ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

மே தினம் வந்தது எப்படி?



மே தினம் வந்தது எப்படி?

பிஞ்சுகள் அனைவருக்கும் மே மாதம் என்றாலே விடுமுறைதான். உங்கள் வீட்டில் வேலைக்குச் செல்லும் பெரியவர்கள் மே 1 ஆம் தேதி விடுமுறை என்று வீட்டில் இருப்பர். மே தினம் என்றும் தொழிலாளர் தினம் என்றும் கூறக் கேட்டிருப்பீர்கள். இந்த மே தினம் வந்தது எப்படி? உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மே முதல் தேதியை மே தினம் என்றும் தொழிலாளர் தினம் என்றும் கொண்டாடி மகிழ்கிறார்கள். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இதற்கு எதிரான குரல்கள் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் தொடங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (Chartists). சாசன இயக்கம் 6 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை என்ற கோரிக்கை.
1830 ஆம் ஆண்டு, பிரான்சில் நெசவுத் தொழிலாளர்கள் தினமும் 15 மணி நேரம் உழைத்து வந்தனர்.
இதனை எதிர்த்து அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1834 இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற வாசகத்தை முன்வைத்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால், இது தோல்வியில் முடிந்தது. ஆஸ்திரேலியா விலுள்ள மெல் போர்னில் கட்டிடத் தொழிலாளர்கள் 1856 இல் முதன்முதலாக 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்தனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றனர்.
1896 ஏப்ரலில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறுபிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளர் களின் நிலைமை குறித்து விரிவாக அலசினார். மேலும், ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதாரப் போராட்டம் அரசியல் போராட்டமாக எழுச்சி கொள்ள வேண்டும். என்பதையும் வலியுறுத்தினார். தொழிலாளி களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது எனலாம்.
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து, அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் உருவாக்கப் பட்டது. இந்த இயக்கம் 1886, மே 1 ஆம் நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இந்த இயக்கமே மே தினம் தோன்றக் காரணமாக இருந்தது எனலாம்.
1889 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் சோசலிசத் தொழிலா ளர்களின் சர்வதேசத் தொழிலாளர் பாராளு மன்றம் கூடியது. 18 நாடுகளிலிருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேரப் போராட் டத்தை முன்னெடுத்துச் செல்வது என்று முடிவு செய்தனர். 1890 மே 1 ஆம் நாள், அனைத் துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட அறைகூவல் விடுக்கப்பட்டது. இந்த அறைகூவலே, மே முதல் நாள் சர்வதேச தொழிலாளர் தினமாக - மே தினமாக வருவதற்குக் காரணமாக அமைந்தது. அடுத்த ஆண்டிலிருந்து உலக நாடுகள் பலவற்றில் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
மே தினமாக - தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுவதற்கு முன்பே மே முதல் நாளை மக்கள் எப்படியெல்லாம் கொண்டாடியுள்ளார்கள் என்று தெரிந்து கொள்வோம்.
அய்ரோப்பியர்கள் மே தினம் என்பதை அறுவடைத் திருநாளாகக் கொண்டாடியுள் ளார்கள். முந்தைய நாள் இரவு இளைஞர்கள் கேரல் பாடல்களைப் பாடி மகிழ்ந்துள்ளனர். சில இடங்களில் நாடகங்கள் நடத்தப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் அழகிப் போட்டியும் நடனமும் நடத்தியுள்ளனர். இளைஞர்கள் ஒரு ஆணையும், ஒரு பெண்ணையும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மே தின அரசர், மே தின அரசி என்று பெயர் வைத்து அன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக்கியுள்ளனர்.
பசுமையின் விழாவாகவும் இளைஞர்கள் மே தினத்தைக் கொண்டாடியுள்ளார்கள். சில நாடுகளில் கோடைக் காலம், இளவேனிற் காலத்தை வெற்றிகண்ட விழாவாகவும் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள். இப்படி, விழாக் களாகக் கொண்டாடும் வழக்கம் எப்போது எப்படித் தோன்றியது என்பது தெரியவில்லை. இது, நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் விழாவாகக் கொண்டாடி யதுபோல் தெரிகிறது. டுருய்டுகளின் மர வழிபாட்டிலிருந்து மே தினம் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. சிலர் இதனை, பண்டைய கால எகிப்திலும் இந்தியாவிலும் கொண்டாடப்பட்ட வசந்த கால விழாக்களுடன் தொடர்புப்படுத்து கின்றனர். ரோமர்களால் வெற்றி கொள்ளப்பட்ட ஆங்கிலேயரும் மற்றவர் களும் ரோமர் திருவிழாவான புளோராலியாவிலிருந்து மே தினத்தை உரு வாக்கினர். பிரான்ஸ் நாட்டில் மேதினம் சமய உணர்வோடு கடைப்பிடிக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவில் வசந்தத்தின் வருகையை இளை ஞர்கள் நடனமாடிக் கொண்டாடியதோடு பரிசுப் பொருள் களைக் கொடுத்தும் மகிழ்ந்துள்ளனர். இப்படி, பல கதைகள் மே தினம் என்பதற்கு இருப் பினும், இன்று தொழிலாளர் தினம் என்றே அனைத்து மக்களாலும் கொண்டாடப் பட்டு வருகிறது. கிறித்தவத் திருச்சபைகள் மே தினத்தைக் கொண்டாடுவதில்லை என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், முதல் கிறித்தவச் சபையான கத்தோலிக்கத் திருச்சபைத் திருக்குடும்பத்தில் தொழிலாளியான சூசையப்பரின் (ஜோசப்) விழாவாக மே தினம் பின்பற்றப்பட்டு வருகிறது.
வசந்த கால விழா என்று கூறினாலும், வசந்த காலத்தைத் தங்கள் வியர்வையால் உருவாக்கும் தொழிலாளர் விழா என்று சொன்னாலும் மே தினம் மகிழ்ச்சிக்குரிய விழாவாகவே கொண்டாடப்பட்டு வருகிறது.
தந்தை பெரியாரும், சிங்காரவேலரும் தமிழகத்தில் மே தினத்தைக் கொண்டாடிய பெருமைக்குரியவர்கள். சென்னையில் மே தினத்தை நினைவுபடுத்தும் விதமாக அதற்கு நினைவுச் சின்னம் அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர்.இந்த நினைவுச் சின்னம் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் உள்ளது. ஒவ்வொரு மே நாளன்றும் தொழிலாளர்கள் இங்கு வந்து மலர் அஞ்சலி செலுத்துகின்றனர்.

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

பெண்ணுக்கு பிறந்த வீடே பூலோக சொர்க்கம்..!!



பெண்ணுக்கு பிறந்த வீடே பூலோக சொர்க்கம்..!!

எல்லா பெற்றோருக்கும் தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்..!! அவளுடைய பெற்றோரும் அப்படி தான் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்..!!

படித்த மாப்பிள்ளை. கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன். இருவருக்கும் இருவரையும் பிடித்தது..!!
உடனே நிச்சயம் செய்து விட்டனர்..!!

இருவரும் தினமும் அலைபேசியில் பேசத் தொடங்கினர்..!!

திருமண நாள் நெருங்க நெருங்க அவள் வீட்டில் ஒரே பதட்டம்..!! வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது..!! இருவரது வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தது..!!

நாளை திருமண நாள்..!!
அவளுக்கு மனது என்னவோ போல் இருந்தது..!!

வீட்டை ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும் போல் இருந்தது..!!

தினமும் அவருடன் பேசியதில் வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று அவள் அப்போது நினைக்கவில்லை..!! ஆனால் ஏதோ ஒன்றை இழக்கப்போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது..!!

தந்தையையும், தாயையும் பார்த்தாள். எல்லோரும் வேலையாய் இருந்தனர்..!!

அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள்..!!
விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள். கண்கள் சுருங்கி பின்னர் ஓரத்தில் நீர் துளி சொட்டியது..!!

அங்கே.. தங்கை.. புதுத்துணி பரவசத்தில் "அக்கா"... என ஓடி வந்தாள்..!! அவளை பார்த்ததும்.. "என்னாச்சுக்கா..?" என்றாள்..!!
"பூ வாங்கினால் கூட சரிசமமாக வெட்ட சொல்லி சண்டை போடும் நான் இனி யாருடன் சண்டை போடுவேன்..?? இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே" என விழியோரம் வடிந்த நீரை துடைத்துக் கொண்டே எண்ணினாள்..!!

"அடுப்படியில் பால் கொதிக்கிறது நீ எங்கே போன..??" என்று அவளை திட்டினாள் அவளை பெற்றவள். அவளை வளர்த்தவள்.. !! அம்மாவை அடிக்கடி திட்டுவதும்.. பின்னர் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா..??

அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்..!! அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தாள்..!! அப்பா பேசிக்கொண்டே அவளை பார்த்து "அம்மாவை கொஞ்சம் கூப்பிடுமா..!!" என்றார்..!!
"நீ எது கேட்டாலும் வாங்கி தருகிறேன். நீ என் செல்லம்டா.." என்று அன்பை கொட்டும் அப்பாவின் அன்பை இனி நான் எங்கே தேடுவேன்..!!

எச்சிலையும், சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு அம்மாவை அழைத்து விட்டு வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள்..!!

எங்கிருந்தோ குரல்.."அடியே உள்ள போ.. கறுத்து போக போற.. நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டு வெளியே வந்து உட்காராத..!!" பாட்டியின் குரல் தான் அது..!!
எப்போதும் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கும் பாட்டியின் பேச்சை கேட்காமல் முறைப்பாள்..!! ஆனால் இப்போது முறைக்க தோணவில்லை. முகம் அப்படியே அழுவது போல பொங்கியது. "என்னாச்சுடி என் ராசாத்தி..??" பாட்டி அருகில் வந்து கேட்டவுன் அதற்கு மேல் முடியவில்லை. வீட்டிற்குள் ஓடி சென்று கத்தி அழுதாள்..!!

எல்லோரும் பயந்து கொண்டு ஓடி வந்தனர். அவள் அம்மாவிடம் "அம்மா நான் இங்கேயே இருந்து விடுகிறேன். உங்களை விட்டு நான் எப்படி செல்வேன். அங்கே எப்படி இருக்குமோ எனக்கு பயமாக இருக்கிறது..!!" என்று அழுதாள்..!!

உடனே அப்பாவின் மனம் அழுதது. அம்மா சமாதானம் செய்தாள்..!!

அப்பா அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் அப்பாவிற்கும் மகளுக்கும் உள்ள பாசம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது..!!

தங்கை குலுங்கி குலுங்கி அழுதாள். "அழாதே அக்கா, மாமா உன்ன நல்லா பாத்துப்பாருக்கா.." என வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள்..!!

அன்று இரவு.. அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்து கொடுத்தாள் அம்மா..!! ஆனால் அவள் மனம் புண்பட்டு போய் இருந்தாள்..!!

நாளை திருமணம். போகும் இடம் சொர்க்கமோ இல்லையோ என்றெல்லாம் தெரியாது. ஆனால் வாழ்ந்த ஒரு சொர்க்கத்தை விட்டு மட்டும் அவள் செல்ல போகிறாள் என்பது தெரிந்தது..!!

திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது #மாற்றம்..!!

அவள் வாழ்ந்த வீட்டில் இருந்து வேரோடு பிடுங்கி எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைப்பதுதான்  திருமணம்..!!

நேசியுங்கள்...!
பெண்களை...!!

-இணையத்தில் இருந்து

சனி, 22 ஏப்ரல், 2017

ஐஸ் வாட்டர் - சில் தண்ணீர்* குடிப்பதினால் நம் உடலில் உண்டாகும் பாதிப்புகள்!!!



ஐஸ் வாட்டர் - சில் தண்ணீர்* குடிப்பதினால் நம் உடலில் உண்டாகும் பாதிப்புகள்!!!

👉 ஐஸ் வாட்டர் குடிப்பதினால் உங்கள் வயிற்றின் சீரண திறன் குறையும் (disturbs digestion)
👉 உங்கள் உடம்பின் சக்தி (body energy drops) குறையும்
👉சளி உருவாகும் (mucus), தொண்டை எரிச்சல் உண்டாகும்
👉இதய துடிப்பு குறையும்(slows heart rate)
👉உங்கள் உடம்பின் தண்ணீர் அளவு  குறைய தொடங்கும்
(hinders hydration)
👉 (constipation) உண்டாகும்
👉தலைவலி (head ache) உருவாகும்
👉கொழுப்பு அதிகரிக்கும் (increases fat)
கோடை காலத்தில்..
இந்த முக்கிய பதிவை பகிருங்கள் !!!

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

கோடை வெயிலை சமாளிக்க ஜில்லுன்னு யோசனைகள் ..



கோடை  வெயிலை  சமாளிக்க ஜில்லுன்னு  யோசனைகள் ..

நாகரிக மனிதனின் நாகரீகமற்ற செயல் –இயற்கை வளத்தை சுரண்டி சுரண்டி ,இயற்கையை பேணாமல் நேரடியாகவும் மறை முகமாகவும் அழித்து அப்பப்பா என்ன வெயிலு என்னும் –இயற்கையை குறை சொல்லும் மனிதனுக்கு ஆயுர்வேதம் ,சித்த மற்றும் இயற்கை மருத்துவம் நோய் அணுகா விதியில் பல செயல்களை செய்ய சொல்கிறது .,ருது சர்யம் என்னும் எந்த மாதத்தில் எதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்று பெரிய பட்டியல் இடுகிறது ஆயுர்வேதம் .

கோடையில் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள்.

அடிக்கிற வெயிலுக்கு சன் ஸ்ட்ரோக் என்னும் திடீர் மயக்கம் அதை தொடர்ந்து வரும் மரணம் நம்மை பயமுறுத்தவே செய்கிறது ..

நீர் கடுப்பு
கல் அடைப்பு
மூல கடுப்பு
உடல் அரிப்பு
வேர்க்குரு முதல் பெரிய தோல் நோய்கள்
வைரஸால் வரக்கூடிய அம்மை நோய்கள்
உடல் எரிச்சல்
திடீர் மயக்கம்
உடல் சோர்வு
தூக்கமின்மை
நரம்பு தளர்ச்சி
வயிற்று புண்
மெட்ராஸ் ஐ போன்ற கண் நோய்கள் ...


இந்த வெயிலுக்கு காரணம் என்ன ?

மரம் நட மனதில்லாமல் , செயற்கை குளிரூட்டிகள் பல வைத்து ஏ சி ரூம் இரவு தூங்கி ,ஐஸ் வாட்டர் பருகி ..காசுக்கு தக்கவாறு –கோடை வெயிலின் திடீர் கடைகளின் எசன்ஸ் சர்பத்துகளை அருந்தும் ,விவசாயத்தை அசிங்கம் என்று நினைக்கும் சாராசரி மனிதன் தான் காரணம் .

இயற்கையை நாம் அழிக்க அழிக்க தாக்கத்தை நமக்கு திருப்பி அடிக்க காத்து கொண்டே இருந்து பழி வாங்கி கொண்டிருக்கிறது .

எப்படி சமாளிக்கலாம் ?

