புதன், 28 ஜூன், 2017

கிணறு


கிணறு 

நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும். நமக்கு
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.

அந்த காலத்தில் எப்படி எந்த
டெக்னாலஜியும் இல்லாம
கிணறு வெட்டுனாங்க??? . . .

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில்
தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும்உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம்
எளிய இலகுவான தீர்வுகள் இதோ :

மனையின் குறிப்பிட்ட
ஏதாவது ஒரு பகுதியில்
அதிகளவு பச்சை பசேலென புற்கள்
வளர்ந்திருந்தால், அந்த இடத்தில்
கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர் .

சரி நீரூற்று இருக்கும.் ஆனால் நல்ல
நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட
வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த
நாள் கவனித்தால் எறும்புகள்
இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்
கொண்டுசென்று சேர்த்த
அடையாளங்கள் , அதாவது தடயங்கள்
இருக்குமாம் அந்த இடத்தில்
கிணறு வெட்டினால் தூய
சிறப்பான நன்னீர் கிடைக்கும்
என்கிறார்கள் .

சரி தூய நீரும்
கண்டு கொண்டாயிற்று. . . .கோடைகாலத்திலும்
வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்
இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப்
பகுதியை நான்கு பக்கமும்
அடைத்து விட்டு பால் சுரக்கும்
பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய
விட வேண்டும். பின்னர் அந்த
பசுக்களை கவனித்தால் மேய்ந்த
பின் குளிர்ச்சியான இடத்தில்
படுத்து அசை போடுகின்றனவாம் .

அப்படி அவை படுக்கும்
இடங்களை நான்கு , ஐந்து நாட்கள்
கவனித்தால் அவை ஒரே இடத்தில்
தொடர்ந்து படுக்குமாம் . அந்த
இடத்தில் தோண்டினால் வற்றாத
நீரூற்றுக் கிடைக்குமாம்.
செம..!

தமிழர் பெருமையை பரப்ப இதை ஷேர் செய்யுங்கள்..!

செவ்வாய், 27 ஜூன், 2017

வளமுடன் வாழ 108 சூத்திரங்கள்


வளமுடன் வாழ 108 சூத்திரங்கள்

1.    கடமையை செய்.
2.    காலம் போற்று.
3.    கீர்த்தனை பாடு.
4.    குறைகள் களை.
5.    கெட்டவை அகற்று.
6.    கேள்வி வேண்டும்.
7.    கை கொடு.
8.    கோவிலுக்குச் செல்.
9.    கொலை செய்யாதே.
10.  கூச்சம் வேண்டாம்.
11.  தர்மம் செய்.
12.  தாயை வணங்கு.
13.  திமிர் வேண்டாம்.
14.  தீயவை பழகாதே.
15.  துன்பம் துரத்து.
16.  தூய்மையாய் இரு.
17.  தெளிவாக சிந்தி.
18.  தைரியம் வேண்டும்.
19.  தொண்டு செய்.
20.  தோழனை கண்டுபிடி.
21.  சத்துணவு சாப்பிடு.
22.  சஞ்சலம் போக்கு.
23.  சாதனை செய்.
24.  சிக்கனம் தேவை.
25.  சீருடன் வாழ்.
26.  சுத்தம் பேண்.
27.  சூழ்ச்சி செய்யாதே.
28.  செலவை குறை.
29.  சேர்க்கப் பழகு.
30.  சைவம் சிறந்தது.
31.  சொர்க்கம் தேடு.
32.  சோகம் வேண்டாம்.
33.  சோம்பல் அகற்று.
34.  செளந்தர்யம் சேர்.
35.  நம்பிக்கை கொள்.
36.  நிம்மதி பெரிது.
37.  நெஞ்சத்தில் நில்.
38.  நேர்மை கடைபிடி.
39.  நைந்து பழகு.
40.  நொறுங்கத் தின்னு.
41.  நோயை விரட்டு.
42.  பண்புடன் பழகு.
43.  பாவம் செய்யாதே.
44.  பிதற்றல் குறை.
45.  பீடிகை போடாதே.
46.  புண்ணியம் சேர்.
47.  பூசல் நீக்கு.
48.  பெரியோரை மதி.
49.  பேதம் வேண்டாம்.
50.  பைந்தமிழ் பேசு.
51.  பொய் பேசாதே.
52.  முகத்தை சுழிக்காதே.
53.  மூத்தோற்கு உதவு.
54.  மெல்லப் பேசு.
55.  மேலானவை நினை.
56.  மோசம் செய்யாதே.
57.  மௌனம் நல்லது.
58.  வறுமை ஒழி.
59.  வளம் சேர்.
60.  விளையாட்டல்ல வாழ்க்கை.
61.  வீம்பு விலக்கு.
62.  ஒவ்வொன்றாக செய்.
63.  வருவோரெல்லாம் நண்பர்களல்லர்.
64.  வேற்றுமை ஒழி.
65.  வையகம் போற்று.
66.  கலைஞனாய் இரு.
67.  ஞானம் வேண்டு.
68.  குணம் வளர்.
69.  பண்ணிப் பார்.
70.  எண்ணுக உயர்வு.
71.  பயம் தவிர்.
72.  மெய்யூட்டி வளர்.
73.  மெய்யென பேசு.
74.  தன் கையே உதவி.
75.  தீயோடு விளையாடாதே.
76.  மலையோடு மோதாதே.
77.  தடத்தில் நட.
78.  விபரீதம் வேண்டாம்.
79.  கண்டு களி.
80.  அட்டூழியம் செய்யாதே.
81.  கேட்டேதும் பெறா.
82.  நாட்டை நேசி.
83.  வீட்டோடு வாழ்.
84.  வரம் கேள்.
85.  திருடி பிழைக்காதே.
86.  மேதாவித்தனம் வேண்டாம்.
87.  சொல்லுக பயனுள.
88.  பழங்கள் சாப்பிடு.
89.  சினம் தவிர்.
90.  அனுபவம் பலம்.
91.  கண்ணெனப் போற்று.
92.  திருடனே திருந்து.
93.  இறைவனைப் புகழ்.
94.  அமைதி கொள்.
95.  துக்கம் மற.
96.  பங்கம் பண்ணாதே.
97.  அன்பே அச்சாணி.
98.  கொஞ்சி மகிழ்.
99.  மட்டம் தட்டாதே.
100. சொந்தம் சூழ்ந்திரு.
101. தவறைத் திருத்து.
102. அம்மாவே தெய்வம்.
103. வர்மம் வைக்காதே.
104. சொல் தவறாதே.
105. தோள் கொடு.
106. பேராசைப் படாதே.
107. புன்னகை அணி.
108. நீடுழி வாழ்.

காலைத் தொங்க வைத்து அமரக் கூடாது..


காலைத் தொங்க வைத்து அமரக் கூடாது..

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம். இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், கதிரை இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம். இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பலநோய்கள் உருவாகிறது.

இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது. இடுப்புக்கு மேல் பகுதியில் சரியாக இரத்த ஓட்டம் கிடைப்பதில்லை. நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்குக் கீழே இரத்த ஒட்டம் குறைவாகவும், இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும். மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தி அதிகமாக கிடைக்கிறது. ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

எனவே தயவுசெய்து இனிமேல் காலைத் தொங்கவைத்து அமருவதை தவிருங்கள். குறிப்பாக சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும். சாப்பிடும்பொழுது காலைத் தொங்கவைத்து அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசானத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாகி விடும். ஏனென்றால் இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. ஆனால், இப்பொழுது பல நபர்கள் காலை மடக்கி உட்காரமுடியாத நிலையில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்னவென்றால் நாம் ஒரேஒரு இடத்தில் மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம். அது மலம் கழிக்கும்பொழுது.

யாருடைய வீட்டில் காலை மடக்கி அமருமாறு மலசலகூடம் இருக்கிறதோ அவர்களுக்கு மூட்டு சம்மந்தப்பட்ட எந்த வலியும் வருவதில்லை. ஆனால் யுரோப்பியன் மலசலகூடம் உள்ள வீடுகளில் அனைவருக்கும் மூட்டு, முழங்காலில் வலியும் அது சம்பந்தப்பட்ட நோயும் வருகிறது. ஏனென்றால் இவர்கள் ஒருமுறை கூட வாழ்க்கையில் காலை மடக்கி அமர்வதே கிடையாது. முதலில் வயதானவர்களுக்கு மட்டுமே இந்த பிரச்சனை இருந்தது. ஆனால் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் மலசலகூடத்தைப் பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே தயவுசெய்து யுரோப்பியன் மலசலகூடத்தைப் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக பயன்படுத்துங்கள். இப்படிப் பயன்படுத்தும் பொழுது குறைந்த பட்சம் ஒரு நாளில் இரண்டுமுறை, மூன்று முறையாவது நாம் யோகாசனம் செய்வதைபோல் இருக்கும்.

எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள். கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள். சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும். சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து கொள்ளலாம். ஆனால் அந்தச் கதிரையில் காலை தொங்கவிடாமல் மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.

இப்போதெல்லாம் அனைருக்கும் வரும் மூட்டு தேய்மானம், மூட்டுவலி, இதற்கு அடிப்படைக் காரணம் காலை தொங்கப் போட்டு அமர்வதுதான். எனவே இன்றுமுதல் காலை மடக்கி உட்காரப் பழகிக் கொண்டால் உங்கள் வாழ்க்கையில் ஜீரணமும் நன்றாக நடக்கும். உடம்பில் சக்தியும் அதிகரிக்கும். உடம்பில் மூட்டுவலியும் கால்வலியும் வராது. வாழ்வோம் ஆரோக்கியமாக!

   

திங்கள், 26 ஜூன், 2017

கருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள்..


கருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின் மருத்துவ பயன்கள்..

சீனி நமக்கு எவ்வளவு பகையோ அதற்கு நேர் மாறாக கருப்பட்டி நம் நெருங்கிய நண்பன். பனங்கருப்பட்டி யின் மருத்துவ பயன்கள் அளவில்லாதது.
இப்படி சர்க்கரை மற்றும் பல நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபட நமக்கு கிடைத்த அருமருந்து தான் கருப்பட்டி
. சர்க்கரைக்கு மாற்றாக சரியாக கருப்பட்டியை பயன்படுத்தினாலே இன்று உள்ள பெரும்பாலான நோய்கள் இல்லாமலும் அதற்கான மருத்துவ செலவுகள் மற்றும் மருந்துகள் அவசியமில்லாமலே போகும்.
“உணவே மருந்து” என்னும் நியதிப்படி, கால சூழலுக்கு ஏற்றார்போல உடலுக்கு தேவையானதை தேவைப் படும் நேரத்தில் வழங்குகிறது கருப்பட்டி. உடல் இயக்கத்தை சீரான சமநிலைக்கும் கொண்டு வருகிறது.
பனங்கருப்பட்டியின் மருத்துவ பயன்கள்:
1.பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
2.விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
3.பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத் தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்.
4.குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.
5.கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன.
6.கருப் பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். அதில் உள்ள ‘கிளைசீமி இன்டெக்ஸ்’ உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது.
7.சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதி கமாக இருக்கிறது. மேலும் இதை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்...
8.கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது. கருப்பட்டியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்புகின்றனர்.
9.கருப்பட்டிஇரத்தத்தை சுத்திகரித்துஉடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும்
10. மேனிபளபளப்பை பெறும்.
11.கருப்பட்டியில் சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தமடையும்
12.சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்
13.ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும்.
14.கரும்புசக்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும்எலும்புகளும் உறுதியாகும்
15.நீரிழிவு நோயாளிகள் (சக்கரை நோயாளிகள்) கைகுத்தல்அரிசிசாதத்துடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டுவந்தால் சக்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவது குறையும்.
17.குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம்உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது
18.சுக்குகருப்பட்டி பெண்களின் கர்ப்பப பைக்கு மிகவும் ஏற்றது.
19.சுக்கு,மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாகசுரக்கும்
20.அந்ததாய் பாலை குடிக்கும் குழந்தைக்கு நல்ல ஊட்டசத்துக்கள் கிடைக்கபெறும்.
21.தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் கருப்பட்டிகளில் எங்கள் ஊரில் தயாரிக்கப்படும் கருப்பட்டி சுத்தம் மற்றும் சுவைக்குச் சிறப்புப் பெயர் பெற்றதாகும்.

சனி, 24 ஜூன், 2017

சென்னை வானொலிக்கு வயது 80



சென்னை வானொலிக்கு வயது 80

🥀 சென்னை அகில இந்திய வானொலி ஜூன் 16-ம் தேதியன்று 80-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது.

🥀 தமிழகத்தில் உள்ள மற்ற அகில இந்திய வானொலிகளுக்கோ, தனியார் வானொலிகளுக்கோ இல்லாத சிறப்பு சென்னை வானொலிக்கு உண்டு.

🥀 அங்கு, ஒரே வளாகத்திலிருந்து ஒரு சேர ஐந்து வெவ்வேறு ஒலிபரப்புகள் செய்யப்படுகின்றன.

🥀 இவற்றைத் தவிர, வெளிநாட்டுத் தமிழ் நேயர்களுக்காக ‘திரைகடல் ஆடிவரும் தமிழ் நாதம்’(7270, 7380 கி.ஹெ) என்ற ஒலிபரப்பும் உண்டு.

🥀திருவாவ டுதுறை இராஜரத்தினம் பிள்ளையின் மங்கள இசையோடு தொடங்கியது சென்னை வானொலியின் பயணம்.

🥀 முதலில் ஒலித்த பாடல் டி.கே.பட்டம்மாள் பாடியது. முதல் நாள் ஒலிபரப்பில், அன்றைய சென்னை மாகாண முதல்வர் ராஜாஜி பேசினார். அவரது பேச்சு இப்படித்தான் தொடங்கியது,

🥀 “வெகு தூரத்தில் இருந்து பேசுகிறேன்… என்னவானாலும் எந்திரம் எந்திரம்தான். ஆகையால் குரலிலிருந்து பேசுகிறவன் யார் என்று சொல்லுவது உங்களுக்கும் கஷ்டம், நான்தான் ராஜாஜி. சென்னை வானொலி நிலையத்திலிருந்து பேசுகிறேன்.

🥀 நான் பழைய தினுசு மனிதன். வைதிக மனப்பான்மை, புது நாகரிகங்கள் அவ்வளவாகப் பிடிக்காது. அநாகரிகங்களுக்குள் பழைய அநாகரிகங்களே தேவலை என்று எண்ணுகிறவன். ஜனங்களுக்குப் பேசும் படங்களாலும், வானொலிப் பேச்சாலும் உபதேசங்கள் அவ்வளாக ஏறாது என்பது என் எண்ணம்.

🥀 ஆயினும் எதுவும் ஓரளவு பயன்படும் என்பதுவும் ஒரு புறமிருந்து கொண்டிருக்கிறது. ஆகையால், இந்த ரேடியோவுக்கு என்னுடைய பூரண ஆசியைத் தருகிறேன்” என்றார்.

🥀 இந்த உரை ஒரு விதத்தில் அவர் வானொலி மீது வைத்திருந்த மதிப்பீடாகவே உள்ளது.

🥀 வானொலி அன்றைய காலகட்டத்தில் சாதித்தது மிக அதிகம். இன்றும் இந்த முதல் ஒலிபரப்பின் ஒலிக் கீற்றுகள் எல்லாம் டிஜிட்டல் தரத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

🥀 அப்போது சென்னையானது ஒருங்கிணைந்த மாகாணமாக இருந்ததால், முதல் அறிவிப்பானது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் செய்யப்பட்டது.

🥀 தமிழில் முதல் அறிவிப்பினை ஜி.எஸ்.விஜயராவ், கே.என்.எஸ்.சர்மா மற்றும் டி.துரைராஜ் ஆகியோர் செய்தனர்.

