திங்கள், 29 ஜூலை, 2019

குழந்தைகளுக்கு சொல்லித்தரவேண்டிய சில உடற்பயிற்சிகள்


குழந்தைகளுக்கு சொல்லித்தரவேண்டிய சில உடற்பயிற்சிகள்...

✦ குழந்தைகளை ஓடவிட்டு, கூடவே நாமும் ஓடலாம். இதனால் குழந்தைகளுக்குப் பெற்றோரின் மீதான நெருக்கம் அதிகரிக்கும்.


✦ உடல் சோர்வும்  நீங்கும்.
குழந்தைகளுக்கு எளிய உடற்பயிற்சிகளை சொல்லித் தரலாம். உடல் ஆரோக்கியமாக இருக்கும். மூளை நன்கு சுறுசுறுப்படையும், எப்போதும் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.


✦ நீச்சல் டென்னிஸ், கிரிக்கெட், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் பயிற்சி கொடுக்கலாம். உயரம் குறைவாக இருந்தால் அவர்களுக்குக் கூடைப்பந்துப் பயிற்சி கொடுப்பதால் பலன் தரும்.


✦ குழந்தைகள் நன்றாக ஓடி ஆடி விளையாடினாலே, அது ஒருவகையில் பயிற்சிதான். தினமும் கட்டாயம் உடல் வலுவை மேம்படுத்த சில  பயிற்சிகளைச் செய்யவேண்டும்.


✦ குழந்தைகளை அருகில் உள்ள பூங்காவிற்கு சென்று விளையாட சொல்லலாம். படிகளில் ஏறி இறங்கலாம். ரத்த ஓட்டம் சீராகும். மேலும் ஓடிபிடித்து விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது இது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.


✦ காலையில் ஸ்கிப்பிங் விளையாடச் சொல்லலாம். மனம் ஒருநிலைப்படும். வியர்வை வெளியேறி, புத்துணர்ச்சி கிடைக்கும்🔵🔴

நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்


நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்...

🌝 தவளை கத்தினால் மழை

🌝 அந்தி ஈசல் பூத்தால்
அடை மழைக்கு அச்சாராம்

🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை

🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்

🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது

🌝 தை மழை நெய் மழை

🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும்

🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு

🌝 புற்று கண்டு கிணறு வெட்டு

🌝 வெள்ளமே ஆனாலும்
பள்ளத்தே பயிர் செய்

🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு

🌝 களர் கெட பிரண்டையைப் புதை

🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு

🌝 நன்னிலம் கொழுஞ்சி
நடுநிலம் கரந்தை
கடை நிலம் எருக்கு

🌝 நீரும் நிலமும் இருந்தாலும்
பருவம் பார்த்து பயிர் செய்

🌝 ஆடிப்பட்டம் பயிர் செய்

🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும்

🌝 மழையடி புஞ்சை
மதகடி நஞ்சை

🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை

🌝 உழவில்லாத நிலமும்
மிளகில்லாத கறியும் வழ வழ

🌝 அகல உழவதை விட
ஆழ உழுவது மேல்

🌝 புஞ்சைக்கு நாலு உழவு
நஞ்சைக்கு ஏழு உழவு

🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை

🌝 ஆடு பயிர் காட்டும்
ஆவாரை கதிர் கட்டும்

🌝 கூளம் பரப்பி கோமியம் சேர்

🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை

🌝 நிலத்தில் எடுத்த பூண்டு
நிலத்தில் மடிய வேண்டும்

🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்

🌝 தேங்கி கெட்டது நிலம்
தேங்காமல் கெட்டது குளம்

🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை

🌝 சொத்தைப் போல்
விதையை பேண வேண்டும்

🌝 விதை பாதி வேலை பாதி

🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை

🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு

🌝 கோப்பு தப்பினால்
குப்பையும் பயிராகாது

🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம்

🌝 கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும்

வாழ்க வையகம்! வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும்.

யாரையும் நம்பாதீர்கள்.

உழவே தலை.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.

நீர் இன்றி அமையாது உலகு.

"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.

கடைசி மரமும் வெட்டி உண்டு
கடைசி மரமும் விஷம் ஏறிக்
கடைசி மீனும் பிடி பட
அப்போதுதான் உறைக்கும் - இனி
பணத்தைச் சாப்பிட முடியாது என்பது!!

ஆறும் குளமும் மாசு அடைந்தால்
சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.

நீர் நிலைகளை காப்போம்.
இணைவோம்.

நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.

மேழிச் செல்வம் கோழை படாது.


ஞாயிறு, 28 ஜூலை, 2019

நண்பர்கள் தினம்: உண்மையான நட்பின் அடையாளம் என்ன?


நண்பர்கள் தினம்: உண்மையான நட்பின் அடையாளம் என்ன?

ஒரு உண்மையான நண்பனாக இருப்பவர், உங்கள் தவறுகளை உங்களிடம் எடுத்துக்கூறும் துணிச்சலுடன், மேலும் அன்புடனும் நட்புடனும் இருக்கிறார். அதுதான் நட்புறவு.

கடந்த வருடத்தின் பனிக்காலத்தில் இது நிகழ்ந்தது. சின்னஞ்சிறு பறவை ஒன்று, வேனிற்காலத்தை சற்று அதிக நாட்கள் அனுபவித்து விட்டதால், சரியான காலத்தில் விரைவாக, தெற்கு நோக்கிய வலசைப்பயணம் தொடங்கத்தவறி விட்டது. பனிப்பொழிவு தொடங்கிய பிறகு தாமதமாக வலசைப்பயணம் ஆரம்பித்து, பறந்துசெல்ல முயற்சித்தது.

ஆனால் அதிகப்பனியினால் உடல் விறைத்துக் கீழே விழுந்தது. அந்த வழியே வந்த ஒரு பசுமாடு, சாணமிட்டவாறு சென்றது. சாணம் மிகச்சரியாக அந்தப்பறவை மீது குவியலாக விழுந்து, அதை மூடிவிட்டது. சாணத்தின் இதமான சூட்டினால் விறைப்பு நீங்கி, நலமடைந்து விட்ட பறவை மகிழ்ச்சியில் கீச்சிடத் தொடங்கியது. அந்தவழியே ஒரு பூனை சென்று கொண்டிருந்தது. பறவையின் குரலைக்கேட்ட பூனை சுற்றுமுற்றும் பார்த்ததில், சாணக்குவியலுக் குள்ளிருந்து கீச்சொலி வருவதைக் கண்டது. உடனே சாணத்தைத்தள்ளி, பறவையைச் சாணத்திலிருந்து கவ்வி இழுத்து, சாப்பிட்டு விட்டது.

இந்த கதையின் நீதி என்ன வென்றால், அசிங்கத்தால் உங்களை நிறைப்பவர் உங்கள் எதிரியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அசிங்கத்திலிருந்து உங்களை வெளியில் எடுப்பவரும் உங்கள் நண்பராக இருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த அனைத்திலும் நீங்கள் ஒன்றை குறிப்பாகக் கற்றுக் கொள்ளவேண்டும். அதாவது நீங்கள் அசிங்கத்திற்குள் இருக்கும்பொழுது, வாய்மூடி இருப்பதற்கு கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் நண்பர்களிடம் உள்ள குறைகளை எப்போதும் சுட்டிக்காட்ட வேண்டியதில்லை. அது முக்கியம் அல்ல. ஆனால் அதேநேரத்தில் அவர் களிடையே இருக்கும் உங்கள் செல்வாக்கை இழப் பதற்கும் உங்களுக்குத் துணிவு இருக்க வேண்டும்.

நண்பர்களிடையே புகழ்பெறும் முயற்சியில், உங்களைச்சுற்றிலும் ஏதோ ஒருவித இனிமையை நிலை நாட்டும் முயற்சியில், உங்களுக்குள் எவ்வளவு இனிமையற்ற தன்மையை நீங்கள் புதைத்து வைத்துள்ளர்கள் என்று பாருங்கள். இனிமையற்றதை புதைத்தால், இனிமையற்றதைத்தான் நீங்கள் அறுவடை செய்வீர்கள். உண்மையிலேயே உங்களுக்கு ஒரு நண்பர் இருந்தால், அந்தத் தோழியுடன் அல்லது தோழனுடன் செல்வாக்கில்லாமல் இருக்கவும் உங்களுக்கு துணிவு வேண்டும். அதேநேரத்தில் அவருடன் அன்புடனும், நட்புடனும் இருக்க வேண்டும்.

தற்போது உங்களது நட்புறவுகள் எப்போதும் உடன்படிக்கைகள் மற்றும் விருப்பு வெறுப்புகளினால் மட்டுமே உருவாகியுள்ளது. ஆனால் நீங்கள் நெல்லிக் கனியும், நாவல் கனியுமாக இரு வேறுபட்டவர்களாக இருந்தாலும், அப்போதும் நீங்கள் நல்ல நண்பர்களாக இருக்கமுடியும். ஒரு உண்மையான நண்பனாக இருப்பவர், உங்கள் தவறுகளை உங்களிடம் எடுத்துக்கூறும் துணிச்சலுடன், மேலும் அன்புடனும் நட்புடனும் இருக்கிறார். அதுதான் நட்புறவு.

உங்களது நட்புறவுகளில் சிறிது கூடுதலான துணிவுடன் இருங்கள். அவர்களை இழப்பதற்குத் தயாராக இருங்கள், அது பரவாயில்லை. குறைந்த பட்சமாக, நீங்கள் அவர்கள் மீது அக்கறையுடன் இருந்தால், அவர்களுக்குத் தேவையான நல்லதை செய்வீர்கள், உங்களுக்குத் தேவையான நல்லதை அல்ல. எனக்கு அறிமுகமான ஒரு மருத்துவர் பீர் அருந்துவதை பழக்கமாகக் கொண்டிருந்தார்.

நான் அவரைச் சந்தித்தபோது, அவர் ஏறக்குறைய தனது எழுபது வயதில், பெரும் வயிறுடைய பெருத்த மனிதனாக இருந்தார். சமீபகாலம் முன்பு வரை, அவர் தினமும் ஒரு நண்பரைக் காணச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்திருந்தார். இவர் அங்கு போகும் போதெல்லாம், நண்பர் பீர் பரிமாற, இருவரும் அருந்திக் கொண்டிருப்பார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வசதிப்படி அவரது நண்பரும் இங்கு வருவதுண்டு, மருத்துவரும் அங்கு போவதுண்டு.

திடீரென்று ஒருநாள், மருத்துவரின் நண்பர் ஒரு குருவைச் சந்தித்ததோடு, ஆன்மிகப்பயிற்சிகள் செய்யத் தொடங்கியதுடன், பீர் அருந்துவதையும் நிறுத்தி விட்டார். இந்தக் கதையை மருத்துவர் என்னிடம் மிகவும் விலாவாரியாகக்கூறி அப்படி யாக ஒரு மகத்தான நட்பு முடிவுக்கு வந்து விட்டதாகக் கூறினார். அதற்குப்பிறகு ஒருபோதும் அவரது வீட்டிற்கு மருத்துவர் செல்லவில்லை. காரணம், நண்பர் இவருக்கு பீர் பரிமாறுவதை நிறுத்தியிருந்தார். அநேக நட்புறவுகள் இந்தவிதமாகத்தான் இருக்கின்றன.

ஏதோ ஒன்று தொடர்ந்து கொண்டிருக்கும் வரையில், நட்பு இருக்கிறது. அதுநின்றுபோகும் கணமே, எல்லாம் போய் விடுகிறது. முதலில், ஒரு நண்பர் என்பதன் பொருள் என்ன? ஒருநண்பராக இருப்பவரும் உங்களைப்போலவே மற்றொரு குழப்பமான மனிதர். நண்பர் என்றால், அவர் ஒருகனகச்சிதமான மனிதர் என்று பொருளல்ல. இருவர், போதுமான தளர்வுநிலையில், ஒருவரை ஒருவர் நேர்மையாக அணுகினாலே, அந்த இருவரும் நண்பர்களாகிறார்கள். உங்களது நண்பரும் கூட நீங்கள் இருப்பதைப்போன்றே குளறுபடியுடன் தான் இருக்கிறார். ஆனால் இரண்டு பேர் ஒருவருக்கொருவர் நேர்மையுடன் இருக்க முடிந்தால், பிறகு அவர் உங்களுக்கு நண்பராகி விடுகிறார். 

நட்பு தின வரலாறு


நட்பு தின வரலாறு!

ஒவ்வொரு தினம் கொண்டாடவும் ஒரு தனிப்பட்ட நபரோ அல்லது சம்பவமோ காரணமாக இருந்தாலும் நட்பு தினம் கொண்டாட ஏதேனும் காரணம் ஒன்று வேண்டுமா என்ன? உலகத்தில் பிறந்த அனைவருக்கும் நட்பு என்பது இல்லாமல் இருக்காது.

எனவே எல்லோருமேக் கொண்டாடும் ஒரு தினம்தான் இந்த நட்பு தினம்.

இதற்கு முன்னோடியாக அல்லது வழிகாட்டியாக இருந்தது என்னவென்றால், அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் 1935ஆம் ஆண்டு ந‌ட்பு தினம் பற்றிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

அதில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக் கிழமை கட்டாய விடுமுறை அறிவித்து, அன்றைய தினத்தை நட்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

அன்று முதல் அமெரிக்காவில் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகெங்கிலும் பரவியிருக்கும் நண்பர்கள், இந்த நட்பு தினத்தையும் கொண்டாடத் துவங்கிவிட்டனர். தற்போது பல்வேறு நாடுகளிலும் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

நட்பில் பலவகை அதுபோல் கொண்டாட்டமும் பல வகை

நட்பு தினம் என்றதும் ஆகஸ்ட் முதல் ஞாயிறு என்று சரியாகச் சொல்லிவிடுவோம்.

நட்பு தின‌த்தை கொ‌ண்டாடுவ‌திலு‌ம் பல்வேறு வகைகளைப் பிரித்துள்ளனர்.

அதாவது தேசிய நட்பு தினம் ஆகஸ்ட் முதல் ஞாயிறு என்றும், மகளிர் நட்பு தினம் ஆகஸ்ட் 3வது ஞாயிறு என்றும், சர்வதேச நட்பு மாதம் என்பது பிப்ரவரி என்றும், பழைய மற்றும் புதிய நண்பர்களுக்கான வாரம் மே மாதத்தின் 3வது வாரம் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.

உலக நண்பர்கள் தினம்..! உறவை விட பெரிதாக மதிக்கப்படும் நட்பு..!


உலக நண்பர்கள் தினம்..! உறவை விட பெரிதாக மதிக்கப்படும் நட்பு..!

மனிதர்கள் மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் நட்பு என்பது இல்லாமல் இருக்காது. அத்தகைய நண்பர்களின் அன்பை சொல்லும் தினம் இன்று... ரத்த சொந்தம் இல்லாத, நண்பனுக்காக உயிரைக் கொடுக்கும் அளவிற்கு பாசம் வைப்பது ஏன்?.

நீரியின்றி அமையாது உலகு என்ற பழமொழிக்கு சற்றும் மிகையானது அல்ல "நட்பின்றி அமையாது மகிழ்ச்சி" எனும் புதுமொழி. அதனால் தான் "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" என வள்ளுவ பெருந்தகையும் நட்புக்கு தனி அதிகாரம் அமைத்து கொண்டாடியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் 1935ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி உலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உறவுகளை விட சிறந்தது நட்பு என்பதை மெய்பிக்க பல்வேறு சான்றுகள் உள்ளன. கடவுளுக்கும் எளியோனுக்கும் இடையேயான நட்பாக கண்ணன் - குசேலன், சங்க காலத்தை வியப்பில் ஆழ்த்திய கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார், தேரோட்டி மகனை அரசனாக்கி அழகு பார்த்த துரியோதனன் - கர்ணன் நட்பு, அரசியலில் கருணாநிதி - எம்.ஜி.ஆர், சினிமாவில் ரஜினி - கமல் என அனைத்து பரிமாணங்களிலும் நட்பிற்கான உதாரணங்கள் குவிந்து கிடக்கின்றன்.

இந்த உலகமே நட்பு எனும் நூலில் தான் கட்டப்பட்டுள்ளது. பெற்றோர், கணவர், மனைவியிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத சில ரகசியங்கள் தோழன் அல்லது தோழியிடம் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. எவ்வித எதிர்ப்பார்ப்பும் இன்றி, சுயநலம் கருதாது உண்மையான பாசத்தை அள்ளித் தருவதில் நட்புக்கு வேறு உறவுகள் நிகரில்லை என்றே கூறலாம். அப்படியான நட்பை திருவள்ளுவரும் தனி அதிகாரம் போட்டு கொண்டாடியுள்ளார்.

வீட்டுக்கு, நாட்டுக்கு, ஊருக்கு எல்லை உண்டு, ஆனால் நட்புக்கு எல்லையே கிடையாது. அனைவரது வாழ்விலும் ஸ்கூல் பிரண்ட், காலேஜ் பிரண்ட், ஆபீஸ் பிரண்ட், பஸ் பிரண்ட், டிரெயின் பிரண்ட் (Train) என நண்பர்களின்  பட்டியல் முடிவுறாமல் நீள்கிறது. நம் சந்தோஷங்களை பல மடங்காக அதிகரிக்கவும், துன்பங்களை தூர விலக்கவும் நமக்கு எப்போதும் ஒரு நட்பு தேவைப்படுகிறது.

90-களில் க்ரீட்டிங் கார்டு, ஃப்ரண்ட் ஷிப் பேண்ட் என திருவிழா கோலமாக கொண்டாடப்பட்ட நண்பர்கள் தினம், இன்றைய தொழில் நுட்பத்தால் வாட்ஸ் அப்பில் மெசெஜ் செய்வது, ஃபேஸ்புக்கில் டேக் செய்து விடுவது, இன்ஸ்டாவில் போட்டோ போடுவது என வேறு பரிமாணத்திற்கு மாறியுள்ளது. மாற்றங்கள் பல நேர்ந்தாலும் நட்பை அழிக்க யாராலும் முடியாது என்பதை இன்றைய இளம் தலைமுறையினர் நன்றாக உணர்ந்துள்ளனர்.

சனி, 27 ஜூலை, 2019

இரவில் தொப்புளில் தினமும் ஒரு சொட்டு எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!


இரவில் தொப்புளில் தினமும் ஒரு சொட்டு எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!

♥நமது உடலில் அனைத்து நரம்புகளின் மையப்புள்ளி தொப்புளில்தான் அமைந்துள்ளது என்பதை அறிவீர்களா? குறைந்தது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் அளவு பூமீயின் சுற்றளவு இருமடங்கு இருப்பதைப் போல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

♥அத்தகைய தொப்புளை பெண்களிடம் கவர்ச்சி அம்சமாகவும், ஆண்களிடம் கண்டு கொள்ளாமலும் வைத்திருக்கிறோம். இப்போதும் கிராமத்தில் குழந்தைகள் அழுதால் தொப்புளில் சிறிது எண்ணெய் துளி விட்டதும் அடுத்த நொடியை குழந்தை நிப்பாட்டுவது நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.

♥வாயுக் கோளாறுகள் இருந்தால் தொப்புளில் சிறிது பெருங்காயத்தை நீரில் கரைத்து தொப்புளில் தடவுவது உண்டு. அப்படி தடவுவதால் உடனடி பலன் கிடைக்கும் என்பதில் சந்தெகமில்லை.

♥அப்படி உடனடி நிவாரணம் தரும் முக்கிய புள்ளியான தொப்புளில் எண்ணெய் சிறிது விடுவதால் கிடைக்கும் நன்மைகளை அறிவீர்களா? தொடர்ந்து படியுங்கள்

#கண்பார்வை :
♥தொப்புளில் நீங்கள் தினமும் எண்ணெய் விட்டால் கண் பார்வை தெளிவடையும் . கம்ப்யூட்டர் , மொபைல் சதா சர்வ காலமும் பார்ப்பதால் நிறைய பேருக்கு கண் வறட்சி உண்டாகிறது. அவர்களுக்கு இந்த வைத்தியம் வரப்பிரசாதம். கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு போன்றவற்றை குணப்படுத்துகிறது

#பாதவெடிப்பு, #சருமபிரச்சனை :
♥உடல் சூட்டினால் உண்டாகும் பித்த வெடிப்பு குணமாகிறது. சருமம் பளபளக்கிறது. உதடு வறட்சி மறைகிறது. தலை முடி ஆரோக்கியமாக செழித்து வளரும்.

#மூட்டுவலி :
♥முழங்கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகிறது. கால் குடைச்சல் சாத சர்வ காலம் சிலருக்கு இருக்கும். இதற்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உண்டாகும். அவர்கள் தொப்புளில் எண்ணெய் விடுவதால் கால் நரம்புகள் ஆசுவாசமடைகின்றன. இதனால் மூட்டு, கால் வலிகள் குணமாகிறது.

#உடல்சோர்வு :
♥உடல் நடுக்கம், சோர்வு மற்றும் கணைய பாதிப்புகள் குணமாகிறது. கர்ப்பப்பை வலுப்பெறுகிறது. உடல் சூடு குறையும். நல்ல தூக்கம் வரும். எந்த எண்ணெய் எந்த பாதிப்பைப் போக்கும் என இப்போது பார்க்கலாம்.

#நரம்புபாதிப்புகள் :
♥நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் துவண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை வலுப்படுத்தும். இதனால் சீரான ரத்தம் பாய்ந்து உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.


#தேங்காய்எண்ணெய் :
♥தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் கண்வலி, சரும வறட்சி குணமாகும்.

#விளக்கெண்ணெய்
♥இரவில் தொப்புளில் விளக்கெண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை இஞ்ச் அளவிற்கு மசாஜ் செய்யும்போது முழங்கால் வலி, மூட்டு வலி , கால் வலி போன்றவை குணமாகின்றன.

#வேப்பெண்ணெய் :
♥வேப்பெண்ணெயை தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும், தொற்றுக்களும் குறைகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. நச்சுக்கள் அழிகிறது.

#எலுமிச்சை எண்ணெய் :
♥எலுமிச்சை என்ணெய் வைத்தால் உடலில் பூஞ்சை தொற்று காரணமாக வரும் வயிற்று வலி குணமாகும்.. தொற்றும் அழிந்துவிடும்.

#பாதாம் எண்ணெய் :
♥சருமம் பளபளக்கிறது. முகம் இளமையாக மாறும். சுருக்கங்கள் மறையும். தினமும் இரவில் தொப்புளில் தடவி மசாஜ் செய்தால் பத்து நாட்களில் முகம் பளபளப்பாகிறது.

#ஆலிவ் எண்ணெய் :
♥தொப்புளின் மேல் ஒரு துளி ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து போகும்

செவ்வாய், 23 ஜூலை, 2019

பக்குவம் என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் அசத்தலாகச் சொன்னது!!!


பக்குவம் என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் அசத்தலாகச் சொன்னது!!!!!

கவியரசு கண்ணதாசன்

🌼கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.

🌼கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது, ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை
இருப்பது அவனுக்குப் புரிகிறது.

🌼இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய அடையக் குறைந்து வருகிறது.

🌼ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது.

🌼இளம் பருவத்தில் இறைவனைப்பற்றிய சிந்தனை அர்த்த புஷ்டியற்றதாகத் தோன்றும்.

🌼வாழ்வில் அடிபட்டு வெந்து, நொந்து ஆண்டவனைச் சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும்.

🌼பக்குவமற்றவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள்.

🌼பக்குவம் வர வர, ரத்தம் வற்ற வற்ற இந்தத் தத்துவங்கள் எல்லாம் மறுபரிசீலனைக்கு வரும்.

🌼நடைமுறைக்கு ஒத்த சிந்தனை, பக்குவப்பட்ட பிறகே தோன்றும்.

🌼இருபது வயது இளைஞனைப் பெண் பார்க்கச் சொன்னால் எல்லாப் பெண்களுமே அவன் கண்களுக்கு அழகாய்த்தான் தெரிவார்கள்.

🌼நாற்பது வயதிற்கு மேலேதான், நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் தெளிவு அவனுக்கு வரும்.

🌼கல்லூரி மாணவனைப் படிக்கச் சொன்னால் காதல் கதையையும், மர்மக் கதையையும் படிப்பதில்தான் அவன் கவனம் செலுத்துவான்.

🌼காதலித்துத் தோற்றபின்தான், அவனுக்குப் பகவத் கீதையைப் படிக்கும் எண்ணம் வரும்.

🌼விளையாட்டுத்தனமான மனோபாவம் பிடிவாதத்திற்குப் பெயர் போனது.

🌼எதையும் சுலபத்தில் ஏற்றுக்கொண்டு `அதைவிட உலகமே கிடையாது’ என்று வாதாடும்.

🌼எதிர்த்தால் வேரோடு பிடுங்க முயலும்.

🌼பக்குவமற்ற நிலை என்பது இரண்டு `எக்ஸ்ட்ரீம்’ நிலை.

🌼ஒன்று, இந்த மூலையில் நின்று குதிக்கும், அல்லது அந்த மூலையில் இருந்து குதிக்கும்.

🌼பக்குவ நிலைக்குப் பெயரே நடு நிலை.

🌼மேலை நாட்டில் ஒரு பழமொழி உண்டு.

🌼`இருபது வயதிற்குள் ஒருவன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை என்றால் அவன் அப்பாவி; முப்பது வயதிற்கு மேலும் அவன் கம்யூனிஸ்டாக இருந்தால் அவன் மடையன்!’

🌼இதுதான் அந்தப் பழமொழி.

🌼பரபரப்பான பருவ காலத்தில் கோயிலுக்குப் போனால் தெய்வம் தெரியாது என்பது மட்டுமல்ல, அங்கே சிலையில் இருக்கும் அழகுகூடத் தெரியாது.

🌼ஐம்பது வயதில் கோயிலுக்குப் போனால், சிலையில் இருக்கும் ஜீவனும் தெரியும்.

🌼இதில் வெறும் பருவங்களின் வித்தியாசம் மட்டுமில்லை.

🌼பக்குவத்தின் பரிணாம வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது.

🌼ஏன், உடம்பேகூட இருபது வயதில் எந்த உணவையும் ஜீரணிக்கிறது.

🌼நாற்பதிற்கு மேலேதானே `இது வாய்வு’, `இது பித்தம்’, என்கிற புத்தி வருகிறது.

🌼`டென்ஷன்’ என்ற ஆங்கில வார்த்தைக்குச் சரியான தமிழ் வார்த்தை எனக்குப் புரியவில்லை.

🌼`முறுக்கான நிலை’ என்று அதைக் கூறலாம்.

🌼அந்த நிலையில் `எதையும் செய்யலாம், எப்படியும் செய்யலாம்’ என்கிற `திமிர்’ வருகிறது.

🌼அதில் நன்கு அனுபவப்பட்ட பிறகு, `இதைத்தான் செய்யலாம்’, `இப்படித்தான் செய்யலாம்’ என்ற புத்தி வருகிறது.

🌼இனி விஷயத்திற்கு வருகிறேன்.

🌼`ஞான மார்க்கப் பக்குவமும் அப்படிப்பட்டது தான்’ என்பதைக் கூறவே இவற்றைக் கூறினேன்.

🌼உள்ளம் உடலுக்குத் தாவி, உடல் ஆன்மாவுக்குத் தாவிய நிலையே, பக்குவப்பட்ட நிலை.

🌼தேளைப் பிடிக்கப் போகும் குழந்தை, அதையே அடிக்கப் போகும் மனிதனாக வளர்ச்சியடைகிறது.

🌼அதற்குப் பிறகு, அந்தத் தேளிடமேகூட அனுதாபம் காட்டும் ஞானியாக அந்த மனிதன் மாறி விடுகிறான்.

🌼இன்றைய பக்குவம் இருபதாண்டுகளுக்கு முன் எனக்கு இருந்திருந்தால், எனது அரசியலில்கூட முரண்பாடு தோன்றியிருக்காது.

🌼வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில், நன்மை தீமைகளை உணரும் நிதானம் அடிபட்டுப் போகிறது.

🌼ஆரம்பத்தில் `இதுதான் சரி’ என்று ஒன்றை முடிவு கட்டிவிட்டு, பின்னால் `இது தவறு’ என நாமே சொல்ல வேண்டிய நிலை வருகிறது.

🌼சரியாகக் கணக்கிட்டால், மனித வாழ்க்கைக்கு மூன்று கட்டங்கள்.

🌼முதற் கட்டம் ஒன்றுமே புரியாத உணர்ச்சிக் கூத்து.

