செவ்வாய், 26 செப்டம்பர், 2017

மனஅழுத்தம் இன்றி வாழ வழி முறைகள்.!



மனஅழுத்தம் இன்றி வாழ வழி முறைகள்.!

* காலையில்  முன்னதாகவே எழுந்துவிடுங்கள்.

* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

* காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.செய்யவேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.

* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* வேலை செய்யாதவைகளைக் கட்டி அழாதீர்கள். சரி செய்ய முயலுங்கள் காலணிஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

* காஃபி , டீ  அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.

* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதை- இதைச் செய்வேன் என்பது போன்றவை.

* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

* சற்று நேரம் கைபேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்துவிடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்தத்தொந்தரவும இன்றி.

* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் , ‘மன்னிக்கவும்.. என்னால ்செய்ய இயலாது’ என்று சொல்லப்பழகுங்கள்.

* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

* எளிமையாக வாழுங்கள்.

* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.

* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தை த்தரும்.

* ஆழமாக , நிதானமாக  மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள்.

* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

* பிறருக்காக எதையேனும   செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

* என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

* உங்கள் உடை, நடை பாவனைகளினல் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதைப் புத்துணர்ச்சியாக்குங்கள்.

* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

*மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப் படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்குவசப்படும்.

திங்கள், 25 செப்டம்பர், 2017

உங்கள் வீட்டுப்பெண்மணிகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?



உங்கள் வீட்டுப்பெண்மணிகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

*பெண்களே உஷார்,!*

👧 தாய், மனைவி, அக்கா, தங்கை, தோழி என அனைத்து பரிமாணத்திலும் ஆண்களுக்கு ஊக்கமளித்து உறுதுணையாக திகழும் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகவே உள்ளது.

👧 இந்தியாவில் டெல்லி, உத்தரபிரதேஷ், பீகார், பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றது. இது குறித்த செய்திகளை ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டிருந்தோம். ஆனால் தற்போது, நம் ஊரில் இந்த கொடுமைகள் அரங்கேற ஆரம்பித்துவிட்டது. இனியும் நாம், எங்கோ, யாரோ ஒரு பெண்ணுக்கு கொடுமை நடத்திருக்கிறது என அலட்சியமாக இருப்பது முற்றிலும் தவறு.

👧 உங்களை யாராவது பின்தொடர்வது போல் தெரிந்தால், உடனடியாக கூச்சலிட்டு உதவிக்கு யாரையாவது அழையுங்கள். பயத்தில் அவசரமாக ஓடும்போது கூட கூச்சலிட மறவாதீர்கள்.

👧 செல்போனில் அவசர தேவைக்காக ஸ்பீட் டயலில் குடும்ப நபர்களின் எண்ணை பதிவு செய்து வையுங்கள்.

👧 வீட்டிற்கு புதிதாக வரும் நபரின் மீது வைத்திருக்கும் கண் பார்வையிலிருந்து நாம் அகல கூடாது. ஏனெனில் வணக்கம் என்று சொல்லி முடிக்கும் முன், அவர்கள் நம்மை தாக்க நேரிடலாம். ஆகவே எந்நேரமும் விழிப்புணர்வோடு கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

👧 இரவில் உங்களை யாராவது துரத்தினால் ஏதாவது ஒரு வீட்டிற்குள்ளோ, அல்லது கடையிலோ நுழைந்து உங்கள் நிலைமையை கூறி உதவி கேளுங்கள். அல்லது, ஏதேனும் ஒரு ஏடிஎம்க்குள் நுழைந்து விடுங்கள். அங்கு எப்போதும் காவலாளிகள் இருப்பதன் மூலமும், கேமராவும் இருப்பதன் மூலமும் யாரும் உங்களை எதுவும் செய்ய முடியாது தப்பித்துக்கொள்ளலாம்.

*பாலியல் வன்முறையை எதிர்கொள்ள:*

👧 உடனடியாக செல்போனில் குடும்பத்தினருக்கோ அல்லது போலீசுக்கோ தொடர்புகொண்டு நீங்கள் இருக்கும் இடத்தை சத்தமிட்டு கூறுங்கள்.

👧 உங்களிடம் இருக்கும் சேப்டிபின், கொண்டை ஊசி, குடை, கத்தி, பேனா, நகங்கள், பற்கள் போன்றவற்றை பயன்படுத்தி எதிர்தரப்பினரை காயபடுத்தி தப்பிக்கலாம்.

👧 உங்கள் எதிராளியை தாக்கும்போது முழு வலுவையும் பயன்படுத்தி முதல் அடியிலேயே அவனை வீழ்த்த முயலுங்கள்.

👧 எதிராளியை சமாளிக்கும் அளவிற்கு சக்தியில்லை என்றால் சற்றும் யோசிக்காமல் விரல்களினால் அவனின் கண்களை குத்திவிட்டு ஓட்டமெடுங்கள்.

*பெண்களுக்கு பிரச்சனை ஏற்படுவது யாரால்?*

இந்த கேள்விக்கு அலசி ஆராய்ந்து கிடைத்த பதில் 90 சதவீதம் பெண்கள் மட்டுமே. குடும்ப நபர்களைத் தவிர மற்ற எவரும் நம்மை எந்த நோக்கத்திற்காக பழகுகிறார்கள் என்று முற்றிலும் நம்மால் உணர முடியாது. அதை முதலில் புரிந்து கொள்ளுதல் அவசியம். எனவே, அரைகுறை ஆடை, சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப் போன்றவற்றில் படங்கள் பதிவிடுதல், தேவையற்ற அரட்டை, தேவையற்ற வீடியோ பதிவு போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

*பாரதி கண்ட புதுமை*
*பெண்களா நீங்கள்?*

இந்த சந்தேக கேள்விக்கு சரியான பதில். ஆம். ஆனால், தற்காப்பில் தலைகுனிந்து இருக்கிறது பெண்களின் நிலைமை. இதனை தவிர்க்க, சமூகத்தில் ஒரு நல்ல படிப்புடன் வேலை, ஒரு குடும்பத்தை நிர்வகித்து வழிநடத்தும் பொறுப்பு, எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டி முன்னோடியாக திகழ்வது போன்ற எண்ணற்ற பொறுப்புகள் காலடியில் இருக்கிறது என்பதை மறந்து அற்ப மனிதர்களின் பொழுது போக்கிற்கு போதை பொருளாக மாறக் கூடாது என்பதை கனவிலும் மறவாமல் செயல்பட வேண்டும்.

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

இந்த காலாண்டு விடுமுறைக்கு என்ன செய்யலாம்?



இந்த காலாண்டு விடுமுறைக்கு என்ன செய்யலாம்?

 1. ஒரு வண்டி எடுத்துக்கொண்டு குழந்தையுடன் சென்று கடைகளில் கிடைக்கும் பழைய சிறுவர் இதழ்கள் என்ன? எங்கெங்கு கிடைக்கின்றது என விசாரித்து, வாங்கிவரவும்



2. குழந்தை பாடல்களை (தமிழ்) குழந்தைகளுடன் மெட்டமைத்து பாடி விளையாடலாம்



3. வீட்டை சுற்றி நடந்து சென்று பத்து வகையான இலைகளை பறித்து வரச்சொல்லவும். கொண்டு வந்த இலைகளைக்கொண்டு அழகிய பொருள் ஏதேனும் செய்ய முயற்சிக்கலாம். ஒவ்வொரு இலை எந்த மரத்தில்/ செடியில் இருந்து வந்தது என கண்டுபிடிக்கலாம்.



4. வழக்கமாக பள்ளிக்கு செல்லும் நாட்களில் விரைவில் உறங்க செய்துவிடுவோம். விடுமுறை நாளில் ஒன்பது மணிக்கு   எல்லோரும் வானை பார்க்கவேண்டும். நட்சத்திரங்களையும், நிலாவையும் பார்த்து ஒரு மணி நேரம் பேச வேண்டும். பேச்சு வானை பற்றியதாக மட்டும் இருக்க வேண்டும் (பின்குறிப்பு: இதனை மழை நாளில் முயற்சிக்க வேண்டாம்)



5. நகரில்/ஊரில் இருக்கும் அவர்களுடைய நண்பர்கள் வீட்டிற்கோ/ நம்முடைய நண்பர்கள் வீட்டிற்கு சென்று காலை முதல் மாலை வரையில் அங்கே கழிக்க விடலாம். மறுநாள் அவர்களை நம்வீட்டிற்கு வரவழைக்கலாம்.



6.அருகே எங்கே நூலகம் இருக்கு என்பதை தேடி, அங்கே தினம் சில நிமிடங்கள் அவர்களை அங்கே செலவழிக்க செய்ய வைக்கலாம். தங்கள் நண்பர்களுடன் சென்றால் இன்னும் சில நிமிடங்கள் அதிகமாகவும் உற்சாகமாகவும் செலவழிப்பார்கள்.



7.அருகே இருக்கும் நர்சரி சென்று அங்கே இருக்கும் பூக்கள் செடிகளை நோட்டம்விடலாம். வீட்டில் எதனை வளர்க்க முடியுமோ அதனை வளர்க்க இந்த விடுமுறையில் துவங்கலாம்



8. சிறுவர்களுக்கான நல்ல உலக சினிமாக்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை டவுன்லோட் / சீடி வாங்கி குழந்தைகளுடன் அமர்ந்து ஒன்றாக பார்க்கலாம்.



9. வீட்டில் இருக்கும் புத்தகங்களை பட்டிலிட செய்யலாம். (புத்தகங்களை தொடுவார்கள், தலைப்புகளை பார்ப்பார்கள். புத்தகம் இல்லாதவர்கள் புத்தகம் வாங்க வேண்டும் என உணர்வீர்களாக)


10. ஒன்றாக சமைக்கலாம்


11. வீட்டின் அருகே இருக்கும் காய்கடைக்கு அனுப்பி, பட்டியலில் இருக்கும் காய்களையோ அவர்களுக்கு பிடித்தமான காய்களையோ வாங்கிவரச்சொல்லலாம்,

 12. அருகே இருக்கு காய்கறி சந்தை / சந்தைக்கு சென்று அங்கே என்னென்ன விற்கின்றார்கள் என்பதை மட்டும் பார்த்துவிட்டு வரலாம்.

 மிகப்பெரிய பிரச்சனை இக்கால குழந்தைகள் உடனே ‘ஃபோர் அடிக்கின்றது’எனச் சொல்ல துவங்கிவிடுகின்றார்கள். அதற்கு முக்கிய காரணம் நாம் தான். காரணங்கள் பல. முடிந்த அளவிற்கு தொலைக்காட்சி முன்னரும், கணினி, மொபைலுடன் நேரம் செலவழிப்பதை குறைக்கலாம். கொஞ்சம் திட்டமிடலும் கொஞ்சம் நம் நேரமும் செலவிட்டால் இந்த குறுகிய விடுமுறையை நல்ல நினைவுகளாக மாற்றலாம்.

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..


கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..

*உலகம் போற்றும்  இந்துமத கலாச்சாரம் காத்து இந்துமத பண்பாடு வளர்க்கும் இந்திய திருநாட்டின் குடும்ப தலைவன் தலைவியான*
*கணவன்=மனைவி*
*இப்படி இருந்தால்*
*இல்லறமே நல்லறமாகும்.*

1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.

2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.

3.மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.

4.இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது.பொய்யின் ஆரம்பமே பயம் தான்.

5.எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும்.கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.


6.மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.

7.மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும்.( இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)

8.கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித் தான் நடத்துகின்றனர்.

9.கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும் .அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும்.

10.அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக்கூடாது. அப்படி திட்டுவேன தான் என்றால். அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணம் ஆன புதிதில் உங்கள் அம்மாவும் இப்படித்தான் உங்கள் அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள். சமையலுக்கான பக்குவம் பார்த்ததும் வந்து விட கூடியதல்ல.  பலவருட அனுபவத்தில் வருவது.

நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கமாவதும் சொர்க்கமாய் இருக்கும் வீடு நரகமாவதும் கணவன் மனைவி நடந்துகொள்ளும் விதத்தில்தான் உள்ளது.


வியாழன், 21 செப்டம்பர், 2017

உங்கள் ஜட்டியின் காலாவதி நாள் தெரியுமா?-ரொம்ப நாள் யூஸ் பண்ணாதிங்க!



உங்கள் ஜட்டியின் காலாவதி நாள் தெரியுமா?-ரொம்ப நாள் யூஸ் பண்ணாதிங்க!

நாம் தினமும் சாப்பிடும் உணவுகளுக்கு, மருந்துகளுக்கு மட்டும் தான் காலாவதி நாள் இருக்கிறது என எண்ணுகிறீர்களா? சிலர் இரண்டு மூன்று வருடத்திற்கும் மேலாக ஒரே உள்ளாடையை மாற்றி, மாற்றி பயன்படுத்தி வருவார்கள். அந்தரங்க பகுதியில் அரிப்பு, பாக்டீரியா தொற்றுக்கு மருந்து வாங்கி போட்டும் பயனில்லை என கருதும் இவர்கள், அதற்கு முக்கிய காரணமே அவர்களது பழைய உள்ளாடைகள் தான் என அறிந்திருக்க மாட்டார்கள்.


உள்ளாடைகள் மட்டுமல்ல, குளியல் டவல், டூத் பிரஷ், குழந்தைகள் ஃபீடிங் நிப்பிள், தலையணை, மெத்தை விரிப்பு என நமது வீட்டில் நாம் பயன்படுத்தும் எல்லா பொருட்களுக்கும் ஒரு காலாவதி நாள் இருக்கிறது. அதை முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள்.