🥀 சென்னை வானொலிக்கு அதன் அறிவிப்பாளர்கள்தான் பெரும் பலம். அந்தக் காலத்தில் நேயர்கள் யார் சென்னைக்குச் சுற்றுலா வந்தாலும் மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கத்துக்கு எதிரே இருக்கும் சென்னை வானொலியைப் பார்க்காமல் போக மாட்டார்கள்.

🥀 இன்றும்கூட வானொலி நிலையத்தின் அறிவிப்பாளர்களைக் காண வேண்டி தமிழகத்தின் பல ஊர்களிலிருந்தும் நேயர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.

🥀 சென்னை வானொலி நிலையத்துக்குப் பெரும் தூண்களாக இருந்தவர்கள் அதன் இயக்குநர்கள். ஒவ்வொருவரின் காலகட்டத்திலும் சென்னை வானொலி நிலையமானது, ஒரு புது முயற்சியைச் செய்தது.

🥀 குறிப்பாக, விக்டர் பரஞ்சோதி, எஸ்.கோபாலன், ஜி.டி.சாஸ்திரி, எஸ்.என்.மூர்த்தி, டாக்டர். வி.கே.நாராயணன் மேனன், எஸ்.வி.நடராஜன், பி.வி.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.எ.தாக்கூர், எம்.எஸ்.கோபால், எஸ்.கந்தசாமி (துறைவன்), ஏ.சத்தியபாமா, இ.கோவிந்தராஜுலு, ஆர்.என்.நாயர், ஜி.சுப்பிரமணியன், கோ.செல்வம், எஸ்.வேணுகோபால் ரெட்டி, விஜய திருவேங்கடம், பா.ரா.குமார்,
ஸ்ரீநிவாச ராகவன், கா.பொ.சீனிவாசன் மற்றும் சக்ரவர்த்தி (பொறுப்பு) ஆகியோரின் காலகட்டத்தில் வானொலி பல சாதனைகளைச் செய்தது.

🥀 சென்னை வானொலியில் அறிஞர்கள் பலரும் இருந்துள்ளனர். குறிப்பாக, சாகித்திய அகாடமி வழங்கும் ‘ஞானபீட விருது’ பெற்ற எழுத்தாளர் அகிலன் இந்த வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களில் முதன்மையானவர்

🥀. தமிழ்ப் பேரறிஞர் அ.ச.ஞானசம்பந்தன், மீ.ப.சோமு ஆகியோரும் சென்னை வானொலியின் தயாரிப்பாளர்களாக இருந்தவர்களே.

🍏 நேரடி ஒலிபரப்பு

🥀 தொடக்க காலத்தில் சென்னை வானொலியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடியாகவே ஒலிபரப்பப்பட்டன.

🥀 காரணம், அன்றைய காலகட்டத்தில் ஒலிப்பதிவுக் கருவிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சவால் நிறைந்த அந்தப் பணியை நேயர்களுக்கு மகிழ்வூட்டும் வண்ணம் திறம்படத் தயாரித்தனர், அன்றைய நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்.

🥀 சென்னை வானொலியில் ஒலிபரப்பாகிய நாடகங்கள் நேயர்கள் மத்தியில் இன்றும் நீங்கா இடம்பெற்றுள்ளன.

🥀 குறிப்பாக, நடிகை மனோரமா நடித்த ‘காப்புக்கட்டிச் சத்திரம்’, ‘துபாஷ் வீடு’, ‘ஜனதா நகர் காலனி’ஆகிய தொடர்கள் நேயர்களின் வரவேற்பைப் பெற்றவை.

🥀 சென்னை வானொலிக்கு நேயர் மன்றங்கள் பலவும் இருந்தன. அவர்கள் ஒன்றிணைந்து வருடந்தோறும் நேயர் சந்திப்புகளை நடத்தினர்.

🥀 குறிப்பாக, ‘வானொலி நேயர் வட்டம்’ என்ற அமைப்பானது ஒவ்வொரு மாதமும் மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகில் கூடி, சென்னை வானொலிக்காகத் தனி இதழ், நாள்காட்டி மற்றும் சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்தார்கள்.

🥀 அறிவியல் நிகழ்ச்சிகளிலும் பல புதுமைகள் புகுத்தப்பட்டன. 1983 மே 17-ல் உலகத் தொலைத் தொடர்பு நாளை சென்னை வானொலி வித்தியாசமாகக் கொண்டாடியது.

🥀 விமானத்தில் பறக்கும் ஒருவர், ரயிலில் பயணம் செய்யும் ஒருவர், கடலில் கப்பலில் பயணம் செய்யும் ஒருவர் மற்றும் பேருந்தில் பயணம் செய்யும் ஒருவர் என்று நால்வரிடமும் ஒரே நேரத்தில் நேரலையில் கலந்துரையாடியது.

🥀இதில் முக்கியமான விஷயம், அவர்கள் அனைவரையும் வயர்லெஸ் கருவியில் தொடர்புகொண்டு ஒலிபரப்பியது.

🥀 மொபைல்கள் இல்லாத அந்தக் காலத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அந்த நிகழ்ச்சியைத் தயாரித்தது டாக்டர் ஸ்ரீதர்.

🍅 ‘வானொலி’க் காகத் தனி இதழ்

🥀 சென்னை வானொலியே ஒரு இதழையும் நடத்தியது. ‘வானொலி’ என்ற பெயரில் இருவார இதழாக அது வெளிவந்தது.

🥀 அன்றைய காலகட்டத்தில் அனைத்து செய்தித்தாள் கடைகளையும் இது அலங்கரித்தது. அகில இந்திய வானொலி ஒலிபரப்பும் நிகழ்ச்சி விவரங்களைப் பார்ப்பதற்கே பலர் அதனை வாங்கினர்.

🥀 சென்னை வானொலி, இன்றும் தனது நேயர்களுக்குப் பல்வேறு வகைகளில் சேவையாற்றி வருகிறது. குறிப்பாக, இயற்கை இடர்பாடுகளின்போது. ஒவ்வொரு டிசம்பரிலும் நாம் ஏதேனும் ஒரு வகையில் மழை, புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிப்படைந்து வருகிறோம்.

🥀 அந்த நேரத்தில், தடையில்லாமல் தனது சேவையை நேயர்களுக்குச் செய்த ஒரே வானொலி சென்னை வானொலிதான்.

அம்மா...அம்மா...எந்தன் ஆருயிரே....



அம்மா...அம்மா...எந்தன் ஆருயிரே....

*அம்மா

நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை.

என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன்.

கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் திறந்து பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.

என் வயிற்றில் இருந்து ஏதோ கயிறு போல் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கயிற்றில் தொங்கியபடி நான் ஆடிக் கொண்டிருக்கிறேன்.

இங்கே எந்த சப்தமும் கேட்கவில்லை. நீண்ட காலமாக ஒரே ஒரு சப்தம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.

அது இதயத்துடிப்பு. அவ்வப்பொழுது என்னை யாரோ தொடுவது போலவும் என்னுடன் பேசுவது போலவும் உணர்கிறேன்.

அந்தத் தொடுதலும் பேச்சும் மிக மென்மையாக இதமாக இருக்கிறது.

அதற்கு பதில் பேசும் விதமாக நிறைய முறை கை கால்களை அசைத்திருக்கிறேன்.

கூடவே அவ்வப்பொழுது இன்னொரு குரலும் கேட்கும். ஆனால் அது கொஞ்சம் கரடு முரடாக இருக்கிறது.

எத்தனை விதமான சப்தங்கள் கேட்டாலும் எப்போதும் மாறாதிருப்பது அந்த இதயத்துடிப்பின் சப்தம் தான்.

அதுயாரிடம் இருந்து வருகிறது என்பதை நிச்சயம் ஒருநாள் பார்த்து விட வேண்டும்.

என்னவோ தெரியவில்லை... இரண்டு மூன்று நாட்களாக இங்கிருந்து வெளியே சென்று விட வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. கை கால்களை உதைத்து எவ்வளவோ முயற்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை.

இறுதியாக ஒரு நாள் நான் இருந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாறி
எங்கோ நகரத் தொடங்கியது.

நான் தலை கீழாக மாறிவிட்டேன்.

அந்த இதயத்துடிப்பின் சத்தம் மெல்ல மெல்லக் குறைகிறது.
இந்த உலகத்தை விட்டு வேறெங்கோ செல்கிறேனோ என்று பயமாக இருக்கிறது.

எனக்கு மென்மையாகக் கேட்ட அந்தக் குரல் இப்போது வலியில் கதறுகிறது.

ஏனோ எனக்கு கஷ்டமாக இருக்கிறது. எல்லாம் என்னால் வந்தது. நான் தான் கை கால்களை உதைத்து ஏதோ செய்துவிட்டேன்.

திடீரென நான் இருந்த தண்ணீர் தொட்டியில் ஓட்டை விழுந்து விட்டது.

சோதனைக்கு மேல் சோதனை. தண்ணீரோடு அடித்துக்கொண்டு எங்கோ செல்கிறேன்.

இடையில் எங்கோ சிக்கிக்கொள்கிறேன்.
யாரோ என் தலையைப் பிடித்து இழுக்கிறார்கள்.

அதே நேரத்தில் அந்தக் குரலும் உயிர் போவதுபோல் கதறுகிறது. எனக்கும் வலிக்கிறது.

ஒரு வழியாக வெளியே வந்து விட்டேன். எனக்கும் அந்த உலகத்துக்கும் இருந்த கடைசித் தொடர்பான அந்தக் கயிறையும் வெட்டி விட்டார்கள்.

இவ்வளவு நாளும் நான் கேட்டு வந்த இதயத்துடிப்பும் முற்றிலும் நின்றுவிட்டது.

கதறிய அந்த குரலும் கேட்கவில்லை. அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

முதன் முறையாக வாய்விட்டு அழுகிறேன்.

ஆனால் என்னைச் சுற்றி எல்லோரும் சிரிக்கிறார்கள்.

அப்போதே தெரிந்து விட்டது இது ஒரு மானங்கெட்ட உலகம் என்று.

தண்ணீரில் குளிக்க வைக்கிறார்கள். ஆனாலும் அழுகிறேன். ஏதோ துணியில் சுற்றி எல்லோருக்கும் என்னைக் காட்டுகிறார்கள்.

என் இடுப்புக்கு கீழ் எதையோ பார்த்துச் சிரிக்கிறார்கள். எனக்குக் கோபமாய் வருகிறது. ஆனாலும் அழுகிறேன். அவர்கள் மட்டும் என்னைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து ஈ... என்று இளிக்கிறார்கள்.

அந்த இதயத்துடிப்பும் மென்மையான பேச்சும் எனக்குக் கேட்கவில்லை.
அதனால் இந்த உலகம் எனக்கு பிடிக்கவில்லை.

என்னைக் கொண்டு சென்று யார் பக்கத்திலோ படுக்க வைத்தார்கள்.

நான் அழுவதை நிறுத்தி விட்டேன். காரணம் அந்த இதயத்துடிப்பு இப்போது கேட்க ஆரம்பித்துவிட்டது.

கைகளால் என்னைத் தடவினார்கள். ஆம் என் உலகத்தில் இருந்தபோது உணர்ந்த அதே தொடுதல்.

அவர் மாதிரியே இருக்கான் இல்ல... என்று பேசிய போது அந்த குரலின் அதே மென்மையை உணர்ந்தேன்.

அது யாரென்று பார்த்து விடவேண்டும் என்று துடிக்கிறேன். ஆனால் கை கால்களை மட்டுமே அசைக்க முடிகிறது. திரும்ப முடியவில்லை.

எப்படியாவது பார்க்க வேண்டும் என்று நினைக்கும் போது இரண்டு கைகள்
என்னைத் தூக்குகிறது.

தன் முகத்துக்கு நேராய்க் கொண்டு போய் வைக்கிறது,.

மரணம் வரை சென்று வந்த துயரத்திற்கு நடுவே மகிழ்ச்சி நிறைந்த புன்னகை அந்த முகத்தில்.

அந்த முகத்தைப் பார்த்த போது எனக்குள் ஏற்பட்ட சந்தோஷத்தை, பரவசத்தை விவரிக்க எந்த மொழியிலும் வார்த்தைகளில்லை.

அது என் தாய் என்பதை உணர்ந்து கொண்டேன்.

ஆனாலும் ஏனோ அழுது கொண்டே இருக்கிறேன்.

நான் அழுத போதும் அம்மா மட்டும் சிரித்துக் கொண்டே இருக்கிறாள்.

எனக்குக் கோபமாய் வந்தது. அப்போது எனக்குத் தெரிய வில்லை...

என் மொத்த வாழ் நாளில் நான் அழுவதைப் பார்த்து என் அம்மா சிரிக்கும் ஒரே ஒரு நாள் அது தான் என்று....

அம்மா....


ஒடுக்கப்பட்ட மக்களி உரிமைகளுக்காக போராடிய குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் மீராகுமார்;



ஒடுக்கப்பட்ட மக்களி உரிமைகளுக்காக போராடிய குடும்பத்தில்  இருந்து வந்தவர் தான் மீராகுமார்;

தலித் சமுகத்தினரை கோயிலுக்குள் சென்று வழிபடவும், தீண்டாமைக்கு எதிராகவும் 1935 காலகட்டத்திலேயே போராடிய மிகப்பெரும் தலைவரின் மகள் மீராகுமார் தான் தற்போது எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் லோக்சபா சபாநாயகரான மீராகுமார் அனைத்து கட்சி எம்எல்ஏக்களையும் அரவணைத்து சபையை நடத்துவதில் மிகவும் சிறந்தவர். அமைதியின் மறு உருவான மீராகுமார் தனது மெல்லிய குரலால் பேசுவது அவரது வயதிற்கும், தோற்றத்திற்கும் நேர் எதிராக இருக்கும். மெத்த படித்த மேதாவி என்றோ தீண்டாமையை ஒழிப்பதற்காக பாடுபட்ட தலைவரின் மகள் என்றோ தலைகணம் இல்லாதாவர்.

பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டம், சந்த்வா கிராமத்தில் சாமர் எனும் தலித் சமூகத்தில் பிறந்தவர் ஜெகஜீவன்ராம். பள்ளிப்பருவத்தில் இருந்தே தீண்டாமையால் ஒதுக்கப்பட்ட ஜெகஜீவன்ராம் உயர்சாதி மாணவர்கள் பயன்படுத்துகின்ற பானை நீரைத் தாழ்த்தப்பட்ட மாணவர்களும் சாதி வேறுபாடுகள் இல்லாமல் பயன்படுத்த வேண்டும் என்று போராடி அதில் வெற்றியும் கண்டவர்.

1931ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஜெகஜீவன் ராம் ஒரே தொகுதியில் 10 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர், அவரக்கு அந்த அளவிற்கு மக்கள் செல்வாக்கு இருந்தது. 1935 இல் அனைத்திந்திய தாழ்த்தப்பட்டோர் அமைப்பு உருவாவதில் பேருதவியாக இருந்த பாபு ஜெகஜீவன் ராம்.

கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைவதையும் பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுப்பதையும் அனுமதிக்க வேண்டும் என்று போராடினார். 1942 இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர், அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்து சமூக நீதிக் கருத்து அரசியல் சட்டத்தில் இடம் பெறக் காரணமாக இருந்தார்.

நிறைகுடம் எப்போதுமே தளும்பாது என்பது போல மிகப்பெரிய தலித் தலைவரின் மகளான மீராகுமார் தந்தையைப் போலவே சிறந்த அரசியல் தலைவராக தன்னுடைய பணியை செய்து வருகிறார். #நாட்டின்_முதல்_லோக்சபா_பெண்_சபாநாயகர்_என்ற_பெருமையை_பெற்றவர். பாஜக சார்பில் தலித்தாக ராம்நாத்கோவிந்த் அறிவிக்கப்பட்ட நிலையில் அவரை எதிர்த்து நிற்பதற்கு சரியான வேட்பாளர் என்ற அடிப்படையில் மீராகுமார் தற்போது குடியரசுத் தலைவர் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளார்.

வெள்ளி, 23 ஜூன், 2017

மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ?



மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ?

இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது!

கரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது....

சலவைக்காரர் - வெளுத்துக்கட்டுதுங்க !