🌼இரண்டாவது கட்டம் ஏதோ இருப்பதாக, ஆனால் தெளிவாகத் தெரியாத, மயங்கிய நிலை.

🌼மூன்றாவது கட்டம் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்றும், நமக்கும் மேலே ஒரு நாயகன் இருக்கிறான் என்றும் முழு
நம்பிக்கை கொண்ட ஞானநிலை.

🌼இந்த மூன்றாவது நிலையை முதற் கட்டத்திலேயே எய்தியவர்கள் பலர் உண்டு.

🌼சுவாமி விவேகானந்தரைப் போல, வளைந்து கொண்டே வளர்ந்த மரங்கள் உண்டு.

🌼அவர்கள் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அந்த நிலையை எய்தியவர்கள்.

🌼மற்றவர்கள், அனுபவத்தின் மூலமாகத்தானே பக்குவ நிலையை அடைய வேண்டியிருக்கிறது!

🌼எகிப்து மன்னன் பாரூக், பட்டம் துறந்து பாரிஸ் நகரில் சீரழிந்த போதுதான் `மனிதாபிமானம்’ என்றால் என்ன என்பதை உணர முடிந்தது.

🌼ஆனால், அரண்மனை வாசத்திலேயே அதனை உணர்ந்து கொண்ட சித்தார்த்தன், கெளதம புத்தரான வரலாறும்
நம்முடைய நாட்டிலே உண்டு.

🌼தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் நடுவே தடுமாறும் மனிதர்கள் நம்முடைய நாட்டிலே மிக அதிகம்.

🌼ஒன்று, தூங்குவதென்றால் நிம்மதியாகத் தூங்கி விடவேண்டும்.

🌼விழிப்பதென்றால் சுறுசுறுப்பாக விழித்துக் கொள்ள வேண்டும்.

🌼தூக்கமும் விழிப்புமாக இருப்பதால் தூக்கத்தின் பலனும் கிட்டாது, விழிப்பின் பலனும் கிட்டாது.

🌼`மனப்பக்குவம்’ என்பது அனுபவங்கள் முற்றிப் பழுத்த நிலை.

🌼அந்த நிலையில் எதையுமே `இல்லை’ என்று மறுக்கின்ற எண்ணம் வராது.

🌼`இருக்கக்கூடும்’ என்றே சொல்லத் தோன்றும்.

🌼எனது நண்பரும் முன்னாள் அமைச்சருமான தோழர் நெடுஞ்செழியன் அவர்கள், ஒரு கட்டுரையில்
“நாஸ்திகன் தன் கொள்கையில் தெளிவாகவே இருக்கிறான்” என்றும், “ஆஸ்திகன் தான் தடுமாறுகிறான்” என்றும், “கடவுள் இல்லை என்பதை நாஸ்திகன் உறுதியாகச் சொல்லுகிறான்”
என்றும், “உண்டு என்பதற்கு ஆஸ்திகன் ஒழுங்காக விளக்கம்
தர முடியவில்லை” என்றும் எழுதியிருக்கிறார்.

🌼நல்லது.

🌼`இல்லை’ என்று சொல்பவனுக்கு எந்தப் புத்தியும் தேவையில்லை.

🌼எதைக் கேட்டாலும் `இல்லை’ என்று சொல்ல முட்டாளாலும் முடியும்.

🌼ஆனால் `உண்டு’ என்று சொல்பவனுக்குத்தான் அதை நிலைநாட்டப் போதுமான அறிவு தேவைப்படும்.

🌼“பூமிக்குக் கீழே என்ன இருக்கிறது” என்று கேட்டால் எதுவுமே இல்லை, என்று குழந்தைகூடப் பதில் சொல்லிவிட முடியும்.

🌼ஆனால், “அடியிலே நீர்; அதன் கீழே நெருப்பு” என்று சொல்ல விஞ்ஞான அறிவு வேண்டும்.

🌼பாத்திரம் செய்பவனுக்குப் பல நாள் வேலை; போட்டு உடைப்பவனுக்கு ஒரு நாள் வேலை.

🌼நாஸ்திகன் எப்போதுமே தெளிவாக இருக்க முடியும்.

🌼காரணம் எதைக் கேட்டாலும், எந்திரம் போல் `இல்லை இல்லை’ என்று மட்டுமே அவன் பதில் சொல்லப் போகிறான்.

🌼நன்றாகத் தலையாட்டத் தெரிந்த அழகர் கோயில் மாட்டை
விடவா அவன் உயர்ந்து விட்டான்.

🌼ஆனால், ஆஸ்திகனோ, விபூதிக்கு ஒரு காரணம், குங்குமத்திற்கு ஒரு காரணம், திருமண்ணுக்கு ஒரு காரணம் சொல்லியாக வேண்டும்.

🌼சொல்வது மட்டுமல்ல, எதிரியையும் ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்.

🌼ஒன்றை ஒப்புக்கொண்டு, அதன் உட்கீற்றுகளை விவரிப்பதற்குத் தகுந்த பக்குவம் தேவை.

🌼ஆஸ்திகன், பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் இயக்கம் வரையில் கண்டுபிடிக்க முயலுகிறான்.

🌼ஜனனம், மரணம் இரண்டையும் அவன்தான் ஆராய்கிறான்.

🌼அப்படி ஆராய்ந்து, இந்து வேதாந்திகள் செய்த முடிவை இதுவரை விஞ்ஞானம் தாண்டியதில்லை.

🌼வேதங்களின் முடிவையே, விஞ்ஞானம் தன் முடிவாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

🌼ஆனால், விஞ்ஞானமும் அறியாமல், மெய்ஞ்ஞானமும் அறியாமல், அஞ்ஞானத்தைக் கொண்டு உழலும் நாஸ்திகனுக்கு, எல்லாம் இயற்கையாக நடக்கின்றன’ என்று சொல்லத் தெரிகிறதே தவிர,
அந்த இயற்கை என்பது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

🌼பக்குவ நிலைக்கும், பக்குவமற்ற நிலைக்கும் வேறுபாடு இதுதான்.

🌼“கோயிலுக்குப் போய் ஏன் தேங்காய் உடைக்க வேண்டும்?”

🌼“அப்படிக் கோயிலிலே என்ன இருக்கிறது?” என்று நாஸ்திகன் கேட்கிறான்.

🌼அந்தத் தேங்காயை உடைக்கும் வரையில், `அந்தத் தேங்காய்க்குள் என்ன இருக்கிறது?’ என்பது
அவனுக்குத் தெரியுமா?

🌼அதில் வழுக்கையும் இருக்கலாம், முற்றிய காயும் இருக்கலாம்.

🌼ஆகவே, உடைத்த பின்பே காயைக் கண்டு கொள்ளும் மனிதன், உணர்ந்த பின்பு தெய்வத்தைக் காண முடியும் என்பது உறுதி.

🌼`கடவுளே இல்லை’ என்று வாதாடியவன் எவனும் `எனக்கு மரணமே இல்லை’ என்று வாதாட முடியவில்லையே!

🌼`மரணம்’ என்று உணரப்படும்போதே சிலருக்குப் பக்குவம் வருகிறது.

🌼எனக்குத் தெரிந்த மிகப் பெரிய நாஸ்திகர் கூட தமது அந்திம காலத்தில் யார் கொடுத்த விபூதிகளையும் பூசிக் கொண்டார்கள்.

🌼மரணத்தின் பின் எங்கே போகப் போகிறோம் என்று நிச்சயமாகத் தெரியும் வரை ஈசுவரன் ஒருவன் இருப்பது உறுதி.

🌼நன்கு பக்குவப்பட்டவர்கள், தம் வாழ்நாளிலேயே காணமுடிகிறது.

🌼இப்போதெல்லாம், `போலித்தனம் எது? பொய் எது?’ என்பதைக் கண்டுகொள்ளக்கூடிய தெளிவு எனக்கு வந்து விட்டது.

🌼காரணம், வயது மட்டுமல்ல, பக்குவம்.

🌼செருப்புப் போடாத காலத்தில், மலத்தை மிதித்திருக்கிறேன். அதனால், இப்போது செருப்புப் போடுகிறேன்.

🌼கடலை மாவில் செய்த பலகாரத்தைச் சிறுவயதில் விரும்பிச் சாப்பிட்டேன். இப்போது அது தவறு என்பதை உணருகிறேன்.

🌼என் முன்னால் ஒரு வாதியையும், பிரதிவாதியையும் கொண்டு வந்து நிறுத்தி, `யார் நிரபராதி’ என்று சொல்லச் சொன்னால் அவர்களது வாக்குமூலங்கள் இல்லாமலேயே, நான் அவர்களைக்
கண்டுபிடிப்பேன்.

🌼என்னுடைய தீர்க்கதரிசனத்துக்கு முதல் அடிப்படை அறிவல்ல; அனுபவம்.

🌼தலைப்பை மீண்டும் நினைவுபடுத்தினால், அதன் பெயரே `பக்குவம்’.

🌷பக்குவமாய் வாழுங்கள்;
வாழ்வதன் பயனை உணருங்கள்;
வாழ்வின் பலனை அனுபவியுங்கள்
எல்லாம் அவன் செயல்.

நமது இஸ்ரோவில் மகளிரின் பங்களிப்பும் மிக மிக அதிகம்..


நமது இஸ்ரோவில் மகளிரின் பங்களிப்பும் மிக மிக அதிகம்..

திறமை அடிப்படையில் வாய்ப்பளிக்கப்படும் இடம் இஸ்ரோ, அதில் இட ஒதுக்கீடு, சமூக நீதி எல்லாம் இருந்திருந்தால் சந்திரயான் இன்நேரம் ஆழ்கடலில் விழுந்திருக்கும்

இஸ்ரோ என்பதும் டி.ஆர்.டி.ஓ என்பதும் ஒன்றோடொன்று ஒட்டிய துறைகள்

இந்திய விண்வெளிதுறையில் முதலில் கவனிக்கபட்ட பெண்மணி டெய்சி தாமஸ், கேரளத்துக்காரர்..

அப்துலகலாமுக்கு பின்னரான காலங்களில் டெய்சிதாமஸ் தலைமையிலே ஏவுகனை திட்டங்கள் இயங்கின. அக்னி ஏவுகனைகள் மேம்படுத்துதலில் அவர் பங்கு உண்டு..

அவரின் தொடர்ச்சியாக பல பெண்கள் சாதிக்க வந்து இன்று சாதித்திருக்கின்றனர்

அவர்களில் வனிதா முத்தையாவும், ரிது காரிடல் எனும் இருபெண்மனிகள் முக்கியமானவர்கள்..

மிக மிக சிக்கலான ராக்கெட் தொழில்நுட்பத்தில் இரு பெண்கள் தலமையில் ஒரு திட்டம் நிறைவேற்றபடுவது சாதாரண விஷயம் அல்ல..


சந்திரயான் 2ன் மிக முக்கிய பொறுப்பினை இவர்கள்தான் செய்தார்கள், அதன் முழு கட்டுபாடும் இவர்கள் இருவரிடமே உண்டு

நிச்சயம் இந்திய மகளிர் எல்லாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயம் இது.

முறையாக படித்தார்கள், கற்றபடி உழைத்தார்கள்..

ஆணுக்கு பெண் சரிக்கு சரியாக நிற்க முடியும் என எதில் காட்ட வேண்டுமோ, அந்த இடத்தில் மிக சரியாக சாதித்திருக்கின்றார்கள்..

பெண் விடுதலை என்பதும், பெண் சமத்துவம் முன்னேற்றம் என்பதும் இதுதான், இதுவேதான்..

தகுதியும் திறமையும் இருக்கும் மகளிர் யாராயினும் இங்கு வெற்றிகொடி நாட்டமுடியும்

வீணாக பிதற்றிகொண்டிருப்பதில் அர்த்தமில்லை

இன்று உலகமே திரும்பி பார்க்க சாதித்திருக்கும் மங்கையர் குல திலகங்களான வனிதா முத்தையாவினையும், ரிதுவினையும் பாரதம் வணங்கி வாழ்த்துகின்றது

உலகமே அந்த விண்வெளி மங்கையரை கைதட்டி உற்சாக படுத்துகின்றது

எந்த நாட்டிலும் இல்லாதபடி முதல் முறையாக இரு மங்கையர் மூலம் மாபெரும் சிக்கலான செயற்கை கோளை விண்ணுக்கு செலுத்தி பாரதம் மாபெரும் வழியினை உலகுக்கு காட்டியிருக்கின்றது.

அந்த விண்வெளி மங்கையருக்கு வாழ்த்துக்களை தேசத்தோடு சேர்ந்து நாமும் தெரிவிப்போம்

எங்கள் தேசத்து தங்கங்களே "உங்களை பெற்றதில் பெருமை கொள்கின்றது தேசம்"

நீங்கள் இன்னும் மாபெரும் வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள், தேசத்து சாதனை மகளிரால் பாரில் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கின்றது.

ஒரு வகையில் உலக மகளிரே பெருமைபடும் விஷயத்தை இன்று தேசம் செய்திருக்கின்றது..

இந்திய மகளிரின் புகழ் விண்வெளிக்கு பரவியிருப்பதை உலக மகளிர் மிக மகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டிருக்கின்றனர்.


ஆடி மாதம் ஆகாதுன்னு சொல்றாங்க... இது உண்மை தானா?


ஆடி மாதம் ஆகாதுன்னு சொல்றாங்க... இது உண்மை தானா?
ஆடி மாதம் ஆகாதது ஏன்?

🌟 ஆடிமாதம் வந்தாலே புதிதாய் திருமணமான தம்பதிகளுக்கு ஆகாத மாதமாகிவிடும். வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒன்று சேர்ந்து புதுமணத் தம்பதிகளை பிரித்து பெண்ணை அம்மா வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். காலம்காலமாக நடந்து வரும் இந்த பழக்கம் சமூகரீதியாக மட்டுமின்றி அறிவியல்ரீதியாகவும் நன்மை தரக்கூடியதுதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

🌟 ஆடி மாதம் புதுமண தம்பதிகள் இணையும் போது, கரு உண்டாகி அடுத்த பத்தாவது மாதமான சித்திரையில் குழந்தை பிறக்கலாம். சித்திரை அக்னி நட்சத்திரம் என்னும் கடுமையான வெப்பம் நிறைந்த மாதம். இம்மாதத்தில் குழந்தை பிறந்தால் எளிதில் சின்னம்மை போன்ற வெப்பத்தால் உண்டாகும் நோய்கள் குழந்தையை பாதிக்கும். உடல் நலிவடையும்.

🌟 குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்படும் என்பதால்தான் 'சித்திரையில் குழந்தை பிறந்தால் சீரழியும்" என்ற சொல்வழக்கு உள்ளது. இதை காரணமாக கொண்டுதான் ஆடிமாதத்தில் தம்பதியர் சேருவது நல்லதல்ல என்கின்றனர்.

🌟 இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில் அமைந்துவிடக்கூடாது. எனவே பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என்ற காரணத்திற்காகவே தம்பதியரை பிரித்துவைக்கின்றனர்.

🌟 நம் முன்னோர்கள் ஏற்படுத்திய சாஸ்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் நிறைய விளக்கங்கள் உண்டு. அதனால் பெரியோர்கள் கூறும் அறிவுரையை கேட்டு நாம் வளமான வாழ்க்கையை வாழ்வோம்...!

டாக்டர் ராதாகிருஷ்ணனின் கல்வி சிந்தனைகள் !!


கறுப்பர்.. வெள்ளையர்.. இந்தியர்.. நிறவெறிக்கு பதிலடி கொடுத்த ஆசிரியர்..!

டாக்டர் ராதாகிருஷ்ணனின் கல்வி சிந்தனைகள் !!

👉அந்தந்த பகுதிகளின் தாய்மொழியிலேயே பல்கலைக்கழக கல்வியை வழங்குவது தான் சிறந்தது.

👉ஆசிரியர்கள், தம்முடைய துறையில் நிகழும் அண்மைக்கால வளர்ச்சிகளையும், கண்டுபிடிப்புகளையும் அறிந்து கொண்டிருக்க வேண்டும். அறிவு தாகம் கொண்ட மாணவர்களை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும் திறன் படைத்தவர்களாகவும் விளங்க வேண்டும்.

👉அனைவருக்கும் உயர்கல்வி அளிப்பது அரசின் கடமையாகும்.

👉கல்வியானது மனிதனை நெறிமுறைப்படுத்துவதோடு சுதந்திர சிந்தனையாளனாக்க வேண்டும்.

👉பல்கலைக்கழகங்கள், மனித நேயத்தையும் பொறையுடைமையையும், கருத்துப்புதுமையையும், உண்மைத் தேடலையும் நோக்கமாகக் கொண்டு கற்பிக்க வேண்டும்.

👉ஆற்றல்மிகு எழுத்தாளர்கள் - அறிவியல் வல்லுநர்கள் - கவிஞர்கள் - கலைஞர்கள் - புதியன கண்டுபிடிப்பவர்கள் - மறைந்துள்ளவற்றை தேடி அறிபவர்கள் - ஆகியோரை நம்புதல் வேண்டும். அவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் பயிற்சிகள் தருதல் வேண்டும்.

👉பல்கலைக்கழகங்கள், ஆய்வுக்கும், ஞானத்துக்கும் வழிகாட்ட வேண்டும். ஒழுக்க உணர்வுக்கும், உள்ளத் தூய்மைக்கும் பயிற்சி அளித்திட வேண்டும்.

வெள்ளைத்தோல் கறுப்புத்தோல் விளக்கம் :

👉நிறவெறி பிரச்சனைகள் உலகில் தலைவிரித்தாடிய காலத்தில் ராதாகிருஷ்ணன் அவர்கள் வாழ்ந்ததால் அதுபற்றி அவர் ஆழமான ஒரு விளக்கத்தை கொடுத்தார்.

👉கடவுள் முதன்முதலாக ரொட்டி சுடுகிறார். அனுபவமில்லாமல் கருக விட்டு எடுத்தார். அப்படி உருவாக்கப்பட்டவர்கள்தான் ஆப்பிரிக்காவில் உள்ள கறுப்பர் இனம்.

👉அடுத்த ரொட்டியை கருகவிடாமல் எடுத்துவிட வேண்டுமே என்ற அவசரத்தில் சரியாக வேகாமலே எடுத்துவிட்டார். அப்படி உருவாக்கப்பட்டவர்கள்தான் வெள்ளையர்கள் இனம்.

👉இந்த இரண்டு அனுபவத்துக்குப் பிறகு, எச்சரிக்கையாக சரியான பதத்தில் மூன்றாவது ரொட்டியை சுட்டு எடுத்தார். அவர்கள்தான் இந்தியர்கள் என்றார்.

👉நிறவெறியில் தீவிரம் காட்டியவர்களும் புன்முறுவல் பூக்கும் அளவுக்கு அதை நீர்த்துப்போக செய்யும் இந்த விளக்கம் உலக அளவில் பிரபலம் அடைந்தது.


திங்கள், 22 ஜூலை, 2019

பாட்டியின் பழமொழிகள்


பாட்டியின் பழமொழிகள்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.

2. தீயில் இட்ட நெய்
திரும்ப வராது.

3. நாடு கடந்தாலும்
நாய்க்குணம் போகாது.

4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.

5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.

6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.

7. கடலைத் தாண்ட ஆசையுண்டு, ஆனால்
கால்வாயைத் தாண்ட கால் இல்லை.

8. கரும்பு கசப்பது வாயின்குற்றமே.

09. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்.
மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.

10. காட்டிலே செத்தாலும்
 வீட்டிலே தான் தீட்டு.

12. கூப்பாட்டால் சாப்பாடாகுமா?

13. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட
நாள் பார்த்தது போல,

கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல,

சில்லரைக் கடன் சீரழிக்கும்.

14. சொப்பனத்தில்
கண்ட அரிசி
சோற்றுக்கு ஆகுமா?

15. உறவு
போகாமல் கெட்டது,
கடன்
கேளாமல் கெட்டது.
(எத்தனை பெரிய உண்மை.
 போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும். கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்).

16. அடி நாக்கில் நஞ்சும்,
நுனி நாக்கில் அமிர்தமுமா?

(இன்று பலரும் இப்படித்தானே இருக்கிறார்கள்?)

17. ஆனை இருந்து
அரசாண்ட இடத்தில்
பூனை இருந்து
புலம்பி அழுகிறது!
(எல்லாம் காலத்தின் கோலம்!)

18. அறப்படித்தவன்
அங்காடிக்குப் போனால்
விற்கவும் மாட்டான்,
 வாங்கவும் மாட்டான்.

(அதிகமாய் படித்தவர்கள் பலரும் இப்படித்தான்).

19. உள்ள பிள்ளை
உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்கு திருப்பதிக்கு நடக்கிறாள்.

(இருக்கிற குழந்தைக்கு சோறு போடாமல் அது உரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தானியத்தை நக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையில் அடுத்த பிள்ளை வேண்டும் என்று திருப்பதிக்கு வேண்டிக் கொண்டு நடக்கிறாளாம். இப்படியும் இருக்கிறார்கள்).

20. இறுகினால் களி.
இளகினால் கூழ்.

21. ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது.

(யாருக்கு உதவுகிறோம் என்று சிந்தித்து உதவா விட்டால் இப்படித்தான்)

22. எடுப்பது பிச்சை.
ஏறுவது பல்லாக்கு.
(பலருடைய போக்கு இப்படித்தான் இருக்கிறது)

23. எட்டி பழுத்தென்ன?
ஈயாதார் வாழ்ந்தென்ன?

(எட்டி பழுத்தாலும் அதன் கசப்பால் சாப்பிட உதவாது. கஞ்சனுக்கு எத்தனை செல்வம் வந்தாலும் அதில் யாரும் பலன் அடைய முடியாது).

24. விசாரம் முற்றினால் வியாதி.

(கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்).

25. பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.

(நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம். அதாவது நிதானமாக தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் எத்தனை பெரிய காரியத்தையும் செய்து முடித்து விடலாம்.)

26. காற்றில்லாமல்
தூசி பறக்காது.

(நெருப்பில்லாமல் புகையாது என்ற பழமொழிக்கு இணையான இன்னொரு பழமொழி)

27. பண்ணின புண்ணியம் பலனில் தெரியும்.

(நாம் அனுபவிக்கும் பலன்களைப் பார்த்தாலே சேர்த்திருக்கும் புண்ணியம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்).

28. பிடித்த கொம்பும் ஒடிந்தது, மிதித்த கொம்பும் முறிந்தது.

(துரதிர்ஷ்டம் எப்படி எல்லாம் சோதிக்கிறது என்பதற்கு அழகான பழமொழி.
 ஒரு மரத்தில் ஏறி ஒரு கொம்பைப் பிடித்துக் கொள்ளும் போது அது ஒடிந்து போக,
கீழே விழாமல் இருக்க இன்னொரு கொம்பில் காலை வைத்து ஊன்றினால் அந்தக் கொம்பும் முறிந்தால் எப்படி இருக்கும்?)

29. பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.

(பதர் என்பதே அரிசி இல்லாத நெல் தான். அதனால் என்ன தான் குத்தினாலும் அதில் அரிசி கிடைக்க வாய்ப்பில்லை. மனிதனின் பயனில்லாத முட்டாள்தனமான முயற்சி குறித்துச் சொல்லும் பழமொழி)

30. இட்டதெல்லாம் பயிராகாது. பெற்றதெல்லாம் பிள்ளையாகாது.

(விதைத்ததெல்லாம் பயிராகி பலன் தருவதில்லை. அது போல பெற்றதெல்லாம் பிள்ளையாகி நல்லபடியாக நம்மைப் பார்த்துக் கொள்ளும் என்று நினைத்துவிட முடியாது).

31. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணைய் எடுப்பான்.

(தயிரில் வெண்ணெய் எடுத்த பிறகு தான் மோராகிறது. அந்த மோரிலேயே மீண்டும் வெண்ணெய் எடுக்கும் அளவு சாமர்த்தியம் வாய்ந்தவர்களைப் பற்றி இந்தப்பழமொழி சொல்கிறது.)

32. வாங்குகிற கை அலுக்காது.

(வாங்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு அலுப்பே இருக்காது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் என்றே சொல்லப்பட்ட பொருத்தமான பழமொழியோ?)

33. அடுத்த வீட்டுக்காரரே பாம்பைப் பிடியுங்க. அது அல்லித்தண்டு போல ஜில்லென்றிருக்கும்.

(என்ன சாமர்த்தியம் பாருங்கள்!)

34. உயிரோடு ஒரு முத்தம் தராதவள்,
 செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?

35. அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.

36. அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.

37. அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.

38. ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான்.

ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.

39. ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான்,
அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.

40. ஆனை மேல் போகிறவனிடம் சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா.?.

ஞாயிறு, 21 ஜூலை, 2019

பாதாம் பிசின் மருத்துவ நன்மைகள்


பாதாம் பிசின் மருத்துவ நன்மைகள்

பாதாம் பிசின் என்றால் என்ன?

பாதம் மரத்தில் இருந்து பாசை போல வெண்மை கலந்த பழுப்பு நிறத்தில் வடியும் பிசினே பாதாம் பிசின் ஆகும். இந்த பிசின் பழங்காலத்தில் இருந்தே மருந்தாக பயன்படுத்தி வரப்பட்டுள்ளது. பாதம் பிசினில் அதிகப்படியான நுண்ணுட்ட சத்துக்கள் நிரைந்து உள்ளன அத்துடன் அதிக மருத்துவ குணம் கொண்டது.
பாதாம் பிசின் விலை

இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தரமான  பாதம் பிசின் விலை 380 ரூபாய்க்கு நாட்டு மருந்து கடைகளில் விற்க்கபடுகிறது.

பாதாம் பிசின் எப்படி சாப்பிடுவது
தேவையான அளவு பாதாம் பிசினை ஒரு பாத்திரத்தில் போட்டு அவைகள் மூழ்கும் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி விட்டு 8 மணி நேரம் கழித்து பார்த்தால் பாதாம் பிசின் ஜெல்லி போல காணப்படும். இதனுடன் பால், சக்கரை சேர்த்து சாப்பிட கீழ் கொடுக்கபட்ட மருத்துவ பலன்களை பெறலாம்.

பாதாம் பிசின் மருத்துவ பயன்கள்

தோல் மற்றும் எலுப்பு
பாதாம் பிசினில் உள்ள தாதுக்கள் தோல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்க்கு உறுதியாக நின்று உடலில் தாது (மினரல்ஸ்) பற்றாக் குறையை போக்குகிறது. தோல் வரட்ச்சியை, வெடிப்புகளை குணமாக்கும்.

சிறு நீரக பாதிப்பு, நீர் வரட்ச்சி மற்றும் உஷ்ணம்
பெரும்பாலன காலங்கள் வெப்பமாகவே இருப்பதால் உடல் உஷ்ணம் அதிகமாகி அவதிக்கு ஆலாக்குகிறது, உஷ்ணத்தால் உடலில் நீர் பற்றாக் குறை ஏற்பட்டு சிலருக்கு வேறு சில உடல் நல பாதிப்புகளை ஏற்படுகிறது நீர் சுருக்கு, சிறுநீர் அடைப்பு, சிறு நீரக கல் போன்றவைகள். இதனை தவிர்க்க ஊரவைத்த பாதாம் பிசினை சாப்பிட்டு வர மேற்கூறிய உஷ்ண நோய்கள் தீரும்.
நெஞ்சு எரிச்சல், செரிமான கோளாறு
கால தாமத உணவு முறைகளால் உண்டாகும் நெஞ்செரிச்சல் (அசிடிட்டி) செரிமான கோளாரால் உண்டாகும் வயிற்று வலி போன்றவை நீங்க பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வர குணமாகும்.

நோயால் உண்டான பாதிப்பை குணமாக்க

நீண்ட நாள் நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு உடலில் சத்து இன்றி மெலிந்து இருப்பார்கள், இவர்கள் வாரத்திற்க்கு மூன்று நாட்கள் பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் அத்துடன் நோய் எதிர்ப்பு திறனையும் அதிகரிக்கும்.
ஆண் மலட்டு தன்மை
ஆண் மலட்டு தன்மை உடையவர்கள் தினமும் இளம் சூடான பசும்பாலில் பாதாம் பிசினை கலந்து குடித்து வந்தால் நரம்புகள் வலு பெற்று மலட்டு தன்மை நீங்கும்.

