகுவாகப் பாதிக்கப்படும். மூளைச் செயல்திறனை மீட்டுருவாக்கம் செய்யப் போதுமான கால அவகாசம் வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடனும், உத்வேகத்துடன் செயல்பட முடியும். உறங்கும் நேரம் குறையும்போது, செயல்திறன் மங்கி அன்றாடச் செயல்பாடுகளில் கவனம் செலுத்த முடியாது. இந்த நிலை தொடர்ந்துகொண்டே இருந்தால், பல்வேறு நோய்களுக்கு அதுவே வழிவகுத்துவிடும்.

 *கர்ப்ப காலங்களில் பிரச்னைகளை உண்டாக்கும்!*

கருவில் இருக்கும் குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.

 *இரவில் வியர்வை!*

மெனோபாஸ் காலத்தில் இரவு நேரங்களில் அதிகமாக வியர்க்கும்.



 *மாதவிடாய்ச் சுழற்சி பாதிக்கும்!*

தூங்கும்போது அடிக்கடி விழிப்பது போன்ற பழக்கத்தால், 'ப்ரீமென்சுரல் சிண்ட்ரோம்' (Premenstural Syndrome) பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

 *ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம் (Restless Leg Syndrome)*

மாலை மற்றும் இரவு நேரங்களில் கால்கள் குடைய ஆரம்பிக்கும். அதிகமான வலி ஏற்பட்டு, கட்டுப்பாடில்லாமல் கால்கள் அசைய ஆரம்பிக்கும். இதற்கு 'ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்' என்று பெயர். ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இந்த பாதிப்பு ஏற்படும். ஆனால், பெண்களைத்தான் அதிகமாக இது பாதிக்கிறது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். இது, ஹார்மோன் மற்றும் நரம்புக் கோளாறுகளால்தான் ஏற்படுகிறது. அதற்கு அடிப்படைக் காரணமாக 'தூக்கம்' இருக்கிறது.


 *பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.,எஸ்.,):*

நம் நாட்டில் மூன்று பெண்களில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணம் தூக்கமின்மையும், குறைவான நேரத் தூக்கமும்தான். இந்தப் பாதிப்பு ஏற்பட்டால் ஆரம்பத்தில் ஒழுங்கற்ற மாதவிடாய், முடி கொட்டுதல், மனஅழுத்தத்துக்கு ஆளாகுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். கர்ப்ப காலத்தில் அதிகமான உடல்நலப் பிரச்னைகள் உண்டாகும். குழந்தையின்மை ஏற்படுவதற்கு இந்தக் குறைபாடும் ஒரு காரணம்.

 *செகண்டரி இன்சோம்னியா பாதிப்பு உண்டாகும்:*

தூக்கமின்மையை 'இன்சோம்னியா' என்று அழைப்போம். அதில் ஒருவகைதான் `செகண்டரி இன்சோம்னியா.’ இதனால், மனஅழுத்தம், மனப்பதற்றம் போன்றவை ஏற்படும். ஹார்மோன் சமநிலை பாதிக்கப்படும்.

இவை மட்டுமல்லாமல், பல்வேறு வகையான மனநலப் பாதிப்புகளும், டயப்பட்டீஸ், இதய பாதிப்புகளும் பெண்களுக்கு உண்டாகின்றன.


 *நல்ல தூக்கம் பெற என்ன செய்ய வேண்டும் ?*

எந்த நேரத்தில் எந்த வேலையைச் செய்து முடிக்க வேண்டும் என்று ஓர் அட்டவணையைத் தயார் செய்துகொள்ள வேண்டும். அதைப் பின்பற்றத் தொடங்கினாலே போதுமான அளவுக்குத் தூக்கத்துக்கான நேரத்தைப் பெற முடியும். விடுமுறை நாள்களில்கூட அந்த அட்டவணையைப் பின்பற்றிச் செயல்படுவது நல்லது.

👉தூங்குவதற்கு முன்னர் இளஞ் சூடான நீர்க் குளியல், சூடான பால் அருந்துதல் உதவும்.

👉ஒளி குறைவான விளக்குகளையே படுக்கையறையில் பயன்படுத்த வேண்டும்.

👉ஏ.சி-யோ, மின்விசிறியோ உங்கள் உடல் வெப்பநிலைக்கு ஏற்ற அளவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

👉நல்ல மெத்தை, தலையணை, மெத்தை விரிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

👉இரவு நேரத்தில் லேப்டாப், மொபைல்போனைத் தவிர்ப்பது நல்லது.

👉தூங்குவதற்கு முன்னர் தொலைக்காட்சிப் பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.

👉தினமும் காலையில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா செய்துவந்தாலும் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.

👉வீட்டில் உள்ள மற்றவர்களுடன் வேலைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

திங்கள், 22 ஜனவரி, 2018

ஜாலியா ஒரு பதிவு ஆனாலும் விஷயம் இருக்கு படியுங்க.. 40 வயதிற்கு மேல் பட்ட ஆண் பெண் உங்களுக்கு அவசியம்....



ஜாலியா ஒரு பதிவு ஆனாலும் விஷயம் இருக்கு படியுங்க.. 40 வயதிற்கு மேல் பட்ட ஆண் பெண் உங்களுக்கு அவசியம்....

உடலுறவு கொள்வதன் பயன் 40 வயதிற்கு மேல் பட்ட ஆண் பெண் உங்களுக்கு அவசியம்....

தினமும் தன் துணையுடன் உடல் உறவு கொண்டால் அது மன அழுத்தத்தைக் குறைக்கும், உடலுறவின் போது டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும்.

வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓர் மாதத்தில் 50 மைல்கள் ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகிங்கோ போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.

செக்ஸ் உறவு கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்கும், டயஸ்டாலிக் ப்ளட் பிரஷர் எனப்படும் இரத்த அழுத்த கீழ் லிமிட்டினை குறைக்க உதவும்.

சளி பிடிப்பதலிருந்து விடுவிக்கும், எதிர்ப்பு சக்தியை கூட்டும்

தினமும் செக்ஸ் உறவு கொள்பவர்களுக்கு அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருள் உடல் உறவு கொள்வதால் உடலில் சுரக்கும், இது சளிபிடிப்பதை எதிர்க்கும் ஆண்டிஜென் ஆகும், இதனால் சளிபிடிப்பது போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.

தினம் உடலுறவு கொள்வது உங்களை இளமையாக வைத்திருக்கும்.மேல்நாட்டவரின் 100% ரகசியம் இதுதான்.

ஆரோக்கியமான இதயம், அடிக்கடி உடலுறவு கொள்ளும் ஆண் பெண் இருவருக்கும்  இதய நோய் பாதிப்பு மற்றவர்களை விட 85% குறைவாக உள்ளதாம். மேலும் ஸ்ட்ரோக்கின் பாதிப்பும் 95% குறைவாக உள்ளதாம்

மைக்ரேன் தலைவலி, உடல் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டுமெனில் நல்ல உடலுறவு கொண்டால் போதும்.

மாதத்திற்கு 20 நாளுக்கு மேல் உடலுறவு கொள்ளும் ஆண் பெண் இருவருக்கும் 99% கேன்சர் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்.

