வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

மனைவியர் தினம் கவிதை... ஐ லவ் யூ.... டி.... பொண்டாட்டி


மனைவியர் தினம் கவிதை
ஐ லவ் யூ.... டி.... பொண்டாட்டி....
   
மழலையாகி,
மகளாகி,
தமக்கை, தங்கையாகி
தாயாகி,
அண்ணியாகி,
அத்தையாகி,
காதலியாகி,
மனைவியாகி....

இத்தனை ஆனாலும்,
மனைவி ஸ்தானத்திற்கே
மதிப்பும் மரியாதையும்
அதிகம்.

மனைவி.
தவிர மற்ற உறவுகள்,
இரத்த சம்பந்தமானது.
பாசம் என்பது அவர்களின்
D.N.A. விலே இருக்கும்.

ஆனால்
எங்கிருந்தோ வந்து......
நம் சுக துக்கங்களில்
பங்கெடுத்து,
நோய் காலங்களில்
பணிவிடை செய்து,
தேவை, தேவையற்றதை
அறிந்து..
உனக்கே உரியவளாகிறாள்.

மட்டுமல்லாது,
நம் கோப வொறுப்புகளையும்
தாங்கிக் கொண்டு
உன் சுமைகளையும் சுமக்கிறாள்.

உலகிலேயே
யாரும் கொடுக்கமுடியாது.
உயரிய "தந்தை " எனும்
அங்கிகாரத்தை கொடுக்கிறாள்.

அவ்வளவு ஏன் ?
நீ இறந்த பின்
உன் உறவுகளே செய்யாத !!!
மழலை பருவத்திலிருந்தே
பூண்ட.." பூவையும் பொட்டை இழந்து
வெள்ளை உடை தரித்து... "

தன் வாழ்வையும் இழக்கிறாள்.
அறிவீர்.. உணர்வீர்... போற்றுவீர்...
காதலிப்பீர் உண்மையாக...
     
*  I Promise that I love u டி பொண்டாட்டி
கவிதை வரைந்தவருக்கு நன்றி.

புதன், 28 ஆகஸ்ட், 2019

நீங்கள் சிறந்த பெண் என்றாள்.. சிறந்த மருமகள் தான்.... சிறந்த மருமகளாக உங்களுக்கு சில அனுபவ அறிவுரைகள்.


நீங்கள் சிறந்த பெண் என்றாள்.. சிறந்த மருமகள் தான்....  சிறந்த மருமகளாக உங்களுக்கு சில அனுபவ அறிவுரைகள்.

♥பிறந்த வீட்டுப் பெருமைகளை மாமியாரிடம் அடுக்காமல் புகுந்த வீட்டுப் பெருமைகளைத் தொலைபேசியிலோ நேரிலோ மருமகள் தன் பிறந்தகத்தில் உரையாடுவது நல்ல பலன் தரும். அதற்காக உங்கள் பிறந்த வீட்டை விட்டுக் கொடுக்கச் சொல்லவில்லை. நீங்கள் உங்கள் புகுந்த வீட்டை உயர்த்துவது உங்கள் பிறந்தகத்தின் பெருமைகளைத் தானாகவே எடுத்துக் காட்டும்.

♥தன் தாயிடம் தர்ம அடி வாங்கின பெண்கள் கூட  மாமியார் ஒரு சுடுசொல் கூறினால் பொறுத்துக் கொள்வதில்லை. கோபத்தில் மாமியார் சொன்ன வார்த்தைகளுக்குப் பெரிய மதிப்பளிக்கத் தேவையில்லை. அதை மறத்தல் மாமியார்- மருமகள் உறவிற்கு நல்லது.

♥கணவரைப் பற்றி ஒரு போதும் பிறந்தகத்திலோ தோழிகளிடமோ குறை கூறாதீர்கள். இப்படி கூறும் மருமகளை எந்த மாமியாருக்கு பிடிக்கும்?

♥ உங்கம்மா அதைப் பண்ணினாங்க, உங்க தங்கச்சி இதைப் பண்ணினா என்று வேலைக்குப் போய் விட்டு வந்த மனிதரைப் பாடாய் படுத்தாதீர்கள். இப்படி நீங்கள் சொல்வதை அன்புக் கணவர் மறு நாளே தன் தாயிடம் வெளிக்காட்டினால் மருமகளுக்குத் தான் கெட்ட பெயர்.

♥எக்காரணம் கொண்டும் மாமனார், மாமியாரை வீட்டை விட்டுத் துரத்துவதோ நீங்கள் அழகான கூடு போன்ற இல்லத்தைக் கலைத்துத் தனிக்குடித்தனம் போகவோ செய்யாதீர்கள்(இந்தக் கருத்து எல்லார் வீடுகளுக்கும் பொருந்தாது, பிரச்சினைகள் அதிகமாயிருந்து பொறுக்க முடியவில்லை என்றால் அவரவர் பாதையைப் பார்த்து பிரிந்து செல்வது நல்லது)

♥நார்த்தனார்களாக இருப்பவர்கள் தங்கள் அம்மாவான பெண்ணின் மாமியாரிடம் கூறும் சில விஷயங்கள் மாமியார்- மருமகள் உறவைப் பாதிக்கலாம். அதற்கு இடம் கொடுக்காமல் முடிந்தால் நார்த்தனாரை உங்கள் தோழியாக்க முயலுங்கள்.

♥ மாமியாரை நன்றாகப் பார்த்துக் கொண்டால் அவர் ஏன் தன் பெண்ணிடம் மருமகளைப் பற்றி குறைகளைப் பட்டியலிடப் போகிறார்? அந்த அளவிற்கு இடம் கொடுக்காமல் அன்பைக் கொட்டி விட்டால்?

♥சில மாமியார்கள் மரும்கள்கள் என்ன தான் சந்தனமாக இழைத்தாலும் அவர்களை மனதாரப் புகழ மனம் வருவதில்லை. இருக்கட்டும்? உங்கள் கடமைகளைச் செய்யுங்கள். வார்த்தைகளாகக் கூறா விட்டாலும் ஆத்மார்த்தமாக நீங்கள் செய்யும் பணிவிடைகளை உணருவார்கள். அது போதுமே உங்களுக்கு.

♥பிறந்த வீட்டு உறவுகளை எப்படி கவனிக்கிறீர்களோ எப்படி உங்கள் இல்லத்தினர் கவனிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதே போல் புகுந்த வீட்டு உறவுகளையும் தாங்குங்கள்.

♥மருமகள் வெளியில் சாப்பிடுவது என்றால் வயதான மாமியார், மாமனார் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று அக்கறையுடன் தொலைபேசியில் விசாரித்து அந்த சிற்றுண்டியை வாங்கி வருவது உங்கள் மீது உள்ள அன்பை அதிகமாக்கும்.

♥குழந்தைகளை வளர்க்க பார்த்துக் கொள்ளும் வேலைக்காரியைப் போல் நினைக்காமல் அவர்களால் முடியாத அன்று அவர்களுக்கு ஓய்வு கொடுத்து நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

♥குழந்தைகளிடம் நீங்கள் உங்கள் மாமனார், மாமியாரைப் பற்றி உயர்வாகக் கூறுவது நல்லது. 'உங்க பாட்டி தான் அந்த காலத்து கதை சூப்பரா சொல்லுவாங்க, போய் கேளுங்க' என்பதும் பாட்டி, தாத்தாவை மதிக்காமல் பேசும் பிள்ளைகளைக் கண்டிப்பதும் மாமியார் மனதில் நிரந்தர இடம் பிடிக்கவும் உதவும்.

♥ஆண்டிற்கு ஒரு முறை குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் போது உங்கள் மாமியார், மாமனாரையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். அவ்வாறு வரும் போது உங்கள் திட்டமிடலின் படி சில இடங்களும் அவர்களுக்குப் பிடித்த கோவில்களுக்கும் கூட்டிச் சென்று வரலாம். அதை விட்டு விட்டு
நீங்கள் உங்கள் கணவர், குழந்தைகளுடன் மட்டும் சென்று வர வேண்டும் என்று யோசிக்கக் கூடாது.

♥ பெரிய முடிவுகள் எடுப்பதானால் பெரியவர்களைக் கேட்டே முடிவெடுக்கவும். நல்லது, கெட்டது என்ன? எந்த நேரத்திலே எது செய்யலாம்? எது கூடாது போன்றவற்றை அவர்கள் அன்புவ ரீதியாகக் கூறுவார்கள்.

♥திருமணமாகாத நார்த்தனாரோ மச்சினரோ இருந்தால் அவர்களுக்குத் திருமணத்திற்கு வரன் பார்ப்பது, அன்புடன் பழகுவது, பிடித்ததைச் செய்து தருவது என்று இருப்பதும் மாமியாருக்குப் பிடிக்கும்.

♥மதியழகி...

பெண்களுக்கு அந்த இடத்தில் ஏற்படும் தொற்று, அரிப்பு


பெண்களுக்கு அந்த இடத்தில் ஏற்படும் தொற்று, அரிப்பு

அந்தரங்க உறுப்பில் தோன்றுகிற அரிப்பு, எரிச்சல், சிவந்து போதல் என இதன் அறிகுறிகள் சாதாரணமாகத் தோன்றினாலும், இது அலட்சியப்படுத்தக் கூடியதல்ல. அவசரமாகக் கவனிக்கப்படவேண்டிய பிரச்சனை

சிறு வயது பெண் குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சனை வல்வோவஜினிட்டிஸ் (Vulvovaginitis). ‘‘அந்தரங்க உறுப்பில் தோன்றுகிற அரிப்பு, எரிச்சல், சிவந்து போதல் என இதன் அறிகுறிகள் சாதாரணமாகத் தோன்றினாலும், இது அலட்சியப்படுத்தக் கூடியதல்ல. அவசரமாகக் கவனிக்கப்படவேண்டிய பிரச்சனை’’. வல்வோவஜினிட்டிஸ் பிரச்சனைக்கான காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் குறித்து விளக்கமாக பார்க்கலாம்.

‘‘வல்வோவஜினிட்டிஸ் என்கிற இந்தப் பிரச்சனை, இளவயதுப் பெண்களையும், இனப்பெருக்க வயதுப் பெண்களையுமே அதிகம் தாக்குகிறது. பூஞ்சை, வைரஸ், பாக்டீரியா, பாராசைட் என எந்த வகையானத் தொற்றின் மூலமும் இந்தப் பிரச்சனை வரலாம்.

கெமிக்கல் கலந்த பெர்ஃப்யூம், அந்தரங்க உறுப்புகளுக்கான வாசனை ஸ்பிரே, சோப், வெஜைனல் வாஷ் போன்றவற்றை உபயோகிக்கிறவர்களுக்கும், குளிப்பதற்கு பாத்டப் உபயோகிக்கிறவர்களுக்கும் இது சகஜம்.

தாம்பத்திய உறவுக்கு முன்பும், பின்பும் கருத்தரிப்பைத் தவிர்க்க விந்தணுக் கொல்லி உபயோகிக்கிற பெண்களுக்கும் வரும். பெண்களுக்கு மலத்துவாரமும் சிறுநீர்த்துவாரமும் அருகருகே இருப்பதால், சரியாக சுத்தம் செய்யப்படாத பட்சத்தில், கிருமித் தொற்று சுலபமாகப் பற்றும்.


மெனோபாஸ் காலத்தில், பெண்களின் உடலில் இயற்கையாக நிகழும் ஹார்மோன் மாற்றங்களும் இதற்கொரு காரணம். மாதவிடாய் முற்றுப் பெற்றதும், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் சுரப்பும் குறையும். இந்த ஹார்மோன்தான் அந்தரங்க உறுப்புக்கு வழுவழுப்புத் தன்மையைக் கொடுக்கக் கூடியது. அது குறைகிற போது உறுப்பில் வறட்சி ஏற்பட்டு அரிப்பும் எரிச்சலும் தோன்றும்.

பெரும்பாலான பெண்களுக்கு மாதத்தின் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் அந்தரங்க உறுப்பில் அரிப்பும் எரிச்சலும் இருக்கும். இதற்குக் காரணம் அவர்களது உடலில் நிகழ்கிற பி.ஹெச். அளவு மாற்றங்கள். கருத்தரிக்கும் நேரத்தில் விந்தணுக்களை அனுமதிக்க ஏதுவாக பெண்ணின் உடலில் காரத்தன்மை அதிகமாக இருக்கும்.


கருத்தரித்து விட்டால், அது அமிலத்தன்மை கொண்டதாக மாறிவிடும். அப்போதுதான் மேற்கொண்டு கருத்தரிப்பதோ, ஏற்கனவே தரித்த கரு பாதிக்கப்படாமலோ இருக்கும். இந்த நேரத்திலும் பெண்ணின் உடலில் கிருமித் தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.


மனித உடலில் வாய், மூக்கு என எல்லா உறுப்புகளிலும் பாக்டீரியாக்கள் இருக்கும். இவற்றில் பலதும் இயற்கையாக நம் உடலைப் பாதுகாப்பவை. ஏதேனும் பிரச்சனைக்காக ஆன்ட்டிபயாடிக் எடுக்கும் போது, அவை நல்ல பாக்டீரியாக்களை தாக்கி, அதன் விளைவாக தொற்று பரவும்.

தாம்பத்திய உறவுக்குப் பிறகு பரவும் கிருமித் தொற்றும் மிகவும் சகஜம். அதிக இறுக்கமான, வியர்வையை உறிஞ்சாத உள்ளாடை அணிகிற பெண்களுக்கும் இந்தப் பிரச்சனை வரலாம்.

பூப்பெய்தும் காலத்துக்கு முன்பு சில பெண்களுக்கு இப்பிரச்சனை வரும். காரணம், சுய சுகாதாரமின்மை. டிரை டாய்லெட் உபயோகிக்கிற பலருக்கும் இந்தப் பிரச்சனை மிக அதிகமாகத் தாக்கும். தண்ணீரைத் தவிர்த்து, டிஷ்யூ உபயோகிக்க வேண்டியிருப்பதால், முழுமையான சுத்தம் சாத்தியமாகாமல், அதன் விளைவாக கிருமித் தொற்று சுலபத்தில் உண்டாகும்.

பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகும் சிறுமிகளுக்கும் இந்தப் பிரச்சனைபரவலாகக் காணப்படும். நடுத்தர வயதில் இந்தப் பிரச்சனையை சந்திப்பவர்களுக்கு நீரிழிவின் அறிகுறியாகவோ, தைராய்டின் அறிகுறியாகவோ கூட இது இருக்கலாம்.

அறிகுறிகள் :

அரிப்பு, எரிச்சல் போன்றவற்றுடன் வெள்ளைப் போக்கும் இருக்கும். உறுப்பில் சிறுநீரோ, தண்ணீரோ பட்டால் எரிச்சல் உண்டாகும். கிருமியின் தாக்குதல், அதன் தீவிரம் போன்றவற்றைப் பொறுத்து வெள்ளைப் போக்கின் தன்மையும் வேறுபடும். சிலருக்கு நீர்த்த போக்கு இருக்கும். சிலருக்கு திரிந்த தயிர் போன்று இருக்கும். கிருமித் தொற்றின் காரணமாக கெட்ட வாடையும் இருக்கும். காய்ச்சல், குளிர் காய்ச்சல் போன்றவையும் சேர்ந்து கொள்ளலாம்.

மருத்துவரிடம் கலந்தாலோசித்து, தேவைப்பட்டால் வெள்ளைப் போக்கை சோதனைக்கு அனுப்பி, எந்த வகையான கிருமி தாக்கியிருக்கிறது எனக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கேற்ப மருந்துகள் பரிந்துரைக்கப்படும். சருமப் பிரச்சனை என்றால் அதற்கான தீர்வுகள், வெளிப்பூச்சுக்கான மருந்துகள் போன்றவை பலன் தரும்.

தளர்வான, காட்டன் உள்ளாடைகள் அணிய வேண்டும். டியோடரன்ட், ஸ்பிரே போன்றவற்றைத் தவிர்க்கவும். கழிப்பறை செல்லும் போது முறையாக சுத்தப்படுத்த சிறு வயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும். மெனோபாஸ் வயதுப் பெண்கள் மருத்துவ ஆலோசனையின் பேரில் தேவையென்றால் ஈஸ்ட்ரோஜென் க்ரீம் எடுத்துக் கொள்ளலாம்.


பெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்


மகளீர் மட்டும்

பெண்களின் அந்தரங்க உறுப்பில் வீசும் நாற்றம்- காரணமும், தீர்வும்

♥உடலில் உண்டாகிற வியர்வையால் கிளம்பும் நாற்றத்தை வாசனையான சோப்பு, சென்ட், டியோடரன்ட் என எதையோ வைத்து மறைத்து விடலாம். சில பெண்களுக்கு அந்தரங்க உறுப்பில் இருந்து வீசுகிற வாடையை எப்படி மறைப்பதென்றே தெரியாது. தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் இந்தப் பிரச்னைக்கான காரணம், தீர்வுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

♥அந்தரங்க உறுப்பில் உண்டாகும் ஒருவித திரவக் கசிவும் பாக்டீரியாவும் சேர்ந்து அந்தப் பகுதியின் பி.ஹெச் அளவை ஆரோக்கியமாக, அதாவது, 4.5 அளவில் வைத்திருக்கின்றன. இதன் விளைவாக அந்தப் பகுதியில் ஒருவித வாடை வருவது இயல்புதான். அது அதிகமானால்தான் பிரச்னை. அந்த வாடையை உங்களாலேயே சகித்துக் கொள்ள முடியாதது, அரிப்பு, வலி, எரிச்சல் போன்றவை இருந்தால் அது அதீதமானது என அர்த்தம். அதீத வாடைக்கான காரணங்கள் பல...

♥பொதுவாக அந்தரங்கப் பகுதியில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களே இருக்கும். அரிதாக அவை தொந்தரவு செய்யப்பட்டால் ஆரோக்கியமற்ற Bacterial Vaginosis (BV) வரும். இது தாக்கினால் சாம்பல் நிறக் கசிவு, துர்வாடை இருக்கும். இதை அலட்சியப்படுத்தினால் தீவிரத் தொற்றில் கொண்டு போய் விடும். எனவே, ஆரம்பத்திலேயே மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஆன்ட்டிபயாடிக் எடுத்து சரி செய்துவிடலாம்.

♥வெங்காயம், பூண்டு, கரம் மசாலா போன்ற கடுமையான வாசனை உள்ள உணவுகளை உண்பதன் மூலம் உடலிலும் அந்தரங்க உறுப்புகளிலும் துர்வாடை கிளம்பலாம்.

♥வேறு பிரச்னைகளுக்காக ஆன்ட்டிபயாடிக்கோ, மருந்துகளோ எடுத்துக் கொள்ளும் போது, அந்தரங்க உறுப்பின் பி.ஹெச் அளவு மாறி வாடையைக் கிளப்பலாம். சிலவகை ஒவ்வாமை மருந்துகளாலும் அந்தரங்க உறுப்பு அளவுக்கதிகமாக வறண்டு, கெட்ட வாடையைத் தூண்டலாம்.

♥அக்குள் பகுதியைப் போலவே அந்தரங்க உறுப்பைச் சுற்றியுள்ள சருமத்திலும் அதிகம் வியர்க்கும். அந்த வியர்வையும் அந்தரங்க உறுப்புக் கசிவும் சேரும்போது அது சகித்துக் கொள்ள முடியாத வாடையை உண்டாக்கலாம். இதைத் தவிர்க்க வியர்வையை உறிஞ்சக்கூடிய காட்டன் உள்ளாடைகளை அணிய வேண்டியது அவசியம். உடற்பயிற்சி மாதிரியான வியர்வை சிந்தும் வேலைகளுக்குப் பிறகு உடனடியாக உள்ளாடைகளை மாற்ற வேண்டும்.

♥மாதவிலக்குச் சுழற்சியின் போது இந்த வாடையில் மாற்றங்கள் தெரியும். கருத்தடை மாத்திரைகள் போன்ற ஹார்மோன் மருந்துகளும் பிறப்புறுப்பின் பி.ஹெச் அளவில் மாறுதல்களை ஏற்படுத்தி, வாடையைக் கிளப்பும். மெமனோபாஸும் ஒரு காரணம். அந்தக் காலத்தில் ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவதால் ஈஸ்ட் தொற்று மற்றும் Bacterial Vaginosis  ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும்.

♥நீண்ட நேரமாக மாற்றப்படாத நாப்கின் மற்றும் டாம்பூன்கள் கொடுமையான வாடையை ஏற்படுத்தும். ரத்தப்போக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட இடைவெளிகளில் பழைய நாப்கின்களை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் அவை வாடையை ஏற்படுத்துவது மட்டுமின்றி, தீவிரமான தொற்றையும் உண்டாக்கி விடும்.

♥வாடையை நீக்க நீங்களாகவே கடைகளில் விற்கும் சென்ட், மருந்துகள், வாசனை சோப்பு, அரோமா ஆயில் போன்றவற்றை உபயோகிக்கக்கூடாது. அவை எல்லாம் பி.ஹெச் அளவை தாறுமாறாக மாற்றி, பிரச்னையை அதிகப்படுத்தும்.

♥நிறைய தண்ணீர் குடிப்பது, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் போன்றவையே பிரச்னையில் இருந்து விடுபடும் முதல் வழி. மிகவும் மைல்டான சோப்பு உபயோகித்து அந்தப் பகுதிகளை சுத்தம் செய்வது,தினமும் இருமுறை உள்ளாடைகளை மாற்றுவது போன்றவையும் அவசியம். பிரச்னை தீவிரமானது தெரிந்தால் உடனடியாக மருத்துவரை சந்திப்பதே சிறந்தது

1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!!


1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!!

1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்.

♥1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது…

♥காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.

♥வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.

♥ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்…

♥ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை…

♥பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்…

♥விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது…

♥மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்…

♥உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்…

♥மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்…

♥வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்…

♥அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்…

♥ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்…

♥அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது…

♥ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்…

♥ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது…

♥ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது…

♥உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்…

♥தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்… அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்…

♥ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது… அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்…

♥பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்…

♥10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்…

♥யாராவது செல்போன் (சாதாரண 1100) வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்…

♥நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்…

♥பணக்கார வீட்டு இளம் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்…

♥10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது…

♥போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்…

♥வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது…

♥வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்…

♥ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்…

♥10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது…

♥10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது…

♥பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்…
♥கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது…
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது…
அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது…

♥பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்…

♥தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்… பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை…

♥12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது…

♥இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்…

♥உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை… பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை… அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்…


ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...உங்கள் 1990க்கு முன் பிறந்து மேற்குறிப்பிட்ட அனைத்தையும் அனுபவித்தவன் என்ற பெருமையோடு பதிவு செய்கிறேன்.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்!


வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.

1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!
2. தேவைக்கு செலவிடு.
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.
4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்.
5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.
6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.
12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.
13. அவ்வப்போது பரிசுகள் அளி.
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.
17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.
22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே!
26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.
27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
28. நண்பர்களிடம் அளவளாவு.
29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!
31. வாழ்வை கண்டு களி!
32. ரசனையோடு வாழ்!
33. வாழ்க்கை வாழ்வதற்கே!

34. நான்கு நபர்களை புறக்கணி!
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்

35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்

36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி

37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்

38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு

39. நான்கு நபர்களை வெறுக்காதே!
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி

40. நான்கு விசயங்களை குறை!
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு

41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
🏃துக்கம்
🏃கவலை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்

42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்

43. நான்கு விசயங்கள் செய்!
🌷 தியானம், யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘

வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடை பிடியுங்கள்.

பிடிச்சிருந்தா, நல்ல விஷயத்த நாலு பேருக்கு ஷேர் பண்ணுங்க..

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

யார் சுகவாசி....???


யார் சுகவாசி....???

☻ சிரித்து மகிழ்ந்து வாழ்பவன் சுகவாசி!

☻ அதிகாலையில் எழுபவன் சுகவாசி!

☻ இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன் எப்போதும் சுகவாசி!

☻ முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன் சுகவாசி!

☻ மண்பானைச் சமையலை உண்பவன் சுகவாசி!

☻ உணவை நன்கு மென்று உண்பவன் சுகவாசி!

☻ உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன் சுகவாசி!

☻ வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன் சுகவாசி!

☻ கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன் சுகவாசி!

☻ மலச்சிக்கல் இல்லாதவன் சுகவாசி!

☻ கவலைப்படாத மனிதன் சுகவாசி!

☻ நாவடக்கம் உடையவன் சுகவாசி!

☻ படுத்தவுடன் தூங்குகிறவன் சுகவாசி!

☻ எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும் சுகவாசி!

☻ தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன் சுகவாசி!

☻ கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன் சுகவாசி!

☻ கற்பு நெறி தவறாது வாழ்பவன் என்றும் சுகவாசி!

☻ மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன் சுகவாசி!

☻ ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன் சுகவாசி!

☻ வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன் சுகவாசி!

☻ இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன் சுகவாசி!

☻ தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன் சுகவாசி!

☻ உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன் சுகவாசி!

☻ வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன் சுகவாசி!

☻ 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன் சுகவாசி!

ஆண் கருத்தடை


ஆண் கருத்தடை

விதையிலிருந்து புறப்படும் 40செ.மீ. நீளமுள்ள வாஸ்டிபரன் ஸ் என்ற நீண்ட குழாயை வெட்டுவதன் மூலம்தான் ஆண் கரு த்தடை செய்யப்படுகிறது.

ஆண்கள் கருத்தடை செய்துகொண்டால் உடலுறவில் நாட் டம் இருக்காது என்ற தவறான கருத்து நிலவுகிறது, ஆண் கரு த்தடை அறுவை சிகிச்சைக்கும் உடலுறவுக்கும் எந்த சம்பந் தமும் இல்லை.

 கருத்தடைசெய்துகொண்ட ஆண்கள் சாதாரனமாக உடலுறவு கொள்வதுடன் உச்சகட்டத்தை அடைவதிலும் எந்த ஒரு தடையுமில்லை.

ஆண்களை மட்டுமே குறை சொல்ல வேண்டுமா?

 ‘‘தாம்பத்தியத்தில் ஆண், கொடு ப்பவனாகவும் (Active partner), பெண், பெறுபவளாகவும் Passive partner)  இருக்கிறாள். ஒரு உறவின்தன்மை, நேரம் எல்லாவற்றையும் தீர்மானிப்பது ஆண்தான்.  பெண்ணின் பங்களிப்பு இதில் குறைவு.  இல்லற உறவில் விருப்பமில்லா த பெண்களின் குறையைக் கூட (Frigidity) எளிதில் சரிசெய்து விட முடியும். பெண்களின் மற்ற பாலியல் குறைபாடுகளும் சரிசெய்யக் கூடிய வையே.

ஒரு சான்றிதழின் மூலம் ஆண்மையை நிரூபி த்துவிட முடியுமா?

‘‘மருத்துவரீதியாக ஓர் ஆண், தகுதியானவன், தகுதியற்றவன் என்பதைத் தீர்மானிக்க முடியா து. பரிசோதனையில் ஆரோக்கியமாகத் தெரியும் ஓர் ஆண் நடை முறையில் அப்படியே இருப்பான் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. சிலர் தன்பாலின விருப்பம் கொண்ட ஹோமோ செக்ஷு வலாகஇருப்பார்கள். சிலர் போதைப் பழக்கம் காரணமாக மனைவியை தவிர்ப்பார்கள். சிலரால் மனைவியுடன் மட்டும் உறவில் ஈடுபடமுடியாது. மற்ற பெண்களிடம் நார்மலாக இருப் பார்கள் (Selective impotence). இதுபோன்ற நபர்களைப் பரி சோதித்தால் ஆரோக்கியமாக இருப்பதாகவே முடிவுகள் காட்டும். பரிசோதனையில் சரியாக இல்லாத ஆண், நடைமு றையில் சரியாகச்செயல்படுபவராகவும் இருக்கலா ம்.