நர்ஸ் - நார்மலாதான் பெய்யுது !

பஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது !

போலீஸ்காரர் - மாமூலா பெய்யுது !

வேலைக்காரி - பிசு பிசுன்னு பெய்யுது !

ஜூஸ் கடைக்கார்: புழிஞ்சி எடுக்குது !

டீ கடைக்காரர்: ஆத்து ஆத்துன்னு ஆத்துது  !

டாஸ்மாக் கடைக்காரர்: சும்மா கும்முன்னு பெய்யுது !

கோவில் பூசாரி: திவ்யமா பெய்யுது !

மசாஜ் பார்லர்க்காரர்- சும்மா புடிபுடின்னு புடிக்குது !

பேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்னு கொட்டுது!

மனைவி : செம அடி அடிக்குது !

கணவன் :  வாங்கு வாங்குன்னு வாங்குது !

வியாழன், 22 ஜூன், 2017

செல்வம் குறைவதின் அறிகுறிகள்



செல்வம் குறைவதின் அறிகுறிகள் :-

1. கழுவபடாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே இருப்பது.

2. வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுவது.

3. தலைமுடி தரையில் உலாவருவது.

4. ஒற்றடைகள் சேருவது.

5. சூரிய மறைவுக்கு பின் வீட்டை பெறுக்குவது துடைப்பது.

6. எச்சில் பொருள்கள் பாத்திரங்கள் காபி கப்புக்கள் ஆங்காங்கே இருப்பது.

6. பெண்கள் தினமும் தலைக்கு குளிப்பவர்களை தவிர மற்றவர்கள் செவ்வாய் வெள்ளி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.

7. ஆண்கள் புதன் சனி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.

8. குழாய்களில் தண்ணிர் சொட்டுவது.
சுவற்றில் ஈரம் தங்குவது.

9. செல் (கரையான்) சேருவது.

9. பூராண் போன்ற விஷ ஜந்துகள் உலாவுவது.

9. அதிக நேரம் ஈர துணிகள் போட்டு வைப்பது. தேவைக்கு அதிகமான பொருட்கள் வைத்து இருப்பது. வீணடிப்பது.

10. உணவு பொருள்கள் வீண்ணடிப்பது.

11. உப்பு பால் சர்க்கரை அரிசி போன்றவற்றை சுத்தமாக தீரும் வரை வாங்காமல் இருப்பது, மீண்டும் வாங்காமல் அதன் பாத்திரங்களை கழுவி வைப்பது.

12. குறைந்த பட்ச வெளிச்சம் இல்லாமல் மின்சாரம் சேமிப்பதாக வெளிச்சங்களை குறைப்பது.

13. மெல்லிசை கேட்காமல்
சதா காலம் ராஜச இசையை, அபச இசைகளை கேட்பது.

14. இல்லை இல்லை வராது வராது வேண்டாம் வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிம் உச்சரிப்பது.

15. படுக்கையையும் பூஜை பொருட்களையும் வேலையாட்களை கொண்டு சுத்தம் செய்வது.

16. வாசலில் செருப்பு துடப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைத்து இருப்பது.

17.பெண்கள் புடவை முந்தி(முந்தானை)தொங்க விட்டு இடுப்பில் சொருகாமல் இருப்பது.

18.தலைமுடியாமல் விரித்த கோலத்தில் இருப்பது.

19.தலைவாசல் சாணம் தெளித்து கோலமிடாமல் இருப்பது.
இவற்றை தவிர்த்து, வளமுடன் வாழ்க வளர்க.

புதன், 21 ஜூன், 2017

தமிழ்நாடும் மற்ற மாநிலமும்....



தமிழ்நாடும்  மற்ற மாநிலமும்....

நதிநீர் இணைப்பில் முதலிடம் பிடித்த மாநிலம்? *– ஆந்திரா*

தடுப்பணைகள் கட்டுவதில் முதலிடம் பிடித்த மாநிலம்? *– குஜராத்*

அணை கட்டுவதில் முதலிடம் பிடித்த மாநிலம்
*– கர்நாடகா*

ஆற்று மணல் திருட்டை தடுத்த மாநிலம்?
*– கேரளா*

மழைநீர் சேமிப்பு, சொட்டுநீர் பாசனத்தில் முதலிடம் பிடித்த மாநிலம்? *– ராஜஸ்தான்*

மண் பரிசோதனையில் முதலிடம் பிடித்த மாநிலம்? *– மத்திய பிரதேசம்*

கால்நடை வதை தடுப்பு, மாற்று வருவாய் உத்திரவாதம் வழங்குவதில் முதல் இடம்? *– உத்திரபிரதேசம்*

விவசாயிகளுக்கு வறட்சி, பயிர் காப்பீட்டில் முதலிடம்? *– மகாராஷ்ட்ரா*

இயற்கை விவசாயத்திற்கு ஊக்கமளித்து முதலிடம் பிடித்த மாநிலம்?
*– சிக்கிம்*

ஆன்லைன் சந்தை மூலம் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்க செய்யும் மாநிலம்?
*– சட்டீஸ்கர்*

செயற்கை நீர்நிலைகளை உண்டு பண்ணி அதில் விவசாயிகள் மீன் வளர்ப்பதை ஊக்குவிக்கும் மாநிலம்?
*– மேற்கு வங்கம்.*

அய்யோ! அய்யய்யோ!! இதில் எதிலும் என் தமிழ்நாடு இல்லையா? போராடுவோம்… போராடுவோம்… இறுதி வரை போராடுவோம்….!!!!

அய்யா, அவசரப்பாதீங்க… உங்க தமிழ்நாடும் பல விதத்திலே முதலிடத்தில இருக்கு.. இப்ப நான் கேள்வி கேக்குறேன். நீங்க டாண் டாண்ணு பதில் சொல்லுவீங்க பாருங்க….

தன் ஆற்று மணலையே அள்ளி அதை வேறு மாநிலத்திற்கு விற்பதில் முதலிடம்
*– தமிழ்நாடு*

வருஷத்துக்கு ஒரு வாட்டி ஏரி, குளம் தூர் வாறினதா கணக்கு காட்டி பணத்தை அபேஸ் பண்ணும் மாநிலம்?
*– தமிழ்நாடு*

அரசாங்கம் மக்களுக்கு இலவசமா செய்ய வேண்டிய கல்விச் சேவை, மருத்துவத்தை தனியார் காசாக்குறதுல முதலிடம்
*- தமிழ்நாடு*

அனைத்து அரசு அலுவலகங்களிலும் காசு லஞ்சம் கொடுத்தாதான் வேலை நடக்கும்ங்கிற நிலையை 50 வருஷமா கடைபிடிக்கும் மாநிலம்
*– தமிழ்நாடு*

50 வருஷமா திராவிட கட்சிகள் என்ற பெயரில் உலவும் திருட்டுக் கழகங்கள் எவ்வளவு ஏமாற்றினாலும் சுரணையில்லாம இருப்பதில் முதலிடம்
*– தமிழன், தமிழ்நாடு*

8000 ரூபாய் சின்டெக்ஸ் டாங்க்குக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பீடுன்னனு சொன்னாலும் மந்த புத்தியுடன் பேசாமடந்தையாக இருப்பதில் முதலிடம்?
*– தமிழ்நாடு*

நாட்டின் இயற்கை வளமான தாது மணல்,கிரானைட் போன்றவற்றை அனுமதியில்லாமல் திருடி ஏற்றுமதி செய்வதில் முதலிடம்?
*- தமிழ்நாடு*

கோயில் வேண்டாம், கடவுள் இல்லைன்னு சொன்னவனை தர்மகர்த்தாவாக்கி அழகு பார்ப்பது
*– தமிழ்நாடு*

செவ்வாய், 20 ஜூன், 2017

காமராசர்



காமராசர்

பிரம்மன் ஒரு குழந்தையை உருவாக்கிக் கொண்டிருந்தார்..

அப்போது அங்கு வந்தான் மன்மதன்..

"இக்குழந்தைக்கு பேரழகைத் தருகிறேன் , என்றான்..

தேவையில்லை என்றார் பிரம்மா..

"லட்சுமி வந்து பெருஞ்செல்வத்தை தருகிறேன் என்றாள்..

தேவையில்லை என்றார்.

"சரஸ்வதி வந்தாள் , தேவையில்லை உன் கல்வி என்றார் பிரம்மா....

"இவ்வுளவும் இல்லாமல் பிறகு எதற்காக இந்தக்குழந்தையை உருவாக்குகிறீர்கள்??
என்று கேட்டபோது..

"பேரழகும் இல்லாமல்.
பெருஞ்செல்வமும் இல்லாமல்
பெரிய கல்விச் செல்வமும் இல்லாமல் ஒருவனால் உலகப்புகழ் பெறமுடியும் என்று காட்டுவதற்கு இந்தக்குழந்தையை உருவாக்குகின்றேன் என்றாராம்.....

அந்தக்குழந்தை_தான்_விருதுபட்டியில்

..... " காமராஜராகப்  பிறந்தது "  .... !!!

திங்கள், 19 ஜூன், 2017

வீட்டில் இருந்தபடியே தினமும் 4,000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய வேலைகள்..!



வீட்டில் இருந்தபடியே தினமும் 4,000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய வேலைகள்..!

உங்களால் அலுவலகம் சென்று காலை 9 முதல் 5 மணி வரை வேலை செய்ய முடியவில்லையா உங்களது பெற்றோர் உடன்மும், குடும்பங்களுடனும் நேரத்தைச் செலவிட விரும்புகின்றீர்களா அதே நேரம் வருமானமும் வேண்டுமா?
உங்களுக்கு ஏகப்பட்ட வேலைவாய்ப்புகள் வீட்டில் இருந்தபடியே இருக்கின்றது. இதோ அவற்றில் சில..

விர்ச்சுவல் அசிடண்ட்ஷிப்
தொழில்முனைவோர், வேலை செய்பவர்கள் மற்றும் சிறிய அணிகள் பெரும்பாலும் பல்வேறு நிர்வாகப் பணிகளுக்கு உதவ வேண்டும்.
வாடிக்கையாளர்களுடனும் முதலீட்டாளர்களுடனும் தொடர்பு கொள்ளுதல், பவர்பாயிண்ட் விளக்கக்காட்சிகள் மற்றும் எக்செல் ஷீட்கள் போன்ற வணிக ஆவணங்களை உருவாக்குதல், வலைப்பதிவுகள் மற்றும் வலைத்தளங்களை நிர்வகித்தல், முதலியன போன்ற வாடிக்கையாளர்களுடனான மெய்நிகர் உதவியாளர்கள் பணிகளாகக் கிடைக்கும்.
ஒரு விரிச்சுவல் அசிச்டண்ட் ஆனவர் உங்கள் தகுதிகளைப் பொறுத்து, பயிற்சி அல்லது கூட்டத்தில் சில வகுப்புகளை வழங்கலாம். இருப்பினும், உங்களிடம் நல்ல திறனாய்வு திறன் இருந்தால், MS Office போன்ற பயன்பாடுகளைப் பயன்படுத்த முடியும் என்றால், நீங்கள் Elance மற்றும் Zirtual.com போன்ற தளங்களில் பதிவு செய்யலாம் விரிச்சுவல் வேலையைத் தொடங்கலாம்.

மொழி பெயர்த்தல்
உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் தெரியும் என்றால் உங்களுக்காகவே இந்த வேலை வாய்ப்பு ஆகும். உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்து அதனை இந்திய மொழிகளில் மொழிமாற்ற செய்ய முடியும் என்றால் போதும் வருமான ஈட்டலாம். இல்லை என்றால் மொழி வகுப்புகள் எடுக்கலாம்.
உலகளவில் மிகப் பெரிய நிறுவனங்கள், எழுத்தாளர்கள், வணிகர்கள் மொழிபெயர்ப்பு சேவையை எதிர்பார்க்கின்றனர். இதற்கு நீங்கள் Fiverr.com அல்லது Upwork.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மொழிபெயர்ப்பு மூலமாக 1 வார்த்தைக்கு 70 பைசா முதல் 5 ரூபாய் வரை நீங்கள் சம்பாதிக்கலாம். இதுவே சில வெளிநாட்டு மொழிகளுக்கு 10 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

பிலாக்
சொந்தமாகக் கட்டுரைகள், ஹெல்த், டெக் உள்ளிட்ட பிரிவுகளில் டிப்ஸ் அளிக்க முடியும் என்றால் ஒரு பிளாக் கிரியேட் செய்து அதில் ஆட்சென்ஸ் உள்ளிட்ட சேவை மூலமாக விளம்பரங்கள் பெற்றும் அதன் மூலம் சம்பாதிக்கலாம். அதுமட்டும் இல்லாமல் அஃப்லியேட் மார்க்கெட்டிங் போன்றவை மூலமாகவும் சம்பாதிக்கலாம்.,
இந்த விளம்பரங்கள் மூலமாக 2,000 ரூபாய் முதல் 15,000 வரை ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்கலாம்.
உங்கள் தயாரிப்புகளை இணையத்தில் விற்பனை செய்யலாம்
நீங்கள் சொந்தமாக ஒரு பொருட்களைத் தயாரிக்கின்றீர்கள் என்றால் அதை ஆப்லைன் மட்டும் இல்லாமல் இணையதளம் மூலமாகவும் விற்பனை செய்யலா. இதற்கு நீங்கள் பிளிப்கார்ட், அமேசான், ஈபே உள்ளிட்ட தளங்கள் பதிவு செய்து உங்கள் தயாரிப்பு மற்றும் அதன் விளக்கங்கள், படங்கள் போன்றவற்றை அப்டேட் செய்து விற்பனை செய்யலாம்.
உங்களுடைய தயாரிப்பு, விலை மற்றும் தேவையைப் பொருத்து அதிகளவில் சம்பாதிக்க முடியும்.

யூடியூப் வீடியோ
உங்களுக்குக் கேமராவை கண்டு பயம் இல்லை ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க முடியும் என்றால் சொந்தமாக ஒரு வீடியோ கிரியேட் செய்து அதை யூடியூபில் அப்லோடு செய்து அதனைப் பிறரை பார்க்க வைக்கலாம். அதுமட்டும் இல்லாமல் அந்த வீடியோக்கலுக்கு ஆட்சென்ஸ் மூலமாக இணைத்து மானட்டைசிங் செய்து பார்வையாளர்களை வைத்துச் சம்பாதிக்கலாம்.
யூடியூபில் உங்கள் வீடியோவை 1,000 நபர்கள் பார்த்தால் 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.


வெப் டெவலப்மெண்ட்
உங்களுக்கு இணையதளம் உருவாக்க கூடிய கணினி மொழிகள் தெரியும் என்றால் அதன் மூலமாக இணையதளங்கள் உருவாக்கும் சேவைகளை வழங்கி உங்களுக்குக் கிடைக்கும் கிளைன்ட் பொருத்து 20,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
நீங்கள் இணையதளம் மூலம் ஒருவருக்கு வேலை செய்யும் போது அவர்கள் வேலையை வாங்கிக் கொண்டு உங்களை ஏமாற்றவும் கூடும். அதனால் அடிப்படை செலவுக்கான கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு பணிகளைத் துவங்கவது நல்லது.
உள்ளடக்க எழுதுதல்
உங்களுக்கு ஏதேனும் மொழியில் எந்தப் பிழையும் இல்லாமல் கட்டுரை போன்றவற்றை எழுத முடியும் என்றால் அந்தத் திறனை வைத்துக் கட்டுரைகள் எழுதிச் சம்பாதிக்கலாம்.
அதுமட்டும் இல்லாமல் சில பொருட்கள் தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்பினை உங்களுக்கு அளித்து அது பற்றியும் கட்டுரை எழுதத் தர அளிப்பார்கள். இதற்கு நீங்கள் Fiverr.com அல்லது Upwork.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த வேலிகளின் மூலமாக மாதம் 8,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
ஆன்லைன் டியூசன்
நீங்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் நால் அறிவாற்றல் உள்ளவர்கள் அந்தப் பாடத்தில் பட்டமும் பெற்றுள்ளீர்கள் என்றால் MyPrivateTutor.com, BharatTutors.com, tutorindia.net என்ற இணையதளங்களில் பதிவு செய்து இணையதளங்கள் மூலமாக டியூசன் வகுப்பு எடுத்து மணி நேரத்தில் 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

டேட்டா எண்டிரி
ஆடோமேஷன் உள்ளிட்ட தொழில்நுட்பங்களால் இந்தியாவில் டேட்டா எண்டிரி தொழில் பெறும் பாதிப்பை அடைந்துள்ளது.
உங்களுக்கு டைப்புங் ஆற்றால் இருந்தால் போது மணி நேரத்திற்கு 300 ரூபாய் முதல் 1,500 வரை சமாதிக்கக் கூடிய பணிகள் இருந்தாலும் அதற்கு ஏற்றவாறு சரியான வாடிக்கையாளர்கள் கிடைப்பது பெறும் சிரமாக உள்ளது.
Thanks one India

யார் இந்த ‘ராம் நாத் கோவிந்த்’?