டூத் பிரஷ்!

மூன்று மாதத்திற்கு ஒருமுறை உங்கள் டூத் பிரஷை மாற்ற வேண்டும். இல்லையேல் இதனால் கூட நோய் தொற்று, உடல்நலக் கோளாறுகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு. முக்கியமாக குழந்தைகள் உபயோகப்படுத்தும் டூத் பிரஷ்களை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டியது மிகவும் அவசியம்.


தலையணை!

இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுர புதிய தலையணை மாற்ற வேண்டும். ஒன்று, அதன் வடிவம் மாறி கழுத்து வலி உண்டாக காரணியாக இருக்கும். மற்றொன்று வீட்டில் அதிகம் தூசு சேரும் பொருள் தலையணை தான். அதன் மூலமாக சரும அரிப்பு அல்லது தும்மல், சளி, இருமல் கோளாறு ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக இருக்கும். இந்த இரண்டு - மூன்று வருட இடைவேளையில் சீராக அவ்வப்போது தலையணையை துவைத்து பயன்படுத்த வேண்டியது அவசியம். கடைசியாக உங்கள் வீட்டு தலையணையை எப்போது துவைத்தீர்கள்? மாற்றினீர்கள்?


உள்ளாடை!

வருடத்திற்கு ஒருமுறை மாற்றியே ஆகவேண்டும். இல்லையேல் பாக்டீரியா தொற்று பிரச்சனைகள், அரிப்பு,எரிச்சல், புண் போன்றவை அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும். முக்கியமாக சரியாக துவைத்து பயன்படுத்த வேண்டும். சமீபத்திய ஆய்வில் ஐந்தில் ஒரு ஆண் தினமும் காலையில் சுத்தமாக உள்ளாடை அணிவதில்லை என்ற தகவல் வெளியாகியிள்ளது.


குளியல் டவல்!

வருடத்திற்கு ஒரு முறை குளியல் டவலை மாற்ற வேண்டும். குளியல் டவலில் சீக்கிரம் ஃபைபர் தன்மை இழப்பு நேரிடும். இதனால் அதில் பாக்டீரியா தொற்று அதிகரிக்க துவங்கும். நீங்கள் துவைத்தே பயன்படுத்தினாலும், அதில் பாக்டீரியா தான் அதிகரிக்குமே தவிர, உங்களுக்கு நன்மை விளைவிக்காது.


ஃபீடிங் நிப்பிள்!

குழந்தைகளுக்கு பால் தர, அழாமல் இருக்க நாம் பயன்படுத்தும் ஃபீடிங் நிப்பிளை நான்கு அல்லது எட்டு வாரங்களுக்கு ஒருமுறை புதிதாக மாற்ற வேண்டும். அதில் ஏற்படும் கிழிசல், கிராக் போன்றவை குழந்தைகளுக்கு சுகாதாரமற்றதாக மாறும். எனவே, ஓரிரு மாதத்திற்கு ஒருமுறை அதை கட்டாயம் மாற்ற வேண்டும்.


சீப்பு!

வாரத்திற்கு ஒரு முறை உங்கள் சீப்பை கழுவி, சுத்தம் செய்ய வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். உங்கள் வீட்டில் கழிவறைக்கு இணையாக அழுக்கு சேரும் இன்னுமொரு பொருள் சீப்பு தான். முக்கியமாக வீட்டில் அனைவரும் தனித்தனி சீப்பு பயன்படுத்த வேண்டியது அவசியம்.


காலணிகள்!

ஆறு மாதத்தில் இருந்து ஒரு வருடத்திற்குள் காலணிகள் மாற்ற வேண்டும். அடிக்கடி காலணிகளை கழுவி பயன்படுத்த வேண்டியது அவசியம். அதிக வியர்வை தேங்கும் காரணத்தால் சரும தொற்று / பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன.


ஸ்பாஞ்!

பாத்ரூம், கிச்சன், தரைகள் துடைக்க, சுத்தம் செய்ய பயன்படுத்தும் பஞ்சை இரண்டு வாரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். இல்லையல் ஃபங்கஸ் தொற்றுஅதிகரிக்கும்.முக்கியமாக இதன் காரணத்தால் வீட்டில் பாக்டீரியாக்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.


சுத்தம் செய்யும் பொருட்கள்!

வீடு, கழிவறை, தரை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பிரஷ், குச்சிகள், கையுறைகள் போன்றவற்றை மூன்று மாதத்திற்கு ஒருமுறை அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அதிகமாக கெமிக்கல் ஓட்டும் காரணத்தால் இவர் சுகதாரமற்ற பொருளாக வீட்டில் அண்டியிருக்கும்.


ஷூ!

ரன்னிங் ஷூக்களை வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். நீங்கள் கேசுவலாக பயன்படுத்தும் ஷூக்களை விட அதிக வியர்வை உறிஞ்சுகிறது ரன்னிங் ஷூ. எனவே, உங்களுக்கே தெரியாமல் அதில் பாக்டீரியாக்கள் அதிகமாக அண்டியிருக்கும்.


விரிப்பு!

மெத்தை விரிப்பு நம்மில் பலரும் பல வருடங்கள் மாற்றாமல் பயன்படுத்தும் பொருள். ஐந்தில் இருந்து எட்டு வருடத்திற்கு ஒருமுறை மெத்தை விரிப்பை மாற்ற வேண்டும். இரண்டு வாரம் அல்லது ஒரு மாதத்திற்கு ஒருமுறையாவது மெத்தை விரிப்பை துவைத்து சுத்தமாக பயன்படுத்த வேண்டும்.


டெப்லான் பேன்!

வீட்டில் சமையல் செய்யும் உணவு பொருட்களுக்கு மட்டுமல்ல, சமையல் செய்ய நாம் உபோயோகப்படுத்தும் பாத்திரங்களுக்கும் கூட காலாவதி நாள் இருக்கிறது டெப்லான் பாத்திரங்களை மூன்றில் இருந்து ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.


பிளாஸ்டிக்!

பிளாஸ்டிக் டிப்பன் பாக்ஸ்களை தான் இன்று பிள்ளைகளுக்கு பெற்றோர் அதிகம் வாங்கி தருகிறார்கள். பல டிசைன், வடிவங்களில் கிடைக்கின்றன. ஆனால், இவற்றை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். இல்லையேல் நச்சு தன்மை அதிகமாகிவிடும்.


கம்பளம்!

கால் துடைக்க பயன்படுத்தும் கம்பளத்தை ஐந்தில் இருந்து பதினைந்து வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். அவ்வப்போது சீரான இடைவேளையில் சரியாக துவைத்து பயன்படுத்த வேண்டும். நம் வீட்டில் அதிகமாக பாக்டீரியாக்கள் தாங்கும் பொருள் கம்பளம் தான்.

நவராத்ரியும் அம்பாளும்



நவராத்ரியும் அம்பாளும்

ஒன்பது நாள்களும் போட வேண்டிய கோலங்கள்:
• முதல் நாள் – அரிசி மாவு பொட்டு
• இரண்டாம் நாள் – கோதுமை மாவு கட்டம்
• மூன்றாம் நாள் –முத்து  மலர்
• நான்காம் நாள் – அட்சதை படிக்கட்டு
• ஐந்தாம் நாள் – கடலை பறவையினம்
• ஆறாம் நாள் – பருப்பு தேவி நாமம்
• ஏழாம் நாள் – திட்டாணி (வெள்ளை மலர் களால் ஆன கோலம்)
• எட்டாம் நாள் – காசு பத்மம் (தாமரைக் கோலம்)
• ஒன்பதாம் நாள் – கற்பூரம் ஆயுதம்  (வாசனைப் பொடிகளை கலந்து கோலமிட்டால் சிறப்பு)

ஒன்பது நாள்களும் பாட வேண்டிய ராகங்கள்:
• முதல்நாள் – தோடி
• இரண்டாம் நாள் – கல்யாணி
• மூன்றாம் நாள் – காம்போதி, கௌளை
• நான்காம் நாள் – பைரவி
• ஐந்தாம் நாள் – பந்துவராளி
• ஆறாம் நாள் – நீலாம்பரி
• ஏழாம் நாள் – பிலஹரி
• எட்டாம் நாள் – புன்னாகவராளி
• ஒன்பதாம் நாள் – வஸந்தா
ஒன்பது நாள்களும் அணிவிக்க வேண்டிய மாலைகள்:

• முதல் நாள் – மல்லிகை
• இரண்டாம் நாள் – முல்லை
• மூன்றாம் நாள் – செண்பகம், மரு
• நான்காம் நாள் – ஜாதிமல்லி
• ஐந்தாம் நாள் – பாரிஜாதம் அல்லது வாசனை மலர்கள்
• ஆறாம் நாள் – செம்பருத்தி
• ஏழாம் நாள் – தாழம்பூ, பாரிஜாதம், விபூதிப்பச்சிலை
• எட்டாம் நாள் – சம்பங்கி, மருதாணிப்பூ
• ஒன்பதாம் நாள் – தாமரை, மரிக்கொழுந்து

ஒன்பது நாள்களும் விருந்தினருக்குக் கொடுக்க வேண்டிய பழங்கள்:
• முதல் நாள் – வாழைப்பழம்
• இரண்டாம் நாள் – மாம்பழம்
• மூன்றாம் நாள் – பலாப்பழம்
• நான்காம் நாள் – கொய்யாப்பழம்
• ஐந்தாம் நாள் – மாதுளை
• ஆறாம் நாள் – ஆரஞ்சு
• ஏழாம் நாள் – பேரிச்சம்பழம்
• எட்டாம் நாள் – திராட்சை
• ஒன்பதாம் நாள் – நாவல் பழம்
ஒன்பது நாள்களும் செய்ய வேண்டிய பிரசாதங்கள்:

• முதல் நாள் – சுண்டல், வெண்பொங்கல்
• இரண்டாம் நாள் – புளியோதரை
• மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்
• நான்காம் நாள் – கதம்பம் (காய்கறிகள் கலந்த கதம்ப சாதம்)
• ஐந்தாம் நாள் – ததியோதனம் தயிர்சாதம், பொங்கல்
• ஆறாம் நாள் – தேங்காய் சாதம்
• ஏழாம் நாள் – எலுமிச்சை சாதம்
• எட்டாம் நாள் – பாயஸôன்னம் ( பால் சாதம்)
• ஒன்பதாம் நாள் – அக்கார அடிசில் (பச்சரிசி,பால், சர்க்கரை கலந்த பால் பாயசம்), சர்க்கரை பொங்கல்
நவராத்திரியை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி ,அன்னையின் அருளைப் பெற நான் பிரார்த்திக்கின்றேன்.

மற்றவர்களையும்  சந்தோஷப்படுத்தி, அதன்மூலம்  நாமும் சந்தோஷம் அடைவோம்.

புதன், 20 செப்டம்பர், 2017

ஒருநாளின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க குழந்தைகளுடன் இப்படி திட்டமிடலாமா?



ஒருநாளின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க குழந்தைகளுடன் இப்படி திட்டமிடலாமா?

#GoodParenting
காலையில் கண் விழித்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் செல்ல வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் விருப்பம். அனைத்து வீடுகளில் அதற்கான திட்டமிடுவார்கள். அந்தத் திட்டமிடலில் கணவன், மனைவி, வீட்டிலுள்ள மூத்தவர்கள் இடம்பெறுவர். ஆனால், அந்தப் பட்டியலில் அநேக வீடுகளில் குழந்தைகளைச் சேர்ப்பதில்லை. இது சரியான விதம் இல்லை. ஏனெனில், நமக்குப் பெரும் சந்தோஷத்தை அளிப்பவர்கள் குழந்தைகளே. எனவே, அவர்களையும் இணைத்துக்கொண்டு ஒருநாளுக்கான திட்டமிடலை எப்படிச் செய்யலாம் எனப் பார்ப்போம்.