பாலியல் உறவில் மனம் பெரும்பங்கு வகிப்பதுதான் இதற்குக் காரணம். துணை எப்படிப்பட்டவள், அவர்களுக்குள் இருக்கும் அன்யோன்யம், சூழல் போன்ற வேறு பல காரணங்களும் இருக்கின்றன. ஆனால், இப்பரிசோதனையின் மூலம் பால்வினை நோய்கள், மலட்டுத்தன்மை, உடல் குறைகள், மனநல பாதிப்புகள் போன்றவற் றையும் கண்டுபிடித்து சரிசெய்ய முடியும்’’

ஆண் மலட்டுத்தன்மைக்கும் ஆண்மை யின்மைக்கும் என்ன வித்தியாசம்?

‘‘ஆண் மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைபாடு இரண்டும் வேறு வேறு. தாம்பத்தியத்தில் தன்னுடை ய துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ஒருவருக்கு உயிரணுக்கள் காரணமாக மலட்டுத் தன்மை இருக்கலாம். ஒருபெண்ணுடன் உறவு கொள்ளமுடியாதவர், தந்தையாகத் தகுதியுள்ள உயிரணுக்களை கொ ண்டிருக்கலாம். இதில் இன்னொரு விஷயம். ஆண்மையின்மை காரணமாக விவாகரத்து கேட்கமுடியும். மலட்டுத்தன்மையைக் காரண ம் காட்டி விவாகரத்து கேட்க முடியாது’’

தம்பதி என்ன செய்ய வேண்டும்?

‘‘துணையிடம் குறை இருப்பதை உணர்ந்தால், அவருக்குத் தைரியம் கொடுத்து மருத்துவரிடம் அழைத்து வரவேண்டும். நான்கு சுவர்களு க்குள்ளேயே சண்டை போட்டுக் கொண்டு நிம்மதியிழப்பதினால் எந்த லாபமும் இல்லை. தம்பதிக்குள் பிரிவினையை ஏற்படுத்துபவர்களாகக் குடும்பத்தினரே இருக்கிறார்கள் என்பதும் கசப்பான உண்மை. மூன்றாம் நபர் தலையீடு வராமல் தம்பதிகள் தங் களை தற்காத்துக் கொள்வதும் இதில் முக்கியம்’’

ஆண்மைக்குறைவுக்கு சிகிச்சை இருக்கிறதா?

‘‘செக்ஸில் மனம் பெரும்பங்கு வகிக்கிறது என்று முன்பே சொன்னேன். நம் நாட்டில் போதுமான பாலியல் அறிவு இல்லாததால் தேவையற்ற குழப்பமும் பயமுமே பலரது வாழ்க்கையை கெடுத்து விடுகி றது. இவர்களில் பலரும் மனரீதியான பிரச்னை உள்ளவர்கள்தான். அத ற்கு, பிரச்சனை என்னவென்று முதலில் மருத்துவருக்கு தெரியவேண்டும். பிரச்சனையை மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டு மறைக்க முயற்சிப்ப து, துணையைத் தவிர்ப்பது, அடிப்பது, மற்றவர்களோடு தொடர்புபடுத்திப் பேசுவது, திருமண உறவுக்கு வெளியே இன்னொருவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது போன்றவை ஆக்கப்பூர்வமான செயல்கள் அல்ல’’


‘‘திருமணத்துக்கு முன்பு ஒரு சித்த மருத்துவரை  சந்தித்து தனக்கிருக் கும் சந்தேகங்க ளை தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும். ஏதேனும் பிரச்ச னைகள் இருப்பது தெரிந்தால் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு அதன் பின் திருமண வாழ்க்கைக்குள் நுழையலாம். உண்மையில், பயம் காரணமாகவே மருத்துவரை சந்திப்பதைப் பலரும் தவிர்க்கிறார்கள். தயக்கம் என்ன….?


ஆண்மைக் குறைபாடுங்கிறதை இரண்டு விதமாக பார்க்கலாம். சின்ன வயசுல அந்த ஆணு க்கு ஏற்பட்ட செக்ஸ் வன்முறை, மோச மான அனுபவங்கள், அது தொடர்பான அருவெறுப்பான சம்பவங்கள், பயம்னு உளவியல் ரீதியான பிரச்னை கள், அதனால தாம்பத்திய உறவுல  ஈடு பட  முடியாமப் போகறது ஒரு வகை.  உண்மையிலேயே உடம்புல பிரச்னை கள் இருந்து, அதனால தாம்பத்திய உற வுல  ஈடுபட  முடியாத நிலை இன்னொரு வகை. இதுல முதல் வகைக் குறைபாட்டை கவுன்சலிங்ல சரிப்படுத்தலா ம். அடுத்ததுக்கு மருத்துவ சிகிச்சை அவசியம். தனக்கு ‘கருமுட்டை வளர்ச்சி சரியில்லை, கர்ப்பப்பை யில கோளாறு’னு ஒரு பெண் தயங் காம சொல்ற மாதிரி, ஆணும் தன்னோட பிரச்னைகளை வெளி யில சொல்லத் தயாராகணும். கவு ன்சலிங் மூலமா சரி செய்யக்கூடிய பல பிரச்னைகளும் தீர்க் கப்படாம பெரிசாகக் காரணம், அந்த ஆண் தரப்புல உள்ள தயக் கம். ஆலோச னைக்கு வந்தாலே பிரச்னை தீர்ந்த மாதிரிதான். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். 

குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் சரும பாதுகாப்பு அம்சங்கள்!


குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் சரும பாதுகாப்பு அம்சங்கள்!

குறை மாதங்களில் பிறக்கும் குழந்தைகள் முழுமையாக வளர்ச்சியடையாததால் அவர்களுடைய சருமத்தை சரியாக பராமரிக்க வேண்டியது கட்டாயம். இந்த குழந்தைகளுக்கு சருமத்தின் மீது தடவப்படும் பொருட்களை உள்ளே உறிஞ்சும் திறன் அதிகமாக இருக்கும் என்பதால் விளம்பரங்களைப் பார்த்து கண்ட க்ரீம்களை குழந்தையின் மீது தடவக்கூடாது. குறை மாத குழந்தைகளுக்கு உடலின் வளர்ச்சியைவிட சருமத்தின் வளர்ச்சி குறைவாக இருப்பதால், எதை தடவினாலும் உள்ளே சென்று பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குறைமாத குழந்தைகளின் உடலினுள் இருக்கும் நீர், நீராவியாக மாறி சருமத்தின் வழியாகத்தான் அதிகமாக வெளியேறும்.

இவர்களுக்கு பிறந்து 2 வாரம் வரை வேர்க்காது. நீராவியாக வெளியேறும் நீர் மற்றும் உடலின் தட்ப வெப்ப நிலையை சரிவர பராமரிக்காத மென்மையான சருமம் போன்ற காரணங்களால் எளிதில் தாது உப்புக்களை இழக்க வைக்கும். உடலின் சூட்டை குறைத்து ஹைப்போ தெர்மியாவை(Hypothermia) உண்டாக்கும். இதுவும் குழந்தைக்கு ஆபத்து. அதனால் மிகவும் குளிர்ச்சியான இடத்திலோ, மிகவும் சூடான இடத்திலோ குழந்தையை வைக்கக் கூடாது. எடை குறைவான குழந்தையை தாய் தன் உடம்போடு அணைத்து கங்காரு போல் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

அப்போதுதான் அக்குழந்தை உடலின் தட்பவெப்பநிலையை சம நிலையில் வைத்துக் கொள்ள முடியும். குறைமாத குழந்தையை முதல் சில வாரங்களுக்கு 2-3 நாட்களுக்கு ஒரு முறை குளிப்பாட்டினாலே போதுமானது. தீவிர சிகிச்சை பிரிவில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஊசி போடும் முன் தடவப்படும் மருந்துகளில் ஆல்கஹாலோ, அயோடினோ அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அவர்களுக்கு ப்ளாஸ்டர் உபயோகித்தால் மிகவும் மெலிதான வகைகளையே உபயோகப்படுத்த வேண்டும். அதை எடுக்கும் போதுகூட மிகவும் மென்மையாகச் செயல்பட வேண்டும். கவனமற்று உபயோகித்தால் சருமம் வறண்டு போய் உரிந்து விடலாம்.

பழங்களின் மருத்துவ குணங்கள்


பழங்களின் மருத்துவ குணங்கள்:-

*1. செவ்வாழைப்பழம் :-* கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்,

*2. பச்சை வாழைப்பழம் :-* குளிர்ச்சியை கொடுக்கும்,

*3. ரஸ்தாளி வாழைப்பழம் :-* கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.

*4. பேயன் வாழைப்பழம் :-* வெப்பத்தைக் குறைக்கும்,

*5. கற்பூர வாழைப்பழம் :-* கண்ணிற்குக் குளிர்ச்சி,

*6. நேந்திர வாழைப்பழம் :-* இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்,

*7. ஆப்பிள் பழம் :-* வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது.,

*8. நாவல் பழம் :-* நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும்.

*9. திரட்சை :-* 1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்.

*10. மஞ்சள் வழைப்பழம் :-* மலச்சிக்கலைப் போக்கும்.

*11. மாம்பழம் :-* மாம்பழம் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம். மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

*12. கொய்யாப்பழம் :-* உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புன் இருந்தால் குணப்படுத்தும். சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் …C+ உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.

*13. பப்பாளி :-* மூல நோய், சர்க்கரை நோய், குடல் அலற்சி போன்றவைகளுக்கு சிறந்தது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …A+ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
மாதவிடாய் சாரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நோரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

*14. செர்ரி திராட்சை :-* கர்ப்பப்பை வியாதிகளுக்கு நல்லது.

*15. அன்னாசி :-* அன்னாசி பழத்தில் வைட்டமின் …B உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அறிய மருந்தாகவும் இருக்கிறது.
தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

*16. விளாம்பழம் :-* விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.
பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜுரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

*17 மாதுளம்* பழத்திற்கு
 மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.
வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.
மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிhpல் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.

*18. வாழைப்பழம் :-* மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜPரண சக்தி உண்டாகும்.
எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம்,
 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தங்க்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தாரிக்க வாய்ப்பாகும்.
ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும். இதுபோன்றே பலாப்பழமும் மருத்துவ பயன் மிக்கதாகவே இருக்கின்றது. இதில் வைட்ட மின் …A+ உயிர்சத்து அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் …A+ உயிர் சத்திற்கு தொற்று கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றாது.



*19. ஆரஞ்சுப்பழம் :-* ஆரஞ்சில் வைட்டமின் …A அதிகமாகவும், வைட்டமின் …C-யும், …B-யும், B-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும்.
இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.

*20. திராட்சைப் பழம் :-* எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் …ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சாரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும்.
 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். வயிற்றில் இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டிருந்தால், வாயிலும் புண் ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டுமானால் முதலில் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டும். இருமல் நின்று விடும். அல்லது எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்து இறுத்து ஆற வைத்து இதேபோல் தொடர்ந்து காலை மாலையாக மூன்று தினங்கள் கொடுத்து வந்தாலும் இருமல் நின்று விடும். தலைவலி இருப்பவர்கள் சூடான கப் காபியில் அரை எலுமிச்சை பழத்தினை பிழிந்து 3 நாட்கள் குடித்து வந்தால் பிறகு தலைவலியே வராது.
தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தினை இரண்டாக பிளந்து ஒரு பாதியை கொட்டிய இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு இரண்டு துண்டுகளையும் தேய்த்துவிட்டால் சிறிது நேரத்திற்கெல்லாம் விஷம் இறங்கி வலி நின்றுவிடும்.
எலுமிச்சம் பழத்தினை அடிக்கடி உபயோகித்து வருபவர்களுக்கு உஷ்ண அதிகரிப்பால் உண்டாகும் வயிற்று வலி, பித்தத்தால் ஜுரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள், உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் தொந்தரவுகள், மலசிக்கல், உஷ்ண இருமல் ஆகிய தொந்தரவு கள் வராது.

*21. பேரீச்சம்பழம் :-* தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண்
 சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.

*22. எலுமிச்சம்பழம் :-* அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும். நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

நான்வெஜ் மேட்டர்! ஆனா, எல்லாரும் தெரிஞ்சுக்கணும்!!


நான்வெஜ் மேட்டர்! ஆனா, எல்லாரும் தெரிஞ்சுக்கணும்!!

இறைச்சியில் எத்தனை வகை?

ஆதிமனிதன் இறைச்சி தான் உண்டான் என்பது அறிவியல் உண்மை. வேட்டை சமூகமாக இருந்த காலத்தில் வேறென்ன தான் உண்டிருப்பான்? காலப்போக்கில் இறைச்சி பற்றிய தவறான கருத்துகள் உருவாகி, அந்த உணவைப் பலர் புறக்கணிக்கிறார்கள். புரதப் பற்றாக்குறை, ரத்தச்சோகை போன்ற மருத்துவக் குறைபாடுகள் அதிகரித்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். உலகநாடுகள் பெரும்பாலானவற்றில் இறைச்சி தான் முதன்மை உணவு. ஆடு, மாடு, பன்றி, கோழி என்று இந்த நான்கு வகை இறைச்சியே மக்களின் உணவாக இருக்கின்றன. இவற்றைத் தவிர வேறு சில விலங்கினங்களின் இறைச்சியை உண்ணும் வழக்கம் உண்டு.

ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், ஹாலந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் குதிரை இறைச்சி உண்கிறார்கள். அரேபிய நாடுகளில் ஒட்டகம், ஆஸ்திரேலியாவில் கங்காரு என்று அந்தந்த நாட்டின் தட்பவெட்பமும் அவர்கள் உண்ணக் கூடிய இறைச்சி எதுவென்பதைத் தீர்மானிக்கிறது. ஜெர்மனி, சுவீடன், தைவான் உள்ளிட்ட பதினான்கு நாடுகள் ஆஸ்திரேலியாவிலிருந்து கங்காருவை இறக்குமதி செய்து உண்கிறார்கள். ஆப்பிரிக்காவின் கானா நாட்டில் முயல் இறைச்சி உண்பதை அந்நாட்டு அரசே ஊக்கப்படுத்துகிறது. பிரேசில், ஈக்குவடார், டான்சானியா ஆகிய நாடுகளிலும் ‘முயல் 65’ சக்கைப்போடு போடுகிறது.

இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் நாகா இன மக்கள் நாய் இறைச்சியை விரும்பி சுவைக்கிறார்கள். அருணாச்சலப் பிரதேசத்து மலைவாழ் மக்கள் மிதுன், யாக் போன்ற விலங்கினங்களை சாப்பிடுகிறார்கள். மிசோரத்தில் குரங்கு இறைச்சிக்கு செம டிமாண்டு.
துருவப் பகுதிகளில் வசிக்கும் எஸ்கிமோக்கள் சீல் மற்றும் துருவக்கரடிகளை கொன்று சாப்பிடுகிறார்கள். மத்திய ஆப்பிரிக்காவில் சில பழங்குடியினர் காண்டாமிருகம், நீர்யானை போன்றவற்றை வேட்டையாடி உண்கிறார்கள். நம்மூரிலேயே கூட நாடோடி மக்கள் அணில், பூனை, எலி, கீரிப்பிள்ளை போன்ற சிறு பிராணிகளை வலை போட்டு அடித்து சாப்பிடுவதை கவனித்திருக்கலாம். நரிக்குறவர்களுக்கு நரி பிடித்தமான உணவு.

ஆட்டுக்கறியில் எந்தப் பகுதி பெஸ்ட்?

மட்டன் என்று நாம் சொல்லும் இறைச்சி செம்மறி ஆட்டின் மாமிசம். வெள்ளாட்டு கறியை செவான் என்று சொல்ல வேண்டும். மட்டன் வாங்குபவர்கள் பலரும் தொடைக்கறி தான் வேண்டுமென்று கடையில் கேட்டு வாங்குகிறார்கள். தொடைக்கறி தான் ருசிக்கும் என்பது பொதுப்புத்தியில் விளைந்த ஒரு தவறான கருத்து. தசைகளைப் பொறுத்தவரை எவையெல்லாம் அதிகம் உழைக்கும் தன்மை கொண்டதோ, அப்பகுதியை கறியாகச் சமைத்து உண்டால் சுவை இருக்காது. அதில் நார்ச்சத்து தான் கூடுதலாக இருக்கும். ஆட்டின் உடலில் இடுப்புக்கு மேலே வால்பகுதிக்கு முன்னால் உள்ள தசைகள் எவ்வித அசைவும் இல்லாமல் குறைந்தளவு உழைப்பு உடையதாக இருக்கும். அப்பகுதியை சமைத்தால் அவற்றின் ருசி கூடுதலாக இருக்கும். பொதுவாக இறைச்சி உணவைப் பொறுத்தவரை எண்ணெயில் பொரித்து எடுப்பது, வறுத்து எடுப்பது போன்றவற்றை தவிர்க்கலாம். வேகவைத்த கறி நல்லது.

ஏன் இறைச்சி உண்ண வேண்டும்?

சராசரியாக ஆணுக்கு 55 கிராம் அளவிலும், பெண்ணுக்கு 45 கிராம் அளவிலும் புரதம், நாள் ஒன்றுக்குத் தேவைப்படுகிறது. மனித உடலுக்கு புரதச் சத்துகளில் உள்ள அமினோ அமிலங்கள் மிகவும் இன்றியமையாதது. இறைச்சியைப் பொறுத்த மட்டில் அமினோ அமிலங்கள் எளிதில் ஜீரணமாகக் கூடியவை ஆக இருப்பதால் உடலுக்கு பயனுள்ளதாக அமைகிறது.
இறைச்சியால் இதயம் தொடர்பான நோயும், புற்றுநோயும் வருகிறது என்று தவறாக வாட்ஸப் போன்ற இடங்களில் தகவல்களை நீங்கள் வாசித்திருக்கலாம். அது முற்றிலும் பொய். ஆட்டு இறைச்சியைக் காட்டிலும், மாட்டு இறைச்சி மற்றும் பன்றி இறைச்சியில் உள்ள செலினியம் தாதுப் பொருட்கள் மேற்கண்ட நோய்களைக் கட்டுப்படுத்தவல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

வைட்டபின் பி பிரிவைச் சேர்ந்த தயாமின் எனும் சத்து, நரம்பு மண்டல வளர்ச்சிக்கு அவசியம். மற்றொரு பி வைட்டமின் சத்தான நயாசின் உடம்பிலுள்ள கொழுப்பு மற்றும் மாவுச்சத்தை கலோரியாக மாற்றுகிறது. இதனால் கொழுப்புச் சத்து உடலில் சேர்வது தடுக்கப்படும். இறைச்சியில் இந்த இரண்டு சத்துகளும் தேவையான அளவில் இருக்கின்றன. இறைச்சி உண்பதால் தான் கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது என்பது தவறாக புரிந்துக் கொள்ளப்பட்ட ஒரு கருத்து.

உணவுச் சிந்தனை முத்துக்கள்...


உணவுச் சிந்தனை முத்துக்கள்...

1). அழகு முகத்திற்கு நட்புணவு ஆரஞ்சும் ஆப்பிளும்.

2). கண்களின் நட்புணவு காரட்டும், கறிவேப்பிலையும்.

3). காலை காபி நரம்புகளுக்குக் கெடுதி

4). பளபள மேனிக்கு பப்பாளி

5). வெந்து கெட்டது முருங்கை - வேகாமல் கெட்டது அகத்தி.

6). ஈரெட்டு வயதை நீட்டிக்கும்  குமரி, நெல்லி.

7). சளி, இருமலை அதிகரிக்கும் மாட்டுப்பால்

8). உப்பும், வெள்ளை சர்க்கரை ஆரோக்கியத்தின் எதிரிகள்

9). உடல் உறுதிக்கு தேங்காய்ப்பால்

10). தங்கமேனிக்கு ஆவாரம்பூ

11). வயிற்றுக்கு மாதுளை, நெஞ்சுக்கு தூதுவளை

12). சமைத்த உணவு தவறான உணவு

13). மலச்சிக்கலுக்கு மாம்பழம், மாலைக்கண்ணை விரட்டும்.

14). ஆஸ்துமாவிற்கு எதிரி ஆரஞ்சும், அன்னாசியும்.

15). நாவல், நெல்லி கூட்டணி நீரிழிவை விரட்டிடும்.

16). பசிக்காத உணவு குப்பை உணவே.

17). பசிக்காமல் புசிப்பவன் மனிதன் மட்டுமே.

18). நோய்களின் தாய் சமைத்த அமில உணவுகளே

19). வசம்பு நமது மூலிகைத்தாய் -  கடுக்காய் நமது இரண்டாவது தாய்.

20). தரையில் தவழும் தலக்கீரைச் செடிகள் காலனை விரட்டும்.

21). நின்று கொண்டு நீர் அருந்தக் கூடாது.

22). அசையாத பருமன் உடலும் நெல்லியால் நடக்கும் - ஆப்பிளால் ஆடும் - பப்பாளியால் ஓடும்.

23). தக்காளியால் குண்டு அன்பர்கள் கட்டழகு பெறலாம்.

24). பாலும் சமைத்த கீரையும் நஞ்சு - தேனும் நெய்யும் சம அளவு நஞ்சு.

25). தேனும் முட்டையும் நஞ்சு - தேனும் சீனியும் சம அளவு நஞ்சு.

26). முள்ளங்கியும் உளுந்தும் நஞ்சு - மீனும் பாலும் நஞ்சு

27). மணத்தக்காளியும் மிளகும் நஞ்சு - தயிரும் வெங்கலப் பாத்திரமும் நஞ்சு

28). தொப்பைக்கு எதிரி தக்காளி, தர்பூசணி.

29). வயிற்றின் நட்புணவுகள் வெள்ளரியும் வெந்தயமும்.

30). முதுகு தண்டுக்கு முருங்கை, பப்பாளி.

31). அமிர்த உணவுகள் தேங்காய், மாதுளை.

32). நெல்லி, கறிவேப்பிலை, முருங்கை, வெந்தயம் உண்பவர்கள் தனக்குத்தானே மருத்துவர்.

33). வாரம் ஒருநாள் இயற்கைச்சாறுகள், மாதம் இரண்டு நாட்கள் நோன்பு - உங்கள் ஆயுளை பத்து வருடம் நீடிக்கும்.

34). அளவுக்கு மீறினால் உணவே நஞ்சு.

35). தினசரி ஒரு பிடி கரிசாலை நரை திரை மாறும்

36). தோல் வியாதிகளுக்கு நண்பன் கத்தரிக்காய்.

37). இரத்த விருத்திக்கு செம்பருத்தி - மூட்டுவலிக்கு முடக்கற்றான்.

38). குடற்புழுக்களுக்கு வேப்பங்கொழுந்து - சளிக்கு கற்பூரவல்லி.

39). கொழும்புக்கு எதிரி வெங்காயம், இஞ்சி, பூண்டு.

40). இரத்த அழுத்தத்திற்கு மிளகு, வெந்தயம்.

41). கல்லடைப்புக்கு வாழைத்தண்டு - வரட்டு இருமலுக்கு உலர்ந்த திராட்சை.

42). நினைவாற்றலுக்கு வல்லாரை - சித்தம் தெளிவிற்கு மஹா வில்வம்

43). மூளைக்கு வாழைப்பழம், வல்லாரை, பேரீட்சை, உலர் திராட்சை மற்றும் வெண்டைக்காய்.

44). பைத்தியம் தெளிய வெண்பூசணி, பேய்ச்சுரக்காய்

45). வெட்டுக்காயத்திற்கு வசம்பு, தேன்.

46). புற்றுநோயை தடுக்கும் மஞ்சள், வெண்பூசணி, சீத்தாப்பழம், கோதுமைப்புல் சாறு

47). மூலநோய்க்கு அத்திக்காய், கருணைக்கிழங்கு

48). தலைப்பேனுக்கு மலைவேம்பு - உடல் காய்ச்சலுக்கு நிலவேம்பு.

49). தாய்ப்பால் பெருக பூண்டு, வெந்தயம், முருங்கை

50). சொரி, சிரங்குக்கு வேப்பிலை, மஞ்சள், குப்பைமேனி.

51). குஷ்ட நோய்க்கு வேப்பம்பிசின் - புற்றுநோய்க்கு வேப்பிலை.

52). வயிற்று புண்ணுக்கு மணத்தக்காளி - பல்வலிக்கு பப்பாளி

53). சுகப்பிரசவத்திற்கு குங்குமப்பூ, தேன், பிரண்டை

54). சர்க்கரை ரோய்க்கு பாகற்காய்- சிறுநீரகத்துக்கு சிறுகீரை

55). சிற்றின்பத்துக்கு சிறுபசலை - தாது விருத்திக்கு முருங்கை

56). குடற்புழுக்களுக்கு பாகற்காய், வேப்பிலை, சுண்டைக்காய், கடுக்காய்.

57). பித்த வெடிப்புக்கு வேப்பெண்ணெய் + மஞ்சள், விளக்கெண்ணெய் + சுண்ணாம்பு

58). நெஞ்சு சளிக்கு சுண்டைக்காய் - நரைமுடிக்கு தாமரைப்பூ

59). வயிற்று கடுப்புக்கு கேழ்வரகு மாவு + சர்க்கரை

60). உடல் அசதிக்கு கோதுமை மாவுக் கஞ்சி

61). பிள்ளை பெற்றவளுக்கு அரைகீரை - உட்புண்களுக்கு கடுக்காய்

62). வாய்ப்புண்ணுக்கு கொய்யா இலை - வயிற்றுப்புண்ணுக்கு மணத்தக்காளி இலை

63). திக்குவாய்க்கு வில்வம் - நாக்குப் புண்ணுக்கு பப்பாளிப்பால்

64). குதிகால் வலிக்கு  எருக்கு - இரத்த விருத்திக்கு அருகு

65). சளிக்கு துளசி - பித்தத்திற்கு வில்வம்

66). மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி - நரம்புகளுக்கு வல்லாரை

67). புரையோடிய புண்ணுக்கு அத்திப்பால், கருவேலங் கொழுந்து

68). அகத்தின் தீயை அணைக்கும் அகத்தி

69). சர்க்கரை நோய்க்கு ஆவாரம்பூ, பாகற்காய்

70). விஷப் பூச்சி, ஜந்துக்களின் விஷமுறிவுக்கு சிறியா நங்கை...

சனி, 24 ஆகஸ்ட், 2019

குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன ?..


குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன ?..

இன்றைய கால ஓட்டத்தில் எதற்கும் நேரமில்லை என்பது உண்மைதான். அதற்காக பெற்ற குழந்தையை வளர்க்கவும் நேரமில்லை என்று சொல்வது எத்தனை அபத்தம்.

இன்று வாழ்க்கையை பற்றி தெரியாத வயதிலேயே குழந்தைகள் மன அழுத்தம், தனிமை போன்ற பிரச்னைகளை எதிர் கொள்கின்றனர் என பல ஆய்வுகளை தினம் தினம் படிக்கிறோம்.

இந்த தவறு எங்கிருந்து தொடங்குகிறது? பெற்றோர்கள் குழந்தைகளை கண்டுகொள்ளாமல், அவர்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்யாமல் இருப்பதாலும்தான்.

இனியாவது குழந்தைகளின் எதிர்பார்ப்புகளை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களை புரிந்து கொள்ள
முற்படுங்கள். சொல்வதைக் கேட்க வெண்டும்  :
இது அத்தனை பெரிய கடினம் அல்ல.

அதேசமயம் இன்று பல பெற்றோர்கள் செய்யத் தவறும் செயலும் இதுதான்.

அவர்கள் உங்களிடம் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை அமர்ந்து கேளுங்கள். அதற்கு பதில் அளியுங்கள்.

அவர்கள் பேசுவதன் மூலம் அவர்களை புரிந்து கொள்ள முற்படுங்கள். அவர்களின் உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் செய்யும் உதாசினம் அவர்களுக்கு மனதளவில் பெரும் ஏக்கத்தையும் , தனிமையையும் ஏற்படுத்தும்.