கோடை காலத்திற்கேற்ற உணவு வகைகள்

•  தமிழர்களின் முக்கிய மற்றும் முதன்மை உணவு அரிசியாகும். அரிசியின் பல வகைகள் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பருவ கால மாறுபாடுகளுக்கேற்ப அரிசி வகைகளைத் தேர்ந்து எடுத்து உண்பது நன்று. அவ்வகையில் கோடைக்கு ஏற்ற அரிசி சம்பாவாகும். அதனிலும் பழைய நெல்லைக் குத்தி அரிசியாக்கி உபயோகிப்பதே உடலிற்கு குளிர்ச்சியை அளிக்கும். பச்சரிசியும் சூட்டை தணிப்பதில் சிறந்தது.நீராகாரம் நல்லது...டீ காபி தவிர்த்தல் நலம்

•  பயறு வகைகளில் பச்சைப் பயறு மற்றும் உளுந்து உஷ்ணத்தை நீக்கும். கடலை, காராமணி, பட்டாணி போன்றவற்றால் உஷ்ண தாகம் குறையும்.


•  கீரை வகைகளில் ,வெந்தய கீரை ,வள்ளைக் கீரை, பரட்டைக் கீரை, பொன்னாங்காணி கீரை, முருங்கைக் கீரை, புளியாரைக் கீரை ஆகியவற்றிற்கு உடல் சூட்டைப் போக்கும் குணம் உண்டு.

•  உணவுக்குப் பயன்படும் பூ வகைகளில் வெங்காயப்பூ குளிர்ச்சி தரும்.


•  தண்டு வகைகளில் கீரைத்தண்டு மற்றும் வாழைத்தண்டு போன்றவை உடல் சூட்டைத் தணிக்கும்.

•  காய்களில் வாழைக்காய், அத்திக்காய், கத்தரிக்காய், வெண்டைக்காய், பெரும் பூசணிக்காய், பரங்கிக்காய், எலுமிச்சங்காய், புடலங்காய், களாக்காய் போன்றவை உடல் சூட்டை நீக்கும்.



•  பிஞ்சு வகைகளில் கத்தரிப் பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு முருங்கைப் பிஞ்சு போன்றவை உஷ்ணத்தைக் குறைக்கும்.

•  பழ வகைகளில் பேயன் வாழை, அத்திப்பழம், விளாம்பழம், இலந்தைப் பழம், நெல்லிக்கனி, புளியம்பழம், நாவற்பழம், கொட்டை முந்திரிப்பழம், மாதுளம் பழம், திராட்சைப் பழம் போன்றவை குளிர்ச்சியைக் கொடுக்கும்.

 இவற்றில் நெல்லிக்கனியை உணவிற்கு முன்னும், இலந்தைப் பழத்தை உணவிற்குப் பின்னும் உண்பது சிறப்பு.


•  கரும்பின் ரசம், வெல்லம், பழைய வெல்லப்பாகு, ஈச்சம் வெல்லம், சர்க்கரை போன்றவை குளிர்ச்சியை உண்டாக்கும்.

•  பசும்பாலைக் கறந்து சூடு ஆறவதற்கு முன்னால் உதய காலத்தில் பருக உடலின் சூடு தணியும்.


•  பசுந்தயிர் தாகத்தை தணிக்கும், எருமைத்தயிர் குளிர்ச்சியை உண்டாக்கும்.

•  வெண்ணெய் வகைகளில் வெள்ளாட்டு வெண்ணெய் குளிர்ச்சியை உண்டாக்கும்.


•  கறி வகைகளில் வான்கோழிக் கறி குளிர்ச்சியை உண்டாக்கும்.

•  உடல் சோர்வை போக்க கண்ட கண்ட எனர்ஜி ட்ரிங்க்சை விட நமது பானாகாரம்  மிகவும் நல்லது

ஆயுர்வேத மருத்துவத்தின் படி ..

•  பார்லி, கோதுமை, தேன், மண்பானையில் சேகரித்த நீர், மோர், இளநீர், திராட்சை,மாதுளம், பேரிச்சம்பழம்,ஏலக்காய், இலவங்கப்பட்டை.

•  பழங்களில் நுங்கு மிகவும் நல்லது

தவிர்க்க வேண்டியவை:-

•  அதிக காரம், எண்ணெய் பொருட்கள், தயிர், புளித்த உணவு வகைகள்,

 குளிர்சாதன பொருட்கள், மதுபானங்கள்., டீ.காபி,
எசன்ஸ் கலந்து ,சாக்கரின் கலந்த திடீர் கடைகளில் விற்கும் ஜீஸ் வகைகள் ,குளிர் பானங்கள் ..

இந்த குளிர்பானத்தில் இருப்பது என்ன ?

நன்னாரி சர்பத் ,ரோஸ் மில்க் ,சோற்று கற்றாழை சர்பத் ,என்று பாட்டில்களில் விற்கும் எல்லா பாட்டில்களிலும் ,மெத்திலிமிடாசோல்,சிட்ரிக் ஆசிட், பாஸ்போரிக் ஆசிட், காஃபின், சோடியம்சைக்லாமேட்,சுக்ரோஸ், கலர் சாயங்கள் போன்றவையே இருக்கிறது

இக்குளிர்பானங்களை உட்கொள்வதால் வரும் பக்கவிளைவுகள்:-

வயிற்றில் எரிச்சல், குமட்டல், வாந்தி, தோல் அழற்சி, மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய் மட்டுமல்லாமல் உயிர் கொள்ளி நோயான புற்றுநோய்
அபாயமும் அதிகம்........................................................
தினமும் செய்ய வேண்டியவை ..

உடலின் நீர் சக்தி குறையாமல் பார்க்க வேண்டும் –தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் ..

கருங்காலி தண்ணீர் என்று மூலிகை குடிநீர் உடலுக்கு குளிர்ச்சி தரும் தண்ணீரை பருகுதல் நலம் ..

வாயில் நல்லெண்ணை வைத்து வாய் கொப்பளித்தல் குளிர்ச்சியண்டாக்கும்.

மலம்,சிறுநீர்,காற்று போன்ற 13 வகையான இயற்கை வேகங்களை அடக்கிடக்கூடாது.

சுருமா -அஞ்ஜனக்கல்  போன்ற இயற்கையான கண் மை தீட்டல் நலம்.இளநீர் குழம்ப போன்ற கண் மருந்தும் தினம் பயன்படுத்தலாம்.

மதியம் ஒரு மணி நேரம் படுத்துறங்குதல் –பகல் உறக்கம் –இந்த வெயில் காலத்தில் நல்லது ..

இரவும் சீக்கிரம் தூங்க வேண்டும் ..

வியர்வை அதிகம் வர வைக்கும் எந்த கடினமான பயிற்சியும் செய்ய கூடாது

தேவை இன்றி வெளியில் அலையவே கூடாது .ஆனால் விட்டமின்D  ஐ மாலை நேரத்தில் கணக்கிட்டு பெறலாமே..

காதி கிராப்ட் ஆடை அணிந்து நமது சுதேச பற்றை மற்றவருக்கும் காட்டி நாமும் நலம் பெறலாம்

கொளுத்தும் அனல் காற்றை வென்றெடுக்க ஆயுஷ் சொல்லும் ரகசியம்

எண்ணெய் குளியல் –நல்லெண்ணெய் தேய்த்து –அதன் விதி முறைப்படி வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தால் நாம் அக்னியை வெல்லலாம் .

தினமும் தலைக்கு எண்ணை வைத்து குளிக்கணும்.

ஆயுஷ் மருந்துகள் ஏதேனும் கோடை வெயிலை சமாளிக்க இருக்குமா என்று கேட்கும் நண்பர்களுக்கு ..

சந்தனாசவம் ,திராகஷாதி கஷாயம் ,திராக்ஷா அரிஷ்டம் ,குமார்யாசவம் , வாசா குளுச்யாதி கஷாயம் ,சந்திர பிரபா வடி ,ச்யவன ப்ராஷ லேஹ்யம் ,வெண்பூசணி லேஹ்யம் ,சிலாசத்து பற்பம் ,கல்நார் பற்பம் ,வெங்கார பற்பம் ,திரிபலா கற்ப சூரணம். கரிசாலை கற்ப சூர்ணம் ,சந்தனாதி தைலம் ,ஹிம சாகர தைலம் ,தூர்வாதி தைலம் ,யுனானி மருத்துவத்தில் பல சர்பத்துகள் –இந்த வெயிலை சமாளிக்க உதவும்.

வியாழன், 20 ஏப்ரல், 2017

குழந்தைப் பேறு தரும் நாவல் மரம் மற்றும் பழம்....



குழந்தைப் பேறு தரும் நாவல் மரம் மற்றும் பழம்....
பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, வைட்டமின் ஈ தேவை. நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயமாக்கித் தேன் அல்லது வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை அகலும். மூன்று நாவல் இலையை விழுதாய் அரைத்து கட்டித் தயிரில் கலக்கி அதிகாலையில் விடாமல் மூன்று மாதங்கள் சாப்பிட்டுவர, குழந்தைப் பேறு ஏற்படும்.
நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். காலை, மாலை என இரு வேளை 3 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம். தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை இதயத்தின் தசைகள் வலுவாகும்.
தற்போது பல ஊர்களில் நாவல் மரம் இல்லை. மக்களுக்குத் தெரியாத இடங்களில் மட்டும் இருக்கிறது. வியாபார நோக்கில், இதை யாரும் பயிரிடாததால், இந்தப் பழங்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. அதனால் இதன் விலையும் எக்கச்சக்கமாக இருக்கிறது. தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற இந்தப்பழம், எளிமையும், வலிமையும் சேர்ந்த ஒரு அருமையானப் பழம்...

புதன், 19 ஏப்ரல், 2017

உலகின் மிக அழகான பெண் யார் தெரியுமா?



உலகின் மிக அழகான பெண் யார் தெரியுமா?

2017-ம் ஆண்டுக்கான உலகின் மிக அழகான பெண்ணாக ஹாலிவுட் நடிகை ஜுலியா ராபர்ட்ஸை தேர்வு செய்துள்ளது பீபிள் பத்திரிகை (People magazine). இதைப் போன்று, பீபிள் பத்திரிகையால் ஜுலியா ராபர்ட்ஸ், ஐந்து முறை 'உலகின் மிக அழகான பெண்ணாக' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னர் 1991, 2000, 2005 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் ராபர்ட்ஸ், பீபிள் பத்திரிகையால் 'உலகின் மிக அழகான பெண்ணாக' தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து 49 வயதாகும் ராபர்ட்ஸிடம் கேட்டபோது, 'இது மிகவும் பெறுமையளிக்கிறது. இன்னும் வருகின்ற ஆண்டுகளிலும் இந்த பட்டத்தை அதிகம் பெறுவேன் என்று நினைக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

மார்க்கெட்டிங் நண்பர்களுக்காக சில குறிப்பு.. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது மிககவணமாக இருக்கவும்..



மார்க்கெட்டிங் நண்பர்களுக்காக சில குறிப்பு..
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது மிககவணமாக இருக்கவும்..

செய்யகூடாத சில காரியம்.:-

* பேருந்தில் ஜன்னல் ஓரம் உட்கார வேண்டாம் .(அனல் காற்று வீசுகிறது)
*கோழி,நண்டு  சாப்பிட வேண்டாம்.
*மிக குளிர்ந்த உணவை சாப்பிட வேண்டாம்.
* மிக காரமான உணவை சாப்பிட வேண்டாம்.
* இருசக்கர வாகண பயனம்  நீண்ட தூரம் செய்ய வேண்டாம்.
* பாட்டிலில் அடைக்கபட்ட குளிர்பானம் அதிகம் குடிக்க வேண்டாம்.
*ஜூஸ் குடித்ததால் தண்ணீர் குடிக்காமல் விட்டுவிட வேண்டாம்.
* சிறுநீர் கழிக்காமல் இருக்க வேண்டாம்.
* ஒரு நாள் போட்ட ஆடையை துவைக்காமல் திரும்ப அணிய வேண்டாம்...


கண்டிப்பாக சொய்ய வேண்டியது...

* குறிப்டிட்ட இடைவெளியில் தண்ணீர் தொடர்ந்து குடிக்கவும்...
*சீரகதண்ணீர் குடிப்பது நல்லது உடல் சூட்டை சீரகம் சமப்படுத்தும்.
*இளநீர் பதநீர் கூல் அருந்துவது நல்லது( நமக்கும் விவசாயிக்கும்).
*மிக எளிதாக சீரனம் ஆகும் உணவை சாப்பிடவும் ( தயிர் சோறு , பருப்பு சோறு , ரசம் )
* வாழத்தண்டு ஆப்பிள் காரட் இதை அதிகம் சாப்பிடவும் சிறுநீரக கல் உருவாவதை தடுக்கும் .
* தினமும் இருமுறை குளிப்பது நல்லது.

இப்போது தெரிகிறது மார்கெட்டிங் நண்பர்களுக்கு மரத்தின் அருமை வெயிலில் ஒதுங்கி நிற்க நிழல் இல்லை. இனியாவது நமது வீட்டு தெருவின் ஓரம் மரம் நடுவோம்.

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

புரட்சியாளர் அம்பேத்கர் ---126



⁠⁠⁠புரட்சியாளர்  ---126
----------------------------------------

01•            ராம்ஜி மாலோஜி சக்பால் அவர்களுக்கும் பீமாபாய் அவர்களுக்கும் பதினான்காவது குழந்தை யாக புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தார்



02 •              பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்கள்  மோவ்(MHOW) Military headquarters Of War  என்ற இடத்தில் பிறந்தார்.(14.04.1891)


03•                    சத்தாரா அரசினர் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த பீமின் பெயர் பள்ளி பதிவேட்டில் பீமாராவ் ராம்ஜி அம்பவடேகர் என்று இருந்தது  (1900).


04 •                    பீமின் ஆசிரியரான அம்பேத்கர் என்பவர் அம்பவடேகர் என்பதை அம்பேத்கர் என்று பள்ளிப் பதிவேட்டில் அவராகவே மாற்றிவிட்டார்.


05 •                பீம்  மராத்தா உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். உடனடியாக எல்பின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார் (1901).


06 •               அம்பேத்கருக் கும் ராமாபாய்க்கும் திருமணம் நடந்தது  (1906).
 

07 •                   அம்பேத்கர் மெட்ரிகுலேஷன் தேர்வில் வெற்றி பெற்றார் (1907).


08 •               புரட்சியாளர் அவர்களுக்கு பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது கேலூஸ்கர் தான் எழுதிய "பகவான்" என்ற புத்தரின் வ ரலாற்று  நூலை அம்பேத்கருக்கு பரிசாக வழங்கினார்.


09 •                  அம்பேத்கர் பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்தார்(1908).


10 •                அம்பேத்கர் பரோட மன்னரை சந்தித்து பேசினார். அதன் விளைவாக அவருக்கு பரோடா மன்னரால் மாதம் ரூ.25 கல்வித்தொகை  வழங்கப்பட்டது (1910).


11 •          அம்பேத்கர் பி.ஏ தேர்வில் வெற்றி பெற்றார்

12 •             அம்பேத்கரின் முதல் மகன் யசுவந்தன் பிறந்தான்  (1912)


13 •                   அம்பேத்கர் பரோடா சென்று மன்னரிடம் பணியில் சேர்ந்தார்.


14 •                 அம்பேத்கர் தந்தை  இராம்ஜி (02.02.1913) இறந்தார்.