காலையில் குழந்தைகளை எழுப்புவதே பெரிய வேலை என்று பல பெற்றோர்கள் கூறுவதுண்டு. அதைப் பெற்றோர் தன் வேலையாக அமைத்துகொள்ளாமல் பிள்ளைகள் தாங்களாவே எழுந்திருக்க வைக்கச் செய்யலாம். உதாரணமாக... வீட்டின் தோட்டத்தில் மூன்று விதமான செடிகள் நடுங்கள். அதில் ஒன்று அல்லது இரண்டு செடிகளை 'உங்களுடையவை' எனப் பிள்ளைகளிடம் கூறுங்கள். சூரிய உதயத்துக்கு முன் அவரவர் செடிகளுக்கு நீர் ஊற்ற வேண்டும் என்பதாக முடிவெடுங்கள். அடுத்த நாள் காலையில் உறங்கிகொண்டிருக்கும் குழந்தையிடம், 'எங்களுடைய செடிகளுக்கு நீர் ஊற்றினோம். இலைகளை அசைத்து 'தேங்க்ஸ்' சொல்லின. உன்னுடைய செடி மட்டும் பாவம் நீர் இல்லாமல் தவிக்கிறது' எனக் கூறுங்கள். அதைக்கேட்டு அவர்கள் தானாகவே எழுந்திருக்கத் தொடங்கிவிடுவர்.
செய்தித்தாள் என்பது பெரியவர்களுக்கானது மட்டுமல்ல. குழந்தைகளுக்கும் அதில் படிப்பதற்குச் செய்திகள் உள்ளன. அதனால், அவர்களுக்கான செய்திகள் எதுவென நீங்கள் நினைக்கிறீர்களோ, அவற்றைச் சுற்றி வட்டமிடுங்கள் அல்லது கார், விமானம் படத்தை வரையுங்கள். பின், செய்தித்தாளை உங்கள் பிள்ளைகளிடம் கொடுத்தால் ஆர்வமாகப் படிப்பார்கள்.
குழந்தைகளை, காலை டிபனைச் சாப்பிட வைப்பதற்குள் போதும்போதும் என்றாகி விடுகிறது எனக் கவலைப்படும் பெற்றோர் இருக்கின்றனர். அவர்கள், உணவைச் சமைக்கும் முன் குழந்தைகளின் விருப்பதைக் கேட்டுச் சமைக்கலாம். ஒருவேளை அவர்கள் விரும்பியதைச் சமைக்க முடியாத நிலை என்றால் (ஜங்க் ஃபுட் கேட்கும்போது) நீங்கள் செய்யும் உணவு வகையை அவர்கள் விரும்பும் வகையில் பரிமாறலாம். தோசையின் மீது வெண்டை, வெங்காயம், வெள்ளரியை நறுக்கி மனிதன் போல உருவம் செய்துகாட்டி உணவின் மீது ஆர்வத்தை ஈர்க்கலாம். அதேபோல மதிய உணவையும் லஞ்ச் பாக்ஸில் அழகாக டெக்கரேட் செய்து வைக்கும்போது, பார்த்தவுடனே சாப்பிடும் எண்ணம் உருவாகும். இதனால், பாதி உணவை மட்டும் சாப்பிடும் பழக்கம் உங்கள் குழந்தையிடமிருந்து விலகும். உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, மாலை நேரத்தில் அந்த லஞ்ச் பாக்ஸைப் பார்த்தவுடனே உங்களுக்கு வரும் கோபத்துக்கு விடைக்கொடுக்கலாம்.

பள்ளி வேனில் அனுப்புவதை விடவும், அலுவலகம் செல்லும்போது குழந்தைகளைப் பள்ளிவிட்டுச் செல்வது நல்ல பழக்கம். அப்போது போக்குவரத்து நெரிசல் இல்லாத இடங்களில் ஏதேனும் பேசிக்கொண்டும், பாடிக்கொண்டும் செல்வது பள்ளிக்குச் செல்லும்போது குழந்தைகளுக்கு இருக்கும் பயத்தைக் குறைக்கும்.
மாலையில் வெளியே செல்வது என்றால், எங்குச் செல்வது எனத் திட்டமிடும்போது குழந்தைகளின் அபிப்பிராயத்தையும் கேளுங்கள். அந்த இடத்தின் அருகில் உங்களின் நண்பர் வீடு இருக்கிறது, விலை குறைவாக இருக்கும் என்பதை மட்டும் பார்க்காமல், குழந்தைகள் அங்கு செல்ல விரும்புகிறார்களா என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடிக்காத இடம் என்றால், விரைவிலேயே சோர்ந்து, வீட்டுக்கு அழைத்துக்கொண்டே இருப்பார்கள். அதனால் நீங்கள் வாங்க நினைத்த அல்லது செலவிட நினைத்த நேரத்தை அங்கே செலவிட முடியாது. அதனால், வெளியே சென்று வந்த மகிழ்ச்சியும் உங்களுக்குக் கிடைக்காது.
ஒருநாளின் முடிவில் உடல் மற்றும் மனம் ரீதியான களைப்பு இருக்கவே செய்யும். அதற்காகத் தனித்தனியான ரிலாக்ஸ் முயற்சிகளில் ஈடுபடாமல், குழந்தைகளோடு சேர்ந்து ஏதேனும் விளையாடுவது, கதை சொல்வது போன்றவற்றில் ஈடுபடலாம். ஏனெனில் ஒரு நாள் முடிவு என்பது குழந்தைகளுக்கும்தான். பள்ளியில், நண்பர்களிடம், செல்லும் வழியில்... பல இடங்களில் சோர்ந்து போகச் செய்யும் சம்பவங்கள் குழந்தைகளுக்கு நேர்ந்திருக்கலாம். அதிலிருந்து மீள்வதற்குப் பெற்றோர்தான் உதவ வேண்டும்.
குழந்தை வளர்ப்பு என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும் என்றாலும் சில அடிப்படை விஷயங்கள் பெரிய அளவில் மாறாது. எனவே அவர்களின் எண்ணவோட்டத்தைப் புரிந்துகொண்டு பெற்றோரும் சில தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்.

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

கொலு வைப்பவர்களுக்காக



கொலு வைப்பவர்களுக்காக..

நவராத்திரி ஒன்பது நாளும் அக்கம்பக்கத்து ஆத்தில் இருப்பவரை நம் ஆத்து கொலுவிற்கு அழைப்போம்  நாமும் கொலு வைப்பவர்கள் ஆத்துக்கு செல்வோம் குறைந்த பட்சம் இந்த நவராத்திரியிலிருந்து ஆரம்பிப்போம்

ப்ளாஸ்டிக் ( நெகிழி) எனும் அரக்கனை தவிர்ப்போம் (ஒழிப்போம்)

* முதலில் வெற்றிலை பாக்கில் கலிப்பாக்கை பயன்படுத்துவோம் பேக்கெட் பாக்கை தவிர்ப்போம்

* ப்ளாஸ்டிக் டப்பாவில் அடைக்கும் கெமிக்கல் மஞ்சளை தவிர்த்து கிழங்கு மஞ்சளை ஆத்துக்கு வருபவர்களுக்கு கொடுப்போம்

* பேப்பர் ப்ளேட் பயன்படுத்தாமல் தொன்னையில் பிராசாதத்தை தற முயற்சி செய்வோம்

* கொலு ஆத்திற்கு செல்வோர் அங்கே தரும்  பிரசாதம் மங்கள பொருட்களை ப்ளாஸ்டிக் கவரில் வாங்கமால் கூச்சப் படாமல் ஒரு துணி பை அல்லது கட்ட பை எடுத்து செல்வோம்

* பரிசு பொருட்களாக ப்ளாஸ்டிக் டப்பாக்களை தராமல் புது விதாமாக யோசித்து ஈகோ ப்ரெண்ட்லி பொருட்களை தருவோம்

* கோயிலுக்கு எடுத்து செல்லும் அர்ச்சனை பொருட்களை கவரில் எடுத்து செல்லாமல் துணி பை அல்லது மூங்கீல் கூடையை பயண்படுத்துவோம்

*பூதேவியை_காப்போம்*

அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துக்கள்..
Happy Navarathri 

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

மாறுங்கள் ; இல்லையேல் மாற்றம் வேண்டுபவரை வாழ விடுங்கள்.



மாறுங்கள் ; இல்லையேல் மாற்றம் வேண்டுபவரை வாழ விடுங்கள்.

புருஷன் கூட வாழுற நானே ரூ.600 க்கு  தான் புடவை எடுக்குறேன்.புருஷன் கூட வாழாத உனக்கு எதுக்கு 800 ரூபாய்ல புடவை?

புருஷன் கூட வாழுற நானே வாரம் ஒரு நாள் தான் பூ வாங்கி வக்குறேன்.வாழாத உனக்கு  டெய்லி பூ எதுக்கு?யாருக்காக தான் வக்குறீயோ?

இப்பிடி வக்கிற வார்த்தைகளை பெரும்பாலும் உதிர்ப்பது நாம் தான் பெண்களே.சாட்சாத் நாம் தான் .
கோடி எண்ணிக்கையில் வாழும்  பெண்களில் இலட்சங்களில் பெண்கள் தான் முற்போக்கு சிந்தனையோடு தங்களுக்கு பிடித்த வாழ்க்கை, சுதந்திரமான அறிவு என்று  ஒரு புரிதலுடன் அழகாக தங்கள் வாழ்வை வாழ்கிறார்கள்.மீதம் உள்ள பெண்களில் மற்றவர்களின் நிலை தான் மேற்கண்ட புரிதல்கள்.

அப்போது என்ன? கணவன் இருந்தால் பூ வைத்துக் கொள்ளலாம்.காஸ்ட்லி புடவைக் கட்டி கொள்ளலாம்.
ஆனால் கணவன் இல்லாமல் வாழும் ஒருவர் இதை எல்லாம் தொடக் கூடக் கூடாதா?

 அவர் விட்டு ஓடி இருக்கலாம், பிரிந்துச் சென்று இருக்கலாம்  (அ) ஏதோ விபத்தில் மரணம் அடைந்த ஒருவராய் கூட இருக்கலாம்.
ஆனால் அந்த ஒருவர் ஏதோ காரணத்திற்காக இல்லாமல் போனால் நாமும் நம் அடையாளங்களை ஆசைகளை விருப்பங்களை காணாமல் தொலைத்து விட வேண்டும். இல்லையா?  தொலைத்து விட வேண்டும் என்று நினைப்பதால் தான் நாமே நம்மை அறியாமல் மற்றவர்களை வசைப்பாடி அவர்களின் மனதைக் குத்தி கூறுப் போடுகிறோம்.

ஆண்களிடம் இருந்து சுதந்திரம் வேண்டும் என்று மல்லுக்கட்டிக் கொண்டுப் போராடுகிறோம். என் சுதந்திரம் எனக்கு வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் இதற்கெல்லாம் அடிப்படைப் புரிதல் என்ன? ஒரு அடிப்படை அறிவோடு நாம் முதலில் தெளிவாக இருக்கிறோமா?

திருமணம் என்ற பந்தத்திலிருந்தா? நமக்கு பூ வைக்க, பொட்டு வைக்க, நல்ல உடை உடுத்த அதிகாரம் அளிக்கப்படுகிறது? யோசித்துப் பாருங்கள். நம் சிறு வயது முதலே நாம் பொட்டுகளை விதவிதமாய் வைக்கின்றோம். நல்ல ஆடைகளை அணிந்து வருகிறோம். விரும்பிய வாசனை உள்ள பூக்களை சூடிக்கொள்கிறோம். இப்பிடி சிறு வயது முதல் நமக்கான விருப்பங்களாய் இருக்கும் ஒன்று கணவன் வந்த பிறகு எப்பிடி அவருக்காய் மாறுகிறது? அவர் இல்லையென்றாலும் எப்பிடி மாறுகிறது?

"இந்தா மல்லி பூ வச்சிக்க , உன் புருஷன் பாரு எப்பிடி மயங்கி வருவான்னு " மச்சி பூ வாங்கிட்டு போடா , உன் மனைவி கோவம் போய் ரிலாக்ஸ் ஆயிடுவாங்க" இப்படி பல வசனங்கள் கேட்காத காதுகள் இருக்காது. என்னைக் கேட்டா இதெல்லாம் புரிதலே இல்லாத வசனங்கள் என்று தான் தோணும்.

"நாம் பெரும்பாலும் வாசனையுள்ள பூக்களை தான் சூடிக் கொள்வோம்; அதற்கு காரணம் யாரையும் மயக்குவதற்கு அல்ல" ஒவ்வொரு வாசனைப் பூவிற்கு என்று ஒரு மருத்துவப் பலன் உள்ளது. அதைச் சூடும் போது உடலுக்கும் மனதுக்கும் அமைதியைக் கொடுக்கிறது. அமைதியுள்ள இடத்தில் மகிழ்ச்சி தன்னாலயே பிறக்கிறது. அவ்வளவு தான் விஷயம்.

ஆனால் திருமணத்திற்கு பிறகு அவள் சுமங்கலி ஆகிவிட்டாள்."சுமங்கலியின் அடையாளங்கள் சிவப்பு கலர் பொட்டு, நெற்றியில் குங்குமம், தலையில் பூ"  இது இல்லாமல் அவள் இருக்கக்கூடாது.

நிச்சயம் பெண்கள் இதை விரும்பினால் அணியலாம் ;
அணிவது அவரவர் விருப்பம் ;
அதைக்  குறை சொல்வது என் நோக்கமல்ல ;
அது என்ன சிவப்புக் கலரில் பொட்டு ? சிவப்பு குங்குமம்? இதுவும் அறிவியல் சார்ந்த ஒன்று தான்.
நம் சார்ந்த விஷயங்களை பெண்களே நாம் தான் தேடித் தெரி்ந்தக் கொள்ள வேண்டும்.போய் தேடுங்கள் என்ன காரணம் என்று?புரியும்.

அர்த்தமற்று எனக்கு புருஷன் இருக்கிறான் நான் வைத்துக் கொள்கிறேன் ; உனக்கு தகுதியில்லை வைத்துக் கொள்ள என்று மார்த்தட்டக் கூடாது. நாமே ஒருவரின் உணர்வுகளோடு மனிதநேயமற்று விளையாடக்கூடாது.

பிறந்த முதல் நமக்கான ஒன்றை இறக்கும் வரை நமக்கு தொடர விருப்பம் எனில் தயங்காமல் செய்யுங்கள்.

கணவன் இறந்த பின்பு பல காலமாய் பெண்கள் பொட்டு, பூ  வைப்பதை தவி்ர்த்து வந்தனர்; ஆனால் தற்போது பல பெண்கள் சின்ன சைஸில் உள்ள கருப்பு கலர் பொட்டுகளைப் பயன்படுத்துகின்றனர்;
அவர்கள் டிசைன் "கருப்பு வண்ணம் என்பது அமங்கலிகானதாம்".
சோ கணவன் இழந்தப் பெண்கள் அமங்கலிகள் இங்கே. என்ன கொடுமை இது? அப்பிடியும் மீறி சில பெண்கள் சிவப்பு கலரில் பயன்படுத்தினாலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் அவரின் மீது விழுமே ஒரு  முகச்சுழிப்பு பார்வை .என்னவென்று சொல்வது இந்த மனநிலைகளைக் கண்டு?