யார் இந்த ‘ராம் நாத் கோவிந்த்’?

தொழில்முறையில் வழக்கறிஞர், தலித் பிரிவில் பிறந்த தலைவர், இந்துத்துவா சிந்தனை அதிகம் கொண்டவர், அரசியல் ரீதியாக பா.ஜனதா கட்சிக்காக ஆத்மார்த்தமாக பணியாற்றும் தொண்டர் என்றுராம்நாத் கோவிந்த்தை குறிப்பிடலாம்.
பிறப்பு
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் கடந்த 1945ம் ஆண்டு, அக்டோபர் 1-ந்தேதிகான்பூர்,தேராப்பூரில்பிறந்தவர். பி.காம்இளங்கலை பட்டப்படிப்பு முடித்தராம்நாத்கோவிந்த், கான்பூர் பல்கலைக்கழக்கத்தில் எல்.எல்.பி. வழக்கறிஞர் படிப்பை முடித்தார்.
வழக்கறிஞர்
அதன்பின், டெல்லி சென்றராம்நாத் கோவிந்த், கடந்த 1971ம் ஆண்டு பார்கவுன்சிலில்தன்னை பதிவு செய்து கொண்டார். 1977-79 வரை டெல்லி உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றினார். அதன்பின் 1980ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரை உச்ச நீதிமன்றத்தில்மத்தியஅ ரசின்வழக்கறிஞராக பணியாற்றினார். டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக ஏறக்குறைய 16 ஆண்டுகள் பயிற்சி பெற்றவர்ராம்நாத் கோவிந்த்.
எம்.பி.

பா.ஜனதா கட்சியில் சேர்ந்தராம்நாத்கோவிந்த் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து கடந்த 1994ம் ஆண்டு முதல்முறையாக மாநிலங்கள் அவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 2 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2006 ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 12 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்தார்.

நாடாளுமன்ற குழு

நாடாளுமன்ற எம்.பியாகஇருந்த போது கோவிந்த்பல்வேறு குழுக்களில் உறுப்பினராக இருந்துள்ளார். எஸ்.சி. மற்றும் எஸ்.டி. நலவாரிய குழு,உள்துறை விவகாரக்குழு,பெட்ரோலியம்மற்றும் இயற்கை எரிவாயு குழு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் குழு, சட்டம் மற்றும் நீதிக்குழு,மாநிலங்கள் அவைக்குழுவின் தலைவர் ஆகிய பொறுப்புகளில் இருந்தவர்.

தலித் பிரிவு தலைவர்

மேலும், பா.ஜனதா கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளராகவும்,தலித் பிரிவான ‘தலித்மோர்ச்சா’அமைப்பின் தலைவராகவும், ‘அனைத்து இந்திய கோலிசமாஜ்’தலைவராகவும் கடந்த 1998ம் ஆண்டு முதல் 2002 வரை கோவிந்த் இருந்தார்.

கல்விப்பணி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கிராமப் பகுதிகளில் கல்வியைக் கொண்டு சேர்க்கராம்நாத் கோவிந்த் பலநடவடிக்ைககள்எடுத்தார். தனது 12 ஆண்டு கால எம்.பி.பதவியின் போது, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் மாநிலத்தில் பள்ளிகள் கட்டவும் பெரும் உதவிகளை கோவிந்த் செய்தார். லக்னோவில் உள்ளஅம்பேத்கர்பல்கலைகழகத்தில் நிர்வாகக் குழுவிலும் உறுப்பினராகவும்,கொல்கத்தாஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்திலும் நிர்வாகக்குழுவிலும் கோவிந்த் இருந்துள்ளார்.

சட்ட உதவி

வழக்கறிஞரான கோவிந்த், நலிந்த பிரிவினருக்கும், தலித் மக்களுக்கும் ,பெண்களுக்கும் டெல்லியில் இலவச சட்ட உதவிகளைச் செய்தார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் மக்களின் ஆதரவு கட்சியானபகஜன்சமாஜ், அதன் தலைவரமாயாவதிக்குமாற்றாக பா.ஜனதா கட்சியால்ராம்நாத் கோவிந்த் வளர்க்கப்பட்டார்.

ஆளுநர்

கடந்த 2015ம் ஆண்டு,ஆக்ஸ்ட்8-ந்தேதிபீகார் மாநிலத்தின் ஆளுநராக கோவிந்த் நியமிக்கப்பட்டு அங்கு செயலாற்றி வருகிறார்.

ஆர்.எஸ்.எஸ். பின்புலம்

கடந்த 2002ம் ஆண்டு இந்தியா சார்பில் ஐ.நா சபைக்கு சென்று உரையாற்றிய பெருமையை கோவிந்த் பெற்றவர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும், பா.ஜனதா கட்சியிலும் அனைத்து தலைவர்கள் மத்தியில்ராம்நாத் கோவிந்த்நன்மதிப்பையும், ஆதரவையும் பெற்றவர். குறிப்பாக ரூபாய் நோட்டு தடை காலத்தில் பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு தீவிர ஆதரவாக இருந்து கருத்துக்களைத் தெரிவித்தவர்.


பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த்



மீண்டும் தலித் ஜனாதிபதி பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த்.

பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா செய்தியாளர்களிடம் முறைப்படி அறிவித்தார். குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் அமித் ஷா தெரிவித்தார்.

பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அத்வானி அல்லது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரில் யாரேனும் ஒருவர் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. இதற்கு சாத்தியங்கள் குறைவாக உள்ளது தெரிந்த நிலையில், சுஷ்மா ஸ்வராஜ் பெயர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 71 வயதான ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் கான்பூரில் பிறந்த ராம்நாத் கோவிந்த், வழக்கறிஞராக வாழ்க்கையை தொடங்கினார். ஆர்.எஸ்.எஸ்-இல் தீவிரமாக இயங்கிய அவர், இருமுறை ராஜ்ய சபா எம்.பியாகவும், பாஜகவின் எஸ்.சி பிரிவான தலித் மோர்ச்சாவின் தலைவராகவும் பொறுப்பில் இருந்துள்ளார். 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் பீகார் ஆளுநராக ராம்நாத் கோவிந்த் பதவி வகித்து வருகிறார்.

பழங்குடியின மக்கள் அதிகமுள்ள மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அதனை கருத்தில் கொண்டு இந்த முடிவை பாஜக எடுத்துள்ளது என்றும், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவித்ததன் மூலம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஞாயிறு, 18 ஜூன், 2017

இந்திய தேசிய காங்கிரஸ் ராகுல் காந்தி பிறந்த நாள் ஜூன் 19, 1970.



இந்திய தேசிய காங்கிரஸ் ராகுல் காந்தி  பிறந்த நாள் ஜூன் 19, 1970.

ராகுல் காந்தி  ( 19 ஜூன் 1970 ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர், அமேதி தொகுதி பிரதிநிதி ஆவார். அவருடைய அரசியல் கட்சியின் பெயர்
இந்திய தேசிய காங்கிரஸ்  இவர் நேரு-காந்தி குடும்பத்தை சார்ந்தவர், இது இந்தியாவில் மிகுந்த பாரம்பரியம் மிக்க
அரசியல் குடும்பம் ஆகும்.காங்கிரஸ் கட்சி 2009-ம் ஆண்டு பாரளுமன்ற தேர்தலில் மிகபெரிய வெற்றியை பெற்றதற்காக ராகுல் காந்தி பரவலாக புகழப்பட்டார்.இவரின் உத்திகள் மிகவும் சுவாரசியமானது: அடித்தட்டு மக்களிடையே மிகவும் அன்னியோனியம், கிராம மக்களிடையே ஆழ்ந்த தொடர்பு, மற்றும் காங்கிரஸ் கட்சிக்குள் சிறந்த ஜனநாயக பண்பினை கொண்டுவர முயற்சித்து வருகிறார். [3] இவர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் அமரும் வாய்ப்பினை மறுத்துவிட்டு அடித்தளம் வரை கட்சியினை பலப்படுத்தும் பணியில் உள்ளார்.
ஆரம்ப வாழ்க்கை
இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியான ராஜீவ் காந்திக்கும் , இத்தாலியில் பிறந்து தற்போதைய
காங்கிரஸின் தலைவராக இருக்கும்
சோனியா காந்திக்கும் மகனாக ராகுல் காந்தி புது டெல்லியில் பிறந்தார். அவருடைய பாட்டி முன்னாள் பிரதம மந்திரியான இந்திரா காந்தி ஆவார். அவருடைய சிறப்புமிக்க பாட்டனார்
இந்தியாவின் முதல் பிரதம மந்திரியான
ஜவஹர்லால் நேரு மற்றும் மிகவும் சிறப்புமிக்க முப்பாட்டனார் இந்தியாவின் சுதந்திர விடுதலை இயக்கத்தின் தனித்துவம் வாய்ந்த தலைவரான மோதிலால் நேரு ஆவார்.
இவர் டூன் பள்ளி சேர்ந்து பயிலுவதற்கு முன்னாள் நியூ டெல்லி மாடர்ன் பள்ளி சேர்ந்து பயின்றார். இவர் 1981-83 ஆம் ஆண்டுகளில் தன் தந்தையின் தாயகக் கல்வி நிலையத்தில் சேருவதற்கு முன்னால், பாதுகாப்பு கருதி வீட்டிலிருந்தே கல்வி பயின்றார்.  1994 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் படிப்பை தொடர்ந்து அதே சமயம்
ரோல்லின்ஸ் காலேஜ் , ப்ளோரிடாவில் இளங்கலை பி.ஏ. பட்டம் பெற்றார். ] இவர் 1995 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் , ட்ரினிட்டி கல்லூரியில் வளர்நிலைக் கல்வியலில்
ஆய்வியல் நிறைஞர் (M.PHIL) பட்டம் பெற்றார்.

பணித்துறை

ஆரம்பகால வாழ்க்கை
ராகுல் காந்தி, பட்டபடிப்பு முடித்த பின்
மைக்கேல் போர்டேர்ஸ் நிர்வாக ஆலோசனை நிறுவனம் , மற்றும்
கண்காணிப்பு குழுமத்தில்  மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார்.இவர் தன்னை யார் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமல் பணிபுரிந்ததால் தான் இன்னாருடன் பணிபுரிகின்றோம் என்பதே சக பணியாளர்களுக்கு தெரியாமல் இருந்தது.இவரின் மூத்த கூட்டாளி ஒருவர் கூறுகையில் இவரின் பணி முத்திரை பதிக்கும் படியாக இருந்தது என்று கூறுகின்றார். பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்துறை குழுமத்தை நடத்துவதற்காக 2002 - இன் பிற்பகுதியில் மும்பைதிரும்பினார் .

அரசியல் வாழ்க்கை
2003-இல் இவர் தேசிய அரசியலுக்கு வரப்போவதாக ஊடகங்கள் பரவலாக செய்திகள் வெளியிட்டன. ஆனாலும் இவர் அதை உறுதிப்படுத்தவில்லை. ] இவர் தனது தாயாருடன் பொது நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களிலும் கலந்து கொண்டார்.
பதினான்கு வருட இடைவேளைக்குப்பின் நல்லெண்ணப் பயணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியைக் காண இவரது சகோதரி பிரியங்கா காந்தியுடன்
பாகிஸ்தானுக்கு சென்று வந்தார்.
இவர் தன் தந்தையின் முன்னாள் தொகுதியும் தன் தாயின் அப்போதைய தொகுதியுமான அமேதிக்கு ஜனவரி 2004-இல் சென்றிருந்தபோது இவர் மற்றும் இவருடைய சகோதரியின் அரசியல் பிரவேசம் பற்றிய ஆருடங்கள் பலமாக வலம்வந்தன. அரசியல் பிரவேசம் பற்றிய தீர்மானமான முடிவை சொல்ல நிராகரித்து விட்டாலும் தான் அரசியலை வெறுக்கவில்லை என்று பதிலளித்தார். "தான் உண்மையாகவே எப்பொழுது அரசியலில் நுழைவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், தான் எப்பொழுது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்" என்றும் பதிலளித்தார்.
ராகுல்காந்தி அவர்கள் அரசியலில் தனது வருகையை மார்ச் 2004 ல்அறிவித்தார். இந்தியாவின் பாராளுமன்றத்தின் கீழ்சபையான லோக்சபாவிற்கு மே 2004 ல் நடைபெற்ற தேர்தலில், தனது தந்தையின் தொகுதியான உத்திரப்பிதேசத்தில் உள்ள
அமேதியில் தான் போட்டியிடப்போவதாக மார்ச் 2004 ல், அறிவித்தார். இவர் தந்தைக்கு முன்பே, அவரது சித்தப்பா
சஞ்சய் காந்தி விமானவிபத்தில் இறப்பதற்கு முன்பு வரை அமேதியின் பிரதிநிதியாக - இருந்தார். இவரது தாயாரும் ரேபரேலி தொகுதிக்கு மாறும் வரை அமேதி தொகுதியில் பதவியில் இருந்தார். அப்பொழுது காங்கிரஸ் கட்சி என்பது தொகுதி கொண்ட உத்திர பிரதேசத்தில் வெறும் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்தது. இவரது சகோதரியான பிரியங்கா காந்தியின் அதிக வசீகரம் கூடுதலான வெற்றியை பெற்றுத்தரும் என்று எதிர்பார்த்த அரசியல் விமர்சகர்களுக்கு காங்கிரசின் இந்த நிலை பெரும் வியப்பை உண்டாக்கியது. கட்சி பிரமுகர்களிடம் ஊடகங்களுக்கு அளிப்பதற்கு தேவையான தன்விபர பட்டியல் இல்லை. இவ்வாறு அவரின் பிரவேசம் ஆச்சர்யப்படும் வகையில் இருந்தது. இந்தியாவின் தலைசிறந்த அரசியல் குடும்பத்தின் இளம் உறுப்பினர் என்ற முறையில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் எதிர்காலத்தை இந்தியாவின் இளய தலைமுறையில் ஒருவராக இருந்து சீரமைக்க முடியும் என்ற நம்பிக்கையை வெளிநாட்டு ஊடகங்களுக்கு இவர் அளித்த நேர்காணலால் அறியலாம். அதில் இந்தியாவின் ஒற்றுமைக்கு பாடுபடுவேன் என்றதோடு, அரசியல் பிளவுகளுக்கு கண்டனமும் தெரிவித்தார். மேலும் ஜாதி , மத பதற்றத்தை குறைக்க பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார். அவருடைய குடும்பத்தின் ஈடுபாடு அத்தொகுதியில் நீண்ட காலமாக இருப்பதை கண்ட அத்தொகுதி உள்ளூர்வாசிகள் அவர் வேட்பாளர் ஆனதும் வாழ்த்துக்களையும் சந்தோஷங்களையும் தெரிவித்தனர்.

இந்திய தேசிய காங்கிரஸின் அரசியல் பிரமுகர்.