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு
குழைந்தை பெற்ற தாயமார்கள் உடலில் சக்தி இழந்து இருப்பர்கள் இவர்கள் பாதம் பிசின் கலந்த பாலை சாப்பிடுவதால் கருப்பையில் உள்ள நச்சு நீங்கி உடல் வலுவடையும், வட இந்தியாவில் குழைந்தை பெற்ற பெண்களுக்கு பாதாம் பிசின் கலந்த லட்டு இனிப்புகள் கொடுப்பது இன்றும் நடை முறையில் உள்ளது.

பாதாம் பிசின் சாப்பிடுவதால் உஷ்ணத்தால் உண்டாகும் நோய்கள் மற்றும் உடலுக்கு தேவையான சத்துக்களையும் கொடுக்கின்றது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

வெள்ளி, 19 ஜூலை, 2019

ஆடி தள்ளுபடி! ஆடி தள்ளுபடி! ஆடி தள்ளுபடி! அப்படி என்ன இருக்கின்றது இந்த ஆடி மாதத்தில்....


ஆடி தள்ளுபடி! ஆடி தள்ளுபடி! ஆடி தள்ளுபடி! அப்படி என்ன இருக்கின்றது இந்த ஆடி மாதத்தில்....

ஆடி மாதம் தொடங்கிவிட்டாலே 50% தள்ளுபடி, மரம் தருகிறோம், காய்கறிகள் பழங்கள் தருகின்றோம், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற ஆடி தள்ளுபடி விளம்பரத்தை காணாமல் டிவியையும் கடைகளையும் காண முடியாது. அப்படி என்ன இருக்கின்றது இந்த ஆடி மாதத்தில்...

உண்மையாக சொல்லப்போனால் அப்படி எந்த சிறப்பும் ஆடி மாதத்தில் கிடையாது. அட்சயதிருதியை விற்பனை ஒருநாள் என்றால் ஆடி தள்ளுபடி விற்பனை ஒரு மாதம் அவ்வளவுதான். இதுவும் ஒரு விற்பனை தந்திரம் தான்.


தீபாவளி பொங்கலுக்கு முன்னாள் வரும் ஆடி மாதம் :

பொதுவாகவே அனைத்து கடை நிறுவனங்களும் தீபாவளி அதை தொடர்ந்து வரும் பொங்கல் விழாக்களுக்கு புதிய டிசைன்களில் ஆடைகளை இறக்குமதி செய்தாக வேண்டும். இல்லாவிட்டால் அந்த கடையின் வாடிக்கையாளர்கள் வேறு கடைக்கு செல்லும் வாய்ப்பு நேரிடலாம். எனவே கடை நிறுவனங்கள் தங்களிடம் உள்ள பழைய ரகங்களை விலை குறைத்து விற்பனை செய்ய முன்வருகின்றன. பழைய ஸ்டாக்குகளை காலி செய்து விட்டு புதிய ஆடைகளை இறக்குமதி செய்யவே ஆடி தள்ளுபடி விற்பனை.

உண்மையாகவே 50% வரை விலை குறைப்பா??

கிடையாது. உண்மையாக சொல்லப்ப்போனால் கடை நிறுவனங்கள் 5 முதல் 15% வரையே விலை குறைப்பு செய்கின்றன. அதுவும் அடக்க விலையில் அந்த விலை குறைப்பு இருக்காது. மாறாக வாடிக்கையாளர்களிடம் இருந்து வரவேண்டிய லாபத்தில் 5 முதல் 15% வரை குறைக்கின்றன. அப்படி குறைப்பதனால் வாடிக்கையாளர்கள் பயனடைவதோடு கடைகளுக்கும் விற்பனை அதிகரித்து சரக்குகள் காலியாகின்றன.
50% தள்ளுபடி என்பது ஒரு சில ஆடை வகைகளுக்கு மட்டுமே அளிப்பார்கள்.

ஆடி தள்ளுபடியில் மக்கள் கவனிக்க வேண்டியது என்ன?

பெரும்பாலான கடைகள் ஆடித்தள்ளுபடியில் வாங்கும் ஆடைகளை திருப்பி வாங்கி மாற்றி தர ஒத்துக்கொளவது இல்லை. எனவே வாங்கும் போதே சரியான அளவிலான, நல்ல துணிமணிகளை வாங்கிக்கொள்ள வேண்டும்.

தள்ளுபடியில் கிடைக்கிறது என்பதற்காக வெளியூர் செல்லும் இடத்தில் எல்லாம் ஆடித் தள்ளுபடியில் வாங்காமல் முன்னணி நிறுவனம், நம்பிக்கையான தள்ளுபடி என்றால் மட்டுமே வெளியூர்களில் வாங்கலாம். அவசரத்தில் ஆசை ஆசையாக வாங்கிவிட்டு, ஊருக்குப் போனபிறகு ஓட்டை விழுந்திருக்கிறது என்று மீண்டும் கிளம்ப முடியாது. எனவே, வீட்டில் உள்ளவர்களின் தேவை தெரியாமல், அளவு தெரியாமல் எடுத்து அவதிபடவேண்டாம். உள்ளூரில் வாங்குவதே பொருத்தமானது.

ஆடி தள்ளுபடி! ஆடி தள்ளுபடி! ஆடி தள்ளுபடி!

ஆடித்தள்ளுபடி (ஆடிக்கழிவு) உருவான வ‌ரலாறு!


ஆடித்தள்ளுபடி (ஆடிக்கழிவு) உருவான வ‌ரலாறு!

ஆடி மாதம் வந்தாலே அனைவரும் ஆனந்தமாக பஜாரில் அணிவகுக்கின்றனர். ஆடி தள்ளுபடிதான் அவர்க ளை அங்கு தள்ளி வருகிறது. இந்த ஆடித் தள்ளுபடி அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தில் வியாபார ரகசியமாகவும், நுகர்வோரின் அவசியமாகவும் ஆகிப்போனது. ஆச்சார, அனுஷ்டானங்களில் தென் மாவட்ட மக்கள் தமிழகத்தில் முன்னணி யில் இருப்பர். ஆடி மாதம் வந்தாலே அவர் களுக்கு ஆகாது. நல்ல காரியங்கள் அம் மாதத்தில் நடக்காது. இதனால் வியாபாரம், தொழில்கள் அனைத்துமே மந்தமாகும். வைகாசியில் மங்கல விழாக்களும், ஆனியில் ஆன்மீக விழாக்களும் முடிந்த பின்பு அலைக்கழிக்கும் ஆடி வரும். இதில் கடை வீதி யே காற்றாடும்.


இந்த வியாபார வாட்டத்தை போக்க வணிகர்கள் கண்ட வழியே ஆடிக்கழிவு. இதன்மூலம் தேங்கிய சரக்குகளை தள்ளிவிட முடிகிறது. விற்று மிச்சமான பொருட்களை விலை குறைக்க முடிகிறது. அடுத்து வரும் தீபாவளி ‘மெகா‘ கொள்முதலுக்கு தேவையான முதலையும் தேற்றிக்கொள்ள முடிகிறது. மக்களும் தீபாவளிக்கு வேண்டிய பொருட்களை சிக்கனமான விலையில், சலுகை முறையில் ஆடித்தள்ளுபடியில் வாங்கி சேகரிக்க முடிகிறது.

ஆடித்தள்ளுபடியை அறிமுகப்படுத்தியதே நெல்லை சீமைதான். நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு துணிக்கடை முதன்முதலில் ஆடியில் தள்ளுபடி விலையில் ஜவுளி விற்பனையை துவக்கியது. அங்கு கூட்டம் அலைமோதவே, எல்லா பெரிய கடைக்காரர்களும் ஆடித்தள்ளுபடி கடலில் குதித்தனர். தொடர்ந்து, ஆடித்தள்ளுபடி தமிழகத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகவே மாறிவிட்டது.

திங்கள், 15 ஜூலை, 2019

எந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது தெரிந்து கொள்வோம் !


எந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது தெரிந்து கொள்வோம் !

1. ஞாயிறு --- சூரியன்
கோதுமை அல்வா, கோதுமை பாயாசம், கோதுமை சாதம்,
சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா,
மாதுளை ஜூஸ், கேரட் சூப் , பரங்கிக்காய் சாம்பார்.
சிம்ம ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

2. திங்கள் --- சந்திரன்
பால், பால் கோவா, பால் பாயாசம், லஸ்ஸி,
பச்சரிசி சாதம், முள்ளங்கி, கோஸ் பொரியல்,
தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம்.
கடக ராசியினருக்கு நலம் உண்டாகும்.

3. செவ்வாய் --- செவ்வாய்
துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை,
பீட்ரூட் அல்வா, பேரிச்சை பாயாசம்,,தர்பூசணி ஜூஸ்,,
தேன் கலந்த செவ்வாழை ,ஆப்பிள்,ஆரஞ்சு பழக்கலவை.
மேஷ, விருச்சிக ராசியினருக்கு நலம் உண்டாகும்.

4. புதன் --- புதன்
கீரை தோசை, கீரை, வேப்பம்பூ ரசம்,
பாவக்காய் கொத்சு,  முருங்கைக் காய் சூப்,
பாசிப்பயறு சுண்டல், புதினா, கொத்துமல்லி சட்னி,
வாழைப் பழம் , கொய்யாப் பழம் சேர்த்த பழக்கலவை.
மிதுனம், கன்னி ராசியினருக்கு நலம் உண்டாகும்.

5. வியாழன் --- குரு
சுக்கு காபி,அல்லது கஷாயாம், கார்ன் சூப்,
கடலைப் பருப்பு கூட்டு, கடலைப் பருப்பு வடை,
தயிர் வடை, கொண்டைக்கடலை சுண்டல்,
சாத்துக்குடி, மாம்பழஜூஸ்,,பொங்கல்,
கதம்பதயிர் , எலுமிச்சை சாதம்,
மாதுளை, முந்திரி,திராட்சை, பேரிட்சை கலந்த தயிர் சாதம்.
தனுசு, மீன ராசியினருக்கு நலம் உண்டாகும்.

6. வெள்ளி --- சுக்கிரன்
பால் இனிப்புகள், பால் பாயாசம், காஷ்மீர் அல்வா,
தேங்காய் பர்பி, வெண்ணையில் செய்த பிஸ்கட்,
முலாம்பழஜூஸ், வெள்ளரிஜூஸ், வாழத்தண்டுஜூஸ்,
இட்லி, தோசை, தேங்காய் சட்னி, கம்பு தோசை,
ஆப்பம், அவியல், தயிர் சேமியா, புலாவ் ,
கோஸ் சாம்பார், பூண்டு ரசம்,வாழத்தண்டுபொரியல்,
நீர் மோர், வெள்ளரி, பாசிப்பருப்பு  சாலட்.
ரிஷபம், துலா ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

7. சனி --- சனி
ஜிலேபி,எள் உருண்டை, அதிரசம்,
சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, கொள்ளு சுண்டல்,
எள்ளு சாதம், எள் சட்னி, கொள்ளு ரசம்,
மிளகு சாதம், மிளகு ரசம், உளுந்து சாதம்,
புளியோதரை, எண்ணை கத்தரிக்காய் குழம்பு,
நாவல் பழம், கருப்பு திராட்சை ஜூஸ்,
பாதாமி, முந்திரி, திராட்சை, பேரிச்சை, பிஸ்தா கலவை.
மகரம், கும்ப ராசியினருக்கு நலம் உண்டாகும்.

கூறப்பட்ட பெரும்பாலான பதார்த்தங்கள் செய்யப்படும்
அடிப்படை பொருட்களைப்  பார்த்தால், அவை எல்லமே
அந்ததந்த கிரகங்களுக்கு உரியே தானியங்களே.

நம்முடைய முன்னோர்கள் எவ்வளவு அற்புதமாக
ஆன்மீகத்தையும், அறிவியலையும் தொடர்புபடுத்தி
நமக்கு ஒரு அழகான, நலமான  வாழ்வியல் முறையை
 அமைத்துகொடுத்துள்ளார்கள்.

சனி, 13 ஜூலை, 2019

மாட்டிறைச்சியின் நன்மைகள்


மாட்டிறைச்சியின் நன்மைகள்.

1. மாட்டிறைச்சியில் உள்ள கொழுப் பில் லினோலிக், பால்மிடோலிக் ஆசிடுகள் உள்ளன. கேன்சர் எதிர்ப்பு மிகுந்த இந்த ஆசிடுகள் வைரஸ்

உள்ளிட்ட கிருமி எதிர்ப்பு சக்திகளையும் உள்ளடக்கியுள்ளது.

2. மாட்டுக்கறியில் அனைத்து விதமான சத்துக்களும் அடர்த்தியாக நிறைந்துள்ளன. அதிக அளவு சத்துக் களை கொடுத்தாலும் குறைந்த அளவு கேலரிகள் தான் அளிக்கிறது. 85 கிராம் மாட்டுக்கறியில் 179 கேலரிகள் தான் உள்ளன. ஆனால் 85 கிராம் மாட்டுக் கறியில் உடலுக்கு தேவையான பத்து சதவிகிதத்திற்கு மேலான உயிர்சத்துகள் நிரம்பியுள்ளன. உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு தேவை யானது மாட்டுக்கறி தான்.

3. கொழுப்பற்ற மாட்டுக்கறியை சாப்பிட்டு வந்தால் இதயக் கோளாறுகள் நீங்கும், இதயம் வலிமை பெறும். ஆங்கிலத்தில் இதனை லீன் பீப் (Lean Beef) என்பார்கள். இதனை 2012இல் அமெரிக்க ஜர்னல் சத்துணவு ஆய்வு மய்யத்தின் (American Journal Clinical Nutrition) ஆய்வறிக்கையில் ஆதாரங்களு டன் நிறுவியுள்ளனர்.

கொழுப்பற்ற மாட்டுக்கறியை தினமும் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும். மாட்டுக்கறியில் உள்ள ஸ்டீரிக் ஆசிடு நல்ல கொலஸ்ட்ராலை (HDL) அதிகரிக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பாதிக்கும் மேற்பட்ட மாட்டுக் கொழுப் புகளில் இதயத்திற்கு தேவையான ஓலிக் ஆசிடுகள் நிரம்பியுள்ளன.

இதயத்திற்கு வலு சேர்க்கும் சத்துக்கள் மாட்டுக் கறியில் கிடைப்பது போல வேறெந்த உணவிலும் இல்லை. உங்களால் முட்டை அல்லது மீன்களில் இருக்கும் கொழுப்பை அகற்ற முடியாது. ஆனால் மாட்டிறைச்சியில் எளிதாக கொழுப்பை அறுத்து நீக்கலாம். இதை தான் லீன் பீப் (Lean Beef) என்பார்கள். ((LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால்.

இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடை படச் செய்கிறது. என்பது நல்ல கொலஸ்ட்ரால் இரத்தத்தில் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது.)

4. மனித இனம் மாட்டுக்கறியையும் உள்ளடக்கிய சிவப்பு இறைச்சிகளை உண்ணாமல் இருந்திருந்தால் மனித னின் மூளை இப்போதிருக்கும் அளவில் கால் பங்கு தான் இருந்திருக்கும் என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. பரிணாம வளர்ச்சியில் மனித இனத்தின் மூளைக்கு கிடைத்த புத்திக் கூர்மைக்கு சிவப்பு இறைச்சிகளே பெரும் பங் காற்றியுள்ளன.

5. உலகில் நீண்ட ஆயுள் வாழும் பகுதிகளை பார்த்தால் இறைச்சி உணவே முதன்மையாக இருப்பது தெரியும்.

6. மாடு மற்றும் ஆட்டில் கிடைக்கும் புரத சத்தினால் தசைகள் வலுவாவது மட்டுமல்ல நமக்கு ஹார்மோன்களும் ஆரோக்கியமாக சுரக்கின்றன.

7. தானியங்களில் கிடைக்கும் ஸின்க், மெக்னீசியம், இரும்பு சத்துக்களை விட சிவப்பு இறைச்சிகளில் கிடைக்கும் சத்துக்களை நமது உடல் எளிதாக முழுமையாக உறிஞ்சிக் கொள்கிறது. வசதியற்றவர்களுக்கு ஏற்ற உணவு மாட்டிறைச்சி. குறைந்த அளவு சாப் பிட்டு வந்தாலும் சத்துக் குறைவினை குறைக்கலாம். குழந்தை சத்து குறைவில் முன்னிலையில் இருக்கும் நம் நாட் டிற்கு அவசியமானது மாட்டிறைச்சி.

8. ஆரோக்கியமான நரம்பு மண் டலத்திற்கும், இரத்தத்திற்கும் வைட்டமின் பி12 அவசியம். வைட்டமின் பி12 அசைவ உணவில் மட்டுமே உள்ளது. அதிலும் மாட்டுக்கறியில் வைட்டமின் பி12 37% நிரம்பியுள்ளது. மேலும் மனநோய்களை தவிர்க்கவும், கிழட்டுத் தன்மை மற்றும் மலட்டுத் தன்மையை குறைப்பதிற்கும் வைட்டமின் பி12 அவசியம். வைட்டமின் பி12 சிவப்பு இறைச்சிகளில் நிரம்பியுள்ளது.

நவீன உழைப்பு சுரண்டலில் அழுத்தம் நிறைந்த பணி சூழலில் வேலை செய்யும் கார்ப்பரேட் தொழிலாளர்களுக்கு அவசியமானது மாட்டிறைச்சி

9. அமெரிக்க விவசாயத் துறையின் 2002 ஆய்வறிக்கையின்படி, 1.1 கிலோ டுயுனா மீனில் கிடைக்கும் ஸின்க் சத்து 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக் கிறது. 750 கிராம் கோழியின் தோலற்ற நெஞ்சுக் கறியில் கிடைக்கும் வைட் டமின் பி12 100 கிராம் மாட்டிறைச்சி யில் கிடைக்கிறது. 300 கிராம் கோழி யின் தோலற்ற நெஞ்சுக் கறியில் கிடைக்கும் பி விட்டமினான ரைபோப்ஃலேவின் 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது.

மூன்று கட்டு பாலக்(தரைப் பசலி) கீரையில் கிடைக்கும் இரும்புச் சத்து 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது. மாட்டிறைச்சியில் சத்துக்கள் அடர்த்தியாக உள்ளன. 450 கிராம் டுயுனா மீனில் கிடைக்கும் பி விட்ட மினான ரைபோப்ஃலேவின் 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது. ஆறரை கட்டு பாலக் (தரைப் பசலி) கீரை யில் கிடைக்கும் இரும்புச் சத்து 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது.

மனிதஇனம் தொன்று தொட்டு மாட்டிறைச்சியை சாப்பிட்டு வருவ தால் பரிணாம வளர்ச்சிக்கு உதவியது என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் தான் நமது உடலும் மாட்டுக்கறியின் சத்துக்களை எளிதாக ஏற்று கொள்கிறது. ‘அசைவ உணவு உடம்பிற்கு நல்லது மேலும் வலி மையான இந்தியாவிற்கு அசைவ உணவு அவசியம்’ என்றார் விவேகானந்தர். அமெரிக்கா சென்ற போது மாட்டுக் கறியை கேட்டு வாங்கி சாப்பிட்டுள் ளார் அசைவப் பிரியரான விவேகானந்தர்.


இந்தியாவில் மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி ஏற்றுமதியின் மூலம் இந்தியாவிற்கு ரூ.3500 கோடிக்கும் அதிகமான தொகை வருமானமாகக் கிடைக்கிறது.உலக அளவில் மிக அதிகம்பேர் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் மாட்டிறைச்சியை விரும்பி உண்ணுகிறார்கள். இந்தியா வின் தோல் தொழில் உலக அளவில் பிரசித்திபெற்றதாகும். 2.5 மில்லியன் தொழிலாளர்கள் இந்தத் துறையில் வேலை பார்க்கிறார்கள்.

இதில் 30 சதவீதம் பெண்களாகும். இந்திய மக்கள் தொகையில் 60 சதவீதத்தினர் மாமிசம் உண்பவர்களாவார்கள். மாமிசம் உண்ணாதவர்கள் 31 சதவீதத்தினர். மீதம் 9 சதவீதத்தினர் கோழி முட்டை உண்பவர்களாவார்கள்.

அய்க்கிய நாடுகள் உணவு தானியக் கழகம் நடத்திய ஆய்வில் அதிகம்பேர் மாட்டிறைச்சி உண்பவர் களே என்று அறிவித்துள்ளது. (இந்த ஆய்வில் கோழி இறைச்சி சேர்க்கப்பட வில்லை).ஆண்டிற்கு 24 லட்சம் டன் மாட்டிறைச்சி நுகரப்படுகிறது.

இந்தியாவில் மாமிச உணவு உண் பவர்களில் அதிகம் பேர் விரும்புவது மாட்டிறைச்சியையே என்பது இதன் மூலம் தெளிவாகும்.வயதான, உற்பத்தி சக்தியை இழந்த கால்நடைகள் விவ சாயிகளைப் பொறுத்தவரையில் பெரும் பாராமாகும்.இவற்றை இறைச்சிக்காக விற்பதற்கு பசுவதைத் தடைச் சட் டத்தை அமல்படுத்தியுள்ள மாநிலங் கள் அனுமதிப்பதில்லை.

அதனால் கால்நடைகளை வளர்ப்பவர்கள் அவற் றைத் தெருவில் விட்டுவிடுகிறார்கள். ஹரியானா முதலான மாநிலங்களில் தெருவில் அலைந்து திரியும் கால் நடைகள் உண்டாக்கும் பிரச்சினைகள் கொஞ்ச நஞ்சமல்ல. நாட்டின் ஆண் டுக்கு மக்கள் தொகை உயர்வு1.58 சதவீதமாகும்.

ஆனால் கால்நடைகளில் இது 4.48 சதவீதமாகும். பசுவதைத் தடை இந்த எண்ணிக்கையில் எவ்வித பின் விளைவுகளை உண்டாக்கும் என்பது நாம் உணரவேண்டிய ஒன்றாகும். கால்நடை வளர்ப்போரைப் பொறுத்த வரையில் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து வளர்க்கும் பசு கறவை வற்றி உற்பத்தித்திறனை இழந்த பிறகு அதை விற்பது என்பது எதார்த்தம்.

அவ்வாறு விற்பதுவும் பசுவின் மூலம் விவசாயிக்குக் கிடைக்கும் ஒரு வருமானம் ஆகும்.இவை எல்லாவற்றை யும் விட மனிதன், சிங்கம், புலி, ஆடு, பன்றி, கோழி போன்று மாடுகளும் ஒரு உயிரினம்தான்.விலங்குதான். மாடுகள் தரும் பலன் அதிகம்தான் .ஆனால் அதை ஒரு உணவாக கொள் வோரை இதை சாப்பிடாதே,

அதை சாப்பிடாதே என்று தடை போட அவர்கள் அளித்த வாக்குகளையே பயன்படுத்துவது சரியாகுமா? பசுவதைத் தடைச் சட்டம் என்பது மக்களின் உணவுப் பழக்கத்தின் மீதான அத்துமீற லாகும். அது தனி மனித சுதந்திரத்தைக் கசாப்பு செய்வதாகும்.



உலக அளவில் மாட்டிறைச்சியை உணவிற்காக பயன்படுத்தும் 10 நாடுகள்

1. அமெரிக்க அய்க்கிய நாடுகள் 11,172,000

2. பிரேசில் 7,925,000

3. அய்ரோப்பிய கூட்டமைப்பு 7,720,000

4. சீனா 6,263,000

5. அர்ஜண்டினா 2,700,000

6. ரஷ்யா 2,388,000

7. இந்தியா 2,125,000

8. மெக்சிகோ 1,875,000

9. பாகிஸ்தான் 1,626,000

10. ஜப்பான் 1,285,000


குறிப்புகள்

உலகில் 63 விழுக்காடு மக்கள் தினசரி 2 கிலோ மாட்டிறைச்சியை உண்கின்றனர்.

1. பிரேசில், 2. இந்தியா 3. அர்ஜண் டினா 4. சீனா 5. அமெரிக்கா போன் றவை மாட்டிறைச்சி ஏற்றுமதி யில் இடம் பெற்றுள்ளன.

பன்றி மற்றும் கோழி இறைச்சியை விட மிக விரைவில் உடலில் சேர்ந்து கொள்ளும் புரதச்சத்து மாட்டி றைச்சியில் தான் உள்ளது.

வெள்ளி, 12 ஜூலை, 2019

மாட்டிறைச்சி இறைச்சி

மாட்டிறைச்சி இறைச்சி: நன்மைகள் மற்றும் தீங்கு, சமையல் இரகசியங்களை. மாட்டிறைச்சி இறைச்சி பயனுள்ள பண்புகள்

மாட்டிறைச்சி உலகிலேயே சிறந்த விற்பனையான இறைச்சி உற்பத்தியில் ஒன்றாகும். இது ஒரு இனிமையான சுவை உள்ளது, உயர் தர புரதம் நிறைய உள்ளது, வைட்டமின்கள், மேக்ரோ மற்றும் microelements, அமினோ அமிலங்கள். பன்றி மற்றும் ஆட்டுக்குட்டியைவிட இரும்பு மற்றும் துத்தநாக மாடுகளின் உள்ளடக்கம் பல மடங்கு அதிகம். மேலும் நுரையீரல், நாக்கு, இதயம், கல்லீரல் போன்றவற்றை உள்ளடக்கிய உடல் நன்மைகளையும், மாட்டிறைச்சியையும் அவசியமாக்குவது அவசியம். இது பற்றி எங்கள் கட்டுரையில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
குறைந்த கொழுப்பு மாட்டிறைச்சி உணவு இறைச்சிக்கு சொந்தமானது மற்றும் பல கலோரி உணவு வகைகளில் சேர்க்கப்படுகிறது. இது மெதுவாக செரிக்கப்படுகிறது, அதனால் ஒரு சிறு துண்டு கூட சாப்பிட்டு, நபர் நீண்ட நேரம் முழு உணர்கிறது. மாட்டிறைச்சி எந்த வடிவத்தில் சுவையாக உள்ளது: வேகவைத்த, வறுத்த, வேகவைத்த அல்லது துண்டு துண்தாக வெட்டப்பட்ட இறைச்சி உணவுகளில்.
விலங்குகளின் வயதை பொறுத்து, இறைச்சி மென்மையாகவும், தாகமாகவும், உலர்ந்ததாகவும், சருமவும் இருக்கும். சிறந்தது இளமை, ஆனால் கால்நடை. உயர்தர சிவப்பு இறைச்சி. சத்து, வாசனை, ஊட்டச்சத்து அளிப்பு மற்றும் மாட்டிறைச்சி நன்மைகள் பல காரணிகளில் தங்கியுள்ளன: உள்ளடக்கம், உணவு, ஆண்குறி, வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ், ஆண்டிபயாடிக்குகள். எடுத்துக்காட்டாக, uncastrated காளைகள் இறைச்சி ஒரு விரும்பத்தகாத குறிப்பிட்ட சுவை உள்ளது. மீன் உணவு சேர்க்கையில், மாட்டிறைச்சி ஒரு மஜ்ஜை மணம் பெறுகிறது. தண்ணீரின் பற்றாக்குறை மற்றும் தரமான தரமான உணவுகள் இறைச்சியை கடினமாக்குகின்றன.
மாட்டிறைச்சி (குறிப்பாக வியல்) உடலில் ஒரு நன்மை விளைவைக் கொண்டிருக்கிறது:
  • ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது மற்றும் இரத்த நாளங்களை பலப்படுத்துகிறது
  • அமிலத்தன்மை மற்றும் வயிறு மற்றும் குடல்களின் வேலை ஆகியவற்றை அளிக்கும்
  • தசைகள் மற்றும் எலும்புகள் அதிகரிக்கிறது
  • வலிமை மற்றும் உடல் சகிப்புத்தன்மையை அளிக்கிறது
இறைச்சி புரதங்கள் சிறந்த பச்சை காய்கறிகள் உறிஞ்சப்படுகிறது. மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு முன்பு ஒரு பெரிய டிஷ் சாப்பிடுவதன் பழக்கம் உடலுக்கு ஒரு பெரிய நன்மை.