அதிக உடல்உறவு கொல்லும் பெண்களுக்கு
1. இரத்த சோகை ( தலஸ்மியா)
2. கர்பபை புற்று
4. கர்பபை நீர் கட்டி ( பைப்ராய்ட் )
5.மூச்சடைப்பு
6. கை கால் மூட்டு வழி
7. வெள்ளை படுதல்
8. உடல் சோர்வு
9.கண்பார்வை குறைதல்
10. உடல் பருமன்

ஆகியவை அன்டாது. நமது இந்திய பெண்களில் 9% மட்டுமே 40 வயதை தான்டியும் 99 சதவிகித உடல் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் காரணம்? அவர்கள் 35 வயதுக்கு மேல் உடல்உறவில் ஆர்வம் கொல்வதில்லை.அதனால் உடல் புத்துணர்ச்சி பெறுவதில்லை. இந்த தகவலை வெளியட்ட ரஸ்ய கைனகோலைஜி ஆய்வாளர்களுக்கும் இதனை மொழி பெயர்த்து இணயத்தில் பதிவு செய்த நமது மகப்பேரு மருத்துவர் திருமதி கற்பகம் ஐயங்கார் அவர்களுக்கும் நன்றி.

உடல் உறவு என்பது வெறும் இச்சைக்காக அல்ல அது மருத்துவம் ஆகவே பெண்கள் ஆரோக்யமாக இருக்க உறவு கொள்ளுங்கள்  கனவறோடு அவருக்கும் இது மருத்துவமாகும். இல்லறமே நல்லறம்

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

தீட்டு என்பது



தீட்டு என்பது

தீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது. தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள்.

ஆண், பெண் கலந்தாலும் தீட்டு, குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு, பெண்கள் மாதவிடாயும் தீட்டு, இறந்தாலும் தீட்டு! இப்படிப் பார்த்தால்,தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே! அதனால் தான் இறந்த பிறகு உடலைப் பிணம் என்று பெயர் வைத்துப் பிணத்தைத் தொட்டால் தீட்டு என்பார்கள்.

தீட்டுடைய இந்த உடலை வைத்து, எப்படிக் கடவுளை வழிபட முடியும்? சிந்தித்துப் பாருங்கள். இதுவல்ல உண்மையான தீட்டு. இவை நாம் சுகாதாரமாய் இருப்பதற்கு இறைவனை பெயரைச் சொல்லி ஏற்படுத்திய ஒழுக்கங்கள். அப்பொழுது தான் பயபக்தியோடு சுத்தமாக இருப்போம் என்பதற்காகத்தான் இவற்றைச் சொன்னார்கள்.

தீட்டு என்பது வேறு, அவை காமம், குரோதம், லோபம், மதம், மாற்சரியம் என்னும் பஞ்சமா பாதங்கள்!

1. காமத் தீட்டு:

காமம் என்பது ஆசை. நாம் எந்தப்பொருள் மீதாகிலும் ஆசை வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுகின்றோம். நம் உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் மீதே ஞாபகமாக இருப்போம். அதற்காகவே முயற்சிச் செய்வதும், அலைவதுமாக இருப்போம். அந்தப் பொருள் கிடைத்து விட்டால், மனத்தில் சந்தோசம் உண்டாகும். இல்லையென்றால் மனத்தில் சதா வேதனை ஏற்படும். இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான், ஆசைக்கு அடிமை ஆகாதே, அதை தீண்டாதே என்றார்கள்.

2. குரோதத் தீட்டு:

குரோதம் என்பது கோபம். யாராக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால், முன்னே பின்னே பாராமல், தாய், தந்தையர், சகோதரர்கள், உறவினர்கள் என்றும் சிந்திக்காமல், கொடூரமாகப் பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாவதும் நேர்கின்றன. சிலர் கொலை செய்துவிட்டு ஆயுள்பூராகவும் துன்பம் அனுபவிப்பார்கள். சிலர் தூக்கில் இடப்படுவார்கள். கோபத்தைப்போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை. கோபத்தால் அழிந்தவர்கள் கோடான கோடிப்பேர்,

கோபம் எழும் பொழுது நம் உடலில் உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள் செத்து மடிகின்றன. ஆயுளும் குறைந்து விடுகிறது. கோபத்தால் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள். இவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பர். குரோதம் என்னும் கோபமே இரண்டாவது தீட்டு.

3. லோபத் தீட்டு:

லோபம் என்பது சுயநலம், பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும், இரக்கம் என்பதே இல்லாமலும், சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்துவைத்து அழகு பார்ப்பதும், கஞ்சத்தனமும், எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும், தீய வழியில் பொருள்களைச் சம்பாதிக்கக் கூடிய நோக்கமும், வஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழ நினைக்கும் குணமும், எப்பொழுதும் தன் பொருள்களைப் பற்றுடன் பாதுகாப்பதும் எல்லாம் சுயநல வேகமே. இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. அதனால் தான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பார்கள் இது லோபம் என்னும் மூன்றாவது தீட்டு.

4. மதத் தீட்டு:

மதம் என்பது கர்வம் (ஆணவம்) ஒருவரையும் மதிக்காது மனதையோடு இருப்பது இது. எதையும் தானே சாதிக்க முடியும் என்ற கர்வமும் இது. தான் என்னும் அகந்தையால் திமிர் பிடித்து அலைவதும் இது. ஆணவ நெறியால் யாவரையும் துன்பப் படுத்தித் தான் மகிழ்ச்சி அடைவதும் இது. இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால் தான் கர்வத்திற்கு அடிமை ஆகாதே என்பர். அதைத் தீண்டாதே என்பர். கர்வமாகிய மதமே நான்காவது தீட்டு.

5. மாற்சரியத் தீட்டு:

மாற்சரியம் என்பது பொறாமை. பிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் வேதனைப்படுவது இது. எந்த நேரமும் நாம் நல்லபடியில்லையே என்று தன்னையே நொந்து கொள்வதும் இது. எல்லாரும் சுகமாக இருக்கின்றார்களே, இவர்கள் எப்பொழுது கஷ்டப் படுவார்கள், எப்பொழுது செத்துப் போவார்கள் என்பதும் இது.

தான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும் சாகக் கூடாது என்பதே இவர்கள் எண்ணம். பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள். தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள். இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால் தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றனர். இதுதான் ஐந்தாவது தீட்டு.

இவை ஐந்தும் மாபெரும் தீட்டுகள். இந்தத் தீட்டுக்களையுடைவர்கள் இறைவனை வழிபட முடியாது. இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது. இறைவனோ நம் உள்ளத்திலேயே உறைந்திருக்கிறான். நம் உடலில் இருக்கும் சத்துபோய்விட்டால், பிணம்தான். (இதைத்தான் செத்துப் போய்விட்டான் என்பது) பிணம் ஆனபிறகு இறைவனை அடையமுடியாது.

சிவலோகப் பதவி, வைகுண்டப் பதவி என்பதெல்லாம் உடலுக்கு இல்லை. பிணத்தைச் சுடுகாட்டில் அடக்கம் செய்வார்கள். உயிர் எங்கு சென்றது என்பதே யாருக்குமே தெரியாது. சத்து என்னும் உயிரே இறைவன் இதை உணர்ந்து உண்மையைக் தெரிந்து கொண்டால், எல்லாம் நமக்குப் புரியும். அறிவால் உயர்ந்து, அன்பால் தழைத்தால், அருள் தானே நம்மை வந்தடையும்.