பழமையைச் சொல்லி வளர்க்காதீர்கள்.. பல பெற்றோர்கள் செய்யும் தவறு இதுதான்.

உங்கள் குழந்தை பருவக் காலம் வேறு. இன்றைய குழந்தைகளின் வாழ்க்கை முறை வேறு.

அப்படியிருக்கும்போது உங்கள் பழைய வாழ்க்கையை சுட்டிக் காட்டி அதன்படி உங்கள் குழந்தையை வளர்க்க நினைக்காதீர்கள்.

உங்கள் பெற்றோர்கள் உங்களிடம் நடந்து கொண்டதை போல் நீங்களும் நடந்து கொள்ளாதீர்கள்.

இன்றைய குழந்தைகளின் எதிர்பார்ப்புகள், எண்ணங்கள் எல்லாமே முற்றிலும் மறுபட்டது.

வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் எப்போதும் குழந்தையுடன் இருக்காவிட்டலும், வீட்டில் இருக்கும்போது முற்றிலும் அவர்களுடன் நேரத்தை ஒதுக்கி அன்புடன் நடந்து கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைக்கு இது கட்டாயம் தேவை. அவர்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பதும் இதுதான்.

குழந்தைகளின் நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றங்கள், சோர்வு நிலையில் இருந்தால் என்ன பிரச்னை என்பதை கேளுங்கள். கண்டு கொள்ளாமல் இருந்து விடாதீர்கள்.

ஆம்.,நண்பர்களே..,

உங்கள் குழந்தைகள் சோகமாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு தீர்வுகளை அளியுங்கள்.

நண்பனைப்போல் தோள் கொடுங்கள்.....

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

379 வருடம்! சென்னை ஒரு பார்வை!!


379 வருடம்! சென்னை ஒரு பார்வை!!

♚ தமிழ்நாட்டின் தலைநகரம் இந்தியாவின் நான்காவது பெரிய நகரம் உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று என்ற பல பெருமைகளை பெற்ற சென்னை தென்னிந்தியாவின் வாசலாகக் கருதப்படுகிறது.

பெயர் வந்த வரலாறு :

♚ கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகள் பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோர் பூந்தமல்லியை சேர்ந்த அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் சகோதரர்களுக்குச் சொந்தமான நிலத்தை வாங்கினார்.

♚ அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரின் உதவியாளர் பெரிதம்மப்பா இதற்கு உதவிசெய்திருக்கிறார். 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி கிழக்கிந்திய கம்பெனி அந்த நிலத்தை வாங்கி அங்கே செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது.

♚ நிலத்தைக் கொடுத்து உதவிய அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரை நகரின் வடக்கு பகுதிக்குச் சூட்டியது கிழக்கிந்தியக் கம்பெனி.

♚ பூந்தமல்லி சகோதரர்களிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனிக்கு நிலம் கைமாறிய ஆகஸ்ட் 22-ம் தேதி தான் சென்னை தினமாக கொண்டாடப்படுகிறது.

சென்னை நகரம் கடந்து வந்த பாதை :

♚ பல்லவ, சோழ மற்றும் விஜயநகர பேரரசுகள் காலத்தில் இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.

♚ 1639-ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை ஆங்கிலேயர்கள் சென்னையில் கட்டியதால் இந்நகரம் உருவானது.

♚ ஆங்கிலேயர்கள் 1639 ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டியதைத் தொடர்ந்துதான் சென்னை நகரம் உருவாகி வளர்ந்தது என்றாலும் பின்னர் நகரத்தோடு இணைந்த திருவல்லிக்கேணி, மைலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் ஆகிய பகுதிகள் அதற்கு மேலும் பல நூற்றாண்டுகள் தொன்மையானவை.

♚ 1639 ஆகஸ்ட் 22 ஆம் தேதி தான் தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் நகரமாக இந்நகரம் உருவானது.

♚ ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டிமுடிந்த பிறகு கோட்டையை மையமாகக் கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது.

♚ சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.

♚ இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன.

♚ 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது.

♚ 1969 சென்னை மாகாணம் தமிழ்நாடு என்றும் 1996 நகரின் பெயரான மதராஸ் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

♚ இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது சென்னை. தமிழகத்தின் தலைநகரான சென்னைதான் மாநிலத்தின் இருதயம். ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் வாழ்வளிக்கும் நகரங்களில் ஒன்று. உலக அளவில் சென்னை பலதுறைகளில் முன்னேறியுள்ளது.

♚ கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று 'சென்னை தினம்" உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை தினம் கொண்டாடும் அனைவருக்கும் இதயம் கனிந்த சென்னை தின நல்வாழ்த்துக்கள்.

தூக்கம்... சில உண்மைகள்...


தூக்கம்... சில உண்மைகள்...

இரவில் ஒரே ஒரு முறை மட்டும் எழுந்து பின் 20 நிமிடங்களுக்குள் மீண்டும் ஆழ்ந்து தூங்குவது என்பதுதான் ஆரோக்கியமான தூக்கத்தின் அளவுகோல் என்கிறார்கள்.

தூக்கம்... சில உண்மைகள்...

ஆரோக்கியத்தின் அடையாளம் நல்ல தூக்கம் என்பது நிருபிக்கப்பட்ட மருத்துவ உண்மை. ஆனால் எது ஆரோக்கியமான தூக்கம்? என்ற கேள்வி எழுவதுண்டு. அதற்கு விடை தந்துள்ளனர் அமெரிக்காவின் நேஷனல் சிலிப் பவுண்டேசன் ஆராய்ச்சியாளர்கள். அவர்கள், படுத்தவுடன் 30 நிமிடங்களுக்குள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் தூங்குவது இடையில் இரவில் ஒரே ஒரு முறை மட்டும் எழுந்து பின் 20 நிமிடங்களுக்குள் மீண்டும் ஆழ்ந்து தூங்குவது என்பதுதான் ஆரோக்கியமான தூக்கத்தின் அளவுகோல் என்கிறார்கள்.

65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. அவர்கள் படுத்தவுடன் 60 நிமிடங்களுக்கு முன்னர் தூங்கிவிட வேண்டும். வயதானவர்கள் என்றால் இரவில் இரண்டு முறை எழலாம். ஆனால் அந்த இருமுறையும் 30 நிமிடங்களுக்குள் மீண்டும் தூங்கிவிட வேண்டும். இரவில் படுக்கையில் இருக்கும் நேரத்தில் 85 சதவீத நேரம் அவசியம் தூங்கியாக வேண்டும். மாறாக புரண்டு புரண்டு படுத்து 40 சதவீத நேரமே தூங்குவது ஆரோக்கியத்துக்கு கேடு தரும் என எச்சரிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒரு ஆரோக்கியமான மனிதனாக சுறுசுறுப்பாக அன்றாட பணிகளில் நாம் ஈடுபட தூக்கம் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். ஏன் என்கிறீர்களா?

பின்னாளில் வரும் ஒவ்வொரு பெரிய நோய்க்கும் தொடக்க நாட்களில் நீங்கள் சரிவர தூங்காததுதான் காரணமாக அமைகிறது என்கிறார், அமெரிக்காவின் பெர்க்கினி பல்கலைக்கழக மருத்துவ அறிஞர் மாத்யூ வால்க்கர். இளமையில் நன்றாக தூங்கி எழுந்தவர்கள் முதுமையில் ஆரோக்கியமாகவும், அறிவுப்பூர்வமாகவும் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒரு மனிதனுக்கு 7 மணிநேர தூக்கம் அவசியம். அதற்கு குறைவாக தூங்குவதும், அதையும் தாண்டி நீண்ட நேரம் தூங்குவதும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும். அதிக தூக்கமும், குறைந்த தூக்கமும் 7 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நம்மை முதுமை அடைய வைக்கிறதாம். ஆக, தினமும் நீங்கள் இரவில் படுக்கச்செல்லும் நேரத்தை வரையறுத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

தூக்கம்


தூக்கம்

தூக்கத்தின் அவசியம்தூக்கத்தின் வகைகள்தூக்கமின்மையால் ஏற்படும் தொல்லைகள்தூக்கமின்மைகான காரணம் என்ன?குழந்தைகளுக்கு தூக்கமின்மை ஏற்பட காரணம்தூக்கமின்மையை விரட்டியடிக்க முடியும்

தூக்கத்தின் அவசியம்

உடலுக்கும்,மனதுக்கும் ஓய்வையும், மகிழ்ச்சியைவும் தரக்கூடியது தூக்கம். அமைதியான ஆழ்ந்த உறக்கத்தில்தான் நிறைவேறாத ஆசைகள், நிறைவேறுதலும், மகிழ்வுடன் வாழ்வதும் நிகழ்கிறது. நன்கு ஆழ்ந்து உறங்கி விழித்துக் கொள்பவர்கள் மிக உற்சாகமாக செயல்படுவதை நாம் காண்கின்றோம். மனிதன் தன்வாழ்நாளில் மூன்றில் ஒருபங்கு தூக்கத்தில் செலவிடுகிறான். உழைத்தபின் ஒய்வெடுக்க-உடலுக்கும்-மனதுக்கும் ஓய்வை அளிக்கக்கூடியதே தூக்கம். உயிரற்ற போக்குவரத்து வாகனங்களுக்கே குறிப்பிட்ட தொலைவு ஓடினால் வணடியை நிறுத்தி ஓய்வு கொடுக்கிறோம்.மனிதனின தூக்கத்திற்கு பிறகு மூளை உற்சாகமடைகிறது. அதனால் அம்மனிதனும் உற்சாகமாக செயல்படமுடிகிறது.

நான்கு மணிநேரம் (அ) பத்து மணி நேரம் தூங்குகிறோமா என்பது முக்கியமல்ல. ஒரு நபர் சுறுசுறுப்புடன் இருக்கமுடிந்தால் அவர் தூங்கிய நேரமே சரியான அளவு தூக்க நேரமாகும். தாவரங்கள், மரங்கள், விலங்குகளும் உறங்குகின்றன.விலங்குகளின் தூக்கத்தின் கால அளவு மாறுபடுகிறது.

மனிதனுக்கு ஆறுதலையும்,ஊக்கத்தையும்,உற்சாகத்தையும் அளிக்கக்கூடியது தூக்கம். தூக்கமின்மையால் பதட்டம்,கவனமின்மை போன்ற பலவித இன்னல்களுக்கு இட்டுச்செல்கிறது.தொடர்ந்து பலநாட்கள் கண் விழித்து வேலை செய்பவர்களிடம் அவர்களது பணியின் தரம் குறைகிறது என்பது நிருபணமாகியுள்ளது.

உயர் ரத்தஅழுத்தம்,மன அழுத்தம்,இதய நோய்கள்,மூளை சம்மந்தமான குறைபாடுகள் என பல்வேறு நோய்களுக்கு தூக்கமின்மை முக்கிய காரணமாகிறது.

தூங்கும் போது நமது கண்கள் அசைக்கின்றனவா? அசையாமல் இருக்கின்றனவா? என்பதை கணக்கில் கொண்டு தூக்கத்தை அதிக கண் அசைவுடைய தூக்கம், கண் அசைவற்ற தூக்கம் என இரண்டு வகைகளாக பிரிக்கிறார்கள்.

தூக்கத்தின் வகைகள்

அதிக கண் அசைவுடைய தூக்கம்

தூங்கும் போது நமது கண்கள் அசைக்கின்றனவா? அசையாமல் இருக்கின்றனவா? என்பதை கணக்கில் கொண்டு தூக்கத்தை அதிக கண் அசைவுடைய தூக்கம், கண் அசைவற்ற தூக்கம் என இரண்டு வகைகளாக பிரிக்கிறார்கள்.

கண் அசைவற்ற தூக்கம்

இலகுவான தூக்கம்: இலகுவான தூக்கம் என்பது தூக்கத்துக்கும்- விழிப்புக்கும் இடையே மனம் பயனப்படும் நேரம் எனலாம். இந்த வகை தூக்கத்தில் இருப்பவர்கள் சிறிய சப்தத்திற்கு கூட திடுக்கிட்டு எழுந்து கொள்வார்கள்.

உண்மையான தூக்கம்: இலகுவான தூக்கத்தின் அடுத்த நிலையில் வருவது இது. இந்த நிலையில்தான் பெரும்பாலானவர்களின் தூக்கம் நிகழ்கிறது.

ஆழமான தூக்கம்: இந்த நிலையில் இதயம்-மூச்சு இரண்டும் மிக மிகக் குறைந்த அளவிலேயே இயங்குகின்றன. இந்த உறக்கமானது முழுமையானதாக இருக்கும்.இந்த உறக்க நிலையில் எழுப்பினால் ஓரிரு நிமிடங்கள் கழித்து நிதானமாக,தெளிவாக விழித்துக் கொள்வார்கள்.

மிக ஆழமான தூக்கம்: இந்த உறக்கத்தில் இருப்பவர்கள், அசைவற்று உறங்குவர் .இவரை எழுப்பினால், எங்கு இருக்கிறோம்? என்ன நிகழ்கிறது என்பதை உணராமல் குழம்பிப் போய் தடுமாறுவர். சூழலுக்கு தக்கபடி தன்னை மாற்றிக் கொள்ளவே அவருக்கு நிறைய நேரமாகும்.