கணவரோடு பிரிந்து வாழும் பெண்களின் நிலைமை இதை விட மோசம் என்றே கூறலாம் "காலை அவர்கள் வெளி சொல்லும் நேரம் முதல் மாலை வீடு வரும் நேரம் வரை மணி கணக்கெடுக்கப்படும்;
அவள் வைக்கும் பூவின் முழமும் அளவெடுக்கப்படும்;
ஒருத் தொலைப்பேசி அழைப்பும் நெற்றிச் சுருக்கத்தோடு கவனிக்கப்படும்;
இதைச் செய்ய புரளிகள் பேச யாரும் வெளியூரில் இருந்து வரமாட்டார்கள்.
நம்மைச் சுற்றிய உறவுகளே தான் இதைச் செய்வார்கள். அது தோழியாக இருக்கலாம் ; மாமி , அத்தை , பெரியம்மா, சித்தி ,தங்கை , பக்கத்து வீட்டுகாரங்க என யாராவது கூட இருக்கலாம்.

இரண்டு நாள் வெளியூர் பயணம் சென்றால் கூட விசாரணைகள் கமிட்டி கூடி அனைவருக்கும் செய்திகள் கடத்தப்படும். எந்தக்காலத்திலும் மாறாமல் கட்டுக்கோப்பு என்ற பெயரில் நாம்  வாழ நினைத்து அடுத்தவர் வாழ்வில் ஏற்பட்ட புண்ணை சுரண்டி விடுவதில் நாமே தான் முதலாய் முனைப்புக் காட்டுக்கிறோம்.

"விட்டு ஓடிய ஒருவருக்காக ஒருப் பெண் நல்ல உடை  அணியக்கூடாது ; பூ வைக்கக் கூடாது; பவுடர் பூசக் கூடாது என்று அவரை வாட்டினால் " நம்மை விட மூளை மங்கியவர்கள் யாரும் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.

வாழ்வது சுதந்திரம்; சுயத்தன்மையுடன் வாழ்வது பேரின்பம். வாழ்ந்து தான் பாருங்களேன்.

அதைவிடுத்து  பேசி பேசியே ஒரு வட்டம்  போட்டு அதற்குள் தானும் சுருங்கி, அடுத்தவரின் உணர்வுகளையும் சுருக்கி ஏன் ஒரு மந்த நிலையில் நாமே வாழ வேண்டும்?

ஒரு ஆணோ பெண்ணோ நி்ச்சயம் அவர்கள் ஒரு நாள் தந்தையாய் தாயாய் மாறும் காலத்தில் தன் மகளுக்கோ ,மாமனாராய் மாமியாராய் மாறும் காலத்தில் தன் மருமகளுக்கோ "எந்த சூழ்நிலையிலும் அவளின் விருப்பங்களின் தேவைகளில் கட்டுபாட்டை இடுவதை விடுங்கள்; சிறு வயது முதல் அவளுக்கான உரிமை அவளின் பூவும் பொட்டும் .

ஊருக்காக ஊருக்காக என்று அர்த்தமற்று இரக்கமற்று ஒருவர் அடிப்படை  உரிமைகளை கட்டுப்படுத்துவதோ , அதை வீணாக பிடித்து பேசிக் கொண்டிருப்பதிலோ எந்த பயனும் இல்லை.

குங்குமம் அணிய ஆசைப்படும் அவளின் நெற்றிக்கு விபூதி தான் பூச வேண்டும் என்று சட்டம் போடாதீர்கள்.

மாறுங்கள் ; இல்லையேல் மாற்றம் வேண்டுபவரை வாழ விடுங்கள்.

நன்றி:

ஓஷோவின் புத்தகத்திலிருந்து படித்தது

ஆண்களுக்கு விரைவில் வழுக்கை வரக்காரணம்...



ஆண்களுக்கு விரைவில் வழுக்கை வரக்காரணம்...


முடி கொட்டுவது சாதாரணம் தான். அதிலும் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 100 முடி கொட்டுவது சாதாரணம். ஆனால் அதற்கும் அதிகமாக கொட்டினால் தான் பிரச்சனை.

அதிலும் தற்போது பல ஆண்களுக்கு இளமையிலேயே வழுக்கை விழுவதால், முடி அதிகமாக கொட்டும் போதே ஒருசில செயல்கள் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

பெரும்பாலான ஆண்கள் ஓயாமல் தங்களின் முடியை சீவுவார்கள். ஆனால் இப்படி ஓயாமல் சீவுவதால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, விரைவில் வழுக்கை ஏற்பட்டுவிடும்.

அதுமட்டுமின்றி, தலைக்கு குளித்த பின்னர் டவல் கொண்டு கடுமையாக தலையை தேய்த்தால், வலுவிழந்து இருக்கும் முடி கையோடு வந்துவிடும்.

வேண்டுமெனில் உங்கள் கை விரல்களைக் கொண்டு தலைமுடியை சீவலாம்.

தினமும் தலைக்கு ஷாம்பு போட்டு குளிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஷாம்புவில் உள்ள கெமிக்கல்கள் ஸ்கால்ப் மற்றும் மயிர்கால்களை வலுவடையச் செய்துவிடும்.

முக்கியமாக ஹேர் ட்ரையரை எக்காலத்திலும் பயன்படுத்தக்கூடாது. ஹேர் ஸ்டைலிங் பொருட்களை முடி அதிகம் கொட்டும் போது பயன்படுத்தக்கூடாது.

இதனால் மேன்மேலும் தான் முடி கொட்டும். அதுமட்டுமின்றி ஹேர் ஸ்டைலிங் பொருட்களான ஜெல், ஹேர் ஸ்ப்ரே போன்றவற்றைப் பயன்படுத்தினால், வழுக்கை நன்றாக தெரியும்.

பெரும்பாலான ஆண்களுக்கு அடிக்கடி ஸ்டைல் என்று தொப்பி அணியும் பழக்கம் இருக்கும். ஆனால் இப்படி தொப்பி அணிவதால், முடியில் அழுத்தம் அதிகரிப்பதோடு, அதிகமாக வியர்த்து ஸ்கால்ப்பில் தொற்றுகள் ஏற்படக்கூடும்.

இதனால் கொட்டும் முடியின் அளவும் அதிகரிக்கும். எனவே இவற்றை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

முடி கொட்டுவது சாதாரணம் தான் என்று நினைத்து விட்டுவிட வேண்டாம். அப்படி விட்டால் நாளடைவில் வழுக்கைத் தலை ஏற்பட்டுவிடும்.

எனவே முடி கொட்டினால் உடனே மருத்துவரை சந்தித்து, அதற்கான காரணத்தை கண்டறிவது மிகவும் அவசியம்.

சனி, 16 செப்டம்பர், 2017

பாலில் துளசி சேர்த்து குடித்தால் இவ்வளவு நன்மைகள்...



பாலில் துளசி சேர்த்து குடித்தால் இவ்வளவு நன்மைகள்...


பல்வேறு நோய்களை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ மூலிகையான துளசியை, அனைவருக்கும் தேவைப்படும் அத்தியாவசிய உணவுப் பொருளான பாலுடன் சேர்த்து குடிப்பதால் எண்ணற்ற மருத்துவ நன்மைகளை பெறலாம்.

பாலில் துளசி சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

1 டம்ளர் பாலில் துளசி சேர்த்து குடித்து வந்தால் அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள், உடலின் வெப்பதை குறைத்து, காய்ச்சலை விரைவாக குறைக்கிறது.

துளசியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள், இதயத்தின் நலனை ஊக்குவித்து, இதயத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் நன்றாக சென்று வருவதற்கு உதவுகிறது.

சூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால், அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தி, பதட்டம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை குறைத்து, நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

துளசி, பால் கலந்த பானத்தில் உள்ள சிறந்த டையூரிடிக், யூரிக் அமிலத்தின் அளவை குறைத்து சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதையும், அதை கரைக்கவும் உதவுகிறது.

துளசியில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் செல்களின் உருவாக்கத்தை தடுக்க உதவுகிறது.

சூடான பாலில் துளசி கலந்து குடிப்பதால், அது தொண்டை கரகரப்பு, சளி, வறட்டு இருமல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது

வெள்ளி, 15 செப்டம்பர், 2017

நவராத்திரி கொலு தாத்பர்யம் !!



நவராத்திரி கொலு தாத்பர்யம் !!


ஒரு காலத்தில் தன் எதிரிகளை அழிப்பதற்காக மகாராஜா சுரதா, தன் குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்டார்.

குரு கூறியபடி தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு, காளி ரூபத்தைச் செய்து, அதை ஆவாஹனம் செய்து, உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை வேண்டினான்.

அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து, பின் ஒரு புதுயுகத்தையே உண்டு பண்ணினான்.

*“ஐம்பூதத்தில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால்,          நான் பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சௌபாக்கியங்களையும் அளிப்பேன்."*
என்று, தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளபடி, சுரதா மகாராஜா செயல்பட்டதால், அவன் பகைவர்களை எளிதில் வீழ்த்தி, அவர்களின் இன்னல்களிலிருந்து விடுதலை பெற்றான்.

எனவே, அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரியில், குறிப்பாக சரஸ்வதி பூஜை வழிபாட்டின் முக்கிய அங்கமாக இடம் பெறுகிறது.

*பொம்மையின் தத்துவம்!*

மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.

ஒன்பது படிகள் அமைப்பது மரபு. ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும்.

1வது படி – ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்)

2வது படி – இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்)

3வது படி – மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்)

4வது படி – நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்)

5வது படி – ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்)

6வது படி – ஆறறிவு உயிரினம் (மனித பொம்மைகள்)

7வது படி – மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.

8வது படி – தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள்.

9வது படி – பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகக் கடவுளர்.

இம்முறைப்படி கொலு வைத்து, முப்பெரும் தேவியரை வணங்கி வரும் போது கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் நம்மிடம் செழித்தோங்கும்.

 *கொலுப் படிகளின் தத்துவம்*

கொலுவில் கீழேயுள்ள மூன்று படிகளில் வைக்கப்படும் அரிசி, பருப்பு, பாத்திரம் போன்றவை, தாமச குணத்தைக் குறிக்கும்;

அடுத்த மூன்று படிகளில் வைக்கப்படும் அரசர், ராணி, மந்திரி போன்றவை, ரஜோ குணத்தைக் காட்டும்;

மற்ற மூன்று படிகளில் வைக்கப்படும் தெய்வ உருவங்கள் சத்வ குணத்தை அடையும் வழியை நமக்குக் காட்டுகின்றன.

 *தேவி வழிபாட்டின் பலன்*

வேதங்களில் முக்கியமாகப் போற்றப்படும் தேவியானவள் யாகத்தைக் காப்பவள்.

அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றை அளிப்பவள்.

இனிய வாழ்க்கையைக் கொடுப்பவள்.

 *நலம் தரும் நவராத்திரி ***

 நான்கு விதமான நவராத்திரிகள் பாரத தேசத்தில் பந்நெடுங் காலமாய் கொண்டாடப் பெற்று வருகிறது.

வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வஸந்த நவராத்திரி).(பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. (ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. (புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

நவராத்திரியில் தேவியைக்  கொண்டாடுவது எல்லாருக்கும் சிறப்பு தரும்.



நவராத்திரி வழிபாட்டால் கன்னிப் பெண்கள் திருமண பாக்கியம் பெறுவர்.

சுமங்கலி பெண்கள் பெறுவது மாங்கல்ய அனுகூலம்.

வயதுமூத்த சுமங்கலிப் பெண்கள் மகிழ்ச்சி, மன நிறைவு, திருப்தி பெறுவர்.

புரட்டாசி மாத வளர்பிறை பிரதமையில் தொடங்கி, விஜயதசமியில் முடிகிறது.

பத்து நாட்கள் கொண்டாடப் படுவதால், “தசரா’ என்றும் வடமாநிலம் களில் அழைக்கின்றனர்.

*நவதுர்க்கைகள் :-*

வன துர்க்கை,
சூலினி துர்க்கை,
ஜாதவேதோ துர்க்கை,
ஜூவாலா துர்க்கை,
சாந்தி துர்க்கை,
சபரி துர்க்கை,
தீப துர்க்கை,
ஆகரி துர்க்கை,
லவண துர்க்கை.
இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.

*அஷ்டலட்சுமி:-*

ஆதிலட்சுமி,
மகாலட்சுமி,
தனலட்சுமி,
தானிய லட்சுமி,
சந்தானலட்சுமி,
வீரலட்சுமி,
விஜயலட்சுமி,
கஜலட்சுமி.
இவை லட்சுமியின் அம்சங்கள்.

*அஷ்ட சரஸ்வதி :-*

வாகீஸ்வரி,
சித்ரேஸ்வரி,
துளஜா,
கீத்தீஸ்வரி,
அந்தரிட்ச சரஸ்வதி,
கட சரஸ்வதி,
நீல சரஸ்வதி,
கிளி சரஸ்வதி.
இவர்கள் சரஸ்வதியின் அம்சங்கள்.

உலகம் சக்தி மயமானது என்பதை விளக்குவதே நவராத்திரியின் உன்னத தத்துவம்.