சனி, 20 ஜனவரி, 2018

நம் பாரம்பரியத்தை தொலைத்து விட்டோம்.


நம் பாரம்பரியத்தை தொலைத்து விட்டோம்.

இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம் சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன் நாங்களும் மாறினோம் இன்று அதையே barbecue என்று kfc , Macdonald இல் விக்கிறான்.


உப்பு + கரியில் பல் தேய்த்தோம் பற்பசையை அறிமுகப் படுத்தினான் இப்போது உங்கள் toothpaste இல் salt + charcoal இருக்கா என்று கேட்கிறான்.

மண்பானை , மண்சட்டியில் சமைத்தோம் உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான் இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் star hotel களில் விக்கிறான் .

நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம் ஜேர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான் இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் sperm ஏற்றுமதி செய்கிறான்.

இளநீர் , பதனீரைப் பருகினோம் coke pepsi ஐ கொண்டு வந்தான் இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.

Corporate company களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த முட்டாள் இனம் நாமாகத் தானிருப்போம்.

நாகரீகப் போர்வையில் நானும் இதே தவறைச் செய்கிறேன் என்பது தான் கசப்பான உண்மை.

வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,
அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம், ஆடு போட்ட புலுக்கையை அ ள்ளி காடு வளர்த்தோம், காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியைவிட்டோம்,வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில நேர்ந்துவிட்டோம், நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம், திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம், உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.
பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.
இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிது.

நம் பாரம்பரியத்தை தொலைத்து விட்டோம்.

வியாழன், 18 ஜனவரி, 2018

தீர்க சுமங்கலி பவா என்றல் என்ன? - அறிந்துகொள்ளுங்கள் ..


தீர்க சுமங்கலி பவா என்றல் என்ன?  -  அறிந்துகொள்ளுங்கள் ..

🌼 தீர்க சுமங்கலி பவா ...! என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.
🌼 திருமணத்தில் ஒன்று,
🌼 60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,
🌼 70 வயது பீமரத சாந்தியில் ஒன்று,
🌼 80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று,
🌼 96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று!.
#இவைகள்_பற்றி_ஒரு_சிறு_விளக்கம் ;
🌼 ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.
🌼 பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது.
🌼 இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன.
🌼 சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.
🌼 உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம்மகிழும்.
🌼 நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.
🌼 பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
🌼 இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு ⚜சூரியனுக்கு ஓர் ஆண்டும்,
⚜செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும், ⚜சந்திரனுக்கு ஒரு மாதமும்,
⚜புதனுக்கு ஒரு வருடமும்,
⚜வியாழனுக்கு 12 வருடங்களும்,
⚜வெள்ளிக்கு ஒரு வருடமும்,
⚜சனி பகவானுக்கு 30 வருடங்களும், ⚜ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும், ⚜கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன.
🌼 இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும்.
🌼 மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.
🌼 ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.
🌼 பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும்.
🌼 அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது.
🌼 பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.
🌼 அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன?
🌼 தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம்.
🌼 இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய...
⚜அக்னி,
⚜சூரியன்,
⚜சந்திரன்,
⚜வாயு,
⚜வருணன்,
⚜அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை,
⚜அமிர்த கடேஸ்வரர்,
⚜நவநாயகர்கள்..
சேர்த்து குறிப்பதற்காகத்தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம்.
🌼 பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,
🌼 சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,
🌼 ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,
🌼 பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும்..
அதிபதிகள் ஆவார்கள்.
🌼 தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும்.
🌼 தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.
🌼 தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள்.
🌼 காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.
🌼 70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும்.
🌼 ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.
🌼 அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.
🌼 இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்
🌼 இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு 96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது .

இலக்கிய பெண்களும் இன்றைய பெண்களும்..



இலக்கிய பெண்களும் இன்றைய பெண்களும்..

*காலங்களில் அவள் வசந்தம்கலைகளிலே அவள் ஓவியம்மாதங்களில் அவள் மார்கழிமலர்களிலே அவள் மல்லிகை'இப்படி 'அவள்' என்று கவிஞர் கண்ணதாசன் குறிப்பிடுவது பெண்ணைத் தான்.*