15 •                         பரோடா மன்னர் அம்பேத்கருக்கு மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகை அளிப்பதற்கான ஆணை பிறப்பித்தார்.


16 •                புரட்சியாளர் அயல் நாடு சென்று படிப்பதற்கான பரோடா அரசின் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டார்(1913).


17 •                புரட்சியாளர் நியுயார்க் சென்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ  சேர்ந்தார்  (20.17.1913) .


18 •                 புரட்சியாளர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ  தேர்வில் ( 1915) வெற்றிபெற்றார்.


19 •             " இந்தியாவில் சாதிகள் " என்று புரட்சியாளர் எழுதிய நூல் முதன்முதலில் அச்சு வடிவில் வெளி வந்தது (1916) .


20 •               இலண்டனில்   பொருளாதாரத்தில் எம்.எஸ். ஆய்வு பட்டம், டி,எஸ் உயர் ஆய்வுப்பட்டம்  மற்றும் பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காகவும் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டார் (1916).


21 •              கொலம்பியா பல்கலைக்கழகம்  புரட்சியாளரின்  Ph.D பட்டத்திற்கான  ஆய்வுக் கட்டுரையை (1917) ஏற்றுக்கொண்டது.


22 •        பரோடா அரசின் இராணுவச்செயலாளர் (1917) பதவியில் சேர்ந்தார்.

23 •          இரானுவத்தில்  தீண்டப்படாதவர் என்ற காரணத்தால்  இழிவாக நடத்தப்பட்டுத் துன்புறுத்தப்பட்டதால் பம்பாய்க்குத் திரும்பிவிட்டார்.


24 •                   பெர்ட்ரண்ட் ரசல் எழுதிய "சமூகத்தை மாற்றியமைப்பதற்கான கோட்பாடுகள்" என்ற நூல் பற்றிய திறனாய்வுக்கட்டுரை இந்திய பொருளாதார இதழில்  வெளியிடப்பட்டது (1918).


25 •                      பம்பாய் சைடன் ஹாம் கல்லூரியில் புரட்சியாளர் அரசியல் பொருளாதார துறையில் (11.11.1918) பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
   

26 •         புரட்சியாளர் "தி டைம்ஸ் ஆப் இந்தியா " ஏட்டிற்கு மகார் என்ற புனைப் பெயரில் ஒரு கட்டுரை எழுதினார்.


27 •               சவுத் பரோ குழுவிடம் வாக்குரிமை குறித்து     தன் கருத்துக்களை எடுத்துரைத்தார்.


28 •                மூக் நாயக் (ஊமைகளின் தலைவன்) என்ற வார இதழை புரட்சியாளர் (1920) தொடங்கினார்.


29 •            இலண்டனில் உயர் கல்வியைத் தொடருவதற்காகச் சைடன் ஹாம் கல்லூரியின் பேராசிரியர் வேலையிலிருந்து விலகினார்.


30 •           கோல்ஹாப்பூர் சிற்றரசில்  மன்கோன் என்ற  ஊரில் நடைபெற்ற மாநாட்டிற்கு புரட்சியாளர் தலைமை தாங்கினார்.


31•                நாகாபுரியில் நடைபெற்ற அனைத்திந்திய தீண்டப்படாத வகுப்பினரின் முதலாவது மாநாட்டில் (01.06 .1920) புரட்சியாளர் கலந்து கொண்டார்.


32 •                    தன் கல்வியை தொடர்வதற்கு இலண்டன்  (1920) பயனமானார்.


33 •             புரட்சியாளர் இலண்டனில்  பொருளாதாரம் மற்றும் அரசியல் விஞ்ஞானத்திற்கான  கல்வி நிறுவனத்திலும் கிரேஸ் இன் சட்டக் கல்லூரியிலும் தன் படிப்பை தொடர்வதற்காக சேர்ந்தார்.


34 •                      ஜெர்மனி  பான் பல்கலைக்கழகத்தில்  மேற்படிப்பு படிப்பதற்காக  சென்றார் . மீண்டும் லண்டன் திரும்பினார்(1922).


35 •             புரட்சியாளர் இலண்டனிலிருந்து இந்தியாவிற்கு திரும்பி          பம்பாயில் பாரிஸ்டராக வழக்குரைஞர் தொழிலைத் தொடங்கினார்.


36 •                  புரட்சியாளர்  எழுதிய ரூபாயின் சிக்கல் ஆய்வுக்கட்டுரை  இலண்டன் பல்கலைக்கழகம்  ஏற்றுக்கொண்டது. டி எஸ்., என்ற உயர் ஆய்வுப்பட்டத்தை அவருக்கு  வழங்கியது.


37 •                 பகிஷ்கிரித் ஹித்தகாரணி சபா என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்தற்காக  புரட்சியாளர்  பம்பாய் தாமோதர் அரங்கில் ஒரு கூட்டத்தை கூட்டினார்(1924).


38 •               மூக் நாயக் இதழ் அம்பேத்கரால் நிறுவப்பட்டது (1924)
 

39 •                             சத்ரா பள்ளியில் புரட்சியாளருக்கு ஆசிரியராக இருந்த அம்பேத்கரை நீண்ட  வருடங்களுக்கு  பிறகு சந்தித்தார் .


40 •                பகிஷ்கிரித் ஹித்தகாரணி சபை ஷோலாப்பூரில்  தீண்டப்படாத வகுப்பு மாணவர்கள்   தங்கி படிப்பதற்கான  விடுதி ஒன்றைத்  தொடங்கியது .


41 •              கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தத்துவயியலில் டாக்டர் பட்டம் பெறுவதற்கு புரட்சியாளர் எழுதிய "பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாண நிதியின் பரிணாம வளர்ச்சி " என்ற ஆய்வு கட்டுரை இலண்டனில் இருந்து  பி.எஸ் கிங் அண்ட் சன்ஸ் கம்பெனி நூலாக வெளியிட்டது(1925).


42 •               பட்லிபாய் கணக்கியல் பயிற்சி நிறுவனத்தில்  பகுதி நேர விரிவுரையாளராக சேர்ந்தார்  (1925).


43 •                     இந்திய நாணயம் குறித்த ராயல் கமிஷன் முன் அம்பேத்கர்  சாட்சியம் அளித்தார்.


44 •                  பகிஷ்கிரித் ஹித்த காரணி சபா பதிவு செய்யப்பட்டது (1926).


45 •           புரட்சியாளரும்  பி ஜி சோலங்கியும் பம்பாய் மாகாணச் சட்டசபையின் உறுப்பினர்களாக நியமிக்கபட்டனர்.


46 •                   பம்பாய் மாகாண  சபை யில் புரட்சியாளர்  தன்னுடைய கன்னிப்பேச்சை நிகழ்த்தினார் (24.02.1927).


47 •               மகத் சத்தியா கிரகத்தில் கலந்து கொள்வதற்காக  விசைப்படகில் பம்பாயிலிருந்து  புறப்பட்டார் (1927).


48 •                 மார்ச் 20, சவுதார் குளத்தில் இரங்கி நீரை அள்ளி  பருகினார்.


49 •         பகிஷ்கிரித்  பாரத்  என்ற மாதம் இருமுறை இதழாக   புரட்சியாளர் தொடங்கினார்.


50 •           கல்யாணுக்கு அருகில் பத்லபூரில் நடைபெற்ற சிவாஜியின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.


51 •         புரட்சியாளரின் வாழ்க்கை  வரலாற்றை  மராத்தியில் ஏழுதிய புகழ்பெற்ற  சி.பி காயர்மோடே என்பவர் அம்பேத்கரை பாபாசாகிப் என்று கருத்துரைத்தார்.


52 •              மகதின் சாதி இந்துக்கள் சவுதார் குளத்தில் தீண்டப்படாத வகுப்பினர் நீர் எடுப்பதற்கு  தடை ஆணை பிறப்பிக்க  கோரி  மதஉரிமையியல் நீதி மன்றத்தில் புரட்சியாளர் மீது                  வழக்கு (12.12.1927).


53•             மகத் மாநாடு  தொடங்கியது (25.12.1927) . அன்றிரவு 7.30 மணிக்கு மாநாட்டில் மனுஸ்மிருதி எரிக்கப்பட்டது.


54 •            புரட்சியாளரும் அவருடைய  தோழர்களும்  பௌத்த குகைகளை பார்வையிட்ட பின்பு சிவாஜியின் தலைநகரான ராய்க்காட்டை காணச் சென்றார்கள்.


55 •             அப்பாத்துரை  என்பவர் தெண்ணிந்தியாவில் புரட்சியாளரின் கருத்துக்களை  பரப்பினார். தீண்டப்படாத சாதிகள் பேரவை அமைப்பதற்கு உதவினார்.


56  •             தீண்டப்படாத வகுப்பு  மக்களின் கல்வி,வேலை வாய்ப்பு ,அரசியல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அச்சிடப்பட்ட அறிக்கையை புரட்சியாளர் சைமன் குழுவிற்கு அனுப்பினார் (29.05.1928).


57 •                   பம்பாய் சட்டக்கல்லூரியில்  பேராசிரியராக நியமிக்க ப்பட்டார்.


58 •               மகார் வட்டன் முறையை ஒழிப்பதற்கான ஒரு மசோதாவை   அம்பேத்கர் பம்பாய்  மாகாணச் சட்டசபையில் முன் மொழிந்தார்.


59 •                     பம்பாய் மாகாணச் சட்டசபை சைமன் குழுவுடன்  செயல்படுவதற்கான  குழுவிற்கு புரட்சியாளரை தேர்வு செய்தது.


60 •                புரட்சியாளர் பூனாவில் சைமன் குழு முன் சாட்சியம் கூறினார்.


61 •                  சிப்ளன்  மாநாட்டில் புரட்சியாளர் தலைமை தாங்கினார். தீண்டப்படாத  வகுப்பு  மக்களுக்குப் பூணூல் அணிவிக்கப்பட்டது (1929).


62 •             தீண்டப்படாத வகுப்பினரின் அரசியல் உரிமைகளை வலியுறுத்தி  சைமன் குழுவிடம் புரட்சியாளர் தனியாக அறிக்கை அளித்தார் (17.05.1929) .


63 •             புரட்சியாளர் பார்வதி கோயில் சத்தியாக்கிரகத்தை ஆதரித்தார் .


64 •                பகிஷ்கிரித்  கடைசி இதழ் வெளியான நாள் (15.11.1929).


65  •                        நாசிக் காலாராம் சத்தியாக்கிரக த்தை  புரட்சியாளர் ஆதரித்தார்  (03.03 .1930) . அன்று நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றினார்.


66 •                   காலாராம்  கோயில் சத்தியாக்கிரகம் தொடர்பானவற்றில்  மாவட்ட ஆட்சித்தலைவர்  நடந்துக்கொள்ளும் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து பம்பாய் மாகாண கவர்னருக்கு புரட்சியாளர் கடிதம் எழுதினார் (1930) .


67  •         அனைத்திந்திய தீண்டப்படாத வகுப்பினர்  மாநாட்டில்  புரட்சியாளர் தலைமை தாங்கி உரையாற்றினார் (08.08.1930).


68 •           இலண்டன் வட்ட மேசை  மாநாட்டிற்கான அழைப்பை  பெற்றார் (1930).


69  •               புரட்சியாளர் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதால் பாராட்டு விழா நடத்தப்பட்டது. பி.ஜி சோலாங்கி தலைமை ஏற்றார் .  வைஸ்ராய்  கப்பலில் வட்ட மேசை மாநாட்டிற்கு புறப்பட்டார்.


70•             புரட்சியாளரும்  இரட்டை மலை சீனிவாசனும் இலண்டனை அடைந்தார்கள்.


71 •                   பகிஷ்கிரித் பாரத் என்ற ஏட்டிற்கு பதிலாக ஜனதா என்ற இதழ் தொடங்கப்பட்டது (24.11.1930).


72 •                 புரட்சியாளர்  நாசிக் மாநாட்டில்  உரையாற்றினார் (10.03.1930).


73 •               தீண்டப்படாத  வகுப்பினர் காவல்துறையில் சேருவதற்கான  அரசாணை 1931ல் பிறப்பிக்கப்பட்டது.


74 •              இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் புரட்சியாளர் கலந்து கொண்டார் (07.09.1931).


75 •               இரண்டாவது  வட்ட மேசை மாநாடு முடிந்தவுடன்  புரட்சியாளர் அவருடைய பழைய ஆசிரியர்களை சந்திப்பதற்காக நியுயார்க் சென்றார் (1931).


76 •                     இந்திய
 வாக்குரிமைக் குழு  லோதியன் பிரபு தலைமையில் அமைக்கப்பட்டது. புரட்சியாளர் இக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார் .


77 •                புரட்சியாளர்  அவர்களுக்கு  சென்னையில் ஆரவாரமான வரவேற்பு சென்னையில் அளிக்கப்பட்டது(1932).


78  •               நாகாபுரியில் 1932 ல்  நடைபெற்ற அனைத்திந்திய  தீண்டப்படாத வகுப்பினர் மாநாட்டில் கலந்து கொண்டார்.மேலும்          பூனாவில்  புரட்சியாளர் அவர்களுக்கு  மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.


79 •           அகல்யாசிரமம்  பொதுகூட்டத்தில் புரட்சியாளர் உரையாற்றுபோது எந்த தீண்டப்படாத வகுப்பில் பிறந்தேனோ , வளர்ந்தேனோ, வாழ்கின்றேனோ, அவர்களுடைய  முன்னேற்றத்திற்காகத் தொண்டு செய்யும் நிலைமையிலேயே நான் மடிய வேண்டும்  என்பதே என்னுடைய சூளுரையாகும்.


80  •          பிரட்டிஷ் பிரதமரையும் அமைச்சர்களையும் சந்திப்பதற்காக புரட்சியாளர்  லண்டன் பயணமானார் (26.05.1932) .


81  •                   பிரிட்டிஷ் பிரதமரிடம்  22 பக்கங்கள் நிரம்பிய வகுப்பு வாத பிரதிநிதித்துவம் உள்ளடங்கிய கோரிக்கை அறிக்கையை அளித்ததன் விளைவாக
பிரிட்டிஷ் பிரதமர் வகுப்புவாரித்  தீர்ப்பை அறிவித்தார். இதன்படி தீண்டாப்படாத  வகுப்பு மக்களுக்கு  தனி வாக்காளர் தொகுதி வழங்கப்பட்டது.


82 •                 வகுப்பு வாத தீர்ப்பை  எதிர்த்துக்  காந்தி சாகும் வரை  உண்ணாவிரத  போராட்டத்தை  அறிவித்ததை தொடர்ந்து              புரட்சியாளர்,  மாளவியா, எம்.சி.ராஜா முதலானோர் காந்தியை எரவாடா சிறையில்(21.09.1932) சந்தித்தனர்.


83 •               புரட்சியாளர் காந்தியை மீண்டும்  சந்தித்தார் . புரட்சியாளருடன்  எம்.ஆர் .ஜெயகர்,பிர்லா ,சுனிலால்,மேத்தா, சி.இராசகோபாலாச்சாரி  ஆகியோர் சென்றிருந்தனர் (22.09.1932) .