மாட்டிறைச்சி காயம்

மாட்டிறைச்சி துஷ்பிரயோகம் உடல் தீங்கு விளைவிக்கும். தீவிர எச்சரிக்கையுடன் நீங்கள் மண்ணீரல், கல்லீரல், புற்றுநோய் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த இறைச்சத்தையும் பயன்படுத்த வேண்டும்.
இறைச்சி அதிகப்படியான நுகர்வு செரிமான சுமைகளை சுமைகளாகவும் உடலுக்கு சுமையாகவும் மாறும். அனைத்து பிறகு, அதன் செரிமானம் இந்த தயாரிப்பு உள்ள இணைக்கப்பட்ட ஆற்றல் 40% வரை கழித்தார்!
மாட்டிறைச்சி பெருந்தீனியின் முடிவு சோகமாக இருக்கிறது:
  • கொலஸ்டிரால் அளவு அதிகரிக்கிறது, எனவே இதய நோய்கள் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயம்
  • கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் மீது ஒரு பெரிய சுமை நோய் ஏற்படுகிறது.
  • கீல்வாதம், கீல்வாதம், மற்றும் ஓஸ்டோக்நோண்டிரோஸ் ஆகியவற்றை ஏற்படுத்தும் யூரிக் அமிலம் படிகங்கள் உருவாகின்றன.
  • குறைக்கப்பட்ட உடல் எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி
பெருங்கடலில் உள்ள இறைச்சியானது பெருங்குடலில் குவிந்து காணப்படுகின்றது, போர்ப்ரேக்டிக் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது மற்றும் அவர்களின் முக்கிய செயல்பாடுகளின் விளைவாக, நச்சுப் பொருட்கள் தோன்றும். அவர்கள் இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்பட்டு உடலின் விஷம்.
இவ்வாறு, மாட்டிறைச்சி நன்மைகளை அதிகமாக நுகர்வு எளிதாக மறுக்க முடியும்.
மேலும், மாட்டிறைச்சி அல்லது மோசமாக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் ஹார்மோன் மாட்டிறைச்சி ஆகியவை மனிதர்களுக்கு ஆபத்தானவை.

மாட்டிறைச்சி - நன்மை மற்றும் தீங்கு


கோழி, கோழி சேர்த்து, மிகவும் மதிப்புமிக்க உணவு இறைச்சி கருதப்படுகிறது. ஆனால் இன்று வரை, உணவு உண்பவர்களிடையே, மாட்டிறைச்சி என்பதைப் பற்றிய விவாதங்கள் பயனுள்ளவையாகவோ அல்லது தீங்கு விளைவிப்பதாலோ மிகவும் பொதுவானவை.
இந்த வகை இறைச்சி பெரும்பாலும் மெனுவில் சேர்க்கப்பட்டுள்ளது, இது ஒரு சிகிச்சை உணவு பரிந்துரைக்கும் போது. இன்னும், நிபுணர்கள் சில சந்தர்ப்பங்களில் இந்த தயாரிப்பு தீங்கு விளைவிக்கும் என்று அங்கீகரிக்கிறது.

மாட்டிறைச்சி மனித உடலுக்கு என்ன பயன்?

மாட்டிறைச்சி தீங்கு செய்யலாமா?

இந்த இறைச்சி உற்பத்தியின் ஊட்டச்சத்து மதிப்புடன், மாட்டிறைச்சி நன்மைகள் மற்றும் தீங்குகளின் மீது நிலவுகின்ற பிரச்சினைகள் உள்ளன. மாட்டிறைச்சி பயன்மிக்க பண்புகள் சந்தேகத்தை ஏற்படுத்தாது, ஆனால் உடலில் இந்த இறைச்சியின் எதிர்மறை விளைவுகளை மறந்துவிடக் கூடாது. கர்ப்பம், நைட்ரேட்டுகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் இருந்த உணவுகளில், மாடுகளின் இறைச்சி மிகவும் ஆபத்தானது. மேலும், ஆண்டிபயாடிக்குகள் மற்றும் வளர்ச்சி ஹார்மோன்கள் உட்செலுத்தப்பட்ட விலங்குகள் இருந்து இறைச்சி பயனுள்ளதாக இருக்காது. கூடுதலாக, மாட்டிறைச்சி தீங்கு விளைவிக்கும், இது தவறாக சேமிக்கப்பட்டு சமைக்கப்பட்டது. பல முறை, உறைந்த இறைச்சி அனைத்து மதிப்புமிக்க பண்புகள் இழந்து "இறந்த" ஆக மாறும். வறுத்த மாட்டிறைச்சி தீங்கு விளைவிக்கும் கார்சினோஜன்களுக்கு ஒரு ஆதாரமாக இருக்கும்.

மாட்டிறைச்சி - நன்மைகள், கலோரிகள், கலவை மற்றும் தீங்கு. பயனுள்ள மாட்டிறைச்சி என்றால் என்ன?

மாட்டிறைச்சி இன்று இறைச்சி மிகவும் பிரபலமான வகையான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த தயாரிப்பு இந்தியர்கள் தவிர கிரகத்தில் பல மக்கள் நேசித்தேன். ஒரு மாடு போடுவதால், அவர்கள் ஒரு மாடு வணங்குகிறார்கள். மற்ற மக்கள் மாட்டிறைச்சி நன்மைகளை பற்றி தெரியும், எனவே அவர்கள் ஒரு சோகமான மற்றும் மதிப்புமிக்க தயாரிப்பு மீது மகிழ்ச்சியுடன் விருந்து.
விலங்கு வயது மற்றும் இனத்தை பொறுத்து, இறைச்சி டெண்டர் மற்றும் ஜூசி அல்லது, மாறாக, கரடுமுரடான தசைகள் பெரிய எண் காரணமாக மிகவும் கடினமான இருக்க முடியும்.

மாட்டிறைச்சி கலவை

கலோரி மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி பயன்

அவர்களின் ஆரோக்கியத்திற்கு கவனம் செலுத்தும் அனைவருமே மாட்டிறைச்சி சாப்பிடும் அடிப்படை விதி கடைபிடிக்க வேண்டும், இதனால் உணவுக்கு பயன் கிடைக்கும். இந்த உணவுப் பொருட்களில் 2 அல்லது 3 முறை வாரம் இருக்க வேண்டும், இந்த வழக்கில், மாட்டிறைச்சி நன்மை தெளிவாக உள்ளது.
குறைந்த கொழுப்பு உற்பத்தியின் மிதமான நுகர்வு இரத்தக் குழாய்களின் சுவர்களை வலுப்படுத்த உதவுகிறது, இரத்த ஹீமோகுளோபின் உள்ளடக்கத்தை அதிகரிக்கிறது. வயதான காலையில் கல்லீரலை சாப்பிட்டால், இதயத் தாக்குதல்களின் ஆபத்தை கணிசமாகக் குறைக்கலாம்.
இது ஒரு சாதாரண நிலை அமிலத்தன்மையை பராமரிக்க உதவுகிறது மற்றும் முழு செரிமான அமைப்பின் பணியை சாதாரணமாக்குகிறது.
மாட்டிறைச்சி வலிமை பெற உதவுகிறது, அது ஏழை சுகாதார மக்கள், அதே போல் ஒரு தீவிர நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் பட்டி உள்ளிட்ட பரிந்துரைக்கப்படுகிறது. விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் வேலைகளில் ஈடுபட்டுள்ள மக்கள் இதைப் பயன்படுத்துகின்றனர் - அனைவருக்கும் ஆற்றலுள்ளோரின் வாழ்க்கை அல்லது அதிக உயர்தர ஆற்றல் செலவுகள்.
நன்மை பயக்கும் பொருள் நரம்பு மண்டலம் மற்றும் நினைவகத்தை பாதிக்கிறது. மாட்டிறைச்சி தசைகள் மற்றும் எலும்புகள் உறுதிப்படுத்துகிறது.

மாட்டிறைச்சி காயம்

மனிதகுலத்திற்கு மாட்டு இறைச்சிக்காகவும் அதன் நன்மைகள் மட்டுமல்லாமல் அறியப்படுகிறது. இருப்பினும், குறைந்த அளவு அல்லது தவறாக தயாரிக்கப்பட்ட தயாரிப்பைப் பயன்படுத்துவதில் இருந்து பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன. சமையல் போது தண்ணீர் பல முறை மாறும் என்று மாட்டிறைச்சி கொதிக்க பரிந்துரைக்கப்படுகிறது. இந்த வழக்கில் புற்றுநோய்கள் புற்றுநோயின் ஆபத்தை அதிகரிக்கும் தயாரிப்புகளில் உருவாகின்றன, ஏனெனில் இது வறுத்த மாட்டிறைச்சி சாப்பிட பரிந்துரைக்கப்படவில்லை.

தீங்கு விளைவிக்கும் மற்றும் பயனுள்ள மாட்டிறைச்சி (வீடியோ)

மாட்டிறைச்சி: கலோரி, கலவை, நன்மை அல்லது தீங்கு

மாட்டிறைச்சி எவ்வளவு ஆற்றல்? கலோரி இறைச்சி

மதிப்புமிக்க மாட்டிறைச்சி என்றால் என்ன? இறைச்சி கலவை

மாட்டிறைச்சி ஆரோக்கியத்திற்கு என்ன கொடுப்பது? இறைச்சி நன்மைகள்

வயது மற்றும் பாலின பொருட்படுத்தாமல், மாட்டிறைச்சி மக்களுக்கு பயனளிக்கும். இரும்பு குறைபாடு அனீமியாவின் தடுப்பு மற்றும் சிகிச்சையளிப்பதற்கான உங்கள் உணவில் இது பரிந்துரைக்கப்படுகிறது. இது ஹீமோகுளோபின் ஒரு கூறு இது ஹீம் இரும்பு ஒரு பெரிய ஆதாரமாக உள்ளது.
அதிக எடையுடன் போராடுபவர்களுக்கு மாட்டிறைச்சி வெறுமனே அவசியம். எனவே எந்த உணவு ஊட்டச்சத்து திட்டத்திலும் இது சேர்க்கப்படலாம், ஏனென்றால் இது மிக குறைந்த கொழுப்பு உள்ளடக்கம் கொண்ட ஒல்லியான இறைச்சி ஆகும். கூடுதலாக, குறைந்தபட்ச கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் குறைந்த கலோரி உள்ளடக்கம் ஆகியவை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறந்த தயாரிப்பு ஆகும்.
இந்த மாமிசமானது ஒரு சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை நடத்துபவர்களுக்கு பயன் தருகிறது. விளையாட்டுகளில் விளையாடுவதால், உங்கள் உடலில் தசை வெகுஜனத்தை உருவாக்க முயற்சித்தால் அது மதிப்புக்குரியது. மாட்டிறைச்சி காணப்படும் புரதம் தசைகள் ஒரு சிறந்த கட்டிட பொருள். மனிதர்கள் அத்தகைய ஒரு தயாரிப்பு தோல்வியடையாமல் இருக்க வேண்டும், குறிப்பாக அவர்கள் சிக்கலான உடல் வேலைகளில் ஈடுபட்டிருந்தால் அல்லது முறைப்படி ஒரு உடற்பயிற்சியில் பங்கேற்க வேண்டும்.
இது அனைத்து பயனுள்ள கூறுகளை முழுமையாக பாதுகாக்க என்று நம்பப்படுகிறது, மாட்டிறைச்சி வேகவைக்கப்பட வேண்டும். காயமடைந்த காயங்கள், காயங்கள், அத்துடன் நோய்த்தொற்று அல்லது வைரஸ் வியாதிகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அத்தகைய ஒரு தயாரிப்பு கடுமையாக அறிவுரை வழங்கப்படுகிறது.
மாட்டிறைச்சி மிதமான நுகர்வு மூலம், இந்த உணவை இரத்தக் குழாயின் சுவர்களை உறுதிப்படுத்துகிறது மற்றும் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது. நீங்கள் மாட்டிறைச்சி கல்லீரல் சாப்பிடும் போது, ​​இதயத் தாக்குதல்களை உருவாக்கும் சாத்தியக்கூறுகளை கணிசமாகக் குறைக்கலாம்.
இத்தகைய இறைச்சி செரிமான அமைப்புமுறையின் அமிலத்தன்மையின் நிலைமையை சரியாக பராமரிக்கிறது என்றும், அதன் சாதாரண செயல்பாடுகளுக்கு பங்களிப்பதாகவும் வல்லுநர்கள் கூறுகின்றனர். மாட்டிறைச்சி செய்தபின் எமது உடல் எரிசக்தி மற்றும் உயிர்வாழ்விற்கு ஊட்டமளிக்கிறது. இது நரம்பு மண்டலத்தின் செயல்பாடு மற்றும் நினைவகத்தின் செயல்பாடுகளை செயல்படுத்துவதில் ஒரு நேர்மறையான விளைவைக் கொண்டுள்ளது.

ஆபத்தான மாடு யார்? இறைச்சி சேதம்

சில மருத்துவ ஆதாரங்கள் வாழ்நாள் முழுவதும் மாட்டிறைச்சிக்கு அதிகமாக உட்கொள்ளுதல் முதுகுவலிக்குள்ளாக புற்றுநோய் உருவாக்கம் ஏற்படலாம் என்று கூறுகின்றனர். மெனுவில் குறிப்பிடத்தக்க அளவு மாட்டிறைச்சி மெழுகுவர்த்தல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், இந்த விஷயத்தில், ஒரு நபர் பல்வேறு இதய நோய்களை வளர்ப்பதற்கான ஆபத்தை எதிர்கொள்கிறார். கூடுதலாக, அதிகப்படியான மற்றும் நீடித்த நுகர்வு கொண்ட மாட்டிறைச்சி உள்ள கொழுப்பு முன்னிலையில் இரத்த நாளங்கள் சுவர்களில் கொழுப்பு முளைகளை தோற்றத்தை ஏற்படுத்தும் மற்றும் பெருந்தமனி தடிப்பு ஏற்படுத்தும். இதனுடன் சேர்த்து, இத்தகைய வைப்புக்கள் இதய அல்லது குடலின் செயல்பாட்டில் பிரச்சினைகள் ஏற்படலாம்.
மாட்டிறைச்சி பல்வேறு பியூரின் தளங்களை கொண்டுள்ளது. உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் குவியலைத் தூண்டுவதற்கு இத்தகைய கூறுகள் தூண்டப்படலாம், மேலும் இது யூரோதிஸியஸிஸ், கீல்வாதம் அல்லது ஒஸ்டோக்ொண்டோண்ட்ரோஸின் தோற்றத்தை தூண்டும்.
எனவே, பல பிற பொருட்கள் போன்ற மாட்டு, மிதமான முறையில் உண்ணப்பட வேண்டும். உடலில் உள்ள நன்மைகளை உட்கொள்வதற்கும், தீங்கு விளைவிக்காதவர்களுக்கும், உங்கள் உணவில் வாரம் இரண்டு மூன்று முறை வாரம் சேர்க்க வேண்டும் என வல்லுநர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். 

இறைச்சி - பல்வேறு வகையான இறைச்சிகளின் நன்மைகள் மற்றும் நன்மைகள்

இறைச்சி மற்றும் இறைச்சி பொருட்கள் மனித உணவின் பெரும்பகுதியை உருவாக்குகின்றன. மாமிசத்தை சாப்பிட்டுவிட்டு மட்டுமே சாப்பிட வேண்டிய உணவை மட்டுமே சாப்பிடுகிறீர்கள். ஒரு நபர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இறைச்சி சாப்பிட்டிருந்தாலும், இந்த தயாரிப்புகளின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றிய பிரச்சினைகள் குறையவில்லை.
இறைச்சி பயன்பாட்டின் ஆதரவாளர்கள் இந்த தயாரிப்பு மட்டுமே தேவையான மற்றும் தவிர்க்க முடியாத புரதங்களுடன் மனித உடல் வழங்க முடியும் என்று வாதிடுகின்றனர். இறைச்சி ஒரு தீங்கு என்று சைவ உணவு உண்பவர்கள் கூறினால், பல்வேறு நோய்களால் ஏற்படுகின்ற நோயாளிகளின் ஆதாரமாக இது உள்ளது.
இறைச்சி நன்மைகள் மற்றும் தீங்கு பற்றி பேசுகையில், அது இறைச்சி வகையை பொறுத்தது என்று கூறப்படுகிறது. இன்றைய தினம் மனித ரேசில் கால்நடை இறைச்சி (மாட்டிறைச்சி, வியல்), சிறிய ரம்மின்கள் (ஆடு இறைச்சி, ஆட்டிறைச்சி), பன்றி இறைச்சி மற்றும் கோழி இறைச்சி (கோழி, வான்கோழி, வாத்து, வாத்து இறைச்சி, காடை இறைச்சி) ஆகியவை அடங்கும். மேலும் குதிரை இறைச்சி, முயல் இறைச்சி மற்றும் விளையாட்டு (விளையாட்டு எந்த காட்டு விலங்குகள் இறைச்சி உள்ளடக்கியது: முயல், காட்டுப்பன்றி, மான், கரடி, முதலியன). சில நாடுகளில், நாய்கள், பூனைகள் மற்றும் பிற விலங்குகளிலிருந்து (ஒட்டகங்கள், எருமைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள்) இருந்து இறைச்சி சாப்பிடுகிறார்கள். ஒவ்வொரு வகை இறைச்சியும் அதன் சொந்த சுவையுடனும், பயனுள்ள பண்புகளுடனும் உள்ளது.

பன்றி இறைச்சி இறைச்சி

மாட்டிறைச்சி

- செம்பு, மெக்னீசியம், சோடியம், கோபால்ட், துத்தநாகம், இரும்பு, பொட்டாசியம்: குழு ப, மற்றும் சி, மின், ஒரு, பிபி, தாதுக்கள் அதிக உள்ளடக்கத்தில் மாடுகள் மற்றும் கன்றுகளின் இறைச்சி நன்மைகளை. இரத்த உருவாவதற்கு மாட்டிறைச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது., ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க முடிகிறது, அனீமியாவிற்கு இன்றியமையாததாகும்.

சிக்கன் இறைச்சி

துருக்கி இறைச்சி

வாத்து இறைச்சி நன்மைகளை

முயல் இறைச்சி நன்மைகள்

ஜெல்லி - ஒரு பண்டிகை டிஷ் நன்மைகள் மற்றும் தீங்கு

ரஷ்யாவில் ஜெல்லி எப்படி தோன்றியது

கலவை மற்றும் கலோரி ஜெல்லி

ஜெல்லி வைட்டமின்கள் நன்மைகள் என்ன

ஜெல்லி உள்ள எத்தனை கலோரிகள்

பன்றி இறைச்சியின் நன்மைகள்

சுவையானது மற்றும் பாதிப்பில்லாதது
மாட்டிறைச்சி கொண்ட ஒரு காபி ஒரு மசாலா சுவை மற்றும் மென்மையான இறைச்சி உள்ளது. பன்றி போலல்லாமல், மாட்டிறைச்சி தீங்கு விளைவிக்கும் பொருட்களின் குறைந்த அளவு உள்ளது.
டிஷ் ஒரு கூர்மையான தொடுதலைக் கொடுக்க மற்றும் பீப்பாய்களின் பண்புகளை மேம்படுத்துவதற்கு மாட்டிறைச்சி கொண்ட ஜெல்லி உள்ள கடுகு அல்லது கசப்பான உணவை சேர்க்க இது வழக்கமாக உள்ளது.
நன்றாக செரிமானம்
மாட்டிறைச்சி கொழுப்பு உள்ளடக்கம் 25%, மற்றும் அது 75% உறிஞ்சப்படுகிறது. இரைப்பைக் குழாயின் நோய்களுக்கு டாக்டர்கள் மாட்டிறைச்சி சாப்பிட அனுமதிக்கப்படுகிறார்கள்.
கண் செயல்பாடு அதிகரிக்கிறது
பார்வைக்குரிய உறுப்புகளின் நோய்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாட்டிறைச்சி இருந்து ஜெல்லி பயனுள்ளதாக இருக்கிறது.
மாட்டிறைச்சி குளிரில் வைட்டமின் ஏ (ரெட்டினோல்), கண் வேலைக்கு அவசியம். இது விழித்திரை மற்றும் பார்வை நரம்புகளில் வீரியம் மாற்றங்களை தடுக்க உதவுகிறது. நோய் "இரவு குருட்டுத்தன்மை" மக்கள் குறிப்பாக இந்த வைட்டமின் வேண்டும்.
மூட்டுகள் பற்றி கவலை
திசு பழுது நீக்குவதற்கு அவசியம் தேவைப்படும் மாட்டுக்கறி ஜெல்லியில் விலங்கு புரதம் நிறைய இருக்கிறது. 100 கிராம். மாட்டிறைச்சி 20 முதல் 25% வரை உள்ளது. மருத்துவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்கள் உணவில் மாட்டிறைச்சி உணவுகள் சேர்க்க விளையாட்டு வீரர்கள் ஆலோசனை. முதுகெலும்பு மற்றும் முழங்கால் மூட்டுகளில் அடிக்கடி கனமான சுமை இடைவெளிகல் டிஸ்க்குகள் மற்றும் குருத்தெலும்புகள் ஆகியவற்றை அணியலாம். முன்கூட்டிய நோய்கள் தவிர்க்க கரோட்டின், இரும்பு, விலங்கு கொழுப்பு தேவையான வழங்க உதவும். 50% மாட்டிறைச்சி ஜெல்லி முழு பங்கு வைத்திருக்கிறது.
நீங்கள் உடற்பயிற்சிக்கு வருகை - பயிற்சியின் முன் மாட்டிறைச்சி ஜெல்லி சாப்பிடுங்கள். இறைச்சி கலவை உடல் செயல்பாடு அதிகரிக்கும் பொருட்கள் உள்ளன.

அசிங்கமான தீங்கு

மக்கள் கூற்றுப்படி, குளிரில் கொழுப்பு உள்ளது. கொழுப்பு எலும்பு திசு அல்லது வறுத்த இறைச்சியில் கொழுப்பு உள்ளது என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். பாத்திரங்களில் உள்ள முளைகளை உருவாக்குவதற்குப் பற்றாக்குறையான காய்கறி கொழுப்பு பங்களிக்கிறது. ஒழுங்காக சமைக்கப்பட்ட சாம்பல் உள்ள, மட்டுமே வேகவைத்த இறைச்சி உள்ளது.
காளான் ஒரு பயனுள்ள தயாரிப்பு மற்றும் தீங்கு விளைவிக்கலாம்.
எந்த இறைச்சி குழம்பு வளர்ச்சி ஹார்மோன் கொண்டுள்ளது. பெரிய அளவில் உட்கொண்ட போது, ​​இது திசுக்களில் வீக்கம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. உடல் வலிமையாய் உற்பத்தி உணர்ந்தால், அந்த இறைச்சி குழம்பு பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பன்றி இறைச்சி குழம்பு ஹிஸ்டமைன் உள்ளது, இது குடல் அழற்சி, புரோன்குலாசிஸ், பித்தப்பை நோய் வளர்ச்சி வீக்கம் காரணமாகும். மற்றும் பன்றி இறைச்சி மோசமாக உணர்கிறது, அசௌகரியம் மற்றும் heaviness ஒரு உணர்வு விட்டு.
பூண்டு, இஞ்சி, மிளகு, வெங்காயம் - வயிற்றுக்கு ஒரு அடி. பருவமழைகளை வைத்து, அவை பிரகாசத்தை ருசிக்கின்றன, ஆனால் ஆரோக்கியத்தை கெடுத்துவிடாதீர்கள்.
ஆலிப் - உயர் கலோரி மற்றும் ஊட்டமளிக்கும் டிஷ். 100 கிராமுக்கு 350 கிலோகலோரிக்கு பன்றியின் கால்கள் உள்ளன. தயாரிப்பு. ப்ரென்னின் வரம்பற்ற பயன்பாடு உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது. கோழி மார்பக அல்லது இளம் வியல் ஒரு உணவு ஜெல்லி தயார்.
நீங்கள் சமையல் தொடங்கும் முன் கவனமாக செய்முறையை படிக்க. நீங்கள் தவறாக சமைக்க அல்லது கலோரிகள் பின்பற்ற வேண்டாம் என்றால் எந்த டிஷ் ஆரோக்கியமற்ற ஆகிறது.

மாட்டிறைச்சி நாக்கு: நன்மைகள் மற்றும் தீங்கு



மாட்டிறைச்சி நாக்கு மிகவும் பிரபலமான இறைச்சி சுவையாகும் ஒன்றாகும். இது முதல் மற்றும் இரண்டாவது படிப்புகள் பல்வேறு தயார் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், எப்போதும் சாப்பிடுவது மனித உடலுக்குப் பயன் தரும்.
சமையல் குறிப்பாக பாராட்டப்பட்டது என்று உணவு இறைச்சிகள் ஒரு மாட்டிறைச்சி உள்ளது. பயனுள்ள மற்றும் யார் தீங்கு விளைவிக்கும் மாட்டிறைச்சி இருக்க முடியும், அதை பயன்படுத்த சிறந்த என்ன வடிவத்தில், நாம் இந்த கட்டுரையில் கற்று.

கலோரி மற்றும் ரசாயன கலவை

Tenderloin உதாரணமாக மாட்டிறைச்சி கலவை மற்றும் கலோரி உள்ளடக்கம் கருதுகின்றனர்.
  தயாரிப்பு 100 கிராம் ஊட்டச்சத்து மதிப்பு:
  • புரதங்கள் - 22.2 கிராம்;
  • கொழுப்புகள் - 7.1 கிராம்;
  • கார்போஹைட்ரேட்டுகள் - 0.01 கிராம்
  கலோரி - 158 கி.கே. 
  தேவையான பொருட்கள்:
  • வைட்டமின்கள் - B1, B2, B4, B5, B6, B9, B12, E, K, PP;
  • கனிமங்கள் - பொட்டாசியம், கால்சியம், சோடியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, தாமிரம், மாங்கனீசு, துத்தநாகம்;
  • அமினோ அமிலங்கள் - ஐசோலூசின், லைசின், மீத்தியோன், டிரிப்டோபான்;
  • கொழுப்பு அமிலங்கள் - ஒமேகா -3, ஒமேகா -6;
  • மயக்கமடைந்த மற்றும் பல அசைவூட்டப்பட்ட அமிலங்கள்.
உனக்கு தெரியுமா? ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்களால் நடத்தப்பட்ட காட்டு மாடுகளிலிருந்து வீட்டு மாடுகள் இறங்கியிருக்கின்றன. பண்டைய ரோமானியர்கள், சீத்தியர்கள், கிரேக்கர்கள் அவர்களின் இறைச்சி சாப்பிட்டது, ஆனால் வெறும் மனிதர்களுக்கு அது ஒரு இன்பம் கிடைக்கவில்லை.

பயனுள்ள மாட்டிறைச்சி என்றால் என்ன?

இந்த தயாரிப்பு பல பி வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை மனித ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. உதாரணமாக, மாட்டிறைச்சி கல்லீரல் உணவுகளில் இரும்பு உள்ளடக்கத்தை பதிவு செய்கிறது. மாட்டிறைச்சி இறைச்சியின் நன்மைகளை உடலுக்குக் கொண்டு வருவதைக் கவனியுங்கள்.

ஆண்கள்

பின்வருமாறு ஆண்கள் உற்பத்தி நன்மைகள் உள்ளன:
  • இரத்தத்தில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி மற்றும் சாதாரண நிலைகள்;
  • புரதத்தின் மூலமும், முறையே, மற்றும் ஆற்றல்;
  • எலும்பு திசு வலுவூட்டுதல்;
  • தசை கட்டிடம்;
  • அதிகரிக்கும் ஆற்றல்;
  • கடுமையான உடல் உழைப்புக்குப் பின் வேகமாக மீட்பு;
  • நோய் எதிர்ப்பு சக்தி
  • மயிர்க்கால்கள் (ஆரம்ப மொட்டு முனைப்பு தடுப்பு) வலுப்படுத்தும்.
இது முக்கியம்! மாட்டிறைச்சி இறைச்சி துஷ்பிரயோகம் பெருங்குடல் ஒரு வீரியம் கட்டி ஆபத்தை அதிகரிக்கிறது, எனவே வாரத்திற்கு 550 கிராம் அதிகம் விரும்புவதில்லை.

பெண்களுக்கு

பெண்களுக்கு மாட்டிறைச்சி நன்மைகள்:
  • நாள்பட்ட சோர்வு தடுப்பு;
  • ஆரோக்கியமான முடி மற்றும் தோல் பராமரித்தல்;
  • கொலாஜன் உற்பத்தி;
  • அதிகரித்த ஹீமோகுளோபின் அளவு;
  • கடுமையான மோசமான நாட்களின் பின் மீட்பு;
  • மீண்டும் உயிரூட்டும் செல்கள் திறனை அதிகரிக்கும்;
  • நாளமில்லா அமைப்பு ஆதரவு;
  • இனப்பெருக்க அமைப்பு செயல்பாடுகளை இயல்பாக்குதல்.