வீட்டைத் துாய்மையாக வைத்து, வாயில் முற்றத்தில் கோலம் இட்டு, நிலையில் மாவிலைத் தோரணம் கட்டி, நிலையின் நடுவே குங்குமம் தடவி, நடையில் விளக்கு ஏற்றி வைப்பதும், சாமி படங்களுக்கு மலர்மாலை சூட்டுவதும் மங்கலம் என்று பொதுவாகச் சொல்வர்.ஆனால் வள்ளுவர் சொல்லும் மங்கலம் வேறு.
'மங்கலம் என்ப மனைசாட்சி மற்று அதன்நல்கலம் நன்மக்கட் பேறு'
- என்ற குறளில் மங்கலம் என்று கூறுவது பெண்ணைத்தான். இன்னும் சிறப்பாக சொல்லப் போனால் பண்பும், பரிவும், பாங்கு கொண்ட சிறந்த மனைவியையே அவர் மங்கலம் என்று சொல்கிறார்.
பெண்களின் உயரிய வடிவங்கள் : பண்டைய காலத்தில் பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நால்வகை வடிவங்களாக வாழ்ந்து பண்டைத் தமிழ் மரபைப் போற்றியும், காத்தும் வந்திருக்கின்றார்கள். குடும்ப வாழ்வாம் இல்லற நெறியை சிரம் மேற்கொண்டு பின்பற்றி வந்திருக்கிறார்கள்.
'நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்றுநீரினும் ஆரளவு இன்றே'
இந்த வரிகள் ஒரு பெண் தன் தலைவன் மீது கொண்டுள்ள அளவில்லா அன்பையும், நட்பையும் காட்டுகிறது. இங்கு பெண் அன்பின் வடிவம்.
'தேன் மயங்குபாலினும் இனியஅவர்நாட்டு உவலைக் கூவற்கீழமானுண்டு எஞ்சிய கலுழி நீரே'
என்ற வரிகள் உயிர்களுக்கு அறம் செய்ய வேண்டும் என்று ஒரு பெண் உணர்ந்து கொண்டதைக் காட்டுகிறது. அது மட்டுமல்லாமல் புகுந்த வீட்டு மாண்பை போற்றும் வகையில் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த ஒரு பெண்ணின் ஒழுக்கத்தை காட்டுகிறது. இங்கு பெண் நல்லறத்தின் வடிவம்.
விருந்தினர் உபசரிப்பு :
விருந்து எதிர் கொள்ளவும் பொய்ச்சூள் அங்சவும் அரும் பெறற் புதல்வனை முயங்கக் காணவும்ஆங்கவித்து ஒழியும் என் புலவி
(கலித்தொகை 75) என்ற வரிகள் கணவரோடு தேரில் வரும் விருந்தினரை தலைவி எதிர்கொள்வதாக காட்டப்படுகிறது. விருந்தினர்களை உபசரிப்பதை தன் கடமையாகக் கொண்டிருப்பதால் இங்குப் பெண் பண்பாட்டின் மகுடம்.
சிறுவர்ப் பயந்த செம்மலலோர் எனப்பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்வாயே ஆகுதல் வாய்த்தனம் (அகம் )
என்ற வரிகள் நன்மக்கட் பேறு பெற்றதன் மாண்பைக் பெற்றதாக தலைவி மனநிறைவு கொள்வதை காட்டுகிறது. இங்கு பெண் மக்களோடு மகிழ்ந்து மனையறம் காக்கும் இல்லநெறியின் வடிவம். இவற்றைப் போல் இன்னும் பல உயரிய வடிவங்களாக பெண்கள் வாழ்ந்து காட்டிஇருக்கிறார்கள்.
பெண் வாழ்க்கை ஒரு தவம் : இப்போதும் இன்றைய பெண்களுக்குள் இந்த வடிவங்கள் மறைந்து கொண்டிருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும். பெண்களை சுற்றியிருப்போர் வாய்ப்புகளை வழங்கினால் வடிவங்கள் வெளித் தோன்றும். சமுதாயத்தில், குடும்பத்தில் எழும் பிரச்னைகள், பெண்களை வளரவிடாமல் தடுத்துக் கொண்டே இருக்கின்றன.
'பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்சால மிகுத்துப் பெயின்'
- என்று வள்ளுவர் கூறுகிறார். மயில் தோகை லேசானது தானே, மென்மையானது தானே என்று ஏற்றிக் கொண்டே போனால், அச்சாணி முறிந்து வண்டியும் சாய்ந்து கீழே விழுந்துவிடும். பிரச்னையும் சிறிது தானே என்று பெண்மைக் குணம் படைத்த பெண்ணின் மீது பிரச்னைகளை ஏற்றிக் கொண்டே போனால் எவ்வளவு தான் இன்றைய பெண்கள் தாங்குவாள்.
சாதுமிரண்டால்...
இன்பம் மட்டும் கணவன் - மனைவிக்கு உரியதல்ல. துன்பமும் கணவன் - மனைவிக்கு உரியது என்று எண்ணிக்கொண்டு குடும்பத்தை வழிநடத்தினால் மலை போன்ற துன்பமும் பெண்ணுக்குப் பனி போல விலகும்.
'இன்ப துன்பம் எது வந்தாலும்எனக்கு நீங்கள் உலகம்'
- என்று கண்ணதாசன் பாடுவது போல் இன்றைய பெண்கள் கணவரை மதிக்கத் தொடங்கிவிட்டால் வருகின்ற துன்பம் எல்லாம் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போகும்.எப்போதும் கணவன் - குடும்பம் நல்வாழ்வு என்ற ஒரே நினைப்பு தான் பெண்ணுக்கு. இது அவள் வாழ்க்கையை ஞானிகள் செய்யும் தவத்திற்கு சமமாக செய்து விடும். அவள் சாதாரணப் பெண்ணாக இருக்கலாம். அவளுடைய ஆற்றல் பெரிது. குடும்பத்திற்காக உழைத்து உழைத்து ஓடாய் போயிருக்கலாம். அவள் உயிரில் ஏறியிருக்கும் சக்தி பெரியது. அது அவளுக்கே தெரியாது.'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பார்கள். ஏதேனும் ஒரு நெருக்கடி தோன்றி அடக்கமாக உள்ள அவள் உணர்ச்சி, எழுச்சி பெறுமானால் அவள் எண்ணியது நடக்கும். இது இன்றைய பெண்களின் உணர்வுக் கோட்பாடு.
சம்சாரம் என்பது வீணை : இன்றைய பெண்கள், அனுபவங்களை பாடங்களாக்கிப் படித்துக் கொண்டே வந்தால், ஒரு சமுதாயத்தையே தன் அறிவால் புரட்டிப் போடுகின்ற சக்தியை பெறுவாள் என்பது நிச்சயம்.
சம்சாரம் என்பது வீணைசந்தோஷம் என்பது ராகம்சலனங்கள் அதில் இல்லைமணம் குணம் ஒன்றான முல்லை.
வாழ்க்கை என்ற இசையின் ஆதார சுருதி. அடிநாதம் பெண்கள் தாம். அந்த பெண்ணை மயங்க வைப்பது மட்டுமல்லாமல் மணக்க வைப்பதும் ஆண்களின் கடமை. பெண்களுக்கு வரும் சோதனைகளை சாதனைகளாக்குவது பிள்ளைகளின் கடமை.

இப்படி ஒவ்வொருவருக்கும் இன்றைய பெண்களுக்கு உறுதுணையாக இருந்தால், ஒவ்வொரு இன்றைய பெண்ணும் இலக்கியப் பெண் தான்.

விரைவில் திருமணம் நடைபெற திருமணத் தடை நீங்க...


விரைவில் திருமணம் நடைபெற திருமணத் தடை நீங்க...

வளர்பிறையில் வியாழக்கிழமை அன்று புது காட்டன் சிகப்புப் புடவை வாங்கி அதைத் திரி போல் கத்தரித்துக் கொஞ்சம் ஜவ்வாது தடவி வைத்துக் கொள்ளவும்.

அடுத்த நாளான வளர்பிறை வெள்ளிக்கிழமை அதிகாலையில் சுக்ர ஹோரையில் அந்தத் திரியால் விளக்கேற்றி அம்பாளை அர்ச்சித்து மந்திரம் ஜெபித்து வழிபட்டு வரவும்.

முதல் நாள் மட்டும் சுக்ர ஹோரையில் விளக்கேற்றவும்.மற்ற நாட்களில் வழக்கமாக விளக்கேற்றும் நேரங்களில் விளக்கேற்றி வழிபட்டு வரவும்.

விளக்கில் எண்ணெய் ஊற்றும் அகலில் ஒரு சிறு கல்கண்டு ஒன்றைப் போட்டு வைக்கவும்.

விளக்கைக் குளிர வைத்த பின்னர் விளக்குத் திரியில் உள்ள கருக்கை எடுத்து நெற்றியில் வைத்து வரலாம் அல்லது தலையில் தடவிக் கொள்ளவும்.

இதைத் தொடர்ந்து செய்து வரத் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

ஆரத்தி காட்டும் விதம்


ஆரத்தி காட்டும் விதம்

வீட்டில் விளக்கேற்றி பாடல்கள் ஸ்லோகங்கள் சொல்ல வேண்டும். அது முடிந்ததும், கற்பூர ஆரத்தி அல்லது தீப ஆரத்தி காண்பிக்க வேண்டும்.

 இறைவனுக்குரிய உபசாரங்களில் விசேஷமானது இது. வழிபாடு செய்பவர் வலக்கையால் ஆரத்தி தட்டினை எடுத்துக் கொண்டு பூஜிக்கும் தெய்வத்தின் அங்கம் முழுவதும் தீபஒளி படருமாறு காண்பிக்க வேண்டும்.

இதனை பிரணவ மந்திரமான "ஓம்' வடிவில் மூன்று முறை சுற்றும்படி ஆகம சாஸ்திரம் கூறுகிறது.