ராகுல் தன் குடும்பத்தின் திடமான ஆதரவுடன் பெரும்பான்மை வாக்குகளை பெற்று யாருமே எதிர்பாராத வகையில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்
பாரதிய ஜனதா கட்சியை முறியடித்தார். அவருடைய தேர்தல் பிரச்சாரம் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வாத்ஸராவின் மேற்கோள்படி வழி நடத்தப்பட்டது. 2006 வரையிலும் அவர் வேறு எந்த துறையிலும் கவனம் செலுத்தாமல் தனது தொகுதி பிரச்சினைகளிலும், உத்திர பிரதேச அரசியலிலும் மட்டுமே கவனம் செலுத்தினர். மேலும் இதனால் இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் சோனியா காந்தி இவரை வருங்காலத்தில் தேசிய காங்கிரஸ் தலைவராக மாற்ற தயார் படுத்தி வருவதாக ஊகங்களை தெரிவித்தனர்.
ஜனவரி 2006 இல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் ஹைதராபாத் மாநாட்டில் ராகுல் காந்தி அவர்கள் கட்சியின் முக்கிய பொறுப்பேற்று நடத்திட வேண்டும் எனவும் மற்றும் பிரதிநிதிகளை அறிமுகம் செய்யுங்கள் எனவும் ஆயிரக்கணக்கான கட்சி உறுப்பினர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டார். அதன் பின் பேசிய அவர் "உங்களின் உணர்வுகளுக்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்களை கைவிட்டு விடப்போவதில்லை என்று உறுதி கூறுகின்றேன்". ஆனால் உடனடியாக கட்சியின் உயர் பதவியை ஏற்றுக்கொள்ளவதை மறுத்துவிட்டு அனைவரையும் அமைதிகாக்கும் படி கேட்டுக்கொண்டார்.
2006 ல் ரேய்பரேலி தொகுதியில் நடைபெற்ற மறுதேர்தலில் இவரது தயார் போட்டியிட்டபோது, ராகுல் காந்தியும் அவரது சகோதரியும் தங்களது தாயாருக்காக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இதன் விளைவாக இத் தேர்தலில் தங்களது தாயார் நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் மிக எளிதாக வென்றார்.
2007 ல் உத்திரபிரதேச சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரசின் உச்சகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் மிகப்புகழ் வாய்ந்த ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். இருப்பினும் காங்கிரஸ் கட்சி 8.53% வாக்குகளைப்பெற்று வெறும் 22 இடங்களில் மட்டுமே வென்றது. இத்தேர்தலில், தாழ்த்தப்பட்ட இந்திய மக்களின் பிரதிநிதிக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி முதல் முறையாக தனிப்பெரும்பான்மை பெற்று பதினாறு ஆண்டுகளுக்கு பின் ஆட்சியமைத்தது.

24 செப்டம்பர் 2007 ல் காங்கிரஸ் கட்சியின் செயல் அலுவலகத்தில் நடந்த கட்சியின் மறுசீரமைப்பில் ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டார். இச் சீரமைப்பிலேயே இவர் இளைஞர் காங்கிரஸ் அமைப்புக்கும்,
இந்திய தேசிய மாணவர் அமைப்பிற்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இவர் இளைய தலைவராக தன்னை நிரூபித்துக்கொள்ளும் முயற்சியாக நவம்பர் 2008 ல், டெல்லியில் உள்ள அவரது இல்லமான 12, துக்ளக் லேன் ல் நேர்காணல் நடத்தி குறைந்த பட்சம் 40 நபர்களை தேர்வுசெய்து இந்திய இளைஞர் காங்கிரசை வழிநடத்தும் ஆலோசகர்களாக நியமித்தார். இவர் 2007 இந்திய காங்கிரஸின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றது முதல் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.
2009 ஆம் தேர்தல்
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட நபரை 3,33,000 க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மீண்டும் அமேதி தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்டார்.இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி உத்திர பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 21 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு முழுமையான காரணம் ராகுல் காந்தியே ஆவார்.  இவர் ஆறு வாரங்களில் 125 பிரச்சார பொது கூடங்களில் பங்கேற்று பேசினார்
இவருடைய கட்சி வட்டாரத்தில் இவர் ஆர் ஜி என அறியப்படுகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை
2004 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கட்டிட கலை நிபுணரான வெரோனிக்கா என்ற பெண்ணுடன் டேட்டிங் சென்றார் என்று குற்றம்சாட்டப்பட்டார். அவர்கள் இருவரும் பல்கலை கழகத்தில் படிக்கும்போது சந்தித்து கொண்டனர்.

விமர்சனம்
2006 ஆம் ஆண்டு இறுதியில் நியூஸ் வீக் என்ற பத்திரிக்கை இவர் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்தது. இவர் ஹார்வர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் பட்டபடிப்பை முடிக்கவில்லை என்று
பார்வையாளர் குழு கூறியது. ராகுல் காந்தியின் சட்ட ரீதியான அறிக்கைக்கு பின்னர் நியூஸ் வீக் தனது முந்தைய குற்றச்சாட்டை மறுத்து கருத்து வெளியிட்டது.
1971 இல் பாகிஸ்தானை இரண்டாக பிரித்ததை தனது குடும்பத்தின் சாதனையாக கூறினார். இவர் கூறிய இந்த கருத்து இந்திய அரசியல் பிரமுகர்களிடம் மட்டுமல்லாது பாகிஸ்தானின் ஒரு சில முக்கியமான மக்களாலும் அந்நாட்டு வெளியுறவு தொடர்பு அதிகாரியாலும் விமர்சனத்திற்கு உள்ளானது.மிக பிரபலமான வரலாற்று அறிஞர் இர்பான் ஹபிப் அவர்கள் இந்த கருத்து பங்களாதேஷ் புரட்சியை அவமதிப்பதாக உள்ளது என்று கூறினார்.

2007-இல் உத்திரப்பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய இவர் "காந்தி-நேரு குடும்பத்தில் இருந்து யாரேனும் ஒருவர் அரசியலில் இருந்திருந்தால் பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்காது" என்று கூறினார். இக்கருத்து 1992 - ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அப்போதைய பிரதமராக இருந்த திரு. பி.வி.நரசிம்மராவ் அவர்களை தாக்கி பேசியதாகவே கருதப்பட்டது. ராகுலின் இந்த அறிக்கை பி.ஜே.பி.-இன் சில உறுப்பினர்களுடன் கடும் வாக்குவாதத்தை உண்டு பண்ணியது. சமாஜ்வாடி கட்சியும் இடது சாரிகளும் கூட இவரது கருத்தை "இந்து-முஸ்லிம்களுக்கு எதிரானது" என்றனர். இவர் சுதந்திரப்போரட்டவீரர்கள் மற்றும்
காந்தி-நேரு குடும்பத்தைப்பற்றி கூறிய கருத்துக்களுக்கு எதிராக பி.ஜே.பி.-இன் தலைவரான திரு.வெங்கையா நாயுடு அவர்கள் "அவசரநிலை பிரகடனத்திற்காக காந்தியின் குடும்பம் பொறுப்பு ஏற்றுக்கொள்ளுமா" என்ற கேள்வியை எழுப்பி விமர்சித்தார்.

2008 - ன் பிற்பகுதியில் ராகுல் காந்திக்கு ஏற்படுத்தப்பட்ட அவமதிப்பின் பலனாக அவருக்கு இருந்த செல்வாக்கு வெளிப்பட்டது. காந்தி மாணவர்களிடையே உரையாற்றுவதற்காக
சந்திர சேகர் ஆசாத் விவசாய பல்கலைகழக மண்டபத்தை பயன் படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அரசியல் காரணங்களின் விளைவாக முதல் அமைச்சர் செல்வி. மாயாவதி அவர்களால் இது தடை செய்யப்பட்டது ] .இதைத் தொடர்ந்து அப் பல்கலைக்கழக துணை வேந்தர் திரு.வி.கே.சூரி அவர்கள், அம்மாநில கவர்னரும், அப் பல்கலைக் கழக வேந்தரும், காந்தி குடும்பத்தின் ஆதரவாளரும், திரு.சூரி அவர்களை நியமித்தவருமான
திரு.டி.வி.ராஜேஸ்வர் அவர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டார் .இந்நிகழ்ச்சி கல்வி, அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதற்கான எடுத்துக்காட்டாக அமைந்ததைத் தொடர்ந்து, டைம்ஸ் ஆப் இந்தியாவில் "அரச குடும்ப சம்பந்தமான கேள்விகளுக்கு ராகுல் காந்தியின் அடிவருடிகளால் பதிலளிக்கப்பட்டுள்ளன" என்று அஜித் நினன் என்பவர் கேலிச்சித்திரம் வரைந்திருந்தார்.
தூய ஸ்டீபன் கல்லூரியில்இவருக்கு இருந்த துப்பாக்கி சுடும் திறமையை அடிப்படையாகக் கொண்டு அக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இது சர்ச்சைக்குரிய விஷயமானது.  ஒரு வருடம் கல்வி கற்ற பின் 1990 ல் அக்கல்லூரியிலிருந்து வெளியேறினார்.
தூய. ஸ்டீபன் கல்லூரியில் தான் தங்கியிருந்த ஒரு வருட கால அனுபவத்தை பற்றி கூறுகையில் அங்கு கேள்வி கேட்கும் மாணவர்களை "ஏற-இறங்க" பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை கண்டிப்புடன் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள், என்று கூறினார். தூய. ஸ்டீபன் கல்லூரியில் தான் படித்த நாட்களை நினைவு கூறுகையில், வகுப்பறையில் கேள்வி கேட்பது என்பது நல்ல விஷயமாக இருந்ததில்லை என்றும், நீங்கள் நிறைய கேள்வி கேட்டீர்களானால் உங்களை ஏற இறங்க பார்ப்பார்கள், என்றும் கூறினார். இவரின் கருத்தைப்பற்றி அக்கல்லூரியின் ஆசிரியர்கள் கூறும்போது, "அவரின் சொந்த அனுபவத்தை பொறுத்து" அவர் கூறிய கருத்துக்கள் சரியானவையே என்றும் தூய.ஸ்டீபன் கல்லூரியின் பொதுமையாக்கப்பட்ட கல்வி சூழ்நிலைக்கானது அல்ல என்றனர். [36]
ஜனவரி 2009 இல் பிரிட்டிஷ் நாட்டின் அயல் நாட்டு செயலாளர் டேவிட் மிலிபான்ட் அவர்களுடன், உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் தன்னுடைய பாராளுமன்ற தொகுதியான அமேதிக்கு அருகாமையில் ஒரு கிராமத்தில் காந்தி மேற்கொண்ட எளிய சுற்றுலாவிற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அடுத்ததாக திரு.மிலிபான்ட் அவர்களின் தேவையற்ற ஆலோசனைகளும், தீவிரவாதம் மற்றும் பாகிஸ்தான் பற்றிய கருத்துக்களும், திரு.முகர்ஜி மற்றும் பிரதம மந்திரி மன்மோகன் சிங் அவர்களுடன் நடத்திய ரகசிய சந்திப்பு முறைகளும்,பின்னடைவாகக் கருதப்பட்டத

அப்பா...



அப்பா...

நான் முதன் முதலாக நேசித்த என் காதலன் நீ..
எப்பொழுது நேசிக்க தொடங்கினேன்  என்ற கேள்வியை மட்டும் கேட்காதே அப்பா..💚

அம்மாவின் அடிவயிற்றில் கைவைத்து என்னுடன் பேசினேயே!! அப்பொழுதே நிகழ்ந்து இருக்கக்கூடும்...
இல்லையேல்...கொடி கூட அவிழாத நிலையில் உன் கையில் ஏந்தி உச்சிநுகர்ந்து முத்தம் பதித்தாயே!! அப்பொழுது நிகழ்ந்து இருக்கக்கூடும்...

ஆயிரம் ஆயிரம் கதைகளை சொல்லி அன்னை உறங்க வைத்த பொழுதிலும் உன் மார்பில் தூங்கிய சுகம் வருமா??!!

கண் எரியாமல் நீராட செய்வதும் ஒரு கலையாகும்
அதில் தாயை விட நீ தேர்வு பெற்றதாலோ என்னவோ..??
உன்னை மட்டுமே தேடி அழுதேன் குளிக்கும் வேளையில்..

நடைபழகும் வேலையை விடுத்து என் பாதங்கள் தரையில் ஊன்றியதாய் நினைவில்லை..உன் தோள் மீது அமர்ந்து என் கொலுசோடு
உரசிய உன் சட்டை பொத்தான்கள் மட்டுமே நியாபகம்..

சின்ன சின்ன மணிகளை வைத்து தைத்த பாவாடை சட்டை அணிந்த பொழுது "தேவதையே எனக்கு மகளாக பிறந்துவிட்டாள்!!"என்று கொண்டாடினாயே அதுவும் நினைவிருக்கிறது அப்பா...

உலையில் கொதித்திட அரிசி இல்லை என்ற பொழுதிலும் நான் கேட்டேன் என்பதற்காக
இனிப்புகளை வாங்கி தந்து தாயாரின் வெறுப்பை சம்பரித்துக் கொள்வாயே!!
அது ஏன் அப்பா??

மிரட்டலாக என்னை வகுப்பறையில் அமர்த்திவிட்டு கலகத்துடன் வெளியேறும் உன்னை யான் அறியாமல் யார் அறிவார்??

தாவணியின் நுனியினை பிசைந்தார் வண்ணம் உன் முன் நானி நான் நிற்க..
உன்னை விட்டு விலகிச்செல்ல வெகு நாட்கள் இல்லை என்று நினைத்தாய் போலும்!!
கண்களில் துளிர்த்த நீரை யவருக்கும் தெரியாமல் துடைத்துக்கொண்டாய்..

பலவாறாக தம்மிடம் நான் வாதாடினாலும் உன் ஒரு சொல்லுக்கு கட்டு படாமல் நான் இருந்ததில்லை அப்பா..

நான் சமைத்த உணவை நா கூசாமல் புகழ்ந்து தள்ளுவாயே...!! உன் பொய்யிற்க்கும் ஒரு காதல் உண்டு அப்பா...

என் விழி அசைவினில் என் தேவைகளை பூர்த்தி செய்யும் உன்னை தெய்வத்திற்கு ஈடாக பார்க்க முடியுமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்வேன்...
பக்தி இருந்தால் ஒழிய கிடைக்கும் தெய்வத்தின் வரம்..
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னை காக்கும் நீயே ஒரு வரம் அல்லவா??

மலையளவு துன்பத்தை கூட திணையளவும் பொருட்படுத்தாத நீ..
என் கண்களில் நீரை கண்டால் உடைந்துப் போவது ஏனோ??

நான் விரும்பாததை நீ என்னிடம் புகுத்தியதும் இல்லை..
என் விருப்பத்தை நீ வெறுத்ததும் இல்லை...

என் ஒரே ஒரு கவலை என்னை புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு கண்ணீர் விடும் உன்னை தேற்ற என்னை அன்றி எவருக்கு தெரியும் என்பதே??!!

என் கணவனை எந்நாளும் உன்னுடன் ஒப்பிட மாட்டேன்..
எனக்கு நன்றாகவே தெரியும் என்னை முழுதாக நேசிக்கும் ஒரே ஒரு ஆடவன் நீ மட்டும் தான் என்று...

இனி ஒரு ஜென்மம் வேண்டும் என்று எண்ணியதில்லை..
ஆனால் அவ்வாறு நிகழ்ந்தால் மறுபடி உன் மகளாக பிறக்கும் வரம் மட்டும் போதும் அப்பா....

அப்பா....

புத்தரின் போதனைகள்



புத்தரின் போதனைகள்.