   மாட்டிறைச்சி அடிக்கடி பயன்படுத்துவதால் சர்க்கரைச் சத்துள்ள கொழுப்பு அதிகரிப்பதற்கு வழிவகுக்கலாம், எண்ணெய் முடி வளர்ந்தது. பெண்கள் பயம் இல்லாமல் நாள் ஒன்றுக்கு 160 கிராம் வரை சாப்பிட முடியும்.

குழந்தைகள்

6 முதல் 8 மாதங்கள் வரை காய்கறி மற்றும் பழம் கலவையைப் பயன்படுத்தி, சப்ளை செய்யப்பட வேண்டும். தைவானின், ரிபோபலாவின், அமினோ அமிலங்கள், இரும்பு, கால்சியம் மற்றும் பிற உடற்காப்பு மூலக்கூறு, இறைச்சி, குறிப்பாக குழந்தை உணவுகளில் மாட்டிறைச்சி ஆகியவற்றை முக்கியமாக கருதுவது அவசியம்.
இந்த தயாரிப்பு எலும்பு, தசை, இணைப்பு திசு, வலுப்படுத்தும் மற்றும் வளர்ச்சி பங்களிக்கிறது, கூடுதலாக, அத்தகைய நடவடிக்கைகள் பல செய்கிறது:
  • நினைவு உருவாகிறது, கல்வி பொருள் உறிஞ்சும் திறனை, பொதுவாக மனநல நடவடிக்கை;
  • தேவையான ஆற்றல் கொடுக்கிறது;
  • ஆரோக்கியமான பார்வை ஆதரிக்கிறது;
  • நரம்பு மற்றும் நாளமில்லா அமைப்பு உருவாக்குகிறது;
  • வளர்சிதைமாற்ற செயல்முறைகள், நீர் உப்பு சமநிலை, வயிறு மற்றும் குடல்களின் நுண்ணுயிரிகளை ஒழுங்குபடுத்துகிறது;
  • நோய் எதிர்ப்பு அமைப்பு உறுதிப்படுத்துகிறது.


எந்த வடிவத்தில் பயன்படுத்த சிறந்தது

இறைச்சி இருந்து அதிகபட்ச ஊட்டச்சத்துக்களை பிரித்தெடுக்க, நீங்கள் சாப்பிட சிறந்த என்ன வடிவத்தில் தெரிய வேண்டும்.

மூல மாட்டிறைச்சி

ஒரு விளைபொருளானது, ஆரோக்கியமாகவும், செரிமானத்திற்காக எளிதானதாகவும் கருதப்படுகிறது, ஏனென்றால் அது முற்றிலும் செரிக்கப்படுவதால், இறைச்சியைப் போல அல்லாமல், வெப்பத்தை குணப்படுத்துவதாகும். கலவை அனைத்து கூறுகளும் உடலில் முழுமையாக நுழைகின்றன என்பது தெளிவாக உள்ளது. இன்னும் ஒரு பிளஸ் - மூல தயாரிப்பு ஒரு ஒவ்வாமை அல்ல என்பதை நிரூபித்துள்ளது.

கொதிக்கவைத்த (வேகவைத்த) மாட்டிறைச்சி

வேகவைத்த இறைச்சி வயிற்றுக்கு நல்லது: இது இரைப்பை சாற்றை அமிலத்தன்மையையும், சளி சவ்வு எரிச்சலூட்டும் என்சைம்களின் செயல்பாடுகளையும் குறைக்கிறது. மிதமான பயன்பாடு இதய நோய்கள் ஒரு தடுப்பு பணியாற்றும், hematopoietic அமைப்பு வேலை, ஒழுங்கின் மூளை வேலை. சமையல் போது, ​​கலவை தற்போது புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நடைமுறையில் அழிந்து இல்லை, முழு நாள் ஆற்றல் உடல் பூர்த்தி.
  இரவு நேரத்தில், தயாரிப்பு பயன்படுத்த வேண்டாம் நல்லது - அது கனரக உணவு.இரவு உணவுக்கு முன் மூன்று அல்லது நான்கு மணி நேரம் இருக்க வேண்டும்.

சுண்டவைத்தவை

Braised மாட்டிறைச்சி அதிக கலோரி இல்லை. இறைச்சி சரியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், அதன் செயலாக்கம் நிறைய நேரம் எடுக்காது, அதாவது அனைத்து நன்மைகள் கிடைக்கும் என்று அர்த்தம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நோயாளிகளுக்கு (உடற்பயிற்சியின் பின்னர் தசை வெகுஜன மற்றும் மீட்பு) ஒரு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இது முக்கியம்! புண்கள், வயிற்றுப்போக்கு மற்றும் பிற இரைப்பை குடல் நோய்கள் அதிகரிக்கும் போது, ​​டைப் 2 நீரிழிவு நோயால் அடிக்கடி உணவூட்டுவது நல்லது அல்ல.

வறுத்த

வறுத்த உணவுகள் ஊட்டச்சத்து மற்றும் இரைப்பை நோயாளிகளுக்கு பொதுவாக தடை செய்யப்படுகின்றன: தங்கள் சொந்த கொழுப்பு மற்றும் கொழுப்பு, காய்கறி கொழுப்புகள் கூடுதலாக வறுக்கப்படும் போது சேர்க்கப்படுகின்றன. பல்வேறு நாடுகளிலிருந்து விஞ்ஞானிகள் ஆய்ந்து படி, கடுமையான வறுத்த மாட்டிறைச்சி உள்ள mutagens எண்ணிக்கை, இது கட்டிகள் ஆபத்தை அதிகரிக்கிறது.

மாட்டிறைச்சி குழம்பு

அனைத்து நேரங்களிலும் குழம்பு ஒரு சிகிச்சைமுறை கருவியாக இருந்தது, இது ஒரு பலவீனமான நோய் அல்லது அறுவை சிகிச்சைக்கு பிறகு மீட்க உதவுகிறது. நோயாளிக்கு திட மற்றும் கொழுப்பு உணவுகள் முரணாக இருக்கும் போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒல்லியான மாட்டிறைச்சி குழம்பு உள்ள கொழுப்பு உள்ளடக்கம் 100 கிராம் ஒன்றுக்கு 1% க்கும் அதிகமாகவும், கலோரிக் உள்ளடக்கம் 20 கலோரிகளுக்கு குறைவாகவும் உள்ளது.

மாட்டிறைச்சி சாப்பிட முடியுமா?

அனைத்து நிலைமைகளும் குறிப்பிட்ட சில நோய்களுக்கு தயாரிப்பு அனுமதிக்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்கலாம்.

கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் போது

ஜின்காஸ்டுகள், கருவுறுதல் நிபுணர்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர்களின் ஒருமனதான கருத்து: பொதுவாக இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி குறிப்பாக இறைச்சி சாப்பிட வேண்டும். புரதத்தின் முக்கிய ஆதாரமின்றி, பெண்களுக்கு கருத்தரித்தல் மற்றும் உழைப்புடன் பெண்களுக்கு முதலில் பிரச்சினைகள் உள்ளன.
புரதத்திற்கு கூடுதலாக, இது மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் வைட்டமின்கள் B இன் மொத்த குழுவினரின் மூலமாகும், இது கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் முக்கியம். அவர்கள் கருவின் அனைத்து உடல் அமைப்புகளையும் உருவாக்கி, கருச்சிதைவு அபாயத்தை குறைக்கிறார்கள், குழந்தையின் நரம்பு குழாய் மற்றும் மற்றவர்களின் நோய்களின் ஆபத்து.
   தாய்ப்பாலூட்டலுக்கும் இது பொருந்தும் - ஹெச்.பீ. உற்பத்தியின் ஒரு நியாயமான நுகர்வு, தாயால் பெறப்பட்ட பொருட்களின் முழு அளவிலான குழந்தைக்கு அளிக்கும். சிறிய மனிதனின் பாதுகாப்பான பண்புகளை வலுப்படுத்தி, குழந்தையின் செரிமான அமைப்பின் சாதாரண உருவாவதற்கு பங்களிப்பு செய்யவும்.

எடை இழந்து போது

மாட்டிறைச்சி இறைச்சி குறைந்த கலோரி ஒன்று கருதப்படுகிறது, எனவே நீங்கள் எடை இழக்க விரும்பினால் அது பெரும்பாலும் நுகர்வு பரிந்துரைக்கப்படுகிறது. உணவு பெரும்பாலும் உணவு தேர்வுகள் கட்டுப்படுத்துகிறது, வைட்டமின்கள் மற்றும் கனிமங்களின் சரியான சமநிலை ஆரோக்கியத்தை பராமரிக்க அவசியமாகிறது. மாட்டிறைச்சி உணவுகள் உணவில் பயனுள்ள உறுப்புகளின் பற்றாக்குறையை நிரப்பும்.

கணையம் மற்றும் இரைப்பை அழற்சி ஆகியவற்றால்

நோய்த்தொற்றின் நீண்டகால வடிவத்தில் கடுமையான வடிவத்தில் அல்லது அதிகப்படுத்தப்படுகையில், இளம் நபர்களின் சிறுநீரகத்திலிருந்து ஒரு ஜோடிக்கு உணவை சாப்பிடலாம். சடலத்தின் மற்ற பகுதிகளிலிருந்தும் உணவு தயாராக இருந்தால், கொழுப்பு அடுக்குகள், தசைநாண்கள் மற்றும் குருத்தெலும்புகளை அகற்ற வேண்டும்: அவை உடம்பு வயிறு அல்ல.
   Broths மற்றும் பொறித்த தயாரிப்பு விரும்பத்தக்கதாக இல்லை.

என்ன இறைச்சி ஆரோக்கியமான: பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி அல்லது ஆட்டுக்குட்டி

சமையல் இறைச்சி மிகவும் பிரபலமான வகையான: பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் ஆட்டுக்குட்டி. மிகவும் பயனுள்ளதாக இருக்கும், புரிந்து கொள்வோம்.
இது பன்றி இறைச்சி மிகவும் கொழுப்பு உள்ளது என்று நம்பப்படுகிறது, ஆனால் அது இல்லை. முட்டைகள் மற்றும் வெண்ணெய், பல முறை இன்னும். பன்றி இறைச்சி மற்ற இனங்கள் விட fatter, ஆனால் அது கூட மென்மையான, தயார் எளிதாக உள்ளது. கொழுப்பு உணவுகள் பிடிக்காதவர்கள், சடலத்தின் சாய்ந்த துண்டு ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
குளிர்காலத்தில் பயன்பாட்டிற்காக பரிந்துரைக்கப்படுவதால், உடலுக்கு நிறைய சக்திகள் தேவைப்படும் போது, ​​அதிக கலோரி உணவு சக்தியின் பற்றாக்குறை நிரப்பப்படும். கூடுதலாக, பன்றி கொழுப்பு, மாடு தயாரிப்பு போலல்லாமல், முற்றிலும் நம் வயிற்றில் உறிஞ்சப்படுகிறது. வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலங்களின் உள்ளடக்கத்தில் இறைச்சி உற்பத்திகளில் பன்றி இறைச்சி ஒரு சாதனை ஆகும்.
  மாட்டு இறைச்சி  - விளையாட்டு பிடிக்கும் யார் செயலில் மக்கள் ஒரு சிறந்த தயாரிப்பு. இது தசைகள் மற்றும் தசைநார்கள், தசை, வலிப்பு மற்றும் தசைநார்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் திறனைக் கொடுக்கும் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உள்ளது. ஆஃபீஸோனில், வைட்டமின்கள் மற்றும் வைட்டமின்களின் சப்ளைகளை நிரப்புவதன் மூலம், வைட்டமினோசிஸ் மற்றும் அனீமியாவைத் தடுக்கிறது, முக்கிய கனிமங்களின் ஒரு குழுவாக உடலை வளர்க்கிறது.
உனக்கு தெரியுமா? தொழில் முனைவோர் ஜப்பனீஸ், வளர்ந்து வரும் பளிங்கு மாட்டு, அதை வெற்றிகரமாக செயல்படுத்த தங்கள் பொருட்களை ஒரு குறிப்பிட்ட உயரடுக்கு வழங்க பொருட்டு, தங்கள் பசுக்கள் கவனித்து எப்படி ஒரு முழு புராண இசையமைத்த. கிளாசிக் படைப்புகளின் இசைத்தொகுதியுடன் தினசரி மசாஜ் செய்து, சிறந்த குஞ்சுகளுடன் பீர் குடிக்கிறார்கள். சொல்லப்போனால், தயாரிப்புகளின் கலையுணர்வு - இது தேர்வில் ஈடுபடுத்தப்பட்ட விலங்கு தொழில்நுட்ப வல்லுனர்களின் தகுதி.
என ஆட்டுக்குட்டி  - அவள் எப்போதும் ஒரு அமெச்சூர் இன்னும் இருந்தது. கூட இளம் இறைச்சி ஒரு குறிப்பிட்ட சுவை மற்றும் வாசனை உள்ளது என்பதால், அது தயாரிப்பு பயன்படுத்தப்படுகிறது அவசியம். இது அனைத்து வகையான இறைச்சி வகைகளிலும் மிகவும் கொழுப்பு அல்ல, குறைந்தபட்சம் கொழுப்பு மற்றும் கொழுப்பு உள்ளது. எடை இழக்க விரும்பும், நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு, இரத்தக் குழாய்களால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு பரிந்துரைக்கப்படும் கனமான உணவை உட்கொண்ட முதியவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

சமையல் ரகசியங்கள்

உணவு மட்டும் ஆரோக்கியமான, ஆனால் சுவையாக இருக்க வேண்டும், மென்மையான மற்றும் தாகமாக உணவுகள் சமையல் இரகசியங்களை கருதுகின்றனர்:


வீடியோ: மாட்டிறைச்சி கொதிக்க எப்படி
சுருக்கமாக: மனித உடல் இறைச்சி தேவை. ஆலை தோற்றத்தின் ஒரு தனித்தன்மை (சைவ உணவு உண்பவர்களுக்கு எதிர்மாறாக இருப்பதைப் போல) புரதத்தின் தரம் மற்றும் அளவு ஆகியவற்றில் தேவையான அளவு உடலை நிரப்புவதில்லை. இந்த பொருளின் குறைபாடு பல நோய்களுக்கு வழிவகுக்கிறது.
இறைச்சி மிகவும் பொதுவான வகைகளில் ஒன்றாகும். இந்த தயாரிப்பு பிரபலத்தின் பல காரணிகள் உள்ளன: உறவினர் கிடைக்கும், பணக்கார சுவை மற்றும் பணக்கார ஊட்டச்சத்து அமைப்பு.
மாட்டிறைச்சி மாடுகள், எருதுகள் மற்றும் மாடுகளின் மார்க்கமாகக் கருதப்படுகிறது, இது 8 மாதங்களுக்கும் மேலாகும். வால் - இந்த வயது வாசலில் வரை அதே விலங்குகளின் இறைச்சி. விலங்கு வயது மூன்று வயதுக்கு மேல் இல்லை என்றால் மாட்டிறைச்சி குறிப்பாக சுவையாக இருக்கும். இந்த மாட்டிறைச்சி ஒரு சிவப்பு நிறம் உள்ளது, அது ஒரு பிட் உள்ளது hymen மற்றும் எந்த நரம்புகள் உள்ளன. பழைய விலங்கு வயது, கடினமான இறைச்சி மற்றும் குறைந்த ஊட்டச்சத்து உள்ளடக்கம். எனவே, மாட்டிறைச்சி சிவப்பு அல்லது பர்கண்டி நிறம் பரிந்துரைக்கப்படவில்லை.

மாட்டிறைச்சி: கலவை மற்றும் கலோரி

மாட்டிறைச்சி புரதம் ஒரு மதிப்புமிக்க சப்ளையர். இது வாழ்க்கை ஆதரவு மற்றும் உடல் மீட்பு அவசியம். மாடுகளின் ஊட்டச்சத்து மதிப்பு, புரதத்தால், 19 கிராம் மற்றும் கொழுப்புகளில், 100 கிராம் இறைச்சிக்கு 16 கிராம் ஆகும். அதே நேரத்தில், மாட்டிறைச்சி ஒரு குறைந்த கலோரி தயாரிப்பு, எனவே உணவு. மாட்டிறைச்சி சராசரி கலோரி உள்ளடக்கம் 218 கிகல் ஆகும்.
கலோரி மாட்டிறைச்சி சமையல் முறையை சார்ந்துள்ளது. வேகவைத்த மாட்டிறைச்சி 170 கிகல், சுத்திகரிக்கப்பட்ட இறைச்சி - 230 கி.க., வேகவைத்த மாட்டிறைச்சி இறைச்சி மொத்தம் 100 கிராமுக்கு 255 கி.கே. வறுத்த மாட்டிறைச்சி - குறைந்த ஆரோக்கியமான மற்றும் அதிக கலோரி டிஷ். இந்த மாட்டிறைச்சி ஒரு உணவுப் பொருள் அல்ல, 100 கிராமுக்கு 385 கிலோகலோரி உள்ளது.
மாட்டிறைச்சி அதன் இனிமையான இனிமையான சுவைக்காக மதிக்கப்படுகிறது. இறைச்சி மெலிந்ததும், ஒழுங்காக தயாரிக்கப்பட்டதும் மென்மையாகவும், தாகமாகவும் இருக்கும். மாட்டிறைச்சி கலவை வைட்டமின்கள், தாதுக்கள், அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நிறைந்திருக்கிறது.
கால்சியம், பொட்டாசியம், குளோரின், பாஸ்பரஸ், சோடியம், மெக்னீசியம், கந்தகம்: மாட்டிறைச்சி பின்வரும் மகசூலைக் கொண்டுள்ளது. இரும்பு, தாமிரம், மாங்கனீஸ், அயோடின், மாலிப்டினம், கோபால்ட், துத்தநாகம், குரோமியம், ஃவுளூரின், தின், நிக்கல் ஆகியவற்றைக் குறிக்கும். போதுமான மற்றும் பல்வேறு அளவு கனிம பொருட்கள் இருப்பதால், நோயெதிர்ப்பு முறையின் சரியான செயல்பாட்டை உறுதிப்படுத்துகிறது, எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்துகிறது. மாட்டிறைச்சி உள்ள புரதங்கள் கொலாஜன் மற்றும் ஈஸ்டின், முக்கிய உள்ளன. ஏனென்றால் அவை இணைப்பு திசுவின் அடிப்படையாகும்.
மாட்டிறைச்சி உள்ள வைட்டமின்கள் கலவை மிகவும் வேறுபட்டது: தைவான், ரிபோப்லாவின், கொலைன், பைரிடாக்சின், பாந்தோத்தேனிக் மற்றும் ஃபோலிக் அமிலங்கள், கோபாலமின்கள், பயோட்டின் மற்றும் டோகோபெரோல். 

மாட்டிறைச்சி: நல்லது மற்றும் தீங்கு

முறையாக சமைத்த மாட்டிறைச்சி - பெரும்பாலான சத்துக்கள் மூல, உடலின் உடலில் தேவையானது. மாட்டிறைச்சி இறைச்சி, கர்ப்பிணி பெண்களுக்கு இது பயன்பாடு சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளது.
தினசரி மெனுவில் இறைச்சி சேர்க்கப்படுவது அவசியம்:
  • இரும்பு குறைபாடு மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் இருந்தால். உயர் இரும்பு உள்ளடக்கம் நிலைமையை உறுதிப்படுத்த போதுமானது இரும்பு வழங்கப்படுகிறது.
  • இரத்த சோகை சமாளிக்க பி.வி. வைட்டமின்கள் இறைச்சியில் உள்ளன. வைட்டமின்கள் சிக்கலான விளைவை இரத்த உருவாக்கம் செயல்படுத்துகிறது, சிவப்பு இரத்த அணுக்களின் செயல்திறனை தூண்டுகிறது.
  • பல உணவுகளில் மாட்டிறைச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கொழுப்பில் குறைந்தபட்ச கொழுப்பு கொண்ட லீன் இறைச்சி எடையை இழக்க சிறந்தது.
  • குறைந்த கலோரி உள்ளடக்கம் காரணமாக, கார்போஹைட்ரேட் குறைபாடு மற்றும் கொழுப்பு ஒரு சிறிய அளவு, மாட்டிறைச்சி நீரிழிவு உட்கொள்ளப்படுகிறது.
  • மாட்டிறைச்சி சத்தானது, எனவே அதன் பயன்பாடுகளிலிருந்து மனிதர்களுக்கு கிடைக்கும் நன்மை தெளிவாக உள்ளது. குறிப்பாக கடினமான உடல் வேலை அல்லது தினசரி செயலில் விளையாடுபவர்களுக்கு. மாட்டிறைச்சி கலவையில் புரதம் தசை வெகுஜனத்தை உருவாக்குவதற்கு காரணமாகிறது.
  • மாட்டிறைச்சி இறைச்சி வயிற்றில் அமிலத்தன்மை சாதாரண நிலை கட்டுப்படுத்த முடியும்.
  • நரம்பு மண்டலத்தின் செயல்பாடானது, மாட்டிறைச்சி வழக்கமான பயன்பாட்டிற்கான நன்றி, தெளிவாகவும், இணக்கமாகவும் மேற்கொள்ளப்படும்.
  • நினைவக வழிமுறைகள் இயல்பான செயல்பாட்டைக் காட்டுகின்றன.
  • லீன் மாட்டிறைச்சி இறைச்சி ஒரு டானிக் விளைவு உள்ளது, உயிர் மற்றும் கூடுதல் ஆற்றல் கொடுக்கிறது.
எந்த தயாரிப்பு போன்ற, மாட்டிறைச்சி மனித உடலில் விரும்பத்தகாத விளைவுகள் இருக்கலாம் என்று பண்புகள் உள்ளன. இறைச்சி மிதமாக பயன்படுத்தப்பட வேண்டும்:
  • புரோட்டீன் மிகவும் கடினமானதாக இருக்கிறது, எனவே செரிமான அமைப்பு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
  • இறைச்சி சிறுநீரக நோயால் பாதிக்கப்படக்கூடாது. செரிமான செயல்பாட்டிலுள்ள இறைச்சி யூரிக் அமிலத்தை உருவாக்கும் பொருட்களுக்குள் உடைகிறது. இந்த அமிலத்தின் அதிகப்படியான மூட்டுகளில் வைக்கப்பட்டிருக்கும் தீங்கு விளைவிக்கும் படிகங்களை உருவாக்குகிறது. Osteochondrosis, கீல்வாதம் மற்றும் கீல்வாதம் ஒரு படிப்படியாக திரவங்கள் தூண்டப்பட்ட நோய்கள்.
  • அதிகப்படியான இறைச்சி நுகர்வு உடல் எதிர்ப்பைக் குறைக்கலாம்.
  • வணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட மாட்டிறைச்சி பூச்சிக்கொல்லிகள், நைட்ரேட்டுகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் ஹார்மோன்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம். இந்த தீங்கு விளைவிக்கும் பொருட்கள் நோய்களைத் தடுக்கவும் விலங்கு வளர்ப்பை அதிகரிக்கவும் கால்நடை வளர்ப்பிற்கு சேர்க்கப்படுகின்றன.
மாட்டிறைச்சி  - பல மக்கள் மிகவும் பிரபலமாக உள்ளது என்று இறைச்சி. மாடுகள் மற்றும் எருதுகளின் படுகொலையைப் பெறுங்கள். தயாரிப்பு சிறந்த சுவை மற்றும் நுகர்வோர் குணங்களை கொண்டுள்ளது.
இறைச்சியின் தரம் கால்நடைகளின் வயதில் நேரடியாக தங்கியுள்ளது: விலங்கு மிக பழையதாக இருந்தது, கடினமான இறைச்சி இருக்கும், ஏனெனில் இது நிறைய கரடுமுரடான தசைகள் உள்ளன.
தரமான மாட்டிறைச்சி சிவப்பு வண்ணம் (புகைப்படம் பார்க்க). கலர் பல அம்சங்களைச் சார்ந்துள்ளது:
  • கால்நடை சுகாதாரத்திலிருந்து (நோய்க்குறியின் அறிகுறியைக் குறிக்கிறது);
  • கீழே இருந்து (பழுப்பு சிவப்பு நிறம் - இரத்த குறைக்கப்படவில்லை என்று ஒரு அடையாளம்);
  • சேமிப்பக முறையிலிருந்து (சீரற்ற வண்ணம் - மீண்டும் கரைக்கும் ஒரு அறிகுறி).
உடலின் மிகவும் பிரபலமான பாகங்கள்: மார்பக, கழுத்து, மென்மையான மற்றும் தோள்பட்டை.
மாட்டிறைச்சி இறைச்சி அதை பிரிப்பதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறது 3 வகைகள்:
  • உயர் - பிஸ்கட், மீண்டும், ஃபிலிட், ரம்ப், ரம்ப் மற்றும் ரம்ப்;
  • முதல் தரம் - பக்கவாட்டு, தோள்பட்டை கத்தி மற்றும் தோள்பட்டை;
  • இரண்டாவது தரம் - பிளவு மற்றும் ஷாங்க்.
தரம் மாட்டிறைச்சி ஒரு நார்ச்சத்து பளிங்கு அமைப்பு கொண்டிருக்கிறது, சிவப்பு வண்ணம் மற்றும் ஒரு இனிமையான வாசனை உள்ளது. கொழுப்பு சீரான, மென்மையான மற்றும் வெள்ளை மற்றும் கிரீம் நிறத்தில் வர்ணம் பூச வேண்டும்.
எந்தவொரு தயாரிப்பையும் போலவே, மாட்டிறைச்சி மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது, இது விலங்குகளின் வயதில் மட்டுமல்ல, தயாரிப்புகளின் கொழுப்பு உள்ளடக்கம் மட்டுமல்ல.
முதல் வகையின் மாடுகளின் தோற்றம் பின்வருமாறு ஒத்திருக்க வேண்டும்.  தசை திசு சாதாரணமாக உருவாக்கப்பட வேண்டும், கொழுப்பு அடுக்கு உடலின் வால் இருந்து தொடங்கி எட்டாவது இடுப்பு வரை தொடர வேண்டும். மேலும், மாட்டிறைச்சி இந்த வகை சிறுநீரக கொழுப்பு நிறைய வேண்டும். இளம் கால்நடைகளின் சடலத்தை வெட்டுவதற்கு பயன்படுத்தினால், கொழுப்பு வைப்பு இல்லாததால் இறைச்சிக்காக அனுமதிக்கப்படுகிறது.
பின்வரும் வகையின் மாடு இரண்டாம் வகைக்கு சொந்தமானது. இடுப்புக்கள், கடைசி விலா எலும்புகள், சிறுநீர் கழிக்கும் சிறுகுடல் ஆகியவை கொழுப்பு ஒரு சிறிய அளவு மூடப்பட்டிருக்கும். துப்பாக்கி சூடு மலை நன்றாக உள்ளது. தசைகள் பொறுத்தவரை, அவர்கள் போதுமான அளவு வளர்ந்திருக்கவில்லை.
மேலும், வல்லுநர்கள் எந்த தனித்துவமான பிரிவை தனித்தனியாக வேறுபடுத்துவதுடன், இது மாட்டிறைச்சி சார்ந்ததாகும். இந்த வகை இறைச்சி தொழில்துறை செயலாக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட வகை மாட்டிறைச்சி எந்த வகையைச் சார்ந்தது என்பதைப் புரிந்து கொள்வதற்காக, தயாரிப்பு முத்திரை குத்தப்படுகிறது. மாட்டிறைச்சி ஒரு சுற்று வடிவத்தில் மற்றும் ஊதா நிறம் கொண்ட கறை இருந்தால், அது இறைச்சி கொழுப்பு நிறைய உள்ளது என்று அர்த்தம். இறைச்சி ஒரு சதுர அடையாளத்தைக் கொண்டிருந்தால், அந்த மிருகம் போதிய அளவு குண்டாக இல்லை என்பதை இது குறிக்கிறது.  மற்றும் ஒரு இளம் கால்நடை தலை மீது கடிதம் எம் வடிவத்தில் ஒரு லேபிள் இருக்க வேண்டும்