84 •            புரட்சியாளரும்    காந்தியும் பூனா ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டனர் . காந்தி உண்ணா விரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதற்காக புரட்சியாளர் தீண்டப்படாத வகுப்பு மக்களுக்குத் தனி வாக்களர் தொகுதி கோருவதை கைவிட ஒப்புக்கொண்டார்.
மேலும்    பூனா ஒப்பந்தத்தை பிரிட்டிஷ் பிரதமர்  ஏற்றுக்கொண்டார்.


85 •             புரட்சியாளர் பம்பாய் மாகாண சட்டச்சபையில் கிராம பஞ்சாயத்துத் திருத்த சட்ட மசோதா               (06.10 1932) மீது உரையாற்றினார்.


86 •               புரட்சியாளர் மூன்றாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புறப்படுவதற்கு முன் மெக்வால் சமூகத்தினர் புரட்சியாளருக்கு ஒரு பாராட்டுவிழா நடத்தினார்கள் (04.11.1932) .


87 •             மூன்றாவது வட்டமேசை மாநாடு  தொடங்கியது (17.11.1932). அம்பேத்கார் கலந்து கொண்டார் .


88 •                 புரட்சியாளர்  பிறந்த நாள்தோறும்   (14.04.1933)    முதன் முதலாக பொதுவிழாவாகப் பம்பாய், நாசிக்,பூனா ஆகிய
 இடங்களில்    கொண்டாடப்பட்டது.


89 •                 புரட்சியாளர் இலண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார் .         லின்லித்தோ பிரபுவின் தலைமையில் அமைக்கப்பட்ட பாராளுமன்றக் கூட்டுக்குழுவின் கூட்ட நடவடிக்கைகளில் அன்று (07.11.1933 ) புரட்சியாளர் கலந்து கொண்டார்


90 •          புரட்சியாளர் 1933 ல் இராஜகிரகா வீடு கட்டி முடிக்கப்பட்டது.


91 •               சூன் 1934 பம்பாய் அரசினர் சட்டக்கல்லூரியில் பகுதி நேரப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார் .


92 •        புரட்சியாளரின் மனைவி இராமா பாய் (27.05.1935) மறைந்தார்.


93 •                புரட்சியாளர் முதல் பம்பாய் சட்டக்கல்லூரியின்  முதல்வராக  நியமிக்கப்பட்டார் (01.06.1935).


94 •                   நாசிக் சாலையில் தீண்டப்படாத வகுப்பினர் மாநாடு  (10.03 1935 ) நடந்தது. இந்துக்கடவுள்களை , சாத்திரங்களை , புரோகிதர்களை, புனித பயணங்களைப் புறக்கணிப்பது என்றும் கோயில் நுழைவுப் பிரச்சாரத்தை நிறுத்தி விடுவது என்றும் அந்த மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டது.


95•            சனவரி 1936 பூனாவில் அகல்யா ஆசிரமத்தில் என்.சிவராஜ் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் புரட்சியாளர் இந்து மதத்தை விட்டு விலகுவது என்ற தன்னுடைய முடிவை வலியுறுத்தினார்.
   

96 •          ஏப்ரல் 1936 சீக்கியர் கழகம் நடத்திய மாநாட்டில்  புரட்சியாளர் கலந்து கொண்டார்.


97 •      ஜாட் -பட்-தோடக் மண்டல் நடத்தும்       (27.04 1936 ) மாநாட்டிற்குத்  தலைமை ஏற்க வர முடியாது என்றும் தான் தயாரித்துள்ள தலைமை உரையில் ஓர் எழுத்தையும் மாற்ற முடியாது என்றும் புரட்சியாளர் அச்சங்கத்திற்கு தெரிவித்தார். மேலும்       ஜாட் -பட் -தோடக் மண்டல் மாநாட்டிற்காக (15.05.1936)  எழுதியிருந்த  தலைமை உரையை சாதி ஒழிப்பு என்ற பெயரில் நூலாக வெளியிட்டார் .


98 •                  இந்திய அரசியல் சட்டத்தின் படி 1935 ல் நடைபெற  இருந்த பொதுத் தேர்தலில்  போட்டியிடுவதற்காகச் சுதந்திர தொழிற்கட்சியை நிறுவினார்.


99 •          இந்தியாவில் பொதுத்தேர்தல் ( 1937)  நடைபெற்றது சட்டசபையில் மொத்தம் இருந்த 175 இடங்களில்  ஒதுக்கப்பட்ட இடங்கள் 15. புரட்சியாளரின் சுதந்திரத் தொழிற்கட்சியின் வேட்பாளர்கள்  17 பேர் வெற்றி பெற்றனர்


100 •             சுதந்திரத்  தொழிற்காட்சியின் சார்பில் நின்று வெற்றி பெற்றவர்களில் புரட்சியாளர், பி,கே.கெய்க் வாடு, ஆர்.ஆர் போலே ,  டி.ஜி ஜதாவ்ஷாஸாஷா முதலானோர் குறிப்பிடத்தக்கவர்.


101 •      அமைச்சர்களின் சம்பளம் குறித்து (23.08.1937)  பம்பாய் மாகாணச்சட்ட சபையில் அம்பேத்கர் பேசினார்.


102 •               பம்பாய் மாகாணச்சட்ட சபையில் கோட்டிமுறை குறித்து உரையாற்றினார் . மகார் வட்டன் நிலமானிய ஒழிப்பு மசோதா மீதும் உரையாற்றினார்.


103 •           பந்தர்பூரில்  தீண்டப்படாத வகுப்பினர் மாநாட்டில் சொற் பொழி வாற்றினார் (31.12.1937). மேலும்   ஷோலாப்பூர்   மாங் வகுப்பினர் மாநாட்டில் உரை நிகழ்த்தினார்  (1938).


104 •              பம்பாய் மாகாணச் சட்டசபையில்  நன்னடத்தை காரணமாகப் புதுக் குற்றவாளிகளுக்கு விடுதலை அளிக்கும் மசோதா மீது புரட்சியாளர் உரையாற்றினார். மேலும் அகமத் நகரில் (23.01.1938) விவசாயிகள் மாநாட்டில் உரை நிகழ்த்தினார்.


105  •          பம்பாய் மாகாணச்  சட்ட சபையில்  காவல் துறைத்திருத்த சட்ட மசோதா மீது  உரையாற்றினார் கடைசி சொட்டு இரத்தம்
உள்ள வரை தீண்டப்படாத  வகுப்பு  மக்கள் சுரண்டப்படுவதை எதிர்ப்பேன் என்றார்.


106 •              பம்பாய் சட்டக்கல்லூரியின் முதல்வர்  பதவியிலிருந்து விலகினார்.


107 •            பூனாவில் அகல்யா ஆசிரமத்தில் தீண்டப்படாத மாணவர்கள் விடுதியில் பதினோராவது ஆண்டு விழாவில் புரட்சியாளர் கலந்து கொண்டு உரையாற்றினார்.    பூனாவில்  கோகலே மண்டபத்தில் கூட்டாட்சியும் சுதந்திரமும் என்ற  தலைப்பில் சொற் பொழிவாற்றினார் (1939).


108 •          புரட்சியாளர்  மகாஸ்தவீர் சுந்தராமணியைக் குசிநாராவில் சந்தித்தார் (1943).


109 •          புரட்சியாளர் எழுதிய "பாக்கிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை " என்ற நூலை தாக்கர்அண்ட் கோ என்ற நூல் வெளியீட்டு  நிறுவனம் வெளியிட்டது.


110 •               சூன் 1945 "காங்கிரசும் காந்தியும் தீண்டப்படாதவர்களுக்குச் செய்தது என்ன " என்ற புரட்சியாளரின் நூல் வெளியிடப்பட்டது,


111  •           புரட்சியாளர் மக்கள் கல்விக் கழகத்தைப் பம்பாயில் அமைத்தார்              (சூலை 1945).


112•             பிரிட்டிஷ் பாராளுமன்ற தூதுக்குழுவின் முன் புரட்சியாளர் சாட்சியம் அளித்தார் (10.01.1946).


113 •                   சென்னை யிலிருந்து வெளிவந்த ஜெய் பீம் ஏட்டில் "தீண்டப்படாதவர்களைப் புறக்கணித்திட காங்கிரஸ் மேற்கொள்ளும் முயற்சிகள்"  என்ற புரட்சியாளர் எழுதிய கட்டுரை வெளி வந்தது(1946) .


114  •          புரட்சியாளர் பம்பாயில் நிறுவிய சித்தார்த்தா கல்லூரி செயல் படத்தொடங்கியது (1946).


115  •         வைஸ்ராயின் நிர்வாக குழுவிலிருந்து புரட்சியாளர் விலகினார். மேலும்      புரட்சியாளர் எழுதிய" சூத்திரர்கள் யார் " என்ற நூல் வெளியிடப்பட்டது (13.10.1946).


116 •         புரட்சியாளர் அரசியலமைப்புச் சட்ட அவைக்கு வங்காளத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் (1946).


117 •           புரட்சியாளர் எழுதிய "மாகாணங்களும் சிறுபாண்மையினரும்" என்ற நூல் வெளியிடப்பட்டது (1947).


118•            புரட்சியாளரை தலைவராக கொண்ட அரசியல் சட்ட வரைவுக் குழு அமைக்கப்பட்டது (29.08.1947).       புரட்சியாளர் அரசியல் அமைப்பு சட்ட நகலை எழுதி முடித்தார் (பிப்ரவரி 1948).


118  •              புரட்சியாளர் சாரதா கபீரைத் திருமணம் செய்து கொண்டார் . புரட்சியாளரின் இரண்டாவது திருமணம்  இது(1948).


119 •             இந்துச் சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக புரட்சியாளர் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது(1948).


120  •                இந்திய  அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது (1949) .


121 •                     "புத்தரும் பௌத்தத்தின் எதிர்காலமும்"  என்ற தலைப்பில் கல்கத்தாவின் மகா போதி ஏப்ரல் -மே இதழுக்கு ஒரு கட்டுரை அனுப்பினார் (1950).மேலும்  இலங்கையில் உள்ள  கண்டிக்கு சென்றார் .


122  •          பிரதமர்  நேரு இந்துச் சட்டத்திருத்த மசோதா தொடர்பாக புரட்சியாளரின் நிலைபாட்டை ஆதரிக்காமல் கைவிட்டு விட்டார்(1951) .


123 •             இந்து சட்ட திருத்த மசோதா தொடர்பாக புரட்சியாளர் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானார் .   எனவே  நேரு அமைச்சரவையிலிருந்து அம்பேத்கார்   விலகினார்.


124 •                உசுமானிய பல்கலைக்கழகம் புரட்சியாளருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது(1953).


125 •             இரங்கூணில்  தந்தைப் பெரியாரும்  அம்பேத்கரும் உரையாடினர் (1955), புரட்சியாளர் பௌத்த மதத்திற்கு மதம் மாறிய நிகழ்ச்சி நாகாபுரியில் நடைபெற்றது.

126 •          மாபெறும் மனிதராக திகழ்ந்த புரட்சியாளர் தில்லியில் அலிப்பூர் சாலையில்  உள்ள அவருடைய  இல்லத்தில் மறைந்தார் ,இரவு 9 மணிக்கு விமானம் மூலம் தில்லியிலிருந்து பம்பாய்க்கு அவர் உடல் எடுத்துச்செல்லப்பட்டது .(06.12.1956)

மகிழ்ச்சியாக இருக்க 20 வழிகள் !



மகிழ்ந்திரு....

மனம் ஒரு நாளில் எவ்வளவு
நிமிடம், எவ்வளவு நேரம் மகிழ்ச்சியாக இருக்கிறதோ, இதுவே மனித சக்தி. மனம் மகிழ்ச்சியாக இருக்கும்பொழுது, உடலிலுள்ள அனைத்து உறுப்புகளும் ஒழுங்காக வேலை செய்யும் வீரியத்துடன் வேலை செய்யும், அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். ஆரோக்கியமாக இருக்க முடியும்.

மகிழ்ச்சியாக இருக்க, ஹார்வர்டு பின்பற்றச்சொல்லும் 20 வழிகள் !