 சில ஆகமங்களில் சுவாமியின் பாதத்தில் நான்கு முறையும், வயிற்றுப்பகுதியில் இருமுறையும், முகத்திற்கு நேராக ஒருமுறையும் சுற்றிய பின், இறுதியில் சுவாமியை முழுவதுமாக மூன்று முறை சுற்றிக் காட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

புதன், 17 ஜனவரி, 2018

முதல் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது இரண்டாவதாக கருவுற்றால் என்னென்ன பிரச்சனைகள்?




முதல் குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது இரண்டாவதாக கருவுற்றால் என்னென்ன பிரச்சனைகள்?

கர்ப்பமாக இருக்கும் போது எல்லாம் பெண்களுக்கும் அவர்களை சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்கும் பல்வேறு விதமான சந்தேகங்கள் எழுந்து கொண்டேயிருக்கும். இதைச் செய்யலாமா கூடாதா? இவற்றையெல்லாம் மருத்துவரிடம் எப்படி கேட்பது என்ற தவிப்பில் மனம் நிலை கொள்ளாது இருப்பவர்கள் உங்களுடைய சந்தேக கேள்விகளை எங்களுக்கு அனுப்பலாம்.

இப்போது இரண்டாவது குழந்தை கருத்தரிக்கும் பெண்களுக்காக இந்தக் கட்டுரை...

முதல் குழந்தை தாய்ப்பால் குடித்துக் கொண்டிருக்கும் போது கருவுறலாமா? அப்படி கருவுற்றால் தாய்ப்பால் குடித்துக் கொண்டிருக்கும் முதல் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்புகள் வருமா என்பது குறித்து பார்க்கலாம்.

பழமை காலத்திலிருந்து தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கருத்தரிக்க கூடாது அப்படி தரித்தால் முதல் குழந்தைக்கு தாய்ப்பால் கிடைக்காது என்பார்கள். அதை நம்பி இரண்டாவது குழந்தை குறித்த பயம் எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்.

தாய்ப்பால் கொடுப்பது உங்களுடைய ஓவலூசனை தாமதப்படுத்துமே ஒழிய கர்பத்தை தடுக்காது. பலரும் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருப்பதால் கர்ப்பமடைய் மாட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதுவும் தொடர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மாதவிடாய் உதிரப்போக்கு சில சமயங்களில் முறையற்று இருக்கும். மாதவிடாய் முறையற்று இருக்குமென்பதால் தாய்பால் கொடுக்கும் காலங்களில் தாங்கள் கர்ப்பமடைய மாட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தவறானது.


தாய்ப்பால் சுரப்பதற்கு முக்கிய காரணியாக இருப்பது ப்ரோலாக்டீன் தான். இவை உங்களுடைய இனப்பெருக்க ஹார்மோன்களுக்கு அடிப்படையாய் விளங்குகிறது. இந்த ப்ரோலாக்டீன் அதிகமாக இருந்தால் உடலில் மலட்டுத் தன்மையை அதிகரிக்கும்.
ஏனென்றால் இந்த ப்ரோலாக்டீன் உங்களது மாதவிடாயை முறையற்று ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது.

பொதுவாகப்பார்த்தால்.... உங்களுக்கு மாதவிடாய் சீரானதும் வழக்கம் போல ஒரு மாத இடைவெளியில் மாதவிடாய் வரத்துவங்கியதும் நீங்கள் கர்ப்பமடைவது தான் உங்களுக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பானது ஆரோக்கியமானதும் கூட தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இரண்டாவது குழந்தை கருத்தரிக்கும் முன்னர் இதை மட்டுமாவது உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஏனென்றால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ஆக்ஸிடாசின் என்ற ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன் உங்கள் கருப்பையில் கரு உருவாவதை, வளர்வதை தடுத்திடும். இந்த ஹார்மோனால் கருவிற்கு பாதிப்புகள் உண்டு.
இப்படி ஆக்ஸிடாசினால் கருவின் வளர்ச்சியில் சிக்கல் இருக்கிறது என்பதை கர்ப்பமடைந்து 24வது வாரத்தில் தான் கணிக்க முடியும்.

இதனால் ஓர் குழந்தை தொடர்ந்து தாய்ப்பால் குடிக்கும் போது உங்களுக்கு மாதவிடாய் இன்னும் சரியாகாத நேரத்தில் இரண்டாவது குழந்தை கருத்தரிக்க வேண்டாம்.

உங்களுடைய மாதவிடாயை மட்டும் கணக்கிடுங்கள். அதோடு உங்களுடைய உடல் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள் மாதவிடாய் சீராகிவிட்டது, பழைய உடல் ஆரோக்கியத்திற்கு திரும்பி விட்டேன் என்றால் நீங்கள் தாராளமாக இரண்டாவது குழந்தை கருத்தரிக்கலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் இளம்தாய்மார்கள் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்.
உங்கள் மார்பகங்கள் தான் உங்களது முதல் அடையாளம். ஏற்கனவே ஒரு குழந்தைப் பெற்று தளர்ந்து போய் இருக்கும் உங்கள் மார்பகத்தில் சில மாற்றங்கள் தெரியும். சில நேரத்தில் தளர்ந்திருக்கும் மார்பகம் கட்டியாவதை உணர்வீர்கள்.

தாய்ப்பால் உற்பத்தியாவதற்கு ஏதுவாக தளர்ந்திருக்கும் மார்பகங்கள் மீண்டும் கருத்தரிக்கும் போது சில மாற்றங்களை சந்திக்கும். அதோடு நம் உடலில் கரு உருவாகக்கூடிய ஹார்மோன் அதிகரிக்கும்போது தாய்ப்பால் உற்பத்தியாகிற அளவு குறைய ஆரம்பிக்கும்
இதனால் முதல் குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்காது. முதல் குழந்தைக்கு பிறந்து தாய்ப்பால் மட்டுமே குடிக்கிற மாதமே ஆகியிருக்கிறது என்றால் இது பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.

ஞாயிறு, 14 ஜனவரி, 2018

கரும்பு !!! ஒரு இனிப்பான வரலாறு...


கரும்பு !!! ஒரு இனிப்பான வரலாறு...

"கரும்பு தின்ன கூலி வேண்டுமா?" என்பது பழமொழி. கரும்பு என்றாலே தைப்பொங்கல்தான் நம் நினைவுக்கு வரும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கரும்பு பற்றிய சுவையான சில தகவல்களைப் பார்ப்போம்.

தோற்றம்

சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் தென் பசிபிக் தீவுகளில் கரும்பு முதல் முறையாக பயிரிடப்பட்டது. கி.மு.500-ம் ஆண்டு இந்தியாவில் சீனி தயாரிக்க ஆரம்பித்தனர். இது கி.மு.100ல் சீனாவுக்கும் பரவியது. பிரேசில், இந்தியா, சீனா, கியூபா ஆகிய நாடுகள் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட கரும்பை உற்பத்தி செய்கின்றன. கரும்பு தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சீனி கரும்பிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது.

தமிழர் பண்பாட்டில் கரும்பு

கரும்பென்றால் இனிப்பு, இன்பம் என்று சொல்வார்கள். அதனால்தான், தைப் பொங்கல் அன்று கரும்பை முக்கிய உணவாக வைத்து கொண்டாடுகின்றனர். கரும்பு, அதியமானின் முன்னோரால் கொண்டு வரப்பட்டது என்றார் அவ்வையார். அத்தகைய சிறப்பு வாய்ந்தது கரும்பு.

கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள்

வெல்லம், பழுப்புச் சர்க்கரை, சீனி, கற்கண்டு போன்றவை கரும்பில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.

கரும்பின் மருத்துவக் குணங்கள்

* மஞ்சள் காமாலை

கரும்பு சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. மஞ்சள் காமாலையிலிருந்து உடனே குணமாவதற்கு, இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.

* தொற்றுநோய்கள்

உடலில் உள்ள சிறுநீரக குழாய், பிறப்புறுப்பு, செரிமான மண்டலக் குழாய் போன்ற பல இடங்களில் தொற்று நோய்களினால் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும். இத்தகையவற்றை சரிசெய்ய ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால், அவை சரியாகிவிடும்.

* சிறுநீரக கற்கள்

கரும்பின் நன்மைகளிலேயே முக்கியமான ஒன்று என்றால் அது சிறுநீரக கற்களை குணமாக்குவது தான். பொதுவாக இந்த கற்கள் உடலில் ஏற்படும் வறட்சியினால் ஏற்படும். அதற்காகத் தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தண்ணீர் மட்டுமின்றி, கரும்பு சாற்றையும் குடித்தால், அந்த கற்கள் எளிதில் உடைந்து கரைந்துவிடும்.

* நீரிழிவுக்கு கரும்பு

இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் இதில் இருக்கும் இனிப்பானது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்கும். எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை எந்த ஒரு அச்சமுமின்றி சாப்பிடலாம்.

* ஊட்டச்சத்துக்கள்

கரும்பில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதிலும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், உடலில் எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாடுமின்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்

* சளி, இருமல் மற்றும் தொண்டை வலி

நிறைய பேர் இருமல், சளி அல்லது தொண்டை வலி இருந்தால், கரும்பை நிச்சயம் சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் அந்த மாதிரியான எண்ணம் தவறானது. இந்த மாதிரியான பிரச்சனைக்கு சிறந்தது என்று சொன்னால், அது கரும்பு தான்.

* புற்றுநோய்

கரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள், புற்றுநோயை குணப்படுதவலது...

"தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் " என்று முழங்கிய எழுவரை நினைவு கூறுவோம்!



"தை முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம் " என்று முழங்கிய எழுவரை நினைவு கூறுவோம்!

1921ஆம்ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலையடிகள் தலைமையில் பேராசிரியர் கா.நமச்சிவாயர் முன்னிலையில் தமிழாண்டு தீர்மானிப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் திருவள்ளுவராண்டை  தொடக்கமாகக் கொண்டு தை முதல் நாளில் தமிழாண்டுத் தொடக்கம் என்பதை தமிழர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும், திருவள்ளுவராண்டுத் தொடக்கம் கி.மு.  31 என்பதால் தமிழாண்டின் தொடக்க மாதம் தை என்றும், அதன் முடிவு மாதம் மார்கழி என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த முடிவானது கீழ்க்கண்ட தமிழறிஞர்கள் முன்னிலையில் தீர்மானிக்கப்பட்டது.
1.மறைமலையடிகள்
2.பேரா.கா.நமச்சிவாயர்
3.தமிழ்த் தென்றல் திரு.வி.க.
4. தமிழ்க் காவலர் கா.சுப்பிரமணியர்
5. நாவலர் வேங்கடசாமி நாட்டார்
6. நாவலர் சோமசுந்தர பாரதியார்
7. சைவப் பெரியார் சச்சிதானந்தம்

இக் கருத்தரங்கத்திற்கு 500க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் கலந்து கொண்டு ஏற்பிசைவு வழங்கினர்.

இந்த முடிவை 18.1.1935ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை தாங்கிய தமிழ்க்கடல் மறைமலையடிகள் மேலும் உறுதிப்படுத்தினார். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்து ஆண்டுடன் 31 கூட்டல் வேண்டும் என்று கூறி, திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார். (1935+31=1966). அதை அறிஞர் அவை ஏற்றுக் கொண்டது. அன்று தொட்டு அறிஞர்களால் அவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
( பக்கம் 117, திருவள்ளுவர் நினைவு மலர் 1935)

 திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.  தற்போது பிறக்கும் திருவள்ளுவர் ஆண்டு 2049. ( 2018+31=2049)

திருவள்ளுவர் ஆண்டு முறையை பின்பற்றுவோம்!
நாம் தமிழர் என்று நிலை நாட்டுவோம்!

திருவள்ளுவர் ஆண்டை உலகில்  வாழும் தமிழர்களுக்கு அறிவித்த ஏழு தமிழறிஞர்களை இந்த தமிழர் திருநாளில்  நினைவு கூறுவோம...

கரும்பு தின்றதும் தண்ணீர் குடிக்கக் கூடாது....ஏன் தெரியுமா?



கரும்பு தின்றதும் தண்ணீர் குடிக்கக் கூடாது....ஏன் தெரியுமா?

பொங்கல் பண்டிகை முடிந்து  மறுநாள் தங்கள் குழந்தைகளின் வாய் வெந்திருப்பதைக் கண்டு  பதறி,டாக்டரிடம் அழைத்துச் செல்லும் பெற்றோர்களை மாநகரங்களிலும் சிறு நகரங்களிலும் பார்க்கலாம்.
காரணம்,அந்தப் பிள்ளைகள் கரும்புத் தின்ற உடனேயே தண்ணீர் குடித்திருப்பார்கள். அதன்காரணமாக,வாய் முழுக்க நமைச்சல் எடுக்கும் சிறு கொப்புளங்கள் தோன்றியிருக்கும். கரும்பு தின்ற உடன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பது அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். அதனால் தங்கள் குழந்தைகளை எச்சரிக்கை செய்யமுடியாமல் போய்விடும்.
ஆனால் பெரும்பாலான ,கிராமப்புறங்களில் இந்த அவதிகள் கிடையாது. அங்கு பெரியவர்கள்,கரும்பு தின்னும் குழந்தைகளிடம்,'எலெ,தண்ணீய குடிச்சுடாதே..வாய் வெந்துடும்'என்று தொடர்ந்து எச்சரிக்கை செய்துக் கொண்டே இருப்பார்கள்.

கரும்பை கடித்து சுவைத்து முடித்தபிறகு மெலிதாக தாகம் எடுக்கும். உடனே தண்ணீரை மொண்டு மடக்மடக் ஏன்று குடித்துவிடாதீர்கள். அப்படி செய்தால்,வாய் வெந்துவிடும்.
 கரும்பு சாப்பிட்டு முடித்து பதினைந்து நிமிடங்கள் கழிந்தப் பிறகே தண்ணீர் அருந்த வேண்டும். ஏன் தண்ணீர் குடித்தால் வாய் வேகிறது. "கரும்பில் சுண்ணாம்பு சத்து எனப்படக்கூடிய கால்சியம் அதிகம் இருக்கிறது. இந்த சுண்ணாம்பும் எச்சிலும் இணைந்து வேதிவினையாற்றுகிறது.
அந்த சமயத்தில்,தண்ணீர் குடிக்கும்போது அதிகமான சூட்டைக் கிளப்பும் எதிர்வினை நடக்கிறது.இதனால்,நாக்கு வெந்து விடுகிறது. கொஞ்சம் இடைவெளிவிட்டு தண்ணீர் அருந்துவதால் இந்த பாதிப்பு வருவதில்லை"என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே,இந்த சிறு விழிப்புணர்வுடன் நாம் பொங்கலைக் கொண்டாடுவோம்.