ஒன்று

மாற்றம் ஒன்றே நிலையானது

இரண்டு

1. உருவாக்கப்பட்டவை எல்லாம் அழிந்தே தீரும்.
2. எல்லாமே வளர்சிதை மாற்றத்துக்கு உட்பட்டவையே

மும்மணிகள்

புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி

நான்கு உன்னத வாய்மைகள்

இந்த உலகில் உள்ள அனைவருக்கும்

துன்பம் இருக்கின்றது
துன்பத்துக்கான காரணம் இருக்கின்றது
துன்பத்தை நீக்க இயலும்
துன்பம் நீங்குகான்றது

ஐந்தொழுக்கம்

கொல்லாமை
திருடாமை
பீழையுறு காமம் கொள்ளாமை
பொய் பேசாமை
புகை மற்றும் மது பழகாமை

புத்தரின் ஆறுவகையான செயல்பாடுகள்

முற்பகல் அமர்வு
பிற்பகல் அமர்வு
முன் யாமம்
நடு யாமம்
இறுதி யாமம்
முற்பகல் அமர்வு

ஏழு வகையான தீமைகள். (சினமுறுபவன் அடைவது )

1. அசிங்கமடைதல்
2. துன்பமுறுதல்
3. கை பொறுள் இழத்தல்
4. ஏழ்மையில் உழலுதல்
5. பழிச் சொல் சுமத்தல்
6. நண்பர்களை இழத்தல்
7. மறுமையிலும் துன்பமடைதல்

என்வழி மார்கம்

1. நல்லுணர்வு
2. நல்நினைவு
3. நற் பேச்சு
4. நற் செயல்
5. நல்லூதியம்
6. நல் முயற்சா
7. நல் மனம்
9. நல் தியானம்

ஒன்பது வாழ்க்கை முறைகள்

1. நன்மை புரி
2. பேராசை தவிர்
3. நல் விருப்பம் கொள்
4. பகைமை மற
5. மனத் தூய்மை கொள்
6. தன்னுனர்வு கொள்
7. நல்லோருடன் இரு
8. நேர்மை கொள்
9. சோம்பித் திரியேல்

பத்து நிறைகள்

1. ஈகை
2. நன்னெறி
3. துறவு
4. மெய்யறிவு
5. ஊக்கம்
6. பொறுமை
7. வாய்மை
8. நல் உறுதி
9. அன்பு
10. நிதானம்.

ஜூன்.18; கக்கன் என்கிற அரிதிலும் அரிதான அரசியல் தலைவர்! பிறந்த தின சிறப்புப் பகிர்வு



ஜூன்.18; கக்கன் என்கிற அரிதிலும் அரிதான அரசியல் தலைவர்! பிறந்த தின சிறப்புப் பகிர்வு

தும்பைப்பட்டி எனும் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பில் தோன்றினார் இவர். சேரிப்பகுதியின் கோயிலுக்கு கக்கன் அவர்களின் தந்தைதான் பூசாரி. அந்த கோயிலில் பெருக்கி,சுத்தம் செய்து பூஜையில் ஈடுபடுகிற பழக்கம் கக்கன் அவர்களுக்கு இளம் வயதிலே இருந்தது..

பள்ளிக்கல்வியை படிக்க அமெரிக்க மிஷன் வருடத்திற்கு அவருக்கு பதினெட்டு ரூபாய்உதவித்தொகை தந்தது. அதற்காக மிஷனுக்கு சொந்தமான நிலத்தில் கற்கள் பொறுக்கி,முட்கள் நீக்கி வேலை பார்த்தார். பள்ளி இறுதி தேர்வில் ஆங்கிலத்தில் ஒரே ஒரு மதிப்பெண்ணில் தோல்வியுற்றார். பள்ளிக்கூடத்தில் கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்ட தொண்டர்கள் உறங்க பள்ளிக்கூட பகுதிக்கு வருகிற பொழுது காந்தியின் போராட்ட முறைகளை அறிந்து கொண்டார் இவர். 1932லேயே சொர்ணம் பார்வதி என்கிற கிறிஸ்துவ பெண்ணை தோழர் ஜீவானந்தம் தலைமையில் திருமணம் செய்து கொண்டார்.

வைத்தியநாத ஐயரின் வழிகாட்டுதலில் எண்ணற்ற போராட்டங்களில் பங்கு கொண்டார். சிறை சென்று கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாகவும் செய்தார். ஒரு முறை சவுக்கால் அடித்தும்,குதிரையின் கீழே படுக்க வைத்தும் கொடுமைப்படுத்துகிற அளவுக்கு தீர்க்கமாக விடுதலைப்போரில் பங்கு கொண்டார். வைத்தியநாத ஐயருடன் இணைந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஆலய நுழைவு போராட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்தினார்.

1945-ல் திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் ஊழியர் மகாநாட்டில் காமராஜரை சந்தித்த பொழுது இருவரும் நெருக்கமானார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்,சட்ட சபை உறுப்பினர்,அரசியல் அமைப்பு குழு உறுப்பினர் என்று பல்வேறு பதவிகள் வகித்த இவர் காமராஜர் மற்றும் பக்தவச்சலம் ஆகியோர்  அமைச்சரவையில் பொறுப்பேற்று கொண்ட துறைகள் என்னென்ன தெரியுமா ? அமைச்சரவையில் வேளாண்மை, உணவு, சிறுபாசனம், மதுவிலக்கு, கால்நடை, தாழ்த்தப்பட்டோர் நலன்,பொதுப்பணி,  உள்துறை, காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை ஆகியன !

அரசு வாகனத்தில் குடும்ப உறுப்பினர்கள் போக அனுமதிக்க மாட்டார். மனைவி ஒரு நாள் அரசு ஊழியரை மண்ணெண்ணெய் வாங்கிவர அனுப்பிய பொழுது கடுமையாக கண்டித்தார். அவரின் தம்பி விசுவநாதன்  வேலையில்லாமல் இருந்த பொழுது சிபாரிசு செய்ய மறுத்தார் அவர். அரசு அதிகாரி லயோலா கல்லூரிக்கு அருகில் அவரின் தம்பிக்கு மனை ஒதுக்கிய பொழுது அந்த கோப்பை வாங்கி கிழித்துப்போட்டு விட்டு ,”எத்தனையோ ஏழைகள் மழைக்கு ஒதுங்க கூட இடமில்லாமல் நோகிறார்கள்..இப்படி ஒரு இடம் தேவையா ?" எனக்கேட்டார்.

விசுவநாதனுக்கு காவல் துறை வேலை கிடைத்த பொழுது ,”இது நேர்மையாக கிடைத்திருந்தாலும் என் சிபாரிசால்தான் கிடைத்தது என்பார்கள் ! இந்த வேலைக்கு இவன் வேண்டாம் “ என்று தடுத்துவிட்டார். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் பல்வேறு  அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். தாழ்த்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்தார். அம்மக்களுக்கு வீட்டு வசதி வாரியம் அமைத்து வீடுகள் கட்டிகொடுத்தது ஒரு புறம் என்றால்,லஞ்ச ஒழிப்புதுறையை தமிழகத்தில் கொண்டு வந்ததும் கக்கனே !

கலவரங்களை தடுக்க ரகசிய காவலர் முறையைக்கொண்டு வந்தார். அமைச்சராக இருந்த கக்கன் அரசு விடுதியில் தங்கப்போனார் அங்கே வேறொரு அதிகாரி தங்கியிருந்தார். ஒன்றுமே சொல்லாமல் நண்பரின் வீட்டில் போய் தங்கிக்கொண்டார். அறுபத்தி ஏழு தேர்தலில் கடன் வாங்கி போட்டியிட்டார். தேர்தலில் தோற்றுப்போனார். அவருக்கு நிதி திரட்டி இருபதாயிரம் தந்தார்கள். அதை முழுக்க தேர்தல் செலவுகளை அடைக்க கொடுத்துவிட்டு அரசு வாகனத்தை தொடாமல் அரசு பேருந்துக்கு காத்திருந்து வீட்டுக்கு போனார்.

சொந்த மகளை கான்வென்ட் பள்ளிகளில் சேர்க்காமல் அரசு பள்ளியில் படிக்க வைத்தார் ,”எனக்கு எங்கே அங்கே எல்லாம் படிக்க வைக்க சக்தியிருக்கு ?” என்று கேட்டார். விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தனியாமங்கலத்தில் அவருக்கு தரப்பட்ட நிலத்தை வினோபாவின் பூமிதான இயக்கத்துக்கு தந்துவிட்டார் அவர். அமைச்சர் பதவியை விட்டு விலகியதும் வாடகை வீடு தேடி தெருத்தெருவாக அலைந்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கே பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே மதுரை அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.

எம்.ஜி.ஆர் மதுரை முத்துவை பார்க்க வந்தவர் செய்தி கேட்டு இவரைக்கண்டு கலங்கினார் ,”நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறேன் !” என்று அவர் கேட்டுக்கொள்ள ,”நீங்கள் பார்க்க வந்ததே போதும் !” என்று இயல்பாக மறுத்தார். யாருமே கண்டுகொள்ள ஆளில்லாமல் மரணித்துப்போனார்.

சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன அவரின் பிறந்தநாள் இன்று.

சனி, 17 ஜூன், 2017

தந்தையர் தினம்



தந்தையர் தினம் ஜூன்  18 ,2018.

 முதல் ஹீரோ அப்பாதான்!



 ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஹீரோ தந்தைதான். அவரை ரோல்மாடலாக வைத்துக்கொண்டுதான் ஒவ்வொரு செயலையும் செய்வார்கள்.


 தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3வது ஞாயிறன்று தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.


 சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இத்தினத்தின் நோக்கம்.
தாய் ஒரு குழந்தையை கருவில் 10 மாதங்கள் சுமந்து பெற்றெடுத்தார் என்றால், குழந்தையை தனது தோள்மீது தூக்கி சுமந்து வளர்ப்பவர் தந்தைதான்.


அன்பை கூட அதட்டலாக வெளிப்படுத்துவதான் தந்தையின் சிறப்பு.


எப்படி இந்த தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது என்பதே ஒரு சுவாரஸ்யமான தகவல். நாம் அதற்குள் போகவேண்டாம்.



 நாள்தோறும் அப்பா சொல் கேட்காமல், அவரை எதிர்த்து பேசி சண்டை போட்டாலும் இந்த ஒரு நாளிலாவது அவர் சொல் பேச்சு கேட்கலாம்.



நம்மை படிக்க வைத்து ஆளாக்கிய தந்தைக்கு நாம் செய்யும் கைமாறு என்ன தெரியுமா?

 இவனுடைய தந்தை இந்த அருமையான மகனைப் பெறுவதற்கு எத்தகைய கடும் தவத்தை செய்தானோ என்றும் மெச்சும் அளவிற்கு நாம் நம்முடைய தந்தைக்கு மரியாதையை தேடித்தரவேண்டும் என்று வள்ளுவரே கூறியுள்ளார்.


உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படும் நாள் வித்தியாசப்பட்டாலும், தந்தையர் தினம் என்ற அந்த நாள் உணர்வுபூர்வமான ஒரு நாள் என்பதனை மறுக்க முடியாது.


 தந்தையுடன் இருப்பவர் இந்த நாளில் அவருக்குப் பிடித்த பரிசுப் பொருள் வாங்கித் தரலாம்.
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே! அப்பாவின் கஷ்டங்கள் வெளியில் தெரிவதில்லை அவைகளை மனதில் புதைத்துவிடுவதால்.


 தந்தையுடன் இல்லாமல் பணி நிமித்தமாக தனியாக வசிப்பவர்கள் போனில் பேசி வாழ்த்து கூறுங்கள். அவருக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி பார்சல் அனுப்புங்கள்.


தான் பட்ட கஷ்டத்தை தன் மகனோ, மகளோ படக்கூடாது என்று எத்தனையோ தியாகங்களை செய்து வளர்த்திருப்பார் தந்தை.


இந்த நன்னாளில் உங்களின் தந்தை உங்களுக்காக செய்த தியாகங்களையும், பட்ட கஷ்டங்களையும் எண்ணிப் பாருங்கள். அவருக்கு மரியாதை செய்யுங்கள்.


ஒவ்வொரு குழந்தைக்கும் தன் முதல் ஹீரோ அப்பாதான்.

 *குடும்பத்தின் வளர்ச்சிக்காக தன்னையே மெழுகுவர்த்தியாய் அர்ப்பணித்த அனைத்து தந்தையர்களுக்கும் எமது அன்பார்ந்த தந்தையர் தின வாழ்த்துகள்!!!*

வெள்ளி, 16 ஜூன், 2017

பெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா?? இனிமே தினமும் வைத்து கொள்ளுங்கள்!



பெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா?? இனிமே தினமும் வைத்து கொள்ளுங்கள்!!

உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன. ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன. அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

பூக்களைச் சூடும் கால அளவு

முல்லைப்பூ - 18 மணி நேரம்
அல்லிப்பூ - 3 நாள்கள் வரை
தாழம்பூ - 5 நாள்கள் வரை
ரோஜாப்பூ - 2 நாள்கள் வரை
மல்லிகைப்பூ - அரை நாள்கள் வரை
செண்பகப்பூ - 15 நாள்கள் வரை
சந்தனப்பூ - 1 நாள்கள் மட்டும்
மகிழம்பூ மற்றும் குருக்கத்திப் பூ - சாப்பிடும்போது மட்டும் சூடிக்கொள்ளலாம்.
மந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ - இந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.

பூக்களின் பயன்கள்:

ரோஜாப்பூ - தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
மல்லிகைப்பூ - மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.
செண்பகப்பூ - வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.
பாதிரிப்பூ - காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.
செம்பருத்திப் பூ - தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
மகிழம்பூ - தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.
வில்வப்பூ - சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.
சித்தகத்திப்பூ - தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
தாழம்பூ - நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.
தாமரைப்பூ - தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.
கனகாம்பரம்பூ - தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.
தாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ செண்பகப்பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.

பூக்களைச் சூடும் முறை:

பூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும். உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது. மணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது. அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.
ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.
மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால் மனம் அமைதி பெற உதவும். மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும். முல்லைப்பூ, வில்வப்பூவை குளித்த பின்பு சூடலாம். உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்.

பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள்:

பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.
இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.
தலையில் பூ வைப்பது, மனமாற்றத்துக்கு உதவும். ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.
மனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது. பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது. மனமாற்றத்துக்கு உதவுகிறது. மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.

ஆற்றும், மலச்சிக்கல் போக்கும், ஆண்மை பெருக்கும் துத்தி!



ஆற்றும், மலச்சிக்கல் போக்கும், ஆண்மை பெருக்கும் துத்தி!

'துத்தி மலரை நிதம் துய்க்கின்ற பேர்களுக்கு
மெத்த விந்துவும் பெருகும் மெய்குளிரும் - சத்தியமே
வாயால் விழுமிரத்த மாறு மிருமலறுந்
தேயாமதி முகத்தாய் செப்பு'

துத்திப் பூவால் ரத்த வாந்தி நிற்கும். காச ரோகம் நீங்கும். சுக்கில (விந்து) விருத்தி உண்டாகும், தேகம் குளிர்ச்சி அடையும்  என்று `அகத்தியர் குணபாடம்’ துத்தியின் மேன்மையைப் பறைசாற்றுகிறது.

நம்முடைய முன்னோர்கள் மருத்துவ குணங்கள் நிறைந்த பல்வேறு கீரைகளை உணவுப் பொருளாக பயன்படுத்தி வந்தனர். அதைப் போன்ற சிறப்புவாய்ந்த கீரை வகைகளை நாம் அதிகம் கண்டுகொள்வதே இல்லை. எந்தப் பராமரிப்பும் இல்லாமல் வளர்ந்து, எண்ணற்ற நோய்களைப் போக்கும் கீரை வகைகள் பல உள்ளன. அவற்றுள் முக்கியமான ஒரு கீரை வகை `துத்தி.’ அதன் சிறப்புகளைப் பற்றி விவரிக்கிறார் சித்த மருத்துவர் செந்தில் கருணாகரன்...

'துத்திக் கீரை' பருத்தி இனத்தைச் சார்ந்த ஒரு குறுஞ்செடி. இதற்கு 'அதிபலா' என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதை ஆங்கிலத்தில் 'Indian mallow ' என்று அழைப்பர். இதன் இலைகள் மிகவும் பசுமையாக இதய வடிவில் இருக்கும். இதில் மஞ்சள் நிறத்தில் அழகான பூக்கள் பூக்கும். இதனுடைய விதை, வேர், இலை, பூ, காய் என அனைத்தும் மருத்துவத் தன்மைகொண்டது. இதன்  காய்கள் தோடு போன்று காணப்படும். இது இனிப்புச் சுவை உடையது. உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரக்கூடியது. இது கடற்கரை ஓரங்கள் மற்றும் சாலை ஓரங்களில் வளரக்கூடியது. இது இரண்டு முதல் மூன்று அடி உயரம் வளரக்கூடியது. 29 வகையான துத்திகள் உள்ளன. ஆனால், அதிகமாகப் பயன்படுத்தப்படுவது  `பணியாரத் துத்தி.’