மாட்டிறைச்சி துண்டுகள்

மாட்டிறைச்சி பல்வேறு பகுதிகளில் இருந்து, நீங்கள் இந்த வகையான இறைச்சி மிகவும் தாகமாக, மிதமான மென்மையான மற்றும் மிகவும் சுவையாக கருதப்படுகிறது என்பதால், பல்வேறு சுவையாகவும் நிறைய சமைக்க முடியும்.   எனினும், அது ஒரு குறிப்பிட்ட உணவு உருவாக்க செய்முறையை பட்டியலிடப்பட்டுள்ளது என்று மாட்டிறைச்சி மட்டுமே அந்த பகுதி எடுக்க வேண்டும் என்று நினைவில் கொள்ள வேண்டும்.
பிணத்தை வெட்டும்போது மாட்டிறைச்சி போன்ற பாகங்கள் இருக்க வேண்டும்:
  1. தொடையில்.  இது ஒரு குடம், ஒரு சிறிய நட்டு அல்லது ஒரு கழுத்து என்றும் அழைக்கப்படுகிறது. இறைச்சி மிகவும் இளஞ்சிவப்பு மற்றும் இழைகள் இல்லாமல் உள்ளது. மாட்டிறைச்சி இந்த பகுதியில் இருந்து பெரும் வறுத்த மற்றும் romshetexy உள்ளது.
  2. ஆக்ஸ் வால் சமைப்பதற்கு முன் அதை துண்டுகளாக வெட்ட வேண்டும் (சுமார் ஐந்து சென்டிமீட்டர் நீளம்). பெரும்பாலும் சூடான உணவை சமையல் செய்ய பயன்படுத்தப்படுகிறது. மேலும், சமையல் நிபுணர் மாட்டு வால் இருந்து குண்டு செய்யும் ஆலோசனை..
  3. Tenderloin.  மாட்டின் இந்த பகுதி பிணத்தின் பின்புறத்தில் உள்ளது. இது மிகவும் மென்மையான மற்றும் மிதமான ஜூசி உள்ளது. ஒரு மென்மையான (பெரும்பாலும் உள்ளே இருந்து எடுத்து) இருந்து இறைச்சி வெட்டி மூலம் tenderloin தயாரிக்கப்படுகிறது. சமையலில், மாட்டிறைச்சி இந்த பகுதி அணைக்கப்பட்டு, வேகவைத்த, வேகவைத்த, மற்றும் அது சுவையான medallions இருந்து செய்யப்படுகிறது.
  4. ஷின் பட்டைகள்  இறைச்சி நிறைய தசைகள் உள்ளன. ரொட்டி மற்றும் வறுக்கப்பட்ட இறைச்சிகளை தயாரிப்பதற்கு பெரியது. மேலும், மாட்டிறைச்சி இந்த பகுதியை சமையல், சூடான உணவுகள், Stews மற்றும் Eintopf சமையல் பயன்படுத்தப்படுகிறது.
  5. Breastbone.  மாட்டிறைச்சி இந்த பகுதியை பிணை மற்றும் கொழுப்பு கொண்ட கூழ் கொண்டிருக்கிறது, இது பிரிக்கப்படுகிறது. நீங்கள் எலும்புகள் இருந்து இறைச்சி பிரிக்க என்றால், நீங்கள் ஒரு meatloaf செய்ய முடியும். ஸ்டெர்னம் துண்டுகளாக வெட்டப்பட்டால், அது ஸ்டீக்கிங் அல்லது கொதிக்கும் குழம்புக்கு எடுத்துச் செல்வது நல்லது.
  6. ஸ்பாட்லலா பகுதி.  மாட்டிறைச்சி இந்த பகுதி கொழுப்பு மற்றும் தசைகளில் குறைவாக உள்ளது. சமையல், இந்த தயாரிப்பு பல்வேறு உணவுகள் நிறைய செய்ய முடியும். தோள்பட்டை பகுதியிலிருந்து அது வறுக்கவும் வெட்டப்பட்ட துண்டுகள், கொதிக்கவைத்து சூப் குழம்பு, குண்டு கெளஷால், மேலும் தயாரிப்பு அடுப்பில் மற்றும் சமையல் இறைச்சியிலுள்ள பேக்கிங்கிற்கு பொருத்தமானது.
  7. பக்கவாட்டுப் பகுதி.  ஸ்டெர்னமில் இருந்து எடுக்கப்பட்ட மாட்டிறைச்சி துண்டு. கூழ் ஒரு பெரிய அளவு கொழுப்பு மற்றும் திசு அடுக்குகள் உள்ளன. சமைப்பதற்கு முன், வல்லுனர்கள் அந்தப் பக்கத்திலிருந்து படம் நீக்கப்பட வேண்டும், அதனால் இறைச்சி மிகவும் கடினமாக இல்லை. சூடான உணவை சமையல் செய்ய ஏற்றது, மற்றும் துண்டுகள் ஒரு நிரப்புகிறது செயல்படுகிறது.
  8. கணு.  சடலத்தின் முன் கால்களிலிருந்து எடுக்கப்பட்ட மாட்டிறைச்சி துண்டு. சமையல்
  9. ஸ்பைனா.  இது ஒரு தடிமனான விளிம்பில் உள்ளது, இது விலா எலும்புகள் போன்ற விலா எலும்புகள் போன்றவற்றை உள்ளடக்கியது. இந்த இறைச்சி இருந்து துண்டுகள் மற்றும் வறுவல் மாட்டிறைச்சி சமைக்க பரிந்துரைக்கப்படுகிறது. அடுப்பில் ஒரு துண்டு முழுவதையும் துண்டுகளாக்கலாம்.  உப்புக்கள் கொதிக்கும் குழம்புக்கு ஏற்றது.
  10. Sirloin.  இது ஒரு மெல்லிய விளிம்பு ஆகும், இது வெட்டும் மற்றும் இடுப்பு பகுதியின் பகுதியாகும். இறைச்சி மிகவும் கொழுப்பு மற்றும் மிகவும் மென்மையான அல்ல. இறைச்சி உணவுகள் (ரோல்ஸ், குடல்ஷ், வறுவல் மாட்டு, கப்பாப், ஸ்டீக்ஸ், மீட்பால்ஸ்கள், மெடாலியன்ஸ் மற்றும் அசு) ஆகியவற்றை தயாரிக்க ஏற்றது.
  11. கழுத்து. அவள் தலை மற்றும் வெட்டு சேர்ந்தவை. போதுமான திட இறைச்சி, ஆனால் இது டிஷ் சுவை குறைக்க முடியாது. கழுத்து ஒரு நீண்ட நேரம் சமைக்க வேண்டும் மற்றும் போதுமான தண்ணீர் அளவு, எனவே இந்த தயாரிப்பு stewing மற்றும் சமையல் பயன்படுத்தப்படுகிறது. தலையின் பின்புறத்தில் அடுப்பில் வறுத்தெடுக்கும் சிறந்தது. மாட்டிறைச்சி இந்த துண்டு திணிப்பு செல்ல முடியும். கொதிக்கும் குழம்புகளுக்கு தீர்வு காணப்படுகிறது.
வெட்டுவதற்கு முன், இறந்த பகுதி 13 மற்றும் 14 முதுகுவலி இடையில் பிரிக்கப்பட வேண்டும். கூடுதலாக, கத்தரிப்பாளர்கள் அந்த சிதைவு நார்கள் மற்றும் ஒரு இயக்கம் முழுவதும் மட்டுமே வெட்டப்பட வேண்டும் என்று வாதிடுகின்றனர்.

எப்படி தேர்வு மற்றும் சேமிக்க?

சந்தையில் பல மாட்டிறைச்சி வகைகளில் தரமான தயாரிப்பு ஒன்றைத் தேர்வு செய்ய, சில வழிமுறைகளை பின்பற்றவும்:
  • பல உற்பத்தியாளர்கள் வெவ்வேறு சாயங்களைப் பயன்படுத்தி, மாட்டிறைச்சி முனையின் கீழ் மலிவான பன்றி விற்க முயல்கின்றனர், எனவே இது மாற்றுக்கு இடையில் வேறுபடுவது முக்கியம். இதை செய்ய, இறைச்சி தேர்ந்தெடுத்து போது, ​​மேற்பரப்பில் ஒரு துடைக்கும் தேய்த்தால்: அது கறை இருந்தால், அதை வாங்க மறுக்க நல்லது.
  • சிறந்த மாட்டிறைச்சி பெரிய இறைச்சி, ஆனால் இளம் கால்நடை. சிறந்தது 20 மாத வயதுடையது.
  • இறைச்சி மேற்பரப்பு தேர்ந்தெடுக்கும் போது கீழே அழுத்தவும், fossa உடனடியாக மீட்க வேண்டும், இல்லையெனில் அது பழைய வயது அடையாளம் இருக்கும் மற்றும் இது போன்ற இறைச்சி வாங்க மறுக்க நல்லது.
  • இறைச்சி வெட்டு பாருங்கள், அது புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்.
  • கடையில் மாட்டிறைச்சித் தேர்ந்தெடுக்கும்போது, ​​மூடிய தொகுப்புகளில் இறைச்சிக்கு முன்னுரிமை கொடுங்கள், ஏனெனில் இந்த விஷத்தினால் விஷத்தன்மை சாத்தியமற்றது. வெறுமனே ஒரு அரங்கில் பேக் மற்றும் பிளாஸ்டிக் மடக்கு மூடப்பட்டிருக்கும் என்று மாறுபாடுகள் விரைவில் darken மற்றும், எனவே, மோசமான.
உணவுக் காகிதம் அல்லது படலத்தில் மூடப்பட்டிருக்கும் உறைபனிக்கு மாட்டிறைச்சி.  இது முழு நாளையும் 4 நாட்களுக்கு மேல் சேர்ப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது, மற்றும் துண்டுகளாக வெட்ட 2 நாட்கள் மட்டுமே. துண்டு துண்தாக வெட்டிய இறைச்சியைப் பொறுத்தவரை, ஒரு நாளுக்குள் அதைப் பயன்படுத்துவது நல்லது.
நீங்கள் இறைச்சியை உறைய வைக்க விரும்பினால், முதலில் அதை ஒரு துண்டுடன் துண்டித்து, படம் 2 முறை மடிக்கவும். இந்த வழக்கில், முழு துண்டு அடுக்கம் வாழ்க்கை ஒரு ஆண்டு அதிகரிக்கிறது, மற்றும் பருப்பு மற்றும் துண்டு துண்தாக இறைச்சி வரை 4 மாதங்கள்.
மாட்டிறைச்சி புத்துணர்வை தீர்மானிக்க, நீங்கள் கவனமாக ஆராய்ந்து, வாசனை மற்றும் இறைச்சி தொட வேண்டும்.  புதிய மற்றும் உயர் தரமான மாட்டிறைச்சி முக்கிய பண்பு பின்வரும் அளவுகோல்களை அடிப்படையாக கொண்டது. வண்ணம் இருண்ட இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்து பழுப்பு நிற நிழல்களுக்கு மாறுகிறது. இறைச்சி வெட்டுகள் மீது விளிம்புகள் வராது.
நீங்கள் எலும்புகள் மற்றும் மூட்டுகளின் நிறம் மூலம் மாட்டிறைச்சி தரத்தை தீர்மானிக்கலாம். அவர்கள் வெள்ளை என்றால், அது இறைச்சி மிகவும் புதிய என்று அர்த்தம்.
மாட்டிறைச்சி கட்டமைப்பில் அடர்த்தியாக இருக்க வேண்டும், நீங்கள் இறைச்சி மீது அழுத்தி போது, ​​அது உடனடியாக அதன் முன்னாள் வடிவம் திரும்ப வேண்டும். நீங்கள் இறைச்சி உணர்ந்தால், அது ஒட்டும் இருக்க கூடாது. கொழுப்பு மென்மையாகவும், கிரீம் மிருதுவாகவும் உள்ளது.
மாட்டிறைச்சி வாசனை கிட்டத்தட்ட இல்லை, பால் நறுமணம் சிறிது உணர்ந்தேன்.
கூடுதலாக, மாட்டிறைச்சி மோசமடைந்துள்ளது என்பதைத் தீர்மானிக்க, பின்வருமாறு இருக்க முடியும். துண்டு துண்தாக இறைச்சிக்கு ஒரு சிறிய துண்டு இறைச்சியை அரைக்க வேண்டும், பின்னர் நூறு மில்லிலிட்டர்களை தண்ணீர் நிரப்ப வேண்டும், ஒரு மூடி கொண்டு கொள்கலன் மூடி, அடுப்பில் வைக்கவும் மற்றும் கொள்கலன் உள்ளடக்கங்களை எண்பது டிகிரி வெப்பம்.   நீங்கள் மூடி திறக்கும் போது, ​​நீங்கள் உடனடியாக ஒரு புளிப்பு வாசனை முகர்ந்தால், குழம்பு மேகமூட்டமாக மாறி, நீர் உருவாகி ஒரு பெரிய அளவு செதில்களாக, அதாவது மாட்டிறைச்சி மோசமடைந்துள்ளது என்று அர்த்தம்.
புதிய மாட்டிறைச்சி குழம்பு வெளிப்படையாக இருக்க வேண்டும், ஒரு இனிமையான வாசனை. உறைந்த மாட்டிறைச்சி சமையல் குழம்பு பயன்படுத்தப்படுகிறது என்றால், சிறிய அளவில் செதில்களாக குழம்பு அனுமதிக்கப்படுகிறது.

மாட்டிறைச்சி வேறுபடுத்தி எப்படி?

பழைய அளவுக்கு இளம் மாடுகளை இந்த அளவுகோல் மூலம் வேறுபடுத்துவது சாத்தியம்.  ஒரு இளம் விலங்கு ஒரு பணக்கார சிவப்பு நிறம் இறைச்சி உள்ளது, மற்றும் கொழுப்பு வெள்ளை. பழைய கொழுப்பு மஞ்சள் கொழுப்பு கொண்ட பர்கண்டி நிறம் கொண்டது. இறைச்சி பழையது என்று புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் உங்கள் விரலுடன் அதைக் கிளிக் செய்யலாம். பழைய மாட்டிறைச்சி குழி நீண்ட காலமாகவே இருக்கிறது, இளம் வயதினர் அதே வடிவத்தை உடனடியாக ஏற்றுக்கொள்கிறார்கள். இறைச்சி வாசனை மூலம் நடித்தார் முக்கிய பங்கு. பழைய மாட்டிறைச்சி சமையல் போது ஒரு விரும்பத்தகாத வாசனை உள்ளது, மற்றும் சமையல் போது, ​​இளம் சுவையை கிட்டத்தட்ட இல்லை.
வேறுபடுத்தி   மாட்டிறைச்சி வால்  தோற்றம், நிறம் மற்றும் மணம் ஆகியவற்றில் இருக்க முடியும்.   இறைச்சி இரண்டு வகைகளுக்கு இடையேயான வேறுபாடு, மாட்டிறைச்சி மட்டும் சிவப்பு நிறம் கொண்டது, மற்றும் வால் நிறம் நிறம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்து சிவப்பு நிற இளஞ்சிவப்பு நிறத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்து மாறுபடுகிறது.  மேலும் குறிப்பிடத்தக்க வேறுபாடு இறைச்சி அமைப்பு ஆகும். மாட்டிறைச்சி மிகவும் கடினமானது, தசைநாண்கள் மற்றும் படங்களின் முன்னிலையில், மற்றும் வால் மிகவும் மென்மையானது மற்றும் தசைநாண்கள் கொண்டிருக்காது. கூடுதலாக, பிந்தைய வகை இறைச்சி இனிப்பு-புளிப்பு மணம் இருப்பதைக் கொண்ட ஒரு பால் வாசனை உள்ளது. வியல், மாட்டிறைச்சி போலல்லாமல், கிட்டத்தட்ட கொழுப்பு இல்லை, அது இருந்தால், அது வெள்ளை. மாட்டிறைச்சி கொழுப்பு ஒரு இருண்ட வெள்ளை நிழல், சில நேரங்களில் மஞ்சள், ஆனால் இறைச்சி பழைய இருந்தால் இது.
வேறுபடுத்துவதற்கு மாட்டு இறைச்சி கடந்த நான்கு மாதங்களில் தானிய அல்லது புல் உணவை சாப்பிட்டு, சிறிது நேரம் கழித்து, மாமிசம் கொழுப்பு, மென்மையான மற்றும் தாகமாக, கொழுப்பு blotches வடிவத்தில் ஒரு பளிங்கு முறை உள்ளது என்று சாதாரணமாக இருந்து, நீங்கள் பளிங்கு இறைச்சி மட்டுமே இளம் கால்நடை பயன்படுத்தப்படுகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். மாட்டிறைச்சி இரண்டு வகையான இடையே உள்ள வேறுபாடு தயாரிப்பு விலை உள்ளது. பளிங்கு வழக்கமான விட அதிகமாக செலவாகும்.
வேறுபடுத்தி பன்றி இறைச்சி  மாட்டிறைச்சி பல அடிப்படைகளில் இருக்க முடியும். முதல், கடந்த, மாறாக இளஞ்சிவப்பு நிறம், கொழுப்பு முன்னிலையில். சமையல் போது, ​​மாட்டிறைச்சி அதன் நிழல் சாம்பல், மற்றும் பன்றி வெள்ளை மாறும். மேலும், இரண்டு வகை இறைச்சங்களுக்கும் இடையிலான வேறுபாடு சமையல் கருவில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. பன்றி இறைச்சி வறுக்கவும், மற்றும் மாட்டிறைச்சி மிகவும் பொருத்தமானது, ஏனெனில் இந்த தயாரிப்பு மிகவும் கடினமானது மற்றும் சமையல் நேரம் அதிக நேரம் தேவைப்படுகிறது. உறைந்த பன்றி எப்போதும் கொழுப்பு அடுக்குகள், மற்றும் மாட்டிறைச்சி கொண்ட இளஞ்சிவப்பு இருக்கும் - பர்கண்டி.
இருந்து மாட்டிறைச்சி வேறுபடுத்தி ஆட்டுக்குட்டி, நீங்கள் கவனமாக இறைச்சி இரண்டு வகையான தோற்றத்தை ஆராய வேண்டும். பிந்தைய, முதல் போலல்லாமல், marbling இல்லை, கொழுப்பு திசு கலப்பு இல்லை, மணமற்ற. சமையல் போது, ​​ஆட்டுக்குட்டி விட மாட்டிறைச்சி வாசனை, ஆனால் வேகவைத்த ஆட்டுக்குட்டி மிகவும் மோசமாக உள்ளது.
இருந்து மாட்டிறைச்சி வேறுபடுத்தி kenguryatiny  நிறம் மற்றும் கட்டமைப்பு மூலம் சாத்தியம். பிந்தைய உள்ள, இறைச்சி மிகவும் இருண்ட, கிட்டத்தட்ட செர்ரி நிற, எந்த கொழுப்பு நரம்புகள் உள்ளன, மட்டுமே தசைநாண்கள். மேலும், வித்தியாசமானது சுவைகளில் குறிப்பிடத்தக்கது. குங்குமப்பூவை விட மாட்டிறைச்சி குறைவான கூர்மையான வாசனை. கூடுதலாக, முதலாவது மிகவும் விலை உயர்ந்தது.
இருந்து மாட்டிறைச்சி வேறுபடுத்தி குதிரை இறைச்சி  நீங்கள் நிறம், வாசனை மற்றும் கொழுப்பு முடியும். பிந்தைய நிறம் மிகவும் அடர்த்தியானது, திறந்த வெளி ஊதா நிறத்தில் அல்லது பழுப்பு நிறத்தில் இறைச்சியில் தோன்றலாம், அங்கு எந்த தடையும் இல்லை. மாட்டிறைச்சி மெழுகுவர்த்தி மிகவும் கடினமானது மற்றும் விரைவில் உறைகிறது. குதிரை இறைச்சி உள்ள, கொழுப்பு மென்மையானது, நீங்கள் உங்கள் கைகளில் இறைச்சி வைத்திருந்தால் அது உடனடியாக உருக முடியும். பழைய குதிரை இறைச்சி ஒப்பிடும்போது பழைய குதிரை இறைச்சி, மிகவும் மோசமாக வாசனை, வாசனை சமையல் போது குறிப்பாக வலுவான உள்ளது.
இருந்து மாட்டிறைச்சி வேறுபடுத்தி நாய் இறைச்சி  மிகவும் கடினமான, ஆனால் இன்னும் வேறுபாடு உள்ளது. பிந்தையது மிகவும் நாகரீகமானது, அல்லாத கொழுப்பு, குறிப்பிட்ட வாசனை இல்லை மற்றும் முதல் போன்ற தாகமாக இல்லை.
கேள்வி: "எல்க் இறைச்சி மற்றும் மாட்டிறைச்சிக்கு இடையில் வேறுபாடு எப்படி?" என்ற கேள்விக்கு பலர் ஆர்வமாக உள்ளனர். மாட்டு இறைச்சி போல, மாட்டிறைச்சி போலல்லாமல் கடினமாகவும், உலர்ந்ததாகவும் உள்ளது. மேலும், முதல் ஒரு சர்க்கரைசார் மற்றும் intermuscular கொழுப்பு இல்லை, அது சிறுநீரகங்கள் அருகில் இன்னும் குவிந்து. எல்க் கொழுப்பு அடர்த்தியானது மற்றும் சமையல் போது அழுகிய இலைகள் மற்றும் காளான்கள் வாசனை பெறுகிறது.

பயனுள்ள பண்புகள்

உயர் தர இரும்பு மற்றும் புரதத்தின் இருப்பு காரணமாக, மாட்டிறைச்சி நன்மை பயக்கும் பண்புகள், ஆக்ஸிஜனைக் கொண்ட செல்களை நிரப்புவதற்கான திறனைக் கொண்டுள்ளன. இந்த குறிப்பாக, கொடுக்கப்பட்ட ஒரு சுறுசுறுப்பான வாழ்க்கை முறையையும் விளையாடுபவர்களையும் வழிநடத்தும் மக்களுக்கு இந்த வகையான மாமிசத்தைப் பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும்.
மாட்டிறைச்சி கலன்களைக் கொண்டுள்ளது, இது மூட்டுகளுக்கிடையே இருக்கும் தசைநார்களுக்கான முக்கிய கட்டிட பொருள் ஆகும்.
தசை மற்றும் வைட்டமின்கள் குழு பி உள்ளன, அவை தசை திசுக்கு தேவையானவை மற்றும் நரம்பு மண்டலத்தின் சாதாரண செயல்பாட்டிற்காக உள்ளன.
துத்தநாகம் இறைச்சியில் காணப்படுகிறது, இது நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் கொழுப்பு அமிலம் காரணமாக, மாட்டிறைச்சி நுகர்வு இரத்தத்தில் கொழுப்பின் அளவை ஒழுங்கமைக்கிறது. இரும்புச் சத்துள்ள உள்ளடக்கம், இத்தகைய இறைச்சி நுகர்வு இரத்த கலவையும் இரத்த ஒழுங்குமுறை செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. மாட்டிறைச்சி பெரிய அளவில் இதய அமைப்பு தேவையான பொட்டாசியம் உள்ளது. இறைச்சி மற்றும் அஸ்கார்பிக் அமிலம் உள்ளது, இது இரத்த நாளங்களின் சுவர்களை உறுதிப்படுத்துகிறது.
உடலில் உள்ள வளர்சிதை மாற்றத்தில் செயலில் ஈடுபடும் மாட்டிறைச்சி சல்பரில் ஒரு பகுதி. சோடியம் மற்றும் குளோரின் இருப்பதால், தண்ணீர் சமநிலை சாதாரணமானது மற்றும் உடல் வீக்கம் குறைகிறது.
இறைச்சி பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் - எலும்பு திசு மறுசீரமைப்பு மற்றும் வலுப்படுத்தும் ஈடுபட்டுள்ள தாதுக்கள் உள்ளன.
மாட்டிறைச்சி வைட்டமின் ஏயின் மற்றொரு பகுதியாக, காட்சிசார் நுண்ணுயிரிகளை மேம்படுத்துகிறது, மேலும் நொதிகளின் பகுதியாக இருக்கும் வைட்டமின் பி.பி.
இறைச்சி கலவை கொழுப்பு மிகவும் பிட் கொண்டுள்ளது என்பதால், அது ஒரு ஒல்லியான உணவு தயாரிப்பு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பொறுத்தவரை, எடை இழப்பு, உடல் பருமன் கொண்டவர்கள் ஆகியவற்றில் பாதுகாப்பாக அதை உட்கொள்ளலாம்.
மாட்டிறைச்சி ஒரு தாய்க்கு நல்லது. வேகவைத்த, சுண்டவைத்த அல்லது வேகவைத்த வடிவத்தில் இந்த இறைச்சி சாப்பிடுவதை வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர்.  மயோனைசே, மசாலா மற்றும் சாஸ் அனுமதி இல்லை. தாய்ப்பால் கொடுக்கும் போது, ​​வேகவைத்த மாட்டிறைச்சி பத்து நாட்களுக்குள் சுவை ஏற்படலாம். இந்த வழக்கில், நீங்கள் முதல் ஒரு சிறிய துண்டு இறைச்சி சாப்பிட மற்றும் இரண்டு நாட்களுக்கு குழந்தை நிலை கண்காணிக்க வேண்டும். குழந்தை நன்றாக இருந்தால், நீங்கள் மாட்டிறைச்சி சாப்பிட தொடரலாம். பரிந்துரைக்கப்பட்ட தினசரி விகிதம் அறுபது கிராமுக்கு மேல் இல்லை. காலப்போக்கில், மருந்தளவு அதிகரிக்கலாம். பிரசவத்திற்கு பிறகு ஆறு மாதங்கள் மட்டுமே சாப்பிடுவதற்கு ரோஸ்ட் மாட்டிறைச்சி அனுமதிக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு மாட்டிறைச்சி பயனுள்ளதாக இருக்கும். குழந்தை செயற்கை உணவு மீது இருந்தால், அது இறைச்சி ஏழு மாதங்களில் இருந்து தொடங்கலாம் என்று அர்த்தம். குழந்தை மார்பகப் பால் குடித்தால், பத்து மாதங்களுக்குப் பிறகு, மாட்டிறைச்சி சிறந்தது. முதன் முறையாக, அரை தேக்கரண்டியை விட சற்று குறைவான தேக்கரண்டி முயற்சி செய்ய வேண்டும். குழந்தை இருபத்தி நான்கு மணி நேரம் நன்றாக இருந்தால், தோல் அழற்சி, அரிப்பு, குடல் வருத்தம், பின்னர் அடுத்த நாள் நீங்கள் ஒரு தேநீர் ஸ்பூன் கொடுக்க முடியும் ஒவ்வாமை இல்லை.
ஹீமோகுளோபின் அதிகரிப்பதற்கு மாட்டிறைச்சி பயன்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் நீங்கள் ஒரு நூறு கிராம் சாப்பிட வேண்டும்.
காஸ்ட்ரோடிஸ் மாட்டிறைச்சி உண்ணும் போது, ​​அது ஒரு இளம் மிருகத்தின் மாமிசமாக இருந்தால் மட்டுமே.  மதிய உணவு இடைவேளையில் இறைச்சியை சாப்பிடுவதை டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள், இதனால் அது வேகமாகவும் வேகமாகவும் செரிமானமாகிறது. மாட்டிறைச்சி, கொதிக்கவைத்து அல்லது வேகவைத்த சாப்பிட அனுமதிக்கப்படுகிறது.
ஒரு வயிற்றுப் புழுவைக் கொல்லும் போது, ​​நோய் முழுமையான மனச்சோர்வின் போது மட்டுமே உண்ணலாம்.
மேலும், மாட்டிறைச்சி இரத்த சோகை மற்றும் கல்லீரல் நோய் இருக்க முடியும்.   வேகவைத்த அல்லது சுண்டவைத்த வடிவில் பயன்படுத்தவும்.
கணையம் கொண்டு, மாட்டிறைச்சி உண்ணலாம், ஆனால் ஒரு குறிப்பிட்ட தினசரி அளவைக் கவனிப்பதன் மூலம் மட்டுமே. நோயை அதிகரிக்கும்போது மற்றும் கடுமையான கணைய அழற்சி நோய்க்கு ஆட்பட்டால், இறைச்சி வேகவைக்கப்படுகிறது அல்லது வேக வைக்க வேண்டும், நாளொன்றுக்கு நூறு நூறு கிராம் சாப்பிடக்கூடாது. இரத்தம் சிந்தும்போது, ​​அது கொதிக்கவைக்கப்பட்ட, வேகவைக்கப்பட்ட அல்லது வேகவைத்த மாட்டிறைச்சி சாப்பிட அனுமதிக்கப்படுகிறது, ஆனால் ஒரு நாளைக்கு இருநூறு கிராம் அல்ல.
வயிற்றுப்போக்கு காரணமாக, மாட்டிறைச்சி துண்டு துண்தாக வெட்டப்பட்ட இறைச்சியுடன் துண்டு துண்டாக வெட்டவும், நீராவி வெட்டப்பட்டவற்றை சமைக்கவும் வேண்டும்.
கூடுதலாக, மாட்டிறைச்சி நீரிழிவு உண்ணலாம். சமையல் இறைச்சியை பரிந்துரைக்கிறோம் மற்றும் பல்வேறு மசாலா, ஒரே டேபிள் உப்பு மற்றும் மிளகு சேர்த்து.