அனைத்து உருவங்களிலும், எல்லா இடங்களிலும் தேவி வியாபித்து இருக்கிறாள் என்பதை குறிக்கும் விதமாகவே கொலு வைத்து வணங்குகிறோம்.


      L

அறிஞர் அண்ணா வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள்!


அறிஞர் அண்ணா வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள்!

இளம் வயதில் இருந்தே தமிழ் மொழியில் புலமை பெற்றவராக திகழ்ந்தவர் சி.என்.அண்ணாதுரை. இதே நாள் 1909 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடராஜன் பங்காரு அம்மையாருக்கு மகனாக பிறந்தார்.
இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்ட அண்ணா பெரியாரின் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் தனியாக பிரிந்து வந்த திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தார்.
மேடைப்பேச்சு மற்றும் எழுத்துக்களால் மக்கள் மனங்களில் இடம்பிடித்திருக்கும் அண்ணாவைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

ஐந்தே விநாடி :
அண்ணா எந்த கூட்டத்தில் பேசினாலும் மக்கள் முழு பேச்சையும் ஆர்வத்துடன் கேட்பது வழக்கம். எவ்வளவு நேரம் கடந்தாலும் மக்களை சோர்வுறச்செய்யாது தன் பேச்சாற்றலால் கட்டிப்போடும் ஆற்றல் உண்டு அவருக்கு.
ஒரு கூட்டத்தில் இரவு வெகுநேரம் ஆகிவிட்டது. அப்போது தான் அண்ணாவிற்கு பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. மைக்கை பிடித்த அண்ணா மாதமோ சித்திரை, நேரமோ பத்தரை உங்களுக்கோ நித்திரை போடுங்கள் உதய சூரியனுக்கு முத்திரை என்று மட்டும் கூறி உரையை முடித்துக் கொண்டார்.
அண்ணாவின் பேச்சைக் கேட்க ஆர்வத்துடன் நின்றிருந்த மக்கள் கூடம் இவரின் இந்தப் பேச்சைக் கேட்ட் வெகு நேரம் ஆரவாரத்துடன் கைத்தட்டினார்கள்.


தமிழ் மட்டுமல்ல :
அண்ணா தமிழ் மொழியில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் சரளமாக சொற்பொழிவாற்றும் ஆற்றல் உண்டு. அமெரிக்கவில் ஒரு கூட்டத்தில் பங்கேற்ற அண்ணாவின் ஆங்கில அறிவை சோதிக்க, 'Because' என்ற இணைப்புச் சொல்லை மூன்று முறை பயன்படுத்தி ஆங்கில வார்த்தை ஒன்று அமைக்குமாறு கேட்டார்களாம், அதற்கு அண்ணா 'Because is a Conjuction because, because is not a word' என்று பதிலளித்து வாயடைத்து விட்டார்.

சொத்து :
காஞ்சிபுரம் தேனம்பாக்கத்தில் ஒரு ஏக்கர் நிலம், காஞ்சிபுரத்தில் ஒரு வீடு,சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு மூன்றும் தான் அண்ணா வைத்துவிட்டுப் போன சொத்துக்கள்!
முதலமைச்சராக இருந்து அவர் இறந்த மாதத்தில் சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் அவருக்கு இருந்தன.

மாட்டார்... மாட்டார் :
தினமும் துவைத்து சுத்தப்படுத்திய வேட்டி-சட்டை அணிய வேண்டும் என்று நினைக்க மாட்டார்.தலை சீவ மாட்டார். கண்ணாடி பார்க்க மாட்டார். மோதிரம் அணிந்தது இல்லை. கைக்கடிகாரம் அணிய மாட்டார்.
ஒரே சட்டையை இரண்டு மூன்று நாட்கள் போடுவார். முதலமைச்சரான பிறகுதான் `வெள்ளையான சட்டை' அணிந்தார்!``என்னை காலண்டர் பார்க்க வைத்து சூழ்நிலைக் கைதியாக்கிவிட்டதே இந்த முதலமைச்சர் பதவி'' என்று புலம்பினார்!.

அதிக புத்தகம் :
மூர்மார்க்கெட் யுனிவர்ஸல் புக் ஷாப், சென்னை ஹிக்கின் பாதாம்ஸ் ஆகிய இரண்டு கடைகளுக்கும் வரும் அத்தனை ஆங்கிலப் புத்தங்களையும் வாங்கிவிடுவார் அண்ணா. அன்றைக்கு ஹிக்கின்பாதாம்ஸ் எடுத்த கணக்கெடுப்பின் படி மைசூர் மகாராஜா ஜெயசாம்ராஜ் உடையாரும், அண்ணாவும் தான் அதிகமான புத்தகங்கள் வாங்கியவர்களாம்.

செல்லபிராணிகள் :
இரண்டு மயில்கள், இரண்டு மான்கள்,புறாக்கள், நாய் ஆகியவற்றைக் கடைசி வரை விரும்பி வளர்த்தார். அவர் இறந்த ஒரு வாரம் கழித்து அவரது படுக்கையைச் சுற்றி வந்து அந்த நாய் அங்கேயே உயிரை விட்டது.

செல்லப்பெயர் :
அண்ணா தனக்கு கீழே இருந்தவர்களை எல்லாம் பட்டத்துடன் அழைப்பது பிடிக்கும். நாவலர், கலைஞர், பேராசிரியர், சொல்லின் செல்வர், சிந்தனைச் சிற்பி, தத்துவ மேதை என்ற பட்டம் சொல்லி அழைத்து அவர்களை வளர்த்து விடுவார்.

வங்கி கணக்கு :
அண்ணா முதலமைச்சராகும் முன்னர் அவருக்கென வங்கிக் கணக்குக் கூட இல்லை. அவர் முதலமைச்சரான பின்னர் அவருடைய மாத ஊதியக் காசோலை முதலியவற்றை மாற்றிப் பணம் பெறுவதற்காகவே பத்து ரூபாய் மட்டும் செலுத்தி ஒரு வங்கிக் கணக்கு அண்ணா பெயரில் தொடங்கப்பட்டது.

அண்ணாவின் குணம் :
அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த போது அன்றைய மரபுப்படி அவர் வீட்டிற்கு வெளியே கையில் துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவர் விரைப்பாக நின்று கொண்டிருந்தார்.
இதனைக் கண்ட அண்ணா, பணி நேரம் முழுவதும் இப்படி ஒருவர் நிற்பது தமக்கு வருத்தம் தருவதாகக் கூறிக் காவலர் அங்கே நிற்க வேண்டாம் எனக் கூறினார்.
ஆனால் காவல் துறையினர் அது பாதுகாப்பு ஏற்பாடு அதனை நீக்க இயலாது எனத் தெரிவித்தனர். உடனே அண்ணா, 'அப்படியானால் அவரைச் சாதாரண உடையில் ஓர் இருக்கையில் அமரச் செய்யங்கள்' என்று கூறினார்.

சிந்திக்க மட்டுமல்ல சிரிக்கவும் வைக்கும் பேச்சு :
அண்ணா முதலமைச்சராக இருந்த போது சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராக இருந்த திரு. விநாயகம். சட்டமன்றத்தில் புளி விலை ஏறி விட்டதைப் பற்றிக் காரசாரமாகப் பேசினார். அப்போது அவர், 'எங்கள் ஆட்சியில் புளி விலை குறைந்திருந்ததே அது யார் சாதனை?' என்று கேட்டார்.
உடனே அண்ணா. 'அது புளிய மரத்தின் சாதனை' என்றார். அண்ணாவின் பதில், கேள்வி கேட்ட விநாயகம் உள்ளிட்ட அனைவரையும் சிரிக்கச் செய்தது.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் :
அறிஞர் அண்ணாவுக்குச் சிலை வைக்க நினைத்த எம்.ஜி.ஆர். அண்ணாவைப் போட்டோ எடுத்துவரச் சொன்னார். புகைப்படம் எடுப்பவரிடம் அண்ணா 5 விரலைக் காட்டி புகைப்படம் எடுக்கச் சொன்னார்.
அதற்கு, உங்களை ஒரு விரல் காட்டித்தான் படம் எடுத்து வரச் சொன்னார் என்றார் போடோகிராபர். அண்ணாவுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை ஆனாலும் போட்டோகிராபர் சொன்னபடி ஒரு விரலைக் காட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
பிறகு எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்த போது ஏன் ஒரு விரலை காண்பித்தபடி புகைப்படம் எடுக்கச் சொன்னாய் என்று கேட்டார் அண்ணா, அதற்கு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற உங்கள் பொன்மொழியை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று எம்.ஜி.ஆர் சொன்னதும் அவரை வெகுவாக பாராட்டியிருக்கிறார் அண்ணா .
இன்று அறிஞர் அண்ணாவின் பிறந்ததினம்!.

தலையணை இல்லாமல் படுத்து உறங்குவதால் பெறும் நன்மைகள் என்ன தெரியுமா?



தலையணை இல்லாமல் படுத்து உறங்குவதால் பெறும் நன்மைகள் என்ன தெரியுமா?

தலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும்? என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும்.

சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ஒன்று என பல தலையணை பயன்படுத்தி உறங்குவார்கள்.

 சிலருக்கு தலைக்கே இரண்டு தலையணை வைத்து படுத்தால் தான் உறக்கம் வரும்.

ஆனால், தலையணை வைத்து படுத்து உறங்குவதால் தான் உடலில் சில பிரச்சனைகளும் ஏற்படுகின்றன என கூறப்படுகிறது….


தண்டுவடம் ....!!!!


தலையணை பயன்படுத்தாமல் படுத்து உறங்குவதால் தண்டுவடம் அதன் இயற்கை நிலையில் இலகுவாக இருக்கும்.

 இதனால் தண்டுவட பிரச்சனை, உடல் வலி போன்றவை ஏற்படாது.

 கெட்டியான / கடுமையான தலையணை பயன்படுத்துவதால் தண்டுவடத்தில் தீய தாக்கங்கள் உண்டாகலாம்.


கழுத்து!


தலையணை இல்லாமல் உறங்குவதால் தோள்பட்டை மற்றும் கழுத்து வலி உண்டாகாமல் தடுக்க முடியும். வலியை குறைக்க முடியும்.

சீரமைப்பு ...!!!


தலையணை இல்லாமல் படுத்து உறங்குவதால் உடலின் எலும்பு நிலைகளை சீராக்க முடியும்.

ஆனால், சிலருக்கு மருத்துவ நிலை காரணமாக தலையணை பயன்படுத்துவதாக கட்டாயமாக இருக்கும், அவர்கள் தலையணை பயன்படுத்த வேண்டியது அவசியம்.

முக சுருக்கங்கள்!


 தலையணை பயன்படுத்தாமல் உறங்கினால் முகத்தில் சுருக்கங்கள் அதிகமாகாது என கூறப்படுகிறது.


மெல்லிய தலையணை!


நேராக படுத்து உறங்கும் பழக்கம் உடையவர்களுக்கு மெல்லிய தலையணை சிறந்தது.

இது கழுத்து, தலை, தோள்ப்பட்டை பிரச்சனைகள் உண்டாகாமல் காக்கும்.


 அடர்த்தியான தலையணை!


 ஒருபக்கமாக படுத்து உறங்கும் நபர்களுக்கு அடர்த்தியான தலையணை சிறந்தது.

இது தோள்பட்டை மற்றும் காதுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தி கொடுக்கும்.

தட்டையான தலையணை!

குப்புறப்படுத்து உறங்கும் நபர்களுக்கு தட்டையான தலையணைகள் சிறந்தது.

இது தலையின் நிலை அசௌகரியமாக உணராமல் இருக்க உதவும். மேலும், முதுகு, இடுப்பு வலி ஏற்படாமல் தடுக்கும்.

புதன், 13 செப்டம்பர், 2017

தாலி கட்டுவது மட்டுமே திருமணம் அல்ல.



தாலி கட்டுவது மட்டுமே திருமணம் அல்ல.
தாலி கட்டுவது, இந்த இருவரும் கணவன் மனைவி ஆவதற்கு முன் நடக்கும் ஒரு வைதீக சடங்கு.

இதையே திருமணம் முடிந்தது, கணவன் மனைவி ஆகிவிட்டனர் என்று நினைத்தால், அது தவறு. இவர்கள் இன்னும் கணவன் மனைவி ஆகவில்லை.

இதற்கு பின் இவர்கள் இருவரும் அக்னியை வலம் வந்து, சப்தபதி என்ற சடங்கு செய்த பின்பு தான், கணவன் மனைவி ஆகின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சரி, தாலி கட்டுவது எதற்கு ?
கணவன், மனைவி ஆவதற்கு முன், கணவன் இவளிடம் செய்து கொள்ளும் ஒரு ஒப்பந்தம் போன்றது (Setting up Expectation).

திருமணத்தில் திருமாங்கல்யம் (தாலி) கட்டுகிறான் மணமகன். தாலி 3 காரணங்களுக்காக ஆண் பெண்ணுக்கு கட்டுகிறான்.