1. எல்லோரையும் கொண்டாடுங்கள்!
💠🔵💠🔵💠🔵💠🔵💠🔵💠
உங்களைச்சுற்றி இருக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் கூர்ந்து கவனியுங்கள்.. சாலையில் நடக்கும் போது,  ஓரத்தில் பூத்துக்குலுங்கும் மலர்களை ரசியுங்கள்   உங்களை சுற்றியிருக்கும் மனைவி, நண்பர்கள், குழந்தைகள் என எல்லாரையும் ரசியுங்கள்..கொண்டாடுங்கள்..மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது..
➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖
2.நல்ல நண்பர்களை சம்பாதியுங்கள்
💠🔵💠🔵💠🔵💠🔵💠🔵💠
ஒருவரின் மனதின் மகிழ்ச்சியை அவரை சுற்றியிருக்கும் விஷயங்களே முடிவு செய்கின்றன. எனவே, மிகவும் மகிழ்ச்சியான நண்பர்கள், உங்களுக்கு ஊக்கமளிக்கும் நண்பர்கள், உங்களை குறைசொல்லாத, உங்களை நம்பிக்கையை சிதைக்காத நண்பர்களுடனேயே நேரத்தை செலவிடுங்கள்..! இது உங்கள் பாசிட்டிவ் எனர்ஜியை குறைக்காமல் வைத்திருக்கும்.
➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖
 3.அக்கறையை  வளர்த்துக்கொள்ளுங்கள்!
💠🔵💠🔵💠🔵💠🔵💠🔵💠
 நீங்கள் எதிர்பாராத சமயத்தில், அடுத்தவரின் வாழ்க்கையில் நுழையும் போது, அவர்கள் மீது, அக்கறையை வளர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் வேலைக்கு சேர்ந்த இடம், புதிய குடியிருப்பு, திருமணம் என எல்லா இடத்திலும் இது பொருந்தும். நமது இடத்திற்கு ஏற்ப, நமது அக்கறையை, அன்பை நாம் பிறர்மீது வளர்த்துக்கொண்டால், செல்லுமிடமெல்லாம் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖
4. கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள்!
💠🔵💠🔵💠🔵💠🔵💠🔵💠
 “வாழ்க்கையில் எப்போதும், கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள். ஏனெனில் வாழ்க்கை உங்களுக்கு கற்றுக்கொடுப்பதை நிறுத்தாது” என்ற பிரபல வாசகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம். அது முற்றிலும் உண்மை. ஆய்வின் படி, நீங்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருப்பதன் மூலம், உங்களை மூளை எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் உங்களது துன்ப நினைவுகளை அது அசைபோடாது எப்போதும் பிசியாக இருக்கும். எனவே மனம் எப்போதும், மகிழ்ச்சியாக இருக்கும்.
➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖
 5. தடை..அதை உடை.!
💠🔵💠🔵💠🔵💠🔵💠🔵💠
 எப்போதும், எந்த இடத்திலும் பிரச்சினைகளே இருக்கக்கூடாது என நினைக்காதீர்கள். எந்த பிரச்சினை வந்தாலும், அதனை தாங்கும் வலிமை வளரவேண்டும் என நினையுங்கள். நீங்கள் பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள, எதிர்கொள்ள உங்கள் தன்னம்பிக்கை தானாக அதிகரிக்கும். வருங்காலத்தில் உங்கள் முன்பு எந்த பிரச்சினை வந்தாலும், “இதை எப்படி சமாளிக்கப்போகிறோம்? “ என்ற கேள்வி வரவே வராது. இந்த திறமையை வளர்த்துக்கொண்டால், பிரச்சினைகளால், உங்களுக்கு பிரச்சினை இல்லை.
➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖
 6.நினைத்தை முடிக்கவும்!
💠🔵💠🔵💠🔵💠🔵💠🔵💠
 நமக்கு பிடித்த விஷயங்களை செய்யம்போது, நமது மனம் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருக்கும். பல பேருக்கு, வாழ்க்கையின் மீது வெறுப்பு வர, பிடிக்காத வேலையை தினமும் செய்து கொண்டிருப்பதே காரணமாக இருக்கும். அதை வேண்டாம் என தவிர்க்கவும் நம் பொருளாதார சூழல் இடம் தராது. அதே சமயம் உங்களுக்கு பிடித்த சினிமா பார்ப்பதையே, புத்தகம் படிப்பதையோ, பயணம் செல்வதையோ யாராலும் தடுக்க முடியாதே? இவற்றை அடிக்கடி செய்யுங்கள்..மகிழ்ச்சி மெல்ல மெல்ல அதிகரிக்கும்.
➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖
 7.எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது!
💠🔵💠🔵💠🔵💠🔵💠🔵💠
 நீங்கள் அடிக்கடி கவலைப்படும் நபராக இருந்தால், நீங்கள் உங்கள் கடந்த காலத்தையே நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களது சோக நினைவுகள் உங்களுக்கு வருத்தத்தை தந்தாலும், அவை நடந்து முடிந்த விஷயங்கள். அவற்றை உங்களால் மாற்றவும் முடியாது. எனவே இல்லாத, கடந்த காலத்தை நினைத்து, நிகழ்கால மகிழ்ச்சியை இழக்காமல், நிகழ்காலத்தில் வாழுங்கள். நடப்பதை மட்டுமே நினையுங்கள்.. பாதி கவலைகள் பறந்தோடும்.
➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖
8.அடிக்கடி சிரியுங்கள்!
💠🔵💠🔵💠🔵💠🔵💠🔵💠
அடுத்த நொடி, என்ன நடக்கும் என்பது கூட தெரியாத, நிச்சயமற்ற வாழ்க்கைதானே நாம் வாழ்வது? இதில் ஏன் இவ்வளவு சிக்கல்களை உருவாக்கிக்கொண்டு அழ வேண்டும்? எப்போதும் சிரிப்பது ஒன்றும் கஷ்டமான வேலை இல்லையே.. நகைச்சவை உணர்வு கொண்டவராக மாற்றிக்கொள்ளுங்கள்..முடியவில்லையா? ஒரு நகைச்சுவை படம் பார்க்கலாம். ஹியூமர் நிரம்பி வழியும் நண்பர்களுடன் பேசலாம்..சிரிப்பு நமக்கு கிடைத்திருக்கும் பரிசு..அதைப்பயன்படுத்துங்கள்.. அதுதான் உங்கள் கோபத்தை, விரக்தியை விரட்டும் மருந்து.. பின்பற்றி பாருங்கள்..உங்கள் துன்பத்திலும் சிரிப்பதற்கான காரணம் கிடைக்கும்..
➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖
9.மன்னிக்க கற்றுக்கொள்வோம்!
 💠🔵💠🔵💠🔵💠🔵💠🔵💠
கோபம் என்பது அடுத்தவர்களின் தவறுக்காக, நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் சுயதண்டனை. அதை ஏன் அடிக்கடி அனுபவிக்க வேண்டும்? பதிலாக அவர்களை மன்னித்துப்பாருங்கள்.. உங்கள் மனமும் மகிழும்..உங்கள் குணமும் வளரும்.. தவறு செய்யாதவர்கள் யாருமே இல்லைதானே? எனவே மன்னிப்போம்..மறப்போம்..என இருந்தால், உங்கள் மதிப்பையும், மகிழ்ச்சியையும் இது இன்னும் அதிகாரிக்கும்தானே !
➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖
10.நன்றி சொல்வது, நன்று!
💠🔵💠🔵💠🔵💠🔵💠🔵💠
 உங்களை சுற்றியிருப்பவர்களிடம் அடிக்கடி நன்றி சொல்லுங்கள்..அவர்கள் செய்யும் சிறிய உதவியோ, பெரிய உதவியோ அதனைப் பாராட்ட மறக்காதீர்கள். நன்றி சொல்ல மறக்காதீர்கள்.
➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖
11.உறவின் ஆழம் அதிகரிக்கட்டும்!
💠🔵💠🔵💠🔵💠🔵💠🔵💠
வீடு, அலுவலகம், சுற்றம் என சமூகத்தில் பல பேரிடம் நாம் இணைந்தே வாழ்கிறோம். அப்படி நாம் கொண்டுள்ள சொந்தங்களில், நெருக்கமான உறவுகளுடன் நேரம் செலவிடும் போதே, அதிக மகிழ்ச்சி அடைகிறோம்.  அப்படி நெருக்கமான மனிதர்களை அதிகம் வளர்த்துக்கொள்ளுங்கள். மற்றவர்களிடம் பேணும் உறவில், இந்த நெருக்கத்தை அதிகரிப்பதன் மூலம், உற்சாகம் அதிகமாகும்.
➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖
 12.கொள்கையில் உறுதி வேண்டும்
💠🔵💠🔵💠🔵💠🔵💠🔵💠
நீங்கள் விரும்பிய செயல்களை, செய்து முடிக்க வேண்டும் என முடிவெடித்திருக்கும் செயல்களை எப்பாடு பட்டாவது செய்துமுடித்துவிடுங்கள். அந்த உறுதிதான் உங்கள் மீதான, தன்னம்பிக்கையை உங்களிடம் அதிகம் வளர்க்கும். இதில் ஒவ்வொரு முறை தோல்வியடையும் போதும், உங்கள் நம்பிக்கையின் அளவும் குறையும்.
➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖
13.தியானம் நல்லது!
💠🔵💠🔵💠🔵💠🔵💠🔵💠
 ஆய்வின் படி, தியானம் செய்பவர்களின்  மூளையில் , தியானம் செய்யாதவர்களின் மூளையை விட, கற்றுக்கொள்ளும் திறனும், நினைவாற்றல் திறனும் 20 சதவீதம் அதிகரிக்கிறது. எனவே தினமும் கொஞ்ச நேரம் தியானம் செய்யலாமே !
➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖
 14.செய்வதை திருந்தச்செய் !
💠🔵💠🔵💠🔵💠🔵💠🔵💠
நீங்கள் எந்த வேலை  வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அதில் உங்கள் மனமும், உடலும் ஒன்றி இருக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் மனம் தேவையற்ற சிந்தனைகள் பற்றி நினைக்காது. தேவையற்ற சிந்தனைகள் மூளையை குழப்பாமல் இருந்தாலே, மகிழ்ச்சியும் குறையாது.
 ➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖
 15. நம்பிக்கை..அதானே எல்லாம்!
💠🔵💠🔵💠🔵💠🔵💠🔵💠
வாழ்க்கையில், தோல்விகள் வந்தாலும் கூட, அதில் இருக்கும் எதிர்மறை விஷயங்களை விட்டுவிட்டு, நேர்மறையாக ரசியுங்கள். இந்தியா- ஆஸ்திரேலியா போட்டியில், இந்தியா தோற்றுவிட்டது என்றால், அது எதிர்மறை சிந்தனை.  இந்த முறை ஆஸ்திரேலியா ஜெயித்துவிட்டது என நினைத்தால், அதுதான் நேர்மறை சிந்தனை. இந்த குணத்தை மட்டும் வளர்த்துகொண்டால், உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். தோல்விகள் கற்றுக்கொடுக்கும் பாடங்கள் அதிகரிக்கும். அப்படியே, மகிழ்ச்சியும் !
➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖
 16. ஆதலால் அதிகம் காதல் செய்!
💠🔵💠🔵💠🔵💠🔵💠🔵💠
 நீங்கள் விரும்புவது போன்று, மனிதர்கள் வேண்டுமென்றால், இந்த உலகில் யாருமே கிடைக்கமாட்டார்கள். எனவே உங்களைச் சுற்றியிருக்கும் எல்லோரையும் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் உங்களுக்கு பிடித்தவரை அளவுக்கதிகமாக விரும்புங்கள்.. காரணம் அன்பு செய்தல் அவ்வளவு சுகம் !
➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖
 17.முயற்சியை கைவிடாதீர்கள்!
💠🔵💠🔵💠🔵💠🔵💠🔵💠
 உங்களால் முடிக்க முடியாத சவால்கள், ஜெயிக்க முடியாத சந்தர்ப்பங்கள் வரும் போதெல்லாம், உங்கள் நம்பிக்கையின் மீது, உங்களுக்கே சந்தேகம் வரும். அப்போதெல்லாம், உங்கள் முயற்சியை மட்டும் கைவிட்டு விடாதீர்கள். தோல்வி என்பது தற்காலிகமானதே.. வீழ்வது என்பது தவறல்ல..வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு..எனவே இன்னொரு முறை முயற்சி செய்துபாருங்கள்.
➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖
18.உங்களது சிறப்பைக்கொடுங்கள்!
💠🔵💠🔵💠🔵💠🔵💠🔵💠
 ஏதேனும் ஒரு முயற்சியில் உங்களால், ஜெயிக்க முடியாமலே போகலாம். அப்போதெல்லாம் என்னால் முடியாது என ஒதுங்கிப்போகாமல், எவ்வளவுதான் நம்மால் முடியும் என சுயபரிசோதனை செய்துதான் பாருங்களேன். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.
➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖
 19.நமக்கு நாமே நல்லது!
💠🔵💠🔵💠🔵💠🔵💠🔵💠
 உலகில் உங்களது மிகச்சிறந்த காதலன் / காதலி நீங்களாகவே இருக்க வேண்டும். உங்கள் உடலின் மீது உங்களுக்கு மிகுந்த அக்கறை நிச்சயம் தேவை. சுவர் இருந்தால்தானே சித்திரம்? எனவே, உணவு, உறக்கம் என உங்கள் விஷயங்களில் அதிக கவனம் இருக்கட்டும். நீங்கள் முதலில் உங்களை விரும்புங்கள்.
➖🍏➖🍏➖🍏➖🍏➖🍏➖
 20. நன்மையே செய்வோம்!
💠🔵💠🔵💠🔵💠🔵💠🔵💠
 எப்போதும் நல்ல விஷயங்களையே செய்வோம். அதுவே எப்போதும் இன்பம் தரும். நல்ல விஷயங்களை செய்யும் போது, நம்மை பாராட்ட வேறு யாரும் வேண்டாம். நமது மூளையே, நம்மை பாராட்டி , மகிழ்ச்சியாக்கி விடும். தவறு செய்யும் போது, இதனால்தான் குற்றவுணர்ச்சி நம்மை துயரம் செய்கிறது. எனவே நல்லதே செய்வோம். மகிழ்ச்சியாக இருப்போம் !

கணவன் சாப்பிட்ட இலையில் மணைவி சாப்பிட காரணம்




கணவன் சாப்பிட்ட இலையில் மணைவி சாப்பிட காரணம்

திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள்அது ஏன் என்று தெரியுமா?
அதற்க்கு ஒரு காரணம் உண்டு, கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,
அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம்,
பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.



கணவன் சாப்பிட்ட அதே இலையில் மனைவி உண்ண காரணம்
மேலே உள்ள கேள்வியைப் பார்த்துவிட்டு ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் என்று எல்லாம் என்னிடம் வாதாட வந்து விடாதீர்கள். கணவன் சாப்பிட்ட அதே இலையில் மனைவி உண்ண காரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.தெரிந்துக்கொள்ள விரும்பினால் தொடருங்கள்.
பொதுவாக எந்தப் பெண்ணும் சமைக்கும் பொழுது அதனை தன் கணவன் ரசித்து ருசித்து உண்ண வேண்டும் என்பதையே மனதில் கொண்டு சமைக்கின்றாள். அவ்வாறு சமைத்த உணவை கணவன் ரசித்து உண்பதைப் பார்க்க வேண்டும் என்பதாலும், கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான். அவனுக்கு பின் அதே இலையில் உணவு உண்ணும் மனைவி கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம், பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், என்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்டதே இந்த பழக்கம்.
கணவனில் எச்சிலில் இருக்கும் புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு.
என்ன தான் கணவனின் ஜீன் குழந்தைக்குள் இருந்தாலும் அது லேட்டஸ்டாக அப்டேட் ஆகவே இந்த ஏற்பாடு. மேலும் இது வயிற்றிற்குள் இருக்கும் குழந்தையின் முதல் ஆறு மாதத்திற்குள் உண்டாகும் வளர்சிதை மாற்றங்களுக்கும், பிறந்தபின் முதல் ஆறு மாதங்களுக்கு ஏற்படும் வளர்ச்சிக்கும் மிக மிக அத்தியாவசமாகிறது என்று மேல்நாட்டு அறிவியல் வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர்….
அது மட்டுமின்றி கணவன் வெளியே சென்றிருக்கும்பொழுது நமக்காக நம் மனைவி இன்னும் சாப்பிடமால் காத்துக் கொண்டிருப்பாள் என்பதை உணரும் பொழுது நேரம் தாமதம் ஆகாமல் சீக்கிரம் வீட்டுக்கு வர முயற்சி செய்வான். இது கணவனுக்கு மாத்திரம் கிடைக்கும் ஒரு சந்தோஷமாகும்.
அறிவியல்படி விளக்க வேண்டுமானால் பொதுவாக ஈரமான பொருளில் அல்லது திரவத்தில் விரல்கள் படும்போது விரல்களில் இருந்து ஒருவித திரவம் சுரக்கும். அந்தத் திரவம் எளிதில் அப்பொருளை ஜீரணமாக்கிவிட உதவும். இதனாலோ என்னவோ கணவன் முதலில் உண்டு விட்ட பிறகு மனைவி அதே இலையில் உண்ண வேண்டும் என்று கூறினார்கள்.
நம்பினால் நம்புங்கள் – இந்துக் கலாச்சாரத்தில் மட்டும் இந்த நடை முறை இல்லை. இஸ்லாத்திலும் நாம் இதனைக் காணாலாம். “சாப்பிட்டு முடித்தவுடன் உங்கள் விரல்களை நீங்களோ அல்லது மற்றவரோ (உங்கள் விரல்களை) சூப்பாதவரை அந்த இடத்தை விட்டு எழுந்திருக்காதீர்கள்” என்பது நபிமொழியாகும். நாம் நமது விரலை சூப்புவது என்பது அனைவரும் புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால் இங்கு மற்றவர் நம் விரலை சூப்புவது குறித்தும் கூறப்பட்டுள்ளது எனில் அந்த மற்றவர் யாராக இருக்க முடியும்? மனைவியாகத்தானே இருக்க முடியும்!

வாழ்க்கையில் நாம் குறைக்க வேண்டிய உப்புகள்..