தூக்கமின்மையால் ஏற்படும் தொல்லைகள்

மூச்சு திணறல் நோய்

சிலிப் அப்னோவா எனப்படும் மூச்சு திணறல் நோய்க்கான காரணமும் – குறட்டைக்கான காரணமும் ஏறக்குறைய ஒன்று.ஆனால் இந்த மூச்சு திணறல் நோய் சற்று ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும். தூக்கத்தில் மூச்சு பாதையில் அடைப்பு ஏற்பட்டு சுமார் பத்து முதல் இருபத்து ஐந்து வினாடிகள் வரை மூச்சு தடைபடுவதே இந்த நோயின் ஆபத்தான அம்சம். மூச்சு மூளைக்கு வரவில்லை என்ற நிலையில் மூளை உணர்த்துகிறது. உடனே உடல் திடுக்கிட்டு விழித்துக் கொள்கிறது. அதன்பின் மீண்டும் மூச்சு சீராகிறது. ஆனால் அதற்குள் உடல் வியர்த்து மிகவும் சோர்வடைந்து படபடப்பாகி விடுகிறது. மாரடைப்பு போன்ற நோய்கள் வருவதற்கு இத்தகைய நோய் ஒரு காரணம். உயர் ரத்த அழுத்தம், சோர்வு, தலைவலி போன்ற பல நோய்களுக்கும் இது காரணமாகிறது

தூக்கம் வராத நோய் (இன்சோமியா)

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள் இன்சோமியா நோயினால் பாதிக்கப்படுகிறார்கள்.தனக்கு தூக்கம் வராது தன்னால் தூங்க முடியாமல் போகிறது. என்ற எதிர்மறை எண்ணங்களே தூக்கம் வராத நிலையை உருவாக்கி விடும்.எனவே எதிர்மறை எண்ணங்களை கைவிட்டு,சாதகமான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். மனதை ஓய்வாக வைத்திருப்பதும், நன்கு ஆரோக்யமாக தூங்குவதற்கு வசதியான படுக்கை அமைப்பு உருவாக்கி கொள்ளும் போது தூக்கமின்மை நோயை விரட்டியடிக்க முடியும்.

ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்

தூக்கத்தில் காலாட்டிக் கொண்டே இருக்கும் நோயும் இருக்கிறது சரியான தூக்கம் வராததால் காலை ஆட்டிக் கொண்டிருப்பது, உடலை முறுக்குவது உதறுவது நெளிவது என பல வகைகளில் இந்த நோயின் தன்மை வெளிப்படும்.

குறட்டை

குறட்டை விட்டு தூங்குவது குறைபாடாகும். பிறரின் தூக்கம்,மனஅமைதியைவும் இழக்க நேரிடுகிறது . தொண்டைக்கு பின்னால் இருக்கும் மெல்லிய தசைகள் காற்று வரும் பாதையை அடைக்கும் போது, அல்லது குருகலாக்கும் போது எழும் சத்தமே குறட்டை.

அதிக உடல் எடையுடன் இருப்பது, தூங்குவதற்கு முன்னால் மது அருந்துவதும், தூக்க மாத்திரைகள் போடுவதும் குறட்டை விடுவதை அதிகப்படுத்தும். நல்ல உடற்பயிற்சியும் – ஆரோக்கியமான உணவுப் பழக்கமும் குறட்டையை குணப்படுத்தும். குறட்டை விடும் நபர்கள் ஒருக்களித்து படுப்பது குறட்டையிலிருந்து தற்காலிகமாக நிவாரணம் கிடைக்கும்.

தூக்கமின்மைகான காரணம் என்ன?

இன்றைய கால சூழலில் வருவாய் குறைந்து (அ) எதிர்பாராத சிக்கலால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி கடன் சுமை, அது தொடர்பான மன அழுத்தம்,அவமானம் தூக்கமின்மையில் முடிகிறது.அதிக உடல் உழைப்பு உள்ள நபர்களுக்கு அதனால் ஏற்படும் உடல்வலி அசதி காரணமாக தூக்கம் கெடும்.அதிக உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கும் தூக்கம் கெடும்.ஒவ்வொருவரும் வாழ்வில் தன்மானத் துடனும்,மகிழ்வுடனும் வாழவே விரும்புவர், ஏதாவது ஒரு காரியத்தால் அவமானப்ப்டுவர், அவமான உணர்ச்சியின் உச்சத்திற்கு சென்று,தூக்கமின்மைக்கு ஆளாகிறார்கள்.பணி நிமித்தமாக குடும்பத்தை விட்டு, தொலைவில் தங்க நேர்பவர்களும்,குடும்ப பிரச்சனைகளால் குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பவர்களும், திருமணம் ஆகாதவர்களும் தூக்கமின்மையால் சிரமப்படுகின்றனர்.சில மருந்துகளின் பின்விளைவாலும் தூக்கமின்மை உருவாகும்.முறையற்ற உணவுப்பழக்கம் கொண்டவர்கள் – நேரம் தவறி உண்பது, அல்ல்து குறைவாக உண்பது அல்லது அதிகமாக உண்பது. இந்த பழக்கத்தால் ஜீரண மண்டல உறுப்புகள் பழுதடைந்து தூக்கமின்மை உருவாக்கும்.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுநீர் கழிப்பதற்கு அடிக்கடி எழுந்திட வேண்டிய சூழ்நிலையில் தூக்கம் கெடுகிறது. இது தூக்கமின்மையில் முடிகிறது.தாம்பத்ய குறைபாடுகள் காரணமாகவும் தூக்கம் கெடும்.ரத்த கொதிப்பு, காசநோய், ஆஸ்த்மா, போன்ற சுவாச கோளாறுகள் உள்ளவர்களுக்கும் கேன்சர், உள்ளவர்களுக்கும் தூக்கம் கெடும்.வகுப்பில் ஆசிரியர்கள் அளித்த வீட்டு பாடம் எழுதாமை,படிக்காமை ஆகியவற்றால் மன அழுத்தம் ஏற்பட்டு தூக்கமின்மையாக மாறும்.எந்த காரியத்திலாவது முயற்சிகள் எடுத்து காரியம் நடக்காமல் தோல்வி அடையும் போது ஏற்படும் மனசோர்வு,மனநிலை பாதிப்பும் தூக்க மின்மையை உருவாக்கும்.முதன் முறையாக கருவுறும் பெண்களுக்கும், பிரசவம் மற்றும் கர்ப்பகால குழப்பங்களால் தூக்கமின்மை ஏற்படும்.மாதவிலக்கு பிரச்சனை உள்ளவர்களுக்கும் தூக்கமின்மை ஏற்படும்.சிறுநீரக கோளாறுகள்,ஈரல் வீக்கம்,மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கும் தூக்கமின்மை உருவாகும்.தனக்கு விருப்பமானவர்களின் மரணமும், தூக்கமின்மையை உருவாக்கும்.டீ,காபி,மது வகைகள்,போதை பொருட்களை பயன்படுத்துவோர், போன்றொருக்கெல்லாம் தூக்க குறைபாடு ஏற்படும்.பிள்ளைகள் ஆதரவின்றி கஷ்டப்படும் முதியோருக்கும்தூக்கமின்மை ஏற்படும்.முதுமையான வயதிலும் தூக்கமின்மை ஏற்படும்.

குழந்தைகளுக்கு தூக்கமின்மை ஏற்பட காரணம்

குழந்தைகளுக்கு ஏற்படும் பயம் மற்றும் அதிக சத்தம் காரணமாக.நோய்தொற்று காரணமாக.கொசு தொல்லை.வயிற்றில் உள்ள கிருமிகளால்.இரவில் அதிக உணவு உண்பது அல்லது குறைவாக உண்பது.தாய்- தந்தையின் சண்டை காரணமாகவும்.படுக்கையில் சிறுநீர் கழிப்பதாலும்.அதிகமாக படிப்பதால் ஏற்படும் மூளைச் சோர்வு போன்றகாரணங்களால் குழந்தைகளுக்கு தூக்கமின்மை ஏற்படுகிறது.

தூக்கமின்மையை விரட்டியடிக்க முடியும்

பொதுவாக தூக்கமின்மை என்பது ஒரு நோய் அல்ல, பல்வேறு பிரச்சினை (அ) நோய்த்தாக்குதலால் ஏற்படும் அறிகுறி ஆகும். தூக்கமின்மை என்பது உடலும் மனமும் இணைந்த செயல்பாடாகும்.உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் உடற்பயிற்சி, தியானம், யோகாசனம் போன்றவைகளை கடைபிடித்தல் அவசியமானது.ஒன்றை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.மனதை குழப்பிக்கொள்வது, உணர்ச்சி வசப்படுவது.எதுவுமே பிரச்சனைகளை தீர்க்காது.மாறாக மனப்பிரச்சனை உருவாகி அதனால் உடல் சார்ந்த பிரச்சனைகளும் உருவாகும்.எனவே எந்த பிரச்சனைகளுக்கும் தீர்வை யோசிக்கவேண்டும்..தீர்வை கண்டுபிடிக்க சிந்திக்க வேண்டுமே தவிர கவலைபடக்கூடாது.இந்த மனநிலைக்கு வர ,மூச்சு பயிற்சி-உடல் பயிற்சி-தியானம் செய்வது மிகவும் நல்லது.

வியாபாரம் செய்பவர், கூலி தொழிலாளர், தொழில் அதிபர், அலுவலக பொறுப்பாளர் என உடலுழைப்பு, மூளை உழைப்பை செலுத்தக் கூடியவர்கள் யாராக இருந்தாலும், எந்த பிரச்சனைகளையும் படுக்கை அறைக்குள் அனுமதிக்கக்கூடாது, விவாதிக்கக்கூடாது. மகிழ்வான செய்தி - மகிழ்வு தரும் அனுபவங்கள் பற்றிய பேச்சுகளாக மட்டுமே படுக்கை அறையில் இருத்தல் வேண்டும்.படுக்கையறையினை காற்றோட்டமுள்ளதாக, தூங்குவதற்கு வசதியான படுக்கைகளை கொண்டதாக இருத்தல் வேண்டும்.படுக்கையறையில் வெளிச்சம் இருக்கக் கூடாது.படுக்கையறையில் மொபைல் போன்றவற்றினை பயன்படுத்தக் கூடாது.படுக்கையறை என்பது தூங்குவதற்கு பயன்படுத்துவதாக இருத்தல் வேண்டும்.சாப்பிட்டவுடன் தூங்கச்செல்லாமல் சற்று காலார நடந்து விட்டு, சாப்பிட்ட ஓன்றரை மணி நேரத்திற்கு பின்பே உறங்கச் செல்ல வேண்டும்.உறங்கச் செல்வதற்கு முன்பு 4 மணிநேரத்திற்குள் டீ, காபி, மது, புகை என எதையும் பயன்படுத்தக்கூடாது.பகலில் தூங்குவதனை தவிர்க்க வேண்டும்.தூங்கச் செல்லும் முன் குளிர்ந்த நீரில் உடலை கழுவிக் கொள்ளலாம்.பால் குடிப்பது நல்லது. அதில் உள்ள சத்து பொருட்கள் தூக்கத்தை வரவழைக்கும்.படுக்கை அறையில் இரவு பல்புகள் இருக்க வேண்டிய கட்டாயமில்லை. தூங்கும் அறை இருட்டாகவும் வெளியில் இருந்து வெளிச்சம் உள்ளே வராமலும் இருத்தல் அவசியம்.தூங்கும் அறையில் மின்விசிறியை அதிவேகமாக சுழல விடாமல் மிதமாக சுற்றினால் மிதமான காற்றில் தூக்கம் இதமாக இருக்கும்.தலையணை – படுக்கைகள் மென்மையானதாக இருத்தல் அவசியம் படுக்கை விரிப்புகள் தூய்மையானதாக இருத்தல் முக்கியம்.தூக்கம் வந்தால் மட்டுமே படுக்க வேண்டும் தூக்கத்தின் இடையில் விழிப்பு வந்தால் உடனே சிந்திப்பது கூடாது.மனதை அமைதியாக்கி, கண்களை மூடி,இரண்டு கண்களையும் நடுபுருவ மத்தியில் பார்வையையும் சிந்தனையையும் ஒருமுகப்படுத்தும் போது உறக்கம் இயல்பாக வரும்.ஒரு நாள் தூக்கமில்லை என்றால் கவலைப்பட வேண்டியதில்லை நமது உடல் இயல்பாக ஏற்றுக் கொள்ளும் தொடர்ந்து தூக்கமில்லை என்றால்தான் பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும் என நாம் உணரலாம்.இரவு உணவு மிதமாக இருத்தல் வேண்டும், அசைவ உணவு எண்ணெய்யில் பொறிக்கபட்டவை, வாயுக்களை உருவாக்கும் உணவுகள்,கீரைகள்,குளிர்பானங்கள், டீ,காபி போன்றவற்றை சாப்பிடுவதனை தவிர்த்திடல் வேண்டும்.சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும்.


புதன், 21 ஆகஸ்ட், 2019

திருமண சடங்குகளும்,விளக்கமும்


திருமண சடங்குகளும்,விளக்கமும்

நம்முடைய இந்து சமயத்தில் திருமண நிகழ்ச்சியின்போது செய் யப்படும் சடங்குகளுக்கு சுருக்கமாக
விளக்கம் .

1.நாட்கால் நடல்:

இதை பந்தகால் நடுவது என்பார்கர்கள்.பந்தகால் நடுவதற்கு வே ரில்லாமல் துளிரும் மரத்தை (
பூவரசம் மரம்)வெட்டி நட வேண்டும் .மரத்தின் நுனியில் , முனை முறியாத மஞ்சள்,12 மாவிலைகள்,பூ மூன்றையும் இணைத்து கட்ட வேண்டும்.

பின்பு நட வேண்டிய குழி யில் வெள்ளி நாணயம் , பூ , நவ தானியம் இவற்றை போட்டு போட்டு பந்த கால் நட வேண் டும்.சாம்பிராணி காண்பித்து தேங்காய் உடைக்க வேண்டு ம்.

பந்தகால் நட்டவுடன் மரத் தின் அடியில் பால் ஊற்றி,மஞ்சள்,குங்குமத்தை மேல் நோக்கி தடவ வேண்டும். மாவிலை , நவதானியம் , வெள்ளி நாணயம் , பூ , தீய சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும் . பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங்களு க்கும் அறிவிக்கை செய்து ஆசி பெறுவது நோக்
கமாகும்.

2.பொன்னுருக்குதல்:

திருமாங்கல்யம் என்பது சுமங்கலி யின் சின்னம் ஆகும்,போற்றி பாது காக்க படவேண்டியது ஆகும்.நல்ல நாளில்,தீர்க்க சுமங்கலி யாக வாழ் வதற்கு மாப்பிள்ளை வீட்டில் வைத்து உரிய நபரிடம் ( பொற்கொ ல்லர் ) புதிய பொன் கொடுத்து திருமாங்கல்யம் செய்ய வேண்டும்.