1. மாங்கல்யம் என்பது பெண்களின் தற்காப்புக்காக ஏற்பட்டது. அவள் மணமானவள் என்பதைக் மற்றவர்களுக்கு காட்டும் அடையாளம். இந்த அடையாளம், இவளை தீய குணம் உள்ளவர்களிடம் இருந்து காக்கும். பலர் தாலி அணிந்த பெண் என்று பார்த்தவுடனேயே மரியாதையாய் பழகுவர்.
ஒரு ஆணின் வெளி தோற்றத்தை வைத்து எந்த பெண்ணும் ஆசைப்படுவதில்லை, அலைவதும் இல்லை.
பெண் இவன் நல்லவன், ஆறுதல் அளிப்பவன், காப்பாற்றும் திறன் உள்ளவன் என்று பழகும் போது அறிந்து கொண்டு, அதற்கு பின் அவன் பின்னே அலைவாள்.
பெண் மற்ற ஆணுடன் பழக பழக தவறான வழிக்கு போக வாய்ப்பு உள்ளது. அதனால் பெண்ணுக்கு ஒரு ஆணை பார்த்ததினால் மட்டுமே தீய எண்ணம் தோன்றாது. ஆனால், ஆண் என்றுமே நம்பத்தகுந்தவன் அல்ல.
ஆண் வண்டு போன்றவன், பெண் பூ போன்றவள் என்று சொல்வது இதனால் தான்.

ஒரு பெண்ணை பார்த்தே இவன் சபல புத்தி கொள்வான். இதனால் தான், பெண் தாலி அணிவது அவசியம். விவேகம் உள்ள ஆண், சபல புத்தி இருந்தாலும், தாலி கட்டிய ஒரு பெண்ணை நெருங்க தயங்குவான்.

தியானம், யோகம் எல்லாம் ஆணுக்கு விதிக்கப்பட்டது போல, பெண்ணுக்கு விதிக்கப்படவில்லை. காரணம், பெண்ணுக்கு அது தேவை இல்லை.

பெண் எப்பொழுது வேறு ஆணிடம் பழகுகிறாளோ, அப்பொழுது தான், இவள் மனம் கெட வாய்ப்பு உள்ளது, ஆனால், ஒரு ஆண் பழகாமல் இருந்தாலும், பெண் உருவமே சபலத்தை கொடுத்து இவன் மனம் கெட வாய்ப்பு உள்ளது. இதை எல்லாம் அறிந்து தான், தாலி என்பது பெண்ணுக்கு மிக மிக அவசியம் என்று விதித்தனர்.

2. தாலியை அடையாளமாக கட்டும் மணமகன், பெண்ணை பார்த்து சொல்கிறான் "இது மங்களசூத்திரம். நான் நீண்டகாலம் வாழவேண்டும் என்று இறைவனை வேண்டி உனக்கு அணிவிப்பது. சௌபாக்கியவதியே! நீ நூறாண்டுகள் சுமங்கலியாக, சுகமாக வாழ்ந்திருப்பாயாக!". இப்படி சொல்லும் ஆண், "நீ சுகமாக வாழ நான் எப்பொழுதும் இருப்பேன். நான் இறந்து, உன்னை தனியாக விட்டு விடாமல் இருக்க எனக்கும் நீண்ட ஆயுள் தேவை. அதனால், நான் 100 ஆண்டுகள் உன்னோடு வாழ, நீ இறைவனிடம் வேண்டி பிரசாதமாக தரும் இந்த தாலியை அணிந்து கொள்" என்று ஆசையாக இவளை கடைசி வரை காக்கும் எண்ணத்துடன் அணிவிக்கிறான்.
பாணிக்ரஹனம் செய்யும் போது, உன் தந்தை மிகவும் உயர்ந்தவர் என்று சொல்லும் போது, மணப்பெண்ணுக்கு இவனிடம் அன்பு உண்டாகிறது.
மாங்கல்யம் கட்டும் போது, தனக்கு நீண்ட ஆயுள் கேட்பது, உன்னை காப்பதற்கே என்று சொல்லும் இவனிடம், மணப்பெண்ணுக்கு மேலும் அன்பு உண்டாகிறது.
இந்த அன்பு மேலும் உறுதியாக சப்தபதி என்ற சடங்கில் இருவரும் பிரிக்க முடியாத கணவன் மனைவி ஆகின்றனர்.

3. தாலி கட்டும் ஆண் வெறுமனே கட்டுவதில்லை. அவள் அணிந்து இருக்கும் தாலியில் மூன்று முடிச்சு போடுவான். தாலி எப்பொழுதும் அணிந்து இருக்கும் பெண், இந்த மூன்று முடிச்சின் காரணத்தை தினமும் ஸ்மரிக்க (ஞாபகபடுத்தக் கொள்ள) வேண்டும் என்பதற்காக தான்.

- சௌபாக்கியவதியே ! நீ எந்த செயலை செய்தாலும், முக்காலமும் உணர்ந்து இல்லற தர்மத்தைப் பேணவும்.
நீ செய்யும் செயல், பிற்காலத்தில் ஏன் இப்படி அதர்மம் செய்தோம் என்று வருந்தும் படியாக இருக்க கூடாது.
நீ செய்யும் செயல், நிகழ் காலத்தில் அதர்மம் நடப்பதற்கும் காரணம் ஆகி விட கூடாது.
நீ செய்யும் செயல், இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த பழக்கம், தர்மத்திற்கு எதிராகவும் இருந்து விட கூடாது.
சௌபாக்கியவதியே ! ஆதலால், நீ எந்த செயலை செய்தாலும், முக்காலமும் உணர்ந்து, இல்லற தர்மத்தைப் நீ பேணவும்.

- மும்மூர்த்திகளுக்கு இந்த மூன்று முடிச்சுகளை அர்ப்பணிப்பது தெய்விகமான அம்சம். சௌபாக்கியவதியே ! கண்ணுக்கு தெரியாத, வரப்போகும் எந்த ஒரு ஆபத்தும் உன்னை நெருங்கி விடாமல் இருக்க, அந்த ப்ரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகள் காக்கட்டும். அதற்காகவே மூன்று முடிச்சு. 3 தெய்வங்கள் உனக்கு துணை என்று தினமும் நினைத்து, தைரியமாக குடும்பத்தை நடத்து.

- சௌபாக்கியவதியே, உலகியல் ரீதியாக தெய்வம், பெற்றோர், கணவன் மூவரையும் நீ மதிக்க வேண்டும். அதற்காவும் மூன்று முடிச்சு.

- சௌபாக்கியவதியே ! நீ மனம் - வாக்கு - உடல் இவற்றின் புனிதத்தோடு திருமண பந்தத்தைக் கடைசி வரை காக்கவும். இந்த மூன்று முடிச்சு உனக்கு இதையும் ஞாபகப்படுத்தட்டும். எக்காலத்திலும் மனத்தாலோ, வாக்காலோ, உடலாலோ உன் புனிதத்தன்மையை கெடுத்துக் கொள்ளாமல், திருமண பந்தத்தைக் நீ காக்கவும்.

காரணம் இல்லாமல் பாணிக்ரஹனம் செய்ய வில்லை, தாலி கட்டவில்லை, சப்தபதி செய்வதில்லை.
ஹிந்துவாய் இருந்தால், பல ஆச்சர்ய விஷயங்கள் நமக்கு தெரிய வரும். மேலும், நாம் ஹிந்து குடும்பத்தில் பிறந்து இருக்கிறோம் என்ற சந்தோஷமும் நமக்கு உண்டாகும்.

ஏன் எதற்கு என்ற நியாயமான கேள்விகளுக்கு பதில் சரியான பெரியோர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டா லே, பல விடைகள் கிடைக்கும். ஹிந்துவாய் பிறந்ததற்கே நமக்கு பெருமிதம் அதிகரிக்கும்.

திங்கள், 11 செப்டம்பர், 2017

தலையணைக்கு கீழ்ஒரு பூண்டு பல்வைத்து உறங்குவதால்பெறும்நன்மைகள்என்னென்ன?



தலையணைக்கு கீழ்ஒரு பூண்டு பல்வைத்து உறங்குவதால்பெறும்நன்மைகள்என்னென்ன?

தூக்கமின்மை என்பது இப்போது பெரும்பாலும் அனைவர் மத்தியிலும் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூக்கமின்மை கோளாறினால் அவதிப்படாதவர்கள் இல்லை எனவே கூறலாம்.

கடைசியாக நாம் குடும்பமாக சீக்கிரம் உறங்கிய நேரம் எப்போது என நீங்கள் யோசித்து ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். பத்து வருடத்திற்கு முன் 8 மணிக்கு இரவு உணவு சாப்பிட்டுவிட்டு, ஒன்பது மணிக்கு விளக்கை ஆப் செய்துவிட்டு தூங்கியது தான் வழக்கமாக இருந்தது.

ஆனால், இன்று பல வீடுகளில் அம்மா, அப்பா வீட்டிற்கு வருவதே 8 - 10 மணிக்குள் தான். போதாக்குறைக்கு ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவிக்கள் வேறு....

 தூக்கமின்மை!

24X7 மொபைல் மற்றும் இணையத்தில் அதிகமாக நேரம் செலவிடுவது, பொழுதுபோக்காக இருப்பினும், வேலையாக இருப்பினும் கணினி முன்பே அமர்ந்திருப்பது உறக்கத்தை வலுவாக கெடுக்கிறது. இதற்கு கண்டிப்பாக தூக்க மாத்திரைகள் நிரந்தர பயனளிக்காது.

 மனநல சீர்கேடு!

நல்ல உறக்கம் என்பது உங்கள் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. உறக்கம் சீர்கெட்டு போனால், மனநலம் சீர்கேடும். மனநலம் பாதிப்பது உங்கள் வேலை, உறவு என உங்கள் அன்றாட வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் பெரும் தாக்கத்தை உண்டாக்கும்.

 பூண்டு!

இதற்கான நல்ல உறக்கத்தை பெறுவதற்கான தீர்வு உங்கள் சமையல் அறையிலேயே இருக்கிறது. ஆம், தினமும் உறங்க செல்வதற்கு முன்னர் உங்கள் தலையணைக்கு கீழ் ஒரு பூண்டு பல்லை வைத்துவிட்டு உறங்குங்கள்.

தன்மை!

பூண்டின் லேசான உஷ்ணம் மற்றும் மூலிகை நறுமணம் மூளையின் செயல்பாட்டை ஊக்கவித்து, தூக்கமின்மை கோளாறை சரிசெய்ய உதவுகிறது.

 நன்மைகள்!

பூண்டு ஒரு சிறந்த மூலிகை உணவுப் பொருள். உங்கள் அன்றாட உணவில் தினமும் சிறிதளவு பூண்டை சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்தை மேலோங்க வைக்கும்.

பூண்டு, சளி தொல்லை, தமனிகளில் ஏற்பட்டிருக்கும் தடைகள் / அடைப்புகள், கல்லீரல் நலன் மற்றும் நோய் எதிர்ப்பு என பல நன்மைகள் புரிந்து உதவுகிறது.

 நல்ல உறக்கம்!

நல்ல உறக்கம் தருவது மட்டுமின்றி, முடி உதிர்தல் மற்றும் ஹார்மோன் சார்ந்த பிரச்சனை / கோளாறுகளுக்கும் பூண்டு ஒரு சிறந்த நிவாரணியாக திகழ்கிறது.

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

குழந்தைகளுக்கு எப்போதெல்லாம் ஆயில் மசாஜ் செய்யலாம் ....?


குழந்தைகளுக்கு எப்போதெல்லாம் ஆயில் மசாஜ் செய்யலாம் ....????


குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்துவிடுவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு குழந்தையின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பையும் அக்கறையையும் அந்த தொடுதல் அவர்களுக்குப் புரிய வைக்கும்.

குழந்தைகளுக்கு தினமும் மசாஜ் செய்துவிடுவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு குழந்தையின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பையும் அக்கறையையும் அந்த தொடுதல் அவர்களுக்குப் புரிய வைக்கும்.

தினமும் குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்துவிடுவது குழந்தைக்கு நல்ல தூக்கத்தையும் கொடுக்கும்.

 அதுமட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு ஆயில் மசாஜ் செய்துவிடுவால் வேறு சில நன்மைகளும் உண்டு.

உடல் எடை அதிகரித்தல், செரிமானத்தில் உதவுதல், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல் மற்றும் பற்கள் வளரும்போது வலி அதிகமாகாமல் இருத்தல் என பல நன்மைகள் உண்டு.

 குழந்தைக்கு ஆரம்ப காலத்திலேயே மசாஜ் செய்து வந்தால், மஞ்சள் காமாலை வராமல் தடுக்க முடியும்.

தூங்கி எழுந்தவுடன் குழந்தைக்கு ஆயில் மசாஜ் செய்வது கூடாது.

குழந்தை விழித்திருக்கும் போது, நன்கு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தான் ஆயில் மசாஜ் செய்ய வேண்டும்.

மசாஜ் செய்வதை குழந்தைகள் அனுபவிக்க ஆரம்பித்துவிடும்.

ஒருவேளை மசாஜ் செய்து கொண்டிருக்கும் பொழுது குழந்தை அழ ஆரம்பித்தால் அதற்கு மசாஜ் செய்தது போதும், நிறுத்த வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

திருமணமான பெண்கள் நெற்றியில் ஏன் குங்குமம் வைக்க வேண்டும் தெரியுமா ....??



திருமணமான பெண்கள் நெற்றியில் ஏன் குங்குமம் வைக்க வேண்டும் தெரியுமா ....????


திருமணமான இந்திய பெண்கள் தங்களது நெற்றியில் வகிடுகளுக்கு மத்தியில் குங்குமம் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

 திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது மங்கல சின்னமாக கருதப்படுகிறது.

சுமங்கலி பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கணவனின் ஆயுளை அதிகரிக்க செய்கிறது என இந்து முறைப்படி நம்பப்படுகிறது.