சமையல் பயன்படுத்த

பல்வேறு நாடுகள் சமையல் செய்வதில் மாட்டிறைச்சி மிகவும் பிரபலமாக உள்ளது. அது அடிப்படையில், அவர்கள் பல்வேறு உணவுகள் நிறைய தயார். மாட்டிறைச்சி பல்வேறு சமையல் சிகிச்சையில் ஊற்றப்படலாம்: வறுக்கவும், குண்டு, கொதி, புகை, நீராவி மற்றும் கிரில். அவர்கள் தயாரிக்கப்படும் துண்டு துண்தாக வெட்டப்பட்ட இறைச்சி, மீட்பால்ஸை தயாரிப்பதற்காகவும், ராவிளி, பான்காக்களுக்காகவும் நிரப்பவும் பயன்படுத்தப்படுகிறது.
மாட்டிறைச்சி காய்கறிகள், காளான்கள், தானியங்கள், பழங்கள் மற்றும் பெர்ரி ஆகியவற்றோடு நன்றாக செல்கிறது. இது சிவப்பு ஒயின் கொண்டு இறைச்சி கலந்து பரிந்துரைக்கப்படுகிறது, இந்த மது பானம் கூட இறைச்சி மற்றும் stewing பயன்படுத்தலாம்.
மாட்டிறைச்சி சமையல் பல சமையல் உள்ளன: இடி உள்ள, மாவை, மசாலா, ரோல்ஸ், காய்கறிகள், பெர்ரி, வெவ்வேறு சாஸ் கீழ், காளான்கள். புதிய சுவையான உணவைப் பெறுவதன் மூலம், மாட்டிறைச்சி நீங்களே பரிசோதிக்கலாம்.
மாட்டிறைச்சி சுவையாகவும், மணம் நிறைந்த இறைச்சியாகவும் கருதப்பட்டாலும், மசாலாப் பொருள்கள் இல்லாமல் செய்ய வேண்டியது அவசியம்.  இந்த இறைச்சியை பல்வேறு வழிகளில் சமைக்க முடியும் என்பதால், ஒவ்வொரு உணவிற்கும் வெவ்வேறு மசாலா பயன்படுத்தப்படுகிறது.
கொதிக்கும் போது, ​​சாம்பல் போன்ற கொட்டைகள், கீரைகள், லாரல், மற்றும் மிளகுத்தூள் போன்ற குழம்புகளில் வைக்கப்படுகின்றன. இந்த மசாலா சமையல் இறைச்சி பயன்படுத்தப்படுகிறது, இது சாலடுகள் அல்லது துண்டுகள் செல்கிறது.
கர்ச்சோ சூப் தயாரிக்கப்பட்டு இருந்தால், சூடான மிளகு, பூண்டு மற்றும் ஹாப்ஸ்-சூனியலி ஆகியவற்றைச் சேர்க்கவும். ஹாப்ஸ்-சூரியீலிக்குப் பதிலாக, மிளகாய், செலரி, துளசி, வோக்கோசு, கொத்தமல்லி, லாவ்ருஷ்கா, மர்ஜோரம் மற்றும் புதினா ஆகியவற்றைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
வறுத்த இறைச்சிக்கு, அனுபவம் வாய்ந்த சமையல்காரர்கள் மாட்டிறைச்சி, வெங்காயம், முனிவர், பூண்டு, ரோஸ்மேரி, வெந்தயம், மசாலா, மர்ஜோரம், ஆரஞ்சா, பசில், மிளகாய், ரோஸ்மேரி போன்ற மாடுகளை எடுத்துக்கொள்வதை அறிவுறுத்துகிறார்கள்.
மாட்டிறைச்சி அணைக்க Thyme, வெங்காயம் மற்றும் மூலிகைகள் பயன்படுத்த சிறந்த உள்ளது.  இறைச்சி காய்கறிகள், தக்காளி ஆகியவற்றால் உண்ணப்பட்டால், அது மார்க்கோரம், ஆர்கனோ மற்றும் ரோஸ்மேரி ஆகியவற்றைச் சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. சில நேரங்களில் பாப்காரி, முனிவர், புதினா, ஹோசோப், கிராம்பு அல்லது ஆர்கனோ போன்றவை மாட்டிறைச்சி குண்டுகளில் வைக்கப்படுகின்றன.
முடிக்கப்பட்ட மாட்டிறைச்சி பூண்டு, சிவப்பு, புளிப்பு கிரீம் அல்லது வெள்ளை போன்ற சாஸ்கள் சேவை செய்யப்பட வேண்டும். மேலும், முடிக்கப்பட்ட இறைச்சி கடுகு, கெட்ச், சோயா சாஸ், பூண்டு, வெந்தயம் மற்றும் புளிப்பு கிரீம் கலவையை நன்றாக செல்கிறது.

சமையல் ரகசியங்கள்

மாட்டிறைச்சி சமையலில் அதன் சொந்த குணங்களை கொண்டுள்ளது, எனவே அத்தகைய இரகசியங்களை அறிந்து கொள்ள வேண்டும் போன்ற இறைச்சி ஒரு டிஷ் உருவாக்கும் போது:
  • நீங்கள் ஒரு தெளிவான குழம்பு பெற வேண்டும் என்றால், பின்னர் எலும்பு ஒரு எலும்பு கொண்டு, எடுத்துக்காட்டாக, humeral அல்லது scapular பகுதியை பயன்படுத்த. மார்பக முன்னால் - வெங்காயம் ஒரு துண்டு பிடியை தேர்வு.
  • நீங்கள் ஒரு ஷங்கிற்குத் தயாரிக்கத் தெரிவு செய்திருந்தால், நீண்ட காலமாக சமைத்திருப்பதை நினைவில் கொள்ளுங்கள், முதல் படிப்புகளுக்கு அதைப் பயன்படுத்த வேண்டாம்.
  • நீங்கள் இறைச்சி அணைக்க முடிவு செய்தால், சிறந்த விஷயம் brisket முன் வாங்க உள்ளது.
  • மாட்டிறைச்சி மிகவும் கடுமையான இறைச்சி, எனவே அது பல்வேறு marinades பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
  • சூடான மாட்டிறைச்சி கொண்டு, அரிசி, உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகளுக்கு சேவை செய்வது நல்லது, மற்றும் குளிர் சமைத்த இறைச்சி இனிப்பு சாஸ் மீது ஊற்ற நல்லது.
  • பணக்கார குழம்பு இறைச்சி குளிர்ந்த நீரில் சமைக்கப்பட வேண்டும். பொருட்கள் அதிகபட்ச அளவு காப்பாற்ற, இறைச்சி கொதிக்கும் நீரில் வைத்து சுமார் 1.5 மணி நேரம் சமைக்க வேண்டும்.
  • நீங்கள் அதன் மென்மையான சுவை பாதுகாக்க, இறைச்சி ஒரு ஒல்லியான துண்டு வாங்கி அதை உப்பு பன்றி இறைச்சி அதை nashpigovat அல்லது மடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
  • மாட்டிறைச்சி சமையல் முன், அது மாமிசத்தை அறையில் வெப்பநிலை என்று முன்கூட்டியே குளிர்சாதன பெட்டியில் வெளியே பெற பரிந்துரைக்கப்படுகிறது.
  • ஒரு ஊசி கொண்ட இறைச்சியை தயார் செய்வது சரிபார்க்க. மிளகாய்த்தூள் சாறு சிவப்பாக இருந்தால், இளஞ்சிவப்பு என்றால் இறைச்சி இரத்தம் கொண்டுவிடும் - வறுக்கப்படுகிறது சராசரியாக. தெளிவான சாறு நன்கு சமைத்த இறைச்சியைக் குறிக்கிறது.
  • சமையல் பிறகு, 10 நிமிடங்கள் இறைச்சி விட்டு அதனால் சாறுகள் சமமாக விநியோகிக்கப்படுகிறது, மற்றும் மட்டுமே வெட்டுவது.
"இறைச்சி வெட்ட எப்படி: சேர்ந்து அல்லது முழுவதும்?"   இந்த வழக்கில் வல்லுநர்கள் இழைகளின் மீது மாட்டிறைச்சி வெட்டுவதைக் குறைத்து பரிந்துரைக்கின்றனர் மற்றும் ஒரு இயக்கம் மட்டுமே.
மேலும், மாட்டிறைச்சி மென்மையாக இருக்க வேண்டும், அது சிறிது அடித்து நொறுக்கப்பட வேண்டிய பகுதிகள், வெட்டப்பட வேண்டும், பின்னர் கடுகுடன் ஒட்டியுள்ளது. இரண்டு மணி நேரம் கழித்து, இறைச்சி கழுவ வேண்டும்.
மாட்டிறைச்சி மென்மையாக்க, நீங்கள் பல நிரூபிக்கப்பட்ட முறைகள் பயன்படுத்த முடியும். முதல் விருப்பம், கப்பாப்ஸைச் சாப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் அமிலக் கலவையில், வெட்டப்பட்ட மாட்டிறைச்சி அடங்கியது. வினிகரை சேர்க்க வேண்டும்.
இறைச்சி juiciness மற்றும் மென்மை கொடுக்க மாட்டேன் இது மாட்டிறைச்சி, என்ற stewing போது புளிப்பு கிரீம் அல்லது மயோனைசே சேர்க்க முடியும். மற்ற சமையல்காரர்கள் மட்டும் சோடா சேர்க்க. இருப்பினும், இந்த முறையானது, உயர் சுவர்கள் கொண்ட கொள்கலன்களின் பயன்பாட்டை உள்ளடக்கியது, இது சூடாக இருக்கும் போது சமையல் சோடா கொதிக்க தொடங்குகிறது.
கூடுதலாக, நீங்கள் முதல் மாட்டிறைச்சி கொதிக்க, பின்னர் வறுக்கவும் முடியும். இந்த முறை இறைச்சிக்கு மென்மையாக இருப்பதற்கு உதவுகிறது.
இது ஒரு மென்மையாக்கியாக கிவி எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இதை செய்ய, மாட்டிறைச்சி துண்டுகளாக வெட்டி பின் உரிக்கப்படும் பழம் கலந்து. பதினைந்து நிமிடங்களில் இறைச்சி தயாரிப்பு பழம் இருந்து அகற்றப்பட்டு மேலும் தயாரிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இறைச்சி மென்மையாக செய்ய, மாட்டிறைச்சி முழுமையாக கீப்பிரில் நனைத்து, ஒரே இரவில் குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்.
  1. மது.  ஒரு ஆழமான கொள்கலனில் மாட்டிறைச்சி ஒரு துண்டு குறைக்க, முற்றிலும் சிவப்பு ஒயின் ஊற்ற, ரோஸ்மேரி மற்றும் thyme கொட்டும். ஒரு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் இறைச்சி கிண்ணத்தை வைத்து. முடிவில், மதுவிலிருந்து மாட்டிறைச்சி நீக்கி, சமைக்கத் தொடங்குங்கள்.
  2. கடுகு.  இந்த கடுகு கொண்டு மண்ணின் ஏராளமான உயவு தேவை, ஒரு கொள்கலன் வைத்து மணி ஒரு சில குளிர்சாதன பெட்டியில் அனுப்ப. பிறகு இறைச்சியை நீரில் கழுவி, மேலும் இனிப்பு உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டும்.
  3. பொட்டாசியம் கிருமி நாசினிகள் நீங்கள் ஒரு ஒளி இளஞ்சிவப்பு நிழல் ஒரு தீர்வு செய்ய வேண்டும், மாட்டிறைச்சி முக்குவதில்லை மற்றும் நூறு மற்றும் இருமுறை நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து. பிறகு, தண்ணீர் ஓட வேண்டும்.
  4. ரோமாஸ்கோவி குழம்பு. முதல், நீங்கள் சாமுவேலை அழிக்க வேண்டும், குழம்பு வடிகட்டி வேண்டும் பின்னர், கேக் விட்டொழிக்க வேண்டும். பின்னர், ஒரு சுத்தமான குழம்பு உள்ள, நீங்கள் மாட்டிறைச்சி குறைக்க வேண்டும், சில சர்க்கரை சேர்த்து அதை பற்றி இருபது நிமிடங்கள் நிற்க விடுங்கள். பின்னர் இறைச்சி உப்புநீரில் கழுவ வேண்டும்.
கொதிக்கும் உப்பு மாட்டிறைச்சி பத்து நிமிடங்கள் சமையல் முடிவதற்கு முன் இருக்க வேண்டும். இறைச்சி இறைச்சி மீது கொதிக்கவைத்து இருந்தால், குழம்பு சமையல் ஆரம்பத்தில் உப்பு வேண்டும்.
இறைச்சி தயார் செய்யும் போது, ​​மாட்டிறைச்சி பதினைந்து நிமிடங்கள் உப்பு சேர்க்கப்பட வேண்டும்.
வறுத்த போது, ​​மாட்டிறைச்சி இறைச்சியில் ஒரு பொன் மேலோடு தோன்றும்போது, ​​மிகவும் முடிவில் உப்பு நன்றாக இருக்கிறது. வெட்டுவது வறுத்திருந்தால், இறைச்சி சமையல் ஆரம்பத்தில் உப்பு சேர்க்க வேண்டும்.
மாட்டிறைச்சி தயார் செய்ய தீர்மானிக்க, நீங்கள் ஒரு கூர்மையான கத்தி எடுத்து தங்கள் இறைச்சி துளை வேண்டும். துண்டு துண்டில் தளத்தில் தெளிவான சாறு தோன்றினால், மாட்டிறைச்சி தயார்.  சாறு மழையாக இருந்தால், அது இறைச்சியை இன்னும் சமைக்கவில்லை அல்லது முழுமையாக சமைக்கவில்லை என்பதை இது குறிக்கிறது.
கீழே ஒரு மென்மையான மாட்டிறைச்சி சமைக்க எப்படி ஒரு வீடியோ உள்ளது.

வம்பு எப்படி?

உலர் மற்றும் உப்புகளில்: மாட்டிறைச்சி இரண்டு எளிய வழிகளில் உலர முடியும்.  மேலும் ஒவ்வொரு விருப்பத்தையும் கருத்தில் கொள்ளுங்கள்.
ஒரு உலர்ந்த வழியில் மாட்டிறைச்சி வாடி, நீங்கள் முதலில் ஒரு கப் மாட்டிறைச்சி tenderloin எடுத்து கொள்ள வேண்டும், நன்றாக சுத்தம், கொழுப்பு துண்டித்து, தசைநார்கள், படம், பின்னர் நன்றாக இறைச்சி காய. இப்போது ஒரு கிலோகிராம் உப்பு மூன்று மிளகு தூள் மிளகாய் சேர்த்து கலக்க வேண்டும். பின்னர், மிளகு-உப்பு கலவையில் பாதியளவு ஆழமான கொள்கலனில் ஊற்றவும், மாட்டிறைச்சி முறித்து, கலவையின் மீதமுள்ள பாதியில் மூடவும். களிமண் படத்தொகுப்புடன் ஒட்டிக்கொண்டு இருபத்தி நான்கு மணிநேரம் குளிர்சாதனப்பெட்டருக்கு அனுப்புங்கள். இப்போது நீங்கள் வீட்டில் மாட்டிறைச்சி sulk எந்த பல்வேறு மணம் மசாலா, ஒரு கலவை சமைக்க வேண்டும். பூண்டு மிளகாய் மற்றும் தேங்காய் மூலிகைகள் ஒரு தேக்கரண்டி மூன்று தேக்கரண்டி உலர்ந்த பூண்டு ஒரு தேக்கரண்டி குழப்பு அவசியம். மசாலா கலந்த கலவை அனைத்து இறைச்சியையும் தேய்க்க வேண்டும். அடுத்து, மாட்டிறைச்சி tenderloin பல அடுக்குகள் மடித்து துணி துணி மூடப்பட்டிருக்கும், பின்னர் எந்த கயிறு கட்டப்பட்ட மற்றும் சரியாக பதினான்கு நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்து. அதே நேரத்தில், மூன்று முறை ஒரு நாள், இறைச்சி மாறிவிட வேண்டும். வீட்டில் பதினான்கு நாட்கள் உலர்ந்த மாட்டிறைச்சி பயன்படுத்த தயாராக உள்ளது.
மாட்டிறைச்சி உலர மற்றொரு வழி உப்பு இறைச்சி ஊறவைத்தல் ஈடுபடுத்துகிறது. முதல் நீங்கள் ஒரு மாட்டிறைச்சி tenderloin தயாரிக்க வேண்டும்: கழுவு, உலர், கொழுப்பு மற்றும் படம் நீக்க. பின் உப்பு உப்பு தயாரிக்க வேண்டும்: இரண்டு லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து, அறுபது டிகிரி வரை, பின் 200 கிராம் சோடியம் குளோரைடு ஒரு தேக்கரண்டி போட்டு உப்பு கரைத்து வைக்கவும். இப்போது நீங்கள் மூல முட்டையை கரைக்க வேண்டும். அது மிதக்கும் என்றால், நீங்கள் உறிஞ்சும் கட்டத்தை (முட்டை அகற்ற வேண்டும்) தொடங்கலாம். உப்பு கரைசலில் மாட்டிறைச்சி tenderloin துண்டுகளை போட்டு, திரவ குளிர்ந்து வரை காத்திருந்து, பின்னர் இருபத்தி நான்கு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் இறைச்சி பரிமாற்ற. ஒரு நாள் கழித்து, மாட்டிறைச்சி உப்பு கரைசலில் இருந்து நீக்கப்பட வேண்டும், ஒரு மர பலகையில் வைக்கவும், இறைச்சியின் கீழே ஒரு ஸ்பூன் வைத்து, மீதமுள்ள திரவத்தை வெளியேற்றுவதற்கு இறைச்சி மீது அழுத்தத்தை வைக்கவும். சில மணி நேரம் கழித்து ஒடுக்குதலால் நீக்கப்படலாம். இப்போது நீங்கள் உலர்ந்த பூண்டு அதே அளவு மற்றும் தரையில் மிளகு ஒரு டீஸ்பூன் கொண்டு, தரையில் மிளகுத்தூள் ஒரு தேக்கரண்டி ஒரு கடுகு பவுடர் ஒரு தேக்கரண்டி கலந்து மூலம் ஒரு காரமான கலவை செய்ய வேண்டும்.   தயார் சாப்பிடுவதன் மூலம், மாட்டிறைச்சி tenderloin தேய்க்க, பின்னர் துணி துணி கொண்டு இறைச்சி போர்த்தி, ஒரு கயிறு கட்டி பதினான்கு நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைக்கிறேன்.

சுட்டுக்கொள்ள எப்படி?

நீங்கள் அடுப்பில் மட்டுமல்ல, மெதுவாக குக்கரில் மாட்டிறைச்சி சுடலாம்.  அடுப்பில் தயாரிப்பு சுட்டுக்கொள்ள, நாம் படலம், ஒரு ஸ்லீவ், ஒரு பேக்கிங் பை, அதே போல் ஒரு பானை பயன்படுத்தி பரிந்துரைக்கிறோம். மாட்டிறைச்சி ஒரு துண்டு அல்லது துண்டுகளாக சமைக்க முடியும்.
எனவே, அடுப்பில் ஜூசி மாட்டிறைச்சி சுட்டுக்கொள்ள, நீங்கள் இறைச்சி இறைச்சி தேவைப்படும். நீங்கள் கடுகு தேக்கரண்டி, சோயா சாஸ் ஐந்து தேக்கரண்டி, அரிசி வினிகர் மற்றும் ஆலிவ் எண்ணெய் இரண்டு தேக்கரண்டி, மற்றும் நான்கு தரையில் பூண்டு கிராம்பு இணைக்க வேண்டும். சமைத்த கலவையை போட்டு மாட்டு இறைச்சி துண்டுகளாக நறுக்கி, 40 நிமிடங்கள் துடைக்கவும். இப்போது வேகவைத்த கேரட்டுகளுடன் வெங்காயம் சேர்த்து வறுக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து, சுமார் இரண்டு நிமிடங்கள் வறுக்கவும் வறுக்கவும் இனிப்பு மிளகு சேர்த்து. ஊறுகாய்காற்று துண்டுகள் கூட எண்ணெய் சேர்த்து இல்லாமல் ஒரு மசால் வறுத்த வறுத்த வேண்டும். வறுத்த காய்கறிகள் ஒரு பேக்கிங் தாள் மீது தீட்டப்பட்டது பின்னர், மேல் இறைச்சி வைத்து நீர் ஒரு தேக்கரண்டி சேர்த்து, முன்னர் தயாரிக்கப்பட்ட இறைச்சி ஊற்ற. ஒரு அடுப்பில் பேக்கிங் தட்டில் வைக்கவும், சுமார் இருபது நிமிடங்களுக்கு நூறு எண்பது டிகிரிக்கு முன்னதாகவே தயாரிக்கவும்.   பின்னர் தேங்காய் துருவல் (100 கிராம் தேவை), தெளிக்கப்பட்ட துளசி மற்றும் கொத்தமல்லி சேர்த்து தெளிக்கவும், பத்து நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும்.
நீங்கள் மாட்டிறைச்சி எடுக்காவிட்டால், இறைச்சி குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் சுட வேண்டும், வெப்பநிலை (இருபதுக்கும் மேலாக அல்ல). மாட்டிறைச்சி ஒரு ஸ்லீவ் சுடப்பட்டால், படலம், பேக்கிங் நேரம் இருநூறு இருபது டிகிரி வெப்பநிலையில் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் எடுக்கும்.
நீங்கள் அடுப்பில் பளிங்கு மாடுகளை சுடலாம்.  இதை செய்ய, இரண்டரை கிலோகிராம் கலந்த இறைச்சியை எடுத்து, தண்ணீரை ஓட்டினால், அதை காய வைத்து, அதை நூல்களுடன் போர்த்தி விடுங்கள். பின்னர் கோதுமை ஆலிவ் எண்ணெயுடன் மாட்டிறைச்சி (மூன்று தேக்கரண்டி தேவைப்படும்) உங்களுக்கு பிடித்த வாசனைகளுடன் தேய்க்க வேண்டும். பன்னிரண்டு நிமிடங்களுக்கு அடுப்பில் ஒரு பேக்கிங் தாள் மற்றும் இடையில் பளிங்கு மாட்டு வைத்து, அடுப்பில் இருநூறு டிகிரி வெப்பம். நேரம் முடிந்தவுடன், இறைச்சி படலம் கொண்டு மூடப்பட்டிருக்கும், அடுப்பில் வெப்பநிலை நூறு அறுபது டிகிரி வரை குறைக்கப்பட வேண்டும், மேலும் மாட்டிறைச்சி சுட்டுக்கொள்ளவும் இரண்டு மணி நேரம் மீண்டும் அனுப்பப்பட வேண்டும்.   வேகவைத்த marbled மாட்டிறைச்சி மிகவும் தாகமாக மற்றும் மென்மையான உள்ளது.
மெதுவாக குக்கரில் சுட்டுக்கொள்வது மிகவும் எளிது. இது ஒரு அரை கிலோகிராம் மாட்டிறைச்சி மென்மையாய் எடுத்துக் கொள்ள வேண்டும், நன்கு வறண்டு துடைக்கவும். பின்னர் உப்பு, கருப்பு மிளகு மற்றும் தரையில் இத்தாலிய மூலிகைகள் கலவையை ஒரு சிட்டிகை கொண்டு ஆலிவ் எண்ணெய் சுமார் 50 milliliters கலந்து. இந்த சாஸ் இறைச்சி தடவப்பட்ட மற்றும் பத்து நிமிடங்கள் ஊற விட வேண்டும். அடுத்து, ஒரு மின் பயன்பாட்டிற்கான சிறப்பு கொள்கலன் ஆலிவ் எண்ணெயுடன் ஒட்டப்பட்டு, "பேக்கிங்" திட்டம் உட்பட, ஒரு மாட்டிறைச்சி துண்டு போட வேண்டும், ஒரு மணி நேரம் மற்றும் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் டைமர் அமைக்க. அறுபது நிமிடங்கள் கழித்து, மாமிசத்தை மறுபக்கமாக மாற்ற வேண்டும் மற்றும் பேக்கிங் தொடர வேண்டும்.   மாட்டிறைச்சி தயார் செய்தவுடன், இன்னொரு இருபது நிமிடங்களுக்கு படுத்துக்கொள்ளுங்கள், பிறகு அதை வெட்டிவிடலாம்..

எப்படி உறிஞ்சுவது?

வீட்டில் மாட்டிறைச்சி மாட்டிறைச்சி எளிது. நீங்கள் இறைச்சி எடுத்து (இந்த நோக்கத்திற்காக, சுமை நன்றாக உள்ளது), முற்றிலும் அதை சுத்தம், அதை காய மற்றும் இரண்டு சென்டிமீட்டர் தொலைவில் ஆழமான punctures செய்ய. பின்னர், இரண்டு டேபிள் ஸ்பூன் கிரானுட் செய்யப்பட்ட சர்க்கரைக் கொண்டு முட்டைகளை தடவி, முத்திரையிடப்பட்ட பையில் வைத்து, நாற்பது எட்டு மணி நேரத்திற்கு குளிர்சாதன பெட்டியில் அனுப்புங்கள். இந்த இரண்டு நாட்களில், இறைச்சி பல முறை திரும்ப வேண்டும். அடுத்து ஒரு நறுமண கலவை செய்ய வேண்டும். மூன்று தேக்கரண்டி கடல் உப்பு சேர்த்து ஒரு தேக்கரண்டி தேக்கரண்டி, 1/3 தேக்கரண்டி தேங்காய் துருவல் மற்றும் 1/4 தேக்கரண்டி ஜூனிபர் பெர்ரி. தேவையான பொருட்கள் கவனமாக நசுக்க மற்றும் கலந்து, பின்னர் nitrite பதினெட்டு கிராம் இல்லை ஊற்ற. இதன் விளைவாக கலவையை மாட்டிறைச்சி கோப்பை தேய்க்க வேண்டும், பின்னர் ஒரு சீல் பையில் இறைச்சி மீண்டும் நுழைக்க மற்றும் சரியாக ஆறு நாட்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்து. பின்னர், மாட்டிறைச்சி பையில் இருந்து நீக்கப்பட வேண்டும், தண்ணீர் இயங்கும் கீழ் rinsed, சுமார் இரண்டு மணி நேரம் படுத்து அனுமதி, பின்னர் கொள்கலன் போட்டு, புதிய கொழுப்பு ஐம்பது கிராம் கொண்டு தூவி, துண்டுகளாக வெட்டி, நூறு மில்லிலிட்டர்கள் தண்ணீர் பற்றி ஊற்ற, ஒரு படலம் மற்றும் ஒரு மூடி கொண்டு மூடி. ஒரு நூறு ஐம்பது டிகிரி preheated அடுப்பில் செய்ய எலுமிச்சை அனுப்ப. பேக்கிங் நேரம் இறைச்சி எடை பொறுத்தது. மாட்டிறைச்சி ஒரு கிலோகிராம் எடையுள்ளதாக இருந்தால், தயாராக இருக்க ஒரு மணிநேரம் மற்றும் ஒரு அரை எடுக்கும். கோப்பை சமைத்தவுடன், மூடி திறக்காமல் மற்றும் படலத்தை அகற்றாமல் சுமார் மூன்று மணி நேரம் அது குளிர்ச்சியாக இருக்கட்டும். பின்னர், மாட்டிறைச்சி மெழுகு காகித மூடப்பட்டிருக்கும், குளிர்சாதன பெட்டியில் வைத்து, மற்றும் அடக்குமுறை மேல் வைத்து.   இந்த வடிவத்தில், இறைச்சி ஒரு நாள் பொய் சொல்ல வேண்டும்.  பின்னர் உப்பு போட்டு தயாரிக்க தயாராக இருக்க வேண்டும்.

வறுக்கவும் எப்படி?