உப்பைக் குறையுங்கள் என்று எல்லா டாக்டர்களும் சொல்கிறார்கள்.* *அதனால் வாழ்க்கையில் நாம் குறைக்க வேண்டிய உப்புகள்...*
கணவன்கள் - படபடப்பு...
மனைவிகள் - நச்சரிப்பு...
டீன் ஏஜ்க்கள் - பரபரப்பு...
மாணவர்கள் - ஏய்ப்பு...
மாமியார்கள் - சிடுசிடுப்பு...
மருமகள்கள் - கடுகடுப்பு...
வக்கீல்கள் - ஒத்திவைப்பு...
டாக்டர்கள் - புறக்கணிப்பு...
அரசியல்வாதிகள் - ஆர்ப்பரிப்பு...
வயதானவர்கள் - தொணதொணப்பு...
ஆனால் யாரும் குறைக்கத் தேவையில்லாத ஒரே "உப்பு"  சிரிப்பு.அது உடம்புக்கு  மிகச்சிறப்பு...

அட்சய திருதியை பற்றி 60 தகவல்கள்



அட்சய திருதியை பற்றி 60 தகவல்கள்

அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.
1. அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது.
2. கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.
3. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
4. அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.
5. அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.
6. அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.
7. அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார்.
8. சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
9. பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.
10. அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.
11. ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும்.
12. அட்சய திருதியை நாளில் தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார்.
13. வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள்.
14. அரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட்இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள்.
15. ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும்.
16. வடஇந்தியர்கள் நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள்.
17. ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது.
18. பீகார், உத்தரபிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள்.
19. அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள்.
20. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால் கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.
21. அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
22. அட்சய திருதியை நாளில் தான் மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
23. அமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியை 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு `பொன்னன்’ என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.
24. ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.
25. அரிதான வேலையை சந்திப்பதை `அலப்ய யோகம்‘ என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும், ஆகவே அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.
26. அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு `அட்சதை’ என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்ஞறும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு `அட்சய திருதியை’ எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.
27. அட்சய திருதியை தினத்தை சமணர்கள் “அட்சய தீஜ்’’ என்றழைக்கிறார்கள்.
28. ரிஷபதேவர் எனும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.
29. அட்சய திருதியை விரதத்தை முதன் முதலில் கடைபிடித்தவர் மகாதயன் என்ற வியாபாரி ஆவார்.
30. மகாலட்சுமியின் பரிபூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.
31. அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.
32. குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் செய்யும் சடங்கு `அட்சய திருதியை’ நாளில் செய்யப்படுகிறது.
33. மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.
34. கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
35. தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
36. அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
37. வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும்.
38. மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.
39. ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.
40. அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும்.
41. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது.
42. அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், “கனகதாரை’’ நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள்.
43. அட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும்.
44. அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.
45. அட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.
46. அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும்.
47. அட்சய திருதியை தினத்தன்று சிவனே, அன்ன பூரணியிடம் உணவு பெற்றதால் நமசிவாய மந்திரம் அன்று முதல் சொல்லத்தொடங்கலாம். பிறகு தினமும் 108 தடவை ஓம் நமச்சிவாய சொல்லி வந்தால் பார்வதி-பரமேஸ்வரரின் அருள் கிடைக்கும்.
48. அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.
49. கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள்.
50. அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
51. அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.
52. அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை `தர்மகடம்‘ எனப்போற்றுவர்.
53. அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது.
54. அட்சய திருதியை நாளில் `வசந்த் மாதவாய நம’ என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுங்கள். முக்கியமான ஒன்று... தானம் செய்ய உகந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்கி சேமிப்பில் இறங்குவது சாஸ் திரத்துக்கு உடன் பாடில்லை.
55. அட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும்.
56. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும்.
57. புதன்கிழமை வரும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால், அது பல கோடி மடங்கு கூடுதல் பலன்களைத் தரும்.
58. ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது.
59. ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறுபிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.
60. மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.

திங்கள், 17 ஏப்ரல், 2017

உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் (தாசில்தார் ) செல் எண்கள் :-

உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் (தாசில்தார் ) செல் எண்கள் :-

1 சென்னை மாவட்டம்
1 Fort-Tondiarpet 94450 00484
2 Purasawakkam-Perambur 94450 00485
3 Egmore-Nungambakkam94450 00486
4 Mylapore-Triplicane 94450 00487
5 Mambalam-Guindy 94450 00488
2 திருவள்ளூர் மாவட்டம்
6 Ambattur 94450 00489
7 Ponneri 94450 00490
8 Gummudipoondi 94450 00491
9 Thiruthani 94450 00492
10 Pallipattu 94450 00493
11 Thiruvallur 94450 00494
12 Uthukottai 94450 00495
13 Poonamallee 94450 00496
3 காஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram
14 Kancheepuram 94450 00497
15 Uthiramerur 94450 00498
16 Sriperumbudur 94450 00499
17 Chengalpattu 94450 00500
18 Thirkkalukunram 94450 00501
19 Tambaram 94450 00502
20 Madurantakam 94450 00503
21 Cheyyur 94450 00504
4 வேலூர் மாவட்டம் Vellore
22 Arcot 94450 00505
23 Valaja 94450 00506
24 Arakkonam 94450 00507
25 Vellore 94450 00508
26 Gudiyatham 94450 00509
27 Katpadi 94450 00510
28 Tirupathur 94450 00511
29 Vaniyampadi 94450 00512
5 திருவண்ணாமலை மாவட்டம்
Thiruvannamalai
30 Cheyyar 94450 00513
31 Vandavasi 94450 00514
32 Arni 94450 00515
33 Thiruvannamalai 94450 00516
34 Polur 94450 00517
35 Chengam 94450 00518
6 விழுப்புரம் மாவட்டம் Villupuram
36 Kallakurichi 94450 00519
37 Sankarapuram 94450 00520
38 Thirukkoilur 94450 00521
39 Ulundurpettai 94450 00522
40 Thindivanam 94450 00523
41 Chengee 94450 00524
42 Villupuram 94450 00525
43 Vanur 94450 00526
7 கடலூர் மாவட்டம் Cuddalore
44 Chidambaram 94450 00527
45 Kattumannarkoil 94450 00528
46 Cuddalore 94450 00529
47 Panruti 94450 00530
48 Virudhachalam 94450 00531
49 Tittakudi 94450 00532
8 தருமபுரி மாவட்டம் Dharmapuri
50 Dharmapuri 94450 00533
51 Harur 94450 00534
52 Pappireddipatti 94450 00535
53 Pennagaram 94450 00536
54 Palacode 94450 00537
9 கிருஷ்னகிரி மாவட்டம் Krishnagiri
202 Krishnagiri 94450 00538
203 Uthangarai 94450 00539
204 Pochampalli 94450 00540
205 Hosur 94450 00541
206 Denkanikottai 94450 00542
10 நாமக்கல் மாவட்டம் Namakkal
64 Namakkal 94450 00543
65 Rasipuram 94450 00544
66 Thiruchengode 94450 00545
67 Paramathi-Velur 94450 00546
11 சேலம் மாவட்டம் Salem
55 Salem 94450 00547
56 Yercaud 94450 00548
57 Valaappadi 94450 00549
58 Attur 94450 00550
59 Gangavalli 94450 00551
60 Mettur 94450 00552
61 Omalur 94450 00553
62 Sankari 94450 00554
63 Edappadi 94450 00556
12 நீலகிரி மாவட்டம் The Nilgiris
84 Gudalur 94450 00557
85 Pandalur 94450 00558
86 Uthagamandalam 94450 00559
87 Kuntha 94450 00560
88 Kothagiri 94450 00561
89 Coonoor 94450 00562
13 ஈரோடு மாவட்டம் Erode
77 Erode 94450 00563
78 Perundurai 94450 00564
79 Dharapuram 94450 00565
80 Kangeyam 94450 00566
81 Bhavani 94450 00567
82 Gobichettiapalayam 94450 00568
83 Sathyamangalam 94450 00569
14 கோவை மாவட்டம் Coimbatore
68 Coimbatore(South) 94450 00570
69 Coimbatore(North) 94450 00571
70 Mettupalayam 94450 00572
71 Palladam 94450 00573
72 Thirupur 94450 00574
73 Avinashi 94450 00575
74 Pollachi 94450 00576
75 Valparai 94450 00577
76 Udumalaipettai 94450 00578
15 திண்டுக்கல் மாவட்டம் Dindigul
90 Dindigul 94450 00579
91 Natham 94450 00580
92 Nilakottai 94450 00581
93 Palani 94450 00582
94 Oddanchatram 94450 00583
95 Vedasedur 94450 00584
96 Kodaikanal 94450 00585
16 Madurai
102 Madurai(North) 94450 00586
103 Madurai(South) 94450 00587
104 Melur 94450 00588
105 Vadipatti 94450 00589
106 Usilampatti 94450 00590
107 Thirumangalam 94450 00591
108 Peraiyur 94450 00592
17 தேனி மாவட்டம் Theni
97 Periakulam 94450 00593
98 Theni 94450 00594
99 Andipatti 94450 00595
100 Uthamapalayam 94450 00596
101 Bodinayakanur 94450 00597
18 Karur 109 Karur 94450 00598
110 Aravakurichi 94450 00599
111 Kulithalai 94450 00600
112 Krishnarayapuram 94450 00601
19 திருச்சி மாவட்டம் Tiruchirapalli
119 Tiruchirappalli 94450 00602
120 Srirangam 94450 00603
121 Manapparai 94450 00604
122 Lalgudi 94450 00605
123 Manachanallur 94450 00606
124 Musiri 94450 00607
125 Thottiam 94450 00608
126 Thuraiyur 94450 00609
20 பெரம்பலூர் மாவட்டம் Perambalur
113 Perambalur 94450 00610
114 Veppanthattai 94450 00611
115 Kunnam 94450 00612
116 Ariyalur 94450 00613
117 Udayarpalayam 94450 00614
118 Senthurai 94450 00615
21 நாகப்பட்டம் மாவட்டம் Nagapattinam
127 Nagapattinam 94450 00616
128 Vedaranyam 94450 00617
129 Keelvelur 94450 00618
130 Thirukkuvalai 94450 00619
131 Mayiladuthurai 94450 00620
132 Tharangampadi 94450 00621
133 Seerkazhi 94450 00622
22 திருவாரூர் மாவட்டம் Tiruvarur
134 Mannargudi 94450 00623
135 Needamangalam 94450 00624
136 Thiruthuraipoondi 94450 00625
137 Thiruvarur 94450 00626
138 Nannilam 94450 00627
139 Kodavasal 94450 00628
140 Valangaiman 94450 00629
23 தஞ்சை மாவட்டம் Thanjavur
141 Thanjavur 94450 00630
142 Thiruvaiyaru 94450 00631
143 Orathanadu 94450 00632
144 Kumbakonam 94450 00633
145 Thiruvidaimaruthur 94450 00634
146 Papanasam 94450 00635
147 Pattukottai 94450 00636
148 Peravoorni 94450 00637
24 புதுக்கோட்டை மாவட்டம்
Pudukkottai
149 Kolathur 94450 00638
150 Elluppur 94450 00639
151 Alangudi 94450 00640
152 Pudukkottai 94450 00641
153 Gandarvakottai 94450 00642
154 Thirumayam 94450 00643
155 Aranthangi 94450 00644
156 Avudaiyarkoil 94450 00645
157 Manamelkudi 94450 00646
25 சிவகங்கை மாவட்டம் Sivagangai
158 Thirupathur 94450 00647
159 Karaikudi 94450 00648
160 Devakottai 94450 00649
161 Sivagangai 94450 00650
162 Manamadurai 94450 00651
163 Ilayankudi 94450 00652
26 ராமநாதபுரன் மாவட்டம்
Ramanathapuram
164 Ramanathapuram 94450 00653
165 Rameswaram 94450 00654
166 Thiruvadanai 94450 00655
167 Madukalathur 94450 00656
168 Kamudhi 94450 00657
169 Paramakudi 94450 00658
170 Kadaladi 94450 00659
27 விருதுநகர் மாவட்டம் Virudhunagar
171 Srivilliputhur 94450 00660
172 Rajapalayam 94450 00661
173 Sathur 94450 00662
174 Sivakasi 94450 00663
175 Aruppukkottai 94450 00664
176 Kaariapatti 94450 00665
177 Virudhunagar 94450 00667
178 Thiruchuli 94450 00668
28 திருநெல்வேலி மாவட்டம் Tirunelveli
187 Palayamkottai 94450 00669
188 Sakarankoil 94450 00670
189 Tirunelveli 94450 00671
190 Ambasamudram 94450 00672
191 Nanguneri 94450 00673
192 Radhapuram 94450 00674
193 Thenkasi 94450 00675
194 Shenkottai 94450 00676
195 Veerakeralampudur 94450 00677
196 Aaangulam 94450 00678
197 Sivagiri 94450 00679
29 தூத்துக்குடி மாவட்டம் Thoothukudi
179 Thoothukudi 94450 00680
180 Srivaikuntam 94450 00681
181 Thiruchendue 94450 00682
182 Sathankulam 94450 00683
183 Koilpatti 94450 00684
184 Ottapidaram 94450 00685
185 Vilathikulam 94450 00686
186 Ettaiyapuram 94450 00687
30 கன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari
198 Thovalai 94450 00688
199 Agastheeswaram 94450 00689
200 Kalkulam 94450 00690
201 Vilavancode 94450 00691...
சற்றே சிந்தித்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்...

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

கனவிலாவது புதிய இந்தியா பிறக்குமா???




🥀 வளர்ச்சி நாயகன் மோடி என்று வாய் நீளம் காட்டிய இந்தியனே ?  நெட்டிசனே ? 👉 இப்ப சொல் இதுஉனக்கு சம்மதம் தானா ? 👈

 🛢2012ல் சிலிண்டர் விலை₹399 😊
இப்ப விலை ₹842 🤡

💳 ஏடிஎம்-களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.150 கட்டணம்

💳ஏடிஎம்-களில் 1 முறைக்கு மேல் Balance Enquiry செக் செய்தால் ரூ.9.20 கட்டணம்

💳 ஏடிஎம்-களில் "CARDLESS" Deposit/Withdrawal செய்தால் ரூ.25 கட்டணம்

🏧 Nil Balance Account உள்ளவா்களுக்கு PassBook வேண்டுமென்றால் ரூ.500 கட்டணம்

💡இந்த நொட்டை எல்லாம் பத்தாது என்று ..இப்ப

😳 இனி வங்கி கணக்கில் 'மினிமம் பேலன்ஸ்' ரூ.5000 இருக்கனும்

😎 பெருநகரங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்ச தொகையாக ரூ.5000 மும்,

🤓 நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.3000 மும்,

🤠 புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் ரூ.2000 மும்,

😷 கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.1000 மும் வைத்திருக்க வேண்டும்.

👎🏾 குறைந்த பட்ச வைப்பு தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளதாகவும், இந்த முறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் *எஸ்பிஐ* அறிவித்துள்ளது. ✍

யோவ் ! மோடியை அவதாரப்புருசனாகப் பாரத்த பாவிகளே !!