மேலும் விதவைப்பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது இல்லை.


#1
இந்துக்களின் ஜோதிட முறைப்படி நெற்றி, மேச ராசி அதிபதிக்கு உரியது அதாவது செவ்வாய்க்கு உரியது. செவ்வாயின் நிறம் சிவப்பு ஆகும்.


#2
நெற்றியில் குங்குமம் அணிவது மங்கலகரமான விஷயமாக கருதப்படுகிறது.

 மேலும் நெற்றியில் குங்குமம் வைத்திருக்கும் பெண் சௌபாக்கியவதியாக கருதப்படுகிறாள்.

குங்குமம் பெண்ணிற்கு பார்வதியின் சக்தியை தருவதாக நம்பப்படுகிறது.


#3
வட இந்தியாவின் முக்கிய விழாக்களான நவராத்திரி மற்றும் சங்கராத்திரி ஆகிய பண்டிகைகளின் போது கணவன் மனைவியின் நெற்றியில் குங்குமம் வைத்துவிடும் பழக்கம் இருக்கிறது.

மேலும் குங்குமம் சக்தி, லட்சுமி, விஷ்ணு போன்ற தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.


#4
திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதால் சகிப்புத்தன்மை அதிகரிக்கிறது. குங்குமானது மஞ்சள், எலுமிச்சை, மெட்டல் மெர்குரி ஆகியவற்றின் கலவையாகும்.

மெர்குரி இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் உடலுறவு விஷயத்திலும் உதவுகிறது.

இதனால் தான் கணவனை இழந்த பெண்கள் குங்குமம் வைக்க கூடாது என்று சொல்லப்படுகிறதாம்.


#5
நெற்றியில் இடும் குங்குமம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது.

மேலும் நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது.

எனவே, நெற்றித் திலகம், நம்மை இறை அனுக்கிரகத்துடன் வாழவைப்பதுடன் தீய சக்திகள் நம்மை அணுகாமல், தீய எண்ணங்கள் எழாமல் காக்கிறது.


#6
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும். பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.


#7
குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

சனி, 9 செப்டம்பர், 2017

மெலிந்த கன்னம் குண்டாகவும் பளபளப்பாகவும் மாற சில டிப்ஸ்...



மெலிந்த கன்னம் குண்டாகவும் பளபளப்பாகவும் மாற சில டிப்ஸ்...


முகத்திற்கு பொலிவு தருபவை கன்னங்கள். கன்னங்கள் கொஞ்சம் புஷ்டியாக இருந்தாலே உங்கள் அழகை அதிகரித்துக் காட்டும்.

அதேசமயம் என்னதான் உடல் புசு புசு வென்று இருந்தாலும் ஒட்டிய கன்னங்கள் முகத் தோற்றத்தையே கெடுத்துவிடும்.

எனவே ஒட்டிய கன்னங்களை மெருகேற்ற ஆரோக்கிய உணவு முறை அவசியம்.

எனவே அன்றாட உணவில் புரதம், மாவுச் சத்து, கொழுப்பு சத்து, நிறைந்த உணவுகளை நிறைய சேர்க்க வேண்டும்.

காலையில் எழுந்து சிறிதளவு வெண்ணெயுடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து கலவை செய்து முகத்திற்கு பேசியல் போட கன்னம் பளபளப்பாக மாறுவதோடு குண்டாகும்.

மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து அதை வாயில் ஊற்றிவைத்திருந்து பின் கொப்பளிக்க வேண்டும். இதனால் கன்னத்தின் அழகு கூடும்.

சில ஆப்பிள் துண்டுகள், சில கேரட் துண்டுகள், அரை கப் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கன்னம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.

ஆலிவ் ஆயில் கன்னத்தில் தேய்த்து வர பளபளப்புகூடும். பார்ப்பவர்களை பிடித்து கிள்ளத் தூண்டும்.

கற்றாழையால் செய்யப்பட்ட கிரீம் முகத்திற்கு ஆரோக்கியம் தருவதோடு பளபளப்பையும் தரும்.

ஒரு கப் பாலில் ஒரு தேக்கரண்டி தேன், கொஞ்சம் சீஸ் ஒரு மேஜைக் கரண்டி ஓட்ஸ் கலந்து குடிக்க வேண்டும்.

அதோடு தினமும் ஆரஞ்ச் ஜூஸ் குடித்து வர புசு புசு கன்னம் கிடைக்கும்.

ஒரு டீ ஸ்பூன் தேன், ஒரு டீ ஸ்பூன் பப்பாளி சேர்த்து பேஸ்டாக்கி முகத்தில் அப்ளை செய்யவும். பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ முகம் பொலிவு தரும்.

பால்,முட்டை, மீன், இறைச்சி, வெண்ணெய், நெய், வாழைப்பழம், வேர்க்கடலை, சுண்டல் ஆகியவற்றை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பருப்பு, கீரைகள், ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.தினமும் எட்டு மணி நேரம் கண்டிப்பாக உறங்க வேண்டும்.

கவலை ஏற்பட்டாலே முகத்தின் பொலிவு குன்றி கன்னங்கள் ஒட்டிவிடும்.

எனவே நடப்பது நன்மைக்கே என்று நினைத்து கவலையை விரட்டுங்கள் அப்புறம் பாருங்கள் ஒட்டிய உங்களது கன்னம் புஷ்டியாக மாறி அழகு அதிகரிக்கும்.

பெண்கள் அணிந்து கொள்ளும் புதிய நகை கண்டுபிடிப்பு...



பெண்கள் அணிந்து கொள்ளும் புதிய நகை கண்டுபிடிப்பு...


இது இன்றைக்கு புதிதாக கண்டுபிடிப்பென்று கூறி விட முடியாது.

அந்நாளில் எகிப்து மற்றும் கிரேக்கப் பெண்களுக்கு உலோகத்தில் பட்டை தீட்டப்பட்ட நகங்களை அணியும் வழக்கம் இருந்திருக்கிறது.

அதை அவர்கள் நெயில் நகை என்ற கண்ணோட்டத்தில் பயன்படுத்தவில்லை என்றாலும் அப்போதிருந்தே நகங்களைச் சோடிக்கும் வழக்கம் பெண்களிடையே இருந்திருக்கிறது என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் பல உள்ளன.

அது மட்டுமல்ல, சத்ரபதி சிவாஜி தன்னை உறவாடிக் கொல்ல உத்தேசித்த எதிரியான அப்சல்கானைக் கூட தனது நகங்களில் மாட்டிக் கொண்ட புலி நகங்களால் தான் கொலை செய்தார் என்பது வரலாறு.

ஆகவே ஆபரணமாக அல்லாது உலோகங்களால் போலி நகங்களைச் செய்து மாட்டிக் கொள்வது தொன்று தொட்டே இந்தியாவில் மட்டுமல்ல இந்தியாவுடன் வியாபாரத் தொடர்பில் இருந்த பிற தேசங்களிலும் வழக்கமான ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது.

ஆகவே ஆண்கள் யாரும் இதென்னடா நமது பர்சுக்கு வந்த புதுச் சோதனை என பீதியாக வேண்டாம்.

ஏற்கனவே புழக்கத்தில் இருந்து பின் ஏதோ ஒரு காரணத்தால் அல்லது அசெளகரியத்தால் மறைந்து போயிருந்த பழக்கமொன்று இப்போது புனர்ஜென்மமெடுத்திருக்கிறது அவ்வளவு தான்.

பெண்கள் அணிந்து கொள்ள கிடைத்த புதிய நகையென்று இதைச் சொன்னாலும் கூட இதை அணிந்து கொள்வதில் இருக்கும் அசெளகரியத்தையும் பெண்கள் உணர்ந்தே இருப்பார்கள்.

இரவில் மட்டும் கார் பைக்குகளை நாய்கள் வேகமாக துரத்துவது ஏன் ?



இரவில் மட்டும் கார் பைக்குகளை நாய்கள் வேகமாக துரத்துவது ஏன் ?


பொதுவாக அலுவலக வேலை முடித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்புபவர்களை மட்டும் நாய்கள் ஓன்றுகூடி துரத்தும்.

பெரும்பாலான நபர்களுக்கு இதில் அனுபவம் கூட இருக்கலாம், இதற்காக காரணம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

நாய்கள் பொதுவாக நினைக்கும் உள்ளுணர்வுகள்

மனிதர்கள் தங்களுக்கு என்று தனி எல்லைகள் வைத்திருப்பதை போல நாய்களும் தங்களுக்கு என்று மரம், போஸ்ட் கம்பம், கார்கள் மற்றும் வாகனங்கள் மீது சிறுநீர் கழிப்பது போன்றவற்றை தனது எல்லையை குறித்து வைத்துக் கொள்கிறது.

நாய்கள் முன்னதாக குறித்து வைத்துள்ள தன்னுடைய எல்லைகளை தாண்டி, புதியதாக ஏதேனும் வாகனம் வந்து அதன் மீது வேறு நாயின் சிறுநீர் வாடைகள் தென்பட்டால், வேறு பகுதி நாய் தங்கள் பகுதிக்கும் நுழைவதாக நாய்கள் கருதுகின்றது.

நாய்களுக்கு பொதுவாக உள்ளுணர்வுகள் அதிகமாக உள்ளது.

எனவே சாலையில் செல்லும் வாகனங்கள் வேகமாக செல்லும் போது நாய்களின் உள்ளுணர்வுகள் மிக அதிகமாக தூண்டப்படுகிறது.

சாலையில் செல்லும் ஒருசில வாகனங்களால் விபத்து அல்லது வேறுவிதமான அபாயம் ஏற்பட அனுபவம் இருந்தால், நாய்கள் அந்த மாதிரியான வாகனங்களை துரத்துகிறது என்று ரிஷப் மஷும்தர் என்பவர் கூறியுள்ளார்.

நாய்கள் இரவில் செல்லும் வாகனங்களை துரத்துவதற்கு என்ன காரணம்?

இரவு நேரத்தில் வரும் வாகனத்தின் அதிக ஒளி (ஹெட்லைட்), அதிகமான சத்தம் ஆகியவற்றை எழுப்பிக் கொண்டு வேகமாக வருவதால், தெருக்களில் உள்ள நாய்கள் மோப்பம் பிடித்து யோசிக்காமல், உடனே அந்த வாகனத்தை துரத்துகிறது.

இதற்கு அந்த வாகனத்தின் அதிவேக சத்தங்கள் காரணமாக அமைகிறது.

சாலையில் வரும் போது, ஒருசில வாகனங்களின் சைலன்சறை சிலர் மாற்றி அமைத்திருப்பதால், அதிக இரைச்சல் கொண்டிருக்கும். இதனால் நாய்கள் தங்களின் உள்ளுணர்வுகளின் மூலம் எதோ ஆபத்துக்கள் ஏற்பட போகிறது என்று நினைத்துக் கொண்டு அந்த வாகனங்களை துரத்துகின்றது.

ஒருசில மனிதர்களின் உடல் அசைவு மற்றும் அவர்களின் அச்சத்தை நாய்கள் உணர்ந்துக் கொள்ளும் திறன் கொண்டுள்ளது.

எனவே மனிதர்கள் பயத்துடன் சாலையைக் கடந்தால், அவர்களின் பயந்த உணர்வுகளை வைத்து, தெருக்களில் இருக்கும் நாய்கள் அவர்களைத் துரத்துகின்றது.

பல்வேறு மொழிகளில் மனைவியை எப்படி அழைக்கிறார்கள் -- மனைவி பற்றி ஒரு சிறு குறிப்பு!



பல்வேறு மொழிகளில் மனைவியை எப்படி அழைக்கிறார்கள் -- மனைவி பற்றி ஒரு சிறு குறிப்பு!


💧 நமது மனையில் வெற்றிகரமாக வீற்றிருப்பவள் என்பதால், *மனைவி* என்றும்...

💧நமது வாழ்வில் கடைசிவரை தொண தொணவென்று துணையாய் வருபவள் என்பதால், *துணைவி* என்றும்...

💧பொன் நகையை வாங்கி தருமாறு நம்மை ஆட்டி வைப்பதால் , *பொண்டாட்டி* என்றும்...

💧நம்மை அவ்வப்போது பஞ்சராக்கும் ஜாதி என்பதால், *பொஞ்சாதி* என்றும்...

💧காஃபியை ஆத்திக் கொடுத்தே தனது காரியத்தை சாதித்து விடுவதால், *ஆத்துக்காரி* என்றும்...

💧ஷாப்பிங் போய் விட்டு வீட்டுக்கு வந்ததும் நம்மை பார்த்து அவள் கேட்டதை எல்லாம் வாங்கித்தர முடியாத துப்பு கெட்டவன் என்று காரி துப்புவதால், *வீட்டுக்காரி* என்றும்...

💧கடைசிவரை வந்து உனக்கு பீப்பீ ஊதப்போவது நாந்தான்யா என்பதால், *பீபி* (ஹிந்தி) என்றும்...

💧உனக்கு கடைசிவரை நாந்தான் எல்லாம் என்பதால், *பெல்லாம்* (தெலுகு) என்றும்...

💧நம்மை மதி கெட்டவன் என்று கூறி அடிக்கடி அவள் சிரிப்பதால் *ஸ்ரீமதி* (நேபாளி) என்றும்...

💧 அவ்வப்போது  நமது மனதை கார்த்திகை தீபம் போல்  சூடாக்குவதால்,  *மனகார்த்தி* (கன்னடம்) என்றும்...