வெள்ளி, 12 ஜனவரி, 2018

யார்? பேரழகி..


யார்? பேரழகி..

ஒரு குழந்தை தெருவில் தனியாக
அழுதுகொண்டு நின்றது,
அதைப் பார்த்தவர்கள்
குழந்தையிடம் வந்து ''ஏன் அழுகிறாய் ''என்று கேட்டனர்,என் அம்மாவை காணவில்லை என்றது,அவர்கள் அனைவரும் உன் அம்மா எப்படி இருப்பாள் என்றார்கள். 'அதற்கு அந்த குழந்தை 'என் அம்மா அழகாக இருப்பார்கள் ''என்றது.இதை அனைவரும் அந்த நாட்டின் மன்னனிடம் கூறினார்கள்.

அப்போது மன்னர் அந்த ஊரில் உள்ள அனைத்து அழகான பெண்களையும் வர சொல்லி அந்த குழந்தையிடம் காட்டினார். அவர்கள் அனைவரையும் பார்த்து விட்டு இவர்கள் எல்லாரையும் விட என் அம்மா அழகாக இருப்பாள் என்றது.

அந்த ஊரிலே மிகவும் அழகானவள் ராணி தான். அதனால் ராணியையும் அழைத்து வந்தார்கள். ராணி அழகாக அலங்காரம் செய்திருந்தாள்.அனைத்து மக்களும் ராணியையே கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தார்கள்.

அந்த குழந்தை என் அம்மா இவர்களை விடவும் அழகாக இருப்பார்கள் என்றது. அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். அந்த குழந்தையின் அம்மாவை பார்க்க அனைவரும் ஆவலோடு காத்திருந்தனர்.

அப்போது அங்கே ஒரு பெண் மிகவும் கருத்த நிறத்துடன் சுருங்கிய தோல்களுடனும் பார்ப்பதற்க்கே அவலட்சனத்துடன் வந்தாள்

.அப்போது அந்த குழந்தை ''அம்மா ''என்று கூறி ஓடி போய் அவளை கட்டி கொண்டு இவள் தான் என் அம்மா என்றது.

அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
 அனைத்து குழந்தைகளுக்கும் தன் அம்மா எப்படி இருந்தாலும்

அவர்களுக்கு அவள் பேரழகு தான் .............!!

தை பிறப்பின் சிறப்பு



தை பிறப்பின் சிறப்பு

தை மாதம் என்பது சக்தி வாய்ந்தது. இதனை மகர மாதம் என்றும் அழைப்பார்கள். மகரத்திற்குள் சூரியன் நுழைவதே மகர மாதம். ஜோதிடத்தில் பார்க்கும் போது. .பூமியை இரண்டாகப் பிரிப்பது போல் ஆகாயத்தை இரண்டாக பிரிப்பார்கள். அதை சூரியன் பகுதி, சந்திரன் பகுதி என்றும் கூறுவதுண்டு.

அதில் மகரத்தில் இருந்து கடகம் வரை சந்திரனுடைய பகுதிக்குள் வரும், அவைகள் சந்திராதிக்கத்திற்குரியன. இந்த மாதத்தில் இருந்து சூரியன் பகுதி துவங்குகிறது. இந்த மாதத்தில் சூரியப் பகுதி வலிமையடைகிறது.

அதாவது உத்திரயாணப் புண்ணிய காலம் துவங்குகிறது. அதாவது காலத்தை இரண்டு அயனமாகப் பிரிக்க வேண்டும். தக்‍ஷாயணம் (தெற்கு), உத்திராயணம் (வடக்கு) என்பவை.

அதனால்தான் இந்த காலம் எல்லா வகையிலும் சிறப்புடையது. உத்திராடம் சிறந்த நட்சததிரம். உத்திராடத்தில் பிள்ளையும், ஊர் எல்லையில் கொல்லையும் (வயலும்) என்பது பழமொழி.

அதாவது உத்திராடத்தில் பிள்ளை பிறந்தால் உடனடியாக அவர்களுக்கு அருகிலேயே நிலம், வீடு அல்லது விளை நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். எனவே உத்திராடத்தின் ராசியான மகரத்தில் சூரியன் நுழைவது வெகுச் சிறப்பான ஒன்றாகும்.

அந்த நேரத்தில்தான் பல விண்மீன்கள் சூரியனையும், சந்திரனையும் சூழ்ந்திருக்கும். மலையாளத்தில், சேர நாட்டில் எடுத்துக் கொண்டால் இதனை மகர ஜோதி என்று அழைக்கின்றனர். ஆனால் விளக்கை ஏற்றி ஜோதி என்று காண்பிப்பது ஒரு அடையாளமே, ஆனால் இயற்கையாக இருப்பதை அறிவிப்பதற்காகவே அவ்வாறு செய்கின்றனர்.

மகரம் ஆன்மீக மாதம்!

அதனால் தான் பல சிறப்புகள் வாய்ந்த மகர மாதத்தை ஆன்மீகத்தை போற்றும் மாநிலமான கேரளாவில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தை ஒன்றாம் தேதியன்று மாலை அந்த விண் மீன் தெரியும். அன்றைய தினம் கருடன் வட்டமிடும். அதுவும் மகர மாதம் துவங்குவதை குறிக்கும் மற்றொரு அறிகுறி. அந்த விண் மீனின் பெயர் மகர மீன்.

மகர யாழ் என்று ஒரு இசைக்கருவி உண்டு. மகர யாழ் மிக வலிமையானது. அதை மீட்டுவதற்கே மிகுந்த வலிமையும், ஞானமும் வேண்டும். எல்லோராலும் மீட்ட இயலாது. அதுபோன்று மகர மீன், அதுபோல் மகர ராசியில் பிறந்தவர்களை மகரத்தார் நகராழ்வார் என்பர். அவர்களுக்கு ஆளும் குணம் உண்டு. மகர ராசியில் இடம்பெற்றுள்ள ராசிகள் மூன்று, மூன்றுமே சக்தி வாய்ந்த நட்சத்திரங்கள். உத்திராடம், திருவோணம், அவிட்டம். திருவோணம் வெங்கடாச்சலபதியின் நட்சத்திரம். திரு ஓணத்தில் பிறந்தவன் கோணத்தை ஆள்வான். அதாவது திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உலகத்தின் எதாவது ஒரு மூலையையாவது ஆள்வார்கள் என்பதாகும்.

அவிட்ட நட்சத்திரத்திற்கு “தவிட்டுப் பானையும் தங்கமாகும்” என்ற பழமொழி உண்டு. மூன்று நட்சத்திரங்களுமே மிகச் சிறந்த நட்சத்திரங்கள் ஆகும்.