3.கலப்பரப்பு:

மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை களத்தில் பரப்பி (
தரையில் விரித்து ) மணப் பெண் அமர்ந்து மங்களப் பொருட்களை இரு வீட்டாரு க்கும் வழங்குதன் மூலம் இரு வீட்டாரும் கலந்து ஒன்றா கிவிட்டதற்கான அடையாள நிகழ்ச்சி (கலம் என்பது பாத் திரம் ) ஆகும்.பாத்திரத்தில் மங்கலப்பொருட்களை ( மஞ் சள் கல வை, வெற்றிலை , பாக்கு , தெங்காய் , பழக்கள் பூச்சரம் , ) நிரப்பு தல் கலப்பரப்பு ஆகும் .

4.காப்பு கட்டுதல்:

காப்பு என்பது அரண் போன்றது . மங்களகரமான சக்தி வாய்ந்த
ம ங்கள் உரு வாய்ந்த மஞ்சள் கயிற் றை காப்பாக கட்டுவது . திரு ஸ்டி. மற்றும் அசுர சக்திகளால் இடையூறுகள் வரா மல் தடுப்பத ற்கு. காப்புக் கட் டுவதில் இருந்து மறுநாள் காப்பு அவிழ்க்கும் வரை திருமணம் சம்பந்தமா அனைத் து நிகழ்ச்சிகளையும் தடையின்றி செ ய்வேன் என்பதை உறுதி செய்யும் சட ங்காகும். அனைத்து நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெறும் வண்ணம் இ டையூறு வராமல் காக்கு மாறு தெய்வ த்தை வேண்டிக் கட்டப்ப டுவது ஆகும்.

5.முளைப்பாலிகை :

நவதானியத்தின் மூலம் நவக்கிரகங்களை சாந்தி செய்வது .
முளைப்பாலிகையில் இடப்படும் நவதானியங்கள் வளர்வதுபோ ல் குடும்பமும் செழித்து வளரட்டும் என்பதற்கான அடையாளச் சட ங்கு . கள்ளங்கபடமற்ற குழந்தை களின் உள்ளம் தெய்வீக பண் பின் உறைவிடம் . என்வே சிறுமியர் மூலம் இச்சடங்கு நடத்தப்படுகின் றது .

6.தாரை வார்த்தல் :

தாரை என்றால் நீர் என பொருள் . நீருக்குத் தீட்டில்லை . நீர் மந்
திர நாத ஒலியின் அதிர்வை ஏற்கக்கூடியது. இப்படி தெய் வத் தன்மை வாய்ந்த நீரை இதற்கு பயன்படுத்துகின்ற னர். திருமணச்சடங்குகளில் மிகமுக்கியமானது தாரை வார்த்தல் . தாரை வார்த்த பின்பு தான் மணமகன் மண மகள் கழுத்தில் தாலி கட்டு ம் உரிமையை அடைகின்றா ன் .

” என் மகளை தெய்வங்களின் சாட்சியாக உனக்கு மனைவியாக
கொடுக்கின்றேன் “ என மணமகளின் பெற்றோர் , தாரை வார்த்து கொடுக்க மணமகனின் பெற்றோர் உங்கள் மகளை இனி எங்களது மறு – மகள் ( மருமகள்) ஆக ஏற்றுக் கொள்கின்றோ ம் என்பதற்கான உறுதிமொழி .

எனவே தான் மாப்பிள்ளையின் தாயார் கை ஏற்றுக்கொள்ளும் விதமாக அடியில் இருக்க , அதற்கு மேல் மணமகனின் தந்தையின் கை , மணமகனின் கை , மணப்பெண்ணின் கை , மணப்பெண் ணின் தந்தையின் கை , எல்லாவற்றி ற்கும் மேலாக மணப்பெண்ணின் தா யாரின் கை . இந்தவெரிசையில் கைக ளை வத்து இச்சடங்கு நடைபெறும் . உரிமையை விட்டுக்கொடுப் பதற்கு அடையாளமாக செய்யப்படும்
சாஸ்திரப்பூர்வமான சடங்கு தாரை வார்த்தல் என்ப்படு ம் .

7.தாலி கட்டுவது

தாலி என்பது மணமகன், மணமகள் கழுத்தில் கட்டு ம் மஞ்சள் கயிறு ஆகும். மஞ்சள் நிறம் இந்துக்களி ன் புனித நிறம் ஆகும். மே லும் தாலி என்பது ஒரு பெண்ணுக்கு அடையாள சின்னமாகும்.

 தலைநிமிர்ந்து நடந்து வரும் ஆடவர்,ஒரு பெண்ணை பார்க்கும் பொ
ழுது, கழுத்தில் தாலியை பார்க்கும் பொழுது இவள் மற்ற வருக்கு உரியவள் என ஒதுங்கி போய்விடுவார்.

தாலம் பனை என்ற பனை ஓ லையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்த படியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள்.

பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுது
பட்டதால் நிரந்தரமாக இரு க்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தி னர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற் றாலி ஆக்கினர்.

 ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறு மே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான்.

 (இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து,
நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விர ல் விரலாய் இருக்கும் மஞ் சள் விரலி மஞ்சள்.

 மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ் சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.

இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யா ணம் செய்துகொள்வதாக அ னைவரும் கையொப்பமிட அ ந்த தாலியி னை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத் தில் மணமகன் கட்டியதாக சாஸ்திரம் கூறுகிறது.
தாலி என்பது ஆரியர்களுக்கு பிறகு வந்த பழக்கம் என சில ர் கூறுவர்.ஆனால் அது தவறாகும்.பண்டைய காலத்திலேயிருந்து தமிழர்கள் பின்பற்றிவந்த ஒரு சம்பிரதாயமாகும்.

பண்டைய
இல க்கியங்களில் இதை மங்கள நாண் என் று கூறப்பட்டுள்ளது.

மாங்கல்ய சரடானது ஒன்பது இழைக ளை கொண்டதாகும்.ஒவ்வொரு இழை களும் ஒவ்வொரு நற்குனங்களை குறி க்கிறது.

தெய்வீககுணம், தூய்மையான குணம், மேன்மை, தொண்டுள்ளம், தன்னடக்க ம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ள தை உள்ளபடி புரிந்துகொள்ளுதல் போ ன்ற ஒன்பது குணங்களும் ஒரு பெண் ணிற்கு இருக்கவேண்டும் என்பதற்கா கவே,ஒன்பது சரடு உள்ள மாங்கல்ய நாண் பெண்களுக்கு அணியபடுகிறது.

8. ஹோமம் வளர்த்தல் :

வேதங்களில் சொல்லப்பட்டப்படி அக்னி சாட்சியாக திருமணம் நடைபெற வேண்டு ம் . ஹோமத்தின் மூலம் நவக்கிரகங்களை த் திருப்தி படுத்த வேண்டும் . ஹோமத்தில் இடப்படும் பொருட்கள் சுற்றுப்புறத்தை சுத் தப்படுத்துகிறது . ஹோமப்புகை உடலுக்கு ம், மனதுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக் கும் . எந்த ஒரு நிகழ்வும் அக்னி சாட்சியாக நடந்தால் தான் சாஸ்திரப்படி சரியாகும் .

9.கும்பம் வைத்தல் :

கும்பம் இறைவனது திரு உடம்பின் அடையாளம் . இறைவனின் வித்யா தேகமாகத் திகழ்வது கும்பம் . இறைவனது திருமேனி ,
கும்பத்தில் பாவிக்கப்படும் .
கும்பவஸ்திரம்——- உடம்பின் தோல்
நூல்———————— நாட நரம்புகள்
குடம் —————————— தசை
தண்ணீர் ————————– இரத்தம்
நவரத்தனங்கள் —————— எலும்பு
தேங்காய் ————————- தலை
மாவிலை ——————– தலைமயிர்
தருப்பை ————————- குடுமி
மந்திரம் ————————– உயிர்
ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது .

10.அம்மி மிதித்தல் :

அம்மி என்பது கருங்கல்லினால் ஆன சமையல் செயவதற்கு பய
ன்படும், பொருட்களை அரை ப்பதற்கு பயன்படும் கருவியா கும். அம்மி மிக உறுதியுடனு ம்,ஒரே இடத்தில் அசையாம ல் இருக்கு ம்.திருமண பெண் புகுந்த வீட்டில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், கணவர், மாமானார், மாமி யார், நாத்தானார் மற்றும் அ னைவராலும் சங்கடங்கள் வந்தாலும்,மன உறுதியுடன் எதை யும் எதிர்கொள்ளும் பக்குவத்தை கொண்டிருக்கவேண்டும் என் பதை உணர்த்தவே அம்மி மிதிப்பது ஆகும்.

11.அருந்ததி பார்த்தல் :

அருந்ததி என்பது ஏழு ரிஷிகளில் ஒருவ ரான வசிஷ்டர் அவர்க ளின் மனைவி யாவார்.ஏழு ரிஷிகளும்,வானில் நட்சத் திரங்களாக ஒளி வீசுகிறார்கள். இதைத் தான் நாம் துருவ நட்சத்திரம் என்கி றோம் .ஏழு நட்சத்திரங்களில், ஆறாவதாக (நட் சத்திரம்) இருப்பவர் வசிஷ்டர் ஆவார். இவருடைய மனைவி அருந்ததி ஆவார்.

இரவு நேரத்தில் வடக்கு வானில் நாம் பார்த்தோம் என்றால்,சப்த ரிஷி மண்டலத்தை காணலாம்.ஆறாவது நட்சத்திரமாக ஒளி வீசு
ம் வசிஷ்டர் நட்சத்திரத்தை கூர்ந்து கவனித்தால் அருகிலே யே அருந்ததி நட்சத்திரத்தையும் பார்க்கலாம்.மற்ற ரிஷிகள் எல் லாம் ரம்பா,ஊர்வசி,மேனகை இவர்களிடம் சபலபட்டவர்கள். அதேபோல் அவர்களுடைய ம னைவிகளும்,இந்திரனனின் மேல் சபலப்பட் டவர்கள்.

ஆனால் வசிஷ்டரும்,மனைவியும் ஒன்று சேர்ந்து, மற்ற வர்களின் மீது எந் த சபலம் இல்லாமல் வாழ்ந்த வர்கள்.
அருந்ததி நட்சத்திரம் அருகிலேயே இருந்தாலும்,நம் கண்களுக்கு
ஒரே நட்சத்திரமாக தெரிகிறது.

அதேபோல் மணமக்கம் இருவராக இருந்தாலும், எண் ணங்களும்,சிந்தனைகளும் ஒன்றாக இரு க்கவேண்டும். மணமகளும் அருந்ததியை போல் கண்ணியமா கவும், கட்டுபாட்டுடன் வாழ வேண்டும் என்பதை உணர்வதற்காக அருந்ததி பார்க்க சொல்கிறார்கள்.

12.ஏற்றி இறக்குதல் :

மணமக்களை பாதுகக்க இரு சுமங்கலி கள் மங்கலப் பொருட்களை ( திருவிளக்கு , நிறை நாழி , சந்தனக்கும்பா, பன்னீர்ச் செ ம்பு , தேங்காய் , பழம் , குங்குமச்சிமிழ் , மஞ்சள் பிள்ளையார் போ ன்றவை ) தொட்டுச் செய்யும் சடங்கு . மேலும் அருவ நிலையிலி ருந்
து மணமக்களை ஆசிர்வதிக் கும் தெய்வங்களுக்கும் பஞ்ச பூத ங்களுக்கும் , முன்னோர்களுக்கு ம் காட்டும் மரியாதையான பாவ னை, திருஸ்டி கழிப்பதற்காக செய்யப்படுவதும் உண்டு .

13. அடை பொரி :

பச்சரிசி மாவினால் செய்யப்படும் அடையும் .பல உருவத்தைக் கட் டும் வகையில் பொரிக்கப்படும் நெல் பொரியும் , திருமண நகழ்வு களால் ஏற்ப்டும் பல்வேறு திருஸ்டி தோஸங்களை நீக்க வல்லது . இது அட்டத் திக்கு பாலகர்களுக்கு கொடுக்கப்படும் அவிர் பாகம்
ஆகும்.

14. நிறை நாழி :

நித்தமும் குத்து விளக்கு என்று சொல்லக்கூடிய திருவிளக்கரு கே வைத்து வழிபட்டால் நற்பேறு கள் பெருகும் என்பது அய்தீகம் ஆகும்.

15.ஒலுசை :

ஒலுசை என்பதை வரதட்சணை என்றும் கூறுவர். மணமகள்
அனைத்து வகைச் செல்வங்க ளுடன் கணவன் வீட்டிற்கு வரு கிறாள் என்பதை அறிவிக்கும் நிகழ்ச்சி .

சிறப்பான இல்லற வாழ்வி ற்கு அத்தியாவசியமா ன பொருட்களை பொறுப்புண ர்ச்சியுடன் பெண் வீட்டார் கொ டுப்பது . ஒலுசைப் பொருட்க ளைப் பட்டிய லிட்டு சபையில் கொடுப்பது தற்சமயம் குறைந் து வருகிறது . இது வரவேற்க்க தக்க விசயமாகும்

16.மணமகள் பொங்கலிடுதல் :

முதல் நாள் திருமண நிகழ்ச்சிகள் அனைத்தையும் சிறப்பாக
நட த்திக் கொடுத்த இறைவனுக் கும் , முன்னோர்களுக்கும் சூரியன் முதலான் தேவர்க ளுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஆகும் .

மணமகள் வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள் என்பதைக் வெ ளிப்படுத்துவது . புதுப்பெண் ணின் சமையல் நளினம் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவுவது .

 இதுதா ன் மணப்பெண்ணின் முதல் சமையல் . இன்று போல் என்றும் வாழ்க்கை பால்போல் பொங்கவேண்டும் என்பதற்கான அறிகுறி யே பொங்கலிடுவதின் நோக்கமாகும்.

17. பிள்ளை மாற்றுவது :

எதிர்வரும் நிகழ்வுகளுக்கு அச் சாரம் . இனியும் நீங்கள் பச்சைக் குழந்தைகள் அல்ல என்பதை மணமக்களுக்கு உணர்த்தும் செ யல்வடிவ உபதேசம் .