🛄 இது என்ன வங்கியா ? அவுத்துப் போட்ட லுங்கியாடா ... கேனப்பய ஊருக்குள்ளே கிறுக்குப் பயலுக்கு நாட்டமை காெடுத்தா இப்படித்தான் இருக்கும்.... 🙊🙉🙈

🗽🛬 1.முதலில் சொன்னார்கள் வெளிநாட்டில் உள்ள கறுப்பு பணத்தை கொண்டு வந்து ஒவ்வொருவருடைய  வங்கி கணக்கில் 15லட்சம் வரவு வைக்கப்படும் என்று.  💵💴💶💷💰
                               
  2.அந்த பணத்தை போடுவதற்கு வசதியாக எல்லோருக்கும் ஒரு வங்கி கணக்கு வேண்டும் என்றார்கள்.    😜🤑🤡          

 3.1000,500 ரூபாய்களை ஒழித்து இந்தியாவில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டால் புதிய இந்தியா பிறக்கும் என்றார்கள்.    🐣

                                                 கடைசியில் ஒரு இந்தியாவும் பிறக்கவில்லை என்ன செய்வது என்று யோசித்தார்கள் 😳🤔

உங்களிடம் ரூபாய் 5000 தா, 3000 தா என்று கேட்டால் கொடுப்பீர்களா?  😡😠  கொடுக்க மாட்டீர்கள்(தேச பக்தர்கள் கொடுப்பார்கள்?) 😈👹

பெரு நகரங்களில் உள்ளவர்கள் 5000-மும், நகரங்களில் உள்ளவர்கள் 3000 மும், கிராமங்களில் உள்ளவர்கள் 1000-மும் நிரந்தர வைப்புத்தொகையாக வங்கி கணக்கில் வைத்தால்

இந்த பணத்தை நாம் பயன்படுத்த முடியாது.

 120கோடி மக்களில் 25கோடி மக்கள் பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருந்தால் சராசரியாக ஒரு கணக்கில் 2000-ம் என்று வைத்தாலும்  50000, 00, 00, 000  கோடி ரூபாய் மக்கள் பயன்படுத்த முடியாத பணமாக மாற்றப்படும்.

இவர் கறுப்புப் பணத்தை மீட்டு மக்களுக்கு கொடுப்பார் என்று நினைத்தால் மக்களின் சேமிப்பு பணத்தை மீட்டு கார்ப்பரேட்களுக்கு கொடுக்கப் போகிறார் ? 😎💰😎💷😎💶😎💴😎💵

கனவிலாவது புதிய இந்தியா பிறக்குமா???

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் 200 விளையாட்டுகள்....




தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் 200 விளையாட்டுகள்....

தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை, விளையாடப்பட்ட விளையாட்டுகளை அறிஞர் பெருமக்கள் பலர் தொகுத்து எழுதியுள்ளனர். அவற்றின் தொகுப்பாக இந்தக் கட்டுரையில் 200 விளையாட்டுகள் அகரவரிசையில் தொகுக்கப்பட்ட பின்னர் வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன.

சிறுவர் (பையன்கள்) கைத்திறன்
கோலி விளையாட்டு
1. அச்சுப்பூட்டு
2. கிட்டிப்புள்
3. கோலி
4. குச்சி விளையாட்டு

(எல்லா வயதினரும், ஆண்
பெண் இருபாலாரும்)
5. குதிரைக் கல்லு
6. குதிரைச் சில்லி
7. சச்சைக்காய் சில்லி
8. சீச்சாங்கல்
9. தெல்லு (தெல்லுருட்டான்)
10. தெல்லு (தெல்லு எறிதல்)
11. பட்டம்
12. பந்து, பேய்ப்பந்து
13. பம்பரம்
14. மல்லு
15. வில்லுக்குச்சி

கால் திறன்
1. ஆனமானத் திரி
2. கரணப்பந்து
3. குதிரைக்குக் காணம் காட்டல்
4. கொக்கு விளையாட்டு
5. கோழிக்கால்
6. தை தக்கா தை
7. நடைவண்டி ஓட்டம்
8. நொண்டி
9. பச்சைக் குதிரை
10. பொய்க்கால் நடை, கொட்டாங்குச்சி நடை
11. மந்தி ஓட்டம்
12. மாட்டுக்கால் தாண்டல்
13. மூக்குப்பிடி (துரத்திப் பிடி)

அணி விளையாட்டு
1. ஓடுசிக்கு
2. சூ விளையாட்டு
3. நாடு பிரித்து
4. பந்து, பிள்ளையார் பந்து
5. பூச்சொல்லி
6. மதிலொட்டி
7. மந்திக் குஞ்சு
8. வண்டி உருட்டல்

குழு விளையாட்டு
1. அணில் பிள்ளை
2. ஆடும் ஓநாயும்
3. உயிர் கொடுத்து
4. கல்லுக்குச்சி
5. காக்கா கம்பு
6. காக்கா குஞ்சு
7. குச்சிக்கல்
8. குரங்கு விளையாட்டு
9. கோட்டான் கோட்டான்
10. கோழிக்குஞ்சு
11. தவளை விளையாட்டு
12. நாலுமூலைக் கல்
13. மரக்குரங்கு
14. வண்ணான் தாழி
15. வண்ணான் பொதி

நீர் விளையாட்டு
1. காயா பழமா
2. நீரில் தொடல்
3. நீரில் விழுதல்

கண்டுபிடி
1. உருண்டை திரண்டை
2. சீப்பு விற்கிறது

உல்லாசம்
1. ஊதல்
2. கால் தூக்கிற கணக்கப்பிள்ளை
3. சீத்தடி குஞ்சு
4. தோட்டம் (விளையாட்டு)
5. பஞ்சு வெட்டும் கம்போடா

சிறுமியர்
உடல்-திறன்
1. சில்லு (சில்லி)

கைத்திறன்
1. கல் பிடித்தல்
2. சுண்டு முத்து
3. தட்டாங்கல்

உல்லாசம்
1. இதென்ன மூட்டை
2. கிளி செத்துப்போச்சு
3. ஊதாமணி
4. என் உலக்கை குத்து குத்து
5. ஒருபத்தி இருபத்தி
6. ஒளிதல்
7. குச்சு குச்சு ரங்கம்மா
8. குறிஞ்சி வஞ்சி
9. கொடுக்கு
10. சிறுவீடு விளையாட்டு
11. சோத்துப்பானை (சோற்றுப்பானை)
12. ராட்டு பூட்டு
13. தவிட்டுக் குஞ்சு
14. பிஸ்ஸாலே பற
15. பூசனிக்காய் விளையாட்டு
16. பூப்பறி விளையாட்டு
17. பூப்பறிக்க வருகிறோம்
18. பூப்பூ புளியம்பூ
19. மச்சிலே யாரு
20. மத்தாடு
21. மோரு விளையாட்டு
22. வேடிக்கை விளையாட்டு

கலை விளையாட்டு
1. கும்மி

இருபால் இளைஞர்
உடல் திறன்
1. ஊதுமுத்து
2. உயிர் எழுப்பு
3. ஐந்து பந்து
4. எலியும் பூனையும்
5. கல் எடுத்தல்
6. கல்லா மண்ணா
7. கல்லுக் கொடுத்தான் கல்லே வா
8. குஞ்சு விளையாட்டு
9. குத்து விளையாட்டு
10. துரத்திப் பிடி
11. தூண் விளையாட்டு
12. தொடு விளையாட்டு
13. நாலு மூலை விளையாட்டு
14. நிலாப்பூச்சி
15. நெல்லிக்காய் (பாடித் தொடுதல்)
16. பாரிக்கோடு
17. புலியும் ஆடும்
18. மரங்கொத்தி
19. மல்லர் கம்பம்
20. மலையிலே தீப்பிடிக்குது
21. மாங்கொழுக்கட்டை

உல்லாசம்
1. ஊஞ்சல்
2. ஈசல் பிடித்தல்
3. உப்பு விற்றல்
4. ஒருகுடம் தண்ணி ஊத்தி – விளையாட்டு
5. கரகர வண்டி
6. கள்ளன் போலீஸ்
7. காற்றாடி
8. கிய்யா கிய்யா குருவி
9. கிழவி விளையாட்டு
10. கிறுகிறு மாம்பழம்
11. குலையா குலையா முந்திரிக்காய்
12. சங்கிலி விளையாட்டு
13. தட்டான் பிடித்தல்
14. தட்டை
15. நடிப்பு விளையாட்டு (தண்ணீர் சேந்துகிறது)
16. பந்து, எறிபந்து
17. பந்து, பிடிபந்து
18. பன்னீர்க்குளம் (விளையாட்டு)
19. பூக்குதிரை
20. வண்டி உருட்டல்

உத்தித் திறன்
1. உப்பு வைத்தல்
2. எண் விளையாட்டு
3. ஓடுகுஞ்சு
4. கண்ணாம்மூச்சி
5. கிச்சுக் கிச்சுத் தம்பலம்
6. கொப்பரை கொப்பரை
7. தந்தி போவுது தபால் போவுது
8. நிலாக் குப்பல்
9. பாக்குவெட்டியைக் காணோமே
10. மாது மாது

ஊழ்த்திறன் (திருவுளம்)
1. ஒற்றையா இரட்டையா
2. கண்கட்டி விளையாட்டு
3. மோதிரம் வைத்தல்
4. ராசா மந்திரி

பட்டவர் தெரிவு
1. ஓ… சிய்யான்
2. பருப்பு சட்டி (விளையாட்டு)
3. புகையிலைக் கட்டை உருட்டுதல்

காளையர்
1. அடிமுறை
2. இளவட்டக்கல்
3. கிளித்தட்டு
4. சடுகுடு (கபடி)
5. சல்லிக்கட்டு (பாய்ச்சல் காளை)
6. சிலம்பம்

கன்னியர்
1. அம்மானை
(ஒருவர் ஆடுவது சங்ககாலப்
பந்து விளையாட்டு. மூவர், ஐவர் எனக் கூடிப்
பாட்டுப்
பாடிக்கொண்டு அடுவது அம்மானை விளையாட்டு)

முதியோர்
1. ஆடுபுலி
2. ஓட்டம்
3. கட்ட விளையாட்டு
4. கைச்சில்லி
5.சூது தாயம்
6. தாயம்
7. திரிகுத்து
8. துரும்பு
9. நட்சத்திர விளையாட்டு
10. பரமபதம் (விளையாட்டு)
11. பல்லாங்குழி
12. முக்குழியாட்டம்

பாப்பா விளையாட்டு
1. அந்தக் கழுதை இந்தக் கழுதை
2. அய்யன் கொம்பு
3. அட்டலங்காய் புட்டலங்காய்
4. அத்தளி புத்தளி
5. உப்பு மூட்டை
6. கிள்ளாப் பறண்டடி
7. தட்டலங்காய் புட்டலங்காய்
8. தென்னைமரம் விளையாட்டு
(ஐலேலம் ஐலகப்பல்
விளையாட்டு)
9. நடைவண்டி
10. நான் வளர்த்த நாய்க்குட்டி
11. பருப்பு கடை (விளையாட்டு)

எல்லாரும் விளையாடும் விளையாட்டு..

கலை விளையாட்டு
1. கரகம்
2. கழியல்
3. கழைக்கூத்து
4. காவடி
5. கோக்கழிக் கட்டை
6. வர்மம்

தெய்வ ஆடல்கள்
மக்கள் ஆடல்கள்
விழா விளையாட்டு
1. உரிமரம்
2. உரியடி
3. கார்த்திகை விளக்கு
4. கார்த்திகைச் சுளுந்து
5. தைப்பாவை
6. பரணி பரணி
7. பாரி வேட்டை
8. பானை உடைத்தல்
9. புலியாட்டம்
10. பொம்மைச்சீட்டு
11. மஞ்சள் நீர் விளையாட்டு
12. மாட்டுப் பந்தயம்
13. மூணுகட்டை
14. மோடி விளையாட்டு

சொல் விளையாட்டு
1. கேலி
2. பூக்குதிரை
3. பூச்சொல்லி
4. மொழி விளையாட்டு
5. ரானா மூனா தண்டட்டி

      அழிந்துப்போன இவ்விளையாட்டுகளை மீட்டெடுக்கும் முயற்சியில்

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்



 பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்

பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (Bhimrao Ramji Ambedkar; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டவர் எனப்பட்ட தலித் மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990 இல் இவருக்கு வழங்கப்பட்டது.

வாழ்க்கை வரலாறுதொகு

இளமைதொகு

அம்பேத்கர் பிரித்தானிய இந்தியாவில் மாவ் (Mhow) எனுமிடத்தில் (இப்போது மத்தியப் பிரதேசம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். அம்பேத்கரின் குடும்பப் பின்னணி தற்போதைய மகாராட்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பேவாதே வட்டத்தைச் சேர்ந்த மராத்தியர் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்

இராம்ஜி சக்பால் இராணுவப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவர் 'சுபேதார் மேஜர்' என்ற தகுதி பெற்றவர். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் இராம்ஜி இளம் வயதில் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.



கல்விதொகு

1900 ஆண்டில் சாத்தாராவில் உள்ள ஒரு பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைத் முடித்த அம்பேத்கர் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து பயின்றார். அங்கு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியே அமர்த்தப்பட்டனர். மற்ற மாணவர்களுடன் பேசவோ விளையாடவோ முடியாது. அவர்களின் குறிப்பேடுகளையும் புத்தகங்களையும் தொடமாட்டார்கள். கேள்விகள் கேட்பதும் கிடையாது. தண்ணீர் வேண்டுமென்றாலும் பிறர் ஊற்ற கையால் பருகவேண்டும். அமருவதற்கு இம்மாணவர்கள் ஒரு கோணிப்பையைத் தங்கள் வீட்டிலிருந்தே கொண்டு வர வேண்டும். வடமொழி கற்கவும் தடை இருந்தது. இக்கொடுமைகளைக் கண்ட அம்பேத்காரின் பிஞ்சுமனம் வெம்பியது.

பீமாராவ் சக்பால் அம்பேவாதேகர் என்பது அம்பேத்கரின் இயற்பெயராகும். அம்பேவாதேகர் என்பது இவரது சொந்த ஊரின் நினைவாக வழங்கப்படும் குடும்பப் பெயராகும். இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்ட பிராமண ஆசிரியரான மகாதேவ அம்பேத்கர் இவரின் குடும்பப் பெயரான அம்பேவாமேகர் என்பதை மாற்றி தன் குடும்ப பெயரான அம்பேத்கர் என்பதை இவரின் பெயரில் சேர்த்தார். 1904 ஆம் ஆண்டு அவரது குடும்பம் மும்பைக்குச் சென்றது. அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து தனது கல்வியைச் தொடர்ந்தார் அம்பேத்கர். குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும் கல்வியை விடாமல் மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றர். இவரது குடும்பமே அம்பேத்கரின் கல்வியில் ஆர்வம் காட்டியது. மெட்ரிகுலேசன் தேர்வு முடிந்ததும் அம்பேத்கருக்கும் ஒன்பது வயதான ராமாபாய் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர விரும்பிய அம்பேத்கருக்கு பரோடா மன்னர் உதவி புரிந்தார். சாதிக் கொடுமை கல்லூரியிலும் தொடர்ந்தது. ஆயினும் பேராசிரியர் முல்லர் என்பவர் அன்புடனும் அனுதாபத்துடனும் நூல்கள், உணவு மற்றும் உடைகள் கொடுத்து உதவினார். இவரின் உதவியால் அம்பேத்கர் நன்கு படித்து பி.ஏ இளங்கலைப் பட்டதாரியானார்.