மகரம் அத்தனை சிறப்பு வாய்ந்தது. மகரமே சிறந்த வீடு. அதனில் நெருப்பு நட்சத்திரமும் உண்டு, நீர் நட்சத்திரம் உண்டு. உத்திராடமும், அவிட்டமும் நெருப்பு நட்சத்திரங்கள். திருவோணம் நீர் நட்சத்திரம். மகரத்தைப் பற்றி பழைய நூல்கள் கடல் வீடு என்கின்றன. மகரம் ஆழியாகும். ஆனால் ஒரு சில நூல்கள் நெருப்புத் தன்மை வாய்ந்த கடல் வீடு என்றும் கூறுகிறது. அதாவது வெந்நீர் ஊற்றுகள் அதிகம் நிறைந்தது என்று நாம் கொள்கிறோம். கடல் என்றாலே நீர்தான். ஆனால் குளிர்ச்சி அல்ல கொதிப்புதான் அதன் தன்மை. அதாவது இயல்பு நிலையில் இருந்து வேறுபட்டுக் காணப்படுவது இந்த ராசிக்கு பொருந்தும்.

மகர ராசியில் பிறந்தவர்கள் தாய் தந்தையை விட்டு மாறுபட்டு இருப்பார்கள். தாங்கள சார்ந்த நாடு, மதம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டுக் காணப்படுவர். ஒரே நிறுவனத்தில் வேலை செய்தாலும் வேறு மாதிரி செய்து பார்ப்பவர்கள். அதுதான் மகரத்தின் குணம்.

மகர மாதத்திற்குள் உத்திரப்புண்ணியக்காலம் துவங்கக் கூடிய முதல் நாள்தான் தை பொங்கல். சூரியனுக்கும் இயக்கம் உண்டு, அது தன்னைத் தானே சுற்றிக் கொள்ளும். ஆன்மீகத்தில் சிவனுக்கு இணையாக சூரியனை ஒப்பிடுவர். சிவன் தனக்குத் தானே கட்டுப்பாடுகள் வைத்துக் கொள்வார். அவருக்கு மேலே யாரும் கிடையாது. அதுபோல்தான் சூரியனும் எதையும் சுற்ற வேண்டாம். மற்ற கோள்கள்தான் சூரியனை சுற்றுகின்றன.

எனவே, இவ்வளவு சிறப்புப் பெற்ற தையையே தமிழர்களின் முதல் மாதமாக சங்கக் காலங்களில் போற்றிக் கொண்டாடப்பட்டுள்ளது.

சித்திரை பிறந்தால் வழி பிறக்கும் போன்று ஏதாவது பழமொழி உண்டா? இல்லையே. தை பிறந்ததால் வழி பிறக்கும் என்பதுதானே பழமொழி. எல்லாமே தையில் தான் துவங்கும். தை பிறக்கட்டும் ஜாதகத்தை எடுக்கலாம் என்பார்கள். தை மாதத்தில் திருமண நிச்சயம் செய்வார்கள். வேளாண் துறையிலும் தை தான் முதல் மாதம். நெல், சோளம் எல்லாமே மார்கழியில் அறுவடை முடிந்து தை முதல் நாள் புதிய நெல், புது பானை வைத்துக் கொணடாடுவதே தை பொங்கல்.

பங்குனி மாதத்தில் எந்த அறுவடையும் செய்வதில்லை. மாற்றுப் பயிர்கள் வேண்டுமானால் செய்யப்படலாம். ஆனால் தையில்தான் எல்லா அறுவடைகளும் முடிந்து அடுத்த காலத்தை துவங்குகிறோம்.

பரிகாரத்திற்கும் தையே சிறந்தது!

ராஜ ராஜ சோழன் காலத்தில் அந்த மாதத்தில்தான் பல பரிகாரங்களைச் செய்துள்ளனர். பல நல்ல திட்டங்கள் அந்த மாதத்தில் துவக்கியுள்ளார்கள். நெற்களஞ்சியத்தில் இருந்து பழைய நெல்களை கொடுத்துவிட்டு அல்லது விற்றுவிட்டு புதிய நெல்களை கொள்முதல் செய்து கொள்வர்.

நெற்களஞ்சியத்தில் இருக்கும் தானியங்களை மக்களுக்கு தானதர்மம் செய்துவிடுவர். தான தர்மங்கள் செய்வதற்கும் உகந்தது தை மாதம்தான். இதை எல்லாம் அடிப்படையாக வைத்துப் பார்த்தால் தமிழர்களின் புத்தாண்டு தை மாதத்தில்தான் துவங்குகிறது.

தட்பவெப்ப நிலையில் பார்த்தாலும் தை மாதம் சிறந்த மாதகும். குளிரும் இருக்கும், வெயிலும் இருக்கும், எதுவும் கடுமையாக இருக்காது. அதுவே வெகு சிறப்பானது.

எனவே சூரியனின் உத்திராயணப் பயணம் துவங்கும் அந்த முதல் நாள் தமிழர் திருநாளாகும். இந்த மாதத்தில் திருமணம் செய்தல், புதுமனை புகுதல், புது வேலையில் சேர்வது, புதிய நிறுவனம் தொடங்குதல் போன்ற அத்தனையும் துவங்கினால் அது வெற்றி பெறும். நீண்ட காலம் நிலைக்கும்.

சூரியனை வணங்கும் நாளாகவும் தை பொங்கல் விளங்குகிறது. புது அரிசி - கை குத்தல் - அரிசி களைந்து பானையில் வைத்து சூரியனுக்கு நேர வைத்து பொங்கல் பொங்குவர்.

தை மாதத்தில்தான் சூரியப் பொங்கல் என்கிறோம். மறுநாள் மாட்டுப் பொங்கல். அன்று குலதெய்வத்தையும் வழிபடுவோம். வள்ளுவனையும் வணங்குகிறோம். சித்திரையில் இதுபோன்று தமிழர்களைச் சார்ந்த எந்த விழாவும் இல்லை. வள்ளுவனையும் கொண்டாடுவதில்லை.

மகரம் சமாதான வீடு!

அதேபோன்று மகரம் சனியின் வீடு. சனியின் எதிர் கிரகம் செவ்வாய். சனிக்கு செவ்வாயும், சூரியனும் எதிர் கிரங்களாகும். ஆனால் செவ்வாய் சனியின் வீட்டில் உட்கார்ந்து உச்சம் அடைகிறது. தை மாதம் என்பது மகர மாதம். சனியின் வீட்டில் சூரியன் உட்காரும் போது உக்கிரம் அடைகிறது. அந்த இடத்தில் செவ்வாய் உச்சமடைய மகரம் அனுமதிக்கிறது. ஒன்றுக்கு ஒன்று விட்டுக் கொடுக்கிறது. சனி விட்டுக் கொடுத்து சூரியனின் உச்சத்தை ஏற்றுக் கொள்கிறது. சமாதான வீடாகவும் மகர வீடு விளங்குகிறது.

ஜாதிப்படி பிரித்தால் மகரம் சத்ரிய வீடு என்று சொல்லலாம். மகரத்தில்தான் குரு நீச்சமடைகிறார். சூழ்ச்சிகளுக்கு அங்கு இடமில்லை. சத்ரியர்கள் தங்களது திறமையை காண்பிக்கலாம். எல்லா தரப்பினருக்கும் மிக உயர்ந்த மாதமாகும்