💧கணவனை என்றும் திட்டிக் கொண்டே இருக்கின்றாள் என்பதால், *கன்டித்தி* (கன்னடம்) என்றும்...

💧நம்மை திட்டுவதற்கு முன் இங்க பாருய்யா என்று ஆரம்பிப்பதால், *பாரியா* (மலையாளம்) என்றும்...

💧வாழ்நாள் முழுவதும் கண்ணுக்கு அறியாத Wi-Fi போல் நம் மேல் கண்காணிப்பு அலைவரிசையாய் தொடர்வதால் *Wife* (ஆங்கிலம்) என்றும்...

💧கடைசிவரை நம்மை விட்டுப் பிரியாமல் ஜவ்வு மிட்டாய் போல் ஒட்டிக் கொண்டு வருவதால் *ஜவ்ஜத்* (அரபிக்) என்றும்...

💧வேலைக்கு செல்லும்போது அசையும் சொத்து போல கையசைத்து பை பை சொல்வதால், *அஷாவா பபாய்* (பிலிப்பைன்ஸ்) என்றும்...

💧காலம் முழுவதும் நாந்தான்யா உனக்கு பவுலர் என்று  நம் மீது எதையாவது வீசிக்கொண்டு இருப்பதால், *பவுள* (சிங்களம்) என்றும்...சொல்கிறார்கள்

 இது மனைவியின் திட்டு காதில் விழாமல் இருக்க விட்டத்தை பார்த்து யோசிக்கும் போது வந்த நொந்து போன கருத்துகள்....
.

வெள்ளி, 8 செப்டம்பர், 2017

இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..



இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..

இட்லி, சப்பாத்தி, தோசை, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த தக்காளி ஊறுகாய் சூப்பராக இருக்கும். இந்த தக்காளி ஊறுகாய் பத்து நாட்கள் வரை கெட்டுப்போகாது.
தேவையான பொருட்கள் :

தக்காளி - 1 கிலோ
காய்ந்த மிளகாய் - 2
தனி மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து.


செய்முறை :

வெந்தயத்தை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளியுடன், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு பெருங்காயம் போட்டு நன்றாக வதக்குங்கள்.

தக்காளியில் உள்ள தண்ணீர் எல்லாம் நன்றாக வற்றியதும் தக்காளி நன்றாக சுருண்டு திக்காகி எண்ணெய் மிதந்து வரும் சமயத்தில் பொடித்து வைத்துள்ள வெந்தயத்தூளை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பிலிருந்து இறக்குங்கள்.

சூப்பரான தக்காளி(தொக்கு) ஊறுகாய் ரெடி.

இந்தக் தக்காளி(தொக்கு) ஊறுகாய் பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

வியாழன், 7 செப்டம்பர், 2017

எண்ணெய் சருமத்தினரை பொலிவாக்கும் இயற்கை வழிகள்...



எண்ணெய் சருமத்தினரை பொலிவாக்கும் இயற்கை வழிகள்...

முகத்தில் எண்ணெய் பசை நீங்கி பொலிவு பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் கொளுத்தும் வெயிலிலும் நீங்கள் அழகுராணிதான்.

உங்களுக்கு எண்ணெய் பசை சருமமாக இருந்தால் கொளுத்தும் வெயில் உங்கள் எண்ணெய் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுத்துவிடும்..கவலையை விட்டுத் தள்ளுங்க.. எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க இதோ சில அழகு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளரிக்காயை, தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன், பால் பவுடர் கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும் இதை தொடர்ந்து ஒரு மாத காலமாவது பின்பற்ற  வேண்டும்.

தக்காளி பழத்தை நன்கு பிழிந்து சாறாக எடுத்து முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன், வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.

பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன், கேரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும். எண்ணெய் பசை சருமத்தினர், அடிக்கடி குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக இருக்கும்.


எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், எண்ணெய் வழிவது குறையும். வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைக்கிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அவற்றை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், எண்ணெய் வழிவது குறையும்.

சோளத்தை நன்கு பவுடர் செய்து, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் எண்ணெய்ப் பசை நீங்கும். எண்ணெய்ப் பசை சருமத்தினர், வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.

எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.

பப்பாளி கூழ், முல்தானி மட்டி, வேப்பிலை பொடி ஆகியவற்றை நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும்.

முகத்தில் எண்ணெய் பசை நீங்கி பொலிவு பெற மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் கொளுத்தும் வெயிலிலும் நீங்கள் அழகுராணிதான்!
நன்றி..மாலைமலா்

உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் குளிர்சாதன வசதி...



உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் குளிர்சாதன வசதி...

மனிதன் தற்காலிகத் தப்பிப்பதற்காக குளிர் அறைகளில் தஞ்சம் புகுகிறான். இந்த குளிர்சாதன வசதி மனிதனுக்கு பல இன்னல்களையும் பெற்றுத் தருகின்றது என்பது தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்றைய உலகில் எங்கு பார்த்தாலும் குளிர்சாதன அறைகளும் குளிர் சாதன வீடுகளும் தான். மனிதன் தற்காலிகத் தப்பிப்பதற்காக குளிர் அறைகளில் தஞ்சம் புகுகிறான். இந்த குளிர்சாதன வசதி மனிதனுக்கு பல இன்னல்களையும் பெற்றுத் தருகின்றது என்பது தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நம்முடைய உடல் சுற்றுப்புற வெப்பத்துக்குத் தக்கபடி தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை உடையது. ஆனால் குளிர் அறைகளில் இருக்கும்போது செயற்கையான சமநிலை கிடைத்துவிடுவதால் உடலின் செயல்பாடு தேவையற்றதாகி விடுகிறது.உடல் தன்னுடைய இந்த செயலை பயன்படுத்தாத போது சேமிக்கப்படும் சக்தி கொழுப்பாக மாறி உடலில் தேங்குகிறது. கடைசியில் இது உடல் பருமனுக்கு வழிசெய்து விடுகிறது.

குளிர் சாதன அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு இன்னொரு பெரிய சிக்கல் இருக்கிறது. மனித உடல் அறைகளிலுள்ள குளிர் காலநிலைக்கு தன்னை மாற்றிக் கொண்டு அதிக நேரம் அங்கேயே செலவிடுகிறது. இதனால் வெளியிலுள்ள வெப்பத்தைத் தாங்கும் திறன் உடலுக்குக் குறைகிறது. குளிர் அறைகளை விட்டு நிஜத்தின் வீதிகளுக்கு வரும்போது வெப்ப அலைகள் குளிர் நிலையிலுள்ள உடலை அதிகமாய் பாதித்து விடுகின்றன. இதனால் தான் குளிர் அறைகளில் இருப்பவர்கள் வெளியே வந்ததும் பதறி ஓடுகிறார்கள்.


குளிர் சாதனம் நம்மை எப்போதுமே இரண்டு விதமான காலநிலைகளில் வாழச்செய்கிறது. குளிர் அறையிலிருந்து வெளியே வருவதும், பிறகு உள்ளே செல்வதும் என வாழ்க்கை ஓடும் போது உடல் அதற்குரிய மாற்றங்களை விரைவில் செய்ய வேண்டியிருப்பதால் பல நோய்களைக் கொண்டு வந்து விடுகிறது. பெரும்பாலான அலுவலகங்களில் அதிக நேரம் குளிர்சாதனக் கருவிகள் ஓடும்போது ஒரே காற்றை திரும்பத் திரும்ப சுழற்சியாய் பயன்படுத்துவதால் காற்றில் இருக்கும் மாசு வெளியே எங்கும் செல்லாமல் சுவாசத்தில் கலந்து விடுகிறது.

இது தொற்று நோய்க் கிருமிகள் யாராவது ஒருவரிடம் இருந்தாலே அந்த அறையிலுள்ள அனைவரை யும் விரைவில் பற்றிக் கொள்கிறது. சிக் பில்டிங் சிண்ட்ரோம் (SBC) என்று ஆங்கிலத்தில் அறியப்படும் நோய் களுக்கு குளிர்சாதனமும் ஒருமுக்கிய காரணம் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக தலைவலி, சிறு மயக்கம், சைனஸ், கண் எரிச்சல், கண்ணில் கண்ணீர் வழிதல், தொண்ட பிரச்சனைகள் என பல அறிகுறிகளைக் கொண்டது தான் இந்த சிக் பில்டிங் சிண்ட்ரோம். குளிர் சாதனப் பெட்டிகள் ஈரப்பதமுள்ள காற்றை உலரவைத்துக் குளிர வைத்து அனுப்புகிறது. இந்த மாற்றம் அலர்ஜி நோய் உள்ளவர்களை பெருமளவில் பாதிக்கும் என்கிறார் சர்வதேச மருத்துவர்கள்.
நன்றி..மாலைமலா்

அழகு நலக்குறிப்புகள்



அழகு நலக்குறிப்புகள்

பற்கள் பளபளப்பாக இருக்க எலுமிச்சை சாற்றுடன் உப்பு கலந்து பிரஷ் செய்யவும்.- குளிப்பதற்கு முன்பு மஞ்சள் பொடியையும் நல்லெண்ணையையும் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் காயவிடவும். அதன்பிறகு வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தை கழுவவும். முகம் பளபளக்கும்.- உங்கள் கூந்தல் பளபளப்பாகவும், கறுமையாகவும் இருக்க உங்கள் உணவில் எலுமிச்சை சாற்றை சேர்த்துக் கொள்ளவும்.- வாரம் 5 முறையாவது தவராமல் செய்ய வேண்டும். உடற்பயிற்சியால் கொழுப்பு கறைகிறது, எடை குறைகிறது, பல நோய்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது. உதடுகளின் வடிவத்தை லிப் லைனரைக் கொண்டு வரைந்து, அதன் பிறகு அதற்குள் லிப்ஸ்டிக்கால் நிறத்தை நிறப்புவது நல்லது. லிப்ஸ்டிக் உதட்டைவிட்டு வெளியே பரவுவதை இது தடுக்கும். ஆரஞ்சு ஜூஸ் முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாக பொலிவுடன் தோன்றும். கசகசா ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவவும். காய்ந்ததும் கழுவினால் முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம். பப்பாளி ஜூஸ் தடவினால், வியற்குரு, கொப்பளங்கள் மறைந்து முகம் பளபளக்கும். கொத்துமல்லி இலையை அரைத்து பூசினால் முகம் வசீகரமாக மாறும்.எல்லா வித பழங்களும் முகத்திற்கு நல்லது. அவற்றை மசித்து முகத்தில் பூசினால் முகம் உடனுக்குடன் சுத்தமடைந்து பளபளப்பாய் காட்சி தரும். தக்காளி சாறு : சருமத்தை மிருதுவாக்கி ஒளிரச் செய்யும். பப்பாளி : முகத்தில் சுருக்கம் விழுவதையும் தற்காலிகமாக ஒத்திப்போடும். சிட்ரஸ் பழங்கள் : ப்ளீச்சிங் ஏஜெண்ட் . சருமத்தின் எண்ணெய் பசையை கட்டப்படுத்துகின்றன. உருளை : கண்களுக்கு அடியில் வீக்கம் இருந்தால் உருளை துண்டுகளை கண்ணுக்கடியில் வைக்கவும். வீக்கம் குறையும்.எம். உங்கள் முடி சுருட்டையானதாக இருந்தால் சீப்பு உபயோகிப்பதை தவிர்க்கவும். சீப்பு உபயோகித்தால் நீங்கள் விரும்பும் வகையில் முடியை `ஸ்டைல்‘ செய்ய முடியாது. குளித்தவுடன் புருவத்தை ஷேப் செய்தால் வலி தெரியாது. அல்லது வெந்நீரில் பஞ்சை நனைத்து, புருவத்தின் மேல் தடவிய பிறகும் ஷேப் செய்யலாம். "ப்ளஷ்" (Blush ) எங்கே தடவ வேண்டும் என்று சந்தேகம் இருந்தால், அதை சுலபமாக தீர்க்கலாம். 1/2 மணி நேரம் உடற்பயிற்சி செய்த பிறகு முகத்தை கண்ணாடியில் பார்க்கவும். கன்னங்களில் சிவந்திருக்கும் இடத்தில் தான் `ப்ளஷ்‘ தடவ வேண்டும்! மேலே பார்த்தவாறு ஒரு விரலால் உங்கள் புருவத்தை மேல் நோக்கி தள்ளவும். அதன் பிறகு கீழே பார்த்தவாறு மேல் கண் இமையில் மஸ்காரா தடவவும். உங்கள் புருவங்களை குளித்த பிறகு ஷேப் செய்யவும். இல்லையென்றால் வெந்நீரில் நனைத்த துணியை புருவத்தின் மேல் சில நிமிடங்கள் வைக்கவும். இது வலியை குறைத்து புருவத்திலுள்ள முடிகளை எடுப்பதை சுலபமாக்கும். தலை முடியை ஷாம்பு போட்டு கழுவிய பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகரை ஒரு மக் நீரில் கலக்கி அதைக் கொண்டு தலையை ஒரு முறை கழுவுங்கள், உங்கள் தலை முடி மிருதுவாகவும், பட்டுப் போன்றும், பளபளப்பாகவும் இருக்கும். காதில் போடும் கம்மல், மூக்குத்தி ஆகியவற்றால் காது அல்லது மூக்கு துளைகளில் புண் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம். பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து அந்தத் தண்ணீரைக் கொண்டு புண்களைக் கழுவினால், புண் விரைவில் குணமாகும்.