படிப்பு முடிந்ததும் குடும்பச் சுமையை ஏற்பதற்காக சிறிது காலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைகளுக்குத் தலைவராக 'லெப்டினன்ட்' பதவியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கும் நிலவிய சாதி வேற்றுமையால் மனம் நொந்து மும்பைக்கே திரும்பினார். பின்னர் மும்பைக்கு வந்த பரோடா மன்னரை நேரில் சந்தித்து தான் வேலைக்கு வர இயலாத சூழ்நிலையை எடுத்துக் கூறினார். மிகவும் வேதனையடைந்த மன்னர், மிகச் சிறந்த கல்வியாளரான அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் எம்.ஏ பயில ஏற்பாடு செய்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உயர்கல்வி பயின்றவர் என்ற பெருமையும் பெற்றார்.

1913 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் நள் அம்பேத்கர் அமெரிக்கா சென்றார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைப் படித்தார். அங்கு அவர் 1915-ல் 'பண்டைய இந்தியாவின் வாணிகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கருத்தாழமிக்க ஒரு கட்டுரையை எழுதினார். பின்னர், 'இந்திய தேசியப்பங்கு விகிதம் ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற தலைப்பில் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஓர் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டார். இந்த ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. இக்கட்டுரை ஆங்கிலத்தில் 'இந்தியாவில் மாகாண நிதி வளர்ச்சி' என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. இன்று இந்தியாவில் நிதிநிலை அறிக்கை வெளியிடும் பொழுது ஒவ்வொருவரும் புரட்டிப்பார்க்கும் உயர் நூலாக இன்றும் உள்ளது. மேலும் அம்பேத்கர் 'பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். 'ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.


சமூகப்பணிகள்தொகு

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதே நேரத்தில், சமுதாய அமைப்பிலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டவர்கள் கையில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடினார். 1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், 'என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார். இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினை முக்கியமாக விவாதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், அதே தொகுதியில் தாழ்த்தப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் 'இரட்டை வாக்குரிமை" தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. மகாத்மா காந்திஜி இதனை எதிர்த்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்படக் கூடாது என வலியுறுத்தி காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதன் விளைவாக செப்டம்பர் 24 - 1931-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே 'பூனா ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன.வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். அவரது தலைமையில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது ,அதன் ஒரு பகுதியான 'இந்து சட்டத் தொகுப்பு மசோதா'விற்கு பாராளுமன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்காததை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்.( 1952 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னான காங்கிரஸ் அதிக இடங்கள் பெற்றமையினால் 1952 ல் அந்த சட்டம் நிறைவேறியது) சமூக நீதிப் போராளி டாக்டர் அம்பேத்கர் 1956 - டிசம்பர் 6-ல் காலமானார்.

தீண்டாமைக்கு எதிராகதொகு


புனே உடன்படிக்கைதொகு

தாழ்த்தப்பட்டவர்களிடம் அம்பேத்கருக்கு இருந்த ஆதரவாலும் செல்வாக்காலும் பிரித்தானிய அரசால் அவர் 1932ம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற இரண்டாம் வட்ட மேசை மாநாட்டுக்கு hi அழைக்கப்பட்டார். அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி வாக்காளர் தொகுதி வேண்டும் (தாழ்த்தப்பட்டவர்களுக்கான தொகுதியில் தாழ்த்தப்பட்டவர் மட்டுமே வாக்களிக்கமுடியும்) என்று கோரியதை காந்தி கடுமையாக எதிர்த்தார். இக்கோரிக்கை இந்து சமுகத்தை இரண்டு குழுக்களாக பிரித்துவிடும் என்று அஞ்சினார் .

பிரித்தானியர்கள் அம்பேத்கரின் கோரிக்கையை ஏற்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனி தொகுதி ஒதுக்கினர். இதை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு கைதானார். அவர் புனேவிலுள்ள எர்வட மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த உண்ணாவிரதத்தால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. மதன் மோகன் மால்வியா, பால்வான்கர் பாலோ போன்ற தலைவர்கள் அம்பேத்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பெரும் வன்முறை ஏற்படலாம் என்று கூறப்பட்டதால் அம்பேத்கர் காந்தியுடன் உடன்பாடு செய்து கொண்டார்.. இதைத் தொடர்ந்து காந்தி தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி தொகுதி வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டார் இது புனே உடன்படிக்கை எனப்படும். இதன்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனி தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அதில் அனைவரும் வாக்களிக்கலாம் என்றும் முடிவாகியது .

அம்பேத்கரின் புகழ்பெற்ற குற்றச்சாட்டு, “காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. சீஸனுக்கு சீஸன் அவர் குணம் மாறும். ஆதரவும் மாறும். ஆனால் இந்து மதத்தில் ஒரு அடிமைகளாக தலித்துகள் காலம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மாறாது”,

பூனா உண்ணாவிரதத்தில் தன்னை நெருக்குதலுக்குள்ளாக்கி உடன்பட வைத்தபோது காந்தியின் முகத்துக்கு நேரே அம்பேத்கர் இப்படிச் சொல்கிறார்: “காந்திஜி, உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான். ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த தேசத்துக்கு நீங்கள் தேவைப்படலாம்!”


அரசியல் வாழ்க்கைதொகு

இந்திய அரசியலமைப்பில் பங்குதொகு

இந்தியா விடுதலை பெற்றவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அம்பேத்கரை, காங்கிரசு அரசு சட்ட அமைச்சராக பதவியேற்றுக் கொள்ளும்படி அழைத்தது. அம்பேத்கர் அதை ஏற்று விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார். ஆகசுட்டு 29ல் அம்பேத்கர் இந்திய அரசிலமைப்பை உருவாக்கும் ஆணையத்திற்கு தலைவரானார்.

அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட இந்திய அரசியலமைப்பு மிகச்சிறந்த சமூக ஆவணம் என்று வரலாற்றுவியலாளரும் இந்திய அரசியலமைப்பை நன்கு அறிந்தவருமான கிரான்வில்லா ஆசுட்டின் கூறுகிறார்.

அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை வழங்கியது. அரசியலமைப்பு நவம்பர் 26, 1949 அன்று மக்களவையில் ஏற்கப்பட்டது.

இந்து நெறியியல் சட்டத்தை கொண்டு வருவதில் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1951ம் ஆண்டு இவர் தன் பதவியை துறந்தார்.

டாக்டர். அம்பேத்கர் காஷ்மீர்க்கு தனி அந்தஸ்த்து வழங்குவதை விரும்பவில்லை.'http://en.wikipedia.org/wiki/B._R._Ambedkar#Opposition_to_Article_370

ரிசர்வ் வங்கி உருவாக்கத்தில் பங்குதொகு

அம்பேத்கர் 1921ம் ஆண்டு வரை தொழில்முறை பொருளாதார அறிஞராக பணியாற்றிய பொழுது பொருளாதாரம் குறித்து 3 துறைசார் புத்தகங்களை எழுதியிருந்தார்.

கிழக்கிந்திய கம்பெனியின் நிருவாகமும் நிதியும் (Administration and Finance of the East India Company).
பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களின் நிதியின் பரிணாமம் (The Evolution of Provincial Finance in British India)
ருபாயின் சிக்கல்கள் : மூலமும் தீர்வும்
கில்டன் யங் ஆணையத்திடம் அம்பேத்கர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் 1934ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது. .

பௌத்த சமயத்திற்கு மாறுதல்தொகு


நாக்பூரின் தீக்சாபூமியில் அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள் எழுதப்பட்ட கற்றளி

அம்பேத்கர் பழங்கால இந்தியாவைப்பற்றியும் மானிடவியலைப்பற்றியும் செய்த ஆராய்ச்சியின் மூலம் மகர் மக்கள் பௌத்த சமயத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் பௌத்த பழக்கங்களை விட மறுத்ததால் கிராமத்தை விட்டு வெளியே தீண்டத்தகாதவர்கள் போல் வாழ வற்புறுத்தப்பட்டார்கள் என்றும் கருதினார்[சான்று தேவை]. இதனாலயே அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள் என்று கருதினார்[சான்று தேவை]. இதைப்பற்றி யார் சூத்திரர்கள்? (Who were the Shudras?) என்ற புத்தகத்தை எழுதினார்.

பௌத்த சமயத்தை பற்றி நன்கு படித்த அம்பேத்கர் 1950 முதல் பௌத்த சமயத்தின் மீது தன் கவனத்தை முழுவதுமாக திருப்பினார். இலங்கையில் நடைபெற்ற பௌத்த துறவிகள் மற்றும் அறிஞர்களின் கருத்தரங்கில் கலந்து கொண்டார் .. புனேக்கு அருகில் புதிய பௌத்த விகாரை அர்பணித்த பின் தான் பௌத்தத்தை பற்றி புத்தகம் எழுதிக்கொண்டுள்ளதாகவும் விரைவில் அது நிறைவடையும் என்று கூறினார். அதிகாரபூர்வமாக பௌத்த சமயத்திற்கு திரும்புவது பற்றி திட்டமிட்டுக் கொண்டிருந்தார். 1954ம் ஆண்டு இரு முறை பர்மாவிற்கு பயணம் மேற்கொண்டார். இரண்டாவது முறை மூன்றாவது உலக பௌத்த சமய மாநாடு ரங்கூனில் நடைபெற்றதில் கலந்து கொள்ள சென்றார். 1955ம் ஆண்டு பாரதீய பௌத்த மகாசபாவை தோற்றுவித்தார். 1956ம் ஆண்டு புத்தரும் அவரின் தம்மமும் (The Buddha and His Dhamma) என்ற புத்தகத்தை எழுதினார், அவரின் மறைவுக்கு பின் அப்புத்தகம் வெளியிடப்பட்டது .

இலங்கை பௌத்த துறவி ஹம்மல்வா சதாடிஷ்சாவை கலந்த பின் அம்பேத்கர் அக்டோபர் 14, 1956ல் நாக்பூரில் உள்ள தீக்சாபூமியில் அதிகாரபூர்வமாக விழா எடுத்து பௌத்த சமயத்திற்கு மாறினார். அவருடன் அவர் ஆதரவாளர்கள் 500,000 பேரும் பௌத்த சமயத்திற்கு மாறினார்கள் . அதன் பின் இவர் காட்மண்டுவில் நடைபெற்ற நான்காவது உலக பௌத்த கருத்தரங்கத்திற்கு சென்றார் . இவரின் புத்தர் அல்லது கார்ல் மார்க்சு என்ற புத்தகம் நிறைவுபெறாமலேயே உள்ளது .

மரணம்தொகு


அம்பேத்கர் மணிமண்டபம், சென்னை

அம்பேத்கர் அருங்காட்சியகம், புனே
1948ல் இருந்து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும் கண்பார்வை குறைந்ததாலும் 1954 சூன் முதல் அக்டோபர் வரை படுக்கையில் கழிக்கநேர்ந்தது. இவரின் உடல்நலம் அதிகரித்த கசப்பூட்டும் அரசியல் நிகழ்வுகளால் மேலும் பாதிக்கப்பட்டது. 1955ம் ஆண்டில் இவர் உடல்நலம் மேலும் மோசமடைந்தது. புத்தரும் அவரின் தம்மாவும் என்ற புத்தகத்தை எழுதிய 3 நாட்களுக்கு பிறகு 1956 டிசம்பர் 6ல் டில்லியிலுள்ள இவர் வீட்டில் தூக்கத்தில் உயிர் பிரிந்தது.

பௌத்த சமய முறையில் இவரின் உடல் தாதர் சௌபதி கடற்கரையில் டிசம்பர் 7 அன்று தகனம் செய்யப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர் .. டிசம்பர் 16, 1956 அன்று மதமாற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .. அதற்கு முன்பே அம்பேத்கர் மரணமடைந்ததால் அவர் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்திலேயே அவரின் உடலை பார்க்க வந்தவர்கள் மத மாற்றம் செய்து கொண்டனர் . அம்பேத்கரின் இரண்டாவது மனைவி 2003ல் மரணமடைந்தார்.

மரணத்திற்கு பின் இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா 1990ம் ஆண்டு வழங்கப்பட்டது.


அம்பேத்கர் கருத்துக்கள்தொகு

'எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’

1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.

ஆவணப்பதிவுகள்தொகு

மகாராட்டிர அரசின் கல்வித்துறை, முனைவர்.அம்பேத்காரின் உரையாடல்களையும், உரைகளையும் தொகுதிகளாக வெளியிட்டுள்ளன. அவை வருமாறு;-

தொகுதிகள் விவரம்
தொகுதி - 1. கூட்டாட்சியா, சுதந்திரமா?
தொகுதி - 2. சமூகப் பாதுகாப்பு
தொகுதி - 3. அதிகாரமும் உறவும்
தொகுதி - 4. வட்ட மேசை மாநாடுகளில்.
தொகுதி - 5. பொதுவுடைமைக்கான முற்படுதேவைகள்
தொகுதி - 6. The evolution of provincial finance in British India
தொகுதி - 7. Who Were the Shudras? ; The untouchables
தொகுதி - 8. பாக்கிசுத்தான் அல்லது இந்திய பிரிவினை
தொகுதி - 9. What Congress and Gandhi have done to the untouchables; Mr. Gandhi and the emancipitation of the untouchables
தொகுதி-10. Dr. Ambedkar as member of the Governor General's Executive Council, 1942–46
தொகுதி-11. The Buddha and His Dhamma
தொகுதி-12. Unpublished writings; Ancient Indian commerce; Notes on laws; Waiting for a Visa ; Miscellaneous notes, etc.
தொகுதி-13. டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசிலமைப்பின் முதன்மை சிற்பி.
தொகுதி-14. (2 பகுதிகள்) Dr. Ambedkar and The Hindu Code Bill
தொகுதி-15. Dr. Ambedkar as free India's first Law Minister and member of opposition in Indian Parliament (1947–1956)
தொகுதி-16. டாக்டர் அம்பேத்கரின் பாளி மொழி இலக்கணம்.
தொகுதி-17 (பகுதி 1) Dr. B.R. Ambedkar and his Egalitarian Revolution – Struggle for Human Rights. Events starting from March 1927 to 17 November 1956 in the chronological order
(பகுதி 2) Dr. B. R. Ambedkar and his Egalitarian Revolution – Socio-political and religious activities. Events starting from November 1929 to 8 May 1956 in the chronological order
(பகுதி 3) Dr. B. R. Ambedkar and his Egalitarian Revolution – Speeches. Events starting from 1 January to 20 November 1956 in the chronological order
தொகுதி-18 (3 பகுதிகள்) மராத்தியில் டாக்டர் அம்பேத்கரின் பேச்சுக்களும் எழுத்தும்.
தொகுதி-19 மராத்தியில் டாக்டர் அம்பேத்கரின் பேச்சுக்களும் எழுத்தும்.
தொகுதி-20 மராத்தியில் டாக்டர் அம்பேத்கரின் பேச்சுக்களும் எழுத்தும்.
தொகுதி-21 Dr. B. R. Ambedkar’s Photo Album and correspondence.
கெளரவிப்புகள்


அம்பேத்கரின் 124-ஆம் பிறந்தநாளை முன்னிட்டு, மன்மத வருடம், சித்திரை 1-ஆம் நாள் (ஏப்ரல், 14, 2015), கூகிள் தன் டூடில் தளத்தில் அம்பேத்காரின் படத்தை வெளியிட்டு கெளரவப்படுத்தியது