மிளகாய் மற்றும் மென்மையான, எளிமையான ஒரு பாத்திரத்தில் மாட்டிறைச்சி வறுக்கவும்.  முக்கிய விஷயம் வறுத்த இறைச்சி தயாரித்தல் ஒரு சில விதிகளை அறிய உள்ளது. மாட்டிறைச்சி நன்கு கழுவி, உலர்ந்த, நீக்கப்பட்ட மற்றும் கொழுப்பு நீக்கப்பட வேண்டும். நீங்கள் மாட்டிறைச்சி stroganoff அல்லது சிறிய மாட்டிறைச்சி துண்டுகள் தேவை என்று மற்றொரு உணவு சமைக்க வேண்டும் என்றால், இறைச்சி இழைகள் சேர்த்து வெட்டி. ஸ்டீக்ஸ், ஸ்டீக்ஸ், மெடாலியன்ஸ் சமைத்திருந்தால், தானியங்கள் முழுவதும் மாட்டிறைச்சி வெட்டப்பட வேண்டும்.
வறுத்த மாட்டு இறைச்சி வறுக்கவும், வெண்ணெய் ஒரு மிக சூடான பான் இருக்க வேண்டும் இறைச்சி துண்டுகள் அவுட் இடுகின்றன. முதல், மாட்டிறைச்சி இறைச்சி ஒரு உன்னதமான மேலோடு தோன்றும் வரை, தொடர்ந்து கிளறி கொண்டு சுமார் ஐந்து நிமிடங்கள் அதிக வெப்ப மீது வறுத்த. பின்னர், தீ, 15 நிமிடங்கள் குறைக்க மற்றும் வறுத்த இறைச்சி வேண்டும்.. பின்னர் மாட்டிறைச்சி படலத்தில் மூடப்பட்டிருக்கும், அது ஐந்து நிமிடங்கள் வரை ஊறவைக்கட்டும். நீங்கள் மேஜையில் டிஷ் வைக்க முடியும்.
பளிங்கு மாட்டு இறைச்சி மிகவும் எளிது. கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றவும், நொறுக்கப்பட்ட பூண்டு சேர்க்கவும் (எந்த புருவங்களை நீக்க வேண்டும்) மற்றும் ரோஸ்மேரி கிளைகள். இருபது நிமிடங்கள் கழித்து, ரோஸ்மேரி கொண்ட பூண்டு அகற்றப்பட்டு marfled மாட்டிறைச்சி இருந்து ஒரு வறுக்கப்படுகிறது பான் (முன் வெப்பமூட்டும்) உப்பு மற்றும் peppered steaks வைக்க வேண்டும்.   ஒவ்வொரு பக்கமும் இரண்டு நிமிடங்களுக்கு மேல் வராது.  பிறகு, பிடுங்குவதற்கு தேவையான பற்றவைத்து, பத்து நிமிடங்களுக்கு ஒரு மூடி கொண்டு சூடாகவும், மூடி வைத்து மூடி வைக்கவும்.

எப்படி வெளியே போட வேண்டும்?

பல வழிகளில் மாட்டிறைச்சி அணைக்க இது சாத்தியம்: ஒரு வறுக்கப்படுகிறது பான், ஒரு அடுப்பில், ஒரு cauldron, ஒரு மெதுவான குக்கர், ஒரு நீண்ட கை கொண்ட உலோக கலம் உள்ள.  ஆனால் எந்தவொரு முறையும் தயாரிப்பின் அதே கொள்கையைத்தான் குறிக்கிறது. மாட்டிறைச்சி குண்டு மென்மையாக இருந்தது, இறைச்சி சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். அடுத்து, க்யூப்ஸ் மீது வெங்காயம் வெங்காயம் வெட்டி, கேரட் தட்டி மற்றும் பூண்டு இரண்டு கிராம்பு அறுப்பேன். தங்கப் பழுப்பு வரை வறுத்த காய்கறிகள், பின்னர் இறைச்சி மாறும் வரை அதிகமான வெப்பத்தில் மாட்டிறைச்சி துண்டுகள் சேர்க்கவும். பின்னர் நீங்கள் கொஞ்சம் தண்ணீர் சேர்க்க வேண்டும், தக்காளி விழுது மூன்று தேக்கரண்டி, நன்றாக அசை மற்றும் ஒரு கொதி நிலைக்கு கொண்டு. திரவ கொதித்தது போது, ​​தீ குறைந்தபட்சமாக குறைக்க வேண்டும், ஒரு மூடி கொண்டு பான் அல்லது பான் மறைக்க மற்றும் ஒரு அரை மணி நேரம் இறைச்சி வறுக்கவும்.   மாட்டிறைச்சி சமையல் முடிவதற்கு ஒரு சில நிமிடங்கள் முன் பருப்பு கீரைகள் வைக்க வேண்டும்.
அடுப்பில் மாட்டிறைச்சிக்கு, முதலில் இறைச்சி ஒரு சிவப்பு மேலோடு இருக்கும்வரை, அதிக வெப்பத்தில் மாட்டிறைச்சி துண்டுகள் (வறுக்கப்படுவதற்கு முன், உப்பு, மிளகு, பின்னர் மிளகாய் போட்டு வதக்கவும்). அரை மோதிரங்களாக வெங்காயம் விளக்கை வெட்டுவது, ஐந்து நிமிடங்கள் தங்க பழுப்பு வரை ஒரு grater மற்றும் வறுக்கவும் கொண்ட கேரட் அறுப்பேன், பின்னர் சுமார் நான்கு நிமிடங்கள் தக்காளி மற்றும் வறுக்கவும் சேர்க்க வேண்டும்: நீங்கள் வறுக்கவும் வேண்டும். பின்னர், ஒரு பேக்கிங் தாள் மீது காய்கறிகள் பாதி வைத்து, மேல் மாட்டிறைச்சி துண்டுகள் வைத்து, பின்னர் zazharki, lavrushka, allspice மற்ற வெளியே போட்டு மற்றும் சில தண்ணீர் அதை ஊற்ற. குறைந்தபட்சம் ஒரு ஒன்றரை மணி நேரம் அடுப்பில் மற்றும் காய்கறிகளுடன் கூடிய பன்றி இறைச்சியில் வைக்கப்படும் பேக்கிங் தட்டு.
பின் மெதுவாக குக்கரில் மாட்டிறைச்சி அடுக்கி வைக்கவும். ஒரு கிலோகிராம் மாட்டிறைச்சி துண்டுகளாக வெட்டப்பட்டது. பயன்பாட்டிற்கான ஒரு சிறப்பு கொள்கலன் சூரியகாந்தி எண்ணெய் மூன்று தேக்கரண்டி சேர்ப்பேன் மற்றும் திட்டம் "வறுக்கப்படுகிறது" உட்பட, இறைச்சி துண்டுகள் வைத்து பத்து நிமிடங்கள் நேர அமைக்க. இறைச்சி அவ்வப்போது தலையிட வேண்டும். பின்னர், மாட்டிறைச்சி துண்டுகள் சில நீர் கொண்டு கழுவ வேண்டும், பின்னர் மெதுவாக குக்கர் மீண்டும் வைத்து, முற்றிலும் தண்ணீர் நிரப்ப, உலர் cilantro, உப்பு மற்றும் கருப்பு மிளகு ஒரு டீஸ்பூன் உள்ள ஊற்ற மற்றும் இரண்டு மற்றும் ஒரு அரை மணி நேரம் டைமர் அமைக்க, "களைச்செடி" திட்டம் மீது திரும்ப.   சமையல் முடிவதற்கு முன்பே முப்பத்தைந்து நிமிடங்கள் கழித்து வெங்காயம் மற்றும் கேரட் ஆகியவற்றைச் சாப்பிடுங்கள்.
இது பளிங்கு மாடுகளை அணைப்பதும், வழக்கம் போலவும் அமையும். இறைச்சி மற்றும் காய்கறிகள் வறுத்த போது, ​​அவர்கள் சுமார் 40 நிமிடங்கள் குறைந்த வெப்பத்தில் ஒரு cauldron, உப்பு, மிளகு மற்றும் குண்டு வைக்க வேண்டும்.
என்று குழந்தைக்கு மாட்டிறைச்சி போடு, நீங்கள் மாட்டிறைச்சி tenderloin சுமார் ஐந்து நூறு கிராம் எடுக்க வேண்டும், நன்கு துவைக்க, உலர், தட்டுகள் வெட்டி கவனமாக துண்டித்து, அதனால் இறைச்சி மெல்லிய என்று. பின்னர் துண்டுகள் ஒரு வறுக்கப்படுகிறது பான், உப்பு மற்றும் இருபுறமும் வறுக்கவும் (ஒரு பக்க ஒவ்வொரு பக்கத்தில் தேவை) தீட்டப்பட்டது வேண்டும். அடுத்து, வெந்தயத்தில் ஒரு மாட்டிறைச்சி துண்டுகளை வைத்து, ஐம்பது கிராம் வெண்ணெய் சேர்த்து, ஒரு சிறிய மற்றும் குண்டு தண்ணீரில் அறுபது நிமிடங்களுக்கு மூடி மூடி மூடி வைக்கவும்.

எப்படி சமைக்க வேண்டும்?

ருசியான மாவை சமைக்க, ஒரு ஆழமான கொள்கலனில் சிறிது தண்ணீரை ஊற்றவும் (ஒன்றரை லிட்டர் இறைச்சி ஒரு கிலோ இறைச்சி தேவை) மற்றும் கொதிகும்.  திரவ கொதிக்க தொடங்கும் போது, ​​பருப்பு காய்கறிகள் (வோக்கோசு, கேரட் மற்றும் வெங்காயம்) சேர்க்க, பின்னர் தண்ணீர் மாட்டிறைச்சி குறைக்க. திரவ மீண்டும் வேகவைக்கப்பட்டு, உருகிய நுரை நீக்க. குறைந்தபட்சம் தீவை தீர்த்துக்கொள்ளவும், சமைக்கும் வரை இறைச்சி கொதிக்கவும். சமையல் முடிவில், மாட்டிறைச்சி உப்பு சேர்க்கப்பட வேண்டும்.
ஒரு மெதுவான குக்கரில் மென்மையான மற்றும் தாகமாக மாட்டிறைச்சி சமைக்க, நீங்கள் இறைச்சியை முழுமையாக துவைக்க வேண்டும், படம் நீக்கவும், கொழுப்பு, பயன்பாட்டின் அதை வைத்து தண்ணீர் நிரப்ப வேண்டும். முறை "கஞ்சி" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். போது திரவ கொதித்தது, நீங்கள் தோன்றும் நுரை நீக்க வேண்டும். சமையல் முடிவில் உப்பு. மென்மையான வரை மாட்டிறைச்சி சமைக்கப்படுகிறது.
பிரஷர் குக்கரில் சமையல் மாட்டிறைச்சி எளிது. இதை செய்ய, சமையல் கருவிக்கு இறைச்சி குறைக்க, அதை தண்ணீர் நிரப்ப மற்றும் அதை கொதிக்க. விரைவில் திரவ கொதித்தது, அது நுரை நீக்க மற்றும் ஐம்பது நிமிடங்கள் மூடப்பட்டது மூடி கீழ் மாட்டிறைச்சி கொதிக்க அவசியம்.

உலர் எப்படி?

வீட்டில் உலர்த்திய மாட்டிறைச்சி கடினம் அல்ல, ஆனால் ஒரு சிறப்பு உலர்த்தி தேவைப்படுகிறது.தண்ணீரை ஓட்டி, இரண்டு கிலோகிராம் இறைச்சியை கழுவி, உலர், மெல்லிய துண்டுகளாக வெட்டி ஆழமான கிண்ணத்தில் மடக்கி விடவும். ஒரு தனி கொள்கலனில் மாட்டிறைச்சிக்கு இறைச்சி தயாரிக்கப்பட வேண்டும். இது ஐம்பது மில்லிலிட்டர்கள் சோயா சாஸ், உப்பு இரண்டு தேக்கரண்டி மற்றும் தரையில் மிளகு, ஒரு தேக்கரண்டி சர்க்கரை, lavrushka மற்றும் உலர்ந்த மூலிகைகள் ஒரு சிட்டிகை கலவையை கலந்து வேண்டும். கொதிக்கும் நீரில் நூறு மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றவும். மாட்டிறைச்சி மீது இறைச்சி ஊற்ற, அதை முற்றிலும் அசை, கொள்கலன் ஒரு தட்டில் வைத்து அது முற்றிலும் இறைச்சி உள்ளடக்கியது, மற்றும் குளிர்சாதன பெட்டியில் எடுத்து, மூன்று நாட்கள் அதை விட்டு. பின்னர், மாட்டிறைச்சி துண்டுகள் ஒரு காகித துண்டு துடைத்து மற்றும் உலர்த்தி மீது வைக்க வேண்டும், எழுபது டிகிரி வெப்பநிலை அமைக்க. இருபத்தி நான்கு மணி நேரம் உலர்ந்த மாட்டிறைச்சி.  ஆனால் மற்றொரு நாள் கடந்து சென்றால் மட்டுமே அது சோதிக்கப்பட முடியும்.

எப்படி சமாளிக்க வேண்டும்?

கிரெயில் மீது கப்பாப் மாட்டு வண்டியை இந்த வழிமுறையாக பயன்படுத்தலாம்.  சிறிய துண்டுகளாக இறைச்சி வெட்டவும், உப்பு மற்றும் மிளகு (உன்னுடையது போல) சேர்த்து, கொத்தமல்லி மற்றும் உன்னுடைய நறுமணப் பொருள்கள் ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் வெங்காயம் (ஒரு கிலோகிராம் தேவைப்படும்), அரை வெண்ணிலா வெட்டு, சூரியகாந்தி எண்ணெய் சுமார் ஐந்து நூறு milliliters உள்ள ஊற்ற, நன்றாக கலந்து மற்றும் பன்னிரண்டு மணி நேரம் marinate செய்ய குளிர்சாதன பெட்டியில் அனுப்ப.
அடுப்பில் பேக்கிங் செய்ய மாட்டிறைச்சிக்குச் சமைக்க, உப்பு மற்றும் கருப்பு மிளகு (நீங்கள் ஒரு தேக்கரண்டி வேண்டும்) இறைச்சி ஒரு துண்டு தேய்க்க வேண்டும். அடுத்து, நீங்கள் கடுகு, நான்கு நில பூண்டு கிராம்பு மற்றும் ஒரு நூறு milliliters வண்ண நீர் தேக்கரண்டி ஒரு ஜோடி இணைப்பதன் ஒரு இறைச்சி செய்ய வேண்டும். சமைத்த இறைச்சி இறைச்சி மற்றும் இருபத்தி நான்கு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து.
அனுபவம் வாய்ந்த சமையல்காரர்கள் இந்த வழியில் வறுத்தெடுப்பதற்காக மாட்டிறைச்சி சாப்பிடுவதை அறிவுறுத்துகிறார்கள். இறைச்சிக்காக, நீங்கள் எழுபது இலட்சம் சோலை சாஸ் சாஸ், முப்பது மில்லி விற்றர் வினிகர், அறுபது மில்லி லிட்டர் ஆலிவ் எண்ணெய், உப்பு மற்றும் கருப்பு மிளகு சுவை மற்றும் இருநூறு ஐம்பது கிராம் வெங்காயம் ஆகியவற்றை அரை கோழியுடன் வெட்ட வேண்டும். ஒரு சமைத்த கலவையில், மாட்டிறைச்சி ஊற வைத்து, பதினைந்து நிமிடங்கள் அதை marinate அனுமதிக்க. இறைச்சி பொறித்த பின்
மிருதுவான மிருதுவான மற்றும் மிதமான தழும்புகளை தயாரிப்பதற்கு, இந்த செய்முறையின் படி இறைச்சியை இறைச்சிக்காக பரிந்துரைக்க வேண்டும். ஒரு கிலோ இறைச்சி வெட்டப்பட்ட காய்கறிகள் (கேரட் மற்றும் வெங்காயம்) கலந்த கலவையாகும். இப்போது நீங்கள் ஒரு marinade செய்ய வேண்டும். அதன் உற்பத்தியில், ஐந்து கண்ணாடி தண்ணீரின் ஒரு கொள்கலனில் ஊற்றப்பட வேண்டும், நூறு மற்றும் ஐம்பது மில்லி நீள வினிகர், சர்க்கரை இருபத்து நான்கு கிராம் சர்க்கரை, உப்பு மற்றும் மசாலா மசாலா மற்றும் ஒரு அரை தேக்கரண்டி ஊற்ற வேண்டும். முடிக்கப்பட்ட கலவை, மாட்டிறைச்சி ஊற, இறைச்சி மேல் சரக்கு வைத்து பன்னிரண்டு மணி நேரம் marinate செய்ய குளிர்சாதன பெட்டியில் வைத்து.
வறுத்த மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு, நீங்கள் வேகவைக்கப்பட்ட காபி ஐந்து தேக்கரண்டி மற்றும் தேங்காய் வினிகர் தேக்கரண்டி ஒரு ஜோடி நூறு milliliters கெட்ச்அப் கலந்து வேண்டும்.  ருசியான மசாலா மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். நூறு மற்றும் இருபது நிமிடங்களுக்கு மாலினேட் கோட் இறைச்சி மற்றும் குளிர்சாதன பெட்டியில் பரிமாற்றம். பிறகு, மாட்டிறைச்சி அதிகமாக இறைச்சி நீக்க ஒரு காகித துண்டு துடைக்க வேண்டும்.

மாட்டிறைச்சி மற்றும் முரண்பாடுகள் தீங்கு

தீங்கிழைக்கும் மாட்டிறைச்சி, அது பெரிய அளவில், அதன் பயன்பாட்டில் கொண்டு வர முடியும் இத்தகைய இறைச்சியின் அதிக நுகர்வு பெருங்குடல் புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது என்ற கருத்து உள்ளதுஇது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை, ஆனால் அது இறைச்சியை துஷ்பிரயோகம் செய்வது நல்லது அல்ல.
மாட்டிறைச்சி கொழுப்பு கொண்டிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும், இது அதிக அளவில் உட்கொண்ட போது உடலில் குவிந்து, இதய, இரத்த நாளங்கள் மற்றும் குடல் நோய்களின் வளர்ச்சியை தூண்டும்.
யூரிக் அமிலத்தின் குவிப்புக்கு இட்டுச்செல்லும் அத்தகைய இறைச்சியில் பியூரின் தளங்கள் உள்ளன, அவை urolithiasis, கீல்வாதம் மற்றும் ஆஸ்டோக்ஹோன்றிரோஸ் ஆகியவற்றை உருவாக்குகின்றன. மற்றும் இந்த நோய்கள் முன்னிலையில், மாட்டிறைச்சி நுகர்வு முற்றிலும் முரணாக உள்ளது.
மாட்டிறைச்சி துஷ்பிரயோகம் உடலில் ஒரு தீங்கு விளைவை ஏற்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.
மாட்டிறைச்சி நவீன மனிதன் உணவில் உறுதியாக நிறுவப்பட்டது. இந்த இறைச்சி இருந்து குண்டு கூட மிகவும் பிரபலமாக உள்ளது. ஆனால் இந்த நீண்ட கால சேமிப்பக டிஷின் தாயகம் 19 ம் நூற்றாண்டில் முதன்முதலாக பிரான்சில் இருந்ததாக சிலர் அறிந்திருக்கிறார்கள்.
மாட்டிறைச்சி மற்றும் அதன் ஊட்டச்சத்து மதிப்பு சுகாதார நலன்கள் எந்த சந்தேகமும் அப்பால் உள்ளது.
குறிப்பாக பிரபலமான மாட்டு இறைச்சி, ஒரு கிலோ கிராம் இது பல நூறு டாலர்கள் செலவாகும். இருப்பினும், ஒவ்வொரு நாடும் உணவுக்காக இந்த இறைச்சியை பயன்படுத்துவதில்லை. எனவே, இந்தியாவில், ஒரு மாடு ஒரு புனிதமான விலங்கு என்று கருதப்படுகிறது. இருப்பினும், நாங்கள் இந்தியர்கள் அல்ல, எனவே கேள்விக்கு நாங்கள் ஆர்வமாக உள்ளோம், மாட்டிறைச்சி சாப்பிடுவதால் என்ன பயன்?

வரலாற்று பின்னணி

வரலாற்று ரீதியாக, பெயர் மாட்டிறைச்சி "govedo" என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. இரண்டாவதாக பழைய ஸ்லாவிக் மொழிபெயர்ப்பில் கால்நடைகளின் பொருள்.
காட்டுக் காளை பசுக்களின் முன்னோடியாக இருந்தது. பண்டைய மனிதன் அவரை தொட்டது மற்றும் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாகரீகம். பண்டைய ரோமானியர்களாலும் எகிப்தியர்களாலும் மாட்டிறைச்சி இறைச்சி உட்கொண்டதை வரலாற்று கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்துகின்றன. எனினும், அந்த நாட்களில், மாட்டிறைச்சி ஒரு சுவையான தயாரிப்பு கருதப்பட்டது, அது பணக்காரர்கள் மட்டுமே சாப்பிட்டது. அவர்கள் மாட்டிறைச்சி மற்றும் அதன் சிறந்த சுவை சுகாதார நலன்கள் கவனித்தனர்.
பண்டைய ரஷ்யாவில், இந்த தயாரிப்பு இருந்து உணவுகள் மிகவும் பிரபலமாக இருந்தது. அந்த நாட்களில், ஒரே சமையல் கருவி சூடான கற்களில் வறுத்தெடுக்கப்பட்டது. எனினும், சித்தியிய நாகரிகம் அதன் துண்டுகளை சாம்பலில் சுட வேண்டுமென்று விரும்பியது.
பேகன் ரஷ்யாவின் காலத்தில், சைவ உணவு என்பது ஒரு கலாச்சார பண்பாக இருந்தது, இருப்பினும் சில சமயங்களில் கால்நடைகளை கடவுள்களுக்கு தியாகம் செய்தனர். மாமிசத்தை சாப்பிடுவது, மாட்டு இறைச்சி உட்பட, கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் நிலைமை வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது.
மூலம், "மாட்டிறைச்சி வெலிங்டன்" தயாரிப்பு மிக பழமையான உணவு கருதப்படுகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனில் இந்த செய்முறையை கண்டுபிடித்தார், இருப்பினும், இன்றும் இது மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த டிஷ் மசாலா மூலிகைகள் ஒரு ரோல்.

பெனிபிட் மற்றும் கலவை

இறைச்சி நன்மைகள் அதன் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் வைட்டமின்-கனிம கலவையை சார்ந்துள்ளது. மாட்டிறைச்சி கலோரி உள்ளடக்கம் அது சமைக்கப்படும் வழியில் பொறுத்தது. 170 கிலோகலரில், 220 கிலோகலோரி, 220 காய்ந்து - 170, மற்றும் வறுத்ததில் - கிட்டத்தட்ட 390. கச்சா இறைச்சி, மிகவும் உணவு தயாரிப்பு மாட்டிறைச்சி ஒரு சுடப்பட்ட துண்டு.

ஊட்டச்சத்து மதிப்பு

இந்த இறைச்சி உணவு கலவை பின்வருமாறு:

வைட்டமின்கள்

மாட்டிறைச்சி உள்ள வைட்டமின்கள் பின்வரும் உள்ளன:
தயாரிப்பு 100 கிராம்வைட்டமின் மெக் உள்ளடக்கம்
வைட்டமின் B20.2
வைட்டமின் B50.5
வைட்டமின் B60.4
வைட்டமின் B98.4
வைட்டமின் பி 122.6
தொக்கோபெரோல்0.6

கனிமங்கள்

கலவை கொண்ட வைட்டமின்களுக்கு கூடுதலாக, மனித உடலின் இயல்பான செயல்பாடுகளுக்கு தேவையான கனிமங்கள் உள்ளன. குறிப்பாக மாட்டிறைச்சி நிறைய உள்ளது:

உடல் நன்மைகள்

உடலுக்கு மாட்டிறைச்சி நன்மை என்ன? இந்த இறைச்சி முக்கிய நன்மை பண்புகள்:
  • இரைப்பை சாறு அமிலத்தன்மையை சீர்குலைத்தல்
  • செரிமான நொதிகளை உருவாக்கும் தூண்டுதல்
  • குடலில் வேகமாக செரிமானம், அதன் செயல்பாட்டுக்கு சாதகமான நிலைமைகளை உருவாக்குகிறது
  • மாட்டிறைச்சி உள்ள புரதம், உடலில் புரதத்தை உருவாக்குவதற்கு செலவழிக்கப்படுகிறது, சேதமடைந்த திசுக்களை மீட்க உதவுகிறது
  • மற்ற வகை இறைச்சியுடன் ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் குறைந்த கலோரி உள்ளடக்கம், அதனால் அவற்றின் எண்ணிக்கை பற்றி கவனித்த பெண்களுக்கு மாட்டிறைச்சி நன்மைகள் தெளிவானவை.

சாத்தியமான தீங்கு

மாட்டிறைச்சி மனித உடலை கொண்டு வர முடியும். இது பின்வரும் காரணிகளை சார்ந்துள்ளது:
  • கால்நடைகளுக்கு இனப்பெருக்க நிலைமைகள்
  • இறைச்சி எடுக்கப்பட்ட அளவுகள் (எல்லாம் மிதமாக இருக்கும்)
  • மாட்டிறைச்சி இறைச்சி அடிப்படையில் சமையல் மற்றும் சமையல் முறை.
மாட்டிறைச்சி தீங்கு விளைவிக்கும் கால்நடை முறையின் நேரடியாக விகிதாசாரமாக உள்ளது. கால்நடைகள் கால்நடை வளர்ப்பில் வளர்ச்சியடைந்தன மற்றும் நுண்ணுயிர் கொல்லிகள் ஆகியவற்றால் கால்நடை வளர்க்கப்பட்டால் இந்த தீங்கு மிகவும் உச்சரிக்கப்படுகிறது. பிந்தைய தசை திசு தின்பண்டம் காட்ட முடியும், அது குவிந்து மற்றும் நீண்ட நேரம் தொடர்ந்து. எனவே, மனித உடலில் நுழைந்தால், அத்தகைய இறைச்சி ஆண்டிபயாடிக் எதிர்ப்பு வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது (சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு நபர் உணரவில்லை).
எந்த கூடுதல் இல்லாமல் இயற்கை உணவு மீது விலங்குகள் வளர்க்கப்பட்டால், அத்தகைய தீங்கு வேகவைத்த இறைச்சி அற்றது. சில தொற்றுநோய்களின் வளர்ச்சியைத் தவிர்ப்பதற்காக ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் கால்நடைகளை வேட்டையாடுவது மிகவும் முக்கியம்.

சமைக்க எப்படி

வேகவைத்த மாட்டிறைச்சி மிகுந்த நன்மைகள். அனைத்து நன்மைகளையும் பாதுகாக்க, நீங்கள் இந்த இறைச்சியை சுடலாம். சமைக்க மிகவும் தீங்கு விளைவிக்கும் வழி கிரில்லிங் ஆகும். இது அதிக வெப்பநிலை, கொழுப்புக்கள் இருந்து நறுமண ஹைட்ரோகார்பன்கள் உருவாக்கம் வெளிப்படும் போது உண்மையில் காரணமாக உள்ளது. அவர்கள், இதையொட்டி, புற்றுநோய் புற்றுநோயை வெளிப்படுத்தும், அதாவது, புற்றுநோய் வளரும் அபாயத்தை அதிகரிக்கும்.
மாட்டிறைச்சி இறைச்சி குறிப்பிடத்தக்க நுகர்வு பின்வரும் கோளாறுகள் ஆபத்தை அதிகரிக்கிறது:
  • அதெரோஸ்லிரோசிஸ் (இரத்தத்தில் அதிக கொழுப்பு)
  • இஸெமிக் ஹார்ட் டிசைஸ்
  • urolithiasis
  • கல்லீரல் செயலிழப்பு.
மாட்டிறைச்சி தீமை கொடுக்கப்பட்டால், அது பின்வரும் நோய்களில் முரணாக உள்ளது:
  • கௌட் (புரதத்தில் மிகவும் பணக்காரமான ஒரு தயாரிப்பு இது மற்ற அனைத்து வகையான இறைச்சியைப் போலவும்)
  • osteochondrosis
  • கடுமையான நோய் எதிர்ப்பு திறன்

எனவே, மனித உடலுக்கான மாடுகளின் நன்மை நிறைந்த பண்புகள் அதன் கலவையில் அதிக அளவு புரதத்துடன், முக்கிய வைட்டமின்கள் மற்றும் நுண்ணுயிரிகளோடு தொடர்புடையதாக இருக்கிறது. இருப்பினும், பயனளிக்கும் பண்புகளை வெளிப்படுத்துவதால், நபர் ஒழுங்காக சேமித்து வைத்தாலும், அதைச் சாப்பிடுவதாலும், மிதமான முறையில் இந்த இறைச்சியைப் பயன்படுத்துகிறார்.
Thanks Kingad.