பிறக்கப் போகும் குழ்ந்தைகள் நல்ல மு றையில் சிறப்பாக இருக்கவேண் டும் என்ற நோக்கத்தில் அனைவ ரும் ஒரு சேர வாழ்த்துவது .

திரு மணத்தின் பயனே நன்மக்கட்பேறு ” மங்கலமென்ப மனைமாட்சி ம்ற்று அத்ன் நஙலம் நன்மக்கட்பேறு “ – திருவள்ளுவரின் வாக்கா
கும். நன்மக்கட்பேறு பெறுவதற் காக செய்யப்படும் ஒரு சடங்கு .

18. மறுவீடு :

மணமகளின் பெற்றோரும் – உற வினரும் மாப்பிள்ளை வீட்டிற்கு முதன்முறையாக மணமகளுட ன் சென்று – விருந்துண்ட் மகிழ் ந்து – உறவை வலுப்படுத்துவது .

 ஒரு பெண்ணிற்கு பிறந்தவீடு வாழ்க்கையும் , புகுந்த வீடு வாழ்க்கையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது . மகளை வாழ்க்கையின் மறுபக்கத்தை காணச் செய்வதே – ம்றுவீடு ஆகும்.

19கோவிலுக்கு அழைத்துச் செல்லல் :

நல்ல திருமண வாழ்க்கை வே ண்டும் என்பது மணமக்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக அமைந்திருக்கும் . வேண்டுத லை நிறைவேற்றிய இறைவ னுக்கு நன்றி செலுத்துவதுடன் , இல்லற வாழ்க்கை வளம் பெற தெய்வங்களின் ஆசி பெறுவதற்கு தம்பதிகளைக் கோவிலு க்கு அழைத்துச் செல்ல வேணடும்.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

சுகமான நினைவுகளும், மறக்க முடியாத சில நிகழ்வுகளும் கொண்ட பாக்கியம் பெற்றவர்கள்தான் 90-களில் பிறந்த குழந்தைகள்.



HELLO... 90s kids... மலரும் நினைவுகளில் நனைவோமா?...
மலரும் நினைவுகள்..!!


👉90களில் பிறந்த குழந்தைகள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்தான்... ஏன் தெரியுமா? ஏனென்றால் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் சேர்ந்து வளர்ந்தவர்கள் இவர்கள்தான்.

👉அதாவது, அன்றைய வீடியோ கேம்-ல் தொடங்கி இன்றைய பிளே ஸ்டேஷன் வரை அனைத்தையும் முதலில் உபயோகப்படுத்தியது இவர்கள்தான்.

👉அன்று தங்கள் பெற்றோர்கள் ஒரே ஒரு ரூபாய் கொடுத்தாலே அதை வைத்து பள்ளி காலங்களில் அதிகபட்ச சந்தோஷத்தை வாங்கியவர்களுக்கு அந்த காலம் மறக்க முடியாத சொர்க்கம் என்றால் அது மிகையாகாது.

👉சுகமான நினைவுகளும், மறக்க முடியாத சில நிகழ்வுகளும் கொண்ட பாக்கியம் பெற்றவர்கள்தான் 90-களில் பிறந்த குழந்தைகள்.

90's.. மறக்க முடியுமா?

👉வீட்டுக்கு வீடு வானொலிப்பெட்டி வைத்திருந்த கடைசி தலைமுறையும் நாம் தான்.

👉வீட்டுக்கு தெரியாமல் ஆறு, ஏரிகளில் குளித்து பூவரசம் தடியால் வெறும் மேலில் அடிவாங்கிவிட்டு, தழும்புகளுடன் பாடசாலைக்கு சென்ற கடைசி தலைமுறையும் நாம் தான்.

👉உண்டியலில் சில்லறை சேர்த்து, உடைத்துக் கொட்டி தேவையானபோது எடுத்துச் செலவு செய்த கடைசி தலைமுறையும் நாம் தான்.

👉வேலிக்கு மேலாக பறக்கும் சேவலை துரத்திப்பிடித்த கடைசி தலைமுறையும் நாம் தான்.

👉சிறுவயதில் சைக்கிள் ஓட்ட பழகும்போது பிரேக் பிடிக்க மறந்துவிட்டு மரத்தில் மோதிய கடைசி தலைமுறையும் நாம் தான்.

👉மாட்டு வண்டியில் சவாரி செய்த கடைசி தலைமுறையும் நாம் தான்.

👉பிலிம் ரோலில் படம் எடுத்து முடிக்கும்வரை காத்திருந்து, பிரதி எடுத்தபின் பார்த்து மகிழ்ந்ததும் நம் தலைமுறை தான்.

👉ஒரு மணி நேரத்திற்கு 2 ரூபாய் கொடுத்து சைக்கிள் ஓட்டி மகிழ்ந்த கடைசி தலைமுறையும் நாம் தான்.

👉அம்பாசிடர் காரை பார்த்த கடைசி தலைமுறையும் நாம் தான்.

👉பெட்டிக் கடைகளில் 25 பைசாவிற்கு 3 துண்டு சினிமா பிலிம்களை வாங்கி சேகரித்து, கூட்டாளிகளுக்கு சூரிய ஒளியில் படம் காட்ட பயாஸ்கோப் தயாரித்த கடைசி தலைமுறையும் நாம் தான்.

👉நொண்டி, கபடி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாமூச்சி, கோலி போன்ற பலவிதமான விளையாட்டுகளை விளையாடிய கடைசி தலைமுறையும் நாம் தான்.

👉 இதுபோல் இன்னும் பல விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம்...

👉 இதை படித்தவுடன் உங்களுக்கும் மலரும் நினைவுகள் ஞாபகத்தில் வந்துவிட்டதா...!! அப்போ... நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்...👇👇


திங்கள், 19 ஆகஸ்ட், 2019

உண்மை மொழி

உண்மை மொழி

1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.

அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது.

அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான்.

சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி.

இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை.

தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல.

அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு.

ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.

ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.

ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.

முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட,

என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை;

நாளைய பொழுதும் நிச்சயமில்லை;

இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி.

ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம்.

ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.

அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

சனி, 17 ஆகஸ்ட், 2019

கிருஷ்ண ஜெயந்தி



கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி என்பது மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாளாகக் கருதப்பட்டு கொண்டாடப்படும் முக்கிய விழாவாகும். இவ்விழாவானது உலகெங்கிலும் உள்ள இந்துக்களால்  கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் கிருஷ்ண பட்சம் எனப்படும் தேய்பிறையில் அஷ்டமியோடு வரும் ரோகிணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

இக்கொண்டாட்டத்தில் பகவான் கிருஷ்ணன் தனது பால்ய பருவத்தில் நிகழ்த்திய சாகசங்கள் மற்றும் அவரின் குறும்புத்தனமான விளையாட்டுகள் நினைவு கூறப்படுகின்றன.

இவ்விழாவின் போது நடைபெறும் வழிபாட்டில் குழந்தை கண்ணனுக்கு பிரியமான பால், வெண்ணெய், பழங்கள், உப்பு சீடை, இனிப்புச் சீடை, தட்டை, அவல், அதிரசம், தேன்குழல், இனிப்பு வகைகள் போன்றவை இடம்பெறுவது தனிச்சிறப்பு ஆகும்.

சிறுகுழந்தைகளுக்கு பாலகிருஷ்ணன் வேடமிட்டு வழிபாட்டில் இடம் பெறச் செய்கின்றனர். மேலும் இல்லங்களில் வாயில் படியிலிருந்து வழிபாட்டு அறை வரையிலும் மாவினால் குழந்தையின் காலடித்தடங்கள் வரையப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவின் வடமாநிலங்களில் தகி அண்டி மற்றும் ராசலீலா என்னும் நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் பள்ளிகளில் கிருஷ்ணர் மற்றும் மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்கள் போல் மாறுவேடமிட்டு போட்டிகள் நிகழ்த்தப்படுகின்றன.

இவ்விழா கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இனி இவ்விழா பற்றி காணலாம்.

விழாவின் நாயகன்
இவ்விழாவின் நாயகன் கிருஷ்ணன் தனது லீலைகளின் மூலம் எல்லோர் உள்ளங்களையும் கொள்ளை கொண்டவன். தனது பிறப்பு முதல் வாழ்நாள் முழுவதும் லீலைகள் புரிந்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டியவன்.

இந்து மக்களால் வழிபாடு செய்யப்படும் கடவுள்களில் கிருஷ்ணனின் குழந்தைப் பருவமே எல்லோராலும் முதன்மையானதாக நினைவு கூறப்படுகிறது.

ஆயர் பாடியில் கோபியர்களையும், இடையர்களையும் துன்பங்களில் இருந்து பாதுகாத்ததால் இவரின் பிறப்பானது எளியோர்களாலும் கொண்டாடப்படுகிறது.

 கொண்டாடும் முறை
இவ்விழாக் கொண்டாட்டத்தின் போது விரதமுறை பின்பற்றப்படுகிறது. அன்றைய தினம் பகல் முழுவதும் விரதம் இருக்கின்றனர்.

மாலை நேரத்தில் வீடுகள் அலங்கரிக்கப்படுகின்றன. வீட்டின் வாயிற்படி முதல் வழிபாட்டிடம் வரையிலும் மாவினைக் கொண்டு குழந்தையின் காலடித்தடங்கள் வரையப்படுகின்றன.

ஆயர்பாடியில் கண்ணன் குழந்தையாக இருந்த போது உயரத்தில் கட்டப்பட்டிருந்த பானைகளில் உள்ள வெண்ணையை எடுத்து யாரும் அறியாத வண்ணம் உண்ணும் போது சிதறிய வெண்ணையில் கால் வைத்து நடந்ததால் உண்டான காலடித் தடங்களை நினைவு கூறும் வகையில் வீடுகளில் குழந்தைக் கண்ணனின் காலடித் தடங்கள் வரையப்படுகின்றன.

இவ்வாறு செய்வதால் குழந்தைக் கண்ணன் வாயிற்படி வழியே வந்து வழிபாட்டு அறையினுள் நுழைந்து தங்களின் வழிபாட்டை ஏற்றுக் கொள்வதாகவும் நம்பப்படுகிறது.

வழிபாட்டு அறையில் கிருஷ்ணருடைய உருவப்படமோ, சிலையோ இடம் பெறுகின்றது. குழந்தை கிருஷ்ணருக்குப் பிரியமான தட்டை, உப்பு சீடை, இனிப்பு சீடை, அதிரசம், தேன்குழல், இனிப்பு வகைகள், பால், வெண்ணெய், திரட்டுப்பால் போன்றவை படைக்கப்படுகின்றன.

கிருஷ்ணர் முல்லை, மல்லிகை, துளசி ஆகியவை கொண்டு அலங்கரிக்கப்படுகிறார். விளக்கு ஏற்றப்பட்டு தீபதூபங்கள் காண்பிக்கப்படுகின்றன. பகவத்கீதை, கிருஷ்ணர் பற்றிய பாடல்கள் பாடப்படுகின்றன. பின் அருகிலிருப்போர் மற்றும் உறவினர்களுக்கு படையல்கள் வழங்கப்படுகின்றன.

வீட்டில் வழிபாடு முடிந்தபின் அருகிலிருக்கும் கிருஷ்ணர் கோவிலுக்கு வழிபாடு செய்யச் செல்கின்றனர். கோவில்களில் நடுஇரவு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கிருஷ்ணர் நள்ளிரவு பிறந்ததால் அதனை நினைவு கூறும் விதமாக நள்ளிரவு வழிபாடு நடைபெறுகிறது. அதன்பின்னரே விரதம் இருப்போர் உணவு உண்டு விரதத்தினை முடிக்கின்றனர். குழந்தைகள் கண்ணன் மற்றும் ராதை வேடங்கள் இட்டு வழிபாடுகளில் கலந்து கொள்கின்றனர்.

இவ்விரத முறையைப் பின்பற்றவதால் குழந்தை இல்லாதவர்களுக்கு அழகான, புத்திகூர்மையான குழந்தைப் பாக்கியம் கிட்டும் என்றும், குழந்தைகள் உள்ளவர்களுக்கு குழந்தைகளின் அறிவு மேம்படுவதோடு நற்சிந்தனையும் கிடைக்கும் என்றும் கருதப்படுகிறது.

 தகி அண்டி
தகி அண்டி என்பதற்கு தயிர் கலசம் என்பது பொருள். இந்நிகழ்வு மகாராஷ்டிர மாநிலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தெருக்களில் உயரமான இடங்களில் பானைகளில் தயிர் நிரப்பப்பட்டு கட்டப்படுகிறது. இதனுடன் பணமுடிப்பும் கட்டப்படுகிறது.

இப்போட்டியில் கலந்து கொள்பவர்கள் கோவிந்தாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பிரமிடுகள் அமைத்து மேலேறி தயிர் கலசத்தை உடைத்து பணமுடிப்பினைப் பெறுகின்றனர். கோவிந்தாக்கள் குழுக்களை அமைத்து இரண்டு, மூன்று தகி அண்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதுண்டு.

ஆயர்பாடியில் கண்ணன் தனது நண்பர்களோடு சேர்ந்து பிரமிடு அமைத்து உயரத்தில் கட்டப்பட்டு இருந்த பானைகளில் உள்ள தயிர் மற்றும் வெண்ணெயை எடுத்தார் என்று கருதப்பட்டு இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.

 ராசலீலா
ராசலீலா என்பது கண்ணன் கோகுலத்தில் கோபியர்களுடன் இணைந்து விளையாடிய லீலைகளை நடனமாடி நடிப்பதாகும். இந்நிகழ்வு வடமாநிலங்களில் நிகழ்த்தப்படுகிறது.

தமிழ்நாட்டிலும் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் குழந்தைகளுக்கு கண்ணன், ராதா மற்றும் மகாபாரத கதாப்பாத்திரங்கள் மாறுவேடமிட்டு போட்டிகள் நிகழ்த்தப்படுகின்றன.

இவ்விழாவின் போது உறியடி நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கோவில்களில் தேரோட்டமும் நடைபெறுகின்றன. கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் இவ்விழாவின் போது லட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

நாமும் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை வழிபட்டு நன்னிலை பெறுவோம்.