புதன், 31 அக்டோபர், 2018

'இது நாஞ்சில் நாட்டுக் கல்யாணம்!' நீங்கள் அறியாத பல தகவல்கள்..


'இது நாஞ்சில் நாட்டுக் கல்யாணம்!' நீங்கள் அறியாத பல தகவல்கள்..

காணும் இடங்களில் எல்லாம் மரங்கள், வற்றாத குளங்கள், ஊருக்கு ஒரு நூலகம், பிரசித்திப்பெற்ற ஆலயங்கள் என நாஞ்சில் நாட்டின் பெருமைகள் ஏராளம்.

நாஞ்சில் அர்த்தம்

 'நாஞ்சில்’ என்ற சொல்லுக்குக் 'கலப்பை’ என்று அர்த்தம். இப்போது இங்கு இருப்பவர்கள் ஒரு காலத்தில் முழுக்கவே வேளாண்மைத் தொழில் செய்தவர்கள்தான். குமரி மாவட்டம், தமிழகத்தோடு இணைவதற்கு முன் தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் நாஞ்சில் நாடு இருந்துவந்தது. அப்போது கேரளாவின் நெற்களஞ்சியமே நாஞ்சில் நாடுதான். நாஞ்சில் நாட்டின் தனித்தன்மைகள் ஆயிரம் என்றாலும் தவிர்க்க முடியாத அடையாளம் நாஞ்சில் நாட்டுத் திருமணங்கள்...

வெற்றிலைக் கைமாறுதல்

அதாவது, நாஞ்சில் நாட்டில் இதை 'உரப்பித்தல்’னு சொல்வாங்க. இவர்தான் மாப்பிள்ளை, இதுதான் பொண்ணுனு பரஸ்பரம் பேசி ஒரு தட்டில் வெற்றிலை வைத்து மாத்திக்கிறதுதான் நோக்கம். ஆனால், இதை ஒரு மினி நிச்சயத் தாம்பூல வைபவமாகவே நடத்துவாங்க. அதைத் தொடர்ந்து அடுத்த நிகழ்ச்சி நிச்சயதார்த்தம்.

நிச்சயதார்த்தம்

 இதோட விசேஷமே 'சாரத்து’ வாசிக்கிறதுதான். 'சாரத்து’னா, திருமணம் பற்றிய முக்கியக் குறிப்புகள் அடங்கியத் தகவல் அறிக்கைனு அர்த்தம். திருமணம் நிச்சயம் செய்யும்போது கூட்டத்தினர் மத்தியில் பெண் வீட்டைச் சேர்ந்த பெரியவர் ஒருத்தர் இதை வாசிப்பார். இதில் திருமண நாள், முகூர்த்த நேரம், மறு வீடு, மாப்பிள்ளை அழைப்பு நேரம், நாலாம் நீர்ச்சடங்கு, ஏழாம் நீர்ச்சடங்குனு திருமணத்தோடு தொடர்புடைய அனைத்துத் தகவல்களும் இருக்கும். கூடவே நிச்சயதார்த்தம் முடிந்ததற்கு  அடையாளமாக ஒரு ஆலங்கம்பை வெட்டிக்கொண்டுவந்து சடங்குகளைச் செய்வாங்க. திருமணம் முடிஞ்சதும் மணமக்கள் தங்களுக்குச் சொந்தமான நிலத்திலோ, அல்லது பொது இடத்திலோ இந்த ஆலங்கம்பை நட்டு வைத்துத் தண்ணீர்விட்டுப் பராமரிப்பாங்க. நாஞ்சில் நாட்டைச் சுற்றிப் பார்த்தா அதிகமாக ஆலமரங்கள் இருக்கும். அதுக்குக் காரணமே இந்தச் சடங்குதான்.

தாலி உருக்குதல்

நிச்சயதார்த்தம் முடிந்த கையோட இன்னொரு நல்ல நாளைத் தேர்ந்தெடுத்து 'தாலிக்குப் பொண்ணு உருக்குதல்’னு ஒரு நிகழ்ச்சி நடக்கும். அதாவது, மணப்பெண்ணுக்கு மாங்கல்யம் செய்றதுக்காக நகை ஆசாரியை அழைத்துவந்து நாஞ்சில் நாட்டுத் தாலி செய்வாங்க. தாலி செய்றதுக்குத் தேவைப்படுகிற தங்கத்தை மணமகனின் சகோதரிகள் கொடுக்கணும். சமீபகாலமா தங்கத்துக்குப் பதிலா பணமாகவே கொடுக்கிற கலாசாரம் வந்திடுச்சு. நடக்கிற எல்லா விசேஷத்திலுமே தடபுடல் விருந்தும் உண்டு'என்றார்.

 'உருமா’ கட்டுவது

நாஞ்சில் நாட்டுக் கல்யாணத்தின் முக்கிய விசேஷங்களில் ஒன்று மணமகனின் தலையில் 'உருமா’ கட்டுவது. அது என்ன 'உருமா’?  நாகர்கோவிலைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பத்மநாபன், '' 'உருமா’ என்பது ஒரு மா என்பதன் திரிபு. ஒரு மான்னா ஒன்றின் கீழ் இருபதுனு அர்த்தம். அதாவது, நிலத்தோட மதிப்பில் இருபதில் ஒரு பங்குன்னு சொல்ற மாதிரி நகையோட மதிப்பில் ஒரு பவுனில், இருபதில் ஒரு பங்குன்னு அர்த்தம். முன்னாடியெல்லாம் இந்தத் தங்கத்தைத் தலையில் கட்டுவாங்களாம். காலப்போக்கில் பட்டுத் துணியாகி, இப்போ துண்டுத் துணியாகிவிட்டது.

ஊர் அழைப்பு

தாலி கட்டி முடிந்ததும் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மணமகனை ஆசீர்வாதம் செய்துவிட்டு மணமகனின் தலையில் ஒரு துணியைக் கட்டுவாங்க. அதாவது பல வண்ண நிறங்களில் அந்தத் துணி இருக்கும். மணமகன் சபையில் இருக்கத் தகுதியானவன்தான் என்றும் சுயமாக முடிவு எடுக்கும் வயதை அடைந்து விட்டான் என்றும் காட்டுறதுக்குத்தான் இந்த உருமா. இதே போல், சொந்த பந்தங்களுக்கும் மணமக்கள்  மேல் உள்ள உரிமையை நிலை நாட்ட 'உருமா’தான் ஆதாரம். மற்ற பகுதிகளில் எல்லாம் அடுத்த வீடாகவே இருந்தாலும் 'திருமண அழைப்பிதழ்’ கொடுத்தாதான் கல்யாணத்துக்கு வருவாங்க. ஆனால், நாஞ்சில் நாட்டில் ஒரே ஊரைச் சேர்ந்தவங்களுக்கு 'அழைப்பிதழ்’ கொடுக்க மாட்டாங்க. 'ஊர் அழைப்பு’னு இதுக்கும் தனியா ஒரு நிகழ்ச்சி இருக்கு. திருமணம் நடத்தும் வீட்டார், குடும்ப சகிதமா ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் போய் 'கல்யாணத்துக்கு வாங்க’னு கூப்பிடுவாங்க. இப்படி அழைக்கும்போது பல வருடப் பகை மறந்து சிநேகமாகிடுவாங்க.

அதே மாதிரி கல்யாணத்துக்கு முந்தைய நாள் ஊரில் உள்ள ஆண்கள் எல்லோருமே காய்கறி வெட்ட மண்டபத்துக்குப் போய்டுவாங்க. கல்யாணத்தன்று காலையில் டிபன், மதியம் 21 வகை பதார்த்தங்களோடு சாப்பாடு, மாலையில் நலுங்கு உருட்டு, தலையில் பப்படம் உடைக்கிறது வரைக்கும் பல விசேஷங்கள்  நடக்கும்.

சட்ரசம் பரிமாறுதல்

முக்கியமா மதியம் மணமக்கள் சாப்பிடும்போது மணப்பெண்ணே, மணமகனுக்குப் பரிமாறுவாங்க. இதுக்கு 'சட்ரசம் பரிமாறுதல்’னு பேரு. திருமணம் முடிந்த அன்னைக்கு இரவு 'தீயல் சோறு’ போடுவாங்க. இது செரிமானத்துக்குக் கை கொடுக்கும். இப்படி இன்னும் பல சடங்குகள் இருக்கு. மொத்தத்தில் நாஞ்சில் நாட்டுக் கல்யாணங்கள்  பாசத்துக்கும் உறவுக்கும் மரியாதை கொடுப்பவை' என்றார்.


நாலாம் நீர்ச் சடங்கு

அத்துடன் முடிந்து விடுவதில்லை.  தொடர்ந்து அணிவகுக்கின்றன பல நிகழ்வுகள். இதைப்பற்றிப் பேசிய எழுத்தாளரும் முனைவருமான அ.கா. பெருமாள்,''திருமணம் முடிந்த அன்று இரவே 'நாலாம் நீர்ச் சடங்கு’னு ஒரு விழா நடக்கும். அதாவது குளம், ஆறு, கடல், கிணறுனு நான்கு நீர்நிலைகளில் மணமக்கள் நீராடுவாங்க. இப்படி நீராடுவதால் அவர்களுடைய தீட்டுகள் எல்லாம் கழிந்து புனிதமாகிட்டாங்கன்னு அர்த்தம்.

ஏழாம் நீர்ச் சடங்கு

அடுத்த நாள் காலையில் 'ஏழாம் நீர்ச் சடங்கு’ நடக்கும். மணப்பெண் புதுப்பானையில் பொங்கல் வைப்பாங்க. அதைத் தொடர்ந்து 'பிள்ளை மாற்று’னு ஒரு சடங்கு நடக்கும். அதில் மணப்பெண்ணின் கையில் ஒரு பொம்மையைக் கொடுத்து, அதைப் பிள்ளையாக நினைச்சு மணமகளின் நெற்றியில் விபூதிப் பூசிவிட்டு,  கையில் காசு கொடுப்பாங்க.  இதில் ஒரு மிகப்பெரியக் கூட்டுக் குடும்ப தத்துவமே அடங்கி இருக்கு. 'இந்தத் திருமணத்தோடு எங்கள் பங்களிப்புகள் நின்றுவிடப் போவதில்லை. அதைத்தாண்டி உங்களுக்குக் குழந்தை பிறந்து, அவர்களை நீங்கள் வளர்த்து எடுக்கும்வரை எங்கள் பங்களிப்பு உண்டு' என்பதைக் காட்டத்தான் இந்த 'பிள்ளை மாற்று’ சடங்கு. ஒவ்வொரு சடங்கும் வாழ்க்கையோடு தொடர்புடைய செய்திகள்தான். இந்த மாதிரி சின்னச்சின்ன விளையாட்டுக்களின் மூலம் மணமக்களின் கூச்ச சுபாவமும் போய்விடும்'என்றார்.

ஆயிரம் காலத்துப் பயிர் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்.
Thanks.vikatan

செவ்வாய், 30 அக்டோபர், 2018

உடலில் உள்ள கெட்ட சளியை வியர்வை மூலம் எப்படி வெளியேற்றலாம்...

உடலில் உள்ள கெட்ட சளியை வியர்வை மூலம் எப்படி வெளியேற்றலாம்...

சளிப் பிரச்சினை என்பது வாய் வார்த்தைக்கு சாதாரணமான ஒன்றாகத் தெரிந்தாலும் உண்மையில் அது எல்லை மீறும் பட்சத்தில் பாரிய நோயாகக் கூட மாறி விடலாம். சிலர் சளிப் பிரச்சினையால் வைத்தியசாலையிலும் இருக்க நேரிடும்.
இன்னும் சிலருக்கு மருந்து குடிப்பதென்பது மிகப் பெரிய தர்ம சோதனையாகவே தோன்றும். தூசியோ, அலர்ஜியோ ஏற்படுத்தும் ஏதோ ஒரு பொருள் நம் மூக்கினுள் நுழைந்து விடும் போது சளி உற்பத்தி செய்யும் அளவு கட்டுக்கடங்காமல் பெருகி விடுகின்றது.
இது போன்ற தருணங்களில் நம் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு உயிரணுக்கள் ஹிஸ்டமைன் எனும் வேதிப் பொருளை உற்பத்தி செய்கின்றன.
ஆனால் இந்த சளித் தொல்லையை வியர்வை மூலம் வெளியேற்றும் முறை பற்றி நீங்கள் கேள்வியுற்றதுண்டா?
அது எவ்வாறு சாத்தியம் என்பதைப் பற்றி நாம் பார்ப்போம்!
முதலில் மூன்று எலுமிச்சையை எடுத்துக் கொண்டு பாதியாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்பு, ஒரு பாத்திரத்தில் இரண்டு கோப்பை தண்ணீர் எடுத்துக் கொண்டு தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் பாதியளவு ஆகும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
பின்னர் இரண்டு கோப்பை நீர் ஒரு கோப்பை அளவிற்கு குறையும் வரை கொதிக்க வைத்து, வெட்டி வைத்துள்ள எலுமிச்சையை அதில் நன்றாக பிழிந்து சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனை, இரவு தூங்குவதற்கு அரை மணிநேரத்திற்கு முன்பு மிதமான சூட்டுடன் குடித்து விட்டு தூங்கினால், உடம்பில் உள்ள சளி அனைத்தும் வியர்வையாக வெளியேறி விடும். 

அறிவியல் மருத்துவ‌த்தின் சாதனை யாது? - விரிவாக காண்போம்...

அறிவியல் மருத்துவ‌த்தின் சாதனை யாது? - விரிவாக காண்போம்...

அறிவியல் மருத்துவத்தின் சாதனை கணக்கிலடங்காதது ஆகும். 1900 புள்ளிவிபரப்படி 1000 தாய்மார்கள் கருவுறும் போது அதில் 120க்கும் அதிகமானோர் பிள்ளைப் பேறின் போது உயிர் இழந்தனர். ஆனால் தற்போதைய புள்ளி விபரப்படி ஒரு லட்சம் பெண்கள் கருவுறும்போது அதில் பத்துக்கும் குறைவானவர்களே குழந்தை பிறக்கும் போது உயிர் இழக்கின்றனர்.
மேலும் முறையற்ற பாரம்பரிய பிரசவ முறைகளால் பெண்கள் மோசமான முறையில் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமாவில் கர்ப்பிணி ஒருவரை காட்டினால் அவர் அநேகமாக இறந்து விடுவதாகத் தான் திரைப்படம் அமைந்திருக்கும். ஆனால் இன்று குழந்தைப் பேறு என்பது பெரும்பாலான படங்களில் ஒரே பாடலில் முடிந்து வடுகிறது. 
மேலும் பெரியம்மை நோயை ஒழித்தது, போலியோவை ஒழித்தது, தொழுநோயை ஒழித்தது, பாம்புகடிக்கு மருந்து, பெரும்பாலான நோய்களுக்கு தீர்வுகள், வலிநீக்கிகள் போன்றவை ஆங்கில மருத்துவத்தின் சாதனையாகும்.100 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவருக்கு குடல்வால் பாதிக்கப்பட்டால் அவர் வலியால் துடித்து இறப்பதைத் தவிர வேறு வழிஇல்லை. ஆனால் இன்று 3 நாள் மருத்துவ கவனிப்பில் வலி இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து நலமாகி வருகின்றனர்.
இவ்வாறு இந்தப் பட்டியல் மிக நீண்டதாகும். நீங்கள் கண்ணாடி அணிந்து இதனை படித்துக் கொண்டிருந்தால் அதனை கழட்டி விட்டு இந்த ஸ்கிரினை சற்று நேரம் வாசிக்கவும், இயல்பாக அறிவியலின் அற்புதம் உங்களுக்குப் புரிந்து விடும்.குறிப்பு : இந்த கட்டுரைக்கு மறுப்பு எழுத முனைபவர்கள் மருத்துவமனைகளின் கொள்ளைகளை விளக்கி அதனால் முழுமையாக அறிவியலை ஒழித்துக் கட்டுவோம் என்று எழுத முனைய வேண்டாம். ஏனெனில் ‘உலக மயத்தில் அனைத்தும் விற்பனைக்கே’ என்ற அடிப்படையில் மருத்துவமும் வியாபாரமயமாகி உள்ளது.
எடுத்துக்காட்டாக எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான அரசியல் செய்து மக்களை சுரண்டுகின்றன என்பதால் எல்லோரும் வாகனங்களைப் புறக்கணித்து நடந்து செல்ல முடியாது. உலக அரசியலும் அறிவியல் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. அதனால் மாற்று அரசியல் தேடுவோர் அறிவியலைப் புறக்கணித்து மூடநம்பிக்கையை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

குடிபோதையை நீக்கும் மருந்துகள் என ஒரு கும்பல் விற்பனையை ஆரம்பித்துள்ளதே?

குடிபோதையை நீக்கும் மருந்துகள் என ஒரு கும்பல் விற்பனையை ஆரம்பித்துள்ளதே?

ஆங்கில மருத்துகளை இலைகளுடன் அரைத்து விற்பது என்பது பாரம்பரிய மருத்துவர்களின் ஒரு பழமையான வழிமுறையாகும். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு Frusemide என்ற மருந்தை அரைத்துத் தருவது.
ஆண்மைக்குறைவு உள்ளவர்களுக்கு Sildenafil என்னும் மருந்தை அரைத்துத் தருவது. ஜுரத்திற்கு Paracetamol மருத்தை அரைத்துத் தருவது என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிற‌து.தற்போது அதிகரித்துவரும் குடிப்பழக்கத்தை நிறுத்த Disulfurim என்ற மருந்தை அரைத்துத் தருகின்றனர்.
இது மனநல மருத்துவரின் கவனிப்பில் பல்வேறு முன்னேற்பாடுகளோடு தரவேண்டிய ஒரு மருந்து ஆகும். இதனை முறை தவறி பயன்படுத்துவதால் பலர் மனநிலை பாதிக்கப்பட்டு Delerium என்னும் மோசமான நிலையில் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்திற்கு வந்து சேருவதாக‌ மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

நிலக்கடலையில் உள்ள சத்துக்களும் அதன் விவரங்களும் அறிய இதை படியுங்கள்

நிலக்கடலையில் உள்ள சத்துக்களும் அதன் விவரங்களும் அறிய இதை படியுங்கள்

நிறைந்துள்ள சத்துக்கள்:
100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.
பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:
நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்கு தான் உண்டு.

காபிக்கு பதிலாக எடுத்துக் கொள்ள வேண்டிய பானங்கள்....

காபிக்கு பதிலாக எடுத்துக் கொள்ள வேண்டிய பானங்கள்....

காபியை தவிர்த்து நீங்க குடிக்க வேண்டிய சில முக்கிய பானங்கள் பற்றி கீழே தெரிந்து கொள்ளலாம்.
டான்டெலியன் வேர் டீ: நீங்கள் காபியை மிகவும் விரும்பினால் அதை ஆரோக்கியமாக மாற்ற காபியின் அளவை குறைத்து விட்டு டான்டெலியன் வேர் டீ போட்டு குடிக்கலாம். இதனால் நமக்கு விட்டமின் ஏ, பி, சி மற்றும் டி, இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.
மோச்சா க்ரீன் டீ: மோச்சா க்ரீன் டீயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், குளோரோபைல் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன. இது இதய நோய்கள் மற்றும் டைப் 2 டயாபெட்டீஸ்க்கு உதவுகிறது. மேலும் புற்று நோய் வராமல் தடுக்கிறது. இதில் உள்ள சிறுதளவு காஃபைன் உங்களை உற்சாகமாக வைக்கவும் உதவுகிறது.
மசாலா சாயா: இது ஒரு புகழ்பெற்ற இந்திய பானம் ஆகும். இதுவும் காபியை போலவே உங்களுக்கு நல்ல எனர்ஜியை தரக் கூடியது. மேலும் இந்த சாயாவில் ஏலக்காய், பட்டை, சாதிக்காய், கிராம்பு, இஞ்சி போன்ற மசாலா பொருட்களையும் சேர்த்து தயாரிக்கின்றனர்.
மஞ்சள் டீ: இதிலும் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது பார்ப்பதற்கு கோல்டன் கலரில் நல்ல நறுமணத்துடன் இருக்கும். மஞ்சளில் உள்ள குர்குமின் நிறைய ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.

மூளை ஆரோக்கியமாக இருக்கணுமா அப்போ ஆப்பிள் சாப்பிடுங்க...

மூளை ஆரோக்கியமாக இருக்கணுமா அப்போ ஆப்பிள் சாப்பிடுங்க...

நினைவுத்திறன் அதிகரிக்க, ஞாபக மறதியை நீக்க வல்லாரைக் கீரை சாப்பிடுங்க! என்று சொல்வது வழக்கம். இனி, ஆப்பிளும் சாப்பிடுங்க என்று சொல்லலாம். ஆப்பிள் சாறுக்கும் மூளையின் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உண்டு என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. 
மறதியை மறக்க வேண்டுமானால் தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட வேண்டும். ஆப்பிள் சாப்பிடுவதாலும், ஆப்பிள் சாறு அருந்துவதாலும் மூளை மன அழுத்த பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்படும். 
ஆரோக்கியமான மூளைக்கு ஆப்பிள்கள் அதிக நார்ச்சத்துள்ள உணவாகும். இவை செரிமானத்துக்கும், உடல் எடை குறைவுக்கும் ஆப்பிள்கள் ஏற்றவை. ஆப்பிள்களில் அதிக ஊட்டச்சத்து இருப்பதால் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய்த் தடுப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.
இவை செரிமானத்துக்கும், உடல் எடை குறைவுக்கும் ஆப்பிள்கள் ஏற்றவை. ஆப்பிள்களில் அதிக ஊட்டச்சத்து இருப்பதால் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய்த் தடுப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.

உங்கள் உடல் எடை சட்டென குறைய சித்தர்கள் கூறிய சில வழிமுறைகள் !!

உங்கள் உடல் எடை சட்டென குறைய சித்தர்கள் கூறிய சில வழிமுறைகள் !!

அஸ்வகந்தா:
"மூலிகைகளின் ராஜா" என்று அழைக்கப்படும் அஸ்வகந்தாஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது.தினமும் 1 ஸ்பூன் அஸ்வகந்தா பொடியை பால் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் எடை விரைவிலே குறைய தொடங்கும்.
கிரீன் டீ:
ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் கொண்ட கிரீன் டீயை தினமும் குடித்து வந்தால் உடல் எடையை கச்சிதமாக வைத்து கொள்ளலாம். கிரீன் டீயை குடித்து வருபவர்கள் நீண்ட காலம் நோய் நொடியின்றி வாழ்வார்கள்.
கீரை வகைகள்:
கீரையிலும் எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளது.கீரையை தினமும் உங்களில் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இது உடல் எடை கூடாமல் பார்த்து கொள்ளும்.
நெல்லி:
தினமும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தாலே நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம்.உடலில் சேர கூடிய கொழுப்புக்களை முற்றிலுமாக நீக்க கூடியதாகும்.வைட்டமின் சி நிறைந்துள்ள இந்த நெல்லி கனி உடல் எடையை குறைக்க பயன்படும் ஆயுர்வேத உணவு. 

தண்ணீர் மாற்றி குடித்தால் தொண்டை கட்டுகிறதா? அதற்கு சில வீட்டு மருத்துவம் !!

தண்ணீர் மாற்றி குடித்தால் தொண்டை கட்டுகிறதா? அதற்கு சில வீட்டு மருத்துவம் !!

இஞ்சி:
சிறிய துண்டு இஞ்சியை எடுத்து தோல் சீவி, அதனை அப்படியே சாப்பிடலாம். இதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிடுவதால் அதன் சுவை அதிகரிக்கும்.கொதிக்கும் நீரில் ஒரு ஸ்பூன் இஞ்சியை போட்டு கொதிக்க விடவும். பின்பு அந்த நீரை வடிகட்டி அதில் சிறிதளவு தேன் சேர்த்து பருகவும். ஒரு நாளில் மூன்று முறை இதனை பருகலாம்.
தேன்:
தேனின் மென்மையான தன்மை குரல்வளையை மிருதுவாக்கி உங்கள் குரலை மீட்டுத் தருகிறது.தொண்டை எரிச்சலைப் போக்கி அழற்சியைக் குறைக்கிறது.ஒரு சிட்டிகை மிளகு தூளுடன், இதனைக் கலந்து இந்த கலவையை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து பருகலாம்.
எலுமிச்சை:
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து கலந்து பருகவும். தினமும் சில முறை இதனை பருகலாம்.எலுமிச்சை சாற்றுடன் தண்ணீர் சேர்த்து கலந்து அந்த நீரை தொண்டை வரை ஊற்றி கொப்பளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும். ஒரு நாளில் இரண்டு முறை இதனைச் செய்யலாம்.
ஏலக்காய்:
தொண்டை கரகரப்பைப் போக்கி இழந்த குரலை மீட்டுத் தர இது உதவுகிறது.ஏலக்காயை எடுத்து வாயில் போட்டு மெல்லவும். இதனால் தொண்டை ஈரப்பதம் பெறுகிறது.அல்லது ஏலக்காய் தூளுடன் சிறிதளவு தேன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வரவும்.

கற்பூரம் அதன் நன்மைகள் மற்றும் அதன் பயன்களை அறிந்து கொள்வோம்!

கற்பூரம் அதன் நன்மைகள் மற்றும் அதன் பயன்களை அறிந்து கொள்வோம்!

கற்பூரம் சருமத்தின் மீது உள்ள துளைகள் அடைப்பதுடன் அரிப்பு மற்றும் சிவப்பு சருமத்தை தடுக்கும்.பெரும்பாலனவர்கள் சந்திக்கும் ஒரு சரும பிரச்சினை அரிப்பு மற்றும் சருமம் சிவந்து போவதாகும்.இதனை பயன்படுத்துவதும் மிகவும் எளிது, நீரில் சிறிது கற்பூர எண்ணெயை கலந்து அதனை பாதிக்கப்பட்ட இடத்தின் மீது தடவுங்கள்.
கற்பூர எண்ணெயின் வாசனை மனதில் ஒரு மகிழ்ச்சியான எண்ணத்தை உண்டாக்கக்கூடும், அதன்மூலம் நிம்மதியான தூக்கத்தை வழங்கும்.கற்பூரம் சளி மற்றும் இருமல் சிகிச்சைக்கு உதவுவதோடு தொண்டையில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்யவும் உதவுகிறது. மூக்கடைப்பை சரிசெய்ய உதவும் பல வேப்போரப்களில் கற்பூர எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. குளிக்கும் நீரில் கற்பூர எண்ணெயை கலந்து குளிப்பது தலைவலி மற்றும் பேன் தொல்லையிலிருந்து உங்களை பாதுகாக்கும்.
கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் கலந்து தூங்கும் முன் தலையில் தேய்த்துக்கொள்ளவும். காலையில் ஷாம்பூ கொண்டு தலையை அலசவும். இதன்மூலம் பேன்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கும்.

விதைகளில் இருக்கும் ஊட்டச் சத்துக்கள் பற்றி அறிவோம்..

விதைகளில் இருக்கும் ஊட்டச் சத்துக்கள் பற்றி அறிவோம்..

ஒருசில வகை காய்கறிகள் மற்றும் பழங்களின் விதைகளிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அவைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் விதைகளை உள்ளடக்கிய பழங்கள், காய்கறிகள் சிலவற்றை பார்ப்போம்.
தர்ப்பூசணி விதைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் இருக்கிறது. சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவும். இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. 
பப்பாளி விதைகள் கசப்பு தன்மை கொண்டவை. அதேவேளையில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களை கொண்டவை. செரிமானம் சீராக நடைபெறவும் உதவும். அதில் உள்ளடங்கியிருக்கும் கசப்பு தன்மையை நீக்க தேன் கலந்து கசாயமாக தயாரித்து பருகலாம். கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடக்கூடாது.
சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கு பூசணி விதைகளின் பங்களிப்பு அவசியமானது. புற்றுநோய் ஆபத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் உதவுகிறது. பூசணி விதைகளை சூப்பாகவோ, தயிருடனோ அல்லது பிற காய்கறி, பழங்களுடன் சேர்த்து சாலட்டாகவோ சாப்பிடலாம்.

"விட்டமின் சி" நிறைந்த இஞ்சி பற்றி அறிந்து கொள்வோம்!!

"விட்டமின் சி" நிறைந்த இஞ்சி பற்றி அறிந்து கொள்வோம்!!

குளிர் காலங்களில் சூடான இஞ்சி டீ தொண்டைக்கு இதம் அளிப்பதோடு உங்கள் வயிற்றுக்கும் நல்லது.இஞ்சி டீயை அதிகாலையில் குடிக்கும் போது குமட்டல், மலம் கழிப்பதில் பிரச்சினைகள், கர்ப்ப கால அறிகுறிகள் போன்றவற்றை சரியாக்குகிறது. மேலும் நமது உடலுக்கு தேவையான விட்டமின் சி இதிலிருந்து கிடைக்கிறது. 
அதிகாலை காபிக்கு இன்னும் சுவையேற்றுங்கள். ஆமாங்க காபியில் இஞ்சி கலந்து குடிப்பது ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட்டாக இது செயல்படுகிறது. ஒரு கப் காபியில் 1 டீ ஸ்பூன் துருவிய இஞ்சியைச் சேர்த்து குடிப்பதால் அதிகாலையிலயே உங்கள் சீரண மண்டலம் நன்றாக செயல்பட ஆரப்பிக்கிறது.
ஒரு கப் தேநீரில் சிறுதளவு இஞ்சியை சேர்த்து குடிப்பதாலே ஏராளமான நன்மைகளை நாம் பெற இயலும். 

நுரையீரலை சுத்தமாக வைப்பதற்கு சில காய்கறிகள் உணவாக ..!!

நுரையீரலை சுத்தமாக வைப்பதற்கு சில காய்கறிகள் உணவாக ..!!

இஞ்சி:
இஞ்சி,ஜிஞ்சரால் ஆஸ்துமா, சளி, இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்தும் குணமுடையது.உங்கள் நுரையீரலை சுத்தமாக வைத்துக்கொள்ள உங்கள் இஞ்சியை நசுக்கி அதனை சுடுநீரில் போட்டு குடிப்பது அதில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும்.
அவோகேடா:
அவோகேடா,வைட்டமின் கே, ஈ, பி6, ரிபோவின், பேன்டோதெனிக் அமிலம் மற்றும் நியாசின் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது.நுரையீரல் கோளாறுகள் போன்ற பிரச்சினைகளை குணமாக்குகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.மேலும் இது மூட்டு வலிகளை குணப்படுத்தும்.
அப்ரிகாட்:
அப்ரிகாட்,வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது.இனிப்பு அப்ரிகாட் சுவையான பொருள் மட்டுமல்ல அது உங்கள் நுரையீரலை பாதுகாக்கவும் உதவும் என்பது பலரும் அறியாத ஒன்று.இவை நுரையீரலை பாதுகாப்பதோடு புற்றுநோய்க்கு எதிராகவும் செயல்பட உதவுகிறது.

குழந்தைகள் நன்கு உறங்கினால் தான் அவர்களின் உடல் மற்றும் மூளை நன்றாக வளர்ச்சி அடையும்.


*குழந்தைகளின் தூக்கத்தை ரசிப்பதை விட சிறந்த ஒன்று வேறு எதுவாகவும் இருக்கவே முடியாது. உங்கள் குழந்தையின் தூக்கம் மற்றும் குழந்தையை தூங்க வைக்கும் முறைகள் பற்றி, பெற்றோராக நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.*
குழந்தைகள் இந்த பருவத்தில் தூங்காமல் வேறு எப்போது தூங்கி ஓய்வெடுக்க முடியும்? குழந்தைகள் நன்கு உறங்கினால் தான் அவர்களின் உடல் மற்றும் மூளை நன்றாக வளர்ச்சி அடையும்.

குழந்தை பருவத்தில் குழந்தைகளை நன்றாக தூங்க வைக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். இப்போது இருந்தே தூங்க வைக்க பழக்கப்படுத்தினால் தான் பிற்காலத்தில் அவர்களது வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இந்த பகுதியில் குழந்தைகளின் தூக்கம் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பற்றியும், பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தையின் தூக்கத்தின் போது என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் கொடுக்கப்பட்டுள்ளது.

*சரியான தூக்கம்*

பிறந்த குழந்தை ஆனது ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை தூங்க வேண்டியது அவசியமாகிறது. இந்த குழந்தைகளுக்கு இரவு பகல் வித்தியாசம் என்பது கிடையவே கிடையாது. எனவே, பிறந்த ஒரு மாதம் வரை பசிக்கும்போதும் மடி நனைக்கும் போதும் மட்டுமே விழிக்கும். மற்ற நேரங்களில் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கும். குறிப்பாக, தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் உறக்கம் சிறப்பாக இருக்கும்.

*தாயின் அரவணைப்பு*

பிறந்த குழந்தையை, தாய் அருகில் இருக்கும்போது அவரின் அரவணைப்பிலும் மற்ற நேரங்களில் பருத்தித் துணியில் கட்டிய தொட்டிலிலும் உறங்கவைக்கலாம். குழந்தை தன் தாயின் கருவறையில் உணர்ந்த அசைவைத் தொட்டிலிலும் உணர்வதாலேயே அதில் நீண்ட நேரம் உறக்கம் கொள்கிறது. மேலும், அணைத்தபடியும் போதிய காற்று கிடைக்கும்படியாகவும் இருக்கும் அதன் அமைப்பும் பாதித் தூக்கத்தில் குழந்தை சிணுங்கினாலும் அதைத் தொடர்ந்து கண்ணயரச் செய்யும்.

*பாதுகாப்பான சூழல்*

குழந்தையின் தூக்கத்துக்கு உகந்த சூழல் வீட்டில் இருக்க வேண்டும். குழந்தை உறங்கும் அறையில் சத்தம், அதிக வெளிச்சம் இருக்கக் கூடாது; கொசுத்தொல்லை, எறும்புக் கடி உள்ளிட்ட தொந்தரவுகள் அற்ற சூழலும் தாயின் அரவணைப்பும் குழந்தைக்கு நீண்ட நேர உறக்கம் கொடுக்கும்.

*தாய்ப்பால்*

பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் சில பெண்கள்கூட, நடு இரவில் விழிக்கும் குழந்தைக்குத் தங்களின் இரவுத் தூக்கம் கெடாமல் இருக்க வீட்டில் உள்ளவர்களைக் கொண்டு புட்டிப்பால் கொடுக்கவைத்துப் பழக்கப்படுத்துவார்கள். ஆனால், இது குழந்தையின் தூக்கத்துக்கு எதிரானது. பாட்டில் பால் குடிக்கும்போது குழந்தை காற்றையும் சேர்த்து உள்ளிழுத்துக் கொள்ளும்.

*வயிற்று உபாதைகள்*

அது குழந்தையின் வயிற்றில் அசௌகர்யத்தை உண்டு செய்வதால் இரவில் சரியான தூக்கம் கிடைக்காமல் அழும். குழந்தையின் அழுகையை நிறுத்த இவர்கள் மீண்டும் பாட்டில் பாலையே கொடுக்க, அழுகை அதிகமாகும். எனவே, தாய்ப்பால் கொடுக்க முடிந்தவர்கள் முடிந்தவரை இரவில் தாய்ப்பால் மட்டும் கொடுக்கவும். பாட்டில் பால் கொடுப்பவர்கள் குழந்தையை ஒருக்களித்துப் படுக்கவைப்பதன் மூலம் அதன் வயிற்றில் உள்ள காற்று வெளியேற வாய்ப்பு உண்டாக்கலாம்.

*பகலில் அதிக தூக்கம்?*

தாய்மார்கள் பகலில் தங்கள் வேலையை முடிப்பதற்காகக் குழந்தையை அதிக நேரம் தூங்க வைப்பார்கள். இதனால் இரவில் அது விழித்துக்கொள்ளும். இரவில்தான் அதற்கு அதிக நேரம் உறக்கம் தேவை என்பதால், பகலில் அதைக் கட்டாயப்படுத்தித் தூங்க வைப்பதைத் தவிர்த்து, விளையாட்டுகளில் ஈடுபடுத்தலாம்.

*சுத்தம்*

குழந்தையின் ஆடைகள், தொட்டில், மெத்தை விரிப்புகள் என அதைச் சுற்றியுள்ள சூழல் சுகாதாரமாக இருக்க வேண்டும். குழந்தை சிறுநீர் கழித்த உடன் ஆடை மாற்றப்பட வேண்டும். பிளாஸ்டிக் ஷீட்டுகளில் குழந்தையை உறங்கவைக்கும்போது அது வெளியிடும் வெப்பம் குழந்தையின் தூக்கத்தைக் கெடுக்கும் என்பதால் தவிர்க்கவும்.

*அதிகமான உணவு*

ஆறு மாதங்களுக்குப் பிறகு குழந்தைக்கு இரவு வேளையில் பால் மட்டுமே கொடுத்துத் தூங்கவைத்தால், பசியால் அதன் தூக்கம் கெடும். எனவே, மாலை 6 மணிக்கு மேல் குழந்தைக்கு எளிதில் செரிக்கும் வகையிலான திட உணவு கொடுத்து, அது செரிமானம் ஆகும் நேரம் வரை அதை விளையாட விட வேண்டும். பின்னர் தூங்கவைத்து, விழிக்கும் இடைவெளிகளில் தாய்ப்பால் கொடுத்தால் இரவு முழுவதும் குழந்தைக்கு நல்ல தூக்கம் கிடைக்கும்.

*இதமான குளியல்*

மாலையில் ஒரு முறை குழந்தையைக் குளிக்கவைப்பது, தளர்வான ஆடை அணிவிப்பது, ‘இனி நீ தூங்கப் போகிறாய்' என்ற எண்ணத்தைக் குழந்தைக்கு ஏற்படுத்த அதை அணைத்தபடி இருப்பது, தொட்டிலில் கிடத்திப் பாடுவது... இவையெல்லாம் குழந்தையைத் தூக்கத்துக்குத் தயார்படுத்தும்.

*எழுப்ப கூடாது*

தூக்கத்தில் குழந்தை அசைவதும் சிணுங்குவதும் இயல்பு; உடனே தூக்கக் கூடாது. தட்டிக்கொடுக்க, தூளியை ஆட்ட என இருந்தால், மீண்டும் அது தூக்கத்தைத் தொடர்ந்துவிடும். பிறந்த ஒரு மாதத்திலிருந்தே இரவு விரைவில் தூங்கவைத்து, காலையில் விரைந்து எழக் குழந்தையைப் பழக்கப்படுத்துவது நன்று. பிறந்த குழந்தை மட்டுமல்ல, வளர்ந்த குழந்தைகளுக்கும் இரவில் ஆழ்ந்த, தடையற்ற உறக்கம் அவசியம்.

*டிவி*

குழந்தைகளை தூங்க வைத்து விட்டு அதே அறையில் டிவி பார்ப்பது, சத்தமான சூழலை உருவாக்குவது போன்றவை வேண்டாம். இது குழந்தையை சரியாக தூங்கவிடாமல் செய்யும்..


*குறைவான ஒளி*

இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது விளக்கை அணைத்து விட்டு பால் கொடுக்கவும். அல்லது குறைவான ஒளியை கொடுக்க கூடிய விளக்குகளை பயன்படுத்த வேண்டும். இதனால் குழந்தை பால் குடித்துக் கொண்டே நிம்மதியாக தூங்கிவிடும்
👶🏻👶🏻👶🏻👶🏻👶🏻👶🏻👶🏻👶🏻👶🏻

வெள்ளி, 5 அக்டோபர், 2018

அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு என்ன வேண்டும்


அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு
என்ன வேண்டும்?

அமைதியான குடும்ப வாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டிய சில பழக்க வழக்கங்கள்

1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழுவதை வழக்கமாக கொள்ளல் வேண்டும்

2.தான் மட்டும் எழுந்தால் போதாது தனது கணவரையும் எழுப்பி விடும் பழக்கத்தை கொண்டிடல் வேண்டும்

3.முதல் நாள் இரவே மறுநாள் செய்திட வேண்டிய வேலைகளை  திட்டமிடல் வேண்டும்.

4. கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல தாயாக மனைவியாக இருப்பது முக்கியமல்ல முதலில் நல்ல தோழியாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்

5.பிள்ளைகளுக்கு முன்னால் கணவரை திட்டுவதை விட்டு விடுங்கள். இல்லையெனில் நாளை உங்கள் பிள்ளைகளும்  உங்களைப் போலவே வருவார்கள்.

6 .பிள்ளைகளுக்கு முன்னாள் மாமனார் மாமியர் மற்றும் நாத்தனார் மைத்துனரை வசை பாடுவதைத் தவிருங்கள்

7.கணவரை அடிப்படையாகக் கொண்டு பிள்ளைகளைத் திட்டாதீர்கள் "அப்பன மாதிரியே வந்திருக்கு "

8.எப்படி நீங்கள் சதா வீட்டு வேலைகளைப் பார்த்து குடும்பத்தை ஆரோக்கியமாகவும் செல்வச் செழிப்பாகவும் வைத்துக் கொள்ள மெனப்படுகிண்டீர்களோ உங்கள் கணவரும் அப்படித் தானே என்பதை ஒரு போதும் மறவாதீர்

9.மாமனார் மாமியாரை அம்மா அப்பா என்று அழைக்காவிட்டாலும் அத்தை மாமா என்று அடிக்கடி அழைத்து அவர்களை உங்கள் வசப்படுத்திக் கொள்ளுங்கள்

10.வீட்டிற்கு வந்த நாத்தனாரை யாரோ என்று எண்ணாமல் சமையல் கட்டிற்கு அழைத்து அவருக்கும் ஒரு வேலை கொடுத்து மனமார பேசிக் கொண்டு ஒரு தோழியைப் போல நடந்து கொள்ளுங்கள்

11.வீட்டில் பாத்திரங்களை கழுவும் போது சத்தம் வரமால் பார்த்துக் கொள்ளுங்கள்

12.குறிப்பாக உங்கள் கணவரின் உறவினர் வருகையின் போது மிக மிக கவனமாக செயல்படுங்கள்

13.வீட்டை அழகாக வைப்பது வீட்டில் உள்ள அனைவரின் கடமை என்பதை உணர்த்தி அவர்களை அதற்கேற்றபடி அனைவருக்கும் பயிற்சி கொடுத்திடுங்கள்!

14.வீட்டில் சத்தம் போட்டு பேசாதீர். அமைதியாக பொறுமையாக பேசிடுங்கள் .
காட்டுத்தனமாக கத்துவதால் எதும் சீராகப் போவதில்லை

15. எந்த ஒரு சூழ்நிநிலையிலும் ஏன்டா பெண்ணாகப் பிறந்தோம் என்று மட்டும் எண்ணி விடாதீர். எண்ணவும் கூடாது

16. என்ன பிழைப்பு இது? நாலு சுவற்றிற்குள் எல்லோருக்கும் வடித்துக் கொட்டி.இதுக்குப் பதில் ஆம்பளையா பொறந்திருக்கலாமேன்னு .இப்படிப்பட்ட எண்ணங்கள் உங்களின் கனவில் கூட வரக் கூடாது

17.தேவையில்லாமல் பீரோக்களில் புடவைகளை வாங்கி சேகரிக்காதீர்கள்

18.
நறுக்கென்றிந்தாலும் 4 புடவைகள் நச்சுனு வைத்திருங்கள்

19.அநேகமான நேரங்களில் நைட்டி அணிவதால் கூடுதலான நைட்டிகளை வைத்துக் கொள்ளுங்கள்

19.வேலைக்காரியின் கஷ்டங்களை தயவு செய்து கணவரிடம் உருக்கமாக பகிர்ந்து கொள்ள வேண்டாம்

20.நைட்டி இதனை வேலை செய்திடும் போது மட்டுமே அணியுங்கள். மாலை வேளைகளில் நமது பாரம்பரிய உடையான சேலைக்கு மாறி பூ முடித்து கணவனை பளிச்சென வரவேறுங்கள்

21.உடை விஷயத்திலும் உங்களை அழகாக காட்டிக் கொள்வதிலும் எப்பொதும் உங்களை நீங்கள் விட்டுக் கொடுக்காதீர்கள்

22.வயதுக்கு வந்த பெண் குழந்தைகள் இருந்தாலும் உங்களின் கணவருக்கு நீங்கள் தான் காதல் தேவதை என்பதை மறக்க வேண்டாம்

23.கணவருக்கு பிடித்த மாதிரியும் தங்களின் தன்னம்பிக்கைக்கு பாதகம் இல்லாத வகையிலும்  உங்களுக்கு பிடித்த வகையிலும் ஆடைகளை அணிந்திடுங்கள்

24.குறிப்பாக உள்ளாடைகள் மீது அதிக கவனத்துடனும்  சுத்தத்திலும் முக்கிய கவனத்துடன் செயல் பட்டிடுங்கள்

25.கொடுமையான டிசைன் கடுமையான கலர் என உடைகளை அணிவதைத் தவிருங்கள்

26.கணவருடன் தினம் தினம் குறைந்தது 30 நிமிடமாவது அருகில் அமர்ந்து மனம் விட்டு பேசுங்கள் அதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்

27.உங்களுக்கு பிடித்த மாதிரி ஆடை அணிகலன்களை உங்கள் கணவருக்கு நீங்களே தேர்வு செய்த்திடுங்கள். உங்கள் கணவரின் அழகைப் பிரதிபலிக்கும் கண்ணாடி நீங்களே அதை எப்போதும் மறக்க வேண்டாம்

28.கணவரின் தொழிலைப் பற்றி முழுமையாக ஆக்கபூர்வமான தகவல்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்

29.கணவரின் தொழில் அல்லது வேலை செய்திடும் சூழல் மற்றும் அவரின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து வைத்து கொள்ளுங்கள் .
30.கணவரின் வேலை மற்றும் வியாபார விஷயங்களில் அடிக்கடி மூக்கை நுழைக்காமல் அவர் மற்றவர்களோடு பழகும் விதத்தை சந்தேகக் கண் கொண்டு பார்க்காதீர்கள்

31.எல்லா கணவர்களுக்கும் தங்களின் மனைவி நல்ல தோழியாக இருக்க வேண்டும் என்பதும் அதே நேரம் கட்டுக்குள் அடங்கியவளாக இருக்க வேண்டும் என்பதே விருப்பம்

32.உங்கள் கணவரை ஜெயிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் பயப்படுவதாக காட்டிக் கொள்ளுங்கள்

33.பணிபுரியும் இடத்தில் உள்ள ஆண்கள்  பற்றி அதிகம் பேச வேண்டாம்.

34.எவ்வளவு உயிர்த்தோழியாக இருந்தாலும் அவர்களை ஒரு எல்லைக்குள் வைதிருங்கள் .வீட்டில் அனுமதிப்பதும் அளவோடு இருக்கட்டும்

35.வாரம் ஒருமுறை ஷாப்பிங் செல்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்

36.ஷாப்பிங் என்றவுடன் நகைக்கடை துணிக்கடை என்று மட்டும் எண்ண வேண்டாம் உழவர்சந்தை செல்வது கூட ஷாப்பிங் தானே .
37.வீடுகளில் அதிக குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாடகை வீடு எனில் தேவையான பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்

38.உங்கள் குடும்ப விஷயங்களை குறிப்பாக உங்கள் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்

39.உங்களின் வளர்ச்சிகளை முடிந்த மட்டும் உங்களின் அக்கா தங்கைகள் அண்ணன்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்

40.அம்மாவின் ஆலோசனைகளை கேட்பது நல்லது தான் ஆனால் அதை அளவோடு நிறுத்திக் கொள்வது நல்லது ..

41.தேவைஇல்லாமல் மகளுக்கு ஆலோசனை சொல்வது .மருமகளை சரி செய்வது போன்ற செயல்களைத் தவிர்த்திடுங்கள்.

42.அநேக பெண்களின் வாழ்க்கை கெட்டுப் போவது அம்மாக்களால் தான் என்பது ஆண்கள் சமூகத்தில் அசைக்க முடியாத நம்பிகை மறக்க வேண்டாம்

43..கணவரின் வெளிநாடு பயணங்கள் .கிளப் ஆக்டிவிடிகளில் பெரும்பாலும் கலந்து கொள்ளுங்கள்

44.புகைபிடிக்கும் கணவன்மார்களை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டு வாருங்கள் அதுவே நல்லது

45.கணவன்கள் நண்பர்களுடன் அடிக்கும் லூட்டிகளை ரசியுங்கள் ஆனால் அதில் உள்ள குற்றங்களை கண்டு பிடித்து ஆயுதமாக பயன்படுத்தாதீர்

46.உங்களின் கணவர் உங்களுக்கு ஒரு ஆண் .ஆனால் வெளியுலகில் அவர் ஒரு ஹீரோ என்பதை மறக்க வேண்டாம்

47.பெண்களுக்கு வாய் நீளுமானால் ஆண்களுக்கு கை நீளம் என்பதை மறக்க வேண்டாம்

48.ஒரு நல்ல பெண் தன் வீட்டைக் கோயிலாக மாற்றுகிறாள் என்பது வேத வாக்கியங்கள்..

49.உங்களை வைத்துத் தான் உங்கள் கணவரின் சமுதாய மதிப்பு உள்ளது என்பதை அவருக்கு உணர்த்துங்கள்

50.உங்களின் செயல்பாடுகள் உங்கள் பெண்பிள்ளைகளின் எதிர்காலத்தில் பங்கு கொள்கிறது என்பதை ஒரு போதுமே மறக்க வேண்டாம்

51.உங்களின் சந்தோஷமான வாழ்க்கை உங்களின் எதிர்கால மருமகளின் சந்தோஷமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும். அநேக ஆண்கள் தங்களின் மனைவியை தங்களின் தாய் பட்ட கஷ்டங்களை தனது மனைவிக்குத் தரக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர்.

52.சாமிகளை அளவோடு கும்பிடுங்கள் .சாமி கும்பிட்டு உங்களின் ஆசாமிகளை கோட்டை விட்டு விடாதீர்கள்

53.சுவையாக சமைக்கும் பெண்களை விட அழகாகவும் இனிமையாகவும் பரிமாறும் பெண்களைத் தான் ஆண்களுக்குப் பிடிக்கிறதாம்

54.மொத்தத்தில் நீங்கள் தாயாகத் தோழியாக மனைவியாக இருந்தால் வாழ்க்கை சிறக்கும்

 சமுதாயம் மதிக்கும் ... வாழ்க்கை  எளிமையாகும். இனிமையாகும். அன்பு நிலை பெற
ஆருயிர் மனைவியை இல்வாழ்வில் சக மனித உயிராக மதித்து நடந்தாலே போதும் அகமகிழ்ச்சி பெருகும், இல்லத்தில் நிம்மதி நிலைத்திடும்.


திங்கள், 1 அக்டோபர், 2018

காந்திஜி


காந்திஜி

1. காந்தியின் முழுமையான பெயர் என்ன?
➯ மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி
2. காந்தியடிகளின் தந்தை பெயர் என்ன?
➯ கரம் சந்த் காந்தி
3. காந்தியடிகளின் தாயார் பெயர் என்ன?
➯ புத்திலிபாய்
4. காந்தியடிகள் எப்போது பிறந்தார்?
➯ 02-10-1869
5. காந்தியடிகளின் எத்தனையாவது பிறந்தநாளை 02-10-2018 அன்று நாம் கொண்டாடுகிறோம்?
➯ 150 வது பிறந்தநாள்
6. காந்தியடிகள் எங்கு பிறந்தார்?
➯ குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர்
7. காந்தியடிகளுக்கு உண்மையின் மீது பிடிப்பு ஏற்படுத்திய நாடகம் எது?
➯ அரிச்சந்திரன் நாடகம்
8. காந்தியடிகள் எங்கு தனது பள்ளிக்கல்வியை முடித்தார்?
➯ சமல்தாஸ் கல்லூரியில் மெட்ரிகுலேசன் முடித்தார்
9. காந்தியடிகள் எப்பொழுது திருமணம் செய்துகொண்டார்?
➯ மே 1883
10. காந்தியடிகளுக்கு திருமணம் நடந்தபோது அவருக்கு வயது என்ன?
➯ 13க்கும் 14க்கும் இடையில்
11. காந்தியடிகளின் துணைவியார் பெயர் என்ன?
➯ கஸ்தூரிபாய்
12. காந்தியடிகள் லண்டன் செல்லும் முன்பு தனது தாயாருக்கு செய்து கொடுத்த மூன்று சத்தியங்கள் என்னென்ன?
➯ மது, மாது, மாமிசம் தவிர்ப்பேன்
13. காந்தியடிகள் பாரிஸ்டர் பட்டம் பெற லண்டனுக்கு எந்த ஆண்டு சென்றார்?
➯ 1888
14. காந்தியடிகள் தன்னுடைய எத்தனையாவது வயதில் தென்னாப்பிரிக்கா சென்றார்?
➯ 24ம் வயதில்
15. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
➯ 21 ஆண்டுகள் (1893-1914)
16. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எத்தகைய கொடுமைக்கு ஆளானார்?
➯ நிறவெறி கொடுமைக்கு
17. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் எந்த இடத்தில் இரயிலில் பயணம் செய்யும் போது அவமதிக்கப்பட்டு இரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டார்?
➯ பீட்டா்மெரிட்ஸ்பர்க்
18. காந்தியடிகள் எப்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்?
➯ 09-01-1915
19. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நாளை நாம் எவ்வாறு கொண்டாடுகிறோம்?
➯ வெளிநாடு வாழ் இந்தியர் தினம் (09-01-1915)
20. காந்தியடிகளின் இந்திய அரசியல் குரு யார்?
➯ கோபால கிருட்டின கோகலே
21. காந்தியடிகள் இந்திய விடுதலை போராட்டத்தில் எத்தகைய கொள்கையை பின்பற்றினார்?
➯ மிதவாதகொள்கை
22. காந்தியடிகள் எந்த விடுதலைப்போராட்ட கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்?
➯ இந்திய தேசிய காங்கிரஸ்
23. காந்தியடிகள் 1917ல் மேற்கொண்ட முதல் சத்தியாக்கிரக போராட்டத்தின் பெயர் என்ன?
➯ சாம்பரான் சத்தியாகிரகம் (பீகாரில் தொடங்கப்பட்டது)
24. காந்தியடிகளின் 1918ல் குஜராத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பெயர் என்ன?
➯ கேதா ஆர்ப்பாட்டம்
25. காந்தியடிகள் 1918ல் அகமதாபாத்தில் நடத்திய போராட்டம் எது?
➯ அகமதாபாத் மில் வேலை நிறுத்தப் போராட்டம்
26. காந்தியடிகள்1919ல் நடத்திய அகில இந்திய போராட்டம் எது?
➯ ரௌலட் சட்டத்திற்கு எதிரானது சத்தியாகிரகப் போராட்டம்
27. காந்தியடிகள் 1920ல் நடத்திய போராட்டம் எது?
➯ ஒத்துழையாமை இயக்கம்
28. காந்தியடிகள் 1930ல் நடத்திய போராட்டம் எது?
➯ சட்டமறுப்பு இயக்கம்
29. காந்தியடிகள் 1942ல் நடத்திய போராட்டம் எது?
➯ வெள்ளையனே வெளியேறு இயக்கம்
30. காந்தியடிகளுக்கு 1920ல் தென்னாப்பிரிக்காவில் வழங்கப்பட்ட கெய்சர் ஜ ஹிந்த் என்ற பட்டத்தை எந்த போராட்டத்தின் போது துறந்தார்?
➯ ஒத்துழையாமை இயக்கம்
31. காந்தியடிகள் 12 மார்ச் 1930ல் என்ன போராட்டத்தை மேற்கொண்டார்?
➯ உப்புசத்தியாகிரகம்
32. காந்தியடிகள் மேற்கொண்ட உப்புச்சத்தியாகிரகம் எங்கு தொடங்கப்பட்டது?
➯ அகமதாபாத்தில் தொடங்கி தண்டியில் முடிவடைந்தது
33. காந்தியடிகள் மேற்கொண்ட உப்புச்சத்தியாகிரகம் (தண்டி யாத்திரை) எவ்வளவு நாள் நடந்தது?
➯ 12-03-1930 முதல் 06-04-1930 வரை தூரம் 388 கிலோமீட்டர்
34. காந்தியடிகள் மேற்கொண்ட தண்டியாத்திரையை அவர் எவ்வாறு பயணம் செய்தார்?
➯ 388 கிலோ மீட்டரும் பாதயாத்திரையாக
35. காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு (1942) இயக்கத்தின் போது எவ்வாறு முழங்கினார்?
➯ செய் அல்லது செத்துமடி (do or die)
36. காந்தியடிகள் சுதந்திரத்திற்காக மட்டுமல்லாது வேறு எதற்காக போராடினார்?
➯ குழந்தைகள் திருமணம், திண்டாமை ஒழிப்பு, விதவைகளுக்கு எதிரான கொடுமைகள்
37. காந்தியடிகள் தாழ்த்தப்பட்ட மக்களை எவ்வாறு அழைத்தார்?
➯ ஹரிஜன் (கடவுளின் குழந்தைகள்)
38. காந்தியடிகள் நாதுராம் கோட்சே என்று சுட்டுக் கொன்றார்?
➯ 30-01-1948
39. காந்தியடிகள் இறந்ததினத்தை இந்தியாவில் எவ்வாறு கொண்டாடுகிறோம்?
➯ தியாகிகள் தினம்
40. காந்தியடிகள் இறந்த தினத்தை ஐ.நா.சபை எவ்வாறு அறிவித்துள்ளது?
➯ சர்வதேச அகிம்சை தினமாக (International day of Non–violence )
41. காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்?
➯ நவஜீவன்
42. காந்தியடிகள் தன் சுயசரிதையை எந்த மொழியில் எழுதினார்?
➯ குஜராத்தி மொழியில்
43. காந்தியடிகள் தன் சுயசரிதையை என்ன பெயரில் எழுதினார்?
➯ சத்தியசோதனை
44. காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தவர் யார்?
➯ மன்மோகன் தேசாய்
45. காந்தியடிகளின் வரலாற்றை குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட பின்னர் அந்த நூலுக்கு வைக்கப்பட்ட பெயர் என்ன?
➯ My Experiments with Truth.
46. காந்தியடிகள் இந்தியாவில் நடத்திய ஆங்கில இதழ் எது?
➯ யங் இந்தியா
47. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் நடத்திய ஆங்கில இதழில் பெயர் என்ன?
➯ இந்தியன் ஒப்பீனியன்
48. காந்தியடிகளை முதன்முதலில் “ மகாத்மா ” என்று அழைத்தவர் யார்?
➯ இரவீந்திரநாத் தாகூர்
49. காந்தியடிகளை முதன்முதலில் “தேசப்பிதா ” என்று அழைத்தவர் யார்?
➯ நேதாஜி சுபாசு சந்திரபோஸ்
50. காந்திஜீ யை தமிழில் காந்தியடிகள் என்று எழுதும் வழக்கத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவர் யார்?
➯ திரு.வி.க
51. காந்தியடிகள் தன் வாழ்நாளில் மொத்தம் எவ்வளவு நாட்கள் சிறையில் கழித்தார்?
➯ 2338 நாட்கள்
52. காந்தியடிகள் அதிக நாட்கள் இருந்த சிறை எது?
➯ எரவாடா சிறை (பூனா)
53. காந்தியடிகள் மரணமடைந்த போது அவருக்கு வயது என்ன?
➯ 78 வயது
54. தில்லி செங்கோட்டை அரியணையோடு மீண்டும் தொடர்பு படுத்தப்படும் பெயர்
➯ காந்தி
55. காந்திஜியின் மனைவி பெயர் என்ன?
➯ கஸ்தூரிபாய்
56. காந்திஜிக்கும் கஸ்தூரிபாவிற்கும் பிறந்த மகன்கள் யார் யார்?
➯ ஹரிலால், மணிலால், ராமதாஸ், தேவதாஸ்
57. எந்த அரியணைக் கனவோடும் வளர்க்கப்படாதவர்கள் யார்?
➯ காந்திஜியின் பிள்ளைகள்
58. தென் ஆப்பிரிக்காவில் காந்தி நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட காந்திஜியின் மகன் யார்?
➯ ஹரிலால்
59. தென் ஆப்பிரிக்காவில் கைகளில் விலங்குபூட்டி தெருக்களில் கைதியாக அடித்து இழுத்துச் செல்லப்பட்டவர் யார்?
➯ ஹரிலால்
60. தன் புதல்வர்களையும், தன் பேரப்பிள்ளைகளையும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்தியவர் யார்?
➯ காந்திஜி
61. 388 மைல்கள் நடந்த தண்டி யாத்திரையில் தன் பேரப்பிள்ளையான சிறுவனை (ஹரிலால் மகன்) நடக்க வைத்து அழைத்துச் சென்றவர்?
➯ காந்திஜி
62. தனது உண்ணாவிரதப் போராட்டத்தில் தன் குடும்பத்தை ஈடுபடுத்தியவர் யார்?
➯ காந்திஜி
63. தன் பிள்ளைகள் என்பதற்காக ஒரு சிறு பலன் கூட அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது என்ற உறுதியாக இருந்தவர் யார்?
➯ காந்திஜி
64. லண்டனில் ஹரிலாலைப் படிக்க வைக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தும் அவரை அனுப்ப மறுத்தவர்
➯ காந்திஜி
65. தான் சிறையில் இருந்தபோது சந்தையில் முள்ளங்கி வியாபாரம் செய்து ஆசிரமவாசிகளுக்கு உணவுதர வேண்டிய பொறுப்பை மகன் மணிலாலிடம் ஒப்படைத்தவர்
➯ காந்திஜி
66. மிகுந்த வறுமையில் வாடிய காந்திஜியின் மகன்
➯ ஹரிலால்
67. மணிலாலை தன்னுடைய மகன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளாமலே ஒரு வருடத்துக்கு நீ உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்று சென்னைக்கு தன் மகனை அனுப்பியவர்
➯ காந்திஜி
68. சென்னையில் மூட்டைகள் தூக்கியும் நடைபாதையில் படுத்தும் உறங்கிய காந்திஜியின் மகன்
➯ மணிலால்
69. காந்திஜியைவிட அதிக ஆண்டுகள் சிறையில் தள்ளப்பட்டவர்
➯ மணிலால்
70. உப்பு சத்தியாக்கிரகத்தில் தலையில் எலும்புமுறிவு தாக்குதலுக்கு ஆளான காந்தியின் மகன்
➯ மணிலால்
71. மண்டை உடைக்கப்பட்டு மூளையில் காயத்துடன் சுயநினைவின்றி சிறைக் கைதியாக வாழ்நதவர்
➯ மணிலால்
72. 25 முறை மொத்தம் சுமார் 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர்
➯ மணிலால்
73. தெருப்பிச்சைக்காரனாக இருந்த காந்தியின் மகன்
➯ ஹரிலால்
74. காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாயின் இறுதி வாழ்க்கை நடந்த இடம்
➯ சிறைச்சாலை
75. காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாயின் இறுதிச் சடங்குகள் நடந்த இடம்
➯ சிறைச் சாலை வளாகம்
76. 6 முறை - சுமார் 2 ஆண்டுகள் சிறைக் கைதியாக வாழ்ந்தவர்
➯ கஸ்தூரிபாய்
77. தமது 69வது வயதில் இருண்ட அறையில் தனிமைச் சிறையில் இருந்தவர்.
➯ கஸ்தூரிபாய்
78. இந்திய விடுதலைக்குப் பிறகு ஒரு பியுன் வேலையைக் கூட தன் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வதை விரும்பாதவர்
➯ காந்திஜி
79. வன்முறை தவிர்த்து விடுதலைக்குப் போராடியவர்
➯ காந்திஜி
80. விடுதலைக்கான போராட்டத்தில் நீ சிறையில் மரணம் அடைந்தால் உன்னை தெய்வமாக வழிபடுவேன் என்று கஸ்தூரிபாயிடம் கூறியவர்
➯ காந்திஜி
81. காந்தியடிகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எது?
➯ மது, மாமிசம் தவிர்த்தல் மற்றும் அகிம்சை வழியில் வாழ்தல்