துத்திக்கீரை  கூட்டு:

துத்திக்கீரை -  200 கி

சின்ன வெங்காயம் -  100 கி

வேகவைத்த துவரம் பருப்பு - 3 டீஸ்பூன்

மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்

துத்திக்கீரை மற்றும் சிறிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பின்னர் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் சீரகத்தைப் போடவும். நறுக்கிவைத்திருக்கும் கீரை மற்றும் வெங்காயத்தை வாணலியில் போட்டு வதக்கவும். பிறகு, தேவையான அளவு நீர் ஊற்றி வேகவைக்கவும். நன்றாக வெந்த பின்னர் துவரை, மிளகுத்தூள் போடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கினால், ஆரோக்கியமான  கூட்டு தயார். இதனைச் சாதத்துடன் நெய் கலந்து சாப்பிட்டுவர மூலம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலும் நீங்கும்.

துத்தியால் கிடைக்கும் மருத்துவப் பயன்கள்:

மூலநோய்க்கு ஆகச்சிறந்த நிவாரணியாக துத்தி இருக்கிறது. துத்தி இலையை ஆமணக்கு எண்ணெயில் நன்றாக வதக்கி, மூலத்தில் கட்டினால் வீக்கம் குறையும்.

கையளவு துத்திக் கீரையை எடுத்து நீரில் கொதிக்கவைத்து, பனங்கற்கண்டு பாலில் கலந்து குடித்தால் மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவை நீங்கும்.

துத்தி இலைகளை நெய்யில் வதக்கி, சாதத்துடன் கலந்து 40 முதல் 120 நாள்கள் சாப்பிட்டுவர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நிற்கும்.

துத்தி இலையை நீரில் நன்றாகக் கொதிக்கவைத்து, தினமும் வாய் கொப்பளித்து வந்தால், பற்களின் ஈறுகளில் கசியும் ரத்தம் நிற்கும்.

இந்தக் கீரையை உணவுடன் சேர்த்து சாப்பிட்டுவர தசைகளுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். இதனால்தான் இது 'அதிபலா' என்று அழைக்கப்படுகிறது.

உடலில் எதேனும் புண்கள் ஆறாமல் இருந்தால், இதன் இலையைப் பிழிந்து சாறு எடுத்து, மஞ்சளுடன் கலந்து பூசிவர புண்கள் விரைவில் குணமாகும்.

இதன் சாற்றைப் பச்சரிசி மாவுடன் கலந்து, கட்டிகள் உள்ள இடத்தில்வைத்துக் கட்டினால் கட்டிகள் உடையும்.

துத்திப்பூச் சாற்றுடன் கற்கண்டு கலந்து குடித்தால், ரத்த வாந்தி நிற்கும்.

துத்தி விதைச்சூரணத்துடன் கற்கண்டு மற்றும் தேன் கலந்து உட்கொண்டால் 'மேகநோய்' குணமாகும்.

இதன் இலைகளை கொதிக்கும் நீரில் வேகவைக்க வேண்டும். பின்னர் அந்த நீரைத் துணியில் பிழிந்து, உடல்வலி உள்ள இடங்களில் ஒற்றடம் கொடுத்தால் உடல்வலி குறையும்.
Thanks WhatsApp group.

வியாழன், 15 ஜூன், 2017

முந்திரி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...



முந்திரி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...

முந்திரியை எப்படி விரும்பி சாப்பிடுகிறோமோ, அதேப்போல் முந்திரிப் பழத்தை சாப்பிட முடியாது. ஏனென்றால் இதனை அப்படியே அதிக அளவில் சாப்பிட்டால், தொண்டை கரகரப்பு ஏற்படும்.

*முந்திரி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...*

முந்திரிப் பழத்தில் உள்ள சத்துக்கள்

புரோட்டீன், பீட்டா-கரோட்டீன், டானின் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட், நார்ச்சத்துக்கள் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

வைட்டமின் சி பொதுவாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தில் தான் அதிகம் இருக்கும். ஆனால் அதை விட 5 மடங்கு அதிகமாக ஒரு முந்திரி பழத்தில் உள்ளது.

நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தினால் கஷ்டப்படுபவர்கள், முந்திரிப் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதனை குணமாக்கலாம்.

ஸ்கர்வி முந்திரி பழத்தை சாப்பிட்டால், வைட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும் ஸ்கர்வி என்ற நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

24 மணிநேரம் முந்திரி பழத்தை மரத்தில் இருந்து பறித்த 24 மணிநேரத்திற்குள் சாப்பிட வேண்டும். இல்லையெனில் அழுகி விடும். அதனால் தான் இப்பழம் இந்தியாவில் அதிகம் விற்கப்படுவதில்லை. மேலும் இப்பழத்தின் ஜூஸானது பிரேசிலில் மிகவும் பிரபலமானது.

மகளிடம் குழந்தையான தந்தை



மகளிடம் குழந்தையான தந்தை

நிர்வாண கோலம் எந்த வகையிலும் ஆபாசமில்லை என்பதற்கு ரஷ்ய மியூசியத்தில் உள்ள அந்த ஓவியத்தை உதாரணமாகக் கூறலாம்.
வயதான ஒரு கிழவன், இளம்பெண் ஒருத்தியின் மார்பில் பால் அருந்திக் கொண்டிருக்கிறான். அருகில், ஒரு குழந்தையை கிழவி ஒருத்தி அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். அதையும் மீறி அந்த குழந்தை பசியால் கதறிக் கொண்டிருக்கிறது.
இந்தக் காட்சிக்குப் பின்னணியில் கையில் துப்பாக்கியும், ஈட்டியும் ஏந்திய வீரர்கள் சிலர் உள்ளனர்.
- இதுதான் அந்த ஓவியக் காட்சி.
இந்த ஓவியத்தில் கிழவன் பால் குடிக்கும் இளம்பெண் வேறு யாருமல்ல; அவனது மகளேதான்! அருகில் உள்ள குழந்தை, இவளது பால்குடி மறவாத குழந்தை. அந்த குழந்தையை பிடித்து அழுத்திக் கொண்டிருப்பவள் இந்த பெண்ணுக்கு தாய், கிழவனுக்கு மனைவி!
இப்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
படுபாவி கிழவன்... இப்படியா அநியாயம் செய்வான் என்று கொதித்தெழுவீர்கள் தானே?
அப்படி அவசரப்பட வேண்டாம். இந்தக் காட்சியின் பின்னணி உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் துளியும் ஆபாசம் கிடையாது.
அது எப்படி?
இந்த படத்தில் மகளின் மார்பில் பால் குடிக்கும் கிழவன் ஒரு புரட்சிக்காரன். ஜார் மன்னருக்கு எதிராக புரட்சி செய்ததால், மன்னரின் வீரர்கள் அவனை கைது செய்துவிட்டனர்.
சிறையில் அந்த கிழவனுக்கு உண்ண உணவோ, குடிக்க தண்ணீரோ கொடுக்கக்கூடாது என்பது மன்னர் உத்தரவு. பசியினாலும், தாகத்தினாலும் அவன் துடிதுடித்து சாக வேண்டும் என்பது அவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை!
கடிகாரம் வேகமாக சுழல்கிறது. கிழவனுக்கு பசி அதிகமாகிறது. தண்ணீர் தாகம் அதைவிட அதிகம் வதைக்கிறது. துடிக்கிறான்... துவழுகிறான்... காவலுக்கு நிறுத்தப்பட்ட வீரர்கள் யாரிடமும் துளியும் இரக்கம் வரவில்லை.
அந்தநேரத்தில், கிழவனைப் பார்ப்பதற்காக அவனது கிழட்டு மனைவியும், அவர்களது மகளும் வருகின்றனர். மகளுக்கு குழந்தை பிறந்து சில மாதங்கள்தான் ஆகியிருக்கிறது. அதனால், அவள் தன் குழந்தையை கையோடு அழைத்து வந்திருக்கிறாள்.
சிறையில் கிழவன் படும் அவஸ்தையை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கிழவன் தண்ணீர்... தண்ணீர்... என்று துடிக்கிறான். யாரும் கொடுப்பதாகத் தெரியவில்லை.
கிழவியானவள் அருகில் காவலுக்கு நின்ற வீரர்களின் காலில் விழுந்து கெஞ்சுகிறாள், கதறுகிறாள். யாருக்கும் இரக்கம் வரவில்லை.
அப்போதுதான் பொங்கியெழுகிறாள் கிழவனின் இளம் வயது மகள். கைக்குழந்தையை தாயிடம் ஒப்படைத்துவிட்டு, அருகில் நின்ற பாதுகாப்பு தலைவனிடம் வருகிறாள்.
"எங்கள் தந்தை தாகத்தால் உயிர் போகக் கிடக்கிறார். அவருக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்..." என்று கெஞ்சி பதறுகிறாள். அவள் கேள்வியையும் வீரர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. உதாசீனப்படுத்தி விடுகின்றனர்.
அடுத்ததாக அவள் அவர்களிடம் கடுமையாக வாதிடுகிறாள்.
"எங்கள் தந்தைக்கு நாங்கள் தண்ணீர்தானே கொடுக்கக்கூடாது?"
"ஆமாம்!"
"உறுதியாகத்தான் சொல்கிறீர்களா?"
"ஆமாம்! இதில் என்ற மாற்றமும் இல்லை" என்கின்றனர் வீரர்கள்.
உடனே, கீழே விழுந்து கிடந்த தந்தையை தூக்குகிறாள் அந்த மகள். அவரை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு சற்று ஓரமாக ஒதுங்கித் திரும்பிக் கொள்கிறாள்.
"அப்பா... உங்களுக்கு தண்ணீர்தானே கொடுக்கக்கூடாது என்று சொல்கிறார்கள். இப்போது நான் உங்கள் தாகத்தை தண்ணீர் இல்லாமலேயே தணிக்கிறேன்..." என்றவள், சட்டென்று தனது மேலாடையை அவிழ்க்கிறாள்.
கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து பல மணி நேரம் ஆனதால், அவளது இரு மார்பகத்தில் பால் நிரம்பி நிற்கிறது. அந்த மார்பகத்தில் தந்தையை பால் குடிக்க வைக்கிறாள், அவரது தாகத்தை தணிக்கிறாள் அந்த புரட்சிக்காரனுக்கு பிறந்த மகள்.
இந்த சம்பவத்தில் #தந்தைக்கு_மகள்_தாயாகி_விடுகிறாள். #தந்தை_மகளிடம்_குழந்தை_ஆகிவிடுகிறான்

அரிசியின் வகைகளும் அவற்றை உண்பதால் ஏற்படும் நன்மை தீமைகளும்.



அரிசியின் வகைகளும் அவற்றை உண்பதால் ஏற்படும் நன்மை தீமைகளும்.


கருங்குருவை- விரண தோல் நோய்களையும், குறிப்பிட்ட விஷத்தையும் போக்கும். யோக சக்தியையும் தரும்.
மாப்பிள்ளை சம்பா- இது புரதம், நார், தாது, உப்புச்சத்து நிறைந்தது. இதன் நீராகாரத்தை சாப்பிட்டால் நரம்புகள் வலுப்படும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும்.
கைகுத்தல் புழுங்கல் அரிசி- low glycemic தன்மை கொண்டது. அது இரத்ததில், சர்க்கரை அளவினை மெதுவாக ஏற்றி சர்க்கரை நோயாளிக்கு திடீர் சர்க்கரை உயர்வைத் (hyper glycemia) தடுக்கும். குழந்தைகள், வாத இருப்பவர்கள், அரும்பத்தியம் இருப்பவர்களுக்கு உதவும்.
புழுங்கல் அரிசி எல்லா வயதினருக்கும், எல்லா தரத்தினருக்கும் உகந்தது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றது. அரிசியின் முழுச் சத்தும் வீணாகாமல் தருவது புழுங்கல் அரிசிதான். மேலும் நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது புழுங்கல் அரிசிதான்.
காட்டுயானம்- ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும். டைப் 2 சக்கரை வியாதி நோயாளிகளுக்கு உகந்தது.
அன்னமழகி- மிகவும் இனிப்பு சுவையுள்ள அன்னமழகி அரிசி சகல சுரங்களையும், பித்த வெப்பத்தையும் போக்க கூடியது. உடலுக்கு சுகத்தை கொடுக்கும்.
இலுப்பைப் பூச்சம்பா- பித்தத்தினால் விளையும் சிற்சில ரோகம், சிரஸ்தாபம், உபசர்க்கதாகம், உஷ்ணம் ஆகியவற்றை உண்டாக்கும்.
கல்லுண்டைச்சம்பா- இதை உண்பவர்களுக்கு மல்யுத்தக்காரரும் எதிர்க்க இயலாத தோள் வலிமையை தரும். மிகுந்த வார்த்தை வளமும் உண்டாக்கும்.
காடைச்சம்பா – இந்த அரிசி பிரமேக சுரமும், குறிப்பிட்ட நோய்களையும் நீக்கும். விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்.
காளான் சம்பா- உடலுக்கு மலை போன்ற உறுதியையும், சுகத்தையும் தரும். சில வாத ரோகத்தையும் குறைக்கும்.
கிச்சிலிச்சம்பா- பலம், உற்சாகம், உடல் பளபளப்பு ஆகியவற்றை உண்டாக்கும். தேறாத உடல் தேறும்.
குறுஞ்சம்பா- பித்தம், கரப்பான் நீங்க விந்து விருத்தியை உண்டாக்கும். வாத நோயைநீக்கும்.
கைவரை சம்பா- உடலுக்கு அதிக வலிமையும், சுகமும் உண்டாக்கும். இதில் சிறிது பித்தமும் அதிகரிக்கும்.
சீதாபோகம்- உடல் பலம், தேக பளபளப்பு, விந்து விருத்தி உண்டாகும். அஜீரணத்தை குறைக்கும்.
புழுகுச்சம்பா- இந்த அரிசியை உண்பவர்களுக்கு வனப்பும், அமைதியும், பசியையும், பலமும் உண்டாக்கும். தாகம் நீங்கும்.
மணக்கத்தை- தோல் நோய்கள் அனைத்தையும் போக்கும். புண்கள், ரணங்கள் ஆகியவற்றை குறைக்கும்.
மணிச்சம்பா- அளவுக்கு அதிகமாக சிறுநீரை குறைக்கும். குழந்தை, முதியவர்களுக்கு அதிகசுகத்தை உண்டாக்கும்.
மல்லிகை சம்பா- நாவிற்கு மிகவும் ருசியானது. தேகத்திற்கு சுகத்தையும், உறுதியையும் தரும். கரப்பான், பிரமோகம், உடல் வெப்பம் ஆகியவற்றை போக்கும்.
மிளகு சம்பா- உடலுக்கு சுகத்தை தரும். பசியை உண்டாக்கும். வாதம் போன்ற பல விதமான ரோகத்தை போக்கும்.
மைச்சம்பா- வாதம், பித்தம் போன்ற கோளாறுகளை குறைக்கும். வாத கோபம்,வாந்தி போன்றவற்றை போக்கும்.
வளைத்தடிச் சம்பா- வாத, பித்த தொந்தரவு, வயிற்று உப்புசம், வயிற்று இரைச்சல், கரப்பான் ஆகியவற்றை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம்.
வாலான் அரிசி- மந்தம், தளர்ச்சி முதலியவை குறையும். உடலுக்கு அழகும், கொழுமையும் உண்டாக்கும்.
மூங்கில் அரிசி- மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும். இந்த பூவிலிருந்து வரும் காய்கள் தான் நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். மூங்கிலிலிருந்து பெறப்படும் மூங்கிலரிசியைச் சமைத்து உண்டு வர, உடல் திடம் உண்டாகும், உடல் இறுகும், கொடிய நோய்களெல்லாம் நெடுந்தூரம் ஓடிவிடும்.
பழைய அரிசி- பாலர், முதியோர்களுக்கு மிகவும் உகந்தது. பசியும், உடலுக்கு குளிர்ச்சியும் உண்டாகும். சில நோயும், கபமும் குறையும்.
கார் அரிசி யை நமது உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நல்ல உறுதியடையும். தசைகள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும். உடலின் தோற்றத்திலும் கவர்ச்சி தோன்றும். சருமம் மெம்மையாகவும் பட்டுப் போலவும் அமையும்.
குண்டு சம்பா அரிசியை உணவில் சேர்த்துக் கொண்டால் நாவறட்சியைத் தீர்க்கும். ஆனால் இந்த வகை அரிசி கரப்பான் பினியை உண்டாக்கக் கூடும். பசியை மந்திக்கச் செய்யும்.
குன்றுமணிச் சம்பா அரிசியில் வாதக் குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு. விந்தைப் பெருக்கும். உடல் வன்மையைப் பெருக்கும்.
சீரகச் சம்பா சிறுவாத நோய்களைக் குணமாக்கும், இனிப்புள்ளது. சாப்பிட தூண்டும்.
கோரைச் சம்பா அரிசி வாதப்பித்த நோய்களைக் குணப்படுத்தும். உடலிற்கு நல்ல குளிர்ச்சி இயல்பைத் தரும். குளிர்ச்சி தரும். உட்சூடு, நமைச்சல், அதிமூத்திரம் இவைகளை நீக்கும்
ஈர்க்கு சம்பா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கண்களின் நலனுக்கு இது மிகவும் சிறந்தது. சிறிதளவு பித்தக் கோளாறுகளை உண்டாக்கக் கூடும்.
பச்சரிசி யைச் சாப்பிட்டால் வாதக் குறைபாடுகள் உண்டாகக்கூடும். பக்கவாதம், உடல் உறுப்புகளில் சுரணையற்ற தன்மை ஏற்படக்கூடும். பித்த எரிச்சலை விலக்கும், உடல் வன்மையைப் பெருக்கும்.
தினை அரிசி யும் புன்செய் தானியம்தான். சளித்தொற்றை போக்கும். காய்ச்சல் வேகத்தைத் தணிக்கும். இரத்த சோகையை அகற்றும், ஆனால் அதிகம் சேர்த்துக்கொண்டால் பித்தம் அதிகரிக்கும்.
உடலுக்கு ஆரோக்கியமான அரிசியை மட்டும் சாப்பிட்டு நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வோம்.
அரிசிக் கஞ்சிகள்
கொதிகஞ்சி
உலையில் அன்னம் முக்கால் பாகம் வெந்ததும், கஞ்சியுடன் ஒரு கரண்டி எடுத்து, ஆறியதும், அதில் வெண்ணை, நெய் கலந்து சாப்பிட, குடல் வரட்சை, நீர் சுருக்கு, சிறுநீர் கழிக்கையில் ஏற்படும் வலி நீங்கும்.
வடிகஞ்சி
சாதத்தை வடித்தெடுத்த கஞ்சி ஆறியதும் இதனுடன் மோர் சேர்த்து குடிக்கலாம். உடலின் மேல் தேய்த்துக் குளிக்க தோல் வரட்சி நீங்கும். தோல் மென்மையுறும். ஆனால் ப்ரஷர் குக்கரை அதிகமாக சமைக்க உபயோகிப்பதால் வடிக்கஞ்சி கிடைப்பது கடினம்.
புழுங்கலரிசி கஞ்சி
தமிழகத்தில் நோயாளிகளுக்கு கொடுப்பது புழுங்கலரிசி கஞ்சிதான். நோய் வாய்படும் போது தான் இதை குடிக்க வேண்டும். என்றில்லை. உடல் ஆரோக்கியமாக இருக்கும் போதே புழுங்கலரிசி கஞ்சியை சாப்பிடலாம்.
புழுங்கலரிசியை ரவையாக உடைத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக உடைக்காமல், பெரிய துணுக்குகளாக உடைத்துக் கொள்ளவும். இளந்தீயிலிட்டு பொறுமையாக, புழுங்கலரிசி ரவையை தண்ணீர் சேர்த்து காய்ச்ச வேண்டும். இந்த கஞ்சியில் பால், சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். இல்லை, மோர், உப்பு சேர்த்து பருகலாம்.
நோயாளிகளுக்கு மற்றும் சுரம் உள்ளவர்களுக்கு, புழுங்கலரிசி கஞ்சி கொடுப்பது, அநேகமாக எல்லா வீடுகளிலும் சகஜம்.
புழுங்கலரிசியுடன் கோதுமை, பச்சைப்பயிறு சேர்த்து வறுத்து, குருணையாக்கி 60 கிராம் எடுத்து, ஒரு லிட்டர் நீரில் கால் லிட்டராக குறையும் வரை காய்ச்சி கஞ்சியாக்கவும். புஷ்டியை தரும் கஞ்சி இது. தவிர சளியால் அவதிப்படுபவர்களுக்கு திப்பிலி, வயிற்றுக் கொதிப்பிருப்பவர்க்கு. சீரகம், மல்லிவிதையும், மலச்சிக்கலுக்கு திரா¬க்ஷ, ரோஜா மொட்டும் சேர்த்து புழுங்கலரிசி கஞ்சியை தயாரித்துக் கொள்ளலாம்.
பேதி இருப்பவர்களுக்கு மாதுளம் பழச்சாறு, மாதுளம் பிஞ்சு, வில்வப்பிஞ்சையும் சேர்த்து கஞ்சி தயாரித்து கொடுக்கலாம்.
புனர்பாகம் – இரு முறை வடித்த கஞ்சி
ஏற்கனவே சமைத்து வைத்த அன்னத்தை கஞ்சியை மறுபடியும் நீர் சேர்த்து வடிக்க வேண்டும். இதன் வடிநீரை எடுத்து ஒரு தேக்கரண்டி பழச்சாறு சேர்த்து கொடுக்க வேண்டும். இதை புனர்பாகம் புன: மறுபடியும், பாகம் – சமைத்தல் என்பார்கள். எளிதில் ஜூரணாகும். சுரம், தட்டம்மை, நீர்ச்சுருக்கு, கடுமையான அக்னி மந்த நிலை இவற்றுக்கு ஏற்றது. குடிப்பதற்கு சுவையான, உடலுக்கு ஊட்டம் தரும்.
அரிசிமா
அரிசியை பொடித்து செய்யப்படும் மாவு பல வித பலகாரங்கள் பட்சணங்கள் செய்ய உதவும். அரிசி மாவு, உளுந்து சேர்த்து செய்யப்படுபவை, தோசை, இட்லி, ஆகும். தோசை பித்தத்தையும், வாய்வையும் போக்கும். இட்லியும் திரிதோஷங்களை பெருக்காது. ஆவியில் வேக வைக்கப்படும் இட்லி மற்றும் இடியாப்பங்களை எளிதில் ஜூரணமாகும் எனப்பட்டாலும், இவை பத்திய உணவு ஆகாது. அரிசிமாவால் பணியாரங்கள், நல்ல ஜீரண சக்தி உடையவர்களுக்கே ஏற்றவை.
சில ஆயுர்வேத மருத்துவர்கள், வயிற்றில் வாய்வு இருந்தாலும், தோலில் சொறி, சிரங்கு இருந்தாலும் இட்லி, தோசை, இதர அரிசிமாவு தயாரிப்புகள் ஏற்றவையல்ல என்கின்றனர்கள். அரிசி மாவால் செய்யப்படும் பிட்டு உடலுக்கு வன்மை தரும். பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.
முறுக்கு, கொழுக்கட்டை, தேன்குழல் போன்றவை வாய்வை அதிகரிக்கும், பசியை மந்தப்படுத்தும் என்கிறது சித்த வைத்தியம்.
சத்துமா
அரிசியை வறுத்து இடித்த மாவு இது. கோதுமை, பார்லி, கடலை இவைகளாலும் சத்துமா செய்வது உண்டு. இந்த மாவை நீருடன் சேர்த்து பிசைத்து சாப்பிட பசியடங்கும். மோருடன் சேர்த்து உண்டால் வயிற்று வாய்வு நீங்கும். சத்துமா எளிதில் சீரணமாகும். களைப்பு நீங்கும்.
அரிசி மாக்களி
அரிசியை நீரில் ஊறவைத்து எடுத்து, இடித்து மாவாக்க வேண்டும். இதை தீப்புண்கள், கொப்புளங்கள் மேல் தூவ, புண்கள் ஆறும் வேர்க்குரு, கரப்பானால் ஏற்படும் சினப்பு, அரிப்பு இவற்றின் மேலும் அரிசி மாவை தூவலாம். நீர்க்கசிவும் அரிப்பும் அடங்கும்.
தேவையான மாவை வாயகன்ற சட்டியிலிட்டு அடுப்பிலேற்றி, சிறிது தண்ணீர் விட்டு களியாக கிண்டிக் கொள்ளவும். இதை வெள்ளைத் துணியில் 1 அங்குல கனத்திற்கு தடவி, கொஞ்சம் தேங்காய் எண்ணை அல்லது விளக்கெண்ணையை அதன்மேல் பூசி, கட்டிகள், சீழ்க்கட்டிகள் இவற்றில் மேல் வைத்து கட்டவும். கட்டிகள் பழுத்து உடைந்து போகும். வலிமிகுந்த கட்டிகளுக்கு சிறிது மஞ்சள் பொடி சேர்த்து கொள்ளலாம்.
கிண்டும் போது கால் பங்கு கடுகுத் தூள் சேர்த்து, இறக்கி, வேப்பெண்ணைய் சேர்த்து மார்பிலும், முதுகிலும் 1-2 மணி நேரம் கட்டி வைத்தால் கரையாத மார்புச் சளியும் கரையும்.
அவல்
நெல்லை சிறிது நனைத்து உலர்த்தி, சிறிது வறுத்து, லேசாக இடித்தால், தட்டையாகி அரிசி வேறு, உமி வேறாக பிரியும். தட்டையான அரிசிக்கு அவல் என்று பெயர். அவலை ஊறவைத்து வெல்லத்துடன் சாப்பிடலாம். குழைய வேகவைத்த அவலுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
அவலுடன் பால், சர்க்கரை சேர்த்து உண்ண உடல் பலம் பெறும். அரிசி அன்னத்தை விட அவலால் வலிவு அதிகம் உண்டாகும்.
அவல் ஊறவைத்த நீரை மட்டும் பருகினால், வயிற்றில் வாய்வு உண்டாகி, வலி கூட ஏற்படலாம்.
நெற்பொரி
நெல்லை பொரித்து, உமியை நீக்கி எடுத்தால் நெற்பொரி கிடைக்கும். இதை கஞ்சியாக தயாரித்து. வயிற்று நோய், சுரம், நீர்ச்சுருக்கு உள்ள நோயாளிகளுக்கு கொடுக்கலாம். சூடான பால் அல்லது தயிர், பழச்சாறு இவற்றில் ஊறவைத்து சாப்பிடலாம். நாவரட்சி, வாந்தி, வயிற்றுப்புண், விக்கல் மயக்கம், பேதி இவற்றுக்கும் நெற்பொரி கஞ்சி பயன்படும்.
இதில் பாகு சேர்த்து உருண்டையாக பிடித்து சாப்பிடுவது குமட்டல், வாந்தி இவற்றுக்கு நல்லது. பண்டிகை காலங்களில் பொரி உருண்டை செய்வது நம் நாட்டு வழக்கம்.
பழைய சாதம் – நீராகாரம்
முதல் நாள் இரவில் சமைத்த அன்னத்தில் நீருற்றி வைத்திருந்து மறுநாள் காலை அந்த நீருடன் சேர்த்து அன்னத்தை உண்ணுவது உடல் உழைப்புக்கு தேவையான வலிமையை கொடுக்கவும். ஆண்மை பெருகும். இந்த அன்னம் மிகப் புளிப்பாக இருக்கக்கூடாது. சிறிதளவே புளித்திருக்க வேண்டும். அதிகம் புளிக்காத பழையதுடன், மோரும், தயிரும், வெங்காயம் அல்லது மாவடு, ஊறுகாய் இவற்றுடன் சேர்த்து உண்ணுவது தமிழர்களின் பாரம்பரிய வழக்கம். இதன் சுவையை மறக்க முடியாது. அதுவும் கோடைக்காலங்களில் உடலை குளிர்வித்து, தெம்பூட்டும் தேவாமிர்தம் இந்த பழைய அமுது.
அரிசியை சமைக்கும் போது
அரிசியை நன்றாக வெந்திருக்கும்படி சமைக்க வேண்டும். அரிசி சரியாக வேகாவிடில் அது சரியாக செரிக்காது. வயிற்றுக் கோளாறுகளை உண்டாக்கும். அதே சமயம் மிகவும் குழைந்து போய், அதிகமாக வேகவிடப்பட்டு குழைந்து போன சாதமும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. புது அரி Plugins 9 சியில் சமைத்தால் சாதம் குழைந்து விடும். குழைந்த சாதத்தால் இருமல், வயிற்று உப்புசம் அதிகமாகும்.
அரிசியை சமைக்கும் போது ஒரு தேக்கரண்டி எண்ணை நெய் அல்லது எலுமிச்சம் சாறை விட்டால், சாதம் பொல பொல வென்று மல்லிகைப்பூ போல் அமையும்.
வேகாத அரிசி, அதிகம் வெந்த அரிசி இவற்றால் வரும் வயிற்று கோளாறுக்கு சுக்கு தட்டிப் போட்ட வெந்நீரை குடிக்கலாம்.
ஆயுர்வேதம், அரிசி சாதத்தை உண்ணும் போது நெய் சேர்த்து உண்டால், கண் குளிர்ச்சி, சரியான ஜீரணம் ஏற்படும் என்கிறது.
நல்லெண்ணை சேர்த்து உண்டால் வயிற்றின் வரட்சி அகலும். நல்ல பசியெடுக்கும்.
பாலும் அன்னமும்
பாலமுது எனும், பாலும் அன்னமும் சேர்ந்த உணவு மற்றும் பாயசம், பித்தத்தை குறைக்கும். நீர் வேட்கை விலகும். ஆனால் அதிகமாக உண்டால், உடல் பருமன் கூடும். மற்றபடி இதை குழந்தை முதல் பெரியவர் வரை உண்ணலாம்.
பொங்கல் வகைகள் இதர சோறுகள்
அரிசியினால் செய்யப்படும் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் போன்ற உணவு வகைகள் பிரசித்தி பெற்றவை. சர்க்கரை பொங்களை மிதமாக உட்கொள்ள வாந்தி நிற்கும்.
மிளகு சேர்த்த வெண் பொங்கல், வயிற்றுப் பொருமல், வாய்வு, மார்புக்கபம், பசியின்மை இவற்றை போக்கும்.
புளிச்சோறால் வாந்தி, சுவையின்மை போகும்.
எள்ளுப்பொடி அன்னம் வாய்வை நீக்கி வலிமை தரும்.
மாமிசம் சேர்த்து சமைத்த உணவு தாதுபுஷ்டி தரும். பசியை மந்தப்படுத்தும்.
அரிசியின் இதர உபயோகங்கள்
அரிசியிலிருந்து ஒரு வகை ஓயின் எடுக்கப்படுகிறது. அரிசி மது ஜப்பானில் பிரசித்தம்.
அரிசியை தீட்டி புடைத்தெடுக்கும் தவிட்டில் பி 1 வைட்டமின் அதிகம் உள்ளது. கால் நடை தீவனமாக பயன்படுகிறது.
100 கிராம் அரிசியில் உள்ள சத்துக்கள்
கார்போஹைடிரே-79கி
கொழுப்பு-0.6கி
புரதம்-7கிராம்
விட்டமின்பி-6-0.15கி
ஈரம்-13கி.
-நன்றி உணவு நலம் மாத